Leaderboard
Popular Content
Showing content with the highest reputation since 07/11/22 in Posts
-
நீலன் திருச்செல்வம் - சிங்களவர்களுக்குப் பிடித்தமான அரசியல்வாதி கீச்சகத்தில் சில காலமாகக் குப்பை கொட்டி வருகிறேன். எல்லாம் இந்த பாழாய்ப்போன காலிமுகத்திடல் ஆர்ப்பாட்டக் காரர்களினால் வந்த வினை என்று வைத்துக்கொள்ளுங்களேன். எப்படியாவது எமது வலிகளை, போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை, இன்றுவரை தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டுவரும் எமது தாயகத்தின் உண்மை நிலையினை சிங்களவர்களுக்கு சிறிதாவது எடுத்துக்கூறலாம் என்கிற சிறிய நப்பாசையினால் இதனை இன்றுவரை செய்துவருகிறேன். சில கீச்சகப் பதிவாளர்களின் கருத்துக்களை அவ்வப்போது படிப்பதுண்டு. அந்தவகையில் இன்று நான் படித்த ஒரு பதிவு தொடர்பாகவும், அதற்கான பின்னூட்டங்கள் தொடர்பாகவும், அப்பதிவின் செய்தி தொடர்பாகவும் பேசவேண்டும் என்று எண்ணியதால் இதனை எழுதுகிறேன். பதிவாளர் அம்பிகா சற்குணநாதன். அவரேதான், சுமந்திரனால் அரசியலுக்கு அறிமுகம் செய்துவைக்கப்பட்டு பின்னர் செய்திகளிலிருந்து சிறிது சிறிதாகக் காணாமற்போனவர். அவரது இன்றைய பதிவில் 1999 ஆம் ஜூலை மாதம் 29 ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைப் போராளி ஒருவரால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சிங்களவர்களின் நண்பனாக, தமிழர் விடுதலைக் கூட்டணியின் உப தலைவராக இருந்த கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் நினைவுநாள் என்று பதிவுசெய்து, புலிகளால் அநியாயமாகக் கொல்லப்பட்ட நல்ல அரசியல்வாதி, மனிதவுரிமைவாதி என்று எழுதியிருந்தார். அவரைத் தொடர்ந்து பலரும் இப்பதிவை மீள்ப் பதிவாகப் பதிய இன்னும் சிலர் தமது கருத்துக்களை இட்டிருந்தனர். பதியப்பட்ட பல சிங்களவர்களின் கருத்துக்களில் நீலன் ஒரு முற்போக்கு, மிதவாத அரசியல்வாதியென்றும், இலங்கை ஒரு சிறந்த கல்வியாளனை, சட்டத்திறமையுள்ள மனிதரை பறிகொடுத்துவிட்டதென்றும், முற்போக்குத்தனமான மிதவாத தலைவர்களைக் கொல்வதை புலிகள் ஒரு தொழிலாகவே செய்துவந்தனர் என்றும் பதிவிட்டிருந்தனர். இதனைப் புலிகள் செய்தார்களா இல்லையா என்கிற வாதத்திற்கு நான் வரவில்லை. ஆனால், செய்யப்பட்டதற்கான காரணங்களாக இருக்கலாம் என்று நான் அறிந்துகொண்டவை பற்றி எனக்கு எதுவித சந்தேகங்களும் இருக்கவில்லை என்பதற்கப்பால், இக்கொலை நடந்திருக்கத் தேவையில்லை என்று கூறிக்கொண்டு தொடர்கிறேன். உனது நண்பர்கள் யாரென்று சொல், நான் உன்னைப்பற்றிச் சொல்கிறேன் என்று யாரோ ஒருவர் எப்போது சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறாராம். அதுபோலத்தான் நீலனின் நண்பர்களும். நீலன் இறந்த செய்தி வந்தபோது முழு சிங்களப் பெளத்த உயர்வர்க்கமும் இரங்கியது. அரச வானொலியும், தொலைக்காட்சியும், பத்திரிக்கைகளும் இந்த மரணத்தை மிகப்பெரும் பேசுபொருளாக மாற்றியிருந்ததுடன், புலிகள் மீது சேறு பூசும் தமது பிரச்சாரத்திற்காக இதனை மிகவும் திறமையாகவும் பாவித்துக்கொண்டன. எனது கேள்வி என்னவென்றால், நீலன் இறந்தபோதும், கதிர்காமர் இறந்தபோதும் சிங்களம் அவர்களின் மரணங்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தினை ரவிராஜோ, பரராஜசிங்கமோ கொல்லப்பட்டபோது கொடுத்ததா? அப்படி இல்லையென்றால், அதற்கு என்ன காரணம்? நான் விளங்கிக்கொண்ட வகையில் நீலனும் கதிர்காமரும் சிங்கள ஆளும் வர்க்கத்திற்கு மிகவும் நெருங்கியவர்கள். அவர்கள் செய்யும் அரசியலால் சிங்களத்திற்கு பாதிப்பேதும் வரப்போவதில்லை என்பதில் சிங்களம் மிகவும் உறுதியாக இருந்தது. இவர்களைத் தன்னுடன் வைத்திருப்பதன்மூலம் சர்வதேசத்தில் தமிழ் மிதவாதத் தலைவர்கள் எம்முடன் இருக்கிறார்கள், அவர்களைப் பொறுத்தவரை தமிழர்களுக்கென்று அரசியல் ரீதியிலான பிரச்சினைகள் என்று எதுவும் இல்லை என்று பிரச்சாரம் செய்யவும், புலிகளாலோ அல்லது வேறு எவராலோ இவர்கள் கொல்லப்படும்போது இவர்களின் மரணங்களை புலிகளுக்கெதிரான பிரச்சாரத்திற்குப் பாவிப்பதற்கும் சிங்களத்திற்கு இவர்கள் தேவைப்பட்டார்கள். நீலன் கொல்லப்பட்டபோது நான் கொழும்பில் இருந்தேன். அவர் கொல்லப்படும்வரை நீலனின் இருப்புப் பற்றி அறியும் தேவை எனக்கு இருந்ததில்லை. அதற்கான பல காரணங்களில் சிலவற்றை இங்கு பதிகிறேன். நீலன் என்றால் எனக்கு அன்றைய நாட்களில் நினைவிற்கு வந்தது சமாதானத்திற்காகப் போர் நடத்திய சந்திரிக்காவின் அரசியல் ஆலோசகர் என்பது. அதாவது ஒரு சிங்கள பெளத்த ஜனாதிபதியின் அரசியல் ஆலோசகர் என்பது. அடுத்ததாக அவரும் ஜி எல் பீரிஸும் இணைந்து உருவாக்கிய சந்திரிக்காவின் தீர்வுப்பொதி. கொழும்பில், சிங்கள ஆளும்வர்க்கத்துடன் நெருங்கிப் பழகிய பல மேற்தட்டு தமிழர்களைப் பொறுத்தவரை நீலனின் பொதி தமிழர்களுக்கு உண்மையாகவே தீர்வு ஒன்றினைத் தரவிருந்ததாக நம்பியிருந்தனர். வடக்கும் கிழக்கும் இணைந்த பகுதியென்றும், மாகாணங்களுக்கு சில அதிகாரங்கள் என்றும், மத்திய - மாகாண அரசுகளுக்கிடையிலான சுமூகமான உறவு என்றும் பல விடயங்கள் பேசப்பட்டன. இவை எவற்றையும் ஏறெடுத்தும் பார்க்காத புலிகள் சந்திரிக்காவை போருக்குள் இழுத்துவிட்டனர் என்றும் இதே தமிழர்கள் வசைபாடினர். இன்னும் சிலருக்கு நீலனின் கொலைபற்றி எழுதுவது தமது ஆங்கிலப் புலமையினைக் காட்டுவதற்கும், சிங்களவர்களுக்கான விசுவாசத்தைக் காட்டுவதற்குமான ஒரு காரணமாக ஆகிவிட்டிருந்தது. ஆனால், புலிகளைக் காரணம் காட்டிக்கொண்டு சந்திரிக்கா ஆரம்பித்தபோரில் கொல்லப்பட்ட அப்பாவித் தமிழர்கள் குறித்து இவர்கள் பேசுவதில்லை, அது தேவையுமில்லை. அடுத்தது, நீலன் தொடர்பாக நான் நினைவில் வைத்திருக்கும் இன்னொரு விடயம்தான் லக்ஷ்மன் கதிர்காமர் எனும் கோடரிக் காம்பை போர்தேவதையான சந்திரிக்காவுக்கு அறிமுகம் செய்துவைத்த மனிதர் என்பது. கதிர்காமர் சிங்கள பெளத்த இனவாதிகளுக்கு ஏன் உற்ற நண்பராகத் தெரிந்தார் என்பதும், அவரால் எமது விடுதலைப் போராட்டம் எவ்வகையான பின்னடைவுகளைச் சந்தித்தது என்பதும் வரலாறு. கொழும்பில் பிறந்து, சிங்கள உயர்தட்டுவர்க்கப் பாடசாலையான ரோயல் கல்லூரியில் கல்விகற்று, பேராதனையில் பட்டப்படிப்பு முடித்து, வடக்குக் கிழக்குத் தமிழர்களின் உயிர்வாழ்தலுக்கான போராட்டம் குறித்த பிரக்ஞையற்று வாழ்ந்து, சிங்கள பெளத்த அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் மிக நெருங்கிப் பழகி, அவர்களின் அரசியல் ஆலோசகர்களாக, வெளிவிவகார அமைச்சர்களாக தம்மை அலங்கரித்துக்கொண்ட நீலன், கதிர்காமர் போன்றவர்களுக்காக இன்று கண்ணீர் வடிக்கும் அம்பிகா சற்குணநாதன் போன்ற மனிதவுரிமைவாதிகள் பரராஜசிங்கம், ரவிராஜ், நடேசன், தமிழ்ச்செல்வன், புலித்தேவன் பற்றியும் பேசட்டும். இவர்களது மரணங்களை சிங்கள பெளத்தம் எமது போராட்டத்தினைக் களங்கப்படுத்தும் பிரச்சாரத்திற்காகப் பாவித்துக்கொண்டது என்பதற்கப்பால் இவர்களின் மரணங்கள் குறித்து எனக்கு சிறிது கவலையும் இல்லை.9 points
-
இவர்கள் எப்படியோ எவரது கையை காலை பிடித்தாவது அதிகாரம்மிக்க ஒரு பதவியை பெற்றுக் கொண்டு தாமும் முன்னேறி, தம் சமூகத்தையும் முன்னேற்றி, தம் அதிகாரத்துக்குட்பட்ட பதவிகளில் தம் சமூகத்தை சார்ந்தவர்களுக்கு (மட்டும்) வேலை வாய்ப்புகளை உருவாக்கி கொள்வர். ஆனால் எம்மவர்களோ தோற்றுப் போகும் தரப்புக்கு வாலாட்டிக் கொண்டு, இனவாத சாக்கடையில் ஊறிக் கிடப்பவர்களுக்கு முண்டு கொடுத்துக் கொண்டு, தம்மால் ஒரு போதுமே செய்ய முடியாத விடயங்களை முடித்துக் கொடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதிகளை கொடுத்துக் கொண்டு நிமிரவும் முடியாத வயது வந்தும் அட்டையைப் போல நாற்காலியில் ஒட்டிக் கொண்டு காலம் கழிப்பர்.9 points
-
