Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    15
    Points
    87988
    Posts
  2. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    9
    Points
    46783
    Posts
  3. ஏராளன்

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    31956
    Posts
  4. ரசோதரன்

    கருத்துக்கள உறவுகள்
    4
    Points
    3049
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 09/15/25 in all areas

  1. பயனுள்ள இணைப்பிற்கு நன்றி ஈழப்பிரியன். ஜேர்மனியின் வீழ்ச்சி பற்றி நிறைய எழுதலாம். நான் உக்ரேன் பற்றிய திரிகளில் ஜேர்மனியின் வீழ்ச்சி ஒரிரு வரிகள் பற்றி எழுதியிருக்கின்றேன். ஏனென்றால் ரஷ்யாவிலிருந்து வந்து கொண்டிருந்த காட்டாறு போன்ற எரிசக்திதான் ஜேர்மனியின் பொருளாதாரத்தை மேலும் மேலும் உயர்த்தியது. அதை விட வியாபார ரீதியில் ரஷ்யாவின் பங்கு மிக மிக முக்கியமாக இருந்தது.
  2. ஒவ்வொருக்காலும் புதுமை வேணுமெண்டால் அவங்களும் எங்கை போறது?😂 நானும் தொடர்ந்து சம்சுங்தான் வைச்சிருந்தனான்.கள்ளர் கூட்டத்துக்கு நல்ல ரெலிபோன்.என்னவும் செய்து கொள்ளலாம்.😍
  3. ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்பீர்களாயின் இப்படித்தான் உங்களை அசிங்கப்படுத்துவார்கள். சொந்த அனுபவமாக்கும் 😎
  4. சுமந்திரனுக்கு… நாக்கிலை சனி. அதற்கு வாய்ப்பில்லை ராஜா. 😂 அவருக்கு மாகாணசபை முதல்வர் பதவி எல்லாம் எட்டாக்கனி. இவர் போட்டியிட்டால்…. தமிழரசு கட்சிக்கு விழும் எதிர் வாக்குகள், அனுரவுக்கு போகும். வட மாகாண முதலமைச்சராக ஒரு சிங்கள கட்சியை சேர்ந்தவரை தெரிவு செய்ய வைத்த கேவலத்தையும் சுமந்திரன் போட்டியிடுவதால் ஏற்படும் தீமையாக அமையும். ஏற்கெனவே சுமந்திரனின் செய்கைகளால்…. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தானும் தோற்று….. அனுரவின் கட்சியை சேர்ந்த மூன்று பேரையும், டாக்டர் அர்ச்சுனாவையும் வெல்ல வைத்தது... இந்தத் தேவா*கு தான். 😂 🤣
  5. நல்லூர் பிரதேச சபை என்பது இலங்கையில் யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு உள்ளூராட்சி சபை ஆகும், இது நல்லூர் பிரதேச மக்களின் தேவைகளைக் கவனித்து, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. இது ஒரு வரலாற்று பின்னணியைக் கொண்டுள்ளதுடன், சமீபத்தில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி இணைந்து அதன் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளன.
  6. ஒரு காலத்தில் ஓகோ என்று இருந்த ஜேர்மனி இன்று சேடமிழுக்கிறது. 2017-2025 வரை 1.7 வீத வளர்ச்சி. உலகிலேயே பெயர்போன தரமான வாகனங்களைச் செய்த ஜேர்மனி இன்று வாகனங்களை இறக்குமதி செய்கிறது. குறைந்த விலையில் எரிபொருட்களை ரசியாவிடமிருந்து பெற்றுக் கொண்டிருந்த ஜேர்மனி இன்று அதிகவிலை கொடுத்து எரிபொருட்களை வாங்குவதால் இன்று பல கம்பனிகள் மூடப்படுகின்றன. இதைப்பற்றிய உண்மை பொய் தெரியவில்லை. சிறிய வயதிலிருந்தே ஜேர்மனி மீது ஒரு ஆர்வம் இருந்தது. இங்கிலாந்து மீது வெறுப்பாகவும் இருந்தது. இந்தக் காணொளி பார்த்ததும் ஏதோ கஸ்டமாக உள்ளது. ஜேர்மன் வாழ் உறவுகள் ஊரில் வீடுவாசல் இருந்தால் விற்காமல் வைத்திருங்கள். இன்னொரு குண்டு என்னவென்றால் இளைஞர்களை விட வயோதிபர்களே கூடுதலாக வாழ்கிறார்களாம். இங்கும் கருத்தெழுதுபவர்களைப் @தமிழ் சிறி @குமாரசாமி @வாத்தியார் @panch @Kavi arunasalam இன்னும் பலர் பார்த்தால் சரியாகத் தான் இருக்குமெ எண்ணுகிறேன்.
  7. 15 Sep, 2025 | 03:48 PM அரசியல் கைதிகளுக்கும் அவர்களது உறவினர்களுக்குமிடையே சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதன்போது உணர்வு பூர்வமான சந்திப்பு ஒன்று அங்கே நடந்தது. அரசியல் கைதிகளை சந்தித்துவிட்டு கனத்த இதயத்துடனும் கண்களில் கண்ணீருடனும் அரசியல் கைதிகளின் உறவுகளும் நாங்களும் வெளியே வந்தோம் என குரல் அற்றவர்களின் குரல் அமைப்பின் செயற்பாட்டாளர் முருகையா கோமகன் தெரிவித்துள்ளார். அரசியல் கைதிகளை போகம்பரை சிறையில் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், குறுகிய நேரத்தில் நடந்த இந்த சந்திப்பின்போது அரசியல் கைதியான ஆனந்தசுதாகரனின் மகளை தந்தையான ஆனந்தசுதாகரன் தொட்டு உணவூட்டிய அந்த நிகழ்ச்சி சம்பவம் மனதை ரணமாக்கியது. இந்த சந்திப்பானது நிரந்தரமாக இந்த பிள்ளைகளுக்கு கிடைக்க வேண்டுமென இந்த நாட்டின் ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம். தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு கைதிகள் பொதுமன்னிப்பின்கீழ் விடுதலை செய்யப்படுவது வழமை. ஆனால் இந்த ஆண்டு கைதிகள் விடுதலை செய்யப்படவில்லை. தமது விடுதலை இடம்பெறும் என கைதிகள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர். மீதமாக உள்ள பத்து அரசியல் கைதிகளும் நல்லிணக்கத்தின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வினயமாக ஜனாதிபதியை கேட்டுக் கொள்கின்றோம் என்றார். அரசியல் கைதிகளான தங்களது உறவுகளை சந்தித்த பின் கனத்த நெஞ்சத்துடன் பிரிந்து வந்த உறவுகள் - கோமகன் | Virakesari.lk
  8. கொரொனா வந்து 2021 இல் மீண்டும் நாடுகள் மீண்ட போது பல பிரச்சினைகள்: அமெரிக்காவில் சும்மா நிவாரணமாகக் கிடைத்த காசினால் பணவீக்கம், பாரவூர்தி -HGV ஓட்டுனர்கள் இல்லாமையால் பிரிட்டனில் வினியோகச் சங்கிலிப் பாதிப்பும், விலையுயர்வும், அதே போல ஜேர்மனியிலும் விளைவு இருந்தது. ரஷ்யாவின் விலைகுறைந்த எண்ணையும், எரிவாயுவும் உள்ளூரில் விலைகளைக் குறைவாக வைத்திருக்க உதவின. ஆனால், அது தான் ஜேர்மனியின் நீண்ட கால வளர்ச்சிக்கு அச்சாணியாக இருந்தது என்பது ஜேர்மனியில் வசித்தாலும் அதன் கலாச்சாரம் பற்றிய புரிதல் இல்லாமல் வாழும் சிலரின் தவறான கணிப்பு. வெளிநாடுகளுக்கு விற்கவென்றே பொருட்களைச் செய்து ஏற்றுமதி செய்த ஜேர்மனி, தற்போது அந்தப் பொருளாதார மொடல் சந்தைப் போட்டி காரணமாக வேலை செய்யாமல் விட்டதால் பாதிக்கப் பட்டிருக்கிறது. சீனாவும் இதே போன்ற ஒரு உற்பத்திக் குறைவினால் (manufacturing slowdown) பாதிக்கப் பட்டிருக்கிறது. இதையெல்லாம் ICU என்றால் "இந்தியா எப்பவோ அரை உயிரோடு புதைக்கப் பட்டு விட்டது" என்றல்லவா எழுத வேண்டும்😂? இவையளும் இவையிண்ட அரைவேக்காட்டு ஆய்வுகளும்!
