Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. கிருபன்

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    38756
    Posts
  2. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    10
    Points
    87990
    Posts
  3. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    19122
    Posts
  4. satan

    கருத்துக்கள உறவுகள்
    7
    Points
    10100
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/25/25 in Posts

  1. ஆனால் சொந்த ஊர் பெயரை யாரோ மானிப்பாய்/கொழும்பு 7 துரை வந்து சொன்னார் என்பதால் ஏன் விட்டு கொடுப்பான். பழைய பெயரின் மீது உண்மையில் ஊர் மக்களுக்கு பற்று இருப்பின் அதை தக்க வைக்க அல்லவா போராடி இருப்பார்கள். ஆகவே, இந்த காரை -தீவை தூக்கி போட்டு விட்டு நகரமாவதில், காரைநகர் வாழ் மக்களுக்கும் விருப்பம் இருந்தது என நினைக்கிறேன். எனது மகனின் பெயர் சுரேன். பக்கத்து ஊரில் இரெண்டு சுரேன் இருப்பதால் நான் என் மகனின் பெயரை ஏன் நரேன் என மாற்ற வேண்டும்? அதே போல் கிழக்கிலங்கை, புத்தள காரைதீவுகள் பூகோளவியல் படி தீவுகளே அல்ல, ஆனாலும் அவை இன்று வரை தம் முன்னோர் பாவித்த பெயரையே பாவிக்கின்றனர். முல்லைதீவும் அப்படித்தான். ஆகவே பாலம் கட்டியதால் பெயர் மாற்றியதை ஒரு தக்க காரணமாக என்னால் கருத முடியவில்லை. அப்படி என்றால் புங்குடுதீவை புங்கைநகர், மண்டைதீவை தலைநகர் என்றா அழைப்பது?
  2. இலங்கையில் புத்தளத்தில் ஒரு காரைதீவும், கிழக்கே மட்டக்களப்பில் ஒரு காரைதீவும் வடக்கே தீவுப்பகுதிகளில் ஒரு காரை தீவும் ஆக மூன்று காரைதீவுகளும் சேர்ந்து அரசினரின் தபால் தந்திப் போக்குவரத்திற்கு பெரிய தொல்லைகளையும் தாமதங்களையும் எற்படுத்திக் கொண்டிருந்தன. ஆங்கிலேயரின் ஆட்சியில் 1869 ஆம் ஆண்டில் அப்போது அரசாங்க அதிபராக இருந்த துனவைந்துரையால் பொன்னாலைக் கடலுக்கூடாக கற்தெருவும், ஒன்பது பாலங்களும் அமைந்து காரைதீவினைக் குடாநாட்டுடன் இணைத்தனர். இவ்விணைப்பு தெருவினது நீளம் சுமார் 2,5 கிலோ மீட்டர் ஆகும். இத்தரைத் தொடர்பினை அடுத்து சேர் பொன் இராமநாதனின் விதைந்துரைப்புடன் இலங்கையின் வடக்கே தீவுப்பகுதிகளில் அமைந்திருந்த காரை தீவு என்பது 1923ம் ஆண்டு தொடக்கம் காரைநகர் என்று பெயர் மாற்றம் பெற்றது
  3. என் அப்பா வேலணை. அம்மா சுண்டுக்குளி. ஆனாலும் என்னை தீவான் அடையாளப்படுத்துவதில் ஒரு தில் / கெத்து / திமிர் எல்லாம் இருப்பதாகவே எப்பொழுதும் உணர்வேன். என்னுடன் வேலை பார்ப்பவர்களில் முக்கால்வாசிப் பேர் இங்கு கல்வி கற்று பல்கலைக்கழக degree வைத்திருப்பவர்கள். அவர்களுடன் சரிக்கு சமமாக வேலை செய்வதுடன் mentor ஆகவும் சில வேளை இருக்கும் போது எனக்குள் இருக்கும் தீவான் Gene தான் காரணம் என நினைப்பேன்.
  4. @நந்தன் ஐ இன்று @புலவர் ஐயா சென்னை மீதான விசுவாசத்திற்காக கைவிட்டுவிட்டார்😁
  5. GMT நேரப்படி நாளை திங்கள் 26 மே பிற்பகல் 02:00 மணிக்கு ஒரு போட்டி நடைபெறவுள்ளது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 69) திங்கள் 26 மே 12:00 pm GMT ஜெய்பூர்- பஞ்சாப் கிங்ஸ் எதிர் மும்பை இந்தியன்ஸ் PBKS எதிர் MI இருவர் மாத்திரம் பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனவும் 21 பேர் மும்பை இந்தியன்ஸ் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். பஞ்சாப் கிங்ஸ் ஈழப்பிரியன் சுவி மும்பை இந்தியன்ஸ் வசீ அல்வாயன் வாத்தியார் வீரப் பையன்26 நிலாமதி சுவைப்பிரியன் பிரபா செம்பாட்டான் கந்தப்பு வாதவூரான் ஏராளன் ரசோதரன் நுணாவிலான் தமிழ் சிறி கிருபன் குமாரசாமி எப்போதும் தமிழன் நந்தன் புலவர் கோஷான் சே அகஸ்தியன் இப்போட்டியில் போட்டியில் யாருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?
