Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்12Points3054Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்9Points87990Posts -
Kandiah57
கருத்துக்கள உறவுகள்9Points4039Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்8Points38756Posts
Popular Content
Showing content with the highest reputation on 01/28/25 in all areas
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
முதலில், நீங்கள் கருத்துகளை பகிர்வதற்கு தேர்ந்தெடுத்து இருக்கும் எழுத்துநடை பிடித்திருக்கின்றது, நாதமுனி. வேறு பல கருத்துகளுக்கும் இடம் கொடுத்து, சொற்களால் அடிக்காமல் எழுதியுள்ளீர்கள். மிக்கநன்றி. இல்லை, நான் தமிழ்நாட்டு அரசியலை ஈழத்துக்கு முற்றிலும் தொடர்பில்லாமலேயே பார்க்கின்றேன். என்னுடைய நிலைப்பாடுகள் இங்குள்ள பொதுவான போக்கிற்கு ஒத்ததாக இல்லாமல் இருப்பதற்கு அதுவே காரணம். உதாரணமாக, தமிழ்நாட்டு மக்களை அரசியல், தேர்தல்கள் என்ற வகையில் தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்கள், நாடார்கள், பட்டியலின மக்கள் என்ற ஒரு பார்வையிலேயே நான் பார்க்கின்றேன். சமீபத்தில் வந்து போன விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் கூட இப்படித்தான் நான் எந்தப்பகுதி எங்கு சாயும் என்று எழுதியிருந்தேன். எந்தப் பகுதிக்குள் எவர் போகமாட்டார்கள் என்றும் சொல்லியிருந்தேன். பாமகவும், திமுகவும் எப்படி வன்னிய சமூகத்தை இரண்டாகப் பிளந்து வைத்துள்ளார்கள் என்று சொல்லியிருக்கின்றேன். மதுரையும் தேனியும் எப்படி அதிமுகவின் கோட்டையாக இருந்தது என்றும், அதே போலவே சேலமும் ஈரோடும் என்று எனக்கு சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் சொல்லியிருக்கின்றேன். என்னுடைய பார்வையில் அங்கே தமிழ்த்தேசியமும் கிடையாது, திராவிடமும் கிடையாது. இருப்பது எல்லாம் 'பெல்ட்' என்று சொல்லப்படும் - தேவர் பெல்ட், கவுண்டர் பெல்ட், வன்னியர் பெல்ட்,........ - என்ற ஒரு குழு அரசியல் மட்டுமே. இந்த குழு அமைப்பு அரசியலும் தாண்டியது, அவர்களின் சமூகத்தில் இதன் வேர்கள் எங்கும் போய்க் கொண்டிருக்கின்றன. சீமான் ஒரு ஒற்றுமையான தமிழ்த்தேசியம் தானே பேசுகின்றார் என்று எம்மவர்கள், ஈழத்தவர்கள், சொல்லுகின்றனர். போனவாரம் வெளிவந்த வேங்கைவயல் விசாரணை அறிக்கை சம்பந்தமாக யாழில் வந்த திரியில் நான் எழுதியிருந்தது - சீமானும், ராமதாசும், அன்புமணியும் இதைக் கண்டும் காணாமல் போய்விடுவார்கள் என்று. ராமதாசும் அன்புமணியும் வெளிப்படையாக தமிழ் மக்களில் ஒரு பிரிவினருக்காகவும், தமிழ் மக்களில் இன்னொரு பிரிவினரை எதிர்த்தும் அரசியல் செய்கின்றனர். அவர்கள் பட்டியலின மக்களை சக தமிழ்மக்களாக கருதுவதேயில்லை. ஆனால், தமிழ்த்தேசியம் பேசும் சீமானும் ஏன் இப்படிச் செய்கின்றார். திருமாவும், ரஞ்சித்தும், சீமானும் ஒரே மேடையில் ஒரே நோக்கிற்காக ஏறவே மாட்டார்கள் என்று நான் முன்னர் இங்கு எழுதியிருக்கின்றேன். ஆனால் சீமானும், சசிகலாவும், ஓபிஎஸ்ஸும் ஒரே மேடையில் ஏறுவார்கள். இவர்கள் இடையே இருக்கும் பொதுவான ஒன்று எது என்று நான் சொல்லியிருக்கின்றேன். தமிழ்த்தேசியம் என்னும் அகண்ட பார்வையே இவர்களிடம் கிடையாது என்று இதனால் தான் சொல்லுகின்றேன். ஒரு சிறு வட்டத்துக்குள் தான் சீமானும் நிற்கின்றார், பெயர் மட்டும் வேறு அத்துடன் சில பாவனைகள். நான் யாழ் களத்திற்கு புதியவன். நான் இங்கு வந்த பின் என்னளவிற்கு இந்தப் பாகுபாடுகளை எவரும் இங்கு எழுதியதை நான் பார்க்கவில்லை. என்னுடன் இருக்கும் ஈழ நண்பர்கள் வட்டம் பொதுவாகவே இதில் எந்த அடிப்படையும் இல்லாதவர்கள். அவர்கள் சில நேரங்களில் என்னை பகிடியாக ஒரு 'தமிழ்நாட்டுக்காரரன்' என்றே சொல்வார்கள். சுருக்கமாகச் சொன்னால், தமிழ்நாட்டு அரசியலையும், ஈழ அரசியலையும் நான் தொடர்பு படுத்துவதேயில்லை. அதனால் தான் மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவு உள்ள, உணர்ச்சிகளை தூண்டும் ஒருவராகவே மட்டுமே சீமானை நான் பார்க்கின்றேன். இவர் முன்னெடுப்பது எந்த வகையிலும் எங்களின் தலைவர் எண்ணியிருந்த தமிழ்த்தேசியமே கிடையாது. இன்றைய திராவிடக் கட்சிகளுக்கு பெரியார் ஒரு கவர்ச்சியான பிரச்சார ஆயுதம் போலவே, அங்கு தமிழ்த்தேசியம் பேசும் சீமான் போன்றோர்களுக்கு எங்களின் தலைவர் ஒரு கவர்ச்சியான ஆயுதம் மட்டுமே. தமிழ்த்தேசியம் தமிழ்நாட்டில் வளர்ந்தால், ஈழமும் பொங்கும் என்பது உண்மை. ஆனால் தமிழ்நாட்டில் இன்று தமிழ்த்தேசியமே கிடையாது. அப்படியான ஒரு ஒருங்கிணைந்த பார்வை அங்கு எவரிடமும் கிடையாது. ஒரு அரசியல் கட்சியாக, எம்ஜிஆர் - ஜெயலலிதா கால அதிமுகவும், என்றுமே திமுகவும், இடதுசாரிகளும் இந்த அடையாளம் பேணும் குழு அரசியலில் இருந்து ஓரளவு வெளியே வந்தவர்கள். ஆனால், இவர்களில் கூட, இடதுசாரிகள் தவிர்த்து, எந்த தொகுதியில் யார் வேட்பாளாரக நிற்கப் போகின்றார் என்பதை தீர்மானிப்பது 'தமிழன்' என்னும் அடையாளம் அல்ல, இன்னொரு வேறு அடையாளமே அதை தீர்மானிக்கின்றது. ஈரோடு கிழக்கும் அதே தான். இவர்கள் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடம் பேசுபவர்கள் என்று எம்மவர்கள் ஏமாறுகின்றனர். ஆனால் ஒரு தமிழ்நாட்டவர் அவரின் ஊரையும், பெயரையும் சொன்னவுடனேயே புரிந்து விடுகின்றது அவர் யாரென்று. இனத்தலைவர், குலத்தலைவர் என்று தங்களை நியாயப்படுத்தும் தமிழ்நாட்டு நண்பர்களும் எனக்கு உண்டு. அங்கு விதிவிலக்கானவர்கள் மிகச்சிலரே. பாளையக்காரர்களும் விஜயநகரப் பேரரசின் பின் வந்தவர்கள் தான். கட்டபொம்மனை எங்களின் ஒரு வீரனாக நாங்கள் ஏற்று பெருமைப்படவில்லையா. சமீபத்தில் உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற குகேஷும் அந்த வழியில் வந்த ஒருவர் தான். நான் மிகவும் பெருமப்பட்டேன். விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியனாக போட்டியிடும் போது எவ்வளவு பெருமைப்பட்டேனோ, அவ்வளவு பெருமை குகேஷ் வென்ற போதும் வந்தது. எம்ஜிஆரை ஒரு மலையாளியாகவும், கருணாநிதியை ஒரு தெலுங்கராகவும், ஜெயலலிதாவை மைசூர் ராணியாகவும் பார்க்கும் நிலையை நான் கடந்து வந்துவிட்டேன். இன்றில்லாவிட்டாலும், இன்னொரு நாட்களில், இதை பலரும் கடந்து போவார்கள் என்று நான் நம்புகின்றேன். சீமானை விமர்சிப்பவர்கள் இரண்டு வகையைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லியிருந்தீர்கள். சமூக அக்கறை கொண்ட, ஆனால் மிகச் சாதாரண மனிதர்கள் என்ற இன்னொரு வகையினரும் இருக்கின்றனர் என்று நினைக்கின்றேன்.7 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
6 points2004 இல் சீமான் ஒரு திரைப்பட இயக்குநர். தமிழீழப் போராட்டத்தின் தீவிர ஆதரவாளர். அப்போது பெரியாரின் சிந்தனைகளை ஆதரித்தவராகவும் இருந்தார். அரசியலில் ஈடுபடவும் இல்லை. 2004 இல் சீமானின் கட்டுரை எழுத அனுமதித்ததால், தலைவர் இல்லாத 2010 களில் தலைவரையும், புலிகளின் சின்னத்தையும், கொடியையும் தழுவி கட்சி அரசியல் செய்வதை தலைவர் இருந்திருந்தால் ஏற்றுக்கொண்டிருப்பாரா? 2004 மார்ச் வரை கருணா அம்மானும்தான் தலைவரின் வலதுகரமாக விளங்கிய பெரும் போர்த்தளபதி. ஆனால் அவரின் செயற்பாடுகள் எப்படி புலிகள் இயக்கத்தை அழித்தது என்று எல்லோருக்கும் தெரியும். இப்போது புலிகளின் சித்தாந்தத்தை சீமான் அழிப்பது மட்டுமல்ல, பெரும்பான்மை தமிழ்நாட்டு மக்களை புலிகளின்மீது வெறுப்பைக் கக்கவும் வைத்துள்ளார். இந்த நிலையை உருவாக்கியதற்கு புலம்பெயர் புலிகளின் அனைத்துலகச் செயலகத்தினரே முழுப்பொறுப்பு. தாயகத்தில் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாதபோதும், புலம்பெயர் நாடுகளில் புலிகளின் சொத்துக்களைக் கைக்குள் வைத்துக்கொண்டு புலிகளின் பிரதிநிதிகளாக அனைத்துலகச் செயலகத்தினர் இருந்துவருகின்றனர். சீமானை கனடாவுக்கு அழைத்து, அவர் பேசிய பேச்சால் கனடிய அரசு அவரை வெளியேற்றியபோதே சுதாகரித்து இருந்திருக்கவேண்டும். சீமான் கட்சி தொடங்கி புலிகளின் தொடர்ச்சி என்று காண்பிக்க ஆரம்பித்தபோதே தடுத்து நிறுத்தியிருக்கவேண்டும். ஆனால் இவர்கள் புலிகளின் சொத்தை பங்குபிரிப்பதில் மட்டுமே குறியாக இருந்தார்கள்.!6 points
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
இப்படி பேசும் போது அவர் பையனாக இருந்தவர் இப்ப வளர்த்து விட்டார் .....வளர வளர அவரின் அறிவும் வளரும் எனவே… பேசுவது மாறிக்கொண்டு போகும் அவர் பேசுவது எக்காலத்திற்கும் ஏற்புடையது இல்லை குறிப்பாக மூன்று நாள்களுக்கு தான் செல்லுபடியாகும் அதாவது 36. மணித்தியாலத்துக்கு 🤣😂. எனவே… மூன்று நாள்களுக்குள் பேசியதை. மட்டுமே கருத்தில் எடுக்கவும். 🙏4 points
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
தற்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் தேசியத் தலைவரை இழிவுபடுத்தும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. மேற்படி பேட்டியுடன் + படப்பிடிப்பாளர் அமரதாசின் கட்டுரையும் சேர்த்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாகி விட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆமைக்கறி பிரபாகரன் என்று வேறு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இது எங்கே போய் முடியும்? விபு க்களை தமிழ்நாட்டில் இழிவுபடுத்துவதில் கொண்டுபோய் முடியும். நாளைக்கு சீமானும் உதயநிதியும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றுவார்கள். நாம் அணில் ஏறவிட்ட நாய் போல வாய் பிளக்க வேண்டியதுதான். இதனால்தான் தமிழ்நாட்டு அரசியலில் நாம் தலையீடு செய்யக் கூடாது என்று கூறிவருகிறேன். யாழ் களத்தில் இந்த பிளவை சிலர் மேலும் திட்டமிட்டு ஊக்கிவிக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன். ☹️3 points
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
