Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஒரு அகதியின் புலம்பல்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

 
 
இன்று எங்களை எமது தொழிலகத்திலிருந்து ஒரு தொழிற்சாலை காட்டக்
கூட்டிப்போயிருந்தார்கள்.நாங்கள் ஏழு பேர் போய் இருந்தோம். அந்த தொழிற்சாலை எனது எதிர்பார்ப்பை மீறி மிகப்பெரிதாகவும் மிகவும் நவீனமானதாயும் இருந்தது.எமது காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்  சாலையைப்போல் நான்கு மடங்காவது பெரிதாக இருக்கும்.இது உணவு தயாரிக்கும்  தொழிற்சாலை.அந்த தொழிற்சாலையில் வெறும் இரு நூற்றி அறுபது ஊழியர்களே கடமை செய்கிறார்கள். கிட்டத்தட்ட முழுக்க கொம்பியுட்டர் ஊடாக இயக்கப்படுகிறது. 
   
எனக்கு மனதில் ஏதோ குடையத்தொடங்கியது.எங்களுக்கு நாடு இல்லை.
இருந்தால் நாங்களும் இதை மாதிரி போடுவம். சமாதான காலத்தில் ஒரு முறை வெளி நாடு வந்து போயிருந்தேன். அப்ப எதையும் புதிதாய் கண்டால் அதை விளாவாரியாய் படமெடுத்து அது சம்மந்தமான அனைத்து தகவலும் தேடி கொண்டு போயிருந்தேன்.அதுல ஒரு கொஞ்சம் அங்க பிரயோசனப்பட்டுது. இப்ப இந்த தொழிற்சாலையைப் பார்க்கிறதுல
ஏதோ உயிரில ஒன்று விடுபட்ட மாதிரியான ஒரு உணர்வும் நெஞ்சில் ஒரு வலியும்தான் .      
 
இந்த தொழிற்சாலை பற்றி  நான் கதைக்க விரும்புபவர்கள் இப்போது உயிரோடு இல்லை.அவர்களை ஒவ்வொன்றாயும் கூட்டாயும் இழந்தாயிற்று. அவர்களைப்பற்றி , அவர்களின் விருப்புகளைப்பற்றி ,
அவர்களின் உழைப்பைப்பற்றி அவர்களின் அர்ப்பணிப்பைப்பைப்பற்றி
எழுதுபவர்கள் குறைந்து போயிற்று.உண்மைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் குறைந்து போகிறது.
போர் நெருக்கடி அதிகரித்தபோது எப்படியாவது விடுதலையை தக்கவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் தவித்தார்கள்.இரவு பகலென உழைத்தார்கள். எங்களுக்கு நிலம் இனி இல்லை என்றுவரும்வரை அவர்கள் பணி தொடர்ந்தது. பணியில் பலர் வீர மரணம்
அடைந்தனர். இறுதி நாட்களில் எல்லாம் இரு நேரக்கஞ்சிதான் வரும் அதிலும் ஒரு நேரத்தை மக்களிடம் கொடுத்துவிட்டு வாழ்ந்தவரில் இறந்தவர் அதிகம்.   அதனால் உண்மைகளின் கதைகளை படிக்கமுடியாது.
 
இறுதி நாள்வரை எங்களுடன் நின்ற மக்களை மனம் அசைபோடுகிறது. அந்த மணித்துளிகளில் வந்து என்ன செய்வது? என்று வினவி நின்ற மக்களை போய்வாருங்கள் என்று சொல்லவைத்த எமது ஏலாமையை எப்படி மீண்டும் நினைப்பது? தோற்றுப்போனோமா ? தேற்றமுடியாமல் நிலத்தில் சுருண்டு படுத்துக்கிடந்ததை யாரோடு மீட்டுவது?அந்த பறந்து திரிந்த துப்பாக்கிச்சன்னங்கள் ஏன் எங்கள் உயிரை விட்டுவைத்தன. விடை தெரியவில்லை எமக்கு.இறுதி கணத்திலும் சக போராளியின் வித்துடலை மணல் கிண்டி புதைத்து விட்டுத்தானே வந்தோம் கதைக்கமுடியாமல்.
 
