Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒருதலைக் காதல்

Featured Replies

ஒருதலைக்காதல் என்பது, ஒரு வகையான வற்புறுத்தல். தான் விரும்பும் ஒருத்தர் தன்னை விரும்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படும் முறை. மற்றவரை தன் வசப்படுத்த எடுத்துக் கொள்ளும் முயற்சி. இதில் வெற்றியும் கிடைக்கலாம். தோல்வியும் கிடைக்கலாம்.

ஒருவர், இன்னொருவரை காதலிக்க பல காரணங்கள் இருக்கலாம். அதுபோல் ஒருவர், இன்னொருவரை காதலிக்காமல் போகவும் பல காரணங்கள் இருக்கலாம். ஒருதலைக் காதலர்களுக்கு இந்த உண்மை புரியாமல் போவதால், ஒருதலை காதல் ஒரு வன்முறை யாகவே இருந்து கொண்டிருக்கிறது.

பல நேரங்களில் இந்த ஒருதலைக்காதலில் ஏற்படும் முடிவுகள் விபரீதமானதாக இருக்கின்றன. காதல் தோல்வியில் ஏற்படும் வலியும் வேதனையும் இந்த ஒருதலை காதல் தோல்வியிலும் ஏற்படும். இது ஒருவருக்கு வேதனையாகவும், மற்றவருக்கு தொந்தர வாகவும் இருக்கும். சமூகம் ஒருதலைக்காதலரை எரிச்சலோடு பார்க்கும். அந்த ஒருதலைக் காதலர் ஆணாகவும் இருக்கலாம். பெண்ணாகவும் இருக்கலாம்.

இருபக்கத்திலும் பாதிப்புகள் ஏற்படும் என்பதால், இந்த மாதிரியான காதலர்களை பக்கு வமாக கையாள வேண்டும்.

ஒருதலைக்காதலை பொறுத்தவரை, `நடந்தால் நடக்கட்டும். இல்லாவிட்டால் போகட்டும்’ என்று மேம்போக்காக காதலிப்பவர்களும் உண்டு. தன்னை திரும்பிப் பார்த்து தன் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று இன்னொருவர் மீது காதலை திணிப்பவர்களும் உண்டு. தான் விரும்புகிறவர் தன்னை காதலிக்க எந்த முகாந்திரமும் இல்லாத போதும் எப்படியாவது தன் காதல் ஜெயித்து விடாதா என்ற தவிப்புடன் காதலிப்பவர்களும் உண்டு. எது எப்படி இருந்தாலும் ஒருதலைக்காதல் அன்பு நிறைந்ததல்ல! வம்பு நிறைந்தது!

ஒற்றை சக்கர வண்டி ஊர் போய் சேராது. அதனால் இந்த ஒருதலைக் காதலை கைவிடுவது நல்லது. அப்படி முடியாத பட்சத்தில் அடுத்தவருக்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் அமைதியாக இருப்பது காதலுக்கு தரும் மரியாதையாக இருக்கும்.

புகழ் பெற்ற ஒரு ஆங்கில நாவல், ஒருதலை காதலின் தியாகத்தை விளக்கும் வகையில் அமைந்துள்ளது. கதாநாயகனின் காதலை ஏற்றுக் கொள்ளாத நாயகி, தனக்கு பிடித்த ஒருவரை திருமணம் செய்து கொள்வாள். அப்போது கதாநாயகன் `என் உண்மை காதலை உணர்ந்து என்றாவது ஒரு நாள் நீ கண்ணீர்விடுவாய். அப்போது தான் என் தூய்மையான காதல் உனக்குப் புரியும்” என்று கூறுவான். கடைசியில் நாயகியின் கணவனை தூக்கிலிருந்து காப்பாற்றிவிட்டு அவனுக்கு பதில் அவன் தூக்கு மேடையேறிவிடுவான். இறுதியில் அந்த ஒருதலைக்காதலனின் கல்லறையில் நாயகி கண்ணீர் விடுவாள். `உன் ஒருதலை காதலுக்கு நான் தரும் அஞ்சலி இந்த கண்ணீர் துளிகள்’ என்று கூறுவதாக கதை முடியும்.

இப்படி ஒருதலைக்காதலை தியாகத்தில் முடிக் கும் பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கும்? இதை ஒருவிதத்தில் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும், இன்னொரு கோணத்தில் பார்த் தால் `இந்த ஒருதலைக்காதலிக்காக அவர் தூக்கு கயிற்றில் ஏறி இருக்கவேண்டுமா?’ என்ற கேள்வியும் எழும்.

