Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    19
    Points
    88842
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3128
    Posts
  3. கந்தப்பு

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    12802
    Posts
  4. putthan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    14707
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/18/24 in Posts

  1. முதலில் இளம்பிறையனை "யாழ் பல்கலை விரிவுரயாளர்" என்று அழைப்பதை தமிழ்வின் கைவிட வேணும். அவர் ஒரு "உடற்பயிற்சிப் போதனாசிரியர்" (demonstrator). "உடற்பயிற்சிப் போதனாசிரியருக்கும்" அரசியலுக்கும் என்ன தொடர்பு😂? சும்மா, பல்கலையில் காவல் கடமையில் இருக்கும் Marshal ஐ எல்லாம் கொண்டு வந்து ஒரு அரசியல் நிகழ்ச்சி செய்யும் ரொய்லெற் ஊடகங்கள் எங்கள் சாபக் கேடு!
  2. தமிழ்வின்னில் வரும் செய்திகளை நம்பாதீர்கள்............... இவர்கள் ஒரு ஊடகப் பொய்யர்கள்........... எங்களின் அரசியல் பொய்யர்கள் போலவே............... வல்வெட்டித்துறைச் சந்திக்கு அருகாமையில், உடுப்பிட்டி வீதியில் 'தமிழ்க் கடை' என்று ஒரு கடை இருக்கின்றது. அங்கு பனம் பொருட்கள் மற்றும் இதே போன்ற பொருட்களை மட்டுமே விற்கின்றனர். அங்கு பனங்கட்டி எப்போதும் கிடைக்கும். சடையாண்டி வைரவர் கோயிலின் முன்னே இந்தக் கடை உள்ளது. முன்னொரு காலத்தில் இந்தக் கடையின் பெயர் சித்தி விநாயகம் ஸ்டோர்ஸ் என்று ஞாபகம்..................
  3. நிழலி சில கேள்விகளுக்கு முதலில் பதில் அளிக்கவில்லை. அதனால் அவருக்கு அக்கேள்விகளுக்கு விடை என்ன என்றும் , சில தேர்தல் மாவட்டங்களில் 2 கட்சிகள் முதலிடத்தைப் பிடிக்கும் என்றும் முதலில் எழுதியதினால் ஒரு கட்சியின் பெயரை மட்டும் எழுதும் படி கேட்டிருந்தேன். அவர் இக்கேள்விகளுக்கு பதில் எழுதும் போது தேசிய மக்கள் கட்சி 154 இடங்களை பிடிக்கும் என்றும் பதில் அளித்திருந்தார். 1-5 வித்தியாசத்தினால் பதில் அளித்தினால் அவருக்கு 1 புள்ளிகள் கிடைக்கவேண்டும். கவனிக்காமல் விட்டதினால் மனம் வருந்துகிறேன். 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6) நிழலி - 38 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 8)கிருபன் - 37 புள்ளிகள் 9)goshan_che - 37 புள்ளிகள் 10)நூணாவிலான் - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
  4. உண்மைதான்.... சுமந்திரனின் பஞ்சாயத்து பார்க்கிறதாலேயே பலரின் நேரங்கள், யாழில் பல பக்கங்கள் வீணாகி உள்ளது. 😂 சுமந்திரன் தோற்றதுடன், இனி... உந்த தொல்லை, புடுங்குப்பாடு ஒன்றும் இராது. 🤣 ஆபிரஹாம் சுமந்திரனை... தோல்வி அடையச் செய்த, யாழ்.மாவட்ட மக்களுக்கு நன்றி. 🙏
  5. கொதித்தெழும் ஷிராஸ் யூனஸ் (தமிழர்கள் தேசிய போராட்டம் குறித்த மிகவும் மோசமான பார்வை கொண்டவர்)
  6. no need divercity.....இதற்கு தான் அதிகம்பேர் தம்ஸ் அப் போட்டிருக்கினம் ...அதாவது படிச்ச காய்கள் பன்முகதன்மையை விரும்பவில்லை....
  7. போனமுறை போய் பருத்திதுறை காபரி ல் நின்று தமிழ்நாட்டை பார்த்தவரெல்லோ...இந்தமுறை போய் ஆறுதலாய் இருந்து பார்க்கப் போறார்....நானு ஊருக்குப்போய் ..அதேகாபரில்போய் ஆறுதாலாய் இருந்து பார்த்தனான்...இசுடாலினின் ..தலையிலை கிடக்கிற டோப்பே தெரியுது..😎
  8. 👍................. மீண்டும் மீண்டும் கட்டுக்கதைகளையும், வதந்திகளையும் பரப்பும் ஊடகங்களை முற்றாக தவிர்க்க வேண்டும், பையன் சார். உங்களின் இந்த முடிவு மிகவும் வரவேற்கத்தக்கது. அத்துடன் தமிழ் கொலைகளைச் செய்யும் ஊடகங்களும் தவிர்க்கப்படவேண்டும். முக்கியமாக ஆதவன் போன்ற செய்தித் தளங்கள். தமிழ், தமிழ் என்று நாங்கள் சொல்லிக் கொண்டே, இவைகளை எப்படி ஆதரிக்க முடியும்............. ஒரு தனிநபர் தமிழில் தவறுகள் விடுவதை புரிந்து கொள்ளலாம். தமிழ்மொழி மிகக் கடினமான ஒரு மொழி.... ஆனால் ஒரு ஊடகம் என்று குழுவாக இருப்பவர்கள், இயங்குபவர்கள் இதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்யக் கூடாது.............. மொழி மீது ஒரு பற்றும், மரியாதையும் அவர்களுக்கு இல்லை என்றே இதை எடுக்கவேண்டும்.
