Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    18
    Points
    19123
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    13
    Points
    3055
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87990
    Posts
  4. ரஞ்சித்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    8907
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 12/16/24 in all areas

  1. இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு; 1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை. 2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார். 3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார். 4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை. 5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை. இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி, 1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும். 2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும். 3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும். 4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர். 5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை. 6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே). 7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு. 8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம். இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்
  2. தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது?
  3. சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣.
  4. என் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! பிறந்தவுடன் தூக்கிய நேர்ஸ் இனைப் பார்த்து கண்ணடித்தது நேற்று நடந்தது போல் இருக்கின்றது. அதற்குள் 50 வருடம் ஓடிப்போய் விட்டது!
  5. திண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.
  6. விவசாயியின் வாழ்க்கை . ...........! 🙏
  7. அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............
  8. நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!! " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !
  9. இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.
  10. @goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂
  11. தரமான சேர்டிபிக்கட் உள்ள “கலாநிதி” சபநாயகர்.
  12. இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.
  13. ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும். புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும் உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும். (நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)
  14. அதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா? மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்!
  15. நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.
  16. புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த‌ இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிட‌வேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் த‌ண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா ‍- உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.
  17. நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்
  18. சபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை. பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்
  19. ஒருவேளை றோட்டோரமாக தென்னம்பிள்ளை வைக்கப்போகின்றார்களோ?
  20. 🤣............. ஆடு-புலி-புல்லுக்கட்டு போன்றது இலங்கை மக்களின் கதை........... இந்தியா அவர்களின் நாட்டுக்குள் இதுவரை பார்த்திராத ஒரு படைப்புகள் நாங்கள்................ பாலத்தை போடட்டும், நாங்கள் யாரென்று காட்டுகின்றோம்................🤣. முருகனின் பட்டம் முறையானதே............... இப்ப எவராவது 'டாக்டர்' என்று சொன்னாலே, உடனே சிரிப்பு வருகின்றது.............
  21. அப்படி ஒரு பெஞ்ச் மார்க்கை அமைக்க முயலுகிறார்கள்.
  22. நன்றி விசுகு🙏 ...அந்த தோழனுடன்(செகுவார) அது முடிந்த கதை ...அதன் பின் அவரின் வாரிசுகள் பின்பற்றவில்லை...எம் இனத்திற்கு இன அழிப்பு நடை பெற்ற பொழுது ஐ.நா.சபையில் சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக செயல் பட்ட நாடுகளில் கியுபாவும் ஒன்று ....செகுவாராவின் பூதவுடலை போலிவியாவில் தோண்டியெடுத்து கியுபாவுக்கு கொண்டு வந்து கல்லறை அமைத்த பெடல்கஸ்ரோவுக்கு ...கூட செகுவாராவின் "எங்கேயாகிலும் அநீதியைக் கண்டு கொதிப்பாயாக இருந்தால் நீயும் என் தோழனே. சேகுவேரா" இந்த கொள்கையை பின்பற்றவில்லை... வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள்,மக்களுக்காக பயன்படுத்த வரவில்லை...அவையின்ட் பெரியண்ணன் ரஸ்யா என்ன சொல்லுதோ அதை கண்மூடிகொண்டு செய்வினம் ...
  23. ஏனைய இயக்கங்களை மக்கள் தண்டிக்க 30 வருடங்களுக்கு மேல் சென்றுள்ளது ...கடந்த தேர்தலில் தான் அதை செய்தாகள்...🤔
  24. இது, சத்தியமூர்த்தியோடு சேர்ந்து ஊழல் செய்த யாராவது விசில் ஊதும் வரை, சாத்தியமில்லாத விடயம். தாயகத்தில் ஊழல் விடயங்களில் குழுவாக ஈடுபடுவர். பதவி நிலையில் சத்தியமூர்த்திக்கு மேலே இருப்பவரும் செய்வார், கீழே இருப்பவரும் செய்வார். எல்லோரும் மௌனமாக இருந்து ஒருவரையொருவர் காப்பாற்றுவர். யாழ் இந்துக் கல்லூரி முன்னாள் அதிபரைப் பிடித்தது போல, யாராவது இரகசிய ஒலி/ஒளிப் பதிவு மூலம் தான் இவர் போன்றவர்களை மாட்ட வைக்க முடியும்.
