Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்12Points88798Posts -
கந்தப்பு
கருத்துக்கள உறவுகள்10Points12788Posts -
valavan
கருத்துக்கள உறவுகள்7Points1582Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20342Posts
Popular Content
Showing content with the highest reputation on 10/18/24 in all areas
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
10 pointsபின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) 28) வன்னி 29) மட்டக்களப்பு) 30)திருமலை 31)அம்பாறை 32)நுவரெலியா 33)அம்பாந்தோட்டை 34)கொழும்பு 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் 39) உடுப்பிட்டி 40) ஊர்காவற்றுறை 41) கிளிநொச்சி 42) மன்னர் 43) முல்லைத்தீவு 44) வவுனியா 45) மட்டக்களப்பு 46) பட்டிருப்பு 47) திருகோணமலை 48) அம்பாறை 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 54)தமிழரசு கட்சி 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்10 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போட்டியை நடத்தும் கந்தப்புவுக்கு நன்றி பல🙏🏽 தமிழ்நாட்டு அரசியலைப் பற்றி உள்ள அறிவும், தரவும் இலங்கை அரசியலைப் பற்றி இல்லை! அதிலும் குறிப்பாக மக்களின் நாடிப்பிடிப்பை உணர்த்தும் நம்பகமான கருத்துக்கணிப்பு இல்லை. ஆனாலும் போட்டியில் கட்டாயம் கலந்துகொள்வேன்😀 யாழ் களப் போட்டியில் நான் வெல்வது சுமந்திரன் யாழ்ப்பாணத்தில் வெல்வது மாதிரித்தான் இருக்கும்😆5 points
-
வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இலங்கையின் பொருளாதாரப் பிரச்சனை இனப்பிரச்சனையின் இன்னொரு விளைவு என்பதை மறுப்பதற்கில்லை. போர்க் காலத்தில் போருக்கான செலவும் இராணுவத்தினருக்கான செலவும் வருடாந்த அரச செலவீனத்தில் மிகப் பெரும் பங்கை எடுத்துக் கொண்டு இருந்தமையும், இன்றும் பெருந்தொகையான இராணுவத்தினரை தொடர்ந்து பேண (அரச உத்தியோகர்த்தர்களில் 40 வீதமானோர் அரச படையினர்) அதிக பணம் செலவிடுவதையும் காண முடிகின்றது. ஆனால் இனப்பிரச்சனை மட்டுமே ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் சரிவை ஏற்படுத்துவதற்கான ஒற்றைக் காரணி அல்ல. பங்களாதேசில் அண்மையில் நிகழ்ந்தது, ஸ்பெயினில் சில ஆண்டுகளுக்கு முன் (2008 - 2014) நிகழ்ந்தவை அவற்றுக்கான உதாரணங்கள். இலங்கையில் அதே நிலைதான். இனப்பிரச்சனையும், மகிந்த கும்பலின் அடாவடித்தனமான ஊழலும், மித மிஞ்சிய கடனும் இன்றைய நிலைக்கு உதாரணங்கள். இதைத் தான் தேசிய மக்கள் கட்சி கையில் எடுத்து இருக்கின்றது. எப்படி எனில், பொருளாதாரப் பிரச்சனையின் அடிப்படைக் காரணங்களில் ஒன்றான இனப்பிரச்சனை என்பது இப்போது இல்லை. அதாவது போர் முடிவுக்கு வந்து விட்டது. சிங்களத்தை பொறுத்தவரைக்கும் இனப்பிரச்சினை என்பது அறவே இல்லை என்பதுதான் அவர்களின் முடிவு. ஆகவே இப்போது இருக்கும், தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினை ஊழல் தான். அதை நாம் தீர்த்து வைப்போம் என்கின்றது. இதனை யாருக்கு முதலில் சொல்லியது? சிங்கள மக்களுக்கு. இப்போது அதையே தமிழ் மக்களுக்கும் சொல்ல தொடங்கியுள்ளது. அதை தமிழ் மக்களும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பது தான் எம் தமிழ் தேசிய அரசியலின் மிக மோசமான தோல்வி. இந்த தோல்வி யாரால் ஏற்படுத்தப்பட்டது? தமிழ் தேசியம் என்று வெறுமனே மேடைகளில் முழங்கி, பேட்டிகளில் உரத்து கதைத்து விட்டு, எதையும் செய்ய வக்கில்லாத, திறமையில்லாத, மோசமான தமிழ் தேசிய கட்சிகளாலும் அதன் தலைவர்களாலும். அவர்களை உசுப்பேற்றி தம் குறுகிய நலங்களை பேணுகின்ற புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகளாலும்.3 points
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
3 pointsஅப்படி தென் கிழக்காசியர்கள்தான் சொல்லுவோம், வெள்ளைக்காரர்கள் அப்படி சொல்வதில்லை. I hurt myself என்று தன்னோட தவறை ஒப்புக்கொள்வார்கள் ஈழபிரியன் அண்ணாவுக்கு தெரியாததா என்ன, நாம் எம்மோட தவறை ஒப்புக்கொள்வது குறைவு அல்லது அடுத்தவன் தலைமேல் போடுவது அதிகம் என்பதால் அப்படி சொல்கிறோம் போலும்,3 points
-
ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
3 points
-
வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
ஶ்ரீலங்கா ஒற்றையாட்சி அரசியலமைப்பு பாராளுமன்றம் சென்று ஒற்றையாட்சி அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பேன் என்று சத்தியப்பிரமாணம் செய்ய அனைத்து தீவிர தமிழர தேசியவாதிகளுக்கிடையில் கடும் போட்டி. தாயகம், தேசியம், தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை, ஒரு நாடு இரு தேசம் கோஷ்டிகளும் போட்டி போட்டுக்கொண்டு ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க இவ்வளவு ஆவலாக இருக்கிறார்கள் என்று பார்ததால் புலம் பெயர் தேசிய வியாபாரம. செய்யும் கும்பலும் தமது விசுவாசிகளை ஒற்றையாட்சிக்கு விசுவாசம் தெரிவிக்க அனுப்ப கங்கணம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள். 😂😂3 points
-