  9. உரிமைக் குரல் - சுப.சோமசுந்தரம் சுமார் ஓராண்டுக்கு முன்பு நியூசிலாந்து நாட்டில் மிகக் குறைந்த வயதில் (21) பாராளுமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்றபோது ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் என்ற தொல் பழங்குடி இன சமூகச் செயற்பாட்டாளர் தமது இனத்தின் போர் முழக்கமான ஹக்கா எனும் மரபுப் பாடலொன்றுடன் தமது கன்னிப் பேச்சைத் தொடங்கினார். அது உலகம் முழுவதும் வைரல் ஆனது. அது குறித்து எனது அப்போதைய முகநூற் பதிவின் இணைப்பு : https://www.facebook.com/share/p/14bJyTCimP/ 1840 ல் நியூசிலாந்து பிரிட்டனின் ஆதிக்கத்தில் வந்தபோது பிரிட்டிஷ் அரசுக்கும் நியூசிலாந்தின் மவுரி பழங்குடி இன மக்களுக்கும் இடையே 'வைதாங்கி ஒப்பந்தம் (Treaty of Waitangi)' கையெழுத்தானது. அதன்படி சில சிறப்புச் சலுகைகளும் உரிமைகளும் மவுரி இன மக்களுக்கு வழங்கப்பட்டன. நியூசிலாந்து 1986 ல் முழுமையாக விடுதலை பெற்ற பின்னரும் நியூசிலாந்தின் அரசியலமைப்புச் சட்டத்தில் வைதாங்கி ஒப்பந்தம் பின்பற்றப்பட்டது. ஆனால் தற்போது அந்த ஒப்பந்தத்தில் சில மாற்றங்களைக் கொண்டு வரும் மசோதாவை அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தது. இம்மாற்றத்தால் மவுரி இன மக்களின் சில உரிமைகள் பறி போகும் என்பது வெளிப்படை. சமத்துவ நோக்கில் அம்மாற்றம் கொண்டு வரப்படுவதாக நியூசிலாந்து அரசு அறிவிப்பது வேடிக்கையும் வேதனையும். நியூசிலாந்தின் மக்கள் தொகையில் சுமார் 20 சதவீதமான மவுரி இன மக்களிடமிருந்து அம்மசோதாவிற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. அந்த எதிர்ப்பு பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் அந்த மசோதாவின் நகலைக் கிழித்தெறிந்து அவர்களது போர் முழக்கமான ஹக்கா பாடலைப் பாடி அறச்சீற்றத்துடன் அப்பாடலுக்கான நடனத்தை மேற்கொண்டார். பிற மவுரி இன உறுப்பினர்களும் அந்த ஆவேச ஆடல் பாடலில் கலந்து கொள்ள, பாராளுமன்றம் அமளிதுமளியானது. மீண்டும் இந்நிகழ்வு உலகம் முழுவதும் வைரல் ஆனது. இத்தகைய நிகழ்வுகள் நம் தாய்த் திருநாட்டில் அதிகமாகவே நடைபெறுவன. நமது நாட்டின் காட்சித் திரை நம் மனக்கண்ணில் விரிவது தவிர்க்க இயலாத ஒன்று. குஜராத்தில் மதச்சிறுபான்மையினர் மீது சொல்லில் விவரிக்க இயலாத வன்முறை கட்டவிழ்த்து விடப்படும்போதும் அதன் மீது நீண்ட காலம் விசாரணை நடைபெறும்போதும் அதுபற்றி வாயே திறக்காத குடியரசுத் தலைவரான A.P.J அப்துல் கலாம் உங்கள் நினைவுக்கு வரலாம். மணிப்பூர் பற்றியெரியும் போது அது பற்றிக் கள்ள மௌனம் சாதிக்கும் பிரதமரை ஓரளவு புரிந்து கொள்ளலாம்; பற்றியெரிந்த/பற்ற வைக்கப்பட்ட குஜராத்தின் அன்றைய முதல்வரிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ? ஆனால் மணிப்பூர் கலவரத்தில் பெரும்பாலும் சிறுபான்மையினரான பழங்குடி குக்கி இன மக்களே பாதிப்புக்கு உள்ளாகும்போது, பழங்குடி இனத்தவரான குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சாதிக்கும் மௌனத்தை எந்த வகையில் சேர்ப்பீர்கள் ? உலகளவில் பேசப்படும் நியூசிலாந்தின் ஹனா ரஹிதி மெய்பி கிளார்க் பற்றியெல்லாம் திரௌபதி முர்முவுக்குத் தெரியுமா ? தன்மானம் காக்கத் தலைவிரி கோலமான மகாபாரதத் திரௌபதியின் கதையாவது தெரியுமா ? குலத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் விஸ்வகர்மா யோஜனாவை ஆதரிக்கும் எல்.முருகன் போன்றோர் தம் சந்ததியினரைக் குலத்தொழிலுக்குத் தயார் செய்து விட்டார்களா ? மேற்கண்ட காட்சித் திரை உங்கள் மனக்கண்ணில் விரிந்தால், உங்கள் பெற்றோர், ஆசிரியர், தோழர்கள் உங்களைச் சரியாக வளர்த்திருக்கிறார்கள் என்று பொருள். நியூசிலாந்தின் வைதாங்கி ஒப்பந்தமானது, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் அக்டோபர் 1947 ல் மகாராஜா ஹரி சிங் - மவுண்ட்பேட்டன் பிரபு இடையில் ஏற்பட்ட நிலையான ஒப்பந்தத்தை உங்களுக்கு நினைவுபடுத்தினால் நீங்கள் நல்ல தலைவர்களால் வழிநடத்தப் பட்டுள்ளீர்கள் என்று பொருள். இனி உலகெங்கும் ஒலிக்கும் நியூசிலாந்து ஹனாவின் போர் முழக்கம் - உரிமைக்குரல் : https://www.facebook.com/share/p/189yZuZxQp/
  10. சில விடயங்களில் இவர்கள் மாறவே மாட்டார்கள். இந்தியாவில் பிஜேபி அரசு ஆர்எஸ்எஸ்ஸின் கொள்கைகளை கொண்டு இழுப்பது போல........... வலு அமைச்சர் ஆகியிருக்கும் குமார ஜெயக்கொடி எங்களுக்கு ஒரு வருடம் முந்தியவர். ஆனாலும் நாங்களும், அவர்களும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அந்த வருடம் இரண்டு வகுப்புகளை ஒன்றாக உள்ளே எடுத்திருந்தனர். அமைச்சரவையில் அநுர குமார, குமார ஜெயக்கொடி என்று 'நாலு ரூபாய் சாப்பாட்டுச் சட்டம்' கொண்டு வந்தவர்கள் பலர் இருக்கின்றர் என்று நினைக்கின்றேன்..............🤣
  11. கோசான், நீங்கள் ஜேவிபிஇடம் ஏதோ பெரிதாக எதிர்பார்த்து உங்களுக்கு கிடைக்கவில்லைபோல் இருக்கிறது. இங்கேயே குந்தியிருந்து போட்டு தாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள், ஒருவேளை பார் லைசென்ஸ் ஆக இருக்குமோ?