  25. லலித் அதுலத் முதலி முடுக்கிவிட்ட பாரிய கைதுகளும் சித்திரவதைகளும் 1985 ஆம் ஆண்டு ஜெயார் - லலித் கூட்டு தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த வகைதொகையற்ற கைதுகள், சித்திரவதைகள், படுகொலைகள், தாயகத்திலிருந்து தமிழ்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை போன்றவற்றினால் தமிழ் மக்கள் தாம் இவற்றிற்கெதிராகப் போராட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் போராளி அமைப்புக்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தேடும் களத்தையும் விரிவுபடுத்தியிருந்தது. சித்திரையில் இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமான முஸ்லீம் தரப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் இனப்பிரச்சினையினை அது மேலும் சிக்கலாக்கியிருந்தது. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் அனைத்துக் குடும்பங்களிலும் அரசால் முடுக்கிவிடப்பட்ட கைது நடவடிக்கைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. இளவயது ஆண்களைக் குடும்பங்களில் வைத்துப் பாதுகாப்பதென்பதே அவர்களுக்குப் பெரும் சுமையாகிப் போனது. கிராமம் கிராமமாகச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவந்த இராணுவம், ஒலிபெருக்கிகள் ஊடாக 18 முதல் 35 வயது வரையான இளைஞர்களை தாம் கட்டளையிடும் இடங்களுக்கு வந்து கூடுமாறு கூறியதுடன், அவர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று இழுத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஆண்களில் சிலர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட இன்னும் பலர் காணமலாக்கப்பட்டிருந்தனர். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு அக்காலப்பகுதியில் என்னால் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது. என்னுடன் பேசிய பல தமிழப் பெற்றோர்கள் தமது ஆண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைவதன் மூலமோ அல்லது வெளிநாடு செல்வதன் மூலமோ பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தனர். ஜெயவர்த்தனவின் அரசு மீதும் அவரது இராணுவம் மீதும் கடுமையான வெறுப்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டு தை மற்றும் மாசி மாதங்கள் கடுமையான சுற்றிவளைப்புக்களையும், பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதையும் வழமையாகக் கொண்டிருந்தது. தை மாதம் 2 ஆம் திகதி வடமராட்சியின் அல்வாய், திக்கம், நாவலடி, இறுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் 18 முதல் 35 வயது வரையான ஆண்களை பொது இடமொன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு அப்படிக் கூடியவர்களில் 200 பேரை தம்முடன் இழுத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் தை 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் மேலும் 500 இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்றனர். மட்டக்களப்பில் 1000 இளைஞர்களும், திருகோணமலையில் 2000 இளைஞர்களும், அக்கரைப்பற்றில் 400 இளைஞர்களும் இதே காலப்பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டின் முதற்காற்ப்பகுதியில் மட்டும் 52 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர் குறைந்தது 10,000 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தம்முடன் இழுத்துச் சென்றிருந்தனர். லலித் பாராளுமன்றத்தில் இக்கைதுகள் குறித்துப் பேசும்போது, "அவர்களைச் சந்தேகத்தின்பேரிலேயே கைதுசெய்கிறோம், ஆனால் விசாரணைகளின் பின்னர் அவர்களை விடுவித்துவிடுவோம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினார். ஆனால் எதற்காக இவ்வாறான பாரிய எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்துவருகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது "எமது பிரச்சினை என்னவென்றால் பயங்கரவாதிகளை அழிப்பதுதான். ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்கணம்? நாட்டினை நேசிக்கும் பிரஜைகளிடமிருந்து பயங்கரவாதிகளைப் பிரித்தறிவது எங்கணம்? மொத்தத் தமிழர்களை கைதுசெய்து விசாரித்தால் ஒழிய பயங்கரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்வது சாத்தியமில்லை" என்று அவர் கூறினார். பாரிய கைதுகளின் சூத்திரதாரியாகவிருந்த லலித் அதுலத் முதலி ஒவ்வொரு தமிழனையும் தான் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி என்று எண்ணும் நிலையினை ஏற்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கைதுசெய்யப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் நாள்வரைக்கும் விசாரணை என்கிற‌ பெயரில் நடத்தப்படவிருக்கும் கடுமையான சித்திரவதைகளும் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்திவந்தது. லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை கைதுசெய்து விசாரிப்பதென்பது மிகச் சாதாரணமான விடயமாகத் தெரிந்தது. "அவர்களை கைதுசெய்து கொண்டுவருகிறோம், விசாரணைகளின் பின்னர் விடுவித்து விடுவோம், அவ்வளவுதான்" என்று அவர் மிகச்சாதாரணமாக இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தார். தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் விதம், அவர்கள் மீது விசாரணை என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்கள் அனுபவித்த‌ இருந்த உடல், உளரீதியான பாதிப்புக்கள் என்பன தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடூரமானவையாகக் காணப்பட்டதுடன் அவர்களைப் பெரிதும் அச்சத்திலும் ஆழ்த்தியிருந்தன. மகேந்திரா கேசிவப்பிள்ளை எனும் 23 வயது இளைஞன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பிரிவில் கல்விபயின்று வந்தவர். தை மாதம் 14 ஆம் திகதி தனது பெற்றோருடன் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக அவர் கிழக்கிற்கு வந்திருந்தார். பொங்கல் முடிவடைந்து மீளவும் யாழ்ப்பாணப் பக்கலைக் கழகத்திற்குத் திரும்புவதற்காக அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்புப் பொலீஸ் நிலையத்திற்கு அவர் சென்றார். பொலீஸ் நிலையத்தில் அவரை விசாரணைக்கென்று அழைத்துச் சென்ற விசேட அதிரடிப்படையினர் அவரை காலில் சுட்டுக் காயப்படுத்தியதுடன் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மட்டக்களப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்றனர். "என்னை அவர்கள் ஒரு பயங்கரவாதி என்றே அழைத்தனர். நான் என்னைப் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொண்டு இராணுவப் பயிற்சிக்காகவே யாழ்ப்பாணம் செல்வதாக ஒத்துக்கொள்ளுமிடத்து விடுதலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக நான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்றும், பயங்கரவாதி அல்ல என்றும் கூறினேன்" என்று சர்வதேச மன்னிப்புச்சபைக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை கூறியிருந்தார்.
  26. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலி.
  27. இது எல்லாம் ஒரு பிரச்சனை இல்லை அதுவும் ஜேவிபி க்கு அல்லது மக்கள் சக்திக்கு கிழவன் ரணில் இருக்க கதிரை. தேடுகிறார். அவ்வளவு தான் இவர்கள் தங்களை அறியாமல் ஜேவிபி யை மேலும் உறுதியாக்கிறார்கள் இந்த கருத்துகள் உண்மையான ஒரிஜினல் கருத்துகள் பிறகு என்னை அனுர வலு. என்பதில்லை 🙏🤣
  28. வக்கீல்... சேர்டிபிக்கட் எடுக்க, பேராசிரியர் பீரிஸை வைத்து குதிரை ஓடிய நாமல் ராஜபக்சவும், பத்தாம் வகுப்பு "பாஸ்" பண்ணாத, பசில் ராஜபக்ச... நிதி அமைச்சராகவும், அமெரிக்காவில் பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்த, கோத்தா ராஜபக்ச ஜனாதிபதியாகவும்.... எந்த வித பிரச்சினையும் இல்லாமல்... நாட்டை ஆண்டு விட்டு போயிருக்கின்றார்கள். 😂 அனுரவுக்குத்தான்... ஆரம்பித்த இரண்டு மாதத்திலேயே... சேர்டிபிக்கட் பிரச்சினை வந்திட்டுது. அனுபவம் காணாது போலுள்ளது. 🤣
  29. 10 கள்ளருக்கு மத்தியில் ஒரு நேர்மையானவனால் எதையுமே புடுங்க முடியாது.🤣
  30. தகமை உண்டு…திறமை….பார்ப்போம். அவையடக்கம் சுத்தமாக இல்லை.
  31. ஆமாம், உங்கள் ஊகம் சரி. அத்துடன் ஶ்ரீதரனின் உரையில், அரச அதிகாரிகள் எங்களை விட படித்தவர்கள் அவர்களுடன் அணுகுவதற்கு ஒரு முறையுள்ளது என்று ஶ்ரீதரன் கூறிய கருத்துக்கு அர்சுனா தனது முக நூலில், அவருக்கு அது பொருந்தலாம் அதனால் தனக்கு பொருத்தமானது ஶ்ரீதரன் ஐயா எனக்கு பிரயோகிக்க கூடாது என நக்கலாக பதிலளித்துள்ளார். 😂 ( ஆனால், அர்சனாவின் அணுகுமுறை ஊழலை நிரந்தரமாக ஒழிக்க உதவுமா என்பதில் எனக்கு சந்தேகம் உண்டு, ஏனெனில் ஊழல் என்பது அதிகாரிகளில் மட்டும் தங்கி இல்லை ஒட்டு மொத்த மக்களிலுமே அந்த ஊழல் கலாச்சாரம் ஊடுருவி உள்ளது. காசை எறிந்து தமது வேலைகளை விரைவாக முடிப்பதில் புலம் பெயர் தமிழர்கள் விண்ணர்கள். அவர்களில் பலரே அர்சசுனாவின் ஆதரவாளர்கள் கூட. அதிகாரிகள் ஊழல் செய்ய வேண்டும். அதை பொது வெளியில் அம்பலப்படுத்தி நான் ஹீரோ ஆகவேண்டும் என்பதே அர்சசுனாவின் மனவோட்டம் போல தெரிகிறது. காலப்போக்கில் அவர் தனது போக்கை மாற்றி சரியாக செயற்படலாம். அவருக்கு திறமை , தகைமை உண்டு என்பது மறுப்பதற்கில்லை.)