எனது நண்பனின் வீட்டில் நாய் ஒன்று இருந்தது.. அதன் பெயர் லசி Lasy. எண்பதுகளில் இலங்கையில் ரூபவாகினியில் இதே பெயருடன் சிறுவர்களுக்கான தொடர் நாடகம் இடம்பெற்று வந்தது. . எனது நண்பனின் பெயர் ரவி. ஒவ்வொரு தடைவையும் அவனது தாயார் தங்கள் நாயை லசி என்று கூப்பிடும்போதும் நண்பன் ரவிதான் ஓம் அம்மா என்று பதிலளிப்பான். இதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்திருந்தேன். ஒருமுறை அவனது வீட்டு வாசலிஅவனுடன் கதைத்துக்கொண்டு நிற்கும்போது அவனது தாயார் லசியை அழைத்தார். இவனும் வளக்கம்போல ஓம் அம்மா என்று பதிலளித்தான். தாளா முடியாமல் இவனிடம், "ஏனடா, ஒவ்வொரு முறையும் அம்மா நாயை அழைக்கும்போதும் நீயேன் ஓம் என்கிறாய்" எனக் கேட்டேன். அதற்கு அவன் " அம்மா குசினிக்குள் நின்று சாப்பாடு ஏதாவதை நாய்க்கு வைக்குபோதுதான் லசியைக் கூப்பிடுவா. நான் இஞ்ச நிக்கிறதை அம்மாவுக்கு நினைவுபடுத்தவே ஓம் எண்டு சொல்லுறனான்" என்றான். சிங்கள அரசுகளின் ஒவ்வொரு அறிவிப்பிற்கும் EPDP பதிலளிக்கும்போதும் எனக்கு ஏனோ இந்தச் சம்பவம்தான் தவிர்க்க முடியாமல் நினைவிற்கு வந்து போகும்.8 points
-
நிச்சயமாக அமெரிக்காவோ/மேற்க்கோ, ரஸ்யாவோ எம்மை நியாயமாக நடத்தும், அல்லது தீர்வு தரும் என உடான்ஸ் சாமியார் எங்கும் எழுதியவரல்ல. அதேபோல் வெளிநாட்டு கொள்கை ஒரு போதும் தார்மீகமாக அமையாது ஆகவே நாமும் எமக்கு ஒப்பீட்டளவில் பயன்படகூடிய மேற்கின் பக்கம் நிற்பதே உசிதம் என்பதே உ.சா வின் கருத்து. மேற்கில் எமக்கு சொற்ப வாக்கு பலமாவது உண்டு. எமது மக்கள் பிரதிநிதிகளுடன் தொடர்பில் உள்ளவர்களை விடுத்து, ஒரு போதும் எம்மை தமது தூதரக வளவுக்குள் கூட எடுக்காத ரஸ்யாவுடன் நாமாக ஒருதலைகாதல் செய்வது அபத்தமான வெளிநாட்டு கொள்கை என்பதே உ.சாவின் கருத்து. அதேபோல் 2009 வரை இருபகுதியும் எமக்கு ஆப்பு அடித்தாலும், 2009 இற்கு பின் மேற்கினதும், ரஸ்யாவினதும் நம் சம்பந்தமான அணுகுமுறையில் உள்ள வேறுபாட்டையும் உ.சா கருத்தில் எடுக்கிறார். அதே போல் மேற்கினை எதிர்க்க வேண்டும் என்பதற்காக ரஸ்யாவையும், புட்டினையும் நல்லவர்களாக சித்தரிப்பதை, உக்ரேன் மீது நடக்கும் ஆக்கிரமிப்பை மனிதாபிமான போர் என வர்ணிப்பதை உ.சா எதிர்க்கிறார். ரஸ்யா பல நூறு வருடங்களாக சிறிய ஐரோப்பிய தேசிய இனங்களை கருவறுத்ததை, அழிக்கப்படும் ஒரு தேசிய இனமான நாமே, தனி மனித வழிபாட்டு உந்தலால், மேற்கின் மீதான வெறுப்பால், வெள்ளை அடிக்க முனைவதை - உ.சா அடியோடு வெறுக்கிறார். மேற்கில் நாம் எல்லோரும் அனுபவிக்கும் ஒப்பீட்டளவு பொருளாதார மேன்மை, மேற்கு செய்யும் ஊத்தை வேலையின் பலந்தான் என்பதால் -குறைந்த பட்சம் நாமும் அந்த ஊத்தையின் ஒரு அங்கமே என்பதையாவது ஏற்க வேண்டும் என உ.சா விரும்புகிறார். மாறாக மேற்கின் ஊத்தை வேலைகளால் விளைந்த நன்மையை அனுபவித்த படியே, அதே ஊத்தை வேலையையை கண்டிப்பதாக பாவ்லா காட்டும் “வெள்ளைவேட்டி” தனத்தையே உ.சா சாடுகிறார். அதே போல் மேற்கில் பெரும்பாலும் முதலாம் தலைமுறை குடியேறியாக இருக்கும் நாமே பொதுவெளியில் மேற்கை விமர்சிக்கும் ஒப்பீட்டளவு பேச்சு சுதந்திர்ந்தை, ஜனநாயகத்தை பாவித்து, உலகின் மிக அடக்குமுறை உள்ள ஒரு மாபியா ஸ்டேட்டை - அதுவும் ஜனநாயக நாடுதான் என சீரியஸாக காமெடி பண்ணுவதையும் உ.சா கண்டிக்கிறார். பிகு: உ.சா நேற்று முதல் ஒரு ரம்மியமான கடற்கரை நகரில் வசந்த கால விடுமுறையை கழி(ளி)ப்பதால் - எல்லோரினதும் கருத்துகளுக்கும் தனியாக பதிலிட முடியவில்லை. மன்னிக்கவும்.8 points
-
நாம் எல்லோரும் ஒவ்வொரு வகையில், வாழ்க்கையில் என்றோ நம்வசம் இருந்து நாம் இழந்துபோன சில விடயங்களை தேடிக்கொண்டே இருப்போம் என நினைக்கிறேன். அப்படி நான் பல பத்து வருடங்களாக (1991 இல் இருந்து) தேடிக்கொண்டிருக்கும் விடயம் ஒரு காலத்தில் ஈழத்தில் மிக பெரும் ஞனரஞ்சக நகைச்சுவை படைப்பாக ஒவ்வொரு தேத்தண்ணி கடையிலும் கேட்ட “லூஸ் மாஸ்டர்” நகைச்சுவை ஒளிநாடா பதிவு. 2015 வாக்கில் யாழிலும் எழுதினேன். இன்றுவரை இந்த நாடகத்தின் ஆடியோ கசட்டை யாரும் எங்கும் தரவேற்றியுள்ளதாக தெரியவில்லை. ஆனால் பின்னர் தேடிப்பார்த்ததில் - 2014 இலேயே இதை எழுதி, நடித்த நாவாலியூர் ஐசக் இன்பராஜா ஜேர்மனியில் வசித்து காலாமாகினார் என்ற சோழியன்( ) அண்ணாவின் பதிவும், அந்த திரியில் பொயட் ஐயா உட்பட பலர் எழுதிய நாடக ஆசிரியர் பற்றிய தகவல்களும் கிடைக்கப்பெற்றன. லூஸ்மாஸ்டர் என்ற ஒற்றை படைப்பின் மூலம் இன்றுவரை என்னுள் நகைசுவை உணர்வை தூண்டிவிட்ட நாடக ஆசிரியர், கலைஞர், இலக்கியவாதி ஐசக் இன்பராஜா. இதை இவர்தான் எழுதினார் என்பது கூட எனக்கு அண்மையில் வரை தெரியாது. இன்னார், எவர், அவரின் படைப்பு என்பது தெரியாமலே அவரின் படைப்பால் ஈர்க்கப்பட்டு அதை பல காலம் தேடித்திரிகிறேன். இதை விட ஒரு படைப்பாளிக்கு வேறு பெருமை இருக்க முடியாது. அவரை பற்றிய சில தகவல்கள் கீழே. திரு ஐசாக் இன்பராஜ “விகட விற்பனர்” என அறியப்பட்டுளார் ( https://noolaham.net/project/666/66598/66598.pdf ). அதே போல் காலங்கள் வாழ்த்தும் 300 ஈழத்து கலைஞர்கள் வரிசையிலும் இடம் பிடித்துள்ளார் ( https://noolaham.org/wiki/index.php/காலங்கள்_வாழ்த்தும்_300_ஈழத்துக்_கலைஞர்கள்?uselang=en ). அவர் பற்றிய இன்னொரு குறிப்பு இது https://ourjaffna.com/tag/ஐசாக்-இன்பராஜா/ அவர் பெயர் சொல்லும் ஜேர்மன் தமிழர் வரிசையிலும் உள்ளார். https://ta.m.wikipedia.org/wiki/செருமானியத்_தமிழ்_நபர்கள்_பட்டியல் வடிவேலு, கவுண்டர் எல்லாரையும் தூக்கி சாப்பிட கூடிய நகைசுவையாளர் ஐசக் இன்பராஜா - என்ன பாக்கு நீரிணையின் தப்பான பக்கத்தில் பிறந்து விட்டதால் - நம்மவர்களே அவரை அதிகம் கண்டு கொள்ளவில்லை என்றே என் மனதில் படுகிறது. பிகு இன்னும் லூஸ்மாஸ்ரர் ஒளிநாடா தரவேற்றத்தை தேடிக்கொண்டிருக்கிறேன். கிடைத்தால் மிக்க சந்தோசம் அடைவேன். இது மட்டும் அல்ல பின்னாளில் இவர் ஐரோப்பாவில் உருவாக்கிய படைப்புக்களை கூட யூடியூப் உட்பட எங்கும் எடுக்க முடியவில்லை.7 points
-
இங்கே யாரை ஆதரிப்பது, யாரை எதிர்ப்பது என்பதல்ல பிரச்சனை. மேற்குலகில் இருக்கும் முஸ்லீம்கள் போல புலம் பெயர் தமிழர் சிலரும் இருக்கிறார்கள் என்பதுதான் சொல்லப்படுவது. மேற்குலகில் பல முஸ்லீம்கள் ஆசியா, ஆபிரிக்காவில் இருந்து வந்து குடியேறியுள்ளார்கள். அவர்கள் அப்படி இங்கே வர காரணம் இங்கே உள்ள பொருளாதார மேன்மை. அந்த மேன்மை மந்திரத்தால் விளையவில்லை. மேற்கின் ஒப்பீட்டலாவில் மேலான ஜனநாயக, பொருளாதார, கட்டமைபுக்களே இதை உருவாக்கின. இந்த தனிமனித, பொருளீட்டும், லாபம் பார்க்கும் மேற்கின் அரசியல், கலாச்சார, பொருளாதார மேன்மையை அதன் பலன்களை அனுபவித்த படியே - மேற்கில் ஷ்ரியா சட்டம் வேண்டும் என கேட்பார்கள். ஆப்கானில், ஈரானில், சவுதியில் நடக்கும் இஸ்லாமிய 10ம் நூற்றாண்டு ஆட்சி மேற்கை விட திறம் என்பார்கள். ஆனால் செத்தாலும் இந்த நாடுகளுக்கு மட்டும் அல்ல அதை விட நெகிழ்வான மலேசியா, இந்தோனேசியா வில் கூட போய் வாழமாட்டார்கள். இதைதான் ரஸ்யா விடயத்தில் அண்ணைமார் செய்கிறார்கள். எந்த நாட்டையும் எங்கும் இருந்தும் ஆதரிக்கலாம். ஆனால் ஒரு மோசமான, சுரண்டல் மிகுந்த சர்வாதிகார systemதை நல்லது என்று, அந்த நாட்டிலே வாழாமல், கொலிடே போய் கூட பார்க்காமல், அதைவிட ஒப்பீட்டளவில் சகல சுதந்திரங்களும் உள்ள சிஸ்டத்தில் இருந்து விமர்சிப்பதுதான் விமர்சிக்கபடுகிறது. தவிரவும் நாம் எல்லோரும் மேற்க்கை தேர்ந்து வந்தவர்கள். இப்போ மேற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் பலர் மொஸ்கோவில் வந்திறங்கி - ரொமேனியா போடரை நடந்து கடந்து ஈயுவிக்குள் உள்ளிட்டவர்கள். அல்லது இன்னொரு ஈயு அல்லாத நாட்டின் மூலம் அல்லது கிழக்கு ஜேர்மனி மூலம் மேற்கு ஐரோப்பா வந்தவர்கள். ஆகவே ஊரில் இருந்து கிளம்பும் போதே, ரஸ்யாவை, கியூபாவை, தேர்ந்தெடுக்க கூடிய வாய்ப்பு, இப்போ இதே நாடுகளுக்கு போக கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ள போது, அந்த மேன்மையான நாட்டை விட்டு ஏன் இங்கே கிடந்து மாய்கிறார்கள் என்ற கேள்வி நியாயமானதே. எனது அப்பா கொள்ளைகாரன், அவரை நான் கண்டிகிறேன் என்று சொன்ன படி, அவர் கொள்ளை அடித்து சேர்த்த சொத்தை அனுபவிக்கும் மகன் போல - ஒரு போலித்தனம் இது. மேற்கின் பிழைகளை யாரும் விமர்சிக்கலாம், ரஞ்சித், விசுகு அண்ணை, நான் என இங்கே மாறாக கதைப்பவர்கள் பலரும் மேற்கை கடுமையாக சாடுபவர்கள்தான் - ஆனால் இங்கே விமர்சனத்குக்கு உள்ளாவது, மேலே சொல்லபட்ட போலி தார்மீக குமுறலும் (fake moral indignation), புட்டின் மீதானா ஒரு தலைக்காதல், நாயக வணக்கமும், வரலாற்றில் ஐரோப்பிய சிறுபான்மை தேசிய இனங்களுக்கு ரஸ்யா செய்த, செய்கிற கருவறுப்பை வெள்ளை அடிக்கும் செயல்களுமே.6 points