  12. அட அனுரவே யாழ்பாணத்தான் பிறகு நமக்கென்ன கவலை. அனுர பிரிகேட் 🤣 மூணு சீட் கொடுத்த யாழ்பாண மானஸ்தனுக்கும் நாலு ரூபா சாப்பாடா…ஐயகோ🤣. இதுதான் ஜேவிபி. 2/3 எடுத்தவுடன் என் பி பி முகமூடி கொஞ்சம் கொஞ்சமாக களர்கிறது. உள்ளே இருந்து வர்க்கவாத, இனவாத ஜேவிபி வரும் போது…. கோசானின் ஊகங்கள் எல்லாம் புரியும்🤣.
  13. கோசான் இரண்டு தமிழர் அமைச்சர் என்று வயிறு வலிக்க சிரிக்கின்றீர்களே... எனக்குத் தெரிந்து ராமலிங்கம் சந்திரசேகர் அனுராவின் கட்சியில் 30 - 35 வருடங்களுக்கு மேல் இருக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப் பட்டவர்கள் மிகக் குறுகிய காலத்தில் அனுர கட்சியில் இணைக்கப் பட்டவர்களே ஆகும். அதிலும் வைத்தியர் எஸ். சிறி பவானந்தராஜா ஜனாதிபதி தேர்தல் முடிந்த பின்... இரண்டு மாதத்திற்குள் கட்சியில் இணைக்கப் பட்டவர். (இவருடன்... திருமலை நீதிபதி இளஞ்செழியனையும் இணைத்து வடக்கில் போட்டியிட அனுர கட்சியில் முயற்சிக்கப் பட்டது. நீதிபதி இளஞ்செழியன் ஏனோ பின்வாங்கி விட்டார்.) தேர்தலுக்காக இணைக்கப்பட்ட புதியவர்களுக்கு பாராளுமன்றத்துக்கு தெரிவானவுடனேயே அமைச்சர் பதவி கொடுப்பார்கள் என்று எதிர் பார்ப்பது எந்த விதத்தில் நியாயம். 🙃 நீங்கள் ஏதோ... எழுத வேண்டும் என்பதற்காக எழுதுவது போலுள்ளது. 😂 அதைவிட... இந்தத் தேர்தலில், நாடெங்கிலும் உள்ள முஸ்லீம்களும் அனுர கட்சிக்காக கடுமையாக உழைத்தார்கள். அவர்களுக்கு ஒரு அமைச்சுப் பதவியும் கொடுக்கப் படவில்லையே. அவர்கள் இதுவரை கவலையை தெரிவிக்கா விட்டாலும், உள்ளுக்கு புழுங்கிக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இரண்டு கிடைத்தது என்று திருப்தி அடையுங்கள். 😃 "போதும் என்ற மனமே, பொன் செய்யும் மருந்து." 💪 கிடைத்ததை வைத்து சந்தோசப் படுபவன்.. முழு மனிதன். 😂 கிடைத்ததும் காணாது என்று.. அடம் பிடிப்பவன்.. அரை மனிதன். 🤣
  14. யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பக்கத்தில்... மாசேதுங் சிலை வைக்க வேணும். அத்துடன்... அங்கு இனி காந்தி ஜெயந்தி, காந்தி வசந்தி... எல்லாம் இனி கொண்டாட முடியாது என்று தடை செய்ய வேண்டும். 😂
  15. இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பாதைகள் திறக்க வேண்டும் என்பதற்காக வாக்களித்தோம் எனும் பொருள் பட இந்த கருத்தோவியம் உள்ளது.
