Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    19667
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    88820
    Posts
  3. பெருமாள்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    15827
    Posts
  4. suvy

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    33807
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/11/24 in all areas

  1. மக்களை உணர்சசி அரசியலை செய்து பிரச்சனைகளை தீர்க்காமலேயே நீண்ட காலம் தமிழ் தேசியக்கட்சிகள் பலன் பெறுவதைக் கண்டு கொதித்து போன அர்ச்சனா அதற்கெதிராக கிளர்ந தெழுந்து, இவர்களால் நீண்ட காலமாக பிரச்சனைகளைத் தீர்காமல் அதை பேசிப் பேசியே எவ்வாறு மக்களை ஏமாற்ற முடிகிறதென்று சிந்தித்து தமிழரிடையே உள்ள லூசுத்தனங்களை ஏன் நான் பயன்படுத்த கூடாது என்று நினைத்தார். அவர் இதை realize செய்ததும் ஒரு தற்செயல் நகழ்வாகவே அமைந்தது. லூசுத்தனங்களை செய்ய செய்ய மக்கள் ஆதரவு அதிகரித்து வருவதை கண்ட அவர், அட இது தான்டா நமக்கான தளம் என்று புல்லரித்து “ தமிழேண்டா” என்று புளகாங்கிதம் அடைந்தார். இந்த வார்ததை புலம் பெயர் தேசங்களில் மேலும் பல லூசுகளை உற்பத்தி செய்யும் என அவருக்கு நன்கு தெரியும். அது தனக்கு எதிர்காலத்தில் பலனளிப்பதற்கான முதலீடு தான் அவரது பாராளுமன்ற முதல் நாள் அமர்வில் அவரால் காட்டப்பட்ட குறளிவித்தை. இதை பார்தது மேலும பல அர்சனாக்கள் சிலவேளை வரலாம். யாழ்பாணத்தில் மக்கள் தொகை அதகரிப்பு வீதத்தை விட லூசுத்தனங்களை உற்பத்தி செய்வதில் தமிழ் ஊடகங்களுக்கும் யூருப்பர்களுக்கும் உள்ள போட்டி பிரமிப்பை ஊட்டுகிறது. ஊழல் ஒழிப்பு என்பது ஊழல் செய்பவர்களுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி முறையான சட்டவாளர்களை கொண்டு அதை முறைப்படி வாதாடினாலே சாத்தியம். (இது அவரது தங்கத்திற்கும் சட்ட புலமை பெற உதவியாக இருக்கலாம்) இப்படியான குரங்கு சேட்டைகள் அதற்கு உதவப் போவதில்லை. அர்ச்சனா ஆதாரங்களுடன் இதை முறைப்படி அணுகி டு வாதாடி ஊழல்வாதிகளுக்கு சட்டப்படி தண்டனை வாங்கி கொடுத்தால் எனது கருத்தை வாபஸ் வாங்கி கொள்ளுகிறேன்.
  2. இந்த விசுக்கோத்து எம்பிக்கு வாக்குப்போட்டு அனுப்பின பனிக்கூட்டத்திற்கு இன்னும் ஷோ காட்டுவார்! He clearly abused his power and violated the law/act. https://parliament.lk/files/pdf/powers-privileges-act-en.pdf
  3. எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதில் ஒரு செய்தியை கிருபன் இணைத்திருக்கிறார். தற்போது மேற்குலகு கொண்டாடும் Moderate rebels ன் ஒரு பக்கத்தை கப்பித்தான் இணைத்திருக்கிறேன். அம்புட்டுதே. இங்கே முன்னாள் சிரிய ஆட்சியாளர்களை ஒருவருமே வெள்லையடிக்கவோ மறுக்கவோ முனையவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் கிளர்ச்சியாளர்களின் ( மத்திய கிழக்கு வாழ் முஸ்லிம்களின்) ஒரு பக்கத்தை காட்டியவுடன் யாழ் களத்தில் சிலருக்கு கோள்வம் பொத்துக்கொண்டு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு ஏன் கோள்வம் வருகிறது என்பதை ஆராயும் பணியை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.........🤣
  4. அதே… இனி இவர் தொடர்பான செய்திகளில் பின்னூட்டம் இடுவதை எல்லோரும் தவிர்க்க வேண்டும்.
  5. இந்த இனத்துக்காக நான் படுற துன்ப துயரங்கள் இருக்கே….🤣
  6. கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை.. அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது, அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு. இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு. அப்போது கருமேகங்ள் சூழ்ந்தன. மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன. மான் தன் இடப்பக்கம் பார்த்தது.. அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான். மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது. ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது. என்ன நடக்கும்.? மான் பிழைக்குமா? மகவை ஈயுமா? மகவும் பிழைக்குமா? இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா? வேடனின் அம்புக்கு இரையாகுமா? புலியின் பசிக்கு புசியாகுமா? மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்.. மான் என்ன செய்யும்? மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது.. ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை. அப்போது நடந்த நிகழ்வுகள்....... மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான். எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது. தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது.. அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது. நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது.. வரும்..அச்சூழ்லில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்.. சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்.. நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்.. அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும். இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்.. எதில் என் கவனம்? எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்? வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்.. அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார். இறைவன் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை.. உன் செயலில் நீ கவனம் செலுத்து.. மற்றவை நடந்தே தீரும்!
  7. இலவசம் எனும் திருட்டு ! திருடன் ஒருவன் இரவில் சுவர் ஏறி குதித்தான்! பெரிய நாய் ஒன்று நின்று கொண்டிருந்தது. நாய் அவனை பார்த்தது அவன் நாயை பார்த்தான்! நாய் குலைக்க வில்லை! தைரியமாக இரண்டு அடி எடுத்து வைத்தான்! குலைக்க வில்லை! வீட்டில் கதவருகே வந்தான் ! கள்ள சாவி கொண்டு கதவை திறக்க முற்பட்டான்! நாய் அப்பொழுதும் குலைக்க வில்லை! திடீர் என்று அவனுக்கு ஒரு சந்தேகம்! கதவை திறக்கும் போது நாய் குலைத்தால் என்ன செய்ய ! தயாராக வைத்திருந்த பிஸ்கெட் பாக்கெட்டில் இருந்து இரண்டு பிஸ்கட்டை எடுத்து நாய்க்கு போட்டான்! நாய் உடனே குலைக்க ஆரம்பித்து விட்டது! திருடன் நாயை பார்த்து கேட்டான்! ஏன் நாயே! நான் சுவர் ஏறி குதித்த போது குலைக்க வில்லை! கதவு வரை நடந்த போது குலைக்க வில்லை! வீட்டின் கதவை திறக்கும் போது குலைக்க வில்லை மாறாக உனக்கு பிஸ்கெட் போடும்போது குலைக்க ஆரம்பித்து விட்டயே என்று கேட்க அதற்கு நாய் இவ்வளவு நேரம் நீ உன் வேலையை செய்கிறாய் என்று நினைத்து கொண்டு இருந்தேன்! ஆனால் தேவை இல்லாமல் எனக்கு பிஸ்கெட் இலவசமாக நீ போடும்போது தான் நீ தவுறு செய்கிறாய் என்று அறிந்து கொண்டேன். இன்று எப்பொழுதெல்லாம் நமக்கு இலவசம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அரசு இயந்திரம் தவறு செய்கிறது என்று பொருள்! புரிந்து கொள்ளுங்கள்!
