எதற்கும் ஊடக அடியாள் சேரமானின் துணையுடன் வந்த கொள்ளை பரப்புரையை யாழை வாசிப்பவர்கள் பாருங்கள். இதில் உள்ளவை எந்த எந்த ஆண்டு மாவீரர் உரைகளில் இருந்து உருவியதென்று கண்டுபிடித்துப் போட்டாலும் நல்லது..
:::::::::::::::::::
எனது அன்புக்கும், மதிப்புக்குமுரிய தமிழீழ மக்களே,
இன்று மாவீரர் நாள்.
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமதுஇன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமதுஇதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில்உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்புஅளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல்என்றோ ஒரு நாள் தமிழீழத் தாயகம் திரும்பி, அங்கு எமதுமக்களோடு கூட இருந்து அவர்களுக்காகப் பணிசெய்வதற்குக் காலம் வாய்ப்பளிக்கும் என்ற அசையாதநம்பிக்கை எனக்கு உண்டு.
எனது அன்பார்ந்த மக்களே,
முழு உலகமுமே வியப்படையும் வகையில் களமுனைகளில்சாதனை படைத்தவர்கள் எமது மாவீரர்கள். தனித்து நின்றுஎம்மோடு போர்புரியத் திராணியற்ற சிங்கள அரசு, சக்திவாய்ந்த நாடுகளைத் தன் பக்கம் வளைத்தது. தோல்வியின்விளிம்பில் நின்ற தருணங்களில் எல்லாம் அந்நியசக்திகளிடமும், சக்திவாய்ந்த நாடுகளிடமும் மண்டியிட்டுயாசகம் புரிந்தது. எமது தேச சுதந்திர இயக்கத்தின் மீதுஉலகின் பல நாடுகளில் தடைகள் விதிக்கப்பட்டு எமதுவளங்கள் முடக்கப்பட்டன. தமிழீழ தாயகத்திற்கானவிநியோகப் பாதைகள் மூடப்பட்டன. சிங்களப் படைஇயந்திரத்தை எமது தேச சுதந்திர இயக்கம்பலவீனப்படுத்திய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும்சக்திவாய்ந்த நாடுகள் தலையிட்டு சிங்களப் படைஇயந்திரத்திற்கு உயிர்ப்பூட்டின. உலகின் ஒரு மூலையில்தனித்து நின்று, எமது மக்களின் ஆதரவில் மட்டும் தங்கிநின்று போராடிய எமது தேச விடுதலை இயக்கத்தின் ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் மௌனித்துப் போனதற்குஇதுவே காரணமாகும்.
ஆனாலும் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்முற்றுப் பெறவில்லை. தமிழீழம் என்ற அரசியல் வேணவாகருக் கொள்வதற்குக் காரணமாக இருந்த புறநிலைசூழல்கள் இன்றும் கூட அப்படியே தான் இருக்கின்றன. தமது தாயக பூமியில் தமது கலாச்சார பண்பாட்டுவிழுமியங்களையோ, தத்தமது சமய வாழ்வையோ, மொழிப் பாதுகாப்பையோ பேணிப் பாதுகாக்க முடியாத அளவிற்குப்பண்பாட்டுச் சீர்கேடுகளை ஊக்குவித்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பாகுபாடுகளை மேற்கொள்வதோடு, சிங்கள-பௌத்த மயப்படுத்தல் நடவடிக்கைகளை சிங்களஅரசு முழு மூச்சுடன் முன்னெடுத்து வருகிறது.
இவை போதாதென்று ஈழத்தீவில் முற்று முழுதாகச் சிங்களப்படையாட்சிக்கு உட்பட்ட ஒரேயொரு மாநிலமாகத் தமிழீழதாயகத்தைச் சிங்களம் மாற்றியமைத்துள்ளது. அனைத்துசுதந்திரங்களும், மனித உரிமைகளும் மறுக்கப்பட்டதேசமாகத் தமிழீழத் தேசம் திகழ்கின்றது. சட்ட ஆட்சிமறுக்கப்பட்டு, பயங்கரவாதத் தடைச் சட்டம், அவசரகாலச்சட்டம் என எந்நேரமும் இராணுவப் பேயாட்சியைச் சிங்களம் திணித்துள்ளது. குரல்வளை நசுக்கப்பட்ட ஒரு மக்களாகவேஈழத்தீவில் எமது மக்கள் வாழ்கிறார்கள்.
