Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    88827
    Posts
  2. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    33372
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19670
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46977
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/21/24 in all areas

  1. முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.
  2. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  3. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  4. என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
  5. முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html
  6. தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஹிந்தியனுக்கும் விடுதலைப்புலிகள் வியாபாரப்பொருள்.
  7. இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி... யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி விலாசம் காட்ட வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன்.
  8. அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை பாராளுமன்றத்தில் முதலாவது நாள் விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது என்று எழுதவில்லை இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை அதை அர்ச்சுனா கேட்கிறார் பணியாளர்களிடம். எங்கே எழுதப்பட்டுளளது என்று ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும் அடுத்த முறை தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣 மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க. பலமில்லாத. சம்பந்தன் அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார் உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான் எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும் சம்பந்தன். சுமத்திரன் குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும் அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம்
  9. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
  10. நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.
  11. பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜
  12. 75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?!
  13. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  14. கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
  15. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  16. இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆
  17. மீனுக்கு டைனமைற் அடித்திருப்பார்கள். அதில் விபத்து ஏற்பட்டிருக்கும். 😏
  18. நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது?
  19. அப்ப ஸ்ரீதர் தியேட்டரில கொஞ்ச நாளையால தமிழ்படங்கள் ஓடும் எண்டுறியள்....😁
  20. மாவை,சம்பந்தன் போன்ற இறுக்க முகங்கள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். அர்ச்சுனா போன்ற கலகலப்பு பேர்வளிகள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால்..... அண்மையில் இலங்கை தேர்தல் அரசியலில் அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என துளியளவும் தெரியாமல் கண்டபடி விமர்சனங்களை வைக்கின்றார்கள் போலிருக்கின்றது. ஊர் பாசையில் சொல்வதானால் ஆடறுக்க முதல் அதை அறுக்க அவசரப்படுகின்றார்கள் போலுள்ளது. 😂 ஒரு ஆறு மாதம் பொறுத்து எதையும் எழுதலாம் அல்லது வழமை போல் திட்டலாம் என்பது என் கருத்து.
  21. பண விடயத்தில் சொந்த உறவினர்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் தனிமையில் இருக்கும் போது இவ்வளவு ரொக்க பணத்தை என்ன தைரியத்தில் வைத்திருந்தார்? நான் சிலோனுக்கு போறதாய் இருந்தால் ஒரு சாறமும் ஒரு துவாயும் மட்டும் கொண்டு போவன். 😂
  22. பரட்டை பத்தவைக்க போகுது. அனுரா இந்தியா போவதாக சொன்னார்கள். அதுக்கு முதல் இயலுமானவரை போட்டு குடுக்கத்தான்.
  23. புலிக் குட்டி, தயவுசெய்து உந்த குப்பை கூழங்களைத் தவிர்த்து வேறு ஏதாவது ஓரளவாவது நம்பகமான தகவல் மூலங்களை நாடுங்கள். உந்த ஈயடிச்சான் குஞ்சுளை உங்க இணைக்காதேயுங்கோ, உங்களுக்குப் புண்ணியமாப் போகும். கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை பாவித்திருக்கலாம் என்று நம்பப்படுகிறதே தவிர அந்தச் செய்தி தற்போதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. பாவிக்கப்பட்ட ஏவுகணையின் பாகங்களை ஆராய்ந்து பார்த்த பின்னரே உறுதிப்படுத்த முடியும் என்று உக்ரேன் தரப்பு கூறியுள்ளது.
