Leaderboard
-
நிழலி
கருத்துக்கள பொறுப்பாளர்கள்9Points15819Posts -
வாத்தியார்
கருத்துக்கள உறவுகள்8Points11944Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்8Points33795Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்7Points20338Posts
Popular Content
Showing content with the highest reputation on 03/16/25 in all areas
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
9 pointsபரியோவான் கல்லூரி பழைய மாணவனும், என் நண்பனும், Yarl IT hub இன் முதுகெலும்பாகவும் இருக்கும் ரமோஷனின் வாழ்க்கை பயணம் பற்றிய காணொளி / பேட்டி. தான் மட்டும் முன்னேறியதுடன் வடக்கில் உள்ள இளையவர்களையும் முன்னேற்ற முயற்சிகளை எடுக்கும் ஒருவர் இவர். இக் காணொளியை தயாரித்து வெளியிட்ட Saho Creation இற்கு நன்றி.9 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வசி சொல்லிய வார்த்தை என்மனதை நெகிழ வைத்தது. கிருபன் ஒரு 8 மணிநேரம் இதற்காகச் செலவு செய்திருப்பார். நான் நினைத்தேன், என்னால் ஒரு 20 நிமிசம் செலவு செய்ய முடியாதா. இதோ, உங்களுடன் ஜோதியில். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே, IPL போட்டி தொடங்கட்டுமே. தன்னாலே வெளிவரும் தயங்காதே கிருபன் இருக்கிறார் எம்மோடே4 points
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் செய்துக்கொண்டேன். அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்திருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட் நிறுத்தி ஆரோக்கியத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது. பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது. 2011 இல் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன். சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரெண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது. ஆனால் இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது. நுரையிரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சு திணறல் ஏற்பட்டது. ஒரு பிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை செலுத்தினால் தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்கிற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுகுழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்து கொண்டார்கள். இதை எப்படி சரிசெய்வது? வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது. மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது. வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு நாட்கள் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்போதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும் படி ஒரு அவஸ்தை. ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத்தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும் படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை ஜீரம் இல்லை. ஆனால் ஆக்சிஜன் குழாயை எடுத்து விட்டால் மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது உண்ண முடியாது எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்தது போன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன். ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக் கொண்டேன். அப்படி புகைத்தால் தான் கதை எழுத வரும் என்று முட்டாள் தனமாக நம்பியதை நொந்து கொண்டேன். மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால் மூச்சு திணறி இதோஸ.. இதோஸ என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது. நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பராவாயில்லை. மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல் வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள். - எழுத்தாளர் பாலகுமாரன் - Jeeva Murugesan ·3 points
-
சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சரி இங்கே புகை பிடிக்கும் பழக்கத்தையும் அதை நிறுத்தியதையும் பகிர்ந்து கொள்கின்றோம். நான் இந்தப்பழக்கத்தை நிறுத்த முயற்சி செய்து பல முறை தோல்வி அடைந்தவன் இரண்டு தடவைகளுக்கும் கிட்டத்தட்ட ஒரு மாதம் எனது ஜாக்கெட் பாக்கெட்டில் சிகரெட்டை வைத்திருந்தேன் ஆனால் பிடிப்பதில்லை ஒவ்வொரு முறையும் பத்து நிமிடங்கள் தள்ளி வைத்தேன் பின்னர் அதை ஒரு மணித்தியாலம் தள்ளி வைத்தேன் அப்படியே மணித்தியாலங்கள் நாட்களாகி கிழமைகளாகி மாதம் ஆகியதும் அந்த பழக்கத்தை நிறுத்தி விட்டேன் ஆனாலும் அந்த ஒரு மாதம் வந்த ஆத்திரம் கோபம் மன உழைச்சல் இத்தியாதி என நானே என்னுடன் ஒரு பெரும் போரை நடத்தியிருந்தேன். வீட்டில் அந்த நேரம் எப்போது எரிந்து விழுந்து கொண்டேயிருந்தேன் .3 points
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
3 pointsநல்ல ஒரு மனிதர், அத்துடன் சிறப்பான வகையில் தமது செயற்றிட்டங்களை முன்னெடுக்கிறார். 🙏 வன்னி ரெக் பற்றிக் குறிப்பிட்டதில் சந்தோசம். இவரைப்போல இன்னும் பலர் எம்மண்ணில் நிலையான பொருளாதார அபிவிருத்தி முன்னெடுப்புகளைச் செய்ய வேண்டும், அது தான் அங்கிருக்கும் மக்களைக் கையேந்தும்நிலையிலிருந்து வெளிக்கொணரும்.3 points
-
"கிராமியக் கலைஞன்"
2 points"கிராமியக் கலைஞன்" ஆழமான வேரூன்றிய பாரம்பரியங்களுக்கும் துடிப்பான நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெயர் பெற்ற, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் வடமாகாணத்தில், தமிழ்செல்வன் அச்சுவேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். அவன் சிறு வயதிலிருந்தே, ‘அரிச்சந்திரா” கூத்து என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும், காங்கேசன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி.வைரமுத்துவின் [பெப்ரவரி 11, 771924 - ஜூலை 8, 1989] 'மயானகாண்டம்' நாடகதின் மேலும் பாசையூர் அண்ணாவியார் கலாபூஷணம் முடியப்பு அருள்பிரகாத்தின் 'சங்கிலியன்' நாட்டுக்கூத்து மேலும் கொண்ட பற்றினால், பாரம்பரிய இசையின் தாளங்களாலும், கரகாட்டம், கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களின் துடிப்பான அசைவுகளாலும் கவரப்பட்டு, அவன் தனது இளமை பருவத்திலேயே அச்சுவேலி கிராமத்தில் ஒரு திறமையான நாட்டுப்புற நடனக் கலைஞர் மற்றும் பாடகராக பெயர் பெற்று, கோவில் திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் விழாக்களில் கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி, ஆதரவும் அங்கீகாரமும் பெற்றான். அச்சுவேலியில் அவன் சுமாரான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமிழ்செல்வன் திறமையாக பாடி, நடனமாடியதும் அவரது சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அச்சுவேலி நாட்டுப்புறக் கலையில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. மேலும் அதன் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நடனக் கலைஞர்களில் ஒருவரிடம் தமிழ்செல்வன் நேரடியாக கரகாட்டம் மற்றும் கூத்து ஆகியவற்றில் இளம்வயதிலேயே தேர்ச்சி பெற்றவர் ஆவார். பழங்கால பாணியையும் மொழியையும் மற்றும் நவீன கதைசொல்லலையும் இணைத்து புதுமையான நடன அமைப்பிற்கு பெயர் பெற்ற அந்த குருவிடம், பயிற்சிகளை முறையாக பெற்றதால், தமிழ் கலாச்சாரத்தில் நடனம் மற்றும் இசையின் அழகையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றிய சங்க இலக்கியங்களில் இருந்து சமூக ஒற்றுமை, ஆன்மீக பக்தி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை இணைத்து கிராமிய கலையின் பங்கை மேம்படுத்துவதில் தமிழ்செல்வன் தன் கவனத்தை பெரும்பாலும் செலுத்தினான். அதேவேளை, ஒரு ஏழை விவசாயியின் மகளான முத்துச்செல்வி பக்கத்து கிராமத்தில் வாழ்ந்து வந்ததுடன், அவள் தன் பெற்றோருடன் வயல்களில் வேலை செய்து, அன்றாட வாழ்க்கைக்கும் உதவினாள். அவர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது மட்டும் அல்ல, அவர்களின் கனவுகள் கூட ஒரு எல்லைக்குள் முடங்கிவிட்டது. ஆனாலும், முத்துச்செல்வி தனது கிராமத்தின் இயற்க்கை அழகிலும் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளின் துடிப்பான கலை ஆற்றலிலும் ஓரளவு ஆறுதல் கண்டாள். அத்துடன் தமிழ்செல்வன் மற்றும் கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் அவள் முடிந்த அளவு கலந்து கொண்டாள். ஒரு நாள் அருகிலுள்ள கோவில் திருவிழாவின் போது தமிழ்செல்வன், வீரம் மற்றும் காதல் கதையை அடிப்டையாக வைத்து, ஒரு கூத்து நடத்திக் கொண்டிருந்தான். அவனது வீரம் நிறைந்த குரலும், இனிமை நிறைந்த காதல் குரலும் கூட்டத்தில் எதிரொலித்தது. அவனது நடன அசைவுகள் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. பார்வையாளர்கள் நடுவே, கூத்தை ரசித்துக்கொண்டு நின்றிருந்த முத்துச்செல்வியால் தன் கண்களை அவனிடம் இருந்து விலக்க முடியவில்லை. தற்செயலாக தமிழ்ச்செல்வனும் அவளைக் கவனித்தான். ஆனால் அவனின் கவனம் தன் கூத்திலேயே முழுமையாக