Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    87990
    Posts
  2. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    12678
    Posts
  3. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    13
    Points
    46791
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3061
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 06/06/24 in Posts

  1. ரெலிபோனுக்கு பக்கத்திலைதான்... இருக்கிறன். 🤣 இந்த நிமிடம் வரை அழைப்பு வரவில்லை. 😂
  2. பன்னிரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி 9 விக்கெட்டுக்களை இழந்து 155 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஸ்கொட்லாந்து அணி சுழல்பந்துக்கு அடிக்கமுடியாமல் தடுமாறினாலும் வெற்றி இலக்கை 18.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 157 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: ஸ்கொட்லாந்து அணி 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஸ்கொட்லாந்து வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. நமீபியா அணி வெல்லும் எனக் கணித்த 05 பேருக்குப் புள்ளிகள் இல்லை! பன்னிரண்டாவது போட்டி முடிவுகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 22 2 பிரபா USA 20 3 ஏராளன் 20 4 ரசோதரன் 20 5 நந்தன் 20 6 கோஷான் சே 20 7 சுவி 18 8 குமாரசாமி 18 9 தியா 18 10 தமிழ் சிறி 18 11 வாத்தியார் 18 12 எப்போதும் தமிழன் 18 13 வீரப் பையன்26 16 14 நிலாமதி 16 15 புலவர் 16 16 நுணாவிலான் 16 17 வாதவூரான் 16 18 கிருபன் 16 19 அஹஸ்தியன் 16 20 கந்தப்பு 16 21 நீர்வேலியான் 16 22 கல்யாணி 16 23 P.S.பிரபா 14
  3. வாய்ப்பில்லை சார் வாய்ப்பில்லை புலி ப‌துங்குவ‌து பாய‌த் தான் ஹா ஹா🤣😁😂............................................................
  4. 28)இந்திய கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? - 2 சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, புரட்சிகர தமிழ்த்தேசியன், நிழலி, கிருபன், தமிழ்சிறி, கந்தையா57 , வாத்தியார் ,பிரபா 1)தமிழ்சிறி - 36 புள்ளிகள் 2)கோஷான் சே - 34 புள்ளிகள் 3)நிழலி - 34 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 32 புள்ளிகள் 5)கிருபன் - 32 புள்ளிகள் 6)பிரபா - 32 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 24 புள்ளிகள் 10)வாத்தியார் - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 12)புலவர்- 20 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 20 கேள்விகளுக்கு (40 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  5. அவசரமாய் வெளிக்கிட்டு கொஞ்ச தூரம் போய்க்கொண்டிருந்த போது என்ரை மனுசி பிள்ளைகளிடம் ஏதோ குசுகுசுத்ததை என்னால் அவதானிக்க முடிந்தது. இருந்தாலும் தாய் பிள்ளை பிரச்சனை என எனக்குள் நினைத்தபடி கார் ஓடிக்கொண்டிருக்கும் போது பிழையான திசையில் போய்க்கொண்டிருக்கிறோம் என வழி காட்டியாள் எச்சரித்து திரும்பி போகுமாறு எச்சரிக்க எனது மகள் சொன்னார் அம்மா மொய் பார்சலை மறந்து போய் விட்டு வந்திட்டாவாம் என சொல்லி காரை ஹொட்டலுக்கு விடுங்கோ என்றார். ரெஞ்சன் உச்சியில இடிக்க மறு வார்த்தை பேசாமல் ஹொட்டலுக்கு போய் பார்சலை எடுத்துக்கொண்டு வேர்த்து விறுவிறுக்க கொண்டாட்ட மண்டபத்தை வந்தடைந்தோம். அப்போது 11 மணியிருக்கும் என நினைக்கிறேன். சிறித்தம்பி சொன்ன நேரத்துக்கு முதல் வந்திட்டம் எண்ட மனக்கொழுப்புடன்😂 ஹோலுக்குள் உள்ளே நுழைந்தோம். பெரிய ஆடம்பரம் இல்லாமல் ஹோலை சோடித்து இருந்தார்கள்.நாங்களும் இன்னுமொரு குடும்பமும் ஒரு மேசையை இடம்பிடித்து உட்கார்ந்து கொண்டோம். பலகார தட்டும் கோப்பித்தண்ணியும் வர ஒரு பிடி பிடித்து விட்டு ....சிறித்தம்பியர் சொன்ன மாதிரி ரெலிபோனை சட்டைப்பையிலேயே வைத்திருந்தேன். இருந்தாலும் அந்த மேளக்கச்சேரி சத்தத்தில் எதுவுமே கேட்காது என நினைத்து ரெலிபோனை மேசையிலையே வைத்திருந்தேன். உண்மையில் நான் பெண்கள் கைப்பை கொண்டு திரிவது போல் ரெலிபோனை கையில் தூக்கிக்கொண்டு திரிவதில்லை. ஆனால் அன்றைய தினம் அது நடந்துவிட்டது.😎 பட உபயம் சிறித்தம்பி.
