Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    2954
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    87990
    Posts
  4. புலவர்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    5832
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 07/06/24 in all areas

  1. தொழிற்கட்சி ஈழத்தமிழருக்கு ஆற்றிய கைங்கரியங்கள்.. 1. விடுதலைப்புலிகள் மீதான தடை - ரொனி பிளேயர். 2. தமிழர் புனர்வாழ்வுக்கழகம் மீதான தடையும் சொத்துப் பறிப்பும் 3. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை தொடர்பில் பாராமுகத்துடனாக ஊக்குவிப்பு - ஹோடன் பிரவுன். சர்வதேசத்தில்.. 1. ஈராக் மீதான பேரழிவு ஆயுத போலிக் கூச்ச போர் - ரொனி பிளேயர். உள்ளூரில்.. 1. பல அரச நிறுவனங்களை தனியார் மயப்படுத்தியது. 2. கிழக்கு ஐரோப்பியர்களுக்கு பிரித்தானியாவை திறந்து விட்டது. 3. சலுகை அளிப்பு என்ற பெயரில் வரி உயர்வுக்கு வழி சமைத்தது. 4. வீட்டு கடன் சுமையை அதிகரித்தது. 5. மாணவர் கடன் சுமையை அதிகரித்தது. 7. தேசிய சுகாதார சேவைக்குள் தனியார் மயப்படுத்தலை புகுத்தியதும் இன்றி காத்திருப்பு காலம் இவர்கள் காலத்தில் தான் நீடிக்க முடிந்தது. 8. மாலை 5 மணிக்கு பின்னரான வேலை நேர கூடிய ஊதியத்தை மாலை 8 மணி ஆக்கி இல்லாமல் செய்தமை. 9. தொழிலாளர்கள் நலனில் அக்கறையின்மை போக்கை கடைப்பித்ததோடு தேசிய விடுமுறை நாட்களையும் வேலை நாட்கள் ஆக்கியது. இப்படி சொல்லிக்கிட்டே போகலாம். என்ன மக்களுக்கு மறதி அதிகம்.. தேர்வுக்கு ஒரு மாற்றும் இல்லை. பேயை விரட்ட மீண்டும் பிசாசை இழுத்து வந்து கதிரையில் இருத்தி இருக்கினம். விளைவை இன்னும் சில வாரங்களிலேயே காணலாம்.
  2. யேர்மனியில் நான் வசிக்கும் மாநிலத்தின் தலைநகரில் இரண்டு பிள்ளையார் கோவில்களும் ஒரு முருகன் கோவிலும் இருக்கின்றன. முத்தி விநாயகரோ? சித்தி விநாயகரோ? பிள்ளையார் கோவில்களுக்கு என்ன என்ன பெயர் வைத்தார்கள் என்று யாருமே பெரிதாகக் கவனிப்பதில்லை. ஒன்றை புலிப் பிள்ளையார் கோவில், மற்றையதை புளொட் பிள்ளையார் கோவில் என்றால் போதும். அடையாளம் கண்டுவிடலாம். மழை பெய்து, வெள்ளம் வந்து கிணற்று நீரோடு கலப்பது போல, 2009க்குப் பின்னர் நாட்டில் இருந்து யேர்மனிக்குப் புலம் பெயர்ந்து வந்த சிலரோடு, ஏற்கனவே பொறுப்பாளர்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த சில அதிருப்தியாளர்களும் கலந்து கொள்ளப் பிறந்ததுதான் ஶ்ரீ பால முருகன் கோவில். 2023 இல் உருவான முருகனுக்கு இந்த வருடம் யூனில் திருவிழா நடந்து முடிந்திருக்கிறது. தேர் இல்லாமல் திருவிழா ஏது? முருகன் கோவில் நிர்வாகிகள் அலசி ஆராய்ந்து ஒரு பழைய ‘காய்’யைப் போய்ப் பார்த்தார்கள். அவருடன் என்ன பேசிக் கொண்டார்கள் என்று தெரியவில்லை. தேர் செய்வதற்கு அவர் 20,000 யூரோக்களை தூக்கிக் கொடுத்து விட்டார். தேரும் செய்தாயிற்று. திருவிழாவும் தொடங்கியாயிற்று. தேர்த்திருவிழாவுக்கு முதல்நாள், தேர் செய்ய உதவிய அன்பருக்கு நன்றி செலுத்த நிர்வாகிகள் முடிவெடுத்தார்கள். சாமியை விட சாமி அமரத் தேர் தந்த வள்ளல் பெரியவர் அல்லவா? அவர் இல்லாவிட்டால் சாமி வலம் வரத் தேரேது? சாமிக்கு முந்தி அவரைத் தேரில் அமர்த்தி வெள்ளோட்டம் செய்தார்கள். ஆள் கூடி அவரைத் தேரில் வைத்து இழுத்து மகிழ்ந்தார்கள். திருவிழா முடிந்ததா? இப்பொழுது விமர்சனங்கள் வர ஆரம்பித்து விட்டன. “சாமி இருக்கிற தேரிலை மனுசனை வைச்சு இழுக்கலாமோ, அதுவும் சாமிக்கு முந்தி?” “அவங்களுக்கு அறிவில்லாமல் இருக்கலாம், தேரிலை ஏறி இருக்கிறவனுக்கு அறிவில்லையோ?” “20,000 குடுத்து வருசத்துக்கு ஒரு தடவை மட்டும் இழுக்கிறதுக்கு தேரைச் செய்யிறாங்களே, இவங்களை என்ன சொல்ல?” “இந்தக் காசை நாட்டிலை கஷ்டப் பட்டுக் கொண்டிருக்கிற யாருக்காவது குடுத்திருக்கலாம்” “இந்தக் காசுக்கு நல்ல கார் ஒன்றை செக்கன் ஹாண்டா வாங்கி வருசக் கணக்காக ஓடி இருக்கலாம்” “சந்தனம் மிஞ்சினால் எங்கெல்லாம் பூசுவாங்களோ?” “இப்பத்தான் கிட்டடியிலை வந்தவங்கள். எங்களை விட அவையளுக்கெல்லோ நாட்டு நிலமைகள் நல்லாத் தெரியோணும்” இப்படி இன்னும் பல வந்து கொண்டிருக்கின்றன. பொறுங்கோ, நான் கடைசியா போட்ட படத்திலை யாரோ தெரிஞ்சவர் ஒருவர் நிக்கிறார். எல்லாரும் வெறும் மேனியோடை நிற்க அவர் மட்டும் சேட்டுப் போட்டுக் கொண்டு.. அவர் போலை கிடக்கு… அட அவரேதான்..
