Jump to content

தந்தை செல்வா நினைவு நிகழ்வில் இராசதுரை! கறுப்புக்கொடி காட்டினார் சிவாஜிலிங்கம்! (காணொளி) (படம்)


Recommended Posts

யாழ்ப்பாணத்தில் மூதறிஞர் தந்தை செல்வாவின் நினைவு தினம் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செல்லையா இராஜதுரை உரையாற்றுவதற்கு ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவு தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கறுப்பு கொடிகாட்டி எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.யாழிலுள்ள தந்தை செல்வநாயகத்தின் நினைவு சதுக்கத்தில் இந்த நினைவு தினம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதன்போதே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எதிர்புப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

சிவாஜிலிங்கம் தனது கறுப்பு கொடி எதிர்ப்பின் போது, “தமிழ் தேசிய துரோகி இராஜதுரையை வெயேற்று எனவும் மட்டக்களப்பு துரோகி, அரசின் அடிவருடி, துரோகியை வெளியேற்ற வேண்டும்” என போராட்டத்தில் ஈடுபட்டார்.

இதன்போது தந்தை செல்வாவின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. இதனையடுத்து நினைவுக் கூட்டத்திலிருந்து வெளியேறிய சிவாஜிலிங்கம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கும் போது,

“முன்னாள் அமைச்சராக இருந்த இராஜதுரை தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு அரசில் இணைந்து அமைச்சரானவர். பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு ஆதரவளித்து தமிழ் இளைஞர்களை சிறையில் தள்ளியவர். இந்த புனிதமான மண்ணில் இவரை கால் வைக்க விடமாட்டேன்” என்றார்.

எவ்வாறாயினும், சற்று நேரத்திற்கு பின்னர் தந்தை செல்வநாயகத்தின் நினைவுக் கூட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதில் செல்லையா இராஜதுரை உரையாற்றும் போது,

“தந்தை செல்வா ஒரு அரசியல் பாடப்புத்தகம், அவர் தமிழ் மக்கள் பிரிந்து வாழ்வதை விரும்பாத ஒருவர். வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் உணர்வுகளில் கலந்துவிட்டு காலத்தால் அழிக்க முடியாத ஒருவர்” என்றார்.

இந்நிகழ்வில் தந்தை செல்வாவின் புதல்வர் சத்தியதாசன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சோலமேன் சிறில், தென்னிந்திய திருச்சபையின் முன்னாள் பேராயர் ஜெபநேசன் அடிகளார், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

http://thaaitamil.com/?p=17072

Link to comment
Share on other sites

சிவாஜிலிங்கத்துக்கு ஓர் சபாஸ் ... சொல்ல வேண்டியதை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லிச் சென்றதற்கு!

... இன்று சந்திரகாசன், இராஜதுரை என்ற காலா காலமாக ... ஆயுதப்போராட்டத்துக்கு முன்னமே ... தமிழினத்தை பதவிகளுக்காக காட்டிக் கொடுத்த துரோகிகளை ... இன்று சம்பந்தர்/சுமந்திரன் தலைமை ... தமிழினத்தின் தலைவர்களாக காட்ட நிற்கின்றது! ... கேவலம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

sellaiyairajathurai.jpg

கொஞ்சம்கொஞ்சமாய் சுடுகாட்டிலை சில்லறைக்காசு பொறுக்குற கூட்டங்கள் வெளிக்கிட்டுட்டுதுகள்.உவ்வளவு சனம் அழியேக்கையும் வாயை திறந்தாங்களா பாவியள்? அதுசரி இவர்கள் குத்துக்கரண திலகங்கள் அல்லவா....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ.. இந்த ஜந்து இன்னும் உயிர் வாழுதா..??! இவர்களை எல்லாம் எதற்கு முன்னிலைப்படுத்துகிறார்கள். அப்பாவி தமிழ் மக்கள் சிங்களப் படைகளால் கொல்லப்பட்டதைக் கூட பாராளுமன்றில் எடுத்துரைக்க தயங்கிய ஒரு ஜந்து இவர். அந்தப் பணியை மிகப் பெரிய உயிர் அச்சுறுத்தல்கள் மத்தியிலும் செய்தவர் அமரர் ஜோசப் பரராஜசிங்கம் ஐயா அவர்கள். இவர் ஒரு சிங்களப் பெருந்தேசிய.. பேரினவாத அடிவருடி..!

