Leaderboard
-
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்17Points3054Posts -
கிருபன்
கருத்துக்கள உறவுகள்15Points38754Posts -
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்10Points87988Posts -
Maruthankerny
கருத்துக்கள உறவுகள்8Points10720Posts
Popular Content
Showing content with the highest reputation on 02/21/25 in all areas
-
நியாயத்தின் சாம்பல்
6 pointsபோந்தைக் கண்ணிப் பொறைய! கேட்டருள் கொற்கையி லிருந்த வெற்றிவேற் செழியன் பொற்றொழிற் கொல்லர் ஈரைஞ் ஞாற்றுவர் ஒருமுலை குறைத்த திருமா பத்தினிக்கு ஒருபக லெல்லை யுயிர்ப்பலி யூட்டி - நீர்ப்படைக் காதை 130 ஞாயிற்றுக்கிழமை. நெருப்பு எரிந்து முடிந்தாலும் பூமியும் பாதாளமும் கனன்று கொண்டிருந்த மதுரையில், சுருங்கியிருந்த வைகையின் சலசலப்பு, முணுமுணுப்பாக மாறிப் புகையில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்தது. கண்ணகியின் கோபம், புயல் போல், பாண்டிய அரசுகட்டிலைக் கரியாக மாற்றியது. ஆனால் நெருப்பாறு கூடப் பாண்டிய மன்னர்களின் பாவங்களைக் கழுவ முடியவில்லை. திரும்பும் இடமெங்கும் வறட்சியும் ஏக்கமும். பஞ்சம் நகருக்குள் எட்டிப்பார்க்கத் துவங்கி, இப்போது குசலம் விசாரிக்கும் அளவுக்கு வந்து விட்டது . வான் பொய்த்து, வைகை ஆற்றின் நீரும் பொய்த்தது. நெடுஞ்செழியன் செத்துப்போன போது அவன் குற்ற உணர்வுடன் இறந்தான் என்று சொன்னார்கள். அவன் இதயம் அழுகிய பழம் போல் வெடித்தது. கொற்கையிலிருந்த வெற்றிவேற் செழியன் அடுத்த அரசனானான். ஆனால் மக்கள் அவனைப் பொம்மை அரசன் என அழைத்தார்கள். பழைய பயங்களால் பீடிக்கப்பட்ட வெற்று மனிதன். பாண்டிய சிம்மாசனத்தின் வெம்மை அவனைத் தகித்தது, அல்லும் பகலும் ஊணுறக்கமின்றித் தவித்தான். பூசாரிகள் குறி சொல்லினர். தெய்வங்கள் இன்னும் கேட்கின்றன, "மதுரையின் அவமானத்தைக் கழுவ ஆயிரம் பொற்கொல்லர்களின் இரத்தம் தேவை". "மதுரையில் ஏது ஆயிரம் பொற்கொல்லர்?" கேட்டான் அரசன் "சில நூறு குடும்பங்கள் தானே உள்ளன?" "ஆயிரவர் கணக்கை நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம் அரசே" கூறினர் அணுக்கர். இரவோடிரவாக இரகசியம் யாருக்கும் தெரியாமல் நீருக்குள் பரவும் வேர்கள் போல் ஊருக்குள் பரவியது. பொற்கொல்லர் தெருவுக்கு அச்சங்கதி வர அதை எவராலும் நம்ப முடியவில்லை. வீட்டுக்குள் புகுந்து விட்ட விஷப் பாம்பு போல அச்செய்தி எல்லோரையும் வெடவெடக்கச் செய்தது. தெருவிலிருந்து யாரும் வெளியேற முடியாதபடி சிப்பாய்கள் சுற்றி வளைத்து விட்டதாகத் தெரிய வந்த போது எல்லாம் முடிவுக்கு வந்து விட்டது. பக்கத்திலிருக்கும் சங்கு வினைஞர்களின் தெருவும் வெண்கல வினைஞர்களின் தெருவும் கூட முற்றுகையிடப்பட்டுள்ளதாம். நாங்கள் ஏற்கனவே ஒரு செத்த நகரத்தில் பேய்களாக இருந்தோம். இப்போது, பலியாகப் போகிறோம். அம்மா தன் வெண்கல விளக்கின் கீழ் தூணைக் கெட்டியாக பிடித்தபடி உட்கார்ந்திருந்தாள், அதன் சன்னமான ஒளி அவள் ஒடுங்கிய கன்னங்களில் நிழல்களைச் செதுக்கியது. அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர்த்துளிகள் வைரங்களாக மாறி என் நெஞ்சைக் கிழித்தன. "ஒரு பொற்கொல்லனின் கூற்றால் நெடுஞ்செழியன் கண்ணகிக்கு தவறு செய்தான்," அவள் கூறினாள், "ஆனால் நாம் அவன் குற்றத்திற்கு பிராயச்சித்தம் செய்யவேண்டுமா? தெய்வத்தின் நியாயம் எங்கே?" நியாயம் நிரபராதிகளுக்கு முன்னமே செத்துவிடுகிறது. திங்கட்கிழமை விடியல் வந்ததும் வெற்றிவேற் செழியனின் சிப்பாய்கள் வெறிகொண்டு வந்தனர். துணியால் முகங்களை மூடியவர்கள். முகங்களின் சுயத்தை மறைப்பதற்கோ இல்லை புகையைத் தடுப்பதற்கோ தெரியவில்லை. எங்கள் வீதி, ஒரு காலத்தில் உருக்கிய தங்கத்தின் நறுமணம், இப்போது விரக்தியின் துர்நாற்றம். அவர்கள் பாதி எரிந்த வீடுகளில் இருந்து குடும்பங்களை வெளியே இழுத்தனர். வளையல்கள் விற்ற விதவை, பத்தினிக்குப் பாடல் பாடிய குருட்டுக் கிழவன், பால் மணம் மாறாத பிஞ்சுகளைக் கூட விட்டு வைக்கவில்லை.... வீதியெங்கும் அழுகுரல் உயிருக்குத் தத்தளிக்கும் விலங்குகளின் ஓலமாக ஈரற்குலையை அந்தரிக்க வைத்தது. எம் வாசலில் சிப்பாய்களின் அரவம் கேட்டது. படலையை உதைத்து உடைத்து விழுத்தினர். அப்பா கைகள் நடுங்க, என்னை நிலவறைக்குள் மறைத்தார். "மௌனமாய் இரு, மகனே," அவர் கிசுகிசுத்தார். "புதிய அரசன் தனக்கு கட்டுப்படாதவற்றைப் பயப்படுகிறான்." அப்பா போராடவில்லை. அம்மாவின் நெற்றியில் முத்தமிட்டு, என்னை நோக்கி கரகரத்த குரலில். "நீ என் மகன். எமது வம்சத்தின் நெருப்பாக நீ இருக்க வேண்டும்" என்று கூறிவிட்டு வெளிநடந்தார். அவருடனேயே அம்மாவும் நடந்தாள். அவள் கூறுவதற்கு எதுவும் இருக்கவில்லை. அவர்கள் சென்ற பிறகு சிப்பாய்கள் தடதடவென உட்புகுந்து வேறு யாரும் இருக்கிறார்களா என்று தேடும் சத்தம் கேட்ட போது நான் இரகசியமாக ஊர்ந்து வெளியேறினேன். உறுதி செய்வதற்காக சிப்பாய்கள் அனைத்து வீடுகளுக்கும் தீ மூட்டினர். வேறு யாரும் ஒளித்திருந்தாலும் தப்பியிருக்க முடியாது என்று தெரிந்தது. கோவில் முன்றில் கருகிய தூண்களின் சுடுகாடு. பூசாரிகள் பத்தினியின் உருவச்சிலைக்கு கடும் சிவப்பு வண்ண மலர்களால் அலங்கரித்து, மன்னனுக்கு சைகை காட்டினர். நான் ஒருவாறாக ஒளித்திருந்து அனைத்தையும் பார்த்தேன். வெற்றிவேற் செழியன் தன் உயிரற்ற குரல் நடுங்க, உத்தரவை வாசித்தான். "குற்றவாளிகளின் இரத்தத்தால், மதுரை மீண்டும் எழும்!" ஆனால் நாங்கள் குற்றவாளிகள் அல்ல. அம்மா பேய் பிடித்தவள் போல் சிரித்தாள். செழியன் தன் தலையை நிமிர்த்தி அவளைக் கோபத்துடன் பார்த்தான். அவள் குரலை உயர்த்தி "ஒரு பெண்ணின் கோபத்தைப் பார்த்துப் பயப்படுகிறாய், அதனால் எங்களைப் பலியிடுகிறாயா? கண்ணகியின் தீ நியாயம்! இது… இது கோழைத்தனம்!" என்று கூவினாள். "ஒரு பத்தினியின் சாபம் மதுரையை எரித்தது, இங்கிருக்கும் பத்தினிகள் சாபம் யாரை எரிக்கும் என்று யோசித்தாயா?" சிப்பாய்கள் முதலில் அவள் மீது பாய்ந்தனர். அம்மாவின் குங்குமத்தைக் கரைத்துக் கொண்டு இரத்தம் அலை அலையாய் வழிந்தது, அப்பா அவளைக் காக்கப் பாய்ந்தார். எல்லாமே நேரம் கடந்து போனது போல் உலகமே விக்கித்து நின்றது. பல நூறு வாட்கள் கொலை வெறி கொண்ட மிருகத்தின் பற்கள் போல மேலும் கீழும் பாய்ந்தன. கருஞ்சிவப்பு இரத்தம் குளமாகி கற்களின் வெடிப்புகளில் வடிந்து தேங்கியது. சிறு பெண்டிரின் கூச்சல் காற்றைக் கிழித்தது. பின்னர் மரண அமைதி. காகங்கள் வந்தபோது, நான் பிணங்களுக்கூடாக ஊர்ந்தேன், என் கைகள் பிணங்களின் உள்ளுறுப்புகளில் வழுக்கின. அப்பாவின் உடலின் கீழ், அவரது சுத்தியல் கிடைத்தது, கைப்பிடி இரத்தக் கறைபடிந்து கிடந்தது. அதைக் கெட்டியாகப் பிடித்தபடி, எரிந்த நகரத்திலிருந்து தப்பினேன். கொலை சாதனை செய்த பாண்டியனும் புலவர் பலர் புகழ் பாட அரியணை ஏறினான். பலி நாளன்று அவன் கண்களில் ஏறிய இருளை அவனால் அகற்ற முடியவில்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மதுரைக்கு இரகசியங்கள் நிறைந்த கொல்லனாகத் திரும்பினேன். நான் பணக்காரருக்கு நகைகள் செய்வதில்லை, அரச குடும்பங்களுக்குப் பதக்கங்கள் செய்வதில்லை. மாறாக, சிறு குழந்தைகளின் காவல் நகைகளை, ஏழைகளின் தாலிகளை, மறக்கப்பட்டவர்களுக்கான தாயத்துகளை. ஒவ்வொரு வேலையிலும் இறந்த காலத்தின் ஒரு துணுக்கை மறைக்கிறேன். ஒரு எரிந்த ஓலை, ஒரு எலும்புத் துண்டு, அம்மாவின் பாடலின் ஒரு சத்தம். கிராமத்தாருக்கு என் பெயர் தெரியாது. ஆனால் தாய்மார்கள் இரவில் குழந்தைகளைத் தூங்க வைக்கும் போது, வெற்றிவேற் செழியனின் கொலைத்தாண்டவத்திலிருந்து தப்பிய ஒரு சிறுவனின் கதையைச் சொல்கிறார்கள். ஆயிரம் ஆன்மாக்களின் கடைசித் தீப்பொறியை தன் உலையில் வளர்க்கிறான் என்று.6 points
