Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எத்தனை வேடிக்கை மனிதர் பாரீர்..??!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஒரே நிறம்

ஒரே தோற்றம்

சந்திப்பு..

சம்பிரதாயத்துக்கு

வணக்கம் கூட இல்லை

கேள்வி மட்டும் முந்திக் கொள்கிறது..

எந்த ஊர்

ஊரில எவடம்

விசா இருக்கோ..

பதிலாய்

ஊர் பெயர்

மெளனம்..

ஊரில் எவடம்

அதுவும் மெளனம்...

நீண்ட மெளனத்திலும்

தொடரும் கேள்விக்கு

முடிவு வேணாமோ..?!

விசா

மாணவன்..!!

அட நீர்

ஸ்ருடென்ரே...

வார்த்தையில்

நக்கல்..!!

அப்ப நீர்

உதுக்கு சரிவரமாட்டீர்...

சிந்தனையிலும்

அது தெறிக்கிறது.

பேச்சு நீள்கிறது..

போடர் ஏஜென்சி

பிடிக்கிறது அனுப்பிறது

எல்லாம்....

களவாய் இருக்கிற

ஸ்ருடன்ராம்

கிரிமினல்களாம்..

மெளனம் பேசியது

அப்ப நீங்கள்..

நான் அசைலம்..

விசா எடுத்தோ

போடர் தாண்டினனீங்கள்...

இல்ல

களவா..

பாஸ்போட் இல்லாமலே

12 வருசம்..

இப்ப தான்

legacy இல கிடைச்சது..!!

அப்ப...

என்றி

பாஸ்போட் இல்லாமல்...

12 வருசம்

நோ விசா...

நீங்கள்

கிரிமினல் இல்லை..??!

செய்தது

இருந்தது

களவு இல்லை..??!

இருந்தும்

நீங்கள் அசைலம்...!!

ஒரே இனம்

ஒரே மொழி

ஒரே ஊர்

ஒரே ஆபத்து

ஒரே எதிரி

ஒரே சோகம்

ஒரே துன்பம்

ஒரே இழப்பு

ஒரே அவலம்

ஒரே அவதி

ஒரே வாழ்வு..

நீங்க அகதி

நான் ஸ்ரூடண்ட்

நீங்க தகுதி

நான் தகுதியில்லை..!

எத்தனை

வேடிக்கை மனிதர்

பாரீர்

இப் பாரினிலே..!

(உதவி: 2007 க்கு முன் அசைலம் அடித்து விண்ணப்பம் மறுக்கப்பட்டவர்கள் அல்லது நிராகரிக்கப்பட்டவர்கள்.. நீதிமன்றத்தால் விண்ணப்பம்.. மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டவர்கள் .. திருப்பி அனுப்பப்பட காத்திருப்போர்.. எவராக இருந்தாலும்.. நீண்ட நாள் தங்கியவர்கள் என்ற வகைக்கு இப்போ யு.கே போடர் ஏஜென்சியால் விசா வழங்கப்பட்டு வருகிறார்கள். அப்படி உங்களுக்குத் தெரிந்தவர்கள் இருப்பின்.. அவர்களுக்கும் ஒரு தடவை சொல்லிவிடுங்கள்..! அவர்களின் சட்டத்தரணிகளை அணுகி.. தீர்வைத் தேடச் சொல்லுங்கள். என்னதான் அவர்கள் பிறம்பு காட்டினும்.. தமிழன் என்ற வகையில்.. இந்தச் செய்தியை பகிர்ந்து கொள்கிறோம்.)

http://www.ukba.home...lum/oldercases/

என்னுடைய பாஸ்போட் தேவைக்காக ஒரு சட்டத்தரணியிடம் விபரம் பெறச் சென்ற போது.. உண்மையிலேயே இது நடந்தது..! அப்போ அங்கு சட்டத்தரணி சிலருக்கு வழங்கிய ஆலோசனையையே உதவியாக உங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வாறார்.... நெடுக்ஸ். புரியவில்லை. ^_^

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொல்ல வாறார்.... நெடுக்ஸ். புரியவில்லை. ^_^

தாங்கள் செய்வதன் தவறுணராது.. மற்றவர்கள் மீது குரோதம் தெறிக்கும் எம்மவரின் மனதை..! :):lol:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

தாங்கள் செய்வதன் தவறுணராது.. மற்றவர்கள் மீது குரோதம் தெறிக்கும் எம்மவரின் மனதை..! :):lol:

நீங்கள் சந்தித்த, ஒரு சிலரின் தவறுக்காக...