சிவாஜிலிங்கம் போன்ற தமிழ் மக்களின் உணர்வை கொஞ்சம் என்றாலும் பிரதிபலிக்கின்ற தமிழர்கள் சிறீலங்காவில் இருப்பதை இட்டு மகிழ்ச்சி. இன்றை சந்தர்ப்பவாத அரசியல் சூழ்நிலையில் இவரும் எவ்வளவு காலம் தான் நின்று பிடிக்கப் போறாரோ என்பது தான் எதிர்வு கூற முடியாது இருக்கிற விடயம்..! அந்த வகையில்.. இப்போதைக்கு சிவாஜிலிங்கத்தின் இந்தச் செயலை வரவேற்கலாம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கறையான் புத்துக்கிள்லாளை ....நல்ல பாம்புகள் வெளிக்கிடுகுது போல கிடக்கு.....எல்லாருக்கும் ..பச்சை கிடைக்குது போலை....

Link to comment
Share on other sites

ராஜதுரையை விட சிவாஜிலிங்கம் கேவலமான பிறப்பு .

அமிர்தலிங்கம் செய்த துரோகம் தான் ராஜதுரை பிரிந்தது .

ஆனால் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பை விட்டு தனித்து தேர்தலில் நின்றது தேசியம் என்ற போர்வையில் தமது பலத்தை பிரயோகித்து பார்த்தது, முடியவில்லை .

அதை கூட மன்னிக்கலாம் ஆனால் பருப்பு வேகாமல் திரும்ப கூ ட்டமைப்பு வந்ததை மன்னிக்கவே முடியாது .

ஒரு நா----- யும் சுத்தமான பேர்வளிகளல்ல.இருபத்திநாலு கரட் தங்கமுமில்லை -சொன்னவர் கூட்டமைப்பு எம். பி .

Link to comment
Share on other sites

அடுத்த வருடம் அரசாங்கம் தான் கொண்டாடத்தை கையில் எடுக்க நினைக்குதோ தெரியவில்லை. அதனால்தான் இந்த ஆளுகளை இதற்குள் திணிக்கிறது போலிருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆள் இன்னும் இருக்கா?எங்கை போனது இவ்வளவு நாளும்.இதெல்லாம் தற்போதைய தேசியத் தலைவர் சம்பந்தனின் அரசியல் தீர்க்கதரிசனம்தான்.வெளியே போன ஆனந்தசங்கரியை உள்ளே இழுத்தத 4ட்டமைப்பு .சிவாஜிலிங்கத்தை வெளியில் விட்டால் வல்வெட்டித்துறை நகரசபையை வெல்ல முடியாது என்று திரும்பவும் அவரைச் சேரத்தது கூட்டமைப்பு அர்சுன் அவர்கள் வரலாறு தெரியாமல் எழுதுகிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இராசதுரை செத்து விட்டார் என்று நினைத்திருந்தேன். அட... இவ்வளவு நாளும் பேச்சு, மூச்சு இல்லாமல்... கோமாவில் இருந்தவரா?

தனது எதிர்ப்பைக் காட்டிய சிவாஜிலிங்கத்துக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜதுரையை விட சிவாஜிலிங்கம் கேவலமான பிறப்பு .

அமிர்தலிங்கம் செய்த துரோகம் தான் ராஜதுரை பிரிந்தது .

ஆனால் சிவாஜிலிங்கம் கூட்டமைப்பை விட்டு தனித்து தேர்தலில் நின்றது தேசியம் என்ற போர்வையில் தமது பலத்தை பிரயோகித்து பார்த்தது, முடியவில்லை .

அதை கூட மன்னிக்கலாம் ஆனால் பருப்பு வேகாமல் திரும்ப கூ ட்டமைப்பு வந்ததை மன்னிக்கவே முடியாது .

