Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தம்பையா வாத்தியார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

sleepy_teacher.gif?w=225

[size=4]அண்டைக்கு, லீவு முடிஞ்சு பள்ளிக்கூடம் தொடங்கிற நாள்!

விடியக் காலமை எட்டு மணிக்கே, தம்பையர் பள்ளிக் கூட வாசல்ல பிரம்போட நின்று கொண்டிருந்தார்! அவற்றை வீடும், பள்ளிக்கூடத்திற்குப் பின்னால தான் இருந்தது!

நாங்கெல்லாம், லீவில போனப் பிறகு, அந்த ஊரிலுள்ள ஆட்டிக்குட்டியளெல்லாம், படிக்க வெளிக்கிட்டுதுகள் போல. பள்ளிக்கூடம், முழுவதும், ஒரே ஆட்டுப் புழுக்கையும், மூத்திர மணமுமாக் கிடந்தது. வயது போன ஆக்களும் வந்து படிச்சிருக்கினம் போல கிடக்கு! கரும்பலகையில இருந்த படங்கள் சிலது, கோரியாவடி வெளிச்ச வீட்டில கீறிக்கிடந்த படங்கள் மாதிரிக் கிடந்தது! வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குடுத்த சேர்ட்டிபிக்கேற்றுக்களால நிரம்பிக் கிடந்தது!

எனக்கும், தம்பிக்கும் அண்டைக்குப் பெரும் புழுகம். தீபாவளிக்கு, அப்பா வாங்கித் தந்த, போலீஸ்காரன் காச்சட்டையும், சேட்டும் போட்டுக் கொண்டு போன படியால் எல்லாரும், எங்களை ஒரு மாதிரிப் பொறாமையோட பாத்த மாதிரிக் கிடந்தது.

வாத்தியாரைப் பற்றிக் கனக்கக் கதையள், ஊரில கதைப்பினம்!

ஒருநாள், வாத்தியார், வாயை திறந்து வைச்சுக் கொண்டு இருந்தார். அப்ப அவற்றை நாக்குக் கொஞ்சமா ஆடிக்கொண்டேயிருந்துது.

ஏன் வாத்தியார், உங்கட நாக்கு ஆடிக் கொண்டேயிருக்குது எண்டு கேட்க, வாத்தியார் சொன்னார்.

தம்பி, படிச்ச ஆக்களின்ர நாக்கில சரஸ்வதி நடனமாடுவாவாம்! அது தான், அவ ஆடெக்க, தன்ர நாக்கும் நடுங்குது எண்டு சொன்னார்!

அதுக்குப் பிறகு, ஒவ்வொரு நாளும், கண்ணாடிக்கு முன்னால நிண்டு, நாக்கைப் பாக்கிறது தான், எனக்கும் வேலை! சரஸ்வதி, என்ர நாக்குக்கு கடைசி வரையும் வரவேயில்லை!

சின்ன வயசிலேயே வாத்தியாருக்கு, விஞ்ஞான மூளை வந்திட்டுதாம்.

வாத்தியார் வீட்டில, தீபாவளிக்கு, 'மான் மார்க்' வட்டப் பெட்டி, சீன வெடி வாங் கினவையாம்! யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக்க, காருக்கு மேல வைச்சு வெடியைக் கட்டிப் போட்டாங்களாம். வாற வழியில மழை தூறியிருக்குப் போல கிடக்கு! வெடிப் பக்கற், நனைஞ்சு போச்சுது போல கிடக்கு! அடுத்த நாள் காலமை, வெடியை எடுத்துக் கொழுத்தத் திரி மட்டும் எரிஞ்சுது! நல்ல நாளும், பெரிய நாளுமா, வாத்தியாருக்கு அழுகையே வந்திட்டுது! தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்!