  6. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆயுஷ் மாத்ரேயின் 17 பந்துகளில் புயல்வேகத்தில் பெற்ற 34 ஓட்டங்களுடனும், டெவால்ட் ப்ரெவிஸின் 23 பந்துகளில் மரண அடியில் பெற்ற 57 ஓட்டங்களுடனும், டெவொன் கொன்வேயின் அதிரடியான 52 ஓட்டங்களுடனும் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய குஜராத் டைட்டன்ஸ் அணி சவாலான வெற்றி இலக்கை வேகமாக அடித்தாடி துரத்த விக்கெட்டுகள் அடுத்தடுத்துச் சரிய ஆரம்பித்தன. சாய் சுதர்சன் மாத்திரம் அதிரடியாக 41 ஓட்டங்களை எடுத்தார். மற்றையோர் எல்லோரும் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியதால், இறுதியில் 18.3 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 147 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 83 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 18 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. குஜராத் டைட்டன்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த ஐவருக்குப் புள்ளிகள் இல்லை! இன்று நடந்த இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் வீரர்கள் ஆரம்பத்தில் இருந்தே மின்னல்வேகத்தில் அடித்தாடினர். அபிஷேக் ஷர்மா 16 பந்துகளில் 32 ஓட்டங்களும், ட்ராவிஸ் ஹெட் 40 பந்துகளில் 76 ஓட்டங்களும், ஹென்றிக் க்ளாஸன் ஆட்டமிழக்காது 39 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் என மைதானம் எங்கும் பந்தைச் சிதறிடித்துப் பெற்ற 105 ஓட்டங்களுடனும், பிற வீரர்களின் கமியோ ஆட்டங்களுடனும் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து ஐபிஎல் போட்டிகளில் மூன்றாவது அதிஉச்ச ஓட்ட எண்ணிக்கையான 278 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்குத் துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரர்கள் மிகவும் சவாலான வெற்றி இலக்கை அடைய அடித்தாட ஆரம்பித்தபோது விக்கெட்டுகள் வேகமாக விழ ஆரம்பித்தன. சுனில் நாரைனின் 16 பந்துகளில் 31 ஓட்டங்களும், மனிஷ் பாண்டேயின் அதிரடியான 37 ஓட்டங்களும், ஹர்ஷித் ராணாவின் 34 ஓட்டங்களும் வெற்றி இலக்கிற்கு கிட்டவும் போகப் போதவில்லை. இறுதியில் 18.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 168 ஓட்டங்களுடன் சுருண்டது. முடிவு: சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 110 ஓட்டங்களால் வெற்றியீட்டியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெல்லும் எனக் கணித்த 15 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 8 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டிகளின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: இறுதி நிலையில் நிற்கும் @Ahasthiyan க்கு விமோசனம் கிட்ட வாய்ப்பு குறைவாகவே உள்ளது!
  7. நீன்ட நாட்க்களுக்கு பின் ஊர்ப்புதினம் பகுதியில் ஒரு திரி பத்தி எரியுது.நல்லுர்க் கந்தனுக்கு அரோகரா😄
  8. வேலன் சுவாமி பற்றிய தகவல்களை தேடல் செய்தபோது அவரை விக்னேசுவரன் ஐயா பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு பரிந்துரை செய்த ஒரு செய்தி துணுக்கை பார்த்தேன். வேலன் சுவாமி சமூக ஊடகத்தில் உயிர்ப்புடன் செயற்படுகின்றார். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்திலும் வேலன் சுவாமியின் பங்களிப்பு உள்ளது. பல போராட்டங்களில் பங்குகொண்டுள்ளார். கைதும் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ் இந்து பழைய மாணவன் என எங்கோ வாசித்த ஞாபகம். வேலன் சுவாமி சமூக செயற்பாட்டாளாராகவே தென்படுகின்றார். அவர் நல்லூர் பிராந்தியத்திலேயே வசிக்கின்றார் என பேஸ்புக் சுயவிபரத்தில் உள்ளது. அவர் விழிப்புணர்வு போராட்டத்தை நடாத்தியது தவறாக தெரியவில்லை. வெளிநாட்டுவாசிகளே பெரிதாக சவுண்ட் விடும்போது நல்லூரை வாழ்விடமாக கொண்டவர் குரல் காட்டக்கூடாதா என்ன?
  9. அறிவுக்கு அடுத்தபடியாக , மலையாளத்து ராப்பர் வேடனின் பாடல்களை விரும்பி கேட்ப்பேன். அவருடைய ஈழத்து தொடர்பு அண்மையில் தான் அறியமுடிந்தது, அகதியாக இந்தியா சென்ற யாழ்ப்பாணத் தமிழ்த் தாய்க்கும், மலையாளி தகப்பனுக்கும் கேரளா திரிச்சூரில் பிறந்த ரப் பாடகர் வேடன், மேடைகளில் ஈழத்தில் நடந்த கொடுமைகளை தனது ரப் பாடல்கள் மூலமும் வெளிப்படுத்தியுள்ளார்.
