Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் லூர்த்து மாதா தேவாலயத்தில் 68ஆவது அதிசயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

lourdes%20church%20-%20france.jpg

[size=3][size=4]பிரான்சிலுள்ள புகழ்பெற்ற லூர்த்து மாதா தேவாலயத்தில் 68 வது அதிசம் நிகழ்ந்ததாக நேற்று அந்தத் தேவாலய குருமார் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். இதற்காக சிறப்பு பூசையும் அந்தத் தேவாலயத்தில் நேற்று நடத்தப்பட்டது.

1965ம் ஆண்டில் இருந்து முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு இடுப்புக்கு கீழே இயங்காத நிலையில் இருந்த இத்தாலியைச் சொந்த லுவிகினா திறாவர்கோ என்ற கன்னியாஸ்த்திரி லூர்த்து மாதா தேவாலயத்திற்கு வந்து தொடாச்சியான பிராhத்தனையில் ஈடுபட்டு வந்ததாகவும் இதனால் அவர் தனது கால்களை அசைத்து தானே எழுந்து நின்றதாகவும் இது லூர்த்து மாதா தேவாலயத்தில் நடந்த 68 வது அதிசயம் என்றும் தேவாலய குருமார்கள் நேற்று அறிவித்தனர்.

1965 ம் ஆண்டு யூலை மாதம் 26 ம்திகதி முடக்குவாத நோய் தாக்கியதிலிருந்து பல்வேறு சிகிச்சைகளும் குறிப்பாக அறுவைச் சிகிச்சைகளும் கூட செய்யப்பட்ட போதும் அவர் எழுந்து நடக்க முடியாமல் சக்கர சாற்காலியிலேயே காலந்தள்ளியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் குணமாகியுள்ளதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதுடன் மருத்துவத்துறையில் இது ஒரு அதிசயம் என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

1858 ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ம் திகதி பெர்னடெட் என்ற மாடுமேய்க்கும் சிறுமிக்கு கன்னி மரியாள் காட்சியளித்த இடமே லூர்த்து மாதா தேவாலயமாக வழிபடப்பட்டு வருகிறது.

இந்த ஆலயத்தில் அருகிலுள்ள மலைக்குகையிலிருந்து ஊற்றெடுத்துப்பாயும் புனித நீரை பருகுவதன் மூலமும் அதில் நீராடுவதன் மூலமும் தங்களது தீராத நோய்கள் குணமடைவதாக நம்பும் மில்லியன் கணக்கான மக்கள் ஆண்டு தோறும் பிரான்சின் கீழ் பகுதியில் உள்ள இந்த ஆலயத்துக்கு சென்று வருகின்றனர்.

இதுவரை லூர்த்து மாதாவின் அருளால் தங்களது நோய்கள் குணமடைந்ததாகவும் துன்பங்கள் நீங்கியதாகவும் ஏழாயிரம் பேர் சான்றுகளை சமர்ப்பித்த போதிலும் அவற்றில் 68 சம்பவங்களே அதிசயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த தேவாலயத்திற்கு ஐரோப்பாவில் உள்ள தமிழ் மக்கள் பெருந்தொகையாக தினசரி செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.[/size][/size]

[size=4]http://www.eeladhesa...chten&Itemid=50[/size]

சென்றவருடம் நானும் என் குடும்பத்தவருடனும் நண்பர்களுடனும் அங்கு சென்றிருந்தேன் அருமையான உன்னதமான அனுபவமாய் இருந்தது .................இணைப்பிற்கு நன்றிகள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மேலை நாட்டில் பிரான்சில் இருக்கும் கோவிலுக்கு பெரும் செலவில் அள்ளி கட்டிக்கொண்டு சென்றால்தான் மாதா அருள் தருவா என்றால்?[/size]

[size=4] [/size]

[size=4]மாதாவிற்கும் [/size]

[size=4]மும்பாய் மதுமிதாவிற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு புரியவில்லை. பணத்தை அள்ளி கொடு த்தால் மதுமிதாவும் அருளை அன்போடு அள்ளிதருவாள். [/size]

  • கருத்துக்கள உறவுகள்

காசை அள்ளிக்கிட்டு நாங்க ஏங்க மும்பைக்கு போகணும் உங்க ஊருக்கே வர்ரோமே?

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]எங்கள் ஊரில் [/size]

[size=4]அன்பிற்காக காசு கொடுத்தாலும் குற்றம் ....... வாங்கினாலும் குற்றம்.[/size]

[size=4]லாச்வேகாசிட்கு (Las Vegas ) போங்கள். நிறைய அருள்கள் அன்போடு பெறலாம்.[/size]

ஒவ்வொருத்தரும் நம்பிக்கையோடு மன்றாடுகிறார்கள் அது அவர்களின் விசுவாத்தின் பலம்.. அதை ஏன் நாம் எடை போட்டுவான்?