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இந்த போரில் கிள்ளி பார்த்தாலும் ஆச்சரியம் தீராதது இஸ்ரேலின் உளவுதுறைதான். எப்படி இவர்களால் இதெல்லாம் முடியுது என்பது பிரமிக்கவைப்பது. கமாஸ் ஹிஸ்புல்லாஹ் தலைமையை அழிப்போம் என்று அறிவித்தார்கள் சொல்லி ஒரு சிலமாதங்களிலேயே ஒட்டுமொத்தமாக காலி பண்ணுகிறார்கள், ஏனையவர்களுக்கு இதெல்லாம் பாகிஸ்தான் பார்டருக்கு போய் தீவிரவாதிகளை அழித்து அதன் தலைவரை தமிழ்நாட்டுக்கு பிடித்துவரும் விஜயகாந்த் படங்களில் மட்டுமே சாத்தியம் ஆனானப்பட்ட அமெரிக்காவே உலகமெங்கும் அவர்களின் படைகளை கொண்டு கடைவிரித்தும், தன்னால் தேடப்படுகிறவர்களாக அறிவித்தவர்களை பல வருடங்களின் பின்னரே வேட்டையாட முடிகிறது, அதிலும் அமெரிக்காவால் தேடி களைத்துபோன ஒருசிலரை இஸ்ரேலே இந்தபோரில் தேடி போட்டு தள்ளியிருக்கிறது. இத்தனைக்கும் அவர்களெல்லாம் நிலத்தடியிலும் பாதுகாப்பான நாடுகளிலும் அடிக்கடி இடத்தை மாற்றி, தொடர்பாடல் முறையை மாற்றி பதுங்கியிருந்தவர்கள், இஸ்ரேலின் இந்த சாகசங்களுக்கு அவர்களின் ஏஐ தொழில்நுட்பம் பாதி காரணமென்றாலும் மீதிகாரணம் இஸ்ரேலுக்கு உளவுதகவல் சொல்லி கூட இருந்து குழி பறிக்கும் அங்குள்ள முஸ்லீம்களே. தொழில்நுட்பம் முகங்களை குரல்களைதான் தேடி கண்டு பிடிக்கும், இந்த கட்டிடத்துக்கு இத்தனை மணிக்கு ஒன்றுகூட வருகிறார்கள் என்றெல்லாமா சொல்லும்?3 points
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
நீங்கள் என்று எழுதுங்கள் ஒருவரும் என்று எழுதுவது தவறு.3 points
-
தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
ஈழப்பிரியன்… நீங்கள், கண்ணை மூடிக் கொண்டு சுமந்திரனின் எல்லாச் செயலையும் போற்ற வேண்டும் என்றால், உங்கள் மூளையை கழட்டி ஓரமாக வைத்து விட்டு அவரின் செம்பாகவோ, அல்லக்கையாகவோ…. மாற வேண்டும். 😂 அப்பிடி ஒரு பிழைப்பு பிழைக்க வேண்டிய அவசியம்… மற்றவர்களுக்கு இருக்கலாம், ஆனால் உங்களுக்கு இல்லை என்று எனக்கு நன்கு தெரியும். 🤣3 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அத்துடன் காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ளாத எமது கடந்த கால தவறுகளாலும் தான் என்பதை கூறினால் இங்கு பலருக்கு பிடிப்பதில்லை. இருப்பினும் அந்த கசப்பான வரலாற்றை ஏற்றுக்கொண்டு பயணிப்பதே எதிர்காலத்தில் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும். War at biiter end என்று வந்த இறுதி அறிக்கையின் உட்பொருளை புலம் பெயர் செயற்பாட்டாளர்களில் சிலராவது புரிந்து கொண்டிருந்தால், அல்லது பாலகுமார், யோகி, கலைக்கோன் மாஸ்ரர் போன்ற உன்னதமான போராளிகள் இறுதியில் உயிர் தப்பி தாயகத்திலோ வெளி நாட்டிலோ செயற்படு நிலையில் இருந்திருந்தால் இன்றைய நிலை முன்னேற்றகரமாக இருந்திருக்கும் என்பது எனது கணிப்பு. ஏனெனில் ஒரு அரசியல் போராட்டத்தில் நடைமுறை மாற்றங்களை எப்படி உள்வாங்கி, பழைய தவறுகளை திருத்தி எவ்வாறு பயணிக்கவேண்டும் என்ற தெளிவு இவர்களுக்கு உள்ளது.2 points- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
தமிழ்த்தேசியம் என்பது தமிழரின் உயிர் நாடி. அதனை கேலி செய்யும் எவரும் தமிழ் மண்ணிலோ அல்லது தமிழருக்கோ பிறந்திருக்க வாய்ப்பில்லை.2 points- கருத்து படங்கள்
2 points2 points- ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
1)அதில அதிகமானவர்கள் அரசியலே பேசாதவர்கள்/தெரியாதவர்கள் ...விடுமுறைக்கு சிறிலன்கா சென்றால் கதிர்காமம்,தென்னிலங்கை கடற்கரை என சுற்றுலா செல்பவர்கள் அந்த அழகையும் ,அங்கு ஹொட்டல்களில் சிப்பந்திகள் இவர்களுக்கு கொடுக்கும் மரியாதையை பார்த்து மயங்கி ஐயோ சிறிலங்கா மக்கள் புனிதமானவர்கள் என்ற மாயை ... கொட்டியும் சிங்கள அரசியல்வாதியும் தான் நாட்டை குட்டிசுவராக்கியவர்கள் என பிரச்சாரம் செய்தால் அதை நம்புபவர்கள் 2)"சிங்களவர்கள் அதிகமாக இந்த நாட்டில் வாழ்கின்றனர் அவர்கள் விருப்பிய்படி தமிழர்கள் வாழ்வதுதானே நியாயம்....புலம் பெயர்ந்த நாடுகளில் அப்படி தானே நீங்கள் வாழ்கின்றீர்கள் அவர்களுடைய மொழியை படிக்கிறீங்கள் அவர்களுடன் இரண்டர கலந்து அந்த நாட்டவர்களாக மாறிவிட்டிர்கள் தானே ஏன் சிரிலங்கனாக மாறமாட்டீர்கள் என அடம் பிடிக்கின்றீர்கள்" என சிங்களவ்ர்கள் பாடம் எடுத்தவுடன் இந்த புலம்பெயர்ஸ் அதையும் நம்பி "ஆமால்ல" என்பார்கள் 3)3) புது ரென்ட் புலம் பெயர் நாடுகளில் ஏசியன்(இந்து,இந்தியன்,சிறிலங்கன்) என்ற அடையாளத்துடன் வாழ வேணும் என்ற ஒர் நப்பாசை வந்திருக்கு சில ஈழத்தமிழருக்கு2 points- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
2 pointsஇனி வரும் நாட்களில் மழை என்று தான் கூக்கில் வெதர் காட்டு...............நாளை போட்டி நடக்குமானு தெரியல 46ரன்ஸ்சுக்கு சகல வீரர்களும் அவுட்...................உண்மையில் இதை யாரும் ஏற்க்க மாட்டினம் இந்திய அணியா இப்படி விளையாடினது என்று ஒன்றில் மழை குறுக்கிட்டு விளையாட்டை சம நிலையில் முடிக்கும் மழை பெய்யாம இருந்தால் சிறு வெற்றி வாய்ப்பு நியுசிலாந்துக்கு தான்...................பாடசாலை மாணவர்கள் போல் இந்திய வீரர்கள் முதல் இனிங்சில் செயல் பட்டார்கள்😁................................2 points- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
