Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

போராளிகள் பெருமளவில் நாட்டைவிட்டு வெளியேற இராணுவத்தினரின் கெடுபிடிகளே காரணம் - விநாயகமூர்த்தி

'கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.'

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி தெரிவித்தார்.

 

போருக்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்திருந்த போராளிகளில் பலர் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளது எனச் செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இது குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம் 'பொங்குதமிழ்' இணையத்தளத்திற்கு கருத்துத் தெரிவிக்கையில்,

 

'முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் தொல்லைகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாட்டுத் தூதரகங்களை நாடுவது மட்டுமன்றி அந்தத் தூதரங்களூடாகவும், தனிப்பட்ட முயற்சினாலும் புகலிடம் கோரி வெளிநாடுகளுக்கும் சென்றுள்ளனர்.

 

எனக்குக் கிடைத்த தகவலின்படி கடந்த 45 நாட்களில் மட்டும் வடக்கிலிருந்து 200 இற்கு மேற்பட்ட முன்னாள் போராளிகள் இராணுவத்தினரின் கெடுபிடிகள் காரணமாக புகலிடம் கோரி வெளிநாடு சென்றுள்ளனர்.

 

இது சர்வதேசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும். அதாவது வடக்கில் முன்னாள் போராளிகளை போருக்குப் பின்னரும் இராணுவத்தினர் துன்பறுத்துகின்றனர் என்பதை சர்வதேசம் அறிந்துகொள்ளட்டும்.

 

வடக்கில் யுத்த காலத்தில் இருந்த நிலைமைதான் தற்போதும் இருக்கின்றது. இராணுவப் புலனாய்வாளர்களின் மிரட்டல்களினால் தமிழ் மக்கள் அச்சத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

 

இந்நிலையில், எதிர்வரும் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழர்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சர்வதேச சமூகம்தான் இதனைத் தட்டிக்கேட்க வேண்டும்.

 

இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான அப்பாத்துரை விநாயகமூர்த்தி பொங்குதமிழுக்குத் தெரிவித்தார்.

http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=1&contentid=028d193e-8c4b-41ad-b227-26c7de5c551a

  • கருத்துக்கள உறவுகள்

இவர் நல்லது செய்வதாக நினைத்து

அவர்களைக்காட்டிக்கொடுக்கின்றாரே............ :(

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக

எதுவிதமான யோசனைகளும் இன்றி ஒவ்வொருவரும் ஒவ்வொரு

கோணமாக ஈழத்  தமிழர்களுக்கே அனுகூலமற்ற அறிக்கைகளை விடுகின்றனர்

 

சிங்களவனின் நோக்கமும் அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால்  அது  முன்னால் போராளிகளுக்கு செய்யும்  நன்மையாகவே இருக்கும்.        

Edited by I.V.Sasi

  • கருத்துக்கள உறவுகள்

படிப்படியாக மிகவும் திட்டமிட்ட முறையில் இலங்கையில் இருந்து இளைய சமுதாயம் வெளியேற்றப்பட்டு கொண்டுள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் நோக்கமும் அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால்  அது  முன்னால் போராளிகளுக்கு செய்யும்  நன்மையாகவே இருக்கும்.        

 

அதற்கு அங்கே வாழ்வது அச்சம் என்ற தோரனையை தோற்றுவிக்க .........
சில முன்னாள் போராளிகளை கொல்லவேண்டும் சிறைபிடித்து சித்திரவதை செய்யவேண்டும்.
அந்த முன்னாள்  போராளிகளின் பாத்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம்!
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் நோக்கமும் அவர்களை வெளியேற்றுவதாக இருந்தால்  அது  முன்னால் போராளிகளுக்கு செய்யும்  நன்மையாகவே இருக்கும்.        

முன்னாள் போராளிகள் நாட்டைவிட்டு வெளியேறுவதை சிங்கள அரசு விரும்பாது.