  32. அந்த ஐந்த ஆண்டுகளுக்காக நீங்க சின்னவயசில் இருந்து வெயிற்றிங் போல. 😂
  33. நானும் நாதமுனியை "பொய்பொத்தல்" என்று ஒரு முறை அழைத்தேன். அதற்காக மன்னிப்பு கோருகின்றேன். மறுபடியும் வந்து எழுத வேண்டுகிறேன்.
  34. இவர்கள் வெளிநாடுகளில் ஆடி தோற்றுவிட்டால், இந்திய விமான நிலையத்தில் எதிர்ப்பை சமாளிக்க சாதாரணமாக மக்கள் வெளியேறும் பாதையை தவிர்த்து முக்கிய.பிரமுகர்கள் செல்லும் பாதையால் வெளியேறி விடுவார்கள். இல்லையென்றால்; சாணாக வீச்சுத்தான் இவர்கள்மேல். அதிலும் பாகிஸ்தானோடு விளையாடி வென்றுவிட்டால்; ஒரே வெடி கொழுத்தல் ஆரவாரந்தான். அது அவர்களின் மானப்பிரச்சனை.
  35. ரஸ்யா கைவிட்ட இரு படைதளங்களை சில நாட்கள் கழித்து அமேரிக்கா எடுத்து கொண்டதாம்.
  36. இந்த விபத்து நடந்த அன்று என் தந்தை ஹட்டனில் இருந்தாராம். மீட்புப் பணியின் இரெண்டாம் அடுக்கில் தாம் இணைந்து கொண்டதாக சொல்லியுள்ளார். பின்னர் ஒரு பயணத்தின் போது வாகனத்தை இந்த வழியாக விட்டு, இடங்களையும் காட்டினார். அந்த காலத்தில் இலங்கையின் ரெக்கோர்ர்ட்டில் அதிக அளவான மக்கள் இறந்த நிகழ்வுகளில் ஒன்று இதுவென சொன்னார்.
  37. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிழலிக்கு. வயது போக போக இளமயாய் தோன்றுவது போல் உள்ளது பேப்பர் உடன் சேர்ந்து எடுத்த படம் பார்த்தேன் கொஞ்சம் முதல் .
  38. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் நிழலியண்ண.✍️
  39. இலங்கையில் உள்ள தமிழர்கள் எல்லோருக்கும் சிங்கள மொழி கட்டாயம் தெரிய வேண்டும். இல்லாவிட்டால் பாதிப்பு அவர்களுக்குத்தான்.
  40. ஏன் எவராவது ஒரு சிங்கள இனவாதியை தூக்கி பிடிக்காட்டி உங்களுக்கு இரவில் நித்திரை வராதா? எவரையும் இல்லை. ஓம். ஆனால் அவர் அதிகாரத்தில் இல்லை. சாணாக்ஸ் குரல் கொடுக்கத்தான் வேண்டும். முன்பு பலதுக்கு போராடியும் உள்ளார். ஆனால் அவர் போராடமட்டுமே முடியும். அதிகாரத்தில் உள்ள அனுரவும் என் பி பி யும் ஒரு நொடியில் இதை முடிவுக்கு கொண்டுவரலாம். நான் எங்கே இதை வேண்டாம் என்றேன்? அனுரவை கேள்வி கேட்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, யாழ் போன்ற இடங்களில் அவரை தூக்கி தலையில் வைத்து ஏன் ஆடுகிறீர்கள் எண்டுதான் கேட்கிறேன்.
  41. நீங்கள் சீமான் அநுரகுமார திசாநாயக்கவை வலிந்து தேடி சென்று அவர்களால் முன்னேறி வசதியான பாதுகாப்பான வாழ்க்கை வாழ்ந்து கொண்டு அவர்களை அடிக்கவில்லையே.
