Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்20Points87990Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்13Points19122Posts -
Justin
கருத்துக்கள உறவுகள்11Points7048Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்10Points3054Posts
Popular Content
Showing content with the highest reputation on 11/22/24 in all areas
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அர்ச்சுனாவிற்கு உண்மையாகவே புலிகளின்மீதும், புலிகள் தலைமைமீதும் தீவிர காதல் இருந்தால் தேவையில்லாமல் அவர்கள் பெயர்களை தேவையற்ற இடங்களில் பாவிப்பதை தவிர்க்கவேண்டும். தமது பதவியையும் அதிகாரத்தையும் தொகுதிக்கான நிதி ஒதுக்கீட்டையும் வைத்து மெளனமாக முன்னாள் போராளிகள், அங்கவீனமடைந்த போராளிகள், அடிப்படை வசதிகளையே இழந்த பெண் போராளிகள் குடும்பங்களுக்கு உதவுவதை அவர்களையும் அவர்கள் வாரிசுகளையும் , கல்வி பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதையும் முதற் செயற்பாடாக வைத்திருங்கள். அதைவிட்டு புலிகள், தலைவர் என்றுபோய் பழையபடி சிங்களவனை கடுப்பாக்கி மஹிந்த கோட்டபாய கோஷ்டிகளில் தப்பில்லை தமிழர்கள்மேல்தான் தவறு என்றொரு மாயையை உருவாக்காதீர்கள். புலிகளையும் தலைவரையும் பற்றி நீங்கள் சமூக ஊடகங்களிலும் சபைகளிலும் பேசி ஏதாவது சாதிக்க முடியுமென்றால் தாராளமாக பேசுங்கள், இல்லையென்றால் இது உங்களின் வெறும் வெட்டி விளம்பரம் பாந்தாவாகவே பார்க்கப்படும். மாறாக தேவையற்ற முறையில் புலிகளின் பெயரை போற வாற இடமெல்லாம் இழுத்து எம்மண்ணில் சிங்கள படைமுகாம்களின் இருப்பையும், தேசிய பாதுகாப்பு மண்ணாங்கட்டி பாதுகாப்பு என்று நாமல் பழையபடி துவேசத்தை சிங்களவர்களுக்கு ஊட்ட முயற்சிக்கிறானே அதை மட்டுமே அதிகரிக்க உதவும். 76 வருடகால அரசியலில் இப்போதான் முதற் தடவையாக வடபகுதியில் சிங்கள தலைமை ஒன்றை வடக்கில் ஆதிக்கம் செலுத்த வாய்ப்பு கொடுத்திருக்கிறோம்ம், அடுத்த ஐந்து வருடங்களில் ஆட்சியாளர்கள் என்ன செய்கிறார்கள் என்று பார்க்கலாம், முடியாவிட்டால் அடுத்த தேர்தலில் ஒட்டுமொத்தமாக எம்மண்ணில் இருந்து அவர்களை அகற்றிவிடலாம். யாழ்மண் அதை கண்டிப்பாக செய்யும் ஏனெனின் எவருக்கு வாக்கு போட்டாலும் எம் இனம் என்பதை எவருக்கும் விட்டுக்கொடுக்காத மண் அது, அது எம்மைவிட சிங்களவர்களுக்கு நன்றே தெரியும், அதனால்தான் என்பிபி வடபகுதியில் எப்படி வென்றது என்ற அதிர்ச்சியிலிருந்து இன்னமும் அவர்கள் மீளவில்லை. எமக்கு தற்போதைய தேவை கிடைத்த வாய்ப்புகளை எப்படி எம் மக்களுக்கு சார்பாக பயன்படுத்தலாம் என்பது மட்டுமே, அதை உங்களின் அர்த்தமற்ற குறளி வித்தைகளுக்கு பயன்படுத்தி சபையை குழப்பாதீர்கள் திருவாளர் அர்ச்சுனா அவர்களே. படித்தவராக இருக்கின்றீர்கள், ஆனால் உங்களின் பல செயற்பாடுகள் ஐந்து வயசு குழந்தைபோல் சிரிப்புக்கிடமானதாக இருக்கிறது.8 points
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
8 pointsஇந்த பாராளுமன்றக் "கன்ரீன்" என்பது நம் அக்பர், அருணாசலம், ஹில்டா கன்ரீன் போல ஏழை மாணவர்கள் "அடு" எடுத்துச் சாப்பிடும் இடமல்ல! உண்மையில் இது கன்ரீனே அல்ல. இலங்கையில் ஐந்து நட்சத்திர ஓட்டலில் வழங்கப் படும் பிளேட்டுக்கு ஆயிரக்கணக்கில் செலவாகும் உணவை, மிகக் குறைந்த விலையில் பா.உக்களுக்கு வழங்கும் ஒரு சொகுசு உணவகம் இது. ஆனால், உணவிற்கான மிகுதி விலையை பொது மக்களின் வரிப் பணமும், வெளிநாடுகள் வழங்கும் பிச்சைப் பணமும் செலுத்துகின்றன. ஒரு பா.உவை சந்திக்கப் போகும் ஆட்களையும் பா.உ இந்த சலுகை விலையில் சாப்பிட அனுமதிக்கும் சலுகை முன்னர் இருந்தது, இப்போதும் இருக்கிறதா தெரியவில்லை. நிதி விரயத்தில் உண்மையிலேயே NPP அக்கறை செலுத்தினால், இந்த குறைந்த விலை சலுகையை நீக்க வேண்டும். பா.உக்கள் தம் நண்பர்களை கூட்டிச் சென்று ஏறத்தாழ இலவசமாக சாப்பிட அனுமதிக்கும் சலுகையை நீக்க வேண்டும். மிக முக்கியமாக, "கொட்டுக்கொள" போன்ற ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை அதிகரித்தால், பா.உக்கள் ஒரு வருடத்திலேயே "நிரந்தரக் கர்ப்பவதிகள்" போல தொந்தி வளர்ப்பதைத் தடுத்து அவர்களை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கலாம்😂!8 points
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
4 pointsஇலங்கையில் பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படப் போகின்றது என்று ஒரு தகவல் வந்தது. பின்னர், தாங்கள் அதை மூட மாட்டோம் என்று ஜேவிபியினர் உறுதியளித்திருப்பதாகத் தெரிகின்றது. இந்தக் கூட்டம் எங்கே போனாலும் அங்கே காண்டீனில் கைவைத்து, சமூகநீதியை நிலைநாட்டாமல் விடமாட்டார்கள் போல.....................🤣. https://www.dailymirror.lk/breaking-news/NPP-MP-assures-Parliament-canteen-will-not-be-closed-Harsha/108-296557#4 points
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சாதாரண விடயங்களை நம்மவர்களே மிகைப்படுத்துகின்றார்கள். இதற்கான காரணங்கள் எரிச்சல், பொறாமை, பழிவாங்குதல் என பல வகைப்படலாம். மருத்துவர் அர்ச்சனாவின் விழிப்புணர்வின் பின் முன்புபோல் வைத்தியசாலைகளில் ஐஸ் அடிக்க முடியவில்லை, நேரத்திற்கு தனிப்பட்ட வேலைகளுக்கு கிளம்ப முடியவில்லை என எனது மருத்துவ நண்பர் ஒருவர் கூறினார். இப்போது கொஞ்சம் பயம் ஏற்பட்டுள்ளது. முன்பை விட கொஞ்சம் அவதானமாக மருத்துவர்கள் வேலை பார்க்கின்றார்கள். மருத்துவர், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா சிறப்பாக செயற்படுவார் என எதிர்பார்ப்போம்.4 points
-
குப்பையிலிருந்து குப்பை
3 pointsகுப்பையிலிருந்து குப்பை --------------------------------------- நல்ல எழுத்தா........... அதை யார் வாசிப்பார்கள் ஏதாவது கேளிக்கையாக இருந்தால் சொல் என்றோம் முடிவு: இன்றைய எழுத்து எதுவும் நாளை நிற்காது. கலைப் படமா.................. இருக்கிற பிரச்சனை போதாதா ஜனரஞ்சகமா ஏதாவது வந்தால் சொல் என்றோம் முடிவு: வந்தது கங்குவா. அரசியல்வாதியா............ அவர் நல்ல பகிடி ஆளும் பார்க்க நல்லா இருக்கின்றார் அவரே பிரதிநிதி என்றோம் முடிவு: எல்லாமே பகிடி எதுவுமே வெற்றி இல்லை. கருத்துச் சொல்கின்றாயா......... அதெல்லாம் போதும் ஏதாவது சிரிக்க சிரிக்க இருந்தால் சொல் என்றோம் முடிவு: தினம் ஒரு மீம்ஸ். அடுத்த தலைமுறையா............ அவர்கள் தான் உருப்படாதவர்கள் ஆயிட்டுதே எல்லாமே போய் விட்டதே இனி என்ன செய்வது என்கின்றோம். உள்ளே போவது தான் வெளியே வருகின்றது.3 points
-
அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சுமந்திரனை விட... அர்ச்சுனாவும், கௌசல்யாவும் சுயேச்சையில் நின்று அதிக வாக்கு எடுத்து விட்டார்களே என்ற அவமானம், பொறாண்மை, வயித்தெரிச்சல்... இருக்கத்தானே செய்யும். சுமந்திரன்கள் ஒழுங்காக இருந்திருந்தால்... அர்ச்சுனாவுக்கும், கௌசல்யாவுக்கும் மக்கள் ஏன் வாக்களிக்கப் போகிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில், அகில இலங்கையில் போட்டியிட்ட... அத்தனை சுயேட்சை வேட்பாளர்களில்... வென்ற ஒரேயொருவர் அர்ச்சுனா மட்டும் தானாம்.3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் ########### ######### @குமாரசாமி தாத்தா... தன்னுடைய அரசியல் அறிவை எல்லாம் @வீரப் பையன்26 க்கு கொடுத்து, ஏணியிலை உச்சத்திலை ஏத்தி விட்டுட்டு.. கீழை 21´ம் இடத்திலை நின்று அண்ணாந்து பார்க்கின்றார். 😂 இப்பிடி ஒரு தாத்தா கிடைக்க... பையன் கொடுத்து வைத்திருக்க வேணும். 🤣3 points
-
கற்கோவளம் பகுதியிலிருந்து ராணுவம் வெளியேற பணிப்பு.