  10. சுண்டிக்குளி நகரம் சார்ந்த மேட்டுக் குடிகளின் இடம். ஆனால் வேலணை அப்படி அல்ல. பலரால் கொஞ்சம் குறைத்து மதிக்கப்படும் தீவகத்தை சேர்ந்த இடம். அதனால் தன்னை முன்னிலைக்கு நகர்த்த போராட வேண்டிய தேவையுள்ள, மூர்க்கம் உள்ள இடம். எனவே நான் ஓரளவுக்கு நல்ல நிலையில் இருப்பதற்கு அந்த மூர்க்கம் தான் காரணம் என நம்புவதால் இந்த எண்ணம் வந்திருக்கலாம். இதே போன்ற ஒன்றைத்தான் நான் இளையராஜாவிடமும் அவர் சமூகம் சார்ந்து எதிர்பார்த்தேன்.
  11. புரிந்து கொள்ளவோ, அறிந்து கொள்ளவோ முடியாது என நான் எழுதவில்லை. இப்படியாக புதிதாக வதவர்கள் “வரலாறை, வழமையை சரிவர அறிந்து கொள்ளாமல் இருந்தால் அதில் ஆச்சரியம் இல்லை” என்றே எழுதினேன். உண்மையில் நல்லூரின் வழமை அறியாமல் “எனது சகோதரம், உறவினர் வீட்டில் மச்சம் இல்லை” எனவே அதுதான் நல்லூரில் வழமை என நீங்கள் எழுதியதே நான் அப்படி எழுத காரணமாகியது. நீங்கள் நல்லூருக்கு அயலான், உங்கள் உறவினர் வந்தான் வரத்தான். அவரின் வீட்டில் நடப்பதே நல்லூரின் வழமை என அவர் உங்களுக்கு சொல்லி இருப்பார் (நீங்களாக இட்டு கட்டவில்லைதானே). ஆக, இதுதான் ஒரு வந்தான் வரத்தான் நல்லூரின் வழமையை அறியாமல் இருப்பதற்கான சான்று. அவர் புதியவர் என்பதால் அவருக்கு வழமை தெரியாமல் இருப்பது ஆச்சரியமில்லை என்றே நான் எழுதினேன். உண்மையில் உங்களுக்கும் சகபாடிகளுக்கும் என்னதான் பிரச்சனை🤣. தீவக மக்கள் என எழுதினால்…ஐயோ தீவான் என எழுதுகிறார் என பொய்யாக victim card ஐ பிளே பண்ணுகிறீர்கள். இல்லை என்பதை மேற்கோளோடு நிறுவினாலும்…இல்லை “நீ என்ன எழுதினாலும், நாங்கள் அதை தீவார் என்றே வாசிப்போம், விளங்குவோம்” என எழுதுகிறீர்கள். அதே போல் வந்தான் வரத்தானுக்கு ஊர் வழமை தெரியாது இருப்பதில் ஆச்சரியம் இல்லை என எழுதினால், வந்தான் வரத்தானால் ஊர் வழமையை தெரிந்து கொள்ளவே முடியாது என எழுதினேன் என இல்லாத இன்னொன்றை சொல்லி மாய்மாலம் போடுகிறீர்கள். சில கறுப்பினத்தவர், முஸ்லிம்கள் - பொலிஸ் காரை நிப்பாட்டின உடனேயே “ஐயோ என்னை இன, மத அடிப்படையில் வஞ்சிக்கிறார்கள்” என race card ஐ பாவிப்பது போல இருக்கிறது இந்த செய்கைகள். பிகு இத்தனைக்கும் உங்களுக்கு துளியும் சம்பந்தமில்லாத தமிழ்நாட்டில் 600 வருடம் முன் வந்தவன் தமிழனே இல்லை, ஆளக்கூடாது என நடக்கும் வெறுப்பரசியலின் தற்போது யாழ் கால நம்பர் 1 cheer leader நீங்கள் 🤣.
