Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படையினரை விடவும் புலிகள்தான் குறிபார்த்து சுடுவதில் வல்லவர்கள் – அமைச்சர் கஜதீர

Featured Replies

மணலில் நார் திரிக்க கேட்கின்றீர்கள் .

என்னை விடுங்கள் ,சம்பந்தர் ,சுமந்திரன் இவர்களையும் விட்டு வைக்கவில்லை .அவர்களுக்கு பிடிக்காவிட்டால் ஆள் சரி .பின்னி பெடலெடுத்து விடுவார்கள் .அதே நேரம் அவர்கள் மதிப்பவர்களை நாங்களும் கும்பிடவேண்டும் .இதைதான் இங்கு பலரும் எதிர்பார்க்கின்றார்கள் .

அண்ணா, இவர்களை பற்றி நான் எந்த கருத்தும் கூறவில்லை. இருந்தாலும் கேட்கிறேன். இங்கு மக்களின் நோக்கங்களை விட்டு விலத்தி செல்பவர்களை தான் எம்மவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது பிழை என்றால் யார் என்ன செய்தாலும் சரி என்று பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா? அப்படி நம்பி நம்பி ஏமாந்த தமிழினம் இனி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதால் தான் அப்படி நடக்கிறார்கள்.

பலருக்கு நடந்த விடயங்கள் பாதிக்கு மேல் தெரியாது .பலர் குடும்பத்தில் போராளிகளே இருந்ததில்லை.ஆனால் தர்ம அடி கொடுப்பதற்கு பின்னிற்பதில்லை

இது யாரை நினைத்து எழுதினீர்களோ தெரியாது. ஆனால் என்னை நினைத்து எழுதியிருப்பின் உங்களுக்கு நான் கூற விரும்புவது, எனக்கு தெரியாத விடயங்கள் பற்றி நான் கருத்துரைப்பதில்லை. தெரிந்த விடயங்கள் பற்றி தான் கருத்துரைத்திருக்கிறேன்.

போராளிகள் அது எந்த இயக்கமேன்றாலும் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கின்றேன் .

சிங்கள அரசை நான் இணையத்தில் வந்து திட்டி நான் தேசியம் நேசிப்பவனாக காட்டத் தேவையில்லை.அவன் எதிரி அவன் அப்படித்தான் நடப்பான்

யாரை வேண்டுமென்றாலும் எந்த இடத்தில் என்றாலும் வையுங்கள்.

ஆனால் சிங்களத்தை இணையத்தில் திட்டி தேசியம் நேசிப்பவனாக காட்டாத நீங்கள் புலிகளை மட்டும் ஏன் இணையத்தில் திட்டி தேசிய எதிர்ப்பாளனாக நடக்கிறீர்கள் அல்லது சிங்கள ஆதரவாளர் போல் செயற்படுகிறீர்கள்? அதையும் கைவிட்டு சாதாரணமாக கருத்து எழுதலாமே???????

இங்கு நாங்கள் என்ன செய்யபோகின்றோம் ,என்ன செய்கின்றோம் என்பதுதான் கேள்விக்குரியது .

அதே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் புலிகளை ஆதரிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட என்றாலும் உதவி செய்யுங்கள். அவர்கள் உணர்வை நோகடிக்கும் வகையில் கருத்துகளை முன்வைக்காதீர்கள்.

எமக்கான தீர்வை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் அதே நேரம் சர்வதேசம் என்ன சொல்லுகின்றது என்பதையும் கட்டாயம் கருத்தில் எடுக்க வேண்டும் .அப்படியான சிலரை சந்திக்கும் பட்சத்தில் நாம் எங்கு நிற்கின்றோம் என்பதை அறியமுடியும் .

இங்கு சர்வதேசம் என்ன சொல்கிறது என்று நாமும் அவதானித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்காக சர்வதேசம் சொல்லுவது எல்லாம் சரி என்று கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டக்கூடாது. அவர்கள் சொல்வது பிழை எனின் அதற்கெதிராக நாம் முடிந்தவரை போராட வேண்டும். எம்பக்கம் உள்ள நியாயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் படி தகவல்களை அனுப்ப வேண்டும்.

இல்லாவிட்டால் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழுங்கள். அவர்கள் உங்களுக்கு சம உரிமையை தருவார்கள் என்று திரும்ப சர்வதேசம் சொல்லும். அதை ஏற்று இலங்கையில் நீங்கள் வாழ முடியும். ஆனால் எம்மக்கள் வாழ முடியாது.

உங்கள் பலமும் அரசியல் புலமும் என்ன என்பதை முள்ளிவாய்காலின் முன்னரான உங்கள் பதிவுகளை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் .சொன்னது ,எழுதினது அத்தனையும் மறந்து ஒரு குத்துகரணத் துடன் வேறொரு படிக்கு தாவி விட்டீர்கள் .இரண்டிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டுமே சாத்தியமில்லாத கனவு என்பதுதான் .இந்த கனவை உங்களை காணவைப்பவர்கள் அதே பேர்வழிகள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை .

:lol: :lol: சபேசன் அண்ணா இதை வாசியுங்கோ. இவருக்கு ஆதரவா கருத்து எழுதினியள் தானே?

உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். :lol::icon_idea:

Edited by காதல்

  • Replies 53
  • Views 4.3k
  • Created
  • Last Reply

காதல் கடைசி பந்தி யாழ் பதிவாளர்களுக்கே ஒழிய சபேசனுக்கல்ல.வடிவாக வாசித்து விளங்கவும் .அதே போல தான் சர்வதேசம் பற்றிய எனது கருத்தும்.ஒன்று விட்டு ஒரு வரி வாசிக்க வேண்டாம் .

  • கருத்துக்கள உறவுகள்

.அவர்களுக்கு பிடிக்காவிட்டால் ஆள் சரி .பின்னி பெடலெடுத்து விடுவார்கள் .அதே நேரம் அவர்கள் மதிப்பவர்களை நாங்களும் கும்பிடவேண்டும் .இதைதான் இங்கு பலரும் எதிர்பார்க்கின்றார்கள் .பலருக்கு நடந்த விடயங்கள் பாதிக்கு மேல் தெரியாது .பலர் குடும்பத்தில் போராளிகளே இருந்ததில்லை.ஆனால் தர்ம அடி கொடுப்பதற்கு பின்னிற்பதில்லை .புலம் பெயர்ந்த நாள்தொடக்கம் கனேடிய ஊடகங்கள் அனைத்தும் ஓரளவு கேட்கின்றேன் .வாசிக்கின்றேன் .முகம் தெரியாமல் இதே பல்லவி .சிலரை எனக்கு தெரியும் அவர்கள் செயற்பாடும் தெரியும் .இவையெல்லாம் எனக்கு புதிதல்ல .//////

இவர்களுடைய பாணி இது தான். உன் குடும்பத்தில் உள்ளோர் புலிகளில் இல்லை. நீ புலம் பெயர்ந்து வந்தாய். என்ற காரணங்களை மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி விட்டு, தாங்கள் புலிகளை விமர்சனம் செய்வார்கள். நாங்களும் எங்களின் மீது குற்றம் உள்ளது போல நினைத்துக் கொண்டு மௌனமாக இருப்போம். இவர்கள் புரிந்து கொள்ளவேண்டியது இது தான். என் குடும்பத்தில் யாரும் விடுதலைப் போராட்டத்தில் இல்லை, புலம் பெயர்வு போன்ற குற்றச்சாட்டுக்ளை வைக்க மட்டுமே உங்களுக்குத் தகுதி இருக்கின்றதே தவிர, எங்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் என்பது புலிகளை நீங்கள் விமர்சிப்பதற்கான தகுதி நிலை இல்லை.

நான் புலம்பெயர்ந்தவன். ஆயுதம் தூக்கவில்லை. என் மீது அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் குற்றம் சாட்டலாம். தவறே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் அது எந்த இயக்கமேன்றாலும் அவர்களை வைக்க வேண்டிய இடத்தில் தான் வைத்திருக்கின்றேன் .

அது தான் ஏன் தலைவர் பங்கருக்குள் இருக்கிறார் என்று நக்கலாக கேட்டீர்களோ.இதே தளத்தில் எழுதி இருந்தீர்கள்.இது பற்றி பதில் எழுத மாட்டீர்கள்.ஏனெனில் அதற்கான துணிவோ அல்லது மனச்சாட்சியோ உங்களிடம் இல்லை.

நான் உங்களை அவதானித்தது இது தான்.புலிகளை தெரிய முன்பே புளட் உறுப்பினர்களை தெரியும்.அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது புலிகளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்பது.இதனை கடை நிலை உறுப்பினரில் இருந்து மத்திய குழு உறுப்பினர் வரை காண முடியும்.நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கவே முடியாது.

மற்றும் படி புலிகளில் ஒருவன் காசு களவெடுத்து விட்டால் முழு இயக்கத்தையும் பின்னி பெடலெடுப்பது உங்களுக்கு கைவைந்த கலையாச்சே.மேலும் எப்படியான இயக்கத்தில் இருந்து வந்தவர் நீங்கள் என்றும் தெரியும்.தமிழ் இனம் பெருமை படும் படி என்ன செய்தீர்கள் என்றால் எதுவுமே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்கள் இயக்கத்தில் இருக்கவில்லையாம்.இன்றும் அரசு போடும் பிச்சையில் புலிகள் பற்றி அவதூறாக எழுதிக்கொண்டு இருப்பவர்கள் உங்களின் பாசறையில் இருந்த கேடு கெட்டதுகள் தான்.இதற்குள் "தேனி" என எப்படி வந்தது என பெருமை பேச மட்டும் எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது?

அண்ணா, இவர்களை பற்றி நான் எந்த கருத்தும் கூறவில்லை. இருந்தாலும் கேட்கிறேன். இங்கு மக்களின் நோக்கங்களை விட்டு விலத்தி செல்பவர்களை தான் எம்மவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். அது பிழை என்றால் யார் என்ன செய்தாலும் சரி என்று பார்த்துக்கொண்டிருக்க சொல்கிறீர்களா? அப்படி நம்பி நம்பி ஏமாந்த தமிழினம் இனி விழிப்பாக இருக்க வேண்டும் என்பதால் தான் அப்படி நடக்கிறார்கள்.

இது யாரை நினைத்து எழுதினீர்களோ தெரியாது. ஆனால் என்னை நினைத்து எழுதியிருப்பின் உங்களுக்கு நான் கூற விரும்புவது, எனக்கு தெரியாத விடயங்கள் பற்றி நான் கருத்துரைப்பதில்லை. தெரிந்த விடயங்கள் பற்றி தான் கருத்துரைத்திருக்கிறேன்.