காதல் என்றாலே அது திருமணத்தில் முடிய வேண்டும் என்ற கட்டாயமில்லை. காதல் ஒரு தெய்வீக உணர்வு. மனிதனின் இதயத்தை மென்மையாக்கும் அற்புத உணர்வு அது.

ஆனால் ஒருதலைக்காதல் மேற்கூறியவைகளுக்கு நேர் எதிராக மாறுகின்றன. தெய்வீகத்திற்கு பதில் வெறியையும், மென்மைக்கு பதில் முரட்டுதனத்தை அது உருவாக் கும்.

தான் காதலிக்கும் நபர் தன்னை திரும்பிப் பார்க்கவில்லையே என்ற ஆதங்கம், ஏமாற்றம், வேதனை, ஒரு பொறுமையற்ற நிலையை மனதில் ஏற்படுத்தி அவர்களை ஒரு “சைக்கோ”வாக மாற்றிவிடும் கொடுமையும் இன்றைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கிறது. தான் காதலித்த பெண்ணுக்கு நடந்து விட்ட திருமணத்தை சகித்துக் கொள்ள முடியாமல் அவள் தனியாக இருக்கும் நேரத்தில் வம்பு செய்யும் சோகமும் நிகழத்தான் செய்கிறது. இது சமூகத்தை பெருமளவில் பாதிக்கிறது.

காதல் என்பது உலகையே வாழ வைக்கும் ஒரு உன்னதம். அது இப்படி பழி பாவத்தில் போய் முடிய இந்த ஒருதலை காதல் காரணமாகக் கூடாது. காதலர் தினம் கொண்டாடும் யுகத்தில் உண்மையான காதல் என்பது என்ன என்பதையும் விளக்கிச் சொல்லி இளைய தலைமுறையை வழி நடத்த வேண்டியுள்ளது.

இந்த உலகம் மிகப் பெரியது. ஒருதலைக்காதல் என்ற வட்டத்தில் சிக்கிக் கொள்ளும் இளைஞர்கள் இந்த பெரிய உலகத்தை மறந்து விடுகிறார்கள். தான் செய்யத் துணியும் காரியத்தின் எதிர்விளைவுகளைப் பற்றிய சிந்தனையும் அவர்களுக்கு இருப்பதில்லை. எப்படியாவது போராடி காதலில் வென்றுவிட வேண்டும் அல்லது கொன்றுவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்கள். வேதனையின் விளிம்பிற்கு சென்று தற்கொலை செய்துக் கொள்வேன் என்று மிரட்டவும் செய்கிறார்கள். தற்கொலை செய்து கொள்கிறவர்கள் இந்த மனிதப்பிறவியின் மகத்துவம் புரியாதவர்கள்.

இன்றைய இளைஞர்களும், இளம் பெண்களும் ஒருதலைக்காதலின் சோகத்தை புரிந்து கொண்டு அதிலிருந்து விடுபட வேண்டும். சமூகத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடன் வாழ வழிவிட வேண்டும்.

http://www.paristamil.com/tamilnews/view-news-MjE4Mjg5MjI4.htm

  • கருத்துக்கள உறவுகள்

ம்

  • கருத்துக்கள உறவுகள்

அப்பசொல்லிட வேண்டியது தான் :D

:lol:
  • கருத்துக்கள உறவுகள்
:rolleyes: :rolleyes: :rolleyes:

அப்பசொல்லிட வேண்டியது தான் :D

கெதியிலை சொல்லி விடுங்கோ. வேறை யாராவது முந்திவிடப் போகிறார்கள்.

  • தொடங்கியவர்

அப்பசொல்லிட வேண்டியது தான் :D

யாரும் application போட்டார்களா? அல்லது கு.சா அண்ணா சொன்ன ஆளிட்டை சொல்லப்போறீங்களா? :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தேவையற்ற நேரத்தில்.. எழுந்த.. நிறைய ஒரு தலைக் காதல்களை அறிந்தும் அறியாமலும்.. சாகடித்த பெருமை எனக்கும் உண்டு..! எல்லோருக்கும் அது இருக்கும் என்று நினைக்கிறன். அந்த வகையில்.. சாகடித்த எனக்கு இல்லாத துன்பம்.. சாகக் கொடுத்தவர்களுக்கு இருந்திருக்கும்..! அப்ப எல்லாம் அதை நான் உணர்ந்திருக்கவே மாட்டேன். இப்போ உணர்கிறேன். அவர்கள் அனைவரிடமும் இதயபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..!