  12. வருடாவருடம் ஊரில் நடக்கும் இரண்டு கோவில் திருவிழாக்களுக்கு பழனியின் மேளக்கூட்டு கட்டாயம் இருக்கும்.அதில் விசேசம் என்னவெண்டால் அந்த இரண்டு திருவிழாக்களுக்கும் வாற பழனி மேளக்கூட்டுக்கு எங்கள் வீட்டில் தான் சாப்பாடு.இரவு 9,10 மணியளவில் பாய் விரித்து பந்தி நடக்கும். ஆட்டுறைச்சிக்கறி வாயில் வைக்கேலாத அளவுக்கு உறைப்பாய் இருக்கணும். 😎
  13. கிழவி வயசுக்கு வந்தா என்ன வராவிட்டா என்ன 😁
  14. நீங்கள் தேவையில்லாமல் அடி படுகிறீர்கள்,......ஜேர்மனியில் 1975 ஆம் ஆண்டளவில். வந்தவர். ஒரு புங்குடுதீவான். முதலில் வெளிநாட்டிற்கு வந்தவர். புங்குடுதீவான். அவர் பிரங்போட். நகரில் பெற்றோல். நிலையத்தில் வேலைவாய்ப்பு கிடைத்தது செய்தார் ....அந்த முதலாளியின். மகளை மனைவி ஆக்கி கொண்டார். அவரின் பிள்ளைகளுக்கும். தமிழ் பெயர் தான் நான் அவரை நேரில் காணவில்லை ஆனால் நிறையவே கேள்விபட்டு உள்ளேன் அவரை தீவான். சிவனாடியன். என்று சொல்வதுண்டு நன்றாக உழைத்து பணக்காரர் ஆகி விட்டார் என்று கேள்வி சிவனாடியன். புங்குடுதீவான். என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் தலைவரின் மனைவி மதிவதனி புங்குடுதீவாள் என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் கனடாவில் பல தொழில் நிறுவனங்கள் புங்குடுதீவாருடையது என்றால் மகிழ்ச்சி அடைகிறார்கள் புங்குடுதீவு மக்களுக்கு தனி திறமைகளுண்டு ....[.ஒவ்வொரு கிராம மக்களுக்கும் தனி திறமைகளுண்டு ] உதாரணமாக ஒரு லட்சம் ரூபாய் செலவில் தொடங்க வேண்டிய தொழிலை புங்குடுதீவு மக்கள் வெறும் பத்தாயிரம் ரூபாய்யில். தொடங்கக்கூடியவர்கள். அதற்கு காரணம் அவரகளின் திட்டமிடல் கடின உழைப்பு .........தன்னம்பிக்கை போன்றன உங்களை புங்குடுதீவு என்று சொல்ல வேண்டாம் என்றால் விட்டு விடலாம் பாரிஸ்க்காரன். என்று அழைக்கிறோம் .....சரியா??? 🤣🤣🤣 மேலும் நீர்வேலியன் புங்கையூரன் நுணவிலான் மதுரங்கேணி இப்படி எல்லாம் ஏன் பெயர் வைத்து உள்ளார்கள் ......அந்தந்த ஊர் பெயரில் அழைக்கும் போது ஒரு பெருமை தடிப்பு ..காம்பீரம் .........கௌரவம்’ அடைகிறார்கள் நான் கைதடியன். என்பதில் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன். கைதடிக்கு பல சிறப்புகள் உண்டு” என்னை நல்லுரன் என்று சொல்ல முடியாது ஊர் பெயரை பிறந்த ஊர் பெயரை மாற்ற முடியாது அது தாய் தந்தையர் பெயர் போன்றது இனிமேல் நான் உங்களை புங்குடுதீவு என்று சொல்லவில்லை 🤣🤣🙏
  15. எனக்கு இன்று நாலு புள்ளிகள் நிச்சயம்😄
  16. உள்ளேன் பையா.தோட்ட வேலையுடன் இருப்பதால் நேரப்ப் பற்றாக்குறை அது தான்.
  17. யாழ்ப்பாண மண்ணை பூர்வீக தாய்நிலமாக கொண்ட கிரண் தாஸ் முரளி எனும் வேடன், கேரளத்தில் அவன் பள்ளியில் படிக்கும் போது அவனது கரு நிறத்தை வைத்து அவனுக்கு வேடன் என்று பட்டப்பெயர் சூட்டினர். ஆதிக்ககாரர்களின் இழி சொல்லுக்கு ஆளானான் வேடன் ♥️ எது அவனை ஒதுக்கியதோ அதனை அடக்க அவன் கையில் எடுத்ததோ கலை. சிறு வயதிலிருந்தே எழுதுவதும் பாடுவதும் அவனுக்கு நன்கு வசப்பட்டது. இப்போது வேடனின் பாடல்கள் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்றுள்ளன. வேடனை இப்போது உலகமே கொண்டாடுகிறது. தற்போது கேரளாவின் பேரன்பில் பெரும் புயலாகி விட்டான் வேடன். ஓரிரவில் சமூக ஊடகங்களின் (Trending) பேசு பொருளாகி விட்டான். ஒடுக்கப்பட்டவன் மேல் எழுந்தால் அவனை அடக்க முடியாது என்பதற்கு வேடனே நல்ல உதாரணம் ❤️ 100% பொழுது போக்கு ·
  18. இந்த‌ தொட‌ரில் க‌ட‌சி மைச் தானே முன்ன‌னி விக்கேட்டுக்க‌ள் போன‌தால் டோனி இவ‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுத்து விட்டார்.................... தீப‌க் கோடா அடுத்த‌ சீச‌னில் சென்னைக்கு விளையாட‌ மாட்டார் , ம‌ற்ற‌ அணிக‌ள் இவ‌ரை வேண்டுவின‌மோ தெரியாது.................சிவ‌ம் டூபே க‌ட‌ந்த‌ கால‌ங்க‌ளில் சிற‌ப்பாக‌ ப‌ந்து போட்ட‌வ‌ர் இன்று வ‌யிட் ப‌ந்து போட்டு 5ர‌ன்ஸ் கொடுத்தார் அதோட‌ சிக்ஸ் போர் என்று இவ‌ரின் ப‌ந்துக்கு குஜ‌ராத் அணி வீர‌ர்க‌ள் அடிச்சின‌ம்...............இவேட்ட‌ ப‌ந்தை கொடுத்த‌து த‌வ‌று வ‌ழ‌மை போல் ப‌ந்து போடும் 5ப‌ந்து வீச்சாள‌ர்க‌ளிட‌ம் ப‌ந்தை கொடுத்து இருந்தால் உங்க‌ட‌ க‌ணிப்பு ச‌ரியாக‌ வ‌ந்து இருக்கும்👍.........................