சாதரண பொதுமக்களை வெளியேற்றி அவர்களின் நிலங்களை திட்டமிட்ட

குடியேற்றமூலம் அபகரித்து அதே நிலத்தில்   புனர்வாழ்வு என்ற பெயரில்

 முன்னாள் போராளிகளை அச்சுறுத்தி அடிபணிய வைத்துச் சிங்களம் 

தங்கள் வயிற்றை நிரப்பிக் கொள்ளும்    

  • கருத்துக்கள உறவுகள்

சரணடைந்தும்.. போர் களத்திலும்.. துன்பங்களை தாங்கி நின்ற போராளிகளே உண்மையில் அகதி அந்தஸ்துக்குரியவர்கள். அவர்களைச் சாட்டி எத்தனையோ சாதாரணமானவர்கள் சுகபோக வாழ்விற்காக இல்லாத பொய் எல்லாம் சொல்லி அகதி அந்தஸ்துப் பெற்றுள்ள நிலையில்.. இவர்கள் பத்திரமாக வெளியேறுவது உண்மையில் வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் நாடுகளை உண்மையில் பாராட்ட வேண்டும்..! பெண் போராளிகளும் இவ்வாறு வெளியேறி விடுவதே நன்று. பாவம் அவர்களை பல்வேறு வழியிலும் பாலியல் வதை புரியும் சிங்களம் அங்கு வாழவே விடப்போவதில்லை. ஆண் போராளிகளை அடிமைகளாக கூலிகளாக..பயன்படுத்துகிறது சிங்கள அரசும் இராணுவமும். இதற்கு மேலதிகமாக அவர்களை.. ஒட்டுக்குழுக்கள் தங்களின் அடிமைகளாகப் பயன்படுத்துகின்றன...! கட்டாயப்படுத்தி.. காட்டிக்கொடுக்க வைச்சு காசு பார்க்கின்றன. பின்னர் சித்திரவதை செய்து கொல்கின்றன. அல்லது தற்கொலைக்குத் தூண்டுகின்றன.

 

போராளிகள் அல்லாத சாதாரணமான.. பல தமிழ் பெண்கள் கணவன் உள்ளதைக் காட்டாமல்.. கணவன் உடனான உறவையே... பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாகச் சொல்லி அகதி அந்தஸ்துப் பெற்று வாழுகின்ற நிலையில்.. உண்மையிலேயே பாதிக்கப்பட்ட பல பெண்கள் ஊரில் அனாதைகளாக.. போக்கிடமின்றி.. சிங்களப் படைகளுக்கு கட்டாய விபச்சாரம் என்ற இழி நிலையில் உழன்று.. வாழ வேண்டியுள்ளது. உண்மையில்.. அந்த வகையான போராளிகள் மற்றும் பெண்களுக்கு வெளிநாடுகள் அகதி அந்தஸ்து வழங்கி அவர்களைக் காப்பாற்ற வேண்டும். அவர்களுக்கு நல்ல மறுவாழ்வை அளிக்க வேண்டும்..!

 

வெளிநாட்டில் உள்ள  நம்மவர்களிலும் சிலர் கூட காசைக் காட்டி அந்தப் போராளிகளை தவறாகப் பயன்படுத்த விளைகின்றனர். உள்ளூரிலும் மக்கள் அவர்களை சிங்கள இராணுவமும் புலனாய்வுப்பிரிவுகளும் ஒட்டுக்குழுக்களும் தரும் அச்சத்தால் தூர விலக்கி வைக்கின்றனர். வெளிநாட்டு உதவிகளும் பத்தை.. நூறை.. ஆயிரத்தைக் கண்ணில காட்டுறதோட சரி. ஒரு வகையான நிரந்த வருமானத்திற்கும் அவர்களுக்கு வழியில்லை. உள்ளூரில்.. பாதுகாப்பிற்கும் ஒரு உருப்படியான வழிமுறைகளை.. தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட யாரும் செய்யவும் இல்லை..!  இந்த நிலையில் 4 ஆண்டுகள் அவர்கள் பட்ட துன்பம் போதும். எனியும் அவர்கள் அந்த நரகத்துள் இருந்து கஸ்டப்பட்டு தம்மை தாமே அழித்துக் கொள்ளாத வகையில்.. எப்பாடுபட்டாவது சிறீலங்காவை விட்டு வெளியேறுவதே அவர்களுக்கு நிரந்தரமான பாதுகாப்பை சுமூக வாழ்வை அளிக்க முடியும்..!  :icon_idea::(

Edited by nedukkalapoovan

 முனால் போராளிகள் அங்கு சிங்கள இராணுவத்திடம் மட்டும்  அவஸ்தைப்படவில்லை மாறாக தமிழ்சமுகமும் அவர்களை விரும்பி ஏற்க்கவில்லை அதனால் தான் அவர்கள் புலம்பெயர்வது நல்லது என்று கூறுகிறேன்.

அவர்கள் எப்போதும் கண்கானிக்கப்படும்  நபராகவே இலங்கையில் வாழவேண்டிவரும் அதைவிட புலம்பெயவது நல்லது.