அந்த குப்பைக்கு யாரும் பயப்படவில்லை .....சனியன் தொலையவேண்டும் என்ற ஆவல்3 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
57) இலங்கை பொதுஜன முன்னணி 3 இடங்களை பிடித்திருக்கிறது. சரியாக சொன்னவர் கந்தையா 57. இவருக்கு 2 புள்ளிகள். 1-5 வித்தியாசத்துக்குள் பதில் அளித்தவர்களுக்கு 1 புள்ளி 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 55 புள்ளிகள் 3)பிரபா- 55 புள்ளிகள் 4) அல்வாயான் - 48 புள்ளிகள் 5) வீரப்பையன் - 48 புள்ளிகள் 6) goshan_che - 48 புள்ளிகள் 7) நிலாமதி - 48 புள்ளிகள் 😎 தமிழ்சிறி - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 47 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 47 புள்ளிகள் 11) வில்லவன் - 47 புள்ளிகள் 12)நூணாவிலான் - 46 புள்ளிகள் 13) நிழலி - 46 புள்ளிகள் 14)கந்தையா 57 - 45 புள்ளிகள் 15) கிருபன் - 44 புள்ளிகள் 16) ரசோதரன் - 44 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 42 புள்ளிகள் 18) வாத்தியார் - 41 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 41 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புலவர்- 37 புள்ளிகள் 23) புத்தன் - 37 புள்ளிகள் 24)சுவி - 36 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 91)3 points
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
2 pointsநம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.2 points
-
பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
2 points@Justin @ரசோதரன் @ragaa என்ன இங்கே ஒரே “அடு பத்” கூட்டமாக இருக்கிறது🤣. நான் முன்பு ஒரு பாடசாலை அணியில் இருந்தேன் - போட்டிகள் முடிந்ததும் அருகில் உள்ள ஒரு முஸ்லிம் ஹோட்டல் போய் சாப்பிடுவது வழமை. அதில் ஒருவருக்கு பெயரே அடு பத் தான்🤣. வஞ்சகமில்லாமல் அடுவுக்கு அடு வுக்கு அடு எடுத்து சாப்பிடுவார்🤣. இந்த குடல்கறியை பாபத் என்பார்கள் - உவேக்…..🤮2 points
-
ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு இருவரும் பிரியும் முடிவுக்கு வந்தது ஏன்?
இவர்கள் சேரலாம் பிரியலாம் அதைப்பற்றிக் கவலையில்லை. ஆனால் ஒன்றைமட்டும் கூறிக்கொள்ள ஆசைப்படுகின்றேன்: வீணை என்றால் அதனை மீட்டவேண்டும், உடுக்கு என்றால் அதனை அடிக்கவேண்டும், புல்லாங்குழல் என்றால் அதனை ஊதவேண்டும். இல்லாவிட்டால் சிக்கல்தான்.2 points
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
2 pointsபலர் PSTSD யால் அவதி படுகிறார்கள். Post Sumanthiran Traumatic Stress Disorder🤣2 points
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
@வீரப் பையன்26 ம், நீங்களும் ஒரே வாங்கு. 😂 பையனின் அரசியல் அறிவு… இந்த வருடம் மிகப் பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்துள்ளது. 🤣2 points
-
இந்தியத் தூதுவரை சந்தித்தது தமிழரசின் நாடாளுமன்றக் குழு..!
2 points
- மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
மாவீரர் நாட்களில் கூட்டத்தினை வைக்காமல், வேறொரு தினத்தில் கூட்டத்தினை வைக்க.. மற்றைய கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தது நல்ல ஒரு மாற்றம். 👍🏽2 points- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
21)ஞானமுத்து - சிறினேசன் வெற்றி பெறுவார் என 22 போட்டியாளர்கள் சரியாக கணித்திருக்கிறார்கள் 1)வாலி - 56 புள்ளிகள் 2)வாதவூரான் - 54 புள்ளிகள் 3)பிரபா- 54 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 47 புள்ளிகள் 6) அல்வாயான் - 47 புள்ளிகள் 7) வீரப்பையன் - 47 புள்ளிகள் 8)goshan_che - 47 புள்ளிகள் 9) ஈழப்பிரியன் - 46 புள்ளிகள் 10) புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 11) வில்லவன் - 46 புள்ளிகள் 12)நூணாவிலான் - 45 புள்ளிகள் 13) நிழலி - 45 புள்ளிகள் 14)கந்தையா 57 - 43 புள்ளிகள் 15) கிருபன் - 43 புள்ளிகள் 16) ரசோதரன் - 43 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 41 புள்ளிகள் 18) வாத்தியார் - 40 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 40 புள்ளிகள் 20)அகத்தியன் - 39 புள்ளிகள் 21)குமாரசாமி - 39 புள்ளிகள் 22)புத்தன் - 37 புள்ளிகள் 23) புலவர் - 36 புள்ளிகள் 24)சுவி - 35 புள்ளிகள் 25) வசி - 27 புள்ளிகள் 26) தமிழன்பன் - 21 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 89)2 points- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிடியாணை
ஏன் தமிழ்நாடு. எங்கடை மாவை இப்ப கொஞ்சநாளைக்கு முதல் அதை தான் செய்தார். அதுக்கு பிறகு தனுக்கு தான் தேசிய பட்டியல் இடம் வேணும் எண்டு நடு கதிரையில் போய் இருந்தவர். அதுக்கு முதல் எங்கள் பெரும் தலைவர் சமப்ந்தனும் அதையே செய்தார்.2 points- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
ம்ம் மக்களுக்கு மகிழ்ச்சி ஆனால் கஸ்ரப்படு வலையிட்டு பிடிப்பவர்களுக்கு நஸ்ரம் இடை தரகர்களுக்கு லாபம் இங்கு லாபத்தை அனுபவிப்பது யார் என பார்க்கிறீர்களா ?? இதுதான் இங்குள்ள நிலை யூ ரியுப் சணல் என செய்து ஒரு கஸ்ரப்பட்ட குடும்பத்தை காண்பித்து பணத்தை அடிச்ச கூட்டமும் உண்டு அதே போல டொக்டர் அருச்சுனாக்கு காசு அனுப்புன கூட்டமும் இருக்கு , வாக்கு போட்டு பாராளுமன்றம் அனுப்பின கூட்டமும் இருக்கு இன்று முதல் நாளில் எதிர் கட்சி தலைவர் இருக்கும் ஆசனத்தில் இருந்து சண்டையும் போட்டு தன்ற தங்கத்தை கொண்டு போய் பாராளுமன்றத்தில் பார்வையாளர் இருக்கும் பகுதியில் அமர வச்சி என்ற தங்கம் என வீடியோவும் விட்டு இருக்கு தகவலுக்காகவே இவை🖕2 points- முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
2 pointsசோதனைகளுக்காகவே... மாணவர்களை தயார் படுத்தும், "ரியூசன்" வகுப்புகளுக்கு "மூடுவிழா" நடக்கும் போலுள்ளது. இப்போது படித்து பட்டதாரியாகும் மாணவ மாணவியர்கள்களுக்கு படிப்பைத் தவிர வேறு எதுவும் தெரியாது. விளையாட்டுக்களில் இருந்து பேச்சுப்போட்டி கவிதை பாடல் என்று சிறிய வயதிலிருந்தே வெற்றி தோல்விகளையும் அடுத்தவருடன் பழகும் சந்தர்ப்பங்களையும் இழந்துவிடுகின்றனர். இதனால் படித்து பட்டங்களெடுத்தாலும் எதிர்காலத்தில் வாழ முடியாமல் உள்ளனர். திடீரென தோல்விகள் வரும்போது தாங்க முடியாமல் தற்கொலை செய்கிறார்கள்.2 points- முன்பள்ளி கல்வி திட்டம் அரசால் முழுமையாக சுவீகரிக்கப்படும் -;பிரதமர் திட்டவட்டமாக அறிவிப்பு!
