Leaderboard
-
goshan_che
கருத்துக்கள உறவுகள்18Points19670Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3127Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்11Points88827Posts -
ரஞ்சித்
கருத்துக்கள உறவுகள்10Points8975Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/16/24 in Posts
-
யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
இந்த ஒருங்கிணைப்புக்குழுவில் பிரசன்னமாகியிருந்த எனது அண்ணாவுடன் கதைத்தேன். அவர் கூறியதன் சாராம்சம் பின்வருமாறு; 1. அருச்சுனா கேள்வி கேட்டது தப்பில்லை ஆனால் மற்றவர்க்ளுக்கு கதைப்பதற்கு சந்தர்ப்பமே வழங்கவில்லை. 2. அருச்சுனா சிலரை தனிப்பட தாக்கி கேள்வி கேட்டதுமல்லாமல் அவர்களின் பதவிக்கு அவசியமில்லாத தகமைகள் அவர்களிடம் உள்ளதா என தனிப்பட தாக்கியுள்ளார். 3. அன்றையநிகழ்ச்சிநிரலை சரியாக கொண்டு செல்லவிடாமல் மின்சாரசபைப்பிரச்சினையையும் சத்தியமூர்த்தியின் பிரச்சினையையும் மாத்திரம் கதைத்தார். 4. அருச்சுனா கேட்ட கேள்விக்கு பதில் கொடுக்கப்பட்டாலும் அருச்சுனா அதைக்கணக்கிலையே எடுக்கவில்லை. 5. இவ்வளவும்நடந்ததன் பின் தான் பின்வரிசையில் இருந்த கிராம அபிவிருத்திச்சங்கப் பிரதிநிதிகள் சத்தம் போட்டார்கள் அருச்சுனாவைப் பார்த்து வெளியே போகுமாறு. முன்வரிசையில் இருந்த அரச அதிகாரிகள் ஒருவரும் எதுவும் பேசவில்லை. அமைச்சர் எத்தனையோ தடவை சொல்லியும் அருச்சுனா கேட்கவில்லை. இனி அபிவிருத்திக்குரிய பணம் திரும்பிச் செல்வது பற்றி, 1. பிரதேச செயலகங்களால் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்படுவதில்லை மாறாக அரசியல் வாதிகளால் முன்மொழியப்படுபவைக்கே ஒதுக்கப்படும். 2. ஒதுக்கப்படும் பணம் பெரும்பாலும் ஜூனுக்குப் பிறகே வந்து சேரும். 3. அரசியல்வாதிகளால் முன்மொழியப்படும் திட்டங்கள் பெரும்பாலும் சாத்திய அறிக்கை சமர்ப்பிக்கப்படாததாகவும் சிலவேளைகளில் செய்யமுடியாததாகவும் இருக்கும். 4. ஒதுக்கப்படும் பணம் தெவையுடன் ஒப்பிடும் போது மிகச்சிறியதாகவே இருக்கும் (உ+ம் ஒருகிலோமீற்றர் தார் வீதிக்கு 80லட்சம் தேவை ஆனால் சில அரசியல்வாதிகள் 3கிலோமீற்றர் வீதிக்கு 5லட்சம் மட்டும் ஒதுக்கியுள்ளனர். 5. சிலதிட்டங்களுக்கு திறமையான உள்ளூர் ஒப்பந்தகாரர் இல்லை. அப்படி இருந்தாலும் ஒரேநேரத்தில் பலவேலைகளை எடுத்து எந்த வேலையையும் அந்தநேரத்திற்கு முடிப்பதில்லை. 6. அரசியல்வாதிகளின் திட்டங்களுக்கு சாத்திய அறிக்கை முதலே தயாரிக்கப்படாத்தால் பணம் ஒதுக்கப்பட்டபின்னரே எல்லாம் செய்யவேண்டும். சிலவேளைகளில் பல திணைக்களங்களின் ஒப்புதல் தேவைப்படும். எல்லா ஒப்புதலும் பெறுவதற்கிடையில் வருடம் முடிந்துவிடும் (எங்களுடைய திணக்களங்களின் வேகம் தெரியும் தானே). 7. பெரும்பாலான திணக்களங்களில் திறமையான தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கு தட்டுப்பாடு. 8. இருக்கும் தொழில்நுட்ப உத்தியோகத்தருக்கும்நவீன தொழில்நுட்பத்துக்கு தேவையான பயிற்சி வழங்குவது குறைவு. மேற்குறிப்பிட்ட காரணங்களால் அபிவிருத்தித் திட்டங்கள்நேரத்துக்கு முடிக்க முடிவதில்லை. அதைவிட பெரும்பாலான திட்டங்கள் கிராம அபிவிருத்திச் சங்கம் ஊடாகவே செய்யப்படுகிறது. அவர்களுக்கு சட்டரீதியான பொறுப்புக் கூறல் என்பது இல்லை. இதனால் சிலவேளைகளில் ஒதுக்கப்பட்ட பணம் திரும்பிச்செல்கிறது. கேள்வி கேட்பது இலகு செய்து முடிப்பது கடினம். இதற்கு மூளைசாலிகள் வெளியேற்றமும் ஒரு காரணம்5 points
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
தவறு, தனிச்சிங்களச் சட்டம் கொண்டுவரப்படாது இருந்திருந்தால் எந்த இரத்தமும் சிந்தப்பட்டிருக்காது. ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் பாதிக்கப்பட்டவன் மீதே குற்றம் காண விழைவது ஏனென்று கேட்கத் தோன்றுகிறது?5 points
-
நாமல் ராஜபக்ஷவின் சட்டமாணி பட்டம் : முறைக்கேடான வகையில் பரீட்சைக்கு தோற்றினாரா? குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு
சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று நாமலை அறிக்கை விடச் சொன்ன பொதுஜன பெரமுன முக்கியஸ்தர்களை நாமல் இப்பொழுது தேடிக் கொண்டிருப்பார் போல...................🤣.4 points
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
4 pointsஎன் பிறந்த நாளுக்கு வாழ்த்திய அனைவருக்கும் நன்றிகள்! பிறந்தவுடன் தூக்கிய நேர்ஸ் இனைப் பார்த்து கண்ணடித்தது நேற்று நடந்தது போல் இருக்கின்றது. அதற்குள் 50 வருடம் ஓடிப்போய் விட்டது!4 points
-
திண்ணை
4 pointsதிண்ணைக்குரிய script இன்னொரு தனிநபர் / நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது. அதனையே இங்கு மேலதிகமாக களத்தில் இணைத்திருந்தோம். பின்னாளில் அதன் புதுப்பித்தல் பிரச்சனைகளுடன் களத்தின் வேகத்தினை மிகவும் மந்தப்படுத்தியதன் காரணமாக திண்ணையை நீக்கியிருந்தோம். தற்போது திண்ணையில்லாத தளம் சீராகவும், மிகவும் குறைந்த அளவிலான சேர்வர் பிரச்சனைகளுடனும் தளமும் வேகமாக இயங்குகின்றது என்பதால் திண்ணையினை தவிர்ப்பது சிறந்தது என்றே தெரிகின்றது.4 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
4 points
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அர்ச்சுனாவின் ஏரியாவிலேயே கார்பெட் ரோடு என்ற பெயரில் காவோலை ரோடு போடுகின்றீர்களா............. என்ன துணிவு உங்களுக்கு...............3 points
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
நேற்று சண்டே சாயந்திரம் சாப்பிடலாம் என்று ஒரு ரெஸ்டாரண்ட் போனேன் !!!!!! பார்த்தா ஒரே கூட்டம் !!!!!!! எல்லா டேபிளும் ஆள் உட்கார்ந்து இருக்காங்க !!!! அதுவும் சோடி !!!! !சோடியா !!!!!!! எனக்கு பசி !!!!!!!!!!! மற்றும் கொஞ்சம் லைட்டா வயித்தெரிச்சல் ! உடனே போனை எடுத்தேன் !!!!!!!! நண்பனை அழைத்தேன் !!!!!! " மச்சான் உன் ஆளு இங்கதான் யாருடனோ !!!!!!!!! கடலை போட்டு கொண்டு !!!!!!! மன்னிக்கவும் சாப்பிட்டு கொண்டு இருக்கு !!!!! சீக்கிரம் வா மச்சான் !!!!!! " என்று சொன்ன மாத்திரம் தான் ! ரெண்டே நிமிசத்தில் !! ஆறு டேபிள் காலி !!!!!! நான் பொறுமையா அமர்ந்து சாப்பிட்டு வந்தேன் ! வயிறும் நிறைந்தது ! வயித்தெரிச்சல் குறைந்தது !3 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
