Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்13Points87988Posts -
ரசோதரன்
கருத்துக்கள உறவுகள்13Points3049Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்6Points31948Posts -
suvy
கருத்துக்கள உறவுகள்6Points33600Posts
Popular Content
Showing content with the highest reputation on 09/19/25 in all areas
-
ஒரு பயணமும் சில கதைகளும்
7 points3. புலம் பெயர்ந்த இலக்கியம் --------------------------------------------- காத்திரமான, நீண்ட காலத்தில் நிலைத்து நிற்கப் போகும் பல உண்மைகளும், விடயங்களும், ஆக்கங்களும், மனிதர்களும் அவர்கள் அல்லது அவைகளின் ஆரம்ப காலங்களில் கவனிக்காமல் விடப்படுவது அல்லது உதாசீனப்படுத்தப்படுவது வழமையே. எங்கள் இனத்தில் இந்தப் போக்கு இன்னும் கொஞ்சம் அதிகமோ என்று இடையிடையே தோன்றுவதுண்டு. ஆனால் பூமி சூரியனைச் சுற்றுகின்றது என்று சொன்னதற்காக கலீலியோ கலிலி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு, அப்படியே இறந்து போனார் என்பது போன்ற நிகழ்வுகளால், உலகில் ஒருவர் இன்னொருவருக்கு குறைவில்லை போல என்று சமாதானம் அடைவதும் உண்டு. சில சமூகங்கள் கால நதியில் வேகமாக நீந்தி முன்னே போய்விட்டன. வேறு சில பழம் பெருமைகள் பேசிக் கொண்டே சிறிது பின்தங்கிவிட்டன. மலை வேம்பு என்னும் மரத்தை, அதை ஒரு விருட்சம் என்றே சொல்ல வேண்டும் என்று நினைக்கின்றேன், பத்து பன்னிரண்டு வயதாக இருக்கும் போதே முதன் முதலில் பார்த்தேன் என்று நினைக்கின்றேன். அதற்கு முன்னரேயே ஊர் வேப்ப மரங்களில் நுனி வரை ஏறி வேப்பம் பூ பிடுங்கும் வேலையில் சிறப்பு தேர்ச்சி அடைந்து இருந்தேன். எங்கள் ஊரில் வேப்பம் மரங்களின் உச்சியில் இருந்து பார்க்கும் போது நீலக் கடல் தொடுவானம் வரை எல்லையில்லாமல் தெரியும். இவையெல்லாம் ரசித்துப் பார்க்க வேண்டிய விடயங்கள் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை. வேப்பம் பூ பிடுங்கி, மரச் சொந்தக்காரருக்கு ஒரு பங்கைக் கொடுத்து விட்டு, மிகுதியை சில வீடுகளுக்கு விற்போம். வடகம் செய்வதற்காக வாங்குவார்கள். கடலின் அழகை ரசிப்பதை விட, அதிக வேப்பம் பூ சேர்ப்பதிலேயே கவனம் இருந்தது. ஆனால் மலை வேம்பு பூக்கவில்லை, அதனால் அந்த விருட்சத்தின் மீது ஏறும் தேவை ஏற்படவில்லை. மலை வேம்பு ஊர் வேப்பம் மரத்தை விட கடுமையான நிறம் கொண்டதாகவும், உறுதியானதாகவும் தெரிந்தது. அந்தக் காலங்களில் திருகோணமலை சல்லியில் இருந்து ஒரு உதைபந்தாட்ட அணியினர் எங்களூருக்கு போட்டிகளுக்கு வந்திருந்தார்கள். அவர்களின் அணி மிகவும் திறமையானது, ஆனால் அவர்களின் விளையாட்டில் முரட்டுத்தனம் சிறிது அதிகமாக இருந்தது போலத் தெரிந்தது. அதனாலும், மலை என்னும் பெயராலும், மலை வேம்பு திருகோணமலையிலேயே அதிகமாக இருக்கின்றது என்று நானாகவே முடிவெடுத்து வைத்திருந்தேன். பல வருடங்களின் பின்னர் திருகோணமலையில் மூன்று மாதங்கள் தங்கியிருந்தேன். அங்கு ஒரு மலை வேம்பையும் நான் காணவில்லை. ஆனால் சிட்னியில் ஒரு மலை வேம்பைக் கண்டேன். பல வருடங்களின் முன்னே ஒரு நாள் வெறுமனே சுற்று முற்றும் பார்த்துக் கொண்டு சிட்னியின் புறநகர்ப் பகுதியான அந்த சிற்றூரில் நடந்து கொண்டிருந்தேன். அந்த விருட்சம் அங்கே நின்று கொண்டிருந்தது. இது எனக்குத் தெரிந்த மரமே என்று அதன் அருகில் போனேன். அது அதுவே தான். அப்படியே பார்த்து கொண்டு அதனுடன் இருந்த ஒரு சிறிய ஒற்றை தள கட்டிடத்தினுள் போனேன், நூலகம் என்று எழுதியிருந்ததால். நூலகத்தின் நடுவே நூலகப் பணியாளர்களுக்கான இடம் இருந்தது. வலதுகைப் பக்கமாக பல வரிசைகளில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இடதுகைப் பக்கமாக பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் இருந்தன. அதனுடன் நூலகத்துக்கு வருபவர்கள் இருந்து வாசிப்பதற்கு வசதியாக கதிரைகளும், மேசைகளும் சில நிரல்களில் அங்கே இருந்தன. மிகவும் வசதியான இருக்கைகள் கொண்ட கதிரைகள் மற்றும் அகண்ட மேசைகள். இவை எல்லாவற்றின் பின்னும், சுவர் ஓரமாக இந்திய மொழிகளில் புத்தகங்களும், சஞ்சிகைகளும் அடுக்கியிருந்தார்கள். தமிழ் என்று ஒரு பிரிவும் இருந்தது. அதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. எட்டோ அல்லது பத்துக் கோடி தமிழ் மக்களில் மொத்தமாகவே ஒரு ஆயிரம் பேர்கள் தான் இவற்றையெல்லாம் வாசிக்கின்றார்கள் என்று பொதுவாகச் சொல்வார்கள். அப்படியாயின் ஆஸ்திரேலியாவில் இருக்கும் அந்த சிற்றூர் வாசிகசாலையில் இந்தப் புத்தகங்கள் எதற்காக. எங்களை நாங்களே குறைவாக மதிப்பிட்டிருக்கின்றோம் போல. மௌனமாக இருப்பவர்களின் குரல்கள் கணக்கில் சேருவதில்லை போல. ஆனால் அந்த நாவல்களும், கதைகளும் அங்கே வாசிக்கப்படுகின்றன என்பது திண்ணம். நான் அங்கே நிற்கும் நாட்களில் பெரும்பாலான நாட்களில் ஒரு சில மணி நேரமாவது அங்கே போவேன். சில நாட்களில் பகல் பொழுதின் பெரும் பகுதியை அங்கேயே செலவழித்திருக்கின்றேன். அந்தப் புத்தகங்கள் இடம் மாறிக் கொண்டே இருக்கின்றன.சில புத்தகங்கள் இல்லாமல் போகின்றன, மீண்டும் தோன்றுகின்றன. சிலவற்றில் சில பக்கங்களில் அடிக்கோடுகள் போடப்பட்டிருக்கின்றன. புத்தகங்கள் வாசிக்கும் ஒரு தமிழ் சமுதாயம் அங்கே இருக்கின்றது. நெல்சன் குடாவிலிருந்து திரும்பி வந்த பின் அடுத்த நாள் காலையிலேயே வாசிகசாலைக்கு கிளம்பினேன். அது அங்கே இன்னமும் அப்படியே இருக்கின்றது என்று வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். இரண்டு இரண்டு வீட்டுக் காணிகளை இணைத்து வரிசை வரிசையாக மாடிக் குடியிருப்புகள் தோன்றிக் கொண்டிருக்கும் அந்த ஊரில் வாசிகசாலையை அப்படியே விட்டு விடுவார்களா என்ற பயம் மனதில் இருந்தது. வாசலில் நின்ற மலை வேம்பு அங்கே இல்லை. அதற்குப் பதிலாக சவுக்கு மரம் ஒன்றை புதிதாக வைத்துள்ளார்கள். ஏதோ ஒரு கடும் மழையிலோ அல்லது காற்றிலோ அந்த விருட்சம் தளர்ந்து போயிருக்கலாம். கூரையின் மேல் அது விழ முன் அதை அப்புறப்படுத்தியிருப்பார்கள். நீ முந்தினால் நீ, நான் முந்தினால் நான் என்று காலம் போய்க் கொண்டிருக்கின்றது, மரமானாலும் மனிதர்களானாலும். மற்றபடி நூலகம் தோற்றத்தில் அப்படியே இருந்தது. அதே நடு, வலக்கை, இடக்கை பிரிவுகள். ஆனால் இடைக்கைப் பக்கம் இருக்கும் இருக்கைகள் எல்லாம் இந்திய மக்களால் நிரம்பி இருந்தது. சில ஆண்கள் நெற்றியில் குங்குமம் வைத்திருந்தார்கள். பலரிடம் மடிக்கணினி இருந்தது. அவர்கள் அந்தக் கணினிகளில் ஏதோ செய்து கொண்டிருந்தார்கள். அங்கு இலவச இணைய வசதி கிடைக்கின்றது என்று பின்னர் அறிந்துகொண்டேன். தமிழ் பகுதி அதே இடத்தில் இருந்தது. ஆனால் அங்கே இருந்த நாவல்களும், கதைகளும் மாறியிருந்தன. தமிழின் ஆகச் சிறந்த நாவல் அல்லது நாவல்கள் எது என்றால் பலருக்கும் பல தெரிவுகள் இருக்கும். மிகவும் மதிக்கப்படும் சில விமர்சகர்களால் தமிழின் ஆகச் சிறந்த நாவல்களில் ஒன்றாக கருதப்படுவது ப. சிங்காரம் அவர்கள் எழுதிய 'புயலிலே ஒரு தோணி' என்னும் நாவல். இந்த நாவல் இன்று வரை தமிழில் ஒரு சாதனையாகவே கருதப்படுகின்றது. அது அங்கே இருந்தது. புலம் பெயர்ந்தவகளுக்கும், இந்த நாவலுக்கும் நெருங்கிய ஒரு தொடர்பு உண்டு. தமிழில் முதன்முதலாக எழுதப்பட்ட புலம்பெயர் நாவல் அல்லது கதை இதுவே. இந்த நாவலை 60ம் ஆண்டுகளில் எழுதிய சிங்காரம் அவர்கள், அதை 70ம் ஆண்டுகளிலேயே வெளியிட முடிந்தது. பத்து ஆண்டுகளாக பதிப்பகங்களாலும், நிறுவனங்களாலும் இவரது எழுத்து நிராகரிக்கப்பட்டது. 'ஒன்றுமே விளங்கவில்லை................' என்று தூக்கி எறிந்துவிட்டனர். சிங்காரம் அவர்கள் அப்படியே ஒதுங்கி தனியாகிப் போனார். அதன் பின்னர் அவர் எதுவுமே எழுதவில்லை. 90ம் ஆண்டுகளில் தனியே இறந்த பொழுது கூட எவருக்கும் தகவல் கொடுக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார். கிடைத்த ஒரு கதிரையில் அவரது நாவலுடன் அமர்ந்தேன். அட்டையில் அவரது படம். அப்படித்தான் நினைக்கின்றேன். இணையத்தில் கிடைத்த திருட்டுப் பதிப்பில் இந்த நாவலை முன்னர் வாசித்திருக்கின்றேன், ஆனால் அதில் அவரது படம் இருக்கவில்லை. முன் தலை முழுவதும் தலைமுடி இல்லை. காதுகளில் நீண்ட முடி வளர்ந்திருந்தது. அது அவருக்கு ஒரு முரட்டுத்தனமான தோற்றத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மலை வேம்பும் ஊர் வேப்ப மரம் போலவே பூக்கும், காய்க்கும் என்று பின்னர் தேடி அறிந்துகொண்டேன். இனி அந்த விருட்சத்தை எங்கே தேட. (தொடரும்.................. )7 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
3 pointsஅருமை அண்ணை. விற்கிற அளவுக்கில்லாட்டிலும் அம்மம்மாவுக்கு வேப்பம்பூ ஆய்ந்து குடுத்திருக்கிறன். உங்கள் எழுத்துக்குள்ளால் போகும் போது வேம்பு, மலைவேம்பு எல்லாம் தலைக்கு மேலே நிற்கிறது போன்ற உணர்வு.3 points
-
ஒரு பயணமும் சில கதைகளும்
2 points1. ஆளில்லா விமானம் --------------------------------- அன்று ஒரு நீண்ட வார விடுமுறையின் நடுநாள். பலரும் அன்று விமானப் பயணமோ அல்லது எந்தப் பயணமுமோ செய்ய மாட்டார்கள் என்பதை அனுமானித்தேயிருந்தோம். ஆனாலும் லாஸ் ஏஞ்சலீஸ் விமான நிலையத்தில், திருவிழா முடிந்து வெறுமனே காற்று வாங்கும் கோயில் போல, அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலரின் நடமாட்டமே இருந்தது கொஞ்சம் ஆச்சரியமாகவே இருந்தது. தேர்த் திருவிழா போல எப்போதும் உள்ளேயும், வெளியேயும் கூட்டமும், இரைச்சல்கள் நிறைந்திருக்கும் இடம் இது. இந்த விமான நிலையத்தால் வந்து போகும் வெளிநாட்டவர்கள் நிறையவே குறைகள் சொல்லுவார்கள். அதனால் நான் சொல்லாமல் விடுகின்றேன், அத்துடன் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. எங்கள் கண்களுக்கு தெரிவது போல காகங்களின் இறகுகள் கறுப்பு அல்ல, அவை வண்ணங்கள் நிறைந்தவை என்று சமீபத்தில் ஒரு கட்டுரை வாசித்திருக்கின்றேன். வண்ணங்கள் எங்களின் கண்களுக்கு தெரியவில்லை என்பதே உண்மை என்கின்றார்கள். உள்ளவற்றில் குறைவான விலையில் உள்ள விமான பயணச் சீட்டை நாங்கள் வாங்கியிருந்தோம். ஆதலால் அவர்களே இருக்கைகளை தெரிவு செய்து கொடுப்பார்கள். கொடுத்தார்கள். மூன்று இருக்கைகள் ஒன்றாகவும், மற்றைய இருக்கை அந்த வரிசைக்கு பின் வரிசையிலும் இருந்தன. ஒரு பொல்லாப்பும் இல்லை. நான் பின் வரிசையில் இருக்கலாம், மற்ற மூவரும் ஒன்றாக இருங்கள் என்றேன். அப்படியான ஒரு முடிவையும் உடனேயே எடுக்கத் தேவையில்லை என்றது குடும்பம். இன்றைய உலகம் எந்த அவசர உடன்படிக்கைக்கும் தயாராக இல்லாதது. காத்துக் கொண்டிருக்கும் போது 'பயணிகள் கவனிக்கவும்.................' என்று ஒரு அறிவிப்பு ஆரம்பித்தது. பாலகுமாரனின் ஒரு நாவலின் தலைப்பு இது. அவரை விழுந்து விழுந்து வாசித்த ஒரு காலம் இருந்தது. அது பதின்ம வயதுகள். அன்று வாசித்த அவரின் கதைகள் பலவும் இன்றும் சாராம்சமாக ஞாபகத்தில் இருக்கின்றன. சாராம்சமாக இருப்பதால் எல்லாமே ஒரே ஒரு கதை தான் என்றும் தோன்றுகின்றது. பின்னர் பெரிய இடைவெளி. அந்த இடைவெளியில் அவர் ஒரு சித்தர் ஆக மாறியிருந்தார். எழுத்துச் சித்தரோ அல்லது அப்படி ஏதோ ஒன்று சொன்னார்கள். புஷ்பா தங்கத்துரை கூட ஒரு பக்தி இதழில் எழுதுவதாகவும் பார்த்திருந்தேன். நாங்கள் ஒரு வாழ்க்கையில் பல வாழ்க்கைகள் வாழ்ந்து தான் முடிப்போம் போல. 'விமானத்தில் பயணிகள் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால்.............' என்று தொடர்ந்தது அறிவிப்பு. வீட்டுக்கு திரும்பி போகச் சொல்லப் போகின்றார்களா என்று படபடத்தோம். சில வாரங்களின் முன் கனடா போகும் பொழுதும் இதே டெல்டா விமான நிறுவனம் தான். அவர்கள் எங்கேயோ மழையோ புயலோ என்று அன்று எங்களை வீட்டுக்கு திருப்பி அனுப்பிவிட்டார்கள். ஒரு நாள் பிந்தியே கனடா போயிருந்தோம். ஆஸ்திரேலியா பயணத்தை மிகக் குறுகியதாகவே திட்டமிட்டிருந்தோம். அதில் ஒரு நாள் அநியாயமாகப் போய் விடுமோ என்பதே படபடக்க வைத்தது. பிரபஞ்சத்தில் ஒளியின் வேகமே மிக அதிகமானது என்கின்றார்கள். ஆனால் மனதின் வேகம், எண்ணங்களின் வேகம் ஒளியின் வேகத்தை விட மிகவும் அதிகம் என்பதே என் அனுபவம். பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதால், விமானம் மேலே எழும்பும் போதும், அது கீழே இறங்கும் போதும், விமானத்தின் சமநிலையைப் பேணுவதற்காக எல்லோரும் ஒதுக்கப்பட்ட இருக்கைகளிலேயே இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் சொன்னார்கள். இருக்கைகள் அந்த ஒழுங்கிலேயே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் சொன்னார்கள். மேலும் சில வரிசைகள் இதன் காரணமாக முற்றிலும் வெறுமனே இருக்கும் என்றார்கள். இது புதிது, நான் முன்பின் அறிந்திராதது. விமானம் கிடையாக பறக்க ஆரம்பித்த பின் எங்கேயும் இருக்கலாம் என்றார்கள். எங்கள் நால்வரில் யார் பின் வரிசையில் இருப்பது என்ற உடன்படிக்கை ஏறக்குறைய தேவை இல்லை என்றாகியது. அந்த வரிசையில் வேறு எவருமே இல்லை. எல்லாமே எங்களுக்கு மட்டும் தான் என்றாகியது. அந்த அதிகாலைப் பொழுதில் சிட்னி விமான நிலையத்தில் ஆட்களையும் பார்க்கவில்லை, கொண்டு போகும் பொருட்களையும் எவரும் பார்க்கவில்லை. ஒரே ஒரு அதிகாரி வெளியேறும் வாசலில் நின்றார். ஏதாவது தடைசெய்யப்பட்ட பொருட்கள் எடுத்துக் கொண்டு போகின்றீர்களா என்று கேட்டார். நாங்கள் நால்வரும் மொத்தமாக நான்கு பெரிய பொதிகளும், நான்கு சிறிய பொதிகளும் வைத்திருந்தோம். கனடா மில்லில் அரைக்கப்பட்ட மஞ்சள் தூள் மற்றும் சில பொருட்களும் இருந்தன. சிட்னி விமான நிலையத்தில் முன்னரும் பல விதமான அனுபவங்கள் எங்களுக்கு இருக்கின்றன. இருபது வருடங்கள் அல்லது அதற்கு முன்னர் முதல் தடவையாக அங்கு போயிருந்த போது, எங்கள் நால்வரையும் ஒரு அதிகாரி விசேடமாகப் பார்த்தார். எங்களின் கடவுச்சீட்டுகளின் மீதே அவருக்கு பெருத்த சந்தேகம் இருந்தது போல. அதன் பின்னரும் சில அனுபவங்கள். ஆஸ்திரேலியாவை மிகவும் சிரமப்பட்டே காப்பாற்றுகின்றார்கள் என்று தெரிந்தது. காற்றே புகாத இடத்தில் கூட இலங்கையர்களும், இந்தியர்களும், சீனர்களும் புகுந்து விடுவார்கள் என்ற தகவல் இவர்களுக்கு காலம் பிந்தியே தெரிய வரும். சிட்னிக்கும், லாஸ் ஏஞ்சலீஸூக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. சீதோசன நிலை முக்கியமான ஒன்று. பெரும்பாலும் குளிர் இல்லாத இடங்கள் இந்த இரு நகரங்களும். மேலும் சிட்னி அமெரிக்க நகர்களின் சாயலிலேயே அமைக்கப்பட்டும் இருக்கின்றது. உதாரணமாக சியாட்டில் நகரம். சிட்னி விமான நிலையத்தில் இருந்து சிட்னி முருகன் கோவில் இருக்கும் பகுதிக்கு போவதற்கு நேரடியாக ஒரு பெருந்தெரு இப்பொழுது இருக்கின்றது. இது முன்னர் இருக்கவில்லை. கட்டணம் உண்டு, ஆனால் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து நிமிடங்களில் வீட்டுக்கு போய்விட்டோம். ' பெருந் தெருக்களை கட்டு, போய் வர கட்டணம் அறவிடு................' என்பது அண்ணன் காட்டிய வழி போல. வழி நெடுகிலும் பல புதிய உயர்ந்த குடியிருப்புகள் புதுதாகத் தோன்றியிருந்தன. ஏராளமானவை. பல வருடங்களின் முன் கனடாவில் நம்மவர்கள் இருக்கும் பகுதிகளில் இப்படி இருந்தன. ஆஸ்திரேலியாவில் இந்தக் குடியிருப்புகளில் யார் இருக்கின்றார்கள் என்று கேட்டேன். 'இந்தியர்கள்...........புதிதாக வந்தவர்கள்.........' என்று சொன்னார்கள். காற்றுப் புக முடியாத இடமென்றாலும், நல்ல இடமென்றால் நாங்கள் குடியேறி விடுவோம் என்பது சரிதானே. சிட்னி விமான நிலையத்தில் எங்களை ஏன் அதிகாரிகள் எந்தச் சோதனைகளும் இல்லாமலேயே வெளியே விட்டார்கள் என்பதும் புரிந்தது. அந்த அதிகாரிகள் வேறு யாருக்காகவோ காத்துக் கொண்டு நிற்கின்றார்கள் போல. (தொடரும்...............) ** செயற்கை நுண்ணறிவிடம் ஒரு படம் வரையச் சொன்னேன். அதன் பூகோள அறிவு கொஞ்சம் அப்படி இப்படித்தான் போல. அதன் தவறைச் சுட்டிக்காட்டினேன். அதன் பிறகு அதனிடம் இருந்து வந்தது இன்னும் கொடுமை............. அதனால் இதுவே போதும், மனிதர்கள் புரிந்து கொள்வார்கள் என்று அப்படியே இங்கு போட்டுள்ளேன்.2 points