  3. சமந்தா பிரபு மேல் இருந்த "மரியாதை" போய் விட்டது எனக்கு😎! அரைவைத்தியர்கள்- quacks என்று அழைக்கப் படும் யாரோ இதைச் சமந்தாவிடம் சொல்லியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். ஒரு "அரை அவியல்" வைத்தியரின் நுனிப்புல் மேய்ந்த அறிவு அப்படியே தெரிகிறது இந்த செய்தியில். உண்மையில் எங்கள் உடலினுள் நடப்பது இது தான்: தொற்று ஏற்படுத்தும் கிருமிகளைக் கொல்ல எங்கள் நோயெதிர்ப்புக் கலங்கள் படையெடுக்கும் போது, அந்தக் கலங்களில் சில ஐதரசன் பேரொக்சைட் , நைட்ரிக் ஒக்சைட் போன்ற கிருமியைக் கொல்லும் நஞ்சுகளை உருவாக்குகின்றன. இந்த நஞ்சுகள் மிகக் குறைந்த அளவில், மிக குறுகிய காலத்திற்கு சுரக்கப் படுவதோடு, அதைச் சுரந்த கலங்களும் அந்த நஞ்சுகளால் இறந்து போகின்றன (ஒரு தற்கொலைத் தாக்குதல் எனலாம்). இதை வாசித்த அரைவைத்தியர் யாரோ, வெளியேயிருந்து ஐதரசன் பேரொக்சைட்டை உடலினுள் செலுத்தினால் என்ன என்று யோசித்திருப்பார் என ஊகிக்கிறேன்.
  4. ஜேர்மன் அணியை முற்றாக மாற்ற வேண்டும். பழையை கிழடுகளை வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக றூடிக்கா பின்களத்தடுப்பாளர் அந்த வேலையைச் செய்யாமல் அடிக்கடி முன:னுக்குவந்து பின்களத்தடுப்பை உடைக்கிறார்.தலையால் அடிக்கக் கூடியவர் என்றாலும் கோணர் கிக்குன்கு முன்னே வந்தால் ஏற்றுக் கொள்ளலாம்.எப்போதும் முன்னே வந்தால் கின்களத்தை யார் பார்ப்பது.அடுத்தது ரொனி குறூஸ் வயதாகி விட்டது . இருவரும் றியால்மட்றிட்க:க விளையாடுவதால் அணியில் சேர்க்க முடியாது. ஜெர்மன் அணி நட்சத்திர வுpரர்களைக் கொண்ட அணியாக எப்போதும் இருந்ததில்லை. அது ஒரு 11 பேர் கொண்ட சிறந்த அணியாகவே முன்பு இருந்தது. அதனால் வெற்றிகளைப் பெற்றார்கள்.முல்லர்>கிம்மின்ஸ் எல்லாம் வேஸ்ட் இ.ந்த பெனால்ட்டி ஏன் கொடுக்கவில்லை என்பது தெரியவில்லை. இருந்தாலும் ஜேர்மனி விளையாட்டு படமோசம். பனாலட்டி உதை மூலம் வெல்வது அதிஸ்டம் திறமை என்று சொல்ல முடியாது. ஜேர்மன் அணியை முற்றாக மாற்றி அமைக்க வேண்டும்.
  5. என் சுயநினைவால் ஓரளவு உலகைப் புரிந்துகொள்ள வந்ததும், இந்துமதத்தில் அதன் சுய புராண ஏமாற்றுகளில் நம்பிக்கை அற்றுப் போய்விட்டது ஆயினும் அவற்றில் சில கோட்பாடுகள் வாழ்க்கையை ஆரோக்கியமாக வாழ்வதற்குரிய உபதேசங்களைக் கொண்டிருப்பதை மறுக்கவும் முடியாது. “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்”. பெற்றோரும், சுற்றத்தாரும் கடவுள்கள் பற்றியும், ஆலயவழிபாடு பற்றியும் என்னைத் தொட்டிலில் ஆட்டும்போதே ஊட்டியவை என் அறிவில் கல்மேல் எழுத்துப்போல் பதிந்துவிட்டது. தவிர திருநெல்வேலி பழங்கிணற்றடி பிள்ளையார் கோவிலில் அதன் பூசை புணர்கார வழிபாடுகளை என் பெரியப்பா ஒருவர், அவர் உடம்பு இயலாமல் போகும்வரை மேற்கொண்டு வந்தார், தும்பிக்கையான்மேல் அவர் எனக்கு ஏற்படுத்திய பக்தியும், நம்பிக்கையும் இன்றுவரை ஏற்பட்ட பெரும் துன்பங்களையும் நீர்த்துபோக வைத்துள்ளது. யேர்மனி சுற்காட் நகரில் ஆரம்பிக்கப்பட்ட சித்திவினாயகர் ஆலயத்தில் பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவானவர்கள் அதிகம் இருந்தும் அதற்கு எதிரானவர்கள்களின் கைகளிலேயே நிர்வாகம் இருந்ததினால் குழப்பங்கள் ஏற்படத் தொடங்கிது, நிர்வாகத்தைக் கையேற்று அதனைச் சீர்செய்ய முயன்ற வேளை பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலை இயக்கத்தின் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டது, அதன் பின்னரே விடுதலைக்கு ஆதரவுதந்த சிலரின் உண்மைச் சொரூபம் வெளிவரத் தொடங்கியது. இதனால் ஏற்மபட்ட மனவுளைச்சலில் மௌனமாக இருந்த வேளையில்தான் பிள்ளையார் தன் தம்பி பாலமுருகன் பெயரில் ஒரு கோவிலை எங்கள் இல்லத்தின் அருகே நிறுவினார். அந்தக் கோவிலுக்கு நான் சென்றதும் அதன் அழகும் நிர்வாகமும் என் மனவுளைச்சலுக்கு ஒரு ஆறுதல் தந்ததை உணர்ந்ததால் தொடர்ந்து அங்கு செல்ல முடிவுசெய்து செல்கிறேன். தமிழையும் அதன் கோட்பாடுகளையும் அழித்துவரும் வடவர் மொழியையும் அவர்கள் மதமான இந்து சமயக் கோட்பாடுகளையும் உணர்வுபூர்வமாக உள்வாங்கிய நிலைதான், நான் திருவிழாவில் மேலங்கியுடன் நிற்பதும், சில சமயப் பிறழ்வுகழும் இங்கு சில கள உறவுகளின் கண்களை உறுத்தியுள்ளது. கேலிச் சித்திரம் வரைவதில் புகழ் பெற்ற என் மதிப்புக்குரிய நண்பர் கவி அவர்கள் எனக்கு சித்திரம் வரைந்து என்னைக் கோமாளியாக்காமல் இருப்பதற்கு நன்றி!!🙏🙌
