Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது

Featured Replies

[size=4]கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது: கொழும்பு மேயர் முஸம்மில[/size]

பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவை எவரும் முட்டாளாக்க முடியாது என கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறியுள்ளார்.

கொம்பனித்தெரு பகுதியில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களால் பாதிக்கப்பட்ட மக்களுடனா சந்திப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்றபோதே அவர் இவ்வாறு கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷம் இந்நிகழ்வில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

' கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்குமாறு பலர் என்னை வலியுறுத்தினர். ஆனால் அவரை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை நான் அறிவேன். அப்படி செய்வதற்கு ஒரு ஜெனரல் முயன்றார். தற்போது அவர் வீPழ்ந்துவிட்டார்' என மேயர் ஏ.ஜே.எம். முஸம்மில் கூறினார்.

பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையை மேயர் நிராகரித்ததாக எதிர்க்கட்சி (ஐ.ம.சு.கூ) உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி, கொழும்பு மாநகர சபையின் செங்கோலை நேற்று கைப்பற்றி ஆர்ப்பாட்டம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

http://www.tamilmirr...1-15-13-08.html

Edited by akootha

[size=4]இப்படியெல்லாம் முஸம்மில் மன்னிப்பு கேட்க இனி காலம் கடந்துவிட்டது. ஆனால் உயிர் வாழவேண்டுமாயின் நன்றியை இன்னமும் பணமாகத்தரலாம். [/size]

இனி அவரை யாராலும் முட்டாளாக்க முடியாது.

முட்டாளை எப்படி திரும்ப முட்டாளாக்க முடியும் நீங்களே சொல்லுங்க :lol::icon_idea:

கோத்தபாய முட்டாள் அல்ல. மிகவும் அறிவுள்ள மோசமான ஒரு எதிரி.

புலிகளின் வீழ்ச்சிக்கு மிகவும் நுட்பமாக திட்டமிட்டவர்களில் ஒருவர் கோத்தா. எதிரிகளின் பலவீனங்களை எடை போடுவது, எதிரிக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரித்தாடுவது, உலக போக்கை நன்கு புரிந்து தமக்குள் முரண்படும் நாடுகளைக் கூட இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவந்தது, இராணுவத்தில் இருக்கும் பல பலவீனங்களைக் களைந்து நடவடிக்கை எடுத்தது, தகுந்தவர்களை வயது, பணிக்காலம் என்பனவற்றைக் கருதில் கொள்ளாது அவர்களின் இராணுவ ரீதியான திறமைகளையும், தமிழர் விரோத, மானிட விரோத போக்குகளையும் மட்டும் கணக்கில் எடுத்து போர்முனைகளுக்கு தளபதிகளாக்கியது என்று பல விடயங்களில் முன்னுக்கு வருபவர் கோத்தா. இராணுவத்தின் வெற்றிகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாகிய சரத் பொன்சேக்காவை செல்லாக்காசு ஆக்கிய பெருமையும் இவரைத்தான் சேரும். மகிந்த அரசின் முதுகெலும்பு இவர்

எப்பவும் எதிரிகளின் பலத்தை சரியாக கணிக்காமல், எமக்குள் இருக்கும் மிக மோசமான பலவீனங்களை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களை மொக்குகள் என்றும் முட்டாள்கள் என்றும் கணிப்பதும், எம்மை அதி புத்திசாலிகள் என்று கனவு காணுவதும் எமக்குள் இருக்கும் இன்னொரு பலவீனம்.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கருத்து

  • தொடங்கியவர்

[size=4]கோத்தா + மகிந்த கூட்டம் இராணுவ ரீதியாக புலிகளை வெற்றிகரமாக தோற்கடித்தனர் என்பது உண்மை.[/size]

[size=4]ஆனால், அவர்கள் அதற்கு பின்னாலான காலப்பகுதியில் தொடர்ந்தும் அதே இராணுவ போக்குடன் ஜனநாயக ஆட்சி செலுத்துகின்றனர். ஒருநாள் இவர்கள் சிங்கள மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள்.[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போர் குற்ற கைதியாகும் வரை கோத்தபாய முட்டாள் இல்லை.

மகிந்த போர் குற்ற கைதியாகும் வரை கோத்தபாய முட்டாள் இல்லை.

இதன் கருத்து தமிழர் தமது விடுதலை போராட்டத்தை சரியாகத்தான் கொண்டு செல்கிறார்கள் என்பதல்ல கருத்து.