யாரை வேண்டுமென்றாலும் எந்த இடத்தில் என்றாலும் வையுங்கள்.

ஆனால் சிங்களத்தை இணையத்தில் திட்டி தேசியம் நேசிப்பவனாக காட்டாத நீங்கள் புலிகளை மட்டும் ஏன் இணையத்தில் திட்டி தேசிய எதிர்ப்பாளனாக நடக்கிறீர்கள் அல்லது சிங்கள ஆதரவாளர் போல் செயற்படுகிறீர்கள்? அதையும் கைவிட்டு சாதாரணமாக கருத்து எழுதலாமே???????

அதே தான் நாங்களும் சொல்கிறோம். நீங்கள் புலிகளை ஆதரிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனிப்பட என்றாலும் உதவி செய்யுங்கள். அவர்கள் உணர்வை நோகடிக்கும் வகையில் கருத்துகளை முன்வைக்காதீர்கள்.

இங்கு சர்வதேசம் என்ன சொல்கிறது என்று நாமும் அவதானித்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதற்காக சர்வதேசம் சொல்லுவது எல்லாம் சரி என்று கண்ணை மூடிக்கொண்டு தலையாட்டக்கூடாது. அவர்கள் சொல்வது பிழை எனின் அதற்கெதிராக நாம் முடிந்தவரை போராட வேண்டும். எம்பக்கம் உள்ள நியாயங்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் படி தகவல்களை அனுப்ப வேண்டும்.

இல்லாவிட்டால் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழுங்கள். அவர்கள் உங்களுக்கு சம உரிமையை தருவார்கள் என்று திரும்ப சர்வதேசம் சொல்லும். அதை ஏற்று இலங்கையில் நீங்கள் வாழ முடியும். ஆனால் எம்மக்கள் வாழ முடியாது.

:lol: :lol: சபேசன் அண்ணா இதை வாசியுங்கோ. இவருக்கு ஆதரவா கருத்து எழுதினியள் தானே?

உங்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். :lol::icon_idea:

உவர் கேட்ட அதே கேள்வியை காதல் உங்களிடமும் கேட்கிறேன்.....மணலில் நார்............... :rolleyes:

உண்மையில் குரங்கிலிருந்து மனிதன் உருவாகினானா ,இல்லையா என்ற ஆராய்ச்சியை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை :D ............அது தான் கண்ணாலும், காதாலும் உணர்கிறோமே.................பிறகு ஏன் உந்த ஆராய்ச்சி ........... :lol: .....

நான் ஒரே ஒரு முடிவு எடுத்துள்ளேன்................................கூர்ப்படயாதவர்கள் கூர்ப்படையும் வரை அவர்களுக்கு பின்னூட்டம் கொடுப்பதில்லை.............. :icon_idea:

Edited by தமிழ்சூரியன்

காதல் கடைசி பந்தி யாழ் பதிவாளர்களுக்கே ஒழிய சபேசனுக்கல்ல.வடிவாக வாசித்து விளங்கவும் .

அப்ப சபேசன் அண்ணா யாழ் பதிவாளர் இல்லையோ. :oசபேசனுக்கு மட்டுமல்ல என்று போடாமல் சபேசனுக்கல்ல என்று போட்டிருக்கிறியள். :D

யாழ் பதிவாளர்கள் அனைவருக்கும் எழுதியிருப்பின் அவர்கள் அனைவரும் எங்கே குத்துக்கரணம் அடித்தார்கள் என்று கூற முடியுமா?

உங்கள் பலமும் அரசியல் புலமும் என்ன என்பதை முள்ளிவாய்காலின் முன்னரான உங்கள் பதிவுகளை பார்த்தாலே புரிந்துகொள்ளலாம் .சொன்னது ,எழுதினது அத்தனையும் மறந்து ஒரு குத்துகரணத் துடன் வேறொரு படிக்கு தாவி விட்டீர்கள் .இரண்டிற்கும் உள்ள ஒரே ஒற்றுமை இரண்டுமே சாத்தியமில்லாத கனவு என்பதுதான் .இந்த கனவை உங்களை காணவைப்பவர்கள் அதே பேர்வழிகள் என்பதுதான் வேடிக்கையிலும் வேடிக்கை .

உண்மையை சொன்னால் அனைவரினதும் குறிக்கோள் தமிழீழம் என்பதாக தான் இருக்கிறது. அது முள்ளிவாய்க்காலுக்கு முன்னரோ பின்னரோ.... :)

அதே போல தான் சர்வதேசம் பற்றிய எனது கருத்தும்.ஒன்று விட்டு ஒரு வரி வாசிக்க வேண்டாம் .

நான் உங்கள் கருத்தை ஒன்றாக தான் அண்ணா வாசித்தன். :unsure: :unsure: பதில் எழுதும் போது தான் பிரித்து பிரித்து எழுதினான். :rolleyes:

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

அது தான் ஏன் தலைவர் பங்கருக்குள் இருக்கிறார் என்று நக்கலாக கேட்டீர்களோ.இதே தளத்தில் எழுதி இருந்தீர்கள்.இது பற்றி பதில் எழுத மாட்டீர்கள்.ஏனெனில் அதற்கான துணிவோ அல்லது மனச்சாட்சியோ உங்களிடம் இல்லை.