  6. பாம்புக்கு... சவுக்காரம் போட்டு குளிக்க வார்க்கலாமா? 😂
  7. ஒரே ஒரு மன்னிப்பு ------------------------------ அவர் எனக்கு ஒரு ஒன்று விட்ட தாத்தா முறை. மூன்று அல்லது நான்கு தலைமுறைகள் பின்னோக்கி போய்ப் பார்த்தால், ஒரு குடும்பத்தில் இருந்து நாங்கள் இன்று பல கிளைகளாக, பல குடும்பங்களாக வந்தது தெளிவாகவே தெரிந்தது. அவரின் பதிவுப் பெயர் எனக்கும், ஊரில் பலருக்கும் தெரியாது. எல்லோரும் அவரை கூப்பிடும் பெயர் கொஞ்சம் விநோதமானது. ஒரு காலத்தில் நீண்ட தலைமுடி வைத்து, அதை சிலுப்பிக் கொண்டு ஊருக்குள்ளே சுற்றித் திரிந்திருக்கின்றார் போல. அதனால் அப்படியே அந்தப் பட்டப் பெயர் அவருடன் ஒட்டிவிட்டது. ஊரில் அநேகமாக எல்லோருக்கும் பட்டப் பெயர்கள் இருந்தன, பெரும்பாலும் அந்தப் பெயர்களே பாவனைகளிலும் இருந்தன. ஒன்று விட்ட தாத்தாவின் விநோதமான பெயரைப் போலவே அவரின் வீடும் கொஞ்சம் விநோதமானது. இரண்டு ஒழுங்கைகள் முடிகின்ற, அல்லது அவை தொடங்குகின்ற இடத்தில் அவரின் வீடு இருந்தது. இரண்டு பக்கங்களிலும் கதவுகள் இருந்தன. ஊரவர்கள் அவரின் வீட்டு வளவினூடு மிகச் சாதாரணமாகப் போய் வருவார்கள். ஒன்று விட்ட தாத்தாவின் மனைவியான அந்த அப்பாச்சி மிகவும் அன்பானவர். அந்த அன்பே ஊரவர்களை அந்த வீட்டை பாதையின் ஒரு பகுதியாக பயமின்றி நினைக்க வைத்துக் கொண்டிருந்தது. அவர் வீட்டில் ஒரு பெரிய கொய்யா மரம் நின்றது. எல்லோரும் காய்களும், பழங்களும் பிடுங்குவார்கள். அப்பாச்சி பார்த்தால் சிரித்துக் கொண்டு போய்விடுவார். ஒன்று விட்ட தாத்தா வெளியே வந்தால் எவரென்றாலும் ஓடிவிடுவார்கள். ஒரு சமயம் ஒன்று விட்ட தாத்தா சில நாட்கள் எங்கள் வீட்டில் தங்க வேண்டி வந்தது. அவர்களின் குடும்பத்தில், தாத்தாவின் இளைய மகனுக்கு, தமிழ்நாட்டில் திருமணம் நடப்பதாக முடிவாகியிருந்தது. அந்த மகன் இலங்கைக்கு வர முடியாத சூழ்நிலையால், திருமணச் சடங்கை தமிழ்நாட்டில் வைப்பதாக முடிவெடுத்திருந்தார்கள். அந்த நேரத்தில் ஒன்று விட்ட தாத்தாவால் பயணம் போக முடியாது என்று அவரை எங்கள் வீட்டில் விட்டுப் போயிருந்தனர் அப்பாச்சியும், அவரின் குடும்பமும். ஒன்று விட்ட தாத்தா வந்த நாளிலிருந்தே ஆரம்பித்துவிட்டார். வீட்டில் இருப்பவர்களுக்கு அவருடன் காலம் தள்ளும் ஒவ்வொரு பொழுதும் போதும் போதும் என்றாகியது. என் தந்தை வீட்டிலே நிற்கும் நேரம் வெகு குறைவு. அவருக்கு இப்படி ஒரு விடயம் வீட்டில் நடந்து கொண்டிருக்கின்றது என்பதே தெரியாது. தெரிந்திருந்தாலும், அவர் பிரச்சனையை தீர்த்து வைத்திருப்பார் என்றும் இல்லை. முக்கியமாக இந்தப் பிரச்சனைக்கு தீர்வு என்று ஒன்றும் இல்லை. என்ன ஆனாலும் ஒன்று விட்ட தாத்தாவின் குடும்பம் திரும்பி வரும் வரை அவர் எங்கள் வீட்டில் இருந்து தான் ஆகவேண்டும். இரண்டு வாரங்கள் ஓடியது. அம்மாதான் மிகவும் கஷ்டப்பட்டு போனார். விருப்புகளையும், வெறுப்புகளையும் அடக்கி அடக்கி வெளிக் காட்டாமல் வாழும் அன்றிருந்த எல்லா குடும்ப தலைவிகளையும் போன்றவர் தான் அவரும். ஒன்று விட்ட தாத்தாவின் வீட்டார்கள் இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, அப்பாச்சியும் அவரின் மூத்த மகனும் ஒன்று விட்ட தாத்தாவை கூட்டிப் போவதற்கு எங்கள் வீட்டிற்கு வந்திருந்தனர். வாசல் வரை போன ஒன்று விட்ட தாத்தா, நாங்களும் ஒரு இடைவெளி விட்டு பின்னால் போய்க் கொண்டிருந்தோம், திடீரென்று நின்று அம்மாவை கையெடுத்துக் கும்பிட்டார். 'நான் ஏதும் பிழைகள் செய்திருந்தால் என்னை மன்னித்து விடு, பிள்ளை............' என்று கலங்கி நின்றார். அம்மா அழுதேவிட்டார். ' என்ன இப்படி சொல்லிறியள், நீங்க எனக்கு அப்பா மாதிரி......... எப்ப வேணுமென்றாலும் வாங்கோ.........' என்று வழிந்த கண்ணீரை துடைத்தார் அம்மா. ஒன்று விட்ட தாத்தாவின் எந்த ஒரு சொல் எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றியது என்ற கேள்வி பல நாட்களாக என்னுள்ளே வந்து வந்து போனது.
  8. சம்பந்த சம்பந்தமே இல்லாலமல்....சாமர்த்தியமாய் கதை நகர்த்தி...சம்பந்தரின் திரிக்குப் போகாமலே..சம்பந்தரோடை சேர்த்து கதையை முடித்திருக்கிறியள்....நல்லாயிருக்கு தொடருங்கோ..
