Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    16
    Points
    19643
    Posts
  2. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    3118
    Posts
  3. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    88794
    Posts
  4. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    39311
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 02/28/25 in all areas

  1. இது எதிர் கட்சிகளின் அவதூறு உறவே. நம்ப வேண்டாம்🤣 பிறகு சண்டை பிடிக்கிறாங்கள் எண்டு எங்களை பழி சொல்லுங்கோ🤣 நாளைக்கு அவுஸ் வென்றால்…. அன்புமணி ஆகிய நான்….🤣
  2. தமிழ் கஞ்சா குடுக்கிகலோ, மறத்தமிழ் காவலிகளோ போவார்களோ, இல்லையோ என்று கவலைகொள்வோர், தமிழருக்கு நீதி, நியாயம் வேண்டி எதிர்ப்பு காட்டிய மானத்தமிழர்கள் ஒருசிலரை பாராட்டலாமே. இனப்படுகொலை செய்தவர்களை காவிய நாயகர்களாக புகழ்ந்து இசை பாடியவர்களை, அவர்களின் கொலைச் சாய முகங்களை கழுவி ஒப்பனை போட்டு கௌரவ படுத்தியவர்களை அவர்களின் அந்த செயல் தவறு என்று சுட்டிக்காட்டுவதில் தப்பில்லை.
  3. பூனைகளின் பேச்சுவார்த்தை ----------------------------------------------- எவ்வளவு பெரிய பூனையாலும் எவ்வளவு சின்ன சுண்டெலியையும் அடித்துப் பறிக்க இயலாத ஒரு காலம் பூமியில் வந்திருந்தது அந்த ஒரு நாளில் ஒரு சுண்டெலியை சில பூனைகள் கூப்பிட்டன வரச் சொல்லி சமாதான காலம் தானே என்று கூட்டமும் சுற்றி நிற்கும் தானேயும் என்று துணிந்து உள்ளே வந்தது சுண்டெலி சுண்டெலியின் வீரம் தீரம் போற்றி ஆரம்பித்த பூனைகள் அடுத்ததாக அடித்துப் பறிக்க முடியாததை எழுதிப் பறிக்க ஆயத்தமாகின கேட்கிறதை கொடுக்கின்றேன் ஆனால் இன்னொரு அநியாயப் பூனை அது அங்கே என் வேலியில் எந்நேரமும் நிற்கின்றது அதை பதிலுக்கு தடுங்கள் என்றது பேச வந்த சுண்டெலி 'ராஜதந்திரமாக அணுக வேண்டும்.....' என்றது பெரிய பூனையின் உதவிப் பூனை கொஞ்சம் குனிந்த சுண்டெலி 'எந்த வகை ராஜதந்திரம்..........' என்று உதவிப் பூனையை மெதுவாகக் கேட்டது பூனைக் கூட்டம் துள்ளி விழுந்தன மின்சாரம் அடித்தது போல 'மியாவ் மியாவ்.......' என்று கத்தின நமக்கு இது அவமானம் என்று குறுகின நன்றி கெட்ட சுண்டெலி என்றன ஒரே ஒரு வார்த்தையால் அடிபட்ட பூனைகள் சுண்டெலிக்கு பொறி வைக்க வேலியில் நிற்கும் அந்தப் பூனையுடன் இனிப் பேசும்.
  4. நான் பிபிசி யில் வந்திருந்த காணொளிகளை பார்த்தேன். உலகில் ஒரு நாட்டின் சனாதிபதியை இன்னொரு நாட்டின் சனாதிபதி இவ்வாறுஅவமதித்ததை காணவும் இல்லை, கேள்விப்படவும் இல்லை. தாம் மிக உயர்ந்தவர்கள் என்றும், தம் உதவியின்றி வாழ முடியாது என்றும் மமதையில் இருக்கும் ஒருவரின் திமிர்தனமான செயல்பாடுகள் தான் ரம்ப் செய்வது. உக்ரைனுக்கு இந்த சந்திப்புக்கு முன்னர் இருந்ததை விட, அன் நாட்டு மக்களினது மட்டுமல்ல, பல நாடுகளில் இருந்தும் தார்மீக ஆதரவு இதன் மூலம் கிடைக்க போகின்றது.
  5. யாழ்களத்தில் நல்லவனாக இருந்தாலும் அடிக்கிறீர்கள் கெட்டவனா இருந்தாலும் அடிக்கிறீர்கள் . ஏன் வில்லங்கம் என்று உங்களை மாதிரியே இருந்து கொள்கிறோம் என்றாலும் அடிக்கிறீர்களே ....... எனக்ளுக்கு விமோசனம் கிடையாதா? இனப்படுகொலை உச்சத்தில் இருந்த நேரம் அதுக்கும் அதை முன்னின்று நடத்தியவர்களுக்கு வக்காலத்து வாங்கியர்களையும் பற்றி எழுதியபோது கிரிகெடையும் இனப்படுகொலையையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் விடுதலைப்போரை கொச்சைப்படுத்தும் விதமாக பின்பு சினிமா எனும் போர்வையில் படங்கள் எடுத்தபோது அதுபற்றி எழுதும்போது சினிமாவையும் போரையும் ஏன் ஒன்றாக பார்க்கிறீர்கள் என்கிறார்கள் ஏன் வில்லங்கம் என்று நாம் வேறு வேறாக பார்த்து பழகுவதற்கு முடிந்த அளவில் முயறசி செய்யும்போது இப்போ இப்பிடி எழுதுகிறீர்கள் .........
