Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    23
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    19122
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    31968
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    8
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/21/24 in all areas

  1. முன்னரே குறிப்பிட்டது போன்று இன்றிரவுடன் பழைய இணைய வழங்கிக்கு உரிய காலம் முடிவடைவதால் ஒரு வாரத்திற்கு முன்னரே சில ஆரம்பச் செயற்பாடுகளைச் செய்து ஆயத்தப்படுத்திக் கொண்டு, நேற்று முன்தினம் இரண்டு மணி நேரத்திற்குள் மாற்றி விட முடியும் என்று நம்பிக்கையுடன் இணைய வழங்கி மாற்றத்தைத் தொடங்கிய பின், தொடர் பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய நிலைவந்துவிட்டது. இதனால் ஏற்பட்ட அசெகரியங்களுக்கும் / தடங்கலுக்கும் வருத்தத்தினை யாழ் இணையம் தெரிவித்துக் கொள்கின்றது.
  2. நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
  3. ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕
  4. என்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!
  5. முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு! Vhg நவம்பர் 19, 2024 தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இரத்து செய்யப்படும் என பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய திட்டவட்டமாக அறிவித்தார் அவர் ஊடகங்களுக்கு இத்தகவலை வழங்கினார். இனிவரும் காலங்களில் தரம் 8 வரை மாணவர்களுக்கு போட்டி பரீட்சைகள் நடத்தப்பட மாட்டாது. முன்பள்ளி கல்வி திட்டம் முழுமையாக அரசாங்கத்தால் சுவீகரிக்கப்படும் அத்துடன் இப் பிரிவு உட்பட ஆரம்பக்கல்வி கட்டமைப்பு முன்பள்ளி அதிகார சபை ஒன்று ஸ்தாபிக்கப்பட்டு அதன்கீழ் வழி நடத்தப்படவுள்ளது. இப்பிரிவுக்கான ஆசிரியர்கள் அரசாங்க நியமனங்களாக வழங்கப்படும் அதே வேளை இவர்கள் பட்டதாரிகளாக ஆரம்பத் கல்வித் தகுதியை பெற்றிருப்பது அவசியம் எனவும் தெரிவித்த பிரதமர் மேற்படி மாற்றங்கள் உடனடியாக அன்றி படிப்படியாக சீரான திட்டமிடலுக்கு அமைய இடம் பெறும் எனவும் அவர் தெரிவித்தார். https://www.battinatham.com/2024/11/blog-post_873.html
  6. தமிழ் அரசியல்வாதிகளுக்கும் ஹிந்தியனுக்கும் விடுதலைப்புலிகள் வியாபாரப்பொருள்.
  7. இது... மழை விட்டும், தூவானம் விடவில்லை என்ற மாதிரி... யாரோ ஒரு "அப்பிரண்டீஸ்" கஞ்சா வெறி முறியாமல், வாளை தூக்கி விலாசம் காட்ட வெளிக்கிட்டு, அம்பிட்டுப் போச்சுது என நினைக்கின்றேன்.
  8. அவர்கள் செய்தியை பூரணமாக வாசிக்கவில்லை பாராளுமன்றத்தில் முதலாவது நாள் விரும்பி இடத்தில் அமரலாம். என் அறிவித்தல் இருந்தது ஆனால் பிரதமர் எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலிருக்கூடாது என்று எழுதவில்லை இது எதிர்கட்சிதலைவர். ஆசனமென்றும். எழுதவில்லை அதை அர்ச்சுனா கேட்கிறார் பணியாளர்களிடம். எங்கே எழுதப்பட்டுளளது என்று ஆகவே அவர் விரும்பிய இடத்தில் முதல் நாள் இருந்தது சரியாகும் அடுத்த முறை தனக்கு ஒதுக்கீடு செய்த இடத்தில் இருப்பார் 🤣 மகிந்த ராஜபக்ஷ 2015 ஆண்டில் எதிர்கட்சியில். பலமுடனிருக்க. பலமில்லாத. சம்பந்தன் அரசாங்கத்திற்கும் ஆதரவு அளித்து கொண்டு எதிர்கட்சி தலைவராகவும். இருந்தார் உண்மையில் மகிந்த ராஜபக்ஷ தான் எதிர்கட்சி தலைவராக இருந்து இருக்க வேண்டும் சம்பந்தன். சுமத்திரன் குறுப். அரசாங்கத்துக்குள் இருந்து இருக்க வேண்டும் அமைச்சர்கள் ஆகி அபிவிருத்தி செய்திருக்கலாம்
  9. சோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.
  10. நீங்கள், சொல்லுறதை பார்த்தால்... உப சபாநாயகர் என்பது, 99´வது இடத்திற்கு வரும் போல் உள்ளதே.
  11. பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜
  12. 75 வருடமாய் நம்பி ஏமாந்தோம், இன்னும் 5 வருடங்கள் நம்பமாட்டமா?!