சொந்தச் செலவில்... சூனியம் வைக்காதேங்கோ...

நீங்க அகதி

நான் ஸ்ரூடண்ட்

நீங்க தகுதி

நான் தகுதியில்ல..!

எத்தனை

வேடிக்கை மனிதர்

பாரீர்

இப் பாரினிலே..!

[size=7]வேடிக்கை மனிதர்[/size]

பதிவுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவேளை அந்தாள் நெடுக்ஸ் அண்ணாவின் கருத்துக்களை வாசிச்சு கடுப்பான ஆளாய் இருப்பாரோ???? :rolleyes::lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

மனந்தளராதீர்கள் நெடுக்ஸ். எல்லோரும் இப்படி ஒரு வகையான stereotyping உடன் தான் அலைகிறார்கள். உயிருக்குப் பயந்து தப்பி ஓடி வந்தவனையும் "பொய் சொல்லி அசைலம் அடிச்சவன்" என்று நீங்கள் ஒரு அபிப்பிராயத்தை வைத்திருக்கிறீர்கள்-யாழில் எழுதியும் இருக்கிறீர்கள். அதனால நீங்களும் ஒரு வேடிக்கை மனிதர் தான். நாம் எல்லாரும் தான். ஒரு யூதனோ, ஆர்மேனியனோ, அயர்லாந்துக் காரனோ தன் சக நாட்டவன் இன்னொருவனைக் காணும் போது அவன் எந்த வழியில் நாட்டுக்குள் வந்தான் என்று யோசிப்பதில்லை-கேள்வி கேட்பதில்லை. தமிழர்களும் சில இந்தியர்களும் மட்டும் இப்படி இருக்கிறார்கள்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனந்தளராதீர்கள் நெடுக்ஸ். எல்லோரும் இப்படி ஒரு வகையான stereotyping உடன் தான் அலைகிறார்கள். உயிருக்குப் பயந்து தப்பி ஓடி வந்தவனையும் "பொய் சொல்லி அசைலம் அடிச்சவன்" என்று நீங்கள் ஒரு அபிப்பிராயத்தை வைத்திருக்கிறீர்கள்-யாழில் எழுதியும் இருக்கிறீர்கள். அதனால நீங்களும் ஒரு வேடிக்கை மனிதர் தான். நாம் எல்லாரும் தான். ஒரு யூதனோ, ஆர்மேனியனோ, அயர்லாந்துக் காரனோ தன் சக நாட்டவன் இன்னொருவனைக் காணும் போது அவன் எந்த வழியில் நாட்டுக்குள் வந்தான் என்று யோசிப்பதில்லை-கேள்வி கேட்பதில்லை. தமிழர்களும் சில இந்தியர்களும் மட்டும் இப்படி இருக்கிறார்கள்!

அப்போதும் இப்போதும் காட்டுவது.. தன்னிலை உணரா எம்மவர்களின் எண்ண ஓட்டத்தை தான் அண்ணா.

யூதனோ.. ஆர்மேனியனோ.. தன்னிலை உணராமல்.. அடிமை வாழ்க்கைக்கு முடிவு கட்டி இருக்க முடியாது. ஆனால் நாங்க அப்படியில்ல. நாங்க அடிமை வாழ்க்கை வாழுறம் என்பதை மறந்து.. தன்னைத் தானே உயர்த்தி பிடிச்சிக்கிட்டு வாழுறம். அதில மற்றவங்க குறை தான் நமக்கு அதிகம் தெரியுதே தவிர.. எங்கட குறை எங்களாலேயே மறக்கப்பட்டு.. மறைக்கப்பட்டுப் போகுது. இதுதான் இந்திய உபகண்டத்தவரின் உலகில் 3ம் நிலை வாழ்வுக்குக் காரணம்.. என்று நான் நினைக்கிறன்..! தன்னைத் தானே கற்பனையில உயர்த்திக்கிட்டு வாழுறவன்.. நிஜத்தில பெரிய மாற்றங்களை.. புரட்சிகளை செய்வது கடினம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