மறுபுறத்தில் எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்தால், அரசியல் வழிகளில் எமது மக்களின் அபிலாசைகளைநிறைவேற்றலாம் எனப் போர் நிகழ்ந்த காலப்பகுதியில்ஆசைவார்த்தை கூறி, நம்பிக்கையூட்டிய
உலகின் சக்திவாய்ந்த நாடுகள் இற்றை வரைக்கும் எமதுமக்களுக்கு ஒரு காத்திரமான அரசியல் தீர்வைத் தானும்வழங்கவில்லை. ஈழத்தீவில் தமிழ் மக்களுக்குஇழைக்கப்பட்டது போர்க் குற்றம் என்றும், மானிடத்திற்குஎதிரான குற்றச்செயல் என்றும் கடந்த பதினான்குஆண்டுகளில் பல்வேறு அறிக்கைகளை வெளியிட்ட ஐ.நா. மன்றமும், இவை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் தீர்மானங்களை நிறைவேற்றிய சக்தி வாய்ந்தநாடுகளும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட தமிழீழத்தேசத்திற்கு இற்றை வரைக்கும் ஒரு பரிகார நீதியைத்தானும் பெற்றுத் தரவில்லை.
இவை தான் அரசியல் சுதந்திரத்திற்கான எமது போராட்டம்தொடர்ந்தும் உயிர்ப்புடன் இருப்பதற்கான காரணிகளாகும். சமஸ்டி அரசு கோரி 1950களில் எழுச்சி கொண்ட எமதுதேசத்தின் அகிம்சைப் போராட்டம், 1960களில் ஆயுத வலுக்கொண்டு சிங்கள அரசால் நசுக்கப்பட்டது. இதன் விளைவாகவே 1970களில் போர்க்குணம் கொண்ட இளையதலைமுறை தோற்றம் பெற்றது. சிங்கள ஆயுதப்படைகளையும், அதன் ஒடுக்குமுறை அரச இயந்திரத்தையும்எதிர்த்து வீரம்செறிந்த ஆயுதப் போராட்டத்தை எமதுஇளைஞர்கள் நிகழ்த்தினார்கள். எமது தேசியத் தலைவரும்எனது தந்தையுமாகிய மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்அவர்களின் வழிநடத்தலில் ஆயிரமாயிரமாய் அணிதிரண்டஎமது இளைஞர்களும், யுவதிகளும் ஈழத்தமிழினம் ஓர்வீறுகொண்ட, மண்டியிடாத வேங்கையினம் என்பதைநிறுவினார்கள். இந்த நிலையை உருவாக்கித் தந்தவர்கள்தமிழீழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிரை ஈகம்செய்தமாவீரர்களே. மாவீரர்கள் என்றும் காலத்தால் அழியாதவர்கள்.அந்த மகத்தான, உன்னதமானவர்களை என்றும் எம்மனக்கோவிலில் வைத்துப் பூசிப்போம்.
எமது ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்திருந்தாலும், எமதுசுதந்திரத்திற்கான, எமது அரசியல் அபிலாசைகளைவென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டம் உயிர்ப்போடுஇருப்பதற்கு, எமது தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் எமது மக்களும், அரசியல் தலைவர்களும், எமது தேச விடுதலை இயக்கத்தில் பணிபுரிந்தபோராளிகளும், செயற்பாட்டாளர்களுமே காரணம் என்பேன். சுதந்திரத்திற்கான போராட்டம் முனைப்புடன் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறான யதார்த்தசூழமைவில் மக்கள் என்றும், புலிகள் என்றும்ஈழத்தமிழர்களை வேறுபடுத்திப் பார்ப்பது அர்த்தமற்றது. மக்களே புலிகளாகவும், புலிகளே மக்களாகவும் விளங்கும்யதார்த்தம் எமது போராட்டத்தின் பரிமாணமாகும்.