  6. குமாரசாமி அண்ணையுடன்... தமிழ் சிறியும், பாஞ்ச் அண்ணையும் ஒரு சந்திப்பு. சென்ற மாதமளவில் @குமாரசாமி அண்ணை, நான் வசிக்கும் இடத்திற்கு அண்மையில் ஒரு சுப நிகழ்வு நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்து கொள்ள தான் வருவதாகவும் அப்படி வரும் போது எம்மை சந்திக்க ஆவலாக உள்ளதாகவும் கூறி இருந்தார். அதற்கு நானும் தாராளமாக வாருங்கள் சந்திப்போம் என்று கூறி இருந்தேன். அந்த நாளும் நெருங்க... குமாரசாமி அண்ணை நேற்று முன்தினம் தொடர்பு கொண்டு தாங்கள் புறப்பட இருப்பதாக கூறி தான் இங்கு வந்து தங்கி நிற்கும் உல்லாச விடுதியையும், நிகழ்ச்சி நடைபெறும் மண்டப விலாசத்தையும் அனுப்பி இருந்தார். அந்த இடங்கள் 30-40 கிலோ மீற்றர் சுற்றாடலில் இருந்த படியால் அவ்வளவு தொலைவில் இல்லை எல்லாம் வாகனத்தில் 🚗 30 நிமிடத்தில் செல்லக் கூடிய தொலைவில்தான் இருந்தது நல்லதாக போய் விட்டது. அவர்... நேற்று வந்து, இன்றைய நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு நாளை காலை புறப்பட இருப்பதாக தெரிவித்து இருந்தமையால்... காலம் குறுகிய நேரம் என்பதாலும், எப்படியும் இன்று சந்திப்பது என்று முடிவெடுத்து... அதை அந்த சுப நிகழ்வு நடக்கும் இடத்திலேயே செய்யலாம் உங்கள் விருப்பம் என்ன என கேட்ட போது, அவரும் அதனை தாராளமாக செய்யலாம் என சொன்னார். குமாரசாமி அண்ணை வசிப்பது ஜேர்மனியின் ஒரு தொங்கலில் என்றால்... நாம் வசிப்பது மற்ற தொங்கல். இடையில் 550 கிலோ மீற்றர் தூர இடைவெளியில் வசிக்கின்றோம். இந்தச் சந்தர்ப்பத்தை தவற விட்டால் வேறு சந்தர்ப்பம் மீண்டும் எப்போ கிடைக்கும் என தெரியாது என்ற படியால்... இருவரும் இந்தச் சந்திப்பை நிகழ்த்தியே தீர்வது என்பதில் உறுதியாக இருந்தோம். 🙂 இனி... எமது வீட்டிற்கு அண்மையில் வசிக்கும் @Paanch அண்ணையுடன் தொடர்பு கொண்டு, குமாரசாமி அண்ணையை சந்திக்க இன்று மதியம் நேரம் இருக்குமா என கேட்ட போது... அவரும் முழு உற்சாகத்துடன் தானும் வருவதாக தெரிவித்தார்🥰. பின்... @Kavi arunasalam த்தை தொடர்பு கொண்டு கேட்ட போது, அவர் இன்று குடும்பத்துடன் ஐரோப்பிய உல்லாசப் பயணம் செய்ய புறப்பட்டுக் கொண்டு இருப்பதால்.. கலந்து கொள்ள முடியாமைக்கு தனது கவலையை தெரிவித்து இருந்தார். தொடரும்.... ✍️
  7. "முட்டாள்கள் மௌனமாக இருப்பது புத்திசாலித்தனம், புத்திசாலிகள் மௌனமாக இருப்பது முட்டாள்தனம்!" இரண்டாயிரம் ஆண்டுகளிற்கு முன் வாழ்ந்த திருவள்ளுவர் இதைப்பற்றி என்ன கூறினார் என பார்ப்போமா ? குறள் 403: "கல்லா தவரும் நனி நல்லர் கற்றார் முன் சொல்லா திருக்கப் பெறின்." கற்றவரின் முன்னிலையில் ஒன்றையும் சொல்லாமல் அமைதியாக இருக்கப் பெற்றால் கல்லாதவர்களும் மிகவும் நல்லவரே ஆவார். கற்றவர்கள் முன் கல்லாதவர்கள் கற்கும் முனைப்புடன் மட்டுமே இருக்க வேண்டும். அவர்கள் முன் தனக்கு தெரிந்த அரை குறையானவற்றை பயனில்லாமல் பேசக் கூடாது என்பதே இதன் பொருளாகும் என நாம் கருதலாம். இதனால் தான் பாரதியார் "கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி, நாட்டத்தில் கொள்ளா ரடீ! - கிளியே! நாளில் மறப்பா ரடீ" என்று பாடினாரோ? பொதுவாக "புத்திசாலிகள் வாய் மனதில் இருக்கும்; ,முட்டாள்கள் மனம் வாயில் இருக்கும்." ஆகவே புத்திசாலிகள் மௌனமாக இருக்கக் கூடாது என்பது வெளிப்படையே! அது போலவே "பூ மலர்ந்து கெட்டது, வாய் விரிந்து கெட்டது." ஆகவே முட்டாள்கள் மௌனமாய் இருப்பது நல்லது!! இப்ப