வேடிக்கை மனிதர் சிலரை கண்முன் நிருத்தியதை யதார்த்தத்துடன் பார்க்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு ரொம்பப்பாதிப்புப்போல... :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு ரொம்பப்பாதிப்புப்போல... :rolleyes:

என்னிடம் அறிமுகமில்லாதவர்கள் கதை கேட்கிறதே பிடிக்கிறதில்ல. வந்தமா இருந்தமா தங்கட வேலையைப் பார்த்தமா என்றிராமல்.. அண்ண எந்த ஊரு.. தம்பி எந்த ஊரு என்று தொடங்குவினம் பாருங்க.. அவையை எனக்கு கண்ணிலும் காட்டப்படாது..!

சிவனேன்னு இருக்கிறவனையும் சில்லெடுப்புக்க தள்ளுறதுக்கெண்டே இருக்குதுகள் நம்ம சனம் சிலது. ஏதோ தாங்கள் பெரிய சுத்தம் என்ற கணக்கா. இதுதான் எம்மவர்களில் எனக்குப் பிடிக்காத குணங்களில் முக்கியமானது. மற்றவர்களை annoy பண்ணும் செயல்..! இது வெறுக்கத்தக்க பழக்கம். ஆனால் எம்மவர் மத்தியில் மலிந்து..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி பகிர்வுக்கு நெடுக்கு, சிலரை மாற்ற முடியாது

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்....போற,வாற இடத்தில நம்மவர்கள் இருக்கும் பக்கம் முகத்தை திருப்பினால் சரி....ஒரு கேள்வி கேட்டு அதற்கு விரும்பியோ விரும்பாமலோ பதில் சொல்லி முடிக்க முதல் அடுத்த,அடுத்த கேள்வியைக் கேட்டுக் கொண்டே போவது ரொம்ப ரோச்சர் தான்..இதுக்காகவே நான் இப்போ என்ன செய்வது என்றால் போகும் இடத்தில் வைச்சு படிக்கிறதுக்கு என்று வீட்டை இருந்ததே ஏதாச்சும் கொண்டு போறது..

  • கருத்துக்கள உறவுகள்

என்னிடம் அறிமுகமில்லாதவர்கள் கதை கேட்கிறதே பிடிக்கிறதில்ல. வந்தமா இருந்தமா தங்கட வேலையைப் பார்த்தமா என்றிராமல்.. அண்ண எந்த ஊரு.. தம்பி எந்த ஊரு என்று தொடங்குவினம் பாருங்க.. அவையை எனக்கு கண்ணிலும் காட்டப்படாது..!

சிவனேன்னு இருக்கிறவனையும் சில்லெடுப்புக்க தள்ளுறதுக்கெண்டே இருக்குதுகள் நம்ம சனம் சிலது. ஏதோ தாங்கள் பெரிய சுத்தம் என்ற கணக்கா. இதுதான் எம்மவர்களில் எனக்குப் பிடிக்காத குணங்களில் முக்கியமானது. மற்றவர்களை annoy பண்ணும் செயல்..! இது வெறுக்கத்தக்க பழக்கம். ஆனால் எம்மவர் மத்தியில் மலிந்து..! :):icon_idea:

இவரைப் பார்த்து புன்னகை செய்யலாமா?? என்று சிந்திக்கும் அளவில் அடுத்தவரை வைத்திருக்க வேண்டும்..! :rolleyes: எழுந்தமானத்திற்கு கேள்விகளைப் போடுகிறார்கள் என்றால் உங்கள் எல்லைக்குள் அவர்களை வர விட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம்..! :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பார்த்து புன்னகை செய்யலாமா?? என்று சிந்திக்கும் அளவில் அடுத்தவரை வைத்திருக்க வேண்டும்..! :rolleyes: எழுந்தமானத்திற்கு கேள்விகளைப் போடுகிறார்கள் என்றால் உங்கள் எல்லைக்குள் அவர்களை வர விட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம்..! :rolleyes:

நான் நினைக்கிறன் அவர்களின் எல்லைக்குள் நாங்க போயிட்டம் என்று. கூட்டுக்குள்ள அடைபட்டுள்ள குரங்கின் எல்லைக்குள் போனா நம்மை பார்த்து அது கீச்சிடத்தானே செய்யும்..! :):lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]நல்ல இருக்கு பகிர்வுக்கு நன்றி [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.