  16. ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஆட்சியின் புதிய அமைச்சரவை சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சுக்களை சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க தன்வசம் வைத்துள்ளார். பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார். வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார். பொது நிர்வாக மாகண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சராக கலாநிதி சந்தன அபேரத்ன பதவியேற்றுள்ளார். நீதி, தேசிய ஒருமைப்பாட்டு சட்டத்தரணி ஹர்சன நாணயக்கார பதவியேற்றுள்ளார். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார். விவசாயம், காணி, கால்நடை மற்றும் நீர்ப்பாசனம் அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார் நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார். கடற்றொழில் மற்றும் நீரியியல் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார். கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு, சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார். கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராக சுனில் ஹந்துன்னெத்தி பதவியேற்றுள்ளார். பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராக ஆனந்த விஜயபால பதவியேற்றுள்ளார். போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறைமுகம் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக பிமல் ரட்நாயக்க பதவியேற்றுள்ளார். பௌத்த சாசன அமைச்சராக பேராசிரியர் ஹினிதும சுனில் செனவி பதவியேற்றுள்ளார். சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சராக வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ பதவியேற்றுள்ளார். பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சராக சமந்த வித்யாரத்ன பதவியேற்றுள்ளா். இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக சுனில் குமார கமகே பதவியேற்றுள்ளார் வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சராக வசந்த சமரசிங்க பதவியேற்றுள்ளார் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக கலாநிதி கிருஷாந்த சில்வா அபேயசேன பதவியேற்றுள்ளார் தொழில் அமைச்சராக கலாநிதி அணில் ஜயந்த பெர்னாண்டோ பதவியேற்றுள்ளார். வலுசக்தி அமைச்சராக பொறியியலாளர் குமார ஜயகொடி பதவியேற்றுள்ளார். சுற்றாடல் அமைச்சராக வைத்தியர் தம்மிக்க பட்டபெந்தி பதவியேற்றுள்ளார் அனுர புராணம் பாடிய அனைவருக்கும் இது சமர்ப்பணம்...தமிழனுக்கு முதல் தீர்வு கொடுத்தாகிவிட்டது....இதிலை டக்கியின் இடத்துக்கு ராமலிங்கம்..பவத்தசாசன அமைச்சர் பார்வையிலேயெ அவரு நடவடிக்கை விளங்குது....சரோசாவும் ..போலியோ மருந்து கொடுக்கத்தான்...யாப்பாணிஸ் போங்கடா போய் பனங்கொட்டையை சூப்புங்கடா.
  17. ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரையை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரையை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ.. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். ‘ஈ மெயிலா? எனக்கு ஈமெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே’ என்றான் துடைக்க வந்தவன். ‘கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லையா? ச்சே’ என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்ல. கையில் 10 டாலர்கள் இருந்தன. அதைக் கொண்டு மார்க்கெட்டில் வெங்காயம் வாங்கினான். பக்கத்து குடியிருப்புப் பகுதியில் கூவிக் கூவி விற்றான் 10 டாலர் லாபம் கிடைத்தது. மீண்டும் வெங்காயம் மீண்டும் விற்பனை. இப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விற்று சில வருடங்களில் பெரிய வெங்காய வியாபாரி ஆகிவிட்டார். இந்தச் சூழ்நிலயில் ஒரு வங்கிக் கணக்கு திறப்ப சம்பந்தமாக, ஒரு வங்கி ஊழியர் அவரிடம் பேச வந்திருந்தார். அவனுடய ஈமெயில் முகவரி கேட்டார். வியாபாரி, ‘ஈமெயில் முகவரி இல்லை’ என்று பதிலளிக்க, ‘ஈமெயில் இல்லாமலே இந்தக் காலத்தில் இவ்வளவு முன்னேறி விட்டீர்களா..? உங்களுக்கு மட்டும் ஈமெயில், இண்டர்நெட்டெல்லாம் தெரிந்திருந்தால்…?’ என்று ஆச்சர்யமாய்க் கேட்டார் வங்கி ஊழியர். ‘அதெல்லாம் தெரிந்திருந்தால் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைத்துக் கொண்டிருப்பேன்’ என்றார் வியாபாரி... நீதி: வாய்ப்புக்கள் விலகும்போது கவலைபடாதே.. எல்லாம் நன்மைக்கே என்று எண்ணி தொடர்ந்து முயற்சி செய்தால் மிகபெரிய வெற்றி உனக்காக காத்திருக்கும்...
  18. பாட்டு என்றால் நான் பாகவதர், TR மஹாலிங்கம் முதல் அனிருத், சிட் ஶ்ரீராம் வரை கேட்பேன். இப்போ யாரு என்ற ஒரு புலம்பெயர் ரப்பர்தான் காரில் ஓடுது.
  19. வினா 49) 23 போட்டியாளர்கள் தேசிய மக்கள் சக்தியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்பட்டார் என்பதை சரியாக கணித்திருக்கிறார்கள். 1)வாலி - 47 புள்ளிகள் 2)பிரபா- 46 புள்ளிகள் 3)வாதவூரான் - 45 புள்ளிகள் 4) நிலாமதி - 43 புள்ளிகள் 5) வீரப்பையன் - 42 புள்ளிகள் 6)அல்வாயான் - 41 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 40 புள்ளிகள் 8)புரட்சிகர தமிழ் தேசிகன் - 40 புள்ளிகள் 9)goshan_che - 40 புள்ளிகள் 10)வில்லவன் - 39 புள்ளிகள் 11)நிழலி - 39 புள்ளிகள் 12)கிருபன் - 38 புள்ளிகள் 13)ஈழப்பிரியன் - 38 புள்ளிகள் 14)நூணாவிலான் - 38 புள்ளிகள் 15)ரசோதரன் - 38 புள்ளிகள் 16)சுவைபிரியன் - 37 புள்ளிகள் 17)கந்தையா 57 - 36 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 34 புள்ளிகள் 19)வாத்தியார் - 32 புள்ளிகள் 20) அகத்தியன் - 31 புள்ளிகள் 21) குமாரசாமி - 31 புள்ளிகள் 22)புலவர் - 30 புள்ளிகள் 23)புத்தன் - 30 புள்ளிகள் 24) சுவி - 29 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 45, 48, 49, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 76)
  20. 🤣............. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்காது என்பார்கள்............ அப்படியே எழுதிய விரல்களும் என்பதையும் அதனுடன் சேர்த்து விடவேண்டும்............. கிறுக்குகின்ற புத்தி............🤣.