  8. சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வழிவிடார் (பூசாரி எப்பவும் வழிவிடார்) என்பதனை கூறினேன், எல்லைக்குள்ள இருக்கிற சாமிதான் பவர்புல், இப்பவும் அங்கேயும் அதுதான் நடந்திருக்கு, இனிமே இப்ப்டித்தான் இருக்கும், நாங்களும் அப்படி இருந்தாலே நன்மை. கோயிலுக்கு போனா நேரா அன்னதான கியூவில போய் நிக்க வேணும் தேவையில்லாம பூசாரி, சாமி என அலையக்கூடாது. 😁
  9. உலக முதல் மொழியா என்று தெரியவில்லை…ஆனால் இன்று வாழும் மொழிகளில் பழமையானது என வாதாட கூடிய அளவுக்கு பழமையான மொழிதான். ஆனால் நாம் எந்த மொழியில் இருந்தும் எடுத்து அதை தமிழில் கையாள வேண்டும். இப்படி ஒரு விசாலமான அணுகுமுறை இருந்த படியால்தான் ஐரோப்பாவின் மேற்கு மூலையில் உள்ள ஒரு தீவில், 1/3 மக்களின் மொழியாக, காலத்தால் மிக பிந்திய மொழியாக இருந்தும் ஆங்கிலம் உலக பொது மொழியாகியது. ஆங்கிலத்தில் மிக அதிகமான சொற்கள் பிரென்சு,ஜேர்மானிக், ஸ்கெண்டிநேவிய சொற்கள்தான். ஆகவே இலவசம் என்ற சொல் பொருத்தம் இல்லாத போது (இதுவே வடசொல் என நினைக்கிறேன்) ஆங்கிலத்தில் பாவிக்கும் முறையை தமிழ்படுத்துவதில் தவறில்லையே. “மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமை யில்லை” 'சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்“ சுப்ரமணிய பாரதியார் (இன்று அவர் பிறந்த நாள்).
  10. 100% உண்மை. இரு பகுதியினரும் மாறி மாறிக் கழுத்தை அறுப்பார்கள். அறுக்கும்போதும், அறுத்த பின்னரும் இரு பகுதியினரும் அல்லாஹு அக்பர் என்பார்கள். கற்கால மனிதர்கள். 😏
  11. பெரும்பான்மையான மோதல்களில் இஸ்லாமியர்களே இஸ்லாமியர்களை கொன்று குவிப்பார்கள், அதன்போது கொல்பவனும் கொல்லப்படுகிறவனும் அல்லாஹு அக்பர் என்பார்கள். அல்லாஹ் யார் பக்கம் நிற்பார் கொல்பவன் பக்கமா கொல்லபடுகிறவன் பக்கமா?
  12. நீண்ட நாட்களாக செய்திகளை பார்க்கவில்லை போல...மேச்சல் நிலங்களில் குடியேற்றம் நடை பெறுவதாக கதைகள் உலா வருகின்றதே
  13. இந்த அதானிதான் இப்ப பங்களாதேசில மின்சாரம் குடுக்க மாட்டன் என வம்பு செய்கிறாராமே? அப்படி இருக்க அவரை நாட்டுக்குள்ள விட்டால் இலங்கைக்கும் அதே கதிதான். சாமிக்கு இலஞ்சம் கொடுத்தால் (இலங்கையினை கோர்த்துவிட வேண்டியதுதான்) அலுவல் வேகமாக நடக்கும். சாமிக்கு இலங்கையினை நேர்த்தி கடனா வைக்கவேண்டியதுதான்.
  14. அண்ணை…நாங்களும் national insurance என்று கட்டுகிறோம். ஜேர்மனியில் பிறப்பில் இரெண்டு காலும், கையும் இல்லாத ஒருவரை நீ காப்புறுதி கட்டவில்லை எனவே தெருவில் நில் என்றா விடுவார்கள். இல்லை - உங்களை போன்றோர் கட்டும் காசை வைத்து அவருக்கும் உங்களுக்கும் சேவை வழங்குவார்கள். இங்கே பென்சனுக்கும் வரி அடிப்பார்கள். உழைக்கும் போது வருமான வரி + மேலே சொன்ன காப்புறுதி. உங்கள் boomer generation கட்டியது குறைவு. எங்கள் தலைமுறை எடுக்கும் வருமானத்தில் 30-40 45 வீதம் வரை வரியாக கட்டுகிறோம். மாச கடைசியில் வயிறு ஏரிந்தாலும் ஒரு மேம்பட்ட சமூகத்தில் வாழ கொடுக்கும் விலை என சமாதானம் அடைவதை தவிர வேறு வழியில்லை. பிகு ஜேர்மனியிலும், யூகேயிலும் சோசல் காசில் உழைக்காமல், கொடுப்பனவு, இலவச வீட்டில் வாழ்ந்தவர்களை எனக்கு தெரியும் - ஆகவே இந்த நாடுகளில் இலவசம் இல்லை என்பது சரி அல்ல. வரி கட்டும் எமக்கு இலவசம் இல்லை. நாம் பாவிப்பதை விட அதிகமாக கொடுக்கிறோம். ஆனால் வரி கட்டாதவர்கு இலவசம்.
  15. அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!
  16. அனைத்தும் கிடைத்தால் அலட்சியம் வந்து விடும் என்பதால்தான் சிலவற்றை கிடைக்காத வரிசையிலே வைத்திருக்கிறது காலம்....!!!