இரண்டு பார்ட் டைம் வேலை செய்யும் போது.... இரண்டிலிலும் எங்கை விட்டது, எங்கை தொட்டது... என்பதில், வலு அவதானமாக இருக்க வேண்டும். ஒன்றில் சறுக்கினால்... மற்றது, சொதப்பி விட்டு விடும். 😂 அத்துடன்... எல்லாத்தையும், வலு உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருந்து... சவுண்டு குடுக்கிற நேரத்தையும், சரியாக கணித்து பக்காவாக செய்யும் போது தான்... எதிராளி சமாளிக்க முடியாமல், சித்தம் கலங்கி.. தலை தெறிக்க ஓடுவான். 🤣 எல்லா நேரமும், "சவுண்டு" கொடுத்துக் கொண்டு இருந்தால்... சொல்லும் விஷயம் சப்பெண்டு போயிடும். 😂 இது... தான், தொழில் ரகசியம்.3 points
-
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
@goshan_che… இண்டைக்கு “ஓவர் ரைம்” வேலை செய்ய வேண்டி வரப் போகுது. 😂2 points
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
2 points
-
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
இனவாதம் இல்லாத மக்களின் மொழியை கற்பதில் தவறில்லை.2 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஒரு நல்ல கருத்து. அதிலும் உங்கள் வக்கிர புத்தி. உங்கள் தப்பில்லை கொடுக்கப்பட்ட தொழில். வாங்கும் கூலிக்கு நீங்கள் இவ்வாறு தான் எல்லோரையும் ஒரே சாக்கில் போட்டு கூவவேண்டும். அதில் என்னையும் போட்டு கட்ட கடந்த பல வருடங்களாக நீங்கள் முயல்வதை யாழ் களம் அறியும். புலத்தில் தலைவர் நம்பிய ஒரு சிலர் செய்த தவறுகளை வைத்து முழுப் பேரையும் தாயக நேசிப்பிலிருந்து துரத்தும் உங்கள் எஜமானர்களின் பணிகள் தொடர்ந்து வெற்றிப்பாதையில் செல்ல உங்கள் போன்ற கூலிகளின் முதுகுகுத்திகள் தான் காரணம். தாயக மக்களுக்கு புலத்தில் இருந்து கிடைக்கும் ஆதரவுக் கரத்தை ஒடுக்கும் தடுக்கும் உங்கள் கூலிப்பணிக்கு நீங்கள் பெறும் கூலி உங்கள் பரம்பரையையே நாசமாக்கும். (நான் இவ்வாறு யாழில் எவருக்கும் எழுதியதில்லை. ஆனால் எங்கும் தமிழர்களை புலம்பெயர் தமிழர்களை செயற்பாட்டாளர்களை தேசியத்தை நேசிப்பவர்களை நீங்கள் தொடர்ந்து கலைத்து கலைத்து தாக்கி வருவதால் இவ்வாறு எழுதவேண்டிய நிலை. இனி மேல் முதுகுகுத்தியுடன் எந்த தகவல் பரிமாற்றத்தையும் வைத்துக் கொள்ள நான் விரும்பவில்லை. டொட்.)2 points
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
2 pointsஅதே! அடுத்தவரின் கல்வித்தகமை பற்றிபேசுபவர்கள், தங்கள் கடந்தகால, நிகழ்கால ஊழல்களை விசாரிப்பதற்கு ஒத்துழைப்பார்களா? அல்லது அவரைப்போல் பதவி விலகும் தைரியம்தான் உள்ளதா? மாண்புமிகு ஜனாதிபதி சொன்னால் சொன்னதுதான்!2 points
-
“என் நாட்டுக்கு அனுப்பி வையுங்கள்”: இலங்கை தமிழர் கோரிக்கை!
நீங்கள் சொல்வதில் எனக்கு எந்த முரண்பாடும் இல்லை. நானும் சுமார் 2 வருடங்கள் இந்தியாவில் வாழ்ந்துள்ளேன். ஆனால் நான் சொன்னது இலங்கை, இந்திய சராசரி மனிதர்களின் வாழ்க்கையை பற்றி. வாழ்க்கை சுட்டெண், கூடியது இலங்கை, ஆனால் பொருளாதார வாய்புகள் கூடியது இந்தியா. இது கிட்டதட்ட சுவிஸ்சில் வாழ்தல், அமேரிக்காவில் வாழ்தல் இடையான வித்தியாசம் போன்றது. தனி மனித அபிலாசைகள் வேறுபடும். பல இந்தியர்களும் இலங்கையில் சட்டவிரோதமாக வந்து இருக்கிறார்கள். ஆனால் எது வாழ சிறந்த இடம் என்றால் - இலங்கைதான் என்பார்கள் பெரும்பான்மையான இலங்கையர்.2 points
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
புலிகளையும் அசாத்தையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்கவோ அல்லது தலைவர் பிரபாகரனுக்கு அச்சுருத்தலாக இருந்ததால்த்தான் மாற்று இயக்க உறுப்பினர்களைப் புலிகள் கொன்றார்கள் என்று கூறுவதோ எல்லாம் ஒரே நோக்கத்திற்காகத்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் இதுவரை காலமும் தன்னைத் தமிழ்த் தேசியவாதியாகக் காட்டிக்கொண்டிருந்தவரின் உண்மை முகம் இதன் மூலம் வெளியே தெரிந்திருக்கிறது. சிரியாவின் முன்னாள் கொடுங்கோலனிற்கு புட்டினின் ஆதரவு இல்லாதிருந்தாலோ அல்லது அக்கொடுங்கோலன் மேற்குலகின் நண்பனாக இருந்திருந்தாலோ இந்தப் போலித்தேசியவாதி ஒருபோதுமே ஆசாத் எனும் கொடுங்கோலனை ஆதரித்தோ அல்லது அவனைத் தலைவருடன் ஒரே தராசில் வைத்தோ பார்த்திருக்க மாட்டார் என்பது திண்ணம். ஆக, அவர் ஆசாத்தை ஆதரிப்பதன் ஒரே காரணம் அவன் புட்டினின் நண்பன் என்பது மட்டும்தான். தீவிர மேற்குலக எதிர்ப்புடன் அதே மேற்குலகில் வாழ்ந்துகொண்டு சர்வாதிகாரி புட்டினை வழிபடும் இவர் போன்றவர்களிடமிருந்து இதனைத்தவிர வேறு எதனை எதிர்பார்க்க முடியும்? புலிகளால் தண்டிக்கப்பட்ட ஏனைய அமைப்புக்களின் செயற்பாடுகள் இவரைப் பொறுத்தவரையில் நியாயமாகப் படுகின்றதா? அல்லது அந்த அமைப்புக்களின் செயற்பாடுகள் புலிகளின் தலைமையின் பாதுகாப்பிற்கு அச்சசுருத்தலாக இருந்தது என்று இவரே நம்பும் சதிக்கோட்பாட்டிற்கு அப்பால் அவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் தமிழர்களின் நலனுக்கும் அவர்களின் இருப்பிற்கும் அச்சுருத்தலாக இருந்தன என்பதை இவர் அறிவாரா? இந்தியாவின் பின்புலத்திலிருந்து கொண்டு தமிழ்த்தேசியத்திற்கு எதிராகவும், அதனை முன்னெடுத்த புலிகளுக்கெதிராகவும் நாசகார சதிகளில் ஈடுபட்ட மாற்று இயக்கத்தவர்களை புலிகள் கொன்றார்கள். இனத்தின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த இவ்வமைப்புக்கள் இந்திய ஆக்கிரமிப்புப் படையோடு இணைந்து செயலாற்றியதே அவர்களின் தண்டனைகளுக்குக் காரணமாக இருந்தன என்பதை இவர் அறியாரா? இந்தியப் படைகளின் வருகைக்கு முன்னரான காலத்திலேயே புலிகளைப் பலவீனப்படுத்த இந்திய உளவுத்துறையுடன் டெலொ இணைந்து இயங்கியதே? டெலோ அமைப்பின் போராளிகளைப் புலிகள் இயக்க மோதல்களில் கொன்றது உண்மை. ஆனால் குடும்பங்களை இழுத்துச் சென்றார்கள், படுகொலை செய்தார்கள் என்பது இந்தப் போலித்தேசியவாதியின் கற்பனை. சரி, ஆசாத்துடன் தலைவரை ஒப்பிடவேண்டிய தேவை என்ன? இந்திய உளவுத்துறையுடனும், இலங்கை அரசுடனும் சேர்ந்தியங்கிய மாற்று இயக்கங்களைப் புலிகள் தண்டித்தார்கள், போராளிகளைக் கொன்றார்கள். இவை எல்லாமே தமிழர்களின் போராட்டம் பலவீனப்படுத்தப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே நடத்தப்பட்டவை. தமிழ் மக்களின் நலன்களுக்கெதிராகவும், இருப்பிற்கெதிராகவும் எதிரிகளுடன் சேர்ந்து அவர்கள் செயற்பட்டபோது புலிகளுக்கும் வேறு தெரிவுகள் இருந்திருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு. இதற்குத் தலைவரின் பாதுகாப்பு அச்சுருத்தலே காரணம் என்று இவர் பிதற்றுவது முழுக்க முழுக்க ஆசாத்தையும், பின்னால் நிற்கும் புட்டினையும் நியாயப்படுத்தத்தான் என்பது எனது அசைக்கமுடியாத நம்பிக்கை. ஏனென்றால் இன்று புட்டினும் ஆசாத்தும் செய்வது தமது அதிகாரத்திற்கும், பலத்திற்கும், அரசியல் எதிர்காலத்திற்கும், நலன்களுக்கும் எதிராக இருப்பார்கள் என்று தாம் எண்ணுவோரை வகை தொகையின்றி அழிப்பதுதான். இதில் பொதுமக்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என்று எவருமே