நாளும் மக்களின் துயர் அறிந்து மேலும் சிதைந்து போகிறது மனம்.அரசோடு சேர்ந்தியங்கும் கூலிகளைவிட ஏன்?அனைத்துத்தமிழரும் ஒன்றாக முடியாது . ஏன் நாங்களே சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்? எமது சண்டை எதிரிக்குத்தானே வாய்ப்பாகும்.அவிந்த மனத்தில் முள்ளாய் எழுகின்றன கேள்விகள்.
ஒன்றாகாவிட்டால்கூட பரவாய் இல்லை ஏன்? எங்களுக்குள் சண்டை பிடிப்பான்? நான் ஒரு சாதாரணன் . உங்களில் பலரைப்போல எமது மக்களின் விடிவே எனது கனவு.
ஏதோ ஒரு தூரத்தில் இருந்து அதைக்கேட்டால் போதும்.இந்த அகதிக்கு ஆசை கொஞ்சம் கூடத்தான் என்று நினைக்காதீர்கள்.
 
- நிரோன் -

நாளும் மக்களின் துயர் அறிந்து மேலும் சிதைந்து போகிறது மனம்.அரசோடு சேர்ந்தியங்கும் கூலிகளைவிட ஏன்?அனைத்துத்தமிழரும் ஒன்றாக முடியாது . ஏன் நாங்களே சண்டை போட்டுக்கொள்ள வேண்டும்? எமது சண்டை எதிரிக்குத்தானே வாய்ப்பாகும்.அவிந்த மனத்தில் முள்ளாய் எழுகின்றன கேள்விகள். ஒன்றாகாவிட்டால்கூட பரவாய் இல்லை ஏன்? எங்களுக்குள் சண்டை பிடிப்பான்?

 

இந்த  நியாயமான கேள்விகளுக்கு பல பதில்கள் இருக்கலாம். ஆனால் அவை எல்லாவற்றிலும் பொதுவானதாக நேர்மையான உண்மையான, மக்கள் மனங்களை வெல்லாத தலைமைகள் இல்லாத காரணம், முதன்மையானது.

 

 

உங்கள் பதிவுகள் ஆன்மாவின் ஆழத்துக்கு சென்று தாக்குகின்றன. நினைவு மீட்டல்களோடு நின்றுவிடாமல் ஏதோ ஒரு இனம்புரியாத வலியையும் ஏற்படுத்ததவறுவதில்லை .

நன்றி லியோ.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி லியோ  இணைப்பிற்கு 

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்புக்கு நன்றிகள் லியோ ......

இந்த தொழிற்சாலை பற்றி நான் கதைக்க விரும்புபவர்கள் இப்போது உயிரோடு இல்லை.அவர்களை ஒவ்வொன்றாயும் கூட்டாயும் இழந்தாயிற்று. அவர்களைப்பற்றி , அவர்களின் விருப்புகளைப்பற்றி , அவர்களின் உழைப்பைப்பற்றி அவர்களின் அர்ப்பணிப்பைப்பைப்பற்றி எழுதுபவர்கள் குறைந்து போயிற்று.உண்மைகளை வாசிக்கும் சந்தர்ப்பம் குறைந்து போகிறது. போர் நெருக்கடி அதிகரித்தபோது எப்படியாவது விடுதலையை தக்கவைக்க வேண்டும் என்று குறிப்பிட்டவர்கள் தவித்தார்கள்.இரவு பகலென உழைத்தார்கள்.

கசப்பானது ஆனால் உண்மை பிகர்களை பற்றிய நினைவுகள் மட்டும் மனதில் நிற்கின்றது.......அதைப்பற்றி எழுதுகிறோம்,வாசிக்கிறோம்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
அகூதா,பகலவன்,நந்தன்,புத்தன் தங்கள் கருத்திடலுக்கும் , வருகைக்கும் 
நன்றிகள்.
நெப்போலியன் சிறுவயதில் தாயிட்குப்பின்னால் வயலில் நடந்து கொண்டிருப்பானாம். அப்போது தடக்கி வீழ்ந்தால் -- தாய் பதறி கேட்பாளாம் 
நெப்பொலியா !  வீழ்ந்து விட்டாயா?     அவன் ஒருபோதும் சொல்வது இல்லையாம் தான் வீழ்ந்ததாய்.    எழுந்து விட்டேன் தாயே! என்பானாம்.
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையிலேயே இதற்கு எப்பதிலையும் அளிக்க முடியவில்லை.

 

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

இறுதி நாள்வரை எங்களுடன் நின்ற மக்களை மனம் அசைபோடுகிறது. அந்த மணித்துளிகளில் வந்து என்ன செய்வது? என்று வினவி நின்ற மக்களை போய்வாருங்கள் என்று சொல்லவைத்த எமது ஏலாமையை எப்படி மீண்டும் நினைப்பது? தோற்றுப்போனோமா ? தேற்றமுடியாமல் நிலத்தில் சுருண்டு படுத்துக்கிடந்ததை யாரோடு மீட்டுவது?அந்த பறந்து திரிந்த துப்பாக்கிச்சன்னங்கள் ஏன் எங்கள் உயிரை விட்டுவைத்தன. விடை தெரியவில்லை எமக்கு.இறுதி கணத்திலும் சக போராளியின் வித்துடலை மணல் கிண்டி புதைத்து விட்டுத்தானே வந்தோம் கதைக்கமுடியாமல்.
 

