Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டைகர் (Tiger)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

78907049.jpg

அப்பா மன்னாரில் இருந்த தன் வேலையிடத்தில் இருந்து ஒரு வார கால லீவோட யாழ்ப்பாணத்தில் இருந்த.. எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். வரும் போது.. வழமை போலவே.. இந்த முறை.. கருவாடு.. பாலைப்பழம்.. இதரை வாழைப்பழம்.. அப்பிள்.. ஜாம்.. பிஸ்கட்.. என்று எல்லாம் வாங்கி வந்திருந்தாரு. அதோட ஒரு சுமாரான அளவு காட்போட் பெட்டி.. அங்கும் இங்கும்.. சில தூவரங்களோட..!

அப்பா.. இதென்ன கோழிக்குஞ்சா.. சத்தமே வரேல்ல...??! நான்.. பெட்டியின் தோற்றத்தை பார்த்திட்டு.. கேட்டன்..

திறந்து பார்... அப்பா கட்டளையிட..

ஆவலோடு.. பெட்டியை திறக்க முயன்றன். ஆனால் முடியல்ல.....

விடு நானே திறந்து விடுறன். பெட்டியை திறக்க முடியாமல் நான் திணறுவதை பார்த்திட்டு அப்பாவே வந்த களைப்பு தீர முதல்.. திறந்துவிட்டார்.

பெட்டிக்குள் எட்டிப்பார்த்த எனக்கு.. ரெம்ப ஆச்சரியம்... அதுக்குள்ள ஒரு கியூட் பப்பி..! எப்படிப்பா.. இதைக் கொண்டு வந்தீங்க.. பெட்டியை திறந்ததும்.. அதுவும்.. பெட்டியை விட்டு துள்ளிப் பாய்ந்து வெளிய வர துடித்தது. நான் பெட்டியை சரிச்சு விட்டதும்.. அது வெளியே வந்து..சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. உடம்பை நீட்டி.. முறிவெடுத்தெட்டு.. ஏதோ ரெம்பப் பழகிய இடம்போல.. ஓடித் திரிந்திட்டு.. சுச்சா போயிட்டு.. என்னோட விளையாட ஆரம்பிச்சுது.

நானும்.. பதிலுக்கு அதுக்கு விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்தன்.. அதன் துடிப்பான விளையாட்டில்.. அதன் களைப்பு.. தெரிந்தது.

அதுக்கு கொஞ்சம் தண்ணி வை. வாற வழியில.. பிஸ்கட்டும் தண்ணியும் கொடுத்தனான் தான்.. இருந்தாலும்... இந்த வெக்கைக்கு.. களைச்சுப் போயிருக்கும்.... அப்பா கூறி முடிப்பதற்குள்ளேயே..

தண்ணியோடு வந்து நின்றன்.

அதுவும் தண்ணியை நக்கி குடிச்சிட்டு.. புது தெம்பு வந்தவராக.. ஓடி.. தூரம் போய்.. மறுபடி ஓடி வந்து என் பாதம் தொட்டு.. திரும்ப ஓடி.. தூரம் போய்.. இப்படி திரும்ப திரும்ப செய்து.. தன் மகிழ்ச்சியை இனங்காட்டிக் கொண்டிருந்தது.

இடையில ஏதோ ஒரு சிந்தனை எழ.. அப்பா.. எனி.. இது அதுன்ர தாயட்ட எப்படிப் போகும்..??!

அதுக்கு அவர்... அது அதின்ர தாய் நாயை விட்டு கன நாளைக்கு முன்னமே பிரிஞ்சிட்டுது. அது இப்ப தானே சாப்பிடும்... பால் வைச்சா குடிக்கும்.. நீ.. அதுக்காக கவலைப்படாத...

குட்டி நாய்க்கும் குழந்தைப் பிள்ளைக்கும் இடம் கொடுக்கக் கூடாது. போய் கை கால் முகம் கழுவிட்டு வந்து சாப்பிடடா. ஸ்கூல் தொடங்கப் போகுது... அவனுக்கு நாய்க்குட்டி வாங்கிக் கொண்டு வந்து கொடுத்தா.. அவன் எப்படிப் படிப்பான். ஏற்கனவே கோழிக்குஞ்சு.. கன்றுக்குட்டி.. ஆட்டுக்குட்டி என்று தூக்கிக் கொஞ்சிக்கிட்டு திரியுறான்..! புத்தகம் கையில எடுக்கிறான் இல்ல. அதுபோக.. போளும் கிரிக்கெட் பற்றும் தான்...