நான் உங்களை அவதானித்தது இது தான்.புலிகளை தெரிய முன்பே புளட் உறுப்பினர்களை தெரியும்.அவர்களுக்கு கற்றுக்கொடுத்தது புலிகளை எப்படியாவது மட்டம் தட்ட வேண்டும் என்பது.இதனை கடை நிலை உறுப்பினரில் இருந்து மத்திய குழு உறுப்பினர் வரை காண முடியும்.நீங்கள் மட்டும் விதிவிலக்காக இருக்கவே முடியாது.

மற்றும் படி புலிகளில் ஒருவன் காசு களவெடுத்து விட்டால் முழு இயக்கத்தையும் பின்னி பெடலெடுப்பது உங்களுக்கு கைவைந்த கலையாச்சே.மேலும் எப்படியான இயக்கத்தில் இருந்து வந்தவர் நீங்கள் என்றும் தெரியும்.தமிழ் இனம் பெருமை படும் படி என்ன செய்தீர்கள் என்றால் எதுவுமே இல்லை. இந்த லட்சணத்தில் மற்றவர்கள் இயக்கத்தில் இருக்கவில்லையாம்.இன்றும் அரசு போடும் பிச்சையில் புலிகள் பற்றி அவதூறாக எழுதிக்கொண்டு இருப்பவர்கள் உங்களின் பாசறையில் இருந்த கேடு கெட்டதுகள் தான்.இதற்குள் "தேனி" என எப்படி வந்தது என பெருமை பேச மட்டும் எப்படி ஐயா உங்களுக்கு மனம் வருகிறது?

உங்களின் கருத்துக்கு ஒரு பச்சை குத்துவம் என்றால் தீர்ந்துவிட்டது , இவர்களைப்பற்றி இதைவிட விளக்கமாக எழுத முடியாது .

உவர் கேட்ட அதே கேள்வியை காதல் உங்களிடமும் கேட்கிறேன்.....மணலில் நார்............... :rolleyes:

உண்மையில் குரங்கிலிருந்து மனிதன் உருவாகினானா ,இல்லையா என்ற ஆராய்ச்சியை செய்திருக்க வேண்டிய அவசியமில்லை :D ............அது தான் கண்ணாலும், காதலும் உணர்கிறோமே.................பிறகு ஏன் உந்த ஆராய்ச்சி ........... :lol: .....

:lol::D

(காதாலும் என்று வர வேண்டும். மாற்றி விடுங்கோ. இல்லாவிட்டால் காதலை உணர்கிறோமே என்ற மாதிரி அர்த்தப்படும். :D )

நான் ஒரே ஒரு முடிவு எடுத்துள்ளேன்................................கூர்ப்படயாதவர்கள் கூர்ப்படையும் வரை அவர்களுக்கு பின்னூட்டம் கொடுப்பதில்லை.............. :icon_idea:

:lol: :lol: பின்னூட்டம் கொடுக்காவிட்டால் கூர்ப்படைந்த எம்மினம் அழிந்து விடுமே????? :icon_idea:

Edited by காதல்

(காதாலும் என்று வர வேண்டும். மாற்றி விடுங்கோ. இல்லாவிட்டால் காதலை உணர்கிறோமே என்ற மாதிரி அர்த்தப்படும். )

மாற்றிவிட்டேன் நன்றி காதால் ................ :D

மாற்றிவிட்டேன் நன்றி காதால் ................ :D

I'm gonna cry now.. :( :( :lol:

T.S anna, உங்களோட google translate விளையாடுது. :D

Edited by காதல்

:lol: :lol:

இன்றும் பல கருத்துக்கு பச்சை போட முடியாமல் போய் விட்டது. ஆனாலும் தேடி வந்து இக்கருத்துக்கு பச்சை குத்துவன். :lol::icon_idea:

ம்............ நானும் காதலும் என்ன தான் சண்டை பிடித்தாலும் முக்கியமான விடயத்தில் ஒற்றுமை!!!

  • கருத்துக்கள உறவுகள்

ம்............ நானும் காதலும் என்ன தான் சண்டை பிடித்தாலும் முக்கியமான விடயத்தில் ஒற்றுமை!!!

நல்ல உள்ளம் கொண்டவர்கள் . :)

ம்............ நானும் காதலும் என்ன தான் சண்டை பிடித்தாலும் முக்கியமான விடயத்தில் ஒற்றுமை!!!

:lol: :lol: ஓம் அக்கா.

அதோட என்ன தான் சண்டை பிடித்தாலும் உங்களோட நான் cool தான். :D

:lol: :lol: ஓம் அக்கா.

அதோட என்ன தான் சண்டை பிடித்தாலும் உங்களோட நான் cool தான். :D

நானும் உங்களோட கூல் தான் :D

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் சோத்துப் பாசல் மாலைதீவு என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

இதே களத்திலை அதிகமான தடவைகள் ஆரோக்கியமான பல கேள்விகளை அர்சுணை நோக்கி வைத்து இண்டு வரைக்கும் பதிகளுக்காக காத்திருக்கிற வகையிலை அவர் சொன்ன ஒரே பதில் உங்களுக்கு அரசியல் தெரியாது எண்டதுதான்...

