Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. Kavi arunasalam

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3034
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    88806
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    33346
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19662
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/10/24 in all areas

  1. அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான். யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன். பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.
  2. நாடாளுமன்ற உறுப்பினரை சேர் என்று அழைக்கவேண்டும் என்ற எந்தவொரு அவசியமுமில்லை. வைத்திய நிர்வாக சேவையின் மூப்பு அடிப்படையில் சத்தியமூர்த்தியைத் தான் அர்ச்சுனா சேர் என்று அழைக்கவேண்டும். கடைசியில் அர்ச்சுனா கட்டக் கோவணங்கூட இல்லாமல் ஓடப்போகின்றார். அரியத்தை பப்பாவில் ஏத்தின கோஶ்டி இவரையும் பப்பாவில ஏத்திவிட்டுட்டு நிக்குதுகள். ஏறினால் பிறகு அதுகள் ஓடீடுங்கள். தங்கம் கூட கிட்ட நிக்காது! 😂
  3. ஒரு பழைய மாணவன் தனது முன்னாள் பாடசாலைக்குப் போவதானாற்கூட , வாசலில் நிற்கும் காவளாளியிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் அலுவலகப் பியோனிடம் அனுமதி பெற்று தலைமையாசிரியரையோ அல்லது பொறுப்பாசிரியரையோ சந்தித்து அனுமதி பெற்றுத்தான் தனது பாடசாலையச் சுற்றிப்பார்க்க முடியும். இது பாடசாலைகளுக்கு அல்லது கல்லூரிகளுக்குச் சென்ற பழைய மாணவர்களுக்குப் புரியும். 😁
  4. வருங் கால ஆடலரசிகள்
  5. சத்தியமூர்த்திக்கு தன் பதவிக்கேற்ற மாதிரி நடந்து கொள்ள தெரியாது...பப்ளிக்காய் தனது மு.புத்தகத்தில் அர்ஜுனாவுக்கு வோட்டு போட தனக்கு என்ன விசரோ😎 என்று தேர்தலுக்கு முன்பு எழுதினவர் ...சும் தான் இந்த தடவையும் வெல்லுவார்...தன்னுடைய ராஜ்ஜியம் என்று நினைச்சிருப்பார்...எல்லாம் பூச்சியமாயிட்டுது😬...உடனே பிரதேசவாதத்தை கையில் எடுத்து கொண்டு கோசம் போடுகிறார். எனக்கு முதலில் சத்தியமூர்த்தி மேல் நல்ல அபிப்பிராயம்,நம்பிக்கை இருந்தது....யாழிலும் முன்பு ஆதரவாய் எழுதியிருந்தேன் ...ஒரு சில கட்டுரைகள் துறை சார்ந்த நிபுணர்களால் எழுதப்பட்டதை வாசித்தவுடன்,அதை விட அங்கிருந்து வரும் தகவல்கள் அவருக்கு நல்லதொரு பாடம் படிப்பிக்க வேண்டும்...அது யார் படிப்பித்தாலும் சரி😧 சத்தியமூர்த்தி தானே கேதீஸ்வரன் போதைப் பொருள் விற்றதாக சொன்ன நினைவு....இருவருக்கும் இடையிலும் பிரச்சனை அல்லவா .
  6. அது ஏலவே தொடங்கிவிட்டது. எமது நிலைதான் துருக்கிய குர்தீஸ் மக்களுக்கு. மேற்குலகால் அவர்கள் கைகழு நட்டாற்றில் விடப்படுவர். துருக்கி அவர்களைத் தின்று தீர்க்கும். சிரியாவில் இஸ்ரேல் சிரியாவின் தென் மேற்குப் பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. துருக்கி சிரியாவின் வட பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. மேற்கை நம்பினோர் கைவிடப்படுவர். அனுபவம். ☹️
  7. யானை... தனக்கு தீங்கு செய்தவர்களை, எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்... நினைத்து வைத்து பழிவாங்குமாம். 😂 அதே குணம் கொண்டவர்தான், வைத்தியர் அர்ச்சுனா... என்று சொல்கிறார்கள். 🤣 ஆக... சத்தியமூர்த்திக்கு, "ஏழரை" ஸ்ரார்ட் பண்ணி விட்டது. 😂 🤣
  8. இதில் நான் ஒரு சிறு துரும்பு கூட எடுத்து போடுவதில்லை நீங்கள் இப்படி சொல்லலாமா ?? 🤣
  9. இலங்கையில் கொடுப்பது மட்டும் என்ன அனுர, ரணில், மைத்திரி, மகிந்த வீட்டு பணமா? ஜேர்மனி பொருளாதாரத்தில் முன்னேறிய நாடு - அதன் கஜானாவை மக்களின், நிறுவனங்களின் வரிப்பணம் நிரப்புகிறது. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு ஜேர்மனி செலவழிக்கிறது. இலங்கை பொருளாதாரத்தில் பிந்தங்கிய நாடு - அதன் கஜானவை வெளிநாட்டு கடனும், அந்நிய செலாவணியும், உதவிகளும் நிரப்புகிறன. அதை எடுத்து மக்கள் நலதிட்டங்களுக்கு இலங்கை செலவழிக்கிறது.