அப்பா இல்லாத நேரம்.. நான் செய்த குழப்படிகள் எல்லாத்தையும் ஒட்டுமொத்தமா சேர்த்து.. அம்மா முறையா பத்த வைச்சுக் கொண்டிருந்தா.

அப்பா.. நான்.. இந்த முறை முதலாம் பிள்ளை. கூட்டுத்தொகை 710 எட்டுப் பாடங்களுக்கு. இப்ப லீவு தானேப்பா.. இப்ப விளையாடாமல் எப்ப விளையாடுறது.. நான் பதிலுக்கு எந்தரப்பு நியாயத்தை முன் வைக்க..

அப்பா இடையில்... துணைவிக்கும்.. மகனுக்கும் இடையில்.. மாட்டிக் கொண்டாலும்.... சாதுரியமா என்னைக் கூப்பிட்டு அணைத்தபடி.. பதில் அளித்தார். அவன் முதலாம் பிள்ளையா வந்திருக்கிறான் தானே.. விளையாடுற வயசில விளையாடத்தானே வேணும். அதுக்காக ஒரே விளையாட்டா இருக்கப்படாது.. லீவு தாறது.. அடுத்த தவணைக்கு தயார்ப்படுத்திறத்துக்கும் தான். ஒவ்வொரு நாளும் காலையும் மாலையும் இரண்டு மணி நேரம் படிக்கனும்.. சரியே..!

ஓம்.. அப்பா... அப்பாவின் கன்னங்களில்.. முத்தம் தந்துவிட்டு.. அவரின் அன்பின் பிணைப்பில் இருந்து வெளிவந்த நான்.. மீண்டும் நாய்க்குட்டியோடு..

அழகான பிறவுண் கலர் நாய்க்குட்டி. வாலின் நுனியிலும்.. கால் பாதங்களிலும்.. கழுத்தின் கீழும் வெள்ளை நிறம். காதின் நுனியில்.. கறுப்பு. எனக்கு ரெம்பவே அதைப் பிடிச்சிருந்தது. அப்பா அப்பா.. இதுக்கு என்ன பெயர் வைக்கலாம்....

நீயே ஒன்றைச் சொல்லன் பார்ப்பம்..

ஜிம்மி....

அது இங்க எல்லா இடமும் வைக்கிற பெயர் தானே. அது வேண்டாம்... வேற...

நீங்களே சொல்லுங்கப்பா...

டைகர்.. என்று வை...!

அப்ப எல்லாம் டைகர் (Tiger) என்று சொல்லுறதே பெருமைக்குரிய விசயமாக இருந்திச்சு. ஏன்னா விடுதலைப்புலிகள் அமைப்பின் கட்டுக்கோப்பும்.. அவங்க மக்களோட பழகிற முறையில் இருந்த டிசிப்பிளினும் தான். நாங்க அங்க இருக்கும் வரை.. கடைசி வரை.. அவங்க அந்தப் பெயரை காத்திருந்தாங்க.. பல அவதூறுகளும்.. திட்டமிட்ட பழிப்புக்களுக்கும்.. பழி சுமத்தல்களுக்கும் மத்தியில..!

என் ரைகரும்.. வளர்ந்து 6 மாதம் இருக்கும்.. வீதியைக் கடக்க முயலேக்க.. ஒரு தனியார் பஸ் அடிச்சு இறந்திட்டுது..! மிகவும் கவலையாக கழிந்தன சில நாட்கள். அடிச்ச அந்த பஸ்ஸைக் காணும் போதெல்லாம்.. எமன் வருகுது என்று தான் அழைப்பேன்.

இறந்து போன டைகரை..எலும்மிச்சைக்க புதைக்கனும் என்று அம்மம்மா சொன்னாங்க.. நான் விடாமல்.. அதுக்கென்று ஞாபகம் வைக்கக் கூடிய ஒரு இடத்தில் புதைக்கச் சொன்னன்..