-
பல தடவை யாழில் கருத்துக்களை வைத்து விட்டேன் இளைய அரசியல்வாதிகளுக்கு வழிவிட்டு சிறியண்ணா சொல்வது போல் 1௦ வருடங்களுக்கு மேல் தமிழருக்கு எதையும் பெற்று கொடுக்காத அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் ஓய்வுக்கு போவது நல்லது சைக்கிள் கூட்டம் உள்ளடங்கலாக . செய்வார்களா ? பெட்டி வாங்கி குவிப்பதுக்கு தமிழர் பிரச்சனையை சாட்டாக வைத்து தமிழரின் ரத்தம் குடித்துக்கொண்டு இருக்கிறார்கள் உண்மையில் இவர்களுக்கு எங்கள் பிரச்சனை தீர்வது பிடித்தமான ஒன்றல்ல .5 points
-
வயது போன ஆக்கள்... சொல்வழி கேட்க மாட்டார்கள். @விசுகு தேவைப்படுபவர்கள பக்கத்தில் வைத்திருப்பது அவசரத்துக்கு உதவும் தானே? @விசுகு நம்ம மனோ கணேசன்.... அடிக்கடி..... உங்களுக்கு ரணிலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.... எனக்கு அவரின் மறுபக்கமும் தெரியும் என்று சொல்வார்.... @Nathamuni ஹரின், மனுஸ்ய போன்ற துடிப்பான இளம் ஆண்கள்தான் உற்சாகத்தோடு வேலை செய்வார்கள் என புதிய ஜனாதிபதி நினைக்கிறார் போலும். @goshan_che வயதானவர்களை சேர்த்தால் யார் பெரிது எண்ட ஈகோ பிரச்சனையள் வரும் என்பதால் தவிர்த்திருக்க கூடும். @goshan_che ஹிருணிக்காவப் போட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். கலை ரசணை இல்லாதவங்கள்! @ரஞ்சித் மருதரை வம்புக்கிழுக்க வேண்டாமே என்றுதான்! @satan அடுத்த முறை ஆர்ப்பாட்டகாரர் பாராளுமன்றில் நுழைந்து பெண் பாராளுமன்ற உறுப்பினரை மானபங்கப்படுத்தி விடுவார்களே என்ற அச்சம். @ஈழப்பிரியன் அண்ணா இந்தப் பதிலில் எந்தவொரு ஆண்மகன் ஆவது திருத்திப்படுவனா @Kandiah57 ரணில் இப்போதைக்கு தனக்கு இருக்கிற பிரச்சனையே போதும் என்று நினைத்திருப்பார் போல......! @suvy ஜனாதிபதி ரணில் என்ன நினைக்கின்றார் என்று... நேற்றே, துப்பறிந்து சொன்ன யாழ்.கள உறவுகளுக்கு... ஒரு... ஓ... போடுங்க.5 points
-
போராட்டக்காரர்களை இலக்குவைத்து இழுத்துச் செல்லும் அதிரடிப்படை. காலில் விழாத குறையாகக் கெஞ்சும் இளைஞனும் அவனது துணையும். "மச்சான், நான் உங்களைப் பார்த்து அப்படிக் கூறவில்லை, என்பாட்டில் வீட்டிற்குத்தான் செல்கிறேன், தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்" என்று அவன் கெஞ்சியும், தனது துப்பாக்கியை இன்னொரு வீரனிடம் கொடுத்துவிட்டு அவனை எப்படியாவது இழுத்துச்செல்ல அந்த அதிரடிப்படைவீரன் முயல்கிறான். https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA https://twitter.com/dhothaka/status/1550237788133814272?s=20&t=lWqFI---E20UjdcuSMgjFA எந்த ராணுவம் உங்களின் யுத்த கதாநாயகர்கள் என்று இதுவரை கூவினீர்களோ, அதே ராணுவம் இப்போது உங்கள் முன்னால் வந்து நிற்கிறது. எங்கே, இப்போது கூறுங்கள் பார்க்கலாம் நீங்கள் எங்களின் உண்மையான் கதாநாயகர்கள் என்று ?5 points
-
விக்கியர் ஒன்றும் தானாக அரசியலுக்கு வரவில்லை, அவரை இழுத்துக்கொண்டு வரும்போது அவர் கொழும்பு வாசியென்றோ, அரைச் சிங்களமென்றோ, சிங்களச்சம்பந்தியென்றோ யாருக்கும் தெரியவில்லை. தங்களை தக்கவைக்கும் தெய்வமாக தெரிந்தார். ஆனால் தங்களுக்கு அடிபணிந்து போகவில்லையென்றதும் இவற்றையெல்லாம் கண்டுபிடித்து அவரை ஓரங்கட்ட வெளிக்கிட்டார்கள். ஆனால் இதை கண்டுபிடித்து பரப்பியவரும் அதே ஓடத்தில் இருக்கிறார், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. தணிக்கை. விக்கியர் ஒருபோதும் சிங்களவருடன் வாழ்வது பெரும் சந்தோசம் என்று சொல்லவில்லை, தமிழரின் தேவைகளை புறந்தள்ளிவிட்டு அடுத்தவரின் தேவையை முன்னிறுத்துவதில்லை, என்று மக்கள் அவரை தெரிந்தெடுத்தார்களோ அன்றே அவர்களோடு வாழ வந்துவிட்டார். ஏனோ விக்கியர் வாய் திறந்தால் சிலருக்கு பயம், கொதி வந்துவிடுகிறது. அவரை சாடுவோரின் பின்புலத்தை ஆராய்ந்தால், இவர்கள் அவர்கள் ஏதோ வகையில் அவரை விட சிங்கள அல்லது வேறு ஒரு இன நெருக்கம் கலப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். இது விக்கியரை விமர்சித்த பலபேரின் பின்புலம் அறிந்தபின் நான் தெரிந்துகொண்டது. அவரின் அரசியலை விமர்சிக்க முடியாவிடில் வாழ்க்கையை விமர்சித்து வெறுப்பேற்றுவது, விலகியிருக்கச்செய்வது, நாறடிப்பது. இது ஒரு பண்பற்றவரின் செயல். ஆத்தாதவன் செயல், அவரை எதிர்கொள்ள முடியாதவரின் செயல், பொறாமையாகக் கூட இருக்கலாம்!5 points
-
கற்ப்ஸ், முழுத்தமிழரனான கஜன்ஸ்சும், சம், சும், மாவை கிழித்து தொங்கவிட்டுட்டினம், விக்கியர் கிழிக்கவில்லை எண்டுறியளோ? விக்கி மட்டும் அல்ல அவர் பிள்ளைகளும் முழு தமிழர் தான் பேரபிள்ளைகள்தான் அரை தமிழர் . ஆனால் தலைவர்களின் ரிசிமூலம், நதி மூலம் பார்க்காமல் - அவர்கள் கொள்கை, செயல்பாட்டை மட்டும் அல்லவா நாம் விமர்சிக்க வேண்டும் கற்ப்ஸ். இல்லாவிட்டால் தேவக்காரன் என்பதால் சுமந்திரனை சாடுவோர்க்கும் நமக்கும் வித்தியாசம் இல்லாது போய்விடும் அல்லவா? ஏன் இந்த அப்பட்டமான பிரதேசவாதம்? தந்தை செல்வா கூட மலேசியாவில் பிறந்த பின் கொழும்பை மையமாக கொண்ட ஒருவர்தான். லண்டனை, மும்பையை மையமாக கொண்ட ஜின்னாதான் பாக்கிஸ்தானை உருவாக்கினார். டக்லசும், அங்கஜயன்ம், கஜனும், கஜனும், சிவாஜியும், அமிர்தலிங்கமும், சித்தரும், சங்கரியும் யாழ்/வடக்கு மைய அரசியல்வாதிகள் - இவர்களை விட விக்கி எந்தவகையில் நம்ப தகாதவர்?5 points
-
சிறிய விமானத்தையே தூக்கிச் செல்லும் அளவிற்குத் திறன் கொண்ட பிரமாண்டமான விமானம் இந்த ஏர்பஸ் பெலுகா No.2 A300-608ST. உலகம் முழுவதும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கி வரும் இந்த கார்கோ விமானம், ஜூலை 7ம் தேதி பிரான்ஸ் நாட்டின் டோலூஸி என்ற இடத்திலிருந்து தனது பயணத்தை ஆரம்பித்து மெர்சிலி, கெய்ரோ, அபுதாபி, அகமதாபாத்துக்குச் சென்றுவிட்டு எரிபொருள் நிரப்புவதற்காக நேற்று சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. பின்னர் இன்று இந்த விமானம் சென்னை விமானநிலையத்திலிருந்து புறப்பட்டு தாய்லாந்து நாட்டின் பட்டாயா நகருக்குச் சென்றது. இந்த ஏர்பஸ் பெலுகா விமானம் வந்தது சென்னைக்கு மட்டுமல்ல, தென்னிந்தியாவிற்கே இதுதான் முதல் முறை. Airbus நிறுவனத்திற்குச் சொந்தமான இந்த விமானம், வழக்கமான விமானங்களைப்போல் இல்லாமல் மிகப்பெரிய திமிங்கிலத்தைப்போல வடிவமைக்கப்பட்டது. இதன் நீளம் 56.16 மீட்டர், அகலம் 7.7 மீட்டர், உயரம் 17.25 மீட்டர். இது அதிகபட்சமாக சுமார் 155 டன் வரை எடை சுமக்கும் திறன் கொண்டது. அதாவது திமிங்கிலத்தின் வாயைப்போல விரியும் இதன் முன்பக்க கேபினில் மிகப்பெரிய எந்திரங்கள், கிரேன், சிறிய விமானம், ஹெலிகாப்டர், கப்பல் போன்றவற்றையே ஏற்றிச் செல்லலாம். இதில் இருக்கும் 'semi-automated main deck cargo loading system', Multi-Purpose-Pallet (MPP) மற்றும் 'automated on-board cargo loader (OBCL)' போன்ற தொழில்நுட்பங்கள் எவ்வளவு பெரிய பொருள்களாக இருந்தாலும் விமானத்தில் எளிதாக ஏற்றி, இறக்கிவிடும். உண்மையில் இதன் அருகில் நின்று பார்த்தல் ஒரு பெரிய ஹெலிகாப்டரை இந்த விமானம் விழுங்குவதுபோல் காட்சி அளிக்கும். 