  10. I am not even sure he has any powers here to abuse. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிரின் சிறப்புரிமைகள் பெருமளவில் பாராளுமன்ற வளாகத்துக்குள்தான். சம்மன் பண்ணும், விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்ற தனி உறுப்பினர்களால் அன்றி தேர்வு குழுக்கள் வழியாகவே பிரயோகிக்க படும். ஒரு வாக்காளரின் விடயம் சம்பந்தமாக ஒரு எம்பி கடிதம் மூலம் கேள்வி கேட்டால், குறித்த கால அவகாசத்தில் பதில் போட வேண்டும். இலங்கையிலும் இப்படித்தான் என நினைக்கிறேன். இங்கே கடிதம் போடாமல் அருச்சுனா நேரில் போயுள்ளார். பணிப்பாளர் முறையாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன் என்றால் ஒத்து கொள்வதுதான் முறை. சேர் என அழைக்கவேண்டும் என அடம்பிடிப்பது எல்லாம் லுச்சாத்தனம். திரு அருச்சுனா இராமநாதன் கெளரவ பா உ அவர்களே என அழைத்தால் போதும் என நினைக்கிறேன். இவர் இதை பாராளுமன்றில் சிறப்புரிமை மீறலாக எழுப்பும் போது - சபாநாயகர் என்ன செய்கிறார் என பார்போம். அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. என்னால் நீங்கள் தந்த இணைப்பில் அப்படி எதையும் காணமுடியவில்லை. ஆனால் மிக மேம்போக்காகவே வாசித்தேன். சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்? அது இலவசம் தானே? டீடெயில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் welfare state இன் அடிப்படை தத்துவம் எங்கும் ஒன்றேதான். அது… உழைக்கும் போது வரி அல்லது, காப்புறுதியாக செலுத்துங்கள். உழைக்கமுடியாவிட்டால் அரசு உங்களுக்கு மினிமம் பாதுகாப்பை தரும்.
  11. இங்கு சம்பந்தப்பட்ட இருவருமே சமூகத்தில் அதிகூடிய பொறுப்புள்ளவர்கள், மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். உண்மையில் வைத்தியர் சத்திய மூர்த்தி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, பிழையாக இருந்தாலும். அவரின் வீட்டுக்கு போயும் கதைக்க முடியாது. ஆகவே அவருக்கு உரிய முறையில் அழைத்து விசாரித்திருக்கலாம். உண்மையில் போலீஸார்கூட செய்யும் அக்கிரமங்களை யாராவது தட்டிக்கேட்டால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுகிறார்கள், அதையும் சட்டம் சரியென ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவருக்கும் பஞ்சாயத்து தீர்ப்பதிலேயே ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விடும். இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புண்டு. தமது பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களும், இந்த தொண்டர் சேவையாளர்களுமே பாதிக்கப்படுவர் இவர்களின் பொறுப்பற்ற செயலால்.
  12. கந்தையர் நீங்கள் சொல்வது சரியே. ஜேர்மனிய சோசல் சிஸ்டம் வேற்று நாட்டவர்களுக்கு புரிவதில்லை. அதை நீங்கள் விளங்கப்படுத்தினாலும் விளங்கும் தன்மை அவர்களுக்கு அறவே இல்லை.
