Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    12
    Points
    87988
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    19122
    Posts
  3. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    9
    Points
    3054
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    7
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/09/25 in all areas

  1. சீமான் எடுத்த மொத்த வாக்குகளை விட இப்படியான திரிகளில் கோசன் மற்றும் தோழர்கள் எழுதிய எதிர்கருத்துக்களின் விழுக்காடு கூடுதலாய் இருக்கும் போல இருக்கே. 😉☺️
  2. கர்ண பரம்பரையின் கனவு ----------------------------------------- பொழுது சாய்ந்து விட்டது போதும் விளையாடியது உள்ளே வா............. என்று இழுத்து வைத்துக் கொள்ளும் அம்மா ஏன் தான் இது எப்படி தான் இது ஒவ்வொரு நாளும் சாய்கின்றது என்று நான் விடாமல் நச்சரிக்க அதுவும் தூங்கத்தானே வேண்டும் விடிய எழும்பி வரும் வா........... என்றார் எங்கே அதன் வீடு என்றேன் அந்தப் பக்கம் என்று காலுக்கு கீழே சுட்டினார் அம்மா ஒரு நாள் நிலத்துக்கு கீழே தூங்கப் போன சூரியனை தூக்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தேன் அம்மா எழுப்பும் போது அது மீண்டும் அடி வானத்தில் இருந்து வந்து கொண்டிருந்தது.
  3. டூ லேட் ப்ரோ…டு லேட்… இந்த அறிவுரையை சீமான் தலைவரை அங்கே இழுத்து போன போது…. அல்லது பிரபாகரன் vs கருணாநிதி என ஆரம்பித்த போது…. குறைந்த பட்சம் பிரபாகரன் vs பெரியார் என இறங்கிய போதாவது சீமானை நிறுத்த சொல்லி சொல்லி இருக்க வேண்டும். (நீங்கள் இதை போன் போட்டு சீமானிடம் சொல்லி இருந்தால் - போனை வைடா புதிய மகனே என்றுதான் அவர் சொல்லி இருப்பார்). இந்த ஒப்பீட்டை செய்வது நான் அல்ல. தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவு சக்திகள். சீமானின் நச்சு கருத்தை ஒழிக்க அவர்கள் பெரியாரும் பிரபாகரனும் சமாந்திர சக்திகளே என்பதை மக்களிடம் எடுத்து போகிறார்கள். சபேசன் பேட்டி பார்திருப்பீர்கள். இது உண்மை. ஆகவே இதை நான் வரவேற்கிறேன். ஓம்…அதனால்தான் ரோவினால் இயக்கப்படும் சீமானுக்கு இத்தனை எதிர்ப்பு காட்ட வேண்டி உள்ளது. எனில் முட்டுகொடுக்காமல் இருக்கலாம். நான் உங்கள் நிலைப்பாடு என்றால் அப்படித்தான் செய்வேன். ஓம்… ஒரு உத்தரவாதமும் தருகிறேன். 2026 இல் தனித்து நின்று சீமான் 16% அல்லது கூட எடுப்பின், இன்றை உங்கள் கணிப்பு சரி என்பதை அப்போ ஏற்பேன்.
  4. பெரியாரை எதிர்ததபடி இத்தனை ஆயிரம் வாக்குகளாம்…… இதை கூற வெட்கமாய் இல்லை. இதன்படி பார்ததால் பெரியாரின் கைத்தடியா, பிரபாகரனின் வெடிகுண்டா என்று அயோக்கியதனமாக பேசி அரசியல் செய்த சீமான் கும்பலின் கணிப்பின்படி 114000 வாக்குகள் பெரியாருக்கும், 24000 வாக்குள் மட்டுமே பிரபாகரனுக்கு என்று எடுக்கலாமா? இதை தானே ஈழ அரசியல் உதாரணத்துடன் கோசான் @goshan_che தெளிவாக விளக்கி இருந்தார். இங்கு தெளிவான செய்தி பெரியாரோ பிரபாவோ இல்லை. சீமான் கும்பலின் நச்சு விதைகளை தூவும் அயோக்கிய அரசியலை தமிழ் நாட்டு மக்கள் என்றுமே ஏற்று கொள்ள போவதில்லை என்பதே செய்தி. சீமான் கும்பல் (விசிலடிச்சான் குஞ்சுகள்) திருந்தாவிட்டால் இப்படியே சீமான் தான் சாகும்வரை தனது தற்குறி தம்பிகளை ஏமாற்றி பணவேட்டை நடத்தி பலன் பெறுவது தான் சீமான் என்ற அரசியல்வாதியின் வாழ்ககை. அந்த கும்பலின் அரசியல் ஒரு சிறு கூட்டத்தோடு அடங்கி விடும். தமிழ் தேசிய அரசியல் என்ற போர்வையில் இனவாத நச்சு விதைகளை தமிழர்களிடையே விதைக்கும் சீமான் கும்பலுக்கு நடு மண்டையில் போட்ட ஈரோடு வாக்காளர்களுக்கு மீண்டும் வாழ்த்துகள்.
  5. நீங்கள் இருவரும் சொல்வது ஒரு விதத்தில் சரியாக இருக்கலாம். ஆனால் கட்டிய விகாரையை இடிப்போம் வீராவேச வசனங்கள்,மேடைப்பேச்சுக்கள் முக்கிய அரசியல்வாதிகளுக்கு சரியானதல்ல. இது இன்னும் பகையுணர்ச்சிகளை தமிழ்- சிங்கள மக்களிடையே உருவாக்கும். கடைசியில் தமிழர்களின் பிரச்சனையே இதுதான் என முடித்து விடக்கூடும்.அனுர ஆட்சியில் மக்கள் அபிவிருத்தி முக்கிய விருத்தி எனும் பெயரில் நாடகம் ஆடுவது போல்....... தமிழ் அரசியல்வாதிகள் போராட்ட அரசியலை /பேச்சுவார்த்தை அரசியலை செய்யலாமே ஒழிய வெட்டுவோம்,புடுங்குவோம்,இடிப்போம்,உடைப்போம் என்ற அரசியல் சர்வதேசமே ஒத்துக்கொள்ளாது. அனுபவங்கள்.
  6. இந்த செய்தி யாழில் வருமா? மேற்கு உலகுக்கு முட்டுக்கொடுத்த ஜீவராசிகள் இதுக்கு எப்படி முட்டு கொடுப்பார்கள் என்று எனக்குள் யோசித்தேன்...... இந்த திரியில் இருக்கும் கருத்துக்களை வாசிக்கும்போது புரண்டு புரண்டு சிரிக்க தோண்றுகிறது மிக முக்கியமாக இது எதோ ட்ரம்பின் திடடம்போல சிலர் கை கூசாது எழுதுவதுதான். காசாவை குண்டுபோட்டு சுடுகாடு ஆகியதே பைடனின் அரசுதான். குண்டு பட்டு காயம் ஆனவர்கள் காயமே இன்னமும் மாறவில்லை ....... இவர்கள் தலைகீழாக மாறி நிற்கிறார்கள்
  7. இப்படி ஒரு கீழ்த்தரமான முறையில் நாமல் தந்தைக்கு நன்றிக்கடன் செலுத்தி போர்க்குற்றத்திற்கு உடந்தையாகின்றார். மகிந்த மனம் வருந்தியிருந்தால் ஒரு விசாரணை நடாத்தி உண்மையைக் கண்டறிந்திருக்கலாம். உலகுக்குச் சொல்லியிருக்கலாம்.
  8. காற்றாடி - அத்தியாயம் மூன்று ----------------------------------------------- இரண்டு வேலைகளை அவன் செய்து கொண்டிருந்தான். பகல் நேரங்களில் அயலவர் ஒருவருடன் சேர்ந்து வயரிங் வேலை என்று சொல்லப்படும் வீடுகளுக்குள் செய்யும் மின்சார அமைப்பு வேலையையும், பின்னேரம் மற்றும் இரவு நேரங்களில் ஊரில் இருக்கும் தியேட்டரில் ஒரு வேலையையும் செய்ய ஆரம்பித்திருந்தான். வயரிங் வேலை செய்வதற்கு அவன் வீட்டில் உடன்பட்டார்கள். ஆனால் தியேட்டரில் வேலை செய்வதற்கு ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பை காட்டியிருந்தனர். அவன் வயரிங் வேலைக்கு போவதற்கு காரணமே, அதன் காரணமாக தியேட்டரில் அவன் வேலைக்குப் போவதற்கு வீட்டில் ஒத்துக் கொள்வார்கள் என்ற ஒரே ஒன்றுக்காக மட்டுமே. மற்றபடி வயரிங் வேலையில் அவனுக்கு எந்த நாட்டமும் இல்லை. அதுவும் அந்தக் காங்கிரீட் சுவர்களுக்குள்ளால் வயர்களை கொண்டு செல்வதற்காக, அந்த சுவற்றை வெட்டுவது போன்ற ஒரு வேலையில் எவருக்குத் தான் நாட்டம் வரும். ஆனால், அவனை வேலையில் துணையாக கூட்டிப் போகும் அயலவர் சில வயதுகள் கூடியவர் என்றாலும், நல்ல ஒரு நண்பர் போன்றே பழகினார். வேலை முடிந்தவுடன் அன்றன்றே அவனுக்கான சம்பளத்தையும் கொடுத்துவிடுவார். அதில் ஒரு பகுதியை அவன் அம்மாவிடம் கொடுத்து விடுவான். பல நாட்களிலும் வேலையும் இருக்கும். சினிமாவும் தியேட்டரும் அவனுக்கு ஒரு கனவு போல. அவன் பிறந்ததே சினிமாவிற்கு என்று அவனுக்குள் ஒரு உறுதியான எண்ணம் இருந்தது. பொதுவாக சமூகத்தில் எல்லோருக்கும் இருக்கும் அளவில்லாத நாயக நாயகிகள் மீதான கவர்ச்சி அவனிடம் மிகக்குறைவாகவே இருந்தது. சினிமா என்பது வெறும் ஒரு பொழுதுபோக்கு என்பதையும் தாண்டி, அதில் வரும் விடயங்களும், அங்கே வரும் கதாபாத்திரங்களும், அவற்றை திரையில் கொண்டு வரும் நடிகர்களும் உண்மை என்றே பலரும் எண்ணி, அவர்களைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொருவரும் அவர்களால் முடியாத, ஆனால் அவர்கள் செய்ய விரும்பும் சில நாயகத்தனங்களை திரையில் கண்டு, அதுவேதான் தாங்கள் என்று அடையாளப்படுத்திக் கொள்கின்றார்கள் போல. இந்த சமூகத்தில் சினிமா நடிகர்கள் மேல் இருக்கும் தீராத கவர்ச்சிக்கு இந்த மனப்பன்மையும் ஒரு அடிப்படைக் காரணம். அவனுக்கு ஒரு திரைப்படம் எப்படி உருவாக்கப்படுகின்றது, பின்னர் அது எவ்வாறு திரையில் ஓடுகின்றது என்பதிலேயே ஆர்வம் இருந்தது. அம்புலிமாமா புத்தகத்தில் இருக்கும் படங்களை ஒரே அளவுகளில் வெட்டி, அவற்றை நீட்டாக ஒட்டி, ஒரு சுருளாகச் சுற்றி , நடுவே ஒரு ஈர்க்கை வைத்து, அதைச் சுற்றிப் பார்த்து, இப்படித்தான் சினிமா உருவாகின்றது என்று அவனாகவே பரீட்சித்துப் பார்த்திருக்கின்றான். பின்னர் சிந்தனையில் இன்னும் ஒரு படி மேலே போய், ஒரு படம் அளவு இடைவெளியில் இரண்டு ஈர்க்குகளை வைத்து, ஒன்றிலிருந்து ஒன்றுக்கு அவனின் படச்சுருளை சுற்றிப் பார்த்தான். இது தான் சரியான தொழில்நுட்பம் என்று, அதையே இன்னும் முன்னேற்றி, பலருக்கும் அம்புலிமாமா படங்கள் காட்டியும் இருக்கின்றான். தியேட்டரில் வேலைக்கு போனவுடன், தினமும், தியேட்டரின் உள்பக்கத்தை கூட்ட வேண்டும். ஒவ்வொரு வரிசையாக கூட்ட வேண்டும் என்றில்லை. முன்பக்கம், முகாமையாளர் அறை மற்றும் தியேட்டரின் உள்ளே இருக்கும் நடைபாதைகளை கூட்டவேண்டும். அத்துடன் படம் பார்த்து விட்டுப் போனவர்கள் போட்டுவிட்டுப் போகும் கஞ்சல், குப்பை, கழிவுகளையும் அள்ளி எடுத்து, வெளியில் தியேட்டரின் பின்னால் இருக்கும் குப்பையில் கொண்டு போய் கொட்டவேண்டும். அதை விட்டுவிட்டுப் போனோம், இதை விட்டுவிட்டுப் போனோம் என்று பின்னர் ஓடி வருபவர்களும் உண்டு. அவன் நேராக பின்னால் இருக்கும் அந்த சின்ன குப்பை மலையைக் காட்டுவான். அநேகமானவர்கள் அங்கே தங்கள் பொருட்களை தேடி எடுக்காமலேயே போய்விடுவார்கள். சிலர் அவனையும் சேர்ந்து தேடச் சொல்லியிருக்கின்றனர்.சிலருக்கு அந்த இடத்தை பார்த்தவுடன் பொல்லாத கோபம் வந்து, சீறி விழுந்தும் இருக்கின்றனர். தங்களின் கதாநாயகர்களின் பின்னால், அவர்கள் உலவும் இடத்தின் பின்னால், இப்படி ஒரு குப்பை மலை இருப்பதை அவர்கள் இதற்கு முன்னர் அறிந்திருக்கவில்லை. படம் ஆரம்பிப்பதற்கான முதல் மணி அடித்தவுடன், கலரிப் பகுதியில் உள்ள கதவில் அவன் போய் நிற்கவேண்டும். அங்கே வருபவர்களின் அனுமதிச்சீட்டுகளை கிழித்து, அவர்களை உள்ளே விடவேண்டும். கலரிப் பகுதியில் நீண்ட வாங்குகள் மட்டுமே போடப்படிருந்தது. தனிதனியான இருக்கைகள் கிடையாது. ஆண்கள், பெண்கள் என்ற இரு பக்கங்களும் கிடையாது. அதனால் தான் அது மிகக்குறைந்த விலையில் இருக்கும் பகுதியாக இருக்கின்றது. திரைக்கு அருகில் இந்தப் பகுதி இருக்கும். கழுத்தை நிமிர்த்தியே படம் பார்க்கவேண்டும். இந்தப் பகுதியின் பின்னால் இரண்டாம் வகுப்பு, முதலாம் வகுப்பு, ரிசர்வ் என்று மூன்று பகுதிகள் அந்த தியேட்டரில் இருந்தன. மேலே பால்கனி என்று இன்னொரு பிரிவும் இருந்தது. அதற்கான அனுமதி எல்லாவற்றையும் விட மிக அதிகம். பால்கனிக்கு அருகிலேயே, ஒரு தனி அறையில், படம் ஓடும் இயந்திரங்கள் இருந்தன. ஒரு நாள் கலரியிலிருந்து அந்த அறைக்கு முன்னேறுவதே அவனின் இலட்சியமாக இருந்தது. (தொடரும்...................)
