Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தந்தை செல்வா நினைவு நிகழ்வில் இராசதுரை! கறுப்புக்கொடி காட்டினார் சிவாஜிலிங்கம்! (காணொளி) (படம்)

Featured Replies

யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

“முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்” என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

“தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்” என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

http://thaaitamil.com/?p=17072

சிவாஜிலிங்கத்துக்கு ஓர் சபாஸ் ... சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிச் சென்றதற்கு!

... இன்று சந்திரகாசன், இராஜதுரை என்ற காலா காலமாக ... ஆயுதப்போராட்டத்துக்கு முன்னமே ... தமிழினத்தை பதவிகளுக்காக காட்டிக் கொடுத்த துரோகிகளை ... இன்று சம்பந்தர்/சுமந்திரன் தலைமை ... தமிழினத்தின் தலைவர்களாக காட்ட நிற்கின்றது! ... கேவலம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

sellaiyairajathurai.jpg

கொஞ்சம்கொஞ்சமாய் சுடுகாட்டிலை சில்லறைக்காசு பொறுக்குற கூட்டங்கள் வெளிக்கிட்டுட்டுதுகள்.உவ்வளவு சனம் அழியேக்கையும் வாயை திறந்தாங்களா பாவியள்? அதுசரி இவர்கள் குத்துக்கரண திலகங்கள் அல்லவா....

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. இந்த ஜந்து இன்னும் உயிர் வாழுதா..??! இவர்களை எல்லாம் எதற்கு முன்னிலைப்படுத்துகிறார்கள். அப்பாவி தமிழ் மக்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டதைக் கூட பாராளுமன்றில் எடுத்துரைக்க தயங்கிய ஒரு ஜந்து இவர். அந்தப் பணியை மிகப் பெரிய உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் செய்தவர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள். இவர் ஒரு சிங்களப் பெருந்தேசிய.. பேரினவாத அடிவருடி..!

சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் மக்களின் உணர்வை கொஞ்சம் என்றாலும் பிரதிபலிக்கின்ற தமிழர்கள் சிறீலங்காவில் இருப்பதை இட்டு மகிழ்ச்சி. இன்றை சந்தர்ப்பவாத அரசியல் சூழ்நிலையில் இவரும் எவ்வளவு காலம் தான் நின்று பிடிக்கப் போறாரோ என்பது தான் எதிர்வு கூற முடியாது இருக்கிற விடயம்..! அந்த வகையில்.. இப்போதைக்கு சிவாஜிலிங்கத்தின் இந்தச் செயலை வரவேற்கலாம். :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் புத்துக்கிள்லாளை ....நல்ல பாம்புகள் வெளிக்கிடுகுது போல கிடக்கு.....எல்லாருக்கும் ..பச்சை கிடைக்குது போலை....

ராஜதுரையை விட சிவாஜிலிங்கம் கேவலமான பிறப்பு .

அமிர்தலிங்கம் செய்த துரோகம் தான் ராஜதுரை பிரிந்தது .

ஆனால் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பை விட்டு தனித்து தேர்தலில் நின்றது தேசியம் என்ற போர்வையில் தமது பலத்தை பிரயோகித்து பார்த்தது, முடியவில்லை .

அதை கூட மன்னிக்கலாம் ஆனால் பருப்பு வேகாமல் திரும்ப கூ ட்டமைப்பு வந்ததை மன்னிக்கவே முடியாது .

ஒரு நா----- யும் சுத்தமான பேர்வளிகளல்ல.இருபத்திநாலு கரட் தங்கமுமில்லை -சொன்னவர் கூட்டமைப்பு எம். பி .

அடுத்த வருடம் அரசாங்கம் தான் கொண்டாடத்தை கையில் எடுக்க நினைக்குதோ தெரியவில்லை. அதனால்தான் இந்த ஆளுகளை இதற்குள் திணிக்கிறது போலிருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் இன்னும் இருக்கா?எங்கை போனது இவ்வளவு நாளும்.இதெல்லாம் தற்போதைய தேசியத் தலைவர் சம்பந்தனின் அரசியல் தீர்க்கதரிசனம்தான்.வெளியே போன ஆனந்தசங்கரியை உள்ளே இழுத்தத 4ட்டமைப்பு .சிவாஜிலிங்கத்தை வெளியில் விட்டால் வல்வெட்டித்துறை நகரசபையை வெல்ல முடியாது என்று திரும்பவும் அவரைச் சேரத்தது கூட்டமைப்பு அர்சுன் அவர்கள் வரலாறு தெரியாமல் எழுதுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்

இராசதுரை செத்து விட்டார் என்று நினைத்திருந்தேன். அட... இவ்வளவு நாளும் பேச்சு, மூச்சு இல்லாமல்... கோமாவில் இருந்தவரா?

தனது எதிர்ப்பைக் காட்டிய சிவாஜிலிங்கத்துக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜதுரையை விட சிவாஜிலிங்கம் கேவலமான பிறப்பு .

அமிர்தலிங்கம் செய்த துரோகம் தான் ராஜதுரை பிரிந்தது .

ஆனால் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பை விட்டு தனித்து தேர்தலில் நின்றது தேசியம் என்ற போர்வையில் தமது பலத்தை பிரயோகித்து பார்த்தது, முடியவில்லை .

அதை கூட மன்னிக்கலாம் ஆனால் பருப்பு வேகாமல் திரும்ப கூ ட்டமைப்பு வந்ததை மன்னிக்கவே முடியாது .

ஒரு நா----- யும் சுத்தமான பேர்வளிகளல்ல.இருபத்திநாலு கரட் தங்கமுமில்லை -சொன்னவர் கூட்டமைப்பு எம். பி .

ஏற்கனவே மங்கையற்கரசி அக்கா விசயத்திலை இரண்டுபேருக்கும் பயங்கர கறளாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மங்கையற்கரசி அக்கா விசயத்திலை இரண்டுபேருக்கும் பயங்கர கறளாம்.

தன்ரை புருசன் அமிர்தலிங்கத்தை விட, இராசதுரையில்.... மங்கைக்கு ஒரு கண் இருந்தது எண்டு,

நானும்... இந்த விசயத்தை, சொல்லி அரசல் புரசலாக கேள்விப்பட்டனான்.

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்து வயிறு பிழைக்க திரியுது ஒரு கூட்டம்.

இவங்கள் எல்லாருடைய அரசியல் வாழக்கையும் முடிவுக்கு கொண்டுவரப்பவேண்டும்.

போராட்டத்துக்கு முன்னமும் இந்தக் கூட்டம்தான் அரசால் செய்து எங்களை வெறுமையாக்கியது.

போராட்டம் மௌனித்த பின் அதேகூட்டம் திரும்ப வந்தருக்கு.

புனித மண்ணில் கால் வைக்கத் தகுதியில்லாத சொறி ஓநாய்கள் எல்லாம் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் அனுசரணையில் உலாவுது.

உப்பிடியே சுத்திக்கொண்டிருந்தால் உதுகளுக்கு நேரம் சரியில்லாமல் போய்விடும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.