  13. 70 வருடமாக வெள்ளை வேட்டி கோஷ்டிகளுக்கு வாக்களித்து பாராளுமன்றம் அனுப்பிய மக்கள் பெற்ற பிறவிப்பலன் காரணமாகவே இந்த முறையாவது இப்படியான அரசியல்வாதிக்கு வாக்களித்து பாரளுமன்றம் அனுப்பியுள்ளார்கள். 50 வருட தமிழ் அரசியல்வாதிகள் இதுவரைக்கும் செய்தது சரியென்றால் அர்சுனா அரசியல் செய்வதும் சரியே.
  14. கொடுக்கலாம் ஆனால் இலவசம் இல்லை இங்கே ஜேர்மனியில் சமூக நலத்திட்டங்களில். இருந்த அத்தனை பேரின். பிள்ளைகளும் கிட்டத்தட்ட மாதம் 500 யூரோ வரி மட்டுமே செலுத்துறார்கள். இது ஒரு வாழ்க்கை வட்டம் போன்றது பெறுவது கொடுப்பது சுழற்சி முறையானது அதாவது மக்கள் பணத்தை மக்களுக்கு கொடுப்பது இதில் எங்கே இலவசம்??? நான் சொன்னது இலவசம் என்ற போச்சே இருக்கக்கூடாது இது மக்கள் பணம் எங்கள் பணம் எங்களுக்கு தாருகிறீர்கள். மக்களுக்கு தாருகிறீர்கள். 🙏🤪
  15. இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்! He clearly abused his power and violated the law/act. https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf
  16. அருச்சுனா ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் - அவருக்கு விழுந்த வாக்குகளில் கணிசமானவை protest votes. தமிழ் கட்சிகளுக்கும் போட முடியாமல், என்பிபிக்கும் போட முடியாமல் இருந்தவர்கள் போட்ட வாக்குகள். அவரிடம் வாக்காளர் எதிர்பார்ப்பது reality show வை அல்ல. அதற்கான காலம் முடிந்து விட்டது. ஊழலை விசாரிக்க ஒரு எம்பிக்கு ஏனையோருக்கு இல்லாத பல சிறப்பு வழிகள் உள்ளன - ஏற்கனவே பிரச்சனையான மனிதரை நானே போய் விசாரிப்பேன் என்பது சரியான அணுகுமுறை அல்ல. With great power comes great responsibility அருச்சுனா இதை உணர்ந்து நடக்க வேண்டும். தமிழ் தேசியத்துக்கு இதுதான் கடைசிச்சந்தர்பம் என தேர்தல் முடிவின் பி கூறிய அருச்சுனா - அதை உணர்ந்து நடக்க வேண்டும். அவருக்கு வாக்கு போட்டவர்களை அவரே அடுத்த முறை என்பிபி க்கு அனுப்பிவிட கூடாது. ம்ம்ம்ம்….முதலில் நீங்கள் வாழும் நாட்டில் சோசல் காசு கொடுப்பதை நிறுத்துங்கள்.
  17. சிரிப்பினை வர வைத்தாலும் இது ஒரு துரதிர்ஸ்டமான உணமை.
  18. இல்லை. ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது. ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர். தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.
  19. பகல் போட்டிகளுக்கு சிகப்பு புலனாகும் தன்மை அதிகமாக காணப்படும், இரவு போட்டிகளின் போது பந்து தெளிவாக தெரிவதற்காக பந்தின் நிறத்தினை வெள்ளையாக பயன்படுத்துவதாக கூறுகிறார்கள், இந்த பிங் பந்து இரண்டுக்கும் இடைப்பட்ட வெள்ளையும் சிகப்பும் இணைந்த நிறத்தில் பயன்படுத்துவதன் மூலம் பந்தின் புலனாகும் தன்மையினை இரவு பகல் போட்டிகளுக்கு சாதகமாகும் விதத்தில் உருவாக்கியுள்ளார்கள், ஆனால் மாலை கருக்கல் எனக்கூறும் அந்தி சாயும் வேளையில் வானத்தின் நிறமும் பிங் பந்தின் நிறமும் ஓரளவிற்கு ஒரே மாதிரியிருக்கும் போது பந்தினை கணிப்பது சிரமம் என கூறுகிறார்கள், அத்துடன் மின்னொளியில் பந்து அதிகமாக சுவிங் ஆகும் எனவும் கூறுகிறார்கள். முந்தய டெஸ் போட்டிகளில் பயன்படுத்திய அரக்கின் அளவினை விட தற்போது இரண்டு மடங்கு அதிகமாகவும் கட்டுகள் மிக உறுதியாக இருப்பதால் பந்து காற்றில் திரும்புவதும் தரையில் பட்டு திரும்புவதும் அதிகமாக காணப்படுகிறது (இதனால் டெஸ்ட் போட்டிகள் குறுகிய காலத்தில் முடிவடைவதற்Kஉ அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்) பிங் பந்து சிகப்பு பந்தினை விட அதிக அரக்கு காணப்படுவதால் ரிவர்ஸ் சுவிங் ஆகாது என கூறுகிறார்கள் பந்து பெரும்பாலான பகுதி முழுவதும் சுவிங் ஆகும் அத்துடன் கட்டும் சிகப்பு பந்தினை விட உறுதியானது.