  13. இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀
  14. கமல் என்னும் நடிகர் மீது எனக்கு நல்லதொரு அபிப்பிராயம் இருக்கின்றது, வளவன். பார்வையாளர்களை நம்பி பல நல்ல படங்களில் நடித்திருக்கின்றார். நீங்கள் சொல்லியிருப்பது போலவே சில கூட்டணிகளில் இன்னும் நல்லாவே செய்திருக்கின்றார். ஆனாலும் பல படங்கள் தலையை சுத்தியும்விடும். விஸ்வரூபம் - 2, இந்தியன் - 2 , மன்மதன் அம்பு, உத்தம வில்லன்,................. இப்படி பல. சில படங்கள் மிகச் சிக்கலானவை - குணா, ஹே ராம்,............. போன்றவை. என்ன ஆனாலும் இவரின் முயற்சிகளுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நினைத்து இவரின் படங்களுக்கு போவேன். சில படங்களுக்கு ஒரு படம் நல்ல தரமாக இவரிடம் இருந்து வந்துவிடும் என்ற அந்த ஒரே நம்பிக்கையில்............... *********************************** நாங்கள் இருவரும் 'ஹே ராம்' பார்த்துக் கொண்டிருக்கும் போது கிட்டத்தட்ட இப்படி நடந்தது: 'ஏங்க, இது ஹிந்திப் படமா.............' 'இல்லை, பெங்காலி................' 'என்ன............... பெங்காலிப் படமா.............' 'இல்லையனை, அவர்கள் பெங்காலியில் கதைக்கிறார்கள் என்று சொல்ல வந்தேன்...........' 'அப்ப தமிழில் கதைக்க மாட்டார்களா...........' 'வங்காளத்தில் பெங்காலியில் தான் கதைப்பார்கள்..............' நான் என்னுடைய வீட்டுக்காரியின் முகத்தை படம் முடியும் வரை பார்க்கவேயில்லை. படம் முடிய, எனக்கு அவர் பதிலாக சொன்ன வசனம் - இனி கமல் படம் என்றால் நான் வரவேமாட்டேன்.......🤣.
  15. இதுவரை காலமும் மஹிந்தவுடன் இருந்து இவர்கள் அனுபவிச்ச பதவி சுகம் பறிபோனதை தாங்க முடியாமல் எதை தின்றால் பித்தம் தணியும் என்பதுபோல் எதை பேசி என்பிபி ஆட்சிக்கு எதிராக போர் தொடுக்கலாம் என்பது அவர் முகத்தில் அப்பட்டமாக தெரிகிறது. அதன் பிரதிபலிப்பாக மதவாதத்தை கையிலெடுத்து முஸ்லீம்களை அநுரவுக்கெதிரா கொந்தளிக்க மறைமுகமாக சொல்கிறார். கால சக்கரம் எதிராக சுழல்கிறது, கடந்த பல தாசாப்தங்களாக தமிழர்களுக்கெதிராக வன்மம் கக்கி சிங்களவர்களுடன் ஒட்டியுறவாடி பதவி பொருளாதாரம் என்று அனுபவித்த இனத்திலிருந்து விலகி அரசியலாலும் சிங்கள மக்கள் புரிதலாலும் படிப்படியாக சிங்கள சமூகம் தமிழர்களை நோக்கி நகர்கிறது. வெறும் மதவாத வன்மம் கக்கி சிங்களவர்களுக்கெதிராய் இவர்கள் காய் நகர்த்தினால் சிங்களம் தமிழர்களுடன் இறுக்கமான நட்பை பேணி இவர்கள் சமூகத்தை தள்ளி வைக்கும் நிலையில்தான் இந்த தேர்தலின் பின்னர் இலங்கை நிலவரம் இருக்கிறது. இவர்களுக்கு ஆப்பு வைத்ததில் பெரும்பங்கு சிங்களவர்களுடன் கூட இருந்தே அவர்களுக்கு குழிபறித்த சஹ்ரானுக்கு இருக்கிறது. தமிழர்களுடன் பெரும்போரில் ஈடுபட்டிருந்தாலும் நேருக்கு நேர் மோதிய நேர்மையான எதிரிகள் என்பது பல சிங்களவர்கள் மனதில் உண்டு.
  16. இவர் @மெசொபொத்தேமியா சுமேரியர் ஆன்ரிக்கு கிளிநொச்சியில் தோட்டம் காட்டினவர் என்று நினைக்கின்றேன்😆
  17. சரியான கருத்து. இடதுசாரி என்பதே ஒரு சுத்துமாத்து
  18. ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.
  19. எங்கட டிசைன் அப்பிடி... மீன் அதிகமாக பட்டு விலை குறைவென்றால் மீனவர்களுக்கும் நட்டம் என்று இல்லைத்தானே ?
  20. இந்தப் படத்தை… “போட்டோ ஷொப்” என்று சொல்லி ஒரு குறூப் உருட்டிக் கொண்டு வருவார்கள், பையன். 😂 உருட்டுபவர்கள்…. “கை” உழையும் மட்டும், நல்லாய் உருட்டட்டும். 🤣
  21. கன பேருக்கு... வயிறு பத்தி எரிந்து, காதால்... புகை கக்கப் போகுது. 😂 🤣
  22. அபத்தம் அபத்தம் 🤣 இது வன்முறை அல்ல மென்வலு பெண்மை மென்வலு பற்றியது😋 😋
  23. ம்ம் சிறு வயதில் கல்யாணம் அதிக பிள்ளைகள் கேட்டால் அல்லா கொடுக்கிறான் என்பார்கள்
  24. உண்மை தான் ஆனால் சுவிஸ் பென்சன் காரர் என்றால் பணம் வந்திருக்கும் என்பதையே குறிப்பிட்டேன்.