  6. உண்மை தோழர் .. ராமதாஸ் vs MRK பன்னீர் செல்வம்(திமுக) C.Ve சண்முகம்(அதிமுக) அண்ணாமலை (பாஜக) VS ஈ.பி.எஸ்(அதிமுக) VS செந்தில்பாலாஜி(திமுக) ஒபிஎஸ்(அதிமுக தனி) VS உதயகுமார் (அதிமுக) சக்கரபாணி(திமுக) கடம்பூர் ராசு(அதிமுக) தங்கம் தென்னரசு (திமுக) ராதாகிருட்டினண் (பாஜக) அனிதாகிருட்டினன்(திமுக) தளவாய் சுந்தரம் (அதிமுக) தமிழிசை சவுந்திரராஜன் (பாஜக) கனிமொழி , கீதா ஜீவன்(திமுக) எசி சண்முகம் VS தாமோதரன் VS காந்தி எவ வேலு அக்ரி VS கிருட்டிணமூர்த்தி திருமாவளவன் சந்திர காசி பூவை ஜெகன் கிருட்டினசாமி சான் பாண்டியன் எனக்கு தெரிந்தது கொஞ்சம் இன்னும் நிறைய இருக்கு.இவர்கள் எல்லாம் திராவிட தலைமைகளால் ஸ்பெசல் ஒப்பாயின்மென்ற் செய்யபட்டவர்கள் . தங்கள் தலைமையை யார் எதிர்த்து அறிக்கைவிட்டாலும் அவரின்ட குலம் கோத்திரம் அறிந்து ( சாதி ஒழிப்பு ? ) முன் களத்திற்கு வந்து நிற்பார்கள்.. ஆனால் சீமானுக்கு எதிராக வித்தியாசமான ஒப்பாயின்மென்ட் சுப வீரபாண்டியன் வீரமணி கொளத்தூர் மணி கோவை ராமகிருட்டினண் :: கொள்கைவழி ( ? ) விசயலட்சுமி / வீரலட்சுமி / சுந்தரவள்ளி / ஜோதிமணி /காளியம்மாள்..? (கொம்பு சீவப்படுவதாக கேள்வி ) ::பெண்கள் வழி ( ? ) ராஜீவ் காந்தி / தமிழன் பிரசன்னா / செந்தில்குமார்(திமுக) வன்னியரசு (வி.சிறுத்தைகள்) அர்ஜூன் சம்பத் :: அரசியல் வழி (?) காவல் துறை :: வருண் IPS / இப்போ பிரவீன் ராஜேஷ் :: இன்னும் தொடருமாம் .. சுருங்க கூறின் அவன் பொருளை எடுத்து அவனையே போடு என்பதாகும்.இதுவே திராவிட சித்தாந்தமாகும்
  7. தமிழ் நாட்டை இதுவரை ஆட்சி செய்த அனைவரும் தமிழர்களே. இனதூய்மை வாதம் பேசும் இனவெறி சீமான் கட்சி என்றுமே ஆட்சி பீடம் ஏறாது. ஆனால் மக்களிடையே நச்சு கருத்துகளை விதைக்கும் அயோக்கியத்தனத்தை அது மேற்கொள்ளும். இனதூய்மை வாத நஞ்சை மக்களிடையே விதைக்கும் சீமானும் கலப்பினம் தான். சீமானின் மனைவியும் கலப்பினம் தான். தான் கேரள வம்சாவழி என்பது மறைக்கவே சீமான் என்ற அயோக்கிய அரசியல் வாதி இனதூய்மை வாதத்தை பேசுகிறார். சீமான் என ற இனவெறியரை ஆதரிக்கும் எவருக்கும் சிங்கள இனவாதத்தை பற்றி பேச அருகதை இல்லை. சிங்கள இனவாதிகளை விட மோசமான இனவாதிகள் இந்த சீமானின் தற்குறி தம்பிகள்.