  20. இதை சத்தியமூர்த்தியிடம் கேட்க வேண்டும். பணிப்பாளர் தரத்தில் இருப்பவர் அமைச்சு அனுமதி பெற்றுப் பேச வேண்டுமென்று விதி இருக்கிறதா எனத் தெரியவில்லை. ஆனால், இதே ஊடகவியலாளர் சந்திப்பில் வடக்கில் தற்போது நடந்து வரும் காய்ச்சல் மரணங்கள் தொடர்பிலும் பேசுகிறார், எனவே "மருத்துவமனையைப் பாதிக்கும் எல்லாம் பற்றி மக்களுக்குத் தெளிவு படுத்தினேன்" என்று அவர் சொன்னால் அமைச்சும் எதுவும் செய்யாது. நிற்க. இப்ப அர்ச்சுனா விசர்கூத்தாடினதை மறைக்க சத்தியமூர்த்தியின் இந்த நடவடிக்கையைப் பெரிய கோடாகக் காட்ட முயல்கிறீர்களா😂?
  21. த‌வ‌றான‌ புரித‌ல் குருநாதா ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் த‌லைவ‌ரின் 70வ‌து பிற‌ந்த‌ நாள் கூட்ட‌த்தின் போது பேசின‌ விடைய‌ம் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் 10நிமிட‌ம் தான் அண்ண‌ன் சீமான் த‌லைவ‌ரை ச‌ந்தித்தார் என‌ சொல்லுகின‌ம் அந்த‌ 10நிமிட‌ ச‌ந்திப்பு த‌மிழ‌க‌த்தில் இவ‌ள‌வு அர‌சிய‌ல் பேச்சாய் மாற்றிய‌வ‌ர் அண்ண‌ன் சீமான் இதை தான் ச‌கோத‌ரி பொதுவாக‌ சொல்ல‌ வ‌ந்தா இதில் ஒரு உள் குத்தும் இல்லை அவ‌ர்க‌ளுக்குள் ஒரு பிர‌ச்ச‌னையும் இல்லை அதுக்கான‌ விள‌க்க‌த்தையும் ச‌கோத‌ரி காளிய‌ம்மாள் அடுத்த‌ க‌ன‌மே கொடுத்து விட்டா 200ரூபாய் ஊப்பிக‌ள் தான் அதை ப‌ர‌ப்பி குளிர் காய‌ பார்த்த‌வை மீண்டும் ச‌ரி வ‌ர‌ வில்லை ....................ச‌கோத‌ரி தொட‌ர்ந்து சீமான் கூட‌ தான் ப‌ய‌ணிக்கிறா...............................த‌மிழ் நாட்டு மாபியா ஊட‌க‌ங்க‌ள் திருட்டு திமுக்காவின் க‌ட்டு பாட்டில் இருக்கு அதோட‌ ப‌ல‌ ல‌ச்ச‌ம் செல‌வு செய்து ப‌ல‌ இணைய‌கைகூலிக‌ளை வைத்து இருக்கின‌ம் அவ‌தூறு ப‌ர‌ப்ப‌ காளிய‌ம்மாள் ப‌ற்றி இந்த‌ வ‌ருட‌ம் எத்த‌னை அவ‌தூறுக‌ளை ப‌ர‌ப்பினார்க‌ள் அதில் ஒன்றாவ‌து உண்மை ஆகி இருக்கா😁............................ க‌ட்சிய‌ விட்டு ஒரு பெண் வெளிய‌ போனால் க‌ட்சிக்குள் உள்ள‌ வ‌ர‌ ப‌ல‌ பெண்க‌ள் இருக்கின‌ம்🙏🥰......................... இதோ ஜிங்சாங் மியுசிக் ஓட‌ நான் வ‌ந்து விட்டேன்......................