விதிவிலக்கில்லை. தமிழ் மக்களை புலிகள் அடிமைகளாக ஒருபோதும் நடத்தியதில்லை. தமிழர்களின் விடுதலைக்காகப் போராடிய புலிகளுக்குத் தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தவேண்டிய தேவை எங்கிருந்து வந்தது என்பதை இந்தச் சதிக்கோட்பாட்டு கற்பனைவாதிதான் விளக்க வேண்டும். ஆனால் ஆசாத் ஒரு சர்வாதிகாரி, தனது இருப்பிற்காக தனது நாட்டு மக்களையே இரசாயணக் குண்டு உட்பட பல கனர ஆயுதங்களைக் கொண்டு கொன்றவன். இவனது ஆட்சிக்காலத்தில் மட்டுமே கொல்லப்பட்ட அப்பாவிச் சிரியர்களின் எண்ணிக்கை ஐந்து இலட்சம். இவனது கொலைகளுக்கு தொடர்ச்சியாக உறுதுணை வழங்கி வந்தது இன்னொரு சர்வாதிகாரியான புட்டின். ஆக இச்சர்வாதிகரிகளோடு தலைவரை ஒப்பிட்டு இவர் பேசுவதன் ஒரே நோக்கம், தலைவர் மீதும், புலிகள் மீது கறை பூசுவது அல்லது ஆசாத்தைற்கும், புட்டினுக்கும் வெள்ளை அடிக்க முனைவது. இச்சதிக்கோட்பாட்டு கற்பனைவாதியின் கருத்திற்குப் பச்சை குத்தியவர் பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஆனால் ஒரு விடயம், இப்பச்சை குத்தலுக்கான ஒரே காரணம் ஆசாத்திற்கும் புட்டினுக்கும் இடையே இருக்கும் நட்புத்தான். இத்தளத்தில் ரஸ்ஸியா - உக்ரேன் மோதல் குறித்த முன்பொரு பதிவில் புலிகளை இந்தியா அழித்தது சரிதான் என்று தனது ரஸ்ஸிய சார்பு நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்க இங்கு பச்சை குத்தியவர் வெளிப்படையாகவே எழுதினார். அதாவது இந்தியாவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புலிகளை இந்தியா அழித்தது சரியானதுதான் என்று கூறியிருந்தார். இவர்கள் போன்றோரின் உண்மை முகம் அவப்போது வெளியே வருகிறது. இதைத்தவிர சொல்வதற்கு ஒன்றுமில்லை.2 points
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
நான் அர்ச்சனா ஆதரவாள்ன் ..இல்லை...செய்வது தவறாக இருக்கலாம்...நான் ஊரில் நின்றநேரம் சில அலுவல்களுக்காக் அலுவலகங்கள் சென்றபோது..கண்டவை ...அலுவலர் திமிர்த்தனம்.. அலட்சியம்..ஊழல்...பொதுநலநோக்கு கிடையவே கிடையாது..சுயநலம் ...எத்தனையோ திட்டங்கள் இவர்களின் அசமந்தப் போக்கால் ..அரைகுறையாக கிடக்கின்றன...போட்டிமனப்பான்மை கிடைக்கின்ற காசுகளும் திரும்பிவிடுகின்றன.. இப்படி பலவற்றை கண்டேன்...என்னைப் பொறுத்தவரை அர்ச்சனாவின் ..இந்த நேரடிக் கேள்விகள் ..வடகிழக்கில் உண்மையான அபிவிருத்தி நடைபெற உதவலாம்..ஆனால் அர்ச்சனா சபை நாகரீகம் பேணவேண்டும் என்பதே எனது விருப்பம்2 points
-
பதவியில் இருந்து விலகினார் சபாநாயகர்
2 pointsசபாநயகரின் கல்வி தகமை குறித்த குற்றசாட்டை அடுத்து அவர் பதவி விலகியுள்ளார். இது ஒரு நல்ல மாற்றம். பாராட்டப்பட வேண்டியது. ஏனெனில் கடந்த காலத்தில் நாமல் ராஜபக்சாவின் கல்வி தகமை குறித்து எழுந்த குற்றச்சாட்டிற்கு அவர் இதுவரை பதில் அளிக்கவும் இல்லை. பதவி விலகவும் இல்லை. அந்த வகையில் தமது கட்சிக்காரராக இருந்தாலும் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுப்போம் என ஜனாதிபதி அனுரா தெரிவித்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. தோழர் பாலன்2 points
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
ஆனால் காவோலை எத்தனை நாட்கள் நின்று பிடிக்கும், ரிஷி............ அத்துடன் காவோலைத் துண்டுகள் உக்கிப் போய்விட, அந்த இடத்தில், உள்ளே, வெற்றிடம் உருவாகிவிடும் அல்லவா, அதுவே பின்னர் முழு அமைப்பின் ஆதாரத்தையும் கெடுத்தும் விடலாம்.................. இது என்னவென்று எனக்குத் தெரியவில்லை.........கேட்டுப் பார்ப்போம்.............. அர்ச்சுனா - கிஷோர் என்று ஒன்றும் இருக்கின்றதா..............🫣. அந்த அதிர்வைக் கட்டுப்படுத்தவே காவோலையைப் போட்டோம் என்று சொல்லப் போகின்றார்கள், அண்ணா.......🤣. இது ஒரு பொன்னான சந்தர்ப்பம்............ அவர் சாவகச்சேரி மக்களுக்கு ஒரு கைமாறு செய்தே தீருவேன் என்று ஒற்றைக்காலில் வேறு நிற்கின்றார்.............🤣.1 point
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
சிங்கன் கிண்டி கிழங்கெடுக்கப்போறார்😆1 point
-
காவோலைக்கு மேல் கற்கள் போடப்பட்டு அமைக்கப்படும் காப்பற் வீதி
அர்ச்சுனாவின் பெயரைக் கேட்டதுவே அதிருதில்ல.1 point
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
அனுர வின் வலு எண்டு சொல்லவே மாட்டம். வாலு எண்டு சொல்லுவம்🤣 கலாநிதியா, மருத்துவரா (வைத்தியகலாநிதி). ஜெயக்கொடியும் படிச்சு முடிக்காமல் எஞ்சினியர் எண்டு போட்டவராம் எண்டு கதை ஓடுது. எஞ்சினியர் என்பதை பெயருக்கு முன்னால் போடும் எனக்கு தெரிந்த ஒரே நாடு இலங்கை😆 சபாநாயகர் கலாநிதி என்பதால் பாராளுமன்றத்துக்கு மதிப்பு கிடைக்காது அண்ணை. உறுப்பினர் நடக்கும் விதம்தான் அதை தீர்மானிக்கும்.1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
🤣............... உங்களுக்கும், எனக்கும் பொதுவான ஒரு பிரச்சனை இருக்கின்றது என்று நினக்கின்றேன். நாங்களும் இருவரும் தேவைக்கு அதிகமாகவே கதைகள், கவிதைகள் வாசிக்கின்றோம் போல..................😜.1 point
-
வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்ட பணம் ; பாதிக்கப்பட்டவரின் முறைப்பாட்டை ஏற்க மறுத்த பொலிஸார்
1 pointhttps://observablehq.com/@nuuuwan/sl-police1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மனித வாழ்வின் நிஜம் இது தான் ....அரசியல் ,ஆத்மீகம்,உத்தியோகம் என எத்தனை புறக்காரணிகள் மனிதனை ஆட்டிப்படைக்கின்றது ..பழமையவர்களின் தனிமனித கருத்தாதிக்க தொடர்ச்சிகள்,புதியவர்களின் கருத்தாதிக்க சிந்தனைகள் ...தாங்காதடா சாமி ...புத்தரை மாதிரி துறவறம் சென்று ஒழித்து வாழ நான் புத்தன் அல்ல மனிதன் 😅1 point
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
இன்றைய நிலையில் தேவை தான் காரணம்,..... 1,. பட்டதாரிகள். எண்ணிக்கை அதிகரித்து விட்டது ஒவ்வொரு வீட்டிலும் 10. ஆவது 12 ஆவது வகுப்புகள் படித்தவர்களும்கூட எண்ணிக்கையில் மிக அதிகம் 2,... சபாநாயகர் 10 வகுப்பு படித்தவன் வர முடியுமா ??? அப்படி வந்தால் வெளியில் இருக்கும் பட்டதாரிகள். சபாநாயகர் 10 வகுப்புகள் கூட. படிக்க வில்லை என்பார்கள் 3,..எனவே… கலாநிதி சபாநாயகர் ஆக வேண்டும் 4, .தமிழ் மக்கள் 1977 இல். எங்கள் தலைவர்கள் சட்டத்தரணிகள் படித்தவர்கள். என்பார்கள் ......அவர்கள் செய்வது பற்றி கவலைப்படுவதில்லை ....படித்தவர்கள். படித்தவர்கள். எங்கள் தலைவர்கள் என்பார்கள் 🤣 5,... இன்று 2024. இல். சபாநாயகர் கலாநிதி ஆக இருப்பது நல்லது அப்ப. தான் பாராளுமன்றம் சமூகத்தால். மதிக்கப்படும் ......சமூகம் படித்த சமூகம் பாராளுமன்றமும். அப்படி தான் இருக்கும் நீங்கள் சபாநாயகராக போட்டி போட. போகிறீர்களா ?? 🤣1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