  25. இங்குள்ள கனபேரை பலர் நன்றாக புரிந்து கொள்ளாத நிலைதான் அண்ணை உங்கதும் இங்கு யார் நேரத்துக்கு மாறுவார் யார் காலை வாருவார் என தெரியாது அரசியல் ருசி அப்படி இன்று தமிழரசில் இடம் கேட்டவர்கள் கட்சி கொடுக்க மறுக்க வேற கட்சியிலும் தாவுகிறார்கள் இதுதான் இங்குள்ளவர்கள் இப்ப ஒன்றை அடிச்சு இன்னொன்று வாழ்வது போல ஆகிவிட்டது இதுக்குள்ள வடக்கு கிழக்கு இணைப்பு ஈழம் என குறுக்க மறுக்க நாம் ஓடிக்கொண்டிருக்கிறம் நீங்கள் என்னை அதிக தடவை மென்சன் பண்ணியதால் வந்து உங்களுக்காக இந்த பதில் அவ்வளவுதான் அண்ணை
  26. வினா இலக்கம் 3 ) 17 போட்டியாளர்கள் மணிவண்ணன் அவர்கள் வெற்றி பெறமாட்டார் என சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1)வாலி - 54 புள்ளிகள் 2)வாதவூரான் - 52 புள்ளிகள் 3)பிரபா- 52 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5)அல்வாயான் - 46 புள்ளிகள் 6) புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 7) goshan_che - 46 புள்ளிகள் 😎 தமிழ்சிறி - 45 புள்ளிகள் 9)வீரப்பையன் - 45 புள்ளிகள் 10)வில்லவன் - 45 புள்ளிகள் 11)ஈழப்பிரியன் - 44 புள்ளிகள் 12)நூணாவிலான் - 43 புள்ளிகள் 13) நிழலி - 43 புள்ளிகள் 14)கந்தையா 57 - 41 புள்ளிகள் 15)சுவைபிரியன் - 41 புள்ளிகள் 16) கிருபன் - 41 புள்ளிகள் 17)ரசோதரன் - 41 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 39புள்ளிகள் 19)வாத்தியார் - 38 புள்ளிகள் 20)அகத்தியன் - 37 புள்ளிகள் 21)குமாரசாமி - 37 புள்ளிகள் 22)புலவர் - 35 புள்ளிகள் 23) புத்தன் - 35 புள்ளிகள் 24)சுவி - 33 புள்ளிகள் 25) வசி - 26 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 20, 22, 24 - 34, 36 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 87)
  27. வாக்குப்போட்ட மக்களை நகைச்சுவையாளராக்க கூடாது. அவர்களை மெச்சும்வண்ணம் இவரது நடவடிக்கை இருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் நல்லெண்ணத்தை காப்பாற்றி, அவர்களுக்கு உதவ வேண்டும். அதைவிட்டு கோமாளிக்கூத்து ஆடி தன்னையும் வாக்குப்போட்ட மக்களையும் அவமானப்படுத்தக்கூடாது.
  28. 20 புள்ளிக்கு மேல் இருக்குமெண்டால் நான் முதலாவதாய் வர வாய்ப்பு உண்டு . .........! 😎
  29. பார்க்கலாம்…நான் லூசா…பேயா எண்டு எழுதி போடுவன் அதான் யோசிக்கிறன்🤣
  30. நியாயமான கருத்தே. இப்போதைக்கு தேவை முகிழ்திருத்தல் என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் நாம் எமது அடையாளத்தைப்பேணாமல் இதை செய்யமுடியாது. மொழியை, பாரம்பரிய வாழிடத்தை, சுயநிர்ணயத்துக்கான அபிலாசையை நம்மில் இருந்து நீக்கிவிட்டு பாத்தால் - நாம் இந்துச்-சிங்களவரே. 200 வருடத்தில் நீர்கொழும்பு, புத்தள, சிலாபத்தின் முன்னாள்-தமிழர் போல் நாமும் ஆகிவிட்டால் - பின்னர் நாம் தமிழர் என்ற ப்ரக்ஞையே நம்மிடம் இராது. அது இல்லாத போது நாம் எப்படி ஒரு தேசிய இனமாக மீள் எழ முடியும்? இந்தானால்தான் அங்கயன், டக்கிளஸ், பிள்ளையானை விட என் பி பி எம்பிகளும் அவர்களின் காலில் விழும் அரசியலும் நம் இன இருப்புக்கு ஆபத்தானது.
  31. இவரை ஆரம்பத்தில் சாவகச்சேரியில், மன்னாரில் பாதிக்கப் பட்ட மக்களுக்காக போராட வெளிக்கிட்ட போது... தமிழ் மக்கள் மத்தியில் உள்ள அரசியல் வெற்றிடத்தை நிரப்ப வந்த, படித்த இளையவர் என நினைத்து பெருமைப் பட்டேன். ஆனால்... போகப் போக இவரின் கோமாளிக் கூத்துக்கள் அதிகரித்து விட்டது. ஓகே... இதுவரை தேர்தலுக்கு முன் நடந்தவை... தன்னை பிரபல்யமாக்கவும், வாக்கு வங்கியை அதிகரிக்கவும் செய்த தந்திரங்கள் என்று கடந்து போனாலும்... இனி... அவர் மக்களால் பாராளுமன்றத்துக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதி. அந்த மக்களின் கௌரவத்தை இவர் காப்பாற்ற வேண்டும். இவர் செய்யும் ஒவ்வொரு தவறும்... ஒட்டு மொத்த வடக்கு மக்களை பாதிக்கும் என்பதை இவர் உணர்ந்து திருந்த வேண்டும். இல்லையேல் மாறாத அவமானத்தை தமிழ் இனம் சந்திக்கும்.