  9. நீங்கள் யாருடைய கருத்திற்குப் பதிலாக எழுதியிருந்தாலும் அதற்கான எனது பதில் இதுவாகத் தான் இருக்கும் ஒருவருக்கு எழுதும் பதிலை ஆயிரம் பேர் வாசிப்பார்கள் சசி🙏 அதனால் தான் தான் சபை அடக்கம் கருதி சிலர் யோசித்து எழுதுவார்கள்
  10. சேடம் இழுக்கும் நிலை என்று சொல்வது அபத்தம் பொருளாதார வீழ்ச்சி என்பது எல்லா நாடுகளிலும் அவ்வப்போது வரும் போகும் . ஆனால் அந்த வீழ்ச்சி தொடர்ந்தால் பிரச்னை வரும் . அப்போது அதை நெருக்கடியான நிலை என்பார்கள். அது இப்போது ஜெர்மனியில் நடக்கின்றது . கடந்த அரசாங்கம் மூன்று கட்சிகளின் கூட்டணியாக அமைந்து ஒரு நிலையற்ற....... எப்போதும் ஆட்சி கவிழும்.... என்ற நிலையில் இருந்ததும் ஒரு முக்கியமான காரணி. யாரும் முதலீடு செய்ய பலமுறை யோசித்தார்கள். அதைவிட கொரோனா காலம் ஒரு காரணி பல நிறுவனங்கள் மூடப்பட்டன- உலக நாடுகளுக்கிடையிலான பொருளாதார போட்டி இதுவும் ஒரு காரணம் உக்கிரையின் ரஷ்யப் போர் காரணமாக எரிசக்தி விலை உயர்வு மற்றும் பற்றாக்குறை என இந்தப் பொருளாதார வீழ்ச்சிக்கு பல இணைந்த காரணிகள் உள்ளன இப்படி இருந்தும் ஐரோப்பாவில் ஜெர்மனி தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுதான் உள்ளது . இன்றைய நிலையில் வலதுசாரிகள் ஜெர்மனியில் ஒரு மக்கள் கட்சியாக மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து வருவதால் வெளிநாட்டு முதலீடுகள் தடைப்படுகின்றன . ஜெர்மனி அந்த நாட்டு மக்களின் உழைப்பினால் மட்டும் இல்லாமல்...... வெளி நாட்டு மக்களின் உழைப்பினாலும் தான் உலகப் போரின் பின்னர் மீண்டு வந்தார்கள், இனியும் மீண்டு வருவார்கள்
  11. அன்று பல பேய்கள் அரசு செய்தன, சாத்திரங்கள் பிணம் தின்றன.🫣
  12. நேபாள பாராளுமன்றம் கலைப்பு – தேர்தல் திகதியும் அறிவிப்பு September 13, 2025 நேபாள பாராளுமன்றம் நேற்று (12)இரவு கலைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள உயர் நீதிமன்றத்தின் முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள பாராளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு பாராளுமன்றம் நேற்று இரவு 11.00 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 21 ஆம் திகதி நேபாள பாராளுமன்ற தேர்தல் நடத்தப்படும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி அறிவித்துள்ளார். நேபாளத்தில் ஆட்சியில் இருந்தவர்களின் ஊழல் மக்களை பெரும் கோபத்தில் ஆழ்த்தியிருந்த வேளையில், சமூக வலைத்தளங்களுக்கு அரசு தடை விதித்தது. இதனால் பெரும் கொந்தளிப்புக்கு ஆளான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அடங்கிய ‘ஜென் சி’ தலைமுறையினர் கத்மண்டுவில் பாராளுமன்றத்தை முற்றுகையிட்டு போராடினர். இதில் ஏற்பட்ட கலவரம் மற்றும் பொலிஸ் துப்பாக்கிச்சூட்டில் 19 பேர் கொல்லப்பட்டனர். இதனால் போராட்டமும், வன்முறையும் நாடு முழுவதும் தீவிரமடைந்ததால், பிரதமர் சர்மா ஒலி 9ஆம் திகதி பதவி விலகினார். உடனடியாக நாட்டின் சட்டம், ஒழுங்கு பாதுகாப்பை இராணுவம் கையில் எடுத்தது. அதன்பின்னர் வன்முறை ஓய்ந்து நாடு முழுவதும் படிப்படியாக அமைதியும், இயல்பு நிலையும் திரும்புகிறது. பிரதமர் சர்மா ஒலி பதவி விலகியதை தொடர்ந்து நாட்டில் இடைக்கால அரசு அமைப்பதற்கான பணிகள் தொடங்கின. இதற்காக ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் மற்றும் இராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்டெல்லுடன் போராட்டக்காரர்களின் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இடைக்கால அரசின் பிரதமராக நேபாள உயர் நீதிமன்ற முன்னாள் பிரதம நீதியரசர் சுசீலா கார்கி, காத்மண்டு மேயர் பலேந்திர ஷா உள்பட 4 பேர் பெயர்களை பரிந்துரைத்தனர். இதில் சுசீலா கார்கிக்கு அனைத்து பெரிய அரசியல் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. அத்துடன் போராட்டக்காரர்களின் ஆதரவும் இருந்ததால் அவர் இடைக்கால பிரதமராக நேற்று ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். பின்னர் ஜனாதிபதி மாளிகையில் இரவு நடந்த நிகழ்ச்சியில், நேபாளத்தின் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதன் மூலம் அந்நாட்டின் முதலாவது பெண் பிரதமர் என்ற பெருமையை அவர் பெற்றார். முன்னதாக நாட்டின் முதலாவது பெண் பிரதம நீதியரசர் என்ற பெருமையையும் அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த 2016-ம் ஆண்டு நேபாளத்தின் முதல் பெண் பிரதம நீதியரசராக பதவியேற்ற அவர், 11 மாதங்கள் அந்த பொறுப்பில் இருந்தார். அப்போது ஊழலுக்கு எதிராக அவர் காட்டிய கடுமையே, ஜென் சி தலைமுறையினரின் பிரதமர் தேர்வுக்கு காரணமாக இருந்துள்ளது. https://www.ilakku.org/nepal-parliament-dissolved-election-date-also-announced/
  13. நான் விடியோவை பாக்கவும் இல்லை, பாக்கிற நோக்கமும் இல்லை. என்னடா தேர்தல் நெருங்குது இன்னும் விஜயலட்சுமியை காணலையே என்று பார்த்தேன். தேர்தல் முடியிற வரைபொறுத்திருப்பம். அந்தம்மா பிறகு காணாமல் போய் அடுத்த தேர்தலுக்கு திரும்பி வருவா. பிஜேபி, திமுக இந்த ரெண்டும் இந்த வழக்கை முடிக்கவே விடாது.