  17. விவேகசிந்தாமணி ஆவீன VivegaSindamani 77 ஆவீன மழைபொழிய வில்லம் வீழ அகத்தடியாள் மெய்நோவ வடிமை சாவ மாவீரம் போகுதென்று விதைகொண் டோட வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ள கோவேந்த ருழுதுண்ட கடமை கேட்கக் குருக்கள் வந்து தட்சணைக்குக் குறுக்கே நிற்கப் பாவாணர் கவிபாடிப் பரிசு கேட்கப் பாவிமகன் படுந்துயரம் பார்க்கொ ணாதே. (77) ஒரு மனிதன் துயரின் எல்லைக்கே சென்ற ஒரு நிலையில் இருந்தாலும் கொண்ட கொள்கையில் நிலை தடுமாறாமல் இருப்பான் எனில் வெற்றி அவன்பக்கம்
  18. ராஷ்மிகாவை சும்மா பார்க்கலாமாம் .......... ஆசை . ....ஆசை . ..... அதுக்கெல்லாம் சென்சார் அனுமதிக்க மாட்டார்கள் ராசா . .........! 😂
  19. நான் அகன்ற திரையில் மூன்று மணி நேரம் மினக்கெட்டுப் பார்த்தேன்! படம் முடிய இரவு பன்னிரண்டு தாண்டிவிட்டது! ஆனால் நித்திரை வரவில்லை! புஷ்பாவுக்கு (அல்லி அர்ஜுனாவுக்கு) வயசு கூடிவிட்டது. முகம் களைப்பாக இருக்கு. தொப்பையும் வைத்துள்ளது..! ராஷ்மிகாவை சும்மா பார்க்கலாம்! ஒரு பாட்டுக்கு வந்த ஶ்ரீலீலா நம்ம சமந்தாவுக்கு கிட்டவரமுடியாது😍
  20. சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் ஜப்பானிய பல்கலைகழகம் வெளியிட்டுள்ள தகவல். சபாநாயகர் அசோக சபுமல் ரன்வெல (Ashoka ranwala), ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் கல்வி கற்வில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன. அசோக ரன்வெல, ஜப்பானில் உள்ள பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் படித்தவரா என்பது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவு அந்தப் பல்கலைக்கழகத்திடம் தகவல்களைக் கோரியுள்ளது. இந்நிலையில், அசோக சபுமல் ரன்வால என்னும் நபர் தமது பல்கலைகழகத்தில் கல்வி கற்கவில்லை என அப்பல்கலைக்கழகம் எழுத்து மூலம் அறிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்தில் இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள குறிப்பிட்டுள்ளார். பத்தாவது நாடாளுமன்றத்தின் 22ஆவது சபாநாயகர் நாட்டின் உயரிய பதவியான சபாநாயகர் பதவியை கீழறுத்துள்ளார் என தலதா அத்துகோரள தெரிவித்துள்ளார். சபாநாயகரின் கலாநிதி பட்டம் தொடர்பில் பல்வேறு தரப்பினரால் வெவ்வேறு கருத்துகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சபாநாயகர் அசோக ரன்வல்ல தனது கலாநிதி பட்டம் குறித்து வெளிவரும் தகவல்கள் தொடர்பில் எதிர்வரும் நாட்களில் அறிக்கை ஒன்றினை வெளியிடுவார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருந்தார். இவற்றிற்கு மத்தியில் ஜப்பானிய பல்கலைக்கழகம் வழங்கிய இந்த தகவல் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/speaker-ashoka-sapumal-ranwala-s-doctorate-issue-1733840862?itm_source=parsely-api
  21. பட மூலாதாரம்,QUAISE ENERGY கட்டுரை தகவல் எழுதியவர்,நோர்மன் மில்லர் பதவி நமது நிலத்தடியில் அதிகளவு ஆற்றல் உள்ளது. அதிர்ஷ்டவசமாக, சில இடங்களில், பூமியின் மேற்பரப்புக்கு அருகில் புவிவெப்ப ஆற்றல் கிடைக்கும். ஆனால், உலகின் மற்ற பகுதிகளில் ஆழமாக தோண்ட வேண்டியிருக்கும். புவிவெப்ப ஆற்றலைப் பெற போதுமான ஆழத்தை எவ்வாறு அடைவது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. உலகெங்கிலும் உள்ள சில இடங்களில், புவிவெப்ப ஆற்றல் நிலத்தின் மேற்பரப்பில் கிடைக்கும். ஐஸ்லாந்தில், 200க்கும் மேற்பட்ட எரிமலைகள் மற்றும் இயற்கையாக அமைந்த பல வெப்ப நீரூற்றுகள் உள்ளன. அங்கு அந்த ஆற்றலைப் பெறுவது கடினம் அல்ல. அந்த நாடு முழுவதும் நீராவி குளங்கள் உள்ளன. அவை, பூமியின் கீழே எரியும் புவிவெப்ப நெருப்பால் சூடாகின்றன. சூடான நீர் மற்றும் நீராவி அழுத்தத்தை உருவாக்கி, பின்னர் தரையில் இருந்து வெளியேறி, கொதிக்கும் நீர் மற்றும் நீராவியை வெந்நீருற்று உருவாக்குகிறது. ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துகிறது. அதாவது, பூமியின் உள்ளே புவிவெப்ப ஆற்றல், அங்குள்ள 85% வீடுகளுக்கு வெப்பம் அளிக்க பயன்படுகிறது. நாட்டின் மின்சார உற்பத்தில் 25% இதில் இருந்து கிடைக்கிறது. புதுப்பிக்கத்தக்க வளத்தைப் பயன்படுத்துவதற்கு, இது ஒரு அருமையான வழியாகும். வற்றாத பசுமை ஆற்றல் மூலமான, புவிவெப்ப ஆற்றலை பூமி வழங்குகிறது. பூமியின் மையத்திலிருந்து வெப்பம் தொடர்ந்து உமிழப்படுவதாலும், நமது பூமியின் மேலோட்டத்தில் இயற்கையாக நிகழும் கதிரியக்கத் தனிமங்களின் சிதைவாலும், காற்று அல்லது சூரிய சக்தியைப் போலல்லாமல், புவிவெப்ப ஆற்றல் "எப்போதும் இயங்கும்". புவிவெப்ப ஆற்றல், ஒரு நம்பிக்கைக்குரிய ஆற்றல் மூலமாகும். இது ஒரு நல்ல தீர்வாக இருந்தாலும், இந்த பரந்த ஆற்றல் மூலத்தை திறம்பட பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை நாம் உருவாக்க வேண்டும். பூமி தொடர்ந்து அதிகளவு வெப்பத்தை வெளியிட்டு வருகிறது. பூமியில் பல மடங்காக உள்ள தேவைகளைச் சமாளிக்க இந்த வெப்பம் போதுமானது. இருப்பினும், இந்த வெப்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கண்டுபிடிப்பது சவாலானது . பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்து புவிவெப்ப ஆற்றலையே அதிகம் பயன்படுத்துகிறது. உலகெங்கிலும் உள்ள புவிவெப்ப மின் நிலையங்கள் தற்போது உலகில் 32 நாடுகளில் மட்டுமே புவிவெப்ப மின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. உலகம் முழுவதும் 700க்கும் குறைவான மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இவற்றில் 2023 இல் சுமார் 97 டெராவாட் மணிநேர மின்சாரம்(TWh) உற்பத்தி செய்யப்பட்டது. இது அமெரிக்காவில் மட்டும் சூரிய சக்தியால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவில் பாதிக்கும் குறைவானது. மேலும் உலகளாவிய ஆற்றல் தொகுதியில், புவிவெப்ப ஆற்றலின் சாத்தியமான பங்களிப்புக்கான மதிப்பீடுகளை விட இந்த அளவு மிகவும் குறைவு. ஏனென்றால், புவிவெப்ப ஆற்றல் இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஆண்டுக்கு 800 - 1400TWh மின்சாரத்தை மேலும் 3,300-3800TWh வெப்பத்தையும் வழங்க முடியும் என்று சிலர் மதிப்பிடுகின்றனர் . புவிவெப்ப ஆற்றல் நிபுணரான அமண்டா கோல்கர், அமெரிக்காவில் உள்ள தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தில் (NREL) புவிவெப்ப திட்ட மேலாளராக உள்ளார். "பூமியின் இயற்கையான வெப்ப ஆற்றல், தூய்மையான எதிர்காலத்தை நோக்கிச் செல்ல உதவும்" என்று அமண்டா கோல்கர் நம்புகிறார். 