நான் படித்த ஒரு கதையை கீழே தருகிறேன். மன்னர் புருஷோத்தமனுடைய மைத்துனன் மனோகரன் ஓர் அஞ்சா நெஞ்சன். தன் மனதில் தோன்றுவதை மறைக்காமல் எடுத்துரைப்பவன். மன்னரின் கருத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூற மற்றவர்கள் தயங்கும் போது, மனோகரன் அது தவறெனத் தோன்றினால் அவரை எதிர்த்து பேச தயங்க மாட்டான். ஒருநாள் சபையில் புருஷோத்தமன் தனது அரசாட்சியில் இளைஞர்களின் வேலையில்லாத் திண்டாட்டத்தைப் பற்றி அமைச்சர்களுடன் விவாதித்தார். அப்போது, "வேலையற்ற இளைஞர்களுக்கு மாதம் 30 வராகன்கள் உதவித்தொகை அளிக்கலாம் என்று நினைக்கிறேன்" என்றார். அமைச்சர்கள் அதைக் கேட்டு "ஆகா, அற்புதமான யோசனை" என்று பாராட்டினார்கள். ஆனால் மனோகரன் மட்டும், "இது மதியற்ற செயல். உதவித்தொகை அளிப்பதால் அந்த இளைஞர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள். இதை விடுத்து, அவர்களுடைய நிரந்தர வருமானம் தரும் வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்" என்று மன்னரின் கருத்துக்கு எதிர்மாறான கருத்தைக் கூறினான். சபையில் நடந்ததைக் கேட்டு சினமுற்ற ராணி தன் சகோதரனைப் பார்த்து, "மன்னனை விமர்சிக்க உனக்கு என்ன தைரியம்? இந்த ராஜ்யத்தை விட்டு இப்போதே வெளியேறு" என சீறி விழுந்தாள். ஆனால் அவளைத் தடுத்த மன்னர், "அவனைக் கோபிக்காதே ராணி. அவன் மனதில் பட்டதைக் கூறுகிறான். தன் கருத்துப்படி தான் மற்றவர்கள் நடக்கவேண்டும் என்று மன்னன் நினைப்பது தவறு. புத்திசாலிகள் கூறும் ஆலோசனைகளை பரிசீலித்து மக்களுக்கான திட்டங்களை வகுக்க வேண்டும். மனோகரன் புத்திசாலி. பொறுமையாக அவன் கூறுவதைக் கேட்போம்" என்றார். அவர் பொறுமையிழக்காமல் மனோகரனின் நலத்திட்டங்களைக் கேட்டு, அதை அப்படியே நடைமுறைப்படுத்தினார். அது முதல் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் முற்றிலும் ஒழிந்தது. [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  8. ஆஹா..இந்த திரியை இன்று யாழ் வந்ததால் காண நேர்ந்தது. 😍 யாழ்களம் வந்ததாக பாஞ் சொல்லியிருந்தார். மூன்று யாழ் உறவுகளும் சந்திப்பு வைபவம் மிக அருமை. மட்டற்ற மகிழ்ச்சி. நான் தமிழ் நாட்டை சேர்ந்திருந்தாலும், ஈழ உறவுகளின் நேசத்தையும், பாசத்தையும் அவர்களுடன் பழகியதில் பலமுறை உணர்ந்திருக்கிறேன். குறிப்பாக அண்ணன் பாஞ் அவர்களை இருமுறை நேரில் சந்தித்து பிரிந்தபோது கண் கலங்கியது உண்மை. மூவரின் சந்திப்பை பற்றி படிக்க, படிக்க யாழை சிலகாலம் மறந்துவிட்டதை எண்ணி வருந்துகிறேன். இந்த பாசம், நேசம் என்றும் வாழட்டும்..🙏
  9. அண்ணை, வாழ்த்துக்கள். கோசான்ஐ தேவையில்லாமல் பகைத்து விட்டோமோ? எனக்கென்னவோ பாகிஸ்தான்காரன் காசு வாங்கிக்கொண்டு மேட்ச் fix பண்ணிவிட்டாங்கள் போல இருக்கு. ஒரு சிறிய அணியிடம் தோற்றுள்ளார்கள் இதைவிட ஆச்சரியம் மூன்று பேர் இங்கேயே படுத்திருக்கிறார்கள்
  10. அப்படி எல்லாம் இடையில் விட்டு விட்டு போக முடியாது, பையன் சார். நீங்க காண்ட்ராக்டை திரும்பவும் வாசித்துப் பாருங்க. நீங்க எல்லா மாட்சுகளுக்கும் முடிவு சொல்ல வேண்டும் என்று நாங்கள் எழுதி வைத்திருக்கிறோம். நீங்கள் இல்லாவிட்டால் என்னைப் போன்றவர்களுக்கு எது எதுவென்றே தெரியாது.......👍 நேற்று பபுவா நியுகினியா, பெயரே விஜய் டிவி தலைப்பு மாதிரி இருக்குது......., போட்டிருந்த யூனிபார்ம் சூப்பர். நல்ல கலரும், டிசைனும்.......நீங்க தான் விளையாட்டைப் பார்த்து சொல்ல வேண்டும்........🤣.
