Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    25
    Points
    46808
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    88026
    Posts
  3. suvy

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    33600
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    8
    Points
    38791
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 04/19/21 in Posts

  1. அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
  2. லெப் கேணல் கிறேசி மருதம், முல்லை, பாலை, நெய்தல், குறிஞ்சி எனப்படுகின்ற ஐவகை நிலங்களிலே மருத நிலம் மிக நிறைந்த பூமி கிளிநொச்சி. கிளிநொச்சியின் தலைசிறந்த வேளாண்மை ஊர்களில் ஒன்றுதான் வட்டக்கச்சி. வட்டக்கச்சி மண்ணில் கணபதிப்பிள்ளை மணஇணையருக்கு 19.08.1960ல் ஆண்மகவு ஒன்று பிறந்தது. கோபாலபிள்ளை என்ற இயற்பெயரோடு பிறந்த குழந்தையே கிறேசி என்ற பெயரோடு வல்வளைப்பு படைகளுக்கு எதிராக, தனது தாய் நிலத்தின் விடியலுக்காக செங்களமாடியது. லெப்.கேணல் கிறேசி, தமிழீழ தேசத்தில் எங்கெல்லாம் வல்வளைப்பு படைகள் நிலைகொண்டிருந்தனவோ அங்கெல்லாம் அவரது சுடுகலனும் கனன்றிருக்கும். கள.முனைகளில் தொடர்ச்சியாக ஓய்வுளச்சல் இன்றி சுழன்றடித்த வீரன் அவர். செய்வோம் அல்லது செத்து மடிவோம் என்ற வசனத்தை அடிக்கடி சொல்பவர், அதனைச் செயலிலும் செய்து காட்டியவர். எந்த நேரமும் இயக்கத்தின் நலனையே சிந்தித்து செயலாற்றிய மண்ணின் மகன் அவர். கிளிநொச்சி பகுதியில் எண்பதுகளின் நடுப்பகுதி தொடங்கி, தொண்ணூறுகளின் தொடக்கம் வரைக்கும் சிறீலங்கா படைகளிற்கு எதிரான அனைத்துத் தாக்குதல்களிலும் காத்திரமான பங்கை லெப்.கேணல் கிறேசி வகித்துள்ளார். 1987ஆம் ஆண்டு யூலை மாதம் வடமராட்சியில் நெல்லியடி முகாம் தகர்ப்பில் அணியொன்றின் பொறுப்பாளனாகக் கலந்து கொண்டார். அதன் பின்னர் லெப்.கேணல் கிறேசி அவர்கள் கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்திய வல்வளைப்புக் காலத்தில் கிளிநொச்சி நகரில் கூடாரமிட்டிருந்த இந்தியப்படைகளுக்கும் அவர்களின் அடிவருடிகளுக்கும் சிம்மசொப்பனமாகத் திகழ்ந்தார். கிளிநொச்சியின் எல்லா மூலையிலும் இந்திய படைகள்தாக்கப்பட்டது. கூலிகள் அடித்து விரட்டப்பட்டனர். களமுனைகளில் நேருக்குநேர் கிறேசியினதும் அவரது அணியினரதும் தாக்குதலுக்கு முகங்கொடுக்க முடியாத ஈ.பி.ஆர்.எல்.எவ் துரோகிகள் இவரது தந்தையாரான கணபதிபிள்ளை அவர்களை சுட்டுக்கொன்றனர். தந்தையாரின் இறுதிச்சடங்கிற்கு தனயன் வருவான் அப்போது வேட்டையாடுவோம் என ராஜீவின் படையினரும் துரோகக் கும்பலும் காத்திருந்ததாம். தனது விடுதலைப் பயணத்தில் எண்ணிறைந்த இடர்களையும், இழப்புக்களையும் சந்தித்த வேளையிலும் சலியாது கொண்ட கொள்கையில் உறுதி தளராத உரம் படைத்த நெஞ்சம் லெப்.கேணல் கிறேசியினுடையது. இரண்டாம் கட்ட ஈழப் போர் தொடங்கிய வேளையில் மண்டைதீவுப் பகுதியூடாக முன்னேறி வந்த சிறிலங்கா படையினர் மீது விடுதலைப் புலிகள் மேற்கொண்ட எதிர்ச்சமரின் போது விழுப்புண்ணடைந்தார். அவ்வேளையில் தான் விழுப்புண்ணடைந்து துடித்ததை விட இச்சம்பவத்தில் வீரச்சாவடைந்த சக போராளிகளின் நினைவில் துடித்தார். 19.04.1991 அன்று மன்னர்பரப்புக்கடந்தான் பகுதியூடாக சிறிலங்கா படையினர் முன்னேற முற்பட்டனர் சிங்களத்தின் அம்முன்னேற்ற முயற்சியை முறியடிக்கும் நோக்கில் சென்ற விடுதலைப் புலிகளின் அணிகளுக்கு கட்டளைத் தளபதியாக களமுனையில் பணியாற்றிக் கொண்டிருந்தார் கிறேசி. எதிரியிடம் ஒரு அங்குல நிலம் போய்தானும் பவிடக்கூடாதுஎன்ற உறுதியோடு தனது அணியினரை வழிநடத்தி சமராடிக் கொண்டிருந்த வேளையில் எதிரி ஏவிய குண்டொன்றினால் கிறேசி இந்த மண்ணைவிட்டுப் பிரிந்தார். 1990.05.25 அன்ற லெப்.கேணல் கிறேசி அவர்களுக்கு திருமணம் நடந்தது. திருமணம் நடைபெற்று ஓர் ஆண்டு கூட நிறைவடையாத நிலையில் களமுனையின் முன்னிலையில் நின்று களமாடி தனது குடும்பம் என்ற சிறுவட்டத்தில் நில்லாது, தமிழீழத் தாயகம் என்ற பெரும் குடும்பத்தின் விடியலுக்காய் விழுதாகிப் போனார் லெப்.கேணல் கிறேசி
  3. புதுவருட வாழ்த்துகள்
  4. தனி மனிதன் உருவாக்கிய காடு ....... காட்டின் அவசியம்........! 🌹
  5. வாவ்.....அழகான கவிதை கோபி.......அதற்கு அந்த அய்யாவின் விளக்கம் அதி சிறப்பு.......! 👍 பகிர்வுக்கு நன்றி கோபி.......!