-
கைவிலங்குகள்
6 pointsஉலகில் அடக்குமுறைகளுக்கு எதிராக, சுரண்டல்களுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடும் மக்களுக்கு எந்த ஆதிக்கவாதிகளிடமிருந்து உண்மையான ஆதரவு கிடைப்பதில்லை. போராடும் மக்களிடமிருந்தே எதையாவது பறித்து எடுக்கலாம் என்ற சுயநலன்களே ஆதரவு என்று வரும் ஆதிக்கவாதிகளின் உள்நோக்கமாக இருக்கும். கைகள் விலங்குகளால் கட்டப்பட்டிருப்பவர்கள் மட்டுமே ஒருவருக்கு ஒருவர் இதயசுத்தியுடன் கூடிய ஆதரவைக் காட்டமுடியும். என்னுடையது போராட்டம், உன்னுடையது கோமாளித்தனம் என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரை ஏளனம் செய்தால், ஏளனம் செய்யும் அந்த ஒருவரின் போராட்டமே போலியாகி, அர்த்தம் இழந்து விடுகின்றதல்லவா. ***************************************** கைவிலங்குகள் ------------------------- என் மண்ணிற்காக என் விலங்கை உடைக்க என் காற்றை சுவாசிக்க எந்த மன்னனுக்கும் எதிராக என் வாளை நான் உயர்த்துகின்றேன் புனிதம் கலந்தது என் யுத்தம் வீரம் செறிந்தது என் வரலாறு பெருமை கொண்டது என் இனம் நீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா அவர்கள் கேட்பதைக் கொடுத்து அவர்கள் கொடுப்பதை அடங்கி ஏற்று அந்த ஆட்சியின் கீழ் இருக்க முடியாதா நீ ஒரு கோமாளி உன் குரல் ஒரு ஈனஸ்வரம் உன் நியாயங்கள் எனக்கு சிரிப்புகள் உன் மக்களுக்கு ஏன் வேண்டும் உரிமைகளும் தெரிவுகளும் இப்படிக் கேட்பவர்கள் அவர்கள் எதற்காக யாரை எதிர்த்து போராடினார்கள்?6 points
-
யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா அணி ரியான் ரிக்கெல்ரனின் சதத்துடன் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 315 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்து, இறுதியில் 43.3 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் 208 ஓட்டங்களுக்குப் பறிகொடுத்தது. முடிவு: தென்னாபிரிக்கா அணி 107 ஓட்டங்களால் வெற்றியீட்டியது தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. ஆப்கானிஸ்தான் வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:4 points
-
ஓயும் ஊசல்
3 pointsஓயும் ஊசல் ------------------- என்னைக் கண்டவுடன் அது இப்ப எச்சரிக்கையாவதில்லை மெதுவாக தலையை உயர்த்தி நேராக என் கண்களை பார்க்கின்றது கனிவும் அமைதியும் அதன் கண்களில் காலம் கொடுத்து விட்டிருக்கின்றது தெருப்பூனை ஒன்றின் ஆயுளைத் தாண்டி இன்னும் அது தெருவில் வாழ்கின்றது மெதுவாக வந்து கொஞ்சமாக சாப்பிடுகின்றது 'நீ சாப்பிட்டாயா........... எல்லோரும் நலமா........' என்று உள்ளே மெதுவாக ஒரு தடவை எட்டிப் பார்க்கின்றது ஒரே எட்டில் முருங்கையில் ஏறி கூரைக்கு அது இப்போது பாய்ந்து போவதில்லை முருங்கையையும் கூரையையும் பார்த்து விட்டு நிலத்தில் நடந்து போகின்றது அது இப்ப எந்தப் பறவையையும் பிடிக்க பதுங்குவதும் இல்லை எங்கோ போய் ஓய்ந்து அன்றைய நாளை முடிக்கின்றது நாளை மீண்டும் வரும் அந்த ஒரு நேர பூனை உணவிற்கு பின்னர் ஒரு நாளில் இருந்து அது வரவே போவதில்லை அதன் இரண்டு விழிகளும் என்னை விட்டும் போகப் போவதில்லை என் நினைவு ஓயும் வரை.3 points
-
பெரியார் தொண்டர்
3 points👍................ சரியாகவே சொல்லியிருக்கின்றார்.......... ஊருக்கு மட்டுமே உபதேசம்....., ஆடுகள் நனைகின்றன..... என்ற இரண்டையும் சேர்த்து, பெரியார் பெயரில் வலம் வரும் போலி சமூகச் சிந்தனையாளர்களின் தலைகளில் குட்டு வைத்திருக்கின்றார்..... நிஜமான சமூகச் சிந்தனையாளர்களை மறைமுகமாக பாராட்டியும் இருக்கின்றார்....... எந்த விடயத்திலும் போலிகளை அடையாளம் கண்டு, அவர்களை விலக்குவது என்பதே ஒரு தொடர் போராட்டம் தான்............3 points
-
இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே
3 pointsஇறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ இறுக்கமான இதயத்தில் இதமாகப் பூத்தவளே கிறுக்கனாக்கி என்னைக் கிறுங்கச் செய்தவளே சறுக்கியே விழுந்தேனே சண்டாளி உன்நினைப்பில் பொறுக்கியாகி உன்மீது பித்தனாகிப் போனேண்டி! வண்டுகள் மொய்க்கின்ற வண்ண மலரடிநீ வான்மீது மிளிர்கின்ற விண்மீனின் ஒளியடிநீ பல்லவன் வடித்தநல் பருவமங்கைச் சிற்பம்நீ பாவையெந்தன் மனதிற்குள் பாட்டிசைக்கும் சுரங்கள்நீ! தோகை மயிலெனத் தோன்றுதடி உன்னுருவம் வாலைக் குமரியெந்தன் வழித்தடத்தில் நகருகின்றாய் சேலைக்கு அழகான சித்திரப் பெண்ணழகே தூயஎன் காதலாலே துடிக்கின்றேன் உன்னாலே! நெற்றிப் பிறையினிலே நீள்புருவம் கொண்டவளே வேல்விழியால் கணைதொடுத்து வித்தைகள் காட்டுகிறாய் கொவ்வை இதலழகி குண்டுமல்லிச் சிரிப்பழகி ஒளவை மொழியினிலே அருள்வாக்குத் தாவேண்டி! கன்னக் குழியழகும் கலைமமான் விழியழகும் சின்ன இடையழகும் செவ்வந்தி நிறத்தழகும் காதோரம் கதைபேசும் கருங்கூந்தல் குழலழகும் நீயருகே வருகையிலே நெஞ்சை இழுக்குதடி! பெண்ணினத்தின் பெருமைகளைப் பேணுகின்ற பெட்டகமே பண்ணிசைத்துப் பாடவல்ல பாக்களின் கவிவடிவே எண்ணங்கள் பரிமாற ஏங்கித் தவிக்கின்றேன் தண்ணீரில் தாமைரையிலையெனத் தவிக்கவெனை விடலாமோ3 points
-
சும்மா ஒர் பதிவு