  11. எங்களை வாழ்த்திய அனைவருக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள்!!🙏🙏 என்னுடன் அமெரிக்கப் படைத்தளத்தில் வேலைபார்த்த அமெரிக்க நண்பர் ஒருவர் எங்கள் 25வது திருமணநாளில் வாழ்த்தியபோது 25வருடங்களாக ஒரு மனைவியுடனா???. ஆச்சரியப்பட்டார், இன்று அவர் 53என்று அறிந்தால் நிச்சயம் மூர்ச்சையடைந்திருப்பார்.😳😂
  12. நல்வாழ்த்து நான் சொல்லுவேன்..........! 😍
  13. 24)நாம் தமிழர் கட்சி இத்தேர்தலில் எத்தனை வீதம் வாக்குகளை பெரும்? - 8% க்கு மேல் 8.19% வாக்குகள் கிடைத்தது. சரியாக பதில் அளித்தவர்கள் - பாலபத்ர ஓனாண்டி, புரட்சிகர தமிழ்த்தேசியன் , சுவி, ஈழப்பிரியன், தமிழ்சிறி, நுணாவிலான், புலவர் 1)தமிழ்சிறி - 32 புள்ளிகள் 2)கோஷான் சே - 30 புள்ளிகள் 3)நிழலி - 30 புள்ளிகள் 4)பாலபத்ர ஓனாண்டி - 28 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 28 புள்ளிகள் 6)கிருபன் - 28 புள்ளிகள் 7)பிரபா - 28 புள்ளிகள் 8)நுணாவிலான் - 26 புள்ளிகள் 9)கந்தையா57 - 22 புள்ளிகள் 11)சுவி - 20 புள்ளிகள் 11)வாத்தியார் - 20 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் 13)புலவர்- 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 6 - 11, 14, 15, 18,19, 22, 24, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 18 கேள்விகளுக்கு (36 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  14. 29)மாக்சிஸ கம்னியூஸ்ட் கட்சி எத்தனை தொகுதியில் வெற்றி பெறும்? 2 புலவர், ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டிதவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)கோஷான் சே - 22 புள்ளிகள் 2)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள் 3)நிழலி - 22 புள்ளிகள் 4)தமிழ்சிறி - 22 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 20 புள்ளிகள் 6)கிருபன் - 20 புள்ளிகள் 7)கந்தையா57 - 20 புள்ளிகள் 8)வாத்தியார் - 20 புள்ளிகள் 9)நுணாவிலான் - 20 புள்ளிகள் 10)பிரபா - 20 புள்ளிகள் 11)புலவர்- 16 புள்ளிகள் 12)சுவி - 14 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  15. எட்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 16 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 96 ஓட்டங்களுடன் சுருண்டது. பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி குறைந்த வெற்றி இலக்கை 12.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்தியா அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது இந்தியா வெல்லும் எனக் கணித்த 22 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. அயர்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த @goshan_cheக்கு புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 14 2 குமாரசாமி 14 3 தமிழ் சிறி 14 4 பிரபா USA 14 5 ஏராளன் 14 6 ரசோதரன் 14 7 அஹஸ்தியன் 14 8 கந்தப்பு 14 9 எப்போதும் தமிழன் 14 10 நந்தன் 14 11 நீர்வேலியான் 14 12 வீரப் பையன்26 12 13 சுவி 12 14 நிலாமதி 12 15 தியா 12 16 புலவர் 12 17 P.S.பிரபா 12 18 நுணாவிலான் 12 19 வாதவூரான் 12 20 கிருபன் 12 21 வாத்தியார் 12 22 கல்யாணி 12 23 கோஷான் சே 12
  16. மிகவும் அரிய இனிமையான சந்திப்பு. நான் சிறியின் மகளின் கலியான வீட்டுக்கு இந்தமாதம் Germnay போகும்போது குசா அண்ணாவையும் பாஞ் அண்ணாவையும் சந்திக்கலாம் என்று இருந்தேன். பாஞ் அண்ணா வந்திருந்தார் குசா அண்ணாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் வரமுடியவில்லை. யாழில் கலியான வீடு மற்றும் எனது பார்வையில் ஜேர்மன் மற்றும் யூரோப் தமிழ் மக்கள் பற்றி இந்தக்கிழமை முடிவில் எழுதலாம் என்று இருக்கிறேன்.
  17. காலை பத்தரை மணிக்கு... பாஞ்ச் அண்ணையும், நானும் ஒரு இடத்தில் சந்தித்து, ஒரு வாகனத்தில் இருவருமாக பயணிப்பது என தொலை பேசியில் முடிவெடுத்து 10:30 மணிக்கு நான் காத்திருக்க, பாஞ்ச் அண்ணையை அங்கு காணவில்லை. தமிழ் ஆட்களின் நேரத்தைப் பற்றி 😂 நான் நன்கு அறிந்து இருந்ததால்.... பத்தரை மணிக்கே, பாஞ்ச் அண்ணைக்கு தொலை பேசி எடுக்க, அவர் தனது மகளுடன் எனக்கு முன்னால் தாங்கள் வந்து விட்டோம் என்று காரில் கைகாட்டிய படி கடந்து சென்றார். 