🤣.......... இப்போதைக்கு பாலனிடம் மாட்டுப்பட்டிருப்பது இவர் என்று எடுத்துக் கொண்டு, பின்னர் பாலனின் எழுத்தை வாசித்து சிரிக்க வேண்டும்....... நட்சத்திரன் செவ்விந்தியனும் இப்படியான அரசியல் ஆராய்ச்சிகளை, கருத்துகளை எழுதினால், அது இதைவிட இன்னும் சுவாரசியம் ஆகவும், சூடாகவும் இருக்கும். எவர் மீதும் எவரும் குற்றம் குறைகள் கண்டுபிடிக்கலாம், சொல்லலாம் என்ற ஒரு காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். விதிவிலக்கே இல்லை. ஆனாலும் மக்கள் திரள் இந்த தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், கடுமையான மாற்றுத் தரப்புகள், அறிவுக்கூர்மையுள்ளவர்கள் போல தோன்றுபவர்கள் போன்ற இடங்களில் இருந்து வரும் கருத்துகளை ஒரு பொழுதுபோக்காக மட்டுமே வாசிக்கின்றனர் போல. அவர்களின் முடிவு இவைகளால் மாற்றப்படுவதில்லை. சுஜாதாவின் கதைகளை வாசிப்பது போல, பட்டுக்கோட்டை பிரபாகரின் கதைகளை வாசிப்பது போல, இவைகளும் ஒரு ஜனரஞ்சக வாசிப்புகள் மட்டுமே. எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இப்படி ஒருவர் இருக்கின்றார் என்றே தெரியாது. அவர் ஒரு வேட்பாளர் என்றவுடன் எரிச்சல் தான் வருகின்றது. தமிழ்நாட்டில் உள்ள சில அகதி முகாம்களுடன் எனக்கு ஓரளவு பரிச்சயம் இருக்கின்றது. சிலவற்றுக்கு போய் இருக்கின்றேன், அங்கே தங்கியும் இருக்கின்றேன். இப்படி ஒரு அமைப்பு அங்கே எதுவும் செய்வதாக கேள்விப்பட்டதில்லை. இங்கு வாழும் எமது மக்கள் வேறு ஒரு நிஜத்திற்கு போய்விட்டார்கள். பாலன் போன்றவர்கள் முந்தைய தலைமுறையில் இருந்து கொண்டு 'இங்கு வா, அங்கு போ.......' என்று பழைய கதையையே சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள்.2 points- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராட்டப்பட முடியாது அவர்கள் ஓய்வெடுத்தாலே பாராட்டலாம். எதுவும் செய்யாமல் ஏன் மீண்டும் மீண்டும் பாராளுமன்றம் போக வேண்டும் ஒதுங்கி இருந்து புதியவர்களுக்கு இடம் கொடுத்தால் திறமைசாலிகளை இனம் காணலாம் இன்றைய தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சுயநலவாதிகள். சேவை மனப்பான்மை அற்றவர்கள். குறிப்பு,....இங்கே சமயத்தை கிறித்தவ சமயத்தை வலு கட்டாயமாக. செருகுவர்களின் நோக்கம் பிழைகளை. இயேசு மன்னிப்பார். எனவே… நாங்கள் பிழை விடலாம் என்பது தான் 🙏🙏 ஆனால் நாங்கள் இங்கு சமயம் பற்றி கதைக்கவில்லை அரசியல்வாதிகள் பற்றி கதைக்கிறோம். அவர்களின் சமயம் எதுவாகவும் இருக்கலாம்2 points- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
இவ்வாறு நாம் அவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு சுய திருப்தி அடைய வேண்டியது தான். சிங்களவர்கள் வெறுமனே பாணுக்காகவும் எரிபொருட்களுக்காகவும் மட்டும் போராடவில்லை. உலகில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு பெரும் இயக்கத்துக்கு எதிராக, தம் நாட்டை பிரித்துக் கேட்கின்றனர் என்பதற்காக அதை எதிர்த்து போராடி, அதில் வெற்றியும் பெற்றார்கள் என்பதை வசதியாக மறந்து விட்டீர்கள். அவர்களின் வெற்றி கொடூரமானதாகவும், அறத்துக்கு எதிரானதாகவும், தடை செய்யப்பட்ட போர் முறைகளை பாவித்தும் பெற்றதாக இருப்பினும், அவர்கள் வெற்றி பெற்றவர்களாகவும், தம் அநீதியான வழிகளுக்கு எதிரான சர்வதேச எதிர்ப்பை இன்று வரைக்கும் சமாளித்து உலக நாடுகளின் கடனுதவியை தொடர்ந்து பெறுகின்றவர்களாகவும் உள்ளனர். அத்துடன் எம் பலவீனமான அரசியல்வாதிகள் மூலமாகவும், சுயநலம் பிடித்த புலம்பெயர் தமிழ் தேசிக்காய் அமைப்புகள் மூலமாகவும் மேலும் மேலும் எம் பலத்தை ஒடுக்கி, ஈற்றில் அவர்களின் கரங்களை பற்றி முன்னேற வேண்டிய நிலைக்கும் எம்மை தள்ளி விட்டுள்ளனர். ஆனால் நாம் சிங்களவர்களை தொடர்ந்து மட்டம் தட்டிக் கொண்டு இருப்போம். அப்படி செய்தால் தான் எம்மை நாம் திருப்திப் படுத்திக் கொண்டு இருக்க முடியும்.2 points- கிறுக்கல்கள்
1 pointகிறுக்கல்கள்-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 27.12.2025
-
கருத்துப்படம் 26.12.2025
-
கருத்துப்படம் 24.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 21.12.2025
-
கருத்துப்படம் 20.12.2025
1 point- ரயிலுடன் யானைகள் மோதி கோர விபத்து!
நீங்கள் சொல்வது உண்மைதான் யானைகள் நடமாடும் இடத்தில் மிக குறைந்த வேகத்தில் செல்லவேண்டுமென்று சட்டம் சமிஞ்ஞை எல்லாம் இருந்திருக்கும், ஆனால் இலங்கையில் அதையெல்லாம் யார் மதிக்கிறார்கள். பல யானைகள் படுகாயம் இறப்பு என்று ஆகுமளவிற்கு கட்டுப்படுத்த முடியாத வேகத்தில் சென்றிருக்கிறார், அல்லது தூக்க கலக்கம். அதுவும் எரிபொருளுடன் , நல்லவேளை வெடிக்கல. ஆபத்தான மலையக ரயில் பாதைகளில் பயணிகள் பெட்டிகளுடன் எரிபொருள் தாங்கிகளையும் இணைத்து ரயிலை ஓட்டி செல்வதை கவனித்திருக்கிறேன். ரயில்களுக்கு வக்காலத்து வாங்கியே ஆகவேண்டும் ஓட்டுறவன் சரியில்லையென்றால் அது என்ன செய்யும் பாவம்? நான் குறிப்பிட்டது யாதெனில் சட்டென தன் பாதையை மாற்றிக்கொள்ள முடியாத வாகனங்களுடன் மோதினால் ந்ம்மை மோதியதல்ல நாம் மோதியது என்ற சொற்றொடர்தான் சரியானது என்பதே. விமானங்களும் பறவைகளும் முட்டிக்கொண்டால் விமானத்துடன் மோதிய பறவைகள் என்றே சொல்வார்கள், பறவைகளை மோதிய விமானம் என்று யாரும் சொல்வதில்லை.1 point- ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் 'கொல்லப்பட்டாரா என சரிபார்த்து வருகிறோம்’: இஸ்ரேல் ராணுவம்
