Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    22
    Points
    88820
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    19667
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    12788
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    10
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/17/24 in all areas

  1. வினா இலக்கங்கள் 5, 24, 26 5 ) எல்லா போட்டியாளர்களும் சிறிதரன் அவர்கள் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள். 24) 24 போட்டியாளர்கள் சாணக்கியன் வெற்றி பெறுவார் என கணித்திருக்கிறார்கள் 26) குகதாசன் வெற்றி பெறுவார் என சரியாக சொன்னவர்கள் 22 போட்டியாளர்கள். 1)பிரபா - 39 புள்ளிகள் 2)வீரப்பையன் - 34 புள்ளிகள் 3) வாதவூரான் - 34 புள்ளிகள் 4) வாலி - 34 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 33 புள்ளிகள் 6) கந்தையா 57 - 32 புள்ளிகள் 7) Alvayan - 32 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 32 புள்ளிகள் 9) நிழலி - 32 புள்ளிகள் 10) ரசோதரன் - 31 புள்ளிகள் 11) சுவைபிரியன் - 30புள்ளிகள் 12) ஈழப்பிரியன் - 30 புள்ளிகள் 13)நூணாவிலான் - 30 புள்ளிகள் 14)வில்லவன் - 30 புள்ளிகள் 15) நிலாமதி - 30 புள்ளிகள் 16)கிருபன் - 29 புள்ளிகள் 17)goshan_che - 29 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 28 புள்ளிகள் 19) வாத்தியார் - 26 புள்ளிகள் 20) புலவர் - 26 புள்ளிகள் 21)புத்தன் - 26 புள்ளிகள் 22)சுவி - 23 புள்ளிகள் 23) அகத்தியன் - 21 புள்ளிகள் 24) குமாரசாமி - 21 புள்ளிகள் 25) தமிழன்பன் - 16 புள்ளிகள் 26) வசி - 15 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 5, 7, 8,10 - 13, 16 - 18, 22, 24, 26 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 59)
  2. ஆடத்தெரியாதவள் மேடை சரியில்லை என்ற கணக்கு.. வடக்கு தமிழ் மக்கள் சரியாத்தான் வாக்களிச்சிருக்கினம். 1. தமிழ் தேசிய ஒற்றுமையை சிதைப்பவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவது. 2. மக்களின் உண்மையான கஸ்டத்தை உணர்ந்து குரல்கொடுப்பவர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பது. 3. எனியும் ஊழல்வாதிகளை அண்டிப்பிழைக்கும் ஒட்டுக்குழுக்களை.. ஒட்டுண்ணிகளை நம்பி வேலையில்லை. அவர்கள் தம் சொந்த சுயலாபத்தையே நோக்காகக் கொண்டிருக்கின்றனர். மக்கள் அனுர கட்சியின் அலையோடு போயின் அனுரவுக்கு வாக்களித்திருப்பர். ஆனால் வடக்கு கிழக்கு அனுரவுக்கு குறைந்த அளவே வாக்களிச்சிருக்குது.
  3. யாழ்கள அனுர பிரிகேட் மைண்ட்வாய்ஸ்: சிங்கள மக்கள் திருந்தி விட்டார்கள். காணி, பொலிஸ், நிதி, வரி, மத ஸ்தாபனம் நிறுவும் அதிகாரமுடைய ஒரு மாகாண சபையை அனுர தருவார் சிங்கள மக்களும் அதை ஏற்க போகிறார்கள்.
  4. சுவைப்பிரியன் பிரதேச வாதத்தை மனதில் வைத்து எழுதியிருப்பார் என நினைக்கவில்லை. இந்த தேசியப் பட்டியல் ஆசனம்... மட்டக்களப்பு மக்கள் போட்ட வாக்குகளால் தமிழரசு கட்சிக்கு கிடைத்தது. அதுதான், சுவைப்பிரியன்... இது மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தெரியுமோ என்று கேட்டவர் என நினைக்கின்றேன்.
  5. யாராவது... வேலியில் போகின்ற ஓணானை பிடித்து, வேட்டிக்குள் விடுவார்களா. 😂
  6. தனி தனியா கூட்டம் போட்டு கதைக்காமல் கஜேஸ், அருச்சுனா, மான், மீன், பாம்பு, பல்லி என தமிழரசு தவிர் அனைத்து தமிழ் தேசிய சக்திகளையும் ஒரு அணியில் திரட்டும் வேலையில் இறங்குங்கோ. மயூரன் போல புதிய முகங்களை முதல்வர் வேட்பாளர் ஆக்குங்கோ. 60 க்கு மேல் ஒருத்தருக்கும் சீட் கொடாதேங்கோ. மக்கள் மீள வருவர்கள்.
