Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதலமைசருக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய வரும் - சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல்.

Featured Replies

தமிழக முதலமைசருக்கு ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய வரும் - சுப்பிரமணியன் சுவாமி மிரட்டல்.

 

subiramaniyam.jpgதமிழகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா விடுத்திருக்கும் வேண்டுகோளுக்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி ஆட்சியை டிஸ்மிஸ் செய்ய வேண்டிய நிலை உருவாகும் என்று மிரட்டல் விடுத்திருக்கிறார்.

இலங்கையில் தமிழின இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்த வேண்டும், தமிழீழத் தனியரசுக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஏப்ரல் மாதம் தொடங்கும் ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை அனுமதிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், தமிழர்களின் உணர்வுகளை மதித்து ஐபிஎல் போட்டிகளில் இலங்கை வீரர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பிசிசிஐக்கு அறிவுறுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருக்கும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, மத்திய அரசு ஜெயலலிதாவுக்கு 256-ன் கீழ் சில வழிகாட்டு முறைகளை அனுப்ப வேண்டும். ஜெயலலிதாவின் கோரிக்கை அரசியல் சாசனத்துக்கு எதிரானது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தை சிறப்பு ஆயுதப் ப்படையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து போட்டிகளை நடத்தி இலங்கை வீரர்களை அனுமதிக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் சென்னையை பதற்றப் பகுதியாக அறிவித்து ஜெயலலிதாவை ஏற்கச் செய்ய வேண்டும். இதையும் ஏற்க மறுத்தால் அரசியல் சாசனத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி ஜெயலலிதா அரசை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்யலாம் என்று கூறியுள்ளார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்படியான... முட்டாள் வேலைகளில், மத்திய அரசு இறங்கினால்... தமிழ்நாட்டில், ஏற்படும் கலவரங்களை அடக்க... எந்தக் கொம்பனாலும் முடியாது.
ஜெயலலிதாவின் ஆட்சி கலைக்கப்பட்டால்... அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழ் நாட்டிலுள்ல 40 தொகுதிகளையும்... அ.தி.மு.க. தான் கைப்பற்றும்.
சுப்பிர‌மணிய‌சாமி.... இப்ப‌டிச் சொல்லி, ஜெயலலிதாவின் த‌மிழுண‌ர்வை அட‌க்க‌ப் பார்க்கிறார்.  இத‌ற்குப் ப‌ய‌ந்த‌வ‌ர் அல்ல‌...ஜெய‌ல‌லிதா.
 

சு.சாமிக்கு கூமுட்டையும், விளக்குமாறும் ரெடி

தமிழக போராட்டங்களால் ஜனநாயக விரோத கொலைகாரக் கும்பல் கதி கலங்கி நிற்கிறது!
 

இவ அடிக்கடி கொடுத்த காசுக்கு அதிகமாகவே கூவுறான். இவண் வேடிக்கைக்கு விரைவில் தக்க பரிசு இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

சாமிக்கு ஞாபக மறதி கூடிட்டுது.. தமிழ் நாட்டில் வன்முறை இல்லை. மக்கள் கொந்தளிப்பா இருக்கிறாங்க. அதனைக் காட்டி முன்னர் சிறீலங்கா தூதரகத்தையே சென்னையை விட்டு நீக்கினது... உட்பட பல சம்பவங்கள் வரலாற்றில் நடந்து முடிந்துள்ளன.

 

தமிழக மக்களின் உணர்வை மதிச்சுத்தான் 1987 இந்தியா சாப்பாட்டுப் பார்சல் போட்டது. அப்புறம் இந்திய இராணுவத்தை அனுப்பினது. அப்ப எல்லாம்.. எங்க போயிருந்தாரு இந்தச் சாமி..???!

 

இன்று அந்த நிலைமையை விட மக்கள் முன்னேறிட்டாங்க. ஜனாதிபதி ஆட்சி வந்தால் அதனை தூக்கி வீச தமிழ் நாட்டு மக்கள் தயாராகிட்டாங்க.