  6. பகிர்விற்கு நன்றிகள் தோழர்..👌
  7. வென்று விட்டோமென்று வாசலில் நின்று ஆட்டம் போட்டு தோல்வியை அணைத்தவர்கள்.....! 😂
  8. பகுதி 2 கேள்வி : அண்மையில் நடந்த நிகழ்வொன்றில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சில ஆயுதங்களைக் கையளித்தது. எதிர்காலத்தில் உங்கள் கட்சி ஆயுதங்களைத் தூக்காது என்பதற்கு என்ன உத்தரவாதத்தினை வழங்குவீர்கள்? பிள்ளையான் : உங்களுக்கு எமது சரித்திரம் நன்றாகத் தெரியும் என்று நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் ஆயுத மயப்படுத்தப்பட்டுவிட்டது. பல இளைஞர்கள் தமது படிப்பறிவைக் கைவிட்டு விட்டார்கள். தமிழர்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுக்கிறார்கள். கடந்த இரு தசாப்த்தங்களாக எமது மக்கள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து விட்டார்கள். முன்னர் முழுக் கிழக்கு மாகாணமுமே ஆயுதக் கலாசாரத்தில் மிதந்தது. ஆனால், இன்று அப்படியில்லை, மக்கள் ஆயுதக் கலாசாரத்தை வெறுத்துவிட்டார்கள். அதனால், எவருமே தற்போது இங்கே ஆயுதங்களைக் கொண்டுசெல்வதில்லை, ஆகவேதான் நாமும் ஆயுதங்களை ஒப்படைத்துவருகிறோம். எமது கட்சி தற்போது ஆயுதங்களை முற்றாகக் கைவிட்டு விட்டது. கேள்வி : நீங்களும் உங்கள் கட்சியும் ஆயுதங்களைக் கைவிட்டு விட்டதாகக் கூறினாலும், உங்கள் கட்சியைச் சேர்ந்த ஆயுததாரிகள் திருகோணமலையில் 6 வயதுச் சிறுமியொருவரைக் கப்பப் பணத்திற்காக கடத்திச் சென்று படுகொலை செய்திருக்கிறீர்களே? அதுபற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்? பிள்ளையான் : நான் கடுமையாக இந்தக் குற்றச்சாட்டினை மறுக்கிறேன். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் இந்தப் படுகொலைக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென்று நான் உறுதியாகக் கூறுகிறேன். படுகொலையில் ஈடுபட்டவர் எனது கட்சியைச் சேர்ந்தவர் அல்ல, தேர்தல் காலத்தில் மட்டும் எம்முடன் சேர்ந்து செயற்படுவார். நான் பொலீஸாரிடமும், பொதுமக்களிடமும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் என்று சொல்லிக்கொண்டு வருவோர் குறித்து அவதானமாக இருக்கும்படி கேட்டிருக்கிறேன். எமது கட்சியின் நற்பெயரைக் களங்கப்படுத்த சில சதி வேலைகளில் ஈடுபட்டுவருவது குறித்து நாம் அறிந்தே வைத்திருக்கிறோம். நாம் இந்த படுகொலையினை கண்டிக்கிறோம். இது ஒரு துரதிஷ்ட்டமான சம்பவம். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி மக்களிடையே பிரபலமாகி வருவதால் எமது பெயரைக் களங்கப்படுத்தவே இவ்வாறான படுகொலைகளுடன் எம்மைத் தொடர்புபடுத்தி பேசுவதற்கான காரணம். நாம் மக்களை அறிவுமயப்படுத்திவருகிறோம். எமது உறுப்பினர்களுக்கான விசேட அடையாள அட்டைகளை விநிதியோகித்து வருகிறோம். கேள்வி : புலிகளிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஆயுதங்களை வைத்திருப்பதாக முன்னர் கூறீர்கள். புலிகளின் உறங்குநிலைப் போராளிகளின் பிரசன்னம் இருப்பதாகப் பேசப்பட்டு வரும் வேளையில், உங்கள் பாதுகாப்புக் குறித்து எவ்வாறான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறீர்கள்? பிள்ளையான் : புலிப் பயங்கரவாதிகளின் உறங்குநிலை உறுப்பினர்களோ அல்லது அவர்கள் மூலமான பாதுகாப்புப் பிரச்சினையோ எமக்கு இருப்பதாக நான் நம்பவில்லை. அவர்களின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டு விட்டதால், தலைமைத்துவமும், கட்டளையும் இன்றி அவர்களால் தாக்குதல்களை முன்னெடுக்க முடியாது என்பது எனது நம்பிக்கை. அவர்கள் வெற்றிகரமாகச் செயற்படுவதென்றால் அவர்களுக்கென்று சரியான தலைமை வேண்டும், ஆனால் அது தற்போது இல்லை. புலிப் பயங்கரவாதிகளின் தலைமையினை எமது ராணுவம் முற்றாக அழித்ததன் பின்னர், உறங்குநிலைப் போராளிகளின் செயற்பாடும் அழிந்துவிடும். கேள்வி : இறுதியாக, தமது இறுதிநாட்களை எதிர்நோக்கியிருக்கும் பிரபாகரனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : மிக விரைவில் எமது ராணுவ வீரர்கள் அவரை கைதுசெய்வார்கள் அல்லது அவர் தானாகவே தற்கொலை செய்துகொள்வார். புலிப்பயங்கரவாதிகளில் 20,000 போராளிகள் எமது வீரர்களால் கொல்லப்பட்டு விட்டனர். ஆயிரக்கணக்கான தமிழர்களும் பிரபாகரனின் மடமையினால் கொல்லப்பட்டு விட்டார்கள், அது அவருக்கும் நன்கு தெரியும். தமிழ் இனத்திற்குச் செய்த மிகப்பெரிய அழிவிற்காக அவர் கொல்லப்படவே வேண்டும். பிரபாகரனின் மரணம் இந்த நாட்டுத் தமிழர்களுக்குக் கிடைக்கக் கூடிய மிகப்பெரிய ஆறுதலாக, நிம்மதியாக இருக்கும். மாற்றுக் கருத்தில்லை, அவர் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும் !!! முற்றும்