-
கருத்து படங்கள்
2 points2 points
- ஒரு பயணமும் சில கதைகளும்
2 pointsஅதிகமாகப் போனால் ஆனந்த விகடனும், குமுதமும், சில அவசர நாவல்களும் அங்கே இருக்கும் போல என்று அவ்வளவாக நம்பிக்கை இல்லாமலேயே அருகில் சென்றேன். முதலில் கண்ணில் பட்டது அசோகமித்திரனின் '18 வது அட்சக்கோடு' நாவல். அந்த திகைப்பு மாறும் முன்னேயே அந்த தமிழ் பகுதியில் இருந்த பல நாவல்களும், கதைகளும் இன்னும் இன்னும் திகைப்பைக் கொடுத்தன. பாரதியார், புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், ஜெயமோகன், சாரு, எஸ் ரா, ஷோபா சக்தி, அ. முத்துலிங்கம்............ என்று தமிழ் இலக்கியத்தின் உச்சங்கள் என்று சொல்லப்படுபவர்களின் நாவல்களும், கதைகளும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இவற்றை எல்லாம் யார் அங்கே கொண்டு வந்தது, அதைவிட முக்கியமாக இவற்றையெல்லாம் யார் அங்கே வாசிக்கின்றார்கள் என்பது இன்றுவரை எனக்குத் தெரியாது. இந்த இடம் என்னை உள் இழுத்தது....90 களின் முற்பகுதிகளில் கனாடாவிலும் இப்படித்தான் நூலகங்கள் ..இருந்தது...தேடிப்போய்..படித்தோம் ..கொண்டுவந்தும்...படித்தோம்..மார் தட்டி தமிழ்ப்பகுதி என்று மனம்கிழ்ந்தோம்.....இன்று...இவையாவும் தேடுவாரற்று... வேப்பமர உச்சியில் ஏறி பூ புடுங்வது மட்டுமில்லை...பூவயரையும் நோட்டம் பார்த்து..வீட்டில் பூவரசம் தடியால் பூசையும் வாங்கியதுமுண்டு... தேடிப் பிடிக்கிறியள்.... எம்மை தேடிப் படிக்கவும் வைக்கிறியள்....தொடருங்கள் அது சரி அந்த ஓங்கில் மீனில் அம்மா ஓங்கில்..மாமி ஓங்கில் ,சித்தி ஓங்கில் ...அடையாளம் காணக்கூடியதாக இருந்ததோ...கில்லாடி சார் நீங்கள்2 points- ஒரு பயணமும் சில கதைகளும்
2 pointsபயணத்தில் வந்த இரண்டு கதைகளுமே சிறப்பு. நீங்கள் மண் குவியல் பற்றிக் குறிப்பிட்ட பொழுது எனக்கு நினைவுக்கு வந்தது, வல்லிபுரக் கோவில் மண் குவியல்தான். அன்று ஏழு பெரிய மண்குவியல்களைத் தாண்டித்தான் கோவிலில் இருந்து கடற்கரைக்கு (கடல் தீர்த்தம்) போக முடியும். இப்பொழுது அங்கே அவை இருக்காது. கள்ள மணல் அள்ளி மணல் மலையையே அழித்திருப்பார்கள். இப்பொழுது இங்கே என்ன நடக்கப் போகிறதோ?2 points- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
யாழ்ப்பாணத்தில் கோயில்களுக்குக் கோடிக் கணக்கில் செலவிடும் தமிழர்கள் இந்த வரலாற்றுச் சின்னத்தைக் கம்பிகளால் முட்டுக் கொடுத்து வைத்துளனர். மீதியாக இருக்கும் பகுதிகளாவது உரிய முறையில் பாதுகாக்கப்பட வேண்டும்.2 points- கல்லீரல் காப்போம் : செய்ய வேண்டியவை, கூடாதவை எளிமையான கையேடு
கிராபியென் ப்ளாக் 10 Min Read கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். Published:Today at 9 AMUpdated:Today at 9 AM கல்லீரல் மனித உடலில் சருமத்துக்கு அடுத்த மிகப் பெரிய உறுப்பு கல்லீரல்தான். உடலில் வேறு எந்த உறுப்புக்கும் இல்லாத தனிச்சிறப்பு இதற்கு உண்டு. அது, நோய்த்தொற்றோ, பாதிப்போ ஏற்பட்டால், அதைத் தானாகவே சரிசெய்துகொள்ளும் ஆற்றல். நகம், முடியைப்போலவே மீண்டும் வளரும் தன்மையும் இதற்கு இருக்கிறது. நூறு சதவிகிதம் பாதிக்கப்பட்டாலும்கூட மாற்று அறுவை சிகிச்சையின் மூலம் வேறொருவரின் கல்லீரலின் ஒரு பகுதியை தானமாகப் பெற்று, பொருத்தி மறுவாழ்வு பெற முடியும். இவ்வளவு சிறப்புகளை உடைய கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள், அவற்றுக்கான சிகிச்சைகள் குறித்து விளக்குகிறார் கல்லீரல் சிகிச்சை மருத்துவர் விவேக். விலா எலும்பின் வலதுபுறத்தில் 1.2 முதல் 1.5 கிலோவரையிலான எடையுடன் கல்லீரல் அமைந்திருக்கும். இதில் 50 சதவிகித அளவுக்கு பாதிப்பு ஏற்பட்ட பிறகுதான் பிரச்னை இருப்பதற்கான அறிகுறிகள் வெளியே தெரியும். மஞ்சள்காமாலை, கால் வீக்கம், வயிற்று வீக்கம், ரத்த வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டால், 50 சதவிகிதத்துக்கும் மேல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள். 50 சதவிகிதத்துக்கும் குறைவான பிரச்னைகள் இருந்தால், அவற்றைத் தானே சரிசெய்துகொள்ள கல்லீரல் போராடும். மதுப்பழக்கத்தால் கல்லீரல்நோய் ஏற்பட்டிருந்தால், அந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டாலே கல்லீரல் தன்னைத் தானே சரிசெய்துகொள்ளும் வாய்ப்புகள் அதிகம். கல்லீரலின் வேலை என்ன? உடலில் 500 வகையான வேலைகளை இது செய்கிறது. செரிமானத்துக்கு உதவும் பித்தநீரும், ரத்தம் உறைவதற்கான ரசாயனமும் கல்லீரலிலிருந்துதான் சுரக்கின்றன. நாம் சாப்பிடும் உணவிலுள்ள சத்துகளைச் சேகரித்துவைக்கும் தன்மை கல்லீரலுக்கு உண்டு. சில நேரங்களில் உணவுகளைத் தவிர்க்கும்போதும் உண்ணாவிரதம், நோன்பு இருக்கும்போதும் உடலுக்குத் தேவையான ஆற்றலை, சேமித்துவைத்திருக்கும் சத்துகளிலிருந்து அளித்து ஈடுசெய்யும். இப்படிப் பல்வேறு பணிகளைச் செய்வதால் கல்லீரலை, `பெரிய தொழிற்சாலை’ என்றே குறிப்பிடலாம். கல்லீரலை பாதிக்கும் நோய்கள் நம் நாட்டில் 100 சதவிகித கல்லீரல் நோயாளிகளில் 75 சதவிகிதம் பேருக்கு மது குடிப்பதால்தான் பாதிப்பு ஏற்படுகிறது. `ஹெபடைட்டிஸ்’ வைரஸ்களால் (Hepatitis A,B,C,D,E) கல்லீரல் அழற்சிநோய்’ (Hepatitis), கல்லீரல் கொழுப்புநோய்’ (Fatty Liver Disease), கல்லீரல் புற்றுநோய் ஆகிய பாதிப்புகளும் ஏற்படுகின்றன. தாமிரத்தை வெளியேற்ற முடியாதநிலையான `வில்சன் நோய்’ (Wilson’s Disease), இரும்புச்சத்து அதிகமாகச் சேரும் ‘அயர்ன் மெட்டபாலிஸம்’ (Iron Metabolism) எனக் கல்லீரல் சார்ந்த பல்வேறு நோய்கள் இருக்கின்றன. காசநோய்க்காக மருந்து சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். பாராசிட்டமால் மாத்திரைகளை அடிக்கடி உட்கொண்டாலும் கல்லீரல் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது. சில வகை விஷங்களும் கல்லீரலைக் கடுமையாக பாதிக்கும். கல்லீரல் அழற்சி நோய் பொதுவாக, ஹெபடைட்டிஸ் வைரஸ் பாதிப்பு, `கல்லீரல் அழற்சி’ எனப்படுகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸில் ஏ, பி, சி, டி, ஈ என ஐந்து வகைகள் உள்ளன. இவற்றில் ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ்கள் பரவும் முறை, தடுப்பு முறை, சிகிச்சை முறைகள் ஒன்றாக இருக்கும். அதேபோல ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் பரவுவதிலிருந்து அனைத்தும் ஒன்றாக இருக்கும். ஹெபடைட்டிஸ் ஏ மற்றும் ஈ வைரஸ் இந்த இரண்டு வைரஸ்களும் அசுத்தமான தண்ணீர் மற்றும் சுகாதாரமற்ற உணவுவழியாகப் பரவக்கூடியவை. மஞ்சள்காமாலை, உடல் சோர்வு போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவை உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் ஓரிரு வாரங்களில் குணமாகிவிடும். இந்த வைரஸ் தாக்குதலால் `கல்லீரல் செயலிழப்பு’ (Acute Liver Failure) அரிதாகவே ஏற்படும். பாதிப்பைத் தடுக்க சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஹெபடைட்டிஸ் ஏ வைரஸ் பாதிப்பைத் தடுக்க தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் ஈ-க்கு தடுப்பூசி கிடையாது. ஹெபடைட்டிஸ் பி மற்றும் சி வைரஸ் ஹெபடைட்டிஸ் பி, சி ஆகிய இரண்டும் மிகக்கொடிய வைரஸ்கள். உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் இவை ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். சுகாதாரமற்ற ரத்தத்தை ஏற்றுவது, ஒரே ஊசியைப் பலருக்குப் போடுவது, ஒரே ஊசியைக்கொண்டு பலருக்குப் பச்சை குத்துவது, ஒருவர் பயன்படுத்திய டூத் பிரஷ், ஷேவிங் ரேஸர் போன்ற பொருள்களை மற்றவர் பயன்படுத்துவது, பாதுகாப்பற்ற உடலுறவு போன்ற காரணங்களால் இந்த வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவும். பாதிக்கப்பட்ட தாயிடமிருந்தும் குழந்தைக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது. இந்த இரு வைரஸ்களும் ஒருமுறை உடலுக்குள் சென்றுவிட்டால் அவற்றை அகற்றவே முடியாது. கல்லீரலில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்தும். கல்லீரல் சுருக்கத்துக்கான (Cirrhosis) மூல காரணமாக ஹெபடைட்டிஸ் பி, சி போன்ற வைரஸ்கள் இருக்கின்றன. இந்திய மக்கள்தொகையில் மூன்று சதவிகிதம் பேர் இந்த இருவகை வைரஸ்களால் பாதிக்கப்படுகிறார்கள். இவை தாக்கினால் எந்தவித அறிகுறியும் தென்படாது. ரத்தப் பரிசோதனை மூலம்தான் கண்டறிய முடியும். இந்த இரு வைரஸ்களுமே கல்லீரல் புற்றுநோய்க்கு வழிவகுக்கும். ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புகளை மாத்திரை, மருந்துகளால் கட்டுப்படுத்த முடியும். ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுக்குத் தடுப்பூசி உண்டு. ஹெபடைட்டிஸ் சி பாதிப்பைத் தடுக்க, தடுப்பூசி கிடையாது. கல்லீரல் சுருக்கம் (Cirrhosis) கல்லீரல் முற்றிலும் சுருங்குவது `சிரோசிஸ்’ என்று அழைக்கப்படுகிறது. மது அருந்துதல், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் தொற்று உள்ளிட்ட பல காரணங்களால் கல்லீரலில் கொழுப்பின் அளவு அதிகரித்து, வீக்கம் ஏற்படும். இந்த வீக்கம் அதிகரிக்கும்போது கல்லீரலிலிருக்கும் செல்கள் செயலிழந்துவிடும். அந்த இடத்தில் தழும்பு ஏற்பட்டு கல்லீரலை இழுக்க ஆரம்பிக்கும். இதனால் அது சுருங்கத் தொடங்கும். இதுதான் கல்லீரல் சுருக்கநோய். கல்லீரல் சுருக்கத்துக்கு முந்தையநிலை, ஃபைப்ரோசிஸ் (Fibrosis). இந்த நிலையில் உடல் சோர்வு, பசியின்மை, மன அழுத்தம், வயிற்றுவலி போன்ற பல்வேறு பிரச்னைகள் ஏற்படும். `ஃபைப்ரோ ஸ்கேன்’ மூலம் பாதிப்பைக் கண்டறியலாம். ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், சிகிச்சையின் மூலம் கல்லீரலைப் பாதுகாக்க முடியும். கல்லீரலில் சுருக்கம் தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் கொழுப்புநோய் கல்லீரலின் உள்ளே கொழுப்பு அதிகமாகப் படிவதால் ஏற்படுவது கல்லீரல் கொழுப்புநோய். ஆரோக்கியமில்லாத உணவுகளை உட்கொள்வது, அதிக அளவு உணவு உட்கொள்வது, உடற்பயிற்சியில் ஈடுபடாதது ஆகியவையே இதற்கு முக்கியக் காரணங்கள். போதிய உடற்பயிற்சி இல்லாததால், சாப்பிடும் உணவு கொழுப்பாக மாறி கல்லீரலுக்குள் சேரும். கொழுப்பின் அளவு நாளுக்கு நாள் அதிகரிக்கும்போது அதில் வீக்கம் ஏற்படும். இது `நாஷ்’ (Nonalcoholic Steatohepatitis - NASH) என்று அழைக்கப்படுகிறது. இந்தியர்கள் பெரும்பாலும் அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்ட உணவுகளையே அதிகம் உண்கின்றனர். இந்த உணவுகளிலிருக்கும் கார்போஹைட்ரேட் கொழுப்பாக மாறி கல்லீரலில் படியும். கல்லீரலைப் பரிசோதித்து, அதில் வீக்கம் இருப்பது உறுதிசெய்யப்பட்டால் கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்து, நாள்தோறும் உடற்பயிற்சியில் ஈடுபட்டுவந்தால், கல்லீரலிலுள்ள கொழுப்பு குறைய ஆரம்பிக்கும். அதனால் பாதிப்புகள் சரியாக வாய்ப்புகள் அதிகம். கல்லீரல் வீக்கத்துக்கு முறையான சிகிச்சை எடுக்காவிட்டால், கல்லீரல் சுருக்கம் ஏற்படும். அதற்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. சர்க்கரை நோயாளிகளுக்கு வளர்சிதை மாற்றம் சீராக இருக்காது என்பதால், இந்த நோயால் பாதிக்கப்பட்டால் அதன் தீவிரமும் அதிகமாக இருக்கும். கல்லீரல் புற்றுநோய் இந்தியாவில் உயிரிழப்பை ஏற்படுத்தும் 15 நோய்களின் பட்டியலில் கல்லீரல் புற்றுநோய் 8-வது இடத்தில் இருக்கிறது. கல்லீரலில் ஏதாவது ஒரு மூலையில் புற்றுநோய் தோன்றும். இதைத் தொடக்கநிலையிலேயே கண்டறிவது மிகவும் கடினம். கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 10-ல் 9 பேர் நோய் முற்றியநிலையில்தான் மருத்துவரை அணுகுகிறார்கள். ஏற்கெனவே கல்லீரலில் பாதிப்பு இருப்பவர்களுக்கு புற்றுநோய் பாதிக்க 70 சதவிகிதம் வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக, கல்லீரல் சுருக்கம் ஏற்பட்டால் புற்றுநோய் ஏற்படலாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துதல், புகைப்பழக்கம் போன்றவற்றாலும் புற்றுநோய் ஏற்படும். கல்லீரல் சுருங்க ஆரம்பித்துவிட்டால் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ரத்தப் பரிசோதனையும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ஸ்கேனும் செய்ய வேண்டியது அவசியம். அதனால் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து, சிகிச்சை பெற முடியும். வில்சன் நோய் மனிதனின் ஆரோக்கியத்துக்கு ஊட்டச்சத்துகளும் உலோகங்களும் மிகவும் அவசியம். ஆனால், இவை தேவையான அளவு மட்டுமே இருக்க வேண்டும். உலோகங்களின் அளவு அதிகரிக்கும்போதும் வெவ்வேறு பாதிப்புகள் உண்டாகும். உடலில் தாமிரம் (Copper) தேவைக்கு அதிகமாகும்போது ஏற்படும் பாதிப்பே `வில்சன் நோய்.’ முதன்முதலில் இந்த பாதிப்பைக் கண்டறிந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்த நரம்பியல் மருத்துவர் சாமுவேல் அலெக்ஸாண்டர் கின்னியெர் வில்சன். அவரது பெயரிலேயே இந்த பாதிப்பும் அழைக்கப்படுகிறது. நாம் சாப்பிடும் காய்கறிகள், பழங்கள், தானியங்கள் மூலம் உடலுக்குத் தேவையான தாமிரம் கிடைத்துவிடும். அது ரத்தத்தில் கலந்து உடலின் அனைத்து உறுப்புகளையும் சென்றடையும். கல்லீரலில் உற்பத்தியாகும் `செருலோபிளாஸ்மின்’ (Ceruloplasmin) எனும் புரதம் உடலுக்குத் தேவையான தாமிரத்தை எடுத்துக்கொண்டு, மீதியைப் பித்தம் வழியாக வெளியேற்றிவிடும். இந்தப் புரதம் சரியான அளவு சுரக்காவிட்டால் கல்லீரல், மூளை, கண், நரம்பு மண்டலம் ஆகியவற்றில் தாமிரம் ஆங்காங்கே தங்கிவிடும். கல்லீரலில் தாமிரம் அதிகமாகச் சேரும்போது மஞ்சள்காமாலை, வாந்தி, அடிவயிற்றில் நீர்கோத்தல், கால்வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்படும். இந்த அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக மருத்துவரை அணுகி, பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். கல்லீரல் செயலிழப்பு 10, 15 வயதிலேயே ஏற்பட்டால் அதற்கு வில்சன் நோய்தான் மூல காரணமாக இருக்கும். இந்த பாதிப்பு ஏற்பட்டு கல்லீரல் சுருக்கம் உருவாவதற்கு முன்னரே பிரச்னையைக் கண்டறிந்துவிட்டால், குறிப்பிட்ட சில மாத்திரைகளின் மூலம் சரிசெய்துவிடலாம். பிரச்னை தீவிரமானால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். மாற்றிப் பொருத்தப்படும் புதிய கல்லீரலில் `செருலோபிளாஸ்மின்’ சரியாகச் சுரந்து, தாமிரம் படிவது தடுத்து நிறுத்தப்படும். அயர்ன் மெட்டபாலிஸம் சிலருக்குப் பிறக்கும்போதே மரபணு பிரச்னைகளால் இதயம், கணையம், கல்லீரல், மூட்டு உள்ளிட்ட இடங்களில் அதிக அளவில் இரும்புச்சத்து சேர ஆரம்பித்துவிடும். இதைத்தான் `அயர்ன் மெட்டபாலிஸம்’ என்கிறோம். அதனால் இதயம், கணையம், கல்லீரல் சார்ந்த பிரச்னைகள், சர்க்கரைநோய் ஆகியவை ஏற்படும். சருமம் கறுத்துப்போதல், கால் மற்றும் வயிற்று வீக்கம், மஞ்சள்காமாலை, சிறுநீர் மஞ்சள் நிறத்தில் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் தென்படும். இவர்களுக்கு, கல்லீரல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். இரும்புச்சத்து அதிகமாகச் சேர்வதைத் தடுக்க `டிஃபெராக்ஸமைன்’ (Deferoxamine) என்ற மருந்து பரிந்துரைக்கப்படும். இந்தப் பிரச்னையால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்போது குறிப்பிட்டகால இடைவெளிகளில் குறிப்பிட்ட அளவு ரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்ற வேண்டும். கல்லீரல் முழுமையாக பாதிக்கப்பட்டிருந்தால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். கல்லீரல் மாற்று சிகிச்சை எப்போது அவசியம்? பிரச்னைக்கான அறிகுறிகள் வெளியே தெரிந்தாலே 50 சதவிகிதத்துக்கும் மேல் கல்லீரல் பாதிப்படைந்துவிட்டது என்று பொருள். இத்தனை சதவிகிதம் பாதிப்புக்குத்தான் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற அவசியமெல்லாம் கிடையாது. ரத்த வாந்தி, வயிற்றில் நீர்க்கோத்தல், கல்லீரல் புற்றுநோய், கல்லீரல் பிரச்னையால் சிறுநீரகம் பாதிப்படைவது (Hepatorenal Syndrome) மற்றும் நுரையீரல் பாதிப்பு (Pulmonary Syndrome) போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படலாம். `மெல்டு ஸ்கோர்’ ஒரு நோயாளியின் ரத்தப் பரிசோதனை அறிக்கையைக்கொண்டு கல்லீரல் பாதிப்புக்கு குறிப்பிட்ட மதிப்பெண் வழங்கப்படும். அது `மெல்டு ஸ்கோர்’ (Meld Score - Model for End Stage Liver Disease) என்று அழைக்கப்படுகிறது. அந்த மதிப்பெண் வரம்பு 6 - 40வரை இருக்கும். அதில் நோயாளியின் மதிப்பெண் 15-ஐத் தாண்டிவிட்டால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படும். உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கான வெற்றி விகிதம் 90 சதவிகிதமாக இருக்கிறது. மூளைச்சாவு அடைந்த நபரிடம் தானம் பெற்று அல்லது உயிருடன் இருப்பவர்களிடமிருந்து தானம் பெற்று கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. உயிருடன் இருப்பவர்கள் தானமளிக்க முன்வந்தால், அவர்களின் கல்லீரலின் செயல்பாடுகளைப் பரிசோதனை செய்து, ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என்று உறுதிசெய்யப்பட்ட பிறகே கல்லீரலை தானம் பெற முடியும். தானம் அளிப்பவர்களிடமிருந்து 65 சதவிகிதம் கல்லீரல் பெறப்பட்டு, பிறருக்குப் பொருத்தப்படும். கல்லீரல் தானம் கொடுத்தவருக்கும் பெற்றவருக்கும் மூன்று வாரங்களிலேயே கல்லீரல் முழுமையாக வளர்ச்சியடைந்துவிடும். மஞ்சள்காமாலை மஞ்சள்காமாலை என்பது நோயல்ல. கல்லீரல் புற்றுநோய், பித்தப்பையில் கற்கள், பித்தக்குழாயில் புற்றுநோய், கணையத்தில் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கான அறிகுறி. கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேறாமல் அடைத்துக்கொள்வோருக்கும், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்புக்குள்ளானோருக்கும், காசநோய் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சிலருக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். மதுப்பழக்கம் உள்ளவர்கள், அளவுக்கு அதிகமாக பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்பவர்கள், விஷம் உட்கொள்பவர்களுக்கு மஞ்சள்காமாலை பாதிப்பு ஏற்படலாம். ரத்தப் பரிசோதனைகள் மூலம் மஞ்சள்காமாலை பாதிப்பு உறுதிசெய்யப்படும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு! ரத்த செல்கள் உடைவதால், பிறந்த குழந்தைகளுக்கும் மஞ்சள்காமாலை ஏற்படலாம். இந்தப் பிரச்னைக்கு போட்டோதெரபி’ (Phototherapy) எனப்படும் ஒளி சிகிச்சை அளிக்கப்படும். இந்தச் சிகிச்சையில் பாதிப்பு சரியாகவில்லையென்றால் பைலரி அட்ரீசியா’ (Biliary Atresia) என்ற பிரச்னை ஏற்பட்டிருக்கலாம். உடலில் கல்லீரலிலிருந்து பித்தம் வெளியேற ஒரு குழாய் உண்டு. அதை, `பித்தக்குழாய்’ என்போம். அந்தக் குழாய் குடலில் சென்று இணையும். சில குழந்தைகளுக்கு கல்லீரலின் உள்ளே இருக்கும் பித்தக்குழாய் சரியாக வளர்ச்சியடைந்திருக்கும். ஆனால், வெளியே இருக்கும் பித்தக்குழாய் வளர்ச்சியடையாமல் காணப்படும். இதனால் கல்லீரலுக்குள்ளேயே பித்தம் தங்கிவிடும். கல்லீரலிலிருந்து குடலுக்குப் பித்தம் வெளியேற்றப்படாது என்பதால், குழந்தையின் மலம் வெளிறிய நிறத்தில் காணப்படும். இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், ‘ஹைடா ஸ்கேன்’ (HIDA Scan) செய்ய வேண்டும். இந்தப் பிரச்னைக்கு குழந்தை பிறந்து 100 நாள்களுக்குள் கல்லீரலுக்கு வெளியே இருக்கும் பித்தக்குழாயை குடலுடன் இணைக்கும் `கசாய்’ (KASAI) என்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். குழந்தை பிறந்து 100 நாள்கள் தாண்டிவிட்டன அல்லது கசாய் சிகிச்சை பலனளிக்கவில்லையென்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை ஒன்றுதான் தீர்வு. மதுப்பழக்கமும் கல்லீரலும்! இயல்பாகவே கல்லீரலுக்கு சகிப்புத் தன்மை உண்டு. அதனால் மது அருந்தும்போது அதை மருந்தாகக் கருத்தில்கொண்டு வளர்சிதை மாற்றத்துக்கு உட்படுத்திவிடும். அளவுக்கு மீறிக் குடிக்கும்போது கல்லீரலிலுள்ள செல்கள் அழிந்துபோகும். இதனால் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்பட்டு கல்லீரலில் வீக்கம் ஏற்படும். இந்த நிலையை `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ (Alcoholic Liver Disease) என்கிறோம். இந்தப் பிரச்னையை கவனிக்காமல்விட்டால் கல்லீரல் சுருக்கம் ஏற்படும். கல்லீரல் கொழுப்புநோயைப்போலவே `ஆல்கஹாலிக் லிவர் டிசீஸ்’ பாதிப்பிலிருந்தும் முழுமையாக மீள்வதற்கு வாய்ப்பு உண்டு. கல்லீரலில் வீக்கம் இருப்பது தெரியவந்தால் குடிப்பழக்கத்தை முற்றிலும் நிறுத்த வேண்டும். அப்போது அழிந்துபோன செல்களை வெளியேற்றி, புதிய செல்களை உருவாக்கி கல்லீரல் தன்னைத் தானே காப்பாற்றிக்கொள்ளும். இந்த வாய்ப்பைக் கல்லீரலுக்கு வழங்க வேண்டும். கல்லீரல் பாதிப்பு ஏற்பட்ட பிறகு ஒரு துளிகூட மது அருந்தாமல் தவிர்த்தால், ஆரோக்கியமான கல்லீரலைத் திரும்பப் பெறலாம். சோஷியல் டிரிங்கிங் மேற்கத்திய நாடுகளில் வார இறுதி நாள்களில் நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தும் பழக்கம் (சோஷியல் டிரிங்கிங்) உண்டு. மேற்கத்திய கலாசாரம் இந்தியாவிலும் பரவி, அதேபோல மது அருந்தும் பழக்கம் அதிகரித்திருக்கிறது. ஆனால், மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களைவிட இந்தியர்கள் அளவுக்கு அதிகமாகக் குடிப்பதால் இந்தியர்களிடையே கல்லீரல் சார்ந்த பிரச்னைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. மேற்கத்திய கலாசாரத்தின் தாக்கம் நகரத்திலுள்ள பெண்களையும் மதுப்பழக்கத்துக்கு ஆளாக்கியிருக்கிறது. மது அருந்தும் பெண்களுக்கும் கல்லீரல் பாதிப்புகள் ஏற்படும். தவிர்க்க வேண்டியவை கார்போஹைட்ரேட் நிறைந்த, மறுசுழற்சி செய்யப்பட்ட அரிசி, சர்க்கரை, மைதா போன்ற உணவு வகைகளைக் குறைக்க வேண்டும். எண்ணெயில் பொரித்த பூரி, வடை போன்ற பதார்த்தங்கள் சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும். கல்லீரல் பிரச்னைகளுக்கு மருத்துவரின் பரிந்துரையின்றி சுயமாக எந்த மருந்தையும் எடுத்துக்கொள்ளக் கூடாது. கல்லீரலில் பிரச்னை இருக்கும்போது வேறு பாதிப்புகளுக்கு மருந்து எடுக்க வேண்டியிருந்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகே அவற்றைச் சாப்பிட வேண்டும். இரவில் தாமதமாகச் சாப்பிடுவது கல்லீரலை பாதிக்குமா? கல்லீரல் கொழுப்புநோய் வருவதற்கான முக்கியக் காரணமே இரவில் தாமதமாகச் சாப்பிடுவதுதான். ‘காலையில் அரசனைப்போலவும், இரவில் பிச்சைக்காரனைப்போலவும் சாப்பிட வேண்டும்’ என்ற சொலவடையைப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, இரவில் எளிதாகச் செரிமானமாகும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கும் கல்லீரல் பாதிப்பு வருமா? கல்லீரல் பாதிப்பு யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். மதுப்பழக்கம், அசைவ உணவுப்பழக்கம் இல்லாதவர்களுக்கும் கல்லீரலில் பாதிப்பு ஏற்படலாம். இத்தகையோர் கார்போஹைட்ரேட் நிறைந்த அரிசி உணவுகளை அதிகம் சாப்பிடுபவர்களாகவோ, உடற்பயிற்சி செய்யாதவர்களாகவோ இருந்தால் கொழுப்பு சேர்ந்து கல்லீரல் கொழுப்புநோய் ஏற்படலாம். ஆரோக்கியமான உணவுமுறை, உடற்பயிற்சி ஆகியவையே கல்லீரலைப் பாதுகாக்கும் வழிகள். கீழாநெல்லி வேர் மஞ்சள்காமாலையை குணப்படுத்துமா? `மஞ்சள்காமாலைக்கு கீழாநெல்லி வேர் மருந்து’ என்று மருத்துவரீதியாக நிரூபிக்கப்படவில்லை. ஆனாலும் கீழாநெல்லி வேர் என்பது ஆதரவு மருந்தாகத்தான் (Supportive Medicine) வழங்கப்படுகிறது என்பதால் அதைச் சாப்பிடலாம். ஆனால், கடைகளில் விற்கப்படும் கீழாநெல்லி மருந்துகளை வாங்கி உட்கொள்ளக் கூடாது. இத்தகைய மருந்துகளில் ஈயம், பாதரசம் போன்ற உலோகங்கள் சேர்க்கப்படுவதால், அவை கல்லீரலை பாதிக்கும். கல்லீரலைப் பாதுகாக்கும் உணவுகள்! புரொக்கோலி, காலிஃப்ளவர், முட்டைகோஸ்: இவற்றை குரூசிஃபெரஸ் காய்கறிகள்’ (Cruciferous Vegetables) என்று குறிப்பிடுவார்கள். இவற்றில் குளூக்கோசினோலேட்’ (Glucosinolate), சல்ஃபர் (Sulfur) போன்ற வேதிப்பொருள்கள் நிறைந்துள்ளன. இவை கொழுப்பைக் குறைப்பதுடன், கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றி, நொதிகளை அதிகம் சுரக்கவைக்கும். முட்கள் நிறைந்த பேரிக்காய்: முட்கள் நிறைந்த பேரிக்காய் கல்லீரலை பலப்படுத்தி நோய்கள் வராமல் காக்கும். இதில் ‘பெக்டின்’ (Pectin) எனும் மாவுச்சத்து அதிகளவில் உள்ளது. தீங்கு விளைவிக்கும் `எல்.டி.எல்’ (LDL Cholesterol) எனும் கெட்ட கொழுப்பையும், மது அருந்துவதால் கல்லீரலில் சேரும் நச்சுகளையும் வெளியேற்றி, கல்லீரலைப் பாதுகாக்கும். அவகேடோ: அவகேடோவில் `குளூட்டதியோன்’ (Glutathione) எனும் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகளவில் உள்ளது. இது கல்லீரலுக்குக் கேடு விளைவிக்கும் நச்சுப்பொருள்களை உடலிலிருந்து வெளியேற்ற உதவும். திராட்சை: சிவப்பு மற்றும் ஊதா நிற திராட்சைகள் கல்லீரலைப் பாதுகாக்கக்கூடியவை. இவற்றிலுள்ள `ரெஸ்வெரட்ரால்’ (Resveratrol) எனும் வேதிப்பொருள் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் அழற்சியைத் தடுக்கும். நிறைய விதைகளுள்ள திராட்சைகளைச் சாப்பிடுவது நல்லது. நார்த்தம்பழம்: நார்த்தம்பழத்தில் `நாரின்ஜெனின்’ (Naringenin) எனும் வேதிப் பொருள் அதிகம் நிறைந்திருக்கிறது. ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்படக்கூடியது. கல்லீரலின் உள்ளே படியும் கொழுப்பைக் குறைக்கவும், கல்லீரலில் சுரக்கும் நொதிகளை அதிகரிக்கவும் இது உதவும். பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய்: கல்லீரலைப் பாதுகாப்பதில் பாதாம், வால்நட், ஆலிவ் எண்ணெய் மூன்றும் முக்கியமானவை. இவற்றில் ‘மோனோஅன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் (Monounsaturated Fatty Acid) அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். இவற்றிலுள்ள வைட்டமின் ஈ, ஆன்டிஆக்ஸிடன்டாகச் செயல்பட்டு, கல்லீரலிலுள்ள நச்சுப் பொருள்களை வெளியேற்றும். பூண்டு: வெள்ளைப்பூண்டில் அலிசின்’ (Allicin) எனும் வேதிப் பொருள் உள்ளது. செலினியம்’ (Selenium) தாதுவும் அதிகம் நிறைந்துள்ளது. இவை இரண்டும் உடல் எடையைக் குறைக்கும். கல்லீரலில் சேரும் கொழுப்பை நீக்கி, நச்சுத் தன்மையை வெளியேற்ற உதவும். மீன்: மீன்களில் `ஒமேகா 3 கொழுப்பு அமிலம்’ (Omega 3 Fatty Acid) அதிகம் உள்ளது. இது உடலில் எங்கே நச்சுப் பொருள்கள் இருந்தாலும், அவற்றை வெளியேற்ற உதவும். கல்லீரல் வீக்கம், அழற்சி போன்றவற்றைத் தடுக்கும். மீனை எண்ணெயில் பொரித்து உண்பதைத் தவிர்க்க வேண்டும். காபி: காபியிலுள்ள கஃபைன்’ (Cafeine), பாராஸான்தைன்’ (Paraxanthine) எனப்படும் வேதிப்பொருளையும், காவியோல்’ (Kahweol), கேஃப்ஸ்டோல்’ (Cafestol) அமிலங்களையும் உற்பத்தி செய்கிறது. இவை மூன்றும் கல்லீரலைப் பாதுகாப்பதுடன், கல்லீரல் புற்றுநோயைத் தடுக்கவும் உதவுகின்றன. இது பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ‘ஹெபடைட்டிஸ் டி’ வைரஸ்! ஹெபடைட்டிஸ் பி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு ஹெபடைட்டிஸ் டி வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நீடித்த ஹெபடைட்டிஸ் பி வைரஸ் தொற்றுள்ள ஐந்து சதவிகிதம் பேருக்கு, டி வைரஸ் பாதிப்பு ஏற்படும். இது மிகவும் அரிதான தொற்று வைரஸ். பிரசவத்தின்போது தாயிடமிருந்து குழந்தைக்கும், உடல் திரவங்களான எச்சில், விந்து, சிறுநீர், ரத்தம் மூலம் ஒருவரிடமிருந்து மற்றவருக்கும் பரவும். ரத்தப் பரிசோதனை மூலம் இதைக் கண்டறியலாம். பி மற்றும் டி வைரஸ் இணை, கல்லீரல் புற்றுநோயை உருவாக்கும் தன்மை கொண்டவை. ஹெபடைட்டிஸ் பி தடுப்பூசி போட்டுக்கொண்டால் டி வைரஸைத் தடுக்கலாம். - கிராபியென் ப்ளாக்உடலையும் உள்ளத்தையும் நல்வழிப்படுத்தும் வழிகள், உணவுப் பழக்கங்கள், உடற்பயிற்சிகள் முதலிய வாழ்வியல் முறைகளை அறியவும், மருத்துவ உலகின் ஆச்சர்யங்களை விரல்நுனியில் தெரிந்துகொள்ளவும் ‘டாக்டர் விகடன்’ சோஷியல் நெட்வொர்க்கிங் பக்கங்களில் இணைந்திடுங்கள். Liver Protection: What to Eat & What to Avoid – A Simple Guide | கல்லீரல் காப்போம் : உண்ண வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை - எளிமையான கையேடு - Vikatan1 point- கொஞ்சம் ரசிக்க
1 point1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- இரசித்த.... புகைப்படங்கள்.
1 point1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointபயணக் கதையை தொய்வில்லாமல் இடையிடையே நகைச்சுவையும் கலந்து பொறுமையாக தடடெழுதி சுவைபட தந்த ரசோதரனுக்கு பாராட்டுக்கள். உங்கள் பதிவுகளின் ரசிகர்களில் நானும் ஒருத்தி. எழுத்துப்பிழை யற்ற நல்ல ஒருஆசானிடம் தமிழ்கற்ற மாணவன் போல நிறைய புத்தகங்கள்தேடி வாசிப்பீர்கள் போல , உங்களைப்போல பலர் இங்கு தேவை .1 point- யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது. மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார். அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி, இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmfqpheu000j3o29nkhre3ue21 point- கச்சதீவை உடைமையாக்குவது அல்ல, இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக மீன்பிடிப்பதே பிரதான பிரச்சினை
18 Sep, 2025 | 09:13 AM பெரும் எண்ணிக்கையில் மீன்பிடிப் படகுகள் ஒரு தொகுதியாக எல்லைமீறி பிரவேசித்து எமது மீனை, இறாலை, கணவாயை, நண்டுகளை பிடிப்பது என்பது இந்த இந்திய ஊடுருவலின் ஒரு அம்சம் மாத்திரமே. அத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக கட்டுப்பாடற்ற முறையில் ஒரு நிரந்தரமான முறையில் அழிவுகளை ஏற்படுத்துவது மற்றைய மிகவும் ஆபத்தான அம்சமாகும். பெரும்பாலான இந்திய மீன்பிடிப் படகுகள் இழுவை மீன்பிடியில் ஈடுபடும் படகுகளாகும் (Bottom trawlers). இழுவைப்படகுகள் மீனையும் கூனி இறால்களையும் இலக்கு வைப்பதற்கு மேலதிகமாக , கடற்படுக்கையில் இருந்து மீன்முட்டைகள், சிறிய மீன்வகைகள், கடல் தாவரங்கள் என்று சகலதையும் வாரி அள்ளக்கூடிய மிகப் பெரிய வலைகளைக் கொண்டவையாகும். மேலும் வாசிக்க https://www.virakesari.lk/article/2253811 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 point"வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்" எங்களூர் வீரபத்திரர் சனசமூக நலநோம்பு மூலவளநிலையத்தில் (வாசிகசாலை) எழுதி இருந்த நன்மொழி! 95 முன்னரான போராளிகளின் கட்டுப்பாட்டில் எமது பகுதி இருந்தபோது நிறைய தமிழாக்க சொற்கள் இருந்தது. தொடருங்கள் @ரசோதரன் அண்ணை.1 point- யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
1 point- கருத்து படங்கள்
1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointDolphinக்கு என்ன தமிழி சொல் என்று நான் யோசிச்சதுண்டு. நான் சின்னனாக இருந்த போது, ஒரு Dolphin (இறந்ததாக இருக்கலாம்) முனையில் கரை ஒதுங்கியது பற்றி ஈழநாதம் அல்லது உதயன் இல் பார்த்தது ஞாபகம். ஆனால் எந்தத் தமிழ் பெயரை பயன்படுத்தினார்கள் என்று நினைவில் இல்லை. பல ஆண்டுகள் கழித்து நான் ஓங்கில் என்ற சொல்லை மீண்டும் கேட்க்கிறேன். ஊரில் ஓங்கில் மீன் என்று சொல்லுவார்கள். ஆனால் என் ஊரில் Dolphin பார்த்ததேதில்லை, அதனால் அது என்ன மீன் எண்டே தெரியாமல் போயிட்டுது. ஓங்கில் என்பது ஒரு காரண பெயராக இருக்கலாம் — "ஓங்கி பாயும்" என்பதில் இருந்து வந்திருக்கலாம்.1 point- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
அற்றைத் திங்கள் அந்நிலவில் நெற்றித் தரள நீர்வடிய கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா? கயவனை காலால் மிதித்து இறையும் ஆடியது நல்லோர் இடரின்றி வாழ்வதற்கே.🙏1 point- புல்லுமலை தண்ணீர் தொழிற்சாலைக்கு அனுமதி வழங்க முடியாது - ஏறாவூர் பற்று பிரதேச சபையில் தீர்மானம்!
1 pointமிக சிறந்த முடிவு1 point- "போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ.
"போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ. 2024-12-09 15:15 2014-2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த ஜெனரல் விக்டர் முஷென்கோ (தற்போது ஆயுதப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் முன்னணி ஆராய்ச்சியாளர்), ஊடக ஃபேக்டிக்கு அளித்த பேட்டியில் , முன்னணியில் தற்போதைய நிலைமையை மதிப்பிட்டு, இராணுவத்தில் உள்ள முக்கிய பிரச்சனைகளை கோடிட்டுக் காட்டினார் மற்றும் எதிர் தாக்குதலின் தோல்விக்கான முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். Texty.org.ua உரையாடலின் முக்கிய பகுதிகளை முஷென்கோவின் ஒழுங்கமைக்கப்பட்ட நேரடி உரையின் வடிவத்தில் வெளியிடுகிறது. பொதுப் பணியாளர்களின் தலைவர் — 2014-2019 ஆம் ஆண்டில் உக்ரைனின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி, ஜெனரல் விக்டர் முஷென்கோ ரஷ்ய தாக்குதல் குறித்து போர் என்பது ஒரு நீண்ட செயல்முறை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ரஷ்ய-உக்ரைன் மோதல் பதினொரு ஆண்டுகளாக நடந்து வருகிறது. உக்ரைன் பெரிய அளவிலான ஆக்கிரமிப்பின் முதல் கட்டத்தை வென்றது, ரஷ்யர்கள் இன்று நடைமுறையில் இருக்கும் எல்லைகளில் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. கிராமங்களின் எண்ணிக்கையை நாம் கணக்கிடவில்லை, ஆனால் பிரதேசத்தின் சதவீதத்தை நாம் கணக்கிடவில்லை என்றால், இந்த கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளில் முன்னேற்றம் அவ்வளவு குறிப்பிடத்தக்கதாக இல்லை. இருப்பினும், உக்ரைன் தோற்கிறது என்று சொல்ல வேண்டிய நேரம் இது என்று நான் நம்பவில்லை. வெற்றியின் காலங்களும் தவிர்க்க முடியாத தோல்விகளின் காலங்களும் இருந்துள்ளன. இந்த நேரத்தில், ரஷ்ய இராணுவத்திடம் முன்முயற்சி உள்ளது. அதாவது, அது நமக்கு விதிமுறைகளை ஆணையிடுகிறது. ஆம், அதன் வெற்றிகள் தந்திரோபாயமானவை. இருப்பினும், இந்த தந்திரோபாய வெற்றிகளில் பல டஜன் உக்ரைன் பிரதேசத்தில் வெற்றிகரமான முன்னேற்றத்தின் பொதுவான தோற்றத்தை அளிக்கின்றன. ஆனால் இந்த நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் நம்பவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை கூறுவேன். போர்க்களத்தில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளைப் பொறுத்தவரை, நம்மிடம் அவை இருந்தன, இன்னும் இருக்கின்றன என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமை வெளியில் இருந்து எப்படித் தோன்றினாலும் சரி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் யாராவது இதைப் பற்றி எப்படி கருத்து தெரிவித்தாலும் சரி. உக்ரைனுக்கு வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. இவ்வளவு சக்திவாய்ந்த எதிரியை எதிர்கொள்வதில் வெற்றி பற்றிய நமது புரிதல் என்ன? சர்வதேச சட்டத்தின் ஒரு பொருளாகவும், இறையாண்மை கொண்ட நாடாகவும், அதன் ஆயுதப் படைகளாகவும் உக்ரைனைப் பாதுகாப்பதுதான் இது என்று நான் நம்புகிறேன். இரண்டு ஆண்டுகாலப் போரில் உக்ரேனிய அரசாங்கம் மற்றும் இராணுவத் தலைமையின் தவறுகள் குறித்து முதல் படையெடுப்பு கட்டத்தின் தவறுகளில் ஒன்று பேச்சுவார்த்தைகளை நடத்தியது என்று நான் நம்புகிறேன்.ஆரம்ப நாட்களில், உக்ரைனின் ஒரு குறிப்பிட்ட பகுதியை ஆக்கிரமிப்பதன் மூலம், எந்த உத்தரவாதமும் இல்லாமல், செயல்முறையை முடிப்பதற்கான நிபந்தனைகள் குறித்து அவர்கள் ரஷ்யர்களுடன் விவாதிக்கத் தொடங்கினர். இது உக்ரேனிய நிலைப்பாட்டின் பலவீனத்தை நிரூபித்தது என்று நான் நினைக்கிறேன். உக்ரேனிய ஆயுதப் படைகளும் உக்ரேனிய சமூகமும் உடனடியாக ஏற்பாடு செய்த எதிர்பாராத கடினமான சந்திப்பால் ரஷ்யர்கள் குழப்பமடைந்திருந்த நேரத்தில் இது நடந்தது. இது ஒரு தேசபக்தி எழுச்சியாகும், இது தனிநபர்கள் மட்டுமல்ல, முழு சமூகங்களாலும் இன்னும் பாராட்டப்படவில்லை. செர்னிஹிவ், வடக்கு கியேவ், வடக்கு சைட்டோமிர், கார்கிவ் மற்றும் தெற்கு உக்ரைனில் பல உதாரணங்கள் உள்ளன. ரஷ்யர்கள் இதை எதிர்பார்க்கவில்லை. அவர்கள் துணிச்சலான அணிவகுப்புகள், பூக்கள் மற்றும் கைதட்டல்களை எதிர்பார்த்தனர். இருப்பினும், இது நடக்கவில்லை. பின்னர் அவர்கள் குழப்பமடைந்து, போர்நிறுத்தத்தின் விதிமுறைகளைப் பற்றி விவாதிக்க முன்வந்தனர். இந்த ஆக்கிரமிப்பு காரணமாக உக்ரேனிய அதிகாரிகள் வளைந்து கொடுக்கத் தொடங்கினர் என்ற தோற்றத்தை இது மிக விரைவாக அவர்களுக்கு அளித்தது. சொல்லப்போனால், இது கணிக்கக்கூடியதுதான், ஆனால் ஏதோ காரணத்தால், எதிர்பாராதது. இதுதான் முதல் விஷயம். இரண்டாவது. முதலாவதாக, தன்னிச்சையான எதிர்ப்பு இயக்கம் இருந்தது. நடவடிக்கைகளைப் பரவலாக்குதல், கீழ் மட்டத் தளபதிகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குதல் மற்றும் மூத்த நிர்வாகம் அவர்களின் முடிவுகளில் தலையிடாதது ஆகியவை அவர்களின் படைகளையும் வழிமுறைகளையும் கையாள வாய்ப்பளித்தன. இந்த பரவலாக்கப்பட்ட குழப்பம் மற்றும் செயல்களின் சமச்சீரற்ற தன்மை போர்களில் பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டது. இருப்பினும், பரவலாக்கப்பட்ட கட்டளைக்கு ஒழுக்கமான முன்முயற்சி தேவைப்படுகிறது. இந்தக் குழப்பமான சூழ்நிலை அப்போது உணரப்பட்டது. இருப்பினும், பின்னர், இது நிர்வாக முறையிலும் செயல்முறைகளைக் கட்டுப்படுத்தும் தன்மையிலும் ஒரு குறிப்பிட்ட சமநிலையின்மைக்கு வழிவகுத்தது.உதாரணமாக, லுஹான்ஸ்க் பகுதியில் கட்டுப்பாடற்ற மற்றும் புரிந்துகொள்ள முடியாத பின்வாங்கல் ஏற்பட்டது - ஸ்டானிட்சியா லுஹான்ஸ்கா மற்றும் ஷ்சாஸ்டியாவை ஒரு துண்டிக்கப்படாத பாலத்துடன் கைவிடப்பட்டது. இது ஏன் நடந்தது? அத்தகைய அச்சுறுத்தல் எதுவும் இல்லை; ஒரு பெரிய தடுப்புக் கோடு (சிவர்ஸ்கி டோனெட்ஸ் நதி) இருந்தது, அது ரஷ்ய பிரிவுகளை நீண்ட நேரம் தடுத்து நிறுத்தியிருக்க முடியும், ஆனால் கட்டுப்பாட்டு புள்ளிகள் பல்லாயிரக்கணக்கான மற்றும் சில நேரங்களில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர்களுக்கு பின்புறத்திற்கு நகர்த்தப்பட்டன. என் கருத்துப்படி, இது எல்லா நிகழ்வுகளிலும் சூழ்நிலையால் கட்டளையிடப்படவில்லை. மூன்றாவது. அந்த நேரத்தில், அணிதிரட்டல் அமைப்பில் இன்னும் குழப்பம் இருந்தது.எல்லோரும் பாகுபாடின்றி ஏற்றுக்கொள்ளப்பட்டனர். மேலும் ஒரு மறு வரிசைப்படுத்தல் இருந்தது: ஒரு மின்னணு போர் நிபுணரை காலாட்படைக்கு அனுப்ப முடியும், ஒரு காலாட்படை நிபுணரை ஒரு தகவல் தொடர்பு பிரிவுக்கு அனுப்ப முடியும். உள் இடமாற்றங்கள் மூலம் இந்த சூழ்நிலையிலிருந்து எப்படியோ நாங்கள் வெளியேற முடிந்தது. அந்த நேரத்தில் மக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது எதிர்காலத்திற்கு ஒரு சிக்கலை உருவாக்கியது. சில தளபதிகள் மனித வளங்கள் தீர்ந்து போகாதவை என்று கற்பனை செய்து, மேலோட்டமாக தங்கள் செயல்களைத் திட்டமிட்டனர், நமது மக்கள் தொகை குறைவாக இருப்பதையும், மக்கள் பெருமளவில் இடம்பெயர்வதையும், சேவைக்கு தகுதியற்றவர்கள் பலர் இருப்பார்கள் என்பதையும் உணரவில்லை. அதாவது, இராணுவத்தை நிரப்புவது ஒரு பிரச்சனையாக மாறும் ஒரு காலம் வரும். தன்னிச்சையான அணிதிரட்டலை பல்வேறு காரணிகள் பாதித்தன. இராணுவப் பிரிவுகளின் அளவு தேவைகளைப் பூர்த்தி செய்ய மக்கள் ஆட்சேர்ப்பு செய்யப்பட்டனர். இந்தத் தேவை அதிகமாக இருந்தாலும், இந்தத் தன்னார்வலர்கள் சுற்றித் திரிந்தனர். இது எதற்கு வழிவகுத்தது? 2016 ஆம் ஆண்டில், சிறப்பு நடவடிக்கைப் படை கட்டளை உருவாக்கப்பட்ட பிறகு, பற்றாக்குறை சிறப்புகளில் நிபுணர்களின் சிறப்புப் பதிவேடு நிறுவப்பட்டது. இவர்கள் சிறப்புப் படை வீரர்கள், துப்பாக்கி சுடும் வீரர்கள், பயிற்சி மையங்களில் பயிற்றுனர்கள், ATGM ஆபரேட்டர்கள் மற்றும் குறிப்பிட்ட நீண்டகால பயிற்சி தேவைப்படும் பிற முக்கியமான சிறப்புப் படைகள். அவர்கள் எங்கு சென்றார்கள்? இந்த சிறப்பு கணக்கியலில் யார் கவனம் செலுத்தினார்கள்? பொதுவாக, படையெடுப்பு பற்றிய தகவல்கள் இருந்தபோதும், ஏன் இவ்வளவு பெரிய அளவில் இந்த குழப்பம் ஏற்பட்டது? பெரிய அளவிலான ஆக்கிரமிப்பின் முதல் சில நாட்களில் ஏற்பட்ட இழப்புகள் 2014 ஆம் ஆண்டைப் போலவே இருந்தன. சாட்சிகள் முன்னிலையில் இதைப் பற்றி முன்னாள் தளபதி மற்றும் பொதுப் பணியாளர்களின் தலைவரிடம் சொன்னேன். பின்னர், அவர்கள் இந்த புள்ளிவிவரங்களை மறைக்கத் தொடங்கினர். நான்காவது கோட்டைகள் பற்றிய பிரச்சினை.மார்ச் மாத இறுதியில் டான்பாஸிலிருந்து திரும்பும் வழியில், ரஷ்யர்கள் கியேவ் அருகே இருந்து தங்கள் படைகளை திரும்பப் பெறுவதாக எனக்கு தகவல் கிடைத்தது. கர்னல் ஒலெக்சாண்டர் மகசெக் (மே 30, 2022 அன்று டான்பாஸில் இறந்த திறமையான, அறிவார்ந்த அதிகாரி, மரணத்திற்குப் பின் உக்ரைனின் ஹீரோ என்ற பட்டம் வழங்கப்பட்டது) மற்றும் மீண்டும் பொருத்த வேண்டிய கோடுகள் மற்றும் 2015-2016 இல் மீண்டும் கட்டப்பட்ட சிலவற்றை புத்துயிர் பெற வேண்டிய, அதாவது, அவற்றை ஒழுங்கமைக்க துருப்புக்களால் நிரப்ப வேண்டிய வரைபடத்தைக் கொண்டு வந்தேன். அவர் கூறினார்: "உத்தரவுகளைத் தயார் செய்." — "நாங்கள் தாக்குவோம், நாங்கள் பாதுகாக்க மாட்டோம்." இந்த வரைபடம் இன்னும் ஜெனரல் ஸ்டாப்பின் கட்டமைப்புகளில் ஒன்றில் உள்ளது. இது ஜபோரிஜியா பகுதி மற்றும் டான்பாஸ், போக்ரோவ்ஸ்க் மற்றும் சாசிவ் யாரின் திசைகளைப் பற்றியது. அது மார்ச் 2022 இல் என்று நான் மீண்டும் சொல்கிறேன். பொறியியல் உதவிக்கு பொறுப்பான தலைவர்களில் ஒருவரை நான் அழைத்தேன்: "உங்களிடம் எத்தனை மண்வெட்டிகள் உள்ளன?" ஒரு டிராக்டர் அல்லது புல்டோசர் ஒரு விஷயம், ஆனால் நீங்கள் இன்னும் தோண்ட வேண்டும், ஏனெனில் ஒரு அகழி வீரர்களின் உயிரைக் காப்பாற்றுகிறது. காலாட்படையின் முக்கிய கருவிகளில் ஒன்று மண்வெட்டி. ஒரு சிறிய சப்பர் மண்வெட்டி, ஒரு பெரியது - அது ஒரு பொருட்டல்ல. ATO காலத்தில், சிலர் இதைப் புரிந்து கொள்ளவில்லை. அப்போது புகார்கள் வந்தன: "நாங்கள் ஏன் அகழிகள் தோண்டவில்லை?" அப்போது பணியாற்றியதாகக் கூறப்படும் ஒரு எம்.பி.யிடம் நான் ஒருமுறை கேட்டேன்: "நான் வந்து உங்களுக்காக அகழிகள் தோண்ட வேண்டுமா?" எனவே, இந்தத் தலைவர் மண்வெட்டிகள் இருப்பதாக பதிலளித்தார். "எத்தனை?" - 'இருபதாயிரம்.' -"இருபதாயிரம் பேர் அரை மில்லியன் பேர் கொண்ட இராணுவத்தைக் காப்பாற்ற முடியாது." செயல்பாட்டுத் தவறான கணக்கீடுகளில் ஒன்று, பக்முட்டை நீண்டகாலமாக வைத்திருந்தது என்று நான் நம்புகிறேன், இதன் விளைவாக குறிப்பிடத்தக்க இழப்புகள் ஏற்பட்டன. ஐந்தாவது. கார்கிவ் தாக்குதல் வெற்றிகரமாக இருந்தது. ஆனால் அது சரியான நேரத்தில் தாக்குதலில் இருந்து தற்காப்புக்கு மறுவடிவமைப்பு செய்யப்படாததால், நாங்கள் அங்கு எங்கள் தாக்குதல் திறனையும் இழந்தோம். அதாவது, பிளாக் ஸ்டாலியன் நதியின் கிழக்கே உள்ள பகுதியை நாங்கள் அடைந்தபோது, உக்ரேனிய தாக்குதலின் முழு சக்தியும் ஸ்தம்பித்தது. மேலும் ரஷ்யர்கள் தங்கள் துருப்புக்களை வலுப்படுத்த முடிந்தது. இந்த சூழ்நிலையில், நாங்கள் பொருத்தமான சாதகமான எல்லைகளை அடைய வேண்டும், ஒரு இடத்தைப் பிடிக்க வேண்டும், மேலும் ஒரு பகுதி தாக்குதல் குழுவை மற்ற பகுதிகளுக்கு அனுப்ப வேண்டும். இது முன்முயற்சியைத் தக்க வைத்துக் கொள்ள எங்களுக்கு அனுமதித்திருக்கும். என் கருத்துப்படி, 2024 ஆம் ஆண்டில் குர்ஸ்க் நடவடிக்கையின் தொடக்கத்தில் அதே தவறு மீண்டும் செய்யப்பட்டது. முதல் கட்டத்தில், நாங்கள் ஒப்பீட்டளவில் வெற்றிகரமான மற்றும் நன்கு திட்டமிடப்பட்ட நடவடிக்கையை மேற்கொண்டோம், இது ஆச்சரியத்தின் விளைவைக் கொண்டிருந்தது, இன்று அதை அடைவது மிகவும் கடினம். ஆனால் குர்ஸ்க் திசையில் உக்ரேனிய துருப்புக்களின் சாத்தியமான நடவடிக்கைகள் குறித்து ரஷ்ய தலைமை எந்த அளவிற்கு அறிந்திருந்தது? ஒருவேளை அவர்களுக்கு போதுமான மதிப்பீடு தேவைப்பட்டிருக்கலாம், அல்லது இந்த மதிப்பீடு வெவ்வேறு கட்டமைப்புகளிலிருந்து வேறுபட்டிருக்கலாம். உடனடி பணியின் எதிர்பார்க்கப்படும் முடிவை உக்ரேனிய தளபதிகள் தெளிவாகப் புரிந்து கொண்டார்களா? அடுத்தது? நடவடிக்கையின் நேரம் உகந்ததா? எது எப்படியிருந்தாலும், இந்த நடவடிக்கை வெற்றிகரமாக இருந்தது. ஆனால் இந்த நடவடிக்கையின் வடிவம் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதா? அது சில பிரதேசங்களை கைப்பற்றும் அல்லது கைப்பற்றும் பணியுடன் கூடிய தாக்குதலா, அல்லது இந்தப் பிரதேசத்தில் உள்ள குறிப்பிட்ட பொருட்களை அழித்துவிட்டு பின்வாங்குவதற்கான தாக்குதலா? அது ஒரு தாக்குதலாக இருந்திருந்தால் அது மிகப்பெரிய வெற்றியாக இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். ஆறாவது. மற்றொரு மூலோபாய தவறு எதிர் தாக்குதல் என்று அழைக்கப்படுவதை ஒழுங்கமைத்தது.ரஷ்யர்கள் தங்கள் பதவிகளை தக்கவைத்துக்கொள்ளவும், முன்முயற்சியைக் கைப்பற்றவும் கூடிய திறன் குறித்து தவறான மதிப்பீடு இருந்ததாக நான் நம்புகிறேன். தேசிய அளவிலான பிரச்சனைகள் உட்பட பல பிரச்சனைகள் இருந்தன. இந்த எதிர் தாக்குதலுக்கான ஆரம்பகால தகவல் ஆதரவு, ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, எங்கள் கூட்டாளிகளிடமிருந்து சில ஆயுதங்களைப் பெற்ற பிறகு, நாங்கள் அசோவ் கடலின் கரைக்குச் சென்று யால்டா கடற்கரையில் காபி குடிப்போம் என்ற கருத்தை உக்ரேனிய சமூகத்தில் உருவாக்கியது. இந்த உயர்த்தப்பட்ட எதிர்பார்ப்புகள், பாதுகாப்புப் படைகளின் உண்மையான திறன்கள் குறித்து உக்ரேனிய சமூகத்தில் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கலாம், மேலும் அவை பின்னர் முன்னணியில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டன. எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகளை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த செயல்முறையை ஒழுங்கமைப்பதிலும் பல தோல்விகள் இருந்தன. உதாரணமாக, நான் ஒரு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டேன். அவர்கள் எதிர் தாக்குதலுக்கான தயாரிப்புகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்துக் கொண்டிருந்தனர். பொறியியல் கணக்கெடுப்பு தாக்குதல் குழுக்களின் ஒரு பகுதியாகும் என்று கேள்விப்பட்டபோது, நான் கேட்டேன்: "ஒரு நிமிடம் காத்திருங்கள். முக்கிய தாக்குதல்களுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் நிலப்பரப்பு, கோட்டை உபகரணங்கள் மற்றும் பொறியியல் தடைகளை நீங்கள் எவ்வாறு மதிப்பிட்டீர்கள்?" அவர்கள் வெறுமனே ஒரு உளவுத்துறையை நடத்தவில்லை என்பதை நானே கண்டுபிடித்தேன். எந்தவொரு நடவடிக்கையையும் தயாரிப்பதில் கட்டாய நடவடிக்கைகளின் பட்டியல் உள்ளது. இதுவே அடிப்படை, இது சாசனங்களில் வகுக்கப்பட்டுள்ளது, மிகக் குறைந்த மட்டத்திலிருந்து தொடங்கி உயர் மட்டத்தில் தொடர்புடைய கோட்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுடன் முடிவடைகிறது. இருப்பினும், ஏதோ ஒரு காரணத்தால், இந்தக் குறிப்புகள் நிறைவேற்றப்படவில்லை. இந்த மூலோபாய எதிர்த்தாக்குதல் நடைபெறும் பகுதிகளுக்குத் தளபதி நிலப்பரப்பைப் பார்க்கச் செல்லவில்லை. இந்த மூலோபாய எதிர் தாக்குதலுக்கு ஒரு பொதுவான திட்டம் இருந்ததா என்று நான் சந்தேகிக்கிறேன். சில பகுதிகளில் தனிப்பட்ட நடவடிக்கைகள் அல்ல, ஆனால் ஒரு பொதுவான திட்டம். எதிரியின் முன் வரிசைக்கு நமது பிரிவுகளுக்கான பாதைகளை சுத்தம் செய்ய வேண்டிய குழுக்களின் நடவடிக்கைகள் குறித்து இன்னும் கேள்விகள் உள்ளன. இந்த பொறியியல் பிரிவுகளை வழிநடத்தியவர்களிடம் நான் கேட்டேன்: "நீங்கள் எவ்வளவு நேரம் துப்பாக்கிச் சூடு பயிற்சி நடத்தினீர்கள்?" - 'சரி, 25-30 நிமிடங்கள்.' - 'மேலும் பொறியியல் பிரிவுகள் எவ்வளவு நேரம் செயல்பட்டன?' -" இரண்டரை மணி நேரம்." எனவே இந்த பிரிவுகள் எந்த பாதுகாப்பும் இல்லாமல் இரண்டு மணி நேரம் வேலை செய்தன - எனவே, இழப்புகள், அதனால் பிரச்சினைகள். எதிர் தாக்குதலுக்கான திசைகளைத் தேர்ந்தெடுப்பதில் உள்ள பிரச்சினையும் ஒரு தவறாகும். ரஷ்யர்கள் ஏற்கனவே நமக்காகக் காத்திருந்த திசைகளை நாங்கள் எவ்வாறு தேர்ந்தெடுத்திருக்க முடியும்? அவை அவர்களின் மிகவும் பாதுகாப்பான பகுதிகள். மிக முக்கியமாக, நிலப்பரப்பு எங்களுக்கு சாதகமாக இல்லை, உயர வேறுபாடுகள், பொருத்தமான தடைக் கோடுகள் இருப்பது போன்றவை. பொதுப் பணியாளர்கள் மூலோபாயத் திட்டத்தை உருவாக்க வேண்டும். பின்னர், தொடர்புடைய செயல்பாட்டு மற்றும் மூலோபாய துருப்புக் குழுக்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கான திட்டங்களைக் கொண்டுள்ளன. இது அரசாங்கத்தின் பல்வேறு நிலைகளின் பணி. அதாவது, இதுபோன்ற திட்டங்களின் முழு அடுக்கையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் இந்த எதிர் தாக்குதல் நடவடிக்கையின் பொதுவான யோசனை பொதுப் பணியாளர்களின் தலைவரான தளபதியால் கையொப்பமிடப்பட வேண்டும், பின்னர் உக்ரைன் ஜனாதிபதியால் அங்கீகரிக்கப்பட வேண்டும். ஸ்டாவ்கா அதன் முடிவுகளை உத்தரவுகள் மற்றும் உத்தரவுகளுடன் நியாயப்படுத்துகிறது. அத்தகைய திட்டத்தை அங்கீகரிக்கும் உத்தரவு இருந்திருக்க வேண்டுமா? நிச்சயமாக, இருந்திருக்க வேண்டும். அது இருக்கிறதா? எனக்குத் தெரியாது. சமூகத்தில் மட்டுமல்ல, இராணுவத்திலும் கூட, ரஷ்யர்கள் சண்டையிடத் தகுதியற்றவர்கள் என்ற கருத்து உருவாகியுள்ளது என்பதைப் பற்றி