  7. ஆனால் அதை செய்ததில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இணையாக நம்மவர்களும் செய்தார்கள் என்பதே உண்மை. உங்களை போல் நியாயமாக ஆதங்கப்படுவோர் ஒரு சிலரே. தமது தேசிய வியாபாரம் படுத்துவிடும் என்றே பல தேசிய வீரர்கள் பதட்டப்படுவதை ஆத்திரப்படுவதையும் முக நூல்களிலும் யூருயூப் காணொளிகளிலும் சமீப காலமாக காண முடிகிறது. இந்த ஆத்திரத்தை தீர்கக கிடைத்த வடிகால் தான் சுமந்திரன். சுமந்திரன் என்பவர் தமிழ் தேசிய போராட்ட நீண்ட வரலாற்றில் அனைத்தும் கிட்டைத்தட்ட (😂) இல்லை இல்லை கிட்டத்தட்ட பாழாகிய பின்னர் வந்த ஒரு சிறிய பாத்திரம் மட்டுமே.
  8. சுமந்திரன்... கடைசி நிமிடம் மட்டும், பின் கதவால் பாராளுமன்றம் போக போராடிப் பார்த்தார். ஸ்ரீதரன் கடுமையாக நின்று அதனை தடுத்து நிறுத்தியதை அடுத்து, சுமந்திரனின் ஆள்.. சத்தியலிங்கம் தெரிவு செய்யப் பட்டுள்ளார். சுமந்திரனை பாராளுமன்றத்துக்குள் நுழைய விடாமல் தடுத்ததே பெரிய விடயம். அப்பாடா... இப்ப தான், நிம்மதி.
  9. இந்த கூத்துக்களை பார்த்தால் அடுத்த தேர்தலில் மட்டக்களப்பும் சிங்களவனிடம் பறி போகும். இந்த கேவலங்களுடன் ஒப்பிடும்போது சிங்களவர்களுக்கு என்ன குறை என்று சொல்லி இவர்கள் மேல் உள்ள வெறுப்பிலேயே தமிழர்கள் சிங்களவர்களுடன் ஒட்டியுறவாட போகிறார்கள். இலங்கையில் தமிழர்களையும் சிங்களவர்களையும் சேர்த்து வைத்து இன நல்லிணக்கத்தை ஏற்படுத்திய பெருமை கண்டிப்பா அநுரவுக்கு போகாது தமிழரசு கட்ச்சிக்கே அந்த அந்த வரலாற்று பெருமை போய்சேரும்.
  10. மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு சேரவேண்டிய, தேசியப் பட்டியல் ஆசனத்தை எடுத்து விட்டு... மக்களால் நிராகரிக்கப் பட்டவர்கள் அதனை திருடி... சுகபோகம் அனுபவிக்க அடிபடுகிறார்கள். அதனை ஒரு பெண் உறுப்பினருக்கோ, மட்டக்களப்பு மைந்தனுக்கோ கொடுப்பதுதான்... நியாயமானது.
  11. பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
  12. சுமந்திரன் ஒருவரால் தான்…. தமிழரசு கட்சியில் இவ்வளவு பிரச்சினைகளும், பிழவுகளும் ஏற்பட்டது. நடந்து முடிந்த தேர்தலிலும் தமிழரசு கட்சி படு தோல்வி அடைந்ததற்கு சுமந்திரனின் செயல்களே முக்கிய காரணம். அதனை மக்களே “தேவை இல்லாத ஆணி” என்று அவரை வாக்குகளால் தோற்கடித்து காட்டி விட்டார்கள். இப்போ கட்சியை விட்டு சுமந்திரனை வெளியே அனுப்ப வேண்டிய பொறுப்பு தமிழரசு கட்சியிடமே உள்ளது. 💪 சுமந்திரனை தூக்கி வெளியே போட்ட அடுத்த நிமிடமே… தமிழ்த் தேசிய கட்சிகள் ஒரு அணியாக திரளும். ✅ அதை விட்டுட்டு…. போகாத ஊருக்கு, வழி சொல்லிக் கொண்டு இருப்பதில் அர்த்தம் இல்லை.