  21. இனி அவர்களின் நாடு இது அவர்கள் எங்கும் செல்வார்கள் அது ஒரு செய்தி அல்ல இந்தியர்கள் இந்த 14 வருடங்களில் தமிழருக்கு ஏதாவது ஒன்று செய்து இருக்கணும் அல்லது மலையக மக்களுக்கு தன்னும் செய்து இருக்கணும் செய்ய வில்லையே ?
  22. சூப்பர் . ...... கேட்க நல்லாயிருக்கு . .......! 👍
  23. ஒரேஒரு வரியில் முழி பிதுங்க வைத்துவிட்டான். நல்லதொரு தகவல்.
  24. யாழ்ப்பாணத்தில் சீன தூதரகம் திறக்கப்பட்டு யாழ் மாணவர்களுக்கு சீன பல்கலைக்கழகங்களில் படிக்க புலமைப் பரிசில்கள் வழங்கப்படல் வேண்டும் பாதிக்கப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும் பண்டைய தமிழர்களுக்கும் சீனார்களுக்கும் இடையில் இருந்த வியாபார கலாச்சார உறவுகள் பற்றி ஆராய நிதியம் ஏற்படுத்தப்பட வேண்டும் கன்பூசியஸ் தத்துவங்கள் குறித்து தமிழில் சீன அரசின் உதவியுடன் தமிழில் நூல்கள் மொழிபெயர்க்கப் பட்டு வெளியிடப்பட வேண்டும் சீன உதவியுடன் யாழ்ப்பாணம் வவுனியா வன்னி முல்லைத்தீவு போன்ற இடங்களில் திறன் சார் தொழில்நுட்ப கல்லூரிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும்
  25. கலி முத்திப் போச்சு. வரிக்குதிரையும்.... முதலை இறைச்சி சாப்பிட தொடங்கி விட்டது. 😂 🤣 பகவானே... இது என்ன சோதனை. 😂
  26. கந்தப்பு நான் கடைசியில் இருந்து கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன் . .........நீங்கள் மிகவும் மினக்கெட்டு சிறப்பாக செயல் பட்டுக் கொண்டிருக்கிறீர்கள் .......வாழ்த்துக்கள் ........! 😂 தயவு செய்து வசியை கொஞ்சம் மேலே தூக்கி விடவும் ........நான் அவரைப் பார்த்தெழுதினதாய் நினைத்து கொண்டிருக்கிறார் ....... அது தப்பு என்று சொல்வதற்கு . .......!
  27. எதிர்வரும் 5ஆண்டுகளில் தெளிவான செய்தியை இடதுசாரிக் கோட்பாட்டு முகமூடியுள் மறைந்துள்ள புதிய சிங்கள இனவாத ஆட்சியாளரிடமிருந்து தெளிவானதும் முழுமையானதுமான பரிசுகளைத் தமிழினம் பெறும்வரை இந்த அங்கலாய்ப்புகள் தொடரும். முதலாவது ஆட்சி ஆண்டில் கொண்டுவரப்படும் அரசியல் திருத்தம் 13ஐ தூக்கி எறிவதோடு தொடங்கும் என்றே ஊகிக்கமுடிகிறது. அல்லது இந்தியாவைப் பகைக்காது 13இல் இருக்கும் ஏனைய பற்களையும் பிடுங்கிவிட்டு ஒப்புக்குத் தேர்தலை நடாத்தி அதிகாரங்களை மாகாணங்களுக்குக் கொடுப்பதாகக் காட்டிவிட்டுத் தமிழினத்தை பப்பாவிலேத்தித் தள்ளிவிடும் அரசியலை யே.வி.பி என்ற என்.பி.பி கையெலெடுக்கும். தமிழினம் கவர்ச்சியரசியலுள் அள்ளுண்டுபோயுள்ள சூழலில் தமிழினம் தனது இருப்பை எப்படித் தக்கவைக்கப்போகிறது என்பது மிகப்பெரும் வினாவாகத் தொக்கிநிற்கிறது. சிங்களத்தின் உளவு அமைப்புப் புலம்பெயர் நாடுகள்வரை வியாபித்துள்ள சூழலில், தாயகநிலை எப்படியிருக்கும், அவர்கள் தமிழ்த்தேசிய ஆதரவுத்தளங்களைச் சும்மாவிடுவார்களா? இல்லைத்தனே. ஆட்சியும் கட்சியின் பெயருமே மாறியுள்ளது. ஆனால், அமைந்துள்ளது சிங்களர் அரசாகும். யூரூப்பர்கள் மட்டுமன்றி சில முன்னணி ஊடகங்களும் இப்படியான தலைப்புகளைப் போடுவது வெட்கக்கேடு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  28. மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் தமிழரசு கட்சி 2ம் இடம் எனநினைக்கிறேன்.