  9. தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது; உமா குமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு 06 JUL, 2024 | 12:28 PM பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது. இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன் தாராள சனநாயகவாதிகள் கட்சி சார்பில் போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும் அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப தொடர்ந்து மக்கள் பணியாற்றினால்இ எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள். மக்கள் தொண்டாற்ற வேண்டுமென்ற உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்! இங்கிலாந்து நாட்டில் பெருவெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் பிரதமராக பதவியேற்கும் கெய்ர் ஸ்டார்மர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அடைந்துள்ள ஆட்சி அதிகாரமானது இங்கிலாந்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்படவும் ‘ஈழத்தாயக விடுதலை’ எனும் தமிழர்களின் இலட்சிய கனவு வென்றிடவும் உறுதுணையாய் இருக்குமென நம்புகிறேன். https://www.virakesari.lk/article/187818
  10. சம்பந்தனின் மரண நிகழ்வுகள் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளுக்கும் அவர் தம் ஆதரவாளர்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும். சம்பந்தனின் மரண நிகழ்ச்சிக்கு பின்னரும் சம்பந்தனின் அரசியல் வாழ்வை யாராவது மெச்சுகின்றனர் என்றால்.....!!!! மேலதிக விபரம் இல்லாமல் அவர்களின் சுயரூபத்தை சுலபமாகவே கணக்கிடலாம்.
  11. ஈழத்தில் எதிரியாக இருந்தாலும்,அனாதையாக இருந்தாலும் ஒரு மரண நிகழ்வு நடந்தால் பாரபட்சம் பார்க்காமல் எல்லோரும் கூடி நின்று மரண நிகழ்வை நடத்துவர். ஆனால் ஒரு பழம்பெரும் எமது அரசியல்வாதி இறந்த பின் நடக்கும் கொடுமைகளையும் , பல இணைய தளங்களில் வரும் கருத்தோட்டங்களை பார்க்கும் போது.......இப்போதிருக்கும் தலைவர்கள் சுதாகரித்து கொள்வார்களாக.....
  12. 10வ‌ருட‌த்துக்கு முத‌ல் இருந்த‌ ஜேர்ம‌ன் அணி இரும்பு அணி வெற்றி மேல் வெற்றி 2014உல‌க‌ கோப்பைக்கு பிற‌க்கு அந்த‌ அணிக்கு என்ன‌ ஆச்சு என்று தெரிய‌ வில்லை தொட‌ர் தோல்விக‌ளை ச‌ந்திக்கின‌ம்.................... ப‌ழைய‌ ஜேர்ம‌ன் அணியா 2026 உல‌க‌ கோப்பையில் பார்க‌லாம் என்று ந‌ம்புகிறேன் தாத்தா...............................
  13. 2010 உல‌க‌ கோப்பையில் அக‌ன்ரீன‌ அணிய‌ 4-0 என‌ வென்ற‌வை அப்பேக்க‌ ப‌ய‌ங்க‌ர‌ துடியாட்ட‌மாய் விளையாடின‌வை..................2014 உல‌க‌ கோப்பையிலும் அதே துடியாட்ட‌ விளையாட்டு தொட‌ர்ந்த‌து.......................அந்த‌ உல‌க‌ கோப்பை வென்ற‌ பிற‌க்கு . அதுக்கு பிற‌க்கு ஜேர்ம‌ன் சின்ன‌ அணிக‌ளிட‌ம் உல‌க‌ கோப்பையில் 2-0 என‌ தோத்த‌வை...................இத்தாலி ம‌ற்றும் கொல‌ன்ட் ஓட‌ ஒப்பிடும் போது ஜேர்ம‌ன் ஒவ்வொரு உல‌க‌ கோப்பையிலும் க‌ல‌ந்து கொள்ளுகிற‌ நாடு........................... 2026க‌ளில் புதிய‌ சாத‌னை ப‌டைப்பின‌ம் என‌ ந‌ம்புவோம் புல‌வ‌ர் அண்ணா........................ என‌க்கு டென்மார்க் அணிய‌ விட ஜேர்ம‌ன் அணிய‌த் தான் அதிக‌ம் பிடிக்கும்.....................2002உல‌க‌ கோப்பையில் ப‌ல‌மான‌ பிரான்ஸ்ச‌ வீழ்த்தி டென்மார்க் 2-0 வென்ற‌தை ம‌ற‌க்க‌ முடியாது😁..................................
  14. Al Green - Let's Stay Together
  15. 😔.......... ஆழ்ந்த இரங்கல்கள். 2016ம் ஆண்டில் இவரின் 'கம்பிகளின் மொழி' என்னும் முதலாவது நூல் வெளியிடப்பட்டது. 'குமரிக்கண்டம் முதல் முள்ளிவாய்க்கால் வரை' என்னும் நூலை எழுதி முடித்துள்ளார், இன்னும் வெளியிடப்படவில்லை.
  16. 🤣.......... கிட்டக் கிட்ட வந்திட்டீர்கள்........... 'சிலுப்பா ராயர்' என்று தான் எல்லோரும் சொல்லுவார்கள்.
  17. இன்று புலம்பெயர் நாடுகளில் நடக்கும் ஆலயங்கள் மற்றும் அவற்றைச் சுற்றி நடக்கும் விமர்சனங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள் ..........! 😂
  18. கனக்க யோசிக்காதையுங்கோ Suvy. நாங்கள் அவரை ‘சடையர்’ என்று அழைப்போமா?
  19. அப்படி அல்ல Paanch. எங்களுக்குத் தெரிந்தவர் அங்கே நிற்கின்றார் என்பதற்காகத்தான் சேட்டுப் போட்டுக் கொண்டு ஒருவர் நிற்கின்றார் என்று யாழ் உறவுகளுக்கு அடையாளம் காட்டினேன். தவறாகப் புரிந்துவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
  20. நான் யதார்த்ததைத்தான் சொன்னேன். உமாகுமரனைத்தவிர ஏனைய தமிழ் வேட்பாளர்கள் வெற்றி வாய்ப்பு குறைந்த தொகுதிகளில்தான் போட்டியிட்டார்கள்.லேபரின் எழுச்சியைப் போல் லிப்டெம் கட்சியும் இந்த முறை மிகவும் பெரிய வளர்ச்சி கண்டிருக்கிறது.இரண்டு கட்சிகளின் கொள்கைகளும் கிட்டத்தட்ட நெருங்கி வருபவை.கொன்சவேர்ட்டியின் செல்வாக்குள்ள பகுதிகளில் நின்றிருந்தால் அந்தக்கட்சியின் பல தொகுதிகள் தொழிற்கட்சி .மற்றும் லிப்டெம் வசம் வந்ததால் வென்றிருப்பார்கள். இது ஒரு நல்ல தொடக்கம்.எமது பிள்ளைகள் அரசியல் உட்படஅனைத்துத் துறைகளிலும் கால்பதித்து விட்டார்கள்.மகிழ்ச்சியாக இருக்கிறது.