இருந்தது. என்றாலும், நாடகம் முடிந்தபின், அவர்களின் கண்கள் சந்தித்தபோது, அவளுக்குள் அவனுக்குள் ஏதோ, சொல்லமுடியாத ஒரு புது உணர்வு கிளர்ந்தெழுந்தது. "கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம் போக்கும் அதுவிளிந் தற்று." கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும் என்று திருவள்ளுவர் கூறிச் சென்றார். அப்படித்தான், அவளின் அந்தப் பார்வையும் பின் கலைந்து போகுமோ என்று அவன் தன்னுக்குள் கேட்டுக்கொண்டான். என்றாலும், காலப்போக்கில், அவர்களின் சந்திப்புகள் அடிக்கடி நடந்தன. முத்துச்செல்வி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்ச்செல்வனிடம் சில நேரமாவது நெருங்கிப் பழகவேண்டும் பேச வேண்டும் என்ற அவாவில், மேடையை சுத்தம் செய்ய அல்லது தயார் செய்ய தானாகவே முன்வந்தாள். அவ்வேளையில் அவர்களின் உரையாடல்கள் சாதாரணமானவையாக பொதுவாக இருந்தாலும் ஆழமானவையாகவும் இருந்தன. தமிழ்ச்செல்வன் அவளுடைய நெகிழ்ச்சியையும் கருணையையும் பாராட்டினான், அதே நேரத்தில் முத்துச்செல்வியும் தனது கலையின் மீதான ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் ஈர்க்கப்பட்டாள். அதேவேளை, அவர்களின் நட்பில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கண்டு மகிழ்ந்தனர். "நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன் ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென் ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே." இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய் என்று உருகுகிறார் மணிவாசகர். அப்படித்தான் அவளும் தொடக்கத்தில், கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ரசிகன் போல் எந்த நோக்கமும் இல்லாமல், அவனின் நாடகத்தை பார்த்து இன்பம் அடைய விரைந்து வந்தவள், இப்ப உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் காதல் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாயா என்று கேட்க ஆரம்பித்தாள். அவர்கள் இருவரும் காலப்போக்கில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். ஒரு நாள், அவர்கள் இருவரும் கடற்கரை ஒன்றில், மாலைப்பொழுது சந்தித்தார்கள். அப்பொழுது எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் கரைசேரும்போது அவை மணலைத்தொட்டு முத்தமிட்ட பின் கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சற்று தூரத்தில் சோளங்களைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தார் வியாபாரி ஒருவர். தீச்சுவாலைகளில் சுடுபடும் பரவுகிற தீப்பொறிகள், ஆயிரம் மின்மினிகள் கூட்டமாகப் பறப்பது போன்று காட்சியளித்தன. தமிழ்ச்செல்வன் இருவருக்கும் இரண்டு சோளங்கள் வாங்கி, கடற்கரை மண்ணில், முத்துச்செல்வி அவன் அருகே நெருங்கி இருந்தவாறு, சூடான சோளத்தைக் கையில் பிடித்து ஊதி ஊதிக்கொண்டு சாப்பிடும் அழகை, கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன். "ஹாய் சாப்பிடாம இங்க என்னடா, என்னையே பார்த்துட்டு இருக்க?'' - தன் அகன்ற கண்களை விரித்து அவள் கேட்டாள். " ம்ம் முத்துசெல்வியின் முத்தில் அப்படி ஒரு ஆசையடா." அவன் அவளை இழுத்து அணைத்தபடி கூறினான். அப்பொழுது நாலு கண்களும் ஒருகணம் இமைக்காமல் நின்றன. "கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள் என்ன பயனும் இல" ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன. ஆமாம் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். என்றாலும் காலில் ஒரு பெரும் அலை மோதி, அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது. இருப்பினும், முத்துச்செல்வியின் குடும்பம் அவர்களின் பிணைப்பு வளர்ந்து வருவதை அறிந்ததும், அவர்கள் கோபமடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்ச்செல்வனின் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்க்கை நிலையற்றதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருந்தது. தங்களுடைய மகளுக்கு நிலையான வருமானம் உள்ள ஒருவரை, பொருளாதார பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒருவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவளது தந்தை, தமிழ்செல்வனுடனான வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்து விடாப்பிடியாக இருந்தார். எதிர்ப்பால் மனம் தளராத தமிழ்செல்வன், முத்துச்செல்வியின் குடும்பத்தினரை அணுகி தனது அன்பையும் விருப்பத்தையும் தெரிவித்தான். நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், அவளை கவனித்துக் கொள்வதாகவும், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகவும் அவன் உறுதியளித்தான். அவனது இதயப்பூர்வமான வார்த்தைகளும் நேர்மையும் இறுதியில் அவளது தாயின் நிலைப்பாட்டை மென்மையாக்கியது, ஆனால் அவளது தந்தை நம்பவில்லை. பல மாத விடாமுயற்சி மற்றும் கிராமத்தில் மரியாதைக்குரிய பெரியவரின் தலையீட்டிற்குப் பிறகுதான் அவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர். என்றாலும் அவர்களது திருமண வாழ்க்கை, ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், குடும்பம் பெரிதாக, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. தமிழ்செல்வன் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிப்பது சொற்பமாக மாறியது. அவர்கள் சாப்பிடுவதற்கு ஓரளவு சமாளித்தாலும் குழந்தைகளின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. முத்துச்செல்வி அவர்களின் வருமானத்தைப் பூர்த்தி செய்வதற்காக சிலவேளை கூலிவேலைகளைச் செய்தாள். ஆனால் அவர்களின் குழந்தைகளை வறுமையில் வளர்க்கும் சுமை அவளைப் பெரிதும் பாரப்படுத்தியது. விவசாயத் தொழிலாளியாகவோ அல்லது மீனவனாகவோ ஒரு நிலையான வேலையைத் தேடுமாறு தமிழ்செல்வனை அவள் அடிக்கடி வற்புறுத்தினாள், ஆனால் அவனுடைய இதயம் அவனது கலையில் நிலைத்திருந்தது. "நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கூத்தடி, பாடகர்" என்று அவன் கூறுவான். “யுத்தத்தின் போது கூட, நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோதும், எனது பாடல்கள் எங்கள் மனதை வாழவைத்தன. இது எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை; அது என் அடையாளம், என் ஆன்மா. எங்கள் நல்வாழ்வு இன்றைய நவீன உலகில் புறக்கணிக்கப்படுகிறது, அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த பாரம்பரியத்தை என்னால் கைவிட முடியாது. சிவனை தில்லைக்கூத்தன் என்று கொண்டாடும் இந்த தமிழர் இன்று, எம் பாரம்பரிய கூத்தை எனோ கைவிடுகிறார்கள். அது தான் எனக்கு புரியவில்லை" என்றான். என்றாலும், "ஒரு வாய் பிட்டுக்கு, கூத்தாடி சிவன் மண் சுமக்கவில்லையா?" என்ற முத்துச்செல்வியின் கண்ணீருடன் இணைந்த கேள்வியால், இறுதியில், வாழ்க்கையின் அழுத்தங்களை உணர்ந்த தமிழ்செல்வனை, ஒரு விவசாயக் கூலியாக ஒரு நிரந்தர வேலையைச் செய்யத் தள்ளியது. அவன் வயல்களில் நீண்ட நேரம் வேலை செய்தான், அவன் தனது குடும்பத்திற்கு போதுமான அளவு சம்பாதித்தான். ஆனால் அவன் தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை. மாலை வேளைகளில் தனது குழந்தைகளுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் நாட்டுப்புற நடனம் மற்றும் இசைக் கலைகளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். முத்துசெல்வியும் அவனுக்குத் துணையாக ஒத்தாசை செய்வாள். அவன் தன் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் தவறாமல் கூத்து நாடகத்தை அரங்கேற்றுவான், ஆனால் இப்ப பணத்திற்காக அல்ல, ஆனால் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் மட்டுமே. முத்துச்செல்வி, ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கலை, தமது வாழ்வுக்கு போதிய வருமானத்தை தரவில்லை என்று தற்காலிகமாக வெறுப்படைந்தாலும், இன்று அதன் மதிப்பைக் காணத் தொடங்கினாள். இது சமூகத்தை எவ்வாறு ஒன்றிணைத்தது, அவர்களின் குழந்தைகளுக்கு, பெருமை மற்றும் அடையாள உணர்வை எவ்வாறு விதைத்தது, என்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக, அவள் அவனது மிகப்பெரிய ஆதரவாளராக, முன்போல மீண்டும் ஆனார், அவள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க உதவியதுடன் அவர்களின் குழந்தைகளையும் கிராமியக் கலை கற்க ஊக்குவித்தாள். ஆண்டுகள் கடந்தன, தமிழ்செல்வனின் விடாமுயற்சி பலனளிக்கத் தொடங்கியது. இளைய தலைமுறையினருக்கு கற்பிப்பதற்கான அவனது முயற்சிகள், முன்னோர்களின் நாட்டுப்புற மரபுகள் மறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்தது. கலையின் மதிப்பை வலியுறுத்தும் பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து அவன் அடிக்கடி மேற்கோள் எடுத்து, சமூகத்திற்கு காட்டினான். நாளடைவில் தமிழ்செல்வனின் கதை அச்சுவேலியில் மட்டும் அல்ல, தமிழர் வாழும் எல்லா பகுதிகளிலும் ஒரு உத்வேகமாக மாறியது. அவ்வேளையில் தான், 2025 தைப்பொங்கல் தினத்தை ஒட்டி, யாழ் நகரில், முற்றவெளியில் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் [கூத்து] நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முதன்மை கலைஞராக