ஒரு நா----- யும் சுத்தமான பேர்வளிகளல்ல.இருபத்திநாலு கரட் தங்கமுமில்லை -சொன்னவர் கூட்டமைப்பு எம். பி .

ஏற்கனவே மங்கையற்கரசி அக்கா விசயத்திலை இரண்டுபேருக்கும் பயங்கர கறளாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே மங்கையற்கரசி அக்கா விசயத்திலை இரண்டுபேருக்கும் பயங்கர கறளாம்.

தன்ரை புருசன் அமிர்தலிங்கத்தை விட, இராசதுரையில்.... மங்கைக்கு ஒரு கண் இருந்தது எண்டு,

நானும்... இந்த விசயத்தை, சொல்லி அரசல் புரசலாக கேள்விப்பட்டனான்.

Link to comment
Share on other sites

ஆயிரம் ஆயிரம் மாவீரர்களின் தியாகத்தில் அரசியல் செய்து வயிறு பிழைக்க திரியுது ஒரு கூட்டம்.

இவங்கள் எல்லாருடைய அரசியல் வாழக்கையும் முடிவுக்கு கொண்டுவரப்பவேண்டும்.

போராட்டத்துக்கு முன்னமும் இந்தக் கூட்டம்தான் அரசால் செய்து எங்களை வெறுமையாக்கியது.

போராட்டம் மௌனித்த பின் அதேகூட்டம் திரும்ப வந்தருக்கு.

Link to comment
Share on other sites

புனித மண்ணில் கால் வைக்கத் தகுதியில்லாத சொறி ஓநாய்கள் எல்லாம் ஹிந்திய காட்டுமிராண்டி ஜனநாயகவாதிகளின் அனுசரணையில் உலாவுது.