2 pointsஒரு காலத்தில் எமது முன்னோர்கள் வயல்வெளிகளின் அருகாமையில் கோவில் கட்டி அதற்காக,குளங்களை வெட்டினார்கள்,கேணிகளை உருவாக்கினார்கள்..மன்னர்கள் ஆட்சியில் அல்லது வேளான்மை சமுகம் உருவான காலத்தில் இது ஒர் சமுக கட்டமைப்பு ..சகல கிராமங்களிலும் உள்ள பழைய கோவில்களில் இந்த டெம்பிளெட்டை அவதானிக்கலாம்.. இதற்கு பணம் எங்கிருந்து வந்திருக்கும்? ஊர்மக்கள் அல்லது மன்னர்கள் கொடுத்திருப்பார்கள் அநேகமாக பொதுமக்கள் பொதுநோக்குடன் கொடுத்த பணமாக த்தான் இருக்க வேண்டும் ...அந்த பணம் மக்களின் நலன் கருதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை . எமது கண் முன்னே குளங்கள்,கேணிகள்(மருதடி கேணி..காக்கா சுயா),கிணறுகள் இன்றும் சாட்சியாக இருக்கின்றது... இன்று புலம் பெயர் நாடுகளிலிருந்து கிடைக்கு பணம் போன்று அன்றைய காலத்தில் நிச்சயம் பணம் கிடைத்திருக்காது.இருந்தும் உள்ளூர் மக்கள் சொந்த வருமானத்தில் இப்படியான செயல்களை செய்து உள்ளனர் யாழ் மாவட்டம் ஆறுகள்,கங்கைகள்,அருவிகள் நிறைந்த மாவட்டம் அல்ல.... விவசாயத்திற்கு மழை நீரை பெரிதும் நம்பிருந்தார்கள்.மழையும் வருடத்தில் ஒர் குறிப்பிட்ட காலத்தில் தான் பெய்யும்..மழையும் சில நாட்களில் அடித்து பெய்யும் அந்த நீர் வீணாக கடலுக்கு சென்று கலந்து விடும்.இந்த நீரை சேமித்து விவசாயம் செய்யத்தான் குளங்கள்,கேணிகள்,கிணறுகள் கட்டினார்கள். இவை யாவும் பொது நோக்குடன் பொது இடத்தில் பொதுமக்களினால் பொது நன்மைக்கு ...பொது மக்கள் சேர்த்த பணத்தில் ...என நான் நினைக்கிறேன் ...நிச்சயமாக மருதடியான் தனிமனிதனாக இவற்றை(கேணி கட்டுதல்,கிணறு வெட்டுதல்,குளம் அமைத்தல்) செய்திருக்கமுடியாது....அவர் ஓரு சக்தியாக செயல் பட்டிருக்கலாம்...(ஏன் வீணாக் மருதடியானை எங்கன்ட அலட்டலுக்குள்ள பிறகு மனுசன் என்னோட கோபித்து கொண்டால்) ஊர் மக்கள் பணம் கொடுத்து,அந்த பணத்தில் ஊர்மக்கள் பயன் அடையும் வகையில் நல்ல திட்டங்களை அமுல் படுத்தியுள்ளார்கள்.அதற்கு பொதுக்கட்டமைப்பு (கோவில் சபை அல்லது கிராம சபை) துணை புரிந்திருக்கின்றது.. குளம் ... மழை நீர் சேர்ந்து நிற்கும் .நீண்ட நாட்களின் நீரோட்டத்தின் விளைவாக ஊரில் உள்ள மண்,கல்,சகதி மற்றும் கழிவுகள்(வாழைமரம்கள்,தடிகள்,மரங்கள்) யாவும் நீரோடு சென்று அடியில் படிந்து குளத்தின் ஆழத்தை குறைத்து விடும்..நீர் வற்றிய பின்பு, கழிவுகள்,மண் போன்றவற்றை அன்று வாழ்ந்த மக்கள் சிரமதான முறையில் துப்பரவு செய்தார்கள் ...தூர் வாருதல் என சொல்வார்கள் ...பொது நோக்குடன் (கிளீன் சிறிலங்கா 30 நாட்கள்.கிளீன் அப் அவுஸ்ரேலியா நாள் 30 வருடங்கள்)எங்கன்ட சனத்தின்ட கிளீன் அப் குளம் எப்பவோ தொடங்கிட்டுது ...(கிளீன் அப் செய்யும்பொழுது கள்,தேனீர்,வடை,மோதகம்..போன்றவற்றை ஊர்மக்கள் செய்து கொடுப்பார்கள் ஊர்மக்கள் கூடி சேர்த்த பணம்) கிளீன் அப் அவுஸ்ரேலியா செய்யும் பொழுதும் நாலு பேர் சேர்ந்து காசு போட்டு பியர் அடிக்கிறனாங்கள் ..,அதற்காக அவுஸ்ரேலியா அரசு எங்கள் மீது குற்றம் சாட்ட முடியாது , "அரசாங்க காசில பியர் குடிக்கிற எண்டு" இந்த குளங்கள் விவசாயத்துக்கு மட்டுமல்ல கால் நடைகளின் தாகத்தையும் தீர்க்க உதவியிருக்கு,இருக்கின்றது . கேணிகள் இவற்றில் அநேகமானவற்றுக்கு மூன்று பக்கமும் சுவர் கட்டியிருப்பார்கள் ஒரு பக்கம் திறந்த வாறு இருக்கும் படிகள் கட்டியிருக்கும் ,மழை நீர் ஒடிவந்தாலுமொரு பக்கத்தினால் மட்டுமே அடி தளத்துக்கு செல்ல முடியும் ஊர் கழிவுகள் குறைவாக அடித்தளத்திற்கு செல்லும் இதனால் நீண்ட நாட்களுக்கு தூர் வார வேண்டிய அவசியமில்லை ... இன்று கேணிகளை மூடிவிடுகிறார்கள் ,அல்லது தீர்த்தமாடுவதற்காக கேணிக்குள் சிறிய கட்டித்தை கட்டிவிடுகிறார்கள் ...இதை செய்வது ஊரில் உள்ள மேதாவிகள் .. கிணறு. முக்கியமாக தோட்ட கிணறுகள் அதிலும் யாழ் மாவட்ட கிணறுகள் மழை நீர் ஓடுவதற்கு ஏற்ற வகையில் ஒர் பாதை விட்டு கட்டியிருப்பார்கள் .தற்பொழுது இந்த கிணறுகள் முற்றாக மூடி கட்டப்பட்டிருக்கின்றது அதுபோக யாரும் கிணறு வெட்டுவதில்லை ,பணம் அதிகம் வேண்டும் வெட்டுவதற்கு. கேணிகளுக்கு பக்கத்தில் கிணறு வெட்டியிருப்பார்கள் ,முட்டாள்கள் தண்ணீர் கேணியில் இருக்கின்றது வீணாக கிணற்றையும் வெட்டி யிருக்கிறாங்கள் பழசுகள் என திட்டியும் இருக்கின்றேன் .ஆனால் அதன் முக்கியத்துவம் பின்பு தான் அறிந்து கொண்டேன்.கோயில்களுக்கு சற்று தொலைவில் இருக்கும் வீட்டு கிணற்று தண்ணீர் உவர் தன்மையுடன் இருக்கும் ஆனால் கோயில் கிணற்று தண்ணீர் நன்னீராக இருக்கும் .கேணிகளில் சேரும் மழைநீர் கிணற்றுக்கு உள்ளே மண்,சிறுகட்கள் ஊடாக வடிகட்டப்பட்டு ஊற்றாக உட்செல்வதனால் தான் என நினைக்கிறேன். மேலும் தோட்டங்கள் ,வயல்களுக்கு மத்தியில் கிணறுகள் வெட்டியிருப்பார்கள் அங்கும் நன்னீர் தான். குழாய் கிணறு பாவனைக்கு வந்துவிட்டது.அதிக இடம் தேவையில்லை .. மொத்தத்தில் மழை நீரை நிலத்தடியில் சேமித்து வைக்கும் சகல பொறிமுறைகளும் இல்லாமல் போகின்றது. அன்றைய ஊர்மக்கள்,மன்னர்களுக்கு (ஆட்சியாளர்களுக்கு) இருந்த அறிவு ,தற்பொழுது நூறு வீதம் கல்வியறிவு கொண்ட ஊர்மக்களுக்கும் இல்லை ,அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் இல்லை ,கோவில் நிர்வாக சபைக்கு போட்டி போட்டு கொண்டு வரும் தலைவர்கள்,உறுப்பினர்களுக்கும் இல்லை..... கோயில்கள்,பாடசாலைகள் எல்லாம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், தேவைகளை இப்பொழுது வாழும் மக்கள் மறந்துவிட்டனர் போல உள்ளது .2 points
-
ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
2 pointsஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம் என் ஆடுகளை வேலியால் எட்டிப்பார்த்த என்னருமைத் தோழனே…. எட்டிப்பார்க்கும் அவசரத்தில் நீ பலதை உன்னிப்பாக கவனிக்கவில்லை. கவனித்தாயா? அந்த ஆடுகளுக்கு குறி சுடப்படவில்லை. இந்த பட்டியில் இதற்கு முன் நின்ற அத்தனை ஆடுகளும் பல குறிகளை தாங்கித்தான் நின்றன - அந்த தாடிக்கார மேய்பனின் புத்தகத்தை படித்த பின் தான், குறிகள் ஏதும் என் ஆடுகளுக்கு இடப்படவே இல்லை. பார்த்தாயா? ஈசான மூலையில் கறுப்பும் பழுப்புமாய் நின்ற குட்டி ஆடு உன் காமாலை கண்ணுக்கு தெரியவில்லையா? அதன் அம்மா அப்பாவை நாந்தான் சேர்த்துவைத்தேன். எங்கள் ஆட்டு மந்தையில் அது ஒரு வரலாறு. பல சம்பவங்களின் பின் நடந்தேறியது. அங்கேயும் பட்டியின் பழைய கதவுகளை நெட்டித்திறக்க எனக்கு உதவியது அந்த கெட்டிக்கார கிழவனின், வளைந்த கைத்தடிதான். ஒ..தோழனே… அந்த மூலையில் ஒரு மறிக்குட்டி, கிடாய்கள் பலதை மேச்சல் தரை நோக்கி கூட்டி போனதை ஏன் நீ கண்ணுறவில்லை? உனக்குத்தெரியுமா தோழா? என் மறிக்குட்டிகள், உன்னை போல் ஓராயிரம் கிடாய்களே ஒரு நேர்கோட்டில், ஒத்தை ரோட்டில் கூட்டிச்செல்லவல்லன. இந்த ரோட்டும், நான் ஆரம்பித்ததில்லை நண்பா - ஈரோட்டில் ஆரம்பித்தது. என் காணியின் மூலையில் இருக்கும் வேலாயுத மேடை உன் கண்ணை உறுத்தியது என நினைக்கிறேன். புரிந்துகொள் நண்பா… யார் என்ன சொன்னாலும், நானே சொன்னாலும்… உன் புத்திக்கு சரி எனப்படுவதை மட்டுமே ஏற்று கொள் என்பதுதான் எங்கள் அரிவரிப்பாடம். நாங்கள் தனிமனிதனை தொழுபவர்கள் அல்ல தோழா, எவர் சொல்லுக்கும் நாம் கட்டுப்பட்டவர்களும் அல்ல. எம் புத்திக்கு புலப்படுவதையே செய்கிறோம்… நான் மட்டும் அல்ல, என் ஆடுகளும். பட்டியில் இருந்தாலும்….பட்டி நீங்கி பயணம் போனாலும். -கோஷான் சே-2 points
-
இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
மாண்புமிகு ஐயா நிதன்யாகு மேல் இப்படியொரு அபாண்டமான பழியை சுமத்த எப்படித்தான் உங்கள் மனசாட்ச்சி இடம் தருகிறதோ தெரியவில்லை2 points
-
இரசித்த.... புகைப்படங்கள்.