சரி அரசியலுக்கான வரைவிலக்கணம் கேட்டுப்பாத்தன்... அதுக்கும் பதில் இல்லை...

எல்லாத்துக்கும் எகத்தாளம் செய்பவருக்கு குடுக்க கூடிய பதில் அவரின் பாணியிலாக மட்டும் தான் இருக்க முடியும்...!

  • கருத்துக்கள உறவுகள்

அர்யுன் ஏதாவது சொன்னவுடன் "சோத்துப் பாசல்", "மாலைதீவு" என்று ஆரம்பிப்பதை விட்டு அவருடன் ஆரோக்கியமான முறையில் கருத்தாடினால் என்ன?

நீங்கள் ஒரு முடிவோட தான் மீண்டும் வந்திருக்கிறீர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்

தலையில முடி இருக்கோ.

கடைசியாக ஒரு தடவை தடவிப்பார்த்துக்கொள்ளுங்கள்.

(நாய் வாலை நிமிர்த்த முடியாது. ஆனால் ஒட்ட வெட்டலாம் என்ற முடிவுக்கு நானும் தலைமுடி அத்தனையும் போனபின்தான் வந்தேன்.) :( :( :(

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எழுதும் கருத்து பிழை என்டாலோ அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லை என்டாலோ சொல்லி புரிய வைக்க வேண்டும் அதை விடுத்து அவர் அந்த அமைப்பில் இருந்தவர் என்றும்,அதற்காக அவர் என்ன எழுதினாலும் அது பிழை என்றும்,அதை விட அவர் எழுதாத திரிகளில் கூட அர்ஜீன் இதற்கு என்ன சொல்லப் போகிறார் என தேவையில்லாமல் அவரை இழுத்து எழுதுவதும் இது எல்லாம் நல்லா இருக்குதா?

அவர் புளோட்டில் இருந்தவர் என்று அவர் சொல்லித் தான் உங்களுக்கே தெரியும்...அவர் எப்பவாவது த‌ன்ட‌ புளோட் தான் புலியை விட சிறந்தது என எழுதினவரா?...அவர் புலியை விமர்சித்தால் அதில் உள்ள சரி/பிழைகளை அவரிட‌ம் எடுத்து சொல்லுங்கள் அதை விடுத்துஅவரை "சோத்துப்பாச‌ல்","மாலைதீவு" என்று விமர்சிக்கிறது நன்றாகவா இருக்குது...அவர் புலியைத் திட்ட நீங்கள் புளோட்டைத் திட்ட இர‌ண்டும் ஒன்று தான்.

உங்களால் இது தான் சரியென்றோ அல்லது மற்றவர் எழுதுவது பிழையென்றோ நேர்மையாக எழுதி புரிய வைக்க முடியா விட்டால் அது உங்களது பிழை என்றே நான் நினைக்கிறேன்...கருத்துக்களம் ஆரோக்கியமான மேடையாக இருக்க வேண்டும் அதை விடுத்து அர‌ட்டை அடிக்கும் இட‌மாக இருக்கக் கூடாது :icon_idea:

இந்தத் திரியை திசை திருப்பியதற்கு மன்னிக்க வேண்டும். ஆயினும் நாங்கள் கருத்துக் களத்தில் ஒருவரோடு ஒருவர் எப்படி விவாதிக்கின்றோம், என்ன வகையான மொழியை பயன்படுத்துகிறோம் என்பது பற்றி ஆழமான விவாதம் தேவை என்பதை அண்மைய கருத்தாடல்கள் காட்டி நிற்கின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் எழுதும் கருத்து பிழை என்டாலோ அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லை என்டாலோ சொல்லி புரிய வைக்க வேண்டும் அதை விடுத்து அவர் அந்த அமைப்பில் இருந்தவர் என்றும்,அதற்காக அவர் என்ன எழுதினாலும் அது பிழை என்றும்,அதை விட அவர் எழுதாத திரிகளில் கூட அர்ஜீன் இதற்கு என்ன சொல்லப் போகிறார் என தேவையில்லாமல் அவரை இழுத்து எழுதுவதும் இது எல்லாம் நல்லா இருக்குதா?

அவர் புளோட்டில் இருந்தவர் என்று அவர் சொல்லித் தான் உங்களுக்கே தெரியும்...அவர் எப்பவாவது த‌ன்ட‌ புளோட் தான் புலியை விட சிறந்தது என எழுதினவரா?...அவர் புலியை விமர்சித்தால் அதில் உள்ள சரி/பிழைகளை அவரிட‌ம் எடுத்து சொல்லுங்கள் அதை விடுத்துஅவரை "சோத்துப்பாச‌ல்","மாலைதீவு" என்று விமர்சிக்கிறது நன்றாகவா இருக்குது...அவர் புலியைத் திட்ட நீங்கள் புளோட்டைத் திட்ட இர‌ண்டும் ஒன்று தான்.

உங்களால் இது தான் சரியென்றோ அல்லது மற்றவர் எழுதுவது பிழையென்றோ நேர்மையாக எழுதி புரிய வைக்க முடியா விட்டால் அது உங்களது பிழை என்றே நான் நினைக்கிறேன்...கருத்துக்களம் ஆரோக்கியமான மேடையாக இருக்க வேண்டும் அதை விடுத்து அர‌ட்டை அடிக்கும் இட‌மாக இருக்கக் கூடாது :icon_idea:

ரதி

எழுழுதியதை மீண்டும் படியுங்கள்

திடீரென எங்கிருந்தோ குதித்தது போலுள்ளது தங்களது கருத்து.