யாரின் காதலையும் நிராகரிக்க வேண்டும் என்று நிராகரித்ததில்லை. ஆனால்.. எனது காதல் விளையாட்டு எண்ணங்கள் போக... நான் உண்மையாக காதல் எண்ணம் கொண்ட போது நிராகரிப்பட்ட வேளை அது வேதனையாக இருந்தது. ஆனால் அது தந்த பக்குவம்.. மிகவும் படிப்பினையாக.. வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்ல.. அவசியமானதாக இருந்தது. மேலும் மேலும் என்னை மனதளவில் பலமுள்ளவனாக்கியது..! அந்த அனுபவங்களை தந்தவர்களுக்கு மிக்க நன்றி..!

இன்று காதல் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்.. என் எண்ணத்தில் ஓடும் அந்த அழகான காதல்..எண்ணமுள்ள இன்னொருவர்.. இருக்க வாய்ப்பில்லை என்பதையும் உணர்கிறேன்..! காதல் சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்ட மற்றவரின் அழகை..உணர்தலை.. நடத்தையை.. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவுகளையும் செய்கைகளையும் .. புரிதலைகளையும் ரசிக்கும்.. ஒரு அழகுணர்ச்சி.. அது காமம் கடந்தது என்பது எனது திடமான எண்ணம்..! அது தனக்குரியவரை சொந்தம் கொண்டாடவே விளையும். இருந்தும்.. அவர் சொந்தமற்றதாகும் போது.. அந்த உணர்வும் தற்காலிகமாக மறையும். ஆனால் நிரந்தரமாக மூளையின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும்..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் அண்ணா உங்கள் அனுபவ பகிர்வுக்கு. நீங்கள் விரும்புவது போல் பெண் கிடைப்பது அரிது. ஆனால் கிடைத்தால் சந்தோசம்.... :)

சில ஒரு தலைக் காதல்கள் வந்ததுண்டு. அந்த நேரத்தில சொல்றதற்கு துணிவு இருக்கவில்லை. இப்ப நினைத்தாலும் ஒரு மாதிரியாயிருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரும் application போட்டார்களா? அல்லது கு.சா அண்ணா சொன்ன ஆளிட்டை சொல்லப்போறீங்களா? :D

இந்தப்பிள்ளைக்கு எப்படிசொன்னாலும் புரியுதில்லை :(

  • தொடங்கியவர்

சில ஒரு தலைக் காதல்கள் வந்ததுண்டு. அந்த நேரத்தில சொல்றதற்கு துணிவு இருக்கவில்லை. இப்ப நினைத்தாலும் ஒரு மாதிரியாயிருக்கும்.

நாய்க்குட்டி அண்ணாவும் ஒருதலைக்காதலில் மாட்டியிருக்கிறார்.... :)

இந்தப்பிள்ளைக்கு எப்படிசொன்னாலும் புரியுதில்லை :(

:D :D

சுண்டல் அண்ணாவும் நானும் என்ன தான் பம்பலடிச்சாலும் சகோதரங்கள். நீங்கள் பிழையா விளங்கீடாதீர்கள்.... :)

  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்குட்டி அண்ணாவும் ஒருதலைக்காதலில் மாட்டியிருக்கிறார்.... :)

:D :D

சுண்டல் அண்ணாவும் நானும் என்ன தான் பம்பலடிச்சாலும் சகோதரங்கள். நீங்கள் பிழையா விளங்கீடாதீர்கள்.... :)

சுண்டல் : வட போச்சே :(

  • கருத்துக்கள உறவுகள்

வட போனா என்ன பாஸ் வாய்பான் இருக்கே :D

என்னை ஒருதலையாக(மனசுக்குள்ளே) காதலித்த ஒருத்தியுடன் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பேச கிடைத்தது.

அந்த உணர்வுகளை எப்படி எழுத்திலே எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

அவளுக்கு இப்போ திருமணம் நிச்சயிக்கபட்டு விட்டது.

நாங்கள் இருவரும் இப்போது மனம்விட்டு பேசும் நல்ல நண்பர்கள்.

எங்கள் இருவருக்குமிடையில் அப்படி ஒரு புரிந்துணர்வு.

அவள் அந்த நேரம் காதலை வெளிப்படுத்தி இருக்கலாமே என்று இப்போது அவள் விரும்புகிறாள்.

அவள் மகிழ்வாக வாழ வேண்டும் என்று என் மனம் இப்போ விரும்புகிறது.