  8. பத்தாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவின் பந்துவீச்சுக்குத் தாக்குப் பிடித்து சகல விக்கெட்டுகளையும் இழந்து 273 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி, ராவிஸ் ஹெட்டினது அதிரடியான ஆட்டத்தால் 12.5 ஓவர்களில் 109 ஓட்டங்கள் எடுத்த நிலையில் மழை வந்து தடைப்பட்டது. போட்டி மீண்டும் மீள ஆரம்பிக்கமுடியாமையால் அவுஸ்திரேலியா வெற்றியை எட்டமுடியவில்லை. முடிவு: முடிவில்லை! எனவே யாழ்களப் போட்டியாளர்கள் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. @goshan_che யின் ஒருநாள் முதல்வர் ஆகும் கனவும் இன்று நிறைவேறவில்லை! யாழ்களப் போட்டியாளர்களின் புள்ளிகளின் நிலை (மாற்றமில்லை):
  9. மழை என் பதவி கனவுக்கு ஆப்பு வைத்து விட்டது 🤣🤣🤣. அன்பு மணியை மேற்கோள் காட்டும் போதே நினைச்சேன் அசிங்கபடும்படி ஆகும் என்று🤣🤣🤣 இந்தா ஆயிடுச்சே🤣
  10. தம்பி அன்புமணி முதலமைச்சர் பதவி மணக்குது. மேளதாளங்களுக்கு ஓடர் கொடுத்துட்டு காவல் இருக்கிறோம். ஆனால் எந்த மேளம் என்று கேட்கக் கூடாது.
  11. போரடிய உறவுகளுக்கு நன்றி. மஞ்சள் சிவப்பு நிறத்தை மட்டும் தாங்கி பிடித்திருக்கலாம், சின்ன-கொடி, பயங்கரவாதிகளின் எதிர்ப்பு என இலகுவாக கடந்து போகும் வாய்ப்பை இலங்கைக்கு கொடுத்திருக்கும். கஞ்சா குடுக்கியள், இசை வேறு, அரசியல் வேறு என நாக்கை பிரட்டி விட்டு, குப்புறபடுத்திருப்பார்கள். வீரம் எல்லாம் தமிழ் பெண்களிடமும் 60 வயது தாண்டியவர்களிடமும்தான்.
  12. எப்போதும் தமிழன்தானே இப்போ முன்னுக்கு. அவரே முன்னாடி போகட்டும். ஆப்கான் அடிக்கிறான். அவுஸ்ஸ வீட்டுக்கு அனுப்பிறான்.
  13. அப்பொழுது GELT வகுப்புகள் நடந்த காலம். ஜேவிபி பிரச்சனையால் பல்கலைகள் மூடியிருந்தன. நாங்கள் அனுமதி பெற்றுவிட்டு வீட்டிலேயே இருந்தோம். இப்படியே சும்மாவே இருக்கின்றார்களே என்று அரசாங்கம் இந்த வகுப்புகளை ஆரம்பித்தது. ஆங்கிலம் படிபித்தார்கள். அத்துடன் சில இடங்களுக்கு வேலை அனுபவம் அல்லது அறிமுகம் பெறவும் அனுப்பி வைத்தார்கள். வகுப்புகள் சில நாட்களில், வேலை சில நாட்களில் என்று போய்க் கொண்டிருந்தது என்று நினைக்கின்றேன். ஆங்கில வகுப்பின் நாலாம் நாள். நெல்லியடி மத்திய மகா வித்தியாலத்தில் நடந்து கொண்டிருந்தது. வகுப்பு நடந்து கொண்டிருந்த போது, ஹெலிகாப்டர் ஒன்று வந்து சுட்டார்கள். மேசைக்கு கீழே ஆங்கில ஆசிரியரையும் கண்டேன். அதற்குப் பின் நான் அந்த வகுப்புகளுக்கு போகவேயில்லை. அரசாங்கம் தான் நாங்கள் சும்மா இருக்கின்றோம் என்று நினைத்தது, ஆனால் ஊரில் நாங்கள் உண்மையிலேயே பிசியாக இருந்தோம்....................... வேலைக்கு கட்டாயம் போக வேண்டி இருந்தது. வரவு எடுத்து, அதை நிரப்பி, எங்கோ அனுப்பிக் கொண்டிருந்தார்கள். கச்சேரி, டிப்போ, துறைமுகம், மருத்துவமனை, இப்படியான இடங்களுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். பருத்தித்துறை டிப்போவிற்கு எங்களில் சிலரை அனுப்பியிருந்தனர். அதில் சிலர் அங்கிருந்த கராஜில் போய் புதினம் பார்த்தார்கள். சிலர் டிப்போ அலுவலகத்தில் நின்றனர். அங்கு எங்களின் பயிற்சிக் காலம் முடிந்த பின், பஸ் சேவையை எப்படி முன்னேற்றலாம் என்று எங்கள் ஒவ்வொருவரையும் கட்டுரை எழுதித் தரும்படி கேட்டிருந்தனர். நாங்கள் கூடிப் பேசி, நிறைகளையும் குறைகளையும் பட்டியலிட்டு, தீர்வுகளையும் கதைத்துக் கொண்டோம். தனித்தனியே எழுதியும் கொடுத்தோம். பின்னர் ஒரு நாள் எங்களை எல்லாம் டிப்போவிற்கு கூப்பிட்டிருந்தனர். எல்லோரையும் பொதுவாக பாராட்டி விட்டு, எங்களில் ஒரே ஒரு ஆள் மட்டும் கண்டைதையும், கடியதையும் எழுதியிருக்கின்றார் என்று கோபப்பட்டனர். இனிமேல் இவர்கள் எவர்களையும் நம்பவே கூடாது அன்று நினைத்தேன்................🤣.