நாங்கள் பலமுறை பேசியுள்ளோம். "chmobiks", "Chornobaivka-3" மற்றும் "இரண்டு அல்லது மூன்று வாரங்கள்" பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் இருந்தன. நான் மீண்டும் இந்த தலைப்புக்குத் திரும்புவேன். ஒரு காலத்தில், எனது முன்முயற்சியின் பேரில் (எனக்கு ஆதரவு கிடைத்தது, ஜலுஷ்னி கட்டளையிட்டார், நான் அவருடன் பேசவில்லை, ஆனால் அவரது ஆலோசகரிடம் பேசினேன்), இந்த எதிர் தாக்குதல் நடவடிக்கையின் பணிகளை நிறைவேற்றுவதற்காக குறிப்பாக உருவாக்கப்பட்ட இரண்டு படைகளின் தயாரிப்பில் நான் சேர்ந்தேன். இந்த படைகளின் தலைமையிடம் நான் பேசியபோது, "நாங்கள் வெளியேறினால், அவர்கள் ஓடிவிடுவார்கள்" என்ற மேலோட்டமான அணுகுமுறையால் நான் அதிர்ச்சியடைந்தேன். பத்து நாட்கள் மட்டுமே பயிற்சி பெற்ற குறுகிய காலத்திற்குப் பிறகு, அதை குறைந்தது இருபது நாட்களுக்கு நீட்டிக்க பரிந்துரைத்தேன். இருப்பினும், அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை, எனவே இந்த செயல்முறையிலிருந்து விலக முடிவு செய்தேன், ஏனென்றால் உங்கள் பரிந்துரைகள், உங்கள் கருத்துகள் அல்லது உங்கள் பார்வை யாருக்கும் தேவையில்லை என்றால் வேலை செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எனவே, கட்டுப்பாட்டு கட்டங்களில் ஒன்றாக, இந்த படைப்பிரிவுகளின் துறைகளுடன் செயல்பாட்டு விமானங்களை நடத்த வேண்டும் என்று நான் பரிந்துரைத்தேன், அவை எவ்வளவு தயாராக உள்ளன என்பதைப் புரிந்துகொள்ள. இந்த எதிர் தாக்குதல் எவ்வாறு திட்டமிடப்பட்டது என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது: பயிற்சி மைதானங்களில் நாங்கள் பயிற்சி செய்து ஏற்கனவே விலகிய கிளாசிக் பட்டாலியன் படைகளுடன். விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு கருத்துக்களில் இது எழுதப்பட்டது, இதனால் தளபதிகள் கவனம் செலுத்துவார்கள், மேலும் செயல்பாட்டில் தங்கள் பிரிவுகளைப் பயன்படுத்துவதற்கான வடிவங்கள் மற்றும் முறைகள் குறித்து தங்கள் மனதை மாற்றிக்கொள்ளலாம். முற்றிலும் எதுவும் செய்யப்படவில்லை. மேலும் முன்னேற்றத்தின் போது, எங்கள் பிரிவுகள் இழப்புகளைச் சந்தித்தன. நான் மட்டும் இதில் ஈடுபடவில்லை. பொதுப் பணியாளர்களின் அதிகாரிகள் மற்றும் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஆசிரியர்கள் குழு இருந்தது. அவர்கள் பொருத்தமான கருத்துகளையும் எழுதினர். விளைவுகளை மதிப்பிடும்போது, அவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மீண்டும் ஒருமுறை நான் அடிப்படையானதாகக் கருதுவதைச் சொல்கிறேன். எல்லைகளில் முன்னேற்றம் மற்றும் நிலைநிறுத்தலுடன் தாக்குதல் செயல்முறையின் ஒழுங்கமைப்பை அந்த நேரத்தில் உணர முடியவில்லை. இராணுவத் திறமையின்மை, தன்னம்பிக்கை அறியாமை, இராணுவத்தின் மீதான அரசியல் அழுத்தத்துடன் அதிகாரிகளின் மகிழ்ச்சி மற்றும் இராணுவ மற்றும் அரசியல் தலைமையின் மூலோபாய மட்டத்தில் பொறுப்பைத் தவிர்ப்பது ஆகியவை தடையாக இருந்தன. பின்னர், மேற்கூறிய சிலவற்றை அப்போதைய ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி தனது அறிக்கைகளில் அங்கீகரித்தார். குர்ஸ்க் நடவடிக்கை மற்றும் முன்பக்கத்தின் தற்போதைய நிலை பற்றி குர்ஸ்க் நடவடிக்கை என்பது சுமி மற்றும் சபோரிஜியாவின் தலைவிதி. அது ஒரு தாக்குதல் போன்ற சற்று வித்தியாசமான நடத்தை வடிவத்தைக் கொண்டிருந்தால், அது தொடங்கிய இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குப் பிறகு, அதாவது ஆகஸ்ட் மாத இறுதியில் உக்ரைன் எல்லைக்குள் நுழைய முடிந்திருக்கும், மேலும் அந்த திசையில் எந்த விரிவாக்கத்தையும் அல்லது எந்தவொரு சக்திவாய்ந்த ரஷ்ய தாக்குதலையும் எதிர்பார்க்க முடியாது. அந்த நேரத்தில், ரஷ்யர்களிடம் அந்த திசையில் எந்த குழுவும் இல்லை, குறிப்பிடத்தக்க படைகளோ அல்லது வழிமுறைகளோ இல்லை. ஒருவேளை நாங்கள் குர்ஸ்க் பகுதியை விட்டு வெளியேறியிருப்பதால், அவர்கள் மற்ற திசைகளிலிருந்து துருப்புக்களை நகர்த்துவதை நிறுத்தியிருக்கலாம். இன்று, நாம் படைகளை திரும்பப் பெறுவது பற்றி நிச்சயமாகப் பேசக்கூடாது என்று நினைக்கிறேன். அந்தப் பகுதியில் நாம் பொருத்தமான எல்லைகளை வைத்திருக்க வேண்டும், சூழ்ச்சி செய்யக்கூடிய பாதுகாப்பை நடத்த வேண்டும். ஏனென்றால் நாம் உக்ரைன் பகுதிக்கு பின்வாங்கினால், அதைச் செய்ய முடியாது. இப்போது, குர்ஸ்க் பகுதியில் ஒரு ரஷ்ய குழு உருவாக்கப்பட்டுள்ளது. நாம் உக்ரைன் பகுதிக்குள் நுழைந்தால், அது நம்மைப் பின்தொடரும். இது மிகவும் ஆபத்தானது. எனவே நமக்கு என்ன தேவை? உக்ரைன் பிரதேசத்திற்கு விரோதப் போக்கு மாற்றப்படுகிறதா? சுமி உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளார். மேலும் நாங்கள் வான்வழித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களைப் பற்றி மட்டுமல்ல, அந்த திசையில் ரஷ்ய துருப்புக்களின் சாத்தியமான நடவடிக்கைகளின் உடனடி அச்சுறுத்தலைப் பற்றியும் பேசுகிறோம். மேலும் குர்ஸ்க் பிராந்தியத்தில், சூழ்ச்சி செய்யும் திறன் எங்களிடம் உள்ளது. சூழ்ச்சி செய்வதற்காக அரை கிராமத்தையோ அல்லது இரண்டு வீடுகளையோ விட்டுச் செல்வது முக்கியமல்ல. எனவே, குறைவான படைகள் மற்றும் வழிமுறைகளுடன், நாம் மிகப் பெரிய எதிரி குழுவை வைத்திருக்க முடியும், அவர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்த முடியும், அதுதான் இப்போது அங்கு நடக்கிறது, மேலும் ரஷ்யர்களுக்கு ஒரு பிரச்சனையை உருவாக்குவது மட்டுமல்லாமல், தற்போது உக்ரேனிய கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தின் ஒரு சிறிய பகுதியை விடுவிக்க அவர்களின் இயலாமையையும் நிரூபிக்கிறது. அதாவது, முழு முன்னணி வரிசையிலும் போராட அவர்களின் இயலாமையின் நிரூபணமாகும். அவர்களிடம் குறைந்த வளங்கள் உள்ளன, வெளிப்படையாக, உபகரணங்கள் மற்றும் வெடிமருந்துகளின் அடிப்படையில் மட்டுமல்ல, மக்களின் அடிப்படையிலும். அதனால்தான் அவர்கள் வட கொரியர்களை அழைத்து வந்தனர். இந்த நடவடிக்கை சில முடிவுகளை அடைந்துள்ளது. குபியன்ஸ்க், லைமன், போக்ரோவ்ஸ்க் மற்றும் வுஹ்லேடர் திசைகளுக்கு அனுப்பப்பட்டிருக்கக்கூடிய ரஷ்யப் படைகளின் ஒரு பகுதி மற்றும் மொபைல் இருப்புக்களை குர்ஸ்க்கு மீண்டும் அனுப்புவது அதன் முக்கிய குறிக்கோளாக இருக்கவில்லை என்று நான் நம்புகிறேன். இராணுவம் இந்த இலக்கைக் குரல் கொடுத்தது, ஆனால் அது முக்கிய இலக்காக இல்லை. குர்ஸ்கில் இருந்து நாம் பின்வாங்கினால், சுமி கடுமையாக அச்சுறுத்தப்படலாம். மேலும் சுமி நடைமுறையில் கார்கிவ் மற்றும் பொல்டாவாவுக்கான சாலையைத் திறப்பதற்கான திறவுகோலாகும். தாக்குதல் நடவடிக்கைகளுக்கு சாதகமான நிலப்பரப்பு உள்ள பகுதிகள் இவைதான். ஆனால் ரஷ்யர்களிடம் இவ்வளவு ஆழமான நடவடிக்கைகளை மேற்கொள்ள போதுமான படைகளும் வழிமுறைகளும் உள்ளதா? இல்லை என்று நினைக்கிறேன். முழு மக்களையும் அணிதிரட்டுதல் மற்றும் இராணுவத்தில் பயிற்சி அளித்தல் குறித்து (ரஷ்யர்களின் - ஆசிரியர்) தந்திரோபாய முன்னேற்றம் ஒரு செயல்பாட்டு சிக்கலை உருவாக்குகிறது. மேலும் இது முழு முன்னணி வரிசையிலும் நடந்தால், இந்த முன்னேற்றம் நிறுத்தப்படாவிட்டால் ஏற்கனவே ஒரு மூலோபாய சிக்கல் இருக்கலாம். சமூகத்துடன் நாம் ஒரு தீவிரமான உரையாடல் தேவை. முதலாவதாக, நாம் ஒன்றுபடாவிட்டால், உக்ரைன் ஒரு பெரிய இராணுவ முகாமாக மாறும் என்ற உண்மையைப் பற்றி நாம் பேச வேண்டும், அப்போது அணிதிரட்டல் மட்டுமல்ல, ஒருவேளை தொழிலாளர் சேவை மற்றும் பாதுகாப்புத் துறையிலும் நகரத்தை உருவாக்கும் நிறுவனங்களிலும் பணிபுரியக்கூடிய குறைந்த தகுதியுள்ளவர்களின் அணிதிரட்டலும் கூட திட்டமிடப்பட்டால், நாம் போரை வெல்ல முடியாது. பாட்டிகளும் பெண்களும் நெய்யும் உருமறைப்பு வலைகளில் தொடங்கி, அனைவரும் படையினருக்கு உதவ வேண்டும் என்ற உண்மையைப் பற்றி நாங்கள் பேசுகிறோம். ஆனால் இது மிகப்பெரிய அளவில் செய்யப்பட வேண்டும். கல்வி நிறுவனங்கள் ஏன் இதில் ஈடுபடவில்லை? அரசாங்கம் இதை ஒழுங்கமைக்க வேண்டும். கருவிகளின் தொகுப்பு மிகப்பெரியது. அவற்றை எவ்வாறு முடிந்தவரை திறமையாகப் பயன்படுத்துவது? அரசாங்கம் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். கட்டாய இராணுவ சேவை ஏன் ரத்து செய்யப்பட்டது? 25 வயதுக்குட்பட்ட முழு மக்களுக்கும் அடிப்படை இராணுவப் பயிற்சியை அவர்கள் ஏன் மெதுவாக்கினார்கள்? இது செப்டம்பர் 1, 2025 அன்று அறிமுகப்படுத்தப்படும். ஆனால் அது எப்படிச் செய்யப்படப் போகிறது? இதற்கு ஏதேனும் அடிப்படை அடிப்படை உள்ளதா? தேசிய அளவில் பயிற்சி நடவடிக்கைகளை அவர்கள் எவ்வாறு வழங்கப் போகிறார்கள்? எல்லாம் தெளிவாகக் கூறப்பட்டுள்ள அணிதிரட்டல் சட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது? ஏன் நாம் பொழுதுபோக்கு அரங்குகளை கிட்டத்தட்ட 24 மணி நேரமும் திறந்திருக்கிறோம், இது வீரர்களுக்கும், சண்டையிடும் உறவினர்களுக்கும் மிகவும் மூர்க்கத்தனமானது? இது சமூகத்தில் உள்ள மற்றொரு பிரிவினைக் கோடு. இராணுவத்தினர், அவர்களது உறவினர்கள், இறந்தவர்களின் குடும்பங்கள், காயமடைந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் (அவர்களின் சமூக ஆதரவு மற்றும் பாதுகாப்பில் மிகவும் கடுமையான சிக்கல் உள்ளது), மற்றும் போரைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர்கள் உள்ளனர். அரசின் இருப்புக்கு உண்மையிலேயே கடுமையான அச்சுறுத்தல் இருப்பதை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை அல்லது புரிந்து கொள்ள விரும்பவில்லை. இருப்பினும், நாங்கள் கீழே விழ அனுமதிக்கப்பட மாட்டோம் என்று கூறி உரையாடலைத் தொடங்கினோம். ஆனால் நாடு எந்த அளவிற்கு, எந்த அளவிற்கு இறையாண்மையுடன் இருக்கும்? தற்போது நிலைமை இப்படித்தான் உள்ளது, அதாவது அதிகாரிகள் உட்பட, பின்புற மற்றும் துணைப் பிரிவுகளில் இருந்து மனிதப் போர்ப் பிரிவுகளுக்கு ஆட்களை நியமிப்பதைத் தவிர வேறு வழியில்லை. நான்கு ஆண்டுகள் ஒரு கல்லூரியில் படித்து ஏற்கனவே 10-15 ஆண்டுகள் பணியாற்றிய ஒரு அதிகாரி, ஒரு சிவில் பல்கலைக்கழகத்தின் இராணுவத் துறையில் பட்டம் பெற்று இராணுவத்தில் சேர்க்கப்பட்ட ஒருவரை விட அதிக திறன்களையும் அறிவையும் கொண்டுள்ளார். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் போது, அந்த சேவை சில சிரமங்களையும் ஆபத்துகளையும் உள்ளடக்கியது என்பதை அதிகாரி அறிந்திருந்தார், அதை லேசாகச் சொன்னால். எனவே, அவர்களின் பதவிகளை பறிப்பது நிச்சயமாக அவசியம், ஒருவேளை, கடந்த காலத்தைப் போலவே, இரத்தத்தால் தங்கள் குற்றத்திற்கு பரிகாரம் செய்ய அவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். அணிதிரட்டப்பட்டவர்களைப் பற்றியது முதன்மையாக அடிப்படை இராணுவப் பயிற்சி பற்றியது. ஏனெனில் வயது வரம்பைக் குறைப்பது அணிதிரட்டலின் சிக்கலைத் தீர்க்காது. ஒரு குறிப்பிட்ட குறுகிய காலத்திற்கு, இரண்டு அல்லது மூன்று மாதங்கள், ஒருவேளை, ஆனால் கொள்கையளவில், இல்லை. ஏனெனில் மீண்டும், குறைந்த பயிற்சி இருக்கும், மீண்டும் பணிகளை நிறைவேற்றத் தவறிவிடும், மீண்டும், உளவியல் மற்றும் தொழில்முறை தயார்நிலையின்மையின் விளைவாக, காயமடைந்தவர்களையோ அல்லது, கடவுள் தடைசெய்தால், கொல்லப்பட்டவர்களையோ அல்லது அனுமதியின்றி இராணுவப் பிரிவுகளை விட்டு வெளியேறுபவர்களையோ நாம் இழப்போம். நிச்சயமாக, பயிற்சியை தனித்தனியாக அணுகுவது கடினம், ஆனால் ஒரு வகை மக்கள் ஒரு மாதத்தில் நடைமுறை திறன்களைக் கற்றுக்கொள்வார்கள் மற்றும் பணிகளைச் செய்யத் தயாராக இருப்பார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். சிலருக்கு இரண்டு மாதங்கள் தேவையில்லை. மூன்று மாதங்கள் அவகாசம் கொடுத்தாலும் தயாராக இல்லாதவர்கள் இருக்கிறார்கள். பயிற்சி மையங்களில் கூட, அத்தகையவர்களை களையெடுத்து, அணிதிரட்டப்பட்டவர்களின் பண்புகளின் அடிப்படையில் பயிற்சி அளிக்க வேண்டிய பிற பிரிவுகளுக்கு மாற்ற வேண்டும். ஆனால் அடிப்படை பொது இராணுவப் பயிற்சி இன்னும் இருக்க வேண்டும். அவர்கள் அதைப் பெற்றிருந்தால், அணிதிரட்டப்பட்டவர்கள் இராணுவ சேவை, அதில் உள்ள ஆபத்துகள் மற்றும் சேவை செய்ய விருப்பம் ஆகியவற்றைப் புரிந்துகொள்வார்கள். பின்னர் ஒரு பயிற்சிப் பிரிவில் பயிற்சி இருக்கும். அப்போது மிகக் குறைவான NWOக்கள் இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன். உளவியல் பயிற்சி பிரச்சினைக்கு தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும். ஒருவர் இராணுவத்தில் பணியாற்றவில்லை என்றால், ஒன்றரை மாதங்களில் அவர் ஒரு போர் பிரிவில் சேர்க்கப்பட்டால், அவர் எப்படிப்பட்ட சிப்பாயாக இருப்பார்? உளவியல் இழப்புகள் என்று ஒன்று இருக்கும். எங்களிடம் அத்தகைய கணக்கியல் எங்கும் இல்லை. "உளவியல் இழப்புகள்" பத்தி இல்லை. மேலும் அவை உண்மையானவை. சிர்ஸ்கி மற்றும் ஜலுஷ்னி பற்றி என் கருத்துப்படி, சிர்ஸ்கி ஜலுஷ்னியை விட தொழில் ரீதியாக சிறப்பாக தயாராக உள்ளார். இதுதான் முதல் விஷயம். இரண்டாவதாக, இராணுவ மேலாண்மை, செயல்முறை அமைப்பு மற்றும் திட்டமிடல் ஆகியவற்றில் சலுஷ்னியை விட சிர்ஸ்கிக்கு அதிக அனுபவம் உள்ளது. மூன்றாவதாக, சிர்ஸ்கி தனது திட்டங்கள் மற்றும் செயல்களுக்குப் பொறுப்பேற்க முடிகிறது. என் கருத்துப்படி, ஜலுஷ்னிக்கு இதில் சிக்கல்கள் இருந்தன. நிர்வாகத்திற்கான அணுகுமுறை, முடிந்தவரை கீழ் மட்டங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டபோது, சில முடிவுகளுக்கான பொறுப்பைத் தவிர்ப்பதற்கான விருப்பமாக மட்டுமே அதிகாரத்தை மாற்றுவது அல்ல. ஒருவேளை, ஆக்கிரமிப்பின் முதல் கட்டத்தில் அதிகாரப் பகிர்வு தர்க்கரீதியானதாகவும், என் கருத்துப்படி, சரியானதாகவும் இருக்கலாம். ஆனால் அடுத்தடுத்த செயல்களில், அது எதிர்மறையாக விளையாடத் தொடங்கியது. ஒரு குறிப்பிட்ட அட்டமானியின் வெளிப்பாடுகள் இருந்தன. ஜலுஷ்னி என்ன செய்தார்? தளபதி அவரிடம் கூறினார்: "நான் உங்களுக்கு ஒரு காலாட்படை பட்டாலியனை வழங்க வேண்டும்." ஜலுஷ்னி கூறினார்: "உங்களிடம் ஒரு காலாட்படை பட்டாலியன் உள்ளது." இருப்பினும், ஒரு கீழ் தளபதிக்கு முடிவுகளை எடுத்து அவருக்கு சில வழிகளை வழங்குவது மட்டுமல்லாமல், பொறுப்பேற்று எப்படியாவது இந்த தளபதி பணியை நிறைவேற்ற உதவுவது அல்லது அதை நிறைவேற்றுவதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவதும் அவசியமான சூழ்நிலையில் மாற்றங்கள் உள்ளன. தகவல்தொடர்பு அடிப்படையில் சிர்ஸ்கி மிகவும் பலவீனமானவர். அவர் தொடர்பு கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஜலுஷ்னிக்கு இங்கே ஒரு பெரிய நன்மை உண்டு. அவர் தொடர்ந்து பொதுவில் இருந்தார், செல்ஃபி எடுத்துக்கொண்டார், கொடிகள், பேனாக்கள் மற்றும் காலண்டர்களைக் கொடுத்தார். இது அவர் அனைவருக்கும் ஒரு நண்பர், பரந்த மனப்பான்மை கொண்டவர், ஒரு நாட்டுப்புற ஹீரோ என்ற தோற்றத்தை உருவாக்கியது. இருப்பினும், குழப்பமான சூழ்நிலைகளில் தலைமைத்துவத்தை நிரூபிக்கவும், இராணுவத் தலைவர்கள் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, அரசியல்வாதிகளுக்கு அதிகாரிகள் என்ற தங்கள் நிலையை நியாயப்படுத்தவும் இருவரும் தவறிவிட்டனர். அதிகாரிகள் நிறுவனத்தை வலுப்படுத்த இருவருக்கும் வாய்ப்பு கிடைத்தது, ஆனால் அவ்வாறு செய்யவில்லை. பிரச்சனைகளில் தலையிட்டு அவற்றைத் தீர்க்க தளபதி கடமைப்பட்டிருக்கிறார். அறிக்கைகள் மற்றும் சுருக்கங்களிலிருந்து ஜலுஷ்னி தகவல்களைப் பெற்றார். அவர் அவற்றையெல்லாம் படித்தாரா என்று எனக்குத் தெரியவில்லை. அவர் தளபதிகளைக் கேட்டார். அவர்களின் அறிக்கைகள் எவ்வளவு புறநிலையாக இருந்தன? அவர் முன் வரிசையில் மட்டுமல்ல, பயிற்சி மையங்களுக்கும் செல்லவில்லை (அத்தகைய உதாரணங்கள் எதுவும் எனக்குத் தெரியாது), சண்டையிடும் இராணுவத்தினருடன், பயிற்றுனர்களுடன் (வழியில், பயிற்றுனர்களுடன் எங்களுக்கு மற்றொரு சிக்கல் உள்ளது), வரைவு செய்யப்பட்டவர்கள் மற்றும் முன்னணிக்குச் செல்லவிருப்பவர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை. மேலும், அடிமட்ட மக்களுக்கு இந்த அதிகாரப் பகிர்வு, என் கருத்துப்படி, சுய காப்பீடு மற்றும் முடிவெடுப்பதில் இருந்து சுய நீக்கம் ஆகியவற்றின் ஒரு அங்கமாகும். மாறாக, சிர்ஸ்கி முன்னணியில் இருக்கிறார். ஆனால் அவர் முழு முன்னணியையும் உள்ளடக்கவில்லை, ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியை, அவர் நேரடியாக அமைந்துள்ள இடத்திலிருந்தும், இந்த செயல்முறையை அவர் கட்டுப்படுத்தும் இடத்திலிருந்தும் உள்ளடக்குகிறார் என்பது மாறிவிடும். ஒருவேளை இது இந்த பகுதிகளில் அவரது துணை அதிகாரிகளின் முடிவுகளிலும் சில தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். பின்புறம் பற்றி என்ன? தயாரிப்பு செயல்முறை எப்படி நடக்கிறது? அடுத்த நடவடிக்கைகளுக்கான திட்டமிடல் எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது? அது மேற்கொள்ளப்படுகிறதா? உதாரணமாக, அடுத்த பிரச்சாரத்திற்கான திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது? பணியாளர் கொள்கையின் தோல்வி குறித்து பணியாளர்களின் நிலைத்தன்மை (சேவையின் நீளம், அனுபவம், கல்வி நிலை) ஒரு பிரிவின் நிலைத்தன்மை மற்றும் திறன்களை தீர்மானிக்கிறது. இது அதன் போர் திறன் மற்றும் அதன் ஆளும் குழுவின் முக்கிய அளவுகோல்களில் ஒன்றாகும். இந்த விஷயத்தில் நாங்கள் தோல்வியடைந்துவிட்டோம். 