  9. பிக் ப்ரோ, நான் உங்களை விளங்கி கொண்டே நடிக்கிறீர்கள் என எண்ணியது தவறோ என யோசிக்கவைக்கிறீர்கள்.
  10. இத்தனை ஆயிரம் வாக்குகளை பெரியாரை எதிர்த்தபடி அவரது மண்ணில் எடுத்திருப்பதால் யார் குழம்பி நின்று மனதிடம் குழம்பித்தடுமாறுகிறார்கள் என்று இங்கே எழுதும் எல்லோருக்கும் புரியும். மக்கள் தீர்ப்புக்களை கொஞ்சமேனும் கவனத்தில் எடுத்துக் கொண்டு கருத்து வையுங்கள். நன்றி.
  11. புலவர், நடந்தது தேர்தலே அல்ல. மேற்கு நாடுகளை நினைத்து களம் தெரியாமல் அவலை மென்றுகொண்டு இருப்பார்கள். உண்மை வேறு.
  12. பிறர் காணியை சுவீகரித்து நிலம் அளந்து புத்த விகாரை கட்டும் மட்டும் என்ன கோமாவிலா இருந்தீர்கள்? கட்டிய விகாரையை யாரும் இடிக்க மாட்டார்கள். கட்டிய விகாரையை இடிக்க நேர்ந்தால் சிங்கள மக்களிடம் இன்னும் விரோதங்களையே உருவாக்கும். இனியும் மக்களை ஏமாற்றம் செய்யும் அரசியல் செய்யாமல் நீதியான/ வெளிப்படையான அரசியலை இதயபூர்வமாக செய்யுங்கள்.
  13. Acuity Partners நிறுவனத்தின் உரிமையாளரானது HNB வங்கி! இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB Acuity Partners நிறுவனத்தின் உரிமையை வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமையப்பெற்றுள்ளது. Acuity Partners முன்பு HNB மற்றும் வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், அக்யூட்டி ஸ்டொக் ப்ரோக்கர்ஸ் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனமானது கொழும்பு பங்குச் சந்தையின் உறுப்பினராகவும், முன்னணி பங்கு தரகர் நிறுவனமாகவும் உள்ளது. இந்த நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தை வழங்குவதன் மூலமும், மதிப்பை உருவாக்குவதன் மூலமும் இலங்கையின் நிதி சேவைத் துறையை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்துள்ளன. இந்த மாற்றத்துடன், HNB Investment Bank இணைப்புகள் மற்றும் கையகப்படுத்தல்கள், கடன் மற்றும் பங்குச் சந்தை சேவைகள் மற்றும் நிதி ஆலோசனை தீர்வுகள் உள்ளிட்ட பரந்த அளவிலான சேவைகளை வழங்கும். இந்த கையகப்படுத்தல், HNB Investment Bank இன் செயல்பாடுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதி சேவைத் துறையில் அதன் இருப்பை விரிவுபடுத்தவும் HNB எடுத்துள்ள மூலோபாய நடவடிக்கையாகும் இலங்கையின் நிதித் துறையை ஒரு புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கு இது உதவியாகும் என HNB இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அபேவர்தன தெரிவித்துள்ளார் https://athavannews.com/2025/1420413 @goshan_che, @vasee, @Kadancha
  14. காற்றாடி - அத்தியாயம் இரண்டு ------------------------------------------------ சில்லென்று குளிர்ந்த இடத்தை விரல்களால் தொட, விரல்கள் அதைவிடக் குளிராக இருந்தது தெரிந்தது. உரசி சூடாக்கிக் கொண்டே, தான் இன்று பரீட்சைக்கு போகப் போவதில்லை என்பதை எப்படி பக்குவமாகச் சொல்லலாம் என்று யோசிக்க ஆரம்பித்தான். அம்மா அழக்கூடும், ஊரையும் கூட்டக் கூடும், ஆனால் இந்த மழையில் ஊர் இங்கே வராது. அப்பா குதிக்கத்தான் போகின்றார். வளர்ந்த பிள்ளை என்று இப்பொழுது ஒரு வருடமாக அடிகள் எதுவும் விழவில்லை. இன்று அது மாறக்கூடும். சித்தப்பா அவர் வாங்கித் தந்த முழுக்காற்சட்டை பற்றி கவலைப்படக்கூடும். அம்மா ஏற்கனவே எழும்பி விட்டிருந்தார். அடுப்படியில் அரவம் கேட்டது. இப்ப, இந்த மழையில் எந்த விறகு ஈரமில்லாமல் இருக்குமோ தெரியவில்லை. ஆனாலும் எங்கள் எல்லோருக்குமாக அவர் அந்த இரண்டு அடுப்புகளையும் தினமும் விடாமல் ஊதிக் கொண்டேயிருக்கின்றார். தேத்தண்ணியை போட்டு விட்டு, எல்லோருக்கும் காலையில் ஏதாவது உணவு செய்யும் நாட்களில், நாங்கள் எல்லோரும் பாடசாலைகளுக்கு கிளம்பிப் போகும் வரை அவர் அடுப்புக்குள் முன்னால் ஒரு காலை முழுவதும் மடக்கி, மறு காலை முழங்கால் வரை மடித்தும் இருப்பார். 'ஏன் இப்படி இருக்கிறீங்கள், அம்மா...............' என்று கேட்டால் சிரிப்பொன்றே பதிலாக வந்து கொண்டிருந்தது. பெண்கள் எதையுமே வெளியில் சொல்லமாட்டார்களாமே. இன்று பரீட்சைக்கு போகாவிட்டால், இன்றுடன் படிப்பு நின்றுவிடும். அடுத்ததாக என்ன செய்வது............... ஆரம்ப ஆரவாரங்களின் பின், என்ன செய்யப் போகின்றாய் என்று கேட்கவும் போகின்றார்கள். என்ன செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. அதில் எதையாவது ஏற்றுக் கொள்வார்களா என்று தான் தெரியவில்லை. தங்கைகளும், தம்பிகளும் என்ன நினைப்பார்களோ. ஒரு தம்பியை நினைத்தால் கொஞ்சம் பயமாகத்தான் இருக்கின்றது. எங்கு படித்தாலும், அவன் தான் வகுப்பில் முதலாவதாக வந்து கொண்டிருக்கின்றான். அவன் மட்டும் இப்படி எப்படி பிறந்தானோ தெரியவில்லை. வயிற்றில் பிள்ளைகள் இருக்கும் போது, தாய்மார்களின் உணவுப் பழக்கம் கூட பிள்ளைகளின் மூளைத் திறனை வளர்க்கும் என்று சொல்லுகின்றார்கள். இந்த முற்றத்தில் நிற்கும் புளி வைரக்கண்டி மாங்காயைத் தான் அம்மா எப்போதும் கடித்துக் கொண்டிருந்திருப்பார். தம்பி வயிற்றில் இருக்கும் போது, அந்த வருடம் அந்த மரம் காய்க்கவில்லையோ என்னவோ. மழை தற்காலிகமாக விட்டிருந்தது. மீண்டும் அது ஆரம்பிக்க முன், முகத்தை கழுவி விட என்று கிணற்றடிக்கு போனான். பெரிய வட்டக் கிணறு. ஆனால் மூன்றாக பிரிக்கப்பட்டு இருந்தது. மூன்று வீடுகளுக்கு அது தான் கிணறு. கிணற்றின் மேலேயே தகர வேலிகளால் அது பிரிக்கப்பட்டிருந்தது. ஒரு வீட்டுக்காரருக்கு இன்னொரு வீட்டுக்காரை பார்க்க முடியாத வகையில் அமைக்கப்பட்டிருந்த உயர்ந்த வேலிகள். அவை தார் தகரங்கள். எம் எஸ் விஸ்வநாதன், கே வி மாகாதேவன் போன்ற பழையவர்களின் ரசிகரான அப்பா, இந்த தார் தகர வேலியை தினமும் பார்ப்பதால் தான், புதிதாக வந்த இளையராஜாவின் பாடல்கள் தார் தகரத்தில் கம்பால் அடிப்பது போல கொடூரமாக இருக்கின்றது என்று அடிக்கடி சொல்லுவார். அவர் சிவாஜியின் ரசிகரும் கூட. பொதுவாகவே அப்பாமார்களும், மூத்த மகன்களும் எதிரும் புதிருமாகவே வளர்வார்கள் போல. அள்ளிய வாளித் தண்ணீருக்குள் ஒரு சின்ன ஜப்பான் மீன் குஞ்சும் வந்திருந்தது. மழை பார்க்க மேலே வந்து ஆவென்று நின்றிருக்கின்றார் போல. அப்படியே வாளிக்குள் வந்தும் விட்டார். இரண்டு கைகளாலும் அதை தண்ணீருடன் அள்ளி எடுத்து கிணற்றுக்குள் கொட்டிவிட்டான். கிணற்று நீர் சூடாக இருந்தது. வெளியே குளிராக இருக்கும் போது இப்படித்தான், கிணற்று நீர், கடல் நீர் கூட, சூடாக இருப்பது போல தெரியும். இன்னும் சில நாட்கள் மழை பெய்தால், கிணற்றில் தண்ணீர் எட்டித் தொடும் அளவிற்கு வந்துவிடும். எங்களின் பக்க கிணற்றில் உயரமான தடுப்புக் கட்டுகள் எதுவும் இல்லை. ஆனாலும் இதுவரை எவரும் இந்தக் கிணற்றுக்குள் தெரிந்தோ அல்லது விபத்தாகவோ விழுந்திருக்கவில்லை. அம்மா தேத்தண்ணி போட்டு வைத்திருந்தார். அது எல்லோருக்கும் சேர்த்து ஒரு பெரிய சட்டியில் இருக்கும். 'எத்தனை மணிக்கு சோதனை...............' என்று கேட்டார் அம்மா. பதில் எதுவும் சொல்லாமல் குடித்துக் கொண்டே இருப்பதைப் பார்த்த அம்மா மீண்டும் அதையே கேட்டார். 'நான் போகவில்லை, அம்மா......................' என்றான் அவன். அப்படியே சில கணங்கள் இருந்த அம்மா, மீண்டும் நினைவு வந்தவராக, 'போகாமல் என்ன செய்யப் போகின்றாய்................' என்றார். ஒரு வேலைக்குப் போகலாம் என்றிருக்கின்றேன் என்றான் அவன். 'அப்பாவிடம் இதை யார், எப்படிச் சொல்வது..................' என்று அம்மா அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக போய்க் கொண்டிருந்தார். ஆச்சரியமாக இருந்தது. நான் எப்படியும் படிக்கப் போவதில்லை என்று அம்மாவிற்கு முன்னமே தெரிந்திருந்தது போல. தாய்க்கு தெரியாத பிள்ளைகளா........... 'டில்லிக்கு ராஜாவானாலும்........................' என்று ஒரு பழமொழியை அம்மா அடிக்கடி சொல்லுவார். எந்தப் பிள்ளை டில்லிக்கு ராஜாவாக வரும் என்றும், எது டில்லியையே வாழ்நாளில் பார்க்காது என்றும் அவர்களுக்கு தெரியும் போல. அப்பா எப்போதும் அப்படியே படுக்கையில் இருந்தபடியே அன்றைய நாளின் முதலாவது தேத்தண்ணியைக் குடிப்பார். பின்னர் ஒரு பத்து அல்லது பதினைந்து குடிப்பார். ஆனால், வீட்டில் எல்லோரும் பல் துலக்கி, முகம் கழுவி விட்ட பின்னேயே, எதை என்றாலும் குடிப்போம் அல்லது சாப்பிடுவோம் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கும் பதில்களை பாடசாலையில் சொல்லியிருக்கின்றேன். முதலாவது தேத்தண்ணியின் பின் கொஞ்ச நேரம் கண்மூடிப் படுத்திருப்பார். அது அவரின் சிந்திக்கும் நேரம் போல. அம்மா அப்பாவின் சிந்தனையைக் கலைக்காமல், பொறுமையாகவே விசயத்தை உடைத்தார். எதிர்பார்த்த எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. 'சரி, இனி என்ன செய்யப் போகின்றாராம்............' என்ற ஒரு கேள்வியைக் கேட்டுக் கொண்டே, அப்பா எழுந்து இருந்தார். அம்மா அடுத்த தேத்தண்ணியை சுடவைக்கப் போனார். பெரும் எடுப்போடும், பரபரப்போடும் வாழ்க்கையின் ஒரு தருணத்திற்கு காத்திருக்கும் போது, சில வேளைகளில் அந்த தருணம் ஒரு பூனையின் நடை போல எந்த சத்தமும் எழுப்பாமல் எங்களைக் கடந்து போய்விடுகின்றது. (தொடரும்........................)