கருத்துக்களம் என்பது முதலில் மரியாதைக்குரியது.

இது அவரவர் கொள்கைகளை மற்றவர் மதிப்பது என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது.

எமக்குப்பிடித்தவர்களை நாம் மதிப்பவர்களை அவருக்கு நன்கு தெரியும். அப்படியிருக்க தொடர்ந்து எம்மவரை அவமானப்படுத்த முதல் அவர் எம்முடன் தொடர்ந்து கருதத்தாடவேண்டும் என்ற ஆகக்குறைந்த அளவீட்டையாவது மதிக்கவேண்டும்.

உமா மகேகசுவரன் அநாதைதயாக இறந்து கிடந்தபேபாது நான் அழுதேன் என இங்கு நான் எழுதியுள்ளேளன். காரணம் அவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் எம்மவரே என்பதை இவர்கள் போன்றோருக்கு சுட்டிக்காட்டவே.(முரண்பாடுகள் இருந்தாலும்)

ஆனால் நான் மதிக்கும் என் தலைவனை எனது தளபதிகளை இவர்கள் அழிந்தது சந்தோசம் என்கிறார். நாங்கள் இருக்கும் இடத்திலேயே....இதன் அர்த்தம் என்ன?

இதனூடாக இவர் எமக்கு தரும் செய்தி என்ன? ( ஒரு செத்த வீட்டில் போய் இவன் செத்ததுதான் நல்லது என எவராவது சொல்வார்களா? அந்தளவுக்கு எவருக்காவது மனம் வருமா?)

Edited by விசுகு

அவர் எழுதாத திரிகளில் கூட அர்ஜீன் இதற்கு என்ன சொல்லப் போகிறார் என தேவையில்லாமல் அவரை இழுத்து எழுதுவதும் இது எல்லாம் நல்லா இருக்குதா?

ஒரே நோக்கமுள்ள திரிகளில் அவர் ஒரே கருத்தை முன்வைத்தால் அதே நோக்கமுள்ள இன்னொரு திரியில் அவர் வந்து அதே கருத்தை தான் முன்வைப்பார்.

Note: இந்த கேள்வி என்னிடம் கேட்கப்பட்டுள்ளது. உங்கள் கருத்தை வாசிக்க முன்னமே நான் பெயர் குறிப்பிடுவது பிழை என்று கருதி உரிய திரியில் அவர் பெயரை அகற்றி விட்டேன் (கருத்தை அல்ல). உங்கள் கருத்தை வாசித்த பின் அகற்றினேன் என்று மட்டும் நினைத்து விடாதீர்கள்.

Edited by காதல்

  • கருத்துக்கள உறவுகள்

வர‌,வர‌ கொசுத் தொல்லை யாழில் கூடிப் போச்சு

ரதி

எழுழுதியதை மீண்டும் படியுங்கள்

திடீரென எங்கிருந்தோ குதித்தது போலுள்ளது தங்களது கருத்து.

கருத்துக்களம் என்பது முதலில் மரியாதைக்குரியது.

இது அவரவர் கொள்கைகளை மற்றவர் மதிப்பது என்பதிலிருந்தே ஆரம்பிக்கிறது.

எமக்குப்பிடித்தவர்களை நாம் மதிப்பவர்களை அவருக்கு நன்கு தெரியும். அப்படியிருக்க தொடர்ந்து எம்மவரை அவமானப்படுத்த முதல் அவர் எம்முடன் தொடர்ந்து கருதத்தாடவேண்டும் என்ற ஆகக்குறைந்த அளவீட்டையாவது மதிக்கவேண்டும்.

உமா மகேகசுவரன் அநாதைதயாக இறந்து கிடந்தபேபாது நான் அழுதேன் என இங்கு நான் எழுதியுள்ளேளன். காரணம் அவர்களை நாம் வெறுக்கவில்லை. அவர்களும் எம்மவரே என்பதை இவர்கள் போன்றோருக்கு சுட்டிக்காட்டவே.(முரண்பாடுகள் இருந்தாலும்)

ஆனால் நான் மதிக்கும் என் தலைவனை எனது தளபதிகளை இவர்கள் அழிந்தது சந்தோசம் என்கிறார். நாங்கள் இருக்கும் இடத்திலேயே....இதன் அர்த்தம் என்ன?

இதனூடாக இவர் எமக்கு தரும் செய்தி என்ன? ( ஒரு செத்த வீட்டில் போய் இவன் செத்ததுதான் நல்லது என எவராவது சொல்வார்களா? அந்தளவுக்கு எவருக்காவது மனம் வருமா?)

உள்ளார்ந்தமாக அர்ஜீன் அண்ணா தன் தப்பை உணராமல் எல்லோரும் சொல்கிறார்கள் என்பதற்காக வெளிப்படையாக அவர் மன்னிப்புக் கேட்டால் சரியா? ...அதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?...அவர் செய்த/செய்கின்ற பிழையை அவரை உணர‌ வைக்க வேண்டும்.அவராக உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும்...அதை எங்களது எழுத்தின் மூலம் தான் சாதிக்க வேண்டும்.