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

செய்தி சிங்கள இராணுவ கெடுபிடிகளால் ............. முன்னால் போராளிகள் புலம் பெயர்கிறார்கள் என்பது. 

 



அதற்கு எங்களுடைய கருத்து.........
கெடுபிடி செய்யும் இராணுவத்திற்கு நன்றிகள் என்பது!
  • கருத்துக்கள உறவுகள்

படிப்படியாக மிகவும் திட்டமிட்ட முறையில் இலங்கையில் இருந்து இளைய சமுதாயம் வெளியேற்றப்பட்டு கொண்டுள்ளது....

 

சம்பந்தன் ஐயாவின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள்.. யாராவது இயக்கத்தில் இருந்திருக்கினமா...???! போராடி இருக்கினமா..??! ஆனால் பெரும்பாலும் எல்லோரும் வெளிநாட்டில்...! சம்பந்தன் ஐயாவுக்கு உள்ளூரில் வாழ முடியும் என்றால் ஏன் அவரின் குடும்பத்தாருக்கு வாழ முடியாது..??! அதுவும் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக்கிட்டா சூப்பரா வாழலாமில்ல. ஏன் அவர்கள் போராடக் கூடாது. மீண்டும் மீண்டும்.. கஸ்டப்பட்ட துன்பங்களை வலிகளை சுமந்த.. போராளிகளாக போராடனும். அவர்களுக்கா நாடு. மற்றவர்களுக்கு அவசியமில்லையா...??! அப்படி என்றால்.. அவர்களுக்கும் நாடு தேவையில்லை. வெளிநாடே போதும்..! இப்படின்னும் ஒரு முடிவுக்கு வரலாம் இல்லையா..???!

 

இந்த நிலையை ஜே ஆர் ஏற்படுத்திய போது.. பலர் அன்று தடுத்தார்கள். நம்மவர்கள் கேட்டார்களா இல்லையே..??! அதன் பின்னர் பிரேமதாச கூப்பிட்டு பலாலியில் இருந்து பிளேன் பிளேனா ஏத்தி அனுப்பினார். அப்படி.. ஓடி வந்தவை தானே. இன்று அகதி அந்தஸ்துக்கு அப்பால் பன்னாட்டு பிரஜைகளாகி கொலிடேக்கு ஊருக்குப் போய் வருகினம். அவைக்கு இல்லாத அக்கறை.. ஏன் அந்தப் போராளிகளுக்கு மட்டும் தலையில் பெரிய பாரமாக..??! அவர்களும் நிம்மதியாக வாழ வேண்டாமா..??! அவர்களும் சுகபோகம் என்பதன் பொருள் அறிய வேண்டாமா..??! அவர்களும் கல்யாணம்.. பிள்ளை குட்டி.. படிப்பு.. பல்கலைக்கழகம்.. டாக்குத்தர்.. இஞ்சினியர்.. எக்கவுண்டண்ட் வேலை பார்க்கிற பிள்ளைகளைப் பார்க்க வேண்டாமா.. மாதம் ஒரு பேர்த்டே பாட்டி கொண்டாட வேண்டாமா..??! பேரப்பிள்ளைகளோடு.. பிள்ளைகளோடு பார்க்கில் விளையாட வேண்டாமா..??! கார்களில் சவாரி செய்ய வேண்டாமா..??! வாரம் ஒரு முறை மக்டொலாட்.. கே எவ் சி போக வேண்டாமா..??! பிள்ளைகள்.. லெகோ லாண்ட்.. டிஸ்னி வேல்ட் பார்க்க வேண்டாமா..???! பப் போக வேண்டாமா.. கிளப் போக வேண்டாமா..??! புதுச் சினிமா லிறீஸ் டே பார்க்க வேண்டாமா..??! சினிமா நட்சத்திர டான்ஸ்.. மானாட மயிலாட நேர பார்க்க வேண்டாமா..??! விஜே ரீவியில் பாட்டுப் பாட வேண்டாமா..???! சினிமாவில் நடிக்க வேண்டாமா..???! டேட் போக வேண்டாமா..???! ஆண்டுக்கு 3 முறை இவ்வொரு துருவமா கொலிடே போக வேண்டாமா..??! டுபாய் முதல் கொழும்பு வரை உல்லாச வீடுகள் வாங்க வேண்டாமா..??! ஏன்.. சிங்களப் படைகளோடு கூட்டிணைந்து முதலீடுகள் செய்து நட்சத்திர விடுதிகள் கட்ட வேண்டாமா..???!