  42. இதை கொஞ்ச காலம் தொழிலில் இருந்தால்தான் அறியமுடியும். சிலமயம் தொழில் செய்யும் இடத்தில் ஆட்கள் கூட்டமாக வந்து…ஏய்…வாய்யா வெளியே…என கூச்சல் போடுவார்கள்… அப்போ எதுவும் நடக்காத மாதிரி மிக்சர் சாப்பிடவேண்டும். அதேபோல்…எப்போ யார் என்ன சொன்னார் என்ற வரவு செலவு ரெக்கோர்ட்டை மறக்காது மெயிண்டேயின் பண்ண வேண்டும்🤣.
  43. பொருளாதார வசதிகளில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளை மகிழ்விப்பதற்காக வருடம் தோறும் கிறி்ஸ்மஸ் பண்டிகையின் போது அவர்களுக்கு விருப்பமான பொருட்களை அனுப்பி வைப்பது தான் Santa Claus & Co. KG Factory. யேர்மனியில் Aachen நகரில் இருக்கும் இந்த நிறுவனம் 1000 சதுர மீற்றர் பரப்பளவிலான ஒரு ஹோலில் பிள்ளைகளுக்கான பல பொருட்களை சேகரித்து வைத்திருக்கிறது. வருடம் தோறும் கிறிஸ்மஸ் நேரத்தில் சிறுவர் சிறுமிகள் தங்களுக்கு விருப்பமானவற்றை பட்டியலிட்டு அந்த நிறுவனத்து அனுப்பி வைப்பார்கள். Santa Claus & Co நிறுவனத்தினரும் தங்களால் முடிந்தளவு அந்தப் பிள்ளைகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வார்கள். பிள்ளைகளும் தங்களுக்கு கிறிஸ்மஸ் தாத்தாதான் பரிசுகளை அனுப்பி வைத்தார் என புளகாங்கிதமடைவார்கள். இந்த வருடம் அவர்களுக்குக் கிடைத்த ஒரு கடித்தத்தில் இருந்த விடயம் அந்த நிறுவனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. மூன்று சகோதரர்கள். அதில் இருவர் பெண்கள். ஒருவன் ஆண். இதில் ஒரு சிறுமியே மற்ற இருவருக்குமாகச் சேர்த்து கடிதத்தை எழுதி அனுப்பியிருந்தாள். அந்தக் கடிதத்தில் இருந்த விடயம் இதுதான், “ எனது தாத்தா எங்கள் அம்மாவுக்கும், எங்களுக்கும் செய்யும் விடயத்துக்காக தண்டிக்கப்பட வேண்டும். அவர் தவறு செய்கிறார் என்பதை, அவர் புரிந்து கொள்ள வேண்டும். மீண்டும் அவர் எங்களைத் தொடக்கூடாது - அது அருவருப்பானது…….” சிறுவர்களின் சோகமான விருப்பப்பட்டியலை Santa Claus & Co நிறுவனம் பொலிஸுக்கு அறிவிக்க, அரச சட்டத்தரணியின் ஒப்புதலுடன் பொலிஸார், அந்தச் சிறுவர்களின் வீட்டிற்குச் சென்று விசாரித்திருக்கிறார்கள். குழந்தைகளின் தாத்தா (67) நீண்ட காலமாக தனது பேத்திகளை (10 மற்றும் 12) கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும், குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகளில் தனது மருமகளை பல முறை பாலியல் வன்முறை புரிந்ததாகவும் தெரியவந்துள்ளது.. ஆக இந்த ஆண்டு அந்தச் சிறார்களின் கவலையான அவர்களது கிறிஸ்மஸ் விருப்பக் கோரிக்கையை கிறிஸ்மஸ் தாத்தா நிறைவேற்றி வைத்திருக்கிறார்.
  44. காதலா கட்சியா என்று ஒரு முடிவுக்கு வரவேண்டிய நேரமிது. சுமந்திரனை பின்பற்றி சிங்கள சம்பந்தி என விக்கினேஸ்வரனை விளித்தவர்கள், இப்போ அவரொருவர் சிங்கள சம்பந்தியாகிவிட்டார், அதைப்பற்றி யாரும் மூச்சு விடுவதில்லை. இதைத்தான் சொல்வது, "பழிப்பு படலேக்கை, சிரிப்பு சேலேய்க்கை," என்று.