  32. யாழ் களத்திலுள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களை பின்தள்ளி 😂 46 புள்ளிகள் எடுத்து, நான்காவது இடத்தில் இருக்கும் @நிலாமதி அக்காவிற்குப் பாராட்டுக்கள். 👍
  33. 36) 6 போட்டியாளர்கள் அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி அம்பாறை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 1)வாலி - 50 புள்ளிகள் 2)வாதவூரான் - 48 புள்ளிகள் 3)பிரபா- 48 புள்ளிகள் 4) நிலாமதி - 45 புள்ளிகள் 5)அல்வாயான் - 43 புள்ளிகள் 6)தமிழ்சிறி - 42 புள்ளிகள் 7)வீரப்பையன்- 42 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 42 புள்ளிகள் 9)goshan_che - 42 புள்ளிகள் 10)வில்லவன் - 41 புள்ளிகள் 11)நிழலி - 41 புள்ளிகள் 12)ஈழப்பிரியன் - 40 புள்ளிகள் 13)கந்தையா 57 - 39 புள்ளிகள் 14)சுவைபிரியன் - 39 புள்ளிகள் 15)நூணாவிலான் - 39 புள்ளிகள் 16)ரசோதரன் - 39 புள்ளிகள் 17)கிருபன் - 38 புள்ளிகள் 18)சசிவர்ணம் - 37 புள்ளிகள் 19)வாத்தியார் - 36 புள்ளிகள் 20)அகத்தியன் - 33 புள்ளிகள் 21)குமாரசாமி - 33 புள்ளிகள் 22) சுவி - 32 புள்ளிகள் 23)புலவர் - 32 புள்ளிகள் 24)புத்தன் - 32 புள்ளிகள் 25) வசி - 23 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1, 2,4 - 14, 16 - 20, 22, 24 - 34, 36 - 43, 45, 48, 49, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 83)
  34. ஒம் அவர்தான் இப்போ FSP தலைவர் - 2012 வரை இலங்கை அரசுக்கு கூட இவர் யார், வந்து போவது எதுவும் தெரியாது என்கிறனர் ( இடைபட்ட காலத்தில் இலங்கை அரசில் ஜேவிபி பங்காளியாகி, அனுர கபினெட் அமைச்சராக இருந்தார் - ஆனால் கட்சியை இயக்கியது - யார் என்பதே தெரியாத குமார்). பின்னர் உள்வீட்டு குழப்பத்தில் இவரை கட்சியே மாட்டி விட்டது. இதற்கும் இனவாதமே கடைசியில் காரணம் ஆகியது என்பார்கள். இன்னுமொருசாரர் இந்த பிரிவு பொய் நாடகம், இப்போதும் குமார்தார் ஜேவிபியை வழிநடத்துகிறார் என்கிறனர். ஜனாதிபதி தேர்தல் நேரம் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தனக்கும் குமாருக்கும் எந்தவித உடனடி தொடர்பும் இல்லை என மறுத்தார் அனுர. கட்சியின் பழைய உறுப்பினர் என கேள்விப்பட்டேன் அவ்வளவே என்றார். ஆனால் முன்பு ஒரு தடவை கேகாலையில் குமாரின் வீட்டில் தங்கி அவரின் தாயாரிடம் ஆங்கில கற்றேன் என கூறியது பின்னர் இன்னொரு வீடியோ வடிவில் வெளிவந்தது. ஏனைய கட்சிகள் போல அல்ல, ஒரு வல்லரசின் உளவு நிறுவனம் போல ரகசியமான அமைப்பு ஜேவிபி. எமது மக்களுக்கு இவர்கள் வரலாறு, தன்மை, கொள்கை பற்றி அதிகம் தெரியவாய்பில்லை என நினைக்கிறேன்.
  35. ஒவ்வரு மதத்துக்கும் வித்தியாசமான வணக்க முறைகள் உண்டு. கிறிஸ்தவ, இஸ்லாமிய மத குருமார்கள் ஆரத்தழுவுவார்கள். சிங்களவர்கள் கண்டத்துக்கில்லாம் காலில் விழுவார்கள், சிங்கள நண்பர்கள் வீட்டுக்கு போனால் அவர்களுடைய வளர்ந்த பிள்ளைகள் எமது காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குவார்கள்.
  36. அந்த இடத்தில் பொங்கல் பொங்கவில்லை...பொங்கியிருந்தால் ..நம்ம ,காணிரோட்டு பொங்கல் சாப்பிடும் மன்னன்...வாழையிலை சுமந்திரன் ஆஜாராகி இருப்பாரே..