  9. "தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி எப்போதும் அரசாங்கத்திற்கு ஆதரவாகவே வேலை செய்யும் - பிரபாகரன் எவ்விலை கொடுத்தாவது அழிக்கப்பட வேண்டும்" : பிள்ளையான் சர்வதேச புலம்பெயர்ந்த இலங்கையர்கள் எனும் இணையத்தள செய்திச் சேவைக்கு பிள்ளையான் வழங்கிய செவ்வி நாள் : 29 ஆம் நாள், பங்குனி 2009 பகுதி 1 "கிழக்கு மாகாணத்தை அபிவிருத்தி செய்துவருவதனாலும், புலிகள் இயக்கத்தை நாட்டிலிருந்தே முற்றாகத் துடைத்தழிக்க நடவடிக்கை எடுத்துவருவதனாலும் எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு முற்றான ஆதரவினை வழங்கி அவரின் கரங்களை வலுப்படுத்துவதற்கு தனது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தொடர்ச்சியாக வேலை செய்யும்" என்று அக்கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்திருக்கிறார். "புலிகள்" எனப்படும் சொல்லை தனது கட்சியின் பெயரிலிருந்தே நீக்கப்போவதாக தெரிவித்திருக்கும் பிள்ளையான், தான் அரசுக்கெதிராகச் செயற்படுவதாகப் பரவிவரும் வதந்திகளை முற்றாக மறுத்தார். சிறுவனாக புலிகள் இயக்கத்தில் இணைந்துகொண்ட பிள்ளையான் தற்போது 33 வயதை அடைந்திருப்பதுடன், தனது அரசியல் அதிகாரத்தை ஸ்த்திரப்படுத்தும்வரை திருமணம் செய்யப்போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார். தனது கட்சி அனைத்து விமர்சனங்களுக்கும் சனநாயக ரீதியில் பதிலளிக்கக் காத்திருப்பதாகவும், தமிழ் மக்களுக்கு ஆயுதக் கலாசாரம் தேவையற்றது என்பதனால், தாம் கிழக்கு மாகாணத்தை ஆயுதச் சூனியப் பிரதேசமாக மாற்ற நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். அவரது செவ்வியின் முழு வடிவமும் கீழே ! கேள்வி : உங்களது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலிருந்து பெருமளவு உறுப்பினர்கள் கருணாவுடன் சேர்ந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்த பின்னரும் நீங்கள் தொடர்ச்சியாக தாக்குப் பிடிப்பது எப்படி ? பிள்ளையான் : கிழக்கு மாகாண மக்கள் தமக்கென்று தனியான அரசியல் பிரதிநிதித்துவம் ஒன்று அமைவைதையே விரும்புகிறார்கள். இதுவரை பெரும்பாலான தமிழ் அரசியல் கட்சிகள் ஆளும் அரசுகளுக்கு எதிராகவே செயற்பட்டு வந்தனர். ஆனால், நாங்களோ இந்த அரசின் ஒரு பிரிக்கமுடியாத அங்கமாகவே இருக்கிறோம். கிழக்கு மாகாணத் தமிழர்களின் பிரச்சினைகள் தனித்துவமானவை, அப்பிரச்சினைகளை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியே தீர்த்துவைக்கவேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனாலேயே கடந்த தேர்தல்களில் எமக்கான மக்கள் ஆணையினை அவர்கள் வழங்கினார்கள். தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியையே தமக்கான அரசியல் பிரதிநிதிகளாக அவர்கள் தேர்வுசெய்திருக்கிறார்கள். கருணா அம்மான் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கின்றபோதும் கூட, நாம் புதிதாக இணையத் தேவையில்லை. ஏனென்றால், நான் தற்போதும் சுதந்திரக் கட்சி அரசில் ஒரு முக்கிய அங்கமாகவே இருக்கிறோம். தெற்கு மக்களுக்கு நான் கூற விரும்புவது ஒன்றைத்தான். அதாவது, நாம் எப்போதும் மகிந்த ராஜபக்ஷவின் தலைமையிலான இந்த அரசுக்கு ஆதரவாக தொடர்ந்தும் இருப்போம். அரசுக்கெதிராக செயற்படுவதாக வரும் வதந்திகள் வேண்டுமென்றே எமக்கெதிராக செய்யப்படும் விஷமத்தனமான பொய்களேயன்றி வேறில்லை. கேள்வி : அனால், கருணாவுடன் சேர்ந்து உங்கள் கட்சியைச் சேர்ந்த குறைந்தது 2000 உறுப்பினர்கள் சுதந்திரக் கட்சியில் இணைந்திருக்கிறார்களே? பதில் : (சிரித்துக்கொண்டே) நான் இதுபற்றிக் கருத்துக் கூற விரும்பவில்லை. கேள்வி : உங்களது கட்சி எதிர்காலத்தில் அரசியலில் தாக்குப்பிடிக்க முடியும் என்று எந்தளவு தூரத்திற்கு நம்பிக்கை வைத்திருக்கிறீர்கள் ? பிள்ளையான் : எமது கட்சியின் அரசியல் எதிர்காலம் 100 வீதம் உறுதியானது. எங்களால் எந்தவொரு தேர்தலையும் வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பலம் இருக்கிறது. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற கட்சியில் தலைவர் என்கிற ரீதியில் எனது அரசியல் இலட்சியத்தினை காலத்திற்குக் காலம் நான் மாற்றிக்கொள்ளவில்லை. எங்களிடம் மிக உறுதியான கொள்கைகள் இருக்கின்றன. நான் எல்லா அரசியல் கட்சிகளுடனும் சமரசத்தில் ஈடுபடுவோம். கிழக்கு மாகாண மக்கள் நெடுங்காலமாக அரசியல் அநாதைகளாகவே இருந்து வந்துள்ளனர். ஆனால், அந்த குறையினை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி நிவர்த்தி செய்திருக்கிறது. தமது வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவதற்காக எமது கட்சி செயற்பட்டுவருவதால், எமக்கான ஆதரவினை அவர்கள் தந்திருக்கிறார்கள். கேள்வி : உங்களுக்கும் பிரதியமைச்சர் கருணாவுக்கும் இடையே ஏதாவது பிரச்சினை இருக்கின்றதா? பிள்ளையான் : நான் ஒரு நேர்மையான அரசியல்வாதி. நாம் 2004 இல் கொழும்பிற்கு வந்தபோது, தான் கொண்டுவந்த கைத்துப்பாக்கியைத் தூர எறிந்த கருணா, "நாம் ஆயுதங்களைக் களைந்துவிட்டு ஜனநாயக அரசியலில் ஈடுபட வேண்டும்" என்று கூறினார். நான் உட்பட பல உறுப்பினர்கள் கருணாவின் உயிருக்கான பாதுகாப்பை வழங்கிக்கொண்டிருக்க, பல போராளிகள் புலிகளுடனேயே இருந்துவிட்டார்கள். கருணா நாட்டைவிட்டு வெளியேறியபின்னர், நான் அரசுடன் சேர்ந்து உழைத்து, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் எனும் கட்சியை ஆரம்பித்தேன். நானே கருணாவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும், பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கும் அறிமுகப்படுத்தினேன். அவர் நாட்டில் இல்லாத