2 points2 points
- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
நாங்கள் மெதுவாக, ஆனால் உறுதியாக முன்னேறிக்கொண்டு இருக்கின்றோம்!😃 ஆகவே, நாளை அல்வாயன் முதல்வர் ஆகாமல் இருக்க வைரவர் சூலம்🔱 வச்சிருக்கு 😁2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஹிஹி.. @நந்தன் , ஏதோ சொன்னீங்கள்.. எங்கே நிக்கிறியள்? 😁2 points- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வர் வீரப்பையனுக்கு வாழ்த்துக்கள். ஆஆஆஆ நந்தனா சுமைதாங்கி.2 points- பெரியார் தொண்டர்
2 pointsஎனது அப்பாவின் அப்பாவின் காலத்தில் தோட்டம் செய்வதற்காக கிணறு தோண்டியபோது சூலம் ஒன்று வெளிப்பட்டதாம் (போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் காலத்தில் சைவ சமயம் ஒடுக்கப்பட்டபோது புதைத்தார்களா தெரியவில்லை). தோட்டத்தின் தென்கிழக்கு மூலையில் பிரதான வீதியருகில் கொட்டில் போட்டு சூலத்தை பிரதிட்டை செய்தனர். அப்பாவின் அப்பாவும், அதன் பின்னர் எனது அப்பாவும் தமக்குத் தெரிந்தவகையில் பூசை செய்து வந்தனர். 80களின் ஆரம்பத்தில் கோயிலாகக் கட்டப்பட்டு, சைவ மேனிலையாக்கம் செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடாத்தப்பட்டு பிராமண ஐயர் பூசை செய்துவருகின்றார்.. கொழும்பில் இறுதிக்காலத்தில் நினைவு பிறழ்ந்த நிலையிலும் வைரவர் என்ற சொல்லைக் கேட்டால் அப்பா “என்ரை” எனச் சொல்லுவார்.. அவருக்கு திரும்பவும் ஊருக்குப் போகவோ, எள்ளங்குளச் சுடலையில் வேகவோ சந்தர்ப்பம் கிட்டவில்லை. எனது கடவுள் மறுப்புக்கொள்கையால் நான் கோயில் சம்பந்தமாக எதுவும் செய்வதில்லை. ஆனால் கொழும்பில் இருந்த அக்கா ஏதாவது உதவி செய்யக் கேட்டால் ஐயர் குடும்பத்திற்கு “உதவி”யாக இருக்கட்டும் என்று ஏதாவது கொடுப்பதுண்டு. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் ஊருக்குப்போனபோது ஐயர் குடும்பம் நல்ல நிலையில் இருப்பதைப் பார்த்தபின்னர் சின்ன “உதவி”யையும் செய்வதில்லை! இப்போது கோயில் ஊரில் உள்ள 12 குடும்பங்களின் (அதுக்கும் அடிபாடு) பண உதவியுடன் நன்றாகப் பராமரிக்கப்படுகின்றது. அக்காவும் பரம்பரைக் கோயில் என்பதால் ஒரு “உரித்து” வைத்திருக்கின்றார். இந்த வருடம் அவருக்குத்தான் “பட்டோலை” பொருட்கள் வாங்கும் கெளரவம் கொடுத்தார்களாம். இனிப் பன்னிரன்டு வருடங்களுக்கு பின்னர்தான் திரும்ப எங்களுக்கு வருமாம். எங்கள் குடும்பத்தின் “உரித்தை”க் காக்க என்னை பட்டோலை பொருட்கள் வாங்கும் சடங்கை முன்னெடுக்கவேண்டும் என்று கேட்டார்.. இங்கு பெரியாரின் கொள்கைகளுக்கு முண்டுகொடுத்துக் கொண்டு பட்டோலைக் கெளரவத்தை வாங்க நான் ஒன்றும் கலைஞர் கருணாநிதி போல மஞ்சள் துண்டு போடுபவன் இல்லையே!😆 நான் அக்காவுக்கு எனக்கு கடவுள் பக்தி எல்லாம் கிடையாது. இப்படி எல்லாம் கோவிலுக்கு செய்ய வெளிக்கிட்டால், எனது கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக முடியும். அதிலும் உரிமைப்போர் செய்யபவர்கள் பலர் இருக்கும்போது இது எல்லாம் தேவையில்லாத ஆணி. எனக்கு பட்டோலையும் வேண்டாம்; பனையோலையும் வேண்டாம் என்று பதில் எழுதினேன்! “மூர்க்கனும் முதலையும் கொண்டது விடா” என்று எழுதி என்னவாவது செய்யுங்கோ விடயத்தைக் கைவிட்டுவிட்டார்.. நாங்கள் ஆட்டை அடைத்து வைப்பது இல்லை என்பதால் அவிழ்த்துவிட வேண்டிய அவசியம் இல்லை!2 points- எதிர்காலத்தில் பாதாள உலகத்தை முடிவுக்குக் கொண்டுவர அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் – ஜனாதிபதி
2 pointsபாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவது சாத்தியமாகலாம். ஆனால் பக்கத்தில் இருக்கும் மக்கள் நலம்கருதாத சுயநல இனவாதிகளை அதிகம் கொண்ட எதிர்க்கட்சி உலகானது….. ஆடுவது எப்போ விழும் கௌவித்தின்று ருசிக்கலாம் என்ற பின்னால் திரிகிறதே? அதிலிருந்து தப்பிவர அல்லது அதனை நல்வழிப்படுத்த நடவடிக்கை ஏதும் உள்ளதா?? இரண்டு கொழுத்த பெரிசுகளும் அங்கு இணைய வருவதாகச் செய்திகளும் வருகின்றனவே!.🤔2 points- மேலும் 116 இந்தியர்களை நாடு கடத்திய அமெரிக்கா!