இதுவரை DeepSeek இன் ஆர்-1 மாடல் இந்த துறையில் ஒரு சாதனை போன்றே தெரிகின்றது. இதைப் பற்றிய கட்டுமான விபரங்களும் வெளியே வந்துள்ளன. Open Source ஆக எம்ஐடி லைசென்ஸ் ஊடாக எவரும் தரைவிறக்கி, அவர்களின் தேவைகளுக்கேற்ப செம்மையாக்கிக் கொள்ளலாம் என்பது மிகவும் வரவேற்கப்பட வேண்டியது.............................❤️. அவர்களின் முன்னைய மாடலின் வழமையான 671 பில்லியன் inputs களிலிருந்து, மிகக் குறைவான, ஆனால் அதிகம் பயன்படுத்தப்படும் சிறிய ஒரு பகுதியையே பயன்படுத்துகின்றார்கள் என்று சில விபரங்களில் இருக்கின்றது. இதைப் போலவே தகவல்களை எங்கே, எப்படி ஒரு சுருக்கிய வடிவில் சேமித்து, பின்னர் விரைவாகக் கொண்டு வருவது என்பதிலும் சில மாற்றங்கள் செய்துள்ளனர். NVIDIA இன் H800 GPUs ஐயே இவர்கள் பயன்படுத்தி இருக்கின்றார்கள். இந்த துறையில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்கள் இதைவிட மிகவும் திறன் வாய்ந்தவற்றை, மிக அதிக எண்ணிக்கையில் உபயோகித்து கொண்டிருக்கின்றன. எல்லாவற்றையும் பிரதி செய்யும் சைனாவால் இவைகளை பிரதி செய்ய முடியாமல் இருப்பதும், இதற்கு அமெரிக்காவில் தங்கி இருப்பதும் அவர்களின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல. இதை தரைவிறக்கம் செய்து இது என்னதான் என்று பார்க்க ஆரம்பித்தால், யாழ்களப் பக்கம் வரமுடியாது. யாழ்களம் இதைவிட எனக்கு முக்கியம்......................😜. வேறு யாராவது பார்த்து விட்டுச் சொல்லுங்கள்......... இங்கு பங்குச் சந்தைக்கு விழுந்த அடி, புட்டுச் சாப்பிட்டு விட்டு வேலை எதுவும் செய்யாமல் சும்மா இருந்த சிவபெருமானுக்கு முதுகில் விழுந்த அடி போல. இங்கு எங்கள் எல்லோருக்கும் அந்த அடி விழுந்திருக்கின்றது. இப்படி இடைக்கிடை இங்கு நிகழும். 'எதைக் கொண்டு வந்தாய் அதைக் கொண்டு போக..................'...................🤣.3 points
-
சீன AI தொழில்நுட்பத்தை கண்டு அதிர்ந்த அமெரிக்கா
இரண்டு நாட்களுக்கு முன் ட்றம்ப் அறிவித்த 500 பில்லியன் பாரிய நுண்ணறிவுத் திட்டம் மூலம் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு அடிமைப்படுத்தப்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. டீப்சீக் இத் திட்டத்திற்கு சமனாக அமையாவிட்டாலும் சில மில்லியன் செலவில் உருவான சிறிய நிறுவனம் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிறுவிக் காட்டியது. நேற்றைய அமெரிக்க பங்குச் சந்தையை அதிர வைத்தது.3 points
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
மான உணர்வோடும் இன உணர்வோடும் மனிதன் வாழ வேண்டும் என்று இந்த இனத்திற்கு சூடு சுரணை ஊட்டி சுயமரியாதையுடன் எங்களுக்கு வாழ கற்று தந்த தலைவன் தந்தை பெரியார். - சீமான் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநரும்3 points
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
இவர்களை பற்றி யார் இங்கே கதைத்தவர்கள். ?? எவருமில்லை இங்கே சீமான் பற்றி தான் கதைக்கிறோம். அவரை பற்றியும் அவரது பேச்சுக்கள் பற்றியும் எழுத முடியாத ??? சீமான் பற்றி நன்கு அறிந்த நீங்கள் ....அதைப் பற்றியும் எதிர்காலத்தில் அதனால் தமிழ்நாட்டுக்கு இலங்கை தமிழருக்கு ஏற்படும் நன்மைகள் பற்றியும் எழுத வேண்டும் ...நாங்கள் கூட சீமானை ஆதரிக்க முடியும் அதை விட்டுட்டு சீமான் பற்றி கதைக்கும் போது… எல்லாம் வை..கோ. நெடுமாறன் திருமாவளவன் ராமாதாஸ் .......பற்றி ஏன் கதைக்க. வேண்டும் ?? அவர்கள் கூடாதாவர்கள். எனவே… சீமான் கூடாதாவனாகயிருக்கலாம். ...என்கிறீர்களா. ?? சீமான்,.....நல்லவர் சிறந்த தலைவர் பொய் சொல்வது இல்லை ஏமாற்றாதவர் கொள்ளை லஞ்சம் வேண்டாதவர். ......இப்படி எதனையும். நீங்கள் அடித்து சொன்னது இல்லை ...ஆனால் சீமான் பற்றி கதைத்தால். அதை மறுத்து அளிப்பதில்லை மாறாக எற்றுக்கொண்டு வை..கோ. நெடுமாறன். திருமாவளவன் ரமாதாஸ் ..கருணாநிதி ......இப்படி தானே என்கிறீர்கள்,...இதை நீங்கள் சொல்ல வேண்டுமா ??? 🙏3 points
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
இனவாதமும் சில மமதைகளும் இருக்கும் வரைக்கும் பொது மக்கள் ஒரு கல் உப்புக்கும் வரிசையில் நிற்க வேண்டிய காலம் வெகு விரைவில் வரும். இவர்கள் திருந்த அதிக தூரம் பயணிக்க வேண்டும்.😂3 points
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா? Tagesanzeiger என்ற சுவிஸ் பத்திரிகையில் 17.01.2025 வெளிவந்திருந்தது, இந்த துயரம் தோய்ந்த பதிவு!. இதை Barbara Achermann, Anja Conzett இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள். தமிழில் இதை கபிலன் (சுவிஸ்) மொழிபெயர்த்துள்ளார். Yves Bachmann (Fotos) 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் நடந்த தீ விபத்தில் இலங்கையைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். அவர்களுள் இரண்டு சிறுவர்கள். எல்லோருமே அமைதியும், பாதுகாப்பும் தேடி சுவிசிடம் தஞ்சமடைந்தவர்கள். இது ஒரு விபத்தாகவே இன்றுவரை பதிவுசெய்யப்பட்டுள்ளது. எங்களுடைய ஆராய்ச்சியின் முடிவு இது ஒரு திட்டமிட்ட கொலை என்கிறது. இது கொலை என்ற கோணத்தில் இன்று வரை காவல்துறையினர் விசாரிக்க மறந்ததால் கொலைக்காரர்களும் இன்றுவரை பிடிபடவில்லை. பாலமுரளியும் (9) பாலமுருகனும் (10) சகோதரர்கள். சுவிஸ் நாட்டவருக்கு உச்சரிப்பதற்கு இலகுவாக இருப்பதற்காகவே முரளி மற்றும் முகுந்தன் என்று பெயரை சுருக்கிக்கொண்டார்கள். இருவரில் மூத்தவர் முரளி. சிறுவயதிலேயே வீட்டு வேலைகளில் உதவியாக இருந்தார். ஒரு முறை அருகிலுள்ள தோட்டவேலை செய்யும் நிறுவனத்திடம் வேலைகேட்டிருக்கிறார், தன்னுடைய சம்பளம் பெற்றோர்களிற்கு உதவியாக இருக்கும் என்றெண்ணி!. இளையவன் முகுந்தன் தன்னைவிட தன்னுடைய அக்காவை தான் பெற்றோர்களிற்கு பிடிக்கும் என்ற தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தான். ஆனால் பெற்றோர்கள் மூன்று பிள்ளைகளையும் உளமார நேசித்தார்கள் என்பதை அவன் அறிந்திருக்கவில்லை. இந்த இரண்டு சிறுவர்களின் வாழ்வும் சிறுபராயத்துடனே ஒரு சோகமான இரவில் முடிவிற்கு வரப்போவதை அவர்கள் அப்பொழுது அறிந்திருக்கவில்லை. 02.07.1989ஆம் திகதி கூர் நகரத்தில் ஒரு தீ விபத்தில் -பெரியவர்களாக முன்னரே- அவர்கள் கொல்லப்பட்டார்கள். அந்த ஓர் இரவு அவர்களை வாழ்விலிருந்து தூக்கியெறிந்துவிட்டது. இவர்களுடன் இந்த நாட்டிற்கு பாதுகாப்புத் தேடி வந்த 18 வயதான சக்திவேல் தம்பிராஜா என்ற இளைஞனும், 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி என்பவரும் அன்றைய இரவு கொல்லப்பட்டவர்கள் ஆவார்கள். மிரட்டப்பட்ட ஊடகவியலாளர் முரளியினதும் முகுந்தனினதும் கொடூர கொலை மீதான கவனம் எங்களுக்கு தற்செயலாக கிடைத்த தகவல் தான். இந்த கொலைச் சம்பவம் 35 வருடங்களிற்கு முன்னர் நடந்தேறியது. எனவே தான் சுவிஸ் மக்களின் நினைவிலிருக்க வாய்ப்பில்லை. இந்த சம்பவத்தை நினைவூட்டும் எந்த நினைவுச்சின்னமும் அவ்விடத்தில் இல்லை. வரலாற்று ஆசிரியர் Damir Skenderovic உடனான நேர்காணலில் போது அவர் இந்த வழக்கு பற்றி ஒரு சிறிய தகவலை தெரிவித்திருந்தார். இந்தச் சம்பவம் பற்றி நாங்கள் இதுவரை கேள்விப்பட்டதில்லை என்பது எங்களுக்கே ஆச்சரியமாக இருந்தது. ஊடக செய்திகளின் ஆவணக் காப்பகத்தில் இதுபற்றி தேடிப் பார்த்தோம். குறைந்த எண்ணிக்கையிலான செய்திகளே கிடைத்தன. ஒரு சில பத்திரிகையாளர்களும், அரசியல்வாதிகளும் இது ஒரு நியோ-நாசிகளின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை எழுப்பியிருந்தனர். உண்மையிலேயே இப்படி நடந்திருக்க வாய்ப்பிருக்குமா என்ற சந்தேகம் எமக்குள் எழுந்தது. இது ஏன் ஒரு பேசுபொருளாகவில்லை? கொலைகாரர்களை ஏன் கைதுசெய்யவில்லை? எனவே இது பற்றி ஆழமான ஒரு ஆராய்ச்சியினை மேற்கொள்ளலாம் என்று முடிவுசெய்தோம். நியோ-நாசிகளின் தாக்குதல்கள் என்றால் அனைவருக்கும் நினைவில் வருவது பெரும்பாலும் ஜேர்மன் நாட்டில் “சோளிங்கன்” என்ற இடத்தில் 1993ம் ஆண்டு இரண்டு முதியவர்களும், மூன்று சிறுவர்களும் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தான். இந்த சம்பவத்தை நினைவு கூரும் வண்ணம் அங்கே ஒரு நினைவுத்தூபி வைக்கப்பட்டிருக்கிறது. அத்துடன் அந்தத் தெருவுக்கும் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. ஜேர்மன் ஜனாதிபதி இந்த சம்பவத்தின் 30வது நினைவையொட்டி உரையாற்றியிருந்தார். இந்தச் சம்பவம் பற்றி புத்தகங்கள், பாடசாலை நூல்கள், பாடல்கள், காட்சிப் படங்கள் என்று நிறையவே இருக்கிறது. ஆனால் கூரில் நடந்த சம்பவம் பற்றி ஒன்றுமே இல்லை. எங்களுடைய ஆராய்ச்சியின் பின்னர் இது ஏதோ தற்செயலாக மறைக்கப்பட்ட ஒன்று இல்லை என்பதை உறுதியாக கூறமுடிகிறது இந்த ஆராய்ச்சியின் ஆரம்பம் இறந்துபோனவர்களின் குடும்பத்தினரிடம் இருந்து தான் தொடங்கியிருக்க வேண்டும். அவர்களின் இருப்பை அப்பொழுது கண்டுபிடிக்கவும் முடியவில்லை. எனவே இதன் தொடக்கம், இப்பொழுது 78 வயதான Reto Padrutt என்ற பத்திரிகையாளரிடமிருந்து ஆரம்பித்தது. Padrutt இப்பொழுது சூரிச்சில் வசித்துவருகிறார். அவருடைய இருப்பிடம் பற்றி மேலதிகமாக எழுதுவது அவருக்கு ஆபத்தினை ஏற்படுத்தலாம் என்பதால் தவிர்க்கிறோம். அதுபற்றி எழுதவேண்டாம் என்பது அவரின் கோரிக்கையும் கூட. Padrutt 15.01.1992 அன்று சுவிஸ் தொலைக்காட்சியின் Rundschau என்ற நிகழ்ச்சிக்கு இந்த சம்பவம் பற்றிய ஒரு சிறிய ஆவணப்படத்தினை Andreas Hoessli என்பவருடன் சேர்ந்து இயக்கியிருந்தார். (காணொளி-1) அதுமட்டுமின்றி Padrutt நியோ-நாசிகள் பற்றிய ஆராய்ச்சியில் பல ஆண்டுகள் செலவிட்ட ஒருவர். அன்றைய காலகட்டத்தில் அவர் வசித்த ஒரு அடுக்குமாடி குடியிருப்பின் கதவு பழுதடைந்திருந்ததால் யாரும் உள்ளே வரலாம் போகலாம் என்ற நிலை இருந்தது. அவருக்கு நியோ-நாசிகளிடமிருந்து ஒரு கடிதம் அனுப்பட்டிருந்தது. அதில் நுழைவாயில் எப்பொழுதுமே திறந்திருப்பது தங்களுக்கு தெரியும் என்றும், எந்நேரமும் அவரின் வீட்டிற்கு தீ வைக்க முடியும் என்று எச்சரிக்கப்பட்டிருந்தது. இப்பொழுது Padrutt தன்னுடைய குடோனிலிருந்து தூசிதட்டி எடுத்துகொண்டுவந்த ஆவணங்களை மேசையின் மேல் பரப்பி வைத்திருந்தார். கூரில் இடம்பெற்ற சம்பவம் பற்றிய அவரின் குறிப்புகள் அடங்கிய ஆவணங்கள் அவை. கூர் சம்பவத்திற்கும் நியோநாசிகளிற்கும் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் அவை. இடைப்பட்ட இந்த காலத்தில் கூர் நகரசபைக்கு இந்த சம்பவம் பற்றிய மேலதிக தகவல்கள் அடங்கிய தொகுப்புக்களை பார்வையிடுவதற்கு அனுமதி கேட்டு கடிதம் அனுப்பியிருந்தோம். அன்று சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் என்று விசாரணையை விரிவுபடுத்தினோம். இறுதியாக கொல்லப்பட்ட சிறுவர்களின் அக்காவையும் பெற்றோரையும் St.Gallen இல் கண்டுபிடிக்க முடிந்தது. அவர்களை கண்டுபிடிப்பதற்கு சிக்கலாக அமைந்தது, அரசதரப்பின் மெத்தனப்போக்கு!. Kandiah என்ற பெயரை ஆவணங்களில் Kandian என்று பிழையாக அச்சிட்டிருந்தார்கள். அது மட்டுமல்லாமல் கொல்லப்பட்ட சிறுவர்களின் பெயரை எழுத்துப் பிழைகளுடன் எழுதியிருந்தார்கள். இந்த விசாரணை எப்படி நடத்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக இதை எடுத்துக்கொள்ளலாம். Yves Bachmann (Fotos) மரண இரவு 01.07.1989 ஒரு மழைக்கால சனிக்கிழமை. St.Gallen மாநிலத்தில் பள்ளி விடுமுறை ஆரம்பித்திருந்தது. ஆனாலும் வசந்திக்கும், சிவா கந்தையாவிற்கும் வழமைபோல வேலை இருந்தது. அன்றைய காலகட்டத்தில் தமிழர்கள் அனைவரும் செய்த உணவத்தின் துப்பரவு பணியே அவர்கள் இருவரும் செய்தார்கள். இருவரின் பிள்ளைகளான இரண்டு ஆண்களும், ஆறு வயதான மேனாவிற்கும், வீட்டில் தனியாக இருப்பது சலிப்பாக இருந்தது. எனவே ஒரு குடும்ப விழாவிற்கு கூர் நகரத்திற்கு போவதற்கு பெற்றோர்கள் அனுமதித்தார்கள். இதற்குள் மூன்று பிள்ளைகளிற்குள்ளும் சண்டை வந்துவிடவே, மூவருக்கும் கொண்டாட்டத்திற்கு போவதற்கு தடைவிதித்தார்கள். பெற்றோர்கள் இருவரும் எரிச்சலைடைந்தவர்களாக வேலைக்குச் சென்றுவிட்டார்கள். இதுவே அவர்கள் தங்களின் இரண்டு மகன்களையும் பார்த்த இறுதித் தருணம். அன்றிரவே பெற்றோர்களின் அனுமதியின்றி மூன்று பிள்ளைகளும் தங்களின் மாமாவுடன் கூர் நோக்கிய பயணத்தை தொடங்கியிருந்தார்கள். அன்று இரவு கொண்டாட்ட இடத்திலிருந்து பெற்றோருக்கு தொலைபேசியில் அழைத்தார்கள். நாளை மூவரையும் வந்து அழைத்துச் செல்வதாக அம்மா கண்டிப்பாக சொல்லிவிட்டார். அந்த இரவு கொண்டாட்டம் நிறைந்த ஒரு அமைதியான இரவாக இருக்கவேண்டியது. வேறு வேறு மாநிலங்களிலிருந்து வந்த 15 தமிழர்கள் அந்த நான்கரை அறைகொண்ட மேல்மாடி வீட்டிற்குள் இருந்தார்கள். இலங்கையில் எல்லோரும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள். வீட்டின் ஏனைய பகுதிகள் யாருமற்று இருந்தது. இரவுச் சாப்பாடு இரவு ஒன்பதரை மணிக்கு பரிமாறப்பட்டது. மூன்று சிறுவர்களின் தாத்தாவின் நினைவாக காலியான நாற்காலியில் ஒரு கோப்பையில் படையல் வைத்தார்கள். மதுவோ, சிகிரெட்டோ யாரும் பாவிக்கவில்லை. இரவு பன்னிரெண்டே கால் மணிக்கு முழித்திருந்த கடைசியானவரும் தூங்கப் போய்விட்டார். இரண்டு மணிநேரத்தின் பின்னர், 2:14 மணிக்கு, கூர் காவல்துறைக்கு தொலைபேசியில் Alexanderstrasse 38 இல் அமைந்துள்ள வீட்டில் தீப்பிடித்துவிட்டதாக தகவல் கிடைத்தது. திசைதெரியாத அளவிற்கு புகை அறைகளை நிரப்பியது. அதுவரை அந்த வீட்டிற்கு வெளிச்சம் கொடுத்துக்கொண்டிருந்த விளக்குகள் அணைந்துபோயின. மாடிப்படியில் தீப்பிடித்ததால் யாராலும் கீழே இறங்கி வர முடியவில்லை. யன்னல் வழியாக 5 மீட்டர் கீழே குதிக்கமுடிந்தவர்கள் குதித்து உயிரை காப்பாற்றிக்கொண்டார்கள். பெரும்பாலானவர்கள் இதன் போது காயமுற்றார்கள். சுயநினைவுற்றிருந்த மேனாவை யாரோ ஒருவர் யன்னலுக்கே வெளியே வீசினார். கீழேயிருந்த இன்னொருவர் அவரை ஏந்திக்கொண்டார். இரு ஆண்கள் இறுதிவரை கீழே குதிக்க மறுத்துவிட்டார்கள். 18 வயதான சக்திவேல் தம்பிராஜா மற்றும் 40 வயதான தேவராஜா சின்னத்தம்பி. அவர்களின் உடல் அடையாளம் காணமுடியதளவிற்கு தீயில் கருகிப்போனது. சிறுவர்கள் முரளியும் முகுந்தனும் தூக்கத்தில் இருக்கும் போதே மூச்சுத்திணறி இறந்துபோயிருக்க வேண்டும். Yves Bachmann (Fotos) வாழ்த்திய அயலவர்கள் Margarethe Sauter இரண்டு சிறுவர்களின் எரிந்துபோன உடல்களின் மிச்சத்தினை காவலர்கள் வெளியில் கொண்டு வரும் போது நேரில் பார்த்தவர். எரியூட்டப்பட்ட வீட்டின் முன் தான் அவரின் வீடும் உள்ளது. Alexanderstrasse 38 இல் இப்படி ஒரு சம்பவம் நடந்ததற்கான எந்த தடயமும் இப்பொழுது அங்கே இல்லை. ஆப்பிள் மரங்கள் சூழ ஒரு அடுக்குமாடி கட்டிடம் அதே இடத்தில் எழுந்துநிற்கிறது. Margareth Sauter இன் வீட்டிற்கு முன்னால் காத்திருந்த வேளையில் அவர் சைக்கிளில் வந்தார். அவரிடம் இங்கே நடந்தது பற்றி தெரியுமா என்று கேட்டோம். அப்பொழுது இருபது வயதின் ஆரம்பத்திலிருந்த Margarethe படப்பிடிப்பாளராக Bündner Tagblatt என்ற பத்திரிகையில் பணியிலிருந்தார். அலறல் சத்தம் தூக்கத்திலிருந்த அவரை எழுப்பியது. யன்னலை திறந்து பார்த்தவர் உடனே காவல்துறைக்கு தொலைபேசி எடுத்து தகவல் சொல்லிவிட்டு, தன்னுடைய போர்வையை எடுத்துக்கொண்டு கீழே ஓடினார். சிறிய தீக் காயங்களுடன் தப்பி வந்த ஒருவர் மீது போர்த்திவிட்டார். அக்கம் பக்கத்திலிருந்த ஒருவரிடமும் முதலாவது மாடிக்கு எட்டும் அளவிற்கு ஏணி இருக்கவில்லை. சில நிமிடங்களின் பின்னர் தீயணைப்பு வாகனங்கள் வந்துவிட்டன. அதன் பின்னர் தான் புகைப்படக் கருவியை எடுத்து தன்னுடைய கடமையை செய்தார். சம்பவத்தை ஆவணமாக்கினார். யாருமற்ற கீழ்த்தளத்தில் தீ வைக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக வெளிநாட்டவர்கள் மீது சமூகத்தில் வெறுப்புணர்வு நிலவியது. இந்த சம்பவத்திற்கு மூன்று வாரங்கள் முன்னர் காவல்துறைக்கு “சுத்தமான சுவிஸ் நோக்கி” என்ற வாசகத்துடன் ATO (Anti Tamil Organisation) என்ற அமைப்பின் துண்டுப்பிரசுரம் கிடைத்திருந்தது. இந்த காரணங்களை வைத்தே Margareth Sauter இது ஒரு கொலை என்று அக்கணமே முடிவுசெய்துவிட்டார். நாம் முன்னர் சந்தித்த பத்திரிகையாளர் Reto Padrutt இடம் அந்த துண்டுப்பிரசுரத்தின் நகல் ஒன்று இருந்தது. இதை யார் அச்சிட்டு பொதுவெளிக்கு கொண்டுவந்தார்கள் என்று அவரால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் அந்த காலகட்டத்தில் கூர் நகரத்தில் நாஜி ஸ்வஸ்திகா குறியீடு ஒரு வீட்டில் பதியப்பட்டிருந்ததை அவர் நினைவு கூர்கிறார். அந்த வீடு நாஜிகள் சந்திக்கும் இடமாக இருந்திருக்கவேண்டும். கூர் நகரசபையிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்களில் ஒரு அதிர்ச்சியளிக்கும் கடிதம் கிடைத்தது. அந்த தீ வைத்ததற்கு உரிமைகொண்டாடி, நகரசபை உறுப்பினரான Luzi Bärtsch என்பவருக்கு முகவரியிட்டு ஒரு அநாமதேய கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில்: தீ வைக்கப்பட்டதா? ஆம்! மூன்றாவதும் இறுதியுமான எச்சரிக்கை. அகதிகளை எங்களுடைய கிராமங்களிலிருந்தும், நகரங்களிலிருந்தும் வெளியேற்ற வேண்டும். இல்லையென்றால் ஒருவர்கூட மிச்சமிருக்காதபடி அனைத்து முகாம்களிற்கும் தீ வைக்கப்படும். -“Rütlischwur ஒப்பந்தம் 1291” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. தமிழ் நாணயக் குற்றி போர் மற்றும் உள்நாட்டில் நிலவிய அச்சுறுத்தல் காரணமாக 80களின் இறுதியிலும் 90களின் ஆரம்பத்திலும் சுவிஸ் நாட்டிற்கு நியாமான காரணத்துடன் தமிழர்கள் வந்திருந்தபோதும், சுவிஸ் நாட்டவர்களிற்கு அவர்களின் வருகை அச்சத்தையும் அதேநேரம் வெறுப்பையும் உண்டுபண்ணியது. அவர்களின் புலம்பெயர் உண்மைத்தன்மையை ஏற்க மறுத்தனர். தமிழர்கள் ஒருபோதும் இந் நாட்டின் குடிமக்கள் ஆகமாட்டார்கள் என்ற கருத்து பாராளுமன்றம் வரை நிலவியது. தமிழர்கள் மீதான பாகுபாட்டினை Thun நகரத்தில் வெளிப்படையாகவே காணமுடிந்தது. ஏனைய அகதிகளிற்கு வழங்கப்பட்ட சுவிஸ் பிராங் உதவித்தொகை போன்று தமிழர்களிற்கு வழங்கப்படவில்லை. தமிழர்களிற்கென்று “தமிழ் நாணய குற்றி” ஒன்றை வழங்கினார்கள். இது ஒரு விளையாட்டுப்பொருள் போன்ற நாணய வடிவம் கொண்டது. இதனை தமிழர்கள் உள்ளூர் கடைகளில் கொடுத்து பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும். (காணொளி-2) 1995ஆம் ஆண்டு இனவாதத்திற்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்படும் வரை தேசிய கட்சிகள் வெளிப்படையாகவே தமிழர்களிற்கு எதிரான இனவெறியினை அவர்களின் கட்சி நிகழ்ச்சி நிரலிலேயே ஒரு அங்கமாக வைத்திருந்தார்கள். ஊடகங்களும் தம் பங்கிற்கு அறமற்று செயற்பட்டன. Blick பத்திரிகை தமிழர்களை “லெதர் ஜாக்கெட் ஆண்கள்” என்று வகைப்படுத்தி, சுவிஸ் நாட்டில் போதைப்பொருள் ‘ஹெராயின் தமிழர்களின்’ கட்டுப்பாட்டில் என்று எழுதியது. ஆனாலும் புள்ளிவிபரங்கள் இதற்கு எதிரான கருத்தை வெளிப்படுத்தின. தமிழர்களின் குற்றச்செயலும் சுவிஸ் நாட்டவர்களின் குற்றச்செயலும் ஒரே அளவில் இருந்தது. Tagesanzeiger பத்திரிகை தமிழர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் மது பழக்கத்திற்கு அடிமையானவர்கள் என்று தவறான கருத்தை எழுதித்தள்ளியது. Margarethe Sauter ற்கு தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுக்கொண்டிருந்த பிரச்சாரம் பற்றி தெரிந்திருக்கவில்லை. ஆனால் தமிழர்களை வேண்டா விருந்தாளிகளாக சுவிஸ் மாக்கள் ஒரு பொதுப்பார்வையில் பார்த்தார்கள் என்பதை அவர் உணர்ந்திருந்தார். தீ வைக்கப்பட்ட அந்த இரவில் இதனை நேரிலும் கண்டார். அயலவர்களில் பாதிக்கு மேற்பட்டவர்கள் நீர், போர்வை என்று தந்து உதவினார்கள். ஏனையவர்கள் அவர்களின் வீட்டு வேலியை தாண்டி வர மறுத்துவிட்டார்கள். “இவர்களிற்கு இப்படி நடப்பது சரி தான். இவர்கள் இங்கே வந்திருக்கக்கூடாது” என்று முரளியினதும் முகுந்தனினதும் எரிந்த உடல்களை தீ அணைப்புத்துறை வெளியில் கொண்டுவரும் போது காதுபட பேசிக்கொண்டார்கள். Margarethe Sauter எடுத்த புகைப்படங்கள் அடுத்த நாள் காலையில் Bündner Tagblatt என்ற உள்ளூர் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்டது. இந்த புகைப்படங்களை தன்னுடன் சுமந்துகொண்டிருப்பது அவருக்கு மனபாரமாக இருந்ததால் புகைப்படங்களின் நகலை சிலவடங்களிற்கு முன்னர் துண்டுதுண்டாக வெட்டி எறிந்திருக்கிறார். இன்று வரை அவருக்கு புரியாத புதிராக ஒரு விடயம் இருக்கிறது. எத்தனையோ விபத்துக்களை புகைப்படம் எடுத்திருக்கிறார். பெரும்பாலான நேரங்களில் அடுத்த நாள் வழக்கறிஞர்கள் இவரிடம் அந்த புகைப்படங்களை விசாரணைக்காக எடுத்துச்சென்றிருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தை தான் புகைப்படம் எடுத்தது தெரிந்தும் இதுவரை தன்னிடம் இருந்து எந்த புகைப்படமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எல்லா புகைப்படங்களுமே ஆதாரங்கள். அதற்காக அவர்கள் ஒரு முறைகூட தன்னை தொடர்புகொள்ளவில்லை என்று முடித்தார். அக்கா தீயிடப்பட்ட அந்த இரவில் மழைபெய்யத்தொடங்கியதும் மேனாவிற்கு நினைவு வந்தது. ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் வந்து அவரின் சகோதரர்கள் என்ன உடை அணிந்திருந்தார்கள் என்று விசாரித்தார். “முரளி ஒரு பச்சை-நீல காற்சட்டையும், முகுந்தன் சிகப்பு நிற காற்சட்டையும்” என்றார். இப்பொழுது மேனா 41 வயது பெண். St Gallen மாநிலத்தில் திருமணமாகி இரண்டு குழந்தைகளிற்கு அம்மா. திருமணத்தின் பின்னர் அவரின் பெயர் மேனா கந்தையா அல்ல, மேனா நிரோசன். அவர் ஏன் எங்களை தொலைபேசியில் தொடர்புகொள்கிறார் என்று அவருக்கே தெரியவில்லை என்றும், என்னுடைய பெற்றோர்களுடன் கூட நான் இந்தச் சம்பவம் பற்றி பேசுவதிலை என்றும் சொன்னார். இறுதியாக அவர் எங்களை சந்திப்பதற்கு ஒத்துக்கொண்டார். St.Gallen இல் உள்ள ஒரு கஃபேயில் சந்தித்தோம். மேனா மனிதவளத் துறையில் பணிபுரிகிறார். பணியிடத்திலிருந்து நேரடியாக எங்களை சந்திப்பதற்கு வந்திருந்தார். அந்தச் சம்பவம் பற்றி பேசாமல் மௌனமாகவே இதுவரை காலமும் கடந்து வந்திருக்கிறார்கள். தன்னுடைய சகோதரர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிவித்திருக்காத போதும், காலப்போக்கில் அவரே அதனை புரிந்துகொண்டார். அந்த சம்பவத்தின் பின்னர் நேரடியாக மருத்துவமனையிலிருந்து மூவரும் St.Gallen இல் உள்ள அவர்களின் வீட்டிற்கே சென்றுவிட்டார்கள். வீட்டிற்குள் வந்ததும் பெற்றோர்கள் வீட்டில் தொங்கிய எல்லா கடவுள் படங்களையும் கிழித்தெறிந்தார்கள். மேனா பெற்றோர்களுடனே அவர்களின் அறையில் தூங்கி எழுந்தார். பயம். இது இன்றுவரை அவரை பின்தொடர்கிறது. தான் ஒரு தங்கக் கூண்டிற்குள் வளர்ந்தவர் என்றார். இவரையும் இழந்துவிடக்கூடாது என்ற பயத்தினால் பெற்றோர்கள் இவரை மிகவும் கவனமாக வளர்த்தார்கள். திருமணத்திற்கு பின்னரும் மேனா பெற்றோர்களை விட்டு பிரிய விரும்பவில்லை. அவரின் கணவர் அவர்களுடன் சேர்ந்து இங்கேயே இருக்கிறார். இருவருக்கும் இரண்டு ஆண்பிள்ளைகள். மூத்தவன் முரளி போல் மெலிந்தும் கருப்பாகவும், இளையவன் முகுந்தன் போல பருத்த உடலுடன் இருப்பது தன்னுடைய சகோதரர்கள் தன்னுடனே இருப்பது போன்ற ஆறுதலை தனக்கு தருகிறது என்றார். இடைப்பட்ட இந்தக் காலத்தில் இதுபற்றி அவர் பெரிதாக யாருடனும் பேசியதில்லை. ஆனால் ஆழ்மனதில் வடு அப்படியே தான் புதைந்திருக்கிறது. 6 வருடங்களிற்கு முன்னர் ஜேர்மன் வேகவிதியில் சென்றுகொண்டிருந்த வேளையில் ஒரு வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்திருக்கிறார். அந்தக் கணமே அதே இடத்தில் காரை நிறுத்திவிட்டார். அதிஷ்டவசமாக விபரிதம் எதுவும் நடக்கவில்லை. வேக வீதியின் நடுவில் நின்ற காரை கணவர் ஓரத்தில் நிறுத்தினர். எங்களிடம் இருக்கும் ஆவணங்கள் பற்றியும் நாங்கள் கண்டுபிடித்தவை பற்றியும் அவரிடம் கூறினோம். சிறிது மௌனமாக இருந்துவிட்டு இது தனக்கு வேதனையளிக்கிறது என்றார். கேள்விகள் எதுவும் கேட்காமலே தொடர்ந்து “இதுவரை சுவிஸ் நாட்டை ஒரு இனவெறி பிடித்த நாடாக தான் உணரவில்லை. ஒருமுறை கூட தன்னை யாரும் பாகுபாட்டுடன் நடத்தவில்லை. ஆனால் இப்பொழுது இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பதை என்னவென்று சொல்வது” என்றார். இறுதியாக இதுவரை அது ஒரு விபத்து என்று நம்பியிருந்ததாகவும், இந்த நாட்டில் தானும் தன்னுடைய குடும்பமும் சம அந்தஸ்து பெற்றிருக்கிறோம் என்ற நம்பிக்கையை கேள்விக்குள்ளாகியிருக்கிறது என்றும் தெரிவித்தார். Yves Bachmann (Fotos) நாஜிக்கள் ஏற்கனவே கூறியது போல் இந்த தீ வைத்த சம்பவம் தற்செயலாக நடந்த ஒன்றல்ல. 80களின் ஆரம்பமும் 90களின் தொடக்கமும் பாசிச சக்திகளிற்கு பொற்காலமாக விளங்கியது. இந்த காலகட்டத்தை வரலாற்றாசிரியர்கள் பாசிசவாதிகளின் “வசந்தகாலம்” என்கின்றனர். 1930களில் துளிர்விட்டிருந்த பாசிசம் பின்னர் படிப்படியாக இனவாதிகளின் கட்டுக்குள் வெவ்வேறு பெயர்களில் வந்தது. இங்கிலாந்திலிருந்து இங்கே வந்த இந்த இனவாதம் இளைய தலைமுறையினரின் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட ஒவ்வொரு பள்ளியிலும் ஒருவரையாவது நியோ நாஜிகளின் அடையாளமான மொட்டைத் தலையுடனும், லெதர் ஜாக்கெட்ருடனும் காணக்கூடியதாக இருந்தது. சுவிஸ் பொதுச்சமூகத்திற்கு இவர்கள் புதிதாக இருந்தார்கள். குறும்புக்கார இளைஞர்களாக பார்த்தார்கள். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் உட்கார வைக்கப்பட்டார்கள். சுவிஸ் ஜனாதிபதிக்கு ஈடான புகழினை சில நாஜிகள் அடையமுடிந்தது. குறிப்பிட்டு கூறுவதென்றால் Marcel Strebel என்பவரை கூறலாம். “Zischtigslub” என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தவர் அங்கே வேலை செய்த ஒருகறுப்பு நிறப் பெண்ணை “கறுப்புப் பரத்தை” என்று பேசி, அந்த பெண்ணின் மீது துப்பியும் இருக்கிறார். இதெல்லாம் நடந்த பின்னரும் அவரை நிகழ்ச்சித் தொகுப்பாளர் வரவேற்று நிகழ்ச்சியினை நடத்தியிருக்கிறார். இது போன்ற சம்பவங்கள் பற்றி அந்தக் காலத்தில் பத்திரிகையாளராக இருந்த Jürg Frischknecht உடன் பேச முயற்சித்தோம். இனவாதிகள் பற்றி இவரை தவிர வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. துரதிஷ்டவசமாக அவர் சிலவருடங்களிற்கு முன்னர் இறந்து விட்டார் என்ற செய்தி மட்டுமே எங்களிற்காக காத்திருந்தது. ஆனால் அவர் எழுதிய இனவாதிகள் பற்றிய “Die neuen Fröntler und Rassisten” என்ற புத்தகத்தை அனைவருக்கும் விட்டுச்சென்றுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் கூர் நகரில் நடந்த சம்பவம் பற்றி இப்படி எழுதியுள்ளார்: முரளியும் முகுந்தனும் இறந்துபோன அதே ஆண்டு, பிரிபெர்க் நகரில் Mustafa Yildirim என்ற 44 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை ஒரு இனவாத மாணவனால் கொல்லப்பட்டார். Regensdorf நகரில் முன்னாள் சுவிஸ் பாக்ஸிங் சம்பியனான Walter E. தமிழரான சாந்தகுமார் சிவகுரு என்பவரை முகத்தில் ஒரே ஒரு குத்தின் மூலம் கொன்றார். சாந்தகுமார் வேலை செய்த உணவகத்தின் முதலாளி அவரை நினைவுகூரும் போது “ஒவ்வொரு முறையும் சாந்தகுமார் சமையல் கூடத்திற்குள் வரும் பொழுதும் சூரிய ஒளி போல் பிரகாசித்துக் கொண்டிருக்கும் அவன் முகம்” என்றார். 1988 தொடக்கம் 1993 வரை இனவாதிகளால் சுவிசில் 13 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். மக்கள்தொகையுடன் ஒப்பிட்டு பார்த்தால் இது ஐரோப்பாவில் உள்ள ஏனைய நாடுகளை விடவும், ஏன் ஜெர்மனை விடவும் அதிகம். கொல்லப்பட்டவர்களை நினைவுகூரும் முகமாக அவர்களின் பெயர்கள் எந்த தெருவுக்கும் வைக்கப்படவில்லை. எந்த ஜனாதிபதியும், வரலாற்றாசிரியரும் இவர்களை நினைவுகூர்ந்து பேசவில்லை. Frischknecht தனது புத்தகத்தில் இன்னொன்றையும் பதிவுசெய்திருந்தார். இனவாதிகள் முக்கியமாக தமிழர்களை தங்களுடைய எதிரிகளாக பார்த்தார்கள். உதாரணமாக ‘சுக்’ (Zug) நகரில் நடந்த தமிழர்கள் மீதான வேட்டை. 25 ஆண்களும் பெண்களும் 20.05 .1989 அன்று நகரின் முக்கிய பகுதியில் சந்தித்துக்கொண்டார்கள். அவர்களின் நோக்கம் -இரும்பு கம்பிகளாலும் சைக்கிள் சங்கிலியாலும்- தமிழர்களை தாக்குவதாகும். வேலைவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தவர்களை தாக்கினார்கள். பலர் படுகாயமடைந்தார்கள். அந்த ஆண்டு மட்டும் சுவிசில் எத்தனை அகதிகள் தங்குமுகாம் தீ வைத்து கொளுத்தப்பட்டது என்பதை ஆராய்ந்தோம். மொத்தம் 13 ஆகும். கூர் நகரை ஒட்டிய பகுதிகளில் மட்டும் நான்கு முறை. எனவே தான் Alexanderstrasse இல் நடந்த சம்பவம் தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவிற்கு வர வேண்டியுள்ளது. தடயம் கூர் சம்பவத்தின் விசாரணை ஆவணங்களை பார்வையிடுவதற்காக அரச அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆண்டு நடந்த நான்கு தீ வைப்பு சம்பவங்களையும் ஆராய்ந்தோம். 29.11.1988 ‘க்ளோஸ்ட்டர்’ இல் நடந்தது ஆறு நபர்கள் தங்கியிருந்த முகாமிற்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது. உயிர் சேதம் ஏதும் இல்லை. காவல்துறையினருக்கு ஒரு அநாமதேய தொலைபேசி அழைப்பு சென்றிருக்கிறது. அதில் “நாங்கள் தொடர்ந்து செய்வோம்” என்று கூறியிருக்கிறார்கள். “அடுத்தது உங்களுடைய வீடாக கூட இருக்கலாம்” என்று அகதிகளிற்கு உதவியவர்களின் வீடுகளிற்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருக்கிறது. 02.07.1989 முரளி, முகுந்தன் மற்றும் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் 02.08.1989 கூரில் Loestrasse என்ற இடத்தில 100 பேர் வசித்து வந்த முகாமிற்கு இரவு தீ வைக்கபட்டது. விழித்திருந்த ஒருவர் தீ பிடித்ததை கண்டு அணைத்துள்ளார். 07.08.1989 அதே Loestrasseஇல் மீண்டும் தீ வைக்கப்பட்டது. சுற்றியிருந்தவர்களால் தீ அணைக்கப்பட்டது. மேலே கூறிய சம்பவங்களில் தீ வைக்கப்பட்ட முறை நான்கு சம்பவத்திலும் ஒரே மாதிரியானதாக இருக்கிறது. இரவு நேரம், தீ வேகமாக பருவுவதற்காக கையாண்ட யுக்தி, நித்திரையில் இருப்பவர்கள் தப்பித்து போக முடியாத படி வாசலில் தீ வைத்தது என்று எல்லா சம்பவத்திலும் ஒற்றுமை காணப்படுகிறது. இந்த ஒற்றுமைகளை அன்று காவல்துறை கவனத்திற் கொள்ள முயற்சி செய்திருக்கவில்லை. இத்தனைக்கும் தமிழர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெற்றிருக்கிறது. சம்பவத்தில் உயிர்பிழைத்த பத்து தமிழர்கள், காவல்துறைக்கு தீ பிடித்ததை அறிவித்த இருவர், வீட்டு மின்சார வேலைக்கு பொறுப்பான ஒருவர், வீட்டின் அடித்தளத்தில் கார் திருத்தும் நிறுவனர் மற்றும் ஒரு சந்தேகப்படும்படியான நபர் என்று அவர்களின் விசாரணையை முடித்துக்கொண்டார்கள். சுருக்கமாக சொல்வதானால், காவல்துறை விசாரணைக்காக தொடர்பு கொண்ட நபர்களை விட, இந்த செய்திக்காக நாங்கள் தொடர்புகொண்ட நபர்களின் எண்ணிக்கை அதிகம். விசாரணைக்குழுவின் போக்கு இந்த சம்பவம் விபத்தா அல்லது அகதிகளே தீ வைத்தார்களா என்ற கோணத்தில் இருந்தது. இரண்டிற்குமான ஒரு ஆதாரம்கூட இருக்கவில்லை. காவல்துறையினரின் விசாரணைக் கேள்விகள் சில தமிழர்களிற்குள் குழு மோதல்கள் சம்பந்தமாகவும், லிபிய அல்லது சிரியா நாட்டு அகதிகளுடன் தமிழர்களுக்கு முரண் இருக்கிறதா என்ற திசையில் இருந்தது. துண்டுப் பிரசுரங்கள், மொட்டைக் கடிதங்கள், ஏற்கனவே நடைபெற்ற தீ வைப்பு சம்பவங்கள் என்று ஆதாரங்கள் போதிய அளவு இருந்தும் எந்த கேள்வியும் “இனவாதிகள் இதில் சம்மந்தப்பட்டிருக்கலாம்” என்ற கோணத்தில் கேட்கப்படவில்லை. ஒட்டுமொத்தமாக இந்த விசாரணையில் அரச தரப்பு இனவாத கோணத்தில் விசாரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, இந்த சம்பவத்தை விசாரித்து குற்றவாளிகளை கண்டுபிடித்தற்கான ஆர்வமே அவர்களிடம் காணக் கிடைக்கவில்லை. அல்லது எங்களுடைய கண்களிற்கு புலப்படாமல் ஏதாவதை தவறவிட்டுவிட்டோமா? ஓய்வுபெற்ற காவலதிகாரி ஓய்வுபெற்ற காவலதிகாரியான Hannes Tarnutzer (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 35 வருடங்களிற்கு முன்னர் இந்த சம்பவத்தில் நேரடியாக சம்பந்தப்பட்டவர். Landquart இல் அமைந்துள்ள ஒரு கஃபேயில் அவரை சந்தித்தோம். விசாரணை சம்மந்தமான ஆவணங்களை அவரிடம் காட்டினோம். முழுமையான விசாரணை ஆவணங்களை அவரும் இப்பொழுது தான் முதல் முறையாக பார்க்கின்றார். 