2023 ஆம் ஆண்டு அறிக்கையில், தூய்மையான ஆற்றலுக்கான மாற்றத்தில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள புவிவெப்ப ஆற்றலின் திறனை அவர் எடுத்துரைத்தார். அணுக்கரு கடிகாரம்: பிரபஞ்சத்தின் மர்மங்களை கட்டவிழ்க்கும் வழியை கண்டுபிடித்த விஞ்ஞானிகள்30 நவம்பர் 2024 ஐ.வி.எஃப்: வெற்றி வாய்ப்பு குறைவாக இருப்பது ஏன்? இதை மாற்ற முயற்சிக்கும் விஞ்ஞானிகள் கூறுவது என்ன?29 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளமான ரெய்க்ஜேன்ஸில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு பத்து மடங்கு அதிக ஆற்றலை வழங்கும் 'சூப்பர்ஹாட்' கிணறுகள் ஆனால் ஒவ்வொரு நாடும் ஐஸ்லாந்தைப் போல் அதிர்ஷ்டசாலிகள் அல்ல, அங்கு சுமார் 120-240C (248-464F) வெப்பநிலையில் சூடான நீரின் நீர்த்தேக்கங்களை பூமியின் மேற்பரப்பிற்கு அருகில் எளிதாக அணுக முடியும் . நாட்டின் பிற பகுதிகளில், 1.5 மைல் (2.5 கிமீ) ஆழம் வரை தோண்டப்பட்ட கிணறுகள் 350C (662F) வரையிலான வெப்பநிலைக்கு அணுகலை வழங்குகின்றன. உதாரணமாக, ரெய்க்ஜேன்ஸில் உள்ள ஐஸ்லாந்தின் முக்கிய புவிவெப்பத் தளம், 600C (1112F) அளவுக்கு அதிக வெப்பமடையும் திரவங்களை அணுகுவதற்கு 2.9 மைல்கள் (4.6 கிமீ) சோதனைக் கிணறுகளைத் தோண்டியுள்ளது. ஏற்கனவே, ஆண்டுக்கு 720 ஜிகாவாட் மணிநேரம் (GWh) மின்சாரத்தை உற்பத்தி செய்ய 320C (608F) வெப்பநிலையில் ஆழமற்ற கிணறுகளைப் பயன்படுத்தி தினசரி வெப்பப் பிரித்தெடுத்தல் நடைபெறுகிறது. புவிவெப்ப ஆற்றல் பரவலாக இல்லாததற்கு ஒரு காரணம், அந்த ஆற்றலைப் பிரித்தெடுக்கத் தேவையான அதிக முன் முதலீடு ஆகும். ஆனால் தொழிநுட்ப உதவியின்றி அதைச் செய்வதும் கடினமாகும். புவிவெப்ப ஆற்றலின் பலன்களை உலகின் பிற பகுதிகளுக்கும் கொண்டு செல்ல, பூமியின் உள்ளே ஆழமாக தோண்டி எடுக்க வேண்டும். மின்சாரம் உற்பத்தி செய்ய அல்லது வீடுகளுக்குத் தேவையான அளவு வெப்பநிலை அதிகமாக கிடைக்கும் பகுதிகளை நாம் அடைய வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஐஸ்லாந்தில் காணப்படும் வெந்நீரூற்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் எப்போது புயலாக மாறும் தெரியுமா? எளிய விளக்கம்28 நவம்பர் 2024 ஆதித்யா எல்1: பூமியை தாக்கும் சூரியப் புயல்களை துல்லியமாக கண்டறிய எப்படி உதவுகிறது?28 நவம்பர் 2024 இதில் இருக்கும் சவால்கள் என்ன? பூமியின் பெரும்பகுதி முழுவதிலும், பூமியின் வெளிப்புற அடுக்கின் வழியாக நீங்கள் செல்லும் ஒவ்வொரு கிலோமீட்டருக்கும் சராசரியாக 25-30C (77-86F) வெப்பநிலை அதிகரிக்கிறது . எடுத்துக்காட்டாக, பிரிட்டனில், பூமியின் வெளிப்புற அடுக்கின் உள்ளே 5 கிமீ தூரத்திற்கு, சுமார் 140C (284F) ஆக மேற்பரப்பு வெப்பநிலை உள்ளது என்று பிரிட்டிஷ் புவியியல் ஆய்வு கூறுகிறது. 220பார்களுக்கு (கடல் மட்டத்தில் பூமியின் மேற்பரப்பில் உள்ள சராசரி அழுத்தம் ஒரு பார் எனப்படும்) மேலான அழுத்தத்தில் நீர் வெப்பநிலை 374C (705F) ஐத் தாண்டிய ஒரு புள்ளியை அடைய முடியும். இங்குதான் நீர், அதன் தீவிர ஆற்றலை அடைகின்றது. இது 'சூப்பர் கிரிட்டிக்கல் நிலை' என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில் , நீர் திரவமாகவோ அல்லது வாயுவாகவோ இல்லாத வடிவத்தில் உள்ளது . அது வெப்பமாகவும் அதிக அழுத்தத்தோடும் இருந்தால், அங்கு புவி வெப்ப ஆற்றல் அதிகமாக கிடைக்கும். உண்மையில், அதி சூடான புவி வெப்பக்கிணறு ஒன்று, வணிக புவிவெப்ப கிணறுகள் உற்பத்தி செய்யும் ஆற்றலை விட ஐந்து முதல் 10 மடங்கு ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று அமெரிக்காவின் தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம் கூறுகிறது. புவிவெப்ப ஆற்றலில் உள்ள ஒரு பெரிய பிரச்சனை என்னவென்றால், வெப்பமான பகுதிகளை அடைய பூமியில் போதுமான ஆழத்தில் துளையிடுவது கடினம். பாரம்பரிய கருவிகள், வைர நுனிகளைப் போல் கூர்மையான கருவிகள் கூட, மிகவும் வெப்பமான பகுதிகளை அடைந்து பூமியில் ஆழமாக துளையிடும் அளவுக்கு வலுவாக இல்லை. நிலத்தடியில் உள்ள அதீத வெப்பம் மற்றும் அழுத்தம் துளையை எளிதில் சேதப்படுத்தும். மேலும் குப்பைகள் இல்லாமல் துளையை வைத்திருப்பதும் கடினம். எடுத்துக்காட்டாக, 2009-ஆம் ஆண்டில், ஐஸ்லாந்தின் துளையிடல் திட்டத்தில் பணிபுரியும் ஒரு குழு , பூமியின் மேற்பரப்பிலிருந்து சுமார் 1.2 மைல் (2 கிமீ) கீழே உள்ள கிராஃப்லா எரிமலையில் உள்ள மாக்மா அறைக்குள் (பூமியின் மேற்பரப்பிற்கு அடியில் உள்ள திரவ பாறையின் உட்பகுதி) துளையிட்டபோது கவனக்குறைவாக 'சூப்பர் கிரிட்டிகல்' பகுதியை அடைந்தது. அந்தத் துளையிலிருந்து வெளிப்படும் சூடான நீராவி, அதிக அமிலத்தன்மை கொண்டது. இதனைப் பயன்படுத்துவதும் கடினமாக இருந்தது . அங்கு உயர் அழுத்தங்கள் மற்றும் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அதனை கட்டுப்படுத்துவதும் கடினமாக இருந்தது. மேலும் வால்வு செயலிழந்து துளைக்கு சீல் வைக்கப்படுவதற்கு