  45. விநாயகர் ஜோதிட நிலையம் nsdetSporo 133 fi9479df38uabml,021c4e162a0:f9r07l9mée2cu7h3i · சாப்பிட்ட தட்டை கழுவுங்கள் (நீங்கள்) சாப்பிட்ட தட்டை கழுவ கற்றுக் கொடுங்கள்.... (உங்கள் உங்கள் பிள்ளைக்கு) இது எனது அப்பாவின் பழக்கம். அவர் சாப்பிட தட்டை அவரே எடுத்து கழுவி வைத்து விடுவார். "அப்பா இருக்கட்டும் நானே கழுவுறேன்" என்று சொல்லியும் கேட்பதில்லை. "ஏன் அப்பா ஒரு தட்டு தானே நான் கழுவ மாட்டானா " என்று கேட்டேன். "இல்ல... இது என் தந்தை எனக்கு சொல்லி கொடுத்தது". மூன்று வேலை சாப்பிடுறோம்னு வச்சுக்குவோம் அப்போ ஒரு நாளைக்கு 3 தட்டு அப்போ ஒரு மாசத்துக்கு 90 தட்டு ஒருத்தருக்காக எங்க அம்மா கழுவ வேண்டிருக்கு. நாங்களோ எங்க அப்பாவுக்கு 4 குழந்தை அப்போ எங்க அம்மா எங்க நாலு பேருக்கு மட்டும் ஒரு மாசத்துக்கு 4 * 90 = 360 தட்டு கழுவனும். நம்ம சாப்பிட தட்ட நாமே கழுவுனா எவ்ளோ வேலை சுமை அம்மாவுக்கு குறையும்னு எங்க அப்பா கேட்டதுல இருந்து தட்ட நானே கழுவ ஆரம்பிச்சுட்டேன் என்றார்... சில வீடுகளில் ஆண்கள் சாப்பிட தட்டை அப்படியே வைத்து விட்டு எழுந்து விடுவார்கள்.... மனைவிதான் கழுவி வைப்பாள். அதில ஒரு பெருமை. இதுல என்ன இருக்கோ தெரியாது... முடிந்தவரை தான் சாப்பிட தட்டை தானே கழுவுங்கள். நேரம் கிடைக்கையில் உதவி செய்யுங்கள். பாத்திரம் கழுவுவது என்பது அவ்வளவு ஈஸி இல்லை இது என்னுடைய அனுபவம்,... (வீட்டைக் கட்டிப் பார்.. கல்யாணம் முடித்து பார்) என்பது ஒரு பழமொழி.. . இந்த பழமொழியோட உன் வீட்டில் பாத்திரத்தை கழுவிப் பார். என்றும் சேர்த்து கொள்ளலாம். சமையல் கூட ஈசியாக செய்து முடித்துவிடலாம் ஆனால் பாத்திரங்கள் கழுவது என்றால் அது ஒரு பெரிய சுமை.. ஆண்கள் உங்கள் வீட்டில் ஒரு நாள் பாத்திரத்தை கழுவி பாருங்கள்.... பெண்களின் நிலை உங்களுக்கு நன்றாகவே புரியும்... படித்த பதிவு சற்று எனது கருத்தையும் சேர்த்து பதிவிட்டுள்ளேன். ..ஆம் !மனிதநேயம் மற்றும் சமத்துவம் இங்கிருந்து தான் ஆரம்பிக்கிறது........! 👍 கந்த கணேசதாஸக் குருக்கள்
  46. அறிவாளிகள் என்று சொல்லி திரியும் முட்டாள்களுக்கு சமர்ப்பணம் நம்ம ஆளு லண்டனில் படித்து கொண்டிருந்த சமயம் அது. அவருக்கு பீட்டர் என்று ஒரு பேராசிரியர் இருந்தார். அவருக்கு நம்ம ஆளை கண்டால் பிடிக்கவே பிடிக்காது. ஒரு சமயம் மதியம் அவர் உணவு அருந்தி கொண்டிருந்த மேசையில் நம்ம ஆள் அமர்ந்தார். நம்ம ஆளை வெருப்பேற்ற " பறவையும் ! பன்றியும் ஒன்றாக உட்கார்ந்து உணவு அருந்த முடியாது ! " என்று எல்லோரும் கேட்கும் மாறு சத்தமாக சொல்ல! அதற்கு அவர் ! நம்ம ஆளை பார்த்து! " சரி அப்படி என்றால் நான் பறந்து போகிறேன்! " என்று சொல்லி விட்டு வேறு மேசைக்கு சென்று விட்டார். பேராசிரியருக்கு அவமானம் ஆகி விட்டது. எப்படியாவது நம்ம ஆளை பழி வாங்க நினைத்த அவர் அப்பொழுது வந்த தேர்வில் கடினமான கேள்விகளை கேட்டு இருந்தார். ஆனால் நம்ம ஆள் நன்றாக படித்து இருந்ததால் சரியாக விடை அளித்து இருந்தார். திருத்திய விடை தாளை கொடுக்கும் முன் நம்ம