  19. 124 ஓட்டங்களுக்கு மேல் GRT இனை அடிக்கவிடாமல் செய்திருந்தால் சென்னை கடைசி இடத்தில் வந்திருக்காது. ராஜஸ்தான் கடைசியாக வந்திருக்கும். எனக்கு ராஜஸ்தான் கடைசியாக வரும் என்பதற்கு புள்ளி கிடைத்திருக்கும்.
  20. டோனிக்கும் கொஞ்சம் தல பிழைச்சுப்போச்சு போல. எதுக்கு டுபேயை போடுகிறார் என்று புரியவே இல்லை! பதிரான இன்னும் போடவே தொடங்கவில்லை! நல்லகாலம் ஜடேஜா இரண்டு விக்கெட் எடுத்தது! எங்களுக்கு புள்ளிகள் கிடைக்ககூடாதென்று எப்படியெல்லாமோ சதி நடக்குது!
  21. உண்மைதான், ஆனால் தமிழ் இளையோர் தமிழரது அரசியலைப் பார்த்து, யேர்மன் அரசியிலில் ஈடுபாடுகாட்கிறார்களில்லைப்போலும்.... உள்ளக மட்டத்திற்கூட இதுதமிழருக்குப் பாதகமான நிலையே. எதிர்வரும் காலங்களே தீர்மானிக்கும். எமது இளையோர் பல்வேறு முன்னணித் துறைகளில் (யாழ் மனோநிலையில்) முன்னேறி உள்ளனர். அரசியில் ஆரவமற்றநிலையே தொடர்கிறது. நன்றி, இலண்டனில் ரூற்றிங் அம்மன் கோவில் வைத்திருந்தார்கள். யேர்மனியில் ஸ்ருட்காட் பிள்ளையார் கோவிலிலும் பார்த்த ஞாபகம். ஸ்ருட்காட் கோவிலில் யாராவது பார்த்திருந்தால் பகிரலாம். நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
  22. நம்பர் வன்னை அடித்து நாங்க இப்பவும் டான் தான் என்று சென்னை ரசிகர்களுக்கு பால் வார்க்கப்போகினமோ?! LIVE 67th Match (D/N), Ahmedabad, May 25, 2025, Indian Premier League CSK chose to bat. Chennai Super Kings (18/20 ov) 201/4 Current RR: 11.16 • Last 5 ov (RR): 51/1 (10.20) Live Forecast: CSK 225 Gujarat Titans
  23. ஆமாம் ஆனால் ஒருவரும். அரசியலில் செல்வாக்குடனில்லை மாநில பாராளுமன்றத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினால். கட்டலாம் ....ஆனால் இலங்கை வழக்கு போட்டு நிறுத்தி தடைச் செய்யலாமா ???
  24. தமிழின வளர்சியையும்,எழுச்சியையும் தடுக்க இந்தியா தன் புனிதத்தையே பலிகொடுக்கும் ஆதாரம் உள்ளது.🧐
  25. இவர்கள் வாயை மூடிக்கொண்டிருந்திருந்தால் ஒரு நினைவுத்தூபியோடு நின்றிருக்கும். இப்போ, வாயைக்கொடுத்து கனடா முழு மாநிலத்திலும் சர்வதேச நாடுகளிலும் தமிழ் இந அழிப்பிற்கு சான்றாக நினவுத் தூபிகள் எழ தூண்டிவிட்டுள்ளது இலங்கையின் அவசியமற்ற, நிஞாயமில்லாத கண்டனம். உண்மையை ஏற்றுக்கொள்ள துணிவில்லை, மனச்சாட்சியில்லை, இதில் வேறு குரைப்பு.
  26. அண்ணை, மறுபடியும் சேர்ந்திட்டோமே!!!