வசி உங்களுக்கு நான் இதை சொல்லி தெரியவேண்டிய அவசியம் இல்லை (Direct income) சம்பளத்திற்க்காக வேலை செய்யும் மனநிலையை முதலில் துடைக்கவேண்டும் ( நாங்கள் புலம்பெயர்ந்த முதலாவது தலைமுறை எனக்கு அது கொஞ்சம் கஸ்ட்ரம்) அடுத்த தலைமுறைக்கு மிக எளிது ..... Passive Income முதலீடுகள் மூலம் வரும் வருமானத்தை உருவாக்கி கொள்ள வேண்டும் இப்போ அண்ணளவாக உலகம் பூராக செலவு ஒரே அளவாகவே இருக்கிறது மத்திய கிழக்கு நாடுகளில் ரியல் ஸ்டாட்ட்டில் ( Real estate) முதலீடு செய்வது என்பது இன்றைய சூழலில் ஒவ்வரு புலம்பெயர் தமிழனும் செய்யவேண்டிய விடயம் எதனை பேர் செய்கிறார்கள் என்று தெரியவில்லை இப்போதும் சம்மதியவீடு கலியாணவீடு செய்வதில் பெருமை காண்கிறார்கள் பலர். கொழும்பில் சராசரி புது அப்பார்ட்மெண்ட் மாத வாடகை $1000 - $2௦௦௦ வரை இருக்கு ....... இரண்டு வீடை சொந்தமாக வைத்திருப்பவன் வருமானம் என்ன? சுலபமாகவே ௪௩௦௦ பார்க்கலாம். நிறைய இந்தியர்கள் துபாய் அபுதாவியில் வீடு வாங்கி வாடகைக்கு விடுகிறார்கள் https://www.lankapropertyweb.com/rentals/lease-all-Apartment.html2 points- பெரியார் தொண்டர்
1 pointசமூகச் சிந்தனையாளர் பெரியார் பற்றிப் பிரலாபம் செய்பவர்கள் யாராகினும், அவரின் வழியொற்றி நீங்கள் வாழாதிருப்பின் உங்களுக்கு ஒன்று சொல்வேன் உங்களது வேலிக்குள் உங்களது ஆட்டைக் கட்டிவைத்துவிட்டு எல்லா ஆடுகளுக்கும் சுதந்திரம் வேண்டி நீங்கள் ஆர்ப்பரிப்பதன் வஞ்சகம் எதுவென்பதை நானறிவேன். அவிழ்த்து விட்டேன் என் ஆட்டை அதுதான் அடைந்து கிடக்கிறது நான் என் செய்வேன் என்பவர்க்கு நானின்றொன்று சொல்வேன் உன் சொந்தப்பட்டியில் அடைபட்டுக் கிடக்கும் உன் ஆட்டுக்கு விடுதலை பற்றிய உபதேசம் நீ செய்யவில்லையெனில் வேறெந்த ஆட்டுக்கும் நீ விடுதலை உபதேசம் செய்யாதே. விடுதலை பெற எண்ணும் ஆடுகளை வேட்டையாடும் நோக்கம் மட்டுமே உன்னுடையது என்பதை எவரும் கண்டு கொள்வார்கள். . முதலில் உன்பட்டியின் ஆட்டை, ஆடுகளை விடுதலை செய். 20.02.2025 வாசு1 point- ஒரு ஆட்டுக்காரனின் பிரலாபம்
1 pointஊக்கத்துக்கும், இதை கவிதை என ஏற்றமைக்கும் நன்றி🤣. ஓம் அந்த கொள்கை விளக்கம் - “ஆடு தானாக பட்டியில் நிற்கிறது என காரணம் சொல்லாதே” என்ற வாசுவின் வரிகளுக்கான விளக்கமே. நீங்கள் பொருள் விளங்கியதில் தவறேதும் இல்லை. ஆனால் பெரியாரின் கொள்கைகளை அல்லது அவற்றில் பெரும்பகுதியை ஏற்று கொண்டு, நடைமுறைப்படுத்தும் சாதாரண மக்கள் கோடானு கோடிப்பேர் உள்ளார்கள். ஒரு சில இன்றைய அரசியல்-வியாதிகளின் செயல்பாட்டை வைத்து - ஒரு கொள்கையை மதிப்பிடுவது - கபடத்தனமானது. கவிநயத்தில் நிச்சயமாக. பொருளில்….வாசகர் முடிவுக்கு விடுகிறேன். மறந்தே போனேன்…அக்மார்க் சொந்தச் சரக்குத்தான்🤣. வாசுவின் கவிதையை வாசித்தவுடன் சில பத்து நிமிடங்களில் எழுதியது.1 point- இஸ்ரேலில் வெடித்து சிதறிய மூன்று பேருந்துகள் - மேற்குகரையில் இராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்த உத்தரவு
உக்கிரேனில் எடுப்பதை கொட்ட இடம் வேணுமே..1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
பொறுங்கோ நாளைக்கு ஒருத்தருக்கு அறுதியா எழுதிக்குடுக்காம விடுறேல்ல1 point- சும்மா ஒர் பதிவு
1 pointஒரு 30,40 வருடங்களுக்கு முன்னர் ஊர் மக்களிடம் சிரமதான பணி எனும் நடைமுறை ஒன்று இருந்தது.குளங்கள்,ஏரிகள்,வாய்க்கால்கள்,ஏரிகள் என தூர்வாரும் செயல்கள் சிரமதான பணியாக ஊர்மக்களே சேர்ந்து செய்தார்கள். சிரமதான ஆட்களுக்கு ஊரில் இருப்பவர்களே ஒரு இடத்தில் ஒன்றுகூடி சமையல் சாமான்கள் கொண்டுவந்து சமைத்து சாப்பாடு கொடுப்பார்கள்.தனிமனித செலவுகளும் இருக்காது. அப்பப்ப அரசாங்கத்தால நடத்தப்படும் சிரமதான வேலைகளுக்கு வண்டுகள் நிறைந்த கூப்பன் மாவும் புளுக்கள் நெளியும் கருவாடும் கொடுப்பது வேற விசயம். நல்லதொரு சிந்தனைப்பதிவு புத்தன் 👍1 point- சும்மா ஒர் பதிவு
1 pointசுடலைக்கு செல்ல முடியவில்லை ஒரே முள்ளும் புதருமாக கிடக்கிறது விலைபேசி ஒரு ஜேசிபி பிடித்து துப்பரவு செய்தால் சிலபேர் திட்டி தீர்க்கிறார்கள் அது பிசிக்காரன் செய்வான்தானே உனக்கேன் தேவையில்லாத வேலை என்று அதுகூட பரவாயில்லை என்றால் பாவம் என்று ஒரு போத்தில் வாங்கி கொடுத்தவன் குடித்துவிட்டு அடுத்த தெருவில் போய் "சந்தணம் மிஞ்சினால் குண்டியில் பூசுவார்கள்" அதுபோல இந்த வெளிநாட்டு நாய்களுக்கு காசு மிஞ்சிவிட்ட்து அதுதான் சுடலையை கூடுறாங்கள் என்று பேசிவிட்டு போனானாம். இது எல்லாம் இங்கு எழுதுவதுடன் நிறுத்தி விடுங்கள் ஊரில் போய் குளம் துப்பரவு செய்யவேண்டும் என்று பேசினால் கொண்டுபோய் தெல்லிப்பளையில் விட்டு விடுவார்கள்1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
குமாரசாமி அண்ணர் தமிழசிறி அண்ணர் ஆகியோர் அண்ணளவாக இதே கருத்தைத்தான் ஆரம்பத்தில் இருந்து எழுதி இருகிறார்கள் ஆனால் தங்களை அறிவாளிகளாக காட்ட வேண்டும் என்றால் இன்னொருவனை மூடன் ஆக்க வேண்டும் என்பதால். ஊரில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதுக்கு இன்னொரு எளியவனை பிடித்து நீ தாழ்ந்த சாதி என்று கொடுமை செய்யும் அதே மனநிலைதான் அப்படி செய்தவர்கள் எங்கோ ஒரு மூலையில் இருக்கத்தானே வேண்டும்?. அதுபோல ஒருவனை பிடித்து புட்டின் ஆதரவாளன் என்று மொடடை அடித்து விடுவது இன்னொருவனை பிடித்து உக்ரைன் எதிர்பாளன் என்று பச்சை குத்தி விடடால்தான் தாங்கள் நீதிமான்கள் கதிரைகளில் இருந்துகொண்டு ஒரு ஜால்ரா அடிக்கிற குழுவையும் வைத்துக்கொண்டு எழுதி தள்ளலாம். அப்படிதான் எந்த திரியை எடுத்தாலும் இந்த யாழ்களம் ஓடிக்கொண்டு இருக்கிறது. உக்கரைன் போர் தொடங்கி 3 வருடத்தில் என்றாலும் பழியை ட்ரம்மில் தூக்கி போடும் மனநிலைக்கு பலர் வந்திருப்பதே அதிசயம். முள்ளிவாய்க்காலில் வைத்து எங்கள் மக்களுக்கு அடித்தவனும் உக்கரைன் மக்களுக்கு அடித்தவனும் ஒரே ஆட்கள்தான் எங்களுக்குத்தான் ஞாபக மறதி. அடித்தவனையே மறந்துவிடுகிறோம் ....... எனக்கும் உங்களுக்கும் இலக்கு ஒன்றுதானே நாங்கள் சேர்ந்துதான் இருந்தாக வேண்டும்1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
என்னப்பா சாவகச்சேரி இப்படி போகின்றது ....சண்டியர்கள் அட்டகாசம்...பா.உ எப்படியோ அது போல ☹️ பிக்குமார் சென்ற வாகனம் மீது தாக்குதல் அதிபர் மீது தாக்குதல் என்ன என்றே புரியவில்லை ...அது சரி இவர் எந்த நாட்டில் இருந்து போனவராம்....இந்த காலகட்டத்தில் செய்திகளை நம்ப முடியவில்லை... தமிழ் தேசியவாதிகளின் பாரில் தான் இவர்கள் மது அருந்தினார்கள் என சில சமயம் தீவிர தேசபக்தர்கள் வந்து கருத்து வைப்பினம் ...நான் எஸ்கேப்1 point- சாவகச்சேரியில் காடையர்கள் அடாவடி; முன்னாள் அதிபர் அடித்துக் கொலை
பழைய சிநேகிதத்தில்...... சும்மா கண்ட கசிப்பை குடித்து சாக்கிரங்களே என்று ஒரு போத்திலை கொடுத்ததால் ....... குடிச்சிட்டு அதிபரையே போட்டு தள்ளுவார்கள் என்று அவனுக்கு எப்படி தெரியும்?1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இன்றைய முதல்வரை நாளைக்கு கவிழ்த்து, அல்வாயனை புது முதல்வர் ஆக்குகின்றோம்.......1 point- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
1 pointஉண்மையாவா?முகப்புத்தகத்தில் வேறு மாதிரி இருந்ததே?சரி இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சிறி.வாழும்வரை சுகமாகவும் வளமாகவும் வாழ வேண்டுகிறேன்.1 point- ‘மாற்றம்’ ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
தமிழ் மிரரில் இக் கட்டுரையை எழுதியவர் தன் பெயரைக் குறிப்பிட பயந்து freelancer என்றே குறிப்பிட்டுள்ளார். ஆள் கடும் ஜேவிபி எதிர்ப்பாளர் போலிருக்கு. இலங்கையில் ஆளும் கட்சியின் சில செயற்பாடுகள் மீது மக்களுக்கு விமர்சனங்கள் சில இருப்பினும் அது வெறுப்பாக இன்னும் மாறவில்லை. உள்ளூராட்சித் தேர்தல் நடந்தால், அனேகமாக அனைத்து இடங்களிலும் தேசிய ஐக்கிய முன்னனி வெற்றி பெறும்.1 point- லண்டனில் இன்று யொகானியின் இசைநிகழ்ச்சிக்கு புலம்பெயர் தமிழர்கள் கடும் எதிர்ப்பு - போர்க்குற்றவாளிகளைபாராட்டியவர் என குற்றச்சாட்டு