இப்படியான மடைமாற்றும் பதிவுகளுக்கு நான் பொதுவாக பதிலளிப்பதில்லை. விடுதலைப்புலிகளை இடையில் வந்து செருகி தம் கருத்துக்களுக்கு வலுச்சேர்க்கும் ****** பதிவு இது! மடைமாற்றிவிட்டால் பிறகென்ன பட்டாசு குழு காட்சில ஒரே அடைமழை தான். புலிகள் இன்னொரு இனத்தின் தாயக நிலப்பரப்பை தமது தாயகம் என்று சொல்லிப் போராடவில்லை. புலிகள் சிங்கள தேசமொன்று உலக வரைபடத்தில் இருக்கக்கூடாது என்று போராடவில்லை. புலிகள் சிங்களப் பெண்களை பாலியல் வல்லுறவுசெய்ததில்லை புலிகள் சிங்கள மக்கள் கூடும் இடங்களை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்துவது இல்லை (ஒருசில தவறுகள் நடந்தது என்பது உண்மை ஆனால் தாக்குதலின் நோக்கம் சிங்கள மக்களைக் கொல்வது அல்ல. வேறு சில இலக்குகள் தாக்கப்படும்போது மக்கள் கொல்லப்பட்டு இருக்கின்றனர்). இங்கு இவையனைத்தையும் செய்யும் ஹமாஸ் போன்ற பயங்கரவாதிகளை புலிகள் இயக்கத்துக்கு ஒப்பாக நினைத்து கருத்தெழுதுவது என்பது அஞ்சினவன் கண்ணுக்கு ஆகாயம் எல்லாம் பிசாசு என்ற கதைதான். அதாவது இவர்கள் தத்தமது மனக்களுக்குள் புலிகளை பயங்கரவாதிகளாகவே உருவகப்படுத்திக்கொண்டுள்ளனர்.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
ஆயிரத்தில் ஒருவன்! இவ்வளவையும் வாசித்து தாங்கிப்பிடித்து வாக்களிக்கும் மக்கள் மயங்கி விழப்போகிறார்கள். தேர்தல் திணைக்களம் முடிவுகளை அறிவிப்பதில் குழப்பம் அடையப்போகிறது. ஒருமித்து மக்களுக்குகாக போராடி உயிரை விட்ட மண்ணில், இத்தனை கட்சிகள் முளைத்திருக்கின்ற.1 point- அருச்சுனா இராமநாதன் தலைமையிலான சுயேட்சை குழுவின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு
புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு புலம்பெயர் மக்களின் உதவிகளை பற்றி சொல்லுகின்றார் ....புலம் பெயர் தமிழ் மக்கள் வழங்கும் உதவிகள் யாவும் தமிழர் பிரதேசத்திற்கு மட்டும் வழங்க முடியுமா? அல்லது 50 வீதம் தமிழ் பகுதிக்கும் மிகுதி 50வீதம் சிங்கள பகுதிக்கு என்ற கொள்கையா?....ஏற்கனவே சில உதவிகளை புலம் பெயர் அமைப்புக்கள் செய்யும் பொழுது இந்த முயற்சிக்கு தடை போட்டு ஒரு பகுதி சிங்கள பகுதிக்கு கொடுக்க வேணுமென கட்டளை இட்ட சம்பவங்கள் உண்டு1 point- நடிகர் அரவிந்தசாமியால் தமிழ் சூழலிலும் பேசுபொருளாக இருக்கும் பணம்சார் உளவியல் என்ற புத்தகம்
THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். THE PSYCHOLOGY OF MONEY MORGAN HOUSEL அவர்கள் எழுதிய புத்தகம் உலகம் முழுவதும் பேசும் பொருளாக இருந்தும் அண்மையில் நடிகர் அரவிந்தசாமி கோபிநாத்க்கு அளித்த யூரூயுப் பேட்டியின் பின் தான் இப்பொழுது தமிழ் சூழலிலும் அதிகமானோர்களால் இந்த புத்தகம் பேசும் பொருளாக மாறியுள்ளது _________________________________________________________________________________ **பணம் சார்ந்த உளவியல்** (The Psychology of Money) என்ற மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய புத்தகம், பொருளாதார நிதி, முதலீடு, செல்வம் மற்றும் பணம் பற்றிய உளவியல் மனநிலைகளின் உண்மைகளை ஆராயும் தன்மை கொண்டது. அதில், பணம் சம்பந்தப்பட்ட முடிவுகள் எவ்வாறு மிகுந்த அறிவியல் தரவுகளினால் மட்டுமே இல்லை, நமது மனநிலைகளாலும், பழக்கவழக்கங்களாலும், பயம், வறுமை மற்றும் ஆசைகளாலும் பாதிக்கப்படுகின்றன என்பதைக் குறிப்பிடுகிறார். ### புத்தகத்தின் முக்கியத்துவம்: 1. **மனநிலைகளின் தாக்கம்**: பணம் சம்பந்தப்பட்ட முடிவுகளில் உணர்ச்சிகள் மிகுந்த தாக்கம் செலுத்துகின்றன. மனிதர்கள் சில சமயங்களில் பொருளாதார ரீதியான முடிவுகளை தவறாக எடுக்கக் கூடும், ஏனெனில் அவர்கள் அவர்களின் மனசார்ந்த நிலைப்பாடுகளால் பாதிக்கப்படுகிறார்கள். 2. **நெருக்கடியை சமாளிக்கும் திறன்**: பணம் சம்பந்தமான சிக்கல்களை சமாளிக்கும் போது, மனிதர்கள் தங்களின் நிதிநிலையைத் தக்கவைத்துக்கொள்வதற்கு அவசியமான உளவியல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. முதலீட்டின் வெற்றி அதிகமாக நிதி அறிவு அல்லது புது தொழில்நுட்பங்களைப் பற்றிய அறிவில் இல்லை, ஆனால் நிதி மேம்பாட்டின் மனநிலையில் உள்ளது என்பதை புத்தகம் விளக்குகிறது. 3. **சூழ்நிலைகளை அடிப்படையாகக் கொண்டது**: பல மனிதர்கள் தங்களின் வாழ்க்கை சூழ்நிலைகளின் அடிப்படையில் பணத்துடன் தொடர்புடைய முடிவுகளை எடுப்பார்கள். அதாவது, ஒரு பெரிய முதலீட்டாளர் அல்லது சாதாரண தொழிலாளி பணம் பற்றிய அதே அணுகுமுறைகளைப் பயன்படுத்த மாட்டார் என்பதைக் காட்டுகிறது. ### புத்தகத்தில் கூறப்பட்ட முக்கிய விடயங்கள்: 1. **பணம் சம்பந்தமான அறிவு என்பது தகுதி அல்ல**: - பணம் சம்பந்தமாக அறிவு கொண்டிருப்பது மட்டுமே போதாது; நம் தனிப்பட்ட மனநிலை மற்றும் பழக்கவழக்கங்கள் அதிக முக்கியத்துவம் கொண்டவை. ஒரே மாதிரியான பண சிக்கலை, பலரும் வெவ்வேறு மனநிலைகளின் அடிப்படையில் வெற்றிகரமாக அல்லது தோல்வியடையலாம் என்பதைக் குறிப்பதாக இருக்கிறது. 2. **அமைதியாக பணம் சேர்ப்பது**: - பணம் சம்பந்தமான நம் மனநிலைகளில் நிதானமாக செயல்படுவது மிக முக்கியம். வெற்றியடைய, மிகப்பெரிய சவால்களைத் தாங்கிக் கொள்ள வேண்டியிருக்கும். பணம் சம்பாதிப்பதற்கும் பணத்தைப் பாதுகாப்பதற்கும் மனநிலையிலும் உத்தியோகபூர்வமான சிந்தனையிலும் பரிமாணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். 3. **சில நேரங்களில் தவறான முடிவுகள் கூட நல்லது**: - பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, நீங்கள் 100% சரியான முடிவுகளை எடுப்பது அவசியமில்லை. சில சிறு தவறுகளைச் செய்தாலும் கூட, முக்கியமான சில சிறந்த முடிவுகள் பல வருடங்களுக்குப் பெரும் ஆதாயத்தை தரும். 4. **நீண்டகால பார்வை**: - பணம் சம்பந்தமான முடிவுகளில் நீண்டகால பார்வையை நிலைநிறுத்துவது முக்கியம். பலருக்கும் எளிதாகவே பணத்தை செலவழித்துவிடுவது வரும், ஆனால் நீண்டகாலம் பொறுமையுடன் செயல்படுபவர்களே அதிக பணவீச்சுடன் வாழ முடியும். 