Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாண்புறு மாணவர் அடிதனில் பணிகிறோம்

Featured Replies

ஈழமண் என்றோர் நாடொன்று இருந்ததாம்

இனிமையாய் தமிழினம் அதனிலே வாழ்ந்ததாம்

உரிமையைப் பெற்றிட உறுதியாய் நின்றதால்

உலகமே சேர்ந்ததந்த இனத்தினை அழித்ததாம்

 

ஆண்டுகள் ஐம்பது கழிந்திட்ட பின்னதாய்

அபலைகள் எம்கதை ஏட்டினில் மட்டுமோ

ஏங்கியே நிற்கிற புலம்பெயர் தமிழரின்

ஏக்கத்தைப் போக்கிட துணிந்திட்ட வீரரே

 

மகிழ்ச்சியால் வாழ்ந்திடல் மங்கையைக் கவர்ந்திடல்

மதுவினை ருசித்திடல் மட்டுமே மாணவர்

மனதிலே இருப்பதாய் மட்டிட்ட மடையரே

மடையெனத் திரண்டஎம் மைந்தரைப் பாரடா

 

ஏழைகள் பணத்தினை எளிதினில் சுருட்டிட

ஏற்றதே அரசியல் என்பதாய் எண்ணிய 

அராஜகர் கைகளில் சிக்கிய எம்விதி

அகற்றிடக் கங்கணம் கட்டிய தீரரே!

 

ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட

அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் 

அன்பினைக் கண்டதால் கண்ணீர் நிறைத்திட

அஞ்சாச் சிங்கங்கள் உம்தாள் பணிகிறோம்

 

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கைகள் நலிந்துபோய் விட்ட வேளையில், நீதி தேவதை கூட நிர்வாணமாக்கப் பட்டுவிட்ட நிலையில், தமிழக மாணவர்களின் போராட்டங்களின் எழுச்சி எமது காயங்களுக்கு 'ஒத்தடமாக இருக்கின்றது!

 

எமது நன்றியைக் கவிதையில் வடித்த மணிவாசகனுக்கு நன்றிகள்!

 

  • தொடங்கியவர்

கருத்துக்கு நன்றி புங்கையூரான்

 

அதிகார வட்டம் முழுமையாக போராட்டத்தை நசுக்க முற்பட்டுள்ள வேளையில் இதன் வெற்றி குறித்து பெருத்த நம்பிக்கையைக் கொள்ள முடியாது என்றாலும் தமது உணர்வுகளை வெளிப்படுத்தும் மாணவர்கள் எம் முன்னே உயர்ந்தே நிற்கிறார்கள்...

ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட
அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின்
அன்பினைக் கண்டதால் கண்ணீர் நிறைத்திட
அஞ்சாச் சிங்கங்கள் உம்தாள் பணிகிறோம்

  • கருத்துக்கள உறவுகள்

மணிவாசகன்...உங்கள்..உணர்வு பூர்வமான கவிதையினால் ...எமக்காக குரல் கொடுக்கும் மாணவ செல்வங்களை தட்டிக்கொடுதுள்ளீர்கள்.....கணணியின்  முன் செலவிடும் நேரத்தை ...விடுதலை உணர்வுடன் பயனுறுத்தியுள்ளீர்கள்....நன்றிகள்...தொடர்க...

  • கருத்துக்கள உறவுகள்

தகுந்த நேரத்தில் வெளிப்பட்டுள்ள உணர்வு வரிகள். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றி மணிவாசகன். தன்னலமற்ற மாணவர்களின் போராட்டம் வெற்றி பெற வேண்டும்.எம்மாலான சகல ஒத்துழைப்புக்களையும் வழங்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று செய்ய வேண்டியதை நாம் இன்றே செய்தால் 

நாளை நாம் எதையும் சாதித்து விடலாம்


உங்களைப் பின்பற்ற விரும்புகின்றோம்

அது நாளை அல்ல இன்றே நடக்கலாம்


எங்கள் இரத்த உறவுகளுக்கு

எங்கள் நன்றிகள் உரமாகட்டும்

 

  • கருத்துக்கள உறவுகள்

காலத்தில் வெளிப்பட்ட உணர்வு...அரசியல் வாதிகள்போல் அல்லாது சுய நலமற்ற மாணவர்களின் தன்னெழுச்சிக்கு தானாக சாய்கிறது உலகதமிழர்களின் தலைகள்...கவிதைக்கு நன்றி அண்ணா...

  • கருத்துக்கள உறவுகள்

காலத்திற்கேற்ற கவிதை.. நன்றி மணிவாசகன்..!

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி மணிவாசகன் 

  • தொடங்கியவர்

கவிதைக்hகன உங்கள் பின்னூட்டங்கள பதிந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்டவர் மருண்டிட ஆள்பவர் கலங்கிட


அலையெனத் திரண்ட எம் சோதரர் உங்களின் 


அன்பினைக் கண்டதால் கண்ணீர் நிறைத்திட


அஞ்சாச் சிங்கங்கள் உம்தாள் பணிகிறோம்

 

நன்றி  ஐயா

 

அத்துடன் நாமும் எந்நேரமும் அவர்களுடன் சேர்ந்து பயணிக்கின்றோம் என்ற  செய்திகள் அவர்களது பார்வைக்கு கொண்டு செல்லப்படணும்

  • தொடங்கியவர்

கருத்திற்கு நன்றி விசுகு அண்ணா! மிகவும் முக்கியமான கருத்தொன்றை பதிந்துள்ளீர்கள். பலவிதமான எதிர்ப்புக்களைத் தாண்டிப் போராடும் அவர்களுக்கு தம்மை ஆதரிக்கப் பலர் உள்ளனர் என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட வேண்டும். நேற்றைய தினம் இந்தப் போராட்டங்களுடன் சம்பந்தப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்ட போது கனடா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா என்று எல்லா நாடுகளிலிருந்தும் ஆட்கள் தொடர்பு கொண்டு பேசுகின்றனர் என்றும் இது தமக்கு உற்சாகத்தைத் தருவதாகவும் சொன்னார். எனவே எமது ஆதரவை நாம் தொடர்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தம்பி

 

இன்றைய இணைய தொலைத்தொடர்பு வசதிகள் பெரும் புரட்சிளைச்செய்து வருகின்றன

தமிழருக்கும் அவை கை  கொடுக்கும்.

அவற்றை நாமும் முழுஅளவில் பயன்படுத்தணும்

 

உங்களது இந்த கவிதையையும்அவர்களது கண்ணில் வைக்கணும்

 

Edited by விசுகு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.