  22. ஐப்பசி மாதத்தின் பௌர்ணமி வந்தது அகில உலகிற்கும் ஆதி பரம்பொருள் நீ ஆலய திருவிழா சேரும் நேரத்தில் தூய சிந்தையுடன் நின் திருவடி சேரவே 👍🔔
  23. நானும் அப்பிடித்தான் நினைக்கிறன்.உந்த பெருமாளுக்கு தேவை இல்லாத வேலை 😎
  24. தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை.] @goshan_che படித்தேன் புல்லு அரிக்குது.
  25. நன்றி கோசான் இணைப்பிற்கு! நமது மக்களின் மனோநிலை இவ்வளவு சீக்கிரம் மாறுகிறது என்பதற்கு இது உதாரணம். அதேபோல் நாமளும் செய்திகளை மாற்றுகிறோம்.
  26. அந்த திரிக்கு வந்த பின்னூட்டத்தின் அடிப்படையில்தான் என் மேலய கருத்து இருந்தது. ——- இதோ அந்த திரி… அந்த திரியில் நம்ம @satan எழுதியது👇 சரத் வீரசேகர சொன்னது, தான் காரைநகரில் கடமையாற்றியபோது தனக்கு இடமாற்றம் வந்தபோது அங்குள்ள மக்கள் அவரின் இடமாற்றத்தை எதிர்த்து மனு அளித்தனராம். இதே போன்று வடமாகாணத்தில் இருந்த படைத்தளபதி பெயரை மறந்துவிட்டேன், அவரை இடமாற்ற வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்தனர். தன்மானம் இல்லாத எடுப்பார் கைப்பிள்ளைகள் எப்போதும் எல்லோர் பின்னாலும் திரிவார்கள் அவர்களை சிங்களம் பயன்படுத்துவது ஒன்றும் புதிதில்லை. வடக்கில் பணிபுரியும் சிங்கள போலீஸ், இராணுவ படைகள் தாங்கள் இடமாற்றம் செய்யப்படுவதை விரும்புவதில்லை, தங்களுக்கு தெரிந்த மக்களை அதற்கு எதிராக மனு அளிக்கும்படி கேட்பதுண்டு. கைலஞ்சம், சொகுசான வாழ்க்கை, போராட்ட காலத்தில் கூடுதல் சம்பளம். இதுதான் சிங்களத்தின் மாபெரும் வெற்றி. போரின் போது பெற்றது வெறும் இடம் சம்பந்தமானது. இது மனம் சம்பந்தமானது. அடிமைகளுக்கு யார் வந்தாலும் பின்னால் போகத்தயார். தமிழ் மக்கள் பிரிவினை கோரவில்லை, அவர்கள் எங்கள் அடிமைகளாக இருக்க பூரண சம்மதம்! சிங்களத்துக்கு பிரச்சாரம் செய்ய நல்லதொரு செய்தி. ஒரு முசுறு கடிக்க, கூட்டோடு நசுக்கப்படுகிற கதை. ஒரே விடயத்தை எப்படி மாத்தி, மாத்தி எழுதியுள்ளார் என்பதை - வாசகர் பார்வைக்கே விடுகிறேன்.
  27. சத்தியமூர்த்தியை கேள்வி கேட்பவர் கவனம் காவல்துறையில் முறைப்பாடு குடுத்துவிடுவார்.
  28. ஒரு நிமிசத்தால இவை கலைச்சுப்போடுவினம் மிச்சத்துக்கு நாங்கள் என்ன சுவரில போய் முட்டுறதோ.. அதுகில் பாக்க பேசாமல் இருக்கலாம்..