இறுதில... அப்பா என்ர விருப்பத்திற்கு.. புதைச்சு.. அந்த இடத்தில நாய் உருவம் பொதிச்ச கல்லும் வைச்சவர்.

அப்புறம்.. நாங்க இருந்த வீட்டையும்.... சிங்கள ஆக்கிரமிப்பில.. ஆமிக்காரங்கள்.. தங்கட தற்காலிக மினி முகாமிற்கு பாதுக்காப்பு வேணும் என்று.... 1995 இல் குண்டு வைச்சு தகர்த்திட்டாங்க. அதில சில வீடுகள் காட்டிக் கொடுக்கப்பட்டு தெரிஞ்சு உடைக்கப்பட்டிருந்தன. அப்படி உடைச்ச வீடுகளின் உடைஞ்ச கல்லுகளைக் கூட.. விற்று காசாக்கிட்டாங்க.. ஈபிடிபி ஆட்கள்..! என் ரைகருக்கு வைச்ச கல்லும்.. அதில விற்கப்பட்டிருக்குமோ.. என்னமோ..???! ஆனால் அம்மம்மா வைச்ச எலுமிச்சை மட்டும் இப்பவும்.. ஆக்கிரமிப்புக்கள்.. காட்டிக்கொடுப்புகள்.. குண்டுகள்.. கொள்ளையடிப்புக்களை எல்லாம் தாங்கி நிற்குதாம்..! அது இப்பவும் டைகரை நினைவு கூற வைக்குது..!

(இது ஒரு உண்மையின் தளவாடி விம்பம்..!)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைக்கு நன்றிகள், நெடுக்கர்!

நான் இவ்வளவு நாளும் நினைச்சன், நீங்கள் பெட்டையள் பக்கம் தலை வைச்சுப் படுக்காத ஒரு மனுசன் எண்டு!

பெட்டையை திறந்ததும்.. அதுவும்.. பெட்டையை விட்டு துள்ளிப் பாய்ந்து வெளிய வர துடித்தது. நான் பெட்டையை சரிச்சு விட்டதும்.. அது வெளியே வந்து..சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு.. உடம்பை நீட்டி.. முறிவெடுத்தெட்டு.. ஏதோ ரெம்பப் பழகிய இடம்போல.. ஓடித் திரிந்திட்டு.. சுச்சா போயிட்டு.. என்னோட விளையாட ஆரம்பிச்சுது

என்ன நடக்குது, இங்கை? யாரை நம்புறது, எண்டே தெரியேல்ல? :lol:

...

Edited by புங்கையூரன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதைக்கு நன்றிகள், நெடுக்கர்!

நான் இவ்வளவு நாளும் நினைச்சன், நீங்கள் பெட்டையள் பக்கம் தலை வைச்சுப் படுக்காத ஒரு மனுசன் எண்டு!

என்ன நடக்குது, இங்கை? யாரை நம்புறது, எண்டே தெரியேல்ல? :lol:

என் கண்களை எமாற்றிவிட்டு.. அந்தப் பெட்டைகள் என் கோட்டைக்குள் நுழைந்து விட்டார்கள். கண்டுபிடித்து தண்டித்துவிட்டேன்.

நன்றி புங்கையூரன்.. கருத்துக்கும்.. எழுத்துப் பிழைகளை இனங்காட்டியதற்கும்..! :D:)

என் வீட்டில் செல்லமாய் வளர்ந்த என் நண்பனின் பெயரும் டைகர்தான்!

நான் சாகும்வரை அவனை மறக்க முடியாது..! அவனை ஒரு ஐந்தறிவு ஜீவனாய் என்னால் பார்க்க முடியவில்லை. அந்த பெயருக்கு உரிய மகிமையோ என்னவோ அவனின் செயல் அப்படி. என் உயிரையே ஒருதடவை காப்பாற்றி இருக்கிறான்!

இயல்பாய் ஒரு கதையை எழுதியிருக்கின்றீர்கள். நல்லாயிருக்கு நெடுக்ஸ்! :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என் வீட்டில் செல்லமாய் வளர்ந்த என் நண்பனின் பெயரும் டைகர்தான்!