  15. பெரியார் விவகாரம்.. சீமான் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டார்.. தேர்தலுக்கு பின் ஒரே போடாக போட்ட அண்ணாமலை! Yogeshwaran MoorthiUpdated: Saturday, February 8, 2025, 14:47 [IST] ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் விசி சந்திரகுமாரின் வெற்றி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக வேட்பாளர் விசி சந்திரகுமார் 63,984 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி 13,945 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஏற்கனவே சுமார் 50 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் திமுக முன்னிலை பெற்றுள்ளது. Also Read இதனால் திமுக தொண்டர்கள் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுகவின் இந்த வெற்றி குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசுகையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஏராளமானோர் வாக்கு செலுத்தவில்லை. வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. அதேபோல் நோட்டாவுக்கான வாக்குகள் அதிகரிக்கும். நிச்சயம் ஈரோடு பகுதியில் நோட்டாவுக்கு கிடைத்துள்ள வாக்குகள் அதிகம்தான். இந்த இடைத்தேர்தல் மக்களிடையே எழுச்சி இல்லாத, உற்சாகமில்லாத தேர்தல். என்னை பொறுத்தவரை வாக்கு வங்கி இங்கு போனதா, அங்கு போனதா என்று சொல்வதை விடவும் மக்களே உற்சாகமாக பங்கேற்காத தேர்தலாக பார்க்கிறோம். ஏற்கனவே திமுகவின் வெற்றி எழுதப்பட்ட ஒன்று தான். தொடக்கம் முதலே இந்த இடைத்தேர்தலுக்கு திமுகவும் பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. முதலமைச்சர் உள்ளிட்ட யாரும் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களை பொறுத்தவரை பாஜக உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை புறக்கணித்ததால் தான், மக்களை பட்டியில் அடைத்து வைத்த கொடூரம் நிகழவில்லை. Recommended For You இந்த தேர்தல் களத்தில் நான் ஏற்கனவே பார்த்துள்ளோம். அதேபோல் பெரியாரை யாரும் புகழ்ந்து பேசினால் ஓட்டு கிடைக்குமா? அல்லது பெரியாரை தாக்கி பேசினால் வாக்குகள் மாற்றமடைந்து அதிகரிக்குமா என்று நிச்சயம் கிடையாது. அந்த காலம் மாறிவிட்டது. பெரியாரை பிடித்தவர்கள் இருக்கிறார்கள். பெரியாரை பிடிக்காதவர்களும் இருக்கிறார்கள். அதற்காக வாக்கினை மாற்றி போடும் அளவிற்கு சக்தி இருக்கா என்று கேட்டால், நிச்சயம் இல்லை. சீமான் உள்ளிட்டோர் ஒரு வாதத்தை முன் வைத்தார்கள். பெரியார் தொடர்புடைய வாதம் கொஞ்சம் கூடுதலாக சென்றுவிட்டதோ என்ற எண்ணம் இருக்கிறது. அதனால் பெரியாரை பற்றிய கருத்துகளுக்கு வாக்கினை மாற்றி போட வைக்கும் சக்தி கிடையாது. அதனைதான் ஈரோடு உணர்த்தி இருக்கிறது. பெரியாரை கடந்து தமிழ்நாடு பயணித்துவிட்டது. ஒருவேளை பெரியாரால் தான் நாம் தமிழர் தோல்வியடைந்துவிட்டது என்று திமுகவினர் நினைத்தால், அவர்களுக்கு அரசியல் தெரியவில்லை என்றுதான் சொல்வேன். யாரும் இல்லாத இடத்தில் நாதக மட்டுமே இருந்துள்ளது. அதனால் திமுகவிற்கு கிடைத்துள்ள வாக்கு சதவிகிதம், பெரியாரை எதிர்த்து பேசியதால் வாக்குகள் கிடைத்தது போன்ற வாதத்தை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்துள்ளார். https://tamil.oneindia.com/news/chennai/seeman-has-spoken-a-bit-too-much-against-periyars-thoughts-says-bjp-state-president-annamalai-after-678343.html?ref_source=OI-TA&ref_medium=Article-Page&ref_campaign=More-Articles-DMP&ref_content=678465-p8 டிஸ்கி தட் “வாங்கின காசுக்கு மேலாலயே கூவீட்டாண்டா கொய்யால” மொமெண்ட்
  16. “தயவு செய்து என்னை எரிக்காதீங்கோ. என் அண்ணாக்குப் பக்கத்தில கொண்டு போய் தாட்டு விடுங்கோ அது மட்டும் எனக்குப் போதும். “ என்று தனது மருமகனுக்கு சொல்லி விட்டு தன் மூச்சை நிறுத்திவிட்டார் அந்த உயரமான பருமனான உடலமைப்புக் கொண்ட அந்த விடுதலை விரும்பி. அவரை கோமகன் என்று அறிந்தவர்களை விட சிங்கண்ண என்று அறிமுகம் கண்டவர்கள் தான் அதிகம். சாதாரண போராளிகள் முதல் மூத்த தளபதிகள் வரை சிங்கண்ண என்றால் அறிமுகம் அற்றவர்கள் இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் அவ்வாறான புனிதமான பணியில் இருந்தார். மாவீரர்கள் தமிழ்த் தேசத்துக்காக தமது இன்னுயிர்களை ஆகுதி ஆக்கி விசுவமடு துயிலும் இல்லம் வரும்போது இந்த மனிதனை சந்திக்காமல் குழிக்குள் போவதில்லை. விசுவமடு துயிலும் இல்லத்தில் தனது இறுதிக்கால பணியைச் செய்த சிங்கண்ண என்ற கோமகன் திடமானவராகவும், தேசம் மீதும் மாவீரர்கள் மீது எவ்வளவு நேசத்தை கொண்டிருந்தார் என்பதை அவரோடு பழகிய அனைவரும் நிச்சயமாக அறிந்திருப்பர். விசுவமடு மாவீரர் துயில்கின்ற இல்லத்தை தனது குல தெய்வங்களின் கோவில் போலவே நேசத்தோடு பராமரித்து வந்தார் கோமகன். இறுதி காலங்கள் விசுவமடு துயிலுமில்லம் அவரது வீடாகிப் போன போது அவரது வாழ்வும் அதுவே ஆகிவிட்டது. கோமகனின் போராட்ட வாழ்க்கை இன்று நேற்று ஆரம்பித்ததல்ல, பிறந்த காலம் தொட்டு தனது சாவடைந்த நாள் வரை போராட்டமே வாழ்வாகி கொண்டவர் ( ஈழ விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல சாதியப் போராட்டத்துக்கு எதிராகவும் ) மிருதங்க வாத்தியக் கலைஞரான முருகனின் மூன்றாவது பிள்ளையாக பிறந்த சிங்கராஜா சிறுவயதாக ஓடியாடி விளையாடிய பருவத்திலையே தனது தந்தையை இழந்து தவித்த போது தாயின் அரவணைப்புக்குள் வளரத் தொடங்கிய போது, அவரது கிராமத்தை சாதிய வெறியர்களின் பேயாட்டம் சீர்குலைக்கத் தொடங்கியது. திரும்பும் இடமெங்கும் அடக்கியாள பேரினவாதமாக சாதியவாதிகளின் ஆணாதிக்க சக்திகள் பரவிக் கிடந்தன. அப்போது சாதியத்துக்கு எதிரான போராளியாக, அவ்வூரின் காவல்காறர்களாக அன்றைய இளைஞர்கள் மாறிய போது, கந்தவனம் என்ற பெயரைக் கொண்ட மூத்த சகோதரன் கரங்களில் ஆயுதங்களை ஏந்தி இருந்தார். இன்னொரு சகோதரனனான இரத்தினம் ( பெரியதாய் மகன்) ஒரு கரத்தில் ஆயுதமும், மறு கரத்தில் பேனாவையும் தூக்கி இச் சாதி வெறியர்களின் அடக்குமுறைக்கு எதிராக போர் புரிந்தனர். ஆனால் அப் போர் ஓயும் முன்பே அக் கிராமத்துக்கு பேரிடியாய் ஒரு சாவு விழுந்தது. கோமகனின் மூத்த சகோதரன் திட்டமிட்டு வெட்டிச் சாகடிக்கப்பட்டார். இந்த சாவுடன் ஆரம்பித்தது இக் குடும்பத்தின் போராட்ட வரலாறு. இந்திய வல்லாதிக்க சக்திகள் அமைதிப்படை என இலங்கை வந்திருந்த போது, இந்தியப்படையின் கொடூரமுகத்தை முன்னமே ஊகித்துக் கொண்ட தேசியத் தலைவர் இந்தியாவை எதிர்த்து போராட முடிவெடுத்த போது , தமிழீழ விடுதலைப்புலிகளின் இளம் போராளியாக இருந்தார் சுருளி என்கின்ற சிவராசா. அவரையும் அவர் சார்ந்த அணியையும் பாதுகாக்கும் பணி அதிகமாக கோமகனை சார்ந்ததாகவே இருக்கும். ஒரு இடத்தில் தாக்குதல் நடந்தால் அல்லது அப்பகுதி தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டால், அப்பகுதியில் மதிவண்டியோடு காத்திருப்பார் கோமகன். இந்திய இராணுவம் மீதான அத் தாக்குதலை முடித்துவிட்டு / சுற்றிவளைப்பை முறியடித்து பின்வாங்கும் புலி அணிகளை பாதுகாப்பான இடத்துக்கு நகர்த்தி பாதுகாப்பு தருவார் கோமகன். இவ்வாறு தமிழீழ விடுதலைப்புலிகளின் வடமராட்சி பிரதேச அணிகளை பாதுகாத்துக் கொண்டிருந்த சிங்கண்ணனால் தனது தம்பியான சுருளியை அன்று காப்பாற்ற முடியவில்லை. இன்று தாம் நல்லவர்கள் என்ற பெயரில் அரசியலில் இருக்கும் ஒரு ஒட்டுக்குழு ஒன்று சிங்கண்ணனை காட்டிக் கொடுத்து கைது செய்து சித்திரவதை முகாம் ஒன்றில் அடைத்திருந்தது. அதே நேரம் அக்கிராமத்தை சுற்றிவளைத்து சுருளியை கொலை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டும் செயற்பட்டது. கரவெட்டி கிராமம் முற்றுமுழுதாக சுற்றிவளைக்கப்படப் போவதை அறிந்த சுருளி தனது அண்ணன் கைதாகி விட்டதால், மற்ற சகோதரனான இரத்தினத்தையும் கைது செய்து விடுவார்கள் என அஞ்சினார். அதனால் அப்பிரதேசத்துக்கு போக வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதையும் தாண்டி தனது சகோதரனுக்கு அத்தகவலை தெரிவித்து உடனடியாக கிராமத்தில் இருந்து வெளியேற்றுவதற்காக கரவெட்டி மத்திப் பகுதியில் இருந்து கிழக்கை நோக்கி செல்கிறார். அப்போது ஏற்கனவே திட்டமிட்ட பொறிக்குள் சுருளி வருகிறார். அக்கிராமத்தை சேர்ந்த காட்டிக்குடுப்பாளன் ஒருவனால் கச்சிதமாக போடப்பட்ட இக்கொலைத்திட்டம் நிறைவேறிய போது இந்தியன் இராணுவத் தாக்குதலில் காயமடைந்தும், பக்கத்து மதில் பாய்ந்து ஓடிய போது ஒரு துரோகி வீட்டுக்குள் நுழைந்து விடுகிறார். வழி தெரியவில்லை உயிருடன் பிடிபடக் கூடாது என்பதால் குப்பி கடித்தார். சகோதரனை காப்பற்ற வேண்டும் என்ற நினைப்பில் வந்த சுருளி லெப்டினன் சுருளியாக வீரச்சாவடைந்தார். அதன் பின்பான காலம் அதிகமான சண்டைகளை இந்தியப் படைகளோடு புலிகள் செய்த காலம். அதே நேரம் கைதாகி சித்திரவதைகளுக்குள்ளான சிங்கண்ண விடுதலை செய்யப்பட்ட போது முழு உடலும் அடி காயங்களாலும், உள் காயங்களாலும் வலியாலும் நிரம்பிக் கிடந்தது. அவரது துணைவியான சரஸ்வதியும், சகோதரிகளும் அவரை மருத்துவத்தாலும், கவனிப்பாலும் மீண்டும் சாதாரணமானவராக மீட்டெடுத்தனர். அவர் சாதாரணமானவராக