 

சாமி ஒரு பேட்டியில கருத்துச் சொல்லிச்சு.. திராவிடம் என்றது வெள்ளைக்காரன் தந்தது என்று. நியாயம் தான். அதே சாமி புரிஞ்சுக்கனும்.. இந்தியா என்றதையும் அவன் தான் தந்தது என்று..! சாமி எப்படி திராவிடத்தை நிராகரிக்க.. உரிமை வைச்சிருக்கிறாரோ.. தமிழர்கள் அதே அளவிற்கு இந்தியாவை நிராகரிக்க உரிமை கொண்டிருக்கிறார்கள். சாமிக்கு அவசியமாப்படுவது.. தமிழர்களுக்கு அவமானமாப்படுகுது. அவ்வளவும் தான்.

 

சாமிக்கு.. பிடிக்கல்லையோ.. தமிழ்நாட்டை விட்டுப் போயிடலாம். சாமியை தமிழர்கள் சார் சார் உட்கார்ந்திருங்க என்று அன்போடு அழைக்கல்ல..!

 

ஏன் முன்னாள் சிங்கள அதிபர் பிரேமதாச மைசூர் பருப்பில் இருந்து இந்திய கிரிக்கெட் அணியுடன் போட்டிகளை தடை செய்தது வரை செய்த போது.. சாமி என்ன.. பாய்க்குள்ள பூந்திருந்து குறட்டை விட்டு... குட்டித் தூக்கம் போட்டதோ..??! :):lol:

Edited by nedukkalapoovan

சு.சாமி பிரச்சனையே வேற,  அவர் கடை இந்த ஆரியர், திராவிடர் பேதத்த வைச்சுத்தான் போணி ஆகிட்டு இருந்துது. இப்ப ஆரியம், திராவிடத்த விடுத்து தமிழனா தமிழனுக்கு ன்னு குரல் கொடுக்குறது இவனுக்கு பிடிக்கல. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச எலும்புத்துண்டுகளும் கிடைகாதல்லவா அதான்

கொசுத்தொல்லை தாங்க முடியலடா சரவணா.

  • கருத்துக்கள உறவுகள்

யோவ்

அதெல்லாம் பழைய  கதை

 

இப்ப முடிந்தால் உடனே செய்

மாணவர்களின் பாதை சரியாகத்தான் போய்க்கொண்டிருக்கு. மத்தியில் சோனியாவை பில்லியனெயர் ஆக்குவதற்காக தமிழ் நாட்டை வந்து உருவிக்கொண்டு போகிறார்கள். மானிலத்தில் இருக்கும் வரி சேகரிப்பு நிலையங்கள் எல்லாவற்றையும் மூடி வெளியே அனுப்பி வைக்க வேண்டும். 

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சு சுவாமி இதுதான் சரியான சந்தர்ப்பம் செய்துபாரும் அப்புறம் புரியும்  

  • கருத்துக்கள உறவுகள்

சாமியோவ் ஆடி முடி....அப்புறம்.....

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சு.சு....ச்ச்சுச்ச்ச்ச்சு!!!!ச்சஊ...சூ....சூ:))))

  • கருத்துக்கள உறவுகள்

சுவாமி மூக்கை நுழைக்கும் விடயங்களில் எப்போதும் கவனிப்பாக இருத்தல் அவசியம்

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய வயதில் நடுஇரவில் நாய் ஊளையிட்டால் ஏதோ இழவு விழபோகுது என்று அர்த்தம்.. அதாவது நாய் கண்ணுக்கு மட்டும்தான் எமன் வருவது தெரியுமாம் . அதனால் தன்னை பிடிக்க எமன் வருகிறானோ என்று ஊளை இடுமாம்.. நாங்கள் எல்லாம் அப்போ பயத்தில் இழுத்து போர்த்தி தூங்கிடுவம்.. ஆனால் அது என்னவோ சொன்னபடி மறு நாள் காலையில் யாரவது ஒரு காலி.. சரி அதவிடுவம்...

டிஸ்கி:

சுப்புறமணி சாமிக்கு கண்ணுக்கு நேராகவே எமன் தெரியறான்(மாணவர் போராட்டம்). அதற்கு மேலும்  ஊளை இடலை என்றால் எடுத்த பிறப்பு வேஸ்டு.. இதை போய் பெருசு பண்ணீறீங்க...

 

 

எப்பா சாமி வஞ்ச புகழ்ச்சி அணியில் எழுதியிருக்கான் நான் எதையும் எதையும் யாரையும் கம்பேர் பண்ணவே இல்லை,,,, :rolleyes: :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.