5. **விதிகளின் அடிப்படையில் வாழ்தல்**: - மனிதர்கள் பொதுவாக அவர்கள் வாழும் சூழலில் எளிதான வழிகளை தேடுகின்றனர். ஆனால் சாத்தியமான சிக்கல்களை கணக்கில் எடுத்துக்கொண்டு பூரணமாக முன்னேற வேண்டியது முக்கியம். மோர்கன் ஹெளஸ்ஸெல் எழுதிய **"The Psychology of Money"** (பணம் சார்ந்த உளவியல்) உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான புத்தகமாக மாறியதற்கான பல்வேறு காரணங்கள் உள்ளன. இந்த புத்தகம் நிதி சந்தை, முதலீட்டு உலகம், மற்றும் தனிப்பட்ட பண மேலாண்மையை பற்றி வழக்கமான டெக்னிகல் தரவுகளின் அடிப்படையிலான பேச்சுக்களை மட்டுமல்லாது, மனித மனநிலைகளின் தாக்கத்தை வெளிப்படையாக ஆராய்ந்து கொண்டாடுகிறது. இது அன்றாட வாழ்க்கையின் சாத்தியமான நிதி சிக்கல்களை மனநிலைகளின் அடிப்படையில் எளிமையாக புரிந்துகொள்ள உதவுகிறது. ### 1. **புதுமையான கண்ணோட்டம்**: நிதி புத்தகங்களில் பொதுவாக கட்டமைக்கப்பட்ட நிதி கற்றல் மற்றும் டெக்னிக்கல் அனலிசிஸ்கள் தரப்படும். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் நிதியியல் கட்டுரைகளை தாண்டி, மனித உணர்ச்சிகள், பணம் பற்றிய மனநிலைகள், தனிப்பட்ட அனுபவங்கள், மற்றும் சிறிய முடிவுகள் கூட நிதி வெற்றிக்கான அடிப்படையை அமைக்கும் என்பதற்கான சிந்தனைகளை முன்வைக்கிறது. இது வாசகர்களை இலகுவாகக் கவரும். ### 2. **சாத்தியமான பாடங்கள்**: புத்தகத்தில் வழங்கப்பட்ட அனுபவங்கள் மற்றும் உதாரணங்கள் அனைத்தும் மிகவும் எளிமையான, பரவலான மற்றும் அனைவரும் அணுகக்கூடியவையாக அமைந்துள்ளது. அதாவது, பணம் சம்பந்தமான முடிவுகளை எடுக்கும்போது சிக்கலான நிதி கொள்கைகளைப் பற்றி கவலைப்படாமல், எளிய நிதி ஞானத்தையும் உளவியல் அடிப்படையிலும் முடிவுகளை எடுப்பதற்கான வழிமுறைகளை விவரிக்கிறது. - உதாரணமாக, "பணம் சம்பாதிப்பதில் வெற்றி என்பது சிறந்த திட்டத்தை அமைப்பதில் இல்லை, ஆனால் சிறந்த சீரான பழக்கங்களை உருவாக்குவதில் இருக்கிறது" என்ற கருத்து மிகுந்த தாக்கத்தை உருவாக்குகிறது. ### 3. **தனிப்பட்ட அனுபவங்கள்**: மணிதர்களின் பணவியல் அசைவுகளை கண்ணியமிக்க முறையில் ஆராய்ந்துள்ளது. எல்லோரும் தங்கள் சொந்த பணமுடிவுகளைத் தங்கள் வாழ்க்கை அனுபவங்களின் அடிப்படையில் எடுப்பார்கள் என்பதைக் கூறுவதன் மூலம் இது நிதி பற்றி பேசும் வழக்கமான பாணியை மாற்றுகிறது. இது பலரை, குறிப்பாக அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களை மீண்டும் ஆராய்ந்து பார்ப்பதற்கான வாய்ப்பை வழங்குகிறது. ### 4. **நீதிகளை மீறிய அனுபவம்**: சாதாரணமாக, நிதி உலகத்தில் சில பல விதிகள் இருந்தாலும், அவற்றை மாற்றியமைக்கவும், வெவ்வேறு நேரங்களில் வெவ்வேறு விதிகளை பயன்படுத்தவும் மனிதர்கள் தங்கள் மனநிலைகளின்பேரில் வெற்றி பெறுகிறார்கள் என்பதையும் புத்தகம் எடுத்துக்காட்டுகிறது. இது நிதியியல் வல்லுநர்கள் இடையே கூட ஒரு சிக்கலான விவாதமாக மாறுகிறது, ஏனெனில் பலரது அனுபவங்களில் சில நேரங்களில் நிதி தரவுகளுக்குப் பதிலாக அவர்களது உளவியல் செயல்பாடுகளே வெற்றி பெற்றிருக்கின்றன. ### 5. **எல்லோரும் அணுகக்கூடியது**: நிதி சார்ந்த புத்தகங்கள் பெரும்பாலும் நிதி வல்லுநர்கள் அல்லது பண மேலாண்மை விருப்பம் கொண்டவர்கள் மட்டுமே வாசிக்கிற புத்தகமாக இருப்பது வழக்கம். ஆனால், **"The Psychology of Money"** புத்தகம் மிகவும் எளிமையான மொழியில் எழுதப்பட்டுள்ளது. இது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை ஈர்க்கும் வகையில் உள்ளது, தொடக்க நிலை முதலீட்டாளர்களிலிருந்து பெரிய முதலீட்டாளர்களை வரை தங்கள் பணம் சம்பந்தமான மனநிலைகளைத் திருத்திக் கொள்ளும் வகையில் மிகவும் சுலபமாக கற்றுத் தருகிறது. ### 6. **முடிவுகள் எடுக்கும் முறை**: மிக முக்கியமான ஒரு விஷயம், புத்தகம் உணர்ச்சிகள் மற்றும் மனித இயல்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு வரையறுக்கிறது. ஒவ்வொருவரும் பணம் சம்பந்தமாக எடுக்கும் முடிவுகள் அவர்களது தனிப்பட்ட மனநிலையினை பிரதிபலிக்கும். இது பணம் சம்பந்தமாக அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறை அல்லது கோட்பாடு இல்லாமல், தனிநபரின் தனித்தன்மையான அனுபவங்களை நிதிக்கான ஒரு வழிகாட்டியாக பார்ப்பது. இதனால் அனைவருக்கும் இந்த புத்தகம் ஒரு தனிப்பட்ட பரிசோதனையாக மாறுகிறது. ### 7. **நேர்த்தியான பரிந்துரைகள்**: மற்ற நிதி புத்தகங்களை போலவே இது நேரடியான பின்தொடரக்கூடிய வினைமுறைகளை நிதானமாக முன்வைக்காது. மாறாக, இது வாசகர்களை தங்கள் சொந்த முடிவுகளை தங்கள் பண நிர்வாகத்தில் எடுப்பதற்கான சிந்தனைகளை வளர்க்கும் வகையில் அமைந்துள்ளது. இவ்வகை மாற்று பார்வையால் புத்தகம் உலகம் முழுவதும் அதிகம் பேசப்பட்டு வருகிறது. ### **விமர்சன நோக்கம்**: முன்னே குறிப்பிட்டவை அனைத்தும் புத்தகத்தின் சிறப்பான அம்சங்கள். ஆனால், சில விமர்சனங்களும் இவ்வினையில் இருக்கின்றன. 1. **சில பொதுவான அம்சங்கள்**: புத்தகத்தில் கூறப்படும் சில கருத்துகள் ஏற்கனவே பல புத்தகங்களில் அல்லது இணையதளங்களில் வெளிப்படுத்தப்பட்டதுபோல தென்படும். இவை அனைவருக்கும் புதிதாகத் தோன்றாமல், சிலருக்கு மிகவும் அடிப்படை தகவல்களாக உணரப்படலாம். 2. **அழுத்தமான உதவிக்குறிப்புகள் இல்லை**: புத்தகத்தின் பல்வேறு சுவாரஸ்யமான கூறுகள் இருந்தாலும், இது வாசகர்களுக்கு நேரடி வழிகாட்டுதல்களைத் தரவில்லை. அதாவது, “இந்த வழியில் செயல்படு” என்ற அளவில் தெளிவான பரிந்துரைகள் இல்லை. ### **முடிவுரை**: **"The Psychology of Money"** புத்தகம் உலகம் முழுவதும் பேசப்படும் முக்கியமான நூலாக மாறியுள்ளதற்கு அதன் மனித மனநிலைகளை பற்றிய கண்ணோட்டமே முக்கியக் காரணமாகும். இது வாசகர்களை அவர்களுடைய நிதி நிலைப்பாடுகளைப் பற்றி சிந்திக்க வைக்கும் ஒரு புத்தகம். https://www.facebook.com/photo?fbid=122121216038460178&set=a.1220999460264601781 point- ஓய்வை அறிவித்தார் ரஃபேல் நடால்