ஆனால் இதே கோபத்தபயா தனது அமெரிக்க வாழ்வில் எதையும் சாதிக்கவில்லை என்பதும், தமிழரின் போராடத்தில், இராமநாதன், அருணாசலம், பொன்னம்பலம், செல்வநாயகம், அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் வரையும் எல்லோருமே தோற்றார்கள் என்பதும் இவர்கள் யாரும் கோபத்தபயா காலத்தில் அவரால் தோற்கடிக்கப்பட்டிருக்கவில்லை என்பதையும் நாம் நினைவு படுத்த வேண்டும். ஆக தலைவரும் சம்பந்தரும் மட்டும் தான் தங்கள் போராட்டங்களை கோபத்தபயா காலத்தில் நிகழ்த்தினார்கள்.

மேலும் பூர் கலிபா அடுக்கு மாளிகையை கட்ட தேவையான தொழில் நுட்பம் இன்று நேற்று கிடைத்த பொருள் அல்ல. மனிதகுலம் பல உயர கோபுரங்களை தங்கள் வாழ்நாளில் கட்டிய வெற்றி தோல்விகளின் படிகளில் ஒன்றுமட்டுமே அது. "ஒரு பாதையில் கிடந்த ஒரு பள்ளத்தில் ஒவ்வொரு ஆடுகளாக விழுந்தன. கடைசி ஆடு அவற்றின் மீது ஏறிச்சென்று பள்ளத்தை கடந்தது. இலங்கைக்கு இலங்கையின் எதிரிகளும், தமக்குள்தாம் எதிரிகளுமாய் இருந்த பல நாடுகள் உதவியதற்கு காரணம் சந்திரிக்கா தெரிந்தெடுத்த வெளிநாட்டு அமைச்சர் கதிர்காமர். அதனால்த்தான் இன்றும் இலங்கையில் வெளிநாடு அமைச்சர் பிரபலமானவராக காணப்படுகிறார். இந்தியாவின் மாகாணமாக மாறியிருக்கவேண்டிய இலங்கையை காத்தவர் JR

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த போர் குற்ற கைதியாகும் வரை கோத்தபாய முட்டாள் இல்லை.

இதுதான் உண்மை

மகிந்தர் கைதாகி தமிழர் விடுதலையாகும்போது

கோத்தபாய முட்டாளாகி இருப்பார்

தலைவர் தீர்க்கதரிசியாக எம்முடன் வீற்றிருப்பார்.

அதற்காக இன்றே எல்லோரும் ஒற்றுமையாக காய்களை நகர்த்துவோம்.

இல்லையென்றால் முட்டாள்கள் எம்மை ஆண்டு புத்திசாலிகளாக வலம் வருவது தொடரும்.......

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபயவை முட்டாளாக்க யாராலும் முடியாது

அமெரிக்கா + மேற்குலக நாடுகள் (VS) தமிழர் விரோத தேசம்(கிந்தியா)+ சிங்களம் + சீனா + அரபு சேக்கு நாடுகள்

டிஸ்கி:

உலக விளையாட்டு இதான் .. இதில் ஈழ தோழர்கள் கரெக்டா காயை நகர்த்தணும் .. அவன் சாணக்கியன் என்றால் நாம சகுனி என்று பூருப் பண்ணணும்... :rolleyes: :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

[size=4]அவர்கள் அதற்கு பின்னாலான காலப்பகுதியில் தொடர்ந்தும் அதே இராணுவ போக்குடன் ஜனநாயக ஆட்சி செலுத்துகின்றனர். ஒருநாள் இவர்கள் சிங்கள மக்களாலேயே தூக்கி எறியப்படுவார்கள்.[/size]

உண்மை.

அதே நேரம் சிங்களம் தனது இருப்பிற்காக, தனது தலைமைகளை பலிக்கடாவாக்கத் தயங்காது. போர்க்குற்றம் நிருபிக்கப்பட்டால், ராஜபக்ச & Co வை பலி கொடுத்து விட்டு, காலத்திற்கேற்ப மேற்குலகு சார்பான புதிய தலைமையை உருவாக்கிக் கொள்ளும். தலைமை என்னதான் தலை கீழாக நின்று ஆட்டம் போட்டாலும் பொறுத்துக் கொள்ளும் சிங்களம், இனத்திற்கு பாதகமாக அவர்கள் வருகையில் விட்டு வைத்திருக்காது.

காரணம் அரசியல் தலைமை கட்சிகளிடம் இருந்தாலும், இனத்தின் எதிர்கால நன்மைகளைத் தீர்மானிப்பவர்கள் பிக்குகளே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கோத்தபாய முட்டாள் அல்ல. மிகவும் அறிவுள்ள மோசமான ஒரு எதிரி.