காலத்தில் நான் அரசுடன் நெருங்கிச் செயற்பட்டு வந்தேன். அவருடன் எனக்குப் பிரச்சினையில்லை. ஆனால், சரியோ தவறோ தலைமைப்பதவியைக் கைப்பற்றவும், எல்லாவற்றையும் தனது கட்டுப்பாடின் கீழ் கொண்டுவரும் ஆதிக்க மனோநிலையும் அவருக்கு இருக்கிறது. அவர் புலிகள் இயக்கத்தின் கிழக்கு மாகாணத்தின் தளபதியாக இருந்தபோது, அவர் சொல்வதைக் கேட்டு நாம் அடிபணிந்து செயற்பட்டோம். அவரின் செயல்கள் சரியோ, தவறோ நாம் கேள்விகேட்காமல் செய்துவந்தோம். ஆனால், நான் இன்று இருப்பதோ ஜனநாயக வெளி. இக்களத்தில் எவரும், எவரையும் விமர்சிக்கும் உரிமை இருக்கிறது. அதனால், நாம் அவரது நடவடிக்கைகள் பற்றி விமர்சிக்கும்போது, எம்மை தனது எதிரிகளாக அவர் பார்க்கிறார். எது எப்படியிருந்தாலும், நாம் இன்றிருப்பது ஒரு ஜனநாயக களம், எம்மை எவரும் அதிகாரத்தைப் பாவித்து கட்டுப்படுத்த முடியாது. கேள்வி : கிழக்கில் நடந்துவருவதாகக் கூறப்படும் அபிவிருத்தி மற்றும் மீள் கட்டுமாணம் குறித்து நீங்கள் திருப்தியடைந்திருக்கிறீர்களா? பிள்ளையான் : கடந்த இரு தசாப்த்தங்களாக கிழக்கில் அபிவிருத்தியே நடைபெறவில்லை. அதே போல எமது மக்களுக்கான அரசியல் தலைமைகளும் இருக்கவில்லை. ஆனால், இப்போது கிழக்கில் அபிவிருத்தி முழு வீச்சில் நடந்துவருகிறது. கல்வி, சுகாதாரம் என்று அனைத்துமே அபிவிருத்தி செய்யப்படுகின்றன. எமது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கிழக்கின் அபிவிருத்தி தொடர்பாக விசேட கரிசனை கொண்டிருப்பதால், அவரின் கிழக்கு மாகாண அபிவிருத்தியின் ஜனாதிபதிக்கான ஒருங்கிணைப்பாளராக இருப்பது குறித்து பெருமையும், மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்ஷவும் கூட கிழக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்கும் தன்னாலான உதவிகளைச் செய்துவருகிறார். நாம் அனைவரும் சேர்ந்து கிழ்க்கு மாகாண அபிவிருத்திக்கான பல திட்டங்களைத் தீட்டி வைத்திருக்கிறோம். கேள்வி : ஆனால் உங்களின் மாகாண சபை ஆட்சியில் பல ஊழல்களும், முறைகேடுகளும் இடம்பெற்று வருவதாக கூறப்படுகிறதே ? பிள்ளையான் : நான் இக்குற்றச்சட்டுக்களை முற்றாகவே மறுக்கிறேன். மக்களுக்குத் தெரியும் நாம் செய்துவரும் சேவைகள். அப்படி முறைகேடுகள் இடம்பெறுவதாக அவர்கள் கருதினால், அவர்கள் ஏன் இதுவரை எமது மாகாணசபை அரசுக்கெதிராக முறையிடவில்லை. கேள்வி : கிழக்கு மாகாண அபிவிருத்தியெனும்போது, எந்த துறைகளில் அபிவிருத்தி செய்யப்படுதல் அவசியம் என்று நினைக்கிறீர்கள்? பிள்ளையான் : முழுக் கிழக்கு மாகாணமுமே அபிவிருத்தி செய்யப்படவேண்டும் என்று நான் நினைக்கிறேன். புலிப் பயங்கரவாதத்தினால் எமது மாகாணம் முற்றாக அழிக்கப்பட்டு, அபிவிருத்தியில் பின்தங்கிவிட்டது. கிராமப்புறப் பகுதிகளிலேயே அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று நினைக்கிறேன்.
  10. 44 வயது மட்டும் உதைபந்து விளையாட்டு தெரியாதவர்களை விளையாடவைத்து பல வெற்றி கேடயங்களை இப்பவும் பெற வைத்த பயிற்சியாளரிடம் ஓடுவதுக்கு பயிற்சி என்றதும் விரும்பி நேரம் ஒதுக்கி பயிற்சி தந்தார் பரவாயில்லை களைப்பில் தூங்கி எழும்பி பார்க்க விடிகாலை 1.15 ஆகியிட்டுது இனி ஞாயிறுகளில் ஓட்டம்தான் . போன இடத்தில் இருந்தது சனம் கூடவாக இருந்தபடியால் இந்தியன் கொரனோ பயத்தில் நெருங்கவில்லை 😀 யாழில் ஒராளை காணவில்லை என்றால் அவ்வளவுதான் மலர்வளையமும் வைத்துவிடுவார்கள் இனி போனில் போட்டுக்கொள்ளவேனும் 😁 எங்கள் இஷ்டத்துக்கு ஓடி காலை வதம் பண்ணாமல் பயிற்சி யாளருடன் தொடங்குவது மிகவும் இலகுவாக உள்ளது .
  11. எனது பிறந்த தினத்துக்கு முதல் ஆளாக படம் போட்டு வாழ்த்திய தமிழ் சிறீ கந்தையா 57 சுவி கிருபன் மடல் வாழ்த்து அனுப்பிய ஜெகதா துரை பாடடனுப்பி வாழ்த்திய பாஞ்ச் புங்கை உடையார் குமாரசாமி ஈழப்பிரியன் வாழ்த்து மடல் அனுப்பிய புரடசித்தேசியன் பெருமாள் நுணாவிலான் ஆகியோருக்கு நன்றிகள்.
  12. காவி கட்டி வேண்டிக்கிட்டு காவடிய தூக்கிகிட்டு தேடி வந்தோம் தேடி வந்தோம். உப்புக் காத்து
  13. என் இயேசுவே என் நேசரே உம்மை வாழ்த்திப் போற்றுவேன் - (2) என் அன்பனே என் நண்பனே உன் உள்ளமே என் இல்லமே வாழ்வின் மொழிகள் பேசும் உந்தன் வார்த்தை எனக்கு வேண்டுமே வளமை சேர்க்கும் வாழ்வின் மன்னா நிதமும் எனக்கும் தாருமே -(2) உன் நினைவு போதுமே என் வாழ்வு மாறுமே -(2) நாழிதோறும் காக்கும் உந்தன் கருணை நிறைவு போதுமே மனதில் உன்னை நினைக்கும் போதே மகிழ்ச்சிக் கண்ணீர் பெருகுமே என் இனிய தேவனே நீர் ஒருவர் போதுமே
  14. காலை வணக்கங்கள் எல்லாம் வல்ல இறைவனின் அருள் பெற்று நோய் நொடியின்றி எல்லோரும் இன்புற்றிருக்க. வாழ்க வளமுடன்🙏 எந்நாளும் உம்மை மறவேன் யா நபியே
  15. பட்டும் படாமல் ஒரு முரட்டு குத்து.
  16. ஓடப்போன இடத்தில் ஏதாவது கோப்பிக்கடை கண்டு அங்கை ஐக்கியமாகியிருக்கவும் வாய்ப்பு உள்ளது. 🍰😂☕
  17. சகோதரி நிலாமதி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் .💐..🎂
  18. நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழும்வரை சுகமாக வாழ வேண்டுகிறேன்.