  37. ரோஹண விஜேவீரவின் மறைவுக்கு பின் தப்பியோடி பின் - 1991 இல் சோமவன்ச அமரசிங்க பிரேமதாசாவுடன் டீல் போட்டு, இலண்டனில் இருந்து திரும்பி வந்து, வீரவன்ச, கலப்பதி, டில்வின், லால் காந்த, ஹேரத்தை சேர்த்து ஜேவிபியை ஜனநாயக நீரோட்டத்தில் இணைத்தார். இது வெளியுலகுக்கு சொல்லப்படும் கதை. இதே சமயம் - விஜேவீரவுக்கும், உபதிஸ்ச கமநாயக்கவுக்கும் அடுத்த நிலையில் இருந்து - ரஞ்சன் விஜேரத்ன கண்ணில் மண்ணை தூவி ஒஸ்ரேலியா போய் -அங்கிருந்து கட்சியை வழி நடத்தி, பின் பிறிதொரு பெயரில் இலங்கை வந்து போய் இருந்த கட்சியின் மிக முக்கிய உயர்பீடம்தான், சிங்கள தாய்க்கும், தமிழ் தந்தைக்கும் பிறந்த குமார ஐயே எனப்படும் குமார் குணரட்ணம். இவரின் அண்ணா ரஞ்சித்தும் மத்திய குழுதான் ஆனால் 87 இல் கொல்லப்பட்டார் ஆகவே இவர்கள் தமது ஆள் என்றால் வேற்று இன, மதத்தினரையும் ஏற்பார்கள் என்பது சரியே. ஆனால்…. இவர்கள் ஆள்….என ஆவதற்கு…. இன அடையாளம் துறந்து, வர்க்க அடையாளம், அவர்கள் சொல்லும் இனவாத அடையாளத்தை ஏற்க வேண்டும். அதாவது யாழ் எம்பிகள் செய்ததை போல சொல்லாமலே பிக்குகள் காலில் போய் விழ வேண்டும். சிங்கள பேரினவாதத்தின் flavor வேறுபடும். அதில் ஜேவிபியின் சுவை, KFC secret recipe மாதிரி தனிச்சுவை. ஆனால் அதுவும் பேரினவாதம்தான். இது…. இதுதான் முஸ்லிம்ள் பற்றி மிக பெரும்பான்மையான சிங்களவர் மனநிலை.
  38. அவர்கள் தொப்பி பிரட்டிகள் என்பதை யாழ்களம் ஏற்காது. ஆனால் நான் வாழ்ந்த சமூகம் ஏற்கும்.
  39. இத்தோடு நின்றுவிடாமல் காணி சொந்தக்காரருக்கு நஸ்டஈடும் வழங்க வேண்டும். யாராவது எந்த சிங்கள தமிழ் மகனாவது தமது வீட்டில் ஒரு அறையைக் கூட கொடுக்க மாட்டார்கள்.ஒரு இளநீர் பறித்தாலே கையை வெட்டப் போவார்கள். இலங்கையில் இன்று முகாம்களில் இருக்கம் மக்கள் அனைவருக்கும் எங்கோ ஓர் மூலையில் சொந்தமாக சிறு குடிசை என்றாலும் இருந்தது. அவர்களையும் அவர்களது சொந்த இடத்தில் குடியேற ஆவன செய்ய வேண்டும்.
  40. நல்ல செய்தி. இதை வரவேற்கும் அதே வேளை, அவர்களே அடாத்தாக தனியார் காணியை பிடித்து விட்டு இப்போ வெளியேறுகிறார்கள் என்பதையும் நாம் மறக்கக்கூடாது. கள்ளன் களவெடுத்ததை மீட்க நாம் போராடியும் முடியவில்லை. இப்போ கள்ளனாக திருப்பி தருவதால் கள்ளன் காலில் விழுந்து நன்றி சொல்ல தேவையில்லை. மீண்டும் இன்னொரு அரசாங்கம் வந்து எமது காணியை மீளப்பறிக்கலாம் - அப்படி பறிக்க முடியாத நிரந்தரத்தீர்வே எமது அபிலாசை.