இதே போல, வாத்தியாருக்குப் படிப்பிச்ச வாத்தியார், 'பாவ்லோ தியறி' எண்டு ஒண்டைச் சொல்லிக் கொடுத்தவராம்! நாய்க்குச் சாப்பாடு வைக்கேக்கை, இந்த 'பாவ்லோ' எண்ட விஞ்ஞானி, மணி அடிப்பாராம். கொஞ்ச நாள் போக, ஒவ்வொரு நாளும் மணியடிக்கிற நேரத்தில,சாப்பாடு இல்லாமலே நாயின்ர வாயில, உமிழ் நீர் வடியத் துவங்கீற்றுதாம்! வாத்தியாரும் இதை வேற விதமாய்ச் செய்து காட்டினாராம். கொண்டாட்டங்களில வெடிக்கிற 'சர வெடிப்பக்கற்' ஒண்டை வாங்கி, வெடியளைக் கொஞ்சம், கொஞ்சம் இடைவெளி விட்டுக் கட்டினாராம்! பிறகு, வெடிப்பக்கற்றோட, தன்ர நாயையும் கூட்டிகொண்டு, கடற்கரைப் பக்கம் போனாராம். பரிசோதனை, வெற்றி என்பதை, உறுதிப் படுத்த, ஊரில பெரிய ஆக்கள், நாலைஞ்சு பேரையும் கூட்டிக்கொண்டு போனாராம். பிறகு, ஒருத்தரும் எதிர்பாராத மாதிரி, நாயின்ர வாலில, வெடிக் கோர்வையைக் கட்டிக் கொழுத்தி விட்டாராம்! முதல் வெடி வெடிக்க, நாய் ஓடத் துவங்கிப் பிறகு, மெல்லமா நடக்கத் துவங்க அடுத்த வெடி வெடிக்க, நாய் மீண்டும் ஓடத்துவங்கிப் பிறகு மெதுவாக.....

எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்!

ஒரு நாள், வாத்தியார், தான் சொல்லுற இடத்தில போய்ப் பால் வாங்கிக் கொண்டு வந்து, தங்கட வீட்டில கொடுத்து விடச் சொன்னார்! நானும், பாலை வாங்கிக் கொண்டு போகேக்க அந்தப் போத்திலுக்கிள்ளை, பால் நுரைச்ச படி இருந்துது. அதுக்கிள்ள கன பூச்சியளும் செத்துப் போய் மிதந்து கொண்டு இருந்திச்சு! நானும் பாலைக் கொண்டு போய், வாத்தியாரின்ர அவவிட்டைக் குடுத்துப் போட்டு வீட்டை போய்ற்ரன்!

அப்பாட்ட ஒரு நாள், அப்பா! வாத்தியார் வீட்டுக்கு வாங்கிக் குடுத்த பால், கொஞ்சம் பழுதாய்ப் போச்சுது போல கிடக்கு எண்டு சொல்ல, அப்பாவுக்குப் பொல்லாத கோவம் வந்திட்டுது!

அவர் இனிமேல் அந்தப் பள்ளிக்குடப் பக்கம், தலை வைச்சுப் படுக்கக் கூடாது, எண்டு சொல்லி, என்னையும், தம்பியையும், வேற பள்ளிக் குடத்துக்கு மாத்திப் போட்டார்! எனக்கெண்டா இண்டைக்கு வரைக்கும், ஏனெண்டு விளங்கேல்ல!

நீங்களாராவது, ஏன் எண்டு சொல்லுவீங்களா?[/size]

[size=5]; [/size]

Edited by புங்கையூரன்

[size=5] [/size][size=5]அது கள்ளுப்பால் :rolleyes:[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]பகிர்விற்கு நன்றி [/size][size=1]

[size=5](pavlov=இசைவாக்கம் )[/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

நுரைக்கிற பால் எதுவெண்டு தெரியாத அளவிற்கு அப்பாவியா நீங்கள். :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கதை நல்லா தமாஷா எழுதி இருக்கிறிங்கள் அண்ணா. எனக்கு சிரிச்சு வயிறு வலிக்குது. :D

" தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்! "

.......................................

"எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்! "

பிடிச்ச இடங்கள்.. :)

ஆனால் கடைசியிலை ஒண்டு சொன்னிங்கள் பாருங்கோ !!!! முடியலை ........ :lol:<_< :wub: :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைக்கு தான் பூங்கையூரனின் பதிவினைப் படித்தேன். வித்தியாசமான நடை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=5]அது கள்ளுப்பால் :rolleyes:[/size]

அகூதா, வளர்ந்த பிறகு தான் தெரியும், பனையிலையும் பால் கறக்கலாமேன்று! :lol:

கருத்துக்கு நன்றிகள்!

[size=5]பகிர்விற்கு நன்றி [/size]

[size=1][size=5](pavlov=இசைவாக்கம் )[/size][/size]

'இசைவாக்கம்' நல்ல தமிழ் வார்த்தை!