👍................ ஒரு சாதாரண மனிதனின் சாதாரண வாழ்க்கையையே அந்த மனிதனுக்கு சம்பந்தமும் ஆர்வமும் இல்லாத எத்தனை எத்தனை புறக்காரணிகள் தீர்மானிக்கின்றன.....................😌.1 point
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
கல்வித் தகைமைகள் பிரத்தியேகமாக தேவை இல்லை. சபையை கொண்டு நடத்தக் கூடிய ஆற்றலும், ஆளுமையும், மிதமான பொது அறிவும் போதும் என நினைக்கின்றேன். முன்னைய சபாநாயகர் இடைச் செருகலாக போலியான கலாநிதி பட்டம் போட்டதுதான் பிரச்சினையாகி விட்டது.1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அந்த மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை ..அதை தீர்மாணிப்பது அமெரிக்கா ,ரஸ்யா....மத்திய கிழக்கில் இவ்வளவு காலமும் சியா தீவிரவாத அமைப்புக்களும் ஈரான் ,சிரியா போன்ற சியா அரசுகளும் ஆதிக்கம் செலுத்தினர் ...அவர்களின் ஆதிக்கம் குறைந்து விட்டது...இனி சன்னி இஸ்லாமிய தீவிரவாதம் ஆதிக்கம் செய்ய போகின்றது இதில துருக்கியா? சவுதியா தலமை எண்ட சிக்கல் வரும் மீண்டும் அங்கு தீவிரவாதம் தொடங்கும்...தியட்டர் ஒவ் ஒப்பெரெசன் எந்த நாடு என தெரியவில்லை....சில சமயம் ஈரான் ஆட்சியும் கலைக்கப்படலாம்...1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointகைதுசெய்யப்படும் தமிழ் இளைஞர்கள் மீது இராணுவம் மேற்கொண்ட சித்திரவதைகள் கேசிவப்பிள்ளை வழங்கிய வாக்குமூலத்தினூடாக அவர் மீது நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்தன. "எனது கைகள் இரண்டையும் பின்னால் இழுத்துக் கட்டினார்கள். பின்னர் என்னைக் கைகளில் கட்டி கூரையில் இருந்து தொங்கவிட்டார்கள். பின்னர் கண்களுக்குள் மிளகாய்த்தூளை அள்ளிக் கொட்டினார்கள். எனது ஆடைகளை முற்றாக களைத்துவிட்டு எனது பிறப்பு உறுப்பு முதற்கொண்டு உடல் முழுவதும் மிள்காய்த்தூளை அள்ளித் தேய்த்தார்கள். பின்னர் பாதங்களில் ஆணிகளை நுழைத்து பிளாத்திக்குக் குழாய்களால் அறைந்தார்கள். ஆணிகள் ஏறிய துளைகளுக்குள் மிளகாய்த்தூளை அடைத்தார்கள். இரவு 8 மணிமுதல் 12 மணிவரை என்னைக் கட்டித் தொங்கவிட்டுச் சித்திரவதை செய்தார்கள். மறுநாளும் என்னை அதேபோன்று கொடுமைப்படுத்தினார்கள். காலை 11 மணிமுதல் மாலை 4 மணிவரை தொங்கவிட்டு கொடுமைப்படுத்தினார்கள். பின்னர் நன்கு பழுக்கக் காய்ச்சிய இரும்புக் கம்பியை எனது பின்புறத்தில் அழுத்தி பிட்டங்களை எரித்தார்கள். அவர்கள் என்னை விடுதலை செய்தபோது என்னால் நடக்கவோ கைகளை அசைக்கவோ முடியவில்லை" என்று கூறியிருந்தார். ஒரு வாரத்தின் பின்னர் விடுவிக்கப்பட்ட கேசிவப்பிள்ளை மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். நீண்டநேரம் கைகளில் கட்டப்பட்டு கூரையிலிருந்து தொங்கவிடப்பட்டமையினால் அவரின் கைகளில் இருந்த நரம்புகள் நிரந்தரமாகவே பாதிக்கப்பட்டுப் போயிருந்ததை வைத்தியர்கள் அவதானித்தார்கள். சுமார் 3 மாதங்களும் 20 நாட்களும் அவரை வைத்தியசாலையில் வைத்துப் பரமாரிக்க வேண்டி ஏற்பட்டது. வைத்திய உதவிகளுக்குப் பின்னரும் அவரது வலது கரம் இயங்கமுடியாது செயலற்றுப் போனது. இதனால் பெரிதும் அங்கவீனமடைந்த அவர் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இடதுகரத்தால் தனது வேலைகளைப் பார்த்துக்கொள்ள நிர்ப்பந்திக்கப்பட்டார். கேசிவப்பிள்ளையினை பராமரித்துவந்த மட்டக்களப்பு வைத்தியசாலை வைத்தியர்கள் பிரஜைகள் குழுவிற்கு வழங்கிய வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை அவர்கள் மிகக்கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டதை தம்மால் உணர்ந்துகொள்ள முடிந்ததாகக் கூறியிருந்தனர். அவரது பின்புறத்திலும், கைகளிலும் கடுமையான எரிகாயங்கள் காணப்பட்டதாக அவர்கள் கூறினர். கைகளின் இருவிடங்களில் எலும்புகள் முற்றாகச் சேதப்படுத்தப்பட்டுக் காணப்பட்டமையினால் அவரால் கைகளைப் பாவிக்க முடியாது போய்விட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். சர்வதேச மன்னிப்புச்சபை அக்காலப்பகுதியில் சேகரித்து வந்த பல தமிழர்களின் வாக்குமூலங்களில் ஒன்றுதான் கேசிவப்பிள்ளையின் வாக்குமூலமும். மட்டக்களப்பு பிரஜைகள் குழு தலைவர், பா.உ. பிறின்ஸ் காசிநாதர் 1985 1985 ஆம் ஆண்டு கொழும்பில் இடம்பெற்ற மனிதவுரிமைகள் மாநாட்டில் பேசிய மட்டக்களப்பு மாவட்ட பிரஜைகள் குழுத் தலைவர் பிறின்ஸ் காசிநாதர், மட்டக்களப்பில் அடையாளம் காட்டப்படாத வான்களில் விசேட அதிரடிப்படையினரால் கடத்திச் செல்லப்பட்ட பல இளைஞர்கள் காணாமற்போயுள்ளதாகத் தெரிவித்தார். "கடந்த மாதத்தில் மட்டும் எனது பாடசாலையிலிருந்து மூன்று சிறுவர்களை அதிரடிப்படை கைதுசெய்து காணாமலாக்கியிருக்கிறது. அவர்களைத் தேடி பிணவறைக்கும் நான் சென்றுவந்தேன். அங்கு மூன்று சிறுவர்களின் உடல்கள், தலைகள் முற்றாக நசுக்கப்பட்ட நிலையில் கடுமையாகச் சிதைக்கப்பட்டுக் கிடந்ததை நான் கண்டேன். ஆனால் அவர்கள் யாரென்று எனக்குத் தெரியாது, பாவம், யார் பெற்ற பிள்ளைகளோ? ஆனால் நான் தேடிச் சென்ற எனது பாடசாலை மாணவர்கள் இல்லை அவர்கள்" என்று கூறினார். விசாரணைகளின்போது இராணுவத்தால் நடத்தப்படும் மிருகத்தனமான சித்திரவதைகள் குறித்து வடக்குக் கிழக்கிற்குப் பயணம் செய்த வெளிநாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அவப்போது எழுதிவந்தார்கள். 1985 ஆம் ஆண்டு தை மாதம் 2 ஆம் திகதி வெளிவந்த லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையில் எழுதிய ட்ரெவோர் பிஷ்லொக், "யாழ்ப்பாண வைத்தியசாலையில் பணியாறும் பல வைத்தியர்கள் இராணுவத்தினரின் கடுமையான சித்திரவதைக்கு அகப்பட்டு அங்கு சிகிச்சைக்காக வந்த பல இளைஞர்களைப் பராமரித்திருக்கிறார்கள். மணல் நிரப்பிய பிளாத்திக்குக் குழாய்களால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் பல இளைஞர்கள் வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். தலைகீழாகக் கட்டிக் கால்களில் தொங்கவிடப்பட்டுத் தாக்கப்பட்ட பலரின் பாதங்கள் முற்றாக முறிவடைந்து காணப்பட்டன" என்று எழுதுகிறார். மேலும், அங்கு பணியாற்றிய வைத்தியர் ஒருவரின் கூற்றுப்படி, "ஒவ்வொரு வாரமும் இவ்வகையான சித்திரவதைக்குள்ளான ஐந்து அல்லது ஆறு இளைஞர்களுக்கு நான் வைத்தியம் செய்திருக்கிறேன். ஆனால் மேலும் பல இளைஞர்கள் அச்சத்தினாலும், நெடுந்தூரம் பயணித்து இங்கு வரவேண்டியிருப்பதனாலும் சித்திரவதைக் காயங்களுடனேயே வாழ்ந்து வருகின்றனர்" என்று அவர் கூறினார்.1 point -
சிங்கள மொழி கற்கை குறித்து வடக்கு ஆளுநரின் கருத்து!