  29. எடுத்தாலும் எனக்கு அதில் பெரிய கொள்கை முரண்பாடு எதுவும் இல்லை என்பதை பகிரங்கமாக கூறி கொள்கிறேன். யார் ஜேவிபி… எம்மை… தேசிய இனமாக… அங்கீகரித்து….. சாத்ஸ்சை குஷிபடுத்த வேணும் எண்டா என்ன வேணா எழுதுவீங்களா அண்ணா🤣
  30. கோஷானும் ஒரு காரணம் என்று இப்பொழுது தெரிகின்றது.................🤣. சென்னையில் விஜய்காந்திற்கு காலில் சில விரல்களை அகற்றிய அந்த வாரத்தில், இவருக்கும் அதே சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஞாபகம். நான் சிறுவயதில் இருக்கும் போது இவரை நன்றாகவே தெரியும். அப்பொழுது நல்ல திடகாத்திரமாகவே இருப்பார். பின்னர் இவரை ஊரில் நான் கண்டதில்லை. பின்னர் இவர்கள் வீடு வீடியோ கேசட்டுகள் வாடகைக்கு விடும் இடம் ஆகியது. அது ஒரு கதை.....................
  31. அன்பால் இணைவோம் ANBAL INAIVOM · Rejoindre Jay R Jayakumar · 1 j · தினம் ஒரு சிறுகதை :-- எலி ஒன்று, வைர வியாபாரி வீட்டிலிருந்த ஒரு வைரத்தை விழுங்கிவிட்டது. மிகவும் விலை உயர்ந்த வைரம் அது... வியாபாரி, எலி பிடிப்பவனைப் பார்த்து, எப்படியாவது அந்த எலியை ஷூட் செய்து வயிற்றில் இருக்கும் வைரத்தை எடுக்க உதவ வேண்டுமென கேட்டுக் கொண்டான்.. எலி பிடிப்பவனும் தன் துப்பாக்கி’யுடன் வந்துவிட்டான், எலியை ஷூட் செய்ய.. எலி அங்கே இங்கேயென்று போக்குக்காட்டி ஓடியதில் திடீரென்று நூற்றுக்கணக்கான சக எலிகள் ஒன்று கூடிவிட்டன.. அந்த நூற்றுக்கணக்கான எலிகளுக்கிடையேயும் அந்த வைரம் முழுங்கிய எலி மட்டும் அந்த எலிக்கூட்டத்தோடு சேராமல் ஒதுங்கி தனித்தே நின்றிருந்தது . எலி பிடிப்பவனுக்கு அது வசதியாகப் போய்விட்டது.. சரியாக குறி பார்த்து, அந்த எலியை டுமீல்.. என சுட்டான். எலி spot out.. வைர வியாபாரி சந்தோஷமாக அந்த எலியின் வயிற்றைக் கிழித்து வைரத்தை எடுத்துக்கொண்டான். ஆனால் ஒரு கேள்வியை எலி பிடிப்பவனைப் பார்த்து வைரவியாபாரி கேட்டான். "ஆமா...! அந்த எலி மாத்திரம் மற்ற எலிகளோடு சேராமல் தனித்தே இருந்ததே..! நீயும் அதை சரியாக அடையாளம் கண்டு சுட்டுவிட்டாய்..! என்ன காரணம்..?" அந்த எலி பிடிப்பவன் பதில் சொன்னான்.. "இப்படித்தான்.. பலபேர் திடீர்ப் பணக்காரர்கள் ஆனதும், மற்றவர்களை விட நாம் உயர்ந்தவர் என்ற எண்ணம் கொண்டு மற்றவர்களுடன் தன்னைச் சேர்க்காமல், தூரத்தில் வைத்துக் கொள்வார்கள். அதுவே.. ஆபத்தில் அவர்களுக்கு உதவாமல் போய்விடுகிறது." உறவுகளும் அப்படித்தான்.. சிலர் இடையில் வந்து அழிந்துபோகும் செல்வத்தை நம்பி இறைவன் கொடுத்த உறவுகளை அசட்டை செய்துவிட்டு ஒதுங்கி விடுகிறார்கள். ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும் சொந்த பந்தமும், நல்ல நட்புமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.... ......!
  32. 👍................ எனக்கும் இது பெரும் குழப்பமாகவே இருக்கின்றது. சிறிதரனை கண்மூடித்தனமாக ஆதரிக்கின்றார்கள், அதே நேரத்தில் சுமந்திரனை அதைவிட அதிகமாக வெறுத்துக் கருத்து எழுதுகின்றார்கள். இது வெறும் பிரச்சார மேடை போலத் தான் இருக்கின்றது............. ஒரு கருத்துக்களம் போல அல்ல..............