1996 முதல் இயக்கப்பட்டு வரும் இந்த வகை விமானங்கள் பெரும்பாலும் ஹெலிகாப்டர், கப்பல் மற்றும் விண்வெளி நிலையத்திற்குத் தேவையான பெரிய அளவிலான பாகங்களை அனுப்புவதற்குப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்கு இதன் சரக்குப் போக்குவரத்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. உலகளவில் விமானம், ஹெலிகாப்டர், அதிவேக ஜெட்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து சேவைகள் வழங்கிவரும் 'Airbus' நிறுவனம், இந்தப் பிரமாண்டமான ஏர்பஸ் பெலுகாவைப்போல, 'Airbus Beluga XL' என்னும் அதைவிட பெரிய விமானம் ஒன்றையும் தன்வசம் வைத்துள்ளது. இவை உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளுக்குச் சரக்குப் போக்குவரத்து சேவைகளை வழங்கி வருகின்றன. ஆனந்த விகடன்5 points
-
மசாஜ்க்கு போன ஆண்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்பதை இந்த இடத்தில் பதிய கடமைப்பட்டுள்ளேன்.5 points
-
வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தாலும், உள்நாட்டு சுற்றுலா பயணிகள்….. ஜனாதிபதி மாளிகை, செயலகம், அலரி மாளிகை, பிரதமர் அலுவலகம் போன்றவற்றை பார்க்க கொழும்புக்கு பெருமளவில் வருகிறார்கள். வாற கிழமையில் இருந்து… புதிய நாடாளு மன்றத்தையும் பார்ப்பார்கள் போலுள்ளது. இதோடை… இலங்கை உள்ளூர் உல்லாச பயணத்துறை மூலம், இலங்கையின் பொருளாதாரம் உயர்ந்து விடும். வாஸ்து பார்க்காமல், கட்டினால் இப்படித்தான். உடான்ஸ் சாமியிடம் @goshan_che என்ன பலகாரம் சாரி…. என்ன பரிகாரம் செய்ய வேணும் என்று கேட்க வேணும்.5 points
-
வாங்க நண்பர்களே, இண்டைக்கு நாம் வெள்ளை வானில் ஏறி ஒரு சூப்பரான இடத்த பார்க்கப்போறோம்…. அதுக்கு முன்னாடி இந்த சப்ஸ்கிரைப் பட்டன, பெல்ல அழுத்திட்டீங்க எண்டால் நான் போடுற வீடியோவ உடனுக்குடன் பார்க்கலாம் …. சரி இப்ப நாங்க வீடியோவுக்குள்ள் போவம்.. நான் இப்ப நிக்கிறது…பாங்கொக்கில நாநா பிளாசாவில4 points
-
காதல் திருவிழா சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம் எண்டு பேசத் தொடங்கின உடனயே பேசிறதை குறைச்ச தம்பி , நான் எப்ப அம்மாவைக் கேட்டனான் எண்டு யோசிக்க , “ அதுக்கென்ன வெள்ளிக்கிழமை நல்லூரில காலமை பூசையில பாப்பம் ‘ எண்டு முடிவாகிச்சுது. ரெண்டு பெண்டாண்டிக் காரரா இருந்தாலும் நல்லூரான் நல்லது செய்வான் எண்டு பெண்பார்க்கும் படலம் பொதுவா இங்க தான் நடக்கும் . அப்ப கொழும்பில Majestic City மாதிரி யாழ்ப்பாணத்தில எல்லாப் பெடியளுக்கும் லேசியா பெட்டைகளை பாக்கிறதெண்டால் நல்லூர் தான். கொடியேத்தத்தில பாத்து மஞ்சத்தோட கேட்டு திருக்கலியாணத்தில ஒப்பேத்தின கதைகள் சில இருக்கு. பாக்காமல் காதல் , பாத்தவுடன் காதல் , படித்ததோட காதல், பழகிப் பாத்து காதல் , எண்ட மாதிரி நல்லூரில பாத்து ஆனால் பேசாமலே ஒப்பேறிற காதல் தான் கனக்க. காலமை கோயிலுக்கு வாற பிள்ளைகள் அநேமா அம்மாமாரோட தான் வருவினம். குறூப்பா வாறதுகள் பின்னேரம் தான் . குறூப்பா வாறதில ஒண்டைப் பாக்க வெளிக்கிட்டால் அதோட கூட வாறது எங்களைப் பத்தி ஏதாவது அள்ளி வைச்சு கவித்துப் போடும். இவளவை எல்லாம் சாணக்கியச் சகுனிகள், “ ஏற்கனவே இருக்காம் , இவன் எல்லாரையும் பாக்கிறவன் , போன நல்லூரில இன்னொண்டுக்குப் பின்னால திரிஞ்சவன்” எண்டு சொல்லி முளைக்காமலே கிள்ளிப் போடுங்கள். ஆனால் பெடியள் எல்லாம் ஆம்பிளை அன்னங்கள். “ மச்சான் உன்டை ஆளைக் கண்டனான் இண்டைக்கு சிவப்பு சாறியோட , சாமிக்குப் பின்னால தான் வாறா , அம்மாவைக் காணேல்லை ஆரோ ஒரு அக்கவோட தான் கண்டனான் “ எண்டு GPS location accurateஆ தருவாங்கள். இதை எல்லாம் சொல்லீட்டு வெளிக்கிட முதல் “ என்டை ஆளைக் கண்டனியே” எண்டு ஏக்கத்தோட கேக்கிறவனுக்கு இல்லை எண்டாம, “ மச்சான் எப்பிடியும் சங்கீதக் கச்சேரிக்கு வருவா கண்டு பிடிக்கலாம்” எண்டு நம்பிக்கையை குடுத்திட்டுப் போவான் மற்றவன். என்னைப் பொறுத்தவரை நல்லூர்க்கந்தன் காதல் கந்தன் . நீளமும் அகலமுமான வீதி, இடது பக்கம் ஆம்பிளைகள் வலது பக்கம் பொம்பிளைகள் எண்டு பாக்கிறதுக்கு சுகமான segregation, திரும்பிப் பாத்து யாரிட்டையும் மாட்டுப்படாம நேராவே பாக்க வசதியா சாமியைப் பாத்து நடக்கிற வழமை , அடிக்கடி சாமியை நிப்பாட்டி வைக்கிற மண்டபப்படி , சாமியே நிண்டு கேக்கிற பத்மநாதனின்டை நாதஸ்வரம் எண்டு கண்ணோடு கண்ணை நோக்க எல்லா வசதியும் முருகன் செய்து தருவான் . ஒரு பிள்ளையப் பாத்து ஒப்பேத்திறது எண்டால் அது கொஞ்சம் பெரிய வேலை . ஆளைப் பாத்து select பண்ணிறதே கஸ்டம். இண்டைக்குப் பாத்து இதுதான் எண்டு முடிவெடுத்துட்டுப் போக அடுத்த நாள் என்னுமொண்டு நல்லதாத் தெரியும் இல்லாட்டி முதல் நாள் பாத்தது ஏற்கனவே book பண்ணீட்டாங்களாம் எண்டு ஏக்கங்கள் ஏமாற்றங்களாகும். இதை எல்லாம் தாண்டி சரியானதைக் கண்டுபிடிச்சு பிறகு எந்த barrierஆல உள்ள வாறது, எங்க சைக்கிள் விடிறது , எங்க செருப்பு விடிறது, எத்தினை மணிப்பூசைக்கு வாறது, ஆரோட வாறது , உள்வீதி மட்டும் சுத்துமா வெளிவீதியும் சுத்துமா திரும்பிப் போகேக்க எங்க கச்சான் வாங்கிறது , இசைக்கச்சேரி கேட்டிட்டுப் போகுமா கேக்காமப் போகுமா எண்டு நிறைய intelligence report எல்லாம் எடுத்திட்டுத் தான் வேலை தொடங்கிறது. முதல்ல கொஞ்சம் கொஞ்சமா பின்னால போய் , அதுகும் அவைக்குத் தெரியாமப் போய், அதுக்குப் பிறகு கொஞ்சம் தெரியிற மாதிரிப் போக வெளிக்கிட , பிள்ளைக்கு தெரியவர முதல் அம்மா கண்டுபிடிச்சு முறைச்சுப் பாக்க பல காதல் மொட்டுக்கள் கண்ணகி அம்மாக்களின் கண் பார்வையிலேயே கருகிப்போகும். அதோட நாங்கள் பாக்கிறதை கண்டுபிடிச்சு எங்களைத் திரும்பிப் பாக்காமல் அம்மாக்களிடம் காட்டிக்கொடுக்கப்பட்டு காணாமல் போன காதல்களும் உண்டு . இதையும் தாண்டி புனிதமாகிறது சில loveவுகள் தான். பின்னால வாறதைக் கண்டு பாத்தும் பாக்கமல் நிக்கிறது தான் முதலாவது சமிக்கை , இதுவே நம்பிக்கையை ஒளியைத் தரும் . அவளவை ஒரு நாளும் நிமிந்தோ திரும்பியோ பாக்கமாட்டினம் ஆனாலும் நாங்கள் பின்னால வாறது தெரிஞ்சு கச்சான் கடை, செருப்புக் கடையில கொஞ்சம் கூட நேரம் மினக்கிடிறது எங்களுக்காகவே இருக்கும், இது நம்பிக்கையை தும்பிக்கை ஆக்கும். முதல்ல அம்மவோட வந்தவை அம்மாவை விட்டிட்டு பக்கத்து வீட்டு அக்காவோட வாறது நல்ல சமிக்கை. ஏற்கனவே எங்களைப்பத்தி சொல்லப்பட்டிருக்கும் அக்காவுக்கு. வாற அக்கா வடிவா ஏற இறங்க எங்களைப் பாத்து குடுக்கிற report ல தான் முடிவு தங்கி இருக்கும். கடைசீல அக்காவும் வெட்டப்பட்டு ஒரு friend ஓட வருவினம் , இப்ப முக்கியம் அந்த friend க்கு நீங்கள் நல்லவராகத் தெரியிறது. அந்தப்பக்கம் அம்மா அக்காவாகி , அக்கா friend ஆகேக்க நாங்களும் அந்த பரிணாம வளரச்சிக்கு ஏத்த மாதிரி பலவாகத் தொடங்கி , அக்காவோட வரேக்க ரெண்டாகி , friend ஓட வரேக்க தனியா இருக்க வேண்டும் இல்லாட்டி சில “ நல்ல “ நண்பர்களினால் அவளவையின்டை friends reject பண்ணிப் போடுவினம் . ஆயிரம் பேர் இருந்தாலும் பாத்தோண்ணயே இது தான் எனக்கு எண்டு பெடியள் முடிவெடுத்திடுவாங்கள் ஆனால் , பெட்டைகள் அப்பிடி இல்லை . முக்கி முக்கி six pack வைச்சவனையும் , பொக்கற்றுக்க ஆயிரம் ரூபா வைச்சிருந்தவனையும் , வடக்கு வீதீல சாமி வரேக்க மடிச்ச சட்டைக்கையோட நான் medical student இல்லாட்டி கம்பஸ் காரன் எண்டு நிக்கிறவனையும் எல்லாம் பாக்காம, நல்லூர் பக்தனா வெறும் மேலோட வாற single pack காரனுக்கு எப்பிடி ஓம் எண்டு சொல்லுறாளவை எண்டிறது முருகனுக்குத் தான் வெளிச்சம். என்ன தான் தலைகீழா நிண்டாலும் பல காதல் பயணங்கள் சண்டேஸ்வரர் தேங்காயோட சிதறிப் போக , ஆனாலும் கந்தன் கைவிட மாட்டான் எண்டு அடுத்த முறையும் முருகன்டை வாறவை தான் கன பேர். இன்று ஆறாம் நாள் திருவிழா. Dr.T. கோபிசங்கர் யாழப்பாணம்4 points