நடமாடியத் தொடங்கிய போது இவரது மைத்துனனான மேயர் செங்கதிரும் வீரச்சாவடைந்திருந்தார். தம்பியையும், மைத்துனனையும் தமிழீழத்தை அபகரிக்கும் நோக்கில் வந்த இந்திய படையிடமும் சிங்கள வல்லாதிக்க இராணுவத்திடமும் பறிகொடுத்த சிங்கண்ணனாலும், இரத்தினத்தாலும் இன விடுதலைக்காக போராடாமல் வீட்டுக்குள் முடங்கிப் போய் கிடந்து வீடும் குடும்பமும் தனி வாழ்க்கையும் என்று இருந்துவிட முடியவில்லை. அதையும் தாண்டி அவர்கள் விடுதலைக்கான பயணத்தில் தம்மை போராளிகளாக்கினர் இரத்தினம் 1991 ஆம் வருடத்தில் இருந்தும் சிங்கண்ண 1994 ஆம் வருடத்தில் இருந்தும் பயணிக்கத் தொடங்கினர். அரசியல்த் துறையில் சிங்கண்ண கோமகனாகவும், இரத்தினம் பாரிமகனாகவும் இணைக்கப்படுகிறார்கள். களமும், அரசியலும் என்று பயணித்த கோமகன் தனது இறுதி நாட்கள் வரை இந்த தேசத்தை நேசித்த ஒரு உன்னதமான போராளி. அரசியல்த்துறைப் போராளியான கோமகனுக்கு அங்கே பல பணிகள் காத்திருந்தன. சண்டைப் பணி மட்டுமல்லாது, பரப்புரை, மனிதநேயப்பணிகள், என்று பல பணிகள் கொடுக்கப்பட்டன. யாழ்ப்பாணத்தை இனவழிப்புப் படைகள் முழுமையாக கைப்பற்றுவதற்கு சந்திரிக்கா தலமையிலும், அனுரத்வத்தவின் முயற்சியிலும் ஈடுபட்டு வந்த நேரத்தில் சில ஊர்களுக்குள் மீண்டும் குழு மோதல்கள், சாதிய வெறிச் சண்டைகள் என மக்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில், அவ்வாறான பிரச்சனைகளை கையாளவும், இச்சண்டியர்களை கட்டுப்படுத்தவும் வேண்டிய தேவை எழுகிறது. அதனால் வடமராச்சியில் பணியில் இருந்த பலர் ஒருங்கிணைக்கப்பட்டு சண்டைகளில் ஈடுபட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை குழப்புவபர்கள் இனங்காணப்பட்டனர். அவர்களை கைது செய்து மக்கள் வாழ்க்கையை இயல்புக்கு கொண்டு வருவதற்கு இட்ட கட்டளையை நிறைவேற்ற சென்றபோது ஓர் இடத்தில் கோமகனின் கழுத்தை நோக்கி வீசப்பட்ட கத்தி அவரது மூக்குப் பகுதியில் காயத்தை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. இவ்வாறு இனவழிப்புப் படைகளுடன் மட்டுமல்லாது, மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தீங்கிழைக்கும் எவரையும் எதிர்த்து நிற்பார் கோமகன். யாழ்மாவட்டத்தை விட்டு எமது அமைப்பு பின்நகர்ந்த போது ஒட்டிசுட்டான் பகுதியில் வீட்டை அமைத்த கோமகன் குடும்பத்தை விட்டு பணிக்காக போய்விட்டார். பின் அங்கிருந்து வள்ளிபுனம் நோக்கி நகர்ந்துவிட்டார். கோமகனின் மனைவி, பிள்ளைகளை பாதுகாத்து, பராமரித்து கல்வியூட்டி வளர்த்து வந்தார். அப்போது இவர்களின் மூன்றாவது பிள்ளையான பரிமளா தந்தை வழியில் போராட வேண்டும் என்று மாலதி படையணியில் இணைந்து கொண்டாள். கோமகனின் மகள் கோமகள் என்ற பெயரில் காவல் காத்தாள். அவள் சண்டை அணியில் நின்ற போது பின்களப் பணிக்காக மக்களை அழைத்துக் கொண்டு சென்ற கோமகன் கவலரன் ஒன்றில் மகளை காண்கிறார். வரி உடையில் அப்பாவும் மகளும் களமுனையில் நின்ற அக்காட்சி எம் விடுதலைப் போராட்டத்துக்கு மட்டுமே உரியது. அங்கிருந்த பொறுப்பாளரிடம் மகளோடு உரையாடுவதற்கு அனுமதி கேட்ட போது பொறுப்பாரின் கண்கள் பனித்தன. எத்தனையோ வீடுகளில் ஒருவர் கூட போராட்டத்துக்காக பங்கெடுக்காத நிலையில் இக்குடும்பத்தால் மட்டும் இவ்வாறு வாழ எவ்வாறு முடிந்தது? மகளுக்கு பொறுப்பாக நின்ற பெண் போராளி உடனியாக காவலரனில் இருந்து பின்நகர்த்தி தந்தையோடு பேசுவதற்கு அனுமதித்தாள். ஆனால் இருவருமே களப்பணியில் நிற்பதால் நீண்ட நேரம் பேசவில்லை. விழிகள் கலங்கினாலும் விடைபெற்றுக் கொள்கிறார்கள். 6 பிள்ளைகளை பெற்றெடுத்த கோமகனுக்கு முதல் பிள்ளை சாதாரணமான பிள்ளையாக வளர்ந்தும் 14 வயதில் இருந்து உடல்நலம் குன்றியவனாக போனது மனவேதனை. என்றாலும் அப்பிள்ளையை சிறப்பாக கவனித்து வந்தார். 2000 ஆண்டளவில் அப்பிள்ளை சாவடைந்து விட துடித்துப் போனார்கள் பெற்றவர்கள். ஆனாலும் மக்களின் வாழ்வுக்காக போராளியானவரல்லவா அவர். அவ்விழப்பில் இருந்து மீண்டு வந்தார். ஆனால் அடுத்த இழப்பும் அவர்களுக்கு வரப்போவதை அறியவில்லை. யாழ்ப்பாணத்தை நோக்கி பெரும் திட்டமிட்ட சண்டை ஒன்றை விடுதலைப்புலிகளின் படையணிகள் செய்கின்றன. குடாரப்பு ஊடாகத் தரையிறங்கி யாழ்ப்பாணத்தில் குந்தி இருந்த இராணுவத்தை முடக்குவதற்கான பெரும் சண்டை. அத் தரையிறக்க சண்டைக்கு படையணிகள் கடல் வழியாக நகர்ந்த போது, தரைவழியாக நகர்ந்த படையணிகளுக்கான பின்னணி வழங்கலுக்காக சிங்கண்ண அனுப்பப்படுகிறார். திறமையான சாரதி, கடுமையான உழைப்பாளி. எதற்கும் அஞ்சிடாத துணிந்தவர். இவர் இப்பணியில் இருந்த போது கோமகள் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்தாள். அப்பாவும், பிள்ளையும் ஒரே களமுனையில் இனவழிபு அரசை எதிர்த்து நின்றனர். ஒரு நிலையில் முன்னணியில் சண்டையிட்டுக் கொண்டிருந்த கோமகள் வீரச்சாவடைய அக் குடும்பம் மீண்டும் பேரிழப்பை சந்திக்கிறது. அதே நேரம் மகள் மகள் வீரச்சாவடைந்ததைக் கூட அறியாதவராக, பின்களப் பணியில் இருந்து மீண்ட அவர் நேரடியாக தியாகசீலத்துக்கு சென்றார். (தூண்டி) அங்கே பணி செய்த அவருக்கு மகள் வீரச்சாவடைந்தது கூட தெரியவில்லை. அவர் அங்கே வந்திருந்த வித்துடல்களை தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களோடு இணைந்து அவ்வேலையை செய்துகொண்டிருந்தார். அதனால் மகள் வீரச்சாவடைந்ததை கூட அறியவில்லை. வித்துடல் வீட்டுக்கு வந்த பின் தான் அறிந்து கொண்டார். வீட்டுக்கு வர தாமதமும் ஆனார். அதே நேரம் அவர் பணியாற்றிய விசுவமடு துயிலும் இல்லத்திலையே உறங்கினாள் அவரின் மகளும். ஆனாலும் துவண்டு விடவில்லை. தன் பணியில் உறுதியாகவே இருந்தார். அவர் மாவீரர்கள் மீது வைத்திருந்த பாசம், அவர்களை உறங்க வைக்கும் துயிலுமில்லங்களை மேம்படுத்துதல், புனரமைத்தல் என்று பணி கொடுக்கப்பட்டு மாவீரர்பணிமனைப் பொறுப்பாளர் பொன்தியாகம் அப்பாவின் பொறுப்பில் பணியமர்த்தப்படுகிறார். இதன் பின்பான காலமே எப்போதும் அவர் நேசிக்கும் மாவீரர்களோடு அவர் அதிகமாக வாழத் தொடங்கினார். அவ்வாறான ஒரு நிலையில் தான் சமாதானம் என்ற பெயரில் எம்மீது நடாத்தப்படவிருந்த இனவழிப்புக்கான தயார்ப்படுத்தல்களை சிங்கள தேசம் தொடங்கியிருந்தது. அப்போது கொடிகாமம், சாட்டி போன்ற துயிலும் இல்லங்களை உடனடியாக புனரமைக்கும் பணி கோமகனுக்கு கொடுக்கப்பட்ட போது அதை சரியாக செய்து முடித்தார். பின் நாட்களில் சமாதான காலம் முறிவடைந்த போது விசுவமடு துயிலும் இல்லம் கோமகனின் வீடானது. அப்புனித இடம் அவரது கோவிலானது. தினமும் அக் கோவிலை பூசித்து வந்த கோமகனால் துயிலும் இல்லத்தை விட்டு பிரிந்து விட முடியவில்லை. இறுதிவரை அங்கேயே பணிசெய்தார். விடுதலைப்புலிகளின் போராளிகளைப் பொறுத்தவரையில் சாவினை எதிர்பார்த்த வாழ்வினைத் தான் ஒவ்வொருவரும் வாழ்ந்தார்கள். அங்கே விதைக்கப்பட்ட ஒவ்வொரு மாவீரனின் கனவுகளையும் சுமந்த ஒட்டுமொத்த உருவமாக கோமகன் துயிலுமில்லத்துக்குள் வாழ்ந்தார். இறுதி யுத்தம் என்ற பெயரில் இனவழிப்பு நடவடிக்கை தொடங்கிய போது, தினமும் வித்துடல்கள் வந்து கொண்டிருந்தன. இரவு பகல் என்றில்லாது வித்துடல்கள் விதைக்கப்பட்டன. தளபதிகள் சாதாரண போராளிகள் என்றில்லாது அத்தனை பேரும் விதையாகிய பொழுதுகளில் எல்லாம் மனம் வலித்தாலும் எதிரி மீது கோவம் வந்தாலும் தான் செய்யும் பணியை நேசித்தார் கோமகன். பிள்ளைகளுடன் நண்பனாக பழகும் அவரால் எளிதில் எல்லோரையும் கவர்ந்து கொள்ளவும் முடிந்திருந்தது. என்ன சிங்கண்ண தியாகம் அப்பா டபிள் பட்ஜட்டா தாறார் உங்கட ஆக்கள் எல்லாரும் ஒரே மாதிரி இருக்கிறீங்களப்பா என அவரின் தொப்பையை நக்கலடிக்கும் போராளிகளை திருப்பி நக்கலடித்து வாய் திறக்காமல் செய்து அனுப்பும் அவரால் அப் போராளி வித்துடலாக மீண்டும் அங்கே வந்தால் எவ்வாறு தாங்கிக் கொள்ள முடியும்? ஆனால் அவர் தாங்கினார். தன் உறவுகளுக்கு கூட அவர் கண்கலங்க மாட்டார். உறவுகளின் என்றாலும் வித்துடல்கள் விதைக்கப்படும் முன் உறுதியுரை வாசிக்கும் போது எந்த பிசிறும் இருக்காது. குரலில் தடுமாற்றம் இருக்காது. உறுதியாகவே தன் பணியாற்றினார். இவ்வாறான பொழுதுகளை எல்லாம் கடந்து வந்த கோமகன் இறுதிப் போர் என்ற இனவழிப்புத் தாக்குதலால் தான்நேசித்த விசுவமடு துயிலும் இல்லத்தை விட்டு பின் நகர வேண்டி இருந்தது. அவரால் முடியவில்லை. ஆனால் சிங்கள தேசமே அவரை அங்கிருந்து நகர்த்தியது. இறுதியாக அத் துயிலுமில்லத்துக்கு வந்திருந்த ஒரு வித்துடலை விதைப்பதற்காக முயன்ற போது, சிங்களப்படையின் எறிகணை ஒன்று வீழ்ந்து வெடிக்கிறது. அவ்வெறிகணை உடல் முழுவதும் காயங்களை உண்டு பண்ணி குருதி பெருக்கெடுத்த நிலையில் துயிலுமில்லத்தை விட்டு வெளியேற்றியது. அன்று தான் அவர் இறுதியாக தன் குலகோயிலை பார்த்தது. இனவழிப்புச் சண்டை முள்ளிவாய்க்காலில் முடிவுற்ற போது கலங்கிப் போன சிங்கண்ணையால் எதுவும் செய்ய முடியவில்லை. காயங்களின் கோரம் இயங்குவதில் கொஞ்சம் கடினம். ஆனாலும் இறுதியாக வித்துடல்கள் விதைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் துயிலும் இல்லம் வரை அப்பணியை கைவிடவே இல்லை. மே 12 ஆம் திகதி இரவு 2 மணி சிங்களப்படையின் கொடூரமான தாக்குதல்களின் உச்சம் நடந்து கொண்டிருக்கிறது. நந்திக்களிப் பகுதியில் பங்கரும் வெட்ட முடியவில்லை. வெற்றுத் தரையில் எல்லோரும் படுத்திருந்தார்கள். ஊர் முழுக்க அழுகுரல்கள். திரும்பும் இடமெங்கும் நாற்றமெடுத்த நிலையில் வெற்றுடல்கள். இரத்தச் சிதறல்கள் என முள்ளிவாய்க்கால் முடங்கிக் கொண்டிருந்தது. சிங்கண்ணையின் குடும்பமும் விதிவிலக்கல்லவே. ஆட்லறி எறிகணை ஒன்று அருகில் வீழ்ந்து வெடிக்கிறது. அவரின் குடும்பம் சார்ந்த 20-25 பேர் காயமடைகிறார்கள். அதில் மீண்டும் காயமடைந்த சிங்கண்ண படுகாயமடைந்த தன் மகளை தூக்கிக் கொண்டு இறுதியாக இயங்கிய மருத்துவமனைக்கு ஓடுகிறார். ஆனால் அம்மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவரால் அப்பிள்ளையை காப்பாற்ற முடியவே இல்லை. மறுபடியும் ஒரு பிள்ளையை இழந்த நிலையில் கோமகன் என்ற சிங்கண்ண சிங்களத்தின் கொடூரங்களுக்குள் வாழ வேண்டிய நிலையில் சரணடைகிறார். 