1 pointபிரபல டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ரஃபேல் நடால் பிரபல ஸ்பெயின் டென்னிஸ் வீரர் ஆவார். இவர் இதுவரை 22 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். இந்த சூழலில், இவர் அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அடுத்த மாதம் ஸ்பெயினில் நடைபெறும், டேவிஸ் டென்னிஸ் தொடர் போட்டிதான் இவர் விளையாடும் கடைசி போட்டியாகும். இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ரஃபேல் நடால் பேசியதாவது, “நான் டென்னிஸ் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றுக்கொள்கிறேன். கடைசி இரண்டு வருடம் மிகவும் கடினமாகவே இருந்தது. என்னால் இதற்கு மேல் விளையாட முடியாது என தோன்றியது. அனைவரும் ஒரு நாள் இந்த முடிவை எடுக்கதான் வேண்டும். இந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாகதான் இருந்தது. இந்த வாழ்க்கையில் அனைத்திற்கும் தொடக்கமும் முடிவும் உள்ளது. என்னுடைய இறுதி போட்டியை நான் என்னுடைய நாட்டிற்காக டேவிஸ் கோப்பைக்காக விளையாடவுள்ளேன். அனைவருக்கும் நன்றி. என்னுடைய சக வீரர்கள், என்னுடைய அணி, அம்மா, அப்பா, மாமா, என்னுடைய மனைவி கடைசியாக என்னுடைய ரசிகர்களாகிய உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.” இவ்வாறு டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/3105801 point- கட்டபொம்மன் ஒரு தெலுங்கர், கொள்ளைக்காரர் என்கிற வாதங்கள் சரியா? வரலாற்று திரிபுகளும் உண்மைகளும்
1 pointஎன்னது? "நாங்கள் மலையாளிகளா?" தொலைந்தீர்கள் நீங்கள்😂! அமுக்க வெடியில் (pressure mine) கால் வைத்து விட்டீர்கள், இனி காலை எடுக்காமல் அப்படியே அசையாமல் நில்லுங்கள்!1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கந்தப்பு ரொம்ப பாராட்டுக்கள். கடுமையான பரீட்சை என்றாலும் எல்லோருடனும் சேர்ந்து கலந்து கொள்வேன். யாரை? அப்போ நீங்க தான் வெற்றியாளர்.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி ஆரம்பித்து விட்டது. எமது விளம்பர அனுசரணையாளர் @வீரப் பையன்26 அவர்களை உடனடியாக மேடைக்கு வரும்படி அழைக்கின்றோம். 😂1 point- வடக்கு - கிழக்கில் 15ஆசனங்கள் உறுதி- சுமந்திரன் தெரிவிப்பு!
விசுகர், கனவு காண்பதற்கும் ஒரு நியாயம் வேண்டாமோ.... சுமந்திரன் பாரளுமன்றம் போறதுக்கே பெரிய இழுபறியாய் கிடக்கு, இதுக்குள்ளை... 15 விளக்குமாத்தையும் காவிக் கொண்டு போற பிளான் இருக்குதாம்.1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
எனக்கும் தந்தை செல்வாவின் பேரன் என்று இதைப் பார்த்த பின் தான் தெரியவந்தது. ஆனால், தோழர் பாலனின் பதிவின் நோக்கங்கள்: சுமந்திரனை இந்தியாவின் சொல்கேட்டு ஆடுபவராகக் காட்டுவதும், "சந்திரஹாசன் புலி எதிர்ப்பாளர்" என்று நினைவுறுத்தி சுமந்திரன் புலிநீக்கம் செய்கிறார் என்று காட்டுவதும். தந்தை செல்வா, சந்திரஹாசன், இப்போது இவர்- மூவரும் வாழ்ந்த காலங்கள் வேறு. அரசியல் படுகொலைகள் மலிந்த காலத்தில் சந்திரஹாசன் ஆயுதப் போராட்டத்தை வெறுத்தது அந்தக் காலத்தில் வாழ்ந்த பலரின் சாதாரண மனநிலை. அவர் செல்வநாயகத்தின் மகன் என்பதால் அவர் கருத்து பொதுவெளியில் கவனம் பெற்றது. இப்போது அரசியல் படுகொலையும் இல்லை, அதைச் செய்வோரும் இல்லை என்ற காலத்தில் பேரன் எதைக் கொண்டுவருகிறார் என்று தான் வாக்காளர்கள் பார்க்க வேண்டும். ஆனால், தோழர் பாலன் போன்ற தேசிக்காய்கள் "குத்தி முறிந்து" தந்தையின் மீதான எதிர்ப்பை இவர் மீதும், நாசூக்காக சுமந்திரன் மீதும் தூண்டி விடுவர். பட்டாசு றெஜிமென்ற் அதை எல்லா இடமும் பரப்பித் திரியும்😂!1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
சிறி அண்ணா,தமிழ்நாட்டுத்தேர்தல் போட்டியில்நான் கலந்துகொள்ளவில்லை. இந்த முறை கலந்து கொள்ளுறம் தட்டுறம் தூக்குறம்1 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
செலஸ்ரீன் என்பது தமிழ் கிறிஸ்தவ பெயர். ஜனநாயக தேசிய கூட்டணி, அங்கயன் இராமநாதன். செலஸ் ரீன்1 point- பாகிஸ்தான் இங்கிலாந்து டெஸ்ட் தொடர்
பாக்கிஸ்தான் ரென்சன் இல்லாம இரண்டாவது மச்சை வென்று விட்டினம்...................................................1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
யாழ். கள தேர்தல் போட்டியை ஆரம்பித்து வைத்தமைக்கு மிக்க நன்றி கந்தப்பு. 👍🏽 நல்ல கேள்விகள். நன்றாக யோசித்து பதில் சொல்ல வேண்டும். நிச்சயம் நானும் போட்டியில் கலந்து கொள்வேன். மற்றவர்களையும் போட்டியில் கலந்து கொள்ள ஊக்கப் படுத்துகின்றேன். மீண்டும் நன்றிகள் கந்தப்பு. 🙏1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