2 pointsஎன்னுடைய தந்தையார் தனியார் கல்வி, மருத்துவ துறைகளை கடுமையாக எதிர்க்கிறார்! ஆனால் நான் கேட்பேன் ஒரு சிறந்த ஆசிரியரிடம் கல்வி கற்கும் வாய்ப்பு, சிறந்த மருத்துவரிடம் மருத்துவம் செய்யும் வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்க என்ன வழி என்று கேட்பேன்? அதற்கு பாடசாலையிலும் மருத்துவமனையிலும் சரியாக பணிபுரிந்தால் வேற இடம் போகத்தேவையில்லை என்பார்!2 points- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
இதுதான் உண்மை! இலங்கையர் என்ற அடையாளம் என்பது சிங்கள பௌத்த அடையாளத்தின் இனிப்புத் தடவிய வடிவம். புதிய அரசியலைமைப்பு யாப்பு வரும்போது பௌத்த சாசனத்துக்கு வழங்கப்பட்ட முன்னுரிமையை நீக்கி இலங்கையை ஒரு மதசார்பற்ற நாடாக என்பிபி அரசால் முடியுமா என்றால் பதில் இல்லை என்பதாகத்தான் இருக்கும். சரி அப்படி ஒரு யாப்பு உருவாக்கப்பட்டாலும் அதை சர்வஜன வாக்கெடுப்புக்கு விடும்போது நிச்சயம் வரலாறு காணாத பெரும்பான்மை வாக்குகளால் அது தோற்கடிக்கப்படும். சிங்கள கிறிஸ்தவர்களே அதற்கு எதிராக வாக்களிப்பார்கள். முடிவாக 1989 இல் ஜேவிபி 35 ஆண்டுகளின் பின்னர் இப்படி ஒரு மாபெரும் வெற்றி பெறும் என்றோ அல்லது யூஎன்பி இப்படிப் படுதோல்வியடையும் என்றோ எந்தவொரு அரசியல் விற்பனரும் எதிர்வுகூறியிருக்கமாட்டார்கள். அதுபோலவே 2009 இல் அழிக்கப்பட்ட எமது சுதந்திர தமிழீழ தனியரசின் கனவு 1000 ஆண்டுகளின் பின்னர் கூட நனவாகலாம் அல்லது இல்லாது போகலாம். வரலாறு நமக்கு பல பாடங்களை விட்டுச்சென்றிருக்கின்றது. இஸ்ரேல் மக்களை அடிமைகளாக வைத்திருந்த பண்டைய எகிப்தியர் இன்று இல்லை. ஆனால் இன்றும் இஸ்ரேல் மக்கள் இவ்வுலகில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். இன்று எகிப்தில் வாழ்பவர்கள் பின் நாட்களில் குடியேறிய அரேபியர்கள் ஆவார்கள். ஒரு 1000 வருடங்களுக்குப் பிறகு சிங்களப் பௌத்த மக்களே இல்லாமல் கூடப் போகலாம். யாருக்குத் தெரியும். இயற்கை தன் கடமையைச் சரியாகவே செய்யும்!👀2 points- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
🤣 ஒயாமல் போனால்தான் அது ஓய்ஸ்டர் போலும் 🤣. சிறுவயதில் முல்லைதீவு சிலாவத்துறை கடற்கரைக்கு விளையாட என்னை கூட்டிப்போன அப்பா, அங்கே யாரோ வித்தார்கள் என ஒரு சொப்பிங் பாக் நிறைய மட்டியை வாங்கி வந்து அம்மாவிடம் கொடுத்தார். அவவுக்கு அதை என்ன செய்வது என்றே தெரியவில்லை🤣. அவருக்கோ முட்டை அவிக்கவே தெரியாது🤣. ஒரு வழியாக அயலவர் உதவியோடு வறுத்து சாப்பிட்டோம். நீங்கள் கப்பலில் வேலை பார்தீர்களா. வாவ். ரிட்டையர் ஆகி விட்டு ஒரு கிரூஸ் கப்பலில் வேலை செய்தால் நல்லா இருக்கும் என யோசிப்பேன். சின்னதில் ராபின்சன் குருசோ கதை படித்த தாக்கமோ என்னமோ….கப்பல் பயணத்தில் ஒரு நாட்டம். இப்போதைக்கு யூகே-பிரான்ஸ் ferry, பருத்தித்துறை-திருமலை ஐ சி ஆர் சி கப்பல் பயணம் மட்டுமே செய்துள்ளேன்.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
இதைத்தான் DR. அர்ச்சுனா அவர்கள் "மாற்றத்தானே வந்தகிருக்கின்றோம்" ! என்று கூறியுள்ளார்1 point- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
🤣.................. யாழ் களத்தில் இந்த அடு பத் கூட்டத்திலிருந்து இன்னும் பலர் இருக்கின்றார்கள்............. நீர்வேலியான், வாதவூரான்,............ எங்கள் எல்லோருக்கும் மேலே தில்லை ஐயா............ ஊரில் வீட்டில் குடல்கறி சமைத்திருக்கின்றார்கள். ஏதோ ஒரு பத்தியக்கறி போல பக்குவமாக கழுவிச் சமைப்பதாக ஒரு ஞாபகம். ஆடு அடிக்கும் நாட்களில் இது நடந்திருக்கின்றது. இங்கும் நண்பர்கள் சிலர் சேர்ந்து ஆடு அடிக்கும் போது, இந்தக் குடல்கறி சமைப்பார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் அடுவுக்கு மேல் அடு எடுத்துச் சாப்பிடும் சிலர் இருப்பார்கள். அப்பொழுது ஒரு அடு ரூபா 1.50 என்று நினைக்கின்றேன். என்னுடைய வகுப்பிலும் இருந்தார்கள். அதில் ஓரிருவர் இப்பொழுது அடிக்கடி டயட்டில் இருக்கின்றார்கள்.......................🤣. நாங்கள் சிலர் அப்பவே டயட்டில் இருந்தோம்................🤣.1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
"சுமந்திரன் லவ்வர்சின்" தவிப்பைப் பார்க்கையில் பல பாடல்களை சிற்றுவேஷன் பாடலாகக் கொடுக்கலாம்..ஆனாலும் "இல்லையென்று சொன்ன பின்பும் இன்றியமையாது.."😂1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
அவர்கள்... நல்லெண்ண சமிக்ஞை காட்ட ஆரம்பிக்கும் போது... நாம் பொறுமையாக இருந்து பெறவேண்டியதை பெற்றுக் கொள்ள வேண்டும். இப்பவே... ஒன்றுக்கும் உதவாத, வறட்டு வீரத்தை காட்டி... ஆரம்பத்திலேயே குழப்பி அடித்தால், அடுத்த ஐந்து வருடம் தமிழர்களுக்கு நரகமாக இருக்கும். நேற்றைய காணொளி... சிங்களப் பகுதிகளை வடிவாக போய்ச் சேரவில்லை என நினைக்கின்றேன். அதன் பின்... புத்த பிக்குகளில் இருந்து, கடைமட்ட கிராமத்து சிங்களவன் வரை... இதன் எதிர்வினை கடுமையையாக வரும் என நினைக்கின்றேன். போதாக் குறைக்கு.... முஸ்லீம்களும் எரியும் நெருப்பில் எண்ணை ஊற்ற தயாராகவே இருக்கின்றார்கள். பிறகு தமிழர்களை காப்பாற்ற யாரும் இல்லை.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
Dr. அர்ச்சுனா ஒரு சாதாரண நபர் அல்ல. அவர் ஒரு வைத்தியர், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். பல நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ஒப்பிடும்போது இவருக்கு இன்னும் மேலதிக பொறுப்புள்ளது. எனவே அவர் மற்றவர்களை விடவும் இன்னும் பொறுப்புசெயற்பட வேண்டும்.1 point- அர்ச்சுனாவுக்கு எதிராக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
முதல் நாள் எவரும்... விரும்பிய இருக்கையில் அமரலாம் என்று முன்பே சொல்லப் பட்டதாம். அப்படி அவர், பிழை என்றால்... அன்றே சபாநாயகர் ஒழுங்கு நடவடிக்கை எடுத்திருப்பாராம், அப்படி நடவடிக்கை எடுக்காத படியால்... அர்ச்சுனாவில் தவறு இல்லை என்று சொல்கிறார்கள். ஆனால்... என்ன இருந்தாலும்... பிரதம மந்திரிக்கு சமமான அந்தஸ்து உடைய எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்து, முதல் நாளே பிரச்சினை பட்டது சரி அல்ல என்பது எனது நிலைப்பாடு. தமிழர்களுக்கு ஒரு பண்பு உள்ளது. அதனை காவலித்தனமாகவோ, கோமாளித்தனமாகவோ செய்வது அருவருப்பை எனக்கு ஏற்படுத்துக்கின்றது. எத்தனையோ... பிரச்சினைகள் இருக்க, எதிர்க்கட்சி தலைவரின் கதிரையில் இருந்துதான் தனது அடையாளத்தை காட்ட வேண்டும் என்று இல்லை. நேற்று முற்பகல் சஜித்தின் கதிரையில் இருந்து விட்டு, தேனீர் இடைவேளையில்... சஜித்துடன் நின்று ஒரு செல்ஃபியும் எடுத்துள்ளார். அத்துடன் அவர் தனது மதம் இந்து என்று பாராளுமன்ற பதிவில் கொடுத்தவராம், அதனை புத்த சமயம் என பதிந்து விட்டார்களாம் என்று இன்னொரு பஞ்சாயத்து போய்க் கொண்டு இருக்குது.1 point- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
பல்கலை மட்ட ஜேவிபி அடிப்படையில் உசார் மடையர்கள் தான். உடனே கை வைத்து விடுவார்கள். பின்னர் கை நீட்டியவன் மீது பல்கலை ஒழுக்க நடவடிக்கை எடுத்தால், மூன்று வேளையும் கன்ரீன் உணவைச் சாப்பிட்டு விட்டு வந்து வகுப்பிற்குப் போகாமல் ஆர்ப்பாட்டம் செய்வார்கள். மறந்தும் கூட "உண்ணாவிரதம்" போன்ற சுய ஒறுத்தல் போராட்டங்களில் ஈடு பட மாட்டார்கள்😂.1 point- "வடக்கு கிழக்கில்" வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட வாய்ப்பு!!