2019 முதல், விளக்கம் இல்லாமல் மூன்று பெரிய நிர்வாக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், மிகவும் தோராயமான மதிப்பீடுகளின்படி, சுமார் 30 ஜெனரல்களும் சுமார் 100 கர்னல்களும் பணிநீக்கம் செய்யப்பட்டனர். பின்னர் கோம்சாக் ஜலுஷ்னியால் மாற்றப்பட்டார். மீண்டும், டஜன் கணக்கான மக்கள் பதவி நீக்கம் மற்றும் தலைமைத்துவத்தில் மாற்றங்கள் உள்ளன. போரின் ஆரம்பம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, ஜலுஷ்னி கூறினார்: "நான் பத்து ஜெனரல்களை நீக்கிவிட்டேன், அவர்களில் ஒருவர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்." மேலும் அவர் இதற்குப் பெருமை சேர்த்தார். சில புள்ளிகளைப் பெறுவதற்காக அல்லது எதிர்கால குற்றச்சாட்டுகளை நிலைநிறுத்துவதற்காக அவர் இதைச் சொன்னார். பின்னர் தற்போதைய வரிசையில் படைப்பிரிவு தளபதிகளை மாற்றுவது நடந்தது. பின்னர் ஜலுஷ்னியின் அணி சிர்ஸ்கியின் அணியால் மாற்றப்பட்டது. "பெயரிடப்பட்ட" அணிகளைப் பொறுத்தவரை, எல்லோரும் உக்ரேனிய மக்களுக்கு விசுவாசமாக சத்தியம் செய்ததால் எனக்கு அது புரியவில்லை. மேலும் அவர்கள் "பெயரிடப்பட்டிருந்தால்", அவர்கள் ஒரு குறிப்பிட்ட முதலாளிக்கு சேவை செய்வதே அவர்களின் மிக உயர்ந்த முன்னுரிமையாக இருக்கும் குலங்களாக மாறுகிறார்கள், மேலும் உக்ரேனிய மக்கள் பின்னணிக்குத் தள்ளப்படுகிறார்கள். இராணுவத்தில் என்ன வகையான குலங்கள் இருக்க முடியும்? பின்னர், அது ஒரு மாஃபியாவாக மாறுகிறது. இந்தக் குழு திறமையான மற்றும் தொழில்முறை, ஒத்த எண்ணம் கொண்டவர்களைக் கொண்டது, அவர்கள் சமூக ரீதியாக முக்கியமான பணிகளை நிறைவேற்றுகிறார்கள், ஊழல் நிறைந்தவை உட்பட தங்கள் சொந்த நலன்களையோ அல்லது லட்சியங்களையோ திருப்திப்படுத்துவதில்லை. எங்களுக்கு ஒரே குறிக்கோள் உள்ளது - ரஷ்ய கூட்டமைப்பைத் தோற்கடித்து இந்த ஆக்கிரமிப்பை நிறுத்துவது. மேலும் நாங்கள் உக்ரேனிய மக்களுக்கு மட்டுமே சேவை செய்கிறோம். "அவர்கள் கீழ்ப்படிதலுடன் இருந்தால், அவர்கள் அவருடையவர்கள்" என்ற கொள்கையின் அடிப்படையில் பதவிகளுக்கு மக்களை நியமிக்கும் போக்கை சிர்ஸ்கி கொண்டுள்ளார். இது ஜலுஷ்னியிலும் தெளிவாகத் தெரிந்தது. சிர்ஸ்கி சுமார் இரண்டு டஜன் ஜெனரல்களையும் நூற்றுக்கணக்கான கர்னல்களையும் நீக்கினார். புதியவர்கள் வந்தனர். அதே நேரத்தில், ஒவ்வொரு தலைவரும் தங்கள் முந்தைய சேவை இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அதிகாரி குழுவை வெளியேற்றினர். உதாரணமாக, தரைப்படைகளிலிருந்து 20-30 பேர் பொதுப் பணியாளர்களாக வந்தனர் (இது ஒரு குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது). மற்றவர்கள் தங்கள் பதவிகளைப் பெற்றனர், அவர்களுக்குப் பதிலாக அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ஒரு நிர்வாகக் குழுவில் தங்கள் பதவிகளை ஏற்காத ஒரு குழுவை நாங்கள் பெற்றோம், இரண்டாவது குழுவிலும், மற்றவர்களையும் சேர்த்தோம். இதன் விளைவாக, பல கட்டமைப்புகளில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சரிவு ஏற்பட்டது. இப்போது கேள்வி எழுகிறது: யார் வந்தார்கள்? "இளைஞர்களை நியமி; இராணுவத்திலிருந்து அனைத்து ஸ்கூப்புகளையும் அகற்ற வேண்டும்" என்று நாம் தொடர்ந்து கேட்கிறோம். இந்த இளைஞர்கள் உக்ரேனிய பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் (அவர்களின் கல்வி குறித்தும் எனக்கு கேள்விகள் உள்ளன). இப்போது, அவர்கள் ஒரு படைப்பிரிவுத் தளபதியை எடுத்து, அவரை துணைத் தளபதி பதவியில் அமர்த்துகிறார்கள், அதாவது அவர் நான்கு அல்லது ஐந்து நிலை கட்டளைகளைத் தாண்டிச் சென்றார். அவருக்கு உரிய மரியாதையுடன், இந்த நபர் எப்படி இந்தப் பதவியை விரைவாகக் கைப்பற்ற முடியும்?ஆம், நெப்போலியன் இருந்தார். ஆனால் அவர் லட்சக்கணக்கானவர்களில் ஒருவர். அதாவது, நாம் ஒரு நல்ல பிரிகேடியரை இழந்து, ஒரு முதிர்ச்சியற்ற, லேசாகச் சொன்னால், ஒரு மூலோபாய-நிலைத் துறையின் தலைவரைப் பெறுகிறோம். இது ரஷ்ய தகவல் மற்றும் உளவியல் நடவடிக்கைகளின் குறிக்கோள்களில் ஒன்றாகும், இது குறிப்பிட்ட இராணுவ அதிகாரிகளின் முடிவுகளால் உணரப்படுகிறது (அவர்கள் முட்டாள்களா அல்லது முட்டாள்களா, அல்லது ஒருவேளை அவதூறானவர்களா அல்லது வேறு ஏதாவது என்பது தெளிவாகத் தெரியவில்லை). அவர்களுக்கு பெயர்கள் உள்ளன. மேலும் இதுபோன்ற மூன்று பெரிய அளவிலான மாற்றீடுகள் நடந்துள்ளன. அதாவது, நூறு ஜெனரல்கள் மற்றும் பல நூறு கர்னல்கள் வரை. மேலும் இது மட்டுமே தெரியும். உண்மையில், நீங்கள் அனைத்து நிர்வாக அமைப்புகளையும் எடுத்துக் கொண்டால், இன்னும் பல பணியாளர் மாற்றங்கள் உள்ளன. அடுத்து, பல நிலைகளைத் தவிர்த்து ஒரு பதவியை எடுக்கும் எவரிடமும் நான் எப்போதும் கேட்க விரும்புவது: "அத்தகைய பதவிக்கு நீங்கள் தயாராக இருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா? உங்களுக்கு முன்னால் உள்ள பணிகளின் நோக்கம் என்னவென்று உங்களுக்குப் புரிகிறதா? உங்களுக்கு ஒரு பொதுவான பார்வை இருக்கிறதா?" எனக்கு சந்தேகம். இதை நான் என் சொந்த அனுபவத்திலிருந்து அறிவேன். 8வது படைப்பிரிவின் தலைமைத் தளபதியாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றினேன், கூடுதலாக துணைத் தளபதியாக அரை வருடம் பணியாற்றினேன். நான் படைப்பிரிவுத் தளபதியானபோது, எல்லாம் நன்கு தெரிந்திருந்தாலும், சுமார் இரண்டு மாதங்கள் ஓரளவு சங்கடமாக உணர்ந்தேன். போர்க்காலத்தில், இவ்வளவு விரைவான தொழில் முன்னேற்றம் ஒரு உண்மையான பிரச்சனையாக மாறும். மற்றொரு அம்சம் என்னவென்றால், புதியவர்கள் குழுவாக வரும் நிர்வாக அமைப்பின் அதிகாரிகள் எப்படி உணருகிறார்கள் என்பதுதான். அவர்கள் தங்கள் பதவிகளை காலி செய்ய வேண்டும். அவர்கள் எங்கு செல்ல வேண்டும்? பதவிகளைக் குறைப்பதற்கு, ரிசர்வ் படைக்கு அல்லது ஆயுதப் படைகளை முற்றிலுமாக விட்டு வெளியேறுவதற்கு. "என்னில் உங்களுக்கு மதிப்பு இல்லை என்றால், அப்படியே ஆகட்டும்." மீதமுள்ளவர்கள் நினைக்கிறார்கள்: இந்தப் புதியவர்கள் இப்போது எப்படிப் பணிப்பாய்வை நிறுவுவார்கள்? இது உளவியல் பதற்றத்தை உருவாக்குகிறது. மேலும் மிகவும் பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால், புதிய தலைவர்கள் மீது நம்பிக்கை இல்லாதது. நேற்று, நீங்கள் அவர்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்துக் கொண்டிருந்தீர்கள், இன்று அவர்கள் உத்தரவுகளை பிறப்பிக்கிறார்கள், அதே நேரத்தில் உங்களுக்கு இரண்டு அல்லது மூன்று வருட பதவி அனுபவம் உள்ளது. இது எல்லாப் பகுதிகளிலும் நடக்கும். குழப்பம் இங்கிருந்துதான் வருகிறது. செயல்களுக்கான பொறுப்பைத் தவிர்ப்பதற்காக அதிகாரத்தை கீழ்நோக்கி ஒப்படைக்கும் ஆசை இதனால்தான் உள்ளது. கையொப்பங்கள் தேவைப்படும் பொருத்தமான திட்டங்கள் மற்றும் ஆவணங்கள் இல்லாததற்கு இதுவே காரணம். இதனால்தான் உங்களிடமும் உங்கள் கீழ் பணிபுரிபவர்களிடமும் நிச்சயமற்ற தன்மை உள்ளது. மூன்றாவது கூறு. பல இராணுவக் கோட்பாட்டாளர்களும் தளபதிகளின் நினைவுக் குறிப்புகளும், எந்தவொரு தலைமையகமும், எந்த மட்டத்திலும், துணைப் பிரிவுகளுக்கு உறுதியான ஆதரவை வழங்க முடிந்தால் மட்டுமே அதிகாரத்தைப் பெறும் என்பதை வலியுறுத்துகின்றன. அறிவுறுத்தல்கள், உத்தரவுகள் மற்றும் உத்தரவுகளை வழங்குவதன் மூலம் மட்டுமல்ல, நடைமுறை ரீதியாகவும். அவற்றை நிரப்பவும் ஆதரிக்கவும் அல்லது பணி நிறைவேற்றத்தில் பங்கேற்கவும் அதற்கு வழிமுறைகள் மற்றும் வளங்கள் இருக்க வேண்டும். இது இல்லாவிட்டால், இந்த நிர்வாக அமைப்புகள் அனைத்தும் அதிகாரத்தை இழக்கின்றன, தளபதிகள் தலைமையை இழக்கிறார்கள். இன்று, நமக்கு எந்த இருப்புகளும் இல்லை. இதனால்தான் குழப்பம் நிலவுகிறது, இது பெசுஹ்லாவின் கூற்றுகளைப் போன்றது: "படைப்பிரிவுகள் போராடி மீதமுள்ளவற்றைக் கலைக்கட்டும்." அது என்ன? குறைந்தபட்சம், இது ஒழுங்கமைப்பை சீர்குலைத்து நிர்வாக அமைப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கில் ஒரு தகவல் நாசவேலை. மேலும், உயர் தலைமையக அதிகாரிகள் தங்கள் பொறுப்புள்ள பகுதிகளில் உள்ள பிரிவுகளுக்கு அரிதாகவே வருகை தருகிறார்கள். அவர்கள் இடங்களைப் பார்வையிடுகிறார்களா? அல்லது தொலைபேசி மூலம் வரும் அறிக்கைகளைக் கேட்டு வரைபடங்களைப் பார்க்கிறார்களா? இவை நிலைமையைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட கருத்துக்கள். தற்போது, உத்தரவுகள் மூலம் பணிகளை வழங்குவது மிகவும் "நாகரீகமாக" மாறிவிட்டது. கீழ்நிலை தளபதிகள், "இதை நிறைவேற்றுவது சாத்தியமற்றது" என்று கூறும்போது, எதிர்வினை மிகவும் தீவிரமானது: "ஓ, சாத்தியமற்றதா? நான் உங்களை வேறொரு பிரிவுக்கு மாற்றுகிறேன், அவர்கள் உங்களை தாக்குதல் துருப்புக்களுக்கு அனுப்புவார்கள். நீங்கள் அதை அவர்களுக்கு விளக்கலாம்." இது மிரட்டல். மேலும் இது தலைவரின் முதிர்ச்சியின்மையையும் தலைமைத்துவமின்மையையும் பறைசாற்றுகிறது. இதுவும் குழப்பத்திற்கு பங்களிக்கிறது. ஜூனியர் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்கள் இல்லாதது ஒரு பெரிய பிரச்சனை. தலைமையகம் மற்றும் பின்புற மேலாண்மை குழுக்களில் ஏராளமான லெப்டினன்ட் கர்னல்கள் மற்றும் மேஜர்களைப் பார்க்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அப்படியானால், முன் வரிசையில் உள்ள பிரிவுகளில் ஜூனியர் அதிகாரிகள் மற்றும் சார்ஜென்ட்கள் போதுமான அளவு பணியாற்றுகிறார்கள் என்று அர்த்தமல்ல. கீழ்நிலைப் பதவிகளை நிரப்புவதில் உள்ள இந்தப் பிரச்சினை அமைதிக் காலத்தில் கூட இருந்தது, இப்போது இன்னும் கடுமையானது. மேலும் இதுவே அதிக இழப்புகளைச் சந்திக்கும் வகையாகும். இன்னொரு விஷயம். "இராணுவ கடமை மற்றும் இராணுவ சேவை குறித்த" சட்டம் இராணுவ பதவிகளைப் பெறுவதற்கான குறிப்பிட்ட விதிமுறைகளை வழங்குகிறது. இராணுவச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இந்த விதிமுறைகள் பாதியாகக் குறைக்கப்படுகின்றன. இருப்பினும், தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் முன், பின் பணியாளர்கள் மற்றும் பயிற்றுனர்கள் என அனைவரும் இந்த சுருக்கப்பட்ட அமைப்பின் மூலம் முன்னேறுகிறார்கள். இதன் விளைவாக, துருப்புக்களில் படைப்பிரிவு-நிறுவன-பட்டாலியன் மட்டத்தில் பல கர்னல்கள் மற்றும் லெப்டினன்ட்கள், கேப்டன்கள் மற்றும் மேஜர்கள் பற்றாக்குறை - தலைவர்களுடன் நாம் முடிவடைகிறோம். சேவை நேரத்திற்கும் இதே நிலைமை பொருந்தும். நேரடியாகப் போரில் பங்கேற்றால் சேவை நேரம் வித்தியாசமாகக் கணக்கிடப்பட வேண்டும் என்ற பிரச்சினையை நான் நீண்ட காலமாக எழுப்பி வருகிறேன். குறிப்பாக, முன்னணியில் மூன்று மாதங்கள் இரு மடங்கு நேரத்தைக் கணக்கிட வேண்டும், மீதமுள்ளவை வழக்கம் போல் கணக்கிடப்படும். ஆனால் இல்லை, நாங்கள் விஷயங்களை வித்தியாசமாகச் செய்கிறோம். இது மீதமுள்ளவர்கள் மீது அழுத்தம் கொடுக்கும் மூத்த அதிகாரிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்புக்கு வழிவகுத்தது. இப்போது "அனைவரையும் விடுவிப்பது" பற்றிய பேச்சு உள்ளது. இதனால்தான் தந்திரோபாய மட்டத்தில் தோல்விகளை எதிர்கொள்கிறோம், இது குழப்பத்தையும் பணியாளர் பிரச்சினைகளையும் தூண்டுகிறது. https://fakty.ua/446832-poka-rossijskaya-armiya-diktuet-nam-usloviya-no-ne-schitayu-chto-pora-konstatirovat-fakt-chto-ukraina-proigryvaet---viktor-muzhenko1 point- "போர்க்களத்தில் வெற்றி பெற எங்களுக்கு ஒரு வாய்ப்பு இருந்தது, இன்னும் அது இருக்கிறது." ரஷ்யர்களை எவ்வாறு தடுப்பது என்பது குறித்து ஜெனரல் முஷென்கோ.
உக்கிரேனிய முன்னால் தளபதி உக்கிரேனின் தோல்விக்கான காரணங்கள் பலவற்றை கூறுகிறார், இவை எத்தனை சதவிகிதம் உண்மை என தெரியவில்லை, குறிப்பாக உளவுத்தகவலற்ற நிலையில் எதிர்த்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாக குற்றம் சாட்டுகிறார். ஆனாலும் சில நிர்வாக ரீதியான தவறுகளை சுட்டிக்காட்டுகிறார், பயிற்சியில் தகமைகளினடிப்படையில் (கற்கை ரீதியானதல்ல) வேலை வழங்கப்படவேண்டும், மற்றும் ஒரு குறித்த நாட்டுப்படையினருக்குள் வெவ்வேறு அதிகாரிகளின் சகாக்கள் அடிப்படையில் தரங்கள் வழங்கப்படக்க்கூடாது. அரசியல்வாதிகளினது தலையீடுகள், போருக்கான மூலோபாயத்தினடிப்படையில் இலக்குகள் தீர்மானிக்கப்படவேண்டும், வேலையின் ஆபத்தினடிப்படையில் ஊதியம், ஆட்பிரச்சினைகள், கல்வித்தகமையினடிப்படையினால் தெரிந்தெடுக்கப்படும் தரமற்ற அதிகாரிகளும் பட்டறிவு கொண்ட வீரர்கள் அதிகாரிகள் நிலை புறக்கணிப்பு, பூகோள சாதகங்களை விரயமாக்குதல், மேலிருந்து கீழான கட்டளை அமைப்புக்கள், தற்காப்பு பொறிமுறையற்ற படை முயற்சிகள், தற்காப்பு போருக்கான தேவையான கட்டமைப்புகளில் கவனம் செலுத்தாமை என பல காரணங்களை கூறுகிறார். ஒரு தசாப்பத்திற்கு மேலாக மேற்கினால் தயார்ப்படுத்தப்பட்ட உக்கிரேனின் பல குளறுபடிகளிற்கு வெறுமனே உக்கிரனை குற்றம் சாட்டும் வழமையான ஒரு பேட்டியாக இருப்பதோடு, முற்று முழுதான மேற்கின் தவறான திட்டமிடல், குறுகிய பயிற்சி (10 நாள்கள்) என பெரும் தொகையான உக்கிரேனியர்களின் உயிர்களை காவு வாங்கிய, வாங்குகின்ற போரினை தொடருவதன் மூலம் வெற்றியடையலாம் என உக்கிரேனிலும் உதவி வழங்கும் நாடுகளின் மக்களிடமும் நம்பிக்கையினை ஊட்டுவதன் நோக்கமாகவும் இந்த கட்டுரை உள்ளது, ஒட்டு மொத்த உக்கிரேனியர்களையும் போரின் ஏதோ ஒரு வகை பங்கு தாரர்களாக்கும் திட்டங்களையும் கூறுகிறார். இந்த போரில் இரஸ்சியா வென்றாலும் அரசியல், பொருளாதாரம், வெளியுறவு என பல மட்டங்களில் நிச்சயமாக தோல்வியுறும், மறுவளமாக உக்கிரேன் போரை நிறுத்துவதற்கு கூட பணம் கொடுத்தாலே போர் நிறுத்தம் சாத்தியமாகுமோ என அண்மையில் உக்கிரேன் அதிபரி கருத்துள்ளது. கீழே உள்ள செய்தியில் செலன்ஸ்கியின் கருத்து! ஜெலென்ஸ்கி: ஒரு வருடப் போருக்கு கிட்டத்தட்ட 120 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும், பாதியை வேறு எங்காவது கண்டுபிடிக்க வேண்டும். Tetyana Oliynyk — புதன், 17 செப்டம்பர் 2025, 19:17 14850 பற்றி பத்திரிகையாளர் சந்திப்பு. புகைப்படம்: உக்ரைன் ஜனாதிபதி அலுவலகம் 2026 ஆம் ஆண்டில் போருக்கு 120 பில்லியன் அமெரிக்க டாலர்களை செலவிட வேண்டியிருக்கும் என்று உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். மூலம்: ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலாவுடன் செய்தியாளர் சந்திப்பின் போது ஜெலென்ஸ்கி மேற்கோள்: "இந்தப் போரின் தற்போதைய செலவு எங்களுக்கு ஒரு சவாலாக உள்ளது. ஒரு வருடத்திற்கான விலை [USD] 120 பில்லியன். அறுபது பில்லியன் உக்ரைனிய பட்ஜெட்டில் இருந்து வருகிறது. அடுத்த வருடத்திற்கு நான் 60 [பில்லியன்] கண்டுபிடிக்க வேண்டும்." விவரங்கள்: போரை முடிவுக்குக் கொண்டுவருவது உக்ரைனின் முதன்மையான முன்னுரிமையாக உள்ளது என்று ஜெலென்ஸ்கி மேலும் கூறினார். மேற்கோள்: "எப்படியிருந்தாலும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதே திட்டம் A, திட்டம் B 120 பில்லியன். இது ஒரு பெரிய சவால். அமைதிக் காலத்தில் நமக்கு [இவ்வளவு பணம்] தேவைப்படும் என்று நான் கூறவில்லை - போர் நிறுத்தம் அல்லது பாதுகாப்பு உத்தரவாதங்களின் கீழ் - 10 ஆண்டுகளுக்கு இவ்வளவு பெரிய தொகைகள் நமக்குத் தேவைப்படும். ஆனால் எப்படியிருந்தாலும், இந்தப் பிரச்சினையின் அளவை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்."1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஅழகிய படிந்த எழுத்து நடை உங்களது..! தொடருங்கள்..! நானும் அவுஸில் நாட்டுப் புறங்களுக்குப் போவதுண்டு..! ஒரு நாள் ஒரு மலை உச்சியில் நின்ற போது, ஒரு மலை வேம்பு மரத்தினைக் கண்டுள்ளேன். ஒரு சிறிய மரம் தான்..! ஆனால் மூன்று காய்களைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு நின்றிருந்தது..!1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointடால்பினுக்கு தமிழ் ஓங்கில் என்று இப்போது தான் அறிந்து கொண்டேன். நன்றி.1 point- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
எதற்கெடுத்தாலும் சிங்களத்தை நொந்து கொள்வதில் எனக்கு உடன்பாடில்லை. யாதும் ஊரே யாவரும் கேளீர் என நாம் மட்டும் தான் சொல்லிக்கொண்டு எம்மை நாமே அழித்துக்கொண்டிருக்கின்றோம். உலகில் வேறு எந்த இனமும் இந்த உலகம் எல்லோருக்கும் பொதுவானது என சொல்வதில்லை. இனியும் சொல்லப்போவதில்லை. முன்னர் தமிழர்கள் இந்து கலாச்சார அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.பல தமிழர்கள் வேறு அமைச்சர்களாகவும் இருந்துள்ளார்கள். அவர்கள் இதனை செய்திருக்க வேண்டும் .செய்யவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் பாராளமன்ற உறுப்பினர்கள் பலர் இருந்துள்ளார்கள்.இருக்கின்றார்கள். ஏன் தமிழர்களின் புராதன அழிவுகளை புனரமைக்க முன் வரவில்லை? ஊருக்கு ஊர்,மூலைக்கு மூலை உள்ள கோவில்களுக்கு ராஜகோபுரம் கட்டி பந்தா காட்டும் புலன்பெயர் தமிழன்களுக்கு சங்கிலியன் பற்றி ஏதாவது தெரியுமா என கேட்டுப்பாருங்கள். முகநூலில் தடவித்தடவி தேடிக்கொண்டிருப்பான்.🤣1 point- “My dear Tamil diaspora and their children and grandchildren…” / "எனது அன்பான தமிழ் புலம்பெயர்ந்த மக்களே, அவர்களின் குழந்தைகள் மற்றும் பேரக்குழந்தைகளே..."