கருத்துக்கு நன்றிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

sleepy_teacher.gif?w=225

-------

[size=4]வாத்தியாரும், அந்த நாளையில நல்லாப் படிச்சவரா இருந்திருக்க வேண்டும்! அவற்றை வீட்டுச் சுவரெல்லாம், கொழும்பு விவேகானந்த சபையில குடுத்த சேர்ட்டிபிக்கேற்றுக்களால நிரம்பிக் கிடந்தது!

வாத்தியார் வீட்டில, தீபாவளிக்கு, 'மான் மார்க்' வட்டப் பெட்டி, சீன வெடி வாங் கினவையாம்! யாழ்ப்பாணத்திலை இருந்து வரேக்க, காருக்கு மேல வைச்சு வெடியைக் கட்டிப் போட்டாங்களாம். வாற வழியில மழை தூறியிருக்குப் போல கிடக்கு! வெடிப் பக்கற், நனைஞ்சு போச்சுது போல கிடக்கு! அடுத்த நாள் காலமை, வெடியை எடுத்துக் கொழுத்தத் திரி மட்டும் எரிஞ்சுது! நல்ல நாளும், பெரிய நாளுமா, வாத்தியாருக்கு அழுகையே வந்திட்டுது! தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்! [/size]

[size=4]-------[/size]

நல்ல நகைச்சுவைக்கதை புங்கையூரான்.

அங்காலை வொல்கானோவும் பள்ளிக்கூட கதை ஒன்று எழுதியுள்ளார்.

யாழ்கள பெரிசுகளுக்கு எல்லாம்.... ஸ்கூல் ஞாபகம் வந்திட்டுது போலை கிடக்குது. :D:lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுரைக்கிற பால் எதுவெண்டு தெரியாத அளவிற்கு அப்பாவியா நீங்கள். :lol: :lol:

சொன்னா நம்ப மாட்டீங்க, சாத்திரி!

அந்த நேரத்தில, இருந்து இந்த நேரம் வரைக்கும் ஒரு பெரிய அப்பாவி!

கருத்துக்கு நன்றிகள்!

கதை நல்லா தமாஷா எழுதி இருக்கிறிங்கள் அண்ணா. எனக்கு சிரிச்சு வயிறு வலிக்குது. :D

" தீபாவளிக்குக் கடையளெல்லாம் பூட்டிப் போட்டாங்கள்! அப்பத் தான் வாத்தியாருக்கு, அந்த ஐடியா வந்திருக்க வேணும். கச்சான் வறுக்கிற பெரிய தாச்சியை அடுப்பில வைச்சு, கீழ நெருப்பெரிச்சு, அந்த வெடியெல்லாத்தையும், தாச்சிக்குள்ள போட்டு வறுக்க, அவ்வளவு வெடியும் பெரிய சத்தத்தோட வெடிக்க, அந்தப் பக்கத்திலேயே வாத்தியார் வீட்டுத் தீபாவளி தானாம் நல்லாயிருந்ததாம்! "

.......................................

"எல்லா வெடியும் முடிஞ்சப் பிறகும், கொஞ்ச நாளைக்கு, நாய் ஓட்டமும், நடையுமாய், அதே 'டைமிங்கை' மாத்தாம இருந்ததாம்! "

பிடிச்ச இடங்கள்.. :)

ஆனால் கடைசியிலை ஒண்டு சொன்னிங்கள் பாருங்கோ !!!! முடியலை ........ :lol:<_< :wub: :D :icon_idea:

கருத்துக்கு நன்றிகள், தம்பி!

'சிரித்து வாழ வேண்டும்!

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே!'

இது தான் நம்மட 'பிலாசபி' :D

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த கள்ளுப்பால் புளிச்சால்தான் ருசி

யாழ்கள பெரிசுகளுக்கு எல்லாம்.... ஸ்கூல் ஞாபகம் வந்திட்டுது போலை கிடக்குது.

அடுத்த முறை நானும் பள்ளிக்கூட கதை எழுதப்போறன்:D

  • கருத்துக்கள உறவுகள்

நுரைக்கிற பால் எதுவெண்டு தெரியாத அளவிற்கு அப்பாவியா நீங்கள். :lol: :lol:

புங்கையூர் மண்ணின் மைந்த்தனா இப்படிச்சொல்வது ? :(

  • கருத்துக்கள உறவுகள்

நுரைத்தபடி இருந்தால் அது உடன் பாலா?