கதைப்பார்களய்யா அதுவும் தமிழில் கிண்டலும் அடிப்பார்கள். என் மேலதிகாரி ஒரு சிங்களவர், அவரின்கீழ் வேலைபார்க்கும் ஒரு தமிழர், அவரும் ஒரு அதிகாரி, ஏதோ சந்தேகம் கேட்டார். “அதுங் நான் என் மீசை பத்துதுங் கென்று கவலைப் படுறேங் நீங்க சுருட்டுப் பத்த நெருப்புங் கேக்கிறது”.1 point
-
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointலலித் அதுலத் முதலி முடுக்கிவிட்ட பாரிய கைதுகளும் சித்திரவதைகளும் 1985 ஆம் ஆண்டு ஜெயார் - லலித் கூட்டு தமிழர்கள் மீது மேற்கொண்டு வந்த வகைதொகையற்ற கைதுகள், சித்திரவதைகள், படுகொலைகள், தாயகத்திலிருந்து தமிழ்மக்களைப் பலவந்தமாக வெளியேற்றியமை போன்றவற்றினால் தமிழ் மக்கள் தாம் இவற்றிற்கெதிராகப் போராட வேண்டும் என்கிற உத்வேகத்தை ஏற்படுத்தியிருந்ததுடன் போராளி அமைப்புக்களுக்கான புதிய உறுப்பினர்களைத் தேடும் களத்தையும் விரிவுபடுத்தியிருந்தது. சித்திரையில் இனப்பிரச்சினையின் இன்னொரு வடிவமான முஸ்லீம் தரப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் இனப்பிரச்சினையினை அது மேலும் சிக்கலாக்கியிருந்தது. வடக்குக் கிழக்கில் வாழ்ந்த தமிழர்களின் அனைத்துக் குடும்பங்களிலும் அரசால் முடுக்கிவிடப்பட்ட கைது நடவடிக்கைகள் கடுமையான தாக்கத்தினை ஏற்படுத்தியிருந்தன. இளவயது ஆண்களைக் குடும்பங்களில் வைத்துப் பாதுகாப்பதென்பதே அவர்களுக்குப் பெரும் சுமையாகிப் போனது. கிராமம் கிராமமாகச் சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டுவந்த இராணுவம், ஒலிபெருக்கிகள் ஊடாக 18 முதல் 35 வயது வரையான இளைஞர்களை தாம் கட்டளையிடும் இடங்களுக்கு வந்து கூடுமாறு கூறியதுடன், அவர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று இழுத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தது. இவ்வாறு கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட ஆண்களில் சிலர் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின்னர் விடுவிக்கப்பட இன்னும் பலர் காணமலாக்கப்பட்டிருந்தனர். திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளுக்கு அக்காலப்பகுதியில் என்னால் செல்வதற்கான வாய்ப்புக் கிடைத்திருந்தது. என்னுடன் பேசிய பல தமிழப் பெற்றோர்கள் தமது ஆண் பிள்ளைகளை வீட்டில் வைத்திருப்பதைக் காட்டிலும் அவர்கள் புலிகள் இயக்கத்தில் இணைவதன் மூலமோ அல்லது வெளிநாடு செல்வதன் மூலமோ பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று கூறியிருந்தனர். ஜெயவர்த்தனவின் அரசு மீதும் அவரது இராணுவம் மீதும் கடுமையான வெறுப்பினைத் தமிழர்கள் கொண்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டு தை மற்றும் மாசி மாதங்கள் கடுமையான சுற்றிவளைப்புக்களையும், பெருமளவிலான தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதையும் வழமையாகக் கொண்டிருந்தது. தை மாதம் 2 ஆம் திகதி வடமராட்சியின் அல்வாய், திக்கம், நாவலடி, இறுப்பிட்டி ஆகிய பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் 18 முதல் 35 வயது வரையான ஆண்களை பொது இடமொன்றில் கூடுமாறு ஒலிபெருக்கியில் அறிவித்துவிட்டு அப்படிக் கூடியவர்களில் 200 பேரை தம்முடன் இழுத்துச் சென்றனர். மூன்று நாட்களுக்குப் பின்னர் தை 5 ஆம் திகதி யாழ்ப்பாணத்தின் கரையோரப் பகுதிகளைச் சுற்றிவளைத்துக்கொண்ட இராணுவத்தினர் மேலும் 500 இளைஞர்களை கைதுசெய்து விசாரணைகளுக்கென்று அழைத்துச் சென்றனர். மட்டக்களப்பில் 1000 இளைஞர்களும், திருகோணமலையில் 2000 இளைஞர்களும், அக்கரைப்பற்றில் 400 இளைஞர்களும் இதே காலப்பகுதியில் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டிருந்தனர். 1985 ஆம் ஆண்டின் முதற்காற்ப்பகுதியில் மட்டும் 52 சுற்றிவளைப்புக்களை மேற்கொண்டிருந்த இராணுவத்தினர் குறைந்தது 10,000 தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்து தம்முடன் இழுத்துச் சென்றிருந்தனர். லலித் பாராளுமன்றத்தில் இக்கைதுகள் குறித்துப் பேசும்போது, "அவர்களைச் சந்தேகத்தின்பேரிலேயே கைதுசெய்கிறோம், ஆனால் விசாரணைகளின் பின்னர் அவர்களை விடுவித்துவிடுவோம்" என்று மிகச் சாதாரணமாகக் கூறினார். ஆனால் எதற்காக இவ்வாறான பாரிய எண்ணிக்கையில் தமிழ் இளைஞர்களைக் கைதுசெய்துவருகிறீர்கள் என்று கேட்கப்பட்ட போது "எமது பிரச்சினை என்னவென்றால் பயங்கரவாதிகளை அழிப்பதுதான். ஆனால் அவர்களைக் கண்டுபிடிப்பது எங்கணம்? நாட்டினை நேசிக்கும் பிரஜைகளிடமிருந்து பயங்கரவாதிகளைப் பிரித்தறிவது எங்கணம்? மொத்தத் தமிழர்களை கைதுசெய்து விசாரித்தால் ஒழிய பயங்கரவாதிகளை எம்மால் அடையாளம் கண்டுகொள்வது சாத்தியமில்லை" என்று அவர் கூறினார். பாரிய கைதுகளின் சூத்திரதாரியாகவிருந்த லலித் அதுலத் முதலி ஒவ்வொரு தமிழனையும் தான் சந்தேகிக்கப்படும் பயங்கரவாதி என்று எண்ணும் நிலையினை ஏற்படுத்தியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இவ்வாறு கைதுசெய்யப்படும் ஒவ்வொரு தமிழருக்கும் கைதுசெய்யப்பட்ட நாளிலிருந்து விடுவிக்கப்படும் நாள்வரைக்கும் விசாரணை என்கிற பெயரில் நடத்தப்படவிருக்கும் கடுமையான சித்திரவதைகளும் கடுமையான அச்சத்தினை ஏற்படுத்திவந்தது. லலித் அதுலத் முதலியைப் பொறுத்தவரை கைதுசெய்து விசாரிப்பதென்பது மிகச் சாதாரணமான விடயமாகத் தெரிந்தது. "அவர்களை கைதுசெய்து கொண்டுவருகிறோம், விசாரணைகளின் பின்னர் விடுவித்து விடுவோம், அவ்வளவுதான்" என்று அவர் மிகச்சாதாரணமாக இந்த நடவடிக்கைகளை நியாயப்படுத்தி வந்தார். தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்படும் விதம், அவர்கள் மீது விசாரணை என்கிற பெயரில் கட்டவிழ்த்து விடப்பட்ட சித்திரவதைகள், அவர்கள் விடுவிக்கப்பட்ட போது அவர்கள் அனுபவித்த இருந்த உடல், உளரீதியான பாதிப்புக்கள் என்பன தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகவும் கொடூரமானவையாகக் காணப்பட்டதுடன் அவர்களைப் பெரிதும் அச்சத்திலும் ஆழ்த்தியிருந்தன. மகேந்திரா கேசிவப்பிள்ளை எனும் 23 வயது இளைஞன் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் விஞ்ஞான பிரிவில் கல்விபயின்று வந்தவர். தை மாதம் 14 ஆம் திகதி தனது பெற்றோருடன் தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக அவர் கிழக்கிற்கு வந்திருந்தார். பொங்கல் முடிவடைந்து மீளவும் யாழ்ப்பாணப் பக்கலைக் கழகத்திற்குத் திரும்புவதற்காக அனுமதிப் பத்திரம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் மட்டக்களப்புப் பொலீஸ் நிலையத்திற்கு