Jump to content

பசலைக் கீரை கச்சோரி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது. குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

28-palakkachori.jpg

தேவையான பொருட்கள்:

 

பசலைக் கீரை - 1 கட்டு

கோதுமை மாவு - 2 கப்

இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)

ஓமம் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

 

செய்முறை:

 

முதலில் பசலைக் கீரையை சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும். பின்னர் அதனை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்க வேண்டும்.

 

பிறகு பசலைக் கீரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

 

பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, இஞ்சி, ஓமம், உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பசலைக் கீரையை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

 

பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் 5 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.

 

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

 

இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான பசலைக் கீரை கச்சோரி ரெடி!!!
 

http://tamil.boldsky.com/recipes/veg/crispy-spinach-kachori-003286.html

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இங்கே ஸ்பினாச் என்று சொல்லும் கீரையும்,பசளைக் கீரையும் ஒன்டா?

 

Link to comment
Share on other sites

நாங்கள் இங்கே ஸ்பினாச் என்று சொல்லும் கீரையும்,பசளைக் கீரையும் ஒன்டா?

 

ஊரில் 'பசளி' என்று சொல்வார்கள். நல்ல சத்தானது. கொடியாக ஆளை விட உயரமாக வளரும்.  இங்கு தமிழ்க் கடைகளில் கிடைக்கும்.

 

 

                                                    pasalio.jpg

Link to comment
Share on other sites

 

 

                                                    pasalio.jpg

 

பசளியின் தண்டு பச்சையாக அல்லவா இருக்கும் தப்பிலி.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசளியின் தண்டு பச்சையாக அல்லவா இருக்கும் தப்பிலி.

 

சிவப்பு தண்டிலிலும் பசளிக் கீரை வகை உண்டு, ஈசன்.

இங்கு ஒரு கடையிலும், பசளிக் கீரையை நான் காணவில்லை.

Link to comment
Share on other sites

பசளியின் தண்டு பச்சையாக அல்லவா இருக்கும் தப்பிலி.

 

பசளியில் (Ceylon spinach / Malabar spinach) பச்சையும் சிவப்புமாக இரு வகை உண்டு. பருப்புடன் போட்டு சமைக்கவும் நன்றாக இருக்கும்.

இரு வகையும் கோடை காலத்தில் வளர்ப்பேன். நன்றாக வளரும். பூக்கன்று மாதிரி அழகாகவும் இருக்கும்.அவுஸ் காலநிலைக்கு நன்றாக வரும். 

Link to comment
Share on other sites

நன்றி தமிழ்சிறி, தப்பிலி.
 
பச்சை தண்டோடு தான் பார்த்திருக்கிறேன். இங்கு நன்றாக வளரும். நிறைய சாறோடு இருப்பதால் கொமாண்டருக்கு பிடிப்பதில்லை.
 
நானாக‌ ஒரு நாள் பருப்போடு சேர்த்து கறிவைத்தால் தான் உண்டு. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவள்ளிக்கிழங்கு கொடியை பசளி என்று ஏமாற்றக்கூடாது :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னக்கா நீங்கள் குசினிக்குள்ளையும் தோட்டத்துக்கு உள்ளேயாகவும் நிற்கிறீர்கள் ??

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவள்ளிக்கிழங்கு கொடியை பசளி என்று ஏமாற்றக்கூடாது :lol:

 

வல்வை, இராசவள்ளிக் கிழங்கு இலையை... சமைச்சு ஏமாந்திருக்கிறா போலை கிடக்கு.

எங்களுக்கு... பின், விளைவுகள் வராமல் காப்பாற்றிப் போட்டீர்கள்.

தகவலுக்கு, நன்றி அக்கா. :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராசவள்ளிக்கிழங்கு கொடியை பசளி என்று ஏமாற்றக்கூடாது :lol:

இது தான் 'இராசவெள்ளி இலை' வல்வை! :icon_idea:

 

Purple+yam.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்...  புடலம் பழத்தை, கரைச்சுக் குடிச்சு வயித்தால போன செய்தி,
வல்வைக்கு, தெரியாது போலை கிடக்கு, புங்கை.smiley-toilet04.gif

 

 

Link to comment
Share on other sites

ராசவள்ளிக்கிழங்கு கொடியை பசளி என்று ஏமாற்றக்கூடாது :lol:

 

உங்களை என்னவோ என்று நினைத்தேன். ஆனால் ஒவ்வொருநாளும் take away இல்தான் வாழுறீங்கள் என்று நினைக்கவேயில்லை. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு இப்போது பல வகையான கீரை வகைகள் பிரெஞ்ச் கடைகளிலும், பயோ கடைகளிலும் கிடைக்கின்றன ! கொஞ்சம் பார்த்து வாங்கினால் போச்சு !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.... கொஞ்சம் வித்தியாசந்தான்...கிகி

 