ஆனாலும் எமது அரசியல் போராட்டத்தை மேலும்வினைத்திறனுடன் முன்னெடுத்து, எமது அரசியல்உரிமைகளை வென்றெடுக்க வேண்டியவர்களாக நாங்கள்இருக்கின்றோம். கட்சி பேதங்கள், அமைப்புகளுக்கிடையேநிலவும் வேறுபாடுகளைக் கடந்து தமிழீழ தேசத்தின்அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்காகவும், இனவழிப்பிற்கு ஆளாக்கப்பட்ட எமது உறவுகளுக்கு நீதிகிட்டுவதற்காகவும் ஒற்றுமையோடும், வினைத்திறனோடும்பயணிக்க வேண்டிய கடப்பாடு தாயகத்திலும், புலம்பெயர்தேசங்களிலும் வாழும் ஒவ்வொரு ஈழத்தமிழர்களுக்கும்உண்டு. கருத்து வேறுபாடுகள் எமக்கிடையே நிலவலாம். ஆனாலும் வேற்றுமையிலும் ஒற்றுமை என்பதே தேசத்தின்
அரசியல் உரிமைகள் என்று வரும் போது ஒரே கோட்டின் கீழ்பயணிக்க வேண்டியவர்களாக நாம் எல்லோரும்இருக்கின்றோம்.
அதே நேரத்தில் தாயகத்தில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும்எமது மக்களினதும், கடந்த காலங்களில் தம்மையேஅர்ப்பணித்துப் போராடிய முன்னாள் போராளிகளினதும்வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பி, அவர்களின் பொருண்மியவாழ்வை மேம்படுத்த வேண்டிய கடப்பாட்டைக்கொண்டவர்களாக எமது தேசத்தின் வளம்கொண்டதரப்பினர் இருக்கின்றார்கள். குறிப்பாக இதற்கானபொறுப்பு புலம்பெயர் தேசங்களில் வாழும்ஈழத்தமிழர்களுக்கு உண்டு. வறுமைக் கோட்டின் கீழ் வாழும்எம் இன உறவுகள் அனைவரையும் பொறுப்பேற்று உதவி புரிந்தால் அந்நியர்களிடம் எமது தேசம் கையேந்தி நிற்கும்நிலை ஏற்படாது.
இத்தனை ஆண்டுகளாக எமக்காகத் தொடர்ச்சியாகக்குரலெழுப்பி, பக்கபலமாகத் திகழும் தாய்த் தமிழகஉறவுகளுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், உலகத் தமிழ்மக்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன். எமது இனம் கடந்து இந்தியாவிலும் மற்றும்உலகநாடுகள் எங்கும் எமக்காகக் குரல் கொடுத்துதுணைநிற்கும் உறவுகளின் கரங்களையும் வாஞ்சையோடுபற்றிக்கொள்கிறேன். தமிழீழ தேசத்திற்குப் பக்கபலமாகத்திகழும் தாய்த் தமிழக உறவுகளும், உலகத் தமிழர்களும்எமது மக்களுக்கு உறுதுணையாக நின்று, எமது மக்கள்தமது உரிமைகளை வென்றெடுப்பதற்காகத் தொடர்ந்தும்நீங்கள் குரல் கொடுப்பீர்கள் என்று எனக்கு அசையாதநம்பிக்கை உண்டு.
எனது அன்பார்ந்த மக்களே,
நாம் வரித்துக் கொண்ட இலட்சியமும், இதற்காக எமதுமாவீரர்கள் கொடுத்த விலையும், எமது தேசம் புரிந்தஈகங்களும், சந்தித்த இழப்புகளும் அளப்பரியவை. இவைஒரு நாளும் வீண்போகாது. நெருக்கடி மிகுந்த காலங்களில்எல்லாம் எமக்குத் தூண்களாக நின்றவர்கள் எமதுமக்களாகிய நீங்களே. இலட்சியத்தால் ஒன்றுபட்டமக்களாக எமது விடுதலையை வென்றெடுக்க ஒன்றுசேரவேண்டுமென்று அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றேன்.
