Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன்

Featured Replies

prabakaran.jpg

மனதுக்குப் பிடித்த ஒரு புத்தகத்தை எத்தனை முறை வாசித்தாலும் மனம் புதிய உணர்வைப் பெறுவதைப் போலத்தான், பிரபாகரன் பற்றிய நிகழ்வுகளைப் படிப்பதும். தமிழனுக்கு வீரத்தின் அர்த்தத்தை தனது வாழ்க்கை மூலம் எடுத்துக் காட்டியவர் அல்லவா...

தம்பி எனத் தமிழர்களால் அழைக்கப்படும் அண்ணன். 30 ஆண்டு காலம் இலங்கை அரசுக்குக் கிலியூட்டி வ...ரும் புலிப் படைத் தலைவர். வீரத்தின் விளைநிலமாக தமிழ் ஈழத்தை மாற்றிக்காட்டிய மனிதர்!

01.அரிகரன் - இதுதான் அப்பா வேலுப்பிள்ளை முதலில்வைத்த பெயர். ஒரு அண்ணன், இரண்டு அக்காக்களுக்கு அடுத்துப் பிறந்த கடைக்குட்டி என்பதால், துரை என்றுதான் எல்லாரும் கூப்பிடுவார்கள். பிறகு என்ன நினைத்தாரோ, பிரபாகரன் என்று மாற்றுப் பெயர் சூட்டியிருக்கிறார் அப்பா!

02.வல்வெட்டித்துறையைச் சேர்ந்த பெரியசோதி, சின்னசோதி, சந்திரன், குட்டிமணி, தங்கத்துரை, சந்திரன், பிரபாகரன் ஆகிய ஏழு பேர் சேர்ந்துதான் விடுதலை இயக்கத்தை முதலில் தொடங்கினார்கள். இதற்குப் பெயர் வைக்கவில்லை. பிரபாகரன்தான் அணியில் இளையவர் என்பதால், ‘தம்பி' என்றார்கள். எல்லார்க்கும் தம்பியானதும் அப்படித்தான்!

03.பிரபாகரனுக்கு அரசியல் முன்னோடியாக இருந்தவர் பொ.சத்தியசீலன். "போலீஸ் நிலையங்களைத் தாக்கி ஆயுதங்கள் எடுக்க வேண்டும்" என்று இவரைப் பார்த்து பிரபாகரன் கேட்க, "எடுத்தால் எங்கே வைப்பது" என்று சத்தியசீலன் திருப்பிக் கேட்க... அதன் பிறகுதான் காட்டு வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்!

04.பிரபாகரன் அடிக்கடி படித்த நாவல் - அலெக்ஸ் ஹேவியின் ‘ஏழு தலைமுறைகள்'. அதில் ‘இடியும் மின்னலும் இல்லாமல் மழை பொழியாது. போராட்டம் நடத்தாமல் யாரும் எதையும் தர மாட்டார்கள்' என்ற வரிகளை அடிக்கோடு போட்டுவைத்திருந்தார்!

05.மிக மிக வேகமாக நடக்கும் பழக்கமுடையவர் பிரபாகரன். பள்ளிக்கூடம் போகும்போது சட்டைப் பையில் இருக்கும் பேனாவை இடது கையால் பிடித்துக்கொள்வாராம். அந்தப் பழக்கம் பிற்காலத்திலும் தொடர்ந்திருக்கிறது!

06."ஏன் எப்போதும் சீருடையில் இருக்கிறீர்கள்?" என்று வெளிநாட்டுத் தமிழர் ஒருவர் கேட்டபோது பிரபாகரன் சொன்னது, "யாரும் அணியத் துணியாதது இந்த உடைதான். அதனால்தான் எப்போதும் இதில் இருக்கிறேன்."

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

08.அக்காவின் திருமணத்தையட்டி தனக்கு அணிவிக்கப்பட்ட மோதிரத்தை விற்றுத்தான் அமைப்புக்கு முதல் துப்பாக்கி வாங்கப் பணம் கொடுத்தார் பிரபாகரன். அதன் பிறகு அவர், நகை அணிவதில்லை!

