Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    87988
    Posts
  2. vasee

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    3311
    Posts
  3. பசுவூர்க்கோபி

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    505
    Posts
  4. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    6
    Points
    19112
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 10/17/25 in all areas

  1. கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” ***************************************************** தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது. “காதல்” ********************************************************** பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள் “காமம்” ***************************************************** மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில் தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள். “இந்தியமீனவர்கள்” **************************************************** ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல். “நாக்கு” ***************************************************** பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. “மனித எலும்புக்கூடுகள்” தொடரும்… அன்புடன்-பசுவூர்க்கோபி.
  2. எனக்கும் தெரியாது (சும்மா அடிச்சு விட்டது), சும்மா சொல்றதுதானே அதுக்கேன் இவ்வளவு பந்தா காட்டுகீறீர்கள், இது ஒரு விளையாட்டு பொழுது போக்கு திரி நீங்களும் தாராளாமாக அடிச்சு விடுங்கோ, ஒரே மாதிரி எழுதினா சலிப்பு ஏற்படும்.🤣 இலங்கை அணியினை வெல்லும் அணி என ஏன் தெரிவு செய்தேன் என தெரியவில்லை, பரீட்சை பல தெரிவு வினா கேள்விக்கு மாறி மாறி குத்துவது போல இலங்கை அணியினையும் குத்தியுள்ளேன் என்பது தெரிகிறது, அடுத்த போட்டியில் கவனமாக இலங்கை அணியினை ஓரமாக வைத்து விட்டு குத்தவேண்டும்.
  3. உண்மையில் இப்படியாக முட்டாள் வேலைகள் செய்யும் பெற்றோரை, அவர்களது இழப்பையும் பொருட்படுத்தாமல் சிறுவர் துன்புறுத்தல் குற்றம் சுமத்தி சிறையில் போட வேண்டும். ஏனைய குழந்தைகளைக் காப்பாற்ற இது ஒரு வழியாக இருக்கும். 7 வயதுக் குழந்தை முன் இருக்கையில் இருப்பதே விதி மீறல், இந்த லட்சணத்தில் மடியில் வைத்துக் கொண்டு வேறு பயணம்! தற்கால வாகனங்களில் முன் இருக்கையின் எயார் பாக் ஒரு குறிப்பிட்ட நிறை இருந்தால் மட்டும் தான் செயல்படும் படி வைத்திருக்கிறார்கள். நிறை குறைந்த குழந்தையை முன்னிருக்கையில் வைத்து பெல்ற் போட்டாலும் எயார் பாக் வேலை செய்யாது. வாகனம் நகர ஆரம்பித்ததும் எச்சரிக்கை மணி கூட ஒலிக்கலாம். இது இந்தியாவில் நடந்திருக்கிறது. இங்கே என் நகரில் வசிக்கும் இந்தியப் பெற்றோர் சிலர் தங்கள் சிறு பிள்ளைகளை காரின் பின் சீற்றில் சும்மா நிற்க வைத்த படி அருகில் இருக்கும் இடங்களுக்குப் போய் வருவதைக் கண்டிருக்கிறேன். முழு முட்டாள்கள்!
  4. 🤣........... அதுவாக நடக்கிற விசயத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்............. இலங்கை மோசமாகத் தோற்கும், ஆஸ்திரேலியா அமோகமாக வெல்லும் என்று நினைத்து, அதன்படியே தெரிவுகள் போட, இந்த இரண்டு நாடுகளும் எனக்காக விளையாடுவது போலவே விளையாடுகின்றன................🤣. எல்லா நண்பர்கள் கூட்டங்களிலும் ஓரிரு நண்பர்கள் மற்றவர்களுக்கு பாடங்களில் உதவி செய்வார்கள். கடைசியில் பரீட்சை முடிவுகளைப் பார்த்தால், உதவி செய்தவர்களுக்கு பி அல்லது சி தான் வந்திருக்கும்; உதவி கேட்டவர்கள் ஏ எடுத்திருப்பார்கள்........... இது வழமை போல..................🤣.