அவர் சென்றார். பொலீஸ் நிலையத்தில் அவரை விசாரணைக்கென்று அழைத்துச் சென்ற விசேட அதிரடிப்படையினர் அவரை காலில் சுட்டுக் காயப்படுத்தியதுடன் களுவாஞ்சிக்குடி விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்று கடுமையாகத் தாக்கிச் சித்திரவதை செய்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மட்டக்களப்பு விசேட அதிரடிப்படை முகாமிற்கு இழுத்துச் சென்றனர். "என்னை அவர்கள் ஒரு பயங்கரவாதி என்றே அழைத்தனர். நான் என்னைப் பயங்கரவாதி என்று ஏற்றுக்கொண்டு இராணுவப் பயிற்சிக்காகவே யாழ்ப்பாணம் செல்வதாக ஒத்துக்கொள்ளுமிடத்து விடுதலை செய்வதாக அவர்கள் கூறினர். ஆனால் நான் பிடிவாதமாக நான் ஒரு பல்கலைக்கழக மாணவன் என்றும், பயங்கரவாதி அல்ல என்றும் கூறினேன்" என்று சர்வதேச மன்னிப்புச்சபைக்கு வழங்கிய தனது வாக்குமூலத்தில் கேசிவப்பிள்ளை கூறியிருந்தார்.1 point -
காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்
இதை யூட் அண்ணா @கற்பகதரு பத்து வருடத்துக்கு முன் எழுதிவிட்டார். அப்போ அவரோடு முரண்டு பிடித்த நீங்கள் இப்போ அதே வழிக்கு வந்துள்ளீர்கள். காலம் தாழ்தியாவது சரியான பஸ்சில் ஏறியுள்ளீர்கள். உங்கள் நிலைப்பாடு சரியானதுதான். ஆனால் வழித்தால் மொட்டை வைத்தாம் குடுமி என்பது போல் கண்ணை மூடி கொண்டு கயவர்களை நம்பினால் (சீமான், அனுர) மேலும் தீமையே விளையும்.1 point
-
புதிய சபாநாயகராக கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன
நீங்கள் சொல்லாவிட்டாலும்…. எங்களுக்கு யார், யார் எந்த குரூப் என்று தெரியும். 🤣1 point
-
பிரதமரின் அறிவிப்பால் ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு நெருக்கடி
இவவுடைய சேர்ட்டிபிக்களையும் சோதிக்க வேண்டும்....1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
பிகு2 இங்கே புலிகள் மாற்று இயககங்களை தடை செய்தார்கள் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் அசாத்தை போல ஒரு குடும்ப ஆட்சியை அல்லது தனிமனிதனை நிலை நிறுத்த அவர்கள் அப்படி செய்யவில்லை. ஏனையோர் துரோகம் இழைகிறார்கள், ஆகவே தடை செய்ய்ய வேண்டும் என்பதே எப்போதும் அவர்களின் நியாயமாக இருந்தது. இதோடு முரண்படலாம். நான் முரண்படுகிறேன். ஆனால் இதை வைத்து அசாத்துடன் ஒத்த கோடு கீற முடியாது.1 point
-
திண்ணை
1 pointநீங்கள் சுகம் விசாரித்ததை சொன்னேன். பதிலுக்கு அவரும் உங்களை சுகம் கேட்டதாக சொல்லச்சொன்னார். நானும் நாதமுனியும் சேர்ந்து எடுத்த படத்தை உங்கள் தனிமடலுக்கு அனுப்பியுள்ளேன்.1 point
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
வாசகர் கவனத்துக்கு! இங்கே டைம் மகசீனில் வெளிவந்த கட்டுரை என லங்கவெப் வெளியிட்ட கட்டுரை ஒன்று ஆதாரம் போல் காட்டப்பட்டது. இந்த கட்டுரை தலையங்கத்தை வைத்து - டைம் மகசீனின் ஒரிஜினல் கட்டுரையை என்னால் காண முடியவில்லை. லங்காவெப் இலங்கை புலநாய்வாளர்களால் வழிநடத்தப்பட்ட புலிகள் மீது உண்மைக்கு புறம்பானதை, அல்லது நடந்ததை பெருப்பித்து காட்டும் பிரச்சர போரில் முக்கியமான ஒரு அங்கம் என்பது பலருக்கும் தெரிந்த விடயம்தான். மிக முக்கியமாக இந்த கட்டுரையிலும் பாலசிங்கம் சொன்ன பேட்டியின் நகலோ அல்லது பேட்டி வெளிவந்த இதழ் பற்றியோ தகவல் ஏதும் இல்லை: ஆகவே இன்னும் பாலசிங்கம் எந்த பேட்டியில் இப்படி சொன்னார் என்பதும், இப்படி சொன்னாரா என்பதுமே நிருபிக்கபடவில்லை. நான் இங்கே பாலசிங்கம் கொடுத்த பேட்டிக்கான ஆதாரம் கேட்க காரணம் உள்ளது. அவர் சொன்னதாக சொல்லப்பட்ட ஆங்கில சொலவடையை பலவாறு அதன் சூழமைவை வைத்து வியாக்கியானம் பண்ணலாம். இதை இங்கே முதலில் தூக்கி வந்தவர், முன்பே செனேட்டர் லிண்ட்சே கிரேம் உட்பட பலர் ஆங்கிலத்தில் சொன்ன விடயங்களை தலை கீழாக புரிந்து கொண்டு அதற்கு சதிகோட்பாட்டு விளக்கம் கொடுத்தவர். ஆகவே பேட்டியை தக்க ஆதாரத்தோடு காணும் வரை - இது ஆதராமாக கருதப்படவியலாது.1 point
-
கருத்து படங்கள்
1 point1 point
- தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
அப்ப அனுர இனவாதிகளை சாந்த படுத்த மட்டும் நாம் பெளத்த கோவில் விடயத்தை சும்மா எதிர்த்து விட்டு அடங்கி விட வேண்டும்? இவை எல்லாம் அனுர இனவாதி இல்லை என்ற உங்கள் கற்பனை நிலைப்பாட்டில் எழுத படுபவை. அனுரவும் ஜேவிபியும் பச்சை இனவாதிகள். அவர்கள் இதை ஒருப்போதும் தடுக்கப்போவதில்லை. மேலும் அனுர இனவாதத்தை எதிர்க்க வந்தாரா அல்லது சாந்தபடுத்த வந்தாரா ? 2/3 பெரும்பான்மை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி என சகலதையும் கொண்டுள்ள இப்போதே ஒரு துரும்பை கூட இவர்கள் தூக்கி போடவில்லை. இனி போக போக இறங்குமுகம்தான். எந்த அரசுக்கும் honeymoon period என தொடக்க காலத்தில் எதிர்ப்பு குறைந்த்ஹ் இருக்கும். கடினமான வேலைகளை அப்போதான் செய்வார்கள். இவர்களால் இப்பவே இனவாதிகளை ஒண்டும் செய்ய முடியவில்லை, இன்னும் சில வருடத்தில் இதை விட வெறுப்பை சம்பாதித்த நிலையில் என்னத்தை செய்ய முடியும். நீங்களும் அப்போ வந்து அனுர பாவம் இனவாதிகள் எதையும் செய்ய விடவில்லை என சப்பை கட்டு கட்டுவீர்கள். இனவாதி, இனவாத கட்சியிடமே இனவாதத்தை கட்டுபடுத்த கோரும் மடமை போல் வேறில்லை.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை; அவ்வாறு இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் - இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் துணைத்தூதுவர் சாய் முரளி
இது தொடர்பாக சில விடயங்களைச் சொல்ல விரும்புகின்றேன். மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயம் என்பது கொழும்பு மட்டக்குளியில் உள்ள ஒரு free gospel church ஆகும். சங்கிகளின் மொழியில் சொல்வதனால் மதம் மாற்றும் ஒரு நிறுவனமாகும். இந்த ஆலயத்தின் நத்தார் நிகழ்வுக்கு இந்தியத் தூதர் ஏன் வரவேண்டும் அல்லது அழைக்கப்படவேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. அடுத்ததாக ஏழை மக்களுக்கு பணம்கொடுத்து மதம்மாற்றுபவர்கள் என்று சங்கிகளால் சொல்லப்படும் ஓர் ஆலய மாணவர்களுக்கு ஏன் இந்திய மக்களின் உதவித்திட்டம் வழங்கப்பட வேண்டும்? இந்தியத் தூதர் ஓரு கிறிஸ்தவராக இருந்து அழைக்கப்பட்டிருந்தால் அதில் ஓரளவுக்குத்தன்னும் நியாயம் இருந்திருக்கும். சரி இந்த நிகழ்வில் ஏன் மீனவர் பிரச்சினை குறித்த கருத்துக்களை இந்தியத்தூதர் தெரிவிக்கவேண்டும்? இவ்வாறான கேள்விகள் எனக்குள் எழுகின்றன. இது குறித்து ஈழத்து இந்து சமயிகளின் தலைவன் மற்வன்புலவு சச்சிதானந்தனினதும் இந்து சமயத்தின் காவலன் சிறுவர் இல்லம் புகழ் ஆறுதிருமுருகனினதும் எதிர்வினை எப்படி இருக்கப்போகின்றது என்பதனையும் அறிய உள்ளம் அவாவுகின்றது. மேலதிக தகவல்களாக இந்த மிஸ்பா சபையின் போதகர் ஜெயம் சாரங்கபாணி (படத்தில் இடதுபுறம் இருப்பவர்) ஆவார். சாரங்கபாணி என்ற பெயர் பொதுவாக தெலுங்கு மொழி பேசும் மக்களின் பெயராக அறியப்படுகின்றது. இறுதியாக இது ஓரு மத நிகழ்வாக இருந்தால் பேசாமல் கடந்து போய்விடலாம். ஆனால் இங்கு ஒரு மதநிகழ்வில் அரசியல் பேசப்பட்டிருக்கின்றது. அதுதான் சில அய்யங்களை தோற்றுவித்திருக்கின்றது!1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