  19. சாந்தி.... இன்று காலை முழுக்க, பெருமாள் யாழ். களத்தில் நின்றவர். மத்தியானத்துக்கு பிறகு... ஆளை இங்கு காணவில்லை. ஓடப் போயிட்டார் போலை கிடக்கு... 🏃‍♂️ இல்லாட்டி.... 🤔 . . . . . . . . . . . மத்தியானம் நல்லாய் சாப்பிட்டுட்டு... "நித்தா கொள்கிறாரோ" தெரியவில்லை.
  20. சகோதரி நிலாமதிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். 💐
  21. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி.
  22. துள்ளி துள்ளி அலைகள் எல்லாம் என்ன சொல்லுது.......!
  23. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலாமதி அக்கா.
  24. நிலாமதி அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉 வாழ்க வளமுடன்🎂
  25. பாஞ்ச் அண்ணாவுக்கும். புலவருக்கும். நிலமாதிக்கும் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன். வளமுடன். 👏👏👏🍎🍎🍎❤️❤️❤️
  26. அனைவரின் அன்புக்குரிய... நிலமாதி அக்காவுக்கு, எமது இதயம் கனிந்த, பிறந்தநாள் வாழ்த்துக்கள். 🎉 🎂 🍭 வாழ்க வளமுடன்.
  27. ஆதரவும் ஊக்கமும் அளித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும் நன்றிகள், நிச்சயமாக கிழிக்கப்பட்ட பிரதிகள் என்றோ ஒரு நாள் வெளிப்படும், பாகம் 2 இல்
  28. ஒரு நாளுக்கு மூன்று அவித்த முட்டைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கே... இதில குறைவான உணவு என்று வேற 😉
  29. உலக ஒழுங்கு என்று வரும் பொழுது இன்றும் பழைய வலது/இடது அணி தான் அச்சாணி யாக இருக்கிறது .. அணிசேரா நாடுகள் என்ற அமைப்பும் இருந்தது ஆனால் அந்த அணி நாடுகள் உடைந்து போனது அல்லது வலது/இடது கூட்டணிகளுடன் கூட்டு சேர்ந்து கொண்டது எனது பார்வையில்... ஆசிய பிராந்தியத்தில் இரண்டாம் உலக போரின் பின்பு இரு பெரும் இடதுசாரி (??)நாடுகள்(சோவியத் சீனா)ஆசிய பிராந்தியத்தில் ஆதிக்கம் செலுத்துவதை உலக போரை முடிவுக்கு கொண்டு வந்த தரப்பு விரும்பவில்லை. வலது நாடுகளின்(வநா) கூட்டு தங்களது வசதிக்கும் தங்களது செல்வாக்கை செலுத்துவற்குமாக சில தீவுகளை நாடுகளாக உருவாக்கி அல்லது குத்தகைக்கு எடுத்து தங்களது வலது/ஜனநாயக/பல்கலாச்சார கொள்கைகளை வகுத்து சென்றன.....மதங்களை மையப்படுத்தி நாடுகளின்எல்லைகளையும் வகுத்து சென்றனர். பிரித்தானியா தனது காலனித்துவத்திலிருந்த நாடுகளை ஒரு அணியின் கீழ் பொதுநலவாய நாடுகள் என உருவாக்கினர் இந்த பொதுநலவாய நாடுகள் தங்களது செல்ல பிள்ளைகளாக தங்களால் அறிமுகம் செய்யப்பட்ட பல் கலாச்சார,மற்றும் ஜனநாயக மரபுகளை மதித்து நடப்பார்கள் என நினைத்தார்கள்.அத்துடன் தங்களது மொழி,மற்றும் மத பண்பாடு (கிறிஸ்தவம)தெரிந்தவர்கள் அறிந்தவர்கள் என நம்பினார்கள் . அரசியல் லாபங்களுக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் இந்த நாடுகளை உபயோகிக்கலாம் என்ற தூர நோக்கு சிந்தனை யுடன் உடன் செயல் பட்டார்கள். அப்படி உருவான நாடு தான் சிலோன்..... பல பொதுநலவாய நாடுகள் பிரித்தானியாவை சுழிச்சு விளையாட தொடங்கின ,அதில் ஒன்று சிலோன். இதை அறிந்த வ/நா கூட்டு ஆசியா பிராந்திய நாடாகிய ஜப்பான் ஊடாக பல நிதியுதவிகளை செய்து தம் பக்கம் வைத்து கொள்ள முடிவு செய்தது. ஜப்பானும் சிறிலங்காவும் பாரம்பரிய நட்பு நாடுகளாக மாறியது. . அதே சமயம் சிலோன் தனது நாட்டை(இறையாண்மை) பாதுகாத்து கொள்ளவும்,அரசியல் வாதிகள் தங்களது அரசியல் /பணம் பலத்தை பெருக்குவதற்கு பல உத்திகளை பயன்படுத்தினார்கள். சிலோன் முழுவதும் ஒரே இனம் ,ஒரே மொழி, ஒரேமதம் பேசும் மக்கள் வாழ வேண்டும் .உலகில் சிங்கள பெளத்தம் இந்த நாட்டில் மட்டும் உள்ள காரணத்தால் இதை பாதுகாக்க நினைத்த‌ சிங்கள பெளத்த தேரர்கள் இனவாத்தை கையில் எடுத்தார்கள் .கிறிஸ்தவ சிங்கள அரசியல்வாதிகளும் இதைபயன்படுத்தி பெளத்தர்களாக மாறி அரசியல் செய்ய தொடங்கினார்கள். அரசியல் யாப்புக்களை மாற்றுவதும் இனவாதம் பேசுவதுமாக நாட்டை நடத்த தொடங்கினார்கள். வாக்குரிமை பறிக்கப்பட்டமை,சிங்களம் மட்டும் சட்டம்,பாத யாத்திரைகள் ,ஒப்பந்த்ங்கள் கிழித்தெறிதல் என்பன உள் நாட்டில் நடந்து கொண்டிருக்க மறுபக்கத்தில் சர்வதேச மட்டத்தில் சிலோன் என்ற பெயரை சிறிலங்கா குடியரசு என மாற்ற அரசியல் யாப்பை மாற்றினார்கள் . ஜெ.வி.பி (சேகுவார புரட்சி)இடது சாரி கொள்கையை புரட்சி மூலம் உருவாக்க போராடினார்கள். இந்த போராட்டம் இந்தியா இராணுவத்தின் உதவியுடன் சிலோன் இராணுவத்தினரால் முறியடிக்கப்பட்டது. (தற்பொழுது சீனா பணத்தை காட்டி நேரடியாக ஆட்சியை தமது கட்டுப்பாட்டில் கொண்டுவருகின்றனர்,முன்பு போல மாவோ யிஸ்ட்க்களை உருவாக்க வேண்டிய தேவையில்லை.) சிறிலங்காவில் ஆட்சிக்கு வருபவர்கள் யாவரும் தங்களது கட்சி தொடர்ந்து நிலைத்திருப்பதற்கு அரசியல் யாப்பில் மாற்றத்தை கொண்டு வந்திருக்கின்றனர் . ஜெ.