தமிழ்ச்செல்வன் தலைமைவகுத்தான். அவன் தனது தலைமை உரையில்: "இன்று மக்கள் நாட்டுப்புற இசை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்காததால் நாட்டுப்புறக் கலையை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இளைய தலைமுறையினர் விரும்புவதும் இல்லை. பாடசாலைகளிலும் அதைப்பற்றி எந்த அறிவும் போதிப்பதும் இல்லை". என்று கூறிவிட்டு கொஞ்சம் அமைதியாக பெருமூச்சு விட்டான். பின், பார்வையாளர்களைப் பார்த்து, "யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக, பல தலைமுறைகளுக்கு முன்னர் எமது நாட்டுப்புறக் கலைஞர்கள் அணிந்திருந்த பாரம்பரிய உடைகள், நகைகள் மற்றும் கிரீடங்கள் போன்ற பல சாதாரண அலங்கார பொருட்களையும் மற்றும் திறமைகளையும் நாம் இன்று இழந்துள்ளோம். உதாரணமாக, வன்னியில் எமது பாரம்பரிய கலை வடிவங்கள் “கிட்டத்தட்ட அழிந்துவிட்டன” என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. "கோவலன் கூத்து" மற்றும் "மகுடி ஆட்டம்" ஆகியவை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வன்னியில் மிகவும் பிரபலமானவை, மேலும் கோவில் திருவிழாக்களின் போது இரவு முழுவதும் 15 மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டன." என்று கூறியவன், மேடையில் அமர்ந்திருந்த ஏற்பாட்டாளர்களை நோக்கி, "இந்த யாழ்ப்பாண பொங்கல் இசை விழா 2025, கடந்த காலங்களின் தனித்துவ கலை வடிவத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர் பெறவும், உயிர்த்தெழுப்பவும் மற்றும் பாதுகாக்கவும் கட்டாயம் உதவும்" என்று பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் தன் ஆரம்ப பேச்சை முடித்தான். அந்த நேரம் அங்கு ஒலிபெருக்கியில்: "காவடி கரகங்களோடு காத்தான் கூத்தும் மாவிலை தோரணங்களோடு நாட்டுக் கூத்தும் பாவெடுத்துப் பாடியாடி பூவெடுத்துத் தூவிக்கூடி நாவெடுத்துப் பேருஞ்சூடி மாவெடுத்துக் கோலங்காட்டி சீனடி சிலப்படியொடு சிறந்த நல்ல சித்திர சிற்பக்கலைகளும் விளங்கும் தேசமே! சுந்தர தமிழில் வரலாறு செப்பி ஆடும் கிராமிய கலைஞனே வாழ்கவாழ்கவே!!" என்று ஒலித்தது!! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]2 points
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சிறிலங்கா இஸ்லாமிய சமுகம் சர்வதேச இஸ்லாமிய சமுகத்துடன் நேரடியாக தொடர்புடையது.அவர்கள் மன்னிப்பு கேட்டால் அது உலகலாவிய இஸ்லாமியர்களை பாதிக்கும் என்ற நிலைப்பாட்டை உடையவர்கள்.. இஸ்லாமியனாக பிறக்காவிட்டால் அவன் "கறாமி"பாவி "யகுதி" என்ற கொள்கையை உடையவ்ர்கள் ..அவர்களிடமிருந்து மன்னிப்பை எதிர் பார்க்க முடியாது முக்கியமாக வேற்று மதத்தினர்... பலஸ்தீன விடுதலைக்கு சிறிலங்காவிலிருந்து குரல் கொடுப்பார்கள்2 points
-
ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! - நிலாந்தன்
ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன் adminMarch 16, 2025 சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது. ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும். இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது. ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று. ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா? அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார். அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான். 2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன? பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது. ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும். ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார். இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது. எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா? மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார். இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது. ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை. https://globaltamilnews.net/2025/213515/2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
அப்பாடா செம்பாட்டானும் வந்திட்டாக ...........! 😂 தெய்வமே . ....... நானும் பையனின் பதிவைப் பார்த்து அதற்கு எதிரானதையே பதிந்திருக்கிறேன் ......... இம்முறை மட்டும் லக்னோ கப் அடிச்சால் பையன் பழனிக்கு பாத யாத்திரை செல்வார் . .........! 😂2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உண்மை தான் பெரியப்பர் செலவிடும் நேரம் அதிகம் தான்.................அதை புரிந்து கொண்டு சம்பியன்ஸ் கிண்ண தொடரில் கலந்து கொண்ட உறவுகள் ஜபிஎல் போட்டியிலும் கலந்து கொண்டால் சிறப்பாய் இருக்கும்.................10க்கு மேல் பட்ட உறவுகள் போட்டியில் கலந்து விட்டினம்.................இன்னும் 14 , 16 பேர் கூட கலந்து கொண்டால் நல்லா இருக்கும்...................... நாளைக்கு இரண்டு பேரை லாறியில் ஏற்றி தன்னும் இந்த திரிக்குள் கொண்டு வந்து இறக்குவேன் லொள்😁👍..............................2 points
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
நிச்சயமாக... தேர்தலின் முன்னர் அவரின் நடவடிக்கைகளை கவனித்து வைத்தியர் அர்ச்சுனாவை.... அவர் இப்படித்தான்.... என்ற பார்வையில் தான் எனது ஆதரவை அவருக்கு வழங்கியிருந்தேன். தேர்தலில் வென்ற பின்னரும்.... சரி.... வெற்றிக் களிப்பில் சில வார்த்தைப் பிரயோகங்கள் வரும் என்று நினைத்தேன் . ஆனாலும் அவர் தொடர்ந்தும் பாராளு மன்றத்தில் செய்த காரியங்கள் (முதல் நாள் அல்ல சஜித்துடனான முரண்பாடும் அல்ல) எனக்குச் சரியாகப் படவில்லை. சக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களை நையாண்டி செய்வது ஒரு உதாரணம். பின்னர் அதன் உச்ச கட்டமாக தன்னைவிடப் பெரியவர்கள் இந்த மன்றத்தில் இல்லை என்ற தொனியில் கேம் கேட்டார் அத்துடன் இஸ்லாமியர்கள் இழிவானவர்கள் என்ற அவரின் கருத்து இன்னும் காட்டமானது அவர் தனது பிழைகளை திருத்தி தமிழ் பேசும் மக்களுக்கான அரசியலைச் செய்வார் என்ற நம்பிக்கை மனதில் ஒரு மூலையில் இருந்தாலும்..... இப்படியான பிழைகளை சுட்டிக் காட்டாமல் இருக்க முடியாது அவர் தனது குறைகளை சரி செய்து மீண்டு வரும் போது எனது ஆதரவு எப்போதும் அவருக்கு கிடைக்கும்.2 points
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
சும்மா ஏதாவதை தெரிவு செய்யுங்கள், அது அவ்வளவு கடினம் இல்லை 15 - 30 நிமிடத்தில் முடிக்கலாம், ஆனால் இந்த கேள்விகளை தயாரிக்க குறைந்த படசம் 5 - 8 மணித்தியாலங்கள் கிருபன் செலவழித்திருப்பார் (குறைந்த பட்சம்) என கருதுகிறேன். இலகுவான ஒரு ஆலோசனை எனது பதில்களுக்கு எதிரானதை தெரிவு செய்யுங்கள் உங்களுக்கு அதிக மதிப்பெண் கிடைக்கும்.2 points
-
முழிக்கும் மொழி
2 pointsஒரு மொழியை பரிட்சயமாக்கிக் கொள்ள சில காரணிகள் உள .......... அவையாவன ........! 1) நீங்கள் அரச உத்தியோகத்தர் எனில் இன்ன மொழி எழுத வாசிக்கத் தெரிந்தால் உங்களுக்கு மேலதிக கொடுப்பனவும் பதவி உயர்வும் உண்டு என அறிவிக்க வேண்டும் . ........... ( யாவரும் விழுந்தடித்துப் படிப்பார்கள் ) . 2) கடன் பட்டு வெளிநாட்டுக்கு வரவேண்டும் . .......... (கடனைக் கட்ட தினத்துக்கு 3 / 4 வேலை செய்தலும் அதற்காக அந்தந்த நாட்டு மொழிகளில் பேசுவதற்கு (எழுத வாசிக்க அல்ல ) தேர்ச்சி தானாக வந்துவிடும் ). ........ வேற வழி .........! 3) நீங்கள் எந்த நாட்டில் இருக்கிறீர்களோ அந்நாட்டு பெண்ணை சிநேகிதியாக்கிக் கொள்ள வேண்டும் (வயது வித்தியாசத்தை கணக்கில் எடுக்கக் கூடாது .........நீங்கள் என்ன கலியாணமா செய்யப் போறீங்கள் ......இல்லைதானே ) அவளுடன் உணவகங்கள் , சினிமாக்கள், பூங்காக்கள் என்று ஊர் சுற்ற வேண்டும் . ........ இது கொஞ்சம் செலவு கூடியதுதான் ......... ஆயினும் சில நாட்களில் அந்தந்த நாட்டு ஸ்டைலில் அந்த ஊரவனே மெச்சும் அளவு உங்களுக்கு அந்த மொழி கைவசமாகி விடும் . .........! எச்சரிக்கை : பெட்டையோடு சுத்துற ஜோர்ல ஊர் கடனை மறந்திடக் கூடாது . ......... அது வட்டி குட்டி என்று போட்டுக்கொண்டிருக்கும் . ........! 😂2 points
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது... மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்… பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை… அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது… சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்… இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்… இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்... இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது... இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்.. இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்.. —-—1 point
-
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்
இப்போது நாட்டில் பெரும் குற்றவாளிகளாக இருப்பது பாதுகாப்பு படையினரே.1 point
-
Apple லில் சாதிக்கும் ஈழத்தமிழர்.