அவர் அப்படி எழுதினது பிழை என்று அத் திரியிலேயே நான் எழுதி விட்டேன் அதற்காக எல்லாத் திரிகளிளையும் நான் திட்டிக் கொண்டு இருக்கவில்லை...இப்படி மாறி,மாறி நீங்கள் அவரையும்,அவர் உங்களையும் திட்டிக் கொண்டு இருந்தால் குரோதம் தான் வளரும்...நான் அர்ஜீன் அண்ணாவுக்கு சப்போட் பண்ணி எழுதுகிறேன் என நினைத்தால் அது உங்கள் தப்பு.

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம். அர்ஜன் அவர்கள் பால்குடி மட்டுமல்ல, எம் நாட்டுப் பிரச்சனையைப் பற்றி ஒன்றுமெ அறியாதவர். அவருக்கு பக்குவமாகவும், அன்பாகவும், அரவணைப்போடும் சிங்கள மொழிச் சட்டம் கொண்டு வந்ததில் இருந்து இன்று வரை என்ன நடந்தது என்பது பற்றி விளக்கம் கொடுங்கள். இது தான் எங்களின் சகிப்புத்தன்மையையும், நடுநிலை தவறாது இருக்கவும், சரியான வழி ஆகும்.

ஒருவர் எழுதும் கருத்து பிழை என்டாலோ அல்லது உங்களுக்கு பிடிக்கவில்லை என்டாலோ சொல்லி புரிய வைக்க வேண்டும் அதை விடுத்து அவர் அந்த அமைப்பில் இருந்தவர் என்றும்,அதற்காக அவர் என்ன எழுதினாலும் அது பிழை என்றும்,அதை விட அவர் எழுதாத திரிகளில் கூட அர்ஜீன் இதற்கு என்ன சொல்லப் போகிறார் என தேவையில்லாமல் அவரை இழுத்து எழுதுவதும் இது எல்லாம் நல்லா இருக்குதா?

அவர் புளோட்டில் இருந்தவர் என்று அவர் சொல்லித் தான் உங்களுக்கே தெரியும்...அவர் எப்பவாவது த‌ன்ட‌ புளோட் தான் புலியை விட சிறந்தது என எழுதினவரா?...அவர் புலியை விமர்சித்தால் அதில் உள்ள சரி/பிழைகளை அவரிட‌ம் எடுத்து சொல்லுங்கள் அதை விடுத்துஅவரை "சோத்துப்பாச‌ல்","மாலைதீவு" என்று விமர்சிக்கிறது நன்றாகவா இருக்குது...அவர் புலியைத் திட்ட நீங்கள் புளோட்டைத் திட்ட இர‌ண்டும் ஒன்று தான்.

உங்களால் இது தான் சரியென்றோ அல்லது மற்றவர் எழுதுவது பிழையென்றோ நேர்மையாக எழுதி புரிய வைக்க முடியா விட்டால் அது உங்களது பிழை என்றே நான் நினைக்கிறேன்...கருத்துக்களம் ஆரோக்கியமான மேடையாக இருக்க வேண்டும் அதை விடுத்து அர‌ட்டை அடிக்கும் இட‌மாக இருக்கக் கூடாது :icon_idea:

யாழ் புலிகள் ஆதரவு இணையம் என்று தெரிந்து தான் எழுத தொடங்கினேன்.அரசியலுக்கு அப்பால் நானறிந்த இணையங்களுக்குள் சிறந்துது யாழ் தான் .அரசியலில் கூட கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் இன்னும் மிளிரும் .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளுக்கு இடம் கொடுக்க கூடாது.

கடவுளை வழிபடுபவர்களில் கடவுளை உண்மையாக நம்புபவர்கள்,நம்பாமல் ஆனால் கள்ள சாமிவேடம் போடுபவர்கள் இருப்பதுபோல் தேசியத்திலும் இருக்கு .அதை அவர்கள் எழுத்தை வைத்தே பிடித்துவிடலாம்.கள்ள சாமிமார்களுக்கு நான் பெரும்பாலும் பதில் எழுதுவதில்லை.

அடுத்து புலிஎதிர்ப்பு என்பது பற்றி பலமுறை எழுதினேன் .தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும் குழி பறிக்க போகின்றார்கள் என்பதால் தான் புலிகளின் அரசியல் நிலைபாட்டிற்கு எதிர்ப்பே ஒழிய தனி நபர்களாக யார் மீதுமில்லை .

உமா கொலை செய்யப்பட்டு சில மாதங்களில் கிருஷ்ணன் கனடா வந்தார் ,ஒரு குறிப்பிட்ட சிலர் ஒன்று கூடினோம் .அதில் உமா கொல்லப்படவேண்டியயவர் என்று அடித்து நான் சொன்னேன் .நான் மிகவும் மதித்த ஒருவர் .எனக்கு தனிப்பட ஒரு கஷ்டமும் தரவில்லை ,வேண்டிய பணமமும் தந்து என்னை மிக சுதந்திரமாக நடமாட விட்டவர் .ஆனால் சிங்களத்துடன் தொடர்பு வைத்து கொழும்பில் கொலைகள் செய்ய தொடங்க அது நிற்பாட்ட படவேண்டியது கட்டாயம் என்று உணர்ந்தேன் .தனிநபராக அவரில் மதிப்பு இருந்தாலும் அரசியலில் நிறுத்தப்பட வேண்டியவர் ஆகிவிட்டார் .