  13. என்ர‌ சொந்த‌ சித்தி நான் பிற‌ப்ப‌துக்கு முன்பே கொழும்பில் ப‌டிச்ச‌ கால‌த்தில் சிங்க‌ள‌ ந‌ப‌ர் உட‌ன் காத‌ல் வ‌ந்து அது க‌லியாண‌த்தில் போய் முடிந்த‌து என‌து சித்தி அர‌சாங்க‌ பாட‌சாலையில் பின்னைய‌ கால‌ங்க‌ளில் ப‌டிப்பிச்ச‌வா சித்தியின் மூத்த‌ ம‌க‌ன் 1988க‌ளில் போராட்ட‌த்தில் இணைந்து 1990க‌ளில் வீர‌ச்சாவு த‌மிழ‌ர்க‌ள் சில‌ர் சிங்க‌ள‌ இன‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ளை க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் திரும‌ண‌ம் செய்து இருக்கின‌ம் புத்த‌ன் மாமா....................... ஆசை தோசை அப்ப‌ல‌ம் வ‌டை என்ற‌ மாதிரி யாழ்ப்பாண‌த்தார் வெளி நாட்டு மாப்பிளைக்கு க‌ட்டி வைக்க‌வே விரும்புவின‌ம் அவ‌ர்க‌ளின் பிள்ளைக‌ளை ...................சில‌து அவ‌ர்க‌ளுக்குள் காத‌ல் வ‌ந்து திரும‌ண‌த்தில் போய் முடிந்தால் ஒன்றும் செய்ய‌ ஏலாது............... என‌து சித்தின்ட‌ க‌ன‌வர‌ தெரியாது நான் நேரில் பார்க்க‌ வில்லை 1990க‌ளில் வீர‌ச்சாவு அடைந்த‌ அண்ணாவையும் நேரில் பார்க்க‌ வில்லை அக்கா மார் இர‌ண்டு பேரையும் பார்த்தேன் 1995ம் ஆண்டு இர‌ண்டு பேரும் ந‌ல்ல‌ வ‌டிவு புத்த‌ன் மாமா.............................. என்ன‌ தான் சித்த‌ப்பா சிங்க‌ள‌வ‌ராய் இருந்தாலும் ம‌க‌ன் எம் இன‌த்துக்காக‌ போராடி வீர‌ச்சாவு அடைந்த‌ மாவீர‌ர்🙏🥰............................
  14. அநுரவின் யாழ்ப்பாண வெற்றியின் பின்னர் அநுரவின் வெற்றியைவிட யாழ்ப்பாணத்திலா இது நடந்தது என்று சிங்களவர்கள் ஆச்சரியத்தில் உறைகிறார்கள். சிங்கள யூடியூப் காணொலிகளில் சிங்களவர்கள் இவ்வளவு நல்ல யாழ்ப்பாண மக்களை நாம் எதுக்கு பகைத்தோம் ,எல்லாம் நம்ம அரசியல்வாதிகள் செய்தவேலை எவ்வளவு அழகான பெண்கள், எவ்வளவு பொய்யில்லாத முகங்கள், கல்யாணம் கட்டினா யாழ்ப்பாண பெண்னை கட்டணும் , , அவர்கள் காணிகள் கைதிகளையெல்லாம் விடுதலை செய்யுங்கள்,அவர்களூக்கான உரிமைகளை கொடுங்கள் என்றெல்லாம் பின்னூட்டம் இடுகிறார்கள். இதுவும் நடத்திட்டால் அநுர அலையென்ன சிங்கள அலையே யாழ்மீது வீசும் அப்புறம் எதை வைத்து நீங்கள் அரசியல் செய்வீர்கள்? இனத்துக்கு பணியாற்றுங்க என்று சொல்லி பார்லிமெண்ட் அனுப்பினால் கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் உங்க வயிறை நிரப்ப பயன்படுத்தினீர்கள், இனிமே வயிற்றில் அடித்து புலம்புங்கள்.
  15. @வீரப் பையன்26 கவலைப்படாதீர்கள், நாம் அவமானமாக கருதலாம், ஆனால் நம் அண்ணன் வருமானமாய் கருதுவார். நம் அண்ணனுக்கு வருமானங்கள் பெருகட்டும்.