இதிலெல்லாம் அறவே நம்பிக்கை இல்லை…. ஆனால் …. அவர்களும் இப்போ இயற்க்கையோடுதான் கலந்து விட்டார்கள்…. எதுவும் செய்தி சொல்கிறார்களோ?1 point- பாராளுமன்ற உணவு விடுதி மூடப்படாது
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- யுத்தத்தில் இறந்தோரை நினைவுகூர தடை ஏற்படுத்தாத அரசாங்கம் -சிறந்த முன்மாதிரி சமிக்ஞை என்கிறார் ஸ்ரீதரன் MP
அனுர முள்ளிவாய்க்கால் சென்று அங்கே விளக்கேற்றினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அப்படி நடந்தால் தீவிர டமில் தேசிய அரசியல் வியாபாரிகளை அதிதீவிரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்க வேண்டி ஏற்படும். புலம்பெயர்ஸ் கலகக்காறர்களின் நிலைமை அம்போதான் ,...😁1 point- இலங்கை முஸ்லீம்கள் ஒதுக்கப்பட்டார்களா?
வணக்கம் கொழும்பான். இப்போ வேலைக்கு வெளிகிடுகிறேன். விரிவாக எழுத வேண்டிய விடயம். பின்னர் எழுதுகிறேன்.1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
இன்னும் 7 கேள்விகளுக்கு மட்டுமே புள்ளிகள் வழங்கவேண்டும். ( அதிக பட்ச புள்ளிகள் 9)1 point- தாய்லாந்து வழங்கிய யானை இலங்கையில் மோசமான நிலையில் - 700000 டொலர் செலவில் யானையை மீள பெற தாய்லாந்து தீர்மானம்
முத்துராஜா யானையின் தந்தங்களை வெட்ட தாய்லாந்து கால்நடை வைத்தியர்கள் தீர்மானம் 22 NOV, 2024 | 10:23 AM இலங்கையில் இருந்து தாய்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட 29 வயதுடைய முத்துராஜா என்ற பிளாய் சக் சுரின் யானையின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக அதன் தந்தங்களை வெட்டுவதற்கு கால்நடை வைத்தியர்கள் தீர்மானித்துள்ளனர். இந்த யானை தற்போது தாய்லாந்து நாட்டின் லாம்பாங் நகரத்தில் உள்ள தாய் யானைகள் பாதுகாப்பு மையத்தில் உள்ளது. முத்துராஜா நீண்ட தந்தங்களை கொண்டுள்ளமையினால் அதன் நாளாந்த செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மலைப்பாங்கான பகுதிகளில் செல்லும்போது தந்தங்கள் தரையில் சிக்கி இழுக்கப்படுவதைத் தடுக்க அதன் தலையை தூக்கவேண்டியுள்ளதால் முத்துராஜா பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகிறது. இது குறித்து கால்நடை வைத்தியர் வாரங்கனா லங்காபின் வியாழக்கிழமை (21) தெரிவிக்கையில், யானையின் தந்தங்களின் எடையைக் குறைப்பது தொடர்பில் நிபுணர்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வருகிறது. எனினும், எந்தவொரு தீர்மானத்தையும் முன்னெடுக்க பல அமைப்புகளின் கருத்துக்கள் மற்றும் அனுமதி தேவைப்படும். ப்ளாய் சாக் சுரின் யானையின் முன் இடதுகாலில் காயம் இருப்பதால் நடமாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுவதால் உடல் நலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என தெரிவித்துள்ளார். இலங்கையில் முத்துராஜா இரண்டு தசாப்தங்களாக மத நிகழ்வுகளில் பங்கேற்றிருந்ததோடு காயங்களுக்கும் உள்ளாகியிருந்தது. 2001ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டினால் இலங்கைக்கு பரிசாக வழங்கப்பட்ட யானைகளில் முத்துராஜாவும் ஒன்றாகும். https://www.virakesari.lk/article/1993791 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
வினா இலக்கம் 35 ) 17 போட்டியாளர்கள் திருக்கோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து 1 இடத்தை பிடித்தது என்று சரியாக பதில் அளித்திருக்கிறார்கள் ( தமிழரசு கட்சி திருமலை மாவட்டத்தில் ஒரு இடத்தை பிடித்தது). 1)வாலி - 55 புள்ளிகள் 2)வாதவூரான் - 53 புள்ளிகள் 3)பிரபா- 53 புள்ளிகள் 4) நிலாமதி - 48 புள்ளிகள் 5) தமிழ்சிறி - 46 புள்ளிகள் 6) அல்வாயான் - 46 புள்ளிகள் 7) வீரப்பையன் - 46 புள்ளிகள் 😎 புரட்சிகர தமிழ் தேசிகன் - 46 புள்ளிகள் 9) goshan_che - 46 புள்ளிகள் 10) ஈழப்பிரியன் - 45 புள்ளிகள் 11) வில்லவன் - 45 புள்ளிகள் 12)நூணாவிலான் - 44 புள்ளிகள் 13) நிழலி - 44 புள்ளிகள் 14)கந்தையா 57 - 42 புள்ளிகள் 15) கிருபன் - 42 புள்ளிகள் 16) ரசோதரன் - 42 புள்ளிகள் 17) சுவைபிரியன் - 41 புள்ளிகள் 18) வாத்தியார் - 39 புள்ளிகள் 19) சசிவர்ணம் - 39 புள்ளிகள் 20)அகத்தியன் - 38 புள்ளிகள் 21)குமாரசாமி - 38 புள்ளிகள் 22)புலவர் - 36 புள்ளிகள் 23) புத்தன் - 36 புள்ளிகள் 24)சுவி - 34 புள்ளிகள் 25) வசி - 26 புள்ளிகள் 26) தமிழன்பன் - 20 புள்ளிகள் இதுவரை 1 - 14, 16 - 20, 22, 24 - 43, 45, 46, 48 - 50, 52, 54 ,56, 58 - 60 கேள்விகளுக்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன் ( அதிக பட்ச புள்ளிகள் 88)1 point- உக்ரைன் மீது ரஸ்யா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை தாக்குதல்
நீங்கள் பைடன் சொல்வதையும்,சிஎன்என்,பிபிசி சொல்வதை நம்பும் போது மற்றவர்கள் புட்டின் சொல்வதையும் ரஷ்ய ஊடகங்கள் சொல்வதையும் ஏன் நம்பக்கூடாது?1 point- நம்பிக்கை ஒளி தெரிகிறது!