09.எந்த ஆயுதத்தையும் கழற்றி மாட்டிவிடுவார். ஆயுதங்கள் தொடர்பான அனைத்து ஆங்கிலப் புத்தகங்களின் மொழிபெயர்ப்புகளும் அவரிடம் இருந்தன. ‘தொழில்நுட்ப அறிவு இல்லாதவன் முழுமையான போராளியாக முடியாது' என்பது அவரது அறிவுரை!

10.ஒவ்வொரு நவம்பர் மாதமும் 25, 26, 27 ஆகிய மூன்று நாட்களும் பிரபாகரன் உண்ணாவிரதம் இருப்பார். 26 அவரது பிறந்த நாள். 27 மாவீரர் நாள். அன்று மாலை மட்டும் தான் திரையில் தோன்றி அனைவருக்குமான உரையை நிகழ்த்துவார்!

11.‘இயற்கை எனது நண்பன்; வாழ்க்கை எனது தத்துவாசிரியன்; வரலாறு எனது வழிகாட்டி' என்ற வார்த்தைகளைத்தான் அவர் தனது டைரியில் எழுதிவைத்திருப்பார்!

12.போரில் யார் காயமடைந்து பார்க்கப்போனாலும், ‘பொன்னியின் செல்வன்ல வரும் பெரிய பழுவேட்டரையருக்கு 64 வீரத் தழும்புகள் உண்டு' என்று சொல்லித் தைரியம் கொடுப்பாராம் பிரபாகரன்!

13.ஆறு கோடியே 43 லட்சம் ரூபாய் பிரபாகரனுக்கு எம்.ஜி.ஆர். கொடுத்திருக்கிறார். பிரபாகரன் கொடுத்த துப்பாக்கி ஒன்றைத் தனது தலையணைக்குக் கீழ் எம்.ஜி.ஆர். வைத்திருந்தார்!

14.பேனாவை மூன்று விரல்களால் பிடித்துத்தான் அனைவரும் எழுதுவார்கள். பிரபாகரன் எழுதும்போது ஐந்து விரல்களாலும் பிடித்திருப்பார்!

15.பிரபாகரனுக்குப் பிடித்த புராணக் கதாபாத்திரம் கர்ணன். "தன்னிழப்புக்கும் உயிர்த் தியாகத்துக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தயாராக இருந்தவன் கர்ணன். அவனை எப்போதும் நினைப்பேன்" என்பார்!

16.தமிழீழம் கிடைத்த பிறகு எனது பணி காயம்பட்ட போராளிகளைக் கவனிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மக்களின் முன்னேற்றம் பற்றியதாகவும் மட்டுமே இருக்கும் என்று பிரபாகரன் பகிரங்கமாக அறிவித்திருந்தார்!

17.பிரபாகரன் குறித்து தங்களது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தில் மிக உயர்வாக எழுதிய இந்திய ராணுவத்தின் உயர் அதிகாரிகள் மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங், ஜெனரல் சர்தேஷ் பாண்டே, ஜெனரல் திபேந்திரசிங். இவர்கள் மூவரும் இந்திய அமைதிப் படைக்குத் தலைமை வகித்து பிரபாகரனுடன் மோதியவர்கள்!

18.அநாதைக் குழந்தைகள் (போரில் பெற்றோரை இழந்தவர்கள்) மீது அளவுக்கு அதிகமான பாசம் வைத்திருந்தார் பிரபாகரன். அவர்களைப் பராமரிக்க செஞ்சோலை சிறுவர் இல்லம், காந்தரூபன் அறிவுச் சோலை ஆகிய காப்பகங்களை வைத்திருந்தார். பெற்றோர் இல்லாத அநாதையாக அமைப்புக்குள் வந்து பெரிய போராளியாக ஆகி மறைந்தவர் காந்தரூபன்!

19.உயிர் பறிக்கும் சயனைட்தான் எங்கள் இயக்கத்தை வேகமாக வளர்த்த உயிர்' என்றார் பிரபாகரன்!

20.பிரபாகரனைச் சிலர் குறை சொன்னபோது, அமைப்பில் இருந்து ஒன்றரை ஆண்டுகள் விலகி இருந்தார்!

21.பிரபாகரனிடம் நேரடியாக போர்ப் பயிற்சி பெற்ற முதல் டீம்: கிட்டு, சங்கர், செல்லக்கிளி, பொன்னம்மான். இரண்டாவது டீம்: சீலன், புலேந்திரன். மூன்றாவது டீம்: பொட்டு, விக்டர், ரெஜி. இவர்கள்தான் அடுத்து வந்தவர்களுக்குப் பயிற்சி கொடுத்தவர்கள்!