மாற்றம் கண்டுள்ள உலக ஒழுங்கிற்கு ஏற்ப, அரசியல்வழியில், அறநெறி நின்று நாம் தொடர்ந்தும் போராடுவோம். எல்லா வகையான போராட்டங்களிலும் அரசியல்போராட்டம் மிகவும் கடினமானது. இவ் வகையானபோராட்டத்திற்குப் பொறுமையும், நம்பிக்கையும், இலட்சியஉறுதியும் அடிப்படையானது. இதனை நான் புரிந்துகொள்ளாமல் இல்லை.
தமிழீழத் தனியரசே எமது தேசத்தின் இறைமையையும், தன்னாட்சி உரிமையையும் உறுதி செய்யும் என்பது எனதுஅசையாத நம்பிக்கை. இதுவே எமது தேசியத் தலைவரின்நிலைப்பாடும் என்பதையும் நீங்கள் நன்கு அறிவீர்கள். எமதுமக்கள் தமது தாயக பூமியில் அவர்களது மொழியையும், பண்பாட்டையும், தத்தமது சமய வாழ்வையும், பொருண்மியவளங்களையும் பேணிப் பாதுகாத்து, மேம்படுத்தக் கூடியவகையிலும், சனநாயக விழுமியங்களுக்கு இசைவாகவும், தனிமனித சுதந்திரத்தையும், மனித உரிமைகளையும்பேணக் கூடிய விதத்திலும், சட்ட ஆட்சி கொண்டமக்களாட்சியாகத் "தமிழீழம்" என்ற தனியரசுஅமைவதற்கான புறச்சூழலை காலம் ஒரு நாள்கட்டவிழ்க்கும் என்ற திடமான நம்பிக்கை எனக்கு உண்டு.
அதேநேரத்தில் தமிழீழ தாயகத்தில், தன்னாட்சி உரிமையின்அடிப்படையில் ஒரு தேசமாகத் தமிழீழ மக்கள் வாழ்வதற்குவழிசமைக்கக் கூடிய வகையில் உலகம் முன்வைக்கக்கூடியஅரசியல் தீர்வுகளைப் பரிசீலித்துப் பார்ப்பதற்கு எமது தேசம்தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் உணராமல்இல்லை.
சிங்கள மக்களுக்கும் இந்நேரத்தில் ஒரு விடயத்தைக்கூறிக்கொள்ள விரும்புகிறேன். நாம் சிங்கள மக்களுக்குஎன்றுமே எதிரானவர்கள் அல்ல. நீங்கள் எங்களுக்குஎதிரிகளும் அல்ல. சிங்கள மக்களுக்கு எதிராக நாம்செயற்பட்டதுமில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். சிங்களஇனவெறிகொண்ட அரசு இயந்திரத்தாலும் சுயநலம்கொண்ட சிங்கள அரசியல்வாதிகளினாலும் திட்டமிட்டவகையில் பொய்யான கருத்துக்கள் விதைக்கப்பட்டுஅப்பாவிச் சிங்கள மக்கள் தமிழ் மக்களுக்குஎதிரானவர்களாகத் தூண்டிவிடப்பட்டார்கள் என்பதையும்நான் அறிவேன். எனவே எம்மினத்தின் தார்மீகஉரிமைகளையும் எமது மக்களின் உணர்வுகளையும், எமதுஅறத்தின்பாற்பட்ட போராட்டத்தையும் ஏற்றுக்கொள்வீர்கள்என்று நம்புகிறேன்.
எனது அன்பார்ந்த மக்களே,
எமது தேசியத் தலைவர் குறிப்பிட்டது போன்று “எமதுபாதைகள் மாறலாம், ஆனால் ஒரு போதும் எமது இலட்சியம்மாறப் போவதில்லை.” சத்தியத்தின் சாட்சியாக நின்று எமதுமாவீரர்களின் தியாகமும், மாண்டு போன மக்களின்ஈகங்களும் எமது தேசத்திற்கு வழிகாட்டும். அந்தச்சத்தியத்தின் வழியில் சென்று, என்றோ ஒரு நாள் நாம் எமதுஇலட்சியத்தை அடைந்தே தீருவோம்.
"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"