1 pointநான் நினைப்பது இந்த NPP யின் அரசு இலங்கைத் தமிழ் மக்களுக்கு ஒரு நிரந்தரமான தீர்வைத் தராமல் ஏமாற்றி விட்டு அடுத்து வேறு ஒரு கட்சியிடம் பொறுப்புக்களை ஒப்படைக்கும் பொழுது அதாவது அடுத்த தேர்தலில் அவர்கள் தோல்வியடைந்து வெளியேறும் பொழுது அடுத்த நூறு வருடங்களுக்கு அவர்களுடைய எதிர்காலம் இருட்டினில் கவிழ்ந்து விடும் .1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
மாவை,சம்பந்தன் போன்ற இறுக்க முகங்கள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். அர்ச்சுனா போன்ற கலகலப்பு பேர்வளிகள் பாராளுமன்றம் போனாலும் திட்டுகின்றார்கள். நான் என்ன நினைக்கின்றேன் என்றால்..... அண்மையில் இலங்கை தேர்தல் அரசியலில் அடுத்தது என்ன நடக்கப்போகின்றது என துளியளவும் தெரியாமல் கண்டபடி விமர்சனங்களை வைக்கின்றார்கள் போலிருக்கின்றது. ஊர் பாசையில் சொல்வதானால் ஆடறுக்க முதல் அதை அறுக்க அவசரப்படுகின்றார்கள் போலுள்ளது. 😂 ஒரு ஆறு மாதம் பொறுத்து எதையும் எழுதலாம் அல்லது வழமை போல் திட்டலாம் என்பது என் கருத்து.1 point- சேறு பூசும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்! - சிவஞானம் சிறீதரன்
இதைத் தான் நானும் யோசித்தேன். ஒபெக் -OPEC உறுபத்தி செய்யும் மசகெண்ணை பரல்களின் எண்ணிக்கையைக் கூட்டினால், உடனே பெற்றோல் விலை குறையும். ஆனால், மீன் அதிகம் பிடிபட்டாலும் விலை வட்டுக்குள்ளேயே நிற்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கொஞ்சம் capitalist greed போல தெரிகிறது😂!1 point- இந்தியாவுக்கு புறப்பட்டார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
சீனாவின் பருத்திதுறை விஜயம் ....அதை போய் மோடியிடம் சொல்லி ஏதாவது வத்தி வைச்சு...😅1 point- ரஜனிகாந் உடன் சீமான் சந்திப்பு
போட்டோ ஷொப் அவதூறு எடுபடாது அண்ணா................முன்னனி பல ஊடகங்களில் வந்த உண்மை தகவல் ஆன படியால் அவர்கள் கம்மன்னு இருப்பார்கள் என்ன இனி வேறு மாதிரி பழைய கதைய அவுட்டு விடுவினம் சீமான் ரஜனியின் அரசியல் வருகைய எதிர்த்தார் இப்போது ரஜனி கூட சந்திப்பா என ஹா ஹா ஒரு வரி போய் ஓரமாய் நின்று குரையுங்கோ என்று கடந்து செல்ல வேண்டியது தான் வைக்கோ திருமாளவனை விட சீமான் கேடு கெட்ட அரசியல் செய்ய வில்லை😁...........................1 point- அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக அதானி மீது அமெரிக்காவில் வழக்கு
அமெரிக்காவின் குற்றச்சாட்டு அதானி குழுமத்தின் சர்வதேச முதலீடுகளை எந்தளவுக்கு பாதிக்கும்? - ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா பட மூலாதாரம்,GETTY IMAGES இந்தியாவிலேயே இரண்டாவது மிகப்பெரும் பணக்காரர் கௌதம் அதானி. துறைமுகஙகள் முதல் எரிசக்தி வரை கௌதம் அதானி குழும தொழில்கள் பரவியுள்ளன. அமெரிக்காவில் தற்போது அதானி கடும் பிரச்னையில் சிக்கியுள்ளார். தன் நிறுவனம் ஒன்றுக்கு ஒப்பந்தம் பெற 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாகவும் அதனை மறைத்ததாகவும் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. எனினும், இந்த குற்றச்சாட்டுகளை மறுத்து அதானி குழுமம் அறிக்கை ஒன்றை வியாழக்கிழமை மதியம் வெளியிட்டது, அக்குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என அக்குழுமம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் இத்தகைய தீவிரமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள முதல் இந்திய தொழிலதிபதாக அதானி உள்ளார். அமெரிக்காவில் இக்குற்றச்சாட்டுக்குப் பின் அதானியின் உலகளாவிய லட்சியங்களுக்கு பின்னடைவு ஏற்படலாம் என கூறப்படுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பின் டொனால்ட் டிரம்புக்கு வாழ்த்து கூறிய கௌதம் அதானி, அமெரிக்காவின் எரிசக்தி மற்றும் உள்கட்டமைப்பு துறையில் 10 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக உறுதியளித்தார். இந்நிலையில், அமெரிக்காவில் அதானியின் முதலீட்டு உறுதிப்பாடும் தெளிவற்ற நிலையில் உள்ளது. குற்றச்சாட்டுகளை மறுத்து, அதானி குழுமம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "அதானி கிரீன் நிறுவனத்தின் இயக்குநர்கள் மீது அமெரிக்க நீதித்துறை மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, நாங்கள் அவற்றை மறுக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்து சட்ட வாய்ப்புகளையும் ஆராய்வோம் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. "நாங்கள் அனைத்து சட்டங்களையும் பின்பற்றும், சட்டங்களை மதிக்கும் நிறுவனம் என்பதை எங்கள் கூட்டாளிகள் மற்றும் ஊழியர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கௌதம் அதானிக்கும் அவரது கூட்டாளிகள் பலருக்கும் பிரச்னைகள் அதிகரிக்கலாம் பெரும் பின்னடைவா? அமெரிக்காவில் அந்நிறுவனத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்துடன் தொடர்புடைய பல நிறுவனங்களின் பங்குகள் 20 சதவீதம் வரை சரிந்தன. அதானி குழுமத்தின் தலைவர் கெளதம் அதானி மற்றும் அமெரிக்காவில் உள்ள பிற மூத்த அதிகாரிகள் மீது மோசடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட பிறகு, குழும நிறுவனங்களின் மதிப்பீடுகள் எதிர்மறையாக பாதிக்கப்படலாம் என சர்வதேச கடன் மதிப்பீட்டு நிறுவனமான மூடிஸ் தெரிவித்துள்ளது. ஹிண்டன்பெர்க் அறிக்கை கடந்தாண்டு அதானி குழுமத்திற்கு எதிராக பல்வேறு முறைகேடுகள் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஹிண்டன்பெர்க்கின் குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அதானி குழுமத்தின் சந்தை மதிப்பு 150 பில்லியன் டாலர்களுக்கு மேல் சரிந்தது. அதானி மீதான குற்றச்சாட்டுகள் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதானிக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதிக்கும் இடையிலான உறவு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. ஆனால், அதானியும், பாஜகவும் ஒருவருக்கொருவர் பலனடைந்து வருவதாக எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வருகின்றனர். அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவில் ஏற்கனவே பதற்றம் நிலவி வருகிறது. நியூயார்க்கில் அமெரிக்கக் குடிமகனும் சீக்கிய பிரிவினைவாத தலைவருமான குர்பத்வந்த் சிங் பன்னூன்-ஐ கொல்ல இந்திய அரசு அதிகாரி ஒருவர் சதி செய்ததாக அமெரிக்கா குற்றம் சாட்டியது. இந்த விவகாரங்களில் டிரம்ப் அரசின் நிலைப்பாடு என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. டிரம்புக்கும் மோதிக்கும் நல்ல உறவு இருக்கிறது, இருவரும் ஒருவரையொருவர் நண்பர்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். ஆனால், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதிப்பது டிரம்பிற்கு பிடிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 'ஸ்டாப் அதானி' பிரசாரம் அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் 45 நாட்கள் நடைபெற்றது என்ன நடந்தது? கௌதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் உடன், ஆறு