எங்கள் இருவருக்குமே இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவரை ஒருவர் தவறவிட்ட வலி இருந்து கொண்டு தான் இருக்கும்.

என்னவோ தெரியவில்லை இதை எழுதும் போதும் அவள் முகம் என் மனசுக்குள்ளே வந்து போவதை என்னால் தடுக்க முடியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

வட போனா என்ன பாஸ் வாய்பான் இருக்கே :D

அப்ப கு .சா வுக்கு ஒரு போனைப் போடு பாஸ் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வைச்சிருக்கிறது வைப்பான் இல்லை பாஸ் அது காத்துப்போன பலூன அதுக்கு போய் பறந்தடிக்கிரின்களே......நீங்கள் எல்லாம் கரந்தடி தாக்குதலுக்கு சரிவரமாடிங்க

  • கருத்துக்கள உறவுகள்

சுண்டல் பனங்காட்டு நரி. சலசலப்புக்கு எல்லாம் அது பயந்தது கிடையாது.! :):lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் பாடலுக்கும்.. ஒரு தலைக் காதலுக்கும் இடையில் தொடர்பு இருக்குது... வரிகள் அப்படி அமைந்துள்ளன. :)

  • தொடங்கியவர்

நன்றி நெடுக்ஸ் அண்ணா.. :D

என்னை ஒருதலையாக(மனசுக்குள்ளே) காதலித்த ஒருத்தியுடன் மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் பேச கிடைத்தது.

அந்த உணர்வுகளை எப்படி எழுத்திலே எழுத முடியும் என்று எனக்கு தெரியவில்லை.

அவளுக்கு இப்போ திருமணம் நிச்சயிக்கபட்டு விட்டது.

நாங்கள் இருவரும் இப்போது மனம்விட்டு பேசும் நல்ல நண்பர்கள்.

எங்கள் இருவருக்குமிடையில் அப்படி ஒரு புரிந்துணர்வு.

அவள் அந்த நேரம் காதலை வெளிப்படுத்தி இருக்கலாமே என்று இப்போது அவள் விரும்புகிறாள்.

அவள் மகிழ்வாக வாழ வேண்டும் என்று என் மனம் இப்போ விரும்புகிறது.

எங்கள் இருவருக்குமே இதயத்தில் எங்கோ ஒரு மூலையில் ஒருவரை ஒருவர் தவறவிட்ட வலி இருந்து கொண்டு தான் இருக்கும்.

என்னவோ தெரியவில்லை இதை எழுதும் போதும் அவள் முகம் என் மனசுக்குள்ளே வந்து போவதை என்னால் தடுக்க முடியவில்லை

நன்றி பகலவன் அண்ணா உங்கள் அனுபவ பகிர்வுக்கு. சேராமல் இருப்பதும் ஒரு சுகம் தான். கவலைப்படாதீர்கள்.

நாய்க்குட்டி அண்ணாவும் ஒருதலைக்காதலில் மாட்டியிருக்கிறார்.... :)

:D :D

சுண்டல்[size=5] அண்ணாவும்[/size] நானும் என்ன தான் பம்பலடிச்சாலும் சகோதரங்கள். நீங்கள் பிழையா விளங்கீடாதீர்கள்.... :)

[size=5]மச்சி, அண்ணா அத்தானாய் கன இடங்களில மாறுறது!! ம்....... துளசி, உண்மையாய் பெண்ணா????????? பெடி என்றால் சகோதரம் தான்.[/size]

[size=5](மச்சி கோவிக்க வேண்டாம்)[/size]

நானும் 16 வயதிலிருந்து எத்தனை பேரை காதலித்தேன் ............ஆனால் ஒருத்தரும் என்னை திரும்பியும் பார்க்கவில்லை .. :D

என் துணைவியை தவிர :) .........................எனக்கும் ஒருதலை காதலின் வலி தெரியும் ................என்று சொல்லவரவில்லை ............ஆனால்

அது கொடுமையானது....................என்பதை மட்டும் அன்று உணர்ந்தேன் ..ஆனால் இன்று எண்டா இப்பிடியெல்லாம் பின்னால நாய் போல திரிந்தாய் என்று யோசிப்பதுன்ன்டு ................ஆகவே இது வயதுக்கு வயதுக்கு மாறிய உணர்வுகளையே ஏற்படுத்தும் .அதற்காக அது தப்பு என்று கூறவில்லை ...........காதலியுங்கள் .......அதில் ஒரு சுவையான அனுபவத்தை காண்பீர்கள் ...............அது ஒருதலை ஆகவோ.அல்லது இருதலையாகவோ இருக்கட்டும் அந்த அந்த வயதில் இந்த காதல் ஏற்படாவிட்டால் எங்கேயோ எதோ பிழை உண்டு .........