  21. நீங்கள் வேற ........ என்ர விரலைப் பார்த்தாங்கள் என்றால் முதலாவது வாக்கு பதிவு பண்ணவே விடமாட்டார்கள் ........! 😂
  22. கோஷான். ஜேர்மனி தேர்தல் பற்றி தான் பிய்த்தெடுத்துப்பார். ஆனால் பிரித்தானியா தேர்தல் பற்றி எதுவுமே தெரியாது 🤣🤣. ஈழப்பிரியன் விரைவில் விபரங்கள் வரும்
  23. கிருஷ்ணி வெல்லமுடியாது என்றுதான் சொல்லியிருந்தேன். உமா போட்டியிட்டது தொழிற்கட்சி இலகுவாக வெல்லக்கூடிய தொகுதியில். தமிழர்களுக்கு ஒன்றும் செய்யப்போவதில்லை. கட்சி என்ன சொல்கின்றதோ, அதைத்தான் செய்வார். அவரது தொகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாக்குக்காக காஸாவில் உடனடிப் போர்நிறுத்தம் வேண்டும் என்று அவரது பக்கத்தில் சொல்லியிருக்கின்றார். அதற்கு மேல் ஏதும் செய்யப்போவதில்லை! https://www.umakumaran.co.uk
  24. அப்படி ஒன்று இருந்திருந்தால், முன்பே சொல்லி இருப்பார்கள் தானே...😁 சம்பந்தர், பகலிலும் நித்திரை குளிசை போட்டுட்டு இருக்கிற ஆள். 😂
  25. நிச்சயமாக ஓலாவ் காணாமல் போவார். தேர்தலில் வெற்றி பெற முன்னரே கட்சி ரீதியாக பெரிதாக பேசப்பட்ட அரசியல்வாதியல்ல இவர். இவர் கட்சியில் இருந்த பல முன்னோடிகள்,அனுபவசாலிகளை புறம் தள்ளி விட்டு பதவிக்கு வந்தவர். இவர் சார்ந்த கட்சியின் பழையவர்கள் இன்றும் பதவியில் இருந்திருப்பேர்களாயின் உக்ரேன் போர் வருவதற்கு சாத்தியங்கள் மிக மிக குறைவாக இருந்திருக்கும். முன்னர் இவர் சார்ந்த கட்சி ஆட்சியில் இருக்கும் போது ஈராக் மீதான இரண்டாம் கட்ட போரை முற்று முழுதாக எதிர்த்த கட்சி. இதனால் அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் பெரிய விரிசல் ஏற்பட்டது. எனக்கு தெரிந்தவரை இவரை யாருக்கும் பிடிப்பதில்லை.இவர் அமர்ந்திருக்கும் கட்சி கொள்கை நல்ல கொள்கை. ஆனால் இன்று அதில் அமர்ந்திருப்பவவர்கள் இன்றைய உலக அரசியலுக்கு ஒவ்வாதவர்கள்.
  26. கந்தையர், இங்கே நான் திருமுருகனை எந்த இடத்திலும் நிந்திக்கவில்லை என்பதைக் கவனிக்கவும்.
  27. 🤣.......... களத்தில் சில திரிகள் ஒரு மாதிரித்தான்.............. தலையில் மண் எண்ணையை ஊத்தி வைத்துக் கொண்டு நெருப்பு பெட்டி இருக்குதா என்று கேட்கிற மாதிரி இருக்கும்......... கிட்டப் போனால் நாங்களும் வெந்து போடுவோமே என்று சுத்தி சுத்தி ஓடிக் கொண்டிருக்கின்றோம்.........🤣.
  28. ‘மன்னிப்பு’ என்ற சொல் ஒன்றை விட்டிருக்கிறார் ஒன்று விட்ட தாத்தா. இது குடும்பத்துக்குச் சரி. அரசியலுக்குச் சரிவராது. கல்லெடுத்து அடிச்சிருபாங்கள். சம்பந்தருக்கும் அது தெரிஞ்சிருக்கும். ‘சம்பந்தர் காலமானார்’ திரி உள்ள பக்கமே இப்ப நான் போவதில்லை. பயமாயிருக்கு.
  29. ஒருவரின் மரணத்தில் மகிழ்வதல்ல எங்கள் இனம். ஆனால் பொறுத்த நேரங்களில் மௌனம். பதவியை காக்கவும் தனது சொந்த தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றவும் பல காலமாக பதவியை தங்க வைத்தபடி மௌனமாகியது மறக்க மன்னிக்க முடியாத குற்றமாகும். பலகாலம் தமிழினம் எதிர் பார்த்து எதிர் பார்த்து ஏமாந்ததன் கோபத்தை தான் தற்போது காட்டுகிறது. இது இனிவரும் தலைவர்களுக்கான பாடமும் கூட.
  30. இதில் ஜேர்மனி தோல்வியுற்றது மிக மிக கவலையான விடயம் மட்டுமல்ல பற்பல விளைவுகளை ஏற்படுத்தும். அதில் என் காரணம் என்னவென்றால் ஜேர்மனி சொந்த மண்ணில் விளையாடுகின்றது.அதனால் இந்த நாட்டுமக்கள் ஒரு வித்தியாசமான பெருமைமிக்க உணர்வுடன் நாடு முழுவதும் உற்சாகமாக கார் ஊர்வலங்கள் வருவார்கள்.நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்புடன் உற்சாகமாக திரிவர்.வியாபர நிலையங்களும் களைகட்டும். ஜேர்மன் கொடி எங்கும் பறக்கும்.நாடே உற்சாகமாக இருக்கும். ஆனால் இப்போது ஜேர்மனி தன் நாட்டில் தோல்வியை சந்தித்து விட்டது. இனி இந்நாட்டு மக்களும் ஏனோ தானோ என்றுதான் திரிவர்.ஊர்மனைகளில் இருந்த கலகலப்பு இல்லாமல் போய் விட்டது. ஜேர்மனி தோற்றாலும் பரவாயில்லை. இறுதி ஆட்டத்திற்கு வந்து தோற்றிருக்கலாம்.