தமிழர்களுக்கு தனித்துவம் தேவையில்லை என கூறுபவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை தமிழர் தரப்பிலும் உண்டு ...சிங்கள தரப்பிலும் உண்டு இதன் விகிதாசாரம் காலத்துக்கு காலம் மாறு படுகின்றது..வெள்ளைகள்(துதரக அதிகாரிகள்) தங்கள் நலன் கருதி சில கருத்துக்களை வெளியிடுதுகள் அல்லோ அதை பார்த்திட்டு இந்த புலம்பெயர்ஸும் ஏக்க ராஜ்ய கொண்சப்ட்டுக்குள்ள மூக்கை நுழைக்கினம்... எது எப்படியோ அனுராவின் ஆட்சி 5 வருடங்களின் பின் நிலைத்து நிற்காவிடில் என்ன நடக்கும் தமிழர் நிலை?என சிந்திக்க தவறுகின்றனர் சில எம்மவர்கள்... சிறிலங்காவில் ஒர் ஸ்தீரனமான ஆட்சி வேணும் என இன்றைய வெளிநாட்டு சக்திகள் விரும்புகின்றது..அது அணுராவுக்கு ஒர் வரப்பிரசாதமாகிவிட்டது...அமெரிக்காவுக்கு நிரந்தர தளம் இந்து சமுத்திரத்தில் தேவைப்படுகிறது .....1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
அதுக்காக ஜேர்மனி கள உறுப்பினர்கள் எல்லோரும் சேர்ந்து தீக்குளித்து விடாதீர்கள்.1 point- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
இந்தியா கிரிக்கெட்டில் சாதித்துக் கொண்டிருக்கின்றது என்ற தலைப்பில் ஒரு கட்டுரை போன வாரம் அல்லது அதற்கு முதல் ஏதோ ஒரு பக்கத்தில் இருந்தது. ம்ம்ம்...........இதுவும் ஒரு சாதனை தான்....... மழை பெய்து முதல் நாள் குழம்பி போட்டி தடைப்பட்டுப் போனால், அடுத்த நாள் துடுப்பாட்டத்தை தெரிவு செய்யவே கூடாது என்ற புள்ளிவிபரத்தை இன்று விலாவாரியாக உதாரணங்களுடன் எழுதுகின்றார்கள். இதையே ஒரு நாளுக்கு முன்னால் இந்திய அணிக்கு சொல்வதற்கு ஒரு ஆள் கூட இல்லாமல் போய் விட்டது இந்தப் பெரிய இந்தியாவில்..........🫣.1 point- இளையோரை நாடாளுமன்றத்துக்கு அனுப்ப தமிழ் மக்கள் புரட்சியை ஏற்படுத்த வேண்டும் - மணிவண்ணன்
மணிவண்ணன் பதவிக்காக யார்காலையும் பிடிப்பார். கட்சித்தலைமையை மீறி ஈபிடிபியுடன் நகூட்டுச்சேர்ந்து மாநகரசபை மமேயரான கதை எல்லோருக்கும் தெரியும்1 point- ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
சில புலம் பெயர் பென்சனியர் சொல்லுயினம் இவ்வளவு நாளும் சிங்களவர்களுடன் பழகவில்லை..."உங்களது யூ டியுப்பை பார்த்து போய் பழகினேன் அவர்களை போல தேவலோக மனிதர்கள் பூமியில் இல்லை" என செர்டிவிக்கேட் கொடுக்கினம் (இளனீர்,கவுன்கொண்டை ,இடியப்ப ஜோதி எல்லாம் கொடுத்தவையலாம்.. அப்படியே அவர் இன்னுமோரு டயலக் விட்டார்...சிறிலங்காவில் தமிழர் என்ற தனித்துவத்துடன் வாழ நினைக்க கூடாதாம் ...அப்படி நினைத்தால் தமிழர்கள் அழிந்து விடுவார்களாம்... இதிலிருந்து அவரின் கருத்துருவாக்க மையம் யாருடையது என்பது புரிகின்றதல்லவா? இன்னும் சில புலம்பெயர்ஸ்...(மருத்துவர்கள்,பொரியியளாலர்கள்...சிலர் மட்டுமே)இவ்வளவு காலமும் அரசியல் பேசாமல் இப்ப அவர்களது வட்சப் குறூப்பில் சிங்கள தோழர்கள் அனுப்பும் கிளிப்புக்களை வொர்ட்பண்ணி கொண்டிருக்கினம் ....(முக்கியமாக தமிழ் தேசிய விரோத கருத்துக்களை)1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
தந்தை செல்வா அவர்களின் ஆத்மா இந்தப் புகைப்படத்தையும், இப்ப உள்ள டமிழரசுக் கட்சியையும் பார்க்க நேர்ந்தால், அவரது ஆத்மாவும் தற்கொலை செய்துகொள்ளும். பெற்றோரது பெயரைக் கெடுக்கவென்றே.. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி யாழிலே ''டமிழ்,டமிழ்'' என்று வாசித்து அப்படியே கை தட்டிவிட்டுட்டுது. அது 'டமிழரசு, இல்லை தமிழரசு என்று வாசியுங்கள் உறவுகளே. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
உங்களது கருத்துகள் தான் குழந்தைப்பிள்ளைத்தானமாக இருக்கிறது ஆனால் நீங்கள் குழந்தை இல்லை1 point- ஊடகவியலாளர் தராகி சிவராம் படுகொலையுடன் புளொட் தொடர்பா..! மறுக்கும் சித்தார்த்தன்
போராட்ட பின்னனி கொண்ட மொழித்திறன் உடைய,எழுத்தாளன் .... ஆங்கில பத்திரிகைக்கு எழுதும் பொழுது அதை தூதரக அதிகாரிகள் வாசிப்பார்கள்... ஜோசப் பரராஜ சிங்கம் ,ரவிராஜ் போன்றவ்ர்கள் கொலை செய்தமைக்கும் இதே காரணம் தான் ...அவர்கள் ஏனைய பா.உ. (முன்னாள் ஆயுதமேந்திய் பா.உ உட்பட ) அரசுடன் சேர்ந்து அரசுக்கு ஆமா போட்டு பேசிகொண்டிருந்தமையால் உயிர் தப்பி வாழ்கின்றனர்...1 point- இந்தியா நியூஸிலாந்து டெஸ்ட் தொடர்
1 point- மேற்கிந்தியத் தீவுகள் இலங்கை கிரிக்கெட் தொடர்
தெடரை வென்றது இலங்கை அணி இலங்கை அணிக்கு வாழ்த்துக்கள்🙏😍................................1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
கபிதான் நானும் செய்திகளையும் முகப்புத்தகத்தில் இருந்தும் பிடித்ததை இணைக்கிறேன். நீங்களும் நல்லது கெட்டதை பிடித்ததை இணைக்கலாம். வாசித்து முடிவெடுப்பது வாசகர்களே. செய்தி எனக்கு பிடிக்கவில்லை என்பதற்காக பதிந்தவர்களை ஒருபோதும் குறை கூறுவதில்லை.1 point- "கல்லூரிக் காதல்"
1 pointபள்ளிக் காலங்களில் எத்தனையோ இளசுகளின் மனத்தில் ஆயிரம் காதல் பூத்திருக்கும் . போராடி வென்றதென்னவோ ஒரு சில தான். யாழ்ப்பாண கட்டுப்பாடான சமுதாய அமைப்பு , அந்தஸ்த்து வேற்றுமை என்பன மிக இறுக்கமாக இருந்த காலம் சுய ஒழுக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க படடது .1 point- தந்தை செல்வாவின் பேரன்... தமிழரசு கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிடுகின்றார்.
சந்திரகாசன் பற்றி யாருக்கும் நல்ல அபிப்பிராயம் இல்லை. ஆனால் அவரது மகன்பற்றி இதுவரை வெளஜவந்ததாக தெரியவில்லை. வரும்போது தெரிந்து கொள்வோம். சிறி தானாக எதுவும் எழுதலையே. செய்திகளாக வருவதை இணைக்கிறார்.1 point- வடக்கு, கிழக்கு மாகாணங்களில் எத்தனை கட்சிகள் போட்டியிடுகின்றன என்று தெரியுமா?