  14. "நீயில்லா வாழ்வு" நீயில்லா வாழ்வு பாலைவனம் ஆகுமே நீரற்ற உலகு வெறிச்சோடி இருக்குமே நீதியிழந்த நாடு சமாதானம் காணாதே நீலக் கருங்குயிலே என்னைத் தழுவாயோ? காதல் இல்லையேல் குடும்பம் அழியுமே காமம் ஒழிந்தால் பரம்பரை மறையுமே காதணி அணிந்த அழகு வஞ்சியே காலம் தாழ்த்தாமல் அருகில் வருவாயோ? உன்னைக் காணாத கண்ணும் விழியல்ல உள்ளம் சேராத இல்லமும் வீடல்ல உவகை கொண்டு உயிர்கள் நிலைக்க உண்மை உணர்ந்து அன்பு பொழியாயோ? [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]
  15. விமோசனம் இருக்கு ....உங்கள் ஜாதகப்படி இப்பொழுது இனபடுகொலையாளிகள் வக்கிரமடைந்து இடதுசாரி ஆட்சியின் உச்சத்தில் உள்ளது இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த ஆட்சி தொடரும்,இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அவதானமாக செயல் பட வேணும் ,யாழ் கள உறவுகளுடனோ',ஏனைய நண்பர்களுடனோ கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும்.... பரிகாரம்..உங்களுக்கு விரும்பிய பூக்களாகிய லைக்,ஹா ஆஹா,தடுமாற்றம்,சோகம்,மைனஸ்1 போன்ற பூக்களை போட்டு உங்களுக்கு வரும் மனதொல்லைகளில் இருந்து விமோசனம் பெறலாம்.. மைனஸ்1 பூஜைக்கு உகந்தது அல்ல ...அதை பாவிக்கும் பொழுது மிகவும் அவதானம் வேண்டும்.. இனபடுகொலையாளிகளை இனப்படுகொலையாளியாக பாருங்கள் ....அவர்களை ஆதரியுங்கள் வரவேற்பு செய்யுங்கள் ....(தமிழர்களை இனப்படுகொலை செய்தவர்களை மட்டும்...உங்கள் ஆதர்வுக்கு ட்ரம்ப் மற்றும் நெத்தியாகுவை துணைக்கு வைத்திருங்கள் ... ஏனைய இனங்களை(தமிழர் அல்லாத ) படுகொலை செய்தவர்களுக்கு எதிராக குரல் கொடுங்கோ....ஹமாஸ்,பலஸ்தீனம்....ஆதரவாக ...
  16. இதே புரிதல் சீமானுக்கு இருக்க வேண்டும். சீமானின் சாக்கடைத் தனமான அரசியல் உத்திகளை ரசிக்கும் தீவிர சீமான் தம்பிகளுக்கும் இருக்க வேண்டும். தற்போதைய நிலையின் படி, இந்த இரு தரப்புகளும் மாறப் போவதில்லை (தங்களுக்கு இன்பம் தரும் ஒன்றை யார் மாற்றுவர்?). எனவே, நா.த.க நச்சுச் செடியாகத் தொடரப் போவதே நடக்கும்!
  17. காணொளி நாட்டு வருகை தந்த ஒருவரை இவ்வாறு அவமானப்படுத்தியது அமெரிக்க வரலாற்றில் ஒரு கறுப்பு நாள்.
  18. ரசியுங்கோ...இன்று தமிழில் பாடுவது ,தமிழில் அரசியல் பேசுவது எல்லாம் தமிழுக்கே ஆபத்தாக வந்து நிற்கும் ..அது தான் நியதி,நியாயம் என்றால் யாரால் தான் தடுத்து நிறுத்த முடியும்...
  19. இது வரை யாரும் கண்டிராத ஓவல் அலுவலக சந்திப்பாக இருந்தது😂. கமெராக்களுக்கு முன்னிலையில் வைத்தே செலன்ஸ்கியை அவமானப் படுத்தி அனுப்பியிருக்கிறார்கள். எல்லாம் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த போது, இடையே புகுந்த (புண்ணாக்குப் பயல்!) ஜேடி வான்ஸ், செலன்ஸ்கியைப் பார்த்து "நீங்கள் ராசதந்திர வழிகளில் தீர்த்திருக்க வேண்டும்" என்றார். செலன்ஸ்கி அவருக்குக் கிட்டவாகக் குனிந்து "ஜேடி, என்ன வகையான ராசதந்திரத்தைச் சொல்கிறீர்கள்?" என்று கேட்கிறார். அது ஜேடி க்கும், ட்ரம்புக்கும் சுட்டு விட்டது. அடிப்படையில், ட்ரம்ப், ஜேடி வான்ஸ் போன்ற வலது சாரிகளின் ஒரு இயல்பு தங்கள் இமேஜ் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வின்மை - feeling insecure. உள்மனத்தில் இருக்கும் பாதுகாப்புணர்வின்மை தான் வெளியே பெண்கள், சிறு பான்மையினர், தங்களிடம் சார்ந்திருப்போர் நோக்கி அதட்டலாகவும், அதிகாரமாகவும் வெளிப்படுகிறது என நினைக்கிறேன். கனிம வள ஒப்பந்தம் கைச்சாத்தாகவில்லை, பத்திரிகையாளர் சந்திப்பும் ரத்து. ட்ரம்பின் கனிம வளச் சுரண்டலில் இருந்து தற்போதைக்குஉக்ரைன் தப்பி விட்டது . அடுத்து என்ன செய்யப் போகிறது எனப் பார்க்க வேண்டும்.