  41. மேலே பாத்திமா ரினோசா வீடியோவில் மிக தெளிவாக முஸ்லீம் சமூகம் பொறுமை காக்க வேண்டும் இல்லாவிட்டால் வேறுமாதிரி போய்விடும் முதலில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம் என்று தெளீவாக கூறியுள்ளார். பாத்திமா ரினோசா ஒரு முஸ்லீமாக இருந்தாலும் பெரும்பாலும் நடுலையாக பேசும் ஒரு ஊடகவியலாளர் ஒரு பெண் சிங்கம்போலவே கர்ச்சிப்பார், ஒருதடவை பரதநாட்டியம் பற்றி ஒரு முஸ்லீம் தலைவர் கொச்சையாக பேசியபோது தமிழர்களுக்கு ஆதரவாய் பேசி அவருக்கெதிராக கொந்தளித்து அவரை கிழித்து தொங்கவிட்டார் ரினோசா. அவர் மறைமுகமாக சொல்ல வருவது என்னவென்றால் நீங்கள் இனவாதம் பேசி கொந்தளித்தால் சிங்களவர்கள் தமிழர்களுடன் கைகோர்த்துவிடுவார்கள் என்பதே. ஏனெனில் யாழ்ப்பாண தமிழர்கள்பற்றி கீழே இருக்கும் சிங்கள வீடியோவில் ஆயிரம் சிங்களவர்களுக்குமேல் கருத்திட்டார்கள். தமிழர் தமிழர் அவர்கள் எம் மக்கள் என்று சொல்லி எத்தனை சிங்களவர்கள் அழுகிறார்கள், எமக்கு ஆதரவாக கருத்து போடுகிறார்கள், அதில் ஒரு முஸ்லீம்கூட கருத்திடவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஒரு சிங்களவன்கூட தமிழருக்கெதிராய் கருத்திடவில்லை எவரும் கடந்தகால யுத்தங்கள் பற்றி பேசவில்லை, மாறாக கடந்தகால சிங்கள தலைவர்களையே திட்டியுள்ளார்கள். அந்த வீடியோவில் இந்த தேர்தலின் பின்னர் தமிழர்கள் தொடர்பான சிங்களவர்கள் கருத்து என்பதை பொறுமையாக ஒவ்வொன்றாக மொழி பெயர்த்து பாருங்கள். சிங்களவர் சமூகம் எமக்கு சார்பாய் 100% மாறிவிட்டது என்றோ அல்லது அநுர வந்திட்டார் இனிமே தமிழர்வீட்டு கூரைகளின்மீது பால்மழை பொழிய போகிறது என்றோ நான் ஒருபோதும் சொல்லமாட்டேன், ஆனால் முஸ்லீம்களைவிட தமிழர்கள் எவ்வளவோ நல்லவர்கள் எனும் சூழலை முஸ்லீம்களே சிங்களவர்கள் மனதில் ஏற்படுத்த போகிறார்கள் என்பதே கருத்து. முஸ்லீம்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுத்திருக்கலாம் என்பதில் உடன்பாடு உண்டு, நாமும் தமிழர்களுக்கு ஒரு அமைச்சு பதவி கொடுக்காமல் விட்டால் விமர்சித்திருப்போம் ஆனால் அநுரவின் இந்த அமைச்சரவை பொது தேர்தலுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்று, தமிழ் அமைச்சர்கள் என்று சொல்லப்படுகிறவர்கள்கூட 100% சிங்கள பகுதியில் வாழ்ந்தவர்களே, அதிலும் ஒரு பெண் தமிழ் அமைச்சர் சிங்களத்திலேயே சத்திய பிரமாணம் எடுத்தார்.
  42. பட மூலாதாரம்,GETTY IMAGES எழுதியவர், பெர்ன்ட் டெபுஸ்மேன் ஜூனியர் பதவி, பிபிசி செய்தி, வாஷிங்டன் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். டிரம்பின் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படவுள்ள பீட் ஹெக்செத் மீது பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். டிரம்பின் அமைச்சரவையில் அட்டர்னி ஜெனரலாக நியமிக்கப்பட அதிகம் சாத்தியங்கள் இருக்கும் மாட் கேட்ஸ், ஒரு நெறிமுறை விசாரணையை எதிர்கொள்கிறார். சுகாதார செயலாளராக நியமிக்கப்பட சாத்தியங்கள் இருக்கும் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், தடுப்பூசிக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டவர். அதற்காக அவர் கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்கிறார். வரும் ஜனவரியில் டிரம்ப் பதவியேற்கும்போது, அவரின் அமைச்சரவைக்கு அமெரிக்க செனட் சபையின் ஒப்புதலைப் பெற வேண்டியிருக்கும். செனட் சபை குடியரசுக் கட்சியினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்ற போதிலும், அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் இருதரப்பு விசாரணைகளின் போதும் தீவிரமான கேள்விகளை எதிர்கொள்வார்கள். டிரம்பின் சர்ச்சைக்குரிய பாதுகாப்பு செயலாளர் தேர்வு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பீட் ஹெக்செத் கடந்த 2017ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் டிரம்பின் பாதுகாப்பு செயலாளராகத் தேர்வு செய்யப்படவுள்ள ஹெக்செத் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். ஃபாக்ஸ் நியூஸ் தொகுப்பாளரும், ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடந்த போர்களில் அனுபவம் பெற்றவருமான ஹெக்சேத், கைது செய்யப்படவில்லை, மேலும் அவர் தன்மீதான குற்றச்சாட்டை