  14. இங்கை தடை இல்லாதபடியால VPN பாவிப்பதில்லை அண்ணை.
  15. VPN பாவித்தால் வேகம் குறைவதோடு, பலசமயம் page load ஆகாது. அதை நூத்து போட்டு வந்தால் வேகம் பரவாயில்லை.
  16. இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நடு நிலைக்கு ஒரு நல்ல உதாரணம் பாபர் மசூதி 426 ஆண்டுகளாக இருந்தது 1992 இல் அதை இந்து காடையர் ராமர் கோவில் மீது கட்டப்பட்டதாக கூறி இடித்தனர். சட்டவிரோதமாக மசூதி இடித்த இடத்தில் 28 வருடம் ஒரு கொட்டாயில் ராமர் பூசை, சட்டவிரோதமாக செய்தனர். நீதி மன்ற தீர்ப்பு பாபர் மசூதி ராமர் ஜென்ம பூமியில் உள்ளது, ராமர் கோவிலை இடித்து கட்டபட்டது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மசூதியில் அடிவாரத்தில் எந்த ராமர் சின்னமோ, கோவிலோ இல்லை. மசூதி 1992 இல் இடிக்கப்பட்டது சட்ட விரோதம், பிழை. ஆனால் 🤣🤣🤣 - 28 வருடமாக சடவிரோதமாக மசூதியை இடித்து, சட்டவிரோதமாக ராமர் பூசை செய்தோர் மனம் புண்படும். எனவே 426 ஆண்டுகளாக மசூதி இருந்த இடத்தில் புதிய ராமர் கோவில் கட்ட வேண்டும். மசூதிக்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும், இதுதான் பிஜேபி ஆட்சியில் இந்தியன் சுப்ரீம் கோர்ட்டின் நிலை. அமித் ஷா கண்காட்டினால், சீமாந்தான் யேசு என்றே தீர்ப்பு எழுதுவார்கள்🤣.
  17. இந்த வக்கீல், சீமான் வழக்கில் சுப்ரீம் கோர்ட் பார்த்த மாமா வேலைக்கு நன்றாக வெள்ளை அடிக்கிறார். SKK LegalSupreme Court: False Promise to Marry Not Rape | SKK LegalThe Supreme Court rules that a false promise to marry does not constitute rape in consensual relationships, clarifying legal perspectives on consent and marital intentions in intimate partnerships.👆சுப்ரீம் கோர்டின் அண்மைய வழக்குகளில் சொல்லப்பட்டது இதுதான்👇. கூடி வாழ்தல் (live-in relationship) முறையில் கணவன் மனைவியாக நீண்டகாலம் வாழ்ந்தோர், திருமணம் செய்வதாக கூறி மோசடி மூலம் பாலியல் வன்கொடுமை என புகார் கூறின் (allegation that consent was obtained via false promise to marry) - அதை ஆட்டோமேடிக்காக ரேப் என கருத கூடாது. இதைதான், மிக நியாயமாக சீமான் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் சொன்னது. அதாவது என்ன நடந்தது என அறுதியும் உறுதியுமாக பொலிஸ் விசாரிக்க வேண்டும். ஆனால் பொலிஸ் விசாரணையையே அடித்து நூத்து, மைனர் குஞ்சு அபராதம் கட்டினால் போதும் என சாத்தப்பன் நாட்டாமை போல் (ரன் படம்) தீர்ப்பு கூறியது இந்தியன் மாமா மன்னிக்கவும், சுப்ரீம் கோர்ட். பிகு இந்த உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் நெற்றியில் மிளிரும் குங்கும பொட்டு சாட்சி சொல்கிறது இவர்கள் எந்த கட்சியின் ஆட்கள் என🤣. நீதிபதிகள் நடுநிலையை நாட்ட மட்டும் அல்ல, காட்டவும் வேண்டும் என்பதுதான் அன்று wig அணியும் முறை வர ஒரு காரணம்.
  18. காணொளியை முழுமையாக பார்த்தேன். இணைப்பிற்கு நன்றி. இவர்கள் பிணக்குகள் பற்றிய செய்திகளை நான் தொடர்வது இல்லை. அவ்வப்போது மேலோட்டமாக இங்கு பகிரப்படும் சில கருத்துக்களை வாசித்துள்ளேன்.