18-19 வயது வரை வளர்த்தெடுத்த 3 பிள்ளைகளை இழந்த மனிதன் உடைந்து போகவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலில் எம் விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட போது உண்மையில் உடைந்து போனார். அவரால் சாதாரணமாக இயங்க முடியவில்லை. மனம் சுக்கு நூறாகிக் கிடந்தது. இந்த நிலையில் ஓமந்தையில் வைத்து காட்டிக் கொடுப்பாளன் ஒருவரால் ( கோமகனுக்கு நன்கு அறிமுகமானவன் ) காட்டிக் கொடுக்கப்பட்டாலும் கைதில் இருந்து தப்பி ஆனந்தகுமாரசாமி முகாமுக்குள் கொண்டு செல்லப்படுகிறார். அங்கு ஒரு மாதத்துக்கு மேல் வாழ்ந்த அவரால் காட்டிக் கொடுப்பாளர்களிடம் இருந்து தப்பிக்க முடியவில்லை. இனங்காணப்பட்டு கைது செய்யப்படுகிறார். கடுமையான சித்திரவதைகள் நடந்தேறின. ஏற்கனவே காயமடைந்திருந்த அவரால் சித்திரவதைகளை தாங்க முடியவில்லை. ஆனாலும் தாங்கினார். ஒரு வருடத்துக்கு பின் விடுதலை செய்யப்பட்ட பின் ஒட்டிசுட்டானில் நடந்த மரணவீடொன்றுக்காக பேருந்தில் பயணித்த சிங்கண்ண, விசிவமடுத் துயிலும் இல்லத்தடியை பேருந்தில் இருந்தபடி ஏக்கத்தோடு பார்த்தபடி போகிறார். அசைவில்லை. பரமை பிடித்தவராய் இருந்தார். குறிப்பிட்ட தூரம் கடந்த போது அவர் மயங்கி சரிகிறார். பின்பு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற உறவினர்களுக்கு மருத்துவர் அதிர்ச்சி கொடுத்தார்கள். “சிங்கண்ணைக்கு பாரிசவாதமாம்.” உடைந்த உறவுகள. வீட்டுக்கு கொண்டு வந்த போது அவர் ஒன்றைக் காலும் கையும் இழுத்த நிலையிலே கிடந்தார். குறுகிய கால மருத்துவத்தின் பின் சாதாரணமாக இல்லை எனிலும் மெதுவாக நடமாடத் தொடங்கியவரை குறுகிய காலத்தில் முழுமையாக படுக்கையில் கிடத்தியது பாரிசவாதம். நீண்ட கால படுக்கையில் அவரின் நினைப்பு முழுவதும் மாவீரர்கள் சார்ந்ததாகவே இருந்தது. இவ்வாறு அவர் படுத்த போது 2014 இறுதி நாள்வரை ஒரு கரத்தில் பேனாவும், மறுகரத்தில் துப்பாக்கியுமாக பயணித்த அன்பு அண்ணன் பாரிமகனும், நோயினால் மடிந்து போக இன்னும் இன்னும் உடைந்து போகிறார் கோமகன். அண்ணனை துயிலும் இல்லத்தில் உறுதியுரை செய்து விதைக்க வேண்டிய சிங்கண்ண படுக்கையில் கிடக்க சாதாரண சுடரை ஒன்றில் குழி வெட்டி புதைத்ததும் அவரால் ஏற்க முடியவில்லை. அவருக்குப் பக்கத்திலையே தானும் தூங்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். தன்னை பராமரித்து வந்த மருமகனிடம் “ அண்ணாக்குப் பக்கத்தில என்னை விதைச்சு விடப்பு எரிக்காத” என்ற வேண்டுகோளோடு விழி மூடிப் போய்விட்டார். இறுதிக் காலத்தில் கூட தேசியத் தலைவரை அழைத்தபடியே இருந்திருக்கிறார். தூங்கும் போது தவிர மற்ற நேரத்தில் எல்லாம் அவர் பணியாற்றிய பிரிவின் தொலைத்தொடர்பு நிலையங்களை கூப்பிட்டபடி இருந்திருக்கிறார். இவரைப் பார்க்க வரும் நண்பர்களிடம் தனது துப்பாக்கி ரூமுக்குள்ள கிடக்கிற அலமாரிக்குள்ள வைச்சுப் பூட்டிட்டுத் தான் வந்தனான் திறப்புத் தாறன் எடுத்து வாறியா என்றெல்லாம் தான் நேசித்தவற்றைப் பற்றியே கதைச்சிருக்கிறார். அதனாலோ என்னவே எங்கள் தேசத்தை நேசித்த வேங்கை, தமிழீழ விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட 2009 வைகாசி 18 ஆம் நாளில் இருந்து சரியாக 10 வருடங்களின் முடிவில். 2019 வைகாசி 18 அன்று இரவு 11.50 மணியளவில் தன் விழிகளை மூடி தனது அண்ணன் அருகிலையே வெட்டப்பட்ட குழியில் துயில்கின்றார். --> இ.இ. கவிமகன் https://eelamaravar.wordpress.com/2019/05/21/singan-komagan/
  17. ஏற்கனவே செவ்வியன், வைரவன், காத்து கறுப்பன், சுடலைமாடசாமி, முத்தவெளி முனி என பலபெயர்களில் வருவது நான்தான் என @Nathamuni சொல்லுவார். அவர் களத்தில் இல்லாத நேரம் அவரின் ஜால்ரா ஒண்டு, நாதமுனி என்ற பேரில வருவதே நான்தான் எண்டு ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தினார். இப்ப புலவர் கோணான் என்கிறார் 🤣. பத்தொட்டு பதினொன்று அத்தோடு இதுவொன்று.
  18. இந்த ஈரோடு தேர்தல் செய்தி பார்த்த போது தான் தெரிந்தது இந்தியாவில் டெல்லியிலும் சட்டசபை தேர்தல் நடந்துள்ளதுஅங்கே முன்பு வெற்றிபெற்றிருந்த ஆளும்கட்சி தோல்வி அடைந்து பாஜக வெற்றி பெற்றுள்ளது தோல்வி அடைந்த கட்சி நாங்கள் மக்கள் தீர்ப்பை ஏற்று கொள்கின்றோம் என்று சொல்லி பாஜகவுக்கு வாழ்த்தும் சொல்லியுள்ளது.இங்கே வெளிநாட்டு ஈழதமிழர்கள் சீமான் கட்சி படுதோல்வி அடைந்து கட்டுபணத்தை இழக்கும் போது எல்லாம் சீமான் கட்சி வெற்றி பெறுகின்றது மக்கள் ஆதரவு அதிகரிக்கின்றது என்று ஆரவாரம் செய்கின்றனர். சீமான் ஆதராளர்கள் சோர்வடைந்து விடுவார்களோ என்ற கவலையில் யாழ்கள உறவு ஒருவர் அவர்களை உற்சாகபடுத்துவது அழகாக உள்ளது 😂
  19. எங்கிருந்து வருகிறது...தலை வணங்குகின்றேன்..நன்றி தம்பிகளா
  20. திட்டமிட்டே செய்யப்பட்டது. தலைவரின் குடும்பமே இருக்க கூடாது என்பதில் சிங்களம் மிகத்தெளிவாக இருந்தது. 16 வருடம் கழித்து நாமல் புழுகு மூட்டைகளை அவிழ்த்து விடுகிறார்.
  21. கோசான் சொல்வதுதான் சரி. ✅ இது இயற்கை மரணமாகவே தெரிகின்றது. மேலுள்ள படத்தில்… பாடகரின் உடலும் மிகவும் பொலிவு இழந்து நோயாளி போலவே தெரிகின்றார். ஆகவே புட்டின் மீது வீண்பழி போடுவது அர்த்தமற்ற செயல். 😎
  22. நீண்ட கால நோக்கில் பார்த்தால் - தமிழ் கிறிஸ்தவம், தமிழ்-இந்துவை விட தொன்மையானது தமிழ்-பெளத்தம். இந்துவோ, பெளத்தமோ, கிறிஸ்தவமோ எம் அடையாளங்கள் இல்லை. தமிழ் மொழியும், எம் மொழி சார்-இனப் பண்பாடுமே நாம் தொலைக்க கூடாதன. எப்படியோ விகாரை இடிக்கப்படாது. ஆகவே நாம்…. 1. அதை பெளத்த சிங்கள விகாரையாக இருக்க சம்மதிக்கிறோமா 2. அல்லது இதில் உள்ளூர் மக்கள் பங்கு வேணும், உள்ளூர் மொழியில் பிரார்தனை வேணும் என கூறி - விகாரையை தமிழ் படுத்த முயல்வோமா? இதை சிங்கள் ஒத்துகொள்ளுமா தெரியாது ஆனால் தெற்கில் இது நியாயமான கோரிக்கை போல பலருக்கு தெரியலாம். மிச்ச ஆறு நாளும் லுலு லு லா…🤣 மாற்று கருத்தில்லை. இவர்கள் நிச்சயம் எதிர்பார்கள். ஆனால் ஈரச்சாக்கு அனுரவால் இந்த கோரிக்கையை இலகுவில் புறம்தள்ள முடியாது. எதிராளி ஈரச்சாக்கோடு வந்தால் - நாம் அதை விட ஈரமான சாக்கை எடுக்க வேண்டும்.
  23. இதைத் தான் வைத்தியரும் சொல்லிக் கொண்டு இருக்கிறார் தாத்தா;.நான் வைத்தியருக்காக எழுதவில்லை.எனக்கு அது தேவையும் இல்லை..ஆனால் ஒன்றை உருவாக்கும் போது அதில் விருப்பம் இல்லை என்றால் உடனயே தங்கள் எதிர்ப்பை தெரிவித்திருக்கலாம்.அப்போது இந்த மக்கள், எம்பி மார் எங்கே போயிருந்தார்கள்.விகாரை அமைந்துள்ள காணி உரிமையாளருக்கு அதற்குரிய பெறுமதியை குடுத்து விட்டு விகாரையை அப்படியே விட்டால், மற்ற ஆலயங்களுக்கு போய் வருவது போல் விகாரைக்கும் போய் வருவோம் என்றெல்லாம் ஊரில் உள்ள சிலர் எழுதுகிறார்கள்..
  24. தேர்தலே இல்லாத தேர்தலில்தான் இத்தனை வருசமா, இத்தனை தேர்தல்களாக முக்கி முக்கி நாதக போட்டியிட்டு கட்டுகாசை இழக்கிறதா? Doing the same thing again and again and expecting a different result is the definition of insanity. தாம் வெல்லவே முடியாத தேர்தல்…இது தேர்தலே அல்ல என தெரிந்தும்…அத்தனை தொகுதியிலும் அத்தனை தேர்தலிலும் ஏன் போட்டி? சீமானுக்கு insanity யா?
  25. அந்த வீடியோவை நீங்கள் பார்தீர்களா? நான் பார்த்தேன். தமிழ் நாட்டி உள்ளவர்களுடன் தொடர்பு கொண்டு என்ன நடந்தது, ஏன் இது விசாரணையாகவில்லை என கேட்டறிந்தேன். இதன் அடிப்படையில்தான் இந்த கருத்து அமைந்தது. அந்த வீடியோ இப்போதும் டிவிட்டரில் இருக்கலாம் தேடிப்பாருங்கள். வீடியோ எடுக்கப்படும் கோணம், அந்த சிறுமி அந்த நாதக காமுகனுக்கு எதிராக போராடுவது அது நிச்சயமாக சிறுமிக்கு தெரிந்து எடுக்கப்ப்ட்ட வீடியோ இல்லை என்பதை உணர்த்தும். உங்களிடம் ஒரு கேள்வி…. இதுவரைகாலமும் மெளனவிரதம் இருந்த உங்களுக்கு இந்த செய்தியில் அந்த பகுதியை மேற்கோள் காட்டி முட்டு கொடுக்க மெளனவிரத்தை உடைக்கவேண்டி வந்ததே. அதை கவனித்த நீங்கள் கீழ்கண்ட மேற்கோளை கவனிக்கவில்லையா? அல்லது நா த க உறுப்பினர் என்பதால் ஒரு சிறுமியை விருப்பம் இல்லாமல் பாலியல் தொந்தரவு செய்தாலும் அது உங்களுக்கு ஏற்புடையதா? உங்களுக்கு லைக் போட்ட யாழில் இப்போ அதிகம் எழுதாத மற்றொருவரும் கேள்விக்கு பதில் கூறலாம்.