  24. ஆம் தமிழர். தனிப்பட்ட ரீதியில் இவரை தெரியாது. (இரண்டு தமிழர்களுக்கு பிரதி அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது)
  25. பையா… படத்தைப் பார்த்த ஆட்கள், மயக்கம் போட்டு விழுந்து விட்டார்கள் போலுள்ளது. 😂 🤣
  26. யாழ்.(Jaffna)மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன்(Dr.Archuna) புதிய நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வு இன்றையதினம்(21) ஆரம்பமானபோது பாரம்பரியமாக எதிர்க்கட்சித் தலைவருக்கு ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்ததுடன் அந்த கதிரையிலிருந்து நகர மறுத்தமை பேசுபொருளாக மாறியுள்ளது. இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றுக்கான கன்னி அமர்வு இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இதன்போது முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினரான வைத்தியர் அரச்சுனா எதிர்க்கட்சித் தலைவரின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். ஆசனத்திலிருந்து நகர மறுத்த அர்ச்சுனா உடனடியாகவே நாடாளுமன்ற ஊழியர்கள் இது எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனம் எனவே அந்த இடத்திலிருந்து நகருமாறு தெரிவித்தபோதும் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். https://x.com/SriLankaTweet/status/1859483335610991059 நாடாளுமன்றின் முதல்நாள் அமர்வில் ஆசனங்கள் எவருக்கும் ஒதுக்கப்படவில்லை என வைத்தியர் அர்ச்சுனா நாடாளுன்ற ஊழியருக்கு பதிலளித்தார். அத்துடன் எதிர்க்கட்சித் தலைவருக்கான ஆசனத்தை அறிவிக்குமாறு கோரிய அவர், அந்த ஆசனத்திலிருந்து நகர மறுத்ததுடன் நாங்கள் நாடாளுமன்ற மரபை மாற்றவே இங்கு வந்துள்ளோம் என தெரிவித்தார். https://ibctamil.com/article/dr-archchuna-sits-in-opposition-leader-s-chair-1732175189
  27. அப்படி இல்லை அண்ணை இப்ப காத்தான் குடி கல்லடி வரைக்கும் போய் விட்டது மட்டக்களப்பு மக்களுக்கு இத்தேர்தலுடன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தேன் காரணம் பிள்ளையான் இருக்கும் வரைக்கும் அவர்கள் காணி வாங்கி உள்வரவில்லை ( விடவில்லை) இப்ப கிஸ்புல்லா மீண்டும் தெரிவாகி உள்ளார் இனி கல்லடியும் காத்தான் குடிதான் காத்தான் குடியில் இல்லாத பொலிஸ் நிலையமே காத்தான் குடியில் இருக்கு என்று சொல்கிறார்கள் (மஞ்சந்தொடுவாய் பொலிஸ் நிலையல் இருப்பது) தற்போது கல்லடி இசைநடனக்கல்லூரிக்கு அருகாமையில் குடிவந்துள்ளார்கள் முஸ்லீம்கள் அப்ப மட்டக்களப்பானுக்கு வாழ்த்து சொல்லத்தானே வேண்டும் சிலமாதங்களுக்கு முன்னர் கல்லடி பாலத்துக்கு அருகாமையில் காணியை பிடிக்க அடித்து நொருக்கி ஓடவிட்டார்கள் இனிமேல் அதற்கு ஆள் இல்லை சாணாக்கியனும் , சிறிநேசனும் , பிரவும் புட்டும் தேங்காய் பூ கதையும் சொல்வார்கள்
  28. தனிக்காட்டு ராஜா... உங்களை மீண்டும், யாழ். களத்தில் காண்பது மகிழ்ச்சி. 🙂 தொடர்ந்து காணாமல் போகாமல், இடைக்கிடையாவது வந்து கொஞ்சம் எழுதுங்கள்.
  29. இதுவரை சாதரண/உயரதரம் கற்ற பெண்பிள்ளைகள் தான் முன்பள்ளி ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு அரசு உதவிப்பணமாக 6000ரூபா வழங்குகிறது. பெற்றோரிடம் இருந்து ஒரு பிள்ளைகளுக்கு 1000ரூபா பெறுகிறார்கள்! அரசு முன்பள்ளிகளை உள்வாங்கினால் பட்டதாரிகளுக்கு(உலக அளவில் முன்பள்ளிக் கல்வி கற்பிக்க சிறப்பு பட்டதாரிகளையே அனுமதிக்கிறார்கள்) வேலைவாய்ப்பும் ஏற்கனவே இருந்தவர்களுக்கு உதவி ஆசிரியர் பணியும் கொடுக்கலாம் என எண்ணுகிறேன் அண்ணை.