-
ஒருபோதும் ரசியாவையோ சீனாவையோ ஆதரித்து எனது கரமோ குரலோ எழாது எமது போராட்டம் ஆரம்பித்த காலங்களில் இந்த சிவப்பு கொடிகளின் மயக்கும்கொள்கைகளில் மயங்கி பைத்தியமாக்கப்பட்டு ஆடிய மாணவர்களில் நானும் ஒருவன்...4 points
-
மலையாளிகள் இனி தமிழையும் கற்றுக் கொள்ள வேண்டும். (truecopythink.media தளத்தில் வெளியான மலையாள கட்டுரையின் தமிழாக்கம்) சிஹாபுத்தீன் பொய்த்தும்கடவு (மலையாள எழுத்தாளர்) தமிழாக்கம் களியக்காவிளை ஷினு (Shinu R S) மலையாளத்திற்கும் ஆங்கிலத்திற்கும் அடுத்தபடியாக நாம் கல்விநிலையங்களில் பிரதான துணைமொழியாக கற்றுக்கொள்ள வேண்டியது தமிழ் மொழிதான் என்பது எனது அபிப்பிராயம். ஏனென்றால், தமிழ்தான் நமது பாரம்பரியத்தின் மொழி. கேரளாவின் நீண்ட கலாச்சாரத்தின் சரித்திர உள்ளுணர்ச்சியாக இருப்பது தமிழ். நமது மொழியின் உயிர் வேறு எந்த மொழியையும் விட தமிழில்தான் குடி கொள்கிறது. வட இந்தியாவிலிருந்து பாய்ந்து வந்த ஆரியமயமாக்கத்திற்கு எதிராக வியக்கத்தக்க விதத்தில் தாக்குப்பிடித்த மொழியாகவும் தமிழை நாம் காண வேண்டும். மலையாளம், தமிழ், கன்னடம், தெலுங்கு போன்ற திராவிட மொழிகளில், சமஸ்கிருதத்தினை கலக்கவிடாமல் மிகக்கவனமாக விலக்கி வைத்தவர்கள் தமிழ்ப் பெருங்குடிகள். தமிழின் பழமையும் இலக்கிய வளமும் அந்த மண்ணின் பெருமைக்குரிய சின்னங்களாக, அரசியல் உந்துசக்தியாக இன்று வரையிலும் நிலைநாட்டப்பட்டுள்ளது. சொல்வளத்தாலும் இசைத்தன்மையாலும் தமிழ் மொழி உலகின் அனைத்து மொழிகளைவிட முன்னணியில் இருக்கிறது. எந்த ஆங்கில வார்த்தைகளுக்கும் அந்த மொழியில் அதற்கு தகுந்த சொல்லாடல்கள் தேவைக்கு தகுந்தபடி தோற்றம் பெறுவதைக் காணலாம். ஏராளமான இயந்திரக் கருவிகள் மேற்குலக நாடுகளிலிருந்து கண்டுபிடிக்கப்படுவதும், அவை இந்தியாவை வந்தடையவும் செய்கின்றன. நம்மால் எக்கருவியும் கண்டுபிடிக்கப்படாதது மட்டுமின்றி, இல்லாத பழங்கதை பேச்சுகளில் மூழ்கிப் போவதும், எந்தவித வெட்கமுமின்றி கருவிகளைப் பணம் கொடுத்து வாங்கி பயன்படுத்தவும் செய்பவர்கள். நமக்கு அந்த கருவியின் பெயரில் கூட எந்தவித உரிமையும் இல்லை! அச்சூழலிலும் அந்த இயந்திரங்களுக்கு சுயமாக பெயர் சொல்லி அழைப்பதற்காவது முயற்சி செய்யும் மொழிதான் தமிழ். ரெப்ரிஜிரேட்டருக்கு அவர்கள் சாதாரணமாக 'குளிர் சாதனப் பெட்டி' என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஏர்கண்டிஷனருக்கும் பெயரிட்டு அழைக்கிறார்கள். சாதனம் என்பதற்கு இயந்திரம் என்பதுதான் தமிழில் அர்த்தம். மொபைல் என்ற சொல்லிற்கு தமிழர்கள் முதல்தர பெயரிட்டிருக்கிறார்கள்; 'அலைபேசி'. கம்ப்யூட்டருக்கு கணினி, கால்குலேட்டருக்கு 'கணிப்பான்', 'எளிகணி' என்னும் இரு பெயரிட்டிருக்கிறார்கள். கணிப்பான் என்ற சொல்லிலிருந்து கணிப்பதற்கும், எளிதில் கணிக்க என்னும் அர்த்தங்களில் இருந்துதான் 'எளிகணி' என்று கால்குலேட்டருக்கு பெயர் படைத்திருக்கலாம். பஸ்சை 'பேருந்து' என்று தமிழ்ப்படுத்தினார்கள். போட்டோவிற்கோ மிகவும் ரசனைக்குரிய சொற்பிரயோகமே தமிழுக்கு; நிழல் படம். மற்றும் ஒரு அழகான சொல் 'நிழல்குடை'. இது வேறெதுவுமில்லை. வெயிட்டிங் ஷெட்டிற்கு! Weather என்பதற்கு சரியான மலையாளம் இன்றைக்கும் இல்லை. Climate என்ற சொல்லுக்கு 'காலாவஸ்த' என்று எழுதுகிறோம். Weather என்பதற்கு 'தைனம்தின காலாவஸ்த' என்றெல்லாம் சில பத்திரிகைகள் எழுத முயற்சித்தாலும் அது எதுவும் சரிப்படவில்லை. உண்மையில் நான் பிறந்த இடமான கண்ணூரில் Weather என்பதற்கு அழகான மலையாளச் சொல் இருக்கிறது - ஆச்ச். வானம் கருமேகங்கள் சூழும்பொழுது மழை மறையும்பொழுது பண்டைய தலைமுறையினர் இப்போதும் சொல்வார்கள். ஆஹா, ஆச்ச் மாறிட்டே என்று. இப்படி எவ்வளவோ கவித்துவமான வட்டார வழக்குகளை மலையாளி இழந்திருக்கிறான். ஏதாவது ஒரு பிரபல தினசரி பத்திரிகை பழக்கப்படுத்தி இருந்தால் சிலவேளை அழியாமல் இருந்திருக்கும். எந்த மொழியிலும் புதிய சொல்லாடல்களை வெளியில் இருந்து திணிப்பன் மூலம் உருவாக்க இயலாது. சமீபத்தில் நமது மொழி வல்லுனர்கள் ஆங்கிலத்திற்குச் சமமான வார்த்தைகளை உருவாக்க கடினமாக முயற்சி செய்த போதிலும் முழுமையான பலன் கிடைக்கவில்லை. அவ்வாறான சொற்கள் ஓசை நயமோ, நமது கலாச்சாரம் குறித்த ஆழ்மன சித்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதுவே நிதர்சனம். 'ஸ்விட்ச்' என்பதற்கு 'வைத்யுத ஆகமன பிரத்தியாகமன யந்திரம்' என்ற ரீதியில் சொற்களை உருவாக்கினால் எப்படி இருக்கும்? 'ரயில்வே ஸ்டேஷனுக்கு' 'அக்னிசகட ஆகமன பிரத்தியாகன யந்திரம்' என்று இரண்டு முறை சொல்லி முடியும்போது, நமக்கான வண்டி கிளம்பிப் போயிருக்கும். இந்த இடத்தில் தமிழ் ஒரு முன்னுதாரணமாகிறது. நேற்று கண்டறிந்த ஆங்கில வார்த்தைக்கும் நாளை தமிழ் வார்த்தையை கண்டுபிடித்திருப்பார்கள். அதற்குத்தக வாட்ஸ் - அப்பிற்கு கூட தமிழில் பெயர் வந்துவிட்டது; பகிரி என்னும் சொல். எடுத்துக்காட்டுகள் இன்னும் நிறைய இருக்கிறது. தமிழ் மொழிக்கு எப்படி இது சாத்தியமாகிறது? விடை எளிது. இசைத் தன்மை கொண்டது அம்மொழி. எளிமையானது. அனேக நூற்றாண்டுகளின் இலக்கியப் பாரம்பரியம் அதற்கு இருக்கிறது. அதன்மீதான அனைத்து மதிப்பும், அன்பும் அவர்களின் இதயத்தில் அந்த மொழியிடம் இருக்கிறது. 'தமிழன்' என்றுகூட ஒரு திரைப்படத்தின் பெயர் வருகிறது. சுயமரியாதையின் ஆற்றல் ஒரு வியாபார திரைப்படத்தின் பெயரில்கூட வெளிப்படுகிறது. அது மிகவிரைவிலேயே ஒரு சமூக, அரசியல் உணர்வாக மடை மாற்றம் செய்யப்படுகிறது. இப்படி இருக்கும்போது மலையாளி ஒரு திரைப்படத்திற்கு சூட்டிய பெயரைப் பாருங்கள் - 'மலையாளி மாமனுக்கு வணக்கம்' ! இணையோடு புணர்வது குறித்து சொல்வதற்கு காவியத் தன்மை கொண்ட ஒரு சொல் கூட மலையாளத்தில் இல்லை. ஆனால் தமிழில் கவனியுங்கள்; உடல் உறவு. எவ்வளவு தூரம் அழகானதும் ஓசை நயம் கொண்டதுமான சொல். காதலின் மென்மையை வெளிப்படுத்த இதுபோன்ற அதி அற்புதமான வார்த்தை இன்னும் இருக்கிறது தமிழில். அதில் ஒன்று தான் கலவி. 'கலவி' என்பதற்கு 'இரண்டாக இராமல் ஒன்றாவது' என்பதுவே அர்த்தம். காதலுடன் இணைவதற்க்கு இதைப்போன்ற சொல்லழகும் சமூக உணர்வும் உள்வாங்கிய வேறு எந்த சொல் இருக்கிறது? மலையாளத்தில் இந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படும் பகுதியான சொற்களும் விகாரம் தரக்கூடியவை. சுயமரியாதை அற்றதும் கூட. ஒரு நிமிடம், இதை வாசிப்பதை நிறுத்திவிட்டு அவ்வாறான சொற்களை ஆராய்ந்து பாருங்கள்; சொன்னதன் அர்த்தம் புரியும். 