Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீனியம்மா

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனியம்மா

 

6176194682_04c8855a24_z.jpg

 

 

என்னைப்பெற்றது என் அம்மாவானாலும்

சிறுவயதில் உன்மடிதானே என் இடம்

என் சீனியம்மா...

நான் சிரிக்கப் பேசி சின்னக் கதை சொல்லி

சித்திரமாய் என்னை வளர்த்தாய் ...

உன்கை பிடித்தே

நான் பள்ளிக்கூடம் செல்லும்பொழுது

உலகமே என்கால் அடியில் ........

 

காலம் என்ற நதியில்

கரைபுரண்ட வெள்ளத்தில்

நீயும் நானும் மல்லுக்கட்டினோம்.........

ஒவ்வரு வருடமும் இங்கு

தோல் உரிந்து முடி உதிர்ந்து

குளிர் வேளையில் உறையும்

ஃபைன் மரங்கூட வெய்யில்பட

புதுப்பெண் போல் பொலிவு பெறும்........

 

குருவிகளும் தேன் வண்டுகளும்

ஃபைன் மரத்தை சுத்திவர ,

உனக்கும் எனக்கும் மட்டும்

ஏன் சீனியம்மா

கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்

பொலிவு இழக்கின்றோம் ??????????

 

காலம் கிழித்த கலண்டரில்

எங்களுக்கு மட்டும்

ஏன் இரக்கம் இல்லை ????

என் சீனியம்மா

மீண்டும் சின்னக் குழந்தையாய்

பாயிலே படுத்துப் போனாள் .......

நான் வருகிறேன் சீனியம்மா

உன் அருகில் நான் வருகின்றேன்

மீண்டும் பொறுப்பான மகளாக !!!!!!

 

மைத்திரேயி

04/04/2013

Edited by மைத்திரேயி

  • கருத்துக்கள உறவுகள்

சீனியம்மா

 

 

 

காலம் என்ற நதியில்

கரைபுரண்ட வெள்ளத்தில்

நீயும் நானும் மல்லுக்கட்டினோம்.........

ஒவ்வரு வருடமும் இங்கு

தோல் உரிந்து முடி உதிர்ந்து

குளிர் வேளையில் உறையும்

ஃபைன் மரங்கூட வெய்யில்பட

புதுப்பெண் போல் பொலிவு பெறும்........

 

குருவிகளும் தேன் வண்டுகளும்

ஃபைன் மரத்தை சுத்திவர ,

உனக்கும் எனக்கும் மட்டும்

ஏன் சீனியம்மா

கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்

பொலிவு இழக்கின்றோம் ??????????

 

உண்மையான வரிகள் மைத்திரேயி வாழ்த்துக்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

காலம் கிழித்த கலண்டரில்

எங்களுக்கு மட்டும்

ஏன் இரக்கம் இல்லை ????

 அழகான வரிகள், மைத்திரேயி!

 

காலம் மரங்களுக்குச்,

சேலைகளை மட்டுமே,

மாற்றுகின்றது!

 

மனிதர்களுக்கோ,

அனுபவங்களையும்,

அரவணைப்புக்களையும்,

அன்பளிப்புக்களாக,

விட்டுச் செல்கின்றது! :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான மனதை தொட்டு செல்லும் கவிதை, நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

இதயம் சொல்லும் வார்த்தைகள் , பாராட்டுக்கள்.  மைத்திரேயி . இக் கால பிள்ளைகளுக்கு  இந்த அன்பு கிடைப் பதில்லை.

குருவிகளும் தேன் வண்டுகளும்


ஃபைன் மரத்தை சுத்திவர ,


உனக்கும் எனக்கும் மட்டும்


ஏன் சீனியம்மா


கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்


பொலிவு இழக்கின்றோம் ??????????


காலம் கிழித்த கலண்டரில்
 

எங்களுக்கு மட்டும்


ஏன் இரக்கம் இல்லை ????

 

கவிதை புனைவதில் முன்னேற்றம் தெரிகின்றது . உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் . சிறுவயதில் ஒருசிலருக்கே சீனயம்மாக்களின் அன்பும் அரவணைப்பு கிட்டியிருக்கும் . முதுமையின் வடுக்களை உங்கள் கவிதை  கேள்வி கேட்டு நின்றாலும் , மரங்கள் ஏறத்தாள சினிமா தாரகைகள் போல ஆனால் இயற்கை கொடுத்த முதுமையோ ஒருவனுக்கு அனுபவத்தையும் சுற்றம் உறவு என்று அவனைக் கதாநாயகனாகவே உங்கள் முன்  அவனை உருவகிக்கும் . தொடர்ந்து இவ்வாறு தரமான கவிதைகளைத் தாருங்கள் :) :) .

 

 

அருமையான கவிதை! சீனியம்மா என்று கூப்பிடக் காரணம் தான் என்ன?

 

இயற்கையின் நியதியில் பயணிக்கும் வாழ்வில்.... முதுமையை நோக்கிய மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை.

குருத்தோலைகளும் ஒருநாள் காவோலைகளாகி கழ்ன்று விழும்.

யதார்த்தமான கவிதைக்கு என் நன்றியும் பாராட்டுக்களும்.

