Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் மார்பகம் ( இதன் தலைப்பை மாறுபட்ட கோணத்தில் பார்க்கவேண்டாம் )

Featured Replies

BreastCancerSurvivors.jpg

விட்டம்

வெறித்து

மருத்துவர் கையில்

இருக்கையில்..

பத்து

வயதில்

தாமிரபரணியில்

பக்கத்து வீட்டு

குமரேசனது

போலிருந்த

ஞாபகம்..

பதிமூன்றில்

கண்ணாடி

முன்

அறியாத மனதில்

லேசாய் வந்த

கலவரம்

ஞாபகம்..

பதினைந்து

வயதில்

பெருமூச்சோடு

காகிதம்

அடைத்தது

இன்னும்

ஞாபகம்..

இருபதில்

ஊர்முன்னே

நிமிர்ந்து நடக்க

செருக்கு

தந்த

ஞாபகம்..

இருபத்தேழில்

காதல்

பொழுதில்

கணவர் கண்பட்டு

வெட்கமின்னும்

ஞாபகம்..

முப்பதில்

செல்ல மகள்

பசி தீர்த்த

திருப்தியும்

ஞாபகம்..

நாப்பது

வயதில்

தட்டுப்பட்ட

சிறு கட்டி

தந்த

கேள்விக்குறிகள்

ஞாபகம்..

எல்லாம்

கடந்து

எனை அழித்து

அவளுயிர்

காப்பதும்

இன்று

சுகமே..

சுபமும்

கூட...

http://reverienreali...og-post_23.html

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான கவிதைக்கும் இணைப்புக்கும் மிக்க நன்றி கோ

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பிற்கு பக்க பலமாக எழுதப்பட்ட வரிகள் எம்மை கேவலப்படுத்துகின்றன.

அந்தளவுக்கு நாங்கள்............??? :( :( :(

  • தொடங்கியவர்

தலைப்பிற்கு பக்க பலமாக எழுதப்பட்ட வரிகள் எம்மை கேவலப்படுத்துகின்றன.

அந்தளவுக்கு நாங்கள்............??? :(

கருத்துகளத்தில் போடப்படும் தலைப்புகளால் சர்ச்சைகள் உருவாகுவதைக் கண்டிருக்கின்றேன். அதனால் முன் எச்சரிக்கையாக அடைப்புக்குறிக்குள் போடவேண்டியதாயிற்று . நீங்கள் புரிந்துணர்வு உள்ளவர் என்பது எனக்கு தெரியும் .எல்லோரையும் உங்களைப்போல் நான் எடைபோடமுடியாது தானே :) :) ?

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்பைப் பார்த்து என்ன எழுதி இருக்கப்போகிறதோ என்று வந்தால்

[size=4]நாப்பது[/size]

[size=4]வயதில்[/size]

[size=4]தட்டுப்பட்ட[/size]

[size=4]சிறு கட்டி [/size]

[size=4]தந்த[/size]

[size=4]கேள்விக்குறிகள் [/size]

[size=4]ஞாபகம்..[/size];

பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி.

  • தொடங்கியவர்

ஆக்கபூர்வமான கவிதைக்கும் இணைப்புக்கும் மிக்க நன்றி கோ

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் . இந்த மாதம் மார்பகப் புற்றுநோய்கானது போல் தெரிகிறது . இந்தக் கவிதையில் ஒரு சோகம் மெல்லிய நூலிளையாக ஓடிக்கொண்டிருப்பதை அவதானித்தேன் , மூலத்தில் இருந்து சுட்டு விட்டேன் . நுணாவும் தனது பங்கிற்கு இந்த புற்றுநோய் சம்பந்தமான அரிய தகவல்களைத் தந்துள்ளார் .

  • கருத்துக்கள உறவுகள்

ம்....

மார்பகப்புற்றுநோயை வெளிப்படுத்தும் நல்ல கவிதை இணைப்பிற்கு நன்றி கோமகன்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]இருபத்தேழில்[/size]

[size=4]காதல் [/size]

[size=4]பொழுதில்[/size]

[size=4]கணவர் கண்பட்டு[/size]

[size=4]வெட்கமின்னும்[/size]

[size=4]ஞாபகம்..[/size]

கணவரின் வெட்கமா, கோமகன்? :D

[size=4]விட்டம்[/size]

[size=4]வெறித்து [/size]

[size=4]மருத்துவர் கையில்[/size]

[size=4]இருக்கையில்..[/size]

வலியைத் தருகின்ற வார்த்தைகள்!

விசுகு கூறியதுபோல் அடைப்புக்குறி விடயத்தை தவிர்த்து இருக்கலாம். கவிதைப்பூங்காடு என்றாலே பல்கோணங்களும் கற்பனையும்கொண்ட அனுபவம்தான். அங்கே ஆரம்பத்திலேயே பார்வைக் கோணங்களைக் கட்டுப்படுத்தினால் கவிதைக்கு ஓர் அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

மார்பகங்கள் மாத்திரம் அல்ல, பிறப்புறுப்புக்களுடன் சம்மந்தப்பட்ட பல சிக்கல்களிலும் பெண்கள் துன்புறுகின்றார்கள். அண்மையிலும் அபரிமிதமான இழையங்களின் வளர்ச்சி காரணமாக எனது நெருங்கிய உறவினரின் பிறப்புறுப்புடன் சம்மந்தப்பட்ட அனைத்துப்பகுதியும் முற்றுமுழுதாக சத்திரசிகிச்சையில் அகற்றப்பட்டது. எனக்கு அதிர்ச்சி என்ன என்றால் குறிப்பிட்ட வைத்தியசாலைக்கு அவரை பார்க்க சென்று வந்த சுமார் ஆறுநாட்களில் இதர வேறு மூன்று தமிழ்ப்பெண்களுக்கும் அதே சத்திரசிகிச்சை செய்யப்பட்டது. அவர்களும் ஏதோ ஒரு வகையில் எனக்குத் தெரிந்தவர்கள். தவிர, இதே நிலமைக்கு உள்ளாகி ஏற்கனவே சத்திரசிகிச்சையை பெற்ற எனக்குத்தெரிந்தவர்களின் விபரங்களை அறிந்தபோது அதன் எண்ணிக்கை பிரமிப்பூட்டுவதாய் அமைந்தது. நமது சமூகத்தைச் சேர்ந்தவர்களை பாரிய அளவில் இவ்வாறான பிரச்சனைகள் வாட்டி எடுக்கின்றன என்பது அதிர்ச்சிக்குரிய செய்தி.