  31. பெரிய‌ பெரிய‌ அறிவு ஜீவிக‌ள் புலிக‌ளுக்கு ஆலோச‌னை சொல்லி கொடுக்க‌ வேண்டிய‌வ‌ர்க‌ள் எல்லாம் அமெரிக்கா ஜ‌ரோப்பா என‌ ஓடி வ‌ந்து விட்டு....................2009க‌ளில் யாரும் எதிர் பார்த்து இருக்காத‌ அழிவை ச‌ந்திச்சு தங்களின் உயிரை நாட்டுக்காக அர்ப்பணித்தவர்களை ப‌ற்றி தூற்றுவது ஏற்புடையதல்ல😉................... வ‌ன்னித் த‌ல‌மை சிறு பிழைக‌ள் விட்டு இருந்தாலும் க‌ட‌சியில் அவ‌ர்க‌ளும் நாட்டுக்காக‌ த‌ங்க‌ளின் குடும்ப‌த்தோட‌ உயிரை தியாக‌ம் செய்த‌வை அதை மற‌க்க‌ வேண்டாம்🙏🙏🙏....................நாட்டுக்காக‌ உயிரை விட்ட‌வ‌ர்க‌ளை தரம் தாழ்த்தி எழுதுவது ஏற்புடையது அல்ல🫤..................... இந்த‌ திரியில் விவாதிக்க‌ப் ப‌ட‌ வேண்டிய‌ விடைய‌ம் ச‌ம்ப‌ந்த‌ர் அர‌சிய‌லில் இருந்து த‌மிழ‌ர்க‌ளுக்கு என்ன‌ செய்தார்...................2009க்கு பிற‌க்கு விடுவிக்க‌ப் ப‌ட்ட‌ போராளிக‌ளுக்கு ம‌க்க‌ளுக்கு ஏதும் ந‌ல்ல‌து செய்த‌வ‌ரா..........................ஆராய்ந்து பார்க்க போனால் பதில் இல்லை................ச‌ம்ப‌ந்த‌ர் குட்டி க‌ருணாநிதி போல‌ குடும்ப‌த்துக்காக‌ அர‌சிய‌லில் இருந்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து விட்டு ம‌றைந்து விட்டார்😉......................... அன்ரன் பாலசிங்கம் ஜ‌யா நோய்வாய் ப‌ட்டு இற‌ந்த‌ போது ஜ‌யா சீக்கிர‌ம் எம்மை விட்டு பிரிந்து விட்டாரே என்று புல‌ம்பி அழுத‌ ம‌க்க‌ள் . த‌மிழீழ‌ தேசிய‌ த‌லைவ‌ர் த‌ன‌க்கு ப‌ல‌ இன்ன‌ல்க‌ள் வ‌ந்த‌ போது தான் தொர்ட‌வு கொள்வ‌து அன்ர‌ன் பால‌சிங்க‌ம் ஜ‌யாவை தான் என்று சொல்லி இருந்தார்☹️.................. 2007. நவ‌ம்ர் 2ம் திக‌தி த‌மிழ்செல்வ‌ன் அண்ணா அர‌சிய‌லில் இருந்த‌ போது சிங்க‌ள‌ விமான‌ தாக்குத‌லில் கொல்ல‌ப் ப‌ட்டார் அந்த‌ நாள் உல‌க‌ த‌மிழ‌ர்க‌ளின் த‌லையில் இடி விழுந்த‌ நாள்....................ப‌ல‌ர் ம‌ன‌துக்குள் அழுதவை சில‌ர் த‌மிழ் செல்வ‌ன் அண்ணாவின் இழ‌ப்பை தாங்க‌ முடியாம‌ பொது வெளியில் அழுத‌வை...................கொண்ட‌ கொள்கையில் உறுதியாய் நின்று எதுக்கும் இட‌ம் கொடுக்காம‌ எம்மை விட்டு பிரிந்து போன‌வ‌ர் தான் த‌மிழ்செல்வ‌ன் அண்ணா இவ‌ர்க‌ளின் தியாக‌ங்க‌ளுட‌ன் ஒப்பிடும் போது ச‌ம்ப‌ந்த‌ர் ஒரு சாதார‌ன‌ ந‌ப‌ர்😉 அர‌சிய‌லில் இருந்து சொந்த‌ ம‌க்க‌ளுக்கு துரோக‌ம் செய்து குடும்ப‌த்துட‌ன் உல்லாச‌ வாழ்க்கை வாழ்ந்து விட்டு இற‌ந்து விட்டார்.........................இந்த‌ க‌வோதிய‌ ந‌ம்பி வ‌ன்னி த‌ல‌மை ஏமாந்து போன‌து தான் மிச்ச‌ம்...................காசுக்கும் கொண்ட‌ கொள்கைக்கும் விலை போகாத‌ ந‌ப‌ர்க‌ளை சிங்க‌ள‌ம் ஒரு போதும் விட்டு வைக்காது எப்ப‌டியாவ‌து அவ‌ர்க‌ளை கொன்று விடுவார்க‌ள் இது க‌ட‌ந்த‌ கால‌ வ‌ர‌லாறு😉..............................
  32. புலிகளது சமாதான காலத்தில் அப்போதைய கூட்டமைப்பினது நாடாளுமன்ற உறுப்பினர்களில் அனேகமாணோர் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் செய்தவர்கள். அந்தக் காலத்தில் சம்பந்தன் ஐயா அவர்கள் பின்லாந்துக்குச் சக உறுப்பினர்களுடன் வந்திருந்தார். அசாத்திய நினைவாற்றல் உதாரணமாக எந்தவிதக் குறிப்புகள் இல்லாமல் அனைவரது தொலைபேசி இலக்கங்களையும் சொல்லுவார். நாங்கள்தான் அவர்கூறும் தொலைபேசி இலக்கங்களை அழுத்திக்கொடுப்பது. அந்தவேளை சுமந்திரன் அவருடன் தாயகத்தில் பணியாற்றியிருந்தார் என நினைக்கிறேன். அதாவது சட்டத்தரணியாக. சம்பந்தன் ஐயா அடிக்கடி சுமந்திரனுடன் தொலைபேசி அழைப்பை எடுத்துக் கதைப்பார் அந்த வேளையில் இலகுவான வாட் அப்போ வைபரோ இருப்பதில்லை நேரடி அழைப்புத்தான் அனைத்தையும் புலிகளது கிளைதான் ஏற்பாடு செய்திருந்தது. அவர் பலமுறை சுமந்திரனுடன் பேசும்போது உடனிருந்திருக்கிறேன் மரியாதை கருதி அவர் என்ன பேசுகிறார் என்பதைக் கூர்ந்து கவனிப்பதில்லை. ஆனால் அவர் சுமந்திரனை விளிக்கும்போது முழுப்பெயரும் சொல்லி அழைப்பதில்லை சமன் சுமன் என ஒரு குழந்தைப்பிள்ளையை கூப்பிடும் பாசத்துடன் அழைப்பார். ஏதோ கடிதங்கள் மற்றும் வழக்குகள் சம்பந்தமாகக் கதைக்கிறர் என நான் நினைப்பதுண்டு. பிற்காலத்தில் அந்தாளது புகழுக்குக் கொள்ளிவைக்கும் ஒரு ஆளாகக் கட்சிக்குள் சுமந்திரன் என்பவர் நுளைவார் என்பதை யார் கண்டது. சம்பந்தன் ஐயாவது பிற்காலத்தில் அவரது அனைத்துச் செயல்களுக்கும் பின்னாடி நின்றது சுமந்திரந்தான் அறிக்கை விடுவதிலிருந்து அரசியல் முடிவுகள் எடுப்பதுவரை தன்ர எண்ணத்துக்கு அவரது பெயரைச்சொல்லி அந்தாளை நாசமாக்கிப்போட்டார். சம்பந்தன் ஐயா