பார்க்கலாம், இந்த நிகழ்வு நடந்தால், அதனை குழப்ப பெரியார் தொடர்பான கூட்டட்தை குழப்பிய மறத் தமிழ் காவாலிகள் வருவார்களா என.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
மேற்க்கிந்தியா , அமெரிக்காவில் நடைபெற்ற T 20 உலகக்கோப்பையும் Amazon Prime இல் காண்பித்தார்கள். ஐசிசி போட்டிகள் 2027 வரை அவுஸ்திரேலியாவில் அமேசான் பிரேம் இல் தான் காணபிப்பார்கள் Prime Video announced as the home of ICC cricket in Australia until the end of 2027, with every World Cup, World Test Championship Final, and Champions Trophy match streamed exclusive and live World Cup Cricket—it’s on Prime. All matches available to Prime members in Australia at no extra cost to their membership1 point- நியாயத்தின் சாம்பல்
1 pointபாண்டியன் நெடுஞ்செழியனுக்குப் பின்னரான ஒரு கதையை வசனகவிதை சுட்டி நிற்கின்றது . ....... எங்கும் சகல அதிகாரங்களுமிக்க வல்லவர்கள் என்ன வேண்டுமாயினும் செய்யலாம் , செய்யமுடியும் ......... அன்று மட்டுமல்ல அவை இன்றும் தொடர்கின்றன . .........! 😁1 point- கைவிலங்குகள்
1 pointவிலங்கை உடைக்கவும் , சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க முனையும் எம்மினத்தின் வேட்கை கவிதையில் முளைவிடுகின்றது ........! 👍 நன்றி ரசோ ...........!1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
லாஹூரில் ஃபைனல்ஸ் நடக்குது. பாகிஸ்தான் வெல்லுது! அஞ்சு பவுண்ஸையும் நானே வச்சிருப்பேன்! 😂 உங்களுக்கு இந்த 5000 ரஷ்யன் ரூபிளை அனுப்பலாம்🤣1 point- கருத்து படங்கள்
1 point1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
உண்மை தான் அண்ணா ஜனநாயகத்தின் ஓட்டைகளை சில நரிகள் மிகத் திட்டமிட்டு புகுந்து ஆட்கொண்டு விடுகிறார்கள். இதில் கட்சியின் செல்வாக்கு, முதல் இருந்த கட்சிக்கான மாற்றீடு, முதல் இருந்த ஜனாதிபதியின் தவறுகள் மற்றும் ட்ரம்க்கு எதிராக நின்றவரின் பலவீனம் என்ற காரணிகளோடு முக்கியமாக ட்ரம் போன்ற அடாவடித்தன மனநிலை கொண்டவர்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல உலகெங்கிலும் அதிகரித்து விட்டார்கள். இதனை நாம் தற்போது கண்டிக்காமல் விட்டு விட்டால் எம் அடுத்த தலைமுறையின் கதவுகள் இவர்களால் தட்டி உடைக்கப்படும்.1 point- ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் 2025 - செய்திகள்
இந்திய அணி வென்றபோதும் ரோஹித் மன்னிப்புக் கேட்டது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 21 பிப்ரவரி 2025, 02:15 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் துபையில் நேற்று (பிப். 20) நடந்த சாம்பியன்ஸ் டிராஃபி போட்டியின் 2வது ஆட்டத்தில் வங்கதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி. முதலில் பேட் செய்த வங்கதேச அணி 49.4 ஓவர்களில் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 229 ரன்கள் எனும் எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி, 21 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் குரூப் ஏ பிரிவில் நியூசிலாந்து, இந்திய அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளனர். இதில் குறைந்த இலக்கை கடைசிவரை போராடி சேஸ் செய்ததால் ரன்ரேட்டில் நியூசிலாந்தைவிட இந்திய அணி பின்தங்கியுள்ளது. நியூசிலாந்து 1.200 நிகர ரன்ரேட்டில் இருக்கும் நிலையில் இந்திய அணி 0.408 நிகர ரன்ரேட்டில் இருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற இருவர் முக்கியக் காரணமாக அமைந்தனர். ஒருவர் சதம் அடித்த சுப்மான் கில் (101), மற்றொருவர் முகமது ஷமி. இதில் பேட்டிங்கில் தொடக்க வீரராகக் களமிறங்கி கடைசிவரை களத்தில் இருந்த சுப்மான் கில் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் போட்டியில் பெரும் சாதனைக்கான கேட்சை தவறவிட்டதற்காக ரோஹித் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது வென்ற மிதாலி ராஜின் நம்பிக்கை பயணம் சாம்பியன்ஸ் டிராஃபி 2025: பாகிஸ்தான் சொந்த மண்ணிலேயே தோல்வியை தழுவ என்ன காரணம்? பிபிசியின் வளரும் வீராங்கனை விருது பெற்ற ஷீத்தல் தேவி யார்? பிபிசி வளர்ந்து வரும் வீராங்கனை விருதை பெற்ற ஷீத்தல் தேவி யார்? ஷமி மைல்கல் பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி 5126 பந்துகளை வீசியுள்ளார். ஆனால், ஸ்டார்க் 5240 பந்துகளை வீசித்தான் 200 விக்கெட்டுகளை சாய்த்தார். வங்கதேசத்தின் 10 விக்கெட்டுகளில் 8 விக்கெட்டுகளை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது ஷமி, ஹர்சித் ராணா இருவரும் பகிர்ந்துகொண்டனர். ஷமி 10 ஓவர்கள் வீசி 53 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளையும், ராணா 7.4 ஓவர்கள் வீசி 31 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். காங்கிரஸ்: செல்வப் பெருந்தகைக்கு எதிராக டெல்லியில் மாநில தலைவர்கள் புகார் - அவர் கூறுவது என்ன?20 பிப்ரவரி 2025 செயற்கை நுண்ணறிவு துறையில் சீனாவுக்கு நிகராக இந்தியாவால் முன்னேற முடியுமா?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி வாய்ப்புகளைத் தவறவிட்ட வங்கதேசம், இந்தியா சாம்பியன்ஸ் டிராஃபியின் முதல் ஆட்டத்திலேயே இரு அணிகளும் தங்களுக்குக் கிடைத்த பல கேட்ச் வாய்ப்புகளையும், ஃபீல்டிங்கை தடுப்படுதிலும் கோட்டைவிட்டனர். வங்கதேச அணி டாஸ் வென்ற நிலையில், ஆடுகளம் காய்ந்து பேட்டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால், தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து பவர்ப்ளே முடிவுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்தது வங்கதேசம். ஆனால், 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது. இருவரும் 6-வது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக எந்த விக்கெட்டுக்கும் எதிரான அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. வங்கதேச அணி ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்தி, தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழக்காமல் விளையாடியிருந்தால் ஆட்டம் ஒருதரப்பாக முடிந்திருக்காது. வங்கதேச அணியும் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பை தவறவிட்டனர். இந்திய அணி தொடக்கத்தில் வங்கதேசத்தின் விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டத்தை தங்கள் பக்கம் வைத்திருந்தாலும், ஹிர்தாய்-ஜேக்கர் அலி கூட்டணியைப் பிரிக்க முடியாமல் மிகுந்த சிரமப்பட்டனர். தந்தை வாயில் இருந்து பிறக்கும் தலைப் பிரட்டைகள் - அருகி வரும் அரிய வகை சதர்ன் டார்வின் தவளைகள்20 பிப்ரவரி 2025 சாம்சங் இந்தியா: 5 மாதங்களை கடந்தும் போராட்டம் நீடிப்பது ஏன்? 5 கேள்விகளும் பதில்களும்20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 6வது விக்கெட்டுக்கு தவ்ஹித் ஹிர்தாய், ஜேக்கர் அலி சேர்ந்து அமைத்த கூட்டணி அணியை மிகப்பெரிய ஸ்கோருக்கு இட்டுச் சென்றது அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்ட ரோஹித் இந்திய வீரர் அக்ஸர் படேலுக்கு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பெரும் சாதனை புரிவதற்கான வாய்ப்பு இந்தப் போட்டியில் கிடைத்தது. 9-ஆவது ஓவரின் இரண்டாவது பந்தில் தன்சித் ஹசனை வெளியேற்றினார் அக்ஸர். அடுத்து களமிறங்கிய முஷ்ஃபிகுர் ரஹ்மானை வெளியேற்றினார். இந்த இருவரின் கேட்ச்களையும் விக்கெட் கீப்பர் கே.எல். ராகுல் பிடித்தார். அடுத்த பந்திலும் இதேபோன்றதொரு வாய்ப்புக் கிடைத்தது. புதிதாக களமிறங்கிய ஜேக்கர் அலிக்கு அக்ஸர் வீசிய பந்து பேட்டில் பட்டு ஸ்லிப்பை நோக்கிச் சென்றது. அங்கு நின்றிருந்த ரோஹித் சர்மா அந்த கேட்சை தவறவிட்டார். இந்திய வீரர்கள் அதிர்ச்சியடைந்த அந்த வேளையில், தரையில் கையால் அடித்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். கையைக் கட்டி அக்ஸரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். ரோஹித் சர்மா தவறவிட்டதால்தான் ஹிர்தாய், ஜேக்கர் அலி 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்தது. அதேபோல, ஒருநாள் போட்டியில் 228 ரன்களை சேஸிங் செய்வது என்பது எளிதானது. இந்த குறைவான ரன்களை சேஸிங் செய்வதற்கு 44 ஓவர்கள் வரை இழுத்துக்கொண்டு செல்லத் தேவையில்லை. குறைவான ரன்களை சேஸிங் செய்ய அதிக நேரம் எடுத்துக்கொண்டதால் இந்திய அணியின் நிகர ரன்ரேட் மிகவும் குறைந்துள்ளது. மேலும், 2023 உலகக் கோப்பைக்குப்பின், நடுப்பகுதி ஓவர்களில் விக்கெட் இழக்காமல் இந்திய அணி இருந்தது இப்போட்டியில் தான். 