புலிகளும் அதே நிலைக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் .முற்றுப புள்ளி என்பது கட்டாயம் என்றாகிவிட்டது.

"யாழ்களம்" தமிழ் மக்கள் தமது உரிமைகளை, நீதியை பெற்றுக்கொள்ளவும், தமக்கு இழைக்கப்படும் அநீதிகளை எதிர்த்து குரல் எழுப்பவும் தேவையான கருத்துக்களை, அவற்றுடன் சம்பந்தப்பட்ட செய்திகளை பரிமாறும் ஒரு களமாக உள்ளது. இது தமிழ் மக்களின் உயர்வுக்ககாக பங்களிப்பு செய்கிறது. மாறுபட்ட கருத்துக்களை தமிழ் மக்களின் உயர்வுக்கு பயனுள்ளதாக மாற்ற உதவுகிறது.

எனவே தமிழ் மக்களின் உயர்வுக்காக நேர்மையாக பாடுபடுபவர்களுக்கு ஆதரவாகவும், தமிழின படுகொலையாளர்களுடன் - தமிழின விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த கயவர்கள் கும்பலுக்கு எதிராகவும் கருத்துக்கள் வருவது இயல்பு. இதை வைத்துக்கொண்டு இது குறிப்பிட்ட ஒரு இயக்கத்தின் ஆதரவு தளம் என்பது விதண்டாவாதம், மதிகெட்ட செயல். அதையும் மீறி இது புலிகளின் ஆதரவுத் தளம் என்று கருதினால் - அதன் மூலம் புலிகள் தமிழ் மக்களின் உயர்வுக்காக நேர்மையாக, உண்மையாக உழைத்தவர்கள் என்பது நிரூபிக்கப்படுகிறது.

கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் தமிழின படுகொலையாளர்களுடன் - தமிழின விரோத சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்த கயவர்கள், தமிழ் மக்களின் உயர்வுக்காக நேர்மையாக உழைக்கும் ஒருசிலரை சுயநலம் - பொறாமை போன்ற இழிகுணங்களால் பகைத்த ஒருசிலர், மேலும் இது போன்றவர்கள் ஓரணி சேர்ந்து சேறு வீசிப்பார்ப்பது போன்றவை தமிழ் மக்களுக்கு புதுமையானது அல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

யாழ் புலிகள் ஆதரவு இணையம் என்று தெரிந்து தான் எழுத தொடங்கினேன்.அரசியலுக்கு அப்பால் நானறிந்த இணையங்களுக்குள் சிறந்துது யாழ் தான் .அரசியலில் கூட கருத்து சுதந்திரம் என்ற ஒன்றை எல்லோருக்கும் கொடுத்துவிட்டால் இன்னும் மிளிரும் .கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அவதூறுகளுக்கு இடம் கொடுக்க கூடாது.

கடவுளை வழிபடுபவர்களில் கடவுளை உண்மையாக நம்புபவர்கள்,நம்பாமல் ஆனால் கள்ள சாமிவேடம் போடுபவர்கள் இருப்பதுபோல் தேசியத்திலும் இருக்கு .அதை அவர்கள் எழுத்தை வைத்தே பிடித்துவிடலாம்.கள்ள சாமிமார்களுக்கு நான் பெரும்பாலும் பதில் எழுதுவதில்லை.

அடுத்து புலிஎதிர்ப்பு என்பது பற்றி பலமுறை எழுதினேன் .தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்காலத்திற்கும் குழி பறிக்க போகின்றார்கள் என்பதால் தான் புலிகளின் அரசியல் நிலைபாட்டிற்கு எதிர்ப்பே ஒழிய தனி நபர்களாக யார் மீதுமில்லை .

உமா கொலை செய்யப்பட்டு சில மாதங்களில் கிருஷ்ணன் கனடா வந்தார் ,ஒரு குறிப்பிட்ட சிலர் ஒன்று கூடினோம் .அதில் உமா கொல்லப்படவேண்டியயவர் என்று அடித்து நான் சொன்னேன் .நான் மிகவும் மதித்த ஒருவர் .எனக்கு தனிப்பட ஒரு கஷ்டமும் தரவில்லை ,வேண்டிய பணமமும் தந்து என்னை மிக சுதந்திரமாக நடமாட விட்டவர் .ஆனால் சிங்களத்துடன் தொடர்பு வைத்து கொழும்பில் கொலைகள் செய்ய தொடங்க அது நிற்பாட்ட படவேண்டியது கட்டாயம் என்று உணர்ந்தேன் .தனிநபராக அவரில் மதிப்பு இருந்தாலும் அரசியலில் நிறுத்தப்பட வேண்டியவர் ஆகிவிட்டார் .

புலிகளும் அதே நிலைக்கு தொடர்ந்து சென்று கொண்டே இருந்தார்கள் .முற்றுப புள்ளி என்பது கட்டாயம் என்றாகிவிட்டது.

அண்ணா புலிகள் அழிக்கப் பட வேண்டியவர்கள் என சொல்கிறீர்கள் சரி இனி மேல் என்ன செய்வதாக உத்தேசம்...அங்குள்ள மக்கள் நிம்மதியாக இருக்கிறார்களா?...அவர்களுக்கான உரிமைகள்,குறைந்த பட்சம் அடிப்படை உரிமைகளாவது கிடைத்து உள்ளதா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.