  5. வினா 19) 10 விக்கெட்டுகளினால் தென்னாப்பிரிக்கா அணி இலங்கை அணியை தோற்கடித்தது. 10 போட்டியாளர்கள் சரியாக பதில் அளித்திருக்கிறார்கள். 1) அகஸ்தியன் - 38 புள்ளிகள் ( 95%) 2) ரசோதரன் - 36 புள்ளிகள் ( 90%) 3) ஏராளன் - 34 புள்ளிகள் (85%) 4) ஆல்வாயன் - 34 புள்ளிகள் 5) கிருபன் - 32 புள்ளிகள் 6) புலவர் - 32 புள்ளிகள் 7) நியூபலன்ஸ் - 32 புள்ளிகள் 8) வீரப்பையன் - 32 புள்ளிகள் 9) சுவி - 31 புள்ளிகள் 10) செம்பாட்டன் - 28 புள்ளிகள் 11) வாதவூரான் - 28 புள்ளிகள் 12) கறுப்பி - 28 புள்ளிகள் 13) ஈழப்பிரியன் - 28 புள்ளிகள் 14) வசி - 26 புள்ளிகள் 15) வாத்தியார் - 24 புள்ளிகள் இதுவரை வினாக்கள் 1 - 19, 32(1/4), 41, 42 க்கு புள்ளிகள் வழங்கியுள்ளேன். (அதிக பட்ச புள்ளிகள் 40)
  6. அருமை கோபி, அருமை. குறிப்பாக, ஐஸ், நஞ்சாகும் உணவு, புதைகுழிகள் பற்றிய கவிதைகள் அபாரம். ஆனால் இவை ஹைகூவின் வரைவிலக்கணத்துள் பொருந்துமா என்பது தெரியவில்லை, இதை ஒத்த சென்ரியு வகை கவிதை போலவே இருக்கிறது.
  7. மழை பெய்வதினால் எனக்குதான் நன்மை. கைத்தொலைபேசியில் இலகுவாக எல்லா போட்டியாளர்களுக்கும் 2 புள்ளிகளை கூட்டி வழங்கலாம். யார் என்ன விடை எழுதினார்கள் என்று பார்க்க தேவையில்லை. 😀
  8. பாரிய குற்ற செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் கூட இனவெறி இன பேதம் இல்லாமல் தமக்குள் ஒன்றாக செயற்பட்டுருக்கிறார்கள் எனும் போது நாட்டின் சாதாரண சிங்கள, தமிழ், முஸ்லீம் மக்கள் தமது முன்னேத்திற்காக இனவெறி இல்லாமல் அனைவரும் இணைந்து செயற்பட்டு அரசியல் பிரச்சனைக்கு சிறந்த தீர்வை ஏற்படுத்தி நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.
  9. என்ன போதைபொருள் கடத்தல்மன்னர்கள் மட்டுமா தேசிய ந்ல்லிணக்கத்துடன் செய்ல்பட வேணும் என்ற சட்டம் இருக்கா? மார்று கொள்ள்கை மாணிக்கங்கள் நாங்களும் தேசிய நல்லிணக்கத்துடன் செயல் பட்டு தீவை வளர்ர்சி பாதையில் நடத்துவோமல்ல...
  10. கடந்து போக கற்றுக்கொள் மாயமான இவ்வுலகில் எல்லா காயங்களுக்கும் நியாயங்கள் தேடிக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது.... என சொல்கிறார்கள்.
  11. தாமதமாக வந்த விஜய் தான் காரணம்.. https://www.facebook.com/share/v/14PdFXjdaUp/
  12. நான்கு மணிநேரத்தில் உள்ளே சென்று பதிவுசெய்து பொதிகளை பட்டியில் எறிந்துவிட்டு படலை பகுதிக்கு போய்விடலாம். அங்குபோய் மிச்சம் என்ன செய்வது? உண்ணும் பகுதி, கடைகளுக்கு வர திரும்ப நடக்க வேண்டும். விமானத்தில் ஏறும்வரை எத்தனை நெஸ் ரீதான் குடிப்பது.
  13. தாமதமாக வந்த விஜய் தான் காரணம் என்பதில் என்ன சந்தேகம் இன்று விஜய் கரூருக்கு வந்து தான் அறிவித்த உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 2 இலட்சம் ரூபாவும் கொடுப்பதாக இருந்ததாம். ஆனால் பின்பு அவர் வரவில்லை. சொன்னதை கொடுத்தால் நல்லது.