மறுத்தார். டிரம்பின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீவன் சுங் கூற்றுபடி, "ஹெக்செத் அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் திட்டவட்டமாக மறுக்கிறார் மற்றும் அவர்மீது எந்தக் குற்றச்சாட்டும் பதிவு செய்யப்படவில்லை" என்றார். பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்-இன் செய்தி அறிக்கையில் மற்றொரு முக்கியத் தகவலும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹெக்சேத் ஒரு "வெள்ளையின மேலாதிக்கத்தை" குறிக்கும் டாட்டூவை உடலில் குத்தியிருப்பதாக நினைத்த அவரது சக ராணுவ வீரர்களே அவரை அச்சுறுத்தலாகக் கருதியதாக அந்தச் செய்தி தெரிவிக்கிறது. ஆனால் ஹெக்சேத் தனக்கு எந்தக் கடும்போக்குவாதக் குழுக்களுடனும் தொடர்பு இல்லை என்று கூறியுள்ளார். மினசோட்டா நேஷனல் கார்டின் முன்னாள் உறுப்பினரான அவர், தனது தோள்பட்டையில் "Deus Vult" என்ற வார்த்தைகளை பச்சை குத்தியுள்ளார். இந்த லத்தீன் சொற்றொடருக்கு "கடவுளின் சித்தம்" என்று பொருள். இந்த முழக்கம் இடைக்காலத்தில் சிலுவைப் போர்களின்போது கிறிஸ்தவர்களால் பயன்படுத்தப்பட்டது. ஓய்வுபெற்ற மாஸ்டர் சார்ஜென்ட் டெரிகோ கெய்தர் சிபிஎஸ் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "அவர் தனது தோள்பட்டையில் பச்சை குத்தியிருப்பதை நான் பார்த்தேன், அந்த வாக்கியம் கடும்போக்கு குழுக்களுடன் தொடர்புடையது" என்று தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஜே.டி.வான்ஸ் இதுதொடர்பாக ராணுவத் தலைமைக்குத் தகவல் தெரிவித்து அவர்களுக்குத் தெளிவுபடுத்தியதாகவும் டெரிகோ கெய்தர் கூறினார். அமெரிக்க துணை அதிபராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் ஜே.டி.வான்ஸ் ஹெக்சேத்தை ஆதரித்துப் பேசினார். "டாட்டூவில் இருந்த அந்த லத்தீன் சொற்றொடர் ஒரு கிறிஸ்தவ பொன்மொழி மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை” என்று கூறினார். இதுபோன்ற செய்தியை வெளியிட்டு, ஏபி செய்தி முகமை "வெறுக்கத்தக்க கிறிஸ்தவ எதிர்ப்பு மனநிலையைப்" பரப்புவதாக ஜே.டி.வான்ஸ் குற்றம் சாட்டினார். கடந்த 2021ஆம் ஆண்டு அதிபர் ஜோ பைடன் பதவியேற்கும் வரை ஹெக்செத் வாஷிங்டன் டி.சி.யில் அதிகாரியாகப் பணியாற்றத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெளியான ஒரு புத்தகத்தில் இதுதொடர்பாகப் பகிர்ந்திருந்த ஹெக்சேத், தனது டாட்டூவால் தான் பணியை இழந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். டிரம்ப் தேர்வு செய்திருக்கும் அட்டர்னி ஜெனரல் மீதான குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மாட் கேட்ஸ் அட்டர்னி ஜெனரல் பதவிக்கு டிரம்பின் தேர்வான மாட் கேட்ஸும் சர்ச்சைக்குரிய பிம்பத்தைக் கொண்டுள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவர் மீது தவறான நடத்தை தொடர்பான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. கடந்த வியாழன் அன்று, அமெரிக்க நீதித்துறையை வழிநடத்த டிரம்ப் அவரின் பெயரைப் பரிந்துரைத்த சில மணிநேரங்களில், மாட் கேட்ஸ் அமெரிக்க பிரதிநிதிகள் அவையில் உள்ள தனது ஃப்ளோரிடா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறியதன் மூலம் அவர் மீதான சட்டவிரோத போதைப்பொருள் பயன்பாடு, பிரசார நிதியை தவறாகப் பயன்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் தொடர்பான காங்கிரஸ் அறிக்கை வெளியிடுவது நிறுத்தப்பட்டது. அறிக்கையை பகிரங்கப்படுத்த கோரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டொனால்ட் டிரம்ப் தன் அமைச்சரவைக்குத் தேர்வு செய்திருக்கும் நபர்களில் பலர் தவறான நடத்தை உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளனர். அவையின் சபாநாயகர் மைக் ஜான்சனும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவர். கேட்ஸ் அவையில் உறுப்பினராக இல்லாததால் அறிக்கை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக அவர் வெள்ளிக்கிழமை அன்று தெரிவித்தார். அதைப் பகிரங்கப்படுத்துமாறு உறுப்பினர்கள் கோரிய போதிலும், அது ரகசியமாக வைக்கப்படும் என சபாநாயகர் தெரிவித்தார். சில மணிநேரங்களுக்குப் பிறகு, கேட்ஸ் பற்றி `ஹவுஸ் எதிக்ஸ் கமிட்டிக்கு’ (அவையின் நெறிமுறைக் குழு)சாட்சியம் அளித்த இரண்டு