உப்பிடியே சுத்திக்கொண்டிருந்தால் உதுகளுக்கு நேரம் சரியில்லாமல் போய்விடும்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதற்கான வேலையில் இந்தியா ஏற்கனவே இறங்கிவிட்டது.
    • "தேயாதே வெண்ணிலவே"     முன்னொரு காலத்தில், மலைகளுக்கு மத்தியில் அமைந்திருந்த ஒரு விசித்திரமான கிராமத்தில், அல்லி என்ற இளம் பெண் வசித்து வந்தாள். இந்த கிராமம் அதன் வளமான நாட்டுப்புறக் கதைகளுக்கும், தலைமுறை தலைமுறையாகக் கடந்து வந்த வசீகரிக்கும் புராண கதைகளுக்கும் பெயர் பெற்றது. அத்தகைய ஒரு புராணக்கதை ஒன்று "தேயாதே வெண்ணிலவே" என்பதைப் பற்றிப் பேசியது, இது சந்திரன் அதன் வழக்கமான குறைந்து வரும் கட்டத்தை எதிர்க்கும் ஒரு மாயாஜால நிகழ்வாகும்.   அல்லி, ஆர்வமுள்ள, சாகச மற்றும் அழகான இளம் பெண்ணாகும், குழந்தை பருவத்தில் இருந்தே தன் தாயிடமும் மற்றும் மூத்தவர்களிடமும் இருந்து இந்த வசீகரிக்கும் கதையைக் கேட்டு வளர்ந்தாள். தேயாத வெண்ணிலவை ஒரு முறையாவது தான் பார்க்க வேண்டும் என்று அவள் கனவு கண்டாள். பலர் அதை கற்பனையான கட்டுக்கதை என்று கருதினாலும். மற்றவர்களின் சந்தேகத்திற்கு ஆளாகாமல், புராணத்தின் பின்னால் உள்ள மர்மத்தை அவிழ்க்கும் தேடலை அவள் தொடங்கினாள்.   அல்லி கிராமப் பெரியவர்களைக் கலந்தாலோசித்தார், அவர்கள் 'சந்திரன் மறையாதே' என்று பேசும் பண்டைய நூல்களின் குறிப்புகளை அவளுடன் பகிர்ந்து கொண்டனர். என்றாலும் சந்திரன் மறைய மறுப்பது வரவிருக்கும் அழிவின் அறிகுறி என்று நூல்கள் சுட்டிக்காட்டின. எனவே பேரழிவு நிகழ்வுகள் குறித்து அவர்கள் எச்சரித்ததுடன் அப்படியான ஒரு நிகழ்வு என்றும் நடக்கக்கூடாது என்றும் வலியுறுத்தினர்.   எது எப்படியாகினும் அல்லி தனது உறுதியால் உந்தப்பட்டு, தனது ஆராய்ச்சியில் ஆழ்ந்தார். வானியல் நிகழ்வுகளைப் பற்றி தனது கிராமத்தில் உள்ள நூலகத்தில் பண்டைய நூல்களில், புராணங்களில் எழுதிய பல பழைய குறிப்புகளைக் கண்டுபிடித்தார். அந்த குறிப்பில் சந்திரனின் முழுமையை பாதுகாக்கும் மற்றும் தேயும் வெண்ணிலாவை தடுக்கும் திறன் கொண்ட, இன்று மறந்துபோன சடங்கு பற்றிய ரகசிய குறிப்புகள் இருந்தன. அது அவளுக்கு உத்வேகம் கொடுத்தது. நீண்ட நேரம் வாசித்த களைப்பில் அவள் நூலக மேசையிலேயே கண்ணயர்ந்து விட்டாள்.   அல்லி, புராண கதையில் கூறிய அந்த மர்ம இடத்தை நோக்கி, எவருக்கும் சொல்லாமல் தன்னந் தனிய தனது சவாலான பயணத்தைத் தொடங்கினாள், எவராலும் உள்போகாத, ஆராயப்படாத காடுகள் மற்றும் பயங்கர மலைகளுக்குள் நுழைந்தாள், புராண நூல்களில், வாசித்து அறிந்த, ரகசிய துப்புகளால் அவள் வழிநடத்தப்பட்டாள். அவளுடைய பாதையில், அவளின் தைரியத்தையும் உறுதியையும் சோதிக்கும் பல்வேறு தடைகளை எதிர்கொண்டாள். அவள் பயங்கரமான பள்ளத்தாக்குகளை கடந்தாள், புராண கதைகளில் காணப்படும் பல அதிசய உயிரினங்களை எதிர்கொண்டாள், அத்துடன் சக்திவாய்ந்த புயல்களை, மின்னல்களை எதிர்கொண்டாள், என்றாலும் எதற்கும் சற்றும் சளையாது தன் பயணத்தை தொடர்ந்தாள்.   பல வாரங்கள் இடைவிடாத நடைகளின் பின், அல்லி ஒரு கம்பீரமான மலை உச்சியில் ஒரு ஒதுக்குப்புற தோப்புக்கு வந்தடைந்தாள். பழங்கால கல் தூண்களால் சூழப்பட்டு, சந்திரனின் வெள்ளி ஒளியில் அவள் முற்றாக நனைந்தாள். சற்று தேடுதலின் பின், புராணக் குறிப்பில் கூறப்பட்ட சடங்கு செய்ய வேண்டிய இடத்தைக் கண்டுபிடித்தாள். புராண கதையில் கூறப்பட்ட அறிவுரைகளின் படி புனிதமான பொருட்களை ஏற்பாடு செய்தாள் மற்றும் கடந்த தலைமுறையிலிருந்து வழி வழி வந்த மந்திரங்களை உச்சரித்தாள்.   