22.தன் அருகில் இருப்பவர் குறித்து யாராவது குறை சொன்னால் பிரபாகரன் பதில் இப்படி இருக்குமாம், "நான் தூய்மையாக இருக்கிறேன். இறுதி வரை இருப்பேன். என்னை யாரும் மாற்ற முடியாது. நீங்கள் குறை சொன்னவரை என் வழிக்கு விரைவில் கொண்டுவருவேன்!"

23."ஒன்று நான் லட்சியத்தில் வென்றிருக்க வேண்டும். அல்லது போராட்டத்தில் இறந்திருக்க வேண்டும். இரண்டும் செய்யாத என்னை எப்படி மாவீரன் என்று சொல்ல முடியும்?" என்றுஅடக்க மாகச் சொல்வார்!

24.மிக நெருக்கடியான போர்ச் சூழல் நேரங்களில் பெட்ரோல் அல்லது ஆசிட்டுடன் ஒருவர் பிரபாகரனுடன் இருப்பாராம். அவருக்கு ஏதாவது ஆனால், உடனேயே உடலை எரித்துவிட உத்தரவிட்டிருந்தார். எதிரியின் கையில் தன் சாம்பல்கூடக் கிடைக்கக் கூடாதுஎன்பதில் தெளிவாக இருந்திருக்கிறார்!

25.‘தமிழீழ லட்சியத்தில் இருந்து நான் பின்வாங்கினால் என்னுடைய பாதுகாவலரே என்னைச் சுட்டுக் கொல்லலாம்' என்று பகிரங்கமாக அறிவித்திருந்தவர்.

http://madurai-pcl-sivakumar.blogspot.com.au/2012/03/25.html

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரன் எழுச்சி

வீரம் விளைந்ததடா தமிழ் ஈழமண் மீதினிலே - வரி

வேங்கை எழுந்ததடா வல் வெட்டித் துறையினிலே

ஆரத்தில் ஆல விடத்தினைக் கட்டிய

ஆண்மைக் குமரனடா - பெரும்

ஆபத்தையே பனியாக மதித்திட்ட

ஆதித்ய சோதியடா

சீலத்தில் வாய்மையில் போர்ப்படை கட்டிய

சிந்தனையாளனடா - எங்கள்

செந்தமிழன் பிரபாகரன் என்கின்ற

செல்வக் குமரனடா

இந்தியச் சூதினை எட்டியுதைத்திட்ட

எங்கள் தலைவனடா - தமிழ்

விந்தியந் தொட்டுக் குமரி வரையெனும்

விதியை மறுத்தவன் டா

செந்தமிழ் ஈழ மணித்திரு நாட்டைச்

செதுக்கிய சிற்பியடா - ரத்தம்

சிந்திச் சிந்தித் தமிழ் மானத்தைக் காத்திடச்

சீறிய வேங்கையடா.

குட்டக் குனிந்த தமிழன் நிமிர்ந்து

குதறிட வைத்தவன் டா - அட

எட்டுத்திசையிலும் ஈடிணையற்ற-எம்

ஈழத்தலைமகன் டா

துட்டகெமுனு தொடக்கிவைத்திட்ட

துயரை ஒழித்திடவே - இனிப்

பட்டது போதுமென்றார்த்து எதிரியில்

பாய்ந்த புலியவன் டா

ஆயிரமாயிரம் வேங்கைகள் சேர்த்து

அணிநடை செய்தவன் டா - உயிர்

மாய்வதெம் மண்ணினுக்காய் என வாழும்

மறவர் தலைவனடா

பேய்களுலாவிடு காடதுவாக்கிய

பேரின வாதிகளின் - தலை

சாய எம் மண்ணினில் வீர பராக்ரம

சாகசம் செய்தவன் டா

எத்தனை கோடி துயர் வந்தபோதும்

இடிந்து விடாதவன் டா - தன்னை

மொய்த்த பகைதனை ஈயெனவோர் பெரு

மூச்சிற் கலைத்தவன் டா

இத்தரை மீதிற் கரந்தடி வித்தையில்

ஈடிணையற்றவன் டா - எங்கள்

சொத்தென தாயக ஈழமண் தன்னிற்

சுதந்திரம் கேட்டவன் டா

சேய்கள் பல்லாயிரம் சேர்த்தனன்; - சூழந்திட்ட

தீமையகற்றிடவே - அவர்

வாய்மையில் வீர வழிமுறையில் - தமிழ்

மாண்பு சிறந்ததடா

ஆயதங்கையில் அறவழி நெஞ்சிலென்(று)