🙂 நான் அவர்களின் நேரம் தவறாமையை தவறாக எடை போட்டு விட்டேனே என்று மனதிற்குள் சங்கடப் பட்டுக் கொண்டு... பாஞ்ச் அண்ணையும் நானும் ஒரு காரில் குமாரசாமி அண்ணையை சந்திக்க அதிவேக நெடுஞ்சாலையில் பழைய தமிழ்ப் பாடல்களை கேட்டுக் கொண்டு பயணித்தோம். எனக்கு வாகனம் ஓடுவதை விட.... அருகில் இருந்து பயணிப்பதுதான் பிடித்தமானது என்பதால்... வாகனம் ஓடும் பொறுப்பை பாஞ்ச் அண்ணையிடமே கொடுத்து விட்டேன். நாங்கள் எதிர்பார்த்த நேரம் 11 மணிக்கு, மண்டபத்திற்கு சென்று வாகனத்தை தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு மண்டபத்தின் உள்ளே சென்றால்.... தவில், நாதஸ்வர கச்சேரி இசை நடந்து கொண்டிருந்தது. குமாரசாமி அண்ணையை... முன், பின் கண்டிராததால் அவரை எப்படி கண்டு பிடிப்பது என்ற யோசனையுடன் நானும், பாஞ்ச் அண்ணையும் போற, வாற ஆக்களைப் பார்த்து... இவர் குமாரசாமியாக இருப்பாரோ... அவர் குமாரசாமியாக இருப்பாரோ என்று புன்முறுவல் பூத்துக் கொண்டு இருந்தோம். 😂 🤣 குமாரசாமியார் சுழியன். எங்களுக்குத்தான்... குமாரசாமியாரை தெரியாதே தவிர, அவருக்கு எங்களை நன்றாக தெரிந்தே இருந்தது🙂. பட்டு வேட்டி சால்வையுடன்... தமிழ்ப் பழமாக எங்கள் முன் ஒருவர் சிரித்துக் கொண்டு வந்து கதைக்கும் போதும் பாஞ்ச் அண்ணை குமாரசாமியை தேடுகின்றோம், அவர் எங்கு இருக்கின்றார் என்று சொல்ல முடியுமா என்று கேட்க, வந்தவர் வாங்கோ... இந்த மேசையில் இருந்து கதைப்போம் என்று, அவரும் பிடி கொடுக்காமல் எம்மை அழைத்துச் சென்றார். குமாரசாமியாரின் குரல் எனக்கு பரிச்சயமானது என்பதால்... இவர்தான், நாம் தேடிய ஆள் என்று கண்டு பிடித்து... கட்டிப் பிடித்து... கொஞ்சிய கையுடன் பொறுங்கோ என்று... கோப்பியும், தட்டு நிறைய பலகாரமும் கொண்டு வந்து தந்தார். அந்த சுப நிகழ்விற்கு குமாரசாமி அண்ணையை நாம் தேடிப் போய் இருந்தாலும்.... பாஞ்ச் அண்ணை முன்பு ஜேர்மன் விளையாட்டுக் கழகத் தலைவராக இருந்த போது... சிறுவர்களாக விளையாடிய பலர் இளைஞர்களாக பாஞ்ச் அண்ணையிடம் வந்து தமது அன்பை பரிமாறிக் கொண்டார்கள். என்னுடன் முன்பு வேலை செய்த பலரையும் அந்த நிகழ்வில் 25 வருடங்களுக்கு பின்பு கண்டு கொண்டது மகிழ்ச்சியாக இருந்தது. 🙂 யாழ். களத்தில் உள்ள ஒவ்வொருவரின் தனித் திறமையை பற்றி நாம் நிறைய கதைத்தோம். சிலரின் அபரிதமான ஆற்றல்கள் உண்மையிலேயே வியக்க வைத்தது. அந்த வகையில்... யாழ்.களத்தின் ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் போற்றுதலுக்கு உரிய திறமைசாலிகள் என்பதை நாம் ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது சிறப்பு. 👍 முதல் முறை சந்தித்த சந்திப்பு என்ற போதும்... உடன் பிறந்த சகோதரன் ஒருவரை கண்ட மகிழ்ச்சி நீண்ட நேரம் நீடித்தது. இப்படியான நல் உள்ளங்களுடன் பழகக் கிடைத்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த யாழ்.களத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்து இனிய நினைவுகளுடன் விடை பெற்றோம். ❤️
  18. அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலமாவது நடக்கவே நடக்காது, கோஷான். இங்கு கால்ப்பந்தாட்டமே, மெஸ்ஸி வந்த பின்னும், மெது மெதுவாகவே மூச்சு விடுகின்றது. இவர்கள் சில விடயங்களில் மாறவே மாட்டார்கள். இன்னமும் இறாத்தல், அடி, அங்குலம் என்பது போல முதல் நாலு விளையாட்டுகளும் அப்படியே இருக்கும் - அமெரிக்கன் ஃபுட்பால், பேஸ்பால், பாஸ்கட்பால், ஐஸ் ஹாக்கி.
  19. இப்ப தானே தொடக்கம் போகப் போக மேல கீழ போக ஆயத்தமாக இருக்க வேண்டும். நேற்று தான் பெரிய ஜாம்பவான்களை சிறிய அணி தோற்கடிச்சிடும் என்று சொன்ன மாதிரி இருந்தது. கையோட கம்மாரிஸ். குளிர்சாதன பெட்டிக்குள் வைத்து சனிக்கிழமை குடியுங்கோ.
  20. மிக தெளிவான விளக்கம். நன்றி அண்ணை. இப்படி ஒருக்கா முயன்று பார்க்கிறேன். இதுவும் சரிதான். ஆனால் நீங்கள் மேலே சொன்ன வழிதான் உள்ளதில் ஓரளவு யதார்த்தத்தை நெருங்கி வரும் முடிவை தரும் என நினைக்கிறேன். நன்றி ரசோ. நீங்களும் அதே முறையைத்தான் பரிந்துரைத்துள்ளீர்கள். நன்றி. உங்கள் கேள்வியின் அர்த்தம் புரிகிறது. ஆனால் பதில் தெரியவில்லை.
  21. எப்போதும் அமரிக்கா தன் நாட்டவரை கைவிடாது, சரிதானே அண்ணா 🤣 @ஈழப்பிரியன் . உங்களை கூகிள் ஷீட்டில் கொப்பி அடிக்கும் போது, இதை மாற்றாமல் விட்டேன். ஏதோ நடக்கும் என மனது சொல்லியது. முதல்வர் ஆகி வீட்டீர்கள். வாழ்த்துக்கள். தனி மெஜாரிட்டியா, நாயுடு தயவிலா🤣
  22. நான் நியூயோர்க்கில் இருக்கிறேன். இப்ப கொஞ்ச காலமா எல்லா இடங்களுக்கும் போய்வருகிறேன். சூதும்வாதும் வேதனை செய்யும். ஒருத்தன் வென்றுவிட்டால் காணும் விடமாட்டாங்களே.