  29. இப்படி சொல்லப்படாது 😅.அனுரா அதிரடி உத்தரவு "யாழ்ப்பாணிஸ் பனங்கொட்டையை சூப்புங்கோ" ,,,
  30. கிழக்கன்ஸுக்குதான் உண்மையான பிரச்சனையை உணர்கின்றனர் ....வடக்கன்ஸ் சும்மா வெளிநாட்டு காசில ஜாலியா சிங்கள பெண்களை சைட் அடிச்சு கொண்டு திரிகின்றனர்...அது இளைஞர் சமுதாயமாம் ..ஒரு கமரா ..டிரோன்..யூடியுப்...நான் ஊடகவிய்ளாலன் ...😅
  31. வினா 54) 4 போட்டியாளர்கள் தமிழரசு கட்சி 8 இடங்களை பிடிக்கும் என கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 46 புள்ளிகள் 2)பிரபா- 45 புள்ளிகள் 3)வாதவூரான் - 44 புள்ளிகள் 4) நிலாமதி - 42 புள்ளிகள் 5) வீரப்பையன் - 41 புள்ளிகள் 6)அல்வாயான் - 40 புள்ளிகள் 7)தமிழ்சிறி - 39 புள்ளிகள் 8)goshan_che - 39 புள்ளிகள் 9)நிழலி - 38 புள்ளிகள் 10)கிருபன் - 37 புள்ளிகள் 11) புரட்சிகர தமிழ் தேசீகன் - 37 புள்ளிகள் 12)நூணாவிலான் - 37 புள்ளிகள் 13)ரசோதரன் - 37 புள்ளிகள் 14)வில்லவன் - 36 புள்ளிகள் 15)கந்தையா 57 - 35புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 35 புள்ளிகள் 17)சுவைபிரியன் - 34 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 19)வாத்தியார் - 31 புள்ளிகள் 20)புலவர் - 30 புள்ளிகள் 21) அகத்தியன் - 30 புள்ளிகள் 22)குமாரசாமி - 30 புள்ளிகள் 23)புத்தன் - 29 புள்ளிகள் 24) சுவி - 28 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 34, 37 - 43, 48, 52, 54 ,59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 73)
  32. புலிக்குரல்… உங்களை மீண்டும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி. திருகோணமலை மாவட்டத்தில் அனுர கட்சியில் கேட்ட அந்த இளையவரைப் பற்றி பலரும் நல்ல மாதிரி சொன்னார்கள். உங்கள் தெரிவு நியாயமானது. புரிந்து கொள்கின்றோம். 🙂 👍🏽
  33. நானும் தான் ஊருக்கு போனேன். எங்க வெள்ளி பார்த்துக் கொண்டிருந்தனோ? @goshan_che னும் போயிருந்தார்.ஆனாலும் ஆள் காரை விட்டு இறங்கல்ல.
  34. கஸ்தூரி சொல்லி இருப்பது தெலுங்கு ஆண்களை தானே குறிக்கிறது (அந்தப்புர மகளிருக்கு சேவை) அந்தப்புர மகளிர் அரசிக்கு சேவை. அதில் பொதுவாக, ஆண்களே அந்தப்புர மகளிருக்கு பல கடின வேலைகளை செய்வது.
  35. இப்பவே பயங்கர ஆட்டம். இது இன்னும் வெளியே தெரியவில்லை. ஜேர்மனி ஓடின வேகத்தில் இன்னும் ஓடிக்கொண்டிருக்கு......வேகம் வருகிற வருடம் குறையும் என எதிர்பார்க்கலாம். பெரிய பெரிய நிறுவனங்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்றன. பல நிறுவனங்கள் திவாலாகி கொண்டு போகின்றது. ஏற்கனவே பொருளாதார பிரச்சனைகள். இந்த நிலையில் உக்ரேனுக்கு மிண்டு கொடுக்க வெளிக்கிட்டு சொல்லணாதுயரங்கள். அதை விட ரஷ்ய எரிபொருள் தடை இன்னுமொரு பெரிய இடி. ஜேர்மனி தொழிற்சாலை நாடு. அதற்கு காட்டாறு போல் 24மணி நேரமும் எரிவாயு வேண்டும்.அற்கு மலிவான ரஷ்ய எரிவாயு அவசியமாக இருந்தது. இன்று அது இல்லை. இருமடங்கு விலையுடன் நோர்வேயிடமும் அமெரிக்காவிடவும் இருந்து வரவேண்டிய அவசியம். அது கொம்பனிக்கு கட்டுப்படியாகவில்லை. இதனால் வேலை இழப்புகளும் அதிகமாகிக்கொண்டே போகின்றது. அதை விட ஜேர்மனியை நோக்கி அளவிற்கு அதிகமாக அகதிகள் வருகையும் இவர்களுக்கு பெரும் சுமையும் தலையிடியுமாகி விட்டது. இந்த அகதிகள் விடயத்தில் ரஷ்ய அதிபரும் துருக்கி அதிபரும் பக்காவாக செயல்படுகின்றார்கள் என பல இடங்களில் கேள்விப்பட்டுள்ளேன். இத்துடன் என் அறுவைய முடித்துக்கொள்கின்றேன். 😂
  36. இல்லை உங்களை அடக்கவில்லை. நீங்கள் தமிழ் தேசியவாதி இல்லை எனும் போது உங்கள் எதிர்பார்ப்பு சகல இலங்கையரினதும் வழக்கை மேம்பட்டால் போதும் என்பதே. நீங்கள் தமிழ் தேசியர் இல்லாதபடியால், திட்டமிட்டு குடியேற்றங்கள் மூலம் எம் நிலத்தில் எம் இனப்பரம்பல் சிதைக்கப்படுவதும், விகாரைகள் முளைப்பதும் உங்களுக்கு பொருட்டாயிராது. எமது பகுதியில் நீங்கள் வசிக்கும் நாடு போல ஒரு உள்ளூர் பொலிஸ் இருக்க வேண்டும் என்பதும் உங்கள் அவா இல்லை. எமது பகுதிக்கு என நாம் அனுப்பும் பணத்தை எங்கே எப்படி செலவழிப்பது என்று, கொழும்பு அதிகாரிகள் அன்றி அந்த பகுதி மக்களே செலவழிக்கும் முடிவை எடுக்கும் அதிகாரம் வேண்டும் என நீங்கள் நினைக்க போவதில்லை. ஏனென்றால் நீங்கள் தமிழ் தேசியர் அல்ல. நீங்கள் இருக்கும் நாட்டில் உள்ளூர் அதிகார பரவலின், மொழி வழி கண்டோன் பிரிப்பின் அத்தனை வரபிரசாதங்களை நீங்கள் அனுபவித்தாலும், இதை எம்ம்மக்களும் பெற வேண்டும் என்ற வீண் அவா உங்களுக்கு இல்லை. அவர்கள் கொழும்பில் இருந்து தொந்தரவு இல்லாமல் ஆளப்பட்டால், போதும் என நீங்கள் நினைக்கிறீர்கள். எனவே நீங்கள் தமிழ் தேசியர் இல்லை. அதனால் அனுரவிற்கு ஆதரவு நல்லினாலும் நீங்கள் அனுர பிரிகேட்டில் இல்லை. அனுர பிரிகேட், தமிழ் தேசியமும் பேசி கொண்டு, அனுரவையும் ஆதரிக்கும் கொன்பியூஸ்ட் கூட்டம்.