35 வருடங்கள் சென்றிருந்தாலும் அவர் இந்த சம்பவத்தை நினைவில் வைத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது. அவரின் பணிக்காலத்தில் நடைபெற்ற தீ விபத்து சம்பவத்தில் இந்த கூர் சம்பவத்தில் மட்டுமே உயிர்கள் பலியாகியிருந்தன. எரிந்த உடல்களின் நாற்றம் இப்பொழுதும் அவருக்கு நினைவிலிருக்கிறது. இப்பொழுது இருக்கின்ற வசதிகள் அப்பொழுது இருந்திருந்தால் கண்டிப்பாக கொலைகாரர்களை பிடித்திருக்கமுடியும் என்றார். எங்களிடமிருந்த அரச ஆவண கோப்புகளை கொடுத்ததும் “இவ்வளவு தானா” என்று வியந்தார். ஒரு திருட்டு சம்பவத்திற்கே 15 கிலோ ஆவணக் கோப்புகள் சேர்ந்த சம்பவம் ஒன்று தனக்கு தெரியும் என்றார். இது வெறும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலான கோப்புகள். சம்பவம் நடந்து இரண்டு நாட்களின் பின்னர் சம்பவ இடத்தின் அருகிலிருப்பவர் தன்னுடைய காரில் இருந்து யாரோ பெட்ரோல் திருடிவிட்டார்கள் என்ற தகவலை ஆவணத்தில் வாசித்தார். திருடியவர்கள் ஒரு துணியை வைத்து மீண்டும் அடைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள். பெட்ரோல் டேங்கின் மூடி கண்டுபிடிக்கப்படவில்லை. கைரேகை ஏன் எடுக்கப்படவில்லை என்று Tarnutzer கேட்டார். துண்டுப்பிரசுரம், மொட்டைக் கடதாசி, கைரேகை என்று எதுபற்றியும் விசாரிக்கப்படவில்லை என்று வியந்து போனார். அயலவர்களிடம்கூட விசாரணை நடைபெறவில்லை என்பது அவருக்கு இன்னும் வியப்பை கொடுத்தது. சம்பவம் நடைபெற்ற மாநிலத்தில் இப்படியான சம்பவங்களை விசாரணை செய்வதற்கு வல்லுநர்கள் பற்றாக்குறை இருந்ததனால், சூரிச் மாநிலத்திலிருந்து வல்லுநர்கள் வரவழைக்கப் பட்டிருக்கிறார்கள். சூரிச் தடயவியலாளர்கள் சம்பவம் நடந்த இடத்தின் நுழைவாயில் காவல்துறையினர் வரும் போது திறந்திருந்ததாகவும், ஆனால் உள்ளே இருந்தவர்கள் தங்கள் கதவினை பூட்டியதாகவும் உறுதியாக சொன்னதை கவனித்தார். ஆனால் அவர்களும் விசாரணை கோணத்தை வேறுதிசையிலையே கொண்டு சென்றார்கள். மாடிப்படியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு மெழுகு டப்பா மீதே அவர்களின் விசாரணை தொடர்ந்தது. அந்த டப்பாவை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் அதனுள் இருந்த மெழுகு தான் தீப்பிடிக்க காரணமாக இருந்தது என்ற முடிவுக்கு அந்த வல்லுநர்கள் வந்திருந்தார்கள். இது கூர் காவல்துறையினரின் முடிவுடன் முரண்பட்டிருந்தது. கூர் காவல்துறையினர் மின்சாரத்தினால் தான் தீப்பிடித்திருந்தது என்ற முடிவில் இருந்தார்கள். ஆனால் சூரிச் வல்லுநர்கள் அதற்கு சந்தர்ப்பம் இல்லை, ஏனென்றால் தீ பிடித்த நேரத்தில் மின்விளக்குகள் எரிந்துகொண்டிருந்தன என்றும், மின்சார பெட்டி வேறொரு மாடியிலும், தீ வேறொரு மாடியிலும் பற்றிக்கொண்டதால் இரண்டிற்கும் சம்மந்தம் இருக்க வாய்ப்பில்லை என்றும் மறுத்தனர். உயிர்களை பலிவாங்கும் நோக்கில் தீ வைக்கப்பட்டிருக்கிறது என்பது தனக்கு இதை வாசிக்கும்போது தெளிவாக தெரிகிறது என்றார் Tarnutzer. என்னமோ ஒரு மெழுவர்த்தி எரிந்துவிட்டது போல் உதாசீனமான விசாரணை நடந்திருக்கிறது. அவர் இன்றொரு சந்தேகத்தையும் எழுப்புகிறார். மெழுகு டப்பாவில் மெழுகு தான் இருந்ததா அல்லது பெட்ரோல் போன்ற வேறேதாவது இருந்ததா என்ற கோணத்திலும் அவர்கள் விசாரித்திருக்க வேண்டும். எல்லா தாள்களையும் மீண்டும் மீண்டும் முன்னும் பின்னும் புரட்டிப்பார்த்துவிட்டு “கொப்பர்தாமி” என்று ஜேர்மன் மொழியில் மெதுவாக திட்டினார். இரண்டு முக்கியமான விடயங்களை அவர் சுட்டிக்காட்டினார். 10.10.1989 அன்று சூரிச் தடயவியலாளர்கள் அறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்கள். ஐந்து நாட்கள் முன்னர் 05.10.1989 அன்று அதாவது தீ வைக்கப்பட்டு மூன்று மதங்களின் பின்னர், இந்த சம்பவத்தை விசாரித்த விசேட குழு விசாரணை முடிவை கோரியிருந்தது. அதாவது சூரிச் தடயவியலாளர்களின் அறிக்கை வர முன்னரே இந்த விசாரணையை முடித்துக்கொள்ள கூர் காவல்துறை விரும்பியிருக்கிறது. தரமற்ற காவல் மற்றும் வழக்கு விசாரணை Alexanderstrasse இல் நடந்த சம்பவத்தின் விசாரணை மிக தரமற்ற ஒன்று என்பது தெளிவாகிறது. மாநில நீதிமன்றம் இதில் நடந்துகொண்ட விதம் கூட கேள்விக்குரியதாக இருக்கிறது. அரச தரப்பு இந்த விசாரணையை போதுமற்ற சாட்சியங்கள் இல்லாததனால் முடிவுக்கு கொண்டுவருகிறது என்று எழுதியிருக்கிறது. இதனை எதிர்த்து பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞரும், பாதிக்கப்பட்ட குடும்பமும் மேல் முறையீடு செய்தது. இந்த மேல் முறையீட்டை நீதிமன்றம் நிராகரித்தது. விசித்திரமாக இம்முறை அதற்காக வேறொரு காரணத்தை நீதிமன்றம் முன்வைத்தது. தீ யாரோ ஒருவரால் வைக்கப்பட்டதற்கான போதிய ஆதாரம் இல்லை என்றும், இறுதிவரை துண்டுப்பிரசுரங்கள் யாரால் விநியோகிக்கபட்டது என்பதை கண்டுபிடிக்க முடியாத காரணத்தாலும் மேல்முறையீட்டை நிராகரித்தது. இந்தக் கோணத்தில் விசாரணை நடைபெற்றிருந்தால் தானே கண்டுபிடிப்பதற்கு!. ஆனால் ஏன் இந்த கோணத்தில் விசாரணை நடைபெறவில்லை என்ற கேள்வியை நீதிமன்றம் கேட்கவில்லை. சுவிஸ் நாட்டு சட்டத்தை பொறுத்தவரையில் ஒரு விசாரணையின் இறுதி எல்லைவரை சென்று கிடைக்கக்கூடிய அனைத்து கோணத்திலும் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தில் இந்த நடைமுறை கடைப்பிடிக்கப் படவில்லை. இந்த சம்பவத்தை விசாரித்த நீதிபதிகளை பேட்டியெடுக்க விரும்பினோம். ஒருவர் இறந்துவிட்டார். ஏனைய உயிருடன் இருபவர்களிற்கு இந்த சம்பவம் நினைவிலில்லை. இது பற்றி மாநில அரசின் விளக்கத்தை கேட்டு எழுதினோம். இந்த சம்பவம் முழுமையாக விசாரணை நடைபெறாமல் கிடப்பில் போடப்பட்டதென்பதால் அது பற்றி அவர்கள் விளக்கம் தரமுடியாது என்றார்கள். இங்கே ஒன்றை தெளிவிவுபடுத்த வேண்டும். பொதுவாக மாநில காவலதிகாரிகள் இப்படி அக்கறையின்மை காட்டுவதில்லை. இந்த மாநிலத்தில் நடந்த வேறு சம்பவங்களில் திறம்பட விசாரித்து சிறப்பாக செயல்பட்டவர்கள் தான். உதாரணமாக க்ளோஸ்ட்டரில் நடந்த தீ சம்பவத்தை கூறலாம். வெறுமனே பொருட்சேதம் மட்டுமே ஏற்பட்டிருந்த போதும், கவனத்துடனும் அக்கைறையுடனும் விசாரணையை மேற்கொண்டிருந்தார்கள். இந்த க்ளோஸ்ட்டர் சம்பவத்தில் கார் டயர் தடயம் தொடங்கி அநாமதேய தொலைபேசி அழைப்புகள் வரை தீவிரமான விசாரணை மேற்கொண்டார்கள். மொட்டைக் கடதாசிகள் எந்த வகையான தட்டச்சுஇயந்திரத்தில் எழுதப்பட்டது என கண்டறிந்தார்கள். இந்த சம்பவத்தின் விசாரணை முற்றுப் பெறாவிட்டாலும், முழுமையான விசாரணையை நடத்தி போதிய அளவு முயற்சி செய்திருப்பது தெளிவாகிறது. ஆனால் கூர் சம்பவத்தில் மட்டும் ஏன் இந்த முரண்? இத்தனைக்கும் க்ளோஸ்ட்டர் சம்பவத்தை விசாரித்த அதே நீதிபதிகள் தான் கூர் சம்பவத்திலும் நீதிபதிகளாக இருந்திருக்கிறார்கள். நான்கு தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது எங்களுடைய ஆராய்ச்சியில் தெளிவாக தெரிகிறது. இதில் சம்மந்தப்பட்ட அரசு தரப்பு சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை. சரியான விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதுடன் சட்டப்படியும் விசாரிக்காமல் சட்டத்தை மீறியிருக்கிறார்கள். ஏன் இந்த மெத்தனப் போக்கை கடைப்பிடித்தார்கள் என்பது எங்களுக்கு புரியாத புதிராகவே இருக்கிறது. சம்மந்தப்பட்டவர்களில் ஒரு தரப்பு கூட சரியான முறையில் செயல்படவில்லை. இது தற்செயலாக நடந்த ஒன்றா அல்லது கவனக்குறைவால் நடந்த ஒன்றா என்று தெரியவில்லை. Frischknecht தன்னுடைய புத்தகத்தில் அன்றைய நிலவரத்தை இப்படி சித்தரித்திருந்தார், “இனவாதத்தை மென்மையான கோணத்தில் பார்ப்பது காவல்துறையினரிடம் மட்டுமல்ல, சட்டத்துறையிலும் காணப்படுகின்றது”. துக்கம் ஓய்வு பெற்ற காவலதிகாரி Tarnutzer எங்களை அடிக்கடி தொடர்புகொண்டு அந்த சிறுவர்களின் குடும்பம் பற்றியும், எங்களுடைய ஆராய்ச்சி பற்றியும் கேட்டறிந்துகொண்டார். இறுதியாக அந்த சிறுவர்களின் ஆசிரியராக இருந்த Helena Graf என்பவரின் உதவியுடன் அவர்களின் பெற்றோரை கண்டுபிடித்தோம். இவர் வழக்கறிஞரை ஏற்பாடு செய்து கொடுத்தவர், சிறுவர்களின் கல்லறைக்காக நிதி சேகரித்துக் கொடுத்தவர், பெண்கள் தினத்தில் சிறுவர்களின் அம்மா ஓய்வெடுக்கவேண்டும் என்றெண்ணி அவருக்காக அவரின் துப்பரவு பணியை அன்றைய நாள் பொறுப்பெடுத்து செய்து வருபவர். Helena அந்த குடும்பத்திற்கு மிகவும் நெருக்கமானவர். குடும்ப நிகழ்வுகளில் பங்குபற்றுவார். மிரட்டல் கடிதங்கள் இவருக்கும் வந்தது. ஒரு ஞாயிறு மதியம் ஓய்வுபெற்ற Helenaவை St.Gallen புகையிரதநிலையத்தில் சந்தித்தோம். அவருடைய காரில் எங்களை கந்தையா குடும்பத்தினரின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். வசந்தியும் அவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டார்கள். மேனா வேலைக்குச்சென்றிருந்தார். பேரப்பிள்ளைகள் பள்ளிக்குச் சென்றுவிட்டனர். எங்களிற்கு குடிக்க தண்ணீர் தந்துவிட்டு முரளி மற்றும் முருகன் பற்றி வசந்தி பேச ஆரம்பித்தார். அவர்களிடம் இருந்த