  16. யாழ் களத்தில் ஒருவரையும் நான் குறிப்பிட்டு இழிவுபடுத்தி எழுதுவதில்லை என்பதை தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
  17. வினா 20 ) 4போட்டியாளர்கள் மனோகணேசன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 7)கிருபன் - 37 புள்ளிகள் 8)goshan_che - 37 புள்ளிகள் 9)நூணாவிலான் - 37 புள்ளிகள் 10)நிழலி - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
  18. @MEERA @Kapithan இரண்டு பேரையும் எங்கட டாக்குத்தர் அர்ச்சனாவிட்ட ஒருக்கால் கூட்டிக்கொண்டு போய் ஃபுல் பொடி செக்கப் செய்ய சொல்லோணும் 😂
  19. தெலுங்கர்களை பற்றி குறையாக சொன்னால் தமிழ்நாட்டு முதல்வருக்கு கெட்ட கோபம் வரும் தானே....😉
  20. அச்சம் என்பது மடமையடா... படம் : மன்னாதி மன்னன் இசை : M.s.v, ராமமூர்த்தி பாடல் : கண்ணதாசன் பாடியவர் : T.M.S அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு தாயகம் காப்பது கடமையடா தாயகம் காப்பது கடமையடா (அச்சம்) கனகவிஜயரின் முடித்தலை நெறித்து கல்லினை வைத்தான் சேர மன்னன் இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி இசை பட வாழ்ந்தான் பாண்டியனே (அச்சம்) கருவினில் மலரும் மழலையின் உடலில் தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை களங்கம் பிறந்தால் பெற்றவள் மானம் காத்திட எழுவான் அவள் பிள்ளை (அச்சம்) வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார் மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம் தனிலே நிற்கின்றார்(அச்சம்) http://tamiloldlyrics.blogspot.com/2016/09/blog-post_0.html
  21. தேர்தலில் தோல்வியுற்ற பிரபலங்கள்.
  22. தெலுங்கர்களை பற்றி தப்பா பேசீட்டு ஹைதரபாத்தில் போய் ஒளிவதெல்லாம் வேற லெவல் ராஜதந்திரம்🤣. அம்மணி இதுநாள் வரை தெலுங்கு சீரியல்களின் பிசியான நடிகையாம். இனி?
  23. கனடா ஹைகொமிசனர் உங்கள் தோழருக்கு கிட்டதட்ட உறுதி. உங்களுக்கு லாங்காஸ்டர் ரோட்டில் வாழ அதிஸ்டம் உள்ளதோ யார் கண்டார்?
  24. இதில் பாதிப்பேர் அனுரவின் பஸ்சில் ஏறி பைலா போட ஆரம்பித்து விட்டார்கள். மீதி பாதிக்கு subscription expired ஆகிய கேபிள் டீவி நேயர்கள் நிலைதான். சுமன் அரசியலை விட்டு முற்றாக நீங்க வேண்டும் என நான் நினைக்க 2 காரணங்கள். 1. அவரின் சுத்து மாத்துக்கள் இராது 2. சுமனை சாட்டி, ஶ்ரீக்கும் அனுரவிற்கும் ஆள் பிடிக்கும் பார்த்தசாரதிகளால் அப்படி செய்ய முடியாமல் போகும். சுமன் இலண்டன் வந்தால் நிச்சயம் பார்த்தசாரதி அடிப்பார். ஆனால் பார் லைசன்ஸ் ஶ்ரீ வந்தால் ஏர் போர்ட்டில் இறங்கி மீள ஏறும் வரை அவருக்கு சாரதி வேலை பார்ப்பார். துடைத்து விடாத குறைதான். (சாப்பிட்ட பின் வாயை சொன்னேன்).