அல்லி சடங்கை முடித்தவுடன், அவள் பூசை செய்த அமைதியான அழகான தோப்பை சூழ்ந்து, அதன் இயற்கையான சுழற்சியை மீறி, சந்திரன் தனது தேய்தலை இடைநிறுத்தி, அவளுக்கு மேலே பிரகாசமாக பிரகாசித்தது.. அல்லியின் முயற்சிகளை அறியாத கிராமம், தங்களின் வீடுகளின் மேலே தேயாத வெண்ணிலாவின் ஒளிர்வைப் பார்த்து பிரமித்தார்கள்!   அடுத்தடுத்த நாட்களில், கிராமவாசிகள் நிலவின் மறையாத, தேயாத பிரகாசத்தைக் கண்டு வியந்தனர், என்றாலும் வரவிருக்கும் பேரழிவிலிருந்து தங்கள் உலகம் காப்பாற்றப் பட வேண்டும் என்று பெரும் பூசைகள் செய்யத்தொடங்கினர். அதன் முழக்கம் அல்லியின் காதிலும் பல நூறு மைல்கள் தாண்டி கேட்டது. அவள் திடுக்கிட்டு கண் விழித்தாள். தான் இன்னும் தனது கிராமத்து நூலகத்தில், புராணக் கதைகளின் நடுவில் இருப்பதைக் கண்டு மிக மிக வெட்கப்பட்டு தலை குனிந்தபடி தள்ளாடி தள்ளாடி வீட்டை நோக்கி புறப்பட்டாள், தனது முடியாத தேடுதலை நோக்கி, "தேயாத வெண்ணிலா"வாக!!     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]    
    • முரளிதரனுக்கு வாழ்த்துக்கள். இதற்கான பயிற்சிகள் எடுத்தாரோ?
    • நல்லதொரு விளக்கம். கையோட கம்மாரிஸ்.அடுத்த தெர்தல் வந்துவிட்டது. இதுவரை தமிழர் கத்தாத கத்துக்களா? நீங்களும் கத்துங்க கத்துங்க.யார் தடுத்தது?
    • அட ஞான சூனியமே, குமார் பொன்னம்பலம் போட்டியிட்டபோது எத்தனை தமிழ் கட்சிகள் அல்லது எத்தனை தமிழ் அரசியல்வாதிகள் அவரை எதிர்த்து, சிங்கள வேட்பாளர் ஒருவர் வெற்றிபெற வேண்டும் என்று பிரச்சாரம் செய்தீர்கள்? எத்தனை பேர் குமார் பொன்னம்பலத்திற்கு தமிழர்கள் வாக்குப் போடக் கூடாது என்று தமிழர்களிடம் தீயாகப் பிரச்சாரம் செய்தீர்கள்? அப்படி எவருமே குமாருக்கு எதிராகவும், சிங்களத்தின் சந்திரிக்காவையோ வேறு எவரையும் ஆதரித்தும் பிரச்சாரம் செய்யவில்லை. அவர் வெற்றிபெறவேண்டும் என்பதில் கொழும்புத் தமிழர்களுக்கு விருப்பம் இருந்தது, ஆனால் வடக்குக் கிழக்கில் அவரை அதிகம் அறியாததால் வாக்குகள் விழவில்லை. ஆனால், தமிழ்ப் பொதுவேட்பாளருக்கெதிராக எத்தனை தமிழ் அரசியல்க் கட்சிகள், தமிழ் அரசியல்ப் பிரமுகர்கள், அரசியல் விற்பனர்கள், தனிமனிதர்கள், குழுக்கள், இணையத் தளங்கள், பத்திரிக்கைகள் என்று போட்டிபோட்டுக்கொண்டு பிரச்சாரம் செய்தீர்கள்? சுத்து மாத்து மட்டுமே எத்தனை தேர்தல் மேடைகள், கூட்டங்கள், பிரச்சாரப் பேரணிகள் என்பவற்றில் கலந்துகொண்டு "பொதுவேட்பாளரைத் தோற்கடிப்பதே எனது ஒற்றை நோக்கம்" என்று சூளுரைத்து வந்தது? இவ்வளவு எதிர்ப்பிற்கும், அவதூறுப் பிரச்சாரத்திற்கு மத்தியிலும் பொதுவேட்பாளர் 1.67 வீதம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார் என்றால், நீங்கள் அனைவரும் அவருக்கெதிராகப் பிரச்சாரம் செய்யாது விட்டிருந்தாலே அன்று குமார் பெற்றதைக் காட்டிலும் அதிகம் பெற்றிருப்பார். ஆனால் அவரை எங்கே விட்டீர்கள்? பேரம் பேசுகிறோம் பேரம் பேசுகிறோம் என்று தோற்கிற குதிரையில் கட்டிவிட்டு வென்ற குதிரையிடம் போய்க் காசு கேட்கிறீர்களே? 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.