  20. தலை மேல் கத்திதான் எப்போதுமே. பாவப்பட்ட ஜென்மங்கள். இப்போது இருக்கும் நடைமுறையில் காசு குடுத்து முடிச்சு வைக்கிறதெல்லாம் மிகக் கடினம். ஆனாலும் இந்தக்கேள்வி எப்போதுமே தொக்கிநிற்கும். அந்தநாட்டில் ஒரு கிரிக்கெட் கட்டுமானமே இல்லை. அதுதான் பெரும் பிரச்சினையே. அங்கே நல்லதொரு வீரரை உருவாக்குதல் மிகக் கடினம். நமக்குத் தெரிந்த, அநேகமான பாக்கிஸ்தான் வீரர்கள் எல்லாம் பிறவி வீரர்கள். அவர்கள் உருவாக்கப் படவில்லை. அண்மையில் வந்தவன் பாபர் ஆஸாம். துரதிஷ்டவசமாக, வேறு ஒருவரும் வரவில்லை. தனி ஒருவனாக அவன் எவ்வளவுதான் தாங்கமுடியும். பின் அவங்களின் அரசியல். நாம் நம்நாடுகளில் பாக்கின்ற அதே அல்லது அதுக்கும் மேலான மோசமான அரசியல். எவ்வளவு காலத்துக்குத்தான் இப்பிடியே வண்டிய ஓட்டிறது. அவர்கள் போகவேண்டிய தூரம் வெகு தூரம். அட, வசியும் ஞானும் இம்முறை ஒரே கோட்டில். யாயும் ஞாயும் யாராகியரோ. 🤣😉
  21. அதான் வச்சு செஞ்சிட்டே🤣 அவிங்க சூனியத்யில மழைய வைக்க🤣 நம்பிக்கையில்லா பிரேரணை ஒரு வாக்கில் தோல்வி🤣 எவரோ சீப்ப ஒழிச்சிட்டாங்க சார்🤣
  22. தங்களின் தோல்வி, அங்கு பெய்யும் மழை எல்லாவற்றுக்கும் என்ன காரணம் என்று பாகிஸ்தான் கண்டுபிடித்துவிட்டது....................
  23. இந்திய இராணுவ பட்டறை🤣 குடுமி வெளியில் தெரிந்து விட்டது…எப்படியாவது மறைக்க படாதபாடு படுகிறார்கள்🤣. சீமானுக்கு ஆதரவாக இந்திய இராணுவ புலனாய்வு அதிகாரிகள் (முன்னால் என்ற போர்வையில்) களம் இறக்கப்பட்டுள்ளனர். இந்த வீடியோவில் பேசுபவர், கூட நிற்பவர் அத்தனை பேரின் தலை வெட்டை பாருங்கள். அத்தனை பேரிலும் “அதிகாரிகள்” தோறணை அப்படியே தெரிகிறது. ரஜனி, கமல், வைக்கோ, திருமா, இராமதாஸ், அஜித், விஜை இப்படி சீமானை விட பலமடங்கு ஆபத்து உள்ளவர்கள் தமிழ் நாட்டில் பொது இடங்களில் கூட ஆயுத பாதுகாப்பில் வருவதில்லை. இவர் ஓசூரில் இருக்க, நீலங்கரையில் ஏன் துப்பாக்கிதாரி? குஞ்சு மாவீரனை பாதுகாக்கவா? அப்பட்டமாக இந்திய இராணுவ, புலனாய்வு அமைப்புகள் சீமானை சூழ நிற்பதை கண்டும், புலம் பெயர் தம்பிகள் திருந்த போவதில்லை. தமிழ் தேசியவாதிக்கு, Indian Rapist Army யோடு என்ன வேலை?