பகிர்வுக்கு நன்றி காதல்

  • தொடங்கியவர்

நன்றி t.s அண்ணா.. :)

[size=5]மச்சி, அண்ணா அத்தானாய் கன இடங்களில மாறுறது!! ம்....... துளசி, உண்மையாய் பெண்ணா????????? பெடி என்றால் சகோதரம் தான்.[/size][size=5] (மச்சி கோவிக்க வேண்டாம்)[/size]

எப்பிடி வேணும்னாலும் நினைச்சுக்கொள்ளுங்கோ... :D but பெண் என்றால் சகோதரமா பழக முடியாதா என்ன? பழக முடியும் என்று நான் சொல்லுறன்...... :)

எனக்கு தேவையற்ற நேரத்தில்.. எழுந்த.. நிறைய ஒரு தலைக் காதல்களை அறிந்தும் அறியாமலும்.. சாகடித்த பெருமை எனக்கும் உண்டு..! எல்லோருக்கும் அது இருக்கும் என்று நினைக்கிறன். அந்த வகையில்.. சாகடித்த எனக்கு இல்லாத துன்பம்.. சாகக் கொடுத்தவர்களுக்கு இருந்திருக்கும்..! அப்ப எல்லாம் அதை நான் உணர்ந்திருக்கவே மாட்டேன். இப்போ உணர்கிறேன். அவர்கள் அனைவரிடமும் இதயபூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்..!

யாரின் காதலையும் நிராகரிக்க வேண்டும் என்று நிராகரித்ததில்லை. ஆனால்.. எனது காதல் விளையாட்டு எண்ணங்கள் போக... நான் உண்மையாக காதல் எண்ணம் கொண்ட போது நிராகரிப்பட்ட வேளை அது வேதனையாக இருந்தது. ஆனால் அது தந்த பக்குவம்.. மிகவும் படிப்பினையாக.. வாழ்க்கையை சரியான வழியில் கொண்டு செல்ல.. அவசியமானதாக இருந்தது. மேலும் மேலும் என்னை மனதளவில் பலமுள்ளவனாக்கியது..! அந்த அனுபவங்களை தந்தவர்களுக்கு மிக்க நன்றி..!

இன்று காதல் என்றால் என்ன என்பதை உளப்பூர்வமாக உணர்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்.. என் எண்ணத்தில் ஓடும் அந்த அழகான காதல்..எண்ணமுள்ள இன்னொருவர்.. இருக்க வாய்ப்பில்லை என்பதையும் உணர்கிறேன்..! காதல் சகிப்புத் தன்மைக்கு அப்பாற்பட்ட மற்றவரின் அழகை..உணர்தலை.. நடத்தையை.. ஒவ்வொரு சின்னச் சின்ன அசைவுகளையும் செய்கைகளையும் .. புரிதலைகளையும் ரசிக்கும்.. ஒரு அழகுணர்ச்சி.. அது காமம் கடந்தது என்பது எனது திடமான எண்ணம்..! அது தனக்குரியவரை சொந்தம் கொண்டாடவே விளையும். இருந்தும்.. அவர் சொந்தமற்றதாகும் போது.. அந்த உணர்வும் தற்காலிகமாக மறையும். ஆனால் நிரந்தரமாக மூளையின் ஓரத்தில் உட்கார்ந்திருக்கும்..! :icon_idea::)

நீங்கள் பல இடங்களில் நகைச்சுவைக்காகவும், வாதத்திற்காகவும் பல்வேறு முரண்பாடுகளுடன் காதலை நோக்கினாலும், உங்கள் பல்வேறு ஆக்கங்களையும், அனுபவப்பகிர்தலையும் பார்க்கும்போது உங்களின் அழகுணர்ச்சிகளின் வீச்சுக்களையும், நெகிழ்வுத்தன்மையையும் உணரமுடிகின்றது. நடந்து முடிந்தவைகளுக்கு ஒன்றும் செய்யமுடியாது. இனி நடக்க இருப்பவை எல்லாம் உங்களுக்கு நல்லபடியாய் அமைய வாழ்த்துக்கள்!

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாடியோவ்!!

ஒரு தலைக் காதல் என்ற புத்துக்குள்ளையிருந்து, எவ்வளவு பாம்புகள் வெளியால வருகுது? :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.