பேர் சூரிய சக்தி விநியோக ஒப்பந்தத்தைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக, நியூயார்க்கின் கிழக்கு மாவட்டத்திற்கான அரசு வழக்கறிஞர் ( US Attorney) அலுவலகம் தெரிவித்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி, சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா)(SECI) நிறுவனத்திடமிருந்து எட்டு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுள்ளது. இதேபோல், அஸூர் பவர் நிறுவனமும் (Azure Power) நான்கு ஜிகாவாட் சூரிய சக்தியை வழங்குவதற்கான டெண்டரைப் பெற்றுள்ளது. இந்நிறுவனத்தில் முதலீட்டாளராக இருந்த ஒரு கனடிய பொது ஓய்வூதிய நிதி மேலாளரும் இந்த வழக்கில் பெயரிடப்பட்டுள்ளார். ப்ளூம்பெர்க் செய்தியின்படி, சூரிய சக்தியை அதானி மற்றும் அஸூர் பவர் நிறுவனங்கள் கொடுத்த விலையில் வாங்குவதற்கு எந்த நிறுவனத்தையும் சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியாவால் (SECI) கண்டுபிடிக்க முடியவில்லை. அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் வழங்கிய பின்னர், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் SECI உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆந்திரப் பிரதேச அதிகாரி ஒருவருக்கு 228 மில்லியன் டாலர்கள் வழங்கப்பட்டதாகவும், அதற்கு ஈடாக ஆந்திரப் பிரதேசம் SECI-யிலிருந்து மின்சாரத்தை வாங்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சாகர் அதானி குறித்து அமெரிக்க ஆவணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான வினீத் ஜெயின் தனது போனில், இந்த லஞ்ச விவகாரத்தில் அஸூர் பவர் பங்கு பற்றிய ஆவணத்தின் புகைப்படத்தை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படும் நிலையில், சாகர் அதானி தனது மொபைல் போனை பயன்படுத்தி லஞ்ச விவரங்களை அறிந்ததாக கூறப்படுகிறது. இந்த லஞ்சத்தின் அளவு எட்டு கோடி டாலர்கள். லஞ்சத் தொகையை வழங்குவதற்காக அஸூர் பவர் நிறுவன அதிகாரிகளுடன் கௌதம் அதானி ஆலோசனை நடத்தியதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அதானி குழுமம் தொடர்பாக பல நாடுகளில் சர்ச்சை எழுந்துள்ளது பல நாடுகளில் சர்ச்சை அமெரிக்காவின் அரசு வழக்கறிஞர் (US Attorney) பிரையன் பீஸ், அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் இருந்து மூலதனம் திரட்ட முயன்றபோது, தங்களது லஞ்சம் தரும் திட்டத்தைப் பற்றிப் கௌதம் அதானி, சாகர் அதானி, னீத் ஜெயின் ஆகியோர் பொய் கூறியுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். பல நாடுகளில் அதானி சர்ச்சைக்குரியவராக உள்ளார். 2017-ஆம் ஆண்டில், அதானி எண்டர்பிரைசஸ் தொடர்பாக ஆஸ்திரேலியாவில் பல சர்ச்சைகள் எழுந்தன. ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்திற்கான ஒப்பந்தத்தை அதானி எண்டர்பிரைசஸ் பெற இருந்தது. ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிலக்கரி சுரங்கம் இதுதான். ஆனால், அதானிக்கு ஒப்பந்தம் கொடுத்தது தொடர்பாக பெரும் சர்ச்சை ஏற்பட்டு மக்கள் வீதிகளில் இறங்கினர். குயின்ஸ்லாந்தில் 'ஸ்டாப் அதானி' (Stop Adani) இயக்கம் 45 நாட்கள் நீடித்தது. ஆஸ்திரேலியாவில் அதானி குழுமம் சுற்றுச்சூழல் தொடர்பான விதிகளை புறக்கணிப்பதாக குற்றஞ்சாட்டப்படுகிறது ஜூன் 2022 இல், இலங்கையின் இலங்கை மின்சார வாரியத்தின் (CEB) தலைவர் பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவின் முன் விளக்கம் ஒன்றை அளித்தார். அதில், பிரதமர் நரேந்திர மோதி இலங்கையில் மின் திட்டத்தை அதானி குழுமத்திற்கு வழங்குமாறு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 'அழுத்தம்' கொடுத்ததாக கூறினார். மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்திற்கான ஒப்பந்தம், இந்தியாவின் அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்டதாகவும் இந்த ஒப்பந்தத்தை அதானி குழுமத்துக்கு வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோதி சார்பில் அப்போதைய இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த ஆண்டு செப்டம்பரில், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் அதானி குழுமத்திற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது இலங்கை, கென்யா முதல் மியான்மர் வரையிலான சர்ச்சைகள் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே அதானி குழுமத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டதாக கோட்டாபய ராஜபக்ச தன்னிடம் கூறியதாக பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழுவிடம் தெரிவித்தார். "மோதியின் அழுத்தத்தில் தான் இருப்பதாக ராஜபக்ச என்னிடம் கூறினார்" என்று பெர்டினாண்டோ நாடாளுமன்றக் குழு முன் கூறியிருந்தார். எனினும், ஒரு நாள் கழித்து, கோட்டாபய ராஜபக்ச இந்தக் குற்றச்சாட்டுகளை முற்றிலும் நிராகரித்திருந்தார். இதுகுறித்து, அதானி நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் முதலீடு செய்வது அண்டை நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய முயற்சிப்பதாகும். பொறுப்புமிக்க நிறுவனமாக, இரு நாடுகளுக்கு இடையிலான கூட்டுறவின் முக்கியமான பகுதியாக தாங்கள் பார்ப்பதாக தெரிவித்திருந்தார். சமீபத்தில் வங்கதேச உயர் நீதிமன்றம் அதானி குழுமத்தின் அனைத்து மின்சாரம் தொடர்பான ஒப்பந்தங்களையும் மறுபரிசீலனை செய்ய உயர்மட்ட விசாரணைக் குழுவை அமைத்தது என இந்தியாவின் ஆங்கில வணிக நாளிதழான பிசினஸ் ஸ்டாண்டர்ட் தெரிவித்துள்ளது கடந்த 2007-ஆம் ஆண்டில், அதானி பவர் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கோடாவில் ஒரு மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கியது மற்றும் இங்கிருந்து வங்கதேசத்திற்கு மின்சாரம் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது. அதானியின் இந்த ஒப்பந்தம் குறித்து வங்கதேசம் மற்றும் ஜார்க்கண்ட் அரசுகள் பல எதிர்ப்புகளை தெரிவித்தன. கடந்த 2021 ஆம் ஆண்டில், அதானி போர்ட்ஸ் மியான்மரின் யங்கூனில் ஒரு கொள்கலன் முனையத்தை உருவாக்கத் திட்டமிட்டது. மியான்மர் ராணுவத்திடம் இருந்து நிலம் குத்தகைக்கு எடுக்கப்பட்டதால் அதானியின் இந்த திட்டமும் விமர்சத்திற்கு உள்ளானது. மியான்மர் ராணுவம் மனித உரிமைகளை மீறுவதாகவும், அதனுடன் அதானி ஒப்பந்தங்கள் செய்து வருவதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. செப்டம்பர் 2024 இல், கென்யாவில் உள்ள நைரோபி விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கென்யா விமான நிலைய ஆணையத்திற்கும் அதானி குழுமத்திற்கும் இடையிலான ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். நைரோபி விமான நிலையத்தை 30 ஆண்டுகளுக்கு இயக்கும் பொறுப்பை அதானி குழுமம் பெற இருந்தது. விமான நிலைய தொழிலாளர்கள், அதானிக்கு அப்பொறுப்பு கிடைத்த பிறகு வேலை இழக்க நேரிடும் என்று கவலைப்பட்டனர். ஒப்பந்தங்களை ரத்து செய்த கென்யா அதானி குழுமத்துடனான அனைத்து ஒப்பந்தங்களையும் ரத்து செய்வதாக கென்யா அரசு வியாழக்கிழமை அறிவித்தது. மின் பரிமாற்றம் மற்றும் விமான நிலைய விரிவாக்கம் போன்ற முக்கிய திட்டங்கள் இதில் அடங்கும். "வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை ஆகிய கொள்கைகளுடன் எங்களின் அரசாங்கம் செயல்பட்டு வருகிறது. நாட்டின் நலன்களுக்கு எதிரான ஒப்பந்தங்களுக்கு எங்கள் அரசாங்கம் ஒப்புதல் அளிக்காது," என கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "எங்கள் நாட்டின் கொள்கைகள் மற்றும் விழுமியங்களுக்கு எதிரான எந்தவொரு ஒப்பந்தத்தையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்" எனவும் அவர் தெரிவித்தார் -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgmvd9rvp88o1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointமுட்டாளாக இருங்கள்..!! ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையாயிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!” அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார்... கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?” பையன் சொன்னான்”தங்கம்” அவர் கேட்டார் “பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?” பையன் சொன்னான், “தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை, அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார்… இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள்”. “நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன். உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள். நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன். இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!! வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால், நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால், வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம். “எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்” நன்றிகள் - G. காவியா1 point- யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
பாராட்டுக்கள் @நிலாமதி அக்கா! எல்லாம் குருட்டுவாக்கில வெல்வதுதானே!😂 நம்ம தங்கத்தின் பனி பைத்தியர் பாராளுமன்றம் போனதும், தேசிய மக்கள் சக்தி யாழில் முதலாவதாக வந்ததுமான அதிசயங்கள் நடக்கும்போது நாம கீழே இருப்பதுதான் சிறப்பு😜1 point- கருத்து படங்கள்
1 point1 point- பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
டக்ஷ அநுர சகோதரய அரசியல் யாப்பை மாற்றித் தரப்போகும் அரசியல் தீர்வு தமிழர்களுக்கென பிரத்தியேகமான உரிமைகளைத் தரப்போவதில்லை. அவருடைய முதன்மை நோக்கம் பொருளாதாரத்தில் அடிவாங்கியிருக்கும் அடித்தட்டு, கீழ் மத்தியதர மக்கள் தங்கள் வாழ்வில் ஒளிவீசும் என்ற நம்பிக்கையைத் தக்கவைப்பதுதான்! யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் மூன்று எம்பிமாரும் அங்கஜன், டக்ளஸ் வாக்கார்கள் திசைகாட்டிப் பக்கம் சரிந்தமையால்தான் தெரிவுசெய்ய்பட்டார்கள், தமிழ்த் தேசியம் அப்படியே இருக்கு என்று வாட்ஸப்பில் கணக்கு விடுகின்றார்கள்!🤣 வாட்ஸப் தேசிய வீரர்களின் பதிவு… 2020- தேர்தல் அங்கஜன்(SLFP)- 49,373 டக்ளஸ்(EPDP)- 45,797 மொத்தம்=95,170 2024- தேர்தல் அங்கஜன் கட்சி- 12,427 டக்ளஸ் கட்சி- 17,730 மொத்தம்=30,157 அரச ஒத்தோடிகள்(அங்கஜன்+டக்ளஸ்) - 95,170-30,157 மொத்தம் =65,013 2024-JVP 80,830 -65013 =15,817 15817-853(JVP-2020) = 14,964 இந்த 14,964 வாக்குகளும் ஏலவே இருந்த பிற உதிரி சிங்கள முகவர்களான UNP, SJB,சந்திரகுமார் ஆகியோரிடம் இருந்தே புடுங்கியுள்ளது. ஆகமொத்தத்தில் கடந்தமுறை அளிக்கப்பட்ட தமிழ்த்தேசியம் சார்ந்த வாக்குகளை JVP யின் சுனாமி அலையால் தொட்டுகூட பார்க்கமுடியவில்லை. மேலோட்டமாக ஆய்வுக்குட்படுத்தினால் கடந்த முறையை விட சிங்கள கட்சிகள் கிட்டதட்ட 5000 வாக்குகள் இம்முறை குறைவாகவே பெற்றுள்ளன. (2020)132,329- 127,354(2024)= 4,975 இத்தேர்தலில் யாழ்-கிளி தேர்தல் மாவட்டத்தில் நடைபெற்ற நல்ல விடயமாக மக்களால் பார்க்கப்படுவது யாதெனில் சுமந்திரன்,டக்ளஸ்,சித்தார்த்தன், அங்கஜன் போன்ற தமிழின விரோதசக்திகள் அகற்றப்பட்டமை. ஆபிரகாம் சுமந்திரன் மதியாபரணன் 2015-58,043 2020-27,834 2024-15,039 தமிழ்க்கட்சிகள் தங்களது அர்ப்பணிப்பான சேவைமூலம் சிங்கள கட்சிகளுக்கு அளிக்கப்படுகின்ற வாக்குகளை அடுத்த தேர்தலில் தடுக்க வேண்டும். இம்முறை அநுர தரப்பு 2/3 பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தமை நல்லவிடயம் இல்லாவிட்டால் தங்களிடம் பெரும்பான்மையில்லை அதனால் தமிழர்களுக்கு ஒன்றும் செய்ய முடியாதென உருட்டிருப்பாங்க.. என்னை பொறுத்தவரையில் இப்பொழுதும் வடகிழக்கு தவிர்ந்த மற்றைய பிரதேச மக்களுக்கு மாத்திரமே நல்லாட்சியை வழங்குவார்கள். (கடல்நீர் உப்பானதென்று தெரிந்துகொள்ள அதனை முழுவதுமாகக் குடித்துப்பார்க்க வேண்டியதில்லை-சேகுவேரா)1 point- அக்கினிக் கரங்கள்
1 pointஇங்க பயங்கரப் பிரச்சினை என்று. எல்.ரீ.ரீ.ஈ ஆஸ்பத் திரிக்குள்ள நின்று இந்தியன் ஆமியைத் தாக்கினதால, ஆமி உள்ள புகுந்து அவங்களைத் தாக்கினதிலை டொக்ரர்களும் நேர்ஸ்மாரும் கொல்லப் பட்டிட்டாங்களாம்." என்று அவன் சொன்னான். " மண்ணாங்கட்டி, இருபத்திநாலு மணித்தியாலமும் நானும் ஆஸ்பத்திரிக்குள்ள தான் இருந்தன். அப்படி ஒரு வரும் ஆஸ்பத்திரிக்குள்ள இருந்து தாக்கேல்ல ..... ஆனால், அவங்களுக்கு நாங்கள் போராளிகளை, இங்கே வைத்து வைத்தியம் செய்யிறோம் என்று சந்தேகம் .....! அது தான் இப்படிச் செய்திருக்கிறாங்கள். வாற வழியில உனக்கு ஒரு பிரச்சினையும் இல்லையே. இந்தியன் ஆமியைச் சந்திக்க வில்லையே?" பக்கத்தில் நின்ற இன்னுமொருவரைச் சுட்டிக் காட்டிய படி 'நானும் இவரும்தான் கே.கே.எஸ்.இல் இருந்து வந்தனாங்கள். இவரும் யாழ்ப்பாணத்தில இருக்கிற தங்கட சொந்தக்காரரின்பாடு என்னவோ என்று பார்க்க வந்தவர். நாங்கள் றோட்டால வர இல்லை ஆமிக்காரன் வந்த மாதிரி ஒழுங்கைக்குள்ளாலையும், வளவுகள், தோட்டங்களுக்குள்ளாலையும் தான் வந்தனாங்கள். எல்லா இடமும் ஒரே பிண நாத்தம். நல்ல காலம் நாங்கள் ஒரு இடத்தில தப்பினதே அருந்தப்பு......!" ..ஏன் ஆமி சுண்டிட்டானா..?" “இல்லை. ஒரு வீட்டுக் கோடிக்குள்ள ஒரு வயசு போன கிழவரின் பிணத்தைச் சுத்தி நாலைஞ்சு நாய்கள் திண்டு கொண்டு நிண்டுதுகள் .... அந்தப் பக்கம் ஆட்கள் யாருமே இல்லை! அதுகளுக்கெல்லாம் நல்ல பசி போல... நாய்கள் எங்களைக் கண்டிட்டு அந்த மனிசன்ர பிணத் தைத் தின்ற ருசியில எங்களுக்கு மேல பாயத் தொடங்கிற்றுதுகள். நல்ல காலம்! வேலிக் கம்பை முறிச்சு அந்த நாய்களை அடிச்சி விரட்ட நாங்கள் பட்ட பாடு?