சிகப்பு நிற சைக்கிள், நேரத்துக்கு வீட்டிற்கு வராத பிள்ளைகளை தேடி விளையாட்டு திடலிற்கு போன சம்பவம் என்று அவர் சொல்லிக்கொண்டே போனார். சிலநேரங்களில் அழுதார். சிலநேரங்களில் சிரித்தார். அவரின் கணவர் அருகில் அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தார். அந்த சம்பவம் நடைபெற்று ஒரு தடவை கூட காவல்துறையினர் தங்களை கூப்பிட்டு விசாரிக்கவில்லை என்றார் வசந்தி. மாரடைப்பு, ஆஸ்துமா, சர்க்கரை நோய், மனஅழுத்தம் என்று மருந்துகளுடன் நாட்களை கழித்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் வசந்தியும் கணவரும் எப்பொழுதுமே வேலைசெய்து கொண்டே இருந்தார்கள். சிலவேளைகளில் இரண்டு வேலைகளை செய்தார்கள். ஒரு பிள்ளையின் இழப்பை தவிர துக்கமான ஒன்று பெற்றோர்களிற்கு இருக்கமுடியாது. அது ஒரு கொலையென்றால் துக்கத்துடன் சேர்ந்து இன்னும் மேலதிகமான உணர்வுகள் தோன்றும். ஆனால் கந்தையா குடும்பத்திற்கு பழிவாங்கும் எண்ணம் எப்பொழுதுமே இருந்ததில்லை. அவர்களிற்கு இருப்பதெல்லாம் தங்களிற்கோ அல்லது தங்களின் மகளிற்கோ, பேரப்பிள்ளைகளிற்கோ எதுவும் நடந்துவிடும் என்ற அச்ச உணர்வு மட்டுமே. நமக்கெல்லாம் பாதுகாப்பான சுவிஸ் நாடு, அவர்களிற்கு ஆபத்தான நாடாக இருக்கிறது. முரளியும் முகுந்தனும் கொலைசெய்யப் பட்டார்கள் என்பதை உறுதியாக நம்புகிறார்கள். இனி கொலைகாரர்களை கண்டு பிடித்தாலும் தங்களுடைய பிள்ளைகள் திரும்பி வரப்போவதில்லை. ஆனால் குறைந்த பட்சம் அவர்களை யார் கொன்றார்கள் என்ற கேள்விக்கான விடை என்றாலும் கிடைக்கும் என்கிறார்கள். கொலைகாரர்கள் உங்கள் முன்னால் வந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு வசந்தி “தமிழர்களும் மனிதர்கள்தான், ஏதாவது பிரச்சனையென்றால் எங்களுடன் பேசுங்கள். எங்களை கொலை செய்யாதீர்கள்” என்று சொல்வேன் என்றார். Helena வசந்தியின் கையை பிடித்து ஆறுதல்படுத்தினர். Helena இறுதிவரை இந்த விசாரணை தொடர்வதற்கான முயற்சியை செய்துகொண்டே இருந்தார். ஒரு நண்பியாக மட்டுமல்லாமல், இந்நாட்டு மக்கள் சார்பாகவும் அந்த குடும்பத்திற்கு துணையாக நிற்க விரும்பினார். நாங்கள் விடைபெறுவதற்கு முன்னர் வசந்தி எங்களிற்கு இரண்டு விடயங்களை காட்ட விரும்பினார். கையை மடித்துவிட்டு “இங்கே பாருங்கள்” என்று முரளி மற்றும் முகுந்தன் என்று தன்னுடைய கையில் பச்சைகுத்தியிருப்பதை காட்டினார். “என்னுடைய இதயப் பக்கமா குத்தியிருக்கிறேன்” என்றார். தொடர்ச்சியாக பலவருடங்களாக கல்லறைக்கு சென்றுவந்திருக்கிறார். சிலநாட்களில் இரண்டுமுறையும் சென்றிருக்கிறார். ஆனால் இருபது வருடங்களின் பின்னர் அந்த கல்லறை விலக்கப்பட்டுவிட்டது. வசந்திக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. தான் இனி எங்கே எப்படி துக்கத்தை அனுஷ்டிப்பது என்று தெரிந்திருக்கவில்லை? எனவேதான் தன்னுடைய கையில் அவர்களின் பெயர்களை பச்சைகுத்தியிருக்கிறார். சாம்பிராணி வாசம் வீசுகின்ற மேல் மாடிக்கு எங்களை அழைத்துச்சென்றார். சிறிய சிலைகள், கடவுள் படங்கள் என்று அறை நிரம்பியிருந்தது. முரளி மற்றும் முகுந்தன் இருவரின் புகைப்படமும் அங்கே இருந்தது. இந்த St.Gallen மாநிலத்தில் இந்த சிறிய அறை மட்டும் தான் அவர்களின் நினைவிடமாக இருக்கிறது. ஒடுக்கல் சென்ற ஆண்டு இந்த சம்பவத்தில் ஒரு திருப்பம் ஏற்படுவதற்கான அறிகுறிகள் தோன்றின. சோஷலிச கட்சியின் கிராமசபை உறுப்பினரான Jean-Pierre Menge இந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து கொல்லப்பட்ட நால்வருக்கும் ஒரு நினைவுச்சின்னம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இதனை மாநில அரசு மறுத்துவிட்டது. அதை ஒரு இனவாத கொலைச் சம்பவமாக அவர்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொண்டாலும், 35 வருடங்களின் பின்னர் அதற்கான நினைவுச்சின்னம் வைப்பது ஏனைய இனவாத சம்பவங்களுக்கும் உந்துசக்தியாக அமைந்துவிடும் என்று அஞ்சினர். அனைவருக்கும் நினைவுச்சின்னம் வைக்கவேண்டிய கோரிக்கைகள் வலுத்துவிடும் என்ற காரணத்தை கூறி மறுத்துவிட்டார்கள். இதை வரலாற்றாசிரியர் Damir Skenderovic இடம் கூறினோம். அவர் நம்பமறுத்தவராக தலையாட்டினார். சுவிசில் இனவாதம் இல்லையென்பதை வெளியுலகிற்கு காட்ட விரும்பியே இப்படியானவற்றை நிராகரிக்கிறார்கள் என்றார். Damir Skenderovic பிரிபேர்க் பல்கலைக்கழகத்தில் வரலாற்றாசிரியராக பணிபுரிகிறார். சுவிஸ் நாட்டில் இனவாதத்தை பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரே ஒரு வரலாற்றாசிரியர் இவர் மட்டுமே. சுற்றியுள்ள அண்டை நாடுகளில் இந் நிலை இல்லை என்கிறார். ஏனைய நாடுகளில் அரசாங்கமும் விழிப்புணர்வளித்து வருகிறது. உதாரணமாக ஸ்வீடன், ஜேர்மன் போன்ற நாடுகளில் காவல்துறையினருக்கு இனவாதத்தை கையாளும் விதம் பற்றிய படிப்பு வழங்கப்படுகிறது. ஏனைய நாடுகளை விட இங்கே இனவாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் என்றபோதும், எதுவுமே நடக்காதது போல காட்டிக் கொள்கிறார்கள். இப்படியான விடயங்களில் மறதி என்பது வசதியான ஒன்றாக அவர்களுக்கு இருக்கிறது. இனவாதம் ஐரோப்பா முழுவதும் தற்பொழுது தலைதூக்கிக் கொண்டிருக்கும் இன்றைய காலகட்டத்தில் அதனை எதிர்த்து போரிடுவதற்கு அரசு முன்வர வேண்டும். கூர் சம்பவம் பற்றிய எங்களுடைய முடிவுகளை அவரிடம் தெரிவித்த போது, அவர் மாநில அரசின் தோல்வி என்றார். இதற்கு ஒரு குழு அமைத்து விசாரணையை மீண்டும் தொடங்க வேண்டும் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த ஏதாவது புதிய சாட்சியோ, ஏன் கொலைகாரர்களே முன்வந்தால் கூட, இனி இந்த சம்பவத்தில் யாரையும் தண்டிக்க முடியாது. சுவிஸ் நாட்டு சட்டத்தின் படி கொலைக்கான தண்டனை 30 வருடங்களின் பின்னர் காலாவதியாகிவிடும். அப்படியென்றால் இந்த ஆராய்ச்சி எதற்கு? செய்தி எதற்கு? என்ன மாற்றத்தை கொண்டுவந்துவிடப் போகிறது? இந்தச் செய்திகூட ஒரு நினைவுச் சின்னமாக இருக்கலாம். இதன் பின்னராவது சிலரிற்கு அந்த சிறுவர்களின் பெயர் நினைவில் வந்து போகட்டும். “”முரளி & முகுந்தன்”” கபிலன் (சுவிஸ்) 23.01.2025 மூலம் : https://www.tagesanzeiger.ch/brandanschlag-chur-1989-starben-vier-menschen-aus-sri-lanka-211092696091 காணொளி-1: https://www.srf.ch/play/tv/rundschau/video/brand-in-chur?urn=urn:srf:video:2879bfcd-a6f5-4874-85a8-ebbfb709f27b காணொளி-2: https://www.srf.ch/play/tv/drs-aktuell/video/asylanten-batzen-thun?urn=urn:srf:video:b406228c-659b-445a-86e9-a7e23b5ee83d https://sudumanal.com/2025/01/23/முரளி-மற்றும்-முகுந்தனை/2 points
-
1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
ஐரோப்பாவில் யூதர்கள் உட்பட்ட மக்களை வதை/கொலை செய்த முகாம்கள் (concentration camps) விடுவிக்கப் பட்ட நினைவு நாளுக்கு அண்மையாக பொருத்தமான கட்டுரை. இதை வாசிக்க வேண்டிய புலம் பெயர் தமிழர்கள் எம்மிடையே இருக்கிறார்கள். இன்றும் ஜேர்மனியின் AfD போன்ற கட்சிகளை, ஏனைய குடியேறிகளுக்கெதிரான துவேசம் காரணமாக ஆதரிக்கும் புலத் தமிழர்களுக்கு சமர்ப்பணம்!2 points
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
அடப்பாவிகளா.. ஒரு மனுசன் விழுந்து முறிஞ்சு போய் கிடக்குறான்.. ஆள் தப்புமா தப்பாதா எண்டு பெட் கட்டி பாக்குரானுவள்.. கல் நெஞ்சக்காரனுவள்..😂😂2 points
-
யாழ். கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு;இருவர் காயம்
உலகில் தடை செய்யப்பட ரோலர் மீன் பிடியை கொண்டு வடகிழக்கு கடலில் அடாத்தாக மீன் பிடிப்பவர்களை தமிழக மீனவர்கள் என்று அழைப்பதே பிழையானது. அவர்களை ரோலர் மீன் வள கொள்ளைகாரர்கள் என்று ஊடகங்கள் குறிப்பிட வேணும் . ஏனென்றால் பலருக்கும் புரிவதில்லை தடை செய்யப்பட்ட மீன் பிடி முறையை கொண்டு அவர்களின் சொந்த கடல் பகுதியையும் நாசம் பண்ணி கடைசியில் வடகிழக்கு மீன்கள் உருவாகும் கருவறை கண்ட மேடைகள் மீது ரோலிங் அடிப்பதால் வடகிழக்கு தமிழர்களின் சொத்தை கொள்ளையடிக்கிறார்கள் இப்படி சொத்தை நாசம் பண்ணுபவர்களை எப்படி அழைக்கவேணும் ?2 points
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
இது அரசியல். இலங்கைத் தமிழரின் இருப்பு தொடர்பானது. சீமானுக்குப் பின்னால் திரிவதினாலோ அல்லது திமுகவுக்குப் பின்னால் இழுபடுவதாலோ எமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாளைக்கு அவர்கள் ஒன்று சேர்வார்கள் பின்னர் பிரிவார்கள். அப்போது அணில் ஏறவிட்ட நாய்களாக வாய் பிளக்கப்போவது நாம்தான். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபாகரனை வைத்து எல்லோரும் வியாபாரம் செய்து முடித்தாயிற்று. இப்போது வி புக்களின் படப்பிடிப்பாளர் vs தலைவரின் மெய்ப்பாதுகாப்பாளர் என்று வி புக்களே பிரிந்தாயிற்று. இனம் அழிந்த பின்னர் வரலாறு toilet paper க்குச் சமம்.2 points
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
சுமந்திரனுக்கு பாதுகாப்பு படை வந்த செய்தியை அறிந்த அதிர்ச்சியினால் அறிவிழந்திருக்கலாம்.🤔2 points
-
அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
2 pointsஒரு புறம் டொலருக்கு எதிராக எதுவும் வரக் கூடாது என்றபடி மறுபக்கம் வரிகளை நாடுகள் மீது சுமத்துவது எதிர்மறையான விளைவுகளையே தரப் போகிறது. ஆனால் இந்த பைத்தியம் இன்னும் என்ன எல்லாம் செய்யப்போகிதோ?2 points
-
வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
வலிகாம மக்கள் தென்மராட்சி நோக்கி A9 பாதையில் இடம்பெயர்ந்து போனது அண்ணை.2 points
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
தாயை புணருமாரு கூறிய ஒருவரை இப்படி தெரிந்து கொண்டே புகழ்கிறார் எனில்…. சீமானுக்கு இப்படி பேசிய நாட்களில் அந்த கூற்றில் உடன்பாடு இருந்திருக்க வேண்டும்… இல்லை என்றால்… அவர் அப்படி கூறவில்லை.2 points
-
பெரியாரே ஒப்பற்ற தலைவன் | தமிழ்நாட்டின் அதி சிறந்த நடிகனின் பழைய பேச்சு
ஏன் கிண்டித்தான் பாருங்களேன்!2 points
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஅதை எல்லாம் சீமான் படித்து சிந்தித்து தெளிவடைந்த பின்பு தான் சுயமரியாதையுடன் வாழ கற்று தந்தவர் பெரியார் என்று தனது வழிகாட்டியாக ஏற்று கொண்டார்.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