அல்லது புளித்த பாலா? :D

கதைமூலம் சிரிக்க வைத்த புங்கையுரானுக்கு நன்றி கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ இந்த கள்ளுப்பால் புளிச்சால்தான் ருசி

அடுத்த முறை நானும் பள்ளிக்கூட கதை எழுதப்போறன் :D

இல்லை, புத்தன்!

கள்ளு புளிக்காத போது தான் 'ருசி'.

ஆனால் கிக் இருக்காது!

புளிச்சால் தான் ஒரு 'இது' இருக்கும்!

உங்கள் பள்ளிக் கூடக் 'கிறுக்கல்களை' ஆவலுடன் எதிர்பார்க்கின்றேன்!

கருத்துக்கு நன்றிகள்!

புங்கையூர் மண்ணின் மைந்த்தனா இப்படிச்சொல்வது ? :(

கூவில் கள்ளு, அடித்துப் பார்த்திருக்கிறீர்களா, நந்தன்!

அந்த மாதிரிக் கூவும், எண்டு கேள்வி! :o

நுரைத்தபடி இருந்தால் அது உடன் பாலா?

அல்லது புளித்த பாலா? :D

கதைமூலம் சிரிக்க வைத்த புங்கையுரானுக்கு நன்றி கள்

உடன் பாலும் நுரைக்கும்!

உடன் கள்ளும் நுரைக்கும்!

வித்தியாசம், உடன் பால் சூடாக இருக்கும்!

உடன் கள்ளு, வெளியே இருக்கும் வரை சுடாது!

வருகைக்கு நன்றிகள், வாத்தியார்! :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு புங்கையூரன், நல்லவிதமாக எழுதியுள்ளீர்கள், சுருட்டு, பீடி,..இதுகள் வாங்க சிறுவர்களை பாவிப்பது தடை செய்ய வேண்டும்,

பீடி வாங்கவிட்டு பீடி அடிச்சம், அப்பத்துக்கு கள்ளு வாங்க அனுப்ப, இரவில இறங்கி குடிக்க பழகினம், நல்ல பிள்ளைகளான எங்களை கெடுத்தது சமூகம்தான் :D

  • கருத்துக்கள உறவுகள்

கிகிகி...அந்தமாதிரிக் கதை நல்ல கலகலப்பான எழுத்து நடையுடன்...அருமை அண்ணா..தொடருங்கள் உங்கள் கதைப் பயணத்தை...நல்லவேளை அந்தப்பால்தான் வேணும் எண்டு அந்தவயதில் உங்கள் அப்பாவிடம் அடம்பிடிக்கவில்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு புங்கையூரன், நல்லவிதமாக எழுதியுள்ளீர்கள், சுருட்டு, பீடி,..இதுகள் வாங்க சிறுவர்களை பாவிப்பது தடை செய்ய வேண்டும்,

பீடி வாங்கவிட்டு பீடி அடிச்சம், அப்பத்துக்கு கள்ளு வாங்க அனுப்ப, இரவில இறங்கி குடிக்க பழகினம், நல்ல பிள்ளைகளான எங்களை கெடுத்தது சமூகம்தான் :D

கருத்துக்கும், வருகைக்கும் நன்றிகள், உடையார்!

பீடிக் கட்டில, ஒன்றை உருவி எடுத்தால், தெரியவா போகுது?

ஆனால், அப்பத்துக்குத் தாற கள்ளில குடிச்சு, மிச்சம் வீட்டையும் கொண்டு வாறது பெரிய விசயம் தான்! :o

கிகிகி...அந்தமாதிரிக் கதை நல்ல கலகலப்பான எழுத்து நடையுடன்...அருமை அண்ணா..தொடருங்கள் உங்கள் கதைப் பயணத்தை...நல்லவேளை அந்தப்பால்தான் வேணும் எண்டு அந்தவயதில் உங்கள் அப்பாவிடம் அடம்பிடிக்கவில்லை...

சுபேசைக் கண்டதே மிகவும் மகிழ்ச்சி!

அந்தப் பால் தான் வேணும் எண்டு அடம் பிடிச்சிருந்தால், இண்டைக்கு அய்யா, சாரத்தை முழங்கால் வரையும், தூக்கிப் பிடிச்சபடி 'குறை பீடி' தான் பொறுக்கிக் கொண்டிரிந்திருப்பார்! :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.