எதையும் சொல்லவும். ஆனல், நான் குறிப்பாக நடந்ததை, விபரத்தை சொல்லி இருக்கிறேன். தயவு செய்து திரிக்க வேண்டாம்.1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 point- யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் அதிகாரிகளுடன் தர்க்கம் புரிந்த அருச்சுனா
அட, இஞ்சை பார்றா இவரின்ர கதையை. ஆண்டவனுக்கே சவால் விடும், கடமையும் கட்டுப்பாடும் கண்ணியமுமுள்ள இந்தப்புனிதனையா மக்கள் எதிர்க்கிறார்கள்? சாவகச்சேரியில் நோயாளர்களை அம்போ என்று விட்டிட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் போய் குந்தியிருந்தவர்களை எப்படி ஏற்றுக்கொண்டார் இவர்?1 point- நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஊழல் பெருச்சாளிகளுக்கும், சோம்பேறி அதிகாரிகளுக்கும், திறமை அறிவற்ற உத்தியோகத்தர்களுக்கும் வேர்க்கும், தங்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்கிற துணிவில் அப்பாவி மக்கள் மேல் காட்டுக்கத்தல் கத்தி விரட்டிவிட்டு அரட்டை அடித்தவர்களுக்கு வேர்க்கும், கேள்வியின் கடுமையை உணர்ந்து கத்துகிறார்கள். அவர்களின் அடிவயிற்றில் புளி கரைக்குது. அவர்கள் எப்படி யாரால் பணிக்கமர்த்தப்பட்டார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். ஆனாலும் ஒன்று, ஊழல்வாதிகளுக்கெதிராக மக்கள் தங்கள் இயலாமையின் வெளிப்பாடே அர்ச்சுனாவின் வெற்றி. தங்கள் குறைகளை அவர் தீர்த்து வைப்பார் தங்கள் துயரங்களுக்கு விடிவு பெற்றுத்தருவார் என்று நம்பியே மக்கள் இவரை தெரிவு செய்தனர். சம்பந்தப்பட்டோரின் ஊழல்களை சாட்சியங்கள் ஆதாரங்களோடு சேகரித்து உரிய முறையில் அழைத்து விளக்கம் கோரி நடவடிக்கை எடுப்பதுதான் சரியானது. அல்லது அந்த துறை சார்ந்தவர்களை தன்னுடன் இணைத்து அனுமதி பெற்று செல்வதுதான் முறையானது. அதைவிட்டு இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று போய் தனக்கும் தான் சேர்ந்த மக்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்தி, அவர்களை நட்டாற்றில் விட்டுச்செல்வது சரியானதல்ல. அதோடு குற்றவாளிகள் தப்பித்துக்கொள்ளவும் வழியமைக்கிறது. சத்திய மூர்த்தி ஒன்றும் வைத்தியரல்ல, தாத்தாபோன்று செயற்படுகிறார் என்று, அர்ச்சுனா வடக்கிற்கு வருமுன்பே குற்றச்சாட்டுக்கள் இருந்துகொண்டே வந்திருக்கின்றன. வைத்திய தருமத்திற்கு அப்பால் செயற்பட்டு வருகிறார், ஊழியர்கள் சண்டியர்கள் போல் நோயாளிகளையும் பார்வையாளர்களையும் தாக்குகின்றனர் என்றெல்லாம் அப்பப்போ குற்றச்சாட்டுக்கள் வந்துகொண்டே இருந்தன. இவற்றை கவனியாமல் சத்தியமூர்த்திக்கு அப்படி என்ன வேலை இருந்தது? தனக்கு எதிரானவர்களை ஓரங்கட்டுவதும் பழிவாங்குவதும் பொய்யான அறிக்கைகள் தயாரிப்பதிலுமே நேரத்தை கடத்தியிருக்கிறார். நமது அரசியற் தலைவர்களுக்கு அவற்றை கண்காணிக்க கேள்வி கேட்க தெரியவில்லை, நேரமுமில்லை. சோர்ந்துபோன மக்கள் அர்ச்சுனனை தலைவனாக ஏற்றுக்கொண்டு, தமது பிரச்சனைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவார் என நினைத்தனர். அர்ச்சுனா அதிகம் பேசாமல், அவசரப்படாமல் செயலில் காட்ட வேண்டும். மக்களுக்கு தீர்வை நிரந்தரமாக பெற்றுக்கொடுக்க வேண்டும். அதுவே அவர், தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு செய்யும் நன்றிக்கடனாகவுமிருக்கும். எடுத்தவுடன் நிஞாயம், சட்டம், நீதி தெரியாத போலீசாரிடம் ஓடுவதை இருபகுதியும் தவிர்க்க வேண்டும். போலீசார் இருபகுதியையும் ஏவிவிட்டு கூத்து பார்ப்பார்கள், இறுதியில் அநிஞாயத்தின் பக்கமே சாய்வார்கள்.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointவாழ்க்கையை நன்கு துவங்கிட வேண்டிய கதைகள்: 1. நோக்கியா ஆண்ட்ராய்டை நிராகரித்தது 2. yahoo Google ஐ நிராகரித்தது 3. கோடாக் டிஜிட்டல் கேமராக்களை நிராகரித்தது வாழ்க்கை பாடங்கள்: 1. வாய்ப்புகளை தவற விடாதீர்கள் 2. மாற்றத்தைத் தழுவுங்கள் 3. கால ஓட்டத்திற்கு ஏற்ப நீங்கள் மாற மறுத்தால், நீங்கள் காலாவதியாகிவிடுவீர்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. Facebook whatsapp மற்றும் instagram ஐ கைப்பற்றுகிறது 2. தென்கிழக்கு ஆசியாவில் உபெர் நிறுவனத்தை கிராப் கைப்பற்றுகிறது மேலும் பாடங்கள்: 1. உங்கள் போட்டியாளர்கள் உங்கள் கூட்டாளிகளாக மாறும் அளவுக்கு சக்தி வாய்ந்தவர்களாக மாறுங்கள் 2. முன்னேறி சென்று போட்டியை அகற்றுங்கள். 3. புதுமைகளைத் தொடருங்கள் மேலும் இரண்டு கதைகள்: 1. கர்னல் சாண்டர்ஸ் 65 இல் KFC ஐ நிறுவினார் 2. கேஎஃப்சியில் வேலை கிடைக்காத ஜாக் மா, அலிபாபாவை நிறுவி 55 வயதில் ஓய்வு பெற்றார். மேலும் பாடங்கள்: 1. வயது என்பது வெறும் எண் 2. தொடர்ந்து முயற்சி செய்பவர்களே வெற்றி பெறுவார்கள் இறுதியாக: ஃபெராரி நிறுவனர் என்சோ ஃபெராரியால் அவமதிக்கப்பட்ட டிராக்டர் உற்பத்தியாளரின் பழிவாங்கலின் விளைவாக லம்போர்கினி நிறுவப்பட்டது. பாடங்கள்: யாரையும் குறைத்து மதிப்பிடாதீர்கள், எப்போதும்! ✔️ கடினமாக உழைத்துக்கொண்டே இருங்கள் ✔️ உங்கள் நேரத்தை புத்திசாலித்தனமாக முதலீடு செய்யுங்கள் ✔️ தோல்விக்கு பயப்பட வேண்டாம்1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
பிரபாகரன் - மூத்த செய்தியாளர் திரு த.சபாரட்ணம் எழுதிய தலைவரின் வாழ்க்கைச் சரித்திரம் - சங்கம் இணையம்