  24. ஒரு ராட்சத கப்பலின் இயந்திரம் பழுதடைந்ததால், அதை யாராலும் சரிசெய்ய முடியவில்லை, எனவே அவர்கள் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவமுள்ள ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரை பணிக்கு அமர்த்தினார்கள். இயந்திரத்தை மேலிருந்து கீழாக மிகக் கவனமாக ஆய்வு செய்தார் அவர். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு, பொறியலீளர் தனது பையை இறக்கி ஒரு சிறிய சுத்தியலை வெளியே எடுத்தார். மெதுவாக எதையோ தட்டினார். விரைவில், இயந்திரம் மீண்டும் உயிர்ப்பித்தது. இயந்திரம் சரி செய்யப்பட்டது! ஒரு வாரம் கழித்து பொறியாளர் கப்பல் உரிமையாளரிடம் ராட்சத கப்பலை பழுதுபார்த்ததற்கான மொத்த செலவு $20,000 என்று குறிப்பிட்டார். "என்ன?!" என்று ஆச்சரியமாக உரிமையாளர் கேட்டார். "நீங்கள் ஏறக்குறைய எதுவும் செய்யவில்லை. எங்களுக்கு ஒரு விரிவான பில் கொடுங்கள்." பதில் எளிது.... சுத்தியலால் தட்டுவதற்கு: $2 எங்கு தட்ட வேண்டும், எவ்வளவு தட்ட வேண்டும் என்பதை அறிந்து கொண்டு தட்டுவதற்கு : $19,998 ஒருவரின் நிபுணத்துவம் மற்றும் அனுபவத்தைப் பாராட்டுவது முக்கியத்துவம் வாய்ந்தது... ஏனெனில் அவை நீண்ட நெடிய போராட்டங்கள், சோதனைகள் மற்றும் கண்ணீரின் முடிவுகளால் பெறப்பட்டது. நான் ஒரு வேலையை 30 நிமிடங்களில் செய்கிறேன் என்றால், அதை 30 நிமிடங்களில் எப்படி செய்வது என்று 20 வருடங்களாகக் கற்றுக்கொண்டேன். நீங்கள் எனக்கு கொடுக்கும் சம்பளம் பல ஆண்டுகளுக்கானது. சில நிமிடங்களுக்கு அல்ல என்பதனை புரிந்து கொள்ள வேண்டும். Fun Drop
  25. கொஸ்கோவில் வாங்கும் முட்டைகளை அவிக்கும் போது 2 மஞ்சள் கரு வருகிறது என்று தான் நினைக்கிறேன்.நான் எங்கு இவை வாங்குகிறீர்கள் என்று கேட்பதில்லை..ஆனால் கொஸ்கோ வாடிக்கையாளர்கள்.சகோதரர் ஒருவர் வீட்டிலிருந்து வரும் சாப்பாட்டோடு இரண்டு மஞ்சள் கருக்களை கொண்ட முட்டையும் வரும்.சாப்பாட்டை பார்த்து சைக் என்று சொல்லக் கூடாது.ஆனாலும் இயற்கைக்கு முரணானது என்று பல தடவை யோசித்து இருக்கிறேன்.😆
  26. சிறைச்சாலை என்பது உல்லாச விடுதி அல்ல. உங்களது தண்டனைக் காலத்தில், அங்கு தரப்படும் களியை தான் தின்ன வேண்டும். அரசியல்வாதிகள், பிக்குகளுக்கு... சிறைச்சாலையில், "சோக்கு" கேட்குதோ... 😂
  27. ஆப்கானிஸ்தான் அடித்த ரண்ஸ் காணாது! கோஷானுக்கு ஒரு நாள் முதல்வர் பதவி நிச்சயம்😁 @வீரப் பையன்26 ஐ இந்தப் பக்கம் காணவில்லை! ஐபில் வேறு தொடங்குகின்றது! இன்னொரு போட்டித்திரி திறக்க பையன் வந்து ஆதரவைத் தரவேண்டும்☺️
  28. அண்ணை, சம்மனை கிழித்த பின் கேற்றைத் திறந்து உள்ள போன பொலீஸ் அதிகாரி, சிவில் உடை அதிகாரிகள் சம்மனை வீட்டில் சென்று வழங்கி இருக்கலாம்/கட்சி அலுவலகத்தில் வழங்கி இருக்கலாம்! இது பரபரப்பிற்காக அல்லது வேறொன்றை திசைதிருப்ப செய்ததாக இருக்கலாம்.
  29. ரனிலை மக்கள் இனி தெரிவு செய்வார்கள் என நான் நினைக்கவில்லை. ஆனால் இந்த அரசுக்கு குடைச்சல் கொடுத்துக்கொண்டே இருப்பார். மேற்குலகு, இந்தியாவின் செல்லப்பிள்ளை என்பதால் ரனில் துரும்பாக பயன்படுத்தப்படுவார்.
  30. இல்லை…நாம் வெல்லவில்லை ஆகவே செலன்ஸ்கியும் வெல்லகூடாது என்பதே காதல்-தோல்வி-தாடி அண்ணாக்களின் ஒரே எண்ணம் 🤣.