  23. 🤣.......... பாத்ரூமிலும் ஒரு டிவி வைக்கலாமே என்ற யோசனை ஒன்றும் வருகுது........ஆனால் வீட்டில் என்ன காரணம் சொல்லிச் சமாளிக்கலாம் என்று தான் தெரியவில்லை......
  24. கீழே இருந்து ஒராள் மேலே இருந்து ஒராள்.
  25. அதெண்டால் உண்மைதான்.........பதுங்கிற புலி பாயத்தான் செய்யும் ........ஆனால் நாங்கள் இப்ப படுத்திருக்கிற புலியைப் பற்றித்தான் கதைக்கிறம்.......! 😴
  26. 17 வது ஆண்டு நினைவு நாள் வணக்கம், தில்லை ஐயா. நீங்கள் வாழ்ந்த பெருவாழ்வின் நினைவுகள் உங்களுடன் தங்கி, உங்களுக்கு என்றும் ஆறுதலை அளிக்கும்.......🙏.
  27. இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன் பையா நீங்க தான் சுறுசுறுப்பாக போட்டியை இயங்கு நிலையில் வைத்திருப்பவர். இப்படி சொல்ல லாமா தோல்வியும் வெற்றியும் வீரர்களுக்கு அழகு . விழுபவர் எழத்தான் வேண்டும் எழுபவர் ஒருவேளை வீழக் கூடும். come on paiyan keep rocking
  28. 13)கார்த்தி சிதம்பரம் ( காங்கிரஸ்) - 1 ம் இடம் ஈழப்பிரியன், பாலபத்ர ஓனாண்டி, புலவரைத் தவிர மற்றைய போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)தமிழ்சிறி - 38 புள்ளிகள் 2)கோஷான் சே - 36 புள்ளிகள் 3)நிழலி - 36 புள்ளிகள் 4)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 34 புள்ளிகள் 5)கிருபன் - 34 புள்ளிகள் 6)பிரபா - 34 புள்ளிகள் 7)பாலபத்ர ஓனாண்டி - 30 புள்ளிகள் 8)நுணாவிலான் - 28 புள்ளிகள் 9)கந்தையா57 - 26 புள்ளிகள் 10)வாத்தியார் - 24 புள்ளிகள் 11)சுவி - 22 புள்ளிகள் 12)புலவர்- 20 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 18 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 3, 5 - 11, 13, 14, 15, 18,19, 22, 24, 25, 26,28, 29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன். இதுவரை 21 கேள்விகளுக்கு (42 புள்ளிகள்) புள்ளிகள் வழங்கியுள்ளேன்.
  29. ஒரு ம‌ணித்தியால‌த்துக்கு முத‌ல் புதிய‌ த‌லைமுறை வெளியிட்ட‌ இர‌ண்டு நிமிட‌ காணொளி பாருங்கோ நாம் த‌மிழ‌ர் 8ச‌த‌ வீத‌த்தை தாண்டி விட்ட‌து க‌ந்த‌ப்பு அண்ணா....................................................................
  30. வாழ்த்துக்க‌ள் என் த‌ங்க‌மே இனி முன் கூட்டி வெற்றி தோல்வி ப‌ற்றி எழுத‌ மாட்டேன் உக‌ண்டாவும் போராடி தான் வென்ற‌வை............................................................................................
  31. 32)அம்மா மக்கள் முன்னேற்ற கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெறும்? ஓரிடத்திலும் வெற்றி பெறவில்லை. சரியாக பதில் அளித்தவர்கள் - கோஷான் சே, பாலபத்ர ஓனாண்டி, நிழலி, தமிழ்சிறி,கிருபன்,பிரபா , சுவி 1)கோஷான் சே - 24 புள்ளிகள் 2)நிழலி - 24 புள்ளிகள் 3)தமிழ்சிறி - 24 புள்ளிகள் 4)பாலபத்ர ஓனாண்டி - 22 புள்ளிகள் 5)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 22 புள்ளிகள் 6)கிருபன் - 22 புள்ளிகள் 7)பிரபா - 22 புள்ளிகள் 8)கந்தையா57 - 20 புள்ளிகள் 9)வாத்தியார் - 20 புள்ளிகள் 10)நுணாவிலான் - 20 புள்ளிகள் 11)சுவி - 16 புள்ளிகள் 12)புலவர்- 16 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 14 புள்ளிகள் இதுவரை வினா இலக்கங்கள் 7,8, 10, 11, 14, 15, 18,19, 22, 25, 26,29,32,33 க்கு புள்ளிகள் வழங்கியிருக்கிறேன்.