முன்பு அதை இரண்டு ஆண்டுகளுக்கு இடைவிடாமல் வெளியேற்ற வேண்டியிருந்தது . ஆழமான துளையிடுதல் முறை, விலையுயர்ந்தது. மேலும் துளையிடுவதற்கு நீண்ட நேரம் ஆகலாம். மனிதர்களால் தோண்டப்பட்ட ஆழமான துளை, பனிப்போருக்கு முந்தையது. இருப்பினும், பூமியின் மேலோட்டத்தில் முடிந்தவரை துளையிடுவதற்கு வல்லரசுகளுக்கு இடையே ஒரு போட்டி இருந்தபோது. சோவியத்தால் 7.6 மைல் (12.2 கிமீ) வரை பாறை வழியாக ஊடுருவ முடிந்தது. கோலா தீபகற்பத்தில், ஆர்க்டிக் வட்டத்தில் 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலை (மிக ஆழமான துளை ) சோவியத் உருவாக்கியது. அந்த ஆழத்தை அடைய அவர்களுக்கு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தேவைப்பட்டன. தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகத்தின் (NREL) மதிப்பீட்டின்படி , 1 கிமீ ஆழத்தில் கிணறு தோண்டுவதற்கான செலவு சுமார் 2 மில்லியன் டாலர் செலவாகும். அதே நேரத்தில் இதே அளவில் நான்கு மடங்கு ஆழம் தோண்டுவதற்கு 6 மில்லியன் டாலர் முதல் 10 மில்லியன் டாலர் வரை செலவாகும். உ. பி: பாதி கட்டப்பட்ட பாலத்திலிருந்து விழுந்த கார்; மேப்ஸ் மீது புகார் - கூகுள் அளித்த பதில் என்ன?27 நவம்பர் 2024 இருபது வீதிகள், பள்ளி, கல்லூரி, நீதிமன்றம் என ஒரு நகரத்தையே உள்ளடக்கிய இலங்கையின் பிரமாண்ட கோட்டை27 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்யாவில் மனிதர்களால் தோண்டப்பட்ட மிக ஆழமான துளையான 'கோலா சூப்பர் டீப்' போர்ஹோலின் காட்சி ஆராய்ச்சியில் எம்.ஐ.டி ஆழமான புவிவெப்ப ஆற்றலை அணுகுவது சவாலானதாக இருந்தாலும், அது குறிப்பிடத்தக்க பலன்களையும் வழங்குகிறது. பூமியின் மிக வெப்பமான பகுதிகளை நாம் அடைந்தவுடன், மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். எரிவாயு போன்ற பாரம்பரிய முறைகளைப் பயன்படுத்துவதை விட இது மலிவானது, மேலும் புவி வெப்ப ஆற்றல், குறைவான பசுமை இல்ல வாயுக்களை உற்பத்தி செய்வதால் சுற்றுச்சூழலுக்கு மிகவும் சிறந்தது. இந்த சவால்களை சமாளிக்க, விஞ்ஞானிகளும் நிறுவனங்களும் பூமியில் ஆழமாக துளையிடுவதற்கு புதிய நுட்பங்களையும் தொழில்நுட்பங்களையும் உருவாக்கி வருகின்றன. அவ்வாறு செய்வதன் மூலம், முன்னர் பொருத்தமற்றதாகக் கருதப்பட்ட பகுதிகளில் புவிவெப்ப ஆற்றலின் திறனைக் கண்டறிய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் (Massachusetts Institute of Technology- MIT) விஞ்ஞானிகளால் தொடங்கப்பட்ட குவைஸ் எனர்ஜி என்ற நிறுவனம், 500C (932F) அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையை அணுகுவதற்கு 12 மைல்கள் (20km) வரை ஆழமான பகுதிகளில் துளைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. "மற்றவர்கள் தரையில் மண்வெட்டிகளை வைக்கும்போது, நாங்கள் முதல் முறையாக மைக்ரோவேவ்களைத் தரையில் வைக்கிறோம்," என்று நிறுவனத்தின் இணை நிறுவனர் மாட் ஹவுட் கூறுகிறார். அவரும் அவரது நண்பர்களும் மில்லிமீட்டர் அலை ஆற்றல் கற்றைகளைப் பரிசோதித்து வருகின்றனர். அதன் மூலம் கடினமான பாறையும் கூட ஆவியாகின்றன. இது நுண் அலைகளைப் போன்ற உயர் ஆற்றல் கொண்ட கதிர்வீச்சை மையப்படுத்துகிறது. பாறையின் ஒரு பகுதியின் மீது, அதை 3,000C (5,432F) வரை சூடாக்குகிறது. இதனால் அது உருகி ஆவியாகிறது. கதிர்வீச்சை இயக்குவதன் மூலம் அது பாறை வழியாக துளையிடும். இதன் மூலம், பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும். இது பூமியின் ஆழமான, வெப்பமான பகுதிகளில் துளையிட அனுமதிக்கிறது. "மில்லிமீட்டர்-அலை துளையிடுதல் என்பது ஆழத்தில் இருந்து சுயாதீனமாக செயல்படக்கூடிய ஒரு செயல்முறையாகும். மேலும் அழுக்கு, தூசி நிறைந்த சூழல்கள் மூலமாகவும் மில்லிமீட்டர்-அலை ஆற்றலை கடத்த முடியும்." என்று ஹவுட் கூறுகிறார். மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தின் 'பிளாஸ்மா சயின்ஸ் அண்ட் ஃப்யூஷன் சென்டரின் பொறியியலாளர் பால் வோஸ்கோவ்' நடத்திய அணுக்கரு இணைவு பிளாஸ்மா சோதனைகளிலிருந்து இத்தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது. குறைந்த வருவாய் கொண்ட ஆண்களிடையே 'குழந்தையின்மை' அதிகமாக இருப்பது ஏன்?17 நவம்பர் 2024 "யுரேனஸின் நிலவில் மீன்கள் நீந்தலாம்" - 40 ஆண்டு கருதுகோளை தலைகீழாக மாற்றிய புதிய கண்டுபிடிப்பு16 நவம்பர் 2024 பட மூலாதாரம்,QUAISE ENERGY படக்குறிப்பு, பாரம்பரிய துளையிடும் நுட்பங்களால் உருவாக்கப்பட்ட தூசி மற்றும் உராய்வு இல்லாமல் துளைகளை உருவாக்க முடியும் தொழில்நுட்பத்தில் உருவான மாற்றங்கள் 1970 களில் இருந்து அணுக்கரு இணைவு உலைகளில் பிளாஸ்மாவை சூடாக்குவதற்கான ஒரு வழியாக, மில்லிமீட்டர்-அலை ஆற்றல் ஆராயப்பட்டது. ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வோஸ்கோவ் இத்தொழில்நுட்பத்திற்கான மற்றொரு பயனும் இருப்பதாக வெளிப்படுத்தினார். பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்'(கைரோட்ரான் என்பது வெற்றிட மின்னணு சாதனம் (VED) அதிக சக்தியும், உயர் அதிர்வெண் மின்காந்த அலைகளையும் உருவாக்குகிறது) எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளைப் பயன்படுத்தத் தொடங்கினார். ஆனால் இதுவரை இந்த தொழில்நுட்பத்தை ஆய்வகத்தில், சிறிய பாறை மாதிரிகளில் மட்டுமே சோதித்துள்ளனர். இருப்பினும், இந்த முறையைப் பயன்படுத்தி ஒரு மணி நேரத்திற்கு சுமார் 3.5 மீ (11.5 அடி) வரை பாறை வழியாக துளையிட முடியும் என்று அந்நிறுவனம் கூறுகிறது . மேலும் மைக்ரோவேவ் பீம், பாரம்பரிய முறையைப் போல தேய்ந்து போகாது அல்லது அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை என்பதால் மற்ற நன்மைகள் உள்ளன. குவைஸ் ஆற்றலானது, 