நன்றி அக்கா! :)

  • கருத்துக்கள உறவுகள்

ஞாபகங்களை மீட்ட வைத்த கவிதை.நன்றி பகிர்வுக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில உறவுகள் எப்போதும் மறக்க மறுக்கப்பட முடியாதவை அப்பிடி ஓர் உறவு சீனியம்மா. வாழ்த்துக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்மையான வரிகள் மைத்திரேயி வாழ்த்துக்கள்.

 

 

நன்றி மொசொப்பத்தேமியா சுமேரியர் .

 

 அழகான வரிகள், மைத்திரேயி!

 

காலம் மரங்களுக்குச்,

சேலைகளை மட்டுமே,

மாற்றுகின்றது!

 

மனிதர்களுக்கோ,

அனுபவங்களையும்,

அரவணைப்புக்களையும்,

அன்பளிப்புக்களாக,

விட்டுச் செல்கின்றது! :D

 

உள்ளதை சொல்லுங்கோ . ஒருகாலத்திலை நீங்கள் சொனது இருந்தது வீட்டிலை முதுமைதான் சட்டாம்பி . இப்ப எப்படா ஹோம்இலை கொண்டுபோய் விடலாம் எண்டுதான் இருக்கினம் .

 

அருமையான மனதை தொட்டு செல்லும் கவிதை, நன்றி

 

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் உடையார் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்களுக்கு எல்லாம் அம்மா என்ற உறவைத் தாண்டி மற்றவர்கள் அன்பு கிடைத்ததில்லை.

உங்கள் போன்றவர்கள் எழுதும் போது அவற்றைப் பார்த்து வியந்து போவதும், ஏக்கம் கொள்வதும் தான் வாடிக்கையாகி விட்டது. :(

 

கவிதை எழுதிய விதமும் வசனங்களின் கோர்வையும் அழகு. :)

தொடர்ந்து எழுதுங்கள் அக்கா.. :)

  • கருத்துக்கள உறவுகள்

பெத்தம்மா, வளர்த்தம்மா என்று நண்பர் ஒருவர் சொல்லுவதை நினைவுக்கு கொண்டு வந்த கவிதை நன்றாக உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதயம் சொல்லும் வார்த்தைகள் , பாராட்டுக்கள்.  மைத்திரேயி . இக் கால பிள்ளைகளுக்கு  இந்த அன்பு கிடைப் பதில்லை.

 

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் நிலாமதி .

 

 

அம்மாவின்ரை தங்கைச்சியை நாங்கள் சீனியம்மா எண்டுதான் கூப்பிடுவம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குருவிகளும் தேன் வண்டுகளும்

ஃபைன் மரத்தை சுத்திவர ,

உனக்கும் எனக்கும் மட்டும்

ஏன் சீனியம்மா

கலண்டரில் கிழிஞ்ச கடதாசி போல்

பொலிவு இழக்கின்றோம் ??????????

காலம் கிழித்த கலண்டரில்

 

எங்களுக்கு மட்டும்

ஏன் இரக்கம் இல்லை ????

 

கவிதை புனைவதில் முன்னேற்றம் தெரிகின்றது . உங்கள் படைப்பிற்கு வாழ்த்துக்கள் . சிறுவயதில் ஒருசிலருக்கே சீனயம்மாக்களின் அன்பும் அரவணைப்பு கிட்டியிருக்கும் . முதுமையின் வடுக்களை உங்கள் கவிதை  கேள்வி கேட்டு நின்றாலும் , மரங்கள் ஏறத்தாள சினிமா தாரகைகள் போல ஆனால் இயற்கை கொடுத்த முதுமையோ ஒருவனுக்கு அனுபவத்தையும் சுற்றம் உறவு என்று அவனைக் கதாநாயகனாகவே உங்கள் முன்  அவனை உருவகிக்கும் . தொடர்ந்து இவ்வாறு தரமான கவிதைகளைத் தாருங்கள் :) :) .

 

உங்களை போல ஆக்களையெல்லாம் என்ரை கவிதை ஆட்டியிருக்குது எண்டால் அதிலை ஏதோ இருக்கு . உங்கடை கருத்துக்கு நன்றி .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இயற்கையின் நியதியில் பயணிக்கும் வாழ்வில்.... முதுமையை நோக்கிய மாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதவை.

குருத்தோலைகளும் ஒருநாள் காவோலைகளாகி கழ்ன்று விழும்.

யதார்த்தமான கவிதைக்கு என் நன்றியும் பாராட்டுக்களும்.

நன்றி அக்கா! :)

 

நன்றி தம்பி . நீங்களும் முந்தி மாதிரி கவிதையள் எழுதவேணும் . எல்லாம் நல்லதுக்குத்தான் நடக்கும் .

உங்கடை கருத்துக்கு நன்றி சொல்லிறன் நிலாமதி .

 

அம்மாவின்ரை தங்கைச்சியை நாங்கள் சீனியம்மா எண்டுதான் கூப்பிடுவம் .

 

 

ஓ......... நான் நிணைத்தேன் அம்மம்மாவைத் தான் அப்படிக் கூப்பிடுறவையோ என்று

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ரை கவிதைக்கு கருத்துகளை சொன்ன சுவைப்பிரியன் , சுப்பண்ணை , ஜீவா தம்பி , கிருபன் , அலைமகள் எல்லாருக்கும் நன்றி சொல்லிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.