  14. ஒரு தொட்டியில்சிறிய கல்லுகள் மணல் போன்றவற்றை மாறி 2 3 அடுக்குகளாக போட்டு வ டி கட்டி எடுத்த மழைநீரை அருந்தலாம் என்று நினைக்கிறேன். முதல் மழைநீரைச் சேகரிக்கக் கூடாது. இது வழிமண்டலத்தில் இருக்கும் ஆழுக்குகள் தூசிகள் புகைகள் போன்றவற்றைக் கொண்டு வரும். அதனால்தான் நீண்டகாலத்திற்கு பிறகு பெய்யும் முதல் மழையில் நனையக் கூடாது வருதம் வரும் சட்டையில் கரம்பேன் பிடிக்கும் என்று முன்னோர்கள் சொல்வார்கள் மழை நல்லா அடிச்சு ஊத்தி விட்ட பின்னர் அடிக்கும் வெய்யில் கடுமையாகச் சுடுவதும் வானம் தெளிவாக இருப்பதும் வளிமண்டலத்தில் உள்ள மாசுக்கள் கழுவப்படுவதால்தான். ஆகவே தொடர்சியாக மழை பெய்யும் பொழுது 2வது 3வது அல்லது அதற்குப் பிந்திய மழைநீரைச் சேகரித்து வடிகட்டி எடுப்பது நல்லது என்று நினைக்கிறேன். இது எனது சொந்த விளக்கம்.எதற்கும் துறை சார்ந்தவர்களிடம் அறிவுரை கேட்டு சேமிப்பது நல்லது.
  15. 17 Oct, 2025 | 03:22 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடம் ஒன்றுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரிய இந்தியாவிற்கு அண்மையில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். இதன்போது பிரதமர் ஹரிணி, சமூகவியல் இளங்கலைப் பட்டத்தைப் பூர்த்தி செய்த டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரிக்கு (Hindu College) விஜயம் செய்திருந்தார். இந்த விஜயத்தின் போது டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) புதிய ஆய்வுக் கூடத்திற்கு "ஹரினி அமரசூரிய சமூக மற்றும் இனவியல் ஆய்வுக் கூடம்" (Harini Amarasuriya Social & Ethnographic Research Lab) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதன்போது பிரதமர் ஹரிணி, தான் கல்வி கற்ற டெல்லி பல்கலைக்கழகத்தின் இந்து கல்லூரியின் (Hindu College) வகுப்பறைகளை பார்வையிட்டு, மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நினைவு கூர்ந்து மகிழ்ந்தார். அத்துடன், மாணவியாக இருந்த தனது காலத்தை நினைவுகூர்ந்து தனது எண்ணங்களை அங்கு கூடியிருந்தவர்களுடன் பகிர்ந்துகொண்டார். இந்து கல்லூரியில் தான் பெற்ற கல்வியானது, கல்விப் பயணம், சமூக நீதி, சமத்துவம் மற்றும் கல்விச் சீர்திருத்தம் மீதான தனது வாழ்நாள் அர்ப்பணிப்பை எவ்வாறு வடிவமைத்தது என்பதையும் அவர் நினைவுகூர்ந்தார். அவ் வரவேற்பு விழாவில் கல்லூரி மாணவர்களிடையே உரையாற்றிய பிரதமர், "கல்வி என்பது வெறுமனே தமது எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்வதற்கானது மட்டுமல்ல, மற்றவர்களின் எதிர்காலத்தை மாற்றுவதற்கு நம்மைத் தயார்படுத்துவதுமாகும்" எனக் குறிப்பிட்டார். அத்துடன், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவம்மிக்க சமூகங்களை உருவாக்குவதில் கருணை, ஜனநாயகம் மற்றும் செயல் திறன் மிக்க குடிமகனாக இருப்பதன் முக்கியத்துவத்தையும் அவர் எடுத்துரைத்தார். இந்து கல்லூரி விஜயத்தை அடுத்து பிரதமர், 2015 ஆம் ஆண்டில் திட்டமிடல் ஆணைக்குழுவிற்குப் பதிலாக நிறுவப்பட்ட, இந்திய அரசின் கொள்கை அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு (NITI