ஒரு அரசியல்வாதியாக இருந்து தமிழர்கள் விடுதலைக்காக இறுதிவரை நேர்மையாகச் செயல்பட்டிருந்தால் அவரது பூதவுடலை பொகழுடலாகத் தமிழினம் தாங்கியிருக்கும். தந்தை செல்வா எனும் ஒரு நேர்மையாளனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழரசுக்கட்சியின் நேற்றுவரை உயிருடன் இருந்த மூத்த தலைவர் எனும் மிகப்பெரிய பெருமை சம்பந்தன் ஐயாவுக்கு இருக்கு, ஆனால் அதை எல்லாம் அவர் பெருமைப்படும்விதத்தில் தமிழர் மனங்களில் விதைக்காது வெறுப்பினை விதைத்துவிட்டார். ஆனால் இனிவரும் காலங்களில் மூன்று சந்ததிகள் கண்ட ஒரு அரசியல்வாதியைக் காண்பது அரிது. சுமந்திரனுக்கும் சாவு வரும் அது இதைவிடக்கேவலமானதாக இருக்கும் என்பதை இன்று அவர் உணர்ந்திருப்பார். ஆனால் அவர் திருந்தமாட்டார். சம்பந்தன் ஐயா யாழ் களத்தின் உறுப்பினர்கள் உங்களைப்பற்றி அவதூறாகப் பதிவிடுவது வேதனையின் வெளிப்பாடே ஒரு அங்கலாய்ப்பே. இனிமேலாவது உங்களைப்போன்ற தலைவர்கள் தமிழர் உரிமை, தமிழர் விடுதலை, தமிழர்களது கண்ணியம் இவைக்காகப் பாடுபடவேண்டும் எனும் போரவாவினாலேயே, அதை விடுத்து எங்களுக்கு உங்கள் மீது தனிப்பட்ட வெறுப்புகள் எதுவும் இல்லை. நாம் ஒரு நேர்மை மிக்க தலைவனை எமது வாழும் காலத்தில் கண்டுள்ளோம் சரி பிழைகளைத் தவிர்த்துவிட்டுப்பார்த்தால் தனை தவறுகளையும் ஏற்றுத்தான் அத்தலைவன் தனக்குத் தானே தீர்ப்பை எழுதிக்கொண்டான். அதில் ஒருவிகித உண்மையாவது எம்முடன் அரசியல் செய்வோரிடம் நாம் எகிர்பார்ப்பது தவறில்லையே. சம்பந்தன் ஐயா உங்களுக்கு எங்கள் "இறுதி வணக்கங்கள்"
  33. உங்களால் ஏதும் ஆதார‌த்தை காட்ட‌ முடியுமா யாழ்ப்பாண‌த்து ம‌க்க‌ள் ச‌ம்ப‌ந்த‌ருக்கு இறுதி அஞ்ச‌லி செய்த‌தை..................... சோச‌ல் மீடியாக்க‌ளில் ச‌ம்ப‌ந்த‌ரின் ப‌ட‌த்தை போட்டு இர‌ங்க‌ள் கூட‌ யாரும் தெரிவிச்ச‌த‌ நான் பார்க்க‌ வில்லை...................நீங்க‌ள் க‌ண்டால் இணைத்து விடுங்கோ. நீங்க‌ளும் க‌ண்ட‌ மேனிக்கு இதுக்கை நிறைய‌ அடிச்சு விடுகிறீங்க‌ள் ஆனால் அது உண்மை ஆகி விடாது.......................ம‌க்க‌ளை ஏமாற்றி பிழைச்ச‌ எவ‌ரும் ஒரு நாள் ஒதுக்க‌ ப‌டுவின‌ம் என்ற‌துக்கு ச‌ம்ப‌ந்த‌ரின் இறுதி ச‌ட‌ங்கு ந‌ல்ல‌தொரு எடுத்துக் காட்டு😉........................இந்த‌ திரியில் ஒரு சில‌ உற‌வுக‌ளை த‌விற‌ ச‌ம்ப‌ந்த‌ரை வெறுத்த‌ உற‌வுக‌ள் தான் அதிக‌ம்.......................அது அவ‌ர்க‌ளின் எழுத்தின் மூல‌ம் தெரியுது😄.......................
  34. என் கேள்விக்கென்ன பதில்........! 😍
  35. "தமிழுடன் ஒரு விளையாட்டு" - 02 [பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல்] பண்டைய காலத்து சுந்தர கவிராயர் தனிப்பாடல் ஒன்றில் பதினொரு முறை 'மரம்' என்ற வார்த்தை திரும்பத் திரும்ப வருகிறது. ஒவ் வொருமுறையும் வெவ்வேறு மரத்தைக் குறிப்பதாக அமைந்து பொருள்படுகிறது. மரங்களைக் கொண்டு மன்னனின் வீரத்தையும், மகளிர் அவன் மேல் கொண்டுள்ள மதிப்பையும் விளக்குகிறார் சுந்தரகவிராயர். இவரது காலம், இடம் போன்ற வரலாற்று குறிப்புகள் ஒன்றும் அறியப்படவில்லை. "மரமது மரத்திலேறி மரமதைத் தோளில் வைத்து, மரமது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி, மரமது வழியே சென்று, வளமனைக் கேகும் போது, மரமது கண்ட மாதர் மரமுடன் மரமெடுத்தார்" ["The king climb on a horse carrying a spear on his shoulder The king show a tiger - stab the tiger with spear and The king went away, while return towards Palace women show the king,they perform "Aalathi" to him "] மரமது - அரச மரம் / peepal tree = (அரசு / KING) மரத்திலேறி - மா மரம் / mango tree = மா என்பது குதிரை / HORSE மரமதைத் தோளில் வைத்து - வேல மரம் = வேப்ப மரம் / margosa or neem tree = (வேல் / SPEAR){ஆலும் வேலும் பல்லுக்குறுதி} மரத்தைக் கண்டு - வேங்கை மரம் / indian kimo tree, வேங்கை = புலி / tiger மரமுடன் - ஆலமரம் / banyan tree மரமெடுத்தார் - அத்தி மரம் / fig tree Hence ஆல + அத்தி = ஆலத்தி, ie Aal + Athi = Aalathi அரசன் ஒருவன். தன் தோளிலே வேல் தாங்கிக்கொண்டு குதிரையில் ஏறி வேட்டைக்குச் சென்றான். அங்கு அவன் ஒரு வேங்கைப் புலியைத் தன்னுடைய வேலால் குத்திக்கொன்றான். பின்னர் அரசன் தான் வந்த வழியே திரும்ம்பி தனது அரண் மனைக்குச் சென்றான். புலியைக் கொன்று வெற்றி வீரனாகத் திரும்பி வரும் மன்னனைக் கண்ட மாதர்கள் அரசனுக்கு ஆலத்தி [ஆரத்தி] எடுத்து வரவேற்றனர் என்கிறது இந்த பாடல்.