1578 இல் போர்த்துக்கீசிய கிறிஸ்தவ மிஷனரிகள் ஒரு தமிழ் வழிபாட்டு நூலை பழைய தமிழ் மொழிநடையில் அச்சிட்டு வெளியிட்டார்கள். அதற்குப் பெயர் 'தம்புரான் வணக்கம்'. அம்மொழிக்கே உரிய மொழிநடையைப் பயன்படுத்தி வெளியிடப்பட்ட அப்புத்தகம், அச்சில் வெளியான முதல் இந்திய மொழி என்பதை கூட நினைவுகூர வேண்டும். அதை நமது சொந்த கேரள மண்ணில்தான் அச்சடித்தார்கள். வேணாட்டின் கொல்லத்தில். இந்த விஷயத்தில் கொல்லம் மாவட்டத்தவர்கள் மிகவும் பெருமை கொள்ளலாம். மலையாள நாடும் தமிழ் மொழிக்கும் இடையிலான தொடர்பு குறித்து இதைவிட கூடுதலாக வேறு எதை சொல்ல முடியும்? எந்தவொரு சமூகத்தினரினதும் வரலாற்று உணர்வும் மொழியில்தான் உயிர் வாழ்கிறது. வடக்கிலிருந்து உருவாகும் ஆரிய மயமாக்கல், தென்மேற்கு கரை ஓரங்களிலிருந்து உருவான வியாபார மிஷனரி தொடர்புகளினால் நாம் நமது தாய் மொழியான தமிழிலிருந்து பெருமளவுக்கு விலகி போய்யிருக்க வேண்டும். மொழியால் திணிக்கப்பட்ட நேரடியான மற்றும் மறைமுகமான காலனித்துவம் இன்றும் தொடர்கிறது. ஆனால், தமிழ் மொழியைக் கற்றிராத எந்தவொரு மலையாளியாலும் ஓரளவுக்கு தமிழில் தகவலை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். நமது மொழி தமிழ் மொழியுடன் கொண்டிருப்பது தொப்புள் கொடி உறவாகும். தமிழின் சங்ககால காவியங்களில் ஒன்றினை எழுதியது ஒரு கேரளீயர். இளங்கோவடிகள் என்பது கவிஞனின் பெயர். படைப்பு; சிலப்பதிகாரம். ஒன்றிரண்டு அல்ல, 5700 வரிகள் இருக்கிறது. நாம் அறிந்திடாத கேரளக் கவிஞர்களின் பெயர்கள் இன்னும் இருக்கலாம். எட்டுத்தொகையின் சில கவிதைவரிகள் கேரளாவின் கவிஞர்கள் எழுதியதாக கருதப்படுகிறது. இந்த குறிப்பின் நோக்கம் மொழி மீதான உரிமை கோரும் வாதமல்ல. உலகிலுள்ள எந்த மொழியும் பிற மொழிகளுக்கு எதிராக இல்லை என்பதுவே மேன்மையான உண்மை. உலகில் மிகவும் குறைவான மக்கள்தொகையினர் பேசும் மொழியைக்கூட மனிதன் பாதுகாக்க வேண்டும் என்று நம்பக்கூடிய ஒரு மனிதன் நான். ஆனால் அரசியல் உள்நோக்கத்தோடு எந்த மொழியையும் திணிப்பதற்கு நான் எதிராளியும் கூட. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படும் மொழிக்குப் பின்னால் வலுக்கட்டாயமாகத் திணிக்கும் குரூர மனம் இருக்கிறது. வேர்களை கைவிட்ட மரங்கள் அதன் ஆன்மாவை விரைவில் இழந்துவிடும். துணை மொழியாக நாம் கற்கும் ஆங்கிலத்துடன் முக்கியத்துவம் கொடுத்து கற்க வேண்டியது தமிழ் மொழியைத்தான். காரணம், வெயில் இலைகளை பசுமையாக்குவது போன்று, மண்ணின் ஆழங்களில் ஊடுருவும் வேர்கள் அதன் தாய்த்தடிகளையும் கிளைகளையும் வலுப்படுத்தும். கேரளாவில் வாழ்பவர்களின் தாய்மொழி மலையாளம் என்றாலும், மலையாளத்தின் தாய்மொழி தமிழ். அதில் ஒரு தற்காப்பு அரசியல் செயல்படுவதை நாம் அவதானிக்கலாம். (பி.கு: இந்த கட்டுரையை பகிர்வதின் நோக்கம் தமிழர்கள் முக்கடலில் மூழ்கி முத்தெடுத்தவர்கள் என்பது போன்று வீண் பெருமை பேசும் நோக்கத்தில் அல்ல. மாறாக தாய்மொழி கல்வியின் சிறப்பை இதைவிட எதார்த்தமாக தற்போதைய சூழலில் எளிமையாக புரியவைக்க முடியாது என்பதற்கே. இந்த கட்டுரையை வாசிக்கும் போது மற்றொரு சம்பவம் நினைவு வருகிறது. சோவியத் வீழ்ந்து முப்பது ஆண்டுகள் கடந்திருந்தாலும் சோவியத் நாட்டில் ரஷ்ய மொழியில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அச்சடிக்கப்பட்டு இங்கே ஏற்றுமதி செய்யப்பட்டு விநியோகம் செய்யப்பட்ட பழைய புத்தகங்கள் சில நேரம் மூத்த தோழர்கள் வீடுகளில் காண கிடைக்கும். அந்த புத்தகத்தை தொட்டு பார்த்து "முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ” என்ற வரியை வாசிக்கும் போது ஏற்படும் உணர்வை வர்ணிக்க முடியாது. வெறும் தமிழ் என்றில்லை சோவியத் கம்யூனிஸ்டுகளால் உலகம் முழுவதும் அவரவர் தாய் மொழியிலேயே புத்தகத்தை மொழிபெயர்ப்பு செய்து அச்சடித்து ஏற்றுமதி செய்தார்கள். தாய் மொழி கல்வியின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் விதமாக கம்யூனிச ஆசான்கள் பெரும் விவாதங்களையும், ஆய்வுகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்)4 points
-
உலக மகா சுளியன் கருணாநிதியே, சோவியத் கதையாடலை நம்பி மகனுக்கு ஸ்டாலின் என்ற பெயரை வைத்துள்ளார். ஆனால் 90க்கு பின்னான பெரும்பாலான ரஸ்யர்கள் ஸ்டாலினை ஒரு கொடுங்கோலன் என்ற கருதுகிறார்கள். அவரின் சிலைகளை அகற்றியதும் மட்டும் இன்றி, ஸ்டாலின் கிராட் என்ற நகரை மீளவும் வொல்கோகிராட் என்றும் மாற்றியுள்ளனர். பெரிய விளாத்தி கூட ஸ்டாலினை தூக்கி பிடிப்பதில்லை. கருணாநிதியே ரஸ்ய மூளை சலவைக்கு உள்ளாகி உள்ளார் எனும் போது, கனடாவிலும், ஜேர்மனியிலும் புட்டின் சுந்தரலிங்கம், புட்டின் சண்முகலிங்கங்கள் உருவாக கூடும். ஆனால் யாரும் மறந்தும் பிரபாகரன் எண்டு பிள்ளைக்கு பெயர் வைக்கமாட்டார்கள் - இலங்கைக்கு கொலிடே போனால் பாதிக்கும்.4 points
-
இலங்கையின் பொருளாதாரம் 80 இலிருந்து 100 பில்லியன். இலங்கையின் ஆகக்குறைந்த கடன் 55 பில்லியன். பொதுவாக வளர்ந்து வரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி ஆண்டு ஒன்றிற்கு சராசரியாக 5% (இப்போதிருக்கும் உலக பொருளாதார நெருக்கடி அற்ற நிலையில்). இந்த 5%, 100 பில்லியன் இலங்கை பொருளாதாரத்தில் (இதுவரை இலங்கையின் பொருளாதாரம் 100 பில்லியன் டொலரினை எட்ட வில்லை) ஆண்டு ஒன்றிற்கு 5 பில்லியன். இந்தக்கடனை இலங்கையின் பொருளாதார வளர்ச்சியான 5% இல் சராசரியாக 20% வரிவிதிப்பினால் பெறப்பட்டால் அது 1 பில்லியன் டொலர், கடனை அடைக்க 55 வருடம் எடுக்கும் (இலங்கையின் பொருளாதாரம் 100 பில்லியனுக்கு உதாரணத்திற்காக வரையறுத்தால்). மத்திய வங்கியின் ஆளுனர் இலங்கை அன்னிய செலாவணி தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியிலிருந்து (கடன் மற்றும் பொருளாதார நெருக்கடியில் அல்ல) மீள்வதற்கான ஆகக்குரைந்த கால அளவை கூறியுள்ளார் என கருதுகிறேன்.4 points
-
4 points
-
நெருப்பு டா நெருங்கு டா முடியுமா? நெருப்பு டா நெருங்கு டா பாப்போம் நெருங்குனா பொசுக்குற கூட்டம் அடிக்கிற அழிக்கிற எண்ணம் முடியுமா நடக்குமா இன்னும் அடக்குனா அடங்குற ஆளா நான் இழுத்ததும் பிரியுற நூலா நான் தடை எல்லாம் மதிக்கிற ஆளா நான் விடியல விரும்பிடும் சம்பந்தனடா நான்... சம்பந்தனடா நான்4 points
-
எல்லாமே பேயும் பிசாசும் தாம் இதில் நமக்கென்ன பலன் இருக்கிறது4 points
-
கோசான் சே அவர்களுக்கு நன்றி. தாயகம் விறுவிறுப்போடு இருந்தகாலத்தில் புனர்வாழ்வுக் கலைமாலை நிகழ்வுகளை அலங்கரித்த கலைஞர்களில் இவரும் ஒருவர். மக்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்த கலைஞர். மாவீரர்களையே மதிகொள்ளா மனம்கொண்ட எம்மவரிடையே நீங்கள் பெரிதாக எதிர்பார்த்து ஏமாந்துபோயுள்ளிர்கள். ஆனால், கலைஞர்கள் காலத்தால் மறைவதில்லை என்பதை உங்களைப்போன்றோர் நினைவூட்டிவருகின்றமையே பதிவாகின்றது. நன்றி4 points
-
53 நாடுகளின் உதவியுடன்... 30 வருட போரை வென்றவர் என்று சொல்லியவருக்கு... ஒரு நாடும், அடைக்கலம் கொடுக்கவில்லையா? பேசாமல்.... கள்ளத் தோணியில் ஏறி, அவுஸ்திரேலியா போயிருக்கலாம். நான்... திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஒரு கிழமைக்கு முன்னாடி, எப்படி போனேனோ... அப்படியே திரும்ப வந்துடேன்னு சொல்லு. கோத்தாடா... கபாலிடா.... நெருப்புடா... பருப்புடா... அவ்வ்வ்வ்...4 points
-
வெள்ளைகள் ஊழல் பமிலி கொலிடே பாக்கேஜ் அதுவும் முதல் தர கொட்டல்களில் அனுபவிக்காத கவுன்சில் வேலை ஆட்கள் மிக மிக குறைவு அப்படித்தான் வெளியில் இருந்து நண்பர் கூப்பிட்டால் வரி கட்ட தேவையில்லை ஆனால் இங்கு 500 பவுன் பரிசு வாங்கினாலும் vat உண்டு . ஆனால் பாருங்க இந்த பொரிசு ரிசி போன்ற்வர்கள் இங்கிலாந்தவர்கள் ஊழல் எப்படி நவீனமாக செய்வது என்று நடைமுறையில் காட்டியவர்கள் . ரிசி நவீன சுமத்திரன் .4 points
-
ஆனால் விக்கியர் சொல்வதிலும் தப்பில்லைதானே? எமது உரிமைகளை நாம் கேட்டு அடைய வேண்டிய சந்தர்பத்தில் எமது பிரதிநிதியே எமது உரிமையை தரும் குழுவுக்கும் தலைமை தாங்கினால் - உரிமைகள் தரப்படாமல் “மழுப்ப படவே” வாய்ப்பு அதிகம். இது நம் தலைவர்கள் 1930-48 இல் விட்ட அதே பிழை. ஒரு தமிழர் தற்காலிக பிரதமர்/ஜனாதிபதி ஆவதால் அவருக்கு பெருமையாகலாம் இன நலனுக்கு குந்தகமே. நாம் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி வெளியார் உத்தரவாதத்தோடு எமக்கான உச்சபட்ச தீர்வை அடைய மட்டுமே முயல வேண்டும்.4 points
-