Aayog) விஜயம் செய்தார். இந்த விஜயத்தில், கல்வி, புத்தாக்கம் மற்றும் அரச நிர்வாகம் ஆகியவற்றில் இந்தியாவின் கொள்கை மற்றும் நிறுவனச் சீர்திருத்தங்களைப் புரிந்துகொள்வதில் கவனம் செலுத்தப்பட்டது. இலங்கை தற்போது தனது புதிய கல்விச் சீர்திருத்தத்தை செயல்படுத்தத் தயாராகி வருவதால், NITI Aayog அபிவிருத்தி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திற்கான மேற்பார்வைப் பயணம் மூலமும் Atal Innovation Mission (AIM) மற்றும் கல்வித் துறையில் ஆய்வு, படைப்பாற்றல் மற்றும் டிஜிட்டல் கற்கை முறைகளை வலுவூட்டுவதற்கான அதன் அணுகுமுறை உட்பட இந்தியாவின் மாற்றம் பற்றிய அனுபவங்கள் மீதும் பிரதமர் கவனம் செலுத்தினார். இந்தியாவில் பிரதமர் ஹரிணி படித்த கல்லூரியில் அவரது பெயரில் புதிய ஆய்வு கூடம் ! | Virakesari.lk
  16. HINDU கல்லூரியில் சிறிலங்கா பிரதமர் கல்வி கற்றார் ..அதாவது ராமாயணத்தை வைத்து இந்திய மேலாதிக்க கதை விடுவது போல....கால போக்கில் இதை வைத்து புராண கதை எழுதுவார்கள். சிங்கள பிரதமர் டெல்லியில் வனவாசம் செய்தார்...இலங்கையில் நடைபெற்ற பயங்கர வாத போரில், பெளத்த பெண் பிரதமரை இந்து நாடான இந்தியா பாதுகாப்பாக டெல்லிக்கு ஆஞ்ஞ நேயரின் உதவியுடன் அழைத்து வந்தனர்.அங்கு அவருக்கு பூஜைகள்,சாத்திரங்கள் போன்றவை கற்பிக்கப்பட்டு மீண்டும் 2025 ஆம் ஆண்டு அவருக்கு கோவில் கட்டினார்கள் டெல்லியில்.... நாங்கள் சிவப்பு புலிகள் ...பசித்தாலும் புல்லு மேய மாட்டோம்....மாவோஜீ க்கு ஜிந்தா பாத்...உள்ளே சிவ்ப்பு வெளியே வர்ணம்....
  17. இந்தியாவும் ...சீனாவும் கரிணிக்கு கொடுக்கிற வரவேற்பைப் பார்த்தால் ...கரிணி விரைவில் சனாதிபதியாகலாம் போல் இருக்கு..
  18. இரெட்டை வரி ஒரே அடி ஹைக்கூ —-கவிஞர் அல்வாயான்—
  19. இரட்டை வரியில் ஒற்றை அடி...மிக நன்றாக உள்ளது ..தொடருங்கள்
  20. உண்மை தான். பண்டாரநாயக்கா ஆட்சியில் நாகநாதன் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த போது Mr. Naganathan is a diabetic patient. We should take care of him என்று, சிறை சாப்பாடு அவருக்கு ஒத்து வராது என்று பிரதமர் வீட்டில் இருந்து அவருக்கு உணவு சென்றதாம். பிரதமர் தனது வீட்டில் வைத்தே கொலை செய்யப்பட்டதால் பயந்து போயிருந்த சிறீமாவோ அவரது பிள்ளைகளை பாதுகாக்க நாகநாதன் வீட்டில் சில காலம் தங்க வைத்தாராம். 90 களில் சந்திரிகா ஜனாதிபதியாக இருந்த போது நாகநாதனுன் மகள் தான் இலங்கை தூதராக ஜேர்மனியில் இருந்தார். 1977 தேர்தல் மேடைகளில் இரும்பு மனிதன் நாகநாதன் சிங்களவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்த நாகநாதன் என்ற ரேஞ்சுக்கு வீர உரைகள் கதையாடல்கள் நடந்தன.
  21. 👍.............. இந்த களத்தடுப்பு விபரங்களை வாசிக்கும் போது, நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடாதது மட்டும் இல்லாமல், கிரிக்கெட் எல்லாம் ஒரு விளையாட்டா என்று கிரிக்கெட்டை ஏளனப்படுத்தியதிற்கு இப்பொழுது கிரிக்கெட் என்னைப் பழிதீர்ப்பது போல இருக்கின்றது..................🤣.
  22. அட அது மட்டுமா? களம் கறுப்பா? சிகப்பா?வெள்ளையா? இப்படி ஐயாவின் ஆராச்சி வேற லெவல்.