 

அவர்களுக்கு மட்டும் தானா அது தாய் மண்.. விடுதலை.. அவர்களுக்கு மட்டும் தானா... வலிகள்...????! :icon_idea::(:rolleyes:

 

முதலில் சாட்டுச் சொல்லி வந்தவை போய் போராடட்டும். பின்னர் அரைகுறையில விட்டிட்டு வந்தவை போய் போராடட்டும்..! அப்புறமா.. நேற்று வரை சண்டைக்களத்தில் நின்ற இந்தப் போராளிகளை விரும்பினால் போராட அழைக்கலாம். அதுவரை அவர்களும் வெளிநாட்டில் நல்லாவே வாழட்டும். ஊரில் இருந்து சிங்களத்தினதும் ஒட்டுக்குழுக்களினதும் கையால் சாகாமல்.. துன்பப்படாமல் இருக்க முடியாது. எனவே அவர்கள் வெளிநாட்டுக்கு வருவதே நல்லம். அவர்களை வெளிநாடுகள் வரவேற்பது உண்மையில் பாராட்டத்தக்க மனிதாபிமானம் ஆகும்..! கள்ளப் பொய் சொன்னதுகள் எல்லாம் தாய் நாட்டை மறந்து.. சுகபோகமாக உள்ள போது.. உண்மையாக நாட்டுக்காக உழைத்து குருதியும் வியர்வையும் சிந்தினவன்/ள் சுகபோகமாக இருப்பதால் மட்டும் நாடு அடிமைப்பட்டுப் போயிடுமா என்ன..??! :icon_idea:

Edited by nedukkalapoovan

கூட்டமைப்பு தனது கருத்துக்களை ஒருங்கிணத்து வெளியிட வேண்டும். அரசை சீண்டி அப்பாவிகள் துன்புறத்தக்க பேச்சுக்களை தவிர்க்க வேண்டும். 6 திருத்தம் என்று கூறிக்கொண்டு மக்கள் தெரிய வேண்டியவை பலற்றை வெளியே சொல்ல முடியாமல் இருக்கிறார்கள். இதை யாருக்காக வெளியே சொல்கிறார்கள்?

 

மனோகனேசன் தேர்தலை பற்றி கதைக்க கோத்தாவுக்கு உரிமை இல்லை என்றதின் பின்னர்தான் சுரேஸ் பிரேமசந்திரன் தனது பேச்சில் கோத்தாவின் அதிகாரம் செல்லுபடியாகும் என்று கருத்தில் கோத்தாவை கருணை காட்டும் படு கேட்டி பதில் அளித்து  பேசினார். இதை சம்பந்தர் தமிழரசுக்கட்டி கூட்டத்தில் மறுத்தார். 

 

இதை கூட்டமைப்பு கட்டாயகமாக தவிர்த்திருக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முடிவாக போராளிகள் நாட்டை விட்டு வெளி வரலாமா அல்லது அங்கேயே நிற்கவேண்டுமா?

 

  • கருத்துக்கள உறவுகள்

முடிவாக போராளிகள் நாட்டை விட்டு வெளி வரலாமா அல்லது அங்கேயே நிற்கவேண்டுமா?

 

இலங்கையிலிருந்து போராளிகள் வெளியேறியே ஆகவேண்டும். அங்கு தனியே தங்கியிருந்தாலும், அரசுடன் சேர்ந்திருந்தாலும், அவர்கள் கோலாகலமாக வளர்த்தெடுக்கப்பட்டு பின் மாலைபோட்டு வெட்டப்படுவது உறுதி.

 

உலகநாடுகளின் அரசுகளுடன் உத்தியோகபூர்வமாக அணுகிச் செயலாற்றக்கூடிய வல்லமையை நாடுகடந்த தமிழீழ அரசு கொண்டிருப்பதாக அதன் அறிக்கைகளும் செயற்பாடுகளும் தெரிவிக்கின்றன. அவற்றில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைத் தடைசெய்யாத நாடுகள் ஏதாவது ஒன்றை அணுகி, போராளிகளாக இனம்கண்டவர்களை, அந்நாட்டில் பாதுகாப்பாக பராமரிப்பதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளலாம். இலங்கையிலிருந்து தப்பிவரும் போராளிகளையும், தடைசெய்த நாடுகளில் அடைக்கலம் கிடைக்காது அவலப்படும் போராளிகளையும் அங்கு அழைத்துப் பராமரிக்கலாம். இன்று உலகநாடெங்கும் பரவியுள்ள தமிழர்கள் நிச்சயம் இப்பராமரிப்புக்கு வேண்டிய உதவியை முன்னின்று செய்வார்கள் என நம்பலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.