1 pointவங்காலையில் குருவானவர் மேரி பஸ்ட்டியானைச் சுட்டுக் கொன்று, உடலருகில் ஆயுதங்களைப் பரவிப் புகப்படம் எடுத்து, பின்னர் உடலைக் காணாமலாக்கிய சிங்கள இராணுவம் மன்னாரில் நிலைகொண்டிருந்த சிங்கள இராணுவக் காடையர்கள் நடத்திய இரண்டாவது படுகொலை தை மாதம் 5 ஆம் திகதி வங்காலையில் இடம்பெற்றது. வங்காலை புனித ஆன் தேவாலயத்தின் பங்குக் குருவானவர் மேரி பஸ்ட்டியானும் கூடவிருந்த இன்னும் எட்டுத் தமிழ் மக்களும் அன்றிரவு சிங்கள இராணுவக் காடையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இப்படுகொலை குறித்த அறிக்கையொன்றினை தைமாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற கத்தோலிக்க ஆயர்கள் மாநாட்டில் வெளியிட்ட ஆயர்களின் தலைவரும், சிலாபம் மறைமாவட்டத்தில் ஆயருமான மார்க்கஸ் பெர்ணான்டோ, 38 வயதான குருவானவர் மேரி பஸ்ட்டியான் தனது பங்கு அறையினுள் இருந்தவேளை அங்கு சென்ற இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறினார். தேவாலயம் ஒன்றினுள் தனது மதப் பணிகளை ஆற்றிவந்த குருவானவர் மீது வேண்டுமென்றே இராணுவத்தினரால் நடத்தப்பட்ட கொலை என்று இதனை அவர் வர்ணித்திருந்தார். மன்னார் மறைமாவட்டத்தின் ஆயர் தோமஸ் செளந்தரநாயகமும் இப்படுகொலையினை அறிக்கையொன்றின் ஊடாகக் கண்டித்திருந்தார். "வங்காலையில் 6 ஆம் திகதி காலை, இறைபணியாற்றிக்கொண்டிருந்த வேளை இராணுவத்தினரால் கொல்லப்பட்ட 38 வயதான இளங்குரு மேரி பஸ்ட்டியான் அவர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று அவ்வறிக்கை கூறியது. ஆனால், தகவல் வழங்கும் திணைக்களத்தினூடாக குருவானவரின் படுகொலை குறித்து பாதுகாப்பு அமைச்சு வழங்கிய அறிக்கை இப்படுகொலை தொடர்பாக முற்றிலும் மாறுபட்ட செய்தியொன்றினைக் கூறியது. அமைச்சின் அறிக்கையின்படி, "இரவு 11 மணியளவில் ஆலயச் சுற்றாடல்ப் பகுதியினை இராணுவம் சுற்றிவளைத்த வேளை, அங்கிருந்து இராணுவத்தினர் மீது பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐந்து பயங்கரவாதிகள் இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டனர். பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையின் போது இடையில் அகப்பட்டு ஒரு குருவானவரும் பெண்ணொருவரும் கொல்லப்பட்டனர்" என்று கூறியது. ஆனால், லலித் அதுலத் முதலி இப்படுகொலை குறித்துப் பேசும்போது, பாதுகாப்பு அமைச்சு வெளியிட்ட அறிக்கையினை முற்றாக மறுத்திருந்தார். குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் அங்கு கண்டெடுக்கப்படவில்லை என்றும், மாறாக அவரது ஆலயத்தில் துப்பாக்கிகளும் குண்டுகளும் காணப்பட்டதாகவும், ஆகவே அதனைப் பயங்கரவாதிகள் தமது தளமாகப் பாவித்திருப்பது உறுதியாகிறது என்றும் வாதிட்டார். எனினும் அரசால் இப்படுகொலை குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையினை கத்தோலிக்கத் திருச்சபை முற்றாக நிராகரித்தது. "ஆலயத்தினைச் சுற்றிவளைத்த இராணுவத்தினரின் அணியொன்று அதன்மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியது. ஆலயத்திலிருந்து இராணுவத்தினரை நோக்கி எந்தத் தாக்குதலும் நடக்கவில்லை. மேலும் ஆலயத்தில் பெண்ணொருவர் அப்போது இருக்கவில்லை. குருவானவரின் பெயரிற்குக் களங்கம் கற்பிக்கவே பெண்ணொருவருடன் குருவானவர் இருந்ததாக அரசாங்கம் காண்பிக்க முயல்கிறது. மேலும் அங்கு ஆயுதங்களும், குண்டுகளும் காணப்பட்டன என்று அரசாங்கம் கூறுவது உண்மைக்குப் புறம்பானது" என்று கத்தோலிக்கத் திருச்சபை தனது கண்டன அறிக்கையில் கூறியிருந்தது. மேலும் கொல்லப்பட்டவர்களிடையே குருவானவர் மேரி பஸ்ட்டியானின் உடல் காணப்படவில்லை என்று லலித் அதுலத் முதலி கூறியதையும் கத்தோலிக்கத் திருச்சபை மிகக் கடுமையாகச் சாடியிருந்தது. குருவானவர் மேரி பஸ்ட்டியான் இத்தாக்குதலில் கொல்லப்படவில்லையென்றும், படகேறி இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்று அதுலத் முதலி தொடர்ச்சியாகக் கூறி வந்திருந்தார். கத்தோலிக்கக் குருவானவர் ஒருவரை தனது இராணுவம் கொலை செய்திருக்கும் செய்தி சர்வதேசத்தில் வெளிப்படுமிடத்து தனது அரசாங்கம் மீதான சர்வதேச அதிருப்தி தோன்றுவதைத் தடுக்கவே குருவானவர் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றுவிட்டதாக லலித் அதுலத் முதலியினால் வேண்டுமென்றே இக்கதை புனையப்பட்டு, மீண்டும் மீண்டும் அரச ஊடகங்களில் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனால் கத்தோலிக்க ஆயர்களின் மாநாட்டில் பேசிய ஆயர்கள், குருவானவர் அருகிலிருந்து சுட்டுக் கொல்லப்பட்டதற்கான கண்ணால்க் கண்ட சாட்சிகள் இருப்பதாகவும், அரசாங்கம் இப்படுகொலை குறித்து நடத்திய விசாரணையின் விபரங்களை வெளியிட மறுத்து வருவது கண்டனத்திற்குரியது என்றும் கூறியிருந்தார்கள். சர்வதேச மன்னிப்புச்சபை இப்படுகொலை தொடர்பாக சுதந்திரமான விசாரணையொன்றினை நடத்தியது. அவ்விசாரணைகளின் அடிப்படியில் வெளியிடப்பட்ட அறிக்கை வருமாறு, "இதுவரையில் சர்வதேச மன்னிப்புச் சபையினால் எடுக்கப்பட்ட முயற்சிகளின்படி குருவானவர் மேரி பஸ்ட்டியான் இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கிறார் என்பதை உறுதிப்படுத்துவதற்கான எந்தச் சாட்சியங்களும் இல்லை. இதுவரை மேரி பஸ்ட்டியான் அவர்களது உடல் கண்டெடுக்கப்படவில்லையாயினும், அவர் ஆலயத்தில் வைத்து இராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டு காணாமலாக்கப்பட்டிருக்கிறார் என்பதை நிரூபிப்பதற்கான சாட்சியங்கள் எம்மிடம் இருக்கின்றன. தை மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவிற்கும், 6 ஆம் திகதி அதிகாலைக்கும் இடையிலான நேரத்தில் ஆலயத்தைச் சுற்றி வளைத்துக்கொண்ட இலங்கை இராணுவத்தினர், குருவானவரின் வாசஸ்த்தலத்தின் பின்புறத்தினூடாக உள்ளே நுழைந்து அவரது பெயரைக் கூறி வெளியே வருமாறு அழைத்திருக்கின்றனர். தனது பெயரைக் கூறி இராணுவத்தினர் அழைப்பதைக் கேட்ட குருவானவர் மேரி பஸ்ட்டியான் முன்னே வரவும், வாசஸ்த்தலத்தின் விறாந்தைப் பகுதி யன்னல்களூடாக இராணுவத்தினர் அவரைச் சுட்டுக் கொன்றிருக்கின்றனர் . குருவானவர் கொல்லப்பட்ட பல மணிநேரத்திற்குப் பின்னர் அவரது உடலை இழுத்துச் சென்று அருகிலிருந்த மகளீர் பாடசாலையின் படிக்கட்டுக்களில் எறிந்து, அவரைச் சுற்றி ஆயுதங்களையும், இன்னும் சில வெடிபொருட்களையும் பரவி புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர் 6 ஆம் திகதி காலை தள்ளாடி இராணுவ முகாமிலிருந்து வெள்ளை நிற வானில் வந்திறங்கிய இன்னொரு தொகுதி இராணுவத்தினர் குருவானவரின் உடலை எடுத்துச் சென்றனர்" என்று கூறப்பட்டிருந்தது.1 point - தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
Important Information
By using this site, you agree to our Terms of Use.