  23. 17 Oct, 2025 | 05:02 PM தீவகத்தின் அடையாளத்தை பாதுகாத்து பசுமையை உருவாக்கவும், பனைமரங்களின் பாதுகாப்பை உறுதி செய்து நன்னீர் வளங்களைப் பாதுகாக்கவும் வேலணை பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான பனம் விதைகள் நாட்டப்பட்டன. குறித்த திட்டம், இன்று காலை வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட அல்லைப்பிட்டி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. அல்லையூர் இளைஞர்களின் ஏற்பாடில் வேலணை பிரதேச செயலகம் மற்றும் வேலணை பிரதேச சபை ஆகியவற்றின் அனுசரணையுடன் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் , பிரதேச சபையின் உறுபினர்கள், கிராம உத்தியோகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர் மற்றும் இளைஞர்கள் என பலர் கலந்துகொண்டு பனம் விதைகளை நாட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அடையாளத்தை பாதுகாக்க வேலணையில் நாட்டப்பட்ட ஆயிரக்கணக்கான விதைகள்! | Virakesari.lk
  24. மகிந்த ஜனாதிபதியாகி, செய்த உருப்படியான வேலை என்றால்... தனது மொக்கு மகனை, வக்கீல் சோதனை பாஸ் பண்ண வைத்து விட்டார். 😂
  25. 🤣 இதென்ன சட்ட கல்லூரி எல்ஸாமா, பீரிசை போனில் வைத்து கொண்டு எழுத🤣
  26. வேலிக்கு வைச்ச முள்ளு, ஒருநாள் வைத்தவரின் காலையே பதம் பார்க்கும். அப்போ தெரியும் அதன் வலி.
  27. இதுவும் நாட்டுக்கு நாடு வேறுபடும் ஒன்றே. யூகேயில் 135, ஆனால் அயர்லாந்தில் 150 என்கிறது ஜெமினி. அவுசில் 145 போல் உள்ளது. அதே போல் சில வாகனங்களில் 135 உயரமான பிள்ளையின் பாதம் முழுவதுமாக தரையில் பதியாது. நான் மேலே சொன்ன வரைவிலக்கணத்தை கடைப்பிடித்தால்- சீட்பெல்ட் போட்டாலும் வழுக்கி கொண்டு போய் அடிபடுவதில் இருந்து தவிர்க்கலாம். கொசுறு நாம் இப்போ பாவிக்கும் மூன்று புள்ளி இணைப்பு சீட் பெல்டை கண்டுபிடித்தது சுவீடனை சேர்ந்த என் அபிமான நிறுவனம் வொல்வோ. அதற்கு புலமைசார் உரிமை கோரி ஒரு பெரிய தொகையை பார்திருக்கலாம், ஆனால் இந்த தொழில்நுட்பத்தை மானிட பாதுகாப்புக்கென இலவசமாக கொடுத்தனர்.
  28. நாமல் வைக்கும் கோரிக்கையைப்பாத்தால் எங்கப்பன் குதிருக்குள்ள இல்லையாம். போதைப்பொருள் காரரை கைது செய்வதை விடுத்து, மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுங்கள் என்கிறார். இஷாராவை கைது செய்ய ஒரு வருடம் எடுத்திருக்கிறது இந்த அரசாங்கத்திற்கு என்று வேறு விமர்சிக்கிறார். இவ்வளவும் செய்த அரசாங்கத்திற்கு இந்தப்பெண்ணின் பின்னால் யார் இருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வது பெரிய விடயமா? அல்லது அது தெரியாமல்த்தான் நேபாளம் வரை சென்று கைது செய்தார்களா என்ன? இவருடைய நூறு கோடி சொத்துக்கள் எங்கிருந்து கிடைத்தன, நூறு கோடி மட்டுந்தானா என்பதையும் வெளிக்கொண்டு வரத்தான் போகிறார்கள். அதை விட, வெளிநாட்டில் பதுங்கியுள்ள சொத்துக்களும் அரச உடமையாகத்தான் போகிறது. இவர்களின் கோரமுகத்தை மக்களிடம் இருந்து மறைக்க பயங்கரவாதிகள் என்கிற கதையை இழுத்து மறைக்கப்பார்கிறார்கள். இவர்களின் சுய ரூபம் வெளிப்படுத்தப்படும்போது என்ன நடக்கபோகிறதென பாப்போம். இனிமேல் வெளிநாட்டுக்கும் தப்பியோட முடியாது. போதைப்பொருள் தாதாக்கள் என்றால், சர்வதேசமே பிடித்து அனுப்பிவிடும். பல நாடுகளின், துரோகியின் உதவியில்லாமல் புலிகளை முறியடித்திருக்க முடியாது என்று சொன்னவர்கள், பயங்கரவாதத்தை எப்படி முறியடிப்பது என்று சர்வதேசத்துக்கு பயிற்சியளித்தார்கள். போதைப்பொருள் மாபியாக்களை எப்படி கைது செய்து வலையமைப்பை அழிப்பது என்று பயிற்சி பெற சர்வதேசமே அனுராவை தேடி வரப்போகிறது. அதுமட்டுமல்ல இங்கையின் எந்த அரசாங்கமும் செய்யாத, செய்ய முயற்சிக்காத அதிரடியை செய்து, நாட்டின் வீழ்ச்சிக்கு காரணமானவர்களை உடனடியாக அடையாளம் கண்டு பிடித்தது பெரும் சாதனை. அதுவும் பதவியேற்று ஒருவருடத்திற்கு முன்.