நன்றி கோஷான். நீங்களும், இன்னும் சிலரும் இது சம்பந்தமாக முன்னரும் எழுதியிருப்பீர்கள் என்று தான் நினைத்தேன். முன்னரே நான் சொன்னது போல, யாழை விட்டுப் போகமாட்டேன், ஆனால் இக்கட்டான சமயங்களில் தேவை என்றால் நாளுக்கு நான்கு கவிதைகள் என்ற கணக்கில் எழுதிப் போடுவதாக உள்ளேன்............🤣. முன்னோர்களும் தமிழர்களாகவே இருந்து, இன்றும் அவர்களின் தாய்மொழி தமிழாகவும் இருக்கும் எம் மக்களில் ஒரு பிரிவினரையே தள்ளி வைப்பதை பற்றித் தான் நான் குறிப்பிட்டிருந்தேன், ஓணாண்டியார். கோஷான் மேலே எழுதியிருப்பதும் இதையொட்டியே. தாய்மொழியை வைத்து ஒரு அடையாளம் கொள்வதில் உயர்வு தாழ்வு கிடையவே கிடையாது. பிறப்பால் வரும் எந்த அடையாளத்தாலும் உயர்வு தாழ்வு என்பது கிடையவே கிடையாது.1 point
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
இது 12 மணத்தியால கணக்கு மாரியோ அண்ணை. 🤣🤣🤣1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உங்களுக்கு எப்படி மலயாளியையும் தெலுங்கர்களையும் வடநாட்டவர்களையும் மதம் மொழிகடந்து பார்த்து பெருமைப்பட முடிகிறதோ அப்படியே ஒரு தமிழனால் இன்னொரு தமிழனை தமிழன் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்.. பிரெஞ்சுக்காரனுக்கு பிரெஞ்சுக்காரன் என்ற அடையாளத்தில் பிரிட்டிஸ்காறனுக்கு இங்கிலிஸ் என்ற அடையாளத்தில் பார்த்து பெருமைப்படவும் முடியும்.. உங்களுடையதைப்போலவே இதுவும் தவறல்ல.. தன் இன அடையாளங்களை துறப்பது எப்படி ஒரு பாவச்செயல் இல்லையோ அப்படியோ தன் இன அடையாளங்களை சுமப்பதும் ஒன்றும் பாவச்செயல் அல்லவே..1 point
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
ஒருவரை திட்டமிட்டு இழிவுபடுத்துவது தற்காலிக பின்னடைவை தரலாம் ஆனால் வரலாற்றை திருத்தி விட முடியாது. ஆனால் நாம் யாரை எதிர்த்து பேச வேண்டுமோ, எவரிடமிருந்து நம் உரிமையை பெறவேண்டுமோ அதை செய்யாமல், தவறான விடையங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். திராவிடம் தோற்றாலும் தமிழ் தேசியம் தோற்றாலும் அவதிப்படப்போவது தமிழர்கள் தான். காரணம் தமிழ்நாட்டில் திராவிடம் தோற்றால் தமிழ் தேசியம் ஏற்படப்போவதில்லை, இந்திய தேசியமே மேழெம். அதே போல் ஈழத்தில் தமிழ் தேசியம் தோற்றால் ஒன்றும் சொல்வதற்கில்லை.1 point
-
2 கோடி தருவதாக கூறியும் வீட்டை விற்க மறுப்பு: சீனாவில் பிடிவாதம் பிடித்த தாத்தாவுக்கு சிக்கல்
1 pointசீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில்லாமல் அதிகாரிகள் திரும்பி சென்றனர். ஆனால் நடந்ததே வேறு. நெடுஞ்சாலை அமைக்கும் பணி தொடங்கியது. பெரிய பெரிய இயந்திரங்களை கொண்டுவந்து தாத்தா வீட்டை நடுவில் விட்டு விட்டு இருபக்கமும் நெடுஞ்சாலை அமைத்து முடித்தனர். தற்போது தாத்தா தனது தவறை உணர்ந்து வருந்திக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: எனது வீட்டுக்காக சீன அரசு பணம் தருவதாக சொன்னது நியாயமானதாக இப்போது தெரிகிறது. நெடுஞ்சாலை பயன்பாட்டுக்கு வந்த பிறகு இந்த வீட்டில் என்னால் வசிக்க முடியுமா என்று தெரியவில்லை. வாகனங்கள் இரைச்சல், தூசியுடன், தனி வீட்டில் இருக்க முடியாது. முந்தைய காலத்துக்கு என்னால் செல்ல முடிந்தால், அரசு கொடுக்கும் பணத்தை வாங்கி கொண்டு என் வீட்டை இடிக்க ஒப்புக் கொள்வேன். ஆனால், தற்போது மிகப் பெரிய பந்தையத்தில் தோற்றுவிட்டு நிற்கிறேன். இவ்வாறு அந்த தாத்தா தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ள தாத்தாவின் வீடு, தற்போது பள்ளத்தில் கிடக்கிறது. அந்த வீட்டின் கூரையும் நெடுஞ்சாலையும் சமமாக உள்ளது. அவர் வீட்டுக்கு வந்து செல்வது மிகவும் சவாலாக உள்ளது. https://thinakkural.lk/article/3149871 point
-
2 கோடி தருவதாக கூறியும் வீட்டை விற்க மறுப்பு: சீனாவில் பிடிவாதம் பிடித்த தாத்தாவுக்கு சிக்கல்
1 pointஇதே மாதிரி பிரபல சூதாட்ட இடமான அட்லான்ரிக் சிற்றி என்ற இடத்திலும் ஒருவீடு கொடுக்கவே மாட்டேன் என்று இருந்தார். இருபக்கமும் பெரிய கோட்டல்கள் எழுப்பி விட்டனர். வீட்என் பெறுமதி முன்னரைவிட எவ்வளவோ பெறுமதி இறங்கிவிட்டது. முக்கியமாக இதை வாங்கவே யாரும் முன்வருகிறார்கள் இல்லை என்று சொன்னார்கள்.1 point
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
இது உண்மையாக இருக்கலாம்.. ஏனெனில் அந்தக்காலப்பகுதியில் ஈழவிடுதலைப்போராட்டத்துக்காக சீமானின் பேச்சின் வீச்சு செறிவானது..1 point
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஇவர் செய்தியை காவி வரும் messenger இல்லை அண்ணா - அவரே மெசேஜ் சொல்லுகிறார். உதாரணமாக மகிந்த சீமானை ஆதரித்தால்- மகிந்தவின் ரெக்கோர்ட்டையும் பற்றி கதைப்பது போலவே இது. ஆகவே அவரை சூட் பண்ணலாம். ———- அண்மையில் சந்தோஷ், அமரதாஸ், ராஜ்குமார், கார்திக், வேல்முருகன் சொல்வது இதைத்தான்👇 1. சீமான் தலைவர் போட்டோ என நாம் காண்பவை - போலியானவை 2. ஆனால் தலைவரை சீமான் சில நிமிடங்கள் சந்தித்தார் 3. இது வெறும் ஹாய், ஹவ் ஆர் யூ சந்திப்பு. இதன் போட்டோவும், வீடியோவும் சந்தோஷ் வசம் உள்ளது. 5. துப்பாக்கி பயிற்சி ஏதும் கொடுக்கபடவில்லை. அது எல்லாளன் படபிடிப்பு தளத்தில் சீமான் ஆசை பட்டு துவக்குடன் போஸ் கொடுத்து எடுத்த படம். இதன் ஜியோ லொக்கேசன் உள்ள மூலப்பிரதியிம் சந்தோசிடம் உண்டு. 4. பாலாமை கறி, கடலுணவு சாப்பிடாத சந்தோசுக்கு, சந்தோசை ஏமாற்றி ஆட்டுக்கறி என புலிகள் கொடுத்தது. அதை தன் கதை என சீமான் சொல்கிறார். இதை போல தடா சந்திரசேகரனனுக்கு நடந்ததையும் தனது என்கிறார். 5. தலைவரோ மதிவதனியோ சீமானை வீட்டுக்கு கூப்பிட்டு கையால் சாப்பாடு போட்டு, மணிக்கணக்கில் அரசியல் பேசவில்லை. (இது ஈழ போராட்டத்தை அனுபவித்தோருக்கு எப்போதோ தெரிந்த விடயம்). 6. புலிகள் சீமானை அதிகம் நம்பவில்லை( இதுவும் புலிகளை பற்றி அறிந்தோருக்கு புதிய செய்தி அல்ல). 7. விஜி அண்ணியை அருகில் வைத்து கொண்டு சாவுகளத்தில் இருந்து பேசிய சேரலாதனுடன் ஸ்கைப் பேசியதால், சேரலாதன் சீமான் தொடர்பை முறித்து கொண்டார். 7. சூசை போன் எடுத்தது சந்தோசுக்கு. அந்த முழு உரையாடல் சந்தோஷ் வசம் உள்ளது. அதில் சீமானை போலவே ஏனையோர், வைகோ, மணி யையும் சூசை குறிப்பிட்டார். 👆 இவை இன்னும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க பட்வில்லை. ஆனால் சீமான் கதைகள் போல அல்லாமல் இந்த கதையாடலில் (narrative) அதிக உள்முரண்கள் இல்லை. அத்தோடு புலிகளின் சந்தேககுணம், இயங்கும் விதத்துடனும் இது ஒத்து போகிறது.1 point
-
சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
தம்பி, தூயவன் உள்ளிட்ட இன்ஸ்பெக்ரர் மாருக்கான பதிலை கோசான் எப்பவோ சொல்லி விட்டார்: "என் குடும்பத்தில் இத்தனை மாவீரர்கள், இத்தனை காசு, இத்தனை சோத்துப் பார்சல் கொடுத்தேன்.." இதெல்லாம் சிறு பிள்ளைகள் கொப்பிக்குள் சேர்த்து வைத்துக் கொள்ளும் "ஸ்ரிக்கர்" அல்ல! தோளில் அணிந்து கொண்டு காட்டாப்புக் காட்டும் ஆபரணங்களும் அல்ல! உயிரைக் கொடுத்தவன் தான் மிக உச்சத்தில், தன் வாழ்வைக் கொடுத்துத் தப்பி வாழ்பவன் அவர்களோடு அதே நிலையில், அதற்குப் பிறகு தான் மிச்ச எல்லாரும்! இந்த படி நிலையில், சீமான் போன்ற மாவீரர் தியாகத்தை விற்று வயிறு வளர்க்கும் சராசரி அரசியல் வாதிக்கு இடமேயில்லை! சீமான் போன்றோர் தேவையில்லாத ஆணி அல்ல, கிள்ளி எறிய வேண்டிய களை!1 point
-
அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointசீமானே பெரிய பெரியாரிஸ்டாகயிருக்கும் போது வேறொருவர் வேண்டாமென்று தவிர்த்திருக்கலாம். அவர் எழுதிய கட்டுரையில் கூட பெரியாரை மேற்க்கோள் காட்டாமல் எழுத முடியவில்லை1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அசரமாட்டார் எங்கள் காமக்கொடூரன், வாய்ச்சொல் வீரன், பொய்களின் உருவம் , ஈழத்தின் சாபம் எங்கள் காமக்கண்ணன் சங்கி சைமன்!!!1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
உங்களை மாதிரி ஆன ஆட்களுடன் ஈழ பயணம் செய்தால் பின்னால் குத்தி விட்டு தப்பி ஓடி விடுவிங்கள் போர உசிரு சீமானோடையே போகட்டும்🙏👍...........................1 point- அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
1 pointஒருவேளை, புலிகள் அழிந்த பின்னர் சொத்துகளை நாம் பங்கிட்டோம, கொடியையும் சின்னத்தையும் வைத்து சீமான் பிழைக்கட்டும் என்று இந்த தேசிய செயற்பாட்டாளர்கள் என்று தம்மை அழைக்கும் இந்த மாபியாக் கூட்டம் நினைத்திருக்கும். அதை விட இந்த பரணி என்பவர் மிக மோசமான இனவாதி. தமிழ் மக்களுக்கு நியாயமான அரசியல் தீர்வு ஏற்படாமல் அடக்குமுறையும் அழிவும் மட்டுமே நடக்க வேண்டும் என்று விரும்பும் மனநோயாளி. நச்சுக்கருத்துகளை பரப்பிவருபவர். அநுர ஆட்சிக்கு வந்தால் தமிழ் மக்கள் மீது மிக கொடுமையான அடக்குமுறைகளை கட்டவிழ்தது விடுவார், அதுவே எமக்கு நல்லது என்று எழுதியவர். அதன் மூலம் தமிழீழம் கிடைக்கும் என்று தன்னை தொடரும் முட்டாள் கூட்டத்துக்கு எழுதியவர். தாயகத்தில் தமிழ் மக்கள் மீது பாரிய அடக்குமுறைகளை ஏவி விடும் அரசாங்கம் வரவேண்டும் என்று விரும்பும், தமிழ் மக்களின் அழிவை ரசிக்கும் ஒரு சைக்கோ. தன்னை போல் சைக்கோக்களாக இருக்கும் மண்டை முழுவதும் களிமண்ணை வைத்திருக்கும் சிறிய அளவிலான தனது fans கூட்டதை வைத்து தனது சைக்கோ கருத்துக்களை பரப்ப செய்பவர். இந்த நச்சு பாம்பின் கருத்துக்கள் பெரும்பான்மை தமிழ் மக்களை சென்றடைவதில்லை என்பது ஒரு பெரிய ஆறுதல்.1 point- அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
1 pointஆமாம் நிச்சியமாக,......நீங்களும் தான் ஆனால் தேர்தலுக்கு. முதல் யாழ் களத்தில் எழுதினார் உங்கள் நண்பர் ட்ரம்பு வந்தால் வரி குறையும் என்று ....ஆனால் பொருள்கள் விலை கூடப்போகுது அந்த பொருள்களை வாங்குவோர். தான் வரி காட்டுவார்கள் .....வரி குறைப்பினால். வரும் வருமானம் பொருள்கள் வாங்கும் பொழுது செலவு ஆகும் எனவே…,.வரி குறைப்பு = வரி விதிப்பு 🤣. உங்கள் பொக்கிஷங்கள். கூடப் போவதில்லை1 point- ஒரே இரவில் 7 கோள்கள் வானில் தெரியும் அதிசயம் - எப்போது, எப்படி பார்ப்பது? பூமியில் என்ன நடக்கும்?