புலிகளின் வீழ்ச்சிக்கு மிகவும் நுட்பமாக திட்டமிட்டவர்களில் ஒருவர் கோத்தா. எதிரிகளின் பலவீனங்களை எடை போடுவது, எதிரிக்குள் இருக்கும் ஒற்றுமையை பிரித்தாடுவது, உலக போக்கை நன்கு புரிந்து தமக்குள் முரண்படும் நாடுகளைக் கூட இலங்கைக்கு ஆதரவாக கொண்டுவந்தது, இராணுவத்தில் இருக்கும் பல பலவீனங்களைக் களைந்து நடவடிக்கை எடுத்தது, தகுந்தவர்களை வயது, பணிக்காலம் என்பனவற்றைக் கருதில் கொள்ளாது அவர்களின் இராணுவ ரீதியான திறமைகளையும், தமிழர் விரோத, மானிட விரோத போக்குகளையும் மட்டும் கணக்கில் எடுத்து போர்முனைகளுக்கு தளபதிகளாக்கியது என்று பல விடயங்களில் முன்னுக்கு வருபவர் கோத்தா. இராணுவத்தின் வெற்றிகளுக்கு முக்கிய காரணகர்த்தாவாகிய சரத் பொன்சேக்காவை செல்லாக்காசு ஆக்கிய பெருமையும் இவரைத்தான் சேரும். மகிந்த அரசின் முதுகெலும்பு இவர்

எப்பவும் எதிரிகளின் பலத்தை சரியாக கணிக்காமல், எமக்குள் இருக்கும் மிக மோசமான பலவீனங்களை கருத்தில் கொள்ளாமல் மற்றவர்களை மொக்குகள் என்றும் முட்டாள்கள் என்றும் கணிப்பதும், எம்மை அதி புத்திசாலிகள் என்று கனவு காணுவதும் எமக்குள் இருக்கும் இன்னொரு பலவீனம்.

  • தொடங்கியவர்

உண்மை.

அதே நேரம் சிங்களம் தனது இருப்பிற்காக, தனது தலைமைகளை பலிக்கடாவாக்கத் தயங்காது. போர்க்குற்றம் நிருபிக்கப்பட்டால், ராஜபக்ச & Co வை பலி கொடுத்து விட்டு, காலத்திற்கேற்ப மேற்குலகு சார்பான புதிய தலைமையை உருவாக்கிக் கொள்ளும். தலைமை என்னதான் தலை கீழாக நின்று ஆட்டம் போட்டாலும் பொறுத்துக் கொள்ளும் சிங்களம், இனத்திற்கு பாதகமாக அவர்கள் வருகையில் விட்டு வைத்திருக்காது.

காரணம் அரசியல் தலைமை கட்சிகளிடம் இருந்தாலும், இனத்தின் எதிர்கால நன்மைகளைத் தீர்மானிப்பவர்கள் பிக்குகளே.

[size=4]பலமான ஒரு இராணுவக்கட்டமைப்பை இன்று சிங்களம் கொண்டுள்ளது. பொருளாதார அடிப்படையில் இந்தப்பலம் தக்கவைக்கப்படும் என்றால் அந்த சக்தி பிக்குகளை விட ஒரு முக்கிய பாத்திரத்தை ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வகிக்கும். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா ஒப்பரேசன் லிபரேசனில் இருந்து.. 1991 இல் மண்டை தீவு பிடிக்கப்படும் வரை.. டென்சில் கொப்பே கடுவவின் கீழ் செயற்பட்டவர். பின்னர் நாட்டை விட்டு வெளியேறினார்.

கோத்தபாய.. பின்னர் மீண்டும் மகிந்த ஜனாதிபதியானதும்.. வந்து குந்திக் கொண்டார்..!

இவரின் முழுத் திறமையால் தான் யுத்தம் வெல்லப்பட்டது என்பது மாயை..! இவர் சூழ்நிலைகளை தங்களுக்குரிய வகையில் பாவித்துக் கொண்டார்.. அவ்வளவு தான்..! நாம் பாவிக்கத் தவறினோம்.. தோற்க வேண்டி வந்துவிட்டது.

சர்வதேசத்தில் சிறீலங்கா இராணுவத்தை பலப்படுத்தியதும்.. விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தியதும்.. மகிந்தவோ.. கோத்தாவோ அல்ல. சந்திரிக்காவும்.. கதிர்காமரும்.. ரணிலுமே முதன்மையானவர்கள்..!

2002 போர் நிறுத்த உடன்படிக்கையின் பின் இராணுவத்தை வலுவாக கட்டி அமைத்து விடுதலைப்புலிகளின் இராணுவ வழங்கலை கட்டுப்படுத்தி.. 2004 இல் உட் பிளவுகளை ஆளப்படுத்தி.. புலிகள் அமைப்பை பலவீனப்படுத்திய பொறுப்பு.. சந்திரிக்கா அம்மையாரையும்.. ரணிலையும் சாரும்..!