  19. Passwords App இல் சேமிக்கவில்லை. கடவுட் சொல்லை மறந்து விட்டேன் என்று கணனி ஊடாக முயற்சி செய்து பார்த்தேன், முன்பு இவ்வாறு முயற்சிக்கும் போது எனது மின்னஞ்சலுக்கு Reset password என்று email வரும். இப்பொழுது வருவதில்லை. வெற்றி பெற வாழ்த்துகள் வெற்றி பெற வாழ்த்துகள்
  20. ஓய்வூதியம் வரவேண்டும். ஓம் இலங்கையில் அரச ஊழியர்களுக்கு மட்டும் தான் ஓய்வூதியம் கிடைக்கும் என்று நானும் அறிந்திருக்கிறேன். நடைபெறுவது ஜேவிபி அநுரகுமார திசாநாயக்க ஆட்சி. ஓய்வூதியம் வேண்டாம் நாம் ஓய்வூதியம் இல்லாமல் வேலை செய்ய தயார் என்று தமிழ் அரச ஊழியர்கள் ஊர்வலம் போனாலும் போவார்கள் 😂
  21. எல்லா மெளனங்களும் திமிர் அல்ல சில மௌனங்கள் சொல்ல முடியாத ஆறாத காயங்கள் சரியோ தவறோ உன் வாழ்க்கை எனும் புத்தகத்தை எழுதும் எழுதுகோல் உன் கையில் இருக்க வேண்டும் மற்றொருவர் கையில் கொடுத்தால் கிறுக்கி தள்ளி விடுவார்கள். சரி பாதியாக வாழ்வது இல்லை வாழ்க்கை. சரியும் போது சாயும் தோள் கொடுத்து வாழ்வது தான் வாழ்க்கை வாழ்க்கையை சற்று தனித்து வாழும் கற்றுக் கொள்ளுங்கள் ஏனெனில் நம்மோடு இருப்பவர் எப்போது காற்றில் மறைந்து போவார் என்பது தெரியாது. வலியுடன் வாழ்க்கை எல்லோருக்கும் இருக்கிறது சிலர் கடந்துபோவார்கள் சிலர் மறந்து போனார்கள். வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம் தன்னம்பிக்கை குறிக்கோள் திட்டமிடல் எனக்கு மட்டும் இவ்வளவு கஷ்ட மென்று கடவுளிடம் கேட்டேன் அதற்கு கடவுள் சொன்ன பதில் இந்தக் கஷ்டமெல்லாம் உன்னை சுற்றியிருப்பவர் முகத்திரையை கிழிக்கும் ஆயுதம் என்று புரிந்தால் நீ அறிவாளி . மனதில் வைத்துக் கொள் உறக்கம் இரக்கம் என்பது அளவோடு இருக்க வேண்டும். அதிகம் தூங்கினால் சோம்பேறி என்று எண்ணுவார்கள் அதிகம் இரங்கினால் ஏமாளி என எண்ணி எடை போட்டுவிடுவார்கள். எனவே அளவோடு வைத்துக் கொள் தொலைவில் இருக்கும் வரை நாயும் நரியும் ஒன்றாகத்தான் தெரியும் அருகில் இருந்தால் மட்டுமே நாயின் நன்றியும் நரியின் தந்திரமும் புரியும். உனக்கான தேடலை உன்னால் மட்டுமே கண்டறிய முடியும் . உனக்கானமாற்றத்தை உன்னால் மட்டுமே விதைக்க முடியும் உனக்கானவாழ்வின் முடிவை உன்னால் மட்டுமே எடுக்க முடியும் Virus-free.www.avg.com
  22. அண்ணை, எனக்கொரு டவுட் இருந்தது! இந்த செய்திகளை அறம்புறமா இணைக்கிறன் என்றதால எனக்கு மட்டும் கொஞ்சம் வேகத்தடை போட்டிருக்கினமோ என்று!! (நகைச்சுவைக்காக) தொழிநுட்பக் காரணங்கள் நிறைய இருக்கும், நாங்கள் இப்ப எல்லாம் வேகவேகமா வேணும் என்று விரும்புகிறோம். முதன்முதல் 2006 இல் கொழும்பில் இணையம் பாவிக்க தொடங்கையில் 512 kb/s என்ற வேகம் தான். இப்ப கொஞ்சம் வேகமாக இயங்குவதாக உணர்கிறேன் @மோகன் அண்ணை. மிக்க நன்றி. இணைய வழங்கி நெருக்கடி ஏற்பட்டதோ?!
  23. 14 Sep, 2025 | 11:27 AM சீனோர் நிறுவனத்தினுடைய (Cey-Nor foundation Ltd) யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில் அமைந்துள்ள தொழிற்சாலையினது தொழிற்பாடுகள் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளன. பைபர் (Fiber) மூலப்பொருளைக் கொண்டு அனைத்து வகையான பொருட்களையும் உற்பத்தி மற்றும் பரும்படியாக்கம் செய்து சந்தைப்படுத்தும் செயன்முறையை மேற்கொள்ளும் முகமாக இத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட இருக்கின்றது. அதற்கான ஆயத்த வேலைகள் ஆரம்பமாகி முன்னோட்டமாக படகு, மீன் விற்கும் தாங்கி, மீன் குஞ்சு வளர்ப்புத் தொட்டி என்பன உற்பத்தியாக்கப்பட்டுள்ளன. குறித்த நிறுவனம் கடல்தொழில் சார் பொருட்களை உற்பத்தி மற்றும் பரும்படியாக்கும் நோக்கத்துடனேயே இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் தற்போது யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்படும் தொழிற்சாலை அதிக கேள்வியுள்ள ஏனைய பைபர் மூலப்பொருள்சார் பொருட்களையும் தயாரிக்கத் தயார்ப்படுத்தப்பட்டு வருகின்றமை விசேட அம்சமாகும். குறிப்பாக வடக்கு மாகாணத்தின் கடற்றொழில் சார் உபகரணத் தேவைகளைத் தன்நிறைவோடு வழங்கும் நிலையமாக இது அமையும். இதன்வழி சுமார் 100 - 150 திறன் வேலைவாய்ப்புகள் உருவாகச் சாத்தியமுள்ளது. தற்போதைய நிலையில், சாதாரண கட்டுமரம் அளவிலான தோணி முதல் 30 அடி நீளமான படகுகள் வரை, 1 - 2 மீற்றர் வரையான விட்டம் கொண்ட மீன் வளர்ப்புத் தொட்டிகள், மீன் விற்கும் வண்டிகளில் பொருத்துவதற்கான குளிரூட்டக்கூடிய பெட்டி என்பன இங்கு தயாரிக்க ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி மாலை குறித்த தொழிற்சாலையானது, கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோரால் ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/225040
  24. 14 Sep, 2025 | 12:24 PM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் குழந்தை மருத்துவ விடுதி புதிய கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. போதனா வைத்தியசாலையில் கடந்த ஐந்து வருடங்களாக இலக்கம் 5 மற்றும் இலக்கம் 12 பிரிவுகளில் இயங்கி வந்த குழந்தை மருத்துவ விடுதி தற்போது இல.39 இல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வைத்தியசாலையில் விடுதிகள் மற்றும் சில விசேட சிகிச்சை பிரிவுகளுக்கான இடப்பற்றாக்குறை காணப்படுகின்றது. மேலும் சில கட்டட தொகுதிகள் அமைக்கப்பட்டு விடுதிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கான ஆரம்பகட்ட வேலைகள் நடைபெற்று வருகின்றது என வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225045
  25. இந்த வங்கி இதில் அங்கம் அகிக்கப்போகும் நாடுகளின் பொருளாதாரத்தை உயர்த்தும். கிட்டத்தட்ட இந்த நாடுகளுக்கு இந்த வாங்கி ஓர் உள்ளூர் வங்கியாக (local bank) சர்வதேச மட்டத்தில் செயற்படும். ஒரு நாட்டில் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படை அடுத்த படி (அரசியல் நிலைத்தன்மை, மற்றும் சமாதான நிலை என்பவற்றை கொண்டு இருந்தால் ) , சுயாதீன உள்ளூர் வங்கிகள் இருப்பது. உள்ளூர் வங்கியாக இருந்தால் , சுயாதீனத்தில் எவரும் தலையிடுவது மிக கடினம். இப்படியே மேற்கு வளர்நதது, அனால் அதை இப்பொது மற்ற நாடுகளில் மேற்கு தடுக்கிறது, IMF ஆல். ஜப்பானும், 2ம் உலக யுத்த அழிவின் பின் மின்னல் வேகத்தில் வளர்ந்தது, காரணம் உள்ளூர் வங்கிகள் அந்தந்த துறை, உள்ளூரை பற்றி தெரிந்த வங்கிகளை ஜப்பான் உருவாக்கியது. சீனாவின் இபோதையா வளர்ச்சியின் தந்தை என்று கருதப்படும் டென்ஷிய பிங், ஜப்பானிடம் வளர்ச்சியின் இரகசியத்தை கேட்க சென்றார். ஜப்பானின் கலாசாரமான வேலைகுக்கு பின் நடக்கும் சுவாரசிய ஒன்று கூடலில் யதார்த்தத்தை கதைப்பது என்பதிலேயே ஜப்பானிய அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் இந்த உள்ளூர் வங்கிகள் பற்றி டென்ஷிய பிங் இடம் விளக்கினார்கள். பின்பு சீன அதை அதுக்கேற்ற முறையில் உள்வாங்கியது. பின் சமகால வரலாறு சீனாவின் வளர்ச்சி.