நன்றிகளும் வாழ்த்துக்களும் ரமோஷன் இன்னும் பல திட்டங்கள் உங்களால் எங்கள் மண்ணிற்காக மெருகூட்டப்படலாம். செயற்திறன் கொண்ட ஒரு மிகப்பெரிய அமைப்பு ஒன்றை உருவாக்கி இன்னும் பல திட்டங்களை முன்னெடுக்க வேண்டும். வாழ்க வளமுடன்1 point
-
ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இதற்கான ஆதாரம் உங்களிடம் உள்ளதா உங்களின் கற்பனையான சில கருத்துக்களுடன் எனக்கு உடன்பாடில்லை நன்றி வணக்கம்1 point
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
சீமான் தன்னை திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றிட்டார் என்று அண்ணி விஜயலட்சுமி பல வருடங்களாக போரடி வருவது யாவரும் அறிந்ததே இப்போது கூட சீமான் மீது விஜயலட்சுமி குற்றசாட்டு நீதிமன்றம் நடவடிக்கை பொலிஸ் விசாரணை என்று செய்திகள் வந்தன.சீமானுக்காக ஸ்ராலினை அவமானபடுத்த வேண்டும் என்று வீட்டில் இருக்கின்ற பெண்களையும் இழுத்து கொண்டு வருவது மோசமான செயல். தமிழ் யுரியுப்பர் கிருஸ்ணா ஒரு பெண்ணை அவமதிப்பார் இவா ஐஸ்வர்யாவோ என்று சீமானுக்காக ஸ்ராலினுக்கும் ஐஸ்வர்யாவாவக்கும் தொடர்பு ஸ்ராலினுக்கும் திரிஷா கிருஷ்ணனுக்கும் தொடர்பு என்று அடித்துவிட்டு கொண்டே போகலாம்1 point
-
குற்றவாளிகளுடன் காவல்துறை நட்பு: சுட்டிக்காட்டிய வடக்கு ஆளுநர்
அவரும் பாவம் தான் ...ஆளுனர் தமிழர் ...பிராந்திய காவல் துறை அதிகாரிகள் சிங்களவர்கள் ...நாட்டின் ஜனாதிபதியே பொலிஸ்படை,பாதுகாப்பு படையை சுத்தம் செய்ய இன்னும் ஐந்து வருடங்கள் செல்லும்... மேலும் பொலிஸ்மா அதிபர் (.ஐ.ஜி.பி)யையே வலை போட்டு தேடுகின்றது அனுரா அரசு பிறகு எப்படி மக்கள் பொலிஸ்படையை எதிர் பார்க்க முடியும்... தேடப்படும் பொலிஸ்மாதிபரின் சிபார்சில் பொலிஸ் படையில் இணந்த பொலிசார் கணிசமானவர்கள் இருப்பார்கள்..1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
@வீரப் பையன்26 , மேலேயுள்ள நான்கு கேள்விகளுக்கான பதில்களைத் தாருங்கள்.. இல்லாவிடில் புள்ளிகள் போய்விடும்!1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
உங்கள் வீட்டு வாசலில் நடக்க இருந்த உண்ணாவிர போராட்டத்தை தவிர்த்து தப்பிக் கொண்டீர்கள்.1 point
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
மீண்டும் விளக்கம்👇. விஜி அண்ணி பாதிக்க பட்ட தரப்பு. அவர் தனக்கு அநியாயம் நடந்தது என்கிறார் - அதை விசாரிக்க கோராமல் கடந்து போக முடியாது. பாத்திமா தான் பாதிக்கபடவே இல்லை, உங்கள் அரசியலுக்கு என் பெயரை நாசமாக்காதீர்கள் என கேட்கிறார். அவரை இழுத்து கதைக்க கூடாது. இது மேலே கருத்தாடிய பலருக்கு விளங்கி உள்ளது அவர்களின் கருத்திலும், லைக்கிலும் தெரிகிறது.1 point
-
‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
இதை விட கீழ்தரமாக யுத்தகுற்றத்தில் பாதிக்கபட்ட உறவுகளை கேவலப்படுத்த முடியாது. சில்லறை விவாதங்களுக்கு எல்லாம் யுத்தகுற்றத்தை இழுப்பது கருதாளரின் தார்மீக வங்குரோத்து moral bankruptcy யையே காட்டி நிற்பது. யுத்த குற்றம் பூட்டிய அறைக்குள் நிகழ்ந்த இரு தனி மனிதர்கள் சம்பந்தபட்ட விடயம் அல்ல. சம்பந்தபட்டவர்கள் சொல்வதற்கும் அப்பால் அது நடந்தமைக்கு பொதுவான சாட்சிகள் உண்டு. நாமல் ராஜபக்ச = குற்றம் சுமத்தபட்டவர் தரப்பு. அதே போல் ஸ்டாலின் = குற்றம் சுமத்தபட்டவர் தரப்பு. பாத்திமாபாபு குற்றம்சுமத்த பட்டவர் அல்ல. மாறாக அவர் குற்றத்துக்கு ஆழானதாக சொல்லபடுபவர். இரெண்டுக்கும் பாரிய வித்தியாசம் உண்டு. ஸ்டாலின் மறுப்பதற்கும், பாத்திமா பாபு மறுப்பதற்கும் உள்ள வேறுபாடு கூட தெரியாமல் …🤦♂️ அடிப்படை நாகரிகத்கை யாழின் ஏனைய உறுப்பினர்களிடம்தான் எதிர்பார்த்தேன். சிறுவர் துஸ்பிரயோகிகளுக்கு இரு வேறுபட்ட இடங்களில் வக்காலத்து வாங்கிய pedo-sympathizer இடம் இப்படியான கொச்சையைத்தான் எதிர்பார்க்க முடியும்.1 point
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
வழமையாக போட்டி முடிவு தினத்துக்கு கிட்டவாக நான் போட்டியில் கலந்து கொள்வது வழக்கம். இம்முறை கிருபன் சுற்றுலா போவதினால் மிகவிரைவில் கலந்து கொள்வேன்.1 point
-
இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point
- ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
ஏ.ஆர்.ரகுமான் ஹெல்த் ரிப்போர்ட்… அப்பல்லோ அப்டேட்! 16 Mar 2025, 12:22 PM லண்டனில் இருந்து நேற்று (மார்ச் 15) சென்னை திரும்பிய ஏ.ஆர்.ரகுமான், இன்று (மார்ச் 16) காலை நீர்ச்சத்து குறைபாட்டால் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில், சிகிச்சைகள் முடிந்து ஏ.ஆர்.ரகுமான் வீடு திரும்பினார். இதுதொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், “நீர்ச்சத்து குறைபாடு அறிகுறிகளுடன் இன்று காலை சென்னை கிரீம்ஸ் மருத்துவமனையில் ஏ.ஆர்.ரகுமான் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைகளுக்கு பிறகு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலறிந்து அவரது உடல்நலன் குறித்து மருத்துவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கேட்டறிந்தார். மேலும், ஏ.ஆர்.ரகுமான் விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி, சினிமா பிரபலங்கள் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர் https://minnambalam.com/cinema/ar-rahman-discharged-from-apollo-hospital/1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
எமது தமிழ் சமூகத்தில் பண்பாடற்ற கீழ்தரமான அரசியல், சமூகவியல் கலாச்சாரத்தை உருவாக்கவும் அதற்காக ஆதரவாளர் அமைப்புகள் என்ற போலி முகபுத்தக அணிகளை கொண்டு தனக்கு பிடிக்காதவர்கள் மீது தன்னுடன் கருத்தியல் ரீதியாக முரண்பாடு கொண்டவர்கள் மீதும் அவதூறுகளை புரிவதும், அதிலும் பெண்கள் என்றால் அவர்கள் மீது பாலியல் அவதூறுகளை பொழிவது போன்ற செயல்களை செய்யும் அர்சசுனா ஒரு விஷசெடி தான் என்பதை உறுதிப்படுத்துகிறது. இவரோடு முரண்படுபவர்கள் வாய் திறந்தாலே அவர்கள் மீது அவதூறுகளை அள்ளி வீச ஒரு காவாலி அணிகளை கட்டமைத்துள்ளார். முளையிலேயே கிள்ளி தூர எறியவேண்டிய விஷசெடியே அர்சசனா.1 point- ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
இஸ்லாமியர்களும், தமிழர்களும் கடந்த காலத்தில் தவறு செய்துள்ளார்கள், ஆனால் அதனை உணர்ந்து தவறுகளை திருத்தி முன்செல்லாமல் இரண்டு தரப்பு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவது தொடர்கினர், அதற்கு காரணம், தமிழர் தரப்பு மட்டும் தனது தவறினை உணர்ந்து அந்த தவறீற்காக மன்னிப்பு கேட்டுள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தொடர்ந்தும் தமிழர் தரப்பில் குற்றம் சாட்டுவதுடன் இதுவரை தமது தரப்பின் தவறுகளை மூடி மறைத்து மன்னிப்பு கோரவில்லை, அதனாலேயே அர்சுனா போன்றவர்கள் இவ்வாறு இனவாதம் பேசுகிறார்கள். என்னை பொறுத்தவரை தமது வறுகளுக்காக மன்னிப்பு கேளாமல் அவர்களால் முன்னோக்கி செல்ல முடியாது, திறந்த மனதுடன் உண்மைகளை எதிர்கொள்ளும் பக்குவம் அற்றவர்களாக இஸ்லாமியர்கள்தொடர்ந்தும் இருக்கிறார்கள். பார்ப்போம் இந்த நாரதர் (அர்சுனா) கலகத்தால் ஏதாவது நல்ல மாற்றம் நிகழுகிறாதா என.1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
# Question Team1 Team 2 Prediction 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR RCB RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH RR SRH 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK MI CSK 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் DC LSG DC 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT PBKS PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR KKR RR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் SRH LSG SRH 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK RCB RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT MI MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC SRH DC 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR CSK RR 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI KKR MI 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG PBKS LSG 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB GT RCB 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR SRH KKR 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG MI MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK DC DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS RR PBKS 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR LSG LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH GT SRH 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI RCB MI 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS CSK CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT RR GT 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB DC RCB 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK KKR CSK 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG GT GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH PBKS SRH 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR RCB RR 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC MI DC 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG CSK LSG 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS KKR PBKS 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC RR DC 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI SRH MI 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB PBKS RCB 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT DC GT 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் RR