ஆனால் மகிந்த கூட்டணி.. தனக்கான சந்தர்ப்பத்தை சரியாக பாவித்துக் கொண்டது..! அதே நேரம்.. இதே.. கோத்தாவை சிங்கள மக்கள் வெறுக்கும் நாளும் அதிக தூரமில்லை. காரணம்.. மகிந்த குடும்பக் கூட்டணிக்கு வந்துள்ள அதிகார ஆசை..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலையை தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவிபதற்க்கும் ஒரு திறமை வேண்டும் அல்லவா

கோத்தபாய அவர்களுடைய திட்டமிடலில் தான் புலிகள் என்று சந்தேகிக்க பட்ட அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து Colombo மலையகம் என்று வெள்ளை வானில் கடத்தபட்டார்கள் புலிகளுக்கு தகவல் வழங்கியோர்ல இருந்து உதவி செய்தோர் மற்றும் புலிகளின் ஆக்கள் என்று சந்தேகிக்கபட்டோர் என்று எதுவித தயவு தாட்சணியம் இன்றி அவருடைய திட்டமிடலில் தான் கடத்த பட்டார்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சூழ்நிலையை தங்களுக்கு ஏற்ற மாதிரி பாவிபதற்க்கும் ஒரு திறமை வேண்டும் அல்லவா

கோத்தபாய அவர்களுடைய திட்டமிடலில் தான் புலிகள் என்று சந்தேகிக்க பட்ட அனைவரும் யாழ்பாணத்தில் இருந்து Colombo மலையகம் என்று வெள்ளை வானில் கடத்தபட்டார்கள் புலிகளுக்கு தகவல் வழங்கியோர்ல இருந்து உதவி செய்தோர் மற்றும் புலிகளின் ஆக்கள் என்று சந்தேகிக்கபட்டோர் என்று எதுவித தயவு தாட்சணியம் இன்றி அவருடைய திட்டமிடலில் தான் கடத்த பட்டார்கள்.

இதையே தான் பிரேமதாச ஜே வி பிக்கு எதிராகவும் செய்தார். அந்தந்தச் சூழ்நிலைகள் அவர்களுக்கு சாதகமாக அமைந்து கொண்டன.. பாவித்தார்கள்..! பிரேமதாசவோ.. உடுகம்பொலவோ.. போர்க்குற்ற விசாரணைக்கோ.. ஐநா விசாணைக்கோ.. உட்படவில்லை..! ஜே வி பி அழிப்பின் போது நடந்த மனிதப் படுகொலைகள் மறைக்கப்பட்டே விட்டன. குழி தோண்டி எலும்புத் துண்டுகளை எடுத்ததோடு சர்வதேசமும்.. மனித உரிமை அமைப்புக்களும் சாந்தமாகிவிட்டன...! (சூரிய கந்த.. எம்பிலிப்பிட்டிய.. புதைகுழிகள்.. சிங்களவர்களுக்கும் சொல்லி இருக்கும்... ஆட்சியாளர்களின் அரச பயங்கரவாதம்.. தங்களையும் பதம்பார்க்கத் தயங்காது என்பதை..!)

ஆனால்.. அடிப்படையில் கதிர்காமர் ஏற்படுத்திக் கொடுத்திருந்த.. சீன.. பாகிஸ்தான் ஆதரவை காட்டி இந்தியாவை பணிய வைத்து மேற்குலகை கைக்குள் போடுவது அல்லது அடக்கி வாசிக்க வைப்பது... இதை தான் இவர்களும் செய்தார்கள்..!

ஜெயசிக்குறு அனுபவங்கள்.. இந்தியப் படை அனுபவங்கள்.. பிற பன்னாட்டு உதவிகள்.. வன்னிக்கான ஆக்கிரமிப்புக்கு உதவின. இதற்கு... கோத்தாவின்.. பெரிய... கண்டுபிடிப்பு அறிவு அவசியமாகத் தெரியவில்லை..! ஜெயசிக்குறு பலவீனங்கள் களையப்பட்டு.. அப்போது சொல்லப்பட்ட ஆலோசனைகள் பின்பற்றப்பட்டு.. ஏலவே உருவாக்கிக் கொடுக்கப்பட்டிருந்த சந்தர்ப்பங்கள் பாவிக்கப்பட்டதில்... தான்.. இந்த இராணுவ வெற்றிகள் அடங்கி இருந்தன. இவரை.. அவையே.. ஹீரோ ஆக்கிக் காட்ட வைத்துள்ளன.

பிரச்சனை.. சந்தர்ப்பங்களை.. நாங்கள் பாவிக்காமல் விட்டது தான். அது தான் எங்கள் முட்டாள் தனம்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எச்சில் சோத்துக்கும் தேவாரம் பாடும் பிச்சைக்காற அரசியல் உள்ள நாட்டில் சொறிநாய்க்கும் மாலை, மரியாதைக்கு பஞ்சம் ஏது??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.