எல்லோருக்கும் நன்றிகள்1 point- அருவருக்கத்தக்க அரசியலுக்காக தியாகி திலீபனைப் பயன்படுத்தும் முன்னணி - இளங்குமரன் எம்.பி குற்றச்சாட்டு!
Published By: Vishnu 18 Sep, 2025 | 02:56 AM நினைவேந்தல்களை வைத்து தேர்தல் கணக்கு அரசியல் செய்யும் முன்னணியின் செயல் எப்போது நிறுத்தம் காணும் என நாடாளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையிலேயே இதனை தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் தெரிவிக்கையில், தியாக தீபம் திலீபன் அண்ணனின் நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்க வந்த அமைச்சர் சந்திரசேகருக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையைத் தடுப்பது, தமிழ்க் காங்கிரஸ் முன்னணியின் செயல் எனில் – அது அயோக்கியத்தனத்தின் உச்சமே ஆகும். யாரும் யாரையும் அஞ்சலிக்கலாம்; அதுதான் மனித மாண்பு. திலீபன் அண்ணன் போராடிய காலத்தில் அவருக்கு எதிராக நின்ற பலர் இன்று நினைவேந்தல்களில் பங்கேற்கின்றனர். அவர்களை முன்னணியே தேர்தல் அரசியலுக்காக அருகில் நிறுத்திக் கொள்கிறது. ஆனால், மற்றவர்களை அனுமதிக்க மறுப்பது எத்தகைய முரண்பாடு? ஒரு மாவீரனின் – தியாகியின் நினைவேந்தலை வாக்குக் கணக்குப் பொருட்டு அரசியல் ஆக்கிரமிப்பு செய்வது ஒருபோதும் மன்னிக்க முடியாத குற்றமாகும். இது மனித மாண்புகளை மீறிய காட்டுமிராண்டித்தனமே தவிர வேறில்லை என குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/2253691 point- களைத்த மனசு களிப்புற ......!
1 point1 point- கருத்து படங்கள்
1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointஒரு வாகனத்தில் ஏற்றியே மண் குன்றுகளுக்கு கொண்டு சென்றார்கள். செல்லும் போது சில சிறு மண் குவியல்களைத் தாண்டியே வாகனம் ஏறி இறங்கிச் சென்றது. அப்போது வல்லிபுரக் கோவில் பகுதிகளே நினைவில் வந்தன. வல்லிபுரத்தில் மண் குவியல்கள் இப்போது இல்லை. வெறும் மண் தானே என்று அள்ளி முடித்துவிட்டார்கள்.............🫣. மேற்கத்தைய நாடுகளில் வெறும் மண் தானே என்று அள்ளி விடாமல், அந்த இடத்தை பயனுள்ளதாக மாற்ற வேறு ஏதாவது வழிகள் இருக்கின்றதா என்று பார்க்கின்றார்கள். ஆனால் இதே மண் குவியல்கள் ஆபிரிக்காவிலோ அல்லது ஆசியாவிலோ இருந்தால், அதே மேற்கு நாடுகள் அங்கு அரிய உலோகங்கள் இருக்கின்றதா என்று ஆராய்ந்து, அரிய உலோகங்கள் அங்கு இருந்தால் அந்த மண் குவியல்களை இல்லாமலும் ஆக்கிவிடக் கூடியன. அங்கு நான் பார்த்த இன்னொரு விடயம் மணல் மேடுகளில் ஏறிச் செல்லும் கனரக வாகனங்கள் மிட்சுபிசி (Mitsubishi) நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை. இந்த நிறுவனத்தின் இப்படியான கனரக வாகனங்களை நான் முன்னர் கண்டிருக்கவில்லை. இந்த நிறுவனத்தின் வாகனங்கள் ஒரு முடிவுக்கு வந்தது போன்ற ஒரு நிலையே அமெரிக்காவில் இருக்கின்றது. இதே போலவே அங்கே பலரும் மிட்சுபிசி அவுட்லாண்டர் போன்ற வாகனங்களையும் தங்களின் தேவைகளுக்கு வைத்திருக்கின்றார்கள்.1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 point2. மணல் தெய்வம் ---------------------------- 'மண் அப்புச்சாமிக்கு என்ன பெயர்?' அப்படி ஒரு கடவுள் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. மண்ணுக்கு என்று ஒரு கடவுள் எங்கள் வழக்கத்தில் இருக்கின்றதா? உலகில் எந்த நாகரிகத்திலும் அப்படி ஒரு தெய்வம் இருக்கின்றதா என்று யோசிக்க வைத்தது மகளின் அந்தக் கேள்வி. நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் என்பன ஐந்து பூதங்கள் எனப்படுபவை. பூமியெங்கும் பல நாகரிகங்களிலும் இவைக்கு தனித்தனியே கடவுள்கள் இருந்தார்கள். அவற்றில் பல கடவுள்கள் அழிந்து போய் விட்டாலும், சில கடவுள்கள் மனிதர்களிடம் இருந்து தப்பி இப்போதும் பூமியில் அழியாமல் இருக்கின்றார்கள். ஆனாலும் தனியே மண்ணுக்கு என்று ஒருவர் எங்கேயும் இருந்ததில்லை என்றே தோன்றியது. 'மண்ணுக்கு என்று ஒரு அப்புச்சாமி இல்லை. ஆனால்...............' சுற்றிவர மண்ணும், மண் குவியல்களும் அன்றி வேறுதுவுமில்லை. மேலே தெளிந்த நீல வானம். குளிர்காலப் பருவத்தை முடித்துக் கொண்ட சூரியன் இதமாக கிழக்கில் இருந்து எரிந்து கொண்டிருந்தது. ஆஸ்திரேலியாவில் இப்படி ஒரு இடம் இருப்பதை நான் முன்னர் தெரிந்திருக்கவில்லை. பெரும் மணல் வெளியும், அதன் இடை இடையே நெருக்கமாக சில நூறு அடிகள் உயரம் கொண்ட மண் குன்றுகளும் அந்தப் பிரதேசத்தை மூடி இருந்தன. மண் சரிவுகளில் சறுக்கும், ஓட்டகத்தில் ஏறி ஓடும், மணல் பிரதேச வாகனங்களில் பறக்கும் விளையாட்டுகளும், பொழுதுபோக்குகளுக்குமான இடம் அது. 'ஆனால் பூமாதேவி என்று ஒரு அப்புச்சாமி இருக்கின்றார். அம்மன் போல. அவர் தான் பூமி முழுவதற்கும் கடவுள், பூமிக்கு பொறுப்பு.............' என்றேன். 'நீங்கள் அவரையா இப்போது கும்பிட்டீர்கள்.........' என்று சிரித்தனர் ஒன்றாகச் சேர்ந்து. கொடுக்கப்பட்ட அந்த நீண்ட மட்டையின் மீது இருந்தோ அல்லது நின்றோ சரிவுகளில் சறுக்கிக் கொண்டு கீழே வந்து விடலாம். மட்டையின் மீது இருந்து கொண்டே சறுக்குவது இலகு. மட்டையில் நின்று கொண்டே சரிவுகளில் சறுக்கி வந்தால் முகம் குப்புற விழ வேண்டி வந்தாலும் வரும். எப்படியோ உருண்டு பிரண்டாவது கீழே வந்து விடலாம். ஆனால் மீண்டும் சரிவுகளில் ஏறும் போது மணல் தெய்வத்தின் துணை இருந்தால் நலம். நான் இரண்டு முழங்கால்களையும் குத்திட்டு, மட்டையை மணலில் குத்தி கைகளால் பிடித்துக் கொண்டே, தலையைத் தாழ்த்தி, மூச்சு விடும் போது பார்த்திருக்கின்றார்கள். காவோலை மண்டியிட்டு மூச்சு விட குருத்தோலைகள் கலகலத்தன. சிட்னியில் இறங்கிய அன்றே நெல்சன் குடாவுக்கு போவதற்கு ஆயத்தாகிவிட்டார்கள். என்னை விட்டால் வீட்டுக்கு அருகில் இருக்கும் வியட்நாம் வெதுப்பகத்தில், அது இப்பவும் அங்கே இருந்தால், பாணை வாங்கி சம்பல் அல்லது பழங்கறிகளுடன் சாப்பிட்டு விட்டு, அந்த ஊரில் இருக்கும் வாசிகசாலைக்குள் ஓடிப் போய் விடுவேன் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும். முன்னர் சில தடவைகள் அப்படி நடந்தும் இருக்கின்றது. -நெல்சன் குடா சிட்னியிலிருந்து வட கிழக்கு திசையில் ஒரு இரண்டு மணி நேர பயணத்தில் இருக்கின்றது. கலிபோர்னியாவில் இருக்கும் கடற்கரை சுற்றுலா நகரங்கள் போன்றே இதுவும் இருக்கின்றது. கோடை காலத்தில் கூட்டம் கூட்டமாக பயணிகள் வருவார்கள் என்றனர். அங்கே கடற்கரை ஓரமாக கட்டப்பட்டிருக்கும் எண்ணற்ற விடுதிகளே அதற்குச் சான்று. அங்கிருக்கும் மணல் மேடுகள் பூமியின் தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று அங்கே எழுதியிருந்தார்கள். அதிகமாகப் போனால் சில நூறு அடிகளே வரும் இவையா தென்கோளத்தில் இரண்டாவது பெரியவை என்று ஆச்சரியமாக இருந்தது. வடகோளத்தில் அரபுப் பாலைவனங்களிலோ அல்லது ஆபிரிக்கப் பாலைவனங்களிலோ ஆயிரம் அடிகளில் மண் மேடுகள் இருக்கும் என்றே நினைக்கின்றேன். இந்தியாவில் கூட ராஜஸ்தானில் இருக்கலாம். பூமியின் வடகோளமும், தென்கோளமும் மிகவும் மாறுபட்டவை. தென் கோளத்தில் நீர்ப்பரப்பு மிக அதிகம், நிலப்பரப்பு மிகக் குறைவு. வட கோளத்தில் நிலப்பரப்பு தென் கோள நிலப்பரப்பை விட இரண்டு மடங்கு அதிகம். அதனாலேயே தென் கோளத்தின் வெப்பநிலை சீராகவும், வடகோளத்தின் வெப்பநிலை பருவகாலங்களுடன் பெருமளவு மாறுபட்டுக் கொண்டும் இருக்கின்றது. திமிங்கிலம் பார்ப்பது, ஓங்கில் (டால்பின்) மீன்கள் பார்ப்பது என்றும் பெரிய படகுகளில் ஆட்களை கடலுக்குள் ஏற்றிக் கொண்டு போகின்றார்கள். சில தடவைகள் கலிஃபோர்னியா கடலுக்குள் இப்படி போயும் இருக்கின்றோம். இப்படிப் போனதில் ஒரு தடவையாவது ஒரு திமிங்கிலமோ அல்லது ஓங்கில் மீனோ கண்ணில் பட்டிருக்கவில்லை. ஆனால், அப்பொழுது நான் வேலை பார்த்த இடம் கடற்கரைக்கு மிக அருகில் இருந்தது, ஒரு நாள் மதியம் கடற்கரையில் நடக்கும் போது ஓங்கில் மீன்கள் கூட்டம் கூட்டமாகப் போய்க் கொண்டிருந்தன. எப்பவோ குடுத்த காசுகளுக்கு அப்பொழுது எனக்காக வந்திருக்கின்றன போல. நெல்சன் குடாவிலும் எனக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆஸ்திரேலியாவில் கட்டணங்கள், விலைகளும் அதிகம். அந்தக் கடற்பகுதியில் எத்தனை ஓங்கில்கள் இருக்கின்றன, எத்தனை குட்டிகள் போட்டன என்ற தகவல்களும், இன்னும் மேலதிக கதைகளும் அந்தப் படகுப் பயணத்தில் சொன்னார்கள். ஆனால் எந்த மீனும் மேற்கடலுக்கு வரவேயில்லை. கலிபோர்னியா கடலில் கேட்காத கதைகளா அல்லது கொடுக்காத காசா, சரி இதுவும் போகட்டும் என்று இருந்தோம். திடீரென்று வேறோரு பகுதியில் ஓங்கில் மீன்கள் நடமாடுவதாக அங்கே படகை செலுத்தினார்கள். அங்கே பெரிதும் சிறிதுமாக பல ஓங்கில் மீன்கள் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தன. பெரியவை கடுமையான சாம்பல் நிறத்திலும், குட்டிகள் மெல்லிய சாம்பல் நிறத்திலும் இருந்தன. முக்கியமான ஒரு விடயம் சொன்னார்கள். இந்த ஓங்கில் மீன்களின் கூட்டத்தில் பெரிய மீன்களில் ஆண் மீன்களே கிடையாது என்றும், அம்மா - பெரியம்மா - சித்தி - மாமி மீன்கள் மட்டுமே குட்டிகளை வளர்க்கின்றன என்றும் சொன்னார்கள். ஆண்கள் தனியே போய் விடுமாம். ஓங்கில் மீன்கள் புத்திசாலிகள் என்று சொல்லக் கேட்டிருக்கின்றோம் தானே. அங்கிருந்த ஒரு வெளிச்ச வீட்டிற்கு போயிருந்தோம். 1800ம் ஆண்டுகளின் நடுப்பகுதியில் என்று நினைக்கின்றேன், சரியாக ஞாபகம் இல்லை, அந்த வெளிச்ச வீடு அங்கிருக்கும் ஒரு சிறிய மலையில் அமைக்கப்பட்டது. அதற்கு முன்னர் அந்த குடாப் பகுதிக்கு இரவுகளில் வரும் பல கப்பல்கள் விபத்துக்குள்ளாகி பலர் இறந்து போயிருக்கின்றனர். தனி ஒருவராக ஒருவர் அந்த வெளிச்ச வீட்டை பல ஆண்டுகள் பராமரித்து இருக்கின்றார். சில மண்ணெண்ணை லாந்தர்களை இரவுகளில் ஏற்றி அந்த வெளிச்ச வீட்டை இயக்கியிருக்கின்றார். அவர் தினமும் லாந்தர்களை ஏற்றினார் என்றே அங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள். அந்த லாந்தர்கள் சில அங்கே பார்வைக்காக வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஒரு மனிதர் போல எத்தனை தெய்வங்கள் வந்து போன பூமி இது. (தொடரும்..........................)1 point- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இப்படிக் கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வந்திருந்தால், பிளேட்டை அப்படியெ எ மாத்திப் போட்டு "சிங்கள தொல்லியல் திணைக்களம் தமிழர்களின் காணியைப் பிடிக்குது, சிங்களப் பகுதிகளில் இப்படி செய்வார்களா?" என்று ஒரு "பொங்கல்" வைத்திருப்பீர்களே?1 point- ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained
ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained
1 pointADHD (Attention deficit/hyperactivity disorder) என்பது நியூரோ டெவெலப்மென்டைல் கண்டிஷன் (Neuro developmetal condition) ஆகும். அதாவது மூளையோடு தொடர்புடைய பிரச்னை! ADHD வகைகள் 1. இன்அட்டென்டிவ் (inattentive) - இதில் கவனித்தல் பிரச்னைதான் முக்கிய காரணமாக இருக்கும். 2. இம்பல்சிவ் ஹைப்பர் ஆக்டிவ் (impulsive hyperactive) - இதில் அதிகமான இயக்கம், படப்படப்பு மற்றும் அமைதியின்மை அதிகமாக இருக்கும். மேலும் இவர்கள் யோசிக்காமல் முடிவுகளை உடனுக்குடன் (இம்பல்சிவ் டெசிஷன்ஸ்) எடுப்பார்கள். 3. இரண்டும் கலந்த வகை (combined) - இது கடுமையான பிரச்னை எப்படிக் கண்டறிவது? • கவனம் இல்லாமை • நிலையில்லாத மனது • அதிகப்படியான உடல் இயக்கம் • உடல் சோர்வு மற்றும் படப்படப்பு போன்ற அறிகுறிகளை வைத்து அறியலாம். இவர்கள் எப்போதுமே அசைவில் இருக்கவே விரும்புவார்கள். இவர்களின் மூளைக்கு அது அவசியமாகப்படும். சில நேரங்களில் உடல் அசைவுகள் இல்லாத போது 'ஃபிட்ஜெட் ஸ்பின்னர்' போன்ற பொம்மைகள் இவர்களுக்கு உதவும். அதைக் கையில் வைத்துச் சுற்றிக்கொண்டே இருக்கும்போது உடல் அசைவினில் இருப்பதாக எண்ணி மூளை அமைதியடையும். எந்த வயதில் இது வெளிப்படும்? பொதுவாகக் குழந்தைப் பருவத்தின் தொடக்கத்திலேயே இதன் அடையாளங்களைக் கண்டறிய முடியும். சிலருக்கு 'ஹைப்பர் ஆக்ட்டிவிட்டி' இல்லாமல் மற்ற அனைத்து அறிகுறிகளும் இருக்கும். இது ADD (Attention deficit disorder) ஆகும். இதை கண்டறிவது சிரமமே! ADHD-ஐ அதீத சுறுசுறுப்பு, படப்படப்பு போன்றவற்றை வைத்துக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ADD இருக்கும் குழந்தைகள் இயல்பாக இருப்பதுபோலத்தான் தெரிவார்கள். அவர்களுக்கு முக்கியமாகக் கவனம் செலுத்துவதில் பிரச்னை வரும். 5 முதல் 6 வருடங்களுக்குப் பிறகே இவர்களுக்கு பிரச்னை இருப்பதே தெரியவரும். ADD - ADHD ADHD மற்றும் ADD-ஆல் வரும் பாதிப்புகள்: ~ எந்த விஷயத்தையும் முறையாக நிர்வகிக்க முடியாது ~ மறதி ~ நேர மேலாண்மை இல்லாமை ~ இடத்தைக் குப்பையாக வைத்திருப்பது ~ பொருட்களை அடிக்கடி தொலைப்பது சிறு வயதிலேயே இந்த ADHD வரும்போது குழந்தைகள் ஹைப்பராகச் செயல்படுவார்கள். குதிப்பது, ஓடுவது என ஓர் இடத்தில் உட்காரவே மாட்டார்கள். முக்கியமாக வகுப்பறையில் உட்கார்ந்து பாடம் கவனிக்கவே முடியாது. அருகில் அமர்ந்திருப்பவர்களைத் தொந்தரவு செய்வார்கள். இதெல்லாம் நாளுக்கு நாள் நடக்கக் கூடிய பாதிப்புகள்! இதைக் கண்டறியாமல் விட்டால் பெரியவர்கள் ஆனபிறகும் தொடரும். ADHD-ஐ சரி செய்ய முடியுமா? இந்த ADHD-ஐ சரி செய்ய முடியாது. ஆனால், அதைச் சமாளித்து அதோடு ஒன்றிணைந்து வாழ முடியும். சீக்கிரமே கண்டறிந்தால் அதிகமாகாமல் தடுக்க முடியும். இதைப் பெரியவர்களாக இருக்கும்போது கண்டறியும் பட்சத்தில் அவர்களின் தன்னம்பிக்கை, வாழ்க்கைத் தரம் ஆகியவை பாதிக்கப்படுகின்றன. மருத்துவரிடம் ஆலோசித்து, பிரச்னை எந்த அளவில் இருக்கிறது என்பதை தெரிந்துகொண்டு அதைச் சமாளிக்கும் வழிகளைக் கற்றுக்கொண்டால் நிம்மதி பிறக்கலாம். இவர்களை வழிநடத்த, தேவையானபோது நினைவூட்ட எனச் சில செயலிகளும் இப்போது உள்ளன. இதனால் அவர்களின் நிர்வகிப்பு திறன் மற்றும் நேர மேலாண்மை மேம்படும். ADHD இருப்பவர்கள் ஒரு மருத்துவரை அணுகுவது அவசியமா? சுயமாகவே சமாளிக்க முடியுமா? முதலில் நமக்கு உண்மையாகவே ADHD இருக்கிறதா இல்லையா என்பதைக் கண்டறிய வேண்டும். சில சமயங்களில் சிலர் உண்மையாகவே அதீத ஆற்றல் கொண்ட குழந்தையாகக் கூட இருக்கலாம். இதை மனநல மருத்துவர் அல்லது உளவியலாளர்களால் மட்டுமே கண்டறிய முடியும். இதைக் கண்டறிந்த பின்னரே பாதிப்பின் அளவும் நமக்குத் தெரிய வரும். ஏனென்றால், இந்த ADHD அனைவருக்கும் ஒரே அளவில் இருக்காது. குறைவான, நடுத்தரமான மற்றும் அதிகமான என மூன்று அளவுகளில் இது இருக்கும். அதிகமான அளவு இருப்பவர்களுக்குக் கண்டிப்பாக மருந்து மற்றும் மாத்திரைகளின் தேவை இருக்கும். இவர்களைப் பெற்றோர்களால் தனியாகச் சமாளிக்க முடியாது. நடுத்தர அளவு பாதிப்புள்ளவர்கள் மருத்துவரை அணுகி, அதைச் சமாளிப்பதற்கான வழிகளைத் தெரிந்துகொண்டு அதைச் செயல்படுத்த வேண்டும். குறைவான அளவு பாதிப்புள்ளவர்கள் பெற்றோரின் உதவியோடு இதைச் சமாளிக்க முடியும். இதைப் பற்றி நிறையப் புத்தகங்களும் உள்ளன. அவற்றை வாசித்து பிரச்னை குறித்துத் தெரிந்துகொண்டால், இந்த குறைவான அளவு ADHD பாதிப்பை நீங்களே சமாளிக்கலாம். ஆனால் பாதிப்பு அளவைக் கண்டறிய மருத்துவரின் உதவி அவசியமானது. இவர்களால் தினசரியாக ஒரு வழக்கத்தை (Routine) பின்பற்ற முடியுமா? இவர்களுக்குச் சொந்தமாக ஒரு வழக்கத்தை உருவாக்கி அதைப் பின்பற்றுவது கடினமாகவே இருக்கும். வெளியிலிருந்து ஒரு நபர் உதவி, இவர்களை வழிக்குக் கொண்டுவர வேண்டும். அதேபோல் அது கடினமான வழக்கமாக இல்லாமல் எளிமையாக, பின்பற்றக் கூடிய ஒன்றாக இருக்கவேண்டும். இவர்களுக்கு அதிகப்படியான திட்டமிடல் தேவைப்படும். எளிமையான வழக்கம், முன்கூட்டியே திட்டமிடல் மற்றும் ஒருவரின் உதவி என இந்த மூன்று விஷயங்களும் இருந்தால் இந்தப் பிரச்னையை சமாளிப்பது அவர்களுக்கு எளிதாகிவிடும். மனநல மருத்துவர் மற்றும் விளையாட்டு சிகிச்சை நிபுணர் மீனா பாதிக்கப்பட்டவர்களுக்கு நண்பர்கள் எவ்வாறு உதவலாம்? நண்பர்கள் முதலில் இவர்களுக்கு என்ன பிரச்னை உள்ளது, எதனால் வருகிறது, எப்படியெல்லாம் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்து, புரிந்துகொண்டால் இவர்கள் கொஞ்சம் ஆதரவாகவும் ஆறுதலாகவும் உணருவார்கள். மேலும் இவர்கள் மறக்கும் விஷயத்தைக் கடுமையான முறையில் வெளிப்படுத்தாமல் மெதுவாக நினைவுபடுத்த வேண்டும். சின்னசின்ன விஷயங்களில் நண்பர்களும் சுற்றியிருக்கும் உறவினர்களும் ஆதரவாக இருக்க ஆரம்பித்தால் கண்டிப்பாக இவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்." விரிவாக எடுத்துரைத்த மருத்துவர் மீனா, நம்முடன் அவருடைய தனிப்பட்ட கதையையும் பகிர்ந்துகொள்கிறார். "என்னுடைய மகனுக்கும் இந்த ADHD உள்ளது. அதனால்தான் நான் இந்த துறைக்கே வந்தேன். என் மகனுக்கு உட்கார்ந்து ஒரு பாடம் படிப்பது என்பதே கடினமாக இருந்தது. அதைப் புரிந்துகொண்டு, அவன் ஓடி ஆடி விளையாடும் போது அந்த பாடத்தை அவனுக்கு வாசித்துக் காட்டி அவனைப் படிக்க வைத்தேன். அப்படி படித்துத்தான் அவன் ஸ்கூல் டாப்பர ஆனான். அவனுக்கு ஸ்போர்ட்ஸில் ஆர்வம் இருப்பது தெரிந்து அதற்கும் ஊக்கப்படுத்தினோம். உடல் இயக்கம் இவர்களுக்கு ரொம்ப முக்கியம். என் பையன் ஒரு மாரத்தான் ஓடும் அளவுக்குச் சிறந்து விளங்குகிறான். கல்லூரியில் கூட உடற்பயிற்சி உடலியல்தான் படிக்கிறான். அவன் இப்போது இந்த ADHD-ஐ பிரச்னையாக பார்க்கவில்லை. அதை தன் பலமாகக் கருதுகிறான்!" என்றார் பெருமையாக! ADHD: இது பெரிய பிரச்னையா? எப்படிக் கண்டறிவது? மருத்துவ உதவியில்லாமல் சமாளிக்க முடியுமா? | Explained | A complete guide on ADHD and how to control it - Vikatan1 point- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
1 point- கொஞ்சம் ரசிக்க
1 point3.5M views · 81K reactions | சமூக வலைத்தளங்களில் வைரலாக ப...சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவும் காணொளி ..1 point- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
உங்கள் போன்ற கற்பனையுலகில் வாழும் ஆட்களுக்குப் பதில் எழுதும் நோக்கில், இறந்த ஒருவரின் படங்கள் வீடியோக்களை மீண்டும் இங்கே இழுத்து வரவேண்டிய அவசியம் இல்லை என்பதால் நான் இணைக்கப் போவதில்லை! ஆனால், இணையத்தில் "பிரபாகரன் இறப்பு" என்ற தேடற்சொல் மூலம் எப்படித் தேடல் செய்வது என்பது கூடத் தெரியாமலா "சனல் 4" பார்க்கிறீர்கள்😂?1 point- ஒரு பயணமும் சில கதைகளும்
1 pointமிகவும் சரியாகச் சொன்னீர்கள், அண்ணா............ ஒரு முக்கால் வட்ட வடிவில் எல்லா முனையங்களும் அடுத்தடுத்து அமைந்துள்ளதால் இந்தச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இப்பொழுது வட்டத்தின் குறுக்கே சில புதிய பாதைகள் வந்துள்ளன.ஆனாலும் முதலாவது அல்லது இரண்டாவது முனையங்களின் வெளியே கூட்டம் அதிகமானால், இரத்த அழுத்தம் எகிறுவது உறுதி................🤣. அடுத்த வருடம் இங்கு நடக்கவிருக்கும் உலக கோப்பை கால்ப்பந்தாட்டப் போட்டிகள் மற்றும் 2028ம் ஆண்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டிகளை முன்னிட்டு இந்த விமான நிலையத்தில் சில வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. People Mover என்னும் மேம்பாலம் ஒன்றை அமைத்துள்ளார்கள். இது எல்லா முனையங்களுக்கும் செல்கின்றது. இதற்கான ஏறும் தரிப்பு விமான நிலையத்தில் இருந்து வெளியே உள்ளது. அங்கே போய், அந்த மேம்பாலத்தில் செல்லும் வாகனங்களில் ஏற வேண்டும். எட்டுப் பெட்டிகள் கொண்டு செல்பவர்கள் திண்டாடப் போகின்றார்கள்........1 point- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
இது எமது அடையாளம். அரசாங்கம் இதில் அக்கறை செலுத்தப் போவதில்லை. அரசுக்கு... இது அழிவதில் உள்ளூர சந்தோசம். நாம்தான் இதனை வருங்கால சந்ததிக்காக பாதுகாத்து கொடுக்க வேண்டும்.1 point- தொல்பொருள் சின்னமான மந்திரி மனை இடிந்து விழுந்தது!