முதலில் இந்த நாட்டின் குடிமகன் என்று சொல்லபடும் சிங்களவர்களால் நாட்டின் முக்கிய ஏற்றுமதியாகும் தேயிலை கொழுந்து பறிக்க முடியுமா என்று கேட்டு பாருங்கள் ? இப்படி சோம்பேறித்தனமான இனமும் தமிழர் எதிர்ப்பு இனவாதமும் கொண்டவர்களால் நாடு அழிவையே சந்திக்கும் வங்குரோத்து ஆன நாடுகள் மீண்டு எழுந்து சிங்கபூர் ஆன கதை உலகில் இதுவரை இல்லை .3 points
-
வணக்கம், இங்க கன பேருக்கு Yarl samayal எண்டு ஒரு யூடியூப் பக்கம் வச்சு இருக்க தெரியும், அந்த பக்கத்தில இது வரைக்கும் 250 க்கும் மேல உணவுகள் போட்டு இருக்கம், அதுல பெரும்பான்மையா யாழ்ப்பாணத்தில செய்யிற உணவுகளை எங்கட பாட்டி எப்பிடி செய்து காட்டிதந்தாவோ அதே மாதிரி செய்து காட்டிற வழக்கம். அத தனி தனி திரட்டுக்களா போடாம, ஒரு திராட்டா போடுறதுக்கு தான் இது. அதோட மட்டும் இல்லாம, உங்களுக்கு இருக்குற சந்தேகங்கள், அடுத்ததா நாங்க என்ன உணவுகள் செய்து காட்டலாம் எண்டு எல்லாம் நீங்க சொல்ல முடியும். அதே மாதிரி ஏதும் பிழைகள் விட்டாலும் நீங்க இதுல சொல்ல முடியும், வாங்க ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல செய்வம்3 points
-
தாவரத்தின் இலைகளை... வகைப் படுத்தி, பெயர் வைத்த தமிழன். ஆல், அரசு, வேம்பு, அத்தி, மா, பலா, வாழை, பூவரசம் (இன்னும் பல) போன்ற மரங்களின் இலைகளுக்கு மட்டும்... ‘இலை’என்று பெயர். அகத்தி, பசலி, வல்லாரை, முறுங்கை போன்றவற்றின் இலை ‘கீரை’ ஆகின்றது. மண்ணிலே படர்கின்ற கொடிவகை இலைகளுக்குப் ‘பூண்டு’ என்று பெயர். அறுகு, கோரை முதலியவைகளின் இலைகள்... ‘புல்’ ஆகின்றன. மலையிலே விளைகின்ற... உசிலை முதலியவற்றின் இலைகளுக்குப் பெயர்... ‘தழை’. நெல், வரகு முதலியவற்றின் இலைகள்... ‘தாள்’ ஆகும். சப்பாத்தி, கள்ளி, தாழை இனங்களின் இலைகளுக்குப் பெயர்... ‘மடல்’. கரும்பு, நாணல் முதலியவற்றின் இலைகள்.. ´தோகை’ என்றாகின்றது. தென்னை, கமுகு, பனை முதலியவற்றின் இலைகள்.. ‘ஓலை’ என்று சொல்லப்படுகின்றன. இவ்வாறு தாவரங்களுக்கு வழங்கி வரும் சொற்களுக்குள்ளே இலக்கணம் மட்டுமல்ல, தாவரவியல் அறிவியலும்... அடங்கி இருக்கிறது. Joseph Anthony Raj3 points
-
வழமையாக வீட்டுக்கு வேலை முடிந்து ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன் ....சில நேரங்களில் கொஞ்சம் பிந்தி வந்தா மனைவி பிள்ளைகள் கேட்பினம் ஏன் அப்பா இன்று வேலை முடிய லேட்டா என்று...நான் "சீ சீ பெற்றொல் அடிக்க போனேன், அது தான் " பெற்றோல் டாங்க் ஏற்கனவே நிரம்பி தான் இருக்கும்..... நான் எனக்கு உற்சாக பாணம் வாங்க போன கதை எனக்கு மட்டும் தான் தெரியும் ... ஒரு நாள் மாட்டுப்பட்டு போனேன் ..முதல் நாள் மணைவி காரை கொண்டு போய் பெற்றோல் அடிச்சு இருக்கின்றார் எனக்கு அது தெரியாது ...அடுத்த நாள் வேலையால் வரும் பொழுது என்ட உற்சாக பானத்தை வாங்கி கொண்டு வந்து லேட்டாக வந்தமைக்கு காரணத்தை சொன்னேன் " ஐயோ நான் நேற்று தானே பெற்ரோல் அடிச்சனான் ஏன் இன்றும் நீங்கள் அடிச்சனீங்கள் .....வேலைக்கு போகாமால் வேறு ஏங்காவது டெ ரிப் போனீங்களோ" என பத்திரகாளியாக மாறினால்.... உடனே நான் "கூல் கூல் எல்லாவற்றையும் நட்பு ரீதியாக பேசி தீர்த்து கொள்ளலாம் என சமாதனபடுத்தினேன்" இனி நான் வேறு காரணம் சொல்ல வேணும் ...தேடிக்கொண்டிருக்கிரேன்3 points
-
ரசிய எல்லை நாடுகளை யாரும் அதட்டி அல்லது அடாத்தாக பிடித்தார்களா? அந்தந்த நாட்டு மக்களின் சுதந்திர மற்றும் ஐனநாயக தெரிவுகளை எல்லை நாடு என்பதற்காக வல்லரசு என்பதால் சிறிய நாடுகளை அதட்டுவதும் படைகளை அனுப்பி அட்டூழியம் செய்வதும் தவறான முன்னுதாரணமே?3 points
-
இனித்தான் பேரும் புகழும் வரப்போகுது.3 points
-
களத்தில் கேட்கும் கானங்கள் உருவாக்குனர்களில் ஒருவர் "ராவ்" அவர்கள் பகிர்ந்து கொண்ட வெளிவராத கதைகள். ரீ. எம். சௌந்தராஜன் செய்ய மறுத்ததை ரீ. எல். மகாராஜன் செய்தது என்ன?3 points
-
ஆமாம் தந்தையும் ஒரு இசைக்க கலைஞன். அவர் பெயர் நாதஸ்வரம். . சகோதரியும் கருவிகள் வாசிப்பார். அவர்கள் இசைக் குடும்பம். லிடியனின் திறமை அபாரம். கனடாவில் ஒரு பையனுக்கு பெயர் அகராதி அவரும் நடனக் கலைஞன் . அழகு தமிழ் உலகெங்கும் வாழ்க . நோர்வேயில் ஒரு குழந்தைக்கு வெற்றிலை என்று பேர் ( மரண அறிவித்தலில் வாசித்தேன்)3 points
-
சிக்கலான கோட்பாடுகள்தான், ஆரம்பத்தில் எனது புரிதலின் அடிப்படையில் இலகுவாக சொல்லிவிடலாம் என நினைத்திருந்தேன் ( இங்கு உள்ள அனைவரும் துறைசார் கல்வியறிவுள்ளோர் அதனால் கல்வியறிவற்ற எனக்கு இந்த கருத்து புரிந்தால் அது மற்றவர்களுக்கும் இலகுவாகப்புரிந்து விடும் என நினைத்தேன்) அல்லது இந்தக்கருதுகோள்கள் தவறாக இருக்கலாம் அல்லது எனக்கு இந்த கருதுகோளை மற்றவர்களுக்கு புரியவைக்கமுடியாமல் இருக்கலாம். மேலே உள்ள காணொளியில் கூர்ப்பு பற்றி கூறப்படுகிறது முதலாவது வகை டார்வினது கோட்பாடு, இந்த கூர்ப்பு கோட்பாடு போலவே பொருளாதாரமும், உலக ஒழுங்கும் உள்ளதாகக்கருதுகிறேன். இதில் கூறப்படும் Punctuated Equilibrium போலவே தற்போதுள்ள பொருளாதாரத்தினை Punctuated Growth economy என கூறுகிறார்கள். உலக ஒழுங்கை தீர்மானிப்பதில் முதல் காரணி கல்வி அதன் மூலம் உருவாகும் புதிய தொழில்னுட்பம், உற்பத்தி அதிகரிப்பு அதனால் உலக வர்த்தகத்தில் ஏற்படும் வர்த்தக வகிபாகம், அது வழங்கும் பொருளியல் வளத்தினால் அதிகரிக்கும் பாதுகாப்பு செலவீன அதிகரிப்பு என நீண்டு செல்லும். உலக ஒழுங்கை தொடர்ச்சியாக தக்க வைக்க கல்வியறிவும், பொருளாதார பலமும் வேண்டும் அதனடிப்படையிலேயே நாடுகள் குடி வரவு கொள்கைகளை வகுக்கின்றன. 2 ஆம் உலக யுத்தத்தின் பின் ஏற்பட்ட பொருளாதார நெருககடி இங்கிலாந்தினை உலக ஒழுங்கினை தீர்மானிக்கும் சக்தியாக இருந்த நிலையிருந்து கீழிறக்கிவிட அமெரிக்கா அந்த இடத்தினை எடுத்து கொண்டது. இங்கு யார் நல்லவர் கெட்டவர் அல்ல பிரச்சினை, பாதிக்கப்பட்ட தேசிய இனமான எமக்கு எது இலாபம் என அறிதல். அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தாக்குதல் பல நியாயமான போராட்டங்களுக்கு முடிவு கட்டிவிட்டது, இந்த நிலை பனிப்போர் காலத்தில் ஏற்ப்பட்டிருந்தால் ஒரு சம்பவமாக உலகம் கடந்துவிட்டிருக்கும் . கோசான் கூறுவது போல இரஸ்சியா ஒரு காலத்திலும் உலக ஒழுங்கை தீர்மானிக்க முடியாது, இதனல் உலகு இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் இரஸ்சியா தெரியாமலே அடக்குமுறைக்க்குள்ளாகியுள்ள தேசிய இனங்களிற்கு நன்மை செய்கிறது என்பதுதான் எனது கருத்து.3 points
-
எனக்கும் பொதுவா ஆங்கிலம் கலந்து பேசுவது பிடிக்காதுதான். 30 நிமிடம் எந்த திசை சொல்லும் கலக்காமல் தமிழில் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போட்டியில் பரிசெல்லாம் வென்றிருக்கிறேன். ஆனால் taking for granted என்பதை அதன் கனபரிமாணங்கள் பிசகாமல் எப்படி எழுதுவது என்று யோசித்து முடியாத போது, உடன் பதில் எழுதும் ஆர்வத்தில் அப்படியே எழுதி விட்டேன். பிறகு யோசித்த போது ஏண்டாப்பு என்று எழுதலாம் என தோன்றியது - அது எத்தனை பேருக்கு புரியுமோ? அதை கு.சா அண்ணை கண்டு, காண்டு ஆனதும்…கொஞ்சம் விளையாடுவம் எண்டு செய்த குரங்கு சேட்டைதான் மேலே எழுதியது. நிச்சயம் ஆங்கில கலப்பை குறைக்க முயல்கிறேன். அது மட்டும் அல்ல, ஆஜர், வக்கீல், ஜரூர், இப்படியும் “பஞ்சியில்” எழுதிவிடுவதுண்டு. இனி கவனிக்கிறேன்.3 points
-