  27. சுமந்திரன்... தனது கார் சாரதியின் தம்பி, கஞ்சா வழக்கில் பிடிபட்ட போது, அந்த கஞ்சா வியாபாரிக்காக வாதாடியது மட்டுமல்லாது, ரணில் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ரகசிய பேச்சு வார்த்தை நடத்தி, அந்தப் போதை வியாபாரியை... சுதந்திரமாக விடுவித்த (அ)யோக்கியன்தான் சுமந்திரன். எப்போதும் சுமந்திரனின் குடும்பி ரணிலின் கையில் என்ற படியால்தான்... சுமந்திரன் ரணிலை கண்டவுடன் பம்மிக் கொண்டு திரியும் ரகசியம். வேலன் சுவாமி ஜீ´க்காக, சுமந்திரன் வழக்கு வாதாடினால்.... நல்லூர் மக்களும், சைவ தமிழ் மக்களும்.... வரும் தேர்தலில் தனக்கு வாக்களிப்பார்கள் என ஆபிரஹாம் சுமந்திரன் நினைத்தால்... அந்த ஆசையை இப்பவே மூட்டை கட்டி வைத்து விடுவது நல்லது. 😂 வழக்குக்கு தேவையான சம்பளத்தை மட்டும் வாங்கிக் கொண்டு, திரும்பிப் பார்க்காமல் ஓடி விட வேண்டும். சுமந்திரன் இதை சாட்டாக வைத்து... தனது இழந்த செல்வாக்கை தமிழ் மக்களிடம் மீண்டும் கட்டி எழுப்பலாம் என்று மண்கோட்டை கட்டி மனப்பால் குடிக்க வேண்டாம். 🤣
  28. இங்கிலாந்து மைதானங்கள் இந்திய வீரர்களுக்கு சோதனை தருபவை. அனுபவமிக்க வீரர்கள் கூட திணறுவார்கள்.. இந்தமுறை இந்தியா நல்ல அடிவாங்கிக்கொண்டு திரும்பும்😄
  29. இலங்கையில் அது நடக்கவில்லையென மறுக்கப்படும்போது, உலகெங்கும் தமிழ் இந அழிப்புக்கான தூபிகள் எழும். இறுதியில் இலங்கையும் வேறு வழியின்றி ஏற்றுக்கொள்ளுமா? ஏற்றுக்கொள்ள வைக்கப்படுமா? பொறுத்திருந்து பாப்போம். மனிதர் ஒருவழியை மறுக்கும்போது, பலவழிகள் திறக்கப்படும். விதி எங்கோ அழைத்துச்செல்கிறது.
  30. இந்து சமயம் என்ன சொல்கிறது? பற்றறானை மட்டும் பற்றி, ஈற்றில் அந்த பற்றையும் அறுத்து முக்தி அடை என்பதை தானே ? அப்படி இருக்க ஆன்மீக இந்து குருவுக்கு, அரசியல், சமூக எண்ணமே வரக்கூடாது. ஏன் எண்டால் இவை எல்லாம் பற்றுகள். உலகியல் விடயங்கள். உள்ளம் பெருங்கோவில்… ஊனுடம்பு ஆலயம்… வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுரவாசல்… தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்… இதுவல்லாவா இந்து துறவி இருக்க வேண்டிய நிலை? ஆனால் இங்கே வேலனுக்கு ஏன் அரசியலில் போராடும் வேட்கை வருகிறது. சிவ தொண்டன் நிலையம் அமைத்த யோகர் எப்போதாவது மத ரீதியாக ஆர்பாட்டம் செய்தாரா? ராமகிருஸ்ண மிசன்களை தந்த விபுலானதர் அரசியலில் கருத்து கூறினாரா? நாய் பார்க்கும் வேலையை குதிரை பார்க்க கூடாது. வேலன் போன்றவர்கள் துறவிகள் அல்ல. மாறாக யோகி ஆதிநாத் போல, காவி உடை பூண்ட அரசியல்வாதிகள். இந்த வேலன் என்ற விசசெடி முளை விட தொடங்கும் போதே யாழில் அவரின் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிட்டது. வேலனுக்கு ஆலவட்டம் பிடிக்கும் ஆட்களுக்கு அது கண்ணில் படவில்லை என நினைக்கிறேன். இந்த திரியில் இப்போ வேலனை மதிப்பாக பக்தி பரவசமாக விளிக்கும் சிறி அண்ணா எழுதிய கருத்தை பார்த்து யாரும் மூர்ச்சை ஆகினால் நான் பொறுப்பல்ல 🤣.
  31. ஏதோ நாடகம் போட எடுத்த படம் மாதிரியே தெரிகின்றது. வைத்தியசாலை கட்டில். சாதாரண உடை. வைத்தியசாலை கட்டிலில் படுத்திருந்தால் உப்படி உடை அணியலாமா தெரியவில்லை. இனவாதிகள் கையில் எடுக்கும் பொருளான புத்தர் சிலை!!!!! எங்கையோ இடிக்குது..