LSG RR 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS RCB PBKS 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI CSK MI 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR GT GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG DC LSG 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH MI SRH 42) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB RR RCB 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK SRH SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR PBKS PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் MI LSG LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC RCB DC 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR GT RR 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC KKR DC 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK PBKS CSK 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR MI MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT SRH GT 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB CSK RCB 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR RR RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் PBKS LSG PBKS 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH DC DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI GT MI 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKR CSK CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS DC DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG RCB RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH KKR SRH 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS MI MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC GT GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK RR CSK 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB SRH RCB 65) புதன் 14 மே 2:00 pm GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் GT LSG GT 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI DC MI 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR PBKS RR 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB KKR RCB 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அஹமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT CSK GT 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG SRH LSG 71) குழுநிலைப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கலாம்) CSK Select DC DC GT GT KKR Select LSG Select MI MI PBKS Select RR Select RCB RCB SRH Select 72) குழுநிலைப் போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. (அதிக பட்சம் 10 புள்ளிகள் கிடைக்கலாம்) #1 - ? (4 புள்ளிகள்) RCB #2 - ? (3 புள்ளிகள்) MI #3 - ? (2 புள்ளிகள்) DC #4 - ? (1 புள்ளி) GT 73) குழுநிலைப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! KKR 74) "செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team" RCB 75) "புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team" DC 76) "வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator" MI 77) "ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2" RCB 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CSK 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) KKR 80) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Suriyakumar Yadav 81) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 80 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Ashwin 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 82 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) RACHIN RAVINDRA 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 84 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) DC 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohamad Sami 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) PBKS 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Kohli 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 88 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) RR1 point- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
எனது புகை ஆரம்பம் 13,14 வயதுகளில் என நினைக்கின்றேன். ஆரம்பம் பேப்பர், பீடி,சுருட்டு என தொடங்கி வெள்ளை சுருட்டில் என் வாழ்க்கை பிரகாசமாகியது. புத்திமதிகளும் பெரிதாக இல்லாத காலம். இழுக்க....இழுக்க இன்பமயமான காலம்.எனினும் ஊரில் பெரியவர் மரியாதை,பய நிமித்தம் சற்று குறைவாகவே இழுவை அடக்கி வாசிக்கப்பட்டது. வெளிநாடு வந்தபின் கட்டாக்காலியாக திரிந்த எனக்கு எல்லாமே சுதந்திரமாக தெரிந்தது.கட்டுபடுத்த யாருமேயில்லை. ஆரம்ப காலத்தில் புகைத்தல் நாகரீகமாக தெரிந்த எனக்கு ....போகப்போக அத்தியவசியமாகி விட்டது.தினசரி 40 வெள்ளை சுருட்டுக்களை உள்ளே இழுத்தேன். இன்னும் இழுக்க வேண்டும் போலிருந்தது. படுக்கையிலும் புகைத்தேன். இள வயதில் எந்த விக்கனமும் தெரியவில்லை. எல்லாம் நலமாக சுகமாகவே இதமாகவே தெரிந்தது. 36 வயதில் மனதுக்குள் ஏதோ ஒரு அலுப்பு தட்டியது. புகைத்தலை நிறுத்தி...இனி புகைத்தலே வேண்டாம் என முடிவெடுக்க இருதய பிரச்சனை ஆரம்பமாகியது. அன்றிலிருந்து இன்று வரை புகைத்தலை நான் தேடவில்லை.என் மனமும் தேடவில்லை. இருந்தாலும் வைத்தியர்கள் எனக்கு தேதி குறிக்கும் போது எட்டு செலவில்லாமல் ஆற அமர இருந்து ஊதி தள்ள வேண்டும் என்ற திட்டம் அடிமனதில் இருக்கத்தான் செய்கின்றது.😂 அவரவர் உடம்பு வாசி.யாரும் எதுவும் எப்போதும் வீரம் பேச முடியாது.😌1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்... அர்சுனாவின் இந்த செயல் கண்டிக்கப்படவேண்டியதுதான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை, ஆனால் இந்த பக்கம் ஒரு அர்சுனா என்றால் இஸ்லாமியர்களில் பெரும்பாலானோர் அர்ச்சுனாவினை விட மோசமானவர்கள். அதற்காக அவர்கள் அப்படியானவர்கள் என கூறி அர்சுனா செய்யும் அருவருக்கதக்க செயலை நீங்கள் மட்டுமல்ல ஒருவரும் ஆதரிக்க போவதில்லை.1 point- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
பது தவறானது. அ.அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களும் கிராமத்தில் இருந்து வந்தவர்கள் தான். நீங்கள் ஒப்பிட்ட விடயங்கள் வேறு ஒரு category என்பது அரசியல் படுகொலைகள் சார்ந்தது. ராஜபக்சக்களின் இனபடுகொலையோ , ரணிலின் படுகொலைகளோ ஜேவிபின் அல்லது ஆயுதமேந்திய தமிழ் இயக்கங்கள் நடத்திய ஈவிரக்கமற்ற படுகொலைகளோ இந்த திரியின் பேசு பொருள் அல்ல. நான் இங்கு அர்ஜூனாவுக்கு ஆதரவாக பேசவில்லை ..அவரையும் சரி அவரது அடிமை சிங்கள அடியானையும் எங்கும் ஆதரவிக்கவில்லை ஆதரிக்க போவதுமில்லை. அர்ஜூனா சாவகச்சேரி வைத்தியசாலையில் நடை பெற்ற முறைகேடுகளை வெளிகொண்டு வந்த விதமே பிழை ,அப்பொழுதே சில வைத்திய அதிகாரிகள் இது பற்றி சுட்டி காட்டினார்கள் ஆனால் "ஊழல் ஒழிப்பு "என்ற மாயை சுயமாக சிந்தித்து செயல் படும் எங்களுடைய ஆற்றலை மறைத்து விட்டது... அன்று தொடக்கம் இன்று வரை அவர் செய்யும் செயல்கள் யாவும் முட்டாள் தனமாகவும்,விசமதனமாகவும் வக்கிரமாகவும் இருக்கின்றது. மக்களுக்கான பொது சேவையில் ஈடுபடும் ஒருவருக்கு/ஒருத்திக்கு சுய ஒழுக்கம் முக்கியமானது .இதை பற்றி தெரிந்திருந்தாலும் "தனி மனித சுதந்திரம்"என்ற ஒர் அதிபுத்திசாலிதனத்தை சொல்லி மறைத்து விடுகின்றோம். "இலவச மருத்துவம்,இலவச கல்வி" இவை யாவற்றையும் இல்லாமல் பண்ணி தனியார் துறைக்கு மாற்றுவதற்கு முயற்சி எடுப்பதற்கு "ஊழல்"என்ற மாயை பயன்படுத்தி வேறு சக்திகளுடன் செயல் படுகின்றாரோ என சிந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது ...வடமாகாணத்தில் ஊள்ளூராட்சி மன்றங்கள்,வடமாகாணசபை போன்றவற்றை கைப்பற்றி அங்கு தனியார் கல்வி,மருத்துவ துறைபோன்றவற்றை ஊக்கப்படுத்தும் முயற்சியோ தெரியவில்லை. அயல்நாட்டில் கல்வி,மருத்துவம் போன்ற்வை பெரிய மாபியா வியாபாரம் ..அந்த நிலையை இங்கு கொண்டுவர முயற்சிகள் நடை பெகின்றதோ தெரியவில்லை... இவர் பாராளுமன்றம் சென்று இதுவரை செய்த நல்ல காரியம் எது?ஒன்றுமில்லை ஆயிரம் தடவை பிரபாகரனின் பெயரை சொல்லி அவருக்கும் அவர் சார்ந்த அமைப்புக்கும் இனம்,அமைப்புக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய விடயத்தை தவிர.. யூ டியுப்பர்கள்,வாகன விபத்துகள்,விபச்சாரம் போன்றவற்றை பாராளுமன்றம் சென்று பேசும் ஒர் ...தியம் தான் ... அவருக்கு முட்டு கொடுக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை...அவரின் அரசியல் பிரவேசத்தை ஆதரித்தவர்கள்,அவரின் "ஊழல் ஒழிப்பு"நாடகத்தை உண்மை என நம்பியவர்கள் முட்டு கொடுக்கலாம் ...இவனுக்கு முட்டு கொடுத்து எனக்கு ஒர் லாபமும் கிடைக்க போவதில்லை .. அமிர்தலிங்கத்துடன் இவரை ஒப்பிடவே முடியாது .அவருடைய கால் தூசிக்கு கூட ஏன் அவரின் செருப்பு தூசுக்கு கிட்ட வரமுடியாது ..அந்த விளக்கம் எனக்கு இருக்கு ... இவர் பேசுவதும் அரசியல் ,நான் கூறியதும் அரசியல் வ்...விவாதம் என்ற பெயரில் சில கருத்துக்களை மட்டும் மெய் என நிருபிக்க முயல்வதும் அரசியல்...சில இனங்களுக்கு முட்டு கொடுப்பதற்கு சில இனக்களின் அழிவுகளை மறைத்து ,விவாதம் திசை திரும்புகின்றது என்பதும் அரசியல் ...1 point- ரணில் தம்பதியினரின் லண்டன் விஜயத்துக்கு 160 இலட்சம் ரூபா செலவு; வெளிவிவகாரத்துறை அமைச்சிடம் விசாரணை அவசியமென்கிறார் அமைச்சர் பிமல்
அவரிட நடையிலை தெரியவில்லையே ஆள் எப்படியான அமசடக்கி என்று1 point- சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது
சிறி நான் 14 வயதில் புகைக்க பழகி அதற்கு அடிமையாகி 97ம் ஆண்டு இருதயநோய் வரும்வரை புகைத்துக் கொண்டே இருந்தேன். எனக்கு புகையால்த் தான் நெஞ்சுவலியே வந்திருக்கிறது. இதை ஒரு சவாலாக எடுத்து புகைக்கவே மாட்டேன் என்று எண்ணி இன்றுவரை புகைப்பதில்லை. அதேபோல அந்த வயதிலேயே ஆனைக்கோட்டை பனம் கள்ளு என்று தொடங்கி காலப்போக்கில் ஒரு குடிகாரனாகவே மாறிவிட்டேன்.குடிக்காக நாளே இல்லை என்றே சொல்லலாம். 1987இல் காய்ச்சல் வந்து மாறவே மாட்டேன் என்றது.ஆனைப்பந்தியில் இருந்த தனியார் வைத்தியசாலையில் பலநாட்கள் இருந்தேன். இரத்த சோதனையில் குடியினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விட்டதாக சொன்னார்கள். அதோடு விட்ட குடி இப்போதும் தொடுவதில்லை. இத்தனைக்கும் எனது நண்பர்கள் அங்கும் சரி இங்கும் சரி எல்லோருமே குடிப்பார்கள்.அவர்களுக்கு மத்தியில் இருப்பேன். இதை மிகவும் வேதனையுடனே எழுதுகிறேன்.1 point- ‘பரமசிவன் பாத்திமா’: டிரைலரை வெளியிட்ட சீமான், அண்ணாமலை
ஸ்டாலினை அடிக்க வேண்டும் என்பதற்காக அநாவசியமாக பாத்திமா பாவுவை அவதூறு செய்வது ஏற்புடையதல்ல. பாத்திமா பாபு பொது வெளியில் இதை மூன்று தரம் மறுத்துள்ளார். அதன் பின் ஜெ ஆட்சியில் ஜெ க்கு நெருக்கமாக இருந்த போதும் கூட பாத்திமா இதை உண்மை என சொன்னதே இல்லை. அவரே இல்லை எனும் போது இதை நாம் காவி திரிவது அவர் மீதான அவதூறுதான். அதேபோல், தமிழின் முன்னணி வார இதழான குமுதம், 1989ம் ஆண்டு பாத்திமா பாபுவிடம் ஒரு பேட்டியை எடுத்து வெளியிட்டுள்ளது. அதில், மு.க.ஸ்டாலின் தொடர்பாக பரவும் செய்தி குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அவர், “நான் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்ததே கிடையாது. அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை. இந்த வதந்தி சமாசாரம் முழுவதும் யாரோ ஒருவரின் கற்பனையில் பிறந்துள்ளது. என்னென்னமோ நடந்ததாக எழுதி, மேலும் மேலும் மற்றப் பத்திரிகைகளில் அதை விரிவுபடுத்தி, அரசியல்வாதிகள் அதை மேடையில் பேசி, மேடையில் பேசியதை திரும்பப் பத்திரிகையில் போட்டு… இப்படியே வளர்த்துக்கொண்டே போய்விட்டார்கள். மக்கள் மத்தியில் டி.வி மூலம் நன்கு அறிமுகமாகி, மகிழ்ச்சியுடன் இல்லறம் நடத்தி வரும் என்னைப் போல ஒரு பெண்ணையா அனாவசியமாகச் செய்திகளில் பெயர் அடிபடும்படி செய்திருக்க வேண்டும் என்று நினைக்கும்போது ரொம்பவும் வேதனையாக இருக்கிறது” என்று கூறியுள்ளார். குமுதம் இதழில் வெளியான கட்டுரையின் படங்கள் கீழே தரப்பட்டுள்ளன. இதன்படி, மேற்கண்ட வதந்திக்கு, 1989ம் ஆண்டிலேயே இருவர் தரப்பிலும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. எனினும், சோஷியல் மீடியா வருகைக்குப் பிறகு இந்த வதந்தி புதுப் புது அவதாரம் எடுத்துக்கொண்டே இருக்கிறது. இது குறித்து கடந்த 2018ம் ஆண்டு கூட பாத்திமா பாபுவிடம் விளக்கம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் , “எத்தனை ஆண்டுகள்தான் விளக்கம் அளிப்பது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறிவிட்டேன். என்னைப் பற்றி நான் சொல்வதுதான் உண்மை. அதைத்தான் நீங்கள் நம்ப வேண்டும். அதை விட்டுவிட்டு வெளியில் பலரும் கதைகட்டுவதைப் போல, மசாலா தடவிய கற்பனைப் பொய்யைத்தான் நம்புவீர்கள் என்றால், அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. அது உங்கள் இஷ்டம். இதற்கு மேல் இதைப் பற்றி கேள்வி வந்தால் நான் பதில் சொல்வதாக இல்லை” என்று கூறினார். இது தொடர்பாக தினமணி நாளிதழில் வெளியான செய்தியைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள். மேலும், பாத்திமா பாபு தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் நேரலையில் தன்னுடைய ரசிகர்கள், நலம் விரும்பிகள் மத்தியில் பேசியுள்ளார். அதன் ஆடியோ விவரம் கேட்க இங்கே கிளிக் செய்யுங்கள். Archived link தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், பாத்திமா பாபு என இருவர் தரப்பிலும் விளக்கம் அளிக்கப்பட்ட பிறகும் தி.மு.க எதிர்ப்பாளர்கள் ஸ்டாலினை பற்றி தொடர்ந்து வதந்தி பரப்பி வருவது தொடர்ந்து கொண்டே இருப்பதாக, நமது ஆய்வில் தெரியவந்தது. 1) 30 ஆண்டுகளுக்கு முன்பு நக்கீரனில் வெளியான ஸ்டாலின் பேட்டி 2) 30 ஆண்டுகளுக்கு முன்பு குமுதத்தில் வெளியான பாத்திமா பாபுவின் பேட்டி 3) கடந்த ஆண்டு ஃபேஸ்புக்கில், பாத்திமா பாபு அளித்த நேரலை ஒலிபரப்பு மேற்கண்ட ஆதாரங்கள் அடிப்படையில் இந்த தகவல் போலிதான் என்பது தெளிவாகிறது. பாலியல் அத்துமீறல் சம்பவம் நிகழவே இல்லை என்று, பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் பாத்திமா பாபுவே விளக்கம் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் அவரது விளக்கமே இறுதியானது. முழு கட்டுரையின் லிங்க்👇 Fact Crescendo Tamil | The leadi...பாத்திமா பாபுவை கடத்தினாரா ஸ்டாலின்? 30 ஆண்டுகளாகத் துரத்...30 ஆண்டுகளுக்கு முன்பு தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக இருந்த பாத்திமா பாபுவை தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் அதனால், பொள்ளாச்சி பாலியல் விவகாரம் தொடர்பாக பேச ஸ்டாலினுக...தினமணியில் பாத்திமா பாபுவின் விளக்கம்👇. Dinamaniஸ்டாலின், பாத்திமாபாபு தொடர்பாக பல்லாண்டுகளாகப் புகைந்து...திமுக செயல்தலைவர் ஸ்டாலின், இளமையில் அப்போது தூர்தர்ஷனில் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளராக விளங்கிய பாத்திமா பாபுவை கடத்திச் சென்று மிரட்டினார் என்பதாக ஒரு வதந்த1 point- முழிக்கும் மொழி
1 point🤣....................... சுவி ஐயாவிடம் பலப்பல அனுபவங்களும் இருக்கின்றன போல..............🤣. நீங்கள் சொல்லியிருக்கும் மூன்று வழிகளும் சிறப்பானவையே............ டன்னிங் க்ரூகர்.........................! ஐடியில் தேவையில்லாத ஆணிகளை கழட்டியும், அடித்தும் கொண்டும் இருக்கின்ற எங்களைப் போன்ற சிலர் கிடைக்கின்ற எல்லாவற்றையும் வாசித்துக் கொண்டு இருக்கின்றோம் போல.........🤣. நிறையவே வாசித்திருக்கின்றேன், வில்லவன்......... பாதிப்பும் நிறையவே இருக்கின்றது..............😜.1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
சித்திரவதை செய்து படுகொலை செய்ய உதவிய ரணில்,இனப்படுகொலை செய்த ராஜபக்சாக்கள்,தொழிற்சாலைகள் எரித்து இனக்கலவரங்களை தூண்டி சோசலிசம் வளர்த்த கட்சிகளின் தலைவர்கள் ஜனாதிபதியாகவும் பிரதமர்களாகவும் இருக்கும் நாட்டின் ... கிராமத்திலிருந்து போனவான் பாராளுமன்றத்தில் உளறுவதால் படித்த யாழ்ப்பாணத்தானின் மானம் போகுது என் அழுவது கொஞ்சம் ஒவர்.... தலைவரின் பெயரை தன் சுயநல அரசியலுக்கு பயன் படுத்தும் பொழுதே வைத்தியர் பைத்தியம் என புரிந்திருக்க வேணும் ..1 point- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
ImgBBsathu hosted at ImgBBImage sathu hosted in ImgBB1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 pointகட்டாயம் நம்ம ஊரு பயலாத்தான் இருக்கும் ImgBBjjjj hosted at ImgBBImage jjjj hosted in ImgBB1 point- ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..
காற்றில் கலந்து வந்த சேதி ஒன்று ....அர்ஷுனாவின் மீதுள்ள சில வழக்குகளின் , தீர்ப்பால் இவரது பாராளுமன்ற பதவி பறிபோகும் நிலையில் உள்ளதாம் அதனால் தங்கச்சியை / தங்கத்தை அந்த பதவிக்கு அமர்த்திவிட்டு இவர் மாகாண முதல்வர் பத்விக்குப் போட்டியிடப போகிறாராம் கடைசியில் அதுவுமில்லாமல் இதுவும் இல்லாமல்...அம்போ " தவளையும் தன் வாயால் கெடும்".1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
முதல் நான்கு அணிகளில் ஒன்றாகவரும் KKR அணி (கேள்வி 72 ) குழு நிலையில்( 73 ஆவது கேள்வி) கடைசியாக வரும் என்பது ..... உங்கள் விருப்பம் ..... எதற்கும் ஒருமுறை சரி பாருங்கள் மாறி எழுதியிருக்கலாம் சுவைப்பிரியர்🙏1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025 கேள்விக்கொத்து குழுநிலை போட்டிகளுக்கான கேள்விகள் 1) முதல் 70) வரை. 1) சனி 22 மார்ச் 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் KKR எதிர் RCB 2) ஞாயிறு 23 மார்ச் 10:00 am GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் SRH எதிர் RR 3) ஞாயிறு 23 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் CSK எதிர் MI 4) திங்கள் 24 மார்ச் 2:00 pm GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் DC எதிர் LSG 5) செவ்வாய் 25 மார்ச் 2:00 pm GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் GT எதிர் PBKS 6) புதன் 26 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RR எதிர் KKR 7) வியாழன் 27 மார்ச் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் SRH எதிர் LSG 8) வெள்ளி 28 மார்ச் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் CSK எதிர் RCB 9) சனி 29 மார்ச் 2:00 pm GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் GT எதிர் MI 10) ஞாயிறு 30 மார்ச் 10:00 am GMT விசாகபட்னம் - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் DC எதிர் SRH 11) ஞாயிறு 30 மார்ச் 2:00 pm GMT குவஹாத்தி - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RR எதிர் CSK 12) திங்கள் 31 மார்ச் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் MI எதிர் KKR 13) செவ்வாய் 01 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் LSG எதிர் PBKS 14) புதன் 02 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RCB எதிர் GT 15) வியாழன் 03 ஏப்ரல் 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் KKR எதிர் SRH 16) வெள்ளி 04 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் LSG எதிர் MI 17) சனி 05 ஏப்ரல் 10:00 am GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் CSK எதிர் DC 