  36. Parliament results Counting under way. After 435 of 650 seats declared. Change compared with 2019 Labour Total seats 307 Change +139 Total votes 6,932,826 Share 36.5% Share change +1.4 Conservative Total seats 65 Change -154 Total votes 4,216,871 Share 22.2% Share change -19.4
  37. இவர் நான் வசிக்கும் குறைடன் தெருவில்தான் வசிக்கின்றார்! ஆனால் தேர்தல் கேட்கும் தொகுதி வேறு இடம்! வெல்ல வாய்ப்பில்லை! எனது தொகுதியிலும் சீர்காழியைப் பூர்வீகமாகக் கொண்ட இந்தியத் தமிழர் தேர்தலில் நிற்கின்றார். அவருக்குப் பிரச்சாரம் செய்ய இரண்டு பதின்ம வயதுச் சிறுவர்கள் சற்று முன்னர் வந்து கதவைத்தட்டினர். “நீங்க தமிழ்தானே” என்று யெகோவாக்காரர்கள் மாதிரி பேச ஆரம்பித்தனர்! நான் தமிழ்தான் ஆனால் தமிழர் என்பதற்காக வாக்குப்போடமுடியாது. என்ன பொலிஸியுடன் வந்திருக்கின்றீர்கள் என்று கேட்டு, குற்றங்களைக் குறைக்க என்ன திட்டம் என்று கேள்விமேல் கேள்வி கேட்டு அனுப்பிவிட்டேன். புலவர் posh ஆன இடத்தில் இருப்பார்😃. அங்கு பழமைவாதக் கட்சிதான் வெல்வார்கள்!😁
  38. 2009 இல் சிநை்தது கிடந்த தமிழ்த்தேசியக் கட்சிகளை ஒன்றிணைத்து அதன் தலைமைப் பொறுப்பை அப்போதைய நிலையில் அரசியல் அனுபவமும் வயதில் மூத்தவருமான சம்பந்தனிடம் கையளித்துவிட்டுத்தான் புலிகள் இயக்கம் தனது செயற்பாட்டை நிறுத்தியது. ஆனால். 2009 இற்குக்பின் சர்வதேசம் முன்னெடுத்த தமிழர்கள் தொடர்பான போர்க்குற்ற விசாரணை.தமிழ்களுக்கான தீர்வு தொடர்பாக எந்த செயற்பாட்டையும் செய்யாமல் கொழும்பில் சகல வசதிகளுடன் கூடிய வீட்டையும் பெற்றுக் கொண்டு நாடாளுமன்றத்திற்கும் போகாமல் திருகோணமலைக்குரிய பிரதிநிதியின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க விடாமல் முட்டுக்கட்டை போட்டது மட்டுமல்ல. தமிழர்களின் தேசியத்தலைம சம்பந்தனிடம் கையளித்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை பல பிரிவுகளாக உடைத்து தனது சொந்தக் கட்சியான தமிழரகசுக்கட்சியையும் உடைத்து குழப்ப நிலையில் விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார். ஈழத்தமிழர்களின் வரலாற்றில் மிக மோசமான அரசியல்தலைவராக சம்பந்தன் இதுவரை காலமும் இந்தப் பூமிக்குப் பாரமாக இருந்தததைத்தவிர வேறு எதனையும் செய்ய வில்லை
  39. இந்தப் போட்டியில் தண்ணி அடுத்த போட்டியில் தூளா? இப்பவே முடிவெடுத்தாச்சா?
  40. போட்டியை இனிதுற நடாத்திய கிருபனுக்கு நன்றிகள் பல. போட்டியில் வெற்றி பெற்ற பிரபா(USA) , ஈழபிரியன் அண்ணா, மற்றும் கந்தப்புவுக்கு வாழ்த்துக்கள். போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி. அடுத்த போட்டியிலும் சளைக்காமல் பங்கு பற்றவும். இத்திரியை தொய்விலாமல் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை பங்களித்த ஈழப்பிரியன் அண்ணா, ரசோதரன் ஆகியோருக்கும் பையனுக்கு ம் சிறப்பு பாராட்டுக்கள்.
  41. இநதப் போட்டியில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் இந்த போட்டியை திறம் பட நடாத்திய கிருபனுக்கும் பங்கு பற்றி போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் பாராட்டுக்கள்.மற்றும் சிறப்பு விருது பெற்ற பையனுக்கும் வாழ்த்துக்கள்.
  42. முதல் மூவராய் வந்த பிரபா usa , பிரியன்,கந்தப்பு ஆகியோருக்கு வாழ்த்துக்கள்....... மற்றும் பங்குபற்றிய அனைவருக்கும் , கருத்துக்களும் நகைசுவைகளுமாய் கலகலப்பாக்கிக் கொண்டிருந்த உறவுகள் அனைவருக்கும் நன்றி......! 👍 கிருபன் .....ம் சொல்லி வேலை இல்லை .....சூப்பர்.........! பையனுக்கு கிருபன் குடுத்த பரிசு சிறப்பானது....... அப் பரிசைப் பெறுவதற்கு அவர் தகுதியானவர்தான் .......!
  43. கேட்ட உடனே வீரப்பையனுக்கு விருதைக் கொடுத்த அந்த மனசிருக்கே!அது சொர்க்கத்தங்கம். @கிருபன் அதுவும் சின்னப்பையனுக்கு சியர்ஸ் கேர்ள்ஸ் விருது நல்ல பொருத்தம்.
  44. 1 பிரபா USA 127 தொடர்ந்து முதலமைச்சர் பதவியை தக்க வைத்த @பிரபா வுக்கு வாழ்த்துக்கள். எவ்வளவோ குழப்பங்கள் வந்த போதும் குழம்பாமல் எல்லோரையும் சமமாக புள்ளிகள் எப்படி போடலாம் என்று திட்டம் போட்டு போட்டியை நடாத்தி முடித்த தம்பி @கிருபன் க்கு மிகுந்த பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கொண்டு போட்டியை சிறப்பித்த உறவுகளுக்கும் முக்கியமாக @வீரப் பையன்26 @ரசோதரன்க்கும் பாராட்டுக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.