  30. நான் ஊரில் போய் இருந்தாலும்... இந்த மொக்கு மனிசி மாதிரி... காசை அலுமாரியில் அடுக்கி வைக்க மாட்டேன். எனது ஊர் அலுமாரியில்... ஒரு சோடி சாரமும், ஒரு சோடி கால் சட்டையும், இரண்டு சோடி சேர்ட் மட்டுமே இருக்கும். வளவுக்குள் கால் வைக்கிறவனின்... ஈரல் குலையை புடுங்கி எடுக்க, வீட்டுக்கு வெளியில்... இரண்டு அல்சேஷன் நாய் நிற்கும். 😂 🤣
  31. வரப்பு என்றால் சாதாரணமா, அது ஒரு நாட்டு எல்லை மாதிரி . .........! 💪
  32. சுவியர்... அளவுக்கு மிஞ்சிப் போனால், பாரளுமன்ற அமர்வுகளில் மாதக்கணக்கில் கலந்து கொள்ள முடியாமல் தடை செய்து விடுவார்கள். பிறகு... யாழ்ப்பாண பஸ் நிலையத்தில் நின்றுதான் பேட்டி கொடுக்க வேண்டும்.
  33. சீனாக்காரன் பருத்திதுறையில் வந்து தமிழ் மக்களை(ஒன்னிக்கு இருக்க சொன்ன சிங்களவ்னுக்கு ஆப்பு வைக்கும் வகையில் வட மாகாணம் என பிரித்து பேசுகிறான்...எமக்கு கிடைத்த வெற்றி)பற்றி கருத்து சொல்லுகிறான் ...இது தான் சிறிலங்காவின் இறையாண்மையா? ... கிழக்கு மாகணத்தில் தொண்டமானை ஆளுனராக்கி அழகு பார்த்த இந்தியாவுக்கு அடுத்த ஆப்பு வைத்த சீனா... நாம் அமைதியாக இருந்து வட்மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பாதுகாக்க வேணும் மிகுதியை இந்தியாவும் சீனாவும் அமெரிக்காவும் பார்த்து கொள்வார்கள் ....எம்மவர்கள் இந்த மூன்று சாத்தன்களின் பின்பும் போகாமல் சுளிச்சு வெட்டி ஓட வேணும்
  34. உண்மையான இடதுசாரிகளென்று, இன்று உலகில் எங்குமே இல்லை. இதில் சிங்கள பௌத்த பேரினவாதத்துள் ஊறியவர்களைக் கூறவும் வேண்டுமா? உண்மையான இடதுசாரிகளாயின் சுனாமிக்காலத்தில் உருவான கட்டமைப்மைப்புக்கான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருக்கும். அதன் தொடர்ச்சியாக நல்ல மாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். அதற்கான வாய்ப்புகளைக் குழப்பியயடித்தவர்கள். இவர்களிடம் எமது மக்கள் அதிகம் எதிர்பார்கிறார்கள். ஆனால், இறுதியில் ஏமாற்றமே பரிசாகும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  35. இல்லை…. 1. ஜனாதிபதி 2. பிரதமர் 3. சபாநாயகர் 4. பிரதம நீதி அரசர், எதிர்கட்சித்தலைவர், கபினெட் அந்தஸ்து மந்திரிகள், மத்திய வங்கி ஆளுனர், பீல்டு மார்ஷல்கள் 5. மாகாண ஆளுனர்கள், பிரதி அமைச்சர்கள், பிரதி சபாநாயகர் - இப்படித்தான் இந்த வரிசை போகும். https://en.m.wikipedia.org/wiki/Sri_Lankan_order_of_precedence
  36. இந்திய மேற்குலக்கூட்டுகுச் சாதகமான அரசியலே கடந்த 15ஆண்களாக நடைபெற்றது. அடுத்துவரும் அநுர அரசும் அப்படியே. முதல் பயணமே இந்தியா. சீனாவுக்கோ அல்லது ரஸ்யாவுக்கோ போகவில்லை. எமது பிரச்சினை தீரும்வரை பேசவேண்டியதேவையும் இருக்கும். அது ஒருவேளை சிங்களத்துக்காக இனவாதத்தோடு நாய் குலைத்தாற்கூட பதிலளிக்க வேண்டிய சூழலே தமிழினத்தினதாக உள்ளது. நாம் எமது தலைமுறையில் காணமுடியாமல் போனாலும் அடுத்தலைமுறைக்காவது இவற்றைப் பதியமிடப் பேசவேண்டும். எதிர்ப்பைப் பதிவுசெய்ய வேண்டும். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  37. கருத்தை படித்தேன், நினைத்தேன் சிரித்தேன்.