…”என்று சொல்லிக் கொண்டு போனவன் தன் பேச்சை நிறுத்தி, “அக்கா! உனக்கு விஷயம் தெரியுமா?" என்று கேட்டு நிறுத்தினான். " என்னடா .....?" “அக்கா! அந்த உடுவில் அன்ரி மிஸிஸ் சிவபாதம் அவங்கள் எல்லாரும் குடும்பத்தோட சரி ..." “ஏனடா?" "காரணம் ஒண்டும் தெரியாது முத்தத்தில இருந்து அரிசி கழுவிக் கொண்டிருந்த அவவை, றோட்டில நின்ற ஆமிக்காரன் வரச்சொல்லிக் கூப்பிட்டிருக்கிறான். மனுசி போகவே, பின்னால பிள்ளைகள் மூன்று பேரும் போயிருக்குதுகள். அதுகளுக்குப் பின்னால அன்ரியிட தாய்க் கிழவியும் போயிருக்கிறா. அவ நல்ல படிச்சவ தானே......! இங்கிலிஷ் எல்லாம் நல்லாய் பேசுவாதானே. அப்படியிருந்தும் ஒன்றும் விசாரிக்க இல்லையாம்... மதிற் சுவரோட ஐந்து பேரையும் வரிசையா நிற்க வைச்சு அப்படியே ஓட்டோவில விட்டு மெஷின் கண்ணால சுட்டிருக்கிறாங்க. கிழவியும் மூத்த பெடியனும் அந்த இடத்திலேயே சரி ...... அவங்களுக்கு உதவி செய்ய யாருமே போக இல்லை. ஆமிக்காரன் போன பிறகு தான்.... மற்ற மூண்டுபேரும் தவண்டு தவண்டு ஒழுங்கைக்குள்ள போயிருக்குதுகள் ... இளைய மகனும் பிள்ளைகளும் பின்னால் தவழ்ந்து வருகுதுகள் தானே .......! என்ற நினைப்பில் அந்த அன்ரி முன்னுக்கே போயிற்றா. ஆனால், அந்தப் பிள்ளைகள் அவளைத் தொடர்ந்து போக முடியாமல் நடுவழியிலேயே இரத்தம் வெளியில் போய் செத்துட்டுதுகளாம். இவவுக்கும் ஒழுங்கைக்குள்ள வந்த உடனேயே அறிவு மயங்கிற்றுதாம் ...... அதனால். பிள்ளைகள் பற்றின தகவலை இவவைக் காப்பற்றின சனங்களுக்கு சொல்ல முடியாமல்ப் போயிற்றுது. அவ, சீரியசா இருந்து இப்ப ஆபத்து இல்லை என்று சொல்லினம். சங்கானை ஆஸ்பத்திரியில இருக்கிறாவாம்......" அந்த அன்ரியையும் பிள்ளைகளையும் நினைத்துக் கொண்டேன். இந்தியாவின் மேல் அவர் கொண்டிருந்த விசுவாசத்தையும், 'உணவுப் பொட்டலம்' போட்ட அன்று அவவும் அந்தப் பிள்ளைகளும் சந்தோஷத்தால் துள்ளிக் குதித்த காட்சியையும், இந்தியப் படையினர் அவர்கள் வீட்டைத் தாண்டிப் போகும் போதெல்லாம், அவர்கள் கைகாட்டி மகிழ்ந்து செய்த ஆரவாரங்களையும் நினைத்தேன். எல்லாம் போயிற்று. அண்டைக்குத் தீபாவளி நாளில் எங்கள நரகாசுரன்களாகவும் தங்கள கண்ண பிரான்களாகவும் நினைத்து இப்படிச் சங்காரஞ் செய்தாங்களே....... ! பெருமூச்சு ஒன்று தான் விட முடிந்தது. "தம்பி நீ கெதியில கவனமாய் வீட்டை போய் சேரு. அங்க பாட்டியும் பிள்ளைகளும் அழுது கொண்டிருப்பினம். இன்னும் ஒரு கிழமையால வா..! அதுக்குள்ள நான் லீவு கேட்டு ஆயத்தமாய் இருக்கிறன். நீ வந்த பிறகு உடனே லீவு போட்டிட்டு வாறன் அதுகளை கவலைப் படாமல் இருக்கச் சொல்லு. இப்ப எல்லாம் நோமலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கு. இனிப் பிரச்சினையில்ல. நீ போறது தான் கவனம். வந்தபோது நாய்களிட்ட மாட்டுப் பட்ட மாதிரி ஏதும் ஆபத்தில மாட்டப் போறாய்." "அது தான் அக்கா யோசனையாய் இருக்கு. வந்த வழியால போகவும் பயமாய் இருக்கு. வேற எந்த வழியால போறது ? என்று தீர்மானிக்கவும், முடியாமல் இருக்கு. ஏனென்றால் கம்பெஸ் பக்கமெல்லாம் சரியான பிரச்சினையாம். அங்க பிரம்படி ஒழுங்கையில் பொதுமக்களைச் சுட்டிட்டு, டாங்கிகளை ஆக்களுக்கு மேலால எல்லாம் ஏத்திக் கொண்டு போயிருக்கிறாங்கள். அந்தச் சில்லுகளுக்குக் கீழ நசுங்கி அப்பிடியே சனங்கள் சப்பளிஞ்சு போயிற்றாங்களாம்." எனக்கு கேட்கக் கேட்கத் தலையை என்னவோ செய்தது ! " சரிசரி...... நீ கவனமாய் போயிற்று வா!!" என்று சொல்லி அனுப்பி விட்டு கடமைக்காகத் திரும்புகின்றேன். என் கண்களுக்குச் சடலங்களை எரித்த சாம்பர்த் தடங்கள் வரிசையாகத் தெரிகின்றன. இந்தக் கொடுமைகள் எல்லாம் ஏன் .....? கேணல் ப்றார், டொக்ரர் சிவபாதசுந்தரத்தைச் சுட்டதற்கான காரணத்தைச் சொன்னாரே !" " ஒரு டொக்ரர். வயதாளி. டொக்ரருக்கான சீருடையுடன் - கையில் 'ஸ்தெதஸ்கோப்புடன்' நின்றவரை அடையாளம் தெரியாமலா உங்கள் சிப்பாய் சுட்டான்? " என்று எங்கள் டொக்ரர்கள் கேட்டதற்கு ... கேணல் ப்றார் சொன்ன பதில்! “யுத்தத்தில் எதுவும் நடக்கலாம்." யுத்தமா......? இவர்கள் யாருக்கு எதிராக யுத்தம் செய்ய வந்தவர்கள்...... ! தமிழரைப் பாதுகாக்கத்தான் வந்தவர்கள் என்றார்களே! அப்படிச் சொல்லித்தான் உணவுப் பொட்டலமும் போட்டார்களே? திலீபனைக் காப்பாற்றினார்களா......? அவர்களது பொறுப்பில் இருந்த பதின்மூன்று போராளிகளைக் காப்பாற்றினார்களா ......? எங்களைக் காப்பாற்ற வந்தவர்கள், எங்கள் எதிரிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு எம் மக்களை அல்லவா கொன்று குவித்து விட்டார்கள். அன்று முதல் நாம் இந்தியாவில் வைத்திருந்த விசுவாசத்தையும் கொன்றுவிட்டார்கள் ! அந்தச் சர்மா சொன்னானே 'Belive Indian' என்ற அந்த நம்பிக்கைக்கு இவர்கள் செய்த கைமாறு இதுதானா? இவர்கள் செய்யும் யுத்தம். தமிழ் மக்களுக்காகவே போராடிக் கொண்டிருக்கும் போராளிகளை தமிழ் மக்க ளிடமிருந்து அந்நியப்படுத்துவதற்காக இடம் பெறும் யுத்தம்......! மக்கள் அஞ்சி நடக்க வேண்டும்; போராளிகளுக்கு ஆதரவு கொடுப்பதனாற்தானே நாம் இத்தனை கொடுமைகளுக்கும் உள்ளாகிறோம் என்று உணர்ந்து விட்டு ஒதுங்க வேண்டும்! அவர்களை தமது துன்பங்களுக்குக் காரணமான போராளிகளைப் பொதுமக்கள் தாமாகவே காட்டிக் கொடுக்க முன்வரவேண்டும். அத்தகைய சூழ்நிலை ஏற்படுவதற்காக இராணுவம் இத்தகைய ஈவிரக்கமற்ற கொலை வெறியாட்டத்தைச் செய்வது தான் இராணுவத் தர்மமாம்! இராணுவம் கொலை செய்யலாம் கொள்ளையடிக்கலாம் கற்பழிக்கலாம் எதுவும் செய்யலாம். இதனையெல்லாம் இராணுவ தர்மம் அனுமதிக்குமாம். தர்மத்திற்குப் பேர் போன இந்தியா. ஜே. ஆரின் தார்மீக அரசின் ஆதரவோடு அந்தத் தார்மீகச் செயல்களையே செய்து கொண்டிருந்தது. இவர்களின் இந்த நடவடிக்கைகளின் விளைவுகள் இவர்களது எதிர்பார்ப்புக்கு முழுமையும் எதிராகவே திரும்பி உள்ளன என்பதை இவர்கள் அறியும் காலம் விரைவில் வரும்! ஒரு காலத்தில், " இந்தியாவே! நீ எப்பொழுது வரப் போகிறாய்?" என்று காங்கேசன்துறைக் கடற்கரையில் நின்று கூவி அழைக்க நினைத்த என் வாயால் இந்தியனே! நீ எங்கள் நாட்டைப் பிடித்த பீடை. எப்பொழுது எம்மை விட்டுத் தொலையப் போகிறாய்......? என்று உரத்துக்கூவ வேண்டும் போல் இருந்தது. 'வெள்ளையனே வேளியேறு! " என்று கோஷமிட்டுச் சுதந்திரப் போர் நடத்திய இந்தியனை இந்தியனே வெளியேறு!" என்று ஈழத் தமிழர் கோஷமிட்டுக் கலைக்க வேண்டிய காலமிது என்பதை என் மனம் உறுதியாக நம்பியது. சிறுவயதில் நான் கற்பனை செய்த எம் ஜி. ஆர். அண்ணாத்துரை, காந்தீயம்; இந்திய சுதந்திரப் போராட்டம்..... மிராஜ் விமானம். உணவுப் பொட்டலம் சர்மா...... எல்லாரும் என் மனதில் வந்து போகின்றார்கள். நாட்டில் நல்லவை நடக்க வேண்டுமென்பதற்காக பலி கொடுத்து வேள்விகள் செய்வார்கள். இவர்கள் எமது தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு அமைதியை பெற்றுத் தரவந்தவர்கள். அதற்காகத் தான் இவர்கள் எங்களையே பலிப் பொருளாக்கி அமைதி வேள்வி செய்து முடித்திருக்கிறார்கள். இந்தியாவின் கரங்களை, அணைக்கும் கரங்களாக நினைத்திருந்தேன்......! ஆனால், அக்கினிக் கரங்களாக அவை எம்மைச் சுட்டுக் கருக்கிவிட்டன ! நான் நடந்து கொண்டிருக்கின்றேன் .. எனது ஒவ்வொரு அடியும் வெறுப்போடு தரையில் பதிகின்றது...! எனது நம்பிக்கைகள் அவற்றுள் மிதிபட்டு நசிகின்றன.1 point - மாவீரர் தினத்தால் ஒத்திவைக்கப்பட்ட பாராளுமன்ற அலுவல்கள் கூட்டம்; சிறிதரனிடம் மன்னிப்புக்கோரிய அமைச்சர் பிமல்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.