  32. அநேகமான பழமொழிகளும்,பழைய அறிவுரைகளும் அன்றைய காலத்திற்கு உரியவை என நினைக்கின்றேன். அது இன்றைய சமுதாயத்திற்கு ஏதுவாக அமையாது. அதுக்காக நல்லூர் கந்தசுவாமியார் கோயில் வாசல்லை ஹாஜியார் கொத்துரொட்டி கடை போடுறதை ஏற்க முடியாது கண்டியளோ 🤣
  33. கடவுளே எண்டு உந்த கெட்ட காத்து ஜேர்மன் பக்கம் வீசக்கூடாது. 😂
  34. ஆமாம் அரியலை கூட மாநகரசபைக்குள். அடங்கியது இல்லையா ?? இப்படி பார்க்கும் போது தமிழர்கள் அசைவம் சாப்பிட முடியாது ஏனெனில் ஒவ்வொரு கோவிலும். ஒன்று தொடங்கி மூன்று கிலோமீட்டர் இடைவெளியில் இருக்கிறது இவை பெரிய கோவில்கள் இதைவிடவும் சின்ன சின்ன கோவில்கள் நிறையவே உண்டு” சின்னன். பெரிசு அற்றமுறையில். ஒவ்வொரு கோயிலும் ஒரு கிலோமீட்டர் சுற்றுவட்டத்திலும். அசைவம் கடைகளில் விற்றக்கூடாது ....சமையல் செய்யக்கூடாது ....என்றால் வடமாகணத்தில் எவரும் அசைவம் சாப்பிட முடியாது ....முடியுமா?????
  35. ஐபிஎல் 2025இன் இன்று நடந்த 66வது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர்கள் ஆட்டத்தில் சோபிக்கவில்லை என்றாலும், ஷ்ரெயஸ் ஐயரின் அதிரடியான அரைச் சதத்துடனும், ஜொஷ் இங்கிலிஸினதும், ஆட்டமிழக்காது 44 ஓட்டங்கள் எடுத்த மார்கஸ் ஸ்ரொயினதும் புயல்வேக ஆட்டங்களினாலும் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ஓட்டங்களை எடுத்தது. பதிலுக்குத் துடுப்பாடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வீரர்கள் வெற்றி இலக்கைத் துரத்துவதற்காக தொடர்ச்சியாக வேகமாக் அடித்தாடினர். கருண் நாயரினதும், அரைச் சதம் அடித்த சமீர் ரிஸ்வியினதும் மின்னல் வேக ஆட்டங்களால் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 208 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. முடிவு: டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 10 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் அணி வெல்லும் எனக் கணித்த 13 பேருக்குப் புள்ளிகள் இல்லை! இன்றைய போட்டியின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்:
  36. மக்களே உங்கள் சசிவர்ணம் பேசுகிறேன் புதிதாக "சங்கி வர்ணமாம்" 🤣 சொல்ல வேண்டிய கருத்தை தெரிய வேண்டிய கருத்தாளருக்கு, தெரிந்துகொள்ளும் விதத்தில் பதில் எழுதி ஆயிற்று. எல்லாவற்றுக்கும் மேலாக பேசுபொருளாக இருந்த Barista நிறுவனம் நிலைமைகளை புரிந்து கொண்டு ஒரு முடிவையும் எடுத்துவிட்டது. யாழ்களமும், வந்தான் வரத்தான், தீவான் (அதுதான் அந்த தீவு மக்கள்) இப்படி புதிதாக நல்லூரில் குடி வந்த மக்களை வியப்புக்குரியோடு அன்னியபடுத்தி கருத்து சொல்வதையும் ஏற்றுக்கொண்டாயிற்று. கோஷன் அப்படி இல்லை என்று வாதாடினாலும் ஒரு உரையாடலில் அந்த குறிப்பிட்ட பதங்கள் வந்ததே தவறு என்று தான் நான் பார்க்கிறேன். இந்த திரியை ஆரம்பத்தில் இருந்து ஒவ்வொன்றாக வாசித்து வருபவர்களுக்கு தெரியும் எங்கே, எப்படியான நையாண்டி கருத்துக்களில் இருந்து உரையாடல் தடம் புரண்டது என்பதை அவதானிக்க. இது ஒன்றும் யாழ் களத்திற்கு புதிதல்ல, இவற்றை பக்குவமாக ஏற்றுக்கொண்டு நடுநிலை வகிப்பதை போல அல்லது கடந்துபோகும் உன்னத நிலைக்கு யாழ்களம் வந்தாயிற்று. இனி இதிலே குந்தி இருந்து மேலும் மேலும் பிச்சைக்காரன் சொறிந்த புண்ணாய் கருத்து எழுத ஒன்றும் இல்லை. நன்றி 🥰
  37. நானா, கோழி இறைச்சி இல்லையாம் பன்றி இறைச்சியாம்!