  29. சேர் தலை கெட்டவார்த்தை எல்லாம் கதைக்கிறார் என்னெண்டு கேளுங்கோ
  30. இந்த கறுப்பு ஆடுகளத்தில் (மழை வரும் என குறிப்பிட்டுள்ளார்கள் பிட்ச் எவ்வகையானது எனக்கூறவில்லை ஆனால் இலங்கை அணி கறுப்பு ஆடுகளத்தில் விளையாட விரும்பலாம் எனும் அடிப்படையில்) எவ்வாறு இலங்கை அணி களத்தடுப்பினை தெரிவு செய்யலாம் என கருதுகிறேன். பந்து வீச்சு லைன் 4 அல்லது 5 விக்கெட் லெந்த் நல்ல அளவினை விட கொஞ்சம் புல்லர் லெந்த். பவர் பிளேயில் எல்லைக்கோட்டில் எக்ராகவர் மற்றும் பொயின்ரில் களத்தடுப்பு உள்ளக வட்டத்தில் சிலிப், சோர்ட் தேர்ட், சோர்ட் பைன் லெக் (விக்கெட் கீப்பருக்கு இரு பக்கமான) சோர்ட் மிட் விக்கெட், மிட் ஒன், மிட் ஓப் பவர் பிளே பின்னர் எல்லை கோட்டு களத்தடுப்பில் மிட்விக்கெட், ஸ்குயார் லெக், எக்ரா கவர், பொயின்ர் (அனைத்தும் டீப்) உள்ளக வட்டத்தில் பெரிய மாற்றம் இருக்காது. இலங்கை அணி சிலிப் பயன்படுத்தாது என கருதுகிறேன் 10 ஓவருக்கு மேல், இறுதி 10 ஓவருக்கு லோங் ஓப் இல் மேலதிக களத்தடுப்பு போடக்கூடும் என கருதுகிறேன். கள உறவுகளே ஆட்ட சுவாரசியத்திற்காக குறித்த விடயத்தினை பதிவிட்டுள்ளேன் இவ்வாறுதான் நிகழும் என கூறமுடியாது, உங்கள் களத்தடுப்புகளையும் சுவாரசியத்திற்காக பதியுங்கள்.