நான் சாகும்வரை அவனை மறக்க முடியாது..! அவனை ஒரு ஐந்தறிவு ஜீவனாய் என்னால் பார்க்க முடியவில்லை. அந்த பெயருக்கு உரிய மகிமையோ என்னவோ அவனின் செயல் அப்படி. என் உயிரையே ஒருதடவை காப்பாற்றி இருக்கிறான்!

இயல்பாய் ஒரு கதையை எழுதியிருக்கின்றீர்கள். நல்லாயிருக்கு நெடுக்ஸ்! :)

என் கதை உங்களின் நினைவலைகளையும் தூண்டி விட்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி..! ஆறறிவு ஜீவன்கள் காட்டாத செய்நன்றியை ஐந்தறிவு ஜீவன்கள் காட்டியது அதிகம். என் வாழ்விலும்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்...அப்பா முடியல :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இந்த ரைகர் பற்றி ஒன்று எழுதணும்

ஆனால் அது விசுகு அண்ணா பற்றி வேறொரு பக்கத்தைச்சொல்லிவிடும்.

வேண்டாம்.

எங்கட வீட்டிலும் 2 ஐந்தறிவு ஜீவன்கள் பல வருடங்களாக இருந்ததன... யாரையுமே கேற்றைத் தாண்டி வரவிடாது. ஒரு தடவை எங்கள் பங்குப் பாதிரியார் மோட்டார் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார், அவரின் மேலங்கியை ஒரு பதம் பார்த்திட்டுது... 'ஆமியின் செலடிக்குத் தப்பி வந்து உங்கட நாயிற்ற மாட்டுப்பட்டுப் போனேன்' என்று சொல்லி சிரிப்பார் :D

சாதாரண நடையில் எழுதிய உங்கள் சிறுகதை நன்றாக உள்ளது, நேரத்திற்கும் பகிர்விற்கும் நன்றி நெடுக்ஸ் :)

Edited by குட்டி

நானொரு நாய்ப் பிரியன். எனக்கு அவர்கள் எல்லாம் தம்பி மாதிரி. சிறுவயதிலிருந்து ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு நாய்களாவது வளர்த்திருக்கிறேன். கடைசியாக இருந்தவனின் பெயர் 'டைகர்' மிகப் புத்திசாலி. நான் விரும்பி வைத்த பெயர். வீட்டிலோ வெளியிலோ என்னோடுதான் திரிவான். நான் வீட்டை விட்டு வெளிக்கிட்ட பின் சாப்பிடாமலும் எனது அறைக்குள்ளே படுப்பதாகவும் அப்பா எழுதியிருந்தார். இந்தக் கதையை வாசித்த பின் அவன் ஞாபகம்தான் வந்தது.

என் கண்களை எமாற்றிவிட்டு.. அந்தப் பெட்டைகள் என் கோட்டைக்குள் நுழைந்து விட்டார்கள். கண்டுபிடித்து தண்டித்துவிட்டேன்.

நல்ல காலம் தப்பிட்டீன்கள். இந்த வரிகளில் ஒரு எழுத்தை கோட்டை விட்டிருந்தால் நாத்தியிருப்பார்கள். :(:D

Edited by தப்பிலி

ஊரில இருக்கும் போது பல விடயங்களின் அருமை தெரியவில்லை ,வயதும் அப்படி .இப்போ பல விடயங்களை நினைத்து மிஸ் பண்ணிவிட்டோமே என ஏங்குகின்றோம்.

நன்றி உங்களின் நினைவு பகிர்விற்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்...அப்பா முடியல :lol: :lol: :lol:

என்ன சொல்ல.. ஒரு தலைவலி மாத்திரை எடுங்க.. எல்லாம் சரியாகிடும். :lol::D

நானும் இந்த ரைகர் பற்றி ஒன்று எழுதணும்

ஆனால் அது விசுகு அண்ணா பற்றி வேறொரு பக்கத்தைச்சொல்லிவிடும்.

வேண்டாம்.