  26. ஐ போன் சுத்தி சுத்தி சுப்பர்ரை கொல்லைக்கையே நிக்குதெண்டு ஆய்வாளர்கள் சொல்லீனம். 😂 ஐ போன் 15டன் ஆட்டம் குளோஸ். இப்ப சம்சுங் இன்னும் இன்னும் பெட்டராய் மினுங்கிக்கொண்டு போகுது.ஐ போன் சும்மா சும்மா ஒரு பிரமையே தவிர புதிசாய் ஒண்டுமில்லை போல கிடக்கு. பட்டன்களை தான் கூட்டிக்கொண்டு போயினம்.😎 ****
  27. பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பாறைகள் சிறுத்தைப் புள்ளிகள் போல் தோற்றமளிக்கும் வித்தியாசமான குறிகளால் மூடப்பட்டுள்ளன. கட்டுரை தகவல் ரெபேக்கா மோரல் அறிவியல் ஆசிரியர் 13 செப்டெம்பர் 2025, 01:53 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட வித்தியாசமான பாறைகள், அந்த செந்நிற கிரகத்தில் கடந்த காலத்தில் உயிர்கள் இருந்ததற்கான மிகவும் ஆர்வமூட்டும் ஆதாரங்களை கொண்டிருக்கின்றன. நாசாவின் பெர்சிவரன்ஸ் ரோவர் ஒரு தூசி நிறைந்த ஆற்றுப் படுகையில் கண்டறிந்த மட்ஸ்டோன் பாறைகளுக்கு, 'சிறுத்தை தடம்' (Leopard Spots) மற்றும் 'பாப்பி விதைகள்' (Poppy Seeds) எனப் புனைப்பெயர் சூட்டப்பட்டன. இந்த அம்சங்கள், பழங்கால செவ்வாய் நுண்ணுயிரிகளுடன் தொடர்புடைய ரசாயன எதிர்வினைகளால் உருவாக்கப்பட்ட தாதுக்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இந்த தாதுக்கள் இயற்கையான புவியியல் செயல்முறைகளால் உருவாக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த அம்சங்கள் இதுவரை உயிர்கள் இருப்பதற்கு கண்டறியப்பட்ட மிகத் தெளிவான அறிகுறிகளாக இருக்கலாம் என ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் நாசா கூறியது. இந்த கண்டுபிடிப்புகள், நாசாவின் 'சாத்தியமான பயோசிக்னேச்சர்கள்' அதாவது (Potential Biosignatures) என்று அழைக்கப்படும் அளவுகோல்களை பூர்த்தி செய்யும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தவை. இவை உயிரியல் தோற்றம் கொண்டவையா என்பதை உறுதிப்படுத்த கூடுதல் ஆய்வு தேவை என்பதே இதன் பொருள். "இதுவரை இப்படி ஒரு விஷயத்தை நாங்கள் பெற்றதில்லை, அதனால் இதுதான் முக்கியமான விஷயம்," என்று லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த கிரக விஞ்ஞானி பேராசிரியர் சஞ்ஜீவ் குப்தா கூறினார். இவர் இந்த ஆய்வின் இணை ஆசிரியர்களில் ஒருவர், இந்த ஆய்வு நேச்சர் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. "நாங்கள் பாறைகளில் கண்டறிந்த அம்சங்களை ஒருவேளை பூமியில் பார்த்தால், உயிரியல் - நுண்ணுயிரி செயல்முறைகளால் விளக்க முடியும். எனவே, நாங்கள் உயிரைக் கண்டறிந்தோம் என்று கூறவில்லை, ஆனால் இது உண்மையிலேயே எங்களுக்கு பின்தொடர வேண்டிய ஒரு விஷயமாக உள்ளது" என்று அவர் கூறினார். "இது ஒரு எஞ்சிய புதைபடிவத்தைப் பார்ப்பது போன்றது. ஒருவேளை இது ஒரு எஞ்சிய உணவாக இருக்கலாம், ஒருவேளை நாம் பார்த்தது வெளியேற்றப்பட்ட கழிவாக கூட இருக்கலாம்" என்று நாசாவின் அறிவியல் பணி இயக்குநரகத்தின் இணை நிர்வாகி நிக்கோலா ஃபாக்ஸ் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளுக்கு 'சிறுத்தை தடங்கள்' மற்றும் 'பாப்பி விதைகள்' என புனைப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகளால் உருவாக்கப்பட்டவை என்பதை முழுமையாக உறுதிப்படுத்த ஒரே வழி, பாறைகளை பூமிக்கு கொண்டு வந்து ஆய்வு செய்வது மட்டுமே. நாசாவும் ஈசாவும் (ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்) செவ்வாயிலிருந்து ஒரு மாதிரியை எடுத்து வரும் திட்டத்தை முன்மொழிந்துள்ளன, ஆனால் அதன் எதிர்காலம் மிகவும் நிச்சயமற்றதாக உள்ளது. அதிபர் டிரம்பின் 2026 பட்ஜெட்டில், அமெரிக்க விண்வெளி முகமையின் அறிவியல் பட்ஜெட் மிகவும் குறைவாகவே முன்மொழியப்பட்டுள்ளது. இதனால் மாதிரிகளை எடுத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளது. இன்று, செவ்வாய் ஒரு குளிர்ந்த மற்றும் வறண்ட பாலைவனமாக உள்ளது. ஆனால் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அது வளிமண்டலத்தையும் நீரையும் கொண்டிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. இது கடந்த காலத்தில் வாழ்ந்த உயிரைத் தேடுவதற்கு ஒரு நம்பிக்கைக்குரிய இடமாக உள்ளது. 