  26. இது 90 s kids சோட காலண்டர் . .........! 😂
  27. வசீ நானும் உங்கள் கூட்டாளிதான் ......... இவர்களின் படிப்பு அலப்பறை தாங்க முடியல்ல .........! 😂
  28. இந்த சுரங்க பாதைகள் அனைத்தும் கிண்டியதே இஸ்ரேல்தான் 2005 இல் காசாவில் இருந்து வெளியேறும்போது வாசல்களை மண் சீமெந்து போட்டு மூடி விட்டு சென்றார்கள். கட்டிடம் கட்டுவதற்கு தோண்டிய போதுதான் பலஸ்தீனியர்கள் காமாஸ் அதை கண்டு கொண்டார்கள். காசாவை அவர்கள் கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும்போது அவர்கள் இராணுவ நகர்வுகள் இந்த சுரங்க பாதையால் யாருக்கும் தெரியாமல் நடந்துகொண்டு இருந்தது
  29. இந்த செயலி அறிமுகத்திற்கு வந்த போது அவுஸ்ரேலிய தொலைக்காட்சிகளில் இதே சர்ச்சையினை கிளப்பியிருந்தார்கள். ஆனால், ஒரு குறிப்பிட்ட விடயம் ஒன்றினை (பங்கு வர்த்தகம் தொடர்பாக) இரண்டு செயலிகளிலும் வினவிய போது சட் ஜிபிடி புரிந்தும் புரியாமலும் மேலோட்டமான கருத்தை தெரிவித்த அதேநேரம் டீப் சீக் அந்த விட்யத்தினை ஆளமாக உள்வாங்கி அதில் உள்ள சிறிய நடைமுறை சிக்கல்கள் என மிக விரிவான பதிலளித்தது (ஆழமாக சிந்தித்து) , அப்படியான ஒரு தொழினுட்பத்தினால் இப்படியான குறைபாடு சிந்திக்க வைக்கிறது.
  30. பாக்கு நீரிணைக்கு ஒருபுறம் ஒராள் பாக்கு நீரிணைக்கு மறுபுறம் ஒராள் என ஒரு சமநிலை பேணப்படுகிறது.😁
  31. தலைப்பை பார்த்ததும், இதையே கமெண்டாக போட வந்தேன், நீங்களே போட்டு விட்டீர்கள்😃 அண்ணாமாலை தன் சக சங்கி சைமனுக்கு ஆதரவாக ஆதாரமெல்லாம் வெளியிடுகிறேன் என்றார், ஆனால் வழக்கம் போல் அவரும் வாய்ச்சொல் வீரராகவே இருக்கிறார்.
  32. உங்கள் கதை மழையில் தொடர்ந்தும் நனைகின்றோம்…! தொடருங்கள்…
  33. கதை அமைப்பு நன்றாக இருக்கிறது,
  34. 2008 வேலையிடத்தில் ஒரு கண்டி சிங்கள பெண்மணி கூறினார், அனைத்து பிரச்சினைக்கும் காரணம் யு என் பி தான் என, அவர் ஒரு கடும் இனவாதியாக இருந்தார், அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவதனை நியாயப்படுத்துவராக இருந்தார் எதனை ஆதரிக்கிறாய் என்பதில் கவனமாக இல்லாவிட்டால் இவ்வாறான அழிவுகளை தவிர்க்க முடியாது என தவறுகளை நியாயப்படுத்தும் ஒருவர். தற்போது புதிதாக வந்துள்ள அரசினை குற்றம் சாட்டுவதன் மூலம் கடந்த காலத்தில் நடத்தப்பட்ட அநீதிகளை கடந்து செல்லும் முயற்சி, ஆனால் இதே மாதிரி ஒரு சூழ்நிலைக்கு உட்பட்ட எம்மவர்களால் கூட இவ்வாறான மனப்பான்மைக்குள் எவ்வாறு செல்ல முடிகிறது?
  35. உங்கள் மனைவி உங்களுக்கு செவிடன் என்று பட்டம் சூட்டினால், நீங்கள் புத்திசாலி, வாதத்தை வளர்க்க விரும்பாதவர் என்று அர்த்தம். இன்று பல ஆண்கள் வீட்டில் செவிடர்களாகவே இருக்கிறார்கள்.
  36. உண்மை தான் . 😀 எனக்கும் இது தெரிந்து கொள்ள ஆசை நானும் தமிழடியான் காணெளிகளை இப்போது பார்ப்பது இல்லை யாரும் அனுப்புவது இல்லை.முன்பு அவர் அநுரகுமார திசாநாயக்கவையும் புகழ்வார் அருச்சுனாவையும் புகழ்வார்.
  37. அதே போல இந்த ஹாசா பகுதி எதோ 23 ஆம் ஆண்டு ஒக்டொபெரில் நடந்த இஸ்ரேலியர்களின் படுகொலையினால் நடந்தது என நாங்கள் நினைக்கிறோம்...ஹாசாவில் நிலத்தின் அடியில் ஹாசா தீவிரவாத அமைப்பினர் கட்டிய சுரங்க அறைகள் ,மற்றும் ஆயுத கிடங்குகள் யாவும் ஏற்கனவே இஸ்ரேலிய புலனாய்வாளர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும் ...அதுவும் கடலுடன் தொடர்புடைய நிலப்பகுதி ...ஒரு சிறு துறும்பின் அசைவையும் துல்லியாமாக அறிந்துவைத்திருக்கும் இஸ்ரேலிய படைகளுக்கு நிச்சயமாக பல வருடங்களுக்கு முதலே இந்த சுரங்கம் பற்றி அறிந்திருப்பார்கள் ...மத்திய கிழக்கு நாடுகளின் பணத்தை இப்படியான கட்டுமாணங்களுக்கு செலவு செய்து தங்களுக்கு தேவையான வருமானத்தை ரஸ்யா,அமெரிக்கா,சீனா முதலாளிகள் பெற்று கொண்ட பின்பு இஸ்ரேலும் ,அமெரிக்காவும் ஹாசவை முற்றாக அழித்து விட்டார்கள்... அறம் சார்ந்து வலது ,இடது அரசியல்வாதிகள் செயல்படுவதில்லை... நம்ம சகோதரயா அனுராவும் இதை செய்கின்றார் .....இடதும் /வலதும் ஒரே நேர் கோட்டில் ஒடுகின்றன பெயர் தான் வித்தியாசம்
  38. தம் ஆரசியல் இலாபத்திற்காக ஏதோ ஒரு வழிகளில் தம் போர்வெற்றியை ஞாபகப்படுத்திக்கொண்டே இருப்பார்கள்.
  39. சுகமான கற்பனை , சுவையாக உள்ளது . .......! 😇
  40. பாரீஸ் நகரில்...ரயில் நிலையம் அருகில் ஒருமுறை ஒரு பயங்கர வெடிகுண்டு சம்பவம் நடந்த்து..... தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரும் தப்பித்தனர்.... ஆனால் அவர்களுடன்....இந்த செயலுக்கு மிகவும் உறுதுணையாக இருந்த ஒரு பயிற்சி...நாய் மட்டும் போலீசார் வசம் சிக்கி கொண்டது... ஆனால் அந்த நாயை வைத்துக்கொண்டு போலீசாரால் துப்புத்துலக்க முடியவில்லை.... காரணம் அது எந்த முறையில்....எந்த மொழியில் பயிற்சி கொடுக்கப்பட்டது என்ற விபரம் அங்கிருந்த யாருக்கும் தெரியவில்லை.....! (உதாரணத்திற்க்கு..... தமிழ் வீட்டில் வளரும் நாய் உட்கார் என்றால் உட்கார்ந்து கொள்ளுமாம்....இதைப்போல...) எப்படியாவது இந்த நாயை வைத்தே குற்றவாளிகளின் இருப்பிடத்தை கண்டறிந்து...அவர்களை கைது செய்ய முடிவெடுத்தனர் எல்லாரும் முயற்சி செய்து ஒரு வழியாக...ஒரு பன்மொழி கலைஞரை அழைத்தனர்.....அவருக்கு...60மொழிகள் வரை அத்துப்படி...... அவர் ஒரு புரஃபெஸரும் கூட... . அவரும் வந்து.... வித விதமான மொழிகளை பேசி முயற்சி செய்தும் பயன் இல்லை...அந்த நாயிக்கும் ஒன்றும் புரியவே இல்லை.... கடைசியில்.... பழம்பெரும் மொழிகளில் ஒன்றான ஹிப்ரு என்ற மொழியில்...அவர் பயிற்சியை துவக்கியதும் ...நாய்க்கு புரிய ஆரம்பித்தது.....உடன் அதை வைத்து குற்றவாளிகளின் இருப்பிடம் கண்டு....உடன் கைது செய்தது பாரீஸ் போலீஸ்...... அந்த புரஃபெஸருக்கு பாராட்டுக்கள் குவிந்தது..... அவருக்கு பாரீஸ் அரசாங்கம் ஏகப்பட்ட விருதுகளை அள்ளித்தர முடிவு செய்தது... பெரிய விருந்து ஒன்றையும் ஏற்பாடு செய்தது விருந்தில் அவரிடம் கேட்க்கப்பட்டது உங்களால் பாரீஸ் பெருமை அடைந்தது... ... உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் வழங்கபடும் என்றனர்.... பணம் வேண்டுமா.....? விலை கூடிய கார்கள் வேண்டுமா..? மாளிகை வேண்டுமா....? அரசாங்க பணிகள் வேண்டுமா...? என்று... அவர் மறுத்துவிட்டார்... எனக்கு உதவியாக இருந்த அந்த...நாயை மட்டும் தயவு செய்து எனக்கு வழங்கிவிடுங்கள்...என்றார்... அதை கேட்டு அங்கிருந்த அனைவருக்கும் ஆச்சர்யம்.... சிலர் இவருக்கு பைத்தியம் என்றனர்.... ஒரு அதிகாரி கேட்டார்..... ஏன் அந்த நாயை வைத்து நீங்கள் என்ன செய்ய முடியும்..... என்று ஆச்சரியத்துடன் கேட்டார். ... அதற்க்கு அவர்...சொன்னார்.... இந்த நாயை என் வீட்டிற்க்கு கொண்டு போய்....என் மனைவி முன் நிறுத்தவேண்டும்..... ஏன் என்றால் நான் கஷ்டப்பட்டு இந்த பல மொழிகள் படிக்க முயலும்போதெல்லாம்.... அவள் சொல்வாள்... . ""எந்த நாய் கேட்க்க போகுதுன்னு... இதையெல்லாம் படிக்கிறீங்கன்னு..".".. அதுக்காக தான் இதை கொண்டுபோகணும்னுசொன்னவுடன் அரங்கம் சிரிப்பொலியில் நிறைந்தது..