  37. நல்லதொரு பாட்டு இணைப்புக்கு நன்றி அல்வாயன்.
  38. வினா 20 ) 4போட்டியாளர்கள் மனோகணேசன் அவர்கள் வெற்றி பெற மாட்டார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் 1)பிரபா - 43 புள்ளிகள் 2)வாதவூரான் - 42 புள்ளிகள் 3)வாலி - 41 புள்ளிகள் 4)வீரப்பையன் - 39 புள்ளிகள் 5) Alvayan - 38 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 37 புள்ளிகள் 7)கிருபன் - 37 புள்ளிகள் 8)goshan_che - 37 புள்ளிகள் 9)நூணாவிலான் - 37 புள்ளிகள் 10)நிழலி - 37 புள்ளிகள் 11)நிலாமதி - 37 புள்ளிகள் 12) ரசோதரன் - 37 புள்ளிகள் 13) கந்தையா 57 - 35புள்ளிகள் 14) புரட்சிகர தமிழ் தேசிகன் - 35 புள்ளிகள் 15) வில்லவன் - 34 புள்ளிகள் 16)ஈழப்பிரியன் - 33புள்ளிகள் 17)சசிவர்ணம் - 33 புள்ளிகள் 18)சுவைபிரியன் - 32 புள்ளிகள் 19)புலவர் - 30 புள்ளிகள் 20)வாத்தியார் - 29 புள்ளிகள் 21) புத்தன் - 29 புள்ளிகள் 22)அகத்தியன் - 27 புள்ளிகள் 23)குமாரசாமி - 27 புள்ளிகள் 24) சுவி - 26 புள்ளிகள் 25) வசி - 22 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 13, 16 - 20, 22, 24 - 31, 33, 34, 37 - 43, 48, 52 , 59 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 68)
  39. இணையவழங்கி மாற்றம் எதிர்பார்த்த வெற்றியைத்தரவில்லை என்பதால் இன்றைய தினம் மாற்றிக் கொள்ள முடியவில்லை.
  40. ஆகக்கூடிய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்கா வரலாற்றில் இம்முறை தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். https://lankasara.com/news/record-breaking-womens-representation-in-sri-lankas-new-parliament/
  41. என்னதொரு ஈனப்பிறவிகள்? பட்டும் திருந்தவில்லை. இனத்தின் பெயரால் சுகபோக வாழ்க்கை வாழ்த்துடிக்கும் சூடு சுரணை இல்லாத கூட்டம்.😡 உங்களைப்போன்றவர்களால்த்தான் மக்கள் மாற்றான் கட்சி தலைவர்களை தேர்ந்தெடுக்கின்றார்கள். நியாயப்படி பார்த்தால் கிழக்குமாகாணத்திற்கே அனைத்து நியமனங்களும் செல்ல வேண்டும்.
  42. பாராளுமன்ற உறுப்பினர்களாக இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்ட பெண்களின் விபரம். தமிழ் பிரதேசங்களில் எல்லாக் கட்சிகளிலும் பெண்கள் போட்டியிட்ட போதிலும் அக்கட்சிகளுக்கெல்லாம் வாக்களித்த மக்கள் பெண்களை தெரிவு செய்ய வில்லை. வன்னி மாவட்டதில் சங்கு சின்னத்தில் போட்டியிட்ட யுத்ததில் அங்கவீனமுற்ற பெண் போராளியை கூட மக்கள் தெரிவு செய்ய வில்லை. யுத்தத்தில் களப்பலியாகவும் கரும்புலியாகவும் போக பெண்கள் தேவைப்பட்ட தமிழ் மக்களுக்கு தலைமை வகிக்க பெண்கள் தேவையில்லை போல் உள்ளது.