  38. அந்த பகுதியில் காணப்பட்ட 39 வயது ஜேர்மன் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் Virakesari.lkஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல்...ஜேர்மனியில் புகையிரத நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் - 12 பேர் காயம் News | Virakesari.lk
  39. பழனிக்கு சாராயமும் ஆட்டிறைச்சியும் இல்லாட்டி மேளத்தில கை வைக்க மாட்டார்.நல்லா மூசி மூசி தவில் கச்சேரி வைப்பார். 😂
  40. சாய், பக்கத்திலிருந்த புத்தர் கூட கைவிட்டு விட்டாரே பசிலை? கையிலை எத்தனை மீற்றர் நூல் கட்டியிருந்தும் பயனில்லை, பிறகேன் அதை ஓதி கட்டுகிறார்கள்?
  41. பேசுவது கிளியா இல்லை பெண்ணரசி மொழியா ....... ! 😍
  42. என்னது..... கதிரையிலிருந்து விழுந்து காயமடைந்து ஆறுமாதம் விமானத்தில் பயணம் செய்ய முடியாதா? அப்படியென்ன கதிரையது? அது கதிரையாக இராது, குதிரை என நினைக்கிறன். நீதிமன்றம் போகவேண்டி வந்தால் அரசியல்வாதிகள் பலருக்கு உடல்நல பிரச்சனை வருவது இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் வழமை.
  43. அது ஒன்றுமில்லை, ஒரு சில மாதங்களுக்கு முன், ஒரு இஸ்லாமியர் நல்லூருக்கு சொந்தம் கொண்டாடி, இப்படி ஒரு கதை சொன்னார். தாயின் கற்பத்தில் இருந்த குழந்தையை புலிகள், தாயின் வயிற்றை கீறி வெளியே எடுத்தார்கள் என்றொரு உண்மைக்கு புறம்பான கதையை பரப்பி அப்பப்போ முபாறக்அப்துல் மஜீத் என்பவர் தமிழர்மேல் தனக்குள்ள வெறுப்பை கக்குவார். அதை சிலர் உண்மையென நம்பி அனுதாபம் தெரிவிப்பது. அதுவே அவர்களுக்கும் சாதகமாகிறது, தாம் சொன்ன பொய் உண்மையென சாதிப்பார்கள் எதிரிகள். உங்களைப்போல் யார் ஆதாரம் கேட்டு தெளிகிறார்கள் நம்புவதற்கு முன்?
  44. இன்று நீங்கள் அனைவரும் பிரபாகரனாக... https://www.facebook.com/share/r/19izBZyeP3/
  45. ஹீரோயிசம் காட்டாத சசிகுமார்.. அயோத்தியில் இருந்து டிராக்கை மாற்றிய ஃபேமிலி மேன் சசிகுமார் இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது முழு நேர நடிகராக மாறிவிட்டார். இயக்குனர், நடிகர், புரொடியூசர் என பல அவதாரங்கள் வைத்திருக்கிறார். சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், போராளி,கிடாரி போன்ற ஏழு படங்களை இதுவரை இவர் தயாரித்தும் உள்ளார். இவரது ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சசிகுமாரின் ஃபேமிலி மேன் படம் நாளை ரிலீஸ் ஆக உள்ளது. சமீபத்தில் இவர் மூன்று படங்கள் நடித்துள்ளார், மூன்றுமே வழக்கத்திற்கு மாறாக கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக அமைந்துள்ளது. அயோத்தி, கருடன், நந்தன் என வெவ்வேறு கதை அம்சம் கொண்ட படமாக தேர்ந்தெடுத்துள்ளார். அயோத்தி படம் கொடுத்த வெற்றிக்கு பின்னர் இப்படி தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் சசிகுமார். நாளை ரிலீஸ் ஆக உள்ள பேமிலி மேன் படம் இன்று பத்திரிக்கையாளர்களுக்காக பிரத்தியேக காட்சி ஒளிபரப்பப்பட்டுள்ளது. படம் நன்றாக இருக்கிறது என்று படத்தை பார்த்தவர்கள் தங்களுடைய கருத்தை வெளியிட்டு வருகிறார்கள். இலங்கையில் ஏற்படும் பொருளாதார பிரச்சனை காரணமாக விலைவாசி உயர்கிறது. இதனை சமாளிக்க முடியாமலும், பாதுகாப்பு கருதியும் இலங்கையை விட்டு குடும்பத்தோடு ராமேஸ்வரம் வந்து இறங்குகிறார் சசிகுமார். அவர் இங்கு சந்திக்கும் பிரச்சனை தான் கதை. இவர்களுடன் ரமேஷ் திலக் பக்ஸ் போன்றவர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஈழத்தமிழர்களாக தமிழ்நாட்டுக்கு வந்து, இங்கே அவர்கள் பண்ணும் அட்ராசிட்டி தான் படம். முழுக்க முழுக்க காமெடியாக கொடுத்துள்ளார் புதுமுக இயக்குனர் அபிஷன் ஜிவினித். நாளை ரிலீசாக உள்ள இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது பிரீடம் , நானா, எவிடன்ஸ், பகைவனுக்கும் அருள்வாக்கு என நான்கு படங்கள் கையில் வைத்திருக்கிறார். Safi Congress

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.