  38. அருமையான கருத்து வாலி. கொல பாட்ட இவராய் மள்ளி🤣.
  39. நீங்கள் அவாவை அனுரகுமார திசநாயக்கவின் கட:சில் இறக்க ஓடிஓடித்திரிவீர்கள் என்று நன்றாகவே தெரியும். நிலா அக்கா உண்மையான தமிழிச்சி சிங்கல கட்சியில் போட்டியிட மாட்டார். 💯 ✅ நானும் ஆரம்பத்தில் இவரை பெரிதாக தான் நினைத்தேன்
  40. ஹிருணிகா பிரேமசந்திர மீது இருக்கும் பல்வேறு பட்ட விமர்சனங்களுக்கு அப்பால்... இவரின் துணிந்த கருத்துக்கள், இடம், பொருள், ஏவல் பார்க்காமல்.... உடனடியாக களத்தில் நின்று போராடும் தன்மை பாராட்டப் பட வேண்டியது. "அரகலய" போராட்டத்தின் போது... கோத்தா இருந்த ஜனாதிபதி மாளிகைக்குள், நான்கு அடுக்கு கடுமையான பாதுகாப்பையும் மீறி உள்ளே சென்ற துணிச்சலான பெண்மணி. மகிந்த, ரணில் ஆட்சியில் இருந்த போது கூட.. மக்களை திரட்டி... அவர்களின் வீட்டு வாசலில் நின்று போராடியவர். இந்த அரசாங்கம் அசுர பலத்துடன்... பாராளுமன்றத்தில் இருக்கும் நிலையில்.. இவர் போன்ற துணிச்சலான ஒருவர், பாராளுமன்றத்துக்குள் இருப்பது காலத்தின் கட்டாயம்.
  41. நம்பிக்கை தரும்... அருமையான கவிதையை எழுதிய பசுவூர்க்கோபிக்கு நன்றி. புதிய அரசு... தமிழ் மக்களின் நீண்ட கால ஏக்கத்தையும், துயரத்தையும் போக்க முன் வர வேண்டும். இராணுவ முகாம் அகற்றுதல், பாதை திறப்பு போன்ற விடயங்கள் நல்ல முன்மாதிரியாக உள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.
  42. இவ‌ரின் இசைய‌ கேட்டு தான் வ‌ள‌ந்தேன் தாத்தா இவ‌ர் மிக‌வும் நேர்மையான‌ ம‌னித‌ர்.................திற‌மையான‌ இசைய‌மைப்பாள‌ர்....................இவ‌ரின் இசையில் சிறுவ‌ய‌தில் நான் கேட்ட‌ முத‌ல் பாட்டு (முக்காலா முக்க‌பில்லா ஓ லையிலா)................1999ம் ஆண்டு ஒட்டு மொத்த‌ த‌மிழ‌ர்க‌ளையும் த‌ன் இசை மூல‌ம் திரும்பி பார்க்க‌ வைத்த‌வ‌ர்......................ஈழ‌த்தின் மேல் அதிக‌ ப‌ற்று அத‌ற்க்கு அவ‌ர் பாடிய‌ பாட‌ல் ஓன்றே சாட்ச்சி அந்த‌ பாட்டை ஜ‌ரோப்பாவிலும் பாடின‌வ‌ர்................... அந்த‌ பாட்டு இதே கேட்டால் க‌ண் க‌ல‌ங்கும்
  43. கங்குவாவிற்கு காட்டும் எதிர்ப்பை ஒரு கவுன்சிலருக்கு காட்டுவதில்லையே என்று சொல்வது அவ்வளவு சரியான ஒரு உவமையாக, ஒப்பீடாகத் தெரியவில்லை. ஒரு நாயகனின் நாலு படங்கள் ஓடினாலே புரட்சி, செம்மல், தளபதி என்று வகைவகையாக பட்டங்களும் கொடுத்து, அடுத்த முதலமைச்சர் என்று கொண்டாடுவதும் இதே மக்களே. அவர்கள் ஒரு நல்ல கவுன்சிலருக்கு இந்தப் பட்டங்களும் கொடுப்பதில்லை, கவுன்சிலரை அடுத்த முதலமைச்சர் என்று சொல்வதும் இல்லை. கொடுக்கும் போது அளவுக்கதிகமாகவே கொடுக்கின்றனர், பின்னர் எடுக்கும் போதும் பறித்து எடுத்துக் கொள்கின்றனர். இந்த தொழிலில் இருக்கும் அபாயம் இது. தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்கும் இதே அளவு அபாயம் இருக்கின்றது. நன்றாக விளையாடினால் தோளில் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள், இல்லாவிட்டால் 'வீட்டுக்கு போ..................' என்று கல்லெறிவார்கள். ஒரு கடையில் அரிசி நன்றாக இல்லை என்றால், மக்கள் அங்கே அரிசி நன்றாக இல்லை, அங்கே போகாதே என்று தான் சொல்லுவார்கள். அது போலவே இந்த வியாபார நோக்கில் எடுக்கப்பட்டு சந்தைக்கு வரும் சினிமாக்களுக்கும் நடக்கின்றது.