  25. மெதுவாக ஆனால் உறுதியாக முன்னிலை நோக்கி🦾
  26. வினா 25) செல்வம் அடைக்கலநாதன் வெற்றி பெறுவார் என 23 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாதவூரான் - 42 புள்ளிகள் 2) பிரபா - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 6)கிருபன் - 37 புள்ளிகள் 7)Alvayan - 37 புள்ளிகள் 8)goshan_che - 37 புள்ளிகள் 9)நூணாவிலான் - 37 புள்ளிகள் 10)நிழலி - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 21 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 19,22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 67)
  27. தமிழரசுக் கட்சியின் தேசியப்பட்டியல் மருத்துவர் சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது!😂 இனிச் சுமந்திரனுக்கெதிரான விடுதலைப் போராளிகள் அனைவரும் தமது விடுதலைப் போருக்கான இன்னொரு இலக்கினைத் தேடிக்கொள்ளவேண்டும்!😂
  28. ஒரு சிறிய ஊரில் இரண்டு குறும்பான சிறுவர்கள் இருந்தனர். ஊரில் ஏதாவது காணாமல் போனால் இவர்களைத்தான் முதலில் விசாரிப்பார்கள். பெற்றோர்களால் அறிவுரை கூறி அவர்களைத் திருத்த முடியவில்லை. ஒரு சமயம் அவ்வூருக்கு ஒரு துறவி வந்தார். பெற்றோர் அவரை அணுகி பையன்களைப் பற்றிக் கூறி அவர்களை திருத்த வழி கேட்டனர். அவரும் ஒரு பையனை அன்று மாலை தனியாகத் தன்னை பார்க்க அனுப்பி வைக்கச் சொன்னார். ஒரு பையன் அனுப்பப்பட்டான். துறவி அந்தப் பையனை முதலில் ஐந்து நிமிடம் கண்ணை மூடி அமரச்சொன்னார் . பின்னர் கேட்டார், தம்பி உன்னை ஒரு கேள்வி கேட்கிறேன் நீ பதில் சொல்ல வேண்டும். கடவுள் எங்கே? சொல் கடவுள் எங்கே இருக்கிறார் ? அவன் அங்கிருந்து உடனே ஓட்டமாய் ஓடிவந்து வீடு சேர்ந்தான். அடுத்த பையன் அவனிடம் ஓடி வந்ததற்கான காரணம் கேட்டான். அவன் சொன்னான் நாம் பெரிய ஆபத்தில் உள்ளோம். இப்ப கடவுளைக் காணோமாம். அந்த ஆள் என்னைக் கூப்பிட்டு எங்கே எங்கே என்று கேட்கிறான். 😏😏 ஏற்கனவே ஏதாவது காணோம் என்றால் நம் மீதுதான் பழி சொல்வார்கள் 😔😔 இப்போது இந்தப் பிரச்சினையும் நம் தலையில் தான் விழும் போலிருக்கிறது😶😶😶
  29. சும்மா இருங்க கோசான்… இங்க வந்து நிம்மதியாய் இருக்கிற எங்களுக்கும் ஆப்பு வைப்பார்.
  30. ஓம். எப்படியும்… மலையகத்திற்கு ஒரு தமிழ் அமைச்சர் பதவி கிடைக்கும் என்றே நம்புகின்றேன்.
  31. தமிழ் காங்கிரஸ் என்ன குத்தி முறிந்தாலும் கனடாவுக்கான இலங்கை தூதர் பதவி எங்கள் யாழ்கள அனுரவின் உத்தியோகபூர்வ cheer leaderக்குத்தான். கருணையே உருவான, முள்ளிவாய்க்காலில் மக்களை பாதுகாக்க அரசு மேற்கொண்ட யுத்தத்தை வெளிநாடுகள் பேச்சை கேட்டு தாமதிக்காமல் விரைந்து முடிக்கும் படி மகிந்தவை நெருக்கிய மானிட நேயன் அனுரவின் அரசு தமிழருக்கு போதும், போதும் என்று கதறும் அளவுக்கு ஒரு தீர்வை தரப்போகிறது. அந்த தீர்வு பொதி மிக கனமானது. அதை தூக்கி அலுங்காமல் குலுங்காமல் தமிழ் மக்கள் தலையில் அரைக்கும், மன்னிக்கவும் வைக்கும் இயலுமை அவருக்கு மட்டும்தான் உள்ளது.
  32. இப்படி ஒரு அணி தேர்தலில் போட்டியிட்டதா? யார் முதன்மை வேட்பாளர்.
  33. இன்றைய நேரத்தில் மைக் டைசனுக்கு 27 வயதாக இருந்திருந்தால் ஜேக் பாலின் நிலைமையை நினைத்து பார்த்தேன்.மனதுக்குள் கெக்கட்டம் விட்டு சிரித்தேன். அரை நூற்றாண்டு வயதிலும் ஒருவன் குத்துசண்டைக்கு வருகின்றான் என்றால் அவன் மனத்தைரியத்தை பாராட்ட வேண்டும்.
