Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பொதுவறிவுப் போட்டி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துட்டகைமுனுவுடன் போரிடுவதற்காக எல்லாளன் ஏறி வந்த யானையின் பெயர் என்ன?

 

மகாபர்வதம் :D

  • Replies 4.5k
  • Views 397.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

மகாபர்வதம் :D

மிகச் சரியான பதில்

 

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

**********


போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

 

சங்கிலியன் .
 

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

போர்த்துக்கல் மதகுருவான பிரான்ஸிஸ் சவேரியாரையும் அவரால் மதம் மாற்றப்பட்ட 600 பேரையும் சிரச்சேதம் செய்த தமிழ் மன்னன் யார்?

தன்கட்டளையை மீறி மதம் மாறிய 600 மன்னார் வாசிகளைச்  

சங்கிலிய மன்னன் கொன்றது என்ற தகவல் சரி

 

ஆனால் மகா குருவான சவேரியரைக் கொல்லவில்லை

அவர் கொலை நடந்தபோது இந்தியாவில் தூத்துக்குடியில் இருந்தார்

அவருடைய ஒரு மதகுருவே இந்தியாவில் இருந்து வந்து

இந்த 600 பேரையும் மதம் மாற்றினார்.

 

அவர் தப்பிச் சென்று சவேரியருக்கு அறிவித்த பின்னர் தான்

சவேரியர் மன்னார் வந்து சங்கிலியனுடன் சமாதானம்

பேச முயற்சித்துத் தோல்வி கண்டு நாட்டை விட்டுவெளியேறிச்

சீனா சென்று அங்கு மரணித்தார்

  • தொடங்கியவர்

**********

 

சங்கிலியன் .

 

மிகவும் சரியான பதில்

 

கோமகனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

தன்கட்டளையை மீறி மதம் மாறிய 600 மன்னார் வாசிகளைச்  

சங்கிலிய மன்னன் கொன்றது என்ற தகவல் சரி

 

ஆனால் மகா குருவான சவேரியரைக் கொல்லவில்லை

அவர் கொலை நடந்தபோது இந்தியாவில் தூத்துக்குடியில் இருந்தார்

அவருடைய ஒரு மதகுருவே இந்தியாவில் இருந்து வந்து

இந்த 600 பேரையும் மதம் மாற்றினார்.

 

அவர் தப்பிச் சென்று சவேரியருக்கு அறிவித்த பின்னர் தான்

சவேரியர் மன்னார் வந்து சங்கிலியனுடன் சமாதானம்

பேச முயற்சித்துத் தோல்வி கண்டு நாட்டை விட்டுவெளியேறிச்

சீனா சென்று அங்கு மரணித்தார்

தகவலிற்கு நன்றி வாத்தியார்

 

நான் பார்த்த புத்தகத்தில் இவ்வாறு எழுதப்பட்டிருந்தது எனவே என் தரப்புத் தவறிற்காக மனம் வருந்துகின்றேன்

 

வாழ்க வளமுடன்

மாவிட்டபுரம் கோயிலின் முதல் பூசகரின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

மாவிட்டபுரம் கோயிலின் முதல் பூசகரின் பெயர் என்ன?

 

பெரிய மனத்துள்ளார்

  • தொடங்கியவர்

பெரிய மனத்துள்ளார்

மிகவும் சரியான பதில்

 

யாழ் வாலிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

தங்களின் ஆர்வம் எனக்கும் உற்சாகத்தைத் தருகின்றது

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

சப்த தீவுகளில் ஒன்றான எழுவைதீவிற்குக் கந்தபுராணத்தில் கூறப்படும் பெயர் என்ன?

சப்த தீவுகளில் ஒன்றான எழுவைதீவிற்குக் கந்தபுராணத்தில் கூறப்படும் பெயர் என்ன?

 

     இலவு

 

 

  • தொடங்கியவர்

     இலவு

மிகவும் சரியான பதில்

 

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

இந்தியாவில் முழு நிலவு நாளில் சூரியனின் அஸ்தமனமும் நிலவின் உதயமும் ஒரே நேரத்தில் நிகழும் அற்புதமான காட்சியைக்

 

காணக்கூடிய இடம் எது?

  • கருத்துக்கள உறவுகள்

கன்னியாகுமரி??

  • தொடங்கியவர்

கன்னியாகுமரி??

ஏன் வினாக்குறி?

 

மிகவும் சரியான பதில்

 

இசைக்கலைஞனுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

சிவபெருமானுக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சண்டையையும் அருச்சுனன் மிக வலிமை வாய்ந்த பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற விதத்தையும் விபரிக்கும் நூலின் பெயர் என்ன?

Edited by Puyal

  • தொடங்கியவர்

சிவபெருமானுக்கும் அருச்சுனனுக்கும் நடந்த சண்டையையும் அருச்சுனன் மிக வலிமை வாய்ந்த பாசுபதாஸ்திரத்தைப் பெற்ற விதத்தையும் விபரிக்கும் நூலின் பெயர் என்ன?

கிராதார்ஜுனீயம்

  • தொடங்கியவர்

உலகிலேயே வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?

உலகிலேயே வரலாற்று ஆசிரியர்களின் சொர்க்கம் என அழைக்கப்படும் நாடு எது?

சீனா

  • தொடங்கியவர்

சீனா

மிகவும் சரியான பதில்

 

தமிழினிக்குச் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்.

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆற்றிடைக்குறை என அழைக்கப்பட்ட நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை

தமிழ் இலக்கிய வரலாற்றில் ஆற்றிடைக்குறை என அழைக்கப்பட்ட நாடு எது?

 

இலங்கை

 

  • தொடங்கியவர்

மிகவும் சரியான பதில்

 

நுணாவிலானுக்கும் தமிழினிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்

 

வாழ்க வளமுடன்

  • தொடங்கியவர்

வரலாறு என்னை விடுதலை செய்யும் எனக் கூறிய புரட்சியாளனின் பெயர் என்ன?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிடல் காஸ்ரோ. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சேகுவாரா. :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.