2021இல் செவ்வாய் மேற்பரப்பில் தரையிறங்கிய பெர்சிவரன்ஸ் ரோவர், உயிரியல் அறிகுறிகளைத் தேட அனுப்பப்பட்டது. கடந்த நான்கு ஆண்டுகளாக இது ஜெஸிரோ பள்ளம் என்ற பகுதியை ஆராய்ந்து வருகிறது, இது ஒரு காலத்தில் ஒரு நதி பாயும் ஏரியாகவும் இருந்தது. கடந்த ஆண்டு பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷன் என்ற பகுதியில் ஆற்றால் உருவான ஒரு பள்ளத்தாக்கின் அடிப்பகுதியில் சிறுத்தை தடம் என்ற பாறைகளை ரோவர் கண்டறிந்தது. இவை சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகள் பழமையானவை மற்றும் களிமண்ணால் உருவான பாறைகளான 'மட்ஸ்டோன்' என்று அழைக்கப்படும் பாறை வகைகள். "இந்த பாறைகளில் சில சுவாரசியமான ரசாயன மாற்றம் நடந்திருப்பதை அறிந்தோம், இதனால் நாங்கள் மிகவும் உற்சாகமடைந்தோம்," என்று நியூயார்க்கில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜோயல் ஹுரோவிட்ஸ் கூறினார். இவர் பெர்சிவரன்ஸ் திட்ட விஞ்ஞானியும், ஆய்வின் முதன்மை ஆசிரியரும் ஆவார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பாறைகளில் உள்ள தாதுக்கள் ஆய்வு செய்யப்பட்டன. ரோவர் அதன் உள்ளக ஆய்வகத்தில் உள்ள பல கருவிகளைப் பயன்படுத்தி பாறைகளில் உள்ள தாதுக்களை ஆய்வு செய்தது. இந்த தரவு பின்னர் விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டது. "நாங்கள் கண்டறிந்தவை, ஒரு ஏரியின் அடிப்பகுதியில் படிந்த மண்ணில் நடந்த ரசாயன எதிர்வினைகளுக்கான ஆதாரம் என்று நினைக்கிறோம். இந்த ரசாயன எதிர்வினைகள் மண்ணுக்கும் கரிமப் பொருளுக்கும் இடையே நடந்ததாகத் தோன்றுகிறது. இந்த இரண்டு பொருட்களும் எதிர்வினையாற்றி புதிய தாதுக்களை உருவாக்கியுள்ளன," என்று ஹுரோவிட்ஸ் விளக்கினார். பூமியில் இதே போன்ற சூழ்நிலையில், தாதுப் பொருட்களை உருவாக்கும் ரசாயன எதிர்வினைகள் பொதுவாக நுண்ணுயிரிகளால்தான் நிகழ்கின்றன. "இந்த அம்சங்கள் இந்த பாறைகளில் எவ்வாறு உருவாயின என்பதை விளக்க இது ஒரு சாத்தியமான விளக்கமாக இருக்கும்," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். "நாம் இதுவரை கண்டறிந்தவற்றில் இதுவே வலிமையான மற்றும் மிகவும் உறுதியான பயோசிக்னேச்சர் எனத் தோன்றுகிறது" விஞ்ஞானிகள் இந்த தாதுக்கள் நுண்ணுயிரிகள் இல்லாமல் எவ்வாறு உருவாகியிருக்கலாம் என்பதையும் ஆய்வு செய்தனர். இயற்கையான புவியியல் செயல்முறைகளும் இந்த ரசாயன எதிர்வினைகளுக்கு பின்னால் இருக்கலாம் என்று முடிவு செய்தனர். ஆனால் இவற்றிற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படும், ஆனால் பாறைகள் சூடாக்கப்பட்டவை போல் தெரியவில்லை. "உயிரியல் அல்லாத சாத்தியங்களுக்கு சில சிரமங்களை நாங்கள் கண்டோம். ஆனால் அவற்றை முற்றிலும் நிராகரிக்க முடியாது," என்று ஹுரோவிட்ஸ் கூறினார். பட மூலாதாரம், NASA/JPL படக்குறிப்பு, பெர்சிவரன்ஸ் பாறைகளின் அற்புதமான மாதிரிகளை சேகரித்துள்ளது. பெர்சிவரன்ஸ் செவ்வாய் கிரகத்தை ஆராயும் போது பிரைட் ஏஞ்சல் ஃபார்மேஷனில் கண்டறியப்பட்ட பாறைகள் உள்ளிட்ட மாதிரிகளையும் சேகரித்து வருகிறது. இவை குப்பிகளில் சேமிக்கப்பட்டு, பூமிக்கு திருப்பி அனுப்பக் கூடிய விண்கலத்திற்காக செவ்வாய் மேற்பரப்பில் வைக்கப்படும். நாசாவின் இத்தகைய முயற்சிக்கான திட்டங்கள், டிரம்பின் பட்ஜெட் குறைப்பு அச்சுறுத்தலால் நிலுவையில் உள்ளன. அதேநேரத்தில், மாதிரிகளை எடுத்து வரும் ஒரு திட்டத்தை 2028ஆம் ஆண்டில் தொடங்க சீனாவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நாசா பட்ஜெட் குறைப்பு முடிவு விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் நிலையில், விஞ்ஞானிகள் இந்த பாறைகளை தங்கள் கைகளில் பெற ஆவலாக உள்ளனர். "இந்த மாதிரிகளை நாம் பூமியில் வைத்து பார்க்க வேண்டும்," என்று பேராசிரியர் குப்தா கூறினார். "உண்மையான நம்பிக்கையை பெற, பெரும்பாலான விஞ்ஞானிகள் இந்த பாறைகளை பூமியில் பார்த்து ஆய்வு செய்ய விரும்புவார்கள். இது பூமிக்கு எடுத்து வர வேண்டிய மாதிரிகளில் அதிக முன்னுரிமை கொண்ட மாதிரிகளில் ஒன்றாகும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xr4vzrkqpo
  28. அந்நியரிடமிருந்து ஒன்று சேர்ந்து பெற்ற சுதந்திரத்தை, தன்னகப்படுத்தி அந்த இனத்தை அந்நியப்படுத்திய துரோகிகள் நாட்டை, மக்களை, மதத்தை, மொழியை பிரித்து நாட்டை கொள்ளையடித்தவர்கள் தியாகிகளாம். இவர்களின் இந்த வாய் வீர உணர்ச்சி வசப்பேச்சுகளை நம்பி மக்கள் ஏமாறுவதாலேயே இவர்கள் மீண்டும் மீண்டும் அரசியல் செய்ய முடிகிறது. ஏமாறுவோர் உள்ளவரை ஏமாற்றுவோரும் குறைவுபடார். சட்டத்திற்கு தலை வணங்குபவர், நீதிபதியை வீட்டுக்கு அனுப்பி பழிவாங்கியது ஏன்? நீதிமன்றத்திற்கு போக அஞ்சி மக்களை திரட்டுவது ஏன்? விமர்சிப்பது ஏன்? நோய் வருவது ஏன்? விழுந்து எழும்புவதும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதுமேன்? தாங்களே நாட்டை ஆளவேண்டுமென்று சட்டங்களை மாற்றி இயற்றியது மனதில் வரவில்லையோ இவருக்கு இதை சொல்லும்போது? அது சரி, மக்களை ஊடகங்களை அழைத்து புலம்புவது ஏன்? வீடற்றவர் போல் ஒப்பாரி வைத்ததுமேன்? மக்கள் பணத்தில் சொகுசாக வாழ்ந்தவர் கோடி சொத்துக்களை முறையற்ற விதத்தில் சேர்த்தவர், இளைப்பாறிய பின்னும் மக்கள் பணத்தில் வாழ நினைப்பது பேராசை. தன் வேலையை தானே செய்ய முடியாமல் வேலையாட்களை கேட்பவர், தன்னை பாதுகாக்க பாதுகாப்பு கேட்பவர், தனக்கென வீடு இல்லாமல் மக்களின் வீடுகளில் வாழ நினைப்பவர்கள் மக்களுக்கு, நாட்டுக்கு எப்படி சேவை செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதத்தை அறிமுகப்படுத்தியவர்கள், அது தங்களுக்கு எதிராக பாயும் போது அதை தாங்க முடியவில்லை, குறை கூறுகிறார்கள். என்ன செய்வது? வேலிக்கு வைத்த முள் வைத்தவரின் காலை குற்றத்தான் செய்யும். சுதந்திரம்! அது இந்த நாட்டில் இருக்கிறதா? அதை சிதைத்தவர் தொலைத்தவரே இவர்தான்! இந்த இராணுவத்தை சர்வதேசத்தில் குற்றவாளிகளாக்கி, தங்களுக்குள் தியாகிகளாக காட்டி தம்மை பாதுகாத்து கொள்கிறார்கள். தமது திட்டத்தை நிறைவேற்றவும், தம்மை பாதுகாக்கவும் இராணுவத்தை பலி கொடுக்கிறார்கள். அந்த இராணுவமே இவர்களை கைவிட்டதை மறந்து விட்டார் போலும். ஒரு தலைவன், தன் பிள்ளைகளை, குடும்பத்தை பாதுகாத்துக்கொண்டு, சொகுசு அனுபவித்துக்கொண்டு, ஏழைப்பிள்ளைகளை பலி கொடுத்து, தான் வீரம் பேசுவது, தானே சுதந்திரத்தை கொண்டுவந்தேன் என்று கொண்டாடுவதும், உயிர் இழந்த இராணுவத்தினரின் உடல்களை உறவுகளுக்கு அளிக்காமல் உண்மைகளை மறைத்ததும் சரியா? யார் போர் புரிந்தவர்கள்? இவரா அல்லது இவர் குடும்பத்தை சேர்ந்தவர்களா? றக்பி வீரரின் கொலையில் இவர் பிள்ளைகளின் தனிப்பட்ட ஒழுக்கம் நாடு அறிந்தது. ஊடகவியலார்களின் கொலையில் இவரது குடும்ப ஒழுக்கம் வெளிப்பட்டது. பாதாள, போதைக்கும்பலில் இவர்களின் அரசியல் ஒழுக்கம் வெளிப்படுகிறது. எல்லோருக்கும் சட்டம் சமன். இவர்கள் மட்டும் ஏன் அஞ்சுகிறார்கள், வைத்தியசாலையில் படுக்கிறார்கள், விமர்ச்சிக்கிறார்கள், புலம்புகிறார்கள், வெதும்புகிறார்கள்? அதன் பலனை அவர்களே முதலில் அனுபவித்தார்கள். அவர்கள் மேல் வைத்த குற்றச்சாட்டை, அரசியலுக்கு வந்த உடனேயே உங்களாக மாற்றி காட்டிய பெருமை உங்களை சாரும். நீங்கள் அரசியல் செய்ய, செய்த ஊழலை மறைக்க, அவர்கள் குடும்ப அரசியல் செய்கிறார்கள் என மக்களின் மனதை மாற்றி அரசியல் வெற்றி பெற்றவர், பின்னாளில் குடும்ப அரசியல் செய்ததை மக்கள் மறந்ததே உங்கள் வெற்றி. தமிழர் ஓரங்கட்டப்படுவதற்கு தனது தந்தையே முக்கிய காரணம் என்பதை காலம் கடந்து அவரது மகளே ஒத்துக்கொண்டுள்ளார். இவர் புதுக்கதை சொல்லி தன்னை கதாநாயகன் என்கிறார். அதே மஹிந்த ராஜபக்சவும் அவரது குடும்பத்தினருமே ஒரு இனத்தை அழித்து காணாமல் ஆக்கி துவம்சம் செய்து விட்டு, அது நடக்கவேயில்லை என வாதாடுகிறார், விசாரணை என்றால் அஞ்சுகிறார், இராணுவத்தை சாட்டி ஒழிய பார்க்கிறார். இவற்றில் ஈடுபட்டவர்கள் கடத்தப்பட்டும், காணாமல் ஆக்கப்பட்டதும் கொலை செய்யப்பட்டதும் சித்திரவதை செய்யப்பட்டதும் உங்கள் ஆட்சிக்காலத்தில். இப்போ உங்களுக்கென்றவுடன் உபதேசம் செய்ய முடிகிறது இந்த ரவுடிக்கும்பலால். தாங்கள் செய்தது தங்களுக்கு நேர்ந்து விடுமோவென அஞ்சுகிறார்கள், மக்களை கெஞ்சுகிறார்கள். முதலில் உங்களுக்கெதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு ஓடி ஒழியாமல், விழுந்து முறிந்து படுக்கையில் விழாமல், மக்களை திரட்டாமல், ஆரவாரம் செய்யாமல், இராணுவத்துக்கு பின்னால் ஒழியாமல் சட்டத்திற்கு கீழ்ப்பணிந்து தனித்து நின்று உங்களை நிஞாயவாதியாக நிரூபியுங்கள். அதன் பின் மற்றவைகளை யோசிக்கலாம். இப்படி ஒரு நிலைமை வராது என்றும் நீங்களே எப்போதும் நாட்டை ஆளுவீர்கள் என்றும் கனவு கண்டது உங்களது அறியாமை. அரசியலில் மட்டுமல்ல கொலை, ஏமாற்று, ஊழல் எல்லாவற்றிலுமே பலமாக இருந்துள்ளார். அதனாலேயே அவரும் விசாரணைகளை எதிர்நோக்கியுள்ளார். குடும்பமே ஏமாற்று குடும்பம். இதற்கு அரசியல் ஒரு கேடு. சட்டம் சகலருக்கும் சமம். சரத் பொன்சேகாவை போர் முடிந்தவுடன் யாவரும் புகழ்ந்தனர், அதை பொறுத்துக்கொள்ளாத கோத்தா, அவரை ஒதுக்க ஆரம்பித்தார். இதனால் சீற்றமடைந்த பொன்சேகா அரசியலில் குதித்தார். இவரோடு சேர்ந்தால் தமக்கு வாக்கு அதிகமாகும் என எண்ணிய எதிர்கட்சிகள் பொன்சேகாவுடன் கரங்கோத்தனர். இதனால் அச்சம்கொண்ட ராஜபக்ஸக்கள், தேர்தல் குளறுபடி செய்து ஆட்சியை கைப்பற்றிய கையோடு அவரை ஒரு மிருகதைப்போல் அடித்து இழுத்து சென்று சிறையில் போட்டனர். அவரோடு சேர்ந்திருந்த அரசியல் வாதிகள் திகைத்து அவரை கைவிட்டு மறைந்தனர், அவரை சிறையில் சென்று சந்திக்கவேயில்லை. அன்று விழுந்த பொன்சேகாவால் இன்றுவரை எழுந்திருக்க முடியவில்லை. மக்களும் பேச அஞ்சினர். தேர்தல் ஆணையாளர் தேர்தல் முறைகேடுகள் நடக்கிறது என கூப்பாடு போட்டார். இவர்கள் ஆட்சியைப்பிடித்தவுடன் அப்படியேதும் நடக்கவில்லையென பல்டி அடித்து விட்டார். அப்படியொரு காலாச்சாரத்தை ஏற்படுத்த ராஜபக்ஸக்களாலேயே முடியும். அதனாலேயே ஈஸ்ரர் குண்டுத்தாக்குதலை துணிந்து நடத்தினர். ஊழல், கொலை, கொள்ளை, போதை கலாச்சாரத்தை வளர்த்தனர். அவர்களது காட்டாட்சியே இன்றைய துர்பாக்கிய நிலைமைக்கு காரணம். தங்களை நிஞாயப்படுத்த தமிழரை பலி கொடுத்து தம்மை மேன்மைப்படுத்திக்கொண்டனர். "செய்த அதர்மம் தக்க சமயத்தில் கழுத்தறுக்கும்."