2002ம் ஆண்டிலிருந்து இந்திய அணி 5வதுமுறையாக நடுப்பகுதிகளில் விக்கெட் வீழ்த்தாமல் விளையாடியது. ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சில் கிடைத்த ஸ்டெம்பிங் வாய்ப்பை கே.எல்.ராகுல் தவறவிட்டதால் ஜேக்கர் அலி தப்பித்தார். ஜேக்கர் அலி அப்போது 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இந்திய அணியின் ஃபீல்டிங், கேட்ச் பிடிக்கும் திறன் நேற்று வழக்கத்துக்கும் குறைவாக இருந்தது. அதிலும், ரோஹித் சர்மா 2023-ஆம் ஆண்டிலிருந்து 10 கேட்சுகளை தவறவிட்டுள்ளார். நியூசிலாந்தின் டாம் லேதம் 11 கேட்சுகளையும் தவறவிட்டிருந்தார். ரோஹித் சர்மாவின் கேட்ச் பிடிக்கும் சதவிகிதம் 54.55% குறைந்துவிட்டது. 22 கேட்ச் வாய்ப்புகளில் 12 கேட்சுகளை மட்டுமே ரோஹித் சர்மா பிடித்துள்ளார். அதேசமயம், விராட் கோலி 156 கேட்சகளைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதின் சாதனையுடன் சமன் செய்தார். முதலிடத்தில் இலங்கை முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனா (218) கேட்சுகளையும் பாண்டிங் 161 கேட்சுகளையும் பிடித்துள்ளார். க்ளோயி சியுங்: இவரது தலைக்கு ஒரு மில்லியன் ஹாங்காங் டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்டது ஏன்?5 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை அமலான வரலாறு - சட்டமன்றத்தில் அண்ணா பேசியது என்ன?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விராட் கோலி 156 கேட்ச்களைப் பிடித்து முன்னாள் கேப்டன் அசாருதீன் சாதனையுடன் சமன் செய்தார் கேட்ச் தவற விட்டதற்கு தண்டனை என்ன? வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் "இங்கு வந்து எந்த போட்டியும் விளையாடுவதற்கு முன் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். சேஸிங்கில் லேசாக சறுக்கியபோது கே.எல். ராகுல், கில் இருவருக்கும் அதிகமான அனுபவம் இருந்ததால், சேஸிங்கை எளிமையாக்கினர். இந்த ஆடுகளத்தில் ரன் சேர்ப்பது கடினம். அதிகமான புற்கள் இல்லை என்பதால் ஆடுகளம் மந்தமாக இருக்கும் என நினைத்தோம். இந்த சூழலுக்கு ஏற்றாற்போல் அணியினர் பழகிவிட்டனர். பந்துவீச்சும், பேட்டிங்கும் சிறப்பாக இருந்து. குறிப்பாக ஷமியின் பந்துவீச்சைப் பார்க்க நீண்டகாலம் காத்திருந்தோம். சிறப்பான பந்துவீச்சை அளித்தார். சுப்மான் கில் அற்புதமாக பேட் செய்தார். நான் அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன். இதற்கு தண்டனையாக அவரை இரவு விருந்துக்கு அழைத்துச் செல்வேன். எளிமையான கேட்சுதான். அதை நான் பிடித்திருக்க வேண்டும். ஹிர்தாய், ஜேக்கர் அலி அருமையான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஆடுகளத்தைப் பற்றி நான் ஏதும் கூற முடியாது, 23-ம் தேதி ஆடுகளம் எவ்வாறு இருக்கும் என்பது தெரியும்" எனத் தெரிவித்தார் டிராகன்: அரியர் வைப்பது கெத்தா? திரைப்படங்கள் கல்லூரி மாணவர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?20 பிப்ரவரி 2025 ரேகா குப்தா: டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள இவர் யார்?20 பிப்ரவரி 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "அக்ஸர் படேலுக்கு கேட்சை தவறவிட்டு ஹாட்ரிக் வாய்ப்பை கெடுத்துவிட்டேன்" - ரோஹித் சர்மா பந்துவீச்சில் கடும் போட்டி இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அக்ஸர் படேல், ஜடேஜா, குல்தீப் சேர்ந்து 28 ஓவர்களை வீசி, 123 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள்தான் எடுத்தனர். எக்கானமி ரேட்டும் 4.29 ஆக அதிகரித்தது. ஆனால், வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் 20 ஓவர்கள் வீசி 3.75 எக்கானமி ரேட் வைத்திருந்தனர். அதேசமயம், இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி, ராணா இருவரும் 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். ஆனால், வங்கதேச அணியில் வேகப்பந்துவீச்சாளர்கள் 26.3 ஓவர்கள் வீசி 2 விக்கெட்டுகள்தான் எடுக்க முடிந்தது, 5.88 எக்கனாமி வைத்தனர். மந்தமான பேட்டிங் இந்திய அணியின் பேட்டிங்கைப் பொருத்தவரை துபை மைதானம் மந்தமானது எனக் கூறப்பட்டாலும் ரோஹித் சர்மா, சுப்மான் கில் கூட்டணி அருமையான தொடக்கத்தை அளித்தனர். பவர்ப்ளே ஓவர்களுக்குள் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்து ரோஹித் சர்மா (41) விக்கெட்டை இழந்தது. அனுபவ வீரர் விராட் கோலி மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தநிலையில் கவர் திசையில் வந்த பந்தை தூக்கி அடிக்க முற்பட்டு, கோலி 22 ரன்களில் ஆட்டமிழந்தார். லெக் ஸ்பின்னுக்கு கோலி இன்னும் திணறுகிறார் என்பது நேற்று தெளிவாகத் தெரிந்தது. லெக் ஸ்பின் பந்துகளை எவ்வாறு கையாள்வது, ஃபீல்டிங் இடைவெளிக்குள் தட்டிவிடத் தெரியாமல் தவித்தார். அடுத்துவந்த ஷ்ரேயாஸ் (15), அக்ஸர் படேல்(8) ரன்களில் பெவிலியன் திரும்பினர். கடைசி 3 விக்கெட்டுகள் 20 ஓவர்களில் 75 ரன்களுக்குள் இந்திய அணி இழந்தது. 69 பந்துகளில் அரைசதம் அடித்த சுப்மான் கில் 125 பந்துகளில் சதம் விளாசினார். சுப்மான் கில் சதம் அடித்தபோதிலும் அதில் வேகமில்லை, கே.எல்.ராகுல் 41 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணி வெற்றி பெற்றாலும் அதன் சேஸிங் திறன் இன்னும் உத்வேகமெடுக்கவில்லை. 229 ரன்களை 35 ஓவர்களுக்குள் சேஸிங் செய்யாமல் 46 ஓவர்கள் வரை இழுத்தனர். பவர்ப்ளேயில் இந்திய அணி 69 ரன்கள் சேர்த்தபோது, வங்கதேசம் அணி 39 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது. ஆனால், நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக ஆடிய வங்கதேச பேட்டர்கள் விக்கெட்டுகள் ஏதும் இழக்காமல் இந்திய அணியை விட நடுப்பகுதி ஓவர்களில் கூடுதலாக 6 ரன்கள் சேர்த்தது. நடுப்பகுதி ஓவர்களில் இந்திய பேட்டர்கள் ரன் சேர்க்கத் திணறினர். இந்திய பேட்டர்களை வங்கதேச சுழற்பந்துவீச்சாளர்கள் கட்டிப்போட்டனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.virakesari.lk/article/2072771 point- நியாயத்தின் சாம்பல்
1 pointசரியான கேள்விகள் புங்கையூரன், இணைச் சேதம் (Collateral damage) ஒருபுறமும் திட்டமிட்ட பலியெடுப்புகள் மறுபுறமும் அப்பாவிகளைத் தானே குறிவைக்கின்றன. இரண்டுமே மனிதாபிமானத்தை நசுக்கும் வேலைகள் தான்.1 point- நியாயத்தின் சாம்பல்
1 pointகண்ணகி மன்னனை மட்டும் எரித்திருக்கலாம்..! அது நியாயம் ஏன் மதுரையை எரித்தாள்? மதுரை என்ன தவறு செய்தது? அனுமனும் தேவையில்லாமல் தான் இலங்கையை எரித்தான்…! அழகிய எழுத்து நடை உங்கள் வித்தை..।1 point- கைவிலங்குகள்
1 pointநீ எதற்காக நிமிர்ந்து நிற்கின்றாய் உன் வாள்கள் ஏன் உயருகின்றன உன்னை அடக்க வருபவர்களுடன் உன்னால் சேர்ந்து வாழ முடியாதா............... நீ அடக்கி ஒடுக்கி நசுக்க முனைந்ததனால் தானே நான் வாளுடன் நிமிர்ந்தேன் . நீ வலிமை மிக்கவன் என்றால் நான் வீரம் , மானம் ரோஷம் மிக்கவன். உன் அடடூழியங்ககளினால் தானே நான் பொங்கியெழுந்தேன். இன்னும் மறந்து விடவில்லை ஆழ்மனதில் கனன்று கொண்டிருக்கிறது .ஒரு நாள் சுபமாய் முடியும். .1 point- கைவிலங்குகள்
1 pointஉண்மை தான் அண்ணா....... பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு குரலாக இது இருந்து விட்டுப் போகட்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதினேன். ஒருவருடன் போராடிய அந்த தேசம் இப்பொழுது இருவருடன் போராட வேண்டிய நிலையில் இருக்கின்றது......1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
ஓ...அவரா? அவர் அதே இடத்தில நிண்டால் அடியார் மடத்தில ஒரு மாசம் தொடந்து அன்னதானம் 😂1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