பெண்களுக்கான வழக்கறிஞர், விசாரணை அறிக்கையை வெளியிடுமாறு சட்ட வல்லுநர்களிடம் வலியுறுத்தினார். வழக்கறிஞர், ஜோ லெப்பார்ட், சிபிஎஸ் நியூஸிடம், தான் பிரதிநிதித்துவப்படுத்தும் பெண் ஒருவர் 2017ஆம் ஆண்டில் ஃப்ளோரிடாவில் கேட்ஸ் ஒரு மைனர் பெண்ணுடன் உடலுறவு கொண்டதைக் கண்டதாகக் கூறினார். எனவே, அவையின் நெறிமுறைக் குழு கேட்ஸ் தொடர்பான அறிக்கையை வெளியிடுமாறு லெப்பார்ட் வலியுறுத்தினார். இருப்பினும், கடந்த ஆண்டு நீதித்துறை இதுகுறித்து விசாரணை நடத்தி, கேட்ஸ் மீதான குற்றச்சாட்டுகளைப் பதிவிட மறுத்துவிட்டது. முன்னதாக, ஆர்லாண்டோவில் ஒரு பார்ட்டியில் 17 வயது சிறுமியுடன் உடலுறவு கொண்டதாகக் கூறப்பட்டதையும் கேட்ஸ் மறுத்தார். ஃப்ளோரிடாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட 42 வயதான கேட்ஸ், "என்னை அழிக்க பொய்களை ஆயுதமாகப் பயன்படுத்த முயல்கிறார்கள்" என்று எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை என்று பதிவிட்டார். டிரம்ப்பின் சுகாதார செயலாளர் தேர்வுக்கு எழுந்த விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES சுகாதார செயலாளராக (அமெரிக்க சுகாதாரம் மற்றும் மக்கள் சேவைகள் துறையின் தலைவர்) டிரம்ப் தேர்வு செய்திருக்கும் நபரான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் மீதும் சர்ச்சையான பிம்பம் உள்ளது. கென்னடி, ஆர்.எஃப்.கெ ஜூனியர் என்று அறியப்படும் இவர் ஒரு தடுப்பூசி எதிர்ப்பு ஆர்வலர். அமெரிக்க பங்குச் சந்தையில், உலகெங்கிலும் உள்ள தடுப்பூசி தயாரிப்பாளர்கள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் பங்குகள் வெள்ளிக்கிழமை கடுமையாகச் சரிந்தன. "பிக் ஃபார்மாவை" (Big Pharma) முறியடிப்பதாக சபதம் செய்த ஒரு நபரை டிரம்ப் சுகாதாரத் துறையில் நியமிக்கத் தேர்வு செய்திருப்பது மருந்து நிறுவனங்களை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்த முடிவுக்கு முதலீட்டாளர்கள் எதிர்வினையாற்றினர். சுமார் 25,000 உறுப்பினர்களைக் கொண்ட சுகாதார நிபுணர்களைக் கொண்ட அமெரிக்க பொது சுகாதார சங்கத்தின் தலைவர் ஜார்ஜ் சி பெஞ்சமின் பிபிசியிடம், நோய்த்தடுப்பு மருந்துகள் குறித்த கென்னடியின் விமர்சனம் "ஏற்கெனவே நாட்டில் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக" கூறினார். ஜார்ஜ் சி பெஞ்சமின் மேலும் கூறுகையில், ``சுகாதாரத் துறைக்கு கென்னடி முற்றிலும் தவறான தேர்வு" என்று கூறினார். டிரம்ப் இதுவரை தனது தேர்வுகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அதிபராகத் தேர்வு செய்யப்பட்டு சில நாட்கள் கடந்த நிலையில் டிரம்ப் இன்னும் தன் அமைச்சரவையின் முழு பணியிடங்களுக்கும் நியமனங்களைத் தேர்வு செய்யவில்லை. நிதியமைச்சர் மற்றும் எஃப்.பி.ஐ. தலைவர் நியமனம் குறித்து இதுவரை அவர் யாருடைய பெயரையும் அறிவிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce3ygqzr0vxo
  43. @ஏராளன், @சுவைப்பிரியன், @பாலபத்ர ஓணாண்டி, @தனிக்காட்டு ராஜா, @அக்னியஷ்த்ரா எல்லாரும் டக்கெண்டு போய் வாக்குப் போடுங்கோ. அங்குள்ள கள நிலைமையை எங்களுக்கும் அறியத் தந்தால் சந்தோசம்.
  44. ஆமாம்.... அவரேதான். கிருபன் ஜீ . நீங்கள் நல்ல நினைவு வைத்துள்ளீர்கள். நான் அதற்கிடையில் அந்தச் சம்பவத்தை மறந்து விட்டேன். 😂
  45. 👆 சுப்ரமணிய பிரபா என்பவர்தான் (படத்தில் இடதுபுறம் இருப்பவர்), போலியான ஆவணங்கள் தயாரித்து முகநூலில் வெளியிட்டவர். (வலது பக்கம் இருப்பவர் சுமந்திரன்) இவர் ஒவ்வொரு தேர்தலிலும் கட்சி மாறிக் கொண்டே இருப்பார். இம்முறை... கிளிநொச்சியில், சஜித் கட்சியின் சார்பில் போட்டியிடும் புலி எதிர்ப்பாளர் சந்திரகுமாருக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டு... ஆதாரம் இல்லாத பொய் பிரட்டுக்களை எல்லாம், மற்றைய கட்சியினர் மேல் கூறிக் கொண்டு ஊத்தை அரசியல் செய்து கொண்டு திரிகிறான்(ர்) போனமுறை சுமந்திரன் ஆதரவாளராக இருந்தவர். இவரின் தகப்பனும் வேறொரு கட்சியின் உள்ளூர் அரசியல்வாதிதான். முகநூலில் இவரை... @நிழலி, @விசுகு, @ஈழப்பிரியன், @குமாரசாமி, @பெருமாள், @தனிக்காட்டு ராஜா, @நந்தன் ஆகியோர் நன்கு அறிந்து இருப்பார்கள் என நினைக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.