  41. கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. sudumanalNovember 4, 2023 அமெரிக்க ஜனநாயகத்தின் இழிநிலைகளில் ஒன்று இப்போ காஸா குறித்து ட்றம்ப் முன்மொழிகிற திட்டம். ஒருவரது பூர்வீக நாட்டை போரினாலும் ஆக்கிரமிப்பினாலும் திட்டமிட்ட குடியேற்றத்தாலும் தமதாக்கிக் கொள்ளலாம் என்ற காலனிய அதிகார மமதைதான் அது. அது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்கா என்ற நாடே அப்படித்தான் உருவாகியது. கனடா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து என வேறும் முன்னுதாரணங்கள் இருக்கின்றன. காஸாவின் இடத்தில் அதன் பூர்வீக மக்களை துடைத்தழித்து இஸ்ரேலை அகலக் கால்பதிக்க வைப்பதும் அதே காலனிய முறைமைச் சிந்தனைதான். இன்னும் ஒருபடி போய் காஸாவின் கடல்சார் பகுதியை அண்டி அதை உல்லாசப்பிரயாண நிலமாக (மத்திய கிழக்கின் rivera வாக) ட்றம்பின் றியல் எஸ்ரேற் மருமகன் (யறெட் குஸ்னர்) இன் திட்டத்துக்கான நிலமாக மாற்ற முயற்சிக்கிற இழிநிலை அது. இது பல்கட்சி ஆட்சிமுறை ஜனநாயகத்தை செழிக்கப் பண்ணும் என்ற விதியை கேலிசெய்வதாக அமைகிறது. காஸா மனிதர்கள் உயிர்வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலமாம். வாழத் தகுதியில்லாத நிலமாம். துயர நிலமாம். அழிவுகளின் கூடாரமாம். அமெரிக்கக் குண்டுகளினால் இடிபாடாக்கப்பட்ட நிலத்தைப் பார்த்து அமெரிக்க சனாதிபதி இப்படியெல்லாம் சொல்கிறார். குண்டுகள் தானாக அமெரிக்க களஞ்சியத்திலிருந்து பறந்து வந்துதானே மக்களைக் கொன்றது! இவளவு இஸ்ரேலியக் குண்டுவீச்சுக்குள்ளும் மனிதவதைகளினுள்ளும் உணவு, நீர், மின்சாரம் என எல்லாவற்றையும் கட்டுப்படுத்தி வதைத்தும், கூட்டமாக ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு காஸாவுக்குள் துரத்தி அலையவிட்டும்கூட இன்னமும் அந்த மண்ணில் மக்கள் வாழ்கிறார்கள். வாழ்வை மீண்டும் கட்டியமைக்க அவர்கள் கட்டியமைக்கும் நம்பிக்கையோடு இடப்பெயர்வுகளிலிருந்து திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இது எமது நிலம். இங்கிருந்து போக மாட்டோம் என்கிறார்கள். அது வாழத் தகுந்த நிலமா இல்லையா என்பதை அவர்கள் இரத்த சாட்சியாக உலகத்தின் முன் நிரூபித்திருக்கிறார்கள். அதை அமெரிக்காவோ இஸ்ரேலோ தீர்மானிப்பது ஜனநாயகமா என்ன. ஐநா உட்பட உலகின் பெரும்பான்மை நாடுகளும் சமூகப் புத்திஜீவிகளும் இந்த பழைய காலனிய ஒழுங்கின் மீள்வரவை எதிர்த்து கருத்துச் சொல்லியபடி இருக்கிறார்கள். ஜேர்டானும் எகிப்தும் இந்த 2 மில்லியன் பலஸ்தீன மக்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ட்றம் கட்டளையிடுகிறார். அந் நாடுகள் மறுத்திருக்கின்றன. நெத்தன்யாகுவோ சவூதி அரேபியாவிடம் பெரும் தரிசு நிலங்கள் இருப்பதாகவும் அங்கு பலஸ்தீன நாட்டை அமைத்துக் கொள்ளலாம் என இன்னொரு கோமளித்தனத்தை முன்வைக்கிறார். இவ்வாறு ட்றம்ப் இன் அறிவித்தல்கள் வெளிவந்தபடி இருக்கின்றன. அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி தன்னும் இதற்கு எதிராக மூச்சு விடவில்லை. இது ஏன்?. பல்கட்சி ஆட்சிமுறை என்பது ஜனநாயகக் கட்டமைப்பில் அவசியமான ஒரு முறைமைதான். அது deep state நிலவுகிற அமெரிக்கா போன்ற நாடுகளில் எதையும் பிடுங்காது. ஏனெனில் அந்த deep state தான் வெளிநாட்டுக் கொள்கையை மாறாமல் வைத்திருக்கவோ அதன்வழியில் இற்றைப்படுத்தவோ செய்கிறது. அரசாங்கங்கள் அல்ல. அது பலம்படைத்த உளவு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள், சியோனிச லொபிகள், இலுமினாட்டிகள், இனமேலாதிக்க புத்திசீவிகள் போன்றவர்களால் state என்பது deep state வடிவம் எடுக்கிறது. அமெரிக்கா உலகம் பூராக நடத்திய போர்கள் இரு கட்சிகளாலும் நடத்தப்பட்டன. பல கட்சி ஆட்சிமுறையின் பன்மைத்துவம் என்பதை அந்த அரசு வடிவம் பொய்மையாக்கிவிடுகிறது. சுவிஸ் போன்ற நாடுகளில் பல்கட்சி ஆட்சிமுறை மேன்மைப்பட்ட நிலையில் இருப்பதற்குக் காரணம் இந்த deep state அற்ற தன்மைதான். 7 பேர் கொண்ட உயர் சபைதான் சுவிஸை ஆள்கிறது. அதுவும் ஒவ்வொரு வருடம் ஒவ்வொரு தலைவராக தேர்வு அடிப்படையில் வருகிறார்கள். மக்களுக்கான நேரடி ஜனநாயகம் கொண்டதாகவும் இருக்கிறது. சில விமர்சனங்கள் இருக்கிறபோதும் அந்த முறைமை பயனளிக்கும் வகையிலேயே செயற்படுகிறது. இந்த deep state முறைமைதான் இருபெரும் வல்லரசாக இருந்த அமெரிக்கா சோவியத் யூனியனுக்கு இடையில் சமாதானம் என்பதை நிலைநாட்டிய கெனடியைக் கொன்றொழித்தது. 1962 இல் சோவியத் யூனியனின் பாதுகாப்பை அச்சுறுத்தும் வகையில் துருக்கியில் அமெரிக்கா நிறுவிய (அணுவாயுதம் உட்பட்ட) தளத்துக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் அணுவாயுத்தை நிறுவியது. அப்போது அதற்கெதிராக நடவடிக்கை எடுக்க சிஐஏ கெனடியை வற்புறுத்தியோது அதை அவர் மறுத்தார். சமாதான முயற்சியை முன்வைத்தார். அவரும் குருச்சேவ் உம் பேசித் தீர்த்துக் கொண்டார்கள். துருக்கியிலிருந்தும் கியூபாவிலிருந்தும் அணுவாயுதங்கள் திரும்பப் பெறப்பட்டன. அது அமெரிக்க deep state இனை மீறிய செயலாக அமைந்ததால் அவர் கொல்லப்பட்டதாக சொல்லப்படுகிறது. உலகம் முழுவதுமான ஆட்சிக் கவிழ்ப்புகள், போர்கள், தலைவர்களை கொலை செய்தல் என இயங்குகிற deep state இன் முக்கிய தூண்கள் சிஐஏ உம் எப்.பி.ஐ உம் ஆகும். இப்பே ட்றம்பின் வருகைக்குப் பின் ஒரு சுவாரசியமான முரண் எழுந்துள்ளது. ட்றம் deep state க்கு எதிரானவராக இருக்கிறார். state என்ற வடிவத்தை அவர் பேண விரும்புகிறார். அதேநேரம் ஜனாதிபதிக்கான அதிகாரத்தை முழு அளவில் தனது கையில் மட்டுமே வைத்திருக்க விரும்புகிறார். சிஐஏ இலிருந்து பலரை வேலைநீக்கம் செய்திருக்கிறார். அந்த கட்டமைப்பினுள் ஊழல் நிலவுவதாகவும் பெருமளவு நிதியை அது விழுங்குகிறது என்றும் வெளிப்படையாக குற்றம் சுமத்துகிறார். தனது முதலாவது ஆட்சிக் காலத்தின்போது தன்னை சுயாதீனமாக இயங்க விடாமல் செய்தது என்கிறார். இருந்தபோதும் அதையும் மீறி இந்த deep state வடிவத்துக்கு எதிராக அவரது முதல் ஆட்சிக்காலத்திலும் இருந்திருக்கிறார். அதனால் அவர் போர் எதையும் செய்யவில்லை. புட்டினோடு உறவாக இருந்தார். வடகொரியாவுக்கு விஜயம் செய்தார். இம்முறை ட்றம் கையில் எடுத்திருப்பது பொருளாதாரப் போரைத்தான். சீனாவினதும் ப்ரிக்ஸ் அமைப்பினதும் வளர்ச்சி அமெரிக்க பொருளாதாரத்தை சாய்த்துவிடலாம் என்ற அச்சம் அது. மீண்டும் அமெரிக்காவை மேல்நிலையில் நிறுத்துவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார். இந்தப் பொருளாதாரப் போர் அரசியல் போர்களில்தான் முடியும் என பொருளாதார நிபுணரும் அரசியல் விஞ்ஞானியுமான ஜெப்ரி சக்ஸ் கூறுகிறார். சீனாவின் பொருளாதாரத்தை வீழ்த்த ட்றம்ப் தாய்வானை இன்னொரு உக்ரைனாக மாற்றும் நிலைக்கு கொண்டு செல்ல வாய்ப்பு உள்ளது. deep state இனை மறுத்து, அதற்கு பதிலீடாக தனிப்பெரும் தலைவராக தன்னிச்சையாக முடிவுகள் எடுத்து ட்றம்ப் செயற்படுவதும்கூட ஒன்றும் ஜனநாயகப் பெறுமதியைத் தரப்போவதில்லை. எல்லாம் ஒரே குட்டையில் ஊறும் மட்டைகள்தான். பொருளாதாரப் போர் அரசியல் போராக பரிணமிக்கும நிலைக்கு சாத்தியம் இருப்பதால், deep state முறைமைக்கும் ட்றம்ப் க்குமுள்ள முரண்பாடுகள் புஸ்வாணமாகியும் போகலாம். கனடா, மெக்சிக்கோ, சீனா என தொடங்கும் மோசமான வரிவிதிப்பு ஐரோப்பிய ஒன்றியத்தையும் வந்தடையலாம் என ஏற்கனவே தயார்ப்படுத்தல்கள் ஆரம்பமாகிவிட்டன. டென்மார்க்கின் கிர்ின்லாண்ட் இனை வாங்க அல்லது அழுத்தம் கொடுத்து தனதாக்க ட்றம் புற்பட்டிருக்கிறார். பனாமாக் கால்வாயை மீள எடுக்கப் போகிறோம் என்கிறார். யமேய்க்கா BRICS இல் சேர தடைவிதிக்கிறார். தென்னாபிரிக்காவில் காணிச் சீர்திருத்த சட்டத்தை பயங்கரமானது என வர்ணித்து அந்த அரசுக்கு எச்சரிக்கை விடுகிறார். ட்றம்பின் வலதுகையும் தென்னாபிரிக்காவில் பிறந்தவருமான எலான் மஸ்க் இந்தச் சட்டத்தை இனவெறிச்சட்டம் என கேலிக்குரிய வியாக்கியானம் கொடுத்திருக்கிறார். 7.7 வீத வெள்ளையர்கள் தென் ஆபிரிக்காவின் 78 வீதமான விவசாய நிலங்களை சொந்தமாகக் கொண்டிருக்கின்றனர். நெல்சன் மண்டேலா சாதித்த அரசியல் விடுதலை காலத்திலிருந்து இன்றுவரை காணி மீள் பகிர்தல் என்பதை எந்த தென்னாபிரிக்க அரசும் சாத்தியமாக்க முடியாமல் திண்டாடுகிறது. அந்தளவுக்கு வெள்ளையின அதிகாரம் தென்னாபிரிக்க அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. இந்நிலையில் இப்போ தென்னாபிரிக்க அரசு கொண்டுவந்திருக்கிற காணிச் சீர்திருத்தச் சட்டத்தை இனவெறிச் சட்டம் என்று மஸ்க் சொல்வதையெல்லாம் கேட்டுத் தொலைக்க வேண்டியிருக்கிறது. https://sudumanal.com/2025/02/07/கேட்டுத்-தொலைக்க-வேண்டிய/
  42. "மனமே கலங்காதே " ஊக்கம் தந்திடும் ஒரு கவிதை . .........! 👍 "இயற்கையின் இன்ப அழகில் " மனசை மலர்விக்கும் ஒரு கவிதை .........! 👍
  43. இலங்கையில் இருந்து உயிருக்கு பயந்து வாழமுடியாமல் இந்தியாவுக்கு சென்று அகதி தஞ்சம் கேட்ட தமிழரை எப்படி இந்திய நடுவண் அரசு நடாத்தியது ?