  33. ஆரம்ப தளம்பல்களின் பின், ஆட்சியாளர்கள் சுதாகரித்துக் கொள்வார்கள் என்றே நினைக்கின்றேன். தனியார் முதலாளிகளின் அரிசிக் குடோன்கள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு இரகசியத் தகவல் அல்ல. ஆனால், அவற்றை அரசு கையகப்படுத்தலாமா, இல்லையா என்பதே சட்டச் சிக்கல்.
  34. @valavan எனது கருத்து என்பது அரசியல் தீர்மானம் குறித்த விமர்சனமே. அவ்வாறான விமர்சனங்கள் உலகில் அனைத்து நாடுகளின் தலைவர்களுக்கும் அரசியல் விடுதலை அமைப்புகளின் தலைமைகளுக்கும் பொருந்தும். ஒரு அரசியல் அமைப்பு அல்லது கட்சியின் அரசியல் தீர்மானங்கள் ஒட்டு மொத்தமான ஒரு தேசிய இனத்தின் மீது பாரிய தாக்கத்தை உண்டு பண்ணும் போதும், அந்த தாக்கம் தலைமுறைகளை கடந்தும் தொடரும் போதும், அதை நோக்கிய விமர்சனங்கள், விவாதங்கள் நடப்பது உலக வழமை. சாதாரணமாக கண்கூடாக தெரியும் இந்த உண்மைகளை திரை போட்டு மறைக்க வேண்டிய தேவை இல்லை. தமிழ் மக்களின் இன்றைய நிலைக்கு என்பது கடந்த கால அரசியலை எதிர்கொண்டதில் ஏற்பட்ட தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளும. காரணமாக இருக்கும் போது அவற்றை பற்றி உரையாடுவது தவறானதல்ல. இங்கு அரசியலில் புனிதப்படுத்தலுக்கு இடமில்லை. அரசியல் தீர்மானங்கள் முடிவுகள் புனிதமானவை அல்ல. அரசியல் தலைமைகளை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டாதாக புனிதப்படுத்துதல்(sanctification )என்பது மிக தவறான முன்னுதாரணம். அவ்வாறு செய்வது அது சார்ந்த சமூகத்திற்கே தீமை விளைவிக்கும். ஒரு பழைய அரசியல் தலைமைகளை புனிதப்படுத்துவதானது, அவர்களது தவறான தீர்மானங்களையும் முடிவுகளையும் சிக்கலின்றி மீண்டும் பயன்படுத்த அனுமதிக்கிறது. இது ஒரு தலைமுறையின் அரசியல் தவறுகளை அடுத்த தலைமுறைக்கும் கடத்தும் அபாயத்தை உருவாக்குகிறது. ஒரு அரசியல் தலைமையின் தீர்மானங்கள் இவ்வாறு புனிதப்படுத்தப்பட்டால் அந்த அரசியலை உள்வாங்கி, அதை முன்னுதாரணமாக தொடரும் புதிய தலைமுறையும் அதே பாணியை மக்களிடம் இருந்து எதிர்பார்க்கும். அதே எதிர்பார்பபில் எந்த பொறுப்புத்தன்மை ( Accountability) இல்லாத முடிவுகளை மீண்டும் எடுக்கும். மூன்று தசாப்சங்களுக்கு முன்பான ஒரு அரசியல் தீர்மானத்தை பற்றி பேசக்கூடாது என்று இப்போது அச்சுறுத்தல் வருகிறது என்றால் அந்த சுதந்திர போராட்டம் மக்களுக்கானதில்லையா? ஆகவே திரும்பவும் கூறுகிறேன் ஒரு அரசியல் இயக்கத்தின் மீதான விமர்சனம் என்பது ஒரு போதும் மாவீரர்களை இழிவு படுத்துவதாகாது. அவ்வாறு நீங்கள் கருதுவது உங்கள் உரிமை உங்களுக்கு அந்த கருத்து இருக்கலாம். ஆனால் , அதை நீங்கள் என்மீது திணிக்க முற்படுவது தவறானது. அதை நான் ஏற்றுக்கொள்ள போவதும் இல்லை.