ஆர் ஆட்சிக்கு வந்தார் சிறிலங்கா குடியரசு என்ற பெயரை சிறிலங்கா சோசலிச ஜனநாயக குடியரசு என மாற்றி அரசியல் யாப்பையும் மாற்றினார் தனது கட்சி தொடர்ந்து 17 ஆண்டுகள் ஆட்சி அமைக்க கூடியதாக இருந்தது. தமிழ்மக்களின் ஆயுத போராட்டம் சிங்கள ஆட்சியாளர்களின் அரசியல் ஆசைக்கும் விருப்புக்கும் நன்றாக தீனி போட்டது.திறமையாக கையான்டார்கள் சிங்கள ஆட்சியாளர்கள் நாட்டில் அக்கறை கொள்வதை விட அதிகாரத்தை அலங்கரிப்பதிலயே கவனம் செலுத்தினர் சந்திரிக்கா ஆட்சி அமைத்தார் அவரும் அரசியல் யாப்பை மாற்றுவதாக சொல்லித்தான் ஆட்சி ஏறினார் ... ஐக்கிய தேசிய கட்சி ஆளுமை குறைய தொடங்க சிறிலங்கா சுதந்திரக‌ட்சி ஆட்சியமைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கின்றது .சந்திரிக்காவின் பதவிக்காலம் முடிய ராஜபக்சா ஆட்டம் தொடங்குகிறது .இதுவரை காலமும் மேற்குலகு, சீனா, இந்தியா போன்ற நாடுகளுடன் சுளிச்சு ஓடிய ஒட்டம் ஒரு முட்டுக்கட்டை நிலைக்கு வந்து பகிரங்கமாக சீனாவுடன் உறவாட வேண்டிய நிலைக்கு சிறிலங்கா வந்து நிற்கின்றது .புதிய கட்சி நீண்ட நாள் ஆட்சி செய்ய வேண்டும் அத்துடன் இது குடும்ப கட்சியாகவும் நீண்டநாட்கள் பயணம் செய்ய‌ வேண்டியுள்ளது.இந்த குடும்ப கட்சியில் ஒரு சிக்கல் உண்டு சகோதரர்கள் அவர்களின் பிள்ளைகள் எல்லோரும் ஜனாதிபதி ,பிரமதர் ஆக வரும் தகுதியுடையவர்கள். மீண்டும் சிறிலங்கா யாப்பு மாற்றப்படுவதன் மூலம் அதன் பெயர் சிங்கலெ ஆக மாறும் .சீனா சகல அபிவிருத்தியையும் செய்யும் நாட்டின் பெரும் பகுதி சீனாவுக்கு சொந்தமாகும்.....சிங்கள மக்கள் சிங்கலெ என்ற பெயர் கிடைத்தது மற்றும் தமிழர்கள்,இஸ்லாமியர்கள் நாட்டின் சொத்தை அபகரிக்கவில்லை என பெரும் மூச்சு விடுவார்கள் ஆனால் ட்ரகன் விழுங்கிய சிங்கத்தை மறந்துவிடுவார்கள் வலதுசாரி பின்னனி கொண்ட கூட்டு ஐ.நா சபையில் மனித உரிமை மீறல் என்ற குற்றசாட்டை போட்டு சிறிலங்காவை சீனா பக்கம் சாயாமல் தடுக்க முயற்சி செய்து பார்கின்றது ஆனால் வலது சாரிகளின் நன்கொடையை விட சீனாவின் நன்கொடை பல மடங்கு அதிகம் அதனால் அரசியல்வாதிகளின் பணப்பையும் பெரிதாகும்... நீண்ட நாட்கள் அரசியல் எழுதவில்லை அதுதான் இந்த சின்ன கிறுக்கல்
  30. நம்பினால்... நம்புங்கள். யாழ்ப்பாணத்தில்... வீட்டுடன் உள்ள பெரிய காணி. அங்கு வசித்தவர்கள்... புலம் பெயர்ந்து வெவ்வேறு நாடுகளுக்கு சென்று விட. ஊரில்... இருக்கும் அவர்களின் உறவினர், அந்த வீடு, சும்மா இருக்கப் படாது என்று, பல்கலைக் கழக மாணவர்களுக்கு, சிறிய வாடகையுடன் கொடுத்து வந்ததுடன், மூன்று, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை... அந்தக் காணியையும்... சுற்றிப் பார்த்து விட்டு வருவார். எல்லாம்... நல்ல படியாக இருந்ததால், அவரும், அங்கு போவதை சிறிது குறைத்துக் கொண்டார். இப்படியிருக்க.... ஸ்ரீலங்காவில், ஒரு ஐரோ..... 235 ரூபாய் போகுது என்றவுடன், அந்தக் காணிக்கு... இப்ப ஒரு, சுற்று மதிலை கட்டுவம் என்று, ஊரில், உள்ள உறவினருக்கு... சொல்ல, அவரும், நல்ல விசயம். உடனே செய்வம் என்று, ஆட்களைப் பிடித்து, நல்ல நாள் ஒன்றில்... வேலையை ஆரம்பித்து, மதில் கட்ட... வேலியை வெட்டி, அத்திவாரம் கிண்டும் போது, அயல் காணியில் இருந்து... ஒரு குழாய், குறுக்கே வந்து நிற்கிறது. 😮 அவரும்... அதைப் பார்த்து, திகைத்துப் போய்... "தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்துக்கு", அறிவிக்க வேண்டிய... விசயம் போலுள்ளது , என்று குழம்பி நிற்க... 🤣 பக்கத்து காணிக்காரன், தனது காணியில்.. "கக்கூசை" கட்டி விட்டு, 🚽 பராமரிப்பு அற்று இருந்த, அயல் வீட்டு காணியில்... குழாயை நீட்டி... ஆழமாக "கக்கூஸ்" குழியை, தோண்டி.. தனது, அன்றாட... மலசல கடன்களை, சிறப்பாக செய்து கொண்டிருந்ததை... காலம் கடந்து அறிந்தார். இது... என்ன கோதாரியாய் கிடக்கு, "போனது... போனது தான்", அதனை திருப்பி... அவனது காணிக்குள், தள்ள முடியாது. இதுக்கு.... வக்கீல் வைத்து, நீதிமன்றத்துக்குப் போனால்... தீர்ப்பு வர, பத்து வருசம் எடுக்குமே, என்று விட்டு... யாழ். மாநகரசபைக்குப் போய்... நடந்த விடயத்தை சொல்ல, அவர்கள்... அந்த விடயத்தை, தமது, அதிகாரத்துக்கு உட்பட்டு... உடனே... தீர்த்து, வைத்து விட்டார்கள்.