ஆளை நான் ஒரு கேள்வி கேட்கிறேன் அதற்கு உன்னால் பதில் சொல்ல முடியுமா என்று கேட்க! நம்ம ஆள் சரி என்று சொல்ல! பேராசிரியர் " நீ நடந்து போகும் போது வழியில் உனக்கு பை கிடைக்கிறது அதில் நிறைய பணமும், அறிவும் இருக்கு! அதில் நீ எதை எடுப்பாய் என்று கேட்க! நம்ம ஆள் யோசிக்காமல் நான் பணத்தை தான் எடுப்பேன் என்று சொல்ல! பேராசிரியர் சிரித்து கொண்டே என்ன ! நானாக இருந்தால் அறிவை தான் தேர்ந்து எடுப்பேன் என்று சிரித்து கொண்டே சொல்ல ! அதற்கு நம்ம ஆள் அது சரி சார் பொதுவாக ஒருவர் தன்னிடம் இல்லாத ஒன்றை தானே தேர்ந்து எடுப்பார் என்று சொல்ல! வகுப்பில் எல்லோரும் சிரிக்க பேராசிரியருக்கு அவமானமாக போய் விட்டது. கோபத்தில் விடை தாளில் Idiot ( முட்டாள் ) என்று எழுதி விடை தாளை நம்ம ஆள் கிட்ட நீட்ட. நம்ம ஆள் வாங்கி பார்த்து விட்டு ஐயா உங்க கையொப்பம் போட்டு இருக்கீங்க ஆனா என் கிரேட் ( Grade) எவ்வளவு என்று போட மறந்து விட்டீர்கள்! என்று சொல்ல பேராசிரியர் திகைத்து போய் நின்றார்!
  47. ஒரு ஊரில் ஒரு அம்மா இருந்தார். அவருக்கு ஒரு மகன். வயசான காலத்தில் அம்மாவை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக உழைப்பு தேடி பட்டணத்துக்கு வந்தான் அந்தப் பையன். அங்கே இங்கே தேடினான் வேலை கிடைக்கவில்லை. கடைசியாக ஒரு ஆள் இந்த பையனை வேலைக்குச் சேர்த்துக் கொண்டார். முதலில் சிலநாள் எந்த வேலையும் கொடுக்கவில்லை. பிறகு ஒரு நாள் அவனை கூட்டிக்கொண்டு ஒரு எருமை மாட்டுத் தோலை அவனிடம் கொடுத்தார். ஏன் எதற்கு என்று கேட்காமல் இவன் அதை வாங்கிக்கொண்டான். அப்புறம் அவர் ஒரு நான்கு கோணிப் பைகளை எடுத்துக் கொண்டார். ஒரு ஒட்டகத்தை ஏற்பாடு செய்தார். புறப்படு போகலாம் என்றார். இவன் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. முதலாளி கூப்பிடுகிறார் சரி என்று புறப்பட்டான். இரண்டு பேரும் சேர்ந்து அந்த ஒட்டகத்தில் ஏறிக் கொண்டார்கள். பயணம் ஆரம்பமாகியது. போய்க் கொண்டே இருந்தார்கள். ஒரு பெரிய செங்குத்தான மலை வந்தது. ஒட்டகத்தை நிறுத்தினார். பையன் இறங்கினான். அவர் சொன்னார் இதோ பாருப்பா இந்த மாட்டுத் தோலை விரித்து அதிலே படுத்துக் கொள் என்றார். அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் முதலாளி சொல்கிறார் என்று படுத்து கொண்டான். உடனே அவர் அந்த எருமை தோலை நான்கு பக்கமும் எடுத்து ஒன்றாக்கி ஒரு கயிற்றினாலே கட்டினார். உள்ளே அந்த பையன். இவர் அவனை அப்படியே கட்டிப் போட்டு விட்டு விலகி வந்த ஒரு மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டார். அங்கே அவர் கட்டிப்போட்டது ஒரு எருமை மாடு மாதிரி தெரிந்தது. கொஞ்ச நேரத்தில் இரண்டு பெரிய கழுகுகள் அங்கே பறந்து வந்தன. அந்த எருமை தோல் மூட்டையை அப்படியே தூக்கி கொண்டு உயரப் பறந்து போய் அந்த செங்குத்தான மலை உச்சியில் போட்டன. அலகால் கொத்தின. உள்ளே இருந்து ஒரு பையன் வெளியே வருவதை பார்த்ததும் அந்த கழுகுகள் பயந்து ஓடிவிட்டன. அந்த பையன் அங்கே பார்க்கிறான் அவன் காலடியில் ஏராளமான