  34. 2) சசிகலா ரவிராஜ் வெற்றிபெற மாட்டார் என 23 பேர் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)பிரபா - 36 புள்ளிகள் 2)வீரப்பையன் - 31 புள்ளிகள் 3) வாதவூரான் - 31 புள்ளிகள் 4) வாலி - 31 புள்ளிகள் 5) கந்தையா 57 - 30 புள்ளிகள் 6) தமிழ்சிறி - 30 புள்ளிகள் 7) Alvayan - 30 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசியன் - 30 புள்ளிகள் 9) நிழலி - 29 புள்ளிகள் 10) சுவைபிரியன் - 28 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 12)ரசோதரன் - 28 புள்ளிகள் 13)நூணாவிலான் - 27 புள்ளிகள் 14)வில்லவன் - 27 புள்ளிகள் 15) நிலாமதி - 27 புள்ளிகள் 16)கிருபன் - 26 புள்ளிகள் 17)goshan_che - 26 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 25 புள்ளிகள் 19) புலவர் - 24 புள்ளிகள் 20) வாத்தியார் - 23 புள்ளிகள் 21)புத்தன் - 23 புள்ளிகள் 22)சுவி - 20 புள்ளிகள் 23) அகத்தியன் - 18 புள்ளிகள் 24) குமாரசாமி - 18 புள்ளிகள் 25) தமிழன்பன் - 13 புள்ளிகள் 26) வசி - 12 புள்ளிகள் இதுவரை 1, 2,4, 7, 8,10 - 13, 16 - 18, 22, 27 - 31, 33, 34, 38 - 42 , 48, 52 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 56)
  35. அதைத்தான் நான் எல்லா இடங்களிலும் சொல்கிறேன்.ஒட விட்டு பார்ப்போம்.அவர் பாதை பிழையானால் நாம் எம் பாதையில் தொடர்ந்து நடப்போம். ஆக்க பொறுத்திருந்த நாம் ஆற பொறுத்திருந்தும் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம். 70 வருடத்தை போராட்ட வருடங்களாக கட்டிப்பிடித்த நாம் அடுத்த நான்கு வருடங்கள் எப்படி இருக்கின்றது என பார்க்கலாம்.
  36. தீவிர தமிழ் தேசியவாதம் மென் தமிழ் தேசியவாதம் என்று ஒன்று ஒருபோதும் இல்லை. சும் செய்தது தேவையானபோது தமிழ் தேசியத்தை முகமூடி போன்று உபயோகித்துது. இன்று மட்டக்களப்பில் சும்மின் சகா சாணக்கியன் வெற்றி பெற்றபின் கூறியது “தமிழரசுக் கட்சி தமிழ் தேசியத்திற்காக தொடர்ந்தும் போராடும் “ என்று. இது சும் & Co வின் இரட்டை வேடம். உங்கள் சந்தேகத்திற்கு கள உறவுகள் ஏற்கனவே பதில் அளித்துள்ளனர். சும்மின் அல்லக்கைகளான தாயக புலம்பெயர் பலாக்காய்களின் பரப்புரை தான் மதவாதம். சும்மின் பாராளுமன்ற காலப்பகுதியில் கூடவே இருந்த ( செல்வம் / சார்ள்ஸ்) தமிழ் கிறீஸ்தவ பாராளுமன்ற உறுப்பினரா்கள் ஒதுக்கப்பட்டார்களா? இல்லையே….