இப்போதெல்லாம் எந்த மதம் எது செய்தாலும், எதுவும் செய்யாவிட்டாலும் அதில் குறை பிடிப்பவர்கள் தான் அதிகம்... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]மேலை நாட்டில் பிரான்சில் இருக்கும் கோவிலுக்கு பெரும் செலவில் அள்ளி கட்டிக்கொண்டு சென்றால்தான் மாதா அருள் தருவா என்றால்?[/size]

[size=4]மாதாவிற்கும் [/size]

[size=4]மும்பாய் மதுமிதாவிற்கும் உள்ள வித்தியாசம் எனக்கு புரியவில்லை. பணத்தை அள்ளி கொடு த்தால் மதுமிதாவும் அருளை அன்போடு அள்ளிதருவாள். [/size]

மருது, ஒரு முறை போய்ப் பார்த்து விட்டு, எழுதுங்கள்!

நீங்கள், பிரான்சுக்குப் போன போது, போயிருக்கவும் கூடும். இல்லாவிட்டால் ஒருமுறை, போய்ப்பாருங்கள்!

அழகிய அந்தப் 'போதோ' நகரின் முந்திரித் தோட்டங்கள், மிகவும் உங்களைக் கவரும்!

நான் பல தடவை, போயிருக்கின்றேன்!

அந்த இடத்தின், ஏகாந்தத்தில், இயலாதாவர்களைப் புகையிரத நிலையத்தில் காத்திருந்து,(முன்பின் தெரியாதவர்கள்), சக்கர நாற்காலியில் வைத்து, மலைகள் நிறைத்த பாதைகளில், உருட்டிக் கொண்டு திரியும் மனிதத்தை அங்கு கண்டேன்!

உண்டியல்கள் நிறைந்து, வாய்களால் பணத்தைத் துப்பியபோதும், அதைத் தொட்டுகூடப் பார்க்காத மனிதர்களையும் கண்டேன்!

பயமா அல்லது பக்தியா என என்னால் சொல்ல முடியாது!

ஆனால், அந்தச் சூழல் மிகவும் புனிதமானது! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் லூர்த்து மாதா தேவாலயத்துக்கு ஒருமுறை சென்று இருக்கிறேன். நம்பிக்கை நிறைந்த கோயில்.

ஏன் லூர்து மாதா தன்னை தன் கோவில் தேடி வந்தவர்களை மட்டும் குணப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை? போரால் தம் இயங்கும் அனைத்து அவயங்களையும் இழந்த மக்களைக் கொண்ட வன்னி, கிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கும் கூட தன்னை நாடு தேடி வந்து பார்க்காவிட்டால் குணப்படுத்த மாட்டேன் என்றா சொல்வார் இந்த லூர்து மாதா?

இவருக்கும் ஊரில் ஒரு தெரு மூலையில் இருக்கும் மாதாவுக்கும் என்ன வேறுபாடு?தெரு மூலையில் இருக்கும் மாதா ஏன் எம் பாவங்களை தீர்த்து, போரால் அங்கவீனமான எம் குழந்தைகளைக் கூட குணப்படுத்துகின்றார் இல்லை?

லூர்த்து மாதா மட்டுமே புனிதம் என்றால், அவவால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றால் ஊரில் இருக்கும் மற்ற மாதா கோவில்கள் எல்லாம் என்ன? போரால் முழு அங்கவீனமானவர்களைக் கூட ஊர் தெரு மாதாக்களால் குணப்படுத்த முடியாதா?

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் லூர்து மாதா தன்னை தன் கோவில் தேடி வந்தவர்களை மட்டும் குணப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை? போரால் தம் இயங்கும் அனைத்து அவயங்களையும் இழந்த மக்களைக் கொண்ட வன்னி, கிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கும் கூட தன்னை நாடு தேடி வந்து பார்க்காவிட்டால் குணப்படுத்த மாட்டேன் என்றா சொல்வார் இந்த லூர்து மாதா?

இவருக்கும் ஊரில் ஒரு தெரு மூலையில் இருக்கும் மாதாவுக்கும் என்ன வேறுபாடு?தெரு மூலையில் இருக்கும் மாதா ஏன் எம் பாவங்களை தீர்த்து, போரால் அங்கவீனமான எம் குழந்தைகளைக் கூட குணப்படுத்துகின்றார் இல்லை?

லூர்த்து மாதா மட்டுமே புனிதம் என்றால், அவவால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றால் ஊரில் இருக்கும் மற்ற மாதா கோவில்கள் எல்லாம் என்ன? போரால் முழு அங்கவீனமானவர்களைக் கூட ஊர் தெரு மாதாக்களால் குணப்படுத்த முடியாதா?