 

லியோ , நீங்கள் மண்ணுக்காய் செய்த பணிகளும் அதற்காக கொடுத்த விலைகளும் ஒருநாள் கனவு நனவாகும். ஆதுவரை சாதாரணர்களால் செய்யக்கூடிய பணிகளைச் செய்வோம்.

உங்களால் உயிர் கொடுக்கப்பட்ட ஆதித்யன் முதல் எத்தனையோ பேர் உங்களது உழைப்பையும் இழப்பையும் மறக்காமல் நேசித்தவர்களுக்காகவும் நேசித்த மண்ணுக்காகவும் உழைத்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

அகூதா,பகலவன்,நந்தன்,புத்தன் தங்கள் கருத்திடலுக்கும் , வருகைக்கும் 
நன்றிகள்.
நெப்போலியன் சிறுவயதில் தாயிட்குப்பின்னால் வயலில் நடந்து கொண்டிருப்பானாம். அப்போது தடக்கி வீழ்ந்தால் -- தாய் பதறி கேட்பாளாம் 
நெப்பொலியா !  வீழ்ந்து விட்டாயா?     அவன் ஒருபோதும் சொல்வது இல்லையாம் தான் வீழ்ந்ததாய்.    எழுந்து விட்டேன் தாயே! என்பானாம்.

 

என்றாவது ஒருநாள் நாங்களும் எழுவோம் நிமிர்வோம் லியோ நம்பிக்கையுடனிருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

பெருமூச்சு ஒன்றை மட்டுமே பதிலாகத் தர முடிகிறது.நன்றி லியோ.

அகூதா,பகலவன்,நந்தன்,புத்தன் தங்கள் கருத்திடலுக்கும் , வருகைக்கும் 
நன்றிகள்.
நெப்போலியன் சிறுவயதில் தாயிட்குப்பின்னால் வயலில் நடந்து கொண்டிருப்பானாம். அப்போது தடக்கி வீழ்ந்தால் -- தாய் பதறி கேட்பாளாம் 
நெப்பொலியா !  வீழ்ந்து விட்டாயா?     அவன் ஒருபோதும் சொல்வது இல்லையாம் தான் வீழ்ந்ததாய்.    எழுந்து விட்டேன் தாயே! என்பானாம்.

 

நாங்களும் நிச்சயம் எழுவோம்.  எமது மக்களுக்கு நிச்சயம் விடிவு கிடைக்கும்.  ஆனால், அதற்கான உறுதியையும் பொறுமையையும் நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  சகோதரிகளான சகாறா,சாந்தி, சுமேரியர்,தமிழிச்சி தங்கள் வருகைக்கும்,
கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள். எதுவுமில்லை இழப்பதற்கு .
  • கருத்துக்கள உறவுகள்

லியோ,இன்று தான் உங்கள் பதிவைப் பார்க்க முடிந்தது!

 

ஈரம் காய்ந்து போனால், நிலம் தரிசு நிலமாகிவிடும்!

 

ஆனாலும், ஆழத்தில் ஈரம் இருக்கும் வரை நம்பிக்கையும் இருக்கும்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இழப்பதற்கு எதுவும் இல்லையென்றால் பெறுவதற்கு எதோ இருப்பதாகவே அர்த்தம்.அது எங்களின் விலைமதிக்க முடியாத விடுதலை.எத்தனை மனிதர்கள் தங்கள் கனவுகளில் விடுதலை தீ சுமந்து நடந்தனர்.அவர்கள் போயினர்.போனவழி எல்லாம் கருகிப்போய் கிடக்கிறது.தூர விளிப்பாதையில் பார்த்து கிடக்கின்றோம்'அவர்கள் வரவில்லை.

நீங்கள் திரிந்த சாலைகள் எங்கும் பேய்களின் ஆட்சி .கேட்க யாருமின்றி அனாதைகளாய் என் மக்கள்.எங்கே போனீர்கள் தம்பிமார்களே?தங்கையரே?

Edited by anni lingam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 புங்கை, அன்னிலிங்கம் வருகைக்கும், கருத்துக்களுக்கும் நன்றிகள். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.