  31. பின்னிருக்கையில் 145 சென்ரிமீற்றர் உயரத்திற்கு கீழிருக்கும் குழந்தைகள் குழந்தைகள் ஆசனம் மற்றும் பூஸ்ரர் ஆசனம் பயன்படுத்த வேண்டும். சில நேரங்களில் முன்னிருக்கையின் கீழிருகும் ஆழி இணைப்பு சீற்றை முன் பின்னாக நகர்த்தும் போது காரின் கணனியினுடனான தொடர்பினை இழந்துவிடும் பொதுவாக அதற்கான விளக்கு எரிய வேண்டும் சில சமயம் அவை காட்டுவதில்லை. ஆனால் OBD 2 அதற்கான B174800 பிழை குறிகாட்டும், முற்று முழுதான வாகன அறிகுறியிலும் தங்கியிருக்கமுடியாது என கருதுகிறேன், இந்த கருவி ஆக குறைந்த விலையில் அமேசன் $40 வாங்கலாம் (மலிவான). இணைப்பினை கழற்றி மீண்டும் இணைத்தால் போதும், அதற்கு முன்னர் காரின் மின்சேமிப்புக்கலத்தின் எதிர் முனையினை அகற்றவேண்டும் (இந்த செயல் அனைத்து காரின் இயங்கு நிலையினையும் ஆரம்ப நிலைக்கு மாற்றிவிடும் அதனால் காரின் காற்று விகிதம் மாறுபடும் சில காலத்திற்கு பின் சரியாகிவிடும் அல்லது அந்த கருவியிலேயே (OBD 2 ) அதனை சரி செய்யும் பொறிமுறை உண்டு) கார் நீண்ட பயணத்திற்கு முன்னரான சரிபார்ப்பு போன்றவற்றிற்கும் உதவும். நான் மெக்கானிக் இல்லை எனவே எனது கருத்து தவறாக இருக்கலாம், இது ஒரு ஆலோசனையும் இல்லை எனது அனுபவம். இணைப்பு சரி செய்தபின் அந்த கருவியிலேயே ஒருவர் உடகார்ந்து , வெறுமையாக சீற்றினை விட்டு காரின் கணனி சரியாக எடையினை உணர்கிறதா எனவும் பார்க்கமுடியும் (சரியாக இணைப்பு வேலை செய்கிறதா என)
  32. கீலி ஒரு குறும்புக்காரர் என கேள்விப்பட்டுள்ளேன், அவர் பல தடவை இலங்கை அணி முன்னால் தலைவர் ரணதுங்கவுடன் முரண்பட்டுள்ளாராம், ஒரு முறை பந்து வீச்சாளரிடம் ரண்துங்கவின் கால்களுக்கு ஒரு மார்ஸ் (இனிப்பு) போடு இவன் எடுத்துவிடுவான் எனவும், இன்னொரு முறை காயம் காரணமாக? ரணதுங்க ஓட முடியாது என கூறி ஜெய சூரியாவினை ஓட்டத்திற்கு அழைத்த போது அவரை கேவலப்படுத்தியதால் ஏதோ குளறுபடிகள் ஏற்பட்டதாக நினைவுள்ளது (இந்த விடயங்கள் பற்றி சரியாக தெரியவில்லை). தென்னாபிரிக்க அணி விளையாடுவதனை பார்க்கவில்லை, ஆனால் இலங்கை அணி விளையாடுவதனை பார்க்கும் போது இலங்கை அணி நிச்சயமாக தோற்கும் அணியாக தெரிகிறது, அதனை விட எந்த அணியினை தெரிவு செய்தேன் என்பது கூட தெரியவில்லை, இன்றைய போட்டியினை நிச்சயமாக பார்க்கபோவதில்லை எனும் முடிவுடன் உள்ளேன்.
  33. இனவாதம்,மத வாதம்,ஐஸ்வாதம்,கஞ்ஞாவாதம்,பாதால உலகவாதம்,கடத்தல் வாதம்,கப்ப வாதம் போன்றவை இல்லாத படை வீரர்களாக வாங்கோ என்று சொல்லுறார்
  34. இதைத்தான் சொல்லுறது ..புடிச்சால் புளியம்கொம்பாய் பிடிக்கவேணும்
  35. விளிம்புநிலை தமிழ் மக்களின் உயர்வுக்காக பாடுபடுகின்ற நேர்மையான தலைவர் அவர் இதற்குள் வரமாட்டார்.
  36. அன்றும் இலங்கையில் மழை சிலரைக் காப்பாற்றியதாக ஒரு தகவல் இருந்தது . நாளைக்கும் மழைக்கு வெற்றியோ தெரியாது
  37. கார் முன் இருக்கைகளில் குறித்த வயதுவரை குழந்தைகளை உட்கார வைத்தல் ஆகாது. பின் இருக்கையில் கூட, இருக்கையின் அடித்தளத்தில் பயணியின் பிட்டம், தொடை பகுதி சமாந்தரமாக பதிந்து, முழங்கால் மூட்டு 90 பாகை வளைந்து, பாதம் தரையில் சமாந்தரமாக பதியும் அளவு உடல் உயரம் வளரும் வரை பூஸ்டர் சீட் எனும் துணை இருக்கை பயன்படுத்த வேண்டும். முன்னிருக்கையில் சில கார்களில் ஏர் பேக் கை தற்காலிகமாக செயலிழிக்க செய்யும் வசதி உள்ளது. இது குழந்தைகளை பூஸ்டர் அல்லது சைல்ட் சீட்டில் வைத்து முன் இருக்கையில் அமர்த்த உதவினாலும். பின் இருக்கையில் இவற்றை போட்டு அமர்துவதே மிக பாதுகாப்பானது. இதை எல்லாம் விட்டு விட்டு, குழந்தையை டிரைவரின் மடியில் வைத்து ஓடி விட்டு, ஏர் பேக்கை குறை சொல்ல முடியாது.