எமக்குள் ஈழம்,ரஷ்யா,உக்ரேன்,அமெரிக்கா என பல அரசியல் மாற்றுக்கருத்துக்கள் இருந்தாலும்..... டொனால்ட் ரம்ப் அவர்கள் சென்ற தேர்தலில் அமெரிக்க மக்களின் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றி பெற்றவர் என்பதை மறக்க முடியாது. அதன் படி அவரின் தேர்தல் பிரச்சாரத்தின் படியே தற்போதைய உலக அரசியல் நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றார் என நினைக்கின்றேன்.1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
ரஷ்யா மீதான, முக்கியமாக புட்டின் மீதான வசீகரம் என்பது “சுத்தி சுத்தி அடிப்பேன்; ஏயார்ல பாய்ந்து பாய்ந்து அடிப்பேன்” என்ற கதாநாயகனின் மீதான வழிபாடு போன்றது.. தோல்வியால் துவண்ட இனத்திற்கு ஒரு கதாநாயகன் எப்போதும் தேவை! இதில் ஏன் உக்கிரேனுக்கு நாங்கள் ஆதரவாக இருக்கவேண்டும் என்று யாழில் பக்கம் பக்கமாக எழுதிக்கிடக்கு. அதற்கு எதிர்ப்பாகவும் பக்கம் பக்கமாகக் கருத்துக்கள் உள்ளன. இப்போது ட்ரம்ப் (ஜனநாயக ரீதியாக தெரிவுசெய்யப்பட்டவர்) பின்பற்றுவது முதலாளித்துவம், ஏகாதிபத்யம் என்பதற்குள் எல்லாம் வராது.. வெறும் ரியல் எஸ்டேட் டீல்.. ஒரு கொள்கை எல்லாம் கிடையாது.. அதிகாரம் கொடுக்கும் போதையில் திளைப்பது மட்டும்தான் ட்ரம்ப் செய்வது.. அடுத்த நாலு வருடங்களில் உலகம் எவ்வளவு காலம் பின்னோக்கி நகர்கின்றது என்று பார்ப்போம்.1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
வணக்கம் ரஞ்சித்! நீங்கள் சொல்வதும் சரி.உங்கள் ஆதங்கமும் சரியானதே.ஆனால் அன்றைய காலங்களிலும் சரி இன்றைய காலங்களிலும் சரி பிராந்திய அரசியலும் அதிகார அரசியலும் தான் முக்கியத்துவமாக இருக்கின்றது. ஒட்டுமொத்த உலகையும் அமெரிக்கா கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க நினைக்கின்றது(வைத்திருக்கின்றது). அதே வழியில் சிற்றரசர்களாக பிராந்திய நாடுகளில் வல்லமை உள்ள அரசுகள் தங்கள் அண்டை நாடுகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கின்றன. அண்மையில் மோடி - ரம்ப் சந்திப்பின் போது பங்களாதேஷ் பற்றி ஒரு நிருபர் கேள்வி கேட்டபோது...... நண்பர் மோடி அதை பார்த்துக்கொள்வார் என வெளிப்படையாகவே பதிலளித்தார்.இதில் ஆயிரம் அர்த்தங்கள் அடங்கியிருக்கும் என நினைக்கிறேன். அதாவது இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளுக்கு இந்தியா பதில் சொல்லும். சீனா பார்வையாளராக இருக்க வேண்டும் என்பது போல் உள்ளது.👈 அடுத்தது அமெரிக்கா இன்று வரைக்கும் நீதி நியாய பக்கம் நின்றது போலவும் கோமாளி டொனால்ட் ரம்ப் வந்த பின்னர்தான் எல்லாம் தலை கீழாக மாறியது போலவும் எழுதியிருக்கின்றீர்கள். அமெரிக்கா என்றும் தன் சுய நல அரசியலை கைவிட்டதுமில்லை. இனியும் கை விடப்போவதுமில்லை. இலங்கைக்கு இந்தியா அரசன்🤣 ஐரோப்பாவிற்கு அமெரிக்கா அரசன்😂 மத்திய கிழக்கிற்கு இஸ்ரேல் அரசன்😃 ஆபிரிக்காவிற்கு மும்முனை போட்டி நடக்கின்றது😎 அனைத்தும் எனது சுய கருத்துக்கள்.1 point- யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தாலும், ரவ்ஹிட் ஹ்ரிடொயின் சதத்துடன் 49.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 228 ஓட்டங்களை எடுத்திருந்தது. முகமட் ஷமி 53 ஓட்டங்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்தார். பதிலுக்குத் துடுப்பாடிய இந்திய அணி சாதரணமான வெற்றி இலக்கை சுப்மன் கில்லின் ஆட்டமிழக்காது எடுத்த சதத்துடன் 46.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 231 ஓட்டங்களை எடுத்து அடைந்தது. முடிவு: இந்திய அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது எல்லோரும் இந்திய அணி வெல்லும் எனக் கணித்தமையால் அனைவருக்கும் இரு புள்ளிகள் கிடைக்கின்றன. இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள் (மாற்றமில்லை):1 point- நீதிமன்ற பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய துப்பாக்கி சூடு!
Clean Srilanka ல, அவனும் பங்கெடுக்க நினைத்தானோ..... என்னவோ... அதுவும் ID ல Covid QR code வச்சி அடிச்சான் பாரு.1 point- 'நீங்கள் யுத்தத்தை ஆரம்பித்திருக்ககூடாது" ரஸ்ய உக்ரைன் யுத்தத்திற்கு உக்ரைன் ஜனாதிபதியே காரணம் என டிரம்ப் குற்றச்சாட்டு
அமெரிக்காவிற்கு ரஷ்யாவிடமிருந்தூ ஏதோ சில பொருட்கள் மிகவும் மலிவு விலையில் அல்லது இலவசமாக கிடைக்கப் போகின்றன.............. ஆதாயம் இல்லாமல் செட்டி ஆற்றோடு போகமாட்டார்.... இது எல்லா நாடுகளுக்கும் ஒரு படிப்பினையாக இருக்கவேண்டும். ஒரு நாடு, ஒரு இனம் அதன் சுயநிர்ணய உரிமையை இழப்பது கொடுமையான, அநியாயமான ஒரு நிகழ்வு. எங்களுக்கு நடந்தது, இன்று உக்ரேனுக்கு நடக்கின்றது, இதே பலசாலிகளால் நாளை இன்னும் பலருக்கும் இதே நிலைமை வரும்................. பாதிக்கப்பட்டவர்களாவது பாதிக்கப்படுகின்றவர்களுக்கு ஒரு ஆதரவுக் குரலையாவது பதிவு செய்யவேண்டும்.1 point- சும்மா ஒர் பதிவு
1 pointபுத்தன், எமது இளம் வயதுகளில் தூர் வாருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்ட அனுபவம் உண்டு. மு. தளையசிங்கம் அவர்களது சர்வோதய இயக்கம் இவற்றை ஒழுங்கு செய்திருந்தது. இரண்டு பெரிய குளங்களை இணைக்கும் திட்டம் கூட ஆயத்த நிலையில் இருந்தது. இப்போது பார்க்கும் போது எல்லாமே வரண்டு போய்க் கிடப்பது மிகவும் கவலையாக உள்ளது. அங்கு எவருக்கும் எந்தக் கவலையும் இருப்பதாகத் தெரியவில்லை. மிகக் குறுகிய காலத்திலேயே கூர்ப்படைந்து விட்டார்கள் போல உள்ளது…!1 point- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
என் வீட்டில் இருந்து தள்ளி மூன்றாவது வீட்டில் வசிப்பர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். தன் முகனூல் எங்கும் இக் கொலை தொடபான விவரங்களை பகிர்ந்து வருகின்றார். அவருடன் இக் கொலை தொடர்பாக கதைத்ததில், இது ஒரு திட்டமிடப்பட்ட கூட்டு பாலியல் வல்லுறவு கொலை என்கின்றார். அப் பெண்ணின் முதுகில் பலரது சப்பாத்துக் கால்களின் அடையாளங்கள் இருந்தன என்றும், நெஞ்சில் பலர் ஏறி மிதித்து அணுவணுகாக சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர் என்கின்றார். எல்லாவற்றையும் விட, இப் பெண்ணை வேறு இடத்திற்கு கொண்டு சென்று இக் கொடூரத்தை நிகழ்த்திய பின் மீண்டும் கொண்டு வந்து மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறை ஒனறில் போட்டுள்ளனர் என்கின்றார். மம்தாவின் நெருங்கிய உறவினர் ஒருவரின் திட்டத்தின் படியே இது நிகழ்ந்துள்ளது என்றும், இந்த கொலையை மூடி மறைக்க அனைத்து விதமான சாட்சியங்களையும் சான்றுகளையும் அழித்து விட்டனர் என்றும் சொன்னார்.1 point- கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
மே.வங்க அரசுக்கு எம்.பி. ஹர்பஜன் சிங் கடிதம் 19 AUG, 2024 | 02:20 PM புதுடெல்லி: முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது: கொல்கத்தா மருத்துவமனை யில் பெண் மருத்துவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவது வேதனை அளிக்கிறது. நம் அனைவரின் மனசாட்சியையும் உலுக்கிய இந்த வன்முறைச் செயல், ஒரு தனிநபருக்கு எதிரான கொடூரமான குற்றம் மட்டுமல்ல, நமது சமூகத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கண்ணியம் மற்றும் பாதுகாப்பின் மீதான கடுமையான தாக்குதல் ஆகும். இது நம்முடைய சமூகத்தில் ஆழமாக வேரூன்றிய பிரச்சினைகளின் பிரதிபலிப்பு ஆகும். நோயாளிகளின் உயிரை பாதுகாக்கக்கூடிய மருத்துவமனை வளாகத்திலேயே இதுபோன்ற கொடூரமான செயல் நடைபெறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவம் நடந்து ஒரு வாரத்துக்கு மேல் ஆகியும், குற்றவாளிகள் மீது உறுதியான நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மருத்துவர்கள் சாலையில் இறங்கி போராடும் நிலை ஏற்பட்டுள்ளது. நீதி கேட்டு நடைபெறும் இந்தப் போராட்டத்துக்கு முழு மனதுடன் என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை நீதியின் முன் நிறுத்த மேற்கு வங்க அரசும் சிபிஐ அமைப்பும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/1914291 point - யாழ் கள சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2025
Important Information
By using this site, you agree to our Terms of Use.