  31. அப்புவிட அப்புவும்,பேரனும்..! ********************* கந்தையா அண்ணரும் காசிம் நானாவும் றம்பண்டா மல்லியும் ஒரு குடும்பமாய் திரிந்த காலம் அப்போது .. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. புத்த பெருமானுக்கும் நபிகள் நாயகத்துக்கும் ஜேசு பிரானுக்கும் சித்தர் சிவனுக்கும்-மதம் பிடித்ததாய்.. அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. கண்டியில பெரகராவும் திருக்கேதீச்சரத்தில சிவராத்திரியும் கொச்சிக்கடையில பாலன் பிறப்பும் மட்டக்களபில நோன்புப் பெருநாளும் அன்பாக நடந்ததே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. ஒவ்வொரு இடத்தில ஒவ்வொரு ஆலயம் கட்டி வளிபாட்டுத்தலமெல்லாம் அனைவரும் வந்து வணங்கி வளிபட்டு போனார்களே தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. தமிழ்.. வடக்கு கிழக்கென்றும் சிங்களம்.. தெற்கு மேற்கென்றும் ஒவ்வொரு பகுதியாக பிரிந்து வாழ்ந்தாலும் ஒற்றுமையைத் தவிர அப்போது.. ஒருநாளும் நான் கண்டதில்லை சண்டையை.. இப்படி எனக்கு-என் அப்புவிட அப்பு கனவில வந்து கதை சொல்லி போனார். அப்போது நினைத்தேன் இப்போது நடப்பது அரசியல் வாதிகளும்-சில அரசடி வாதிகளும் தாம் வாழ நினைத்து. வல்லரசு சிலதோட வறுமையை காட்டி முக்குலத்தையும் முட்டி மோதவிடும் முடிவால்தான்-இன்று எங்களுக்குள்ளே இத்தனை.. சண்டையோ? எண்ணித் திகைத்து இடையில.. எழுப்பி விட்டேன். “விடியவில்லை” ஐயோ பக்கத்தில.. அழுகுரல்கள் கேட்கிறது. அன்புடன் -பசுவூர்க்கோபி- 27.03.2021
  32. பார்வைகள் “Me Too” Movement அவுஸ்திரேலியாவை சுற்றி வளைத்து பிரதம மந்திரி இலிருந்து பாதுகாப்பு அமைச்சர் , Attorney General , பிரபல உதை பந்தாட்ட வீரர்கள், கடை நிலை அலுவலக ஊழியர்கள் என்று வாழ்வின் எல்லா நிலைகளிலும் இருக்கக் கூடியவர்களின் இருப்பினை கேள்விக் குறியாக்கிக் கொண்டிருக்கிறது. பெண் உரிமை என்று வாய் கிழியக் கத்தி கொண்டிருக்கும் நாம் உண்மையில் நடை முறையில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்…? எனது அனுபவங்களின் தொகுப்பாக சில பதிவுகள் ………… பார்வை 1 கொஞ்ச நாட்களாகவே எனது கண் பார்வை சரியில்லை என்று ஒரு ஃபீலிங். இரவு நேரங்களில் டிரைவ் பண்ணும் போது முன்னாலிருக்கும் ரோடு மங்கலாக தெரிவது போல ஒரு பிரமை . போன கிழமை நிலைமை மேலும் மோசமாயிற்று. இரவு டிரைவ் பண்ணும் பொது முன்பு மங்கலாயிருந்த தெருக்களெல்லாம் இப்ப கறுப்பாகத் தெரியத் தொடங்கிற்று.இதென்னடா கொடுமை சரவணா என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு ஹை பீம் ஐ தட்டி விட்டால் வீதி நன்கு தெரிந்தது. அத்துடன் எதிரே வந்த கார்க்காரனின் ஆட்சேப ஹார்ன் சத்தமும் கூடவே வந்தது. இருந்தால் போல் பொறி தட்டியது. வாகனத்தை நிற்பாட்டி விட்டு முன்னுக்கு ஹெட் லைட் ஐ போய்ப் பார்த்தல், சுத்தம் - இரண்டும் செத்துப் போய் இருந்தன . டொயோட்டா காரன் இப்ப இரண்டு வருடமாக முன்னும் பின்னமும் புது மொடலுக்கு மாத்தவில்லையோ என்று கேட்ட படி. அலுவலகத்தில் புதிதாக சேர்பவர்கள் முதல் தரம் எனது வாகனத்தைப் பார்க்கும் போது “என்ன ஒரு வருடம் இருக்குமா வாங்கி” என்று தான் கேட்பார்கள். ஏழு , எட்டு வருடம் என்று சொன்னால் நான் எதோ பகிடி விடுகிறேன் என்று அப்பால் போய் விடுவார்கள். இப்பிடி இருக்கும் போது அலுவலகம் தரும் வெஹிகிள் அலவன்ஸை திரும்பவும் கொண்டு போய் டொயோட்டா காரனிடம் கொட்டி அழ வேண்டிய அவசியம் இல்லை தானே. சொல்ல வந்த விஷயமே வேறு. எனது கார் ஓடும் 34 வருட கால அனுபவத்தில் -பழைய பியட் ஒன்றுடன் 1987 இல் திருகோணமலையில் தொடங்கியது- ஹெட் லைட் பல்பு பியூஸ் ஆகி மாற்ற வேண்டிய தேவை வந்தது இது தான் முதல் தரம். ஹெட் லைட் அப்பிடியே செட் ஆக மாற்ற வேண்டுமாக்கும் என நினைத்துக் கொண்டே டொயோட்டா சேவை காரனுக்கு அடிக்க , அவன் மாடல் நம்பரை கேட்டு விட்டு தங்களிடம் ரீபிளேஸ்மென்ட் பல்பு ஸ்டாக் இல் இல்லை என்றும் “சூப்பர் சீப் ஆட்டோ” போன்ற கடைகளில் இருக்கும் என்றும் சொன்னான் . அதனை வாங்கி வந்தால் போட்டுத் தருவானா என்று கேட்க, சில வினாடிகள் மௌனத்தின் பின்னர் “ ஓம் செய்யலாம், ஆனால் வாங்கிற இடத்திலேயேயே அவர்கள் போட்டும் தருவார்கள், இங்கே கொண்டு வந்தால் நாங்கள் சேவை சார்ஜ் எடுப்போம்” என்றான் . சோ “சூப்பர் சீப் ஆட்டோ “இற்கு போனேன். கவுண்டர் பெண்மணியிடம் கேட்க , இன்னொரு பெண்மணியிடம் என்னை அனுப்பி வைத்தா ள் , சிறு பெண்ணொருத்தி ,வயது இருபதுகளில் தான் இருக்கும் , பல்கலை மாணவியாக பகுதி நேர வேலை செய்பவராக இருக்கக் கூடும் என்று நினைத்துக் கொண்டேன். கார் சமாச்சாரங்களில் அனுபவம் உடையவர்கள் யாரிடமாவது கூட்டிச் செல்வாள் என நினைத்துக் கொண்டேன். அந்த பெண்மணி என்னை ஒரு கம்ப்யூட்டர் திரைக்கு அழைத்துச் சென்று எனது வாகன மாடல் போன்ற விபரங்களை கேட்டு கம்ப்யூட்டருக்குள் அவற்றை தட்டி அனுப்பி இரண்டு விதமான பல்புகள் இருக்கின்றன என்று 30 செகண்ட்ஸ் நேரத்தில் சொல்கிறாள். இதே அலுவலை எனது கம்ப்யூட்டர் இல் 10 நிமிடங்களுக்கு மேலாக செலவழித்தது கண்டுபிடித்தது எனது ஞாபகத்திற்கு வந்தது. மூன்றாவதாக ஒரு LED பல்பும் இருந்தது. 