நவரத்தினங்கள் கொட்டிக் கிடந்தன. கீழே நின்று கொண்டிருந்த முதலாளி ஏன் சும்மா நின்று கொண்டிருக்கிறாய். உன் காலடியில் கிடக்கிற கற்களைப் பொறுக்கி கீழே போடு என்றார். அவன் போட ஆரம்பித்தான். முதலாளி நான் எப்படி கீழே இறங்கி வருவது என்று கேட்டான். நீ முதலில் போடு அப்புறம் அதற்கு வழி சொல்கிறேன் என்றார். நான்கு சாக்கும் நிரம்பியது. சேர்த்துக் கட்டி ஒட்டகத்தின் முதுகில் ஏற்றிக் கொண்டு புறப்பட்டார் முதலாளி. முதலாளி என்று கத்தினான் அவன். முட்டாளே என் வேலையாட்களுக்கு எப்படி வேலை கொடுக்கிறேன் என்பது புரியவில்லையா? அந்த மலை உச்சியில் பின்னால் திரும்பிப் பார் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது புரியும் என்று சொல்லி விட்டு போய்விட்டார். பையன் திரும்பிப் பார்க்கிறான் அங்கு ஏராளமான எலும்புக்கூடுகள். ஆகா ஏமாந்து போய்விட்டோம் என்பதை புரிந்து கொண்டான். கொஞ்ச நேரத்தில் ஒரு கழுகு தலைக்கு மேலே பறந்து வந்தது. இவன் ரொம்ப சாமர்த்தியமாக ஒரே தாவலில் அதன் காலை பிடித்துக் கொண்டான். கழுகு பயந்துபோய் மேலே பறந்தது. கடைசியில் களைத்துப் போய் கீழே இறங்கத் தொடங்கிவிட்டது. இவன் தரையில் குதித்து தப்பித்துக் கொண்டான். கொஞ்ச நாள் கழித்து மறுபடியும் பழைய முதலாளியிடம் போய் வேலை கேட்டான். அவருக்கு ஆச்சரியம் இவன் எப்படி தப்பித்தான் என்று இருந்தாலும் இவன் வேற யாரோ அவன் சாயலில் இருக்கிறான் என்று நினைத்து வேலையில் சேர்த்துக் கொண்டார். இரண்டு நாள் கழித்து வழக்கம் போல நாலு சாக்கு எடுத்துக் கொண்டு அவனையும் அழைத்துக்கொண்டு அந்த மலைப் பக்கம் போனார். எருமை தோலை தரையில் விரித்து படுக்க சொன்னார். உடனே இவன் புத்திசாலித்தனமாக முதலாளி எனக்கு எப்படி படுப்பது என்று தெரியவில்லை. நீங்கள் கொஞ்சம் படுத்துக் காட்டினால் நன்றாக இருக்கும். அவரும் எதார்த்தமாக இதுகூட தெரியவில்லையா? என்று சொல்லிக் கொண்டு அதில் படுத்தார். அவ்வளவுதான் உடனே அவன் திடீரென்று அப்படியே சுருட்டி கட்டிவிட்டான். கொஞ்ச நேரத்தில் வழக்கம் போல் இரண்டு கழுகுகள் வந்து தூக்கிக் கொண்டு போய் அந்த நவரத்தின மலை உச்சியில் போட்டன. மூட்டையை பிரித்து முதலாளி வெளியே வந்தார். கீழே இருந்து பையன் கத்தினான். நேரத்தை வீணாக்காதீங்க. ரத்தினக் கல்லை எல்லாம் பொறுக்கி கீழே போடுங்க என்றான். அவருக்கு புரிந்து போனது இவன் பழைய ஆள்தான். சரி சரி மலை உச்சியில் இருந்து எப்படி கீழே இறங்கி வந்தாய். அதைச் சொல் முதலில் என்றார். முதலில் ரத்தினக் கல்லை பொறுக்கி கீழே போடுங்கள் அப்புறம் சொல்கிறேன் என்றான். வேற வழியில்லை பொறுக்கிப் போட்டார் நான்கு சாக்குகளிலும் கட்டிக்கொண்டு ஒட்டகத்தில் ஏறி புறப்பட்டான். முதலாளி கத்தினார். தப்பித்தது எப்படி என்பதைச் சொல்லாமல் போகிறாயே என்றார். உங்களுக்குப் பின்னால் இருக்கிற எலும்புக்கூடுகளின் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு அவன் போய்விட்டான். இது ஒரு துர்க்மெனிய நாட்டு கதை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.