2025-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் களச் சோதனைகளைத் தொடங்குவதற்கு முன், மில்லிமீட்டர்-அலை தொழில்நுட்பம் ஆய்வக சோதனையின் இறுதி கட்டத்தில் உள்ளது. ஆனால் மில்லிமீட்டர்-அலை துளையிடும் தொழில்நுட்பத்தை ஆய்வகத்திலிருந்து, துளையிடும் செயல்பாட்டிற்கு எடுத்துச் செல்வது இன்னும் சவாலாக இருக்கும். "ஆழமான உயர் அழுத்த மேற்பரப்பு சூழலில் அவை இதற்கு முன் பயன்படுத்தப்படவில்லை" என்று வோஸ்கோ கூறுகிறார். "துளையிடுதலில் பயன்படுத்தப்படும் தீவிர ஆற்றல்- பொருள் இரண்டின் தொடர்பு காரணமாக ஏற்படும் மாற்றங்கள் குறித்து தெரிந்து கொள்ள ஒரு புதிய கற்றல் முறை தேவைப்படுகிறது." என்கிறார் வோஸ்கோ. இதற்கிடையில், ஸ்லோவாக்கியாவை தளமாகக் கொண்ட 'ஜிஏ டிரில்லிங்', பூமியின் மேலோட்டத்தில் துளையிடுவதற்கு உயர் ஆற்றல் துளையிடும் தொழில்நுட்பத்தை ஆராய்ந்து வருகிறது. இந்த முறை, பிசுபிசுப்பான உருகிய பாறை உருவாகுவதைத் தவிர்க்கிறது. உருகிய பாறைகளை அகற்றுவது கடினம். "பாறையை நொறுங்கும் அளவு அதிர்வுடன் இந்தச் செயல்முறை மிக விரைவாக நடப்பதால், பாறை உருகுவதற்கு நேரம் இல்லை" என்கிறார் ஜிஏ டிரில்லிங்கின் தலைமை நிர்வாகியும் தலைவருமான இகோர் கோசிஸ். "ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர்கள் (3-5 மைல்கள்) வரை செல்வது, நமது தற்போதைய மேம்பாட்டுத் திட்டத்திற்கான இலக்காகும். பின்னர் 10 கிமீக்கு அதிகமாக துளையிடுவது" என்று அவர் மேலும் கூறுகிறார். ஆறே நாட்களில் கோட்டை கட்டி ஆங்கிலேயருக்கு எதிராக சைகை மொழியில் படை நடத்திய 'ஊமைத்துரை'16 நவம்பர் 2024 உலக வரைபடத்திலேயே இல்லாத சோவியத் உருவாக்கிய மிதக்கும் 'மர்மத்தீவு' - உள்ளே என்ன இருக்கிறது?12 நவம்பர் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாறை உருகுவதற்கு 'கைரோட்ரான்' எனப்படும் சாதனத்தால் உருவாக்கப்பட்ட மில்லிமீட்டர்-அலை கற்றைகளை பயன்படுத்தப்பட்டது. நகரங்களிலும் இந்த வேலை நடைபெறலாம் புவிவெப்ப துளையிடுதலுக்கான மற்றொரு நம்பிக்கைக்குரிய அணுகுமுறை, Geothermal energy and Geofluids (GEG) குழுவின் தலைமையிலான ஐரோப்பிய கூட்டமைப்பால் ஆராயப்படுகிறது. அவர்கள் பாறையை உடைக்க 6,000 டிகிரி செல்சியஸில் நம்பமுடியாத அளவிற்கு அயனியாக்கம் (ionised gas ) செய்யப்பட்ட வாயுவின் மூலம் சக்திவாய்ந்த வெடிப்புகளைப் உருவாக்க ஆராய்ச்சி செய்கிறார்கள். இந்த முறை, பாறை உருகுவதைத் தவிர்க்கிறது, மேலும் ஆழமாக துளையிடுவதை எளிதாக்குகிறது மற்றும் பூமியின் வெப்பத்தை மிகவும் திறமையாக அணுகுகிறது. GA டிரில்லிங், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கான்ஸ்டான்டினா வோகியாட்சாகியுடன் இணைந்து, மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தி சூப்பர் கிரிட்டிகல் திரவங்களைப் புரிந்துகொண்டு கட்டுப்படுத்துகிறது. பிளாஸ்மா துளையிடல் மூலம் அணுகப்பட்ட பூமி மூலங்களிலிருந்து ஆற்றலைப் பிரித்தெடுக்க இந்த திரவங்களைப் பயன்படுத்தலாம். சில நிறுவனங்கள் புவிவெப்ப துளையிடல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த விண்வெளி ஆய்வுகளை எதிர்பார்க்கின்றன. 475C (887F) வெப்பநிலையை எட்டக்கூடிய வீனஸின் மேற்பரப்பில் கிரக ஆய்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம், புவிவெப்ப துளையிடும் நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதாரணமாக, Ozark Integrated Circuits என்ற நிறுவனம், மிக அதிக வெப்பநிலையைத் தாங்கக்கூடிய மின்னணு பாகங்களை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, இந்த மின்னணு பாகங்கள் புவிவெப்ப ஆற்றலுக்காக துளையிடும் கருவிகளுக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதன் மூலம் அதிக வெப்பநிலை கொண்ட இடங்களை அடையலாம். தேசிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆய்வகம், அதன் சொந்த பங்கிற்கு, சிக்கலான நிலத்தடி சூழல்களை பகுப்பாய்வு செய்ய செயற்கை நுண்ணறிவு பக்கம் திரும்பியுள்ளது. இது, சூப்பர் கிரிட்டிகல் நீருக்கான சிறந்த இடங்களைக் கண்டறிய முயற்சிக்கிறது. அதே போல், அவற்றைக் கண்டறியும் முயற்சிகள் பெரிய சிக்கல்களை ஏற்படுத்துவதற்கு முன்பு அவற்றின் தவறுகளைக் கணிக்கவும் , கண்டறியவும் உதவுகின்றன. மஞ்சள், மிளகாய் உள்பட மசாலாப் பொருட்களை உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லதா?11 நவம்பர் 2024 ஐநா காலநிலை மாற்ற மாநாடு: கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்த ஏழை நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் நிதி அளிக்குமா?12 நவம்பர் 2024 பட மூலாதாரம்,MIT மேலும் சில நிறுவனங்கள் ஏற்கனவே பூமியில் ஆழமாக ஊடுருவி வருகின்றன. 2024 ஆம் ஆண்டில் ஜெர்மனியின் பவேரியாவில் உள்ள ஜெரெஸ்ட்ரீடில் உள்ள ஒரு தளத்தில் இரண்டு செங்குத்து கிணறுகளுடன் மூன்று மைல் (5 கிமீ) ஆழத்தை அடைந்ததாக புவிவெப்ப ஆற்றல் நிறுவனமான ஈவர், பிபிசியிடம் கூறிகிறது. ஈவர் லூப் என அழைக்கப்படும் மூடிய லூப் வடிவமைப்பிற்குள் நீரை சுற்றுவதன் மூலம் புவிவெப்ப வெப்பத்தை மேற்பரப்பிற்கு கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆலை பூமியின் வெப்பத்தைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும். மேலும் இம்முறை மூலம், அவர்கள் குளிர்ந்த நீரைச் சுழற்ற திட்டமிட்டுள்ளனர். அதை ஆழமான நிலத்தடியில் சூடாக்குகிறார்கள். பின்னர் இந்த சூடான நீரை மீண்டும் மேற்பரப்புக்கு கொண்டு வந்து மின்சாரம் தயாரிக்கவும், அப்பகுதியில் உள்ள வீடுகளின் பயன்பாட்டிற்கு அனுப்பவும் முடியும். ஈவர், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்த அமைப்பிலிருந்து புவி வெப்ப ஆற்றலை உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜான் ரெட்ஃர்ன் கூறுகிறார் "எங்கள் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் 11 கிமீ (6.8 மைல்கள்) வரை துளையிட விரும்புகிறது" என்று புவியியலாளரும் ஈவர் இணை நிறுவனருமான ஜீனைன் வானி கூறுகிறார். "அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில் அதி வெப்ப பாறைகளை அடைய முடியும் என்று நான் நம்புகிறேன்." என்றும் அவர் தெரிவித்தார். ஆழமான புவிவெப்ப ஆற்றலைப் பயன்படுத்துவதற்கான உந்துதல், பழைய படிம எரிபொருள் மின் நிலையங்களுக்கு புதிய பரிமாணத்தை கொண்டு வரக்கூடும். ஏனெனில் நாடுகள் தங்களின் பாரம்பரிய கார்பன்-உமிழும் ஆற்றல் மூலங்களை கைவிட விரும்புகின்றன . நியூயார்க்கின் அப்ஸ்டேட்டில் கைவிடப்பட்ட நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தை அடையாளம் கண்டுள்ளார், வோஸ்கோவ். அடுத்த பத்தாண்டுகள் முடிவதற்குள் நிலத்தடியிலிருந்து எடுக்கப்படும் ஆழமான வெப்பத்திலிருந்து மின்சாரம் தயாரிக்க, இந்த நிலக்கரி மின் உற்பத்தி நிலையம் மீண்டும் திறக்கப்படலாம் என்று அவர் நம்புகிறார். ஒரு காலத்தில் படிம எரிபொருட்களை நம்பியிருந்த நிலக்கரி மின் நிலையத்தை கற்பனை செய்து பாருங்கள், இப்போது அது சுத்தமான ஆற்றல் மையமாக மாற்றப்படும் என்பது புவிவெப்ப ஆற்றல் குறித்து எதிர்காலத்திற்கான பார்வை. பூமியின் வெப்பத்தை நிலத்தடியின் ஆழத்தில் இருந்து எடுப்பதன் மூலம், சுத்தமான மின்சாரத்தை உருவாக்க முடியும். இருப்பினும், உயர் வெப்பநிலை ஆற்றல் மூலங்களை அணுகும் அளவுக்கு ஆழமாக துளையிடுவதில் சவால் உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு (சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.) https://www.bbc.com/tamil/articles/ckg90lxnj17o
  22. @கிருபன் சார், மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா சாரின் பேஸ்புக் கணக்கில் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சாருடனான முழுமையான உரையாடல் உள்ளது. சார் என கூப்பிட சொல்லிப்போட்டார் என்பதற்காக போலிசில் முறைப்பாடு கொடுத்து ஊடகவியலாளர் மாநாடு நடாத்தலாமா கிருபன் சார்.
  23. உந்த வசனத்தை பிரிட்டிஷ்காரன் வாசிப்பான் எண்டால் பொலிடோல் குடிச்சு செத்தே தீருவான்....🤣
  24. I am not even sure he has any powers here to abuse. பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பிரின் சிறப்புரிமைகள் பெருமளவில் பாராளுமன்ற வளாகத்துக்குள்தான். சம்மன் பண்ணும், விசாரிக்கும் அதிகாரம் பாராளுமன்ற தனி உறுப்பினர்களால் அன்றி தேர்வு குழுக்கள் வழியாகவே பிரயோகிக்க படும். ஒரு வாக்காளரின் விடயம் சம்பந்தமாக ஒரு எம்பி கடிதம் மூலம் கேள்வி கேட்டால், குறித்த கால அவகாசத்தில் பதில் போட வேண்டும். இலங்கையிலும் இப்படித்தான் என நினைக்கிறேன். இங்கே கடிதம் போடாமல் அருச்சுனா நேரில் போயுள்ளார். பணிப்பாளர் முறையாக ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்கிறேன் என்றால் ஒத்து கொள்வதுதான் முறை. சேர் என அழைக்கவேண்டும் என அடம்பிடிப்பது எல்லாம் லுச்சாத்தனம். திரு அருச்சுனா இராமநாதன் கெளரவ பா உ அவர்களே என அழைத்தால் போதும் என நினைக்கிறேன். இவர் இதை பாராளுமன்றில் சிறப்புரிமை மீறலாக எழுப்பும் போது - சபாநாயகர் என்ன செய்கிறார் என பார்போம். அருச்சுனா விதிகளை படித்து விட்டு போய் இருந்தால் - இலங்கை பாராளுமன்ற விதிகளின் படி அவர் சரியாக இருக்கவும் வாய்புள்ளது. என்னால் நீங்கள் தந்த இணைப்பில் அப்படி எதையும் காணமுடியவில்லை. ஆனால் மிக மேம்போக்காகவே வாசித்தேன். சோசல் காசு எடுத்த பிள்ளை பெறாதவரின் காசை பக்கத்து வீட்டு பிள்ளையா கட்டும்? அது இலவசம் தானே? டீடெயில் நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால் welfare state இன் அடிப்படை தத்துவம் எங்கும் ஒன்றேதான். அது… உழைக்கும் போது வரி அல்லது, காப்புறுதியாக செலுத்துங்கள். உழைக்கமுடியாவிட்டால் அரசு உங்களுக்கு மினிமம் பாதுகாப்பை தரும்.
  25. நீங்க மாம்பழ வாக்காளர்தானே? முன்பே சொன்னதுதான் - அருச்சுனா பனி என தெரிந்தும் நான் போட்டிருப்பேன் ஏன் எண்டால் மிச்சம் எல்லாம் ஏழரை நாட்டுச் சனி.
  26. இல்லை. ஆனால் இதே லொஜிக்கின் படி பார்த்தால் பிரித்தானியர் இலங்கைக்கு சுதந்திரமே கொடுத்திருக்க கூடாது. ஏன் எண்டால் இலங்கை ஆட்சியாளர்கள் 76 வருடமாக மோசமான ஆட்சியைத்தான் வழங்குகிறனர். தமிழ் அரசியல்வாதிகள் சரியில்லை ஆகவே தமிழருக்கு சுயாட்சி தேவையில்லை என்றால் - இலங்கை ஆட்சியாளர்கள் சரியில்லை ஆகவே ஆட்சியை மீள பிரித்தானியாவிடம் கொடுக்க வேண்டும் எனவும் வாதிடலாம். தமிழர்களுக்கு உரிய அதிகாரம் அவர்களின் சுய உரிமை. அதை அவர்கள் போட்டடிக்கலாம் அல்லது சிறப்பாக பாவிக்கலாம். அது அவர்களின் பிரச்சனை.
  27. ஊசி அருச்சுனா தன்னிடம் சத்திய மூர்ததிக்கு எதிராக ஆதாரங்கள் இருந்தால் அதை அரசாங்கத்திடம் சமர்பிக்க வேண்டும். அல்லது முறைப்படி பொது நல வழக்கு தாக்கல் செய்து இவ்விடயத்தை அணுக வேண்டும். அதை விடுத்து இப்படி அதாகரிகமாக ஒரு வைத்தியசாலை பணிப்பாளரின் அலுவலகத்துக்குள் நுழைவது. பேசுவதை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவது எல்லாம் அவரது பண்பாடற்ற செயல்கள். ஒருவருடன் உரையாடுவதை அவரின் அனுமதி இன்றி பதிவு செய்வதே குற்றம். அதை பொது வெளியில் வெளியிடுவதும் குற்றம். மேற்கு நாடுகளில் வாழ்ந்திருந்தால் இந்த அர்சுனாவுக்கு எப்போதோ கடும தண்டனை வழங்கப்பட்டிருக்கும். தான் ஒரு ஹீரோ என்ற நினைப்பில் அதிகமாக ஆட்டம் போடுகிறார். விரைவில் விளைவுகளை சந்திப்பார் என நினைக்கிறேன். மக்களுக்கு ஹீரோயிசம் காட்டுவதே இவரது நோக்கமே தவிர மருத்துவ ஊழல்களை கண்டுபிடிப்பதல்ல.