  43. இந்த மானசீக வாக்கெடுப்பு யாழ், வன்னி தேர்தல் மாவட்ட முடிவுகளை பெரிதும் ஒத்திருக்கிறது. உண்மையில் யாழ் களம் போல இதுவரை கடும் தமிழ் தேசியம் பேசியவர்கள், வடமாகாணத்தவர் அநேகர் இருக்கும் ஒரு தளத்தில் கூட என் பி பி 27.4% எனும் போது - அது யாழ் வன்னி மாவட்டங்களில் வரவிருக்கும் நிஜ தேர்தல் முடிவை ஆரூடம் கூறியது என்பதே உண்மை (யாழ் மாவட்டத்தில் என் பி பி 25%). அத்தோடு புலம்பெயர் தேசத்தில் த.தே.ம.மு வுக்கு இருக்கும் அதீத ஆதரவு, நாட்டில் இல்லை என்பதை கருத்த்தில் எடுத்து பார்க்கும் போது….இந்த “புலம்பெயர் எப்பெக்ட்” ஐ கழித்து விட்டு பார்த்தால் வரவிருந்த முடிவுக்கான க்ளூக்களை இந்த மானசீக தேர்தல் கொடுத்திருந்தது, ஆனால் நாம் (நிச்சயமாக நான்) அதை அப்போது உணரவில்லை என நினைக்கிறேன். அருச்சுனாவுக்கு 1 சீட் (13.5%) அப்படியே நிஜத்தேர்தலில் பலித்துள்ளது. —/—— ஆனால் கிழக்கின் 3 மாவட்ட மக்களின் எண்ண ஓட்டத்தில் இருந்து மானசீக தேர்தல் முடிவுகள் பெரிதும் வேறுபட்டு நிற்கிறது. இதற்கு பிரதான காரணம் சிறிய மாதிரி அளவு (சாம்பிள் சைஸ்) என நினைக்கிறேன். வாக்களிப்பில் பங்கு கொண்டோரில் மிக சிறிய அளவிலானோரே கிழக்கு மாகாண பூர்வீகத்தினர் என நினைக்கிறேன். கலந்து கொண்டும், திரியில் எழுதியும் சிறப்பித்த அனைவருக்கும் நன்றி.
  44. கோவண கப்பிதனுக்கு சிந்தனைக் குறைபாடு உள்ளது என்பது ஏற்கனவே தெரியும். இங்கு யார் கொண்டாடினார்கள்? உங்களால் ஒன்றும் புடுங்க முடியாது..🤣 சும்மும் தமிழ் தேசியத்தை வைத்து வியாபரம் செய்யட்டும் என கூறிய தாங்கள் இன்று உரிமைப் பிரச்சனையில் நிக்கிறியள்…
  45. @நிலாமதி, @யாயினி, @nilmini, @Kavallur Kanmani, @தமிழினி, @வல்வை சகாறா, @கறுப்பி, @பெருமாள், @alvayan, @ரசோதரன், @ஈழப்பிரியன், @நீர்வேலியான், @நியாயம், @விசுகு, @goshan_che, @Ahasthiyan, @nedukkalapoovan, @குமாரசாமி, @nochchi, @satan, @Sasi_varnam, @putthan, @உடையார், @Sabesh, @valavan, @Kapithan, @Justin, @Kavi arunasalam, @நிழலி, @nunavilan, @புங்கையூரன், @இணையவன், @மோகன், @நீர்வேலியான், @Paanch, @பாலபத்ர ஓணாண்டி, @ஏராளன், @நந்தன், @சுப.சோமசுந்தரம், @ராசவன்னியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @வாலி, @புலவர், @Eppothum Thamizhan, @MEERA, @விளங்க நினைப்பவன், @ரஞ்சித், @பிரபா, @கந்தப்பு, @வாதவூரான், @island, @நன்னிச் சோழன், @தனிக்காட்டு ராஜா, @colomban, @பகிடி, @பசுவூர்க்கோபி, @uthayakumar, @kandiah Thillaivinayagalingam, @theeya, @kalyani, @முதல்வன், @P.S.பிரபா, @Maruthankerny, @ரதி, @vanangaamudi, @ragaa, @villavan, @Elugnajiru, @zuma, @அக்னியஷ்த்ரா, @வாத்தியார், @Kandiah57, @vaasi, @vasee, @சுவைப்பிரியன், @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலிக்குரல், @S. Karunanandarajah, @saravanar, @Kadancha, @Thumpalayan, @paragon, @ஊர்க்காவலன், @nirmalan, @தமிழன்பன், @நந்தி, @வைரவன், @aaresh, @செவ்வியன், @nirmalan அன்பான யாழ்.கள உறவுகளே... மேலே உள்ள... இலங்கை பாராளுமன்ற, இரகசிய வாக்கெடுப்பில் கலந்து கொள்ள உங்களை அன்புடன் அழைக்கின்றோம். இது, இரகசிய வாக்கெடுப்பு என்பதால்... நீங்களாக வெளியே சொல்லாதவரை, எந்தக் கட்சிக்கு வாக்களித்து உள்ளீர்கள் என்று எவருக்கும் தெரியாது. ஆகவே... தயங்கமால் நீங்கள் தெரிவு செய்து வாக்களிக்கப் போகும் கட்சிக்கு முன்னே உள்ள, வட்டத்தில் கிளிக் பண்ணி வாக்களிக்க முடியும். இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரமே எடுக்கும் என்பதால்... உங்கள் வாக்களிப்பை ஆவலுடன் எதிர் பார்க்கின்றோம். இது... இலங்கையில் நடக்க இருக்கும் தேர்தலை முன்னிட்டு... யாழ். கள உறவுகளின் அரசியல் மனநிலையை, நாடி பிடித்து பார்க்கும் தேர்தல் என்ற படியால்... தயங்காமல், உற்சாகத்துடன் கலந்து கொள்ளுங்கள். 🙂
  46. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழ்க ❤️ வளத்துடன்
  47. திரு.திருமதி திலீபன் இருவருக்கும் இனிய திருமண நல் வாழத்துக்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.