  29. வணக்கம் நிர்வாகத்தினரே, யாழ் களத்தின் இலச்சினை எனக்குத் தெரியவில்லை (Light mode)இல்.
  30. லயம் – கொ. தினேஸ். written by admin September 11, 2025 லயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள் வாழும் வீட்டு தொகுதி என்று. வாருங்கள் பார்ப்போம் மலையக மாந்தர்கள் “மனம் கொண்டதே மாளிகை” என கருதி வாழும் லயத்தை பற்றி. ஒற்றை, இரட்டை வரிசையில் சிறு சிறு அறைகளைக் கொண்டிருக்கும். ஒற்றை வரிசையாக இருந்தால் 12 அறைகளும் இரட்டை வரிசையாக இருந்தால் 24 அறைகளும் கொண்டதாக லயம் இருக்கும், 12 அறைகள் கொண்ட லயன் தொகுதியை மலையக மக்கள் “12 காம்பரா” எனவும் 24 அறைகளைக் கொண்ட லயன் தொகுதியை “24 காம்பரா” என அவர்களின் பேச்சு மொழியில் அழைப்பர். 10 முதல் 12 லயன்களைக் கொண்டது ஒரு டிவிசனாக கொள்ளப்படும் இங்கு “டிவிசன்” (னுiஎளைழைn) என்பது பிரிவு ஆகும். இவ்வாரு 3 தொடக்கம் 5 டிவிசன்களை கொண்டது ஒரு தோட்டமாக (நுளவயவந) கொள்ளப்படும். உதாரணம் – களுத்துறை மாவட்டத்தில் ஹல்வத்துறை தோட்டத்தில் காகல டிவிசன், தெல்மேல்ல டிவிசன், கீழ் பிரிவு, மேல் பிரிவு, மத்திய பிரிவு என ஐந்து டிவிசன்கள் (பிரிவுகள்) காணப்படுகின்றன. லயத்தின் ஒரு அறையின் அளவு 10ழூ20 என நீள, அகலங்களை கொண்டு இருக்கும். அத்தோடு அதற்கு முன் 6ழூ10 அகல நீளங்களை கொண்ட “குசினி”(சமயலறை) அல்லது “இஸ்தோப்பு” பகுதி காணப்படும். ஒரு அறைக்கு ஒரு கதவு மாத்திரமே காணப்படும். ஒற்றை வரிசை லயமாக இருக்கும் போது சில நேரம் இரண்டு கதவுகள் காணப்படும். லயத்தின் அனைத்து கதவுகளும் இரண்டு திறக்கும் பகுதிகளைக் கொண்டதாகக் காணப்படும். இஸ்தோப்பு அல்லது குசினி பகுதியில் கையை தூக்கினால் தொடக்கூடிய உயரத்தில் “அட்டல்” காணப்படும். அட்டல் என்பது பரன் ஆகும். விறகு சேகரித்து வைத்திருக்கும் இடமாகும். லயத்தில் ஒரு குடும்பத்திற்கு ஒரு அறை. ஒரு அறைதான் அவர்களின் ஒரு வீடு. லயத்திலிருந்து 100 அல்லது 200 மீட்டர் தூரத்தில் “லெட்டு” என மலையக மக்கள் கூறும் மலசலக்கூடம் காணப்படும். ஒரு லயத்திற்கு 2 அல்லது 3 மலசலகூடமே காணப்படும். ஒரு டிவிசனில்(பிரிவில்) உள்ள அனைத்து லயன்களுக்கும் இலக்கம் இடப்பட்டிருக்கும். மக்கள் லயன்களை அடையாளப்படுத்த “ஒன்னா நம்பர் லயம்”, “ ரெண்டா நம்பர் லயம்” எனவும் “மேட்டு லயம், கீ லயம்” எனவும் அடையாளப்படுத்திக் கொள்வது வழக்கம். லயம் பொதுவாக தகரத்தில் ஒரே கூரையாக மூடப்பட்டிருக்கும். தனித்தனியான கூரையமைப்பு இங்கு இல்லை. அனைத்து லயன்களும் சுண்ணாம்பு பூச்சு பூசப்பட்டு இருக்கும். லயத்தின் பின்புறத்தினை “கோடி புறம்” என்றும் லயத்தின் கடைசி அறை இருக்கும் பகுதியை “தொங்கல்” என்றும் அழைப்பர். ஒரு டிவிசனில் இரண்டு அல்லது மூன்று கிணறுகள் காணப்படும். அதில் குடிப்பதற்கும், குளிப்பதற்கும் கிணறுகள் வேறு வேறாக காணப்படும். ஒவ்வொரு டிவிசனுக்கும் பொதுவான ஒரு இடத்தில் ஒரு கோயில் இருக்கும். இது தான் மலையக மக்கள் “மனம் கொண்டதே மாளிகையாக” வாழும் லயன் ஆகும். கொ. தினேஸ் நுண்கலை துறை, கலைக்கலாசார பீடம், கிழக்குப் பல்கலைக்கழகம்,இலங்கை. Global Tamil Newsலயம் - கொ. தினேஸ். - Global Tamil Newsலயம் என்று சொன்னால் உங்கள் மனக்கண்ணில் வருவது என்ன? எத்தனை பேருக்கு தெரியும் இது மலையக மக்கள்…
  31. இருக்கும் முறையை பார்க்கும் போது, அப்படித்தான் நடந்து இருக்கும் போல் உள்ளது. எவ்வளவு கொடுமையை அனுபாவித்து இருப்பார். மேற்கொண்டு எழுத மனதுக்கு கஷ்டமாக உள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.