18) சனி 05 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் PBKS எதிர் RR 19) ஞாயிறு 06 ஏப்ரல் 10:00 am GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் KKR எதிர் LSG 20) ஞாயிறு 06 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் குஜராத் டைட்டன்ஸ் SRH எதிர் GT 21) திங்கள் 07 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் MI எதிர் RCB 22) செவ்வாய் 08 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் PBKS எதிர் CSK 23) புதன் 09 ஏப்ரல் 2:00 pm GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் GT எதிர் RR 24) வியாழன் 10 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் RCB எதிர் DC 25) வெள்ளி 11 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் CSK எதிர் KKR 26) சனி 12 ஏப்ரல் 10:00 am GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் LSG எதிர் GT 27) சனி 12 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் பஞ்சாப் கிங்ஸ் SRH எதிர் PBKS 28) ஞாயிறு 13 ஏப்ரல் 10:00 am GMT ஜெய்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் RR எதிர் RCB 29) ஞாயிறு 13 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் மும்பை இந்தியன்ஸ் DC எதிர் MI 30) திங்கள் 14 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் LSG எதிர் CSK 31) செவ்வாய் 15 ஏப்ரல் 2:00 pm GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் PBKS எதிர் KKR 32) புதன் 16 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் DC எதிர் RR 33) வியாழன் 17 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் MI எதிர் SRH 34) வெள்ளி 18 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RCB எதிர் PBKS 35) சனி 19 ஏப்ரல் 10:00 am GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் GT எதிர் DC 36) சனி 19 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் RR எதிர் LSG 37) ஞாயிறு 20 ஏப்ரல் 10:00 am GMT முலான்பூர் - பஞ்சாப் கிங்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் PBKS எதிர் RCB 38) ஞாயிறு 20 ஏப்ரல் 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் MI எதிர் CSK 39) திங்கள் 21 ஏப்ரல் 2:00 pm GMT ஏடென் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் KKR எதிர் GT 40) செவ்வாய் 22 ஏப்ரல் 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் LSG எதிர் DC 41) புதன் 23 ஏப்ரல் 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் மும்பை இந்தியன்ஸ் SRH எதிர் MI 2) வியாழன் 24 ஏப்ரல் 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் RCB எதிர் RR 43) வெள்ளி 25 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் CSK எதிர் SRH 44) சனி 26 ஏப்ரல் 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் KKR எதிர் PBKS 45) ஞாயிறு 27 ஏப்ரல் 10:00 am GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிராக லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் MI எதிர் LSG 46) ஞாயிறு 27 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் DC எதிர் RCB 47) திங்கள் 28 ஏப்ரல் 2:00 pm GMT ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் RR எதிர் GT 48) செவ்வாய் 29 ஏப்ரல் 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் DC எதிர் KKR 49) புதன் 30 ஏப்ரல் 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் CSK எதிர் PBKS 50) வியாழன் 01 மே 2:00 pm GMT ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் RR எதிர் MI 51) வெள்ளி 02 மே 2:00 pm GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் GT எதிர் SRH 52) சனி 03 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் RCB எதிர் CSK 53) ஞாயிறு 04 மே 10:00 am GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் KKR எதிர் RR 54) ஞாயிறு 04 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் PBKS எதிர் LSG 55) திங்கள் 05 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் SRH எதிர் DC 56) செவ்வாய் 06 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் MI எதிர் GT 57) புதன் 07 மே 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் KKRஎதிர் CSK 58) வியாழன் 08 மே 2:00 pm GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் PBKS எதிர் DC 59) வெள்ளி 09 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் LSG எதிர் RCB 60) சனி 10 மே 2:00 pm GMT ஐதராபாத் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் SRH எதிர் KKR 61) ஞாயிறு 11 மே 10:00 am GMT தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI 62) ஞாயிறு 11 மே 2:00 pm GMT டெல்லி - டெல்லி கேப்பிட்டல்ஸ் எதிர் குஜராத் டைட்டன்ஸ் DC எதிர் GT 63) திங்கள் 12 மே 2:00 pm GMT சென்னை - சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர் ராஜஸ்தான் ராயல்ஸ் CSK எதிர் RR 64) செவ்வாய் 13 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் RCB எதிர் SRH 65) புதன் 14 மே 2:00 pm GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் GT எதிர் LSG 66) வியாழன் 15 மே 2:00 pm GMT வேங்கடே - மும்பை இந்தியன்ஸ் எதிர் டெல்லி கேப்பிட்டல்ஸ் MI எதிர் DC 67) வெள்ளி 16 மே 2:00 pm GMT ஜெய்ப்பூர் - ராஜஸ்தான் ராயல்ஸ் எதிர் பஞ்சாப் கிங்ஸ் RR எதிர் PBKS 68) சனி 17 மே 2:00 pm GMT பெங்களூரு - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் எதிர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் RCB எதிர் KKR 69) ஞாயிறு 18 மே 10:00 am GMT அகமதாபாத் - குஜராத் டைட்டன்ஸ் எதிர் சென்னை சூப்பர் கிங்ஸ் GT எதிர் CSK 70) ஞாயிறு 18 மே 2:00 pm GMT லக்னோ - லக்னோ சூப்பர் ஜயன்ட்ஸ் எதிர் சன்ரைசர்ஸ் ஐதராபாத் LSG எதிர் SRH கேள்விகள் 71) முதல் 90) வரை: 71) குழுநிலை போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றிற்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 8 புள்ளிகள் கிடைக்கும்) CSK KKR MI SHR 72) குழுநிலை போட்டிகளில் முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியலிடுக. (அதிகபட்சம் 10 புள்ளிகள் கிடைக்கும்) #1 - ? (4 புள்ளிகள்) CSK #2 - ? (3 புள்ளிகள்) KKR #3 - ? (2 புள்ளிகள்) MI #4 - ? (1 புள்ளி) SRH 73) குழுநிலை போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 2 புள்ளிகள் வழங்கப்படும்! DC 74) செவ்வாய் 20 மே 2:00 pm GMT ஐதராபாத் - Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team CSK 75) புதன் 21 மே 2:00 pm GMT ஐதராபாத் - Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 76) வெள்ளி 23 மே 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator KKR 77) ஞாயிறு 25 மே 2:00 pm GMT ஏடன் கார்டன்ஸ் - இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 CSK 78) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்ற அணி எது? (3 புள்ளிகள்) அணி? SRH 79) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்கள் பெற்ற அணி எது? (3 புள்ளிகள்) அணி? RR 80) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Abhishek Sharma 81) இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கு பதில் கேள்வி 80 க்கு வீரர் அணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 82) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 83) இந்த தொடரில் அதிக விக்கெட்டுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கு பதில் கேள்வி 82 க்கு வீரர் அணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 84) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் 4 புள்ளிகள் ) வீரர்? Abhishek Sharma 85) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கு பதில் கேள்வி 84 க்கு வீரர் அணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! ) அணி? SRH 86) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) வீரர்? Varun Chakravarthy 87) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட்டுகள் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கான பதில் கேள்வி 86 க்கான வீரரின் அணியாக இருக்கவேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 88) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவர்கள் 4 புள்ளிகள்) வீரர்? Sunil Narine 89) இந்த தொடரில் மிக மதிப்பான ஆட்டக்காரர் (Most Valuable Player) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், இதற்கு பதில் கேள்வி 88 க்கு வீரர் அணியாக இருக்க வேண்டிய அவசியமில்லை! ) அணி? KKR 90) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? KKR1 point- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2025
விடுமுறை போகிறதை பற்றி இங்கு எழுதியிருக்கிறீர்கள். நான் என்றால் சொல்லமாட்டேன். ( கள்ளன் கிள்ளனுக்கு தெரிந்துவிடும் என்பதினால் ) கந்தப்பு மடியில் கனம் என்றால் வழியில் பயம் என்றது இயல்பு தானே.1 point- சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point1 point- தூத்துகுடி கொத்தனாரு….