ஏன் விசுகு அண்ணா.. நீங்கள் சேர்கஸ் (circus) வைச்சிருந்தனீங்களோ... இல்ல நிஜ டைகரே வளர்த்ததா சொல்லுறாப் போல சொல்லுறீங்க..! (ஜோக்ஸ்) :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எங்கட வீட்டிலும் 2 ஐந்தறிவு ஜீவன்கள் பல வருடங்களாக இருந்ததன... யாரையுமே கேற்றைத் தாண்டி வரவிடாது. ஒரு தடவை எங்கள் பங்குப் பாதிரியார் மோட்டார் சைக்கிளில் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார், அவரின் மேலங்கியை ஒரு பதம் பார்த்திட்டுது... 'ஆமியின் செலடிக்குத் தப்பி வந்து உங்கட நாயிற்ற மாட்டுப்பட்டுப் போனேன்' என்று சொல்லி சிரிப்பார் :D

சாதாரண நடையில் எழுதிய உங்கள் சிறுகதை நன்றாக உள்ளது, நேரத்திற்கும் பகிர்விற்கும் நன்றி நெடுக்ஸ் :)

நானொரு நாய்ப் பிரியன். எனக்கு அவர்கள் எல்லாம் தம்பி மாதிரி. சிறுவயதிலிருந்து ஒரே நேரத்தில் குறைந்தது இரண்டு நாய்களாவது வளர்த்திருக்கிறேன். கடைசியாக இருந்தவனின் பெயர் 'டைகர்' மிகப் புத்திசாலி. நான் விரும்பி வைத்த பெயர். வீட்டிலோ வெளியிலோ என்னோடுதான் திரிவான். நான் வீட்டை விட்டு வெளிக்கிட்ட பின் சாப்பிடாமலும் எனது அறைக்குள்ளே படுப்பதாகவும் அப்பா எழுதியிருந்தார். இந்தக் கதையை வாசித்த பின் அவன் ஞாபகம்தான் வந்தது.

நல்ல காலம் தப்பிட்டீன்கள். இந்த வரிகளில் ஒரு எழுத்தை கோட்டை விட்டிருந்தால் நாத்தியிருப்பார்கள். :D

குட்டி.. தப்பிலி.. உங்கள் இருவரின் பழைய நினைவுகளைக் கிளறி.. அனுபவப் பகிர்வை தந்ததையிட்டு மகிழ்ச்சி..! :)

ஊரில இருக்கும் போது பல விடயங்களின் அருமை தெரியவில்லை ,வயதும் அப்படி .இப்போ பல விடயங்களை நினைத்து மிஸ் பண்ணிவிட்டோமே என ஏங்குகின்றோம்.

நன்றி உங்களின் நினைவு பகிர்விற்கு.

காலத்தே செய்யாத பயிர்.. போன்று ஆச்சே அண்ணா. கவலைப்படாதேங்கோ.. கூடாத கூட்டங்கள்.. அப்படி செய்திட்டு. இப்பவாவது நல்ல கூட்டங்களோட கூடுறது தான்.. அப்புறம் இன்னும் கொஞ்சக் காலத்தால இன்றையதை மிஸ் பண்ணாமல் இருக்க உதவும்..! அது தான் யாழில இணைஞ்சு.. நின்று பிடிக்கிறீங்கல்ல. நிச்சயம்..திருந்திடுவீங்க..! எனி அதிகம் மிஸ் பண்ணிறதா பீல் பண்ண மாட்டீங்க. (சும்மா ஜோக்ஸ் தான்.. இருந்தாலும்... பொருந்தலாம்.) :)

கருத்துப் பகிர்விற்கு நன்றி.! :)

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ ஜிம்மி

பிள்ளை பெயரோ.. ஜம்மி..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் ரதி எனும் உறுப்பினர் மிகவும் விரக்த்தியடைந்த மனநிலையுடையவராக பதிலிடுகை இடுபவர்போல் காணப்படுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் களத்தில் ரதி எனும் உறுப்பினர் மிகவும் விரக்த்தியடைந்த மனநிலையுடையவராக பதிலிடுகை இடுபவர்போல் காணப்படுகிறார்.

தயவு செய்து "ரதி" விரக்தி அடைந்த மனநிலையில் எழுதிய பதிவுகளை காட்டவும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.