  37. இதை ப‌ற்றி தான் என‌து சிறு வ‌ய‌து பாட‌சாலை தோழ‌னுட‌ன் க‌தைச்சிட்டு இருந்தேன் எங்க‌ட‌ அர‌சிய‌ல் வாதிகளை ப‌டு ம‌ட்ட‌ம் த‌ட்டி க‌தைச்சான் 2009க்கு பிற‌க்கு இவ‌ர்க‌ள் செய்த‌ குள‌று ப‌டிக‌ள் சொகுசு வாழ்க்கைக்கு ம‌க்க‌ளுக்கு செய்த‌ துரோக‌த்துக்கு தான் யாழ்ப்பாண‌ ம‌க்க‌ள் இவைக்கு ந‌ல்ல‌ பாட‌ம் புக‌ட்டி இருக்கின‌ம் என்று இப்ப‌த்த‌ இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ள் முற்றிலும் மாறி விட்டின‌ம் அண்ணா.................. அனுரா சொன்ன‌தை எல்லாம் செய்தால் அனுரா இனி வ‌ரும் தேர்த‌லில் பிர‌ச்சார‌த்துக்கு யாழ்ப்பாண‌ம் வ‌ராம‌லே வெல்வார் அண்ணா................... 2009க்கு பிற‌க்கு எத்த‌னையோ துரோக‌ங்க‌ளை பார்த்து விட்டோம்.............அனுராவுக்கு எதிரா சில‌ர் க‌ருத்தை முன் வைத்தால் எம்ம‌வ‌ர்க‌ளே வெளிப்ப‌டையா எழுதுகின‌ம் எங்க‌டைய‌ல் செய்யாத‌ துரோக‌த்தையா க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் அனுரா செய்து விட்டார் என்று அவ‌ர்க‌ள் சொல்வ‌து ஒரு வித‌த்தில் ச‌ரி தான் இல்லாத‌ த‌லைவ‌ரை இருக்கிறார் என்று க‌ட‌சி நேர‌ம் போராட்ட‌த்தை சாட்டி கொள்ளை அடிச்ச‌ ப‌ண‌ங்க‌ள் இதோ துவார‌கா வ‌ருகிறா அருணா நேரில் சென்று த‌ன‌து த‌ங்கையுட‌ன் சாப்பிட்ட‌து என்று எவ‌ள‌வு அவ‌தூறுக‌ள் 2009க‌ளில் எம்மை எம்ம‌வ‌ர்க‌ள் ஏமாற்றின‌ மாதிரி வேற்று இன‌த்த‌வ‌ன் ஏமாற்ற‌ வில்லை அண்ணா🙏..................................
  38. இதென்ன பனையால விழுந்தவனை மாடு ஏறி மிதித்த மாதிரி இருக்கே.
  39. இவற்றில் எதையும் தருவேன் என்று அனுரா சொல்லவில்லை, தரமாட்டேன் என்று உறுதியளிக்கவுமில்லை. இதை தாருங்கள் அதை கைவிடுகிறோமென மக்கள் கூறவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை. இலங்கை முழுக்க உள்ள எத்தனையோபேர் எச்சரித்திருந்தும் மக்கள் அவரை தேர்ந்தெடுத்துள்ளனர். அவர்கள் மாற்றத்தை எதிர்பார்த்து அனுராவை நம்பி தெரிந்தெடுத்தார்கள். அவர்களின் வேணவா அனுராவுக்கு புரியும், தன்னாலியன்றதை முயற்சித்து செய்வார். முன் இருந்த ஆட்சியாளர்கள் எத்தனையோ சொன்னார்கள், செய்தார்களா? சொல்பவர் செய்வதில்லை செய்பவர் சொல்வதில்லை. பொறுத்திருங்கள், மக்களின் தெரிவை எள்ளி நகையாடாதீர்கள். இதெல்லாம் சுமந்திரனை தூக்கியெறிந்த மக்கள் மேல் உள்ள வக்கிரம் அனுராவை வசை பாடுகிறார்கள். சரி அனுராவை தெரிந்தது பிழையென்றால், உங்கள் தெரிவு யாராக இருந்திருக்க வேண்டுமென்று சொல்லித்தான் தொலையுங்களேன்! இன்னொரு சிங்களவர்தானே, அரியம் நின்றபோதும் நகைத்தீர்கள். அனுராவை தெரிந்தபோதும் வசை பாடுகிறீர்கள். இதைத்தான் மனதுக்குள் உள்ளதை வெளியிட விரும்பாமல் வெதும்புவது என்பது.