  38. அததெரண கருத்துப் படங்கள்.
  39. நிச்சயமாக குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்து இல்லை. அதிலும் இவர்களின் குழு…. பெருமளவில் போதைப் பொருள் கடத்தல், கொலை என்று…. தங்களுடைய பணத் தேவைக்கும், சொகுசு வாழ்க்கைக்குமாக.. நாட்டு மக்களையும், இளைய சமுதாயத்தையும் சீரளித்துக் கொண்டு இருக்கும் கோர சிந்தனை உடையவர்கள். சில வாரங்களுக்கு முன்…. இந்தக் கும்பலின் 850 கிலோ பெறுமதியான ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப் பட்டிருந்தது. அந்த 850 கிலோவும் அடுத்த பத்து வருடத்துக்கு இலங்கையின் பாவனைக்கு போதுமானது என்று வாசித்தேன். அத்துடன் எல்லாம் முடிந்தது என்று பெரு மூச்சு விடுவதற்கிடையில்…. நேற்று தெற்கு கடல் பகுதியான தங்காலையில் 840 கிலோ ஐஸ் போதைப் பொருட்கள் 51 சாக்குகளில் கடலில் மிதந்த வண்ணம் இருந்ததை கடற்படையினர் கண்டு எடுத்துள்ளார்கள். இவை எல்லாவற்றின் பெறுமதி பல பில்லியன் ரூபாய்களை தானும் என்கிறார்கள். ஆக…. இந்தப் போதைப் பொருள் வலையமைப்பு இன்னும் இயங்கிக் கொண்டுதான் உள்ளது. இதன் ஆணி வேரைத் தேடிப் போனால்… நிச்சயம் பெரும் கொழுத்த அரசியல்வாதிகள் இருப்பார்கள் என்பது கசப்பான உண்மை. இந்தப் போதைப் பொருள் மாஃபியாக்களை, கைது செய்யும் நடவடிக்கையை…. அனுரா அரசை தவிர்ந்த வேறு எந்த அரசும் இவ்வளவு மூர்க்கமாக செய்திருக்கவே மாட்டார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோரின் கண்ணசைவுடன்தான் இந்தப் போதைப் பொருள் கடத்தலும், வியாபாரமும் நடந்து கொண்டுள்ளதாக பலரும் சந்தேகம் தெரிவிக்கின்றார்கள். ஆகவே…. வேரோடும், வேரடி மண்ணோடும் இந்த வலையமைப்பை அழித்து ஒழிக்கும் வரை… கைது செய்யப்பட்டவர்களை முட்டிக்கு முட்டி தட்டி… விசாரிக்க வேண்டும்.
  40. காதலனா, கள்வனா அவன்? இப்போவெல்லாம் எல்லாவற்றிலும் புதுமை! கலியாணம் செய்தாலும் வரதட்ஷணை என்கிற பெயரில் கொள்ளையிடுகிறார்கள். ஆண்கள் மட்டுமா? இப்போ, பெண்கள் கலியாணம் என்கிற பெயரில் செய்துவிட்டு வரதட்ஷணை கொடுமை, வீட்டு வன்முறை என்கிற பெயரில் கொள்ளையடிக்கிறார்கள். காதலும் வேண்டாம், கலியாணமும் வேண்டாம் என்று ஒதுங்கிக்கொள்கிறார்கள் சில இளையவர்கள்.
  41. சிவத்தம்பி தமிழ்ப் பேராசிரியர் அல்லவா? வரலாறு என்றால் பேராதனையில் இருந்த பத்மநாதன் அல்லது யாழ் பல்கலை புஷ்பரட்ணம். புஷ்பரட்ணம் இந்த மறைப்பைச் செய்யக் கூடியவராகத் தெரியவில்லை.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.