  44. அங்கை ஒண்டும் இவேலுக்கு குடுகத் தேவையில்லை. இப்ப இருக்கிற இரண்டு தமிழ் அமைசர்களும் இந்திய வம்சாவழியைச் சார்ந்தவர்கள். இந்த மண்ணின் குடிகளான இலங்கைத் தமிழர் நாங்களே அமைச்சுப் பதவி கேட்கவில்லை. அதுக்குள்ள இவேலுக்கு வேணுமாம்!
  45. இலங்கையில் எவரும் தமிழ் பேசும் சமூகம் என உணர்வதில்லை. இது வெறும் வார்த்தை மட்டுமே. அவர்கள் சோனர் அல்லது இலங்கை முஸ்லிம்கள் - தனி இனப்பிரிவு என்கிறது அரசியலமைப்பு சட்டம். அவர்களும் அவ்வாறே உணர்கிறனர். அதே போல் இந்திய வம்சாவழி தமிழர், இலங்கை தமிழர் என இரு பிரிவுகள் இருப்பதையும் இலங்கை குடிசன மதிப்பீடுகள் ஏற்கிறன. இதில் நீங்கள் சொன்ன இரு தமிழ் அமைச்சர்களும் இந்திய வம்சாவழியினரே. இலங்கை வம்சாவழி (வடக்கு-கிழக்கு) தமிழரும், சோனகர் போலவே அமைச்சரவையில் இடம் இல்லாமல் ஒதுக்கலுக்கு ஆகியுள்ளனர். இதில் சரஜோ அக்கா - அசித்த எனும் சிங்கள வைத்தியரை மணம் முடித்து மாத்தறையில் வாழ்பவர். இவர்கள் இருவரையும் காட்டி - இலங்கை தமிழருக்கு இடம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது கபட நாடகம்.
  46. 19 வயதில், அவர் சிறையில் அடைக்கப்பட்டார், அமெரிக்க ரகசிய சேவையில் ஊடுருவி நாட்டின் பல ரகசியங்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டார். இவரது தந்தை தனியாக வசித்து வந்த முதியவர். ஒரு நாள், அவர் தனது தோட்டத்தில் உருளைக்கிழங்கை நடவு செய்ய விரும்பினார், ஆனால் அவரது முதுமை காரணமாக அவ்வாறு செய்ய அவருக்கு வலிமை இல்லை. பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்ட தனது மகனுக்கு ஒரு செய்தியை அனுப்பினார், அது கூறியது: சிறிது நேரம் கழித்து, தந்தைக்கு மகனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது: செய்தி வெளியான ஒரு மணி நேரத்திற்குள், இரகசிய சேவைகளும் இராணுவமும் அந்த வீட்டை சுற்றி வளைத்தன. அவர்கள் பூமி மீட்டரை மீட்டரைத் தோண்டி, எல்லாவற்றையும் அகற்றினர், ஆனால் எதுவும் கிடைக்கவில்லை, வீட்டை விட்டு வெளியேறினர். ஒரு வாரம் கழித்து, தந்தைக்கு ஒரு புதிய கடிதம் வந்தது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.