  31. மன்னிக்கவும் ..எதிர்கட்சி என்ற காரணத்தினால் இவர் எமது தோழர் அனுரா மீது இப்படியான கேலி செய்வதை வன்மையாக கண்டிக்கின்றோம் ... வஇமானத்தை ஒட்டி சென்றது நமது தோழர் தான் என்ற தகவல் தெரியாமல் புலம்புகின்றார் . முப்படை தளபதி அவர்...ஆகவே பாதுகாப்பு வீரர்கள் தேவையில்லை விமானம் அரசு உடமை நினைத்த நேரத்தில் நினைத்த இடத்திக்கு ஓட்டி செல்ல சகல உரிமையும் உண்டு(இராவணன் புஸ்பக விமானத்தை அவனே செலுத்தி சென்று சீதையை சிறிலங்காவுக்கு கடத்தி வந்தவன் ..ஆகவே இராவண பலகேயாவின் வாரிசு நம்ம தோழர்)
  32. அவசரப்படக்கூடாது.....இதிலை அடுத்தவர்களை பார்த்து விமானத்தில் பயணிக்கவில்லையா என்ற நக்கல் தொனி வேற. நானே விமான ஊழியர்களின் அனுமதியுடன் மூன்று ஆசனங்களில் நன்றாக கையையும் காலையும் நீட்டி உறங்கி சிங்கையிலிருந்து சன்பிரான்சிஸ்கோ சென்று இறங்கியுள்ளேன்
  33. நாங்களா 💪 ஜனநாயக நாடுகளில் வாழ்கின்ற ஜனநாயக முறைமைகளை நிராகரிப்போர் சங்கத்தவர்கள்
  34. அடுத்த பத்து வருடங்களுக்கு 4.5 டிரில்லியன் டாலர்கள் வரிக் குறைப்பிற்கு திட்டம் போட்டுள்ளனர். செலவில் 2.0 டிரில்லியன் குறைக்கும் திட்டமும் இருக்கின்றது. சரி, இவர்களால் செலவில் இரண்டு டிரில்லியனைக் குறைக்க முடியும் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும், இந்தக் கணக்கில் மட்டும் துண்டு விழும் 2.5 டிரில்லியன் டாலர்களுக்கு எங்கே போவது........... இன்னும் பல கவர்ச்சிகரமான திட்டங்கள், லலிதா ஜூவலரி விளம்பரங்கள் போல, வரும் போல....... நான் முதலில் தலைப்பை மட்டும் வேறொரு இடத்தில் பார்த்து விட்டு, ஏதோ ஒரு புதுவகை கிரெடிட் கார்ட் போல என்று போக, பிறகு தான் தெரிந்தது இது அமெரிக்கக் குடியுரிமை என்று....... எங்களின் பெண்களிடம் ஒரு பழக்கம் இருக்கின்றது. எப்பவும் ஒரு சிறியளவு காசையாவது மாதம் மாதம் எடுத்து, காசாகவே சேர்த்து வைத்துக்கொள்வார்கள். அது அவர்களின் ஒரு திருப்தி என்று விட்டுவிட வேண்டியது தான்............... நாடு போகிற போக்கில், இங்கு ஒவ்வோரு வீடாக போய், இந்த அரசாங்கம் அதையும் கேட்டு வாங்குவார்கள் போல......
  35. புதிதாக பதவி ஏற்றவர் "காசு "விடயத்தில் கண்ணும் கருத்துமாய் இருக்கிறார்.விற்பனை முகவராய் இருந்தவருக்கு "காசு" தானே குறி ...
  36. பஸ்ஸில் ஒருவன் சிகரெட் பற்ற வைத்தான் உடனே நடத்துநர் தம்பி சிகரெட் பிடிக்காதே சுற்று சூழல் எவ்வளவு பாதிக்குது தெரியுமா என்றார் , உடனே அவன் நடத்துநர் பார்த்து சொன்னான் யோவ் பின்னாடி பார் உன் பஸ் விடும் புகையை ! நடத்துநர் சொன்னார் வரும் ஸ்டாப்பிங்ல பஸ் நிற்காது ? உடனே ஒரு பயணி கேட்டான் ஏன் என்று! நடத்துநர் சொன்னார் இது எக்ஸ்பிரஸ், வேகமாக செல்லும் வண்டி என்று! உடனே அவன் சொன்னான் எங்களுக்கு வேகமாக போய் ஒன்றும் ஆக போவதில்லை மெதுவா ஓட்ட சொல்லு டிரைவரை என்றான். இப்பொழுது அவன் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் வந்தது உடனே அவன் ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தான்! உடனே நடத்துநர் பஸ்சை நிறுத்தி மரியாதையாக இறங்கி விடு ! என்று சொல்ல ! அவன் நன்றி நடத்துநர் சார் ! நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் இது தான் என்று சொல்லி விட்டு இறங்கினான்!
  37. செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது. ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை? ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு: 1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன. 2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. 4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது. 6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம். 8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.
  38. பெளசரின் வாசகர் வட்ட கூட்டத்தை குழப்பிய கஞ்சா குடுக்கியள் இந்த பக்கம் தலைவைத்தும் படாயினம்.