நல்ல கேள்வி

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து மாதா கோயிலுக்கு நான் ஒரு தடவை போய் இருக்கிறேன்...கோயிலை சுற்றி நடக்கும் போது அற்புதமாய் இருக்கும்...நேர்ந்து வருபவர்கள் வரிசையில் நின்று சுனை மாதிரி இருக்கும் இடத்தில் கன்னியாஸ்திரிகளால் தண்ணீருக்குள் ஒரு மொங்கு,மொங்கி எழுவார்களாம் அந்த தண்ணீர் கடுங் குளிராக இருக்குமாம் என்று கேள்விப்பட்டு உள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

லூர்து மாதா கோயிலுக்கு நான் ஒரு தடவை போய் இருக்கிறேன்...கோயிலை சுற்றி நடக்கும் போது அற்புதமாய் இருக்கும்...நேர்ந்து வருபவர்கள் வரிசையில் நின்று சுனை மாதிரி இருக்கும் இடத்தில் கன்னியாஸ்திரிகளால் தண்ணீருக்குள் ஒரு மொங்கு,மொங்கி எழுவார்களாம் அந்த தண்ணீர் கடுங் குளிராக இருக்குமாம் என்று கேள்விப்பட்டு உள்ளேன்.

நானும் அந்தத் தண்ணீரில், மொங்கி எழும்பியுள்ளேன். ஆம்... பங்கர குளிராக இருக்கும்.

நேர்த்தி வைத்துக் கொண்டு போகும் போது... அந்தக் குளிர் பெரிதாகத் தோன்றுவதில்லை.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் லூர்து மாதா தன்னை தன் கோவில் தேடி வந்தவர்களை மட்டும் குணப்படுத்த வேண்டும் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை? போரால் தம் இயங்கும் அனைத்து அவயங்களையும் இழந்த மக்களைக் கொண்ட வன்னி, கிழக்கு மக்களுக்கும் போராளிகளுக்கும் கூட தன்னை நாடு தேடி வந்து பார்க்காவிட்டால் குணப்படுத்த மாட்டேன் என்றா சொல்வார் இந்த லூர்து மாதா?

இவருக்கும் ஊரில் ஒரு தெரு மூலையில் இருக்கும் மாதாவுக்கும் என்ன வேறுபாடு?தெரு மூலையில் இருக்கும் மாதா ஏன் எம் பாவங்களை தீர்த்து, போரால் அங்கவீனமான எம் குழந்தைகளைக் கூட குணப்படுத்துகின்றார் இல்லை?

லூர்த்து மாதா மட்டுமே புனிதம் என்றால், அவவால் மட்டுமே குணப்படுத்த முடியும் என்றால் ஊரில் இருக்கும் மற்ற மாதா கோவில்கள் எல்லாம் என்ன? போரால் முழு அங்கவீனமானவர்களைக் கூட ஊர் தெரு மாதாக்களால் குணப்படுத்த முடியாதா?

நல்ல ஒரு கேள்வி தான்,நிழலி. மாதா தோன்றிக் காட்சி கொடுத்த இடங்கள்,மூன்று இருக்கிறதாம். அதில் ஒன்று, லூர்து, மற்றது இத்தாலியில், மூன்றாவது அன்னை வேளாங்கண்ணி என்று சொல்கிறார்கள்!

எனக்கு அந்தச் சூழலும், அது தந்த அமைதியும் பிடித்துக்கொண்டது. லூர்து மாதா போல எல்லா மாதாக்களுக்கும், அந்தச் சக்தி கட்டாயம் இருக்க வேண்டும் என்றே கருதுகிறேன்! எல்லாம், எமது மனதில் தான் உள்ளது, என நினைக்கிறேன்!

பழைய மடுத் தேவாலயத்திலும், ஒரு விதமான சமத்துவத்தைக் கண்டேன்!

நானும் நிழலியின் கட்சி தான் .

கடவுள் நம்பிக்கை எள்ளளவும் இல்லாதால் தான் இந்த நிலைப்பாடு.இருந்து வரலாற்று ரீதியாக பார்க்கவும் சுற்றுலாவாக சென்று வரவும் நல்ல விருப்பம் .சந்தர்ப்பம் இருந்தும் பல இடங்களை பார்க்காமல் விட்டுவிட்டேன்.இனியும் காலம் இருக்கு என்று நம்புகின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நானும் மகன் பிறந்தவுடன் வந்தன் அரைவாசி தூரத்திலேயே டயர்ராகிட்டேன்.மனுசியிட்ட போப்பா நீயும் உன் மாதாவும் எண்டு போட்டு அந்த இடத்திலேயே இருந்திட்டேன் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லூட்சிலை தமிழாக்களின்ரை ஹொட்டல்,தங்குமிட வசதியெல்லாம் இடியப்பம் புட்டோடை இருக்கெண்டு கேள்விப்பட்டன் உண்மையோ? :rolleyes:

லூட்சிலை தமிழாக்களின்ரை ஹொட்டல்,தங்குமிட வசதியெல்லாம் இடியப்பம் புட்டோடை இருக்கெண்டு கேள்விப்பட்டன் உண்மையோ? :rolleyes:

இருக்கண்ணா ........இருக்கிற மாதிரி............... :D:icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.