ஆர்த்த புலிகளினால் - துயர்

போயின போயின என்று தமிழ் மகள்

துள்ளி நிமிர்ந்தாளடா

இன்றெம தீழத் தமிழ் நிலம் வீழ்ந்தது

என்ற துயர் பகிர்வோம் - புலிக்

கன்றுகள் சோர்ந்தன வாயினும் நாளையோர்

காலம் வரும் உயர்வோம்

சென்றதை எண்ணியின்றேங்கலை விட்டுச்

சிரங்களுயர்த்திடுவோம் - அட

வென்றெமெதன்னை விலங்குடைப்போம் - என

வீறுகொள் செந்தமிழா.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வந்தியதேவன் & Karu

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வந்தியதேவன் & Karu

நன்றி உறவுகளே . காலத்திற்கேற்ற தேவையான பதிவுக்கும், உங்கள் நேரத்திற்கும்.

[size=1]

[size=4]ஒரு உன்னத ஒப்பற்ற தலைவன். [/size][/size][size=1]

[size=4]அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே பெருமை. [/size][/size][size=1]

[size=4]ஆனால் அவரின் சிந்தனைகளுக்கு செயல்பாடுகளுக்கு முழுவடிவம் கொடுக்கவில்லையே என்பதே வாழ்நாள் கவலை. [/size][/size]

[size=4]நன்றி வந்தியதேவன் & Karu [/size]

[size=4]ஒரு உன்னத ஒப்பற்ற தலைவன். [/size]

[size=1][size=4]அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே பெருமை. [/size][/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உன்னத ஒப்பற்ற தலைவன்.

அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே பெருமை.

ஆனால் அவரின் சிந்தனைகளுக்கு செயல்பாடுகளுக்கு முழுவடிவம் கொடுக்கவில்லையே என்பதுதான் எனது ஏக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள் தலைவன் பிரபாகரன்!!!

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உன்னத ஒப்பற்ற தலைவன்.

அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே பெருமை.

ஆனால் அவரின் சிந்தனைகளுக்கு செயல்பாடுகளுக்கு முழுவடிவம் கொடுக்கவில்லையே என்பதுதான் எனது ஏக்கம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி வந்தியதேவன்.

நன்றி Karu .

  • கருத்துக்கள உறவுகள்

வந்தியத்தேவனுக்கும், கருவுக்கும், நன்றிகள்!

07."பிரபாகரன் ஒருபோதும் புகைத்தது இல்லை. மது அருந்தியதும் கிடையாது. மற்றவர்களிடமும் இப்பழக்கத்தை அவர் விரும்பவில்லை. விடுதலைப் புலிகள் அமைப்பில் புகைபிடிக்கும் பழக்கம்கொண்ட ஒருவரை பிரபாகரன் சகித்துக்கொண்டார் என்றால், அது பாலசிங்கமாகத்தான் இருக்கும். பாலாவிடம் இருந்து வரும் சிகரெட் நெடி பிரபாகரனுக்குப் பிடிப்பதில்லை. எனவே, பிரபா முன்னிலையில் பாலாவும் சிகரெட் பிடிப்பதில்லை" என்கிறார், பாலசிங்கத்தின் மனைவி அடேல்!

சில புலனாய்வுத்துறையில் உள்ளவர்கள் புகைப்பார்கள் அனுமதி இருக்கு என நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]ஒரு உன்னத ஒப்பற்ற தலைவன்.

அவர் காலத்தில் வாழ்ந்தேன் என்பதே பெருமை[/size]

நன்றிகள் வந்திய தேவன் அண்ணா, கரு அண்ணா..

தலைவர் காலத்தில் வாழ்ந்தேன் என்று பெருமை கொள்கிறேன். ஆனால் போராட்டத்தில் பங்கு கொள்ளவில்லை என்ற மன உறுத்தலையும் கொண்டிருக்கிறேன். :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.