6000K ரகம் 50% வெளிச்சம் கூட. அதை பற்றி கேட்டேன் , இருக்கின்றது, ஆனால் அது Off-Road பாவனைக்கு மட்டும் தான் அலவ்டு , Town ஓட்டத்திற்கு தர மாட்டோம் என்று தெளிவாக சொன்னாள். அந்த பல்புகளை பொருத்தி விடும் சேவையும் இருக்கா என கேட்டேன் . “ஆம் பத்து டாலர் சேவைக் கூலி” என்று பதில் வந்தது. “நல்லது , பொருத்துபவனை அழைத்துக் கொண்டு போய் இந்த பல்புகள் சரியாக பொருந்துகின்றதா என சரி பார்த்து விடலாமா” என கேட்டேன். “பிரச்சனை இல்லை செய்து விடலாம்” என்று பதில் வந்தது . அந்த இரண்டு செட் பல்புகளையும் எடுத்துக் கொண்டு வாகனம் நிற்பாட்டி இருக்கும் இடத்தை காட்டுமாறு சொல்லிக் கொண்டு முன்னே போனாள். பொருத்துபவனுக்கு அறிவித்திருப்பாளாக்கும் என உள்ளுக்குள்ளே நினைத்து கொண்டாலும் எதற்கும் உறுதி செய்து கொள்வோம் என்று பொருத்துபவன் அங்கே வருவான் தானே என்று கேட்டும் ( whether HE will come over there ) வைத்தேன். நிமிர்ந்து பார்த்து மெல்லிய புன்சிரிப்புடன் ஓம் என்றாள். வாகனத்தை நெருங்கியதும் Bonnet ஐ திறக்கச் சொன்னாள். கைக்கு கையுறையை மாட்டினாள். ஹெட் லைட் இன் பின் புறமாக கையை கொடுத்து வெகு இலாவகமாக சுட்டுப் போயிருந்த பல்பை கழற்றி எடுத்தாள். கையில் வைத்திருந்த இரண்டு வகைகளுடனும் ஒப்பிட்டுப் பார்த்தாள். அதில் ஒன்று தான் பொருந்தும் என்றாள். எல்லாம் ஒரு நிமிடத்துக்குள்ளேயே நடந்து முடிந்திருக்கும். நான் பேச்சிழந்து போய் அவள் செய்வதை பார்த்து கொண்டிருந்தேன். என் உள்ளேயிருந்து ஒரு குரல் எங்கேயேடா உனது “அவன்” என்று என்னை பரிகாசம் செய்து கொண்டிருந்தது, அவளுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை தான். அடுத்த 10 செகண்ட்ஸ் இல் பல்பை மாத்தி விட்டு நிமிர்ந்தாள். மற்ற பக்கமும் மாத்த வேண்டும் என்றேன். இரண்டுக்குமென்றால் 15 டாலர் வரும் என்றாள். மௌனமாக தலையாட்டினேன். உள்ளுக்குள் ஒரேயடியாக வெட்கித்துப் போய் நின்றிருந்தேன். நான் இரண்டு வளர்ந்த பெண்பிள்ளைகளின் தகப்பன். இருவரும் மருத்துவ துறையில். வீட்டில் ஆண், பெண் சமத்துவம் பற்றி அடிக்கடி மனம் திறந்த உரையாடல்கள் இடம்பெறும் . தங்கள் அப்பா ஆண் பெண் சமத்துவம் பற்றி மிக நல்ல புரிந்துணர்வு கொண்டிருக்கிறார் என அவர்கள் முழுமையாக நம்புபவர்கள். அந்த பெண்ணுக்கு அந்த பல்புகளை மாற்றும் தத்துவம் இருக்கும் என்று யோசிக்கக் கூட இடம் கொடுத்திராத எனது ஆண் உயர்ச்சி மனப்பான்மை தடுத்துக் கொண்டிருந்த வெட்கக் கேடான விஷயத்தைப் பற்றி இளைய மகளுடன் கதைத்தேன் . “இதைத் தானே அப்பா நாங்களும் சொல்கிறோம் , எங்களையும் சமயங்களில் சில தூக்கி பறிக்கிற விடயங்களை நீங்கள் செய்ய விடுவதில்லை தானே; அதனுடைய நீட்சி தான் அப்பா இது.” “கவலைப்படாதீர்கள் எல்லாம் போக போக சரியாகி விடும். ரோம் கூட ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டதல்ல என்று நீங்கள் தானே அடிக்கடி சொல்வீர்கள்” என்று ஆறுதல் மொழியும் வந்தது…. பார்வை 2 வேறொரு சமயம் …..
  33. வண பிதா வுக்கு கண்ணீரால் எழுதுகின்றேன். ********************* வண பிதாவே.. நீங்கள் பிறந்ததாலே நெடுந்தீவு தாய்க்கு மகிழ்ச்சி நீங்கள் பிறந்த மண்ணில் நாங்களும் பிறந்தோம் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி நீங்கள் இறைபணித்தூதராய் துறவறம் பூண்டு செய்த சேவைகள் இலங்கை மக்களுக்கே மகிழ்ச்சி தமிழ் உணர்வாளராய் தமிழை தலைநிமிர வைத்தது-உலக தமிழினத்துக்கே மகிழ்ச்சி. மனித நேயம் கலந்து.. இத்தனை மகிழ்சிகள் எமக்குத்தந்த பிதாவே இன்று(1.04.21) எமைவிட்டு பிரிந்த செய்தி அறிந்து அகிலமே கண்ணீரால் கரையுதையா. இறைவனோடு இறைவனாய் என்றும் எம்மனதில் நிலைத்திருப்பீர்கள். போய் வாருங்கள் ஆண்டகையே.🙏 அன்புடன் -பசுவூர்க்கோபி-

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.