ரேக் அவேயா?..ஏம்பா வீட்ல ஒருத்தரும் சாப்பிடுறதில்லையோ... :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ரை ஊரிலை பசளி கொடியாய் வளர்ந்ததை  கண்ணாலை காணேல்லை....இப்ப என்னெண்டு தெரியாது??? :rolleyes:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனால் தற்போது வட்சப்பில் வந்த பேட்டியில் ஜனாதிபதி தமிழ் வேட்பாளர் சொல்கிறார் சிங்கள தலைவர்களுக்கு ஒரு செய்தியை கொடுப்பதற்காக என்று சொல்கிறார்  காணொளியில் 2:30  
    • வவுனியா இந்திய இராணுவ சிறையில் உள்ள கைதிகளிற்கு தண்டனையாக அவர்களின் தலையை மொட்டை அடிப்பார்களாம், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்முகமாக ஏனைய போராளிகளும் தமது தலையினை மொட்டை அடித்து எதிர்ப்பினை தெரிவிப்பது வழமையாக இருந்ததாம், அதே சிறை முகாமில் இந்திய இராணுவத்துடன் இயங்கும் புலிக்ளுக்கெதிரான தமிழ் குழுக்களின் உறுப்பினர்களையும் சில நேரங்களில் சில காரணங்களுக்காக இந்திய இராணுவத்தினால் சிறை வைக்கப்படுவார்களாம். வவுனியா முகாம் சிறை உடைப்பு முயற்சிக்கப்பட்ட போது ஒரு போராளியிற்கு இந்திய இராணுவம் மொட்டை அடித்திருந்தது,  ஆனால் அந்த தடவை மட்டும் மற்ற போராளிகள் மொட்டை போடவில்லை, அதற்குக்காரணம் சிறையுடைப்பின் பின்னர் மொட்டையுடன் குழுவாக தப்பி ஒடினால் இலகுவாக அடையாளம் காணப்பட்டு விடப்படுவார்கள் என்பதால் ஆனால் மொட்டை அடிக்கப்பட்ட போராளியிற்கு அந்த விபரம் தெரியாது, ஏன் வழமையாக மொட்டை அடித்து எதிர்ப்பை காட்டும் போராளிகள் தன் விடயத்தில் ஆதரவு தெரிவிக்கவில்லை என அவர் ஆதங்கப்பட அதனை அறிந்த புலிகளுக்கெதிரான தமிழ் குழுக்களில் சிறையில் இருந்தவர் அவருக்கு அந்த போராளிக்கு ஆதரவாக தான் மொட்டை போட பிரச்சினை சூடு பிடித்ததாம். இந்த விவகாரத்திலாவது இலங்கைக்கும் இந்தியாவிற்கும் பிரச்சினை வருதா என பார்க்கலாம். பொதுவாக இலங்கை மீனவர்கள் முதலாளி மீன் பிடி உபகரணம் என்பவற்றை கொடுக்க மீனவர்கள் அதில் மீன் பிடித்து தமது வருமானத்தினை சம பங்குகளாக பிரிப்பர் என கருதுகிறேஎன் ( தவறாக இருக்கலாம்), அதே போல ஒரு சூழ் நிலை இந்திய மீனவர்களிடம் இருக்கலாம் என நினைக்கிறேன் அதனாலேயே அவர்கள் எல்லை தாண்டிய மீன் பிடிகளில் ஈடுபடுகிறார்கள், இது தெரிந்தே செய்யப்படுகிறது. இவர்கள் கடல் வளத்தினை மட்டும் அழிக்கவில்லை இலங்கை மீன்வர்களின் வலைகளை அறுத்து அவர்களின் வாழ்வாதாரத்தினை குறுகிய நீண்ட கால நோக்கில் பாதிப்பினை ஏற்படுத்துகிறார்கள். எமது பிரச்சினைக்கு தீர்வினை நாம் தான் தேட வேண்டும் மற்றவர்கள் உதவுவார்கள் என எமது உரிமைகளை விட்டுக்கொடுத்தால் அங்குள்ள மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும். பிறகு இலங்கை மீனவர்களும் சோமாலிய மீன்வர்கள் போல் கடல் கொள்ளையர்களாகத்தான் வேண்டும்,
    • உலக இஸ்லாமிய கொள்கை வகுப்பாளர்கள் ,தங்களது கொள்கைகளை பரப்ப தமிழக/கேரளா இஸ்லாமிய சகோதரர்கள் சிறிலங்கா இஸ்லாமிய சகோதரர்களுடன் சேர்ந்து தங்களது செயல்களை வடக்கு கிழக்கில் செய்கின்றனர்...அது ஒரு தனி டரக் போகின்றது ...
    • வீரகேசரி தான் இலங்கையில் வாக்களிக்கும் முறையை ஒரு படம் மூலம் விளக்கமாக தெரிவித்துள்ளது. பலர் காணொளிகள் குழப்பமாகவே முன்பு தெரிவித்தன. இலங்கையில் உள்ள தமிழர்கள் பெறுமதியான தங்களது வாக்கை வீணாக்காமல் வாக்களிக்கலாம். (தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதும் வாக்கை வீணாக்கும் செயல் தான் )
    • சிந்திக்க வேண்டிய விடயம். சுற்றிவனைப்புகள் அப்படியானதொரு நிலையை நோக்கி இருப்பதுபோலவும், காலம் கனிவதற்காகச் சிங்களம் காத்திருப்பதுபோலவுமே தோன்றுகிறது. சிங்களத்தின் இறுதி இலக்கு அப்படியானதொரு திட்டத்தோடும் இருக்கலாம்.   நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி       
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.