மேற்கின் புரொக்சியாக உக்ரேன் உள்ளதை ஏற்கிறேன். மேற்கின் புரொக்சியாக மட்டும் உக்ரேன் இந்த போரை நடத்துகிறது என்றால் நானும் இதே நிலையைதான் எடுப்பேன். ஆனால் அதையும்தாண்டி இங்கே ஒரு சிறிய தேசிய இனம், ஒரு அசுர பலம் கொண்ட பெரிய தேசிய இனத்திடம் இருந்து தன் இன, மொழி அடையாளத்தை, தனித்துவத்தை, தனது தலைவிதியை தானே தீர்மானிக்கும் அதிகாரத்தை காக்க போரிடுவதை காண்கிறேன். எனது பார்வையில் இது 87ம் ஆண்டு தலைவர் இந்தியாவுக்கு எதிராக செய்தது போல ஒரு அடங்காமை. தலைவர் அப்போ (இனத்தின் நலன் கருதி) அடங்கி போய் இருக்கலாம் என நான் இன்னும் கருதுகிறேன். காரணம் அப்போ தலைவர் பின்னால் எவரும் இருக்கவில்லை அவருடன் இருந்த போராளிகளை தவிர. ஆனால் ரஸ்யாவை விட பெரியவர்கள் எல்லாம் பின்னால் இருந்து ஊக்குவிக்கும் போது, இந்த சந்தர்பத்தை பாவித்து, உக்ரேனிய வாழ்வில் இருந்து, ஒட்டு மொத்தமாக ரஸ்யா என்கிற நிழலை அகற்றிவிடலாம் என உக்ரேனிய தேசியவாதிகள் நினைப்பது, Finlandization ற்கு உள்ளாகி ரஸ்யாவின் “ஆமாம் சாமி”யாக இருக்காமல் லித்யுவேனியா, லத்வியா போல சின்ன நாடு ஆனாலும், தன்மானத்தோடு, சுய ஆதிக்கத்தோடு வாழ முனைவது எனக்கு தப்பாக தெரியவில்லை. இது செலன்ஸ்கிக்கான வக்காளத்து இல்லை. அவர் பின்னால் உக்கிரமாக நிற்கும் சாதாரண உக்ரேனிய தேசியவாதிகளினதும், மக்களினதும் சுதந்திர வேட்கைகையை ஒரு தமிழனாக நான் புரிந்து கொள்வது.3 points
-
சூப்பர், என்னால் இப்பிடி எழுத முடியவில்லை. இந்த திரி ரஷ்யாவை சார்ந்து போவதால், எனது கருத்து. இந்த புடின் மீதான தனிப்பட்ட காதல், எவ்வளவு யோசித்தாலும் ஏனென்று புரியவில்லை. ரஷ்யாவின் வரலாறே அக்கம் பக்கம் உள்ள தேசிய இனங்களை விழுங்கி ரஸ்சியர்களை முன்னிலைப்படுத்தி இடங்களை பிடித்தல். நமக்கு மணலாறிலும், கிழக்கிலும் நடந்தது போல. புடின் அதிகாரத்ததுக்கு வந்த பின்னர் இது இன்னும் வேகமாக நடைபெறுகிறது. அங்கு நாங்கள் இவ்வளவு அடி வாங்கியபின்னரும், மற்றவனுக்கு நடக்கும்போது எப்பிடி சிரிக்க முடியுது. ரஷ்யாவின் பக்கத்தில் இருக்கும் நாடுகளுக்கு இருப்பது இரு தெரிவுகள்தான், ஒன்று ரஸ்சியாவிற்கு அடங்கி அவர்களின் சுயத்தை இழப்பது, அல்லது எதிர்த்து தங்கள் சுயத்தை பாதுகாப்பது. உக்கிரேன் ரஸ்சியாவிற்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என நினைப்பவர்கள், மறைமுகமாக எங்கள் போராட்டம் தவறு, நாங்களும் சிங்களவர்களுக்கு அடங்கி இருந்திருக்க வேண்டும் என்பதை ஆதரிப்பவர்கள். புடினின் மேலுள்ள காதல், உக்கிரைன் ரஸ்சியாவின் ஒரு பகுதி என்று சொல்லுமளவுக்கு வந்துள்ளது, இதை ரசிஷ்யர்களே எதிர்பார்க்க மாட்டார்கள். இந்த நாடுகள் எல்லாம் ஏன் நேட்டோவிற்கு ஓடுகிறார்கள் என்பதை ஊகிக்க ராக்கெட் சயின்ஸ் படித்திருக்க தேவையில்லை, அதேபோல் நேட்டோ ஏன் இவர்களை பாவிக்கிறார்கள் என்பதும் எல்லோருக்கும் தெரியும். ரஷ்யா நினைத்திருந்தால் அக்கம் பக்கத்து நாடுகளின் உரிமையை/சுயத்தை அங்கீகரித்து, அனுசரித்து பெரியண்ணன் ஆக இருந்திருக்கலாம், மேற்கு செய்வது இப்படித்தான், ஆனால் செய்ததோ பழைய ஸ்டைலில் பக்கத்து நாடுகளை பிடித்தல், அவர்களை கொத்திக்கலைத்து மற்றவனிடம் சேர்த்து விடுதல். இன்னுமொரு விளங்காத விஷயம், ரணிலுக்கு வாழ்த்து தெரிவித்ததால் எப்பிடிபுடின் நல்லவராகி விட்டார் என்று புரியவில்லை, யாரவது புரிகிறமாதிரி சொல்லுங்கள். "எமது" ஜனாதிபதியின் மேல் அவ்வளவு பாசமா எங்களுக்கு? பிகு: உங்கள் வசந்தகால விடுமுறை கிளுகிளுப்பாக போக வாழ்த்துக்கள்3 points
-
மேற்குலக/முதலாளித்துவ நாடுகளிலும் சமதர்ம மாற்றுக்கட்சிகள் உள்ளன என்பதை இங்கே அறியத்தருகின்றேன். இடையிடையே வரும் ஆங்கில சொற்களை முடிந்தால் தவிர்க்கவும். ஏனெனில் எனக்கு ஆங்கிலம் தெரியாது.அது மட்டுமல்லை யாழ்களம் தமிழ், தமிழ் சார்ந்த கருத்துக்களம் என நினைக்கின்றேன். காசு,பணம் இல்லாவிட்டாலும் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றார்கள். சூழல் சுற்றாடல் தூய்மையாக இருக்கின்றது.அசுத்தமான காற்றை அவர்கள் சுவாசிக்கவில்லை. மனிதவலுவை மதிக்கின்றார்கள். மேலைத்தேய நாடுகளில் காசு காசு என அலைந்து கடைசியில் சாப்பிடக்கூட முடியாமல் அலைகின்றார்கள்.3 points
-
3 points
-
எழுதிக்கொண்டிருக்கிறன். இன்டைக்கு ராவைக்கு அல்லது நாளைக்கு முடிச்சிடுவன்.3 points
-
உண்மைதான். இப்போ இலங்கையில் இருந்த நிலை போல் 90 இல் ரஸ்யா இருந்தது நினைவிருக்கலாம். இப்போ அங்கே இருக்கும் வளங்கள் அப்போதும் இருந்தது. அன்று மேற்கின் சந்தையில் அதை ரஸ்யா விற்க முதலான நிலமை. இனி வரப்போவது சந்தையில் விற்க முடியாத நிலைமை. எப்படி நீராவியின் காலம், நிலக்கரியின் காலம் முடிந்ததோ- அதே போல் நிலகீழ் எண்ணை/வாயுவின் காலமும் ஓவர். 2035 இல் ஜேர்ம்னி 100% நிலக்கீழ் எரிபொருளில் இருந்து விடுபடும் என்பது திட்டம். அதை செய்வதை ஜேர்மன் அரசுக்கு இன்னும் விரைவாக, இலகுவாக்கி உள்ளார் புட்டின். எனது அடுத்த கார் ஒன்றில் EV அல்லது PHEV தான். 2£க்கு டீசல் அடிக்க கட்டாது. இந்த மாற்றத்தை இனி அத்தனை ஐரோப்பிய நாட்டிலும் காண்போம். சவுதி, கட்டார், யுஏஇ போன்ற நாடுகள் அடுத்து பொருளாதாரத்தை எப்படி வளர்க்கலாம் என சிந்தித்து செயல்படுகிறன. குவைத், நைஜீரியா திட்டம் இல்லாமல் உள்ளன. ரஸ்யா - ஆயுத பலம் மூலம் ஏனைய நாடுகளை அடக்கி, சுரண்டி ஒரு நவகாலனிய முறையை உருவாக்கலாம் என முயல்கிறது. ஆனால் உண்மை என்னவென்றால் - பெலரூசை தவிர ஒரு அயல்நாடு கூட ரஸ்யாவிடம் கூட்டு சேர தயாரில்லை. அமெரிக்காவுக்கு பதில் சொல்ல போய் - இப்போ பிராந்திய ஆளுமையை துருக்கியிடமும், உலக ஆளுமையை சீனாவிடமும் விரைந்து இழக்கிறது ரஸ்யா.3 points
-
@ரஞ்சித் சிங்கள இனவாதம் தற்போது வயிற்றுப் பசியால் சற்றே பதுங்கி உள்ளது….3 points
-
3 points
-
பெளத்த மதவாதிகளாலேயே இலங்கையில் தமிழ்மக்கள் ஒரு இன அழிவைச் சந்தித்தார்கள். இலங்கை சிங்கள - பெளத்த நாடு எனும் கொள்கையினாலேயே மற்றைய இனங்களையும் மதங்களையும் அழிக்கலாம் என்கிற எண்ணக்கரு அவர்களுக்குப் பிறந்தது. தொடர்ந்தும் அந்த எண்ணக்கருவில் பயணிப்பதாலேயே மற்றைய இனங்கள் மீதும் மதங்கள் மீதும் சகிப்புத் தன்மையின்றி கற்காலத்து மிருகங்கள் போல வாழ அவர்களால் முடிகிறது. இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்குச் சற்றும் குறைந்ததல்ல இலங்கையின் பெளத்தம். மதவாதம் தலைக்கேறுவதால்த்தான் நாகரீகம் காணாமற்போகிறது. இந்தியாவில் நடப்பதும் இதுதான். இந்துமதத்திற்கும், அதன் குருக்களும் கொடுக்கப்படும் அதீத முக்கியத்துவம் ஏனைய மதங்கள் மீது இவர்களால் மிக இலகுவாக ஆக்கிரமிப்பையும், அக்கிரமங்களையும் செய்ய ஏதுவாகி விடுகிறது. இந்துக்களுக்கென்று தனியான நாடு தேவை என்று நாம் நினைத்தால், பெளத்தர்களுக்கென்றும் தனியான நாடு ஒன்று தேவை என்று சிங்கள பெளத்தர்கள் கூறுவதை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டிவரும். நூற்றாண்டுகளுக்கு முன்னர் மேற்குலகு கிறீஸ்த்தவ மதத்தினை முன்னிறுத்தியே அக்கிரமிப்புக்களைச் செய்தது, போர்களை நடத்தியதென்பதை நான் மறுக்கவில்லை. உண்மையும் அதுதான். சிலுவை யுத்தம் கிறீஸ்த்தவர்களால் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டதும் வரலாறு. ஆனால், இன்றைய போர்கள் மதத்தினால் தூண்டப்பட்டவையல்ல. பொருளாதார, அரசியல்க் காரணங்களுக்காகவே இன்றைய போர்கள் நடக்கின்றன. இரண்டாம் உலகப் போரில் போரிட்டவர்களில் ஜப்பானியர்களைத் தவிர மற்றைய எல்லோரும் கிறீஸ்த்தவர்களே. உக்ரேனும் ரஸ்ஸியாவும் ஒரே மதத்தையே பின்பற்றுகின்றன. மதத்தினைத் தூக்கிப் பிடிப்பதிலிருந்து மனித இனம் வெளியே வரவேண்டும். வேறு சொல்வதற்கில்லை.3 points
-
மூன்று தமிழர்கள்.. பிரதமர் பதவிக்கு, போட்டியிடுவது சிறப்பான விடயம். சம்பந்தனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் தான்... போட்டி இறுக்கமாக இருக்கும் போல் உள்ளது. சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியில் இருந்த, அனுபவம் கைகொடுக்கும் என்பதால்.... சம்பந்தனை ஏகமனதாக, பிரதமர் பதவியில் உட்கார வைப்பது நல்லது.3 points
-
3 points