  32. நிச்சயமாக ஊதலாம். அக்யூஸ்ட் நம்பர் வன் க்கு கூட்டணி இல்லாமலே மேடை ஏறி ஆதரவு திரட்டியவர். ஆகவே அதிமுக கூட்டணியில் சேர எந்த நெருடலும் சீமானுக்கு இல்லை. முட்டு கொடுக்கவும் தம்பிகள் இப்போதே தயார். இப்போ முடிந்த தேர்தலில் கூட அதிமுக கூட்டணியில் 6 சீட்டில் நின்றிருந்தால் 2 எம்பி யை யாவது அனுப்பி இருக்கலாம். ஆனால் ஏதோ ஒரு “சக்தி” அவரை பாஜக இல்லாத அதிமுக கூட்டணிக்கு போகாமல் தடுக்கிறது🤣. பீஜேபி + அதிமுக கூட்டணி, நாதக வாக்கு பிரிக்கும் தொழில் - இதுதான் அந்த சக்தியின் இப்போதைய தந்திரோபாயம். இந்த கூட்டணியில் முதன்மை கட்சியாக பிஜேபி வரும் போது, நாதகவின் தொழில் வகுப்பு - வாக்கை பிரிப்பது என்பதில் இருந்து வாக்கை சேர்ப்பது என ஆகும். அப்போது இந்த கூட்டணியில் நாதகவும் சேரலாம். இதில் யாராலும் கணிக்க முடியாத புதிய factor விஜை. மாவீரன் வரும் வரை காத்திருக்கிறார். வந்ததும் உருவாகி விடுவார். நாம் தமிழரில் இருந்து விரட்டப்பட்ட தகுதிவாய்ந்த, இளைய, இரண்டாம் கட்ட தலைவர்கள் பட்டியல் மிக நீளமானது. #காளியம்மாவுக்கு எப்ப கட்டம் கட்டுவாரோ:
  33. கருத்துகள் வரவேற்கப்படுகின்றன… அதேவேளை உங்கள் கருத்துகளை நான் அல்லது மற்றைய யாழ் கள உறுப்பினர்கள் காட்டாயம் எற்க வேண்டும் என்று நினைக்க கூடாது 🤣😂🤣 ஆனாலும் கருத்துகள் அருமை
  34. இப்பதான் ஞாபகம் வருகுது, இவை இரண்டும் முந்தி விளையாடி அணிகள் என்று. அதிலும் ஸிம்பாப்வே ஒரு பெரிய அணியாக இருந்தது. அப்ப என்னுடைய உகண்டா லேசுப்பட்ட ஒரு அணியில்லை........மலைகளை செதுக்கி விழுத்தி விட்டுத்தான் உள்ளே வந்திருக்கினம்........ உகண்டா தான் நாங்கள் எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் அந்த Giant Killer அணியோ..........😜
  35. நான் பதியவில்லையே? பதிந்தது பிழம்பு 😄 நம்பத்தகுந்த மற்றும் உறுதியான தகவல் (அதாவது பிரச்சாரத் தளங்கள் மற்றும் யூரியூப் Channels களில் இருந்து பெறப்படாதவை) என்பதால் தான் இங்கு தான் பதிந்ததாக பிழம்பு சொல்கின்றார். செய்திகள் தகவல்கள் பதியும் போது, விருப்பு வெறுப்புகள் எல்லாம் அவர் பார்ப்பதில்லையாம்.🙂
  36. நீண்ட சிகிச்சையில் மூலம் நீங்கள் சுகம் பெற்றதும், உங்களை கண்டதும் மகிழ்ச்சி. 😄 இரசித்தேன்
  37. நாம்தமிழர் கட்சி இந்தத் தேர்தலில் நிச்சயம் 8 வீதத்திற்கு மேல் பெற்று அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக மாறப் போகிறது என்பது 100 வீதம் நடக்கத்தான் போகிறது. அதை சில நா;தமிழர்கட்சிக்கு எதிரான கருத்தைக் கொண்டவர்களால் சீரணிக்க முடியவில்லை. அதனால்தான் ஆதாரத்தை; தருமாறு கேட்கின்றனர். இந்தத் தேர்தலில் போட்டியிட்ட பொழுது நம் தமிழர்கட்சி அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல அதனால்தான் மற்றவர்கள் என்ற வகைக்குள் உள்ளடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இன்னும் சிலநாட்களில் உண்மை வெளிவரும். தனித்துர நின்று ஒரு கட்சி பெற்ற வாக்குகளை வைத்து இலகுவாக ஊகிக்க முடியும் ஆனால் பல கட்சிக் கூட்டணி அமைத்து பெுhட்டியிட்ட கட்சிகளின் நம்பகத்தன்மையற்ற வாக்கு சத வீத்தைதை ஏற்றுக் கொளபவர்களால் தனித்து நின்று பெற்ற வாக்குகளின் அடிப்படயில் நாம் தமிழர்கட்சி பெற்ற வாக்குகளை வைத்து வாக்கு சதவீதத்தைக் கணிப்பிட முடியவில்லை ஆதாரத்ரதத் தாருங்கள் என்கிறார்கள். திமுகவின் உணமையான வாக்கு சதவீத்தை 100 வீத் இவர்களால் தரமுடியுமா?நாம் மழிழர் அங்ககரிக்கப்பட்ட கட்சியாக மாறுவது சிலரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.அதுவும் 15 நாட்களுக்குள் புதிய சின்னத்தில்)
  38. 22) நவாஸ் கனி( இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) - 1ம் இடம் எல்லா போட்டியாளர்களும் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)நிழலி - 8 புள்ளிகள் 2)கிருபன் - 8 புள்ளிகள் 3)வாத்தியார் - 8 புள்ளிகள் 4)goshan_che - 6 புள்ளிகள் 5)பாலபத்ர ஓனாண்டி - 6 புள்ளிகள் 6)புரட்சிகர தமிழ்த்தேசியன் - 6 புள்ளிகள் 7)ஈழப்பிரியன் - 6 புள்ளிகள் 8)தமிழ்சிறி - 6 புள்ளிகள் 9)கந்தையா57 - 6 புள்ளிகள் 10)நுணாவிலான் - 6 புள்ளிகள் 11)பிரபா - 6 புள்ளிகள் 12)புலவர் - 6 புள்ளிகள் 13)சுவி - 4 புள்ளிகள்
  39. நன்னடத்தைப் பிணை (தண்டனைக் குறைப்பு) முன்னர் ஒரு போதும் குற்றவாளியாகக் காணப்படாத ஒருவருக்கு மட்டும் தான் சாத்தியம். இந்த வழக்கு நடந்த 6 வாரங்களிலேயே "தம்பு" 9 தடவைகள் நீதிமன்ற கட்டளையை மீறினார் என்று பத்தாயிரம் டொலர்கள் இதே நீதிம்ன்றில் அபராதம் கட்டியிருக்கிறார். எனவே, தம்புவின் "நன்னடத்தையை" முன்னிட்டு தண்டனைக் குறைப்பு வராது. ஆனால், சிறைக்கு அனுப்புவதில் இருக்கும் நடைமுறைச் சிக்கலால் சிறைத் தண்டனை கிடைக்காமல் போகலாம். சிறை சென்றால் கூட இவர் தேர்தலில் நிற்கலாம், வெல்லலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அரசியலமைப்பில் இதைத் தடை செய்யும் எந்த சரத்துகளும் இல்லை.