  35. இந்த வருடம் வைத்தியர்களின் ஆண்டு போல் தெரிகின்றது. எங்கு பார்த்தாலும் பைத்தியர் சாரி, வைத்தியர்களின் பேச்சாகவே உள்ளது. 😂
  36. சத்தியமூர்த்தி ஏழரை சனி தொடங்கி விட்டது இதுவரை நடந்த ஊழல் அம்பலம் ஆகப் போகிறது என்று கவலைப்படுகிறார் அவரிடம் [டக்ளஸ் ] துப்பாக்கி இருந்தது அடிபெடி இருந்தது அரசாங்கம் இருந்தது அருச்சுனாவிடம். என்ன உண்டு ??? பயப்பட. இன்னும் கொஞ்ச நாள் சிறையில் போட விரும்புகிறார்கள் ஆனால் இந்த சாவகச்சேரி மக்கள் எனது தொகுதி மக்கள் அர்ச்சுனாவை கடவுளாக. பாரக்கிறார்கள 🤣🤣. எனவே… சத்தியமூர்த்தி வெல்ல முடியாது தோல்வி நிச்சயம்
  37. நல்லா இருக்குதுங்க உங்கபுஸ்பா கதை !.............. செம்மரக் கட்டை கடத்துபவன் ஹீரோ! அவனைப் பிடிக்க வரும் போலீஸ் வில்லன்! கெட்டவனை நல்லவனா தூக்கி கொண்டாடுவதும் ! நல்லவனை கெட்டவனாக காட்டுவதும் இந்திய சினிமாவில் மட்டுமே ! அந்த கதைக்கு கோடிக்கணக்கில் வசூலாம் .................. பையா எல்லாம் பகிடிக்குத்தான்
  38. அம்பாந்தோட்டையில். 20 லட்சம் தொன் நெல் 20 லட்சம் தொன் அரிசி பதுக்கி வைக்க பட்டதை பிடித்து உள்ளார்கள் செய்தி உண்மையா??? சிங்கப்பூர் இல் 100 % இறக்குமதி தான் அங்கு பதுக்கலில்லை என்று நினைக்கிறேன் ப பதுக்குவோரின. உணவு பொருள்கள் பதுக்குவோரின். வியாபார. அனுமதி ரத்து செய்ய வேண்டும் இரண்டு மடங்குகள் அபராதம் விதிக்க வேண்டும் உணவுப் பொருள்கள் தடடுப்பாடாது.
  39. டெய்லி வழமையான பெயரிலை வந்து பாடம் எடுத்துக்கொண்டு....அப்பப்ப சூலாயுதத்தோட வாறதும் ஒரு அழகுதான் 😂
  40. பெருமாளுக்கு உங்களோட புடுங்குப்படாட்டி பத்தியப்படுறேல்லையெண்டு தெரிஞ்ச விசயம் தானே தங்கச்சி!😂 நான் யாழ்களத்துக்கு வாற நேரமெல்லாம் உங்களை நினைக்காமல் போனதேயில்லை.....ஏனோ தெரியேல்லை. உங்கள் எழுத்துக்கள் எனக்கு மட்டுமில்லை யாழ்களத்தில் உள்ள எல்லோருக்குமே பிடிக்கும் என நினைக்கின்றேன். நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள். அது எதிர்மறையான கருத்துக்களாகவும் இருக்கட்டும். 👈
  41. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.
  42. கற்கோவளம் இராணுவ முகாமிலிருந்து இராணுவத்தினரை வெளியேறுமாறு உத்தரவு! யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை கற்கோவளம் பகுதியில் தனியார் காணியில் அமைந்துள்ள இராணுவ முகாமிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு இராணுவ தலமையகத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து பதின்நான்கு நாட்களுக்குள் குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து வெளியேறுமாறு இராணுவ தலமையகம் அறிவித்துள்ள நிலையில் இராணுவ முகாமிலிருந்து வெளியேறும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர். குறித்த இராணுவ முகாம் அமைந்துள்ள காணியிலிருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல அரசியல் கட்சிகள் இணைந்து போராட்டம் நடாத்தியிருந்ததுடன் நில அளவை செய்வதற்கும் பல தடவைகள் முயற்சிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அனுர அரசாங்கம் பொறுப்பேற்று சில மணி நேரங்களில் இவ்வுத்தரவு இராணுவ தலமையகத்தால் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/கற்கோவளம்_இராணுவ_முகாமிலிருந்து_இராணுவத்தினரை_வெளியேறுமாறு_உத்தரவு!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.