மேலே உள்ள உள்ள படத்தில் சுமந்திரனுக்கு அருகில் கறுப்பு வட்டத்தில் இருப்பவர் யார் என்று தெரிகிறதா? இவர் யாழ் மாவட்ட தமிழரசுக்கட்சி வேட்பாளர்களில் ஒருவராகிய இளங்கோவன். இவர் தந்தை செல்வாவின் பேரன் என்பதால் இவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறுகின்றனர். 1977ல் தந்தை செல்வாவின் மகன் சந்திரகாசன் வாய்ப்பு கேட்டபோது வாரிசு அரசியலுக்கு இடமில்லை என மறுக்கப்பட்டது. இப்போது அதே சந்திரகாசனின் மகனுக்கு தந்தை செல்வாவின் பேரன் என்று வழங்குவது “வாரிசு அரசியல்” இல்லையா? தந்தை செல்வாவின் பேரன் என்பதைவிட வேறு என்ன தகுதி இவருக்கு இருக்கிறது? இவர் தொண்டு நிறுவனம் மூலம் இந்தியாவில் அகதிகளுக்கு உதவி செய்து வருகிறாராம். சரி. அகதிகளுக்கு என்ன உதவி செய்துள்ளார் என்று கேட்டால் பதில் இல்லை. அகதிகளுக்கு இதுவரை ஏன் இந்திய குடியுரிமை பெற்றுக்கொடுக்கவில்லை என்று கேட்டால் இலங்கையில் தமிழர் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே அகதிகளை திருப்பி அழைத்து வர வேண்டும் என்கின்றனர். சரி அகதிகளை ஏன் இன்னும் திருப்பி அழைத்து வரவில்லை என்று கேட்டால் இலங்கையில் இன்னும் சுமூக நிலை ஏற்படவில்லை என்கின்றனர். அதாவது அகதிகள் தொடர்ந்தும் அகதிகளாகவே இருக்க வேண்டும். இவர்கள் அதை காரணம் காட்டி தொண்டு நிறுவனம் நடத்தி தங்கள் வயிற்றை நிரப்ப வேண்டும். தமிழ்நாட்டில் போராளிகளால் ஆபத்து என்று காரணம் காட்டி நீண்ட காலம் பொலிஸ் காவல் பெற்ற தலைவர் என்ற பெருமை பெற்றவர் இவரின் தந்தை சந்திரகாசன். சுமந்திரனுக்கு வேண்டப்பட்டவர், இந்திய தூதரின் சிபாரிசு பெற்றவர் என்பதற்காக ஒருவரை தமது பிரதிநிதியாக தமிழ் மக்கள் தெரிவு செய்ய வேண்டுமா? தமிழ் மக்கள் சிந்திக்க வேண்டும். தோழர் பாலன்1 point- வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
ரில்வினின் கட்சி, தமிழர்களுக்கு அரசியல் தீர்வாக எதையும் தருவோம் என்று ஒரு போதும் சொன்னது இல்லை. அத்துடன் அது அதிகாரபரவலாக்கத்துக்கு என்றுமே எதிர்ப்பை காட்டிக் கொள்ளும் கட்சி, எனவே ரில்வினின் இந்த பேச்சு ஒன்றும் அதிசயமும் இல்லை, அதிர்ச்சிக்குரியதும் இல்லை. ஆனால் ரில்வின் கூறிய வடக்கைப் பற்றிய விடயங்கள் முற்றிலும் உண்மையானவை. இங்கு எவராலும் அவற்றை மறுக்க முடியாது. ஏ9 வீதியின் ஒரு பக்கங்களையும் கடந்து உள்ளே சென்றால் பார்க்க முடியும் வடக்கின் வறுமையை. அதே போன்று யாழ்பாணத்தில் நாகர்கோவில் மற்றும் அதை அண்டிய பகுதிகளில் கரும்பலகைகள் கூட இல்லாத பாடசாலைகளை காண முடியும். இந்த 15 வருடங்களில் தமிழ் கட்சிகள் இந்த பிரதேசங்களின் முன்னேற்றத்திற்காக எதையும் செய்திருக்கவில்லை. வெறுமனே தமிழ் தேசியம், சுய நிர்ணயம், தாயகம் என்று தேர்தல் வேளைகளிலும், பத்திரிகை பேட்டிகளிலும் வாய் உளைய உரக்க பேசி மக்களை முட்டாள்களாக ஆக்கியதை தவிர வேறு எதையும் இவர்கள் செய்ய எத்தனித்ததும் இல்லை. புலம்பெயர் தமிழ் தேசிய அமைப்புகளுக்கும் இது பற்றிய எந்த அக்கறையும் இல்லை. தம்மை பிரமுகர்களாக காட்டிக் கொள்வதற்கும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும் மட்டுமே இவ் அமைப்புகள் உள்ளன. ரில்வினும் அவர் கட்சியும், ஆட்சியும் அவர் குறிப்பிட்ட பிரதேசங்களின், சமூகங்களின் பொருளாதார நிலையை மாற்ற ஏதேனும் முயற்சிகள் செய்து இப் பகுதி மக்களை முன்னேறினால் மிக்க மகிழ்ச்சி.1 point- முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும்.
முனியம்மாவும்... வீட்டுக்கார முதலாளியும். ''புத்தம் புது "மெர்சிடஸ் பென்ஸ்" வாகனம் விலை ரூ 10,000..'' (Only ten thousand Rupees) பத்தாயிரம் ரூபாய்க்கு முட்டாள் கூட அவ் வாகனத்தை விற்க மாட்டான் என்பதால் யாரும் அதில் குறிப்பிட்ட முகவரியை அணுகவில்லை. ஒருவர் மட்டும் "வந்தால் மலை" என்ற முடிவோடு அணுகினார். விளம்பரம் செய்த பெண்மணி முதலில் வாகனத்தை ஒட்டிப் பார்க்கச் சொன்னாள். ஓட்டிப் பார்த்ததில் மிகுந்த திருப்தியாக இருந்தது. வெறும் 500 கிலோ மீட்டர் மட்டுமே இதுவரை ஓடியிருந்ததால் புது வாகனம் போலவே இருந்தது. பணத்தைக் கொடுத்துவிட்டு ஆவணம்,கார் முதலியவற்றைப் பெற்றுக் கொண்டு கிளம்பும்போது ஆர்வ மிகுதியால் வாங்கியவர் கேட்டார்.. "அம்மணி.. இவ்வளவு விலை உயர்ந்த காரை வெறும் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்றது ஏன் என்று தெரிந்து கொள்ளலாமா..?" அவள் ஒன்றும் பேசாமல் ஒரு கடிதத்தை எடுத்துக் காட்டினாள்.. அது அவள் கணவர், வேலைக்காரியுடன் வீட்டைவிட்டு எங்கோ ஓடும்போது எழுதி வைத்துவிட்டுச் சென்ற கடிதம்...... "அன்பே என்னை மன்னித்துக் கொள். இவ்வளவு நாள் என்னுடன் நீ வாழ்ந்தமைக்கு.. நம் வீட்டை நீ எடுத்துக் கொள். நானும் முனியம்மாவும் புது வாழ்க்கை துவக்க 7 லட்சம் பெறுமானமுள்ள நம் "மெர்சிடஸ் பென்ஸ்" காரை உடனடியாக என்ன விலைக்காவது விற்று... பணத்தை என் அக்கவுன்ட்டில் போட்டு விடு ...! 😂 🤣 Nicole Santana1 point - வடக்கு மக்களுக்கு அதிகாரப்பகிர்வு அவசியமாக இல்லை; பொருளாதார பிரச்சினையே இருக்கிறது என்கிறார் ரில்வின் சில்வா
Important Information
By using this site, you agree to our Terms of Use.