  39. அந்த காலம் . ஊசி போடாத Doctor. சில்லறை கேட்காத Conductor .. சிரிக்கும் police... முறைக்கும் காதலி .. உப்பு தொட்ட மாங்கா .. மொட்டமாடி தூக்கம் .. திருப்தியான ஏப்பம்... Notebookன் கடைசிப்பக்கம் ... தூங்க தோள் கொடுத்த சக பயணி .... பார்த்த நொடியில் உரிமை எடுத்துகொள்ளும் பால்ய நண்பன்.. இப்பவும் டேய் என அழைக்கும் தோழி .. இரவு 2 மணிக்கு கதவை திறந்துவிடும் அம்மா... கோபம் மறந்த அப்பா .. சட்டையை ஆட்டய போடும் தம்பி.. அக்கறை காட்டும் அண்ணன்.. அதட்டும் அக்கா ... மாட்டி விடாத தங்கை.. சமையல் பழகும் மனைவி ... சேலைக்கு fleets எடுத்துவிடும் கணவன் .. வழிவிடும் ஆட்டோ காரர்... High beam போடாத லாரி ஓட்டுனர்.. அரை மூடி தேங்கா .. 12மணி குல்பி .. sunday சாலை ... மரத்தடி அரட்டை ... தூங்க விடாத குறட்டை ... புது நோட் வாசம்.. மார்கழி மாசம் .. ஜன்னல் இருக்கை .. கோவில் தெப்பகுளம் .. Exhibition அப்பளம்.. முறைப்பெண்ணின் சீராட்டு ... எதிரியின் பாராட்டு.. தோசைக்கல் சத்தம் .. எதிர்பாராத முத்தம் ... பிஞ்சு பாதம் .. எளிதில் மணப்பெண் கிடைத்தாள்., வெஸ்ட் இன்டீசை வெல்லவே முடியாது ., சந்தைக்கு போக பத்து ரூபாய் போதும்., முடி வெட்ட இரண்டு ரூபாய்தான்., மிதி வண்டி வைத்திருந்தோம்., எம்ஜிஆர், கலைஞர் உயிரோடு இருந்தார்கள். ரஜினி, கமல் படம் ரிலிஸ். கபில் தேவின் கிரிக்கெட் . குமுதம், விகடன் நேர்மையாக இருந்தது. வானொலி நாடகங்களை ரசித்து கேட்டோம்., எல்லோரும் *அரசு* பள்ளிகளில் படித்தோம்., சாலையில் எப்போதாவது வண்டி வரும்., தமிழ் ஆசிரியர்கள் தன்நிகரற்று விளங்கினர்., மயில் இறகுகள் குட்டி போட்டன, புத்தகத்தில் ., மூன்றாம் வகுப்பிலிருந்து மட்டுமே, ஆங்கிலம் ., ஐந்தாம் வகுப்பு வரை அரைக்கால் டவுசர் ., பேருந்துகுள் கொண்டுவந்து மாலைமுரசு விற்பார்கள் ., எந்த நிறுத்தத்தில் ஏறினாலும் உட்கார இடம் கிடைக்கும் பேருந்தில்.., கொளுத்தும் வெய்யிலிலும் முகமூடி அணியாத [makeup] இல்லா அழகி* ... பல வருடம் ஆனாலும் நம் குறும்பை மறந்து , நம்மை மறக்காத ஆசிரியர் ... கூட்டமான பஸ்ல , நா அடுத்த stoppingல எறங்கிருவேன், நீங்க உக்காந்துக்கோங்க என்ற வார்த்தை ... 7 கழுதை வயசானாலும் நமக்கு திருஷ்ட்டி சுத்தும் #பாட்டி.. பாட்டியிடம் பம்மும் #தாத்தா ... எல்லா வீடுகளிலும், #ரேடியோவிலும், கேசட்டிலும் பாடல் கேட்பது சுகமானது வீடுகளின் முன் #பெண்கள் காலையில் கோலமிட்டார்கள், மாலைப்பொழுதுகளில் வீட்டின் முன் அரட்டை அடிப்பார்கள் #சினிமாவுக்கு செல்ல 2 நாளைக்கு முன்பே திட்டமிடுவோம் ஆடி 18 #தீபாவளி பண்டிகையை கொண்டாட்ட ஒரு மாதத்துக்கு முன்பே திட்டமிடுவோம் பருவ பெண்கள் #பாவாடை தாவணி உடுத்தினர்., சுவாசிக்க #காற்று இருந்தது., #குடிதண்ணீரை யாரும் விலைக்கு வாங்க வில்லை., தெருவில் சிறுமிகள் #பல்லாங்குழி ஆடுவார்கள். அவர்களை கலாய்த்துகொண்டே நாங்கள் #நுங்கு வண்டி ஓட்டுவோம்., இதை எழுதும் நான் .. படிக்கும் நீங்கள் .. இன்னும் நிறைய இருக்கு இந்த உலகத்துல ரசிக்க .. கடந்து தொலைந்து போனவை நம் நாட்கள் மட்டுமல்ல.,நம் சுகங்களும்தான்.., அனுபவித்தவர்கள் யார்? யார்? மனசுக்குள் ஒரு நமட்டு சிரிப்பு வருமே!! உண்மையா? இல்லையா? David Samuel Rajah.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.