  40. வணக்கம் பாஞ்ச் .......என்றும் நீங்கள் நலமுடன் வாழ வேண்டும்........! தொடர்ந்தும் யாழில் இணைந்திருங்கள்........ மிகவும் முயற்சி எடுத்து உங்களை இங்கு அழைத்து வந்த சிறியருக்கும் நன்றி........! 👍
  41. அண்ணா, மீண்டும் யாழ் களத்தில் காண்பதில் மகிழ்ச்சி
  42. அடேய் அது நானில்லை.....அந்தப்படம் பக்கத்து வீட்டுக்காரன்ர.....நான் கிட்டத்தட்ட அரவிந்தசாமி மாதிரி
  43. எமக்கு அவப்பெயரை ஏற்படுத்த நாம் உமக்கு என்ன தீங்கு செய்தோம் 🤣
  44. நாட்கள் நெருங்கியதும்..... சிறித்தம்பியருக்கு நாங்கள் வருகின்றோம் என வாட்ஸ் அப் மூலம் அறிவித்தேன். அதனுடன் நாங்கள் புறப்படும் விவரத்தையும் யார் இன்னார் என சகல விபரங்களையும் எவ்வித ஒளிவுமறைவில்லாமலும் அறிவித்தேன்.என்ன நேரம் புறப்படுகின்றேன் எனும் விபரம் உட்பட.... அப்போதும் நாம் சந்திப்பதாயின் உங்கள் உடல் நலங்கள் எப்படி? உங்கள் நேரங்கள் எப்படி? நேரம் இருக்கின்றதா என விலாவாரியாக கேட்டு தெரிந்து கொண்டேன்.ஏனென்றால் நாம் எல்லோரும் அவசர உலகத்தில் வாழ்கின்றோம் அல்லவா...😁 இரவு இன்ன நேரத்திற்கு உங்கள் நகரத்திற்கு நாங்கள் வருகின்றோம் என்றதும் உடனே மறு வார்த்தைகள் இல்லாமல் எத்தனை பேர் வருகின்றீர்கள் சமைக்கின்றோம் என பதில் தகவல் அனுப்பினார்❤️.நானோ மகிழ்சியில் என்ன சொல்வதென தெரியாமல் என் மனைவியிடம் தெரிவித்தேன். தங்கும் விடுதியில் சகல வசதிகளுடனும் தான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என மனைவி சொன்ன பின்னர் தான் எல்லா விபரங்களையும் அவர் மூலம் தெரிந்து கொண்டேன்.
  45. 40 நாட்களுக்கு முன் என் குடும்பத்தினர்க்கு ஒரு சுப நிகழ்விற்கு ஒரு அழைப்பு வந்திருந்தது. அது ஏற்கனவே எதிர்பார்த்ததுதான். இருந்தாலும் இன்ன நாள்தான் என முடிவு செய்யப்படவில்லை. தேதியுடன் அழைப்புதழ் வந்ததும் முதலில் வேலை விடுமுறையை முடிவு செய்து விட்டு. சிறித்தம்பிக்கு நான் செல்லும் இடத்தை தெரியப்படுத்தினேன். அவரும் உடனடியாக அந்த இடம் தான் இருக்கும் இடத்திற்கு அருகாமையில் தான் இருக்கின்றது என தெரியப்படுத்தினார். சந்திப்பது பற்றியும் கூறினார். ஆனாலும் இடம் வலம் நேரகாலம் எதையுமே தீர்மானிக்கவில்லை. இருந்தாலும் சிறித்தம்பியை அவர் வீட்டில் என் குடும்ப சகிதம் அவர் வீட்டிற்கே சென்று சந்திக்க வேண்டும் என்ற விருப்பம் என் அடிமனதில் இருந்து கொண்டே இருந்தது. கால நேர சூழ்நிலைகள் நன்றாக இருந்தால் இப்படியான சந்திப்பு நடக்க இருக்கும் என என் குடும்பத்தினரிடமும் தெரிவித்திருந்தேன்.
  46. பிச்சை போட்டால் நஞ்சையும் வாங்கும் நிலையில் இருக்கும் நாடும் ..அதன் தலைவரும்..நாடு பெரிதல்ல நமக்கு பதவியும் பணமும்தான் முக்கியம் ...என்ற கொள்கை உடையவர்கள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.