  44. பாட்டல் ராதா: விமர்சனம்! Jan 26, 2025 மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று! ’இருபது வருஷத்துக்கு முன்னால இவ்வளவு பேர் குடிச்சாங்களான்னு தெரியலை’, ‘முப்பது வருஷத்துக்கு முன்னால இவ்ளோ கடைகள் கிடையாது தெரியுமா’, ‘நாப்பது வருஷத்துக்கு முன்னால எல்லாம் குடிக்கறவனை கேவலமாதான் நினைப்பாங்க’, ‘பொடி போடுறது, போயிலை போடுறதையே மோசமான பழக்கங்களா நினைச்ச காலம் ஒண்ணு உண்டு’. கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் இப்படிப் போதை குறித்த கருத்துகள் மாறி வந்திருப்பதைக் காண முடியும். Bottle Radha Movie Review ‘மது குடிக்காதவர்களின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம்’ என்கிற நிலையை இன்று அது அடைந்திருக்கிறது. இந்தச் சூழலில், குடியின் தீமைகளை விளக்குவதாகத் திரைப்படமொன்றை உருவாக்கினால் எடுபடுமா? இந்தக் கேள்விக்கு, ‘அது எத்தனை பேரைச் சென்றடையும் என்பதை விட, எத்தனை பேருக்கு அது தேவை என்பதே முக்கியமானது’ என்று பதிலளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது ‘பாட்டல் ராதா’ திரைப்படம். பா.ரஞ்சித் தயாரிப்பில், தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கிற இப்படத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன், ஜான் விஜய், லொள்ளு சபா மாறன், ஆண்டனி, பாரி இளவழகன், கருண பிரசாத், மாலதி அசோக் நவீன், சுஹாசினி சஞ்சீவ், சேகர் நாராயணன் உட்படப் பலர் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இதற்கு இசையமைத்திருக்கிறார். சரி, இப்படம் சுவாரஸ்யமான கதை சொல்லலைக் கொண்டிருக்கிறதா? பாட்டலும் கையுமாய்..! ’மதுவில் ஊறிய வாழ்க்கை’ எனும்படியாக, ஒரு நாளின் பெரும்பொழுதுகளைப் போதையின் துணையோடு கடக்கிற மனிதன் ராதாமணி (குரு சோமசுந்தரம்). சென்னை ஆவடி அருகேயுள்ள ஒரு சிற்றூரில் வாழ்கிறார். மனைவி அஞ்சலம் (சஞ்சனா நடராஜன்), ஒரு மகன், ஒரு மகள் என்று மூன்று பேர் அவரை நம்பி வாழ்ந்து வருகின்றனர். ஆனால், அது பற்றிய நினைவுகளை மறக்கிற அளவுக்குத் தினமும் மதுவில் திளைக்கிறார் ராதா. சுருக்கமாகச் சொன்னால் எந்நேரமும் ‘பாட்டலும் கையுமாய்’ திரிகிறார். ‘பாட்டல்’ என்று அக்கம்பக்கத்தினரால் அழைக்கப்படும் அளவுக்கு அவரது நிலை மாறுகிறது. அதனால், உடன் பிறந்த சகோதரரின் (ஆண்டனி) மேற்பார்வையில் நடந்துவரும் கட்டடப் பணியில் அவரால் ஒழுங்காகப் பங்கேற்க முடிவதில்லை. இத்தனைக்கும் ’டைல்ஸ் பதிப்பதில் ராதாவைப் போல் யாருமில்லை’ என்ற பெயர் அந்த வட்டாரத்தில் அவருக்குண்டு. வேலையில் ஒழுங்காக ஈடுபடுவதில்லை. மேஸ்திரியாக இருக்கும் சகோதரனின் மச்சான் உடன் ‘ஈகோ’ மோதல். பணி நடக்குமிடத்தில் இருக்கும் பொருட்களைத் திருடி விற்றுக் குடிக்கிற அளவுக்குப் போதை மீதான ஈர்ப்பு. இப்படிப் பல குற்றச்சாட்டுகளைக் குடும்பத்தினரிடம் மட்டுமல்லாமல் தெருவில் வசிப்பவர்கள், சுற்றத்தினரிடமும் பெற்று, பல அனாவசியச் சண்டைகளுக்குக் காரணமாகிறார் ராதா. ஒருநாள் காவல்நிலையம் வரை பிரச்சனை செல்ல, ’ஸ்டோர் ரூம்மை க்ளீன் பண்ணச் சொல்லுங்க’ என்கிறார் இன்ஸ்பெக்டர். அப்போது, சோதனையில் கைப்பற்றப்பட்டு சீல் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை பிரித்துக் குடித்துவிடுகிறார் ராதா. அப்புறமென்ன, அடுத்த சில மணி நேரத்தில் அங்கிருப்பவர்களின் அனைத்து அர்ச்சனைகளையும் ஏந்திக் கொள்கிறார் அஞ்சலம். ’இந்த மனுஷன் குடியை நிறுத்த மாட்டாரா’ எனும் பல்லாண்டு கால விருப்பம் ஆதங்கமாகி ஆத்திரமாக மாறும் நிலையை எட்டுகிறது. அது, பாட்டல் ராதாவை ஒரு போதை மறுவாழ்வு மையத்திற்குக் கொண்டுபோய்விடும் அளவுக்குச் செல்கிறது. புத்தா போதை மறுவாழ்வு மையத்தை நடத்தி வரும் அசோகன் (ஜான் விஜய்), அங்கு வரும் ஒவ்வொருவரையும் மது நோயாளியாக நடத்துகிறார். அவர்கள் மனம் மாறி, மது போதையை நாடாமல் குடும்பத்தோடு நல்வாழ்வு வாழ வேண்டுமென்று சில காரியங்களைச் செய்கிறார். ஆனால், அந்த இடமே பாட்டல் ராதாவுக்கு நரகமாகத் தெரிகிறது. அதன்பிறகு அவர் என்ன செய்தார்? மது போதையைக் கைவிடத் துணிந்தாரா? தனது குடும்பத்தோடு மகிழ்ச்சிகரமாக வாழ்ந்தாரா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி. இந்த திரைப்படத்தைக் காண மேற்சொன்ன விளக்கமே போதுமானது. பின்வரும் கருத்துகள் ‘ஸ்பாய்லர் ரகம்’ என்பதால், ‘அது தேவையில்லையே’ என்பவர்கள் இதோடு நிறுத்திக் கொள்ளலாம். தேவையான கருத்து! மதுவே கதி என்றிருக்கும்போதும், அதன் வாசனை கூட இல்லாமல் போதை மறுவாழ்வு மையத்தில் அடைக்கப்பட்டிருக்கும்போதும், மது குறித்த நினைவுகளைக் கைவிட முடியாமல் தன்னைத்தானே நொந்துகொள்ளும்போதும், மீண்டும் மதுவை நாடிச் செல்லும்போதும், தனது உடல்மொழியில் நாயகன் குரு சோமசுந்தரம் காட்டுகிற வேறுபாடுகள் ‘அடிபொலி’ ரகம். ’ஃபேஜ் 3’யில் வரும் அளவிலான பார்ட்டி கொண்டாட்ட வாழ்க்கைமுறையைத் திரையில் பிரதிபலிக்கிறவராய் வந்த சஞ்சனா, இதில் சமூகத்தின் அடித்தட்டில் வாழ்கிற ஒரு பெண்ணாகத் தோன்றியிருக்கிறார். படம் முழுக்க வெளிப்படுத்தியிருக்கிற பாவனைகளின் ஒரு துளியாக, இதன் கிளைமேக்ஸ் ஷாட்டில் அமைந்திருக்கிறது அவரது நடிப்பு. பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் மட்டுமல்லாமல் அவர் தயாரிக்கும் படங்களிலும் நல்ல பாத்திரங்களை ஏற்று வருகிறார் ஜான் விஜய். இதிலும் அவருக்கு ஒரு வித்தியாசமான பாத்திரம். குரு சோமசுந்தரத்தின் சகோதரராக வரும் ஆண்டனி, சகோதரியாக வரும் சுஹாசினி சஞ்சீவ், போதை மறுவாழ்வு மையத்தில் காட்டப்படும் லொள்ளுசபா மாறன், அபி ராமையா, மாலதி அசோக் நவீன், கருணபிரசாத், சேகர் நாராயணன் என்று இப்படத்தில் ஒவ்வொருவரும் பல கலைஞர்கள் நம்மை வசீகரிக்கின்றனர். பாகுபலி எனும் பாத்திரத்தில் வருபவரையும் இப்பட்டியலில் சேர்த்தாக வேண்டும். ‘ஜமா’ படத்தின் நாயகனும் இயக்குனருமான பாரி இளவழகன், இப்படத்தில் நாயகனின் மது போதை நண்பர்களில் ஒருவராக வருகிறார். இது போன்று இப்படத்தில் பாராட்டுக்குரிய விஷயங்கள் பல இருக்கின்றன. இப்படத்தின் ‘காஸ்ட்டிங்க்’கை கவனமாகத் தேர்ந்தெடுத்து ஆக்கியது போன்று இதர தொழில்நுட்பங்களிலும் பெருங்கவனம் செலுத்தப்பட்டிருக்கிறது. ’தண்ணி தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்’ எனும் ‘சிந்துபைரவி’ பாடல் பின்னணியில் ஒலிக்க, ஆவடி பகுதியைப் பறவைப் பார்வையில் காண்பிக்கும் ஷாட்டில் இருந்து திரைக்கதை தொடங்குகிறது. அது, ’பெரும்பாலான சமூகம் மதுவில் ஆழ்ந்திருப்பதாகச் சொல்கிறதோ’ என்று எண்ண வைக்கிறது. ஒளிப்பதிவைப் பொறுத்தவரை, ரூபேஷ் ஷாஜியின் கேமிரா சந்துபொந்துகளிலெல்லாம் பயணித்திருக்கிறது. ‘கேமிரா வைக்கிற அளவுக்கு க்ளீனா இல்லையே’ என்று தயங்குகிற இடங்களிலும் படம்பிடித்திருப்பது, திரைக்கதையோடு பார்வையாளரை ஒன்ற வைக்கிற உத்திகளில் ஒன்று. ராஜராஜின் கலை வடிவமைப்புக்கு அதில் பெரிய பங்குண்டு. ட்ரெய்லரில் அவரது பெயர் ஏன் குறிப்பிடப்படவில்லை என்பது படக்குழுவினருக்கே வெளிச்சம். சங்கத்தமிழனின் படத்தொகுப்பானது, தரையில் சிந்திய மது மண்ணில் ஊறித் தனது எல்லையை விரிப்பது போன்று திரையில் கதை சொல்ல உதவியிருக்கிறது. காட்சி எந்த இடத்தில் முடிகிறது, தொடங்குகிறது என்று உணர்வதற்கு வழி இல்லாமல் செய்திருக்கிறது. இப்படியொரு படத்தில் ஒலி வடிவமைப்புக்குப் பெரும் பங்கு இருக்க வேண்டும். சுரேன் – அழகியகூத்தன் கூட்டணியானது வசனம், இசை, பின்னணி ஒலிகள் இடம்பெறுகிற விகிதத்தைச் செம்மையாக அமைத்திருக்கிறது. இது போக ஒப்பனை, ஆடை வடிவமைப்பு உட்படச் சில நுட்பங்கள் சிலாகிக்கிற அளவில் இருக்கின்றன. இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், இப்படத்தில் தனது பங்கு என்ன என்று உணர்ந்து செயலாற்றி இருக்கிறார். ’என் வானம் நீ’ எளிதாக மனதோடு ஒட்டிக்கொள்ளும் மெலடி; ஆனால், அது ‘கபாலி’யில் வரும் ‘மாயநதி’யை நினைவூட்டுகிறது. ’யோவ் பாட்டிலு’ பாடல் ஒரு அக்மார்க் ‘டாஸ்மாக் பார்’ பாடல். ’நா குடிகாரன் நானா குடிகாரன்’, ‘தண்ணியில கிறுக்கு’, ’கண்களின் ஈரம்’ பாடல்களும் சட்டென்று ஈர்க்கும் ரகத்தில் இருக்கின்றன. வாழ்வில் தீராத சோகத்தைக் காட்டுவதிலும், ‘விடியல் வராதா’ என்ற ஏக்கத்தைச் சொல்வதிலும், நடித்தவர்களின் பங்களிப்பை அடிக்கோடிட்டிருக்கிறது ஷான் ரோல்டனின் பின்னணி இசை. ஒரு திரைப்படமாக இக்கதையை ஆக்க, பலரது உழைப்பை ஒருங்கிணைக்க, இயக்குனர் தினகரன் சிவலிங்கம் கடுமையான உழைப்பையும் நேரத்தையும் செலவிட்டிருப்பார். அனைத்தும் நிறைவுற்றபிறகும் கூட அவர் இதன் வெளியீட்டிற்காகக் காத்திருந்திருக்கிறார். இப்படம் கடந்த ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதியே தணிக்கைச் சான்றிதழ் பெற்றிருப்பது அதனை உணர்த்துகிறது. ‘மதுபானக்கூடம்’ உட்படச் சில படங்கள் மதுவின் தீமையை உணர்த்துகிற வகையில் தமிழில் ஏற்கனவே வெளியாகியிருக்கின்றன. ஏன், அறுபதுகளில் கூட சிவாஜி அத்தகைய மதுப்பிரியராகத் திரையில் தோன்றி ‘மது மனிதனுக்குத் தேவையில்லை’ என்று உணர்த்தியிருக்கிறார். எம்ஜிஆரின் எத்தனையோ படங்கள் அதனை நீதியாகப் புகட்டியிருக்கின்றன. அந்த வரிசையில் இதனைச் சேர்க்கலாமா என்றால் ‘வேண்டாம்’ என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால், ’தினமும் மதுவில் திளைக்கிற ஒருவர் இப்படத்தைப் பார்த்தால் மனம் திருந்திவிட மாட்டார்களா’ என்கிற ஆதங்கத்தை முன்வைக்கிறது ‘பாட்டல் ராதா’. அது நிகழுமா என்றால் ‘வாய்ப்பிருக்கிறது’ என்றே சொல்லத் தோன்றுகிறது. மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடிப்பில் ‘தீவண்டி’ என்றொரு படம் வந்தது. சிகரெட் பிடிப்பதைக் கைவிட முடியாமல் தவிக்கும் இளைஞனின் தகிப்பை அப்படம் சொன்னது. அதனைப் பார்க்கும் ஒருவர் சிகரெட் தனது கையைச் சுடுவதாக உணர்வார். அது போலவே, ‘மதுப்பிரியர்களின் மனதை அசைத்தால் நன்று’ என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிற இப்படம் மதுப்பிரியர்களால் வாடும் அவர்களது குடும்பத்தினர், சுற்றத்தினர், சமூகத்தின் ஏக்கக்குரலாக அமைந்துள்ளது. இந்தப் படம் தமிழ் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் தயாரிக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறது விக்கிபீடியா. Bottle Radha Movie Review ’அதற்குப் பதிலாக மலையாளத்தில் தயாரித்து தமிழில் டப் செய்திருந்தால் அதிக வரவேற்பு கிடைத்திருக்கும்’ என்று சொல்கிற நிலை ஏற்படாத அளவுக்கு நல்லதொரு வெற்றியை ’பாட்டல் ராதா’ திரைப்படம் பெற வேண்டும். அதற்கேற்ற உள்ளடக்கம் இதில் உள்ளது என்று நிச்சயமாகச் சொல்ல முடியும். அதனால், இதில் இருக்கிற குறைகளைப் பிற்பாடு பேசிக் கொள்ளலாம்! https://minnambalam.com/cinema/bottle-radha-movie-review-in-tamil/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.