குழந்தையை பிரசவித்த கருவறையும், குழந்தைக்கு பாலூட்டிய மார்பகமும் சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்படுவது குழந்தையின் தாயிற்கு எவ்வாறான உடல், மற்றும் உளவியல் உபாதைகளை ஏற்படுத்தும் என்று கூறமுடியவில்லை. இங்கு கவிதையில் கூறப்பட்டவாறே அழகும், கவர்ச்சியும், உணர்ச்சிகளும் எங்கே ஆரம்பித்து, எங்கேபோய் முடிகின்றன என்பதை பார்க்கும்போது பெருமூச்சே ஏற்படுகின்றது.

பெண்களில் எவருக்கும் இவ்வாறான நிலமைகள் ஏற்படலாம். அது எமது தாயாகவும் இருக்கலாம், வாழ்க்கைத்துணையாகவும் இருக்கலாம், மகளாகவும் இருக்கலாம், மருமகளாகவும் இருக்கலாம். எனவே, நமது வீட்டுக்கதவை தட்டும்வரை காத்திராது ஒருவருக்கு ஒருவர் உதவியாக வாழ்ந்து இப்படியான உபாதைகளில் உழல்பவர்களுக்கு உதவுவதோடு இயலுமானவரை விழிப்புணர்வு, இதுபற்றிய அறிவூட்டல்களிலும் ஈடுபடலாம்.

Edited by கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கோமகன் கவிதைக்கு.உங்களின் கவிதையை வாசித்த பின் தான் மார்பக புற்று நோய் பற்றிய கட்டுரை ஒன்றை தேடி இணைக்க முடிந்தது.

  • தொடங்கியவர்

தலைப்பைப் பார்த்து என்ன எழுதி இருக்கப்போகிறதோ என்று வந்தால்

[size=4]நாப்பது[/size]

[size=4]வயதில்[/size]

[size=4]தட்டுப்பட்ட[/size]

[size=4]சிறு கட்டி [/size]

[size=4]தந்த[/size]

[size=4]கேள்விக்குறிகள் [/size]

[size=4]ஞாபகம்..[/size];

பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி.

இதுதானே வேணாங்கிறது .............. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் கறுப்பி .

  • தொடங்கியவர்

ம்....

மார்பகப்புற்றுநோயை வெளிப்படுத்தும் நல்ல கவிதை இணைப்பிற்கு நன்றி கோமகன்.

அத்தி பூத்தாற் போல வந்த கருத்துக்களுக்கு மிகுந்த நன்றிகள் வல்வை சகாறா :) :) .

அத்தி பூத்தாற் போல வந்த கருத்துக்களுக்கு மிகுந்த நன்றிகள் வல்வை சகாறா :) :) .

இந்த குத்தலை விட வருத்தம் கொடுமையில்லை என்று படுகின்றது :D

  • தொடங்கியவர்

இந்த குத்தலை விட வருத்தம் கொடுமையில்லை என்று படுகின்றது :D

எப்பிடி ????????? ஏன் ????????? முடியேலே மகாறாஜா :o :o :D .

  • கருத்துக்கள உறவுகள்

தலைப்போடு இணைக்கப்பட்டுள்ள இதரசொற்களை எடுத்து விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..காரணம் ஒரு விதத்தில் அப்படி எழுதிக் கொள்வதும் பலருக்கு இப்படியான ஆக்கங்களை வாசிப்பதற்கு விருப்பின்றி வந்துடும்.ஏதோ அனாகரீகமான வார்த்தைகள் சேர்க்கபட்டுருக்கு போலும் என்று பார்ப்பவர்கள் தாங்களாகவே விலத்தி செல்வதற்கு உரிய சாத்தியக் கூறுகள் இருக்கிறது...ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டி விட்டால் இந்த நோய் யாருக்கு வரும் எப்போது வரும் என்று சொல்ல முடியாது..ஆகவே உடல் நிலையில் எப்போதும் கவனம் தேவை.

  • தொடங்கியவர்

நன்றி கோமகன் கவிதைக்கு.உங்களின் கவிதையை வாசித்த பின் தான் மார்பக புற்று நோய் பற்றிய கட்டுரை ஒன்றை தேடி இணைக்க முடிந்தது.

கருத்தொருமித்த நகர்வுகளுக்கு மிக்க நன்றிகள் நுணா .

  • கருத்துக்கள உறவுகள்

மார்பக புற்றுநோய் பற்றிய விழிப்பூட்டல் மிகவும் அவசியமானது. கவிதை மொழியில் சொல்லப்பட்டதை பகிர்ந்ததற்கு நன்றிகள் கோமகன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]இருபத்தேழில்

காதல்

பொழுதில்

கணவர் கண்பட்டு

வெட்கமின்னும்

ஞாபகம்..[/size]

[size=4]பதிவிற்கும் பகிர்வுக்கும் நன்றி.[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.