  28. அர்ச்சுனாவை இன்னும் ஆதரிக்கும், அவர் மீது நம்பிக்கை வைக்கும் வாக்காளர்கள் இருந்தால் அவர்களுக்கு இது சமர்ப்பணம். சத்தியமூர்த்தி, எந்த ஒரு பா.உ வின் கீழும் இருக்கும் ஊழியர் அல்ல. பா.உ வுக்கு முறைப்பாடு யாழ் மக்களிடமிருந்து கிடைத்தால், அவர் நேரே முறைப்பாடு கிடைத்த இடத்திற்குப் போகலாம் என்று இலங்கை அரசியல் அமைப்பில் எழுதியிருக்கும் என நான் நம்பவில்லை. அர்ச்சுனா செய்திருக்க வேண்டியது, ஒரு கடிதம் அல்லது சந்திப்பு மூலம் சத்தியமூர்த்தியின் மேலதிகாரியான சுகாதார அமைச்சுக்கு அறிவிப்பது தான். யாராவது மெர்வின் சில்வாவிற்கு ரூபவாகினியில் நடந்ததை அர்ச்சுனா அவர்களுக்கு நினைவூட்டினால் நல்லது என நினைக்கிறேன். பி.கு: இது சத்தியமூர்த்தியின் செயலின்மையை ஆதரிக்கும் கருத்தல்ல. ஆனால், அவர் இந்த விடயத்தில் அர்ச்சுனாவை நடத்திய விதம் சட்ட விதிகளின் படி சரியானது.
  29. அவசரம் என்றால் இந்தியா , மாலைதீவுக்கு..ஓடுறதிற்கு...🤣
  30. ஈழத்தமிழர் எல்லோ - 160 இயக்கம் இருந்தால்தான் அது ஈழத்தமிழர். மு.அ.கு.மா.ச வில் இருந்து கொள்கை முரண்பாட்டால் பிரிந்தோரே அனுர கே ஹமுதாவ🤣 என்ன அண்ணா பேச்சு வாக்கில கெட்டவார்த்த எல்லாம் வருது🤣
  31. நல்லா இருக்குதுங்க உங்கபுஸ்பா கதை !.............. செம்மரக் கட்டை கடத்துபவன் ஹீரோ! அவனைப் பிடிக்க வரும் போலீஸ் வில்லன்! கெட்டவனை நல்லவனா தூக்கி கொண்டாடுவதும் ! நல்லவனை கெட்டவனாக காட்டுவதும் இந்திய சினிமாவில் மட்டுமே ! அந்த கதைக்கு கோடிக்கணக்கில் வசூலாம் .................. பையா எல்லாம் பகிடிக்குத்தான்
  32. Padrino Ameen · Suivre 5 j · "After The Rain " Hungarian Painter Oil On Canvas......!
  33. அட நீங்கள் வேற..... ஜேர்மன் சனம் சந்தோசத்திலை துள்ளிக் குதிக்குதுகள். அப்பாடா ஒரு மாதிரி சிரியா பிரச்சனை முடிஞ்சுது. இனி இஞ்சை அகதியாய் வந்த சிரியா சனம் அவ்வளவும் திரும்பி போய் விடும் எண்ட நினைப்பிலை..... ஆனால் நான் கொடுப்புக்கை சிரிச்சுக்கொண்டு இருக்கிறன். பாம்பின் கால் பாம்பறியும் எண்ட பழமொழியை நினைச்சு....🤣 உவங்களாவது நாட்டுக்கு திரும்பி போறதாவது...
  34. தமிழ்சிறியவர்களது கருத்தே இதற்கான பதிலாகப் பொருந்திப்போகிறது. உலகவல்லாதிக்க சக்திகள் தமது இருப்பிற்காக மக்களைக்கொன்றொழித்து, வளங்களை சுரண்டிப்பெருத்துவருகின்றன. அணுஆயுதம் வைத்திருப்பதாகக் கூறி ஈராக்கினுள் புகுந்து எதைச்செய்தார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். குர்துகளைக் கொன்றதாக சதாமைத் தூக்கில்போட்ட இவர்களால், மகிந்தவையோ மற்றும் நெத்ன்யாகுவையோ அப்படிச் செய்ய முடியுமா? சீனாவில் சிறுபான்மைகள் நசுக்கப்படுவதாகக் கூப்பாடு. ஏன் காஸா அழிவைத் தடுக்காது பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். இப்படிப் பல தொடர்கள் உள்ளன. இதுவரை ஆதிக்கசக்திகளுக்குப் பயங்கரவாதிகளாகத் தெரிந்தோரை வைத்து மற்றொரு ஆதிக்கசக்தியை வீழ்த்தியுள்ளனர். இதிலே நாடு எப்படியாக வேண்டும் என்பது மக்களின் முடிவு. நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  35. தங்கள் வாழ்த்திற்கு மிக்க நன்றி திரு.பெருமாள்.💐🙏
  36. தீலிபன் அருந்ததி தம்பதியருக்கு இனிய திருமண நல்வாழ்த்துகள் வாழ்க ❤️ வளத்துடன்
  37. ராசவன்னியன் ஐயாவின் மகன் திலீபனுக்கும் மருககள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துக்கள்💐💐💐
  38. இராசவன்னியர் அவர்களின் மகன் திலீபனுக்கும், மருமகள் அருந்ததிக்கும் இனிய திருமண வாழ்த்துகள்1!
  39. நேரப் பற்றாக்குறை, ஆனால் சுருக்கமாக: ஓம், சில விடயங்கள் தவறு, சில விடயங்கள் தவிர்ப்பு (omission) என்று அபிப்பிராயத்திற்கேற்ப தரவுகளை வளைத்திருக்கிறார். சில நுட்பமான உள்குத்துக்களும் கூட: "வட்டி, வர்த்தகம் என்று வாழ்ந்தார்கள்" என்கிறார். ஐரோப்பாவில் 1900 இல் யூதர்கள் மருத்துவம், விஞ்ஞானம் , வர்த்தகம் என்று எல்லாத் துறைகளிலும் கோலோச்சினார்கள், இந்த "cunning வியாபாரிகளாக இருந்தனர்" என்பது நாசிகள், யூத எதிர்ப்பாளர்கள் பாவிக்கும் ஒரு anti-Semitic trope! 1897 இல் முதல் சியோனிஸ்ட் காங்கிரஸ், ஆனால் அது தான் யூதர்களுக்கென ஒரு நாட்டை உருவாக்கும் முதல் முன்மொழிவு அல்ல. யூத நாடு இயக்கம் ஆரம்பித்தது 1800 ஆரம்பத்தில், கிழக்கு ஐரோப்பாவில் இருந்த யூதர்களிடையே. இதைப் பார்த்து வளர்ந்த தியோடர் ஹேர்ஷல் தான் முதல் சியோனிஸ்ட் காங்கிரசை உருவாக்கி யூதப் பணக்காரர்களை நாடி பலஸ்தீனம் நோக்கிச் செல்லும் யூதர்களை அதிகரிக்க வைத்தார். டொக்ரர் குறை எதை வாசித்து விட்டு இதை எழுதினாரோ தெரியவில்லை!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.