1 point6 கோள்களின் அணிவகுப்பை பார்வையிடும் அரிதான வாய்ப்பு! இன்றைய நாட்களில் சூரிய குடும்பத்தின் 6 கோள்கள் நேராக அணிவகுக்கும் அரிதான காட்சியை பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி மற்றும் யுரேனஸ் ஆகிய கோள்களை இவ்வாறு பார்வையிட முடியுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதிகவியல் பிரிவின் வானியல், விண்வெளி அறிவியல் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். வௌ்ளி, சனி, வியாழன், செவ்வாய் ஆகிய கோள்கள் வெற்றுக்கண்களால் அவதானிக்கக் கூடியவாறு பிரகாசமாக தென்படும் எனவும் பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார். நெப்டியூன், யுரேனஸ் ஆகிய கோள்களை தொலைநோக்கியினுடாக பார்வையிடுவதற்கும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பேராசிரியர் கூறினார். எதிர்வரும் 29 ஆம் திகதி வரை சூரிய அஸ்தமனத்திற்கு பின்னர் 90 நிமிடங்களுக்கு கோள்களை இவ்வாறு பார்வையிட முடியும் என பேராசிரியர் சந்தன ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/14185091 point- வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
பட மூலாதாரம்,GETTY IMAGES 5 மணி நேரங்களுக்கு முன்னர் நெட்ஸாரிம் பாதை (Netzarim Corridor) என அறியப்படும் சாலையை வழியாக பயணிக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியதை அடுத்து, பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர். கடலோர பாதையில் பெருந்திரளான மக்கள் வடக்கு நோக்கி நடந்து செல்வதை டிரோன் காட்சிகள் காட்டுகின்றன. ஆனால் கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,EPA பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,கார்களில் பயணிக்கும் மக்கள், சோதனைச் சாவடிகளில் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவுக்கு திரும்பி வருகின்றனர் பாலத்தீனியர்கள் கடந்த சனிக்கிழமை அன்றே, வடக்கு நோக்கி திரும்புவதாக இருந்தது. ஆனால் பணயக்கைதியாக வைக்கப்பட்டுள்ள இஸ்ரேலைச் சேர்ந்த அர்பெல் யெஹுத் என்ற பெண்ணை விடுவிப்பது தொடர்பான சர்ச்சையால், இஸ்ரேல் நெட்ஸாரிம் பாதையை அடைத்து வைத்திருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விவகாரத்தில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு காரணமாக, பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவிற்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. படக்குறிப்பு,பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். பிறகு இதில் ஒரு முடிவு எட்டப்பட்டது. யெஹுத், வரும் வியாழக்கிழமை (ஜனவரி 30) சிறைபிடிக்கப்பட்ட மற்ற இரண்டு பணயக்கைதிகளுடன் செஞ்சிலுவைச் சங்கத்திடம் ஒப்படைக்கப்படுவார். இதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்களுக்கு தெற்கு காஸாவில் இருந்து வடக்கு நோக்கி கடந்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES பட மூலாதாரம்,GETTY IMAGES அதிர்ச்சியூட்டும் யதார்த்த நிலை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,காஸா நகரின் வடக்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன சிலர் இந்த தருணத்திற்காக ஒரு வருடத்திற்கும் மேலாக காத்திருந்தனர். ஆனால் வடக்கு காஸாவை அடைந்ததும், அங்கு அவர்கள் கண்ட யதார்த்த நிலை அதிர்ச்சியூட்டுவதாவே இருந்தது. காஸா நகரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில், சில இடங்கள் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் போல காட்சியளிக்கின்றன. பட மூலாதாரம்,REUTERS வடக்கு காஸாவை அடைந்த குடும்பங்களில், முடிதிருத்தும் கலைஞரான முகம்மது இமாத் அல்-தினின் குடும்பமும் அடங்கும். தனது வீட்டை மீண்டும் பார்க்கும் ஆவலுடன் சென்றவருக்கு அதிர்ச்சியே மிஞ்சியது. தனது வீடு முற்றிலும் எரிந்து போயிருந்ததாகவும், தனது சலூன்-அழகு நிலையம் திருடர்களால் சூறையாடப்பட்டதாகவும், அதன் பின்னர் அருகிலுள்ள கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இஸ்ரேலிய விமானத் தாக்குதலால் அது மேலும் சேதமடைந்ததாகவும் முகம்மது இமாத் பிபிசி நிருபரிடம் தொலைபேசி மூலம் தெரிவித்தார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,வடக்கு காஸாவிற்கு வரும் மக்களுக்கு தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும் மற்றொன்று, லுப்னா நாசர் என்ற பெண்ணின் குடும்பம். அவர் தனது இரண்டு மகள்கள் மற்றும் மகனுடன், வடக்கு காஸாவில் உள்ள தனது கணவருடன் மீண்டும் இணைவதற்காக, சோதனைச் சாவடியின் நீண்ட வரிசையில் ஆவலுடன் காத்திருந்தார். ஆனால் தனது வீடு இருந்த பகுதியை அடைந்ததும் அவருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. அவரது வீடு அழிக்கப்பட்ட இடத்திற்கு அருகே, அவரது கணவர் ஒரு கூடாரத்தில் வசித்து வருவதைக் கண்டார் லுப்னா. பட மூலாதாரம்,REUTERS "எங்கள் குடும்பம் மீண்டும் சேர்ந்துவிட்டது, ஆனால் அந்த சந்தோஷத்தை வீட்டை இழந்ததன் துக்கம் மறைத்துவிட்டது. இப்போது வடக்கு காஸாவில் உள்ள ஒரு கூடாரத்தில் வசிக்கிறோம்" என்று பிபிசியிடம் கூறினார் லுப்னா நாசர். பட மூலாதாரம்,REUTERS ஹமாஸ் அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, "இதுவரை திரும்பி வந்தவர்கள் அல்லது அடுத்தடுத்த நாட்களில் வடக்கு காஸாவை அடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படும் மக்களுக்கு, தங்குமிடம் அளிக்க காஸா நகரத்திற்கு 1,50,000-க்கும் அதிகமான கூடாரங்கள் தேவைப்படும்." வடக்கு காஸாவில் இத்தகைய நிலை உள்ளபோதிலும், தெற்கு காஸாவில் பல மாதங்களாக துன்பங்களை அனுபவித்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு இதுவொரு குறிப்பிடத்தக்க தருணமாகவே உள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c07kvz84r8jo இந்தப் படங்களைப் பார்க்கையில் 1995 அக்டோபர் 30 யாருக்காவது நினைவுக்கு வருகிறதா?1 point- வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
15 மாதங்களுக்கு பின்னர் காசாவுக்கு திரும்பும் பாலஸ்தீனியர்கள்! பல்லாயிரக்கணக்கான மக்களின் உயிரைப் பறித்த இஸ்ரேல் – ஹமாஸ் போரானது 15 மாதங்களுக்கு பின்னர் தற்போது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இரு தரப்பும் ஏற்றுக்கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலுக்கு வந்த நிலையில், பணயக் கைதிகள் விடுதலை செய்யப்படுகின்றனர். அந்தவகையில் முதற்கட்டமாக 3 பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்தது. இரண்டாவது கட்டமாக 4 இளம் இஸ்ரேல் பெண் பணயக் கைதிகளை ஹமாஸ் நேற்று முன்தினம் விடுவித்தது. அவர்களுக்கு ஈடாக 200 பாலஸ்தீனிய பணயக் கைதிகளை இஸ்ரேல் விடுவித்துள்ளது. எவ்வாறு இருப்பினும் ஒப்பந்தப்படி பணய கைதிகளில் அர்பெல் யாஹுட் என்ற பெண்ணை ஹமாஸ் விடுவிக்கவில்லை. இதனால் ஒப்பந்தத்தை ஹமாஸ் மீறிவிட்டது என்றும், அர்பெல் யாஹுட் விடுதலை செய்யப்படும்வரை பாலஸ்தீனியர்கள் வடக்கு காசாவுக்கு திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று இஸ்ரேல் தெரிவித்தது. இதனால் இடம்பெயர்ந்த 6.5 லட்சம் பாலஸ்தீனிய மக்கள் வடக்கு காசா பகுதிக்கு திரும்புவதற்கு காத்திருப்பதாக பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து ” பணய கைதி அர்பெல் யாஹுட் உயிருடன் இருப்பதாகவும் வரும் சனிக்கிழமை அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் ஹமாஸ் தெரிவித்திருந்தது. அதன்பின்னர் நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுள்ளது. அதன்படி இரண்டு கட்டமாக அர்பெல் யஹூட் உட்பட 6 பணயக் கைதிகளை ஹமாஸ் அமைப்பு விடுதலை செய்ய முடிவு எட்டப்பட்டது. இந்நிலையில் வடக்கு காசாவுக்குள் பாலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்தது. உள்ளூர் நேரப்படி இன்று காலை 7 மணியளவில், பாலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாக கால்நடையாக கடக்க அனுமதிக்கப்பட்டனர். இது போரின் ஆரம்பத்தில் இஸ்ரேல் உருவாக்கிய இராணுவ மண்டலமாகும். இந்த பாதை வழியாக காசாவின் வடக்கு பகுதிக்கு பல்லாயிரக்கணக்கான பாலஸ்தீனியர்கள் திரும்பியுள்ளனர். இதனால் கடற்கரையை ஒட்டிய பிரதான வீதி முழுவதும் மனித தலைகளாக காட்சி அளிப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/14184881 point- அமெரிக்க வரலாற்றில் மிகப் பெரிய நாடுகடத்தல் – 500-க்கும் மேற்பட்ட சட்டவிரோத குடியேற்ற வாசிகள் கைது.
1 pointஇந்த வரிகளை உயர்த்தினால் இதைக் கட்டப் போவது மக்கள் தானே?1 point- பெரியார் – பிரபாகரனைக் கொச்சைப்படுத்துவதை இத்தோடு நிறுத்திக்கீங்க… பழ. நெடுமாறன் எச்சரிக்கை!
1 pointஅப்படியா? அந்த திரி கிடைத்தால் மீள்பதிவிடுங்கள், நீங்கள் இன்னும் அதிக தகவலோடு பதிவிட்டிருக்ககூடும். எனக்கு இதை ஒட்டி பல கேள்விகள் உண்டு, சிலவற்றிருக்கான பதில் உங்கள் திரியில் இருக்கக்கூடும்.1 point- வடக்கு காஸாவுக்கு மீண்டும் திரும்பும் பல்லாயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் - காத்திருக்கும் அதிர்ச்சிகரமான நிலை
போர் மூலம் இடம்பெயர்வது என்பது சொல்லணா துயரங்கள் நிறைந்தது. போர் இல்லா உலகம் வேண்டும். அவரவர் சொந்த மண்ணில் வாழும் கொடுப்பினை எல்லோர்க்கும் வேண்டும்.1 point- முதல்வர் ஆசை… அந்த கட்சி பெயரை சொல்ல மாட்டேன்.. சீமானை விளாசிய ஸ்டாலின்
நான் சீமானை ஆதரிக்க முக்கிய காரணம் தமிழ் தேசியமும் அவரது சமூக நலன்களுமே. அதை மேடைக்கு மேடை உரக்க கூறிவருகின்றார். அது மட்டுமல்லாமல் பொது இணைய வெளிகளில் தலைவர் படத்தை இணைத்தால் சில நிமிடங்களிலேயே அகற்றப்படும் நிலை இருக்கும் போது ......மேடைக்கு மேடை தலைவர் பிரபாரகரனின் படத்தையும் விடுதலைப்புலிகளின் கொள்கையையும் காவித்திரிபவர் சீமான் மட்டுமே. சீமான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய விரும்பினால் எத்தனையோ கொள்கைகளை முன்னிறுத்தலாம். இப்படி நாலா பக்கமும் அடிவாங்கி அரசியல் செய்ய வேண்டிய கட்டாயம் சீமானுக்கு தேவையில்லாத வேலைதான்.1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
திமுக்காவில் துட்டு கிடையாது என்றால் அடுத்த கனமே கட்சிய விட்டு கிலம்பி விடுவாங்கள்..............எவளவு காலம் காசை கொத்து தேர்தல சந்திக்க போகினம் , மக்களின் மனங்களில் மாற்றம் வந்தால் சுடலை கூப்பில தான் உக்காரனும்.........................கேட்டால் திமுக்காவை பிடிக்காது கருணாநிதிய பிடிக்காது ஆனால் முட்டு கொடுப்பதெல்லாம் அவர்களுக்கு பேசாம 200இணைய கூலிகளுடன் மெம்பர் ஆகினால் நீங்களும் காசு பார்க்கலாம் எல்லோ லொள்................1 point- சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
பாதிக்கப்பட்ட, தான் சார்ந்த மக்களின் பாதிப்புகளுக்காக குரல் எழுப்பிய சிறிதரனுக்கு நிகழ்ந்த கெடுபிடிகளை, அதற்காக சொல்லப்படும் காரணங்களை பார்த்தால், அந்த காரணங்களை வெளியிட்டவர்களின் சேவையில் சந்தேகம் ஏற்படுகிறது. பிந்தைய தகவல்: தமிழரசு கட்சி சார்ந்தவர்கள் வெளிநாட்டு தூதுவர்களை சந்திக்கும்போது சுமந்திரனையும் சி. வி. கே. சிவஞானத்தையும் இணைத்துக்கொள்ள வேண்டுமென சுமந்திரன் அடம்பிடித்தாராம். அதில் சிவஞானத்தை சேர்க்கலாம் சுமந்திரனை சேர்த்துக்கொள்ள முடியாது என கூறியதால், கூட்டம் கலைந்ததாம். ஏன் வெளிநாட்டு தூதுவர்களை, அரசியல் தலைவர்களை சுமந்திரன் சந்திக்கும்போது, தனியாகத்தான், ரகசியமாக சந்தித்தார். அவர்கள், தன்னை தனியாக வரும்படி அழைத்தார்கள் என்று விளக்கம் வேறு கொடுத்தார். இப்போ ஏன் அடம்பிடிக்கிறார்? அரசுக்கு உளவு பார்க்கவேண்டும், பதவி பெற வேண்டும். இந்த வேண்டாத கல்லை அகற்ற முடியாது, முட்டுக்கட்டைகளை ஏற்படுத்துகிறார்.1 point- பாட்டுக் கதைகள்
1 point🤣.................. பதினைந்து அல்லது இருபது வருடங்களின் முன், சில மிக அருமையான ஈழத்து எழுத்தாளர்களின் எழுத்துகளை சில தளங்களில் நான் வாசிப்பதுண்டு. இப்படியெல்லாம் எழுதவும் முடியுமா என்று ஆச்சரியப்பட வைத்தவர்கள் அவர்கள். போராட்ட காலம் அதன் நெருக்கடிகள் என்றில்லாமல், சாதாரண வாழ்க்கைகளையும் எழுதியிருந்தனர். அவர்கள் அன்று எழுதிய சில கதைகள் அப்படியே இன்றும் மனதில் தங்கி நிற்கின்றன. பின்னர் அவர்கள் காணாமல் போனார்கள். இணைய தளங்களில் எங்கும் அவர்களின் எழுத்துகளை நான் காணவில்லை. அவர்களின் முகப்புத்தகங்களில் சில தகவல்களை பதிந்திருப்பார்கள் என்று நினைக்கின்றேன், ஆனால் நான் முகப்புத்தகங்களை முற்றாக தவிர்த்துக் கொண்டிருப்பதால், எனக்கு அவர்களிடம் இருந்த அந்த இணைப்பு அப்படியே விடுபட்டுவிட்டது. இங்கு தான் நீங்கள் சொல்லும் பரிணாம வளர்ச்சி அவர்களின் பாதைகளில் நடந்ததை பின்னர் தெரிந்துகொண்டேன். எழுத்தில் இருந்து அவர்கள் சினிமாவிற்கு போயிருந்தனர். அதுவே தான் எழுத்தின் அடுத்த கட்ட வளர்ச்சி என்று பலரும் நினைத்துக் கொள்கின்றனர். அவர்கள் பணி செய்த சில படங்களையும் பார்த்தேன். மோசமான படங்கள், எந்த விதமான அனுபவத்தையும் கொடுக்காத, பல வகைகளில் செயற்கையான கதை, நடிப்பு என்பன. ஏன் இவர்கள் இப்படி ஆகினார்கள் என்று கவலையாக இருந்தது. இவர்கள் இந்த வளர்ச்சியை தேடிப் போகாமல், எழுதிக் கொண்டே இருந்திருக்கலாம் என்று தான் எனக்குத் தோன்றுகின்றது. அன்று எங்களின் சில எழுத்தாளர்கள் அ. முத்துலிங்கம் அவர்களை பகிடி செய்வார்கள். ஈழத்தின் சிறந்த எழுத்தாளர் அ. முத்துலிங்கம் என்று சில இடங்களில், விமர்சகர்களால் சொல்லப்பட்டிப்பதால், இந்த ஒவ்வாமை ஏற்பட்டிருக்கலாம். இது அந்த உலகில் மிகச் சாதாரண ஒரு வழக்கம், ஒருவரை ஒருவர் மதிக்காமல் இருப்பது. ஆனால், முத்துலிங்கம் அவர்கள் எழுத்துடன் மட்டுமே நின்று கொண்டார். பின்னர் ஒரு காலத்தில் திரும்பிப் பார்க்கையில், முத்துலிங்கம் அவர்கள் தான் முன்னுக்கு தெரியப் போகின்றார் போல. பரிணாம வளர்ச்சி என்ற பாதையில் கட்டாயம் போக வேண்டும் என்றில்லை போல, வசீ..............1 point- Pickering வாகன விபத்தில் தமிழர்கள் இருவர் பலி
உண்மையின் குரலில் அரைவாசி உண்மை இல்லை. இறந்தவர்களுக்கு ஆழ்த்த அனுதாபங்கள். 100% தவிர்க்கப்பட்டிருக்கக்கூடிய இரண்டாவது விபத்தும் இழப்பும்.1 point- 1989ஆம் ஆண்டு “கூர்” (Chur)நகரில் குழந்தைகள் முரளி & முகுந்தனை குடியிருப்பை தீவைத்து சுவிஸ் நியோ-நாசிகள் கொலைசெய்தார்களா?
வாசிக்கும் பொழுது நாம் எல்லாம் இங்கு எந்த விதத்திலும் பாதுகாப்பாக இல்லை என்றே உண்மை கண் முன் வந்து போகின்றது1 point- சீமானின் பித்தலாட்டம் அம்பலம். படம் பொய், சந்தித்தது மெய்
வாதத்தில் தோற்றவன் அவதூறை கையிலெடுப்பான்.1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சரியான பதில் பெருமாள். 😂 கணவருக்குத்தான் தெரியும்… தனது மனைவி எதனைக் கண்டு பயப்பட்டு கீழே பாய்வார் என்று… 🤣1 point - அவர்களே ‘திராவிட’ புலிகள் தான்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.