  40. பெளத்த மதத்தினை மற்றைய மதங்களைக் காட்டிலும் முன்னிலைப்படுத்தி அதற்கான அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்குவது சிறிலங்காவின் அரசியலமைப்பு பெளத்த மதம் குறித்து பின்வருமாறு குறிப்பிடுகிறது, "இலங்கைக் குடியரசு பெளத்த மதத்திற்கு அதிமுக்கிய ஸ்த்தானத்தினை வழங்கும். ஆகவே பெளத்த மதத்தையும், பெளத்த சாசனத்தையும் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு அரசினதும் தலையாய கடமையாகும்". தம்மை மார்க்ஸிஸ்ட்டுக்கள் என்று மக்கள் விடுதலை முன்னணியினர் கூறிக்கொண்டபோதிலும், அடிப்படையில் அவர்களும் மிகத் தீவிரமான சிங்கள பெளத்த தேசியவாதிகள் தான் என்பதனையே அவர்களின் கடந்தகால அரசியல் செயற்பாடுகள் காட்டி நிற்கின்றன. தனது கட்சியின் இந்த நிலைப்பாட்டினை அநுரவும் வெளிப்படையாக ஏற்றுக்கொண்டு, நியாயப்படுத்தி வருகிறார். அரசியலமைப்பினை மாற்றக்கூடிய பாராளுமன்றப் பலம் தற்போது அநுரவிற்குக் கிடைத்திருக்கின்ற போதிலும் அவரோ அவரது கட்சியோ அதற்கெதிரான நிலைப்பாட்டினையே எடுத்திருக்கிறார்கள். ஜனாதிபதி தேர்தல் நாடைபெறுவதற்கு சில தினங்கள் இருக்கும் வரையிலும் பெளத்த மதத் துறவிகளைப் போற்றிப் புகழ்வதிலும், கெளரவிப்பதிலும் அநுர சிரத்தையெடுத்து நடந்துகொண்டார். அவ்வாறான சந்தர்ப்பமொன்றான மகரகமவில் ஒழுங்குசெய்யப்பட்ட‌ நிகழ்வொன்றில் சுமார் 1500 பெளத்த பிக்குகள் முன்னிலையில் பேசிய அநுர, "பெளத்த மதத்திற்குரிய அதி உன்னத ஸ்த்தானத்தினை வழங்குவேன், அதன் புனிதத்தினை எப்பாடுபட்டாவது பாதுகாப்பேன்" என்று உறுதிமொழி வழங்கினார். மேலும் அரசியலமைப்பின் ஒன்பதாவது சரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையினை எக்காரணத்திற்காகவும் தனது அரசு கைவிடாது என்றும் அவர் உறுதியளித்தார். அநுரவின் பெளத்த மதம் சார்ந்த நிலைப்பாடே கட்சிக்குள்ளும் பரவிக் கிடக்கின்றது. கட்சியின் முக்கியஸ்த்தரான கே.டி.லால்காந்த, இனவாதப் பிக்குகள் அமைப்பான பொதுபல சேனவின் ஸ்த்தாபகர் ஞானசாரத் தேரவுடன் நெருங்கியத் தொடர்புகளைக் கொண்டிருப்பவர் என்பதுடன் வெளிப்படையாகவே அவருடன் இணைந்து செயற்பட்டும் வருபவர். இவ்வருடம் மாசியில் ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணையாளர் மிச்செல் பாக்லெட் இலங்கை தொடர்பாக எச்சரிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார். "இலங்கையில் இராணுவமயமாக்கல் இன்னும் தீவிரப்படுத்தப்பட்டு வருவது தெரிகிறது. அரச நிறுவனங்களிலும் நிர்வாக அமைப்புக்களிலும் சிங்களத் தேசியவாதமும், பெளத்தமயமாக்கலும் முன்னெடுக்கப்பட்டு வருவது அப்பட்டமாகத் தெரிகிறது. இது சிறுபான்மையினங்களிடையே அச்சத்தினையும், ஸ்த்திரத்தன்மையீனத்தையும் ஏற்படுத்தியிருப்பதுடன், அச்சமூகங்கள் தம்மை தனிமைப்படுத்திக்கொள்ளவும் இந்நிலைமை அழுத்தம் கொடுக்கின்றது. இதனால் சமூகங்களுக்கிடையே இணக்கப்பட்டினையும், நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவது கடிணமாக்கப்பட்டு வருகின்றது" என்று அவ்வெச்சரிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
  41. நன்றி சகோதரா. உங்கள் பார்வையில் தொண்டு ஆக இருக்கலாம். எனக்கு அது ஒரு கடமையாகப்படுகிறது. என்னை கொஞ்சம் சிந்திக்கும் திறனோடு இயங்க இயற்கை அனுமதித்தது என்னிலும் மோசமான நிலையில் இருப்போரை கவனிக்கத்தானோ என நான் நினைப்பதுண்டு.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.