ஜே. ஆர். ஜெயவர்த்தன ஒரு மொக்கன் / முட்டாள்.1 point- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
தமிழரிடமிருந்து எதை பிடுங்குவேன் என்று அலையும் சிங்களத்திடம் தமிழருக்கு கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் பேச்சுமேடைக்கு போவதே புலிகளை பெலவீனப்படுத்துவதற்கே. கொடுப்பதற்கு எதுவும் இருந்திருந்தால்; புலிகளை அழித்த பின்தான் தீர்வு என்று ஏன் சொல்ல வேண்டும்? சரி, சர்வதேசத்திற்கு கொடுத்த வாக்கின்படி, அவர்களை அழித்த பின் ஏன் கொடுக்கவில்லை கொடுக்க இருந்ததை உறுதியளித்ததை? இன்னும் மக்களின் காணிகளை ஏன் விகாரைகளிற்கும் இராணுவத்திற்கும் அபகரிக்கிறார்கள்? இடைத்தரகர்களிற்கும் தெரியும், அவர்களும் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. ஒட்டுக்குழுக்களின் ஆயுதங்களை களையுங்கள் என்று கேட்டபோதே மறுத்து விட்டார்கள். புலிகள் இருந்தால் ஏமாற்ற முடியாது, உடன்படிக்கைகளை கிழித்தெறிய முடியாது என்பதற்காக அவர்களை அழித்தார்கள். இந்தப்பிரச்சனை இயற்கையால் தீர்த்து வைக்கப்பட்டால் அன்றி எந்த சிங்களமும் இனப்பிரச்சினையை தீர்க்காது. இல்லை சிங்கள மக்கள் உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு உண்மையான வரலாறு தெரியாது. தெரியவும் வாய்ப்பில்லை. இது மிகவும் துரதிஷ்டம். அதற்காகவே திட்டமிட்டு நூலகத்தை தீக்கிரையாக்கி வரலாற்றைத்திரித்து, புதிய குடியேற்றங்களையும் விகாரைகளை நிறுவியுள்ளார்கள். இயற்கையின் சீற்றம் ஒருநாள் இந்த இனத்திற்கு எதிராக திரும்பி வரலாற்றை எழுதும். அப்போது இதை எழுதும் நான் உயிரோடு இருக்கப்போவதில்லை. சிங்களத்திற்கு முண்டு கொடுத்த கதிர்காமருக்கு பிரதமர் பதவியை அளிக்க விரும்பாத சிங்களம், எதை தமிழருக்கு கொடுத்திருக்கும்? புலம்பெயர் தமிழரின் பணத்தை வாரிக்கொடுத்த பத்மநாதன், வி. முரளிதரன், டக்கிளஸ் போல நக்கிப்பிழைத்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். இத்தனை மக்களை, சொத்துக்களை பலி கொடுத்து, தன்னை காப்பாற்றிக்கொள்ள என்தலைவன் நினைக்கவில்லை. அப்படி நினைத்திருந்தால்; அவரை யாரும் தலைவன் என்று பெருமை பாராட்ட வாய்ப்பில்லை.1 point- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
கருணா ஒரு தீர்க்கதரிசி…. (டக்கெண்டு பாய்ந்து பிராண்ட வேண்டாம், கீழே வாசிக்கவும்) கருணா மோடங்கள் என சொல்லியது…. 2009 இல் தலைவர் வீரச்சாவை அடையவில்லை என, 2025, 2055 இலும் நம்பி கொண்டு இருக்க போகும் புலம்பெயர் தமிழர் சிலரை.1 point- பிரபாகரனின் கடைசி தருணம்: இலங்கை இறுதிக்கட்டப் போரில் என்ன நடந்தது?
ஆக, இறுதிவரைக்கும் சரணடையாது சண்டை செய்து போராடி இறந்த எம் தலைவரின் உடல் அது இல்லை என்கின்றீர்கள்? கோடாரியால் தான் இந்த காயம் வர வேண்டும் என்றில்லை. இறுதி வரைக்கும் போராடி, சரணடைய விரும்பாது முகத்தில், நாடியின் கீழ், துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டாலும், இந்த வகையான காயம் ஏற்படும். தலைவர் ஒரு உண்மையான வீரன். இறுதி வரைக்கும் போராடி வீர மரணம் அடைந்த ஒப்பற்ற தலைவன்! எம் இனத்தின் காலப் பிழையால் உதித்த உண்மைத் தமிழன்.1 point- எதிரிகளை சமாளிக்க இஸ்லாமிய நாடுகள் ராணுவ கூட்டணி உருவாக்குகின்றனவா?
இஸ்ரேல் இனிமேல் இவ்வாறான தாக்குதல்களை நடாத்த முடியாதபடி ஏதோ நடவடிக்கை எடுப்பார்கள் என ஆரம்பத்தில் கூறப்பட்டது. ஆனால், இந்த அரபு கூட்டமைப்பிலேயே ஒருவருக்கு ஒருவர் ஒற்றுமை இல்லை. தவிர ஆளாளுக்கு அவர்கள் அமெரிக்கா, மற்றும் மேற்கையே எல்லாவற்றுக்குமான தேவைகளுக்கு தங்கி உள்ளார்கள். கண்டன அறிக்கைகள் தவிர வேறு ஏதும் இவர்களால் இஸ்ரேலுக்கு எதிராக செய்யமுடியாது என்றே தோன்றுகின்றது. அரபு நாட்டில் நிறுவப்பட்டுள்ள அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கட்டமைப்பு இஸ்ரேல் விமானங்களுக்கு எதிராக செயற்பட முடியாதபடி கட்டுப்படுத்தப்பட்டது என ஒரு செய்தி பார்த்தேன். இஸ்ரேலின் தாக்குதல் அமெரிக்காவுக்கு பாரிய அழுத்தத்தை கொடுக்கும். ஆனால், அரபு நாடுகளுக்கு அமெரிக்காவை கைவிட்டால் வேறு கதி உள்ளதாக இப்போதைக்கு தெரியவில்லையே.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
1 point- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . .........! இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : பூங்காற்று திரும்புமா என் பாட்ட விரும்புமா பாராட்ட மடியில் வெச்சுப் தாலாட்ட எனக்கொரு தாய் மடி கெடைக்குமா பெண் : ராசாவே வருத்தமா ராசாவே வருத்தமா ஆகாயம் சுருங்குமா ஏங்காதே அத ஒலகம் தாங்காதே அடுக்குமா சூரியன் கருக்குமா ஆண் : என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல மெத்த வாங்கினேன் தூக்கத்த வாங்கல பெண் : இந்த வேதனை யாருக்குத்தான் இல்ல ஒன்ன மீறவே ஊருக்குள் ஆளில்ல ஆண் : ஏதோ என்பாட்டுக்கு நான் பாட்டுப் பாடி சொல்லாத சோகத்த சொன்னேனடி பெண் : சோக ராகம் சொகம் தானே சோக ராகம் சொகம் தானே ஆண் : யாரது போறது பெண் : குயில் பாடலாம் தன் முகம் காட்டுமா ஆண் : உள்ள அழுகுறேன் வெளிய சிரிக்கிறேன் நல்ல வேஷம்தான் வெளுத்து வாங்குறேன் பெண் : உங்க வேஷம்தான் கொஞ்சம் மாறனும் எங்க சாமிக்கு மகுடம் ஏறனும் ஆண் : மானே என் நெஞ்சுக்குப் பால் வார்த்த தேனே முன்னே என் பார்வைக்கு வாவா பெண்ணே பெண் : எசப் பாட்டு படிச்சேன் நானே எசப் பாட்டு படிச்சேன் நானே ஆண் : பூங்குயில் யாரது பெண் : கொஞ்சம் பாருங்க பெண் குயில் நானுங்க ஆண் : அடி நீதானா அந்தக் குயில் யார் வீட்டு சொந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததே ஒலகமே மறந்ததே பெண் : நான்தானே அந்தக் குயில் தானாக வந்தக் குயில் ஆத்தாடி மனசுக்குள்ள காத்தாடி பறந்ததா ஒலகந்தான் மறந்ததா ........! --- பூங்காற்று திரும்புமா ---1 point- எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்!
எதிர்த்துப் போராடினாலே வாழ்வு எனகளமுனைக்கு வந்த சிவம் அண்ணர்! Vhg ஆகஸ்ட் 13, 2025 (-பசீர் காக்கா -) "ஒரு செய்தி நூறு வீதம் உண்மையானது என நீங்கள் நம்பும் வரையில் அதனை ஊடகங்களுக்குச் செய்தியாகவோ கிசுகிசுப்பாகவோ தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும் வகையிலோ வெளியிடக் கூடாது." இது தமிழ் ஊடகத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எனது வழிகாட்டி கோபு ஐயா(எஸ் .எம் கோபாலரெத்தினம்) எனக்கு கற்பித்த பால பாடம். இதனைச் சொன்னால் பரபரப்புச் செய்தி அரசியல்தான் வடக்கில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே உருவாக்கி விட்டது.இதனையே நாமும் செய்வதில் என்ன தவறு? என இன்றைய youtube காரர்கள் கேட்கக்கூடும். இன்று வரை சிங்களவர்களுக்கு நிகராக இல்லாவிட்டாலும் வட கிழக்கில் தமிழர்கள் தமது உழைப்புக்கு கேற்றவகையில் பெறும் கூலி, காணி உரிமை,பாதுகாப்பு போன்ற விடயங்களில் இருந்து எட்டிய தூரத்திலேயே மலையகத் தமிழர்கள் இருக்கின்றார்கள். இவற்றைக் கருத்திற் கொண்டு சிவம் அண்ணரின் போராட்டப் பங்களிப்புக் குறித்து அவரது இறுதிச் சடங்கு முடியும் வரை அமைதி காப்பதே எமது கடமை என முடிவெடுத்தேன். பொதுவாக 1990 க்குப் பின் பங்களித்தவர்கள் தங்களது ஊகங்கள், சந்தேகங்களை உண்மையானவை என நிறுவ முயன்று வரலாற்றைத் திசைதிருப்ப முயல்கிறார்கள். அவர்களாவது பங்களித்தவர்கள் என்ற வகையில் விடலாமென்றால் போராடத் துணிச்சல் அற்று களத்திலிறங்கத் தயாரில்லாமல் தேவலோக வாழ்க்கை தேடித் திரிந்தவர்களும் சிவமண்ணரின் வரலாற்றில் குழப்பத்தை உருவாக்க முயல்கின்றார்கள். அதனால்தான் 78 ல் இயக்கத்தில் இணைந்து (76 அல்ல ) பின்னர் விலகிய பின் தனிப்பட்ட தகராறில் வெட்டிக் கொல்லப்பட்ட (சாவகச்சேரி பகுதியில் ) சிவம் என்பவரின் வரலாற்றுப் பெட்டியை சிவம் அண்ணர் என்ற போராட்ட இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள். அதேபோல சிவத்தான் என்ற பெயரில் மட்டக்களப்பு அணியிலிருந்து வடக்கில் கணிசமான பங்களிப்பை செய்த பின் கருணா அம்மானுடன் போனவரின் வரலாற்றை இதே இயந்திரத்தில் கொழுவ முனைகிறார்கள் 1990 பின் பங்களித்தவர்கள். தமிழரின் ஆயுதப் போராட்ட வரலாற்றில் தங்களது பங்களிப்பை செய்ய முனைந்தவர்களை அவதானித்தால் அவர்கள் பொதுவாக 17 வயது முடிந்த பின் போராட வேண்டுமென முடிவெடுத்திருப்பார்கள். தாம் எதிர்பார்த்த வகையில் எல்லாம் நடக்கவில்லை என்பதாலோ, வேறு பல்வேறு காரணங்களாலோ 33- 34 வயதில் போரா ட்டத்திலிருந்து விலகி விடுவார்கள். பின்னர் அவர்கள் சொந்த வாழ்க்கையில் கூடிய கவனமெடுப்பர். எங்கள் சிவமண்ணாவோ அந்த 34 வயதில் போராளியானவர். 1983 ல் இந்தியா வழங்கிய இரண்டாவது முகாமில் பயிற்சி பெற்றவர். 1977 ஆம் ஆண்டு இனக்கலவரத்தைக் தொடர்ந்து தமிழர் தாயகமே தமிழர்களுக்குப் பாதுகாப்பு என எண்ணி மலையகம் – பசறையிலிருந்து வடகிழக்குக்கு இடம் பெயர்ந்தோர்களில் இவரும் ஒருவர். இவர் குடியேறிய இடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமமான புல்லுமலை. எப்போதுமே நாம் ஓடிக்கொண்டிருக்கமால் எதிர்த்து நின்று போராட வேண்டும் என்ற தீர்மானத்தை செயற்படுத்த அவர் தேர்ந்தெடுத்த இயக்கம் தான் தமிழீழ விடுதலைப்புலிகள். சிறையிலிருந்து தப்பிப்பது என்பது வேறு சிறையை உடைத்து அங்கிருந்து கைதியை விடுவிப்பது என்பது வேறு. வெலிக்கடைப் படுகொலையைத் தொடர்ந்து மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிர்மலாவை மீட்டெடுத்ததையே சிறையுடைப்பு என்று சொல்லலாம். 1.துவிச்சக்கர வண்டியில் சென்று மேற்கொள்ளப்பட்ட சிறையுடைப்பு என்ற நடவடிக்கை என்று உலகில் வேறுறெதனையையும் சுட்டிகாட்ட இயலாது. 2. இரண்டே இரண்டு கைத்துப்பாக்கிகளுடன் சென்று மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இது. 3.மீட்கப்பட்டவரை துவிச்சக்கர வண்டியிலேயே கொண்டு சென்றமை என்ற வரலாறு இந்த நடவடிக்கைக்கு உண்டு. மட்டக்களப்பு சிறைக்குள் சென்ற நாலு போராளிகளில் ஒருவரான சிவமண்ணார் தனது பலத்தை திரட்டி காலாலேயே உதைத்து இக் கதவை உடைத்து நிர்மலா வெளியில் வர உதவினார். நிர்மலா எந்த அறையில் இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த போது தன்னை அடையாளம் காட்டும் வகையிலான நடவடிக்கையை நிர்மலா மேற்கொண்டார். இந் நடவடிக்கைக்காகத் திட்டமிடும்போது சிறைக்காவலருக்கான சீருடை அணிவதற்குப் பொருத்தமான உடற்கட்டுடையவராகவும், சிங்களம் தெரிந்தவராகவும் இருந்ததனால் இவரையே முதன்மையானவராக கொண்டு திட்டமிடப்பட்டது சிறைக் கதவைத் திறக்க முன்னர் அதிலுள்ள சிறு ஓட்டைவழியாக உள்ளிருந்து வெளியே பார்ப்பார்கள்.அவ்வேளை வேறு சிறையிலிருந்து கைதிகளைக் கொண்டு வருபவர் போல ஒருவர் தோற்றமளிக்க வேண்டும். தனக்கான பணியை இவர் மிடுக்குடன் மேற்கொண்டார். கதவு திறக்கும் வேளையில்தான் நிலைமையின் விபரீதத்தை புரிந்துகொண்டு கதவைமூட முயன்றனர் சிறைக்காவலர்கள்.எனினும் அந்த போராட்டத்திலும் சிவமண்ணன் தனது பங்கை காத்திரமாக வெளிப்படுத்தினார். இவ் வேளையில் தான் சிறையிலிருக்கும் நிர்மலாவை மீட்க்கத்தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்பதை உணர்ந்த கடமையிலிருந்த பொறுப்பதிகாரி நிர்மலாவின் அறைக்கதவின் திறப்பை எடுத்துக்கொண்டு ஓடி ஒளிந்து கொண்டார். சிவமண்ணர் உட்பட உள்ளே சென்ற நால்வரும் உடனடியாக செயலில் இறங்கினர்.பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் அறிவிக்க எடுத்த முயற்சி முடியடிக்கப்பட்டது. தொடர்ந்து சிவமண்ணரின் உதையின் வேகம் ,பலம் என்பன வெளிப்பட காரியம் கை கூடியது. தொடர்ந்து பின்னாளில் நடைபெற்ற களுவாஞ்சிக்குடி மற்றும் ஏறாவூர் பொலிஸ் நிலையத் தாக்குதல்களிலும் தனது காத்திரமான பங்களிப்பை வெளிப்படுத்தினார் சிவம் அண்ணர். மட்டக்களப்பு - அம்பாறைமாவட்டப் போராளிகள் இவர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்தனர். தன்னை விட மிகக் குறைந்த வயதினையும் அனுபவத்தையும் உடைய போராளிகளையும் மதித்தே நடந்து கொண்டார். பல்வேறு துறை நடவடிக்கைகளிலும் இவர் பங்களித்தார் . வாழ்வில் எல்லோருக்கும் ஏற்றம் இறக்கம் உண்டுதானே. எக்காலத்திலும் திமிராகவோ, துவண்டுபோகாமலோ பணியாற்றியவர் என்றால் இவரையே உதாரணம் காட்டலாம் . பிற்காலத்தில் கோப்பாவெளி கிராமத்தில் வாழ்ந்த போது கிராம அபிவிருத்திச் சங்கம், ஆலய நிர்வாகம் போன்றவற்றில் தலைவராக விளங்கினார் என்றால் இவரது கடந்த கால வரலாறு பற்றி மக்கள் இவர் மீது கொண்ட பெரும் மதிப்புதான் காரணமாகும். தனது போராட்ட வரலாறு பற்றி இவர் வெளியில் சொல்லிக்கொள்வதில்லை. ஆனால் அவரின் பங்களிப்பு பல்வேறு துறைகளிலும் இருந்தது. என்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டுமல்லவா? பெறுமதியான எடுத்துக் காட்டான வாழ்வல்லவா அவருடைய வரலாறு. https://www.battinatham.com/2025/08/blog-post_76.html1 point - ஒரு பயணமும் சில கதைகளும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.