1 pointஉடைக்கிறாரா கொத்தனார்? தமிழ்கூறு நல்லுகம் தன் இயற்கை வாழிடங்களை தாண்டி, உலகெங் பரந்து விட்ட இந்த காலத்திலும் கூட, அது தனக்கென சில விழுமியங்களை, கூட்டு கொள்கைகளை இறுக பற்றி பிடித்துத் கொண்டுதான் இருக்கிறது. அதில் ஒன்றுதான் கலைப்படைப்புகளில் “கெட்டவார்த்தை” அல்லது “தூசணம்” என அழைக்கப்படும் அவமரியாதை வழக்கை தவிர்த்தல். ஆங்கிலபடங்களில் சர்வசாதராணமாக வரும் இவை தமிழ்படங்களில் மிக அரிதாகவே வரும். துள்ளிசை பாடல்களிலும் இதுதான் நிலமை. இதற்கு இதுவரை ஒரே விதிவிலக்காக இருந்தது என்றால் அது திண்டுகல் ரீட்டா வகையறாக்கள் மேடையில் ஆடும், “ஆடல் பாடல் நிகழ்வு” என அழைக்கபடும் “ரெக்கோர்ட் டான்ஸ்” மட்டுமே. அங்கேயும் பாடல்களில் ஆபாசம் இராது, நகர்வுகளிலும், வசனங்களிலும்தான். அதுவும் கூட பெரும் பாலும் இரெட்டை அர்த்தம் உள்ள வசனங்களாகவே இருக்கும். நேரடியாக கெட்டவார்த்தை பிரயோகம் அரிது. இதற்கு தணிக்கை மட்டும் காரணம் அல்ல. சுயதணிக்கை செய்யும் யூடியூப் பாடல் வீடியோ உட்பட்ட பலதில் கூட இந்த ஒழுங்கு கடைபிடிக்கவே படுகிறது. பீப் சாங் போல இடைக்கிடை சிலது விதிவிலக்காக வந்தாலும் அவை கடும் கண்டனத்துக்கு ஆளாவதே வழமை. ஆனால் இஸ்டாவும், டிக்டொக்கும் இந்த வழமையை கொஞ்சம் கொஞ்சமாக உடைக்கிறவனா? என எண்ண தோன்றுகிறது. இந்த இரு தளங்களிலும் பெண்கள் சர்வசாதாரணமாக “ஆடல் பாடல்” ஆடி வருவது கொஞ்ச காலமாகவே நடப்பதுதான். இப்போ இது அடுத்த கட்டத்துக்கு போயுள்ளது. கெட்டவார்த்தை பேசியே யூடியூப்பிலும், இன்ஸ்டாவிலும் பிரபலமானவர் குட்டி மியா. மேற்குலகுக்கு ஒரு மியா கலிபா, எமக்கு ஒரு குட்டி மியா. ஆனால் கலிபா செயலில், குட்டி மியா சொல்லில். இதுதான் வித்தியாசம். இந்த குட்டிமியா ஆபாசமாக வீடியோ போட, அதை பார்த்து ஆபாசமாக பலர் கொமெண்ட்ஸ் போடுவார்கள். குட்டி மியா இந்த கொமெண்ட்சை வாசித்து அதை விட ஆபாசமாக பதில் கூறி இன்னொரு வீடியோ போடுவார், லைக்ஸ் அள்ளும். இப்போ என்னெவென்றால் -எவரோ ஒருத்தர் (ஒரு பிரபல இளவயது இசையமைப்பாளர் என்கிறார்கள் சிலர்) குட்டி மியாவுக்கு வந்த கெட்ட, கெட்ட, மகா கெட்ட கொமெண்ட்ஸை எல்லாம் பாடல் வரியாக்கி ஒரு பாடலை (ஏஐ மூலம் என்கிறார்கள்) உருவாக்கியுள்ளார். அந்த பாடல்தான் “தூத்துகுடி கொத்தனாரு”. சும்மா சொல்ல கூடாது, மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் ஒரு ஈர்ப்பு அந்த பாடலில் இருக்கிறது. பாடல் டாப்பு டக்கர் ஹிட்டு. சிந்தித்து பார்த்தால் ஆங்கில பாடல்களில் எமினெம்மும், இன்னும் பலரும் எப்போதோ சில தசாப்தங்கள் முன்பே செய்து விட்ட “புரட்சி”தான் இது. தமிழில் பீப் சாங் நேரம் இப்போ இருக்கும் இன்ஸ்டா கலாச்சாரம் இல்லை என்பதால் அதிகம் எடுபடவில்லை. பெரு ஊடகத்தில் எதிர்ப்பும் அதிகமாய் இருந்தது. இப்போ நிலமை அப்படி இல்லை. இன்ஸ்டா என்பதால் யாரை யாரும் எதிர்க்கவும் முடியவில்லை என நினைக்கிறேன். ரொம்ப சாதாரணமான ஒரு இன்ஸ்டா பாடல் - ராஜா, ரஹ்மான் பாடல் போல் ஹிட்டடிக்கிறது. தூத்துகுடி கொத்தனார் - தமிழ் உலகின் நீண்டதொரு நியமத்தை உடைத்து விட்டாரா? பிகு பாடலை கேட்பதாயின் - ஹெட்போன் போடவும்.1 point- சமூகப் போராளி - சுப.சோமசுந்தரம்
1 pointசமூகப் போராளி சுப.உதயகுமாரன் - சுப.சோமசுந்தரம் "அணுசக்தியற்ற எதிர்காலம்" எனும் தலைப்பில் உலக அளவில் 1998 லிருந்து விருதுகள் வழங்கப்படுகின்றன. ஒவ்வொரு வருடமும் மூன்று பிரிவுகளில் இவ்விருதுகள் அறிவிக்கப்படுகின்றன. அணுசக்தி எதிர்ப்புப் போராட்டம், அணு சக்தியினால் ஏற்படும் அழிவுகள் பற்றிய அறிவினைப் பரப்புதல், அணுசக்திக்கு எதிரான தீர்வு எனும் பிரிவுகளே அவை. இவ்விருதுகள் ஜெர்மானியப் பத்திரிக்கையாளரும் திரைப்பட இயக்குனரும் சமூகப் போராளியுமான Claus Biegart ஆல் நிறுவப்பட்டன. நாம் குறிப்பிட்ட முதற்பிரிவில் 2025 க்கான விருதினைப் பெறுபவர் அணுசக்திக்கு எதிரான மகத்தான இந்தியப் போராளி சுப. உதயகுமாரன் ஆவார். ஐநாவின் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தின் மூன்றாவது அமர்வினையொட்டி மார்ச் 4 ஆம் தேதி நியூயார்க்கில் இவ்விருது வழங்கப்படவுள்ளது. இப்பதிவில் தலைவர்/தோழர் சுப. உதயகுமாரன் அவர்களின் படத்துடன் முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் கொண்டு வந்ததன் காரணமென்ன ? (படம் கட்டுரையின் கீழேயுள்ள முகநூல் இணைப்பில் உள்ளது). அதைச் சொல்லுமுன் என் அரசியல் நிலைபாட்டைச் சொல்வது அவசியமாகிறது. நான் எந்த அரசியல் கட்சியிலும் உறுப்பினர் இல்லையென்றாலும், கருப்புச் சட்டை அல்லது சிவப்புச் சட்டையை எடுத்து அணியும்போது உள்ளத்தில் பெருமிதம் மட்டுமல்ல, கர்வமே கொள்பவன் நான். வலதுசாரி இந்துத்துவப் பார்ப்பனிய அரசியல் இந்நாட்டில் முற்றிலுமாக ஒழித்துக் கட்டப்பட வேண்டிய ஒன்று என்று ஆணித்தரமாக நம்புகிறவன் நான். ஏனிந்தப் பீடிகை ? இப்பதிவில் சில இடதுசாரி, திராவிட அரசியல் கட்சிகளை நான் விமர்சித்தால், அதனை ஏதோ பாசிச சங்கிகளின் குரைத்தலுடன் ஒப்பீட்டு அளவில் கூடப் பார்க்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளவே ! சரி, இப்போது நாம் கையிலெடுத்த பொருளுக்கு வருவோம். முதல்வர் படத்தைப் போட்டது அவரிடம் பின்வரும் விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவே : ஐயா ! விளையாட்டு, இலக்கியம் முதலிய எந்தத் துறையிலும் உலக அளவில் சாதித்தவர்களைப் பாராட்ட தாங்கள் தவறுவதில்லை. இப்போது அணு உலைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத்தியதற்காக உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளார் தோழர் சுப.உதயகுமாரன். அவரை மனம் திறந்து பாராட்டி விடுங்களேன். இந்த ஜனநாயக அரசியலில் அந்தப் பாராட்டுதலுக்குத் தடை விதிக்கும் எந்த ஒரு வெங்காயத்தையும் தூக்கி எறியுங்களேன். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா நிறுவிய பள்ளியில்தானே உங்களைப் போன்றோரும் என்னைப் போன்றோரும் அரசியல் பாடம் படித்தோம் ! அதிலும் குறிப்பாக நீங்கள் எனக்கெல்லாம் வழிகாட்டியாகத் திகழும் மூத்த மாணவர் என்பதை நாங்கள் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. மற்ற துறைகளில் சாதித்தவர்களுக்குப் பாராட்டுதலோடு பொற்கிழியும் தருவீர்கள். ஆனால் போராளிகள் பணத்தைத் தம் பையை நிரப்ப ஏற்பதில்லை. உலகின் தலைசிறந்த போராளிகளில் ஒருவரான சுப.உதயகுமாரன் அவர்களை மிக அருகில் பார்க்கும் பெரும்பேறு வாய்க்கப் பெற்றவர்கள் நானும் என்னைப் போன்றோரும். உங்களுக்குக் கூட அந்த வாய்ப்பு அமையவில்லை முதல்வரே ! ஏதோ ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறி எப்போதோ சின்னா பின்னமாயிருக்கக் கூடிய போராட்டத்தை இறுதிவரை (சுமார் இரண்டரை ஆண்டுகள்) அமைதியாகக் கொண்டு சென்று அந்த மக்களைத் தம் அன்பினால் கட்டிப்போட்டவர் தோழர் உதயகுமாரன். அவர் மீதும் அவருடன் நின்ற போராளிகள் மீதும் ஏதோ தீவிரவாதிகள் மீது போடுவதைப் போல வழக்குகள் போடப்பட்டன. அவை அனைத்தும் பொய் வழக்குகள் என்று யாருக்கும் நிரூபிக்க வேண்டிய அவசியமே இல்லை. நீங்கள் பதவியேற்ற பின் பல வழக்குகள் திரும்பப் பெறப்பட்டாலும், இன்னும் சில நிலுவையில் உள்ளன என்பது உங்கள் கவனத்திற்கு மீண்டும் மீண்டும் கொண்டுவரப்பட்டன. அத்தனை வழக்குகளையும் திரும்பப் பெறுவதையே சுப.உதயகுமாரனின் உலக அங்கீகாரத்திற்கான வெகுமதியாகத் தாருங்கள் முதல்வரே ! அவருக்கான அங்கீகாரம் என்பது அவருடன் நின்ற ஒட்டுமொத்தப் போராளிகளுக்குமான அங்கீகாரமாகக் கொள்ள வேண்டும். அவருடன் தோளோடு தோள் நின்ற புஷ்பராயன் மற்றும் பாதிரியார் மை.பா.ஜேசுராஜ் ஆகியோரின் பங்களிப்பு அளப்பரியது. உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்கள். சாமானியர்களின் பார்வையில் அவர்கள் தற்காலிகமாகப் பின்னடவைச் சந்தித்திருக்கலாம். வென்றால்தான் போராட்டம் என்றில்லை. மேலும், போராட்டங்கள் தோற்பதில்லை; எனவே போராளிகளும் தோற்பதில்லை. இந்த விண்ணப்பத்தை அடியேன் குடிமக்களில் ஒருவனாகவே உங்களிடம் வைக்கிறேன். மற்றபடி அவர்களின் சார்பாகக் கேட்க நான் தகுதியற்றவன். போராளிகள் இம்மாதிரியான இறைஞ்சுதலை விரும்புவார்களா என்பதெல்லாம் எனக்குத் தெரியாது. ஏனெனில் போராளிக்கான மெய்ப்பொருளில் நான் போராளி இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு போராட்டத்தின் அனுதாபியாக இருப்பதாலோ பாதிக்கப்பட்ட போராளிகளுக்காகக் கண்ணீர் வடிப்பதாலோ ஒருவன் போராளியாக முடியாது. அதற்கான தகுதி பெரிதினும் பெரிது. போராட்டமே வாழ்க்கையாக அவர்கள் ஏற்றுக் கொண்டாலும் கூட, அவர்தம் (தனிப்பட்ட) வாழ்க்கையே போராட்டமாக மாறிவிடாமல் காத்து நிற்பது ஒரு நல்லரசின் கடமை. எங்களுக்காக மட்டுமல்லாமல் உங்களுக்கும் சேர்த்துதான் களத்தில் நின்றார்கள். இப்போது அவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை உண்டு. அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். திரை கடலோடி திரவியம் தேடாவிட்டாலும் தமது மற்றும் தம் குடும்பத்தாரின் வயிற்றுப்பாட்டையாவது கவனிக்க வேண்டும். ஆவன செய்க ! திராவிட இயக்கத்தாரின் பிரதிநிதியான முதல்வரிடம் முறையிட்டாயிற்று. இனி போகிற போக்கில் CPI, CPI(M) ஆகிய இடதுசாரிக் கட்சியினரிடம் : தோழர்களே ! நீங்களும் விருது பெறும் சுப.உதயகுமாரனைப் பாராட்டலாம். ஜெய்தாப்பூரின் பிரஞ்சு அணு உலைதான் மக்களைக் கொல்லும் என்றில்லை; கூடங்குளத்தின் ரஷ்ய உலையும் மக்களைக் கொல்லும். சேகுவேராவை, பெரியாரைக் காலம் கடந்து ஏற்றது போல் சுப.உதயகுமாரனையும் காலம் கடந்துதான் ஏற்பீர்களா, என்ன ? "நாங்கள் ஏன் ஏற்க வேண்டும் ?" என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில், "உதயகுமாரனும் அவரோடு நின்ற போராளிகளும் உங்கள் கட்சியினராக இல்லையென்றாலும் அவர்களும் இடதுசாரிகளே !" திராவிட இயக்க அரசியல் மற்றும் இடதுசாரி அரசியலில் உள்ளவர்கள்தாம் கண்ணுக்குத் தெரிகின்றனரா ? ஆமாம். மற்றவர்கள் பேசத்தக்க ஆட்களாக நம் கண்ணுக்குத் தெரியவில்லை என்பது மட்டுமல்ல, அந்த மற்றவர்கள் கண்ணற்றவர்கள் என்பதுவும் நம் எண்ணம். தமிழ்நாட்டைப் பொறுத்தமட்டில் இந்த இரண்டில் எந்தவொன்றிலும் இல்லாதோரிடம் என்ன இழவு அரசியலைப் பேசுவது ? https://www.facebook.com/share/p/1BNdYMdbb8/1 point - ஏ.ஆர்.ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதி!
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.