Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலி ஒன்று படுத்தது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பெரியாரின் தம்பி

பிரபாகரனின் தொண்டன்

 

பாரதிராசாவின் சீடன்

சத்தியராசாவின் தோழன்

சீமானின் ஆசான்

புலியாக வாழ்ந்த காந்தி

 

சினிமாவில் இருந்தும்

போராளிகளைத்தந்தவன்

எதைச்செய்தாலும் - அதில்

ஈழத்தமிழர் நலன் சேர்த்தவன்

எங்கு சென்றாலும்  - எமக்காக

இரு சொல் பேசியவன்

 

இடியாக இறங்கியது செய்தி

இழந்து நிற்கின்றோம்

 

 

எம் நெஞ்செல்லாம் வீற்றிருக்கும்

ஒப்பற்ற தோழனே

அண்ணனே

உன்னை மறவோம் நாம்

தமிழிருக்கும் வரை

உன் பெயர் இருக்கும்

 

உன் கனவு பலிக்கும்

அதை கண்ணால் காண

எம்முள் வந்து பிறப்பாயாக...........

Edited by விசுகு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

புலிகள் அழுவது ஏது -அட

பறவையும் அழ அறியாது

 

போர்க்களம் நீ புகும் போது

முள் தைப்பது கால் தெரியாது....................

Edited by விசுகு

ஈழத் தமிழருக்காய் இடைவிடாது சுயநலமற்று குரல் கொடுத்த கலை உலக போராளி  மானுட தர்மதிட்க்காய் குரல் கொடுத்த நல்ல மனிதர் மற்றும் தமிழ் நாட்டு தமிழருக்கு எல்லா விடயங்களிலும் குரல் கொடுத்த ஒரு சமூக ஆர்வலர் ஐயா மணிவண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்கள் 

  • கருத்துக்கள உறவுகள்

தேசிய தலைவரையும் தமிழீழ மக்களையும் உண்மையாக மதித்த ஒருவர். உணர்வால்.. புலியாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் வீழ்ந்தது அதுவும் திடீர் என்று போர்க்கள வீரன் போல வீழ்ந்தது அவருக்கு இலட்சியச் சாவாக இருக்கலாம். ஆனால்.. எமக்கெல்லாம் ஒரு பெரிய ஆதரவுக் குரல் ஓய்ந்த வெற்றிடமே மேலிடுகிறது..! துக்கமே கோலோஞ்சுகிறது..! :(

 

1000788_512516175470600_477041087_n.jpg

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு கவிதை !

 

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சந்தர்ப்பவாதிகள்,சுயநலவாதிகள் நிறைந்த விடுதலை உலகில் இவர் தன்னிகரில்லா சிங்கம்.

  • கருத்துக்கள உறவுகள்

உனது கர்ச்சனைகள்,

காற்றில் கலந்து விடவில்லை!

எம் இதயத்தின் அடித்தளத்தில்,

இன்னும் எதிரொலிக்கின்றன!

 

நன்றிகள், விசுகர் !

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மணிவண்ணன் ஐயாவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் 

இருக்கும் போது

ஈழம் கேட்டான்

 

இறந்த பின்னே
புலிக்கொடி கேட்டான்

 

ஈழம் பிறக்குமடா
புலிக்கொடி பறக்குமடா...

(நன்றி: கவிஞர் இரவிச்சந்திரன்)

  • கருத்துக்கள உறவுகள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவிதை எழுதணும்  என்பதற்காக எழுதவில்லை

 

யாழில்

பல கவிஞர்கள்

படைப்பாளிகள்

எழுத்தாளர்கள் இருந்தும் ஒருவரும் ஒன்றையும் படைக்கா ஆத்திரத்தில் வந்த வார்த்தைகளைப்போட்டேன்.

இவருக்கு சமைக்காத எமது ஆக்கங்கள் இருந்தென்ன..........??? :(  :(  :(

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா மணிவண்ணனின் இழப்பு பேரிழப்பு

ஒரு பெரும் அதிர்ச்சியில் பலரும் உறைந்து இருந்தது தெரிந்தது.

அவரின் இழப்பின் துயரிலிருந்து வெளி வருவது கடினமானது.

 

பகிர்விற்கு நன்றி விசுகு  அண்ணா

கவிதைக்கு நன்றி விசுகு அண்ணா. முகநூல் முழுதும் மணிவண்ணன் ஐயாவுக்கு பேராதரவு தெரிவிக்கும் செய்திகள் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழருக்காய் இடைவிடாது சுயநலமற்று குரல் கொடுத்த கலை உலக போராளி  மானுட தர்மதிட்க்காய் குரல் கொடுத்த நல்ல மனிதர் மற்றும் தமிழ் நாட்டு தமிழருக்கு எல்லா விடயங்களிலும் குரல் கொடுத்த ஒரு சமூக ஆர்வலர் ஐயா மணிவண்ணனுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் அவரது குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்கள் 

 

நன்றிகள் தங்கள் நேரத்திற்கு யாழ் அன்பு

 

செய்தியைப்பார்த்ததிலிருந்து வாய் விட்டு அழணும் போல இருந்தது.

அதுவே  இங்கு  அவர் நினைவாக....

தேசிய தலைவரையும் தமிழீழ மக்களையும் உண்மையாக மதித்த ஒருவர். உணர்வால்.. புலியாகவே வாழ்ந்தவர். அப்படிப்பட்ட ஒருவர் வீழ்ந்தது அதுவும் திடீர் என்று போர்க்கள வீரன் போல வீழ்ந்தது அவருக்கு இலட்சியச் சாவாக இருக்கலாம். ஆனால்.. எமக்கெல்லாம் ஒரு பெரிய ஆதரவுக் குரல் ஓய்ந்த வெற்றிடமே மேலிடுகிறது..! துக்கமே கோலோஞ்சுகிறது..! :(

 

 

 

 

நன்றி   நெடுக்கு...

ஈடு செய்யமுடியாத இழப்பு

அவரது நகர்வுகள்

இடம் மாறுதல்கள் ஒவ்வொன்றையும் (தி.மு.க பின்பு மதிமுக அடுத்து நாம் தமிழர்) பார்த்தாலே புரியும் அவர் எம்மை வைத்தே அத்தனை நகர்வுகளையும் செய்தார் என்று.

அந்தளவுக்கு எம்மை நேசித்தார்

இன்று அவரை இழந்து நாம்............

நல்லதொரு கவிதை !

 

அன்னாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள் !!

 

நன்றி  அண்ணா

சந்தர்ப்பவாதிகள்,சுயநலவாதிகள் நிறைந்த விடுதலை உலகில் இவர் தன்னிகரில்லா சிங்கம்.

 

உண்மை

நன்றியண்ணா.....

உனது கர்ச்சனைகள்,

காற்றில் கலந்து விடவில்லை!

எம் இதயத்தின் அடித்தளத்தில்,

இன்னும் எதிரொலிக்கின்றன!

 

நன்றிகள், விசுகர் !

 

ஒன்றியத்தின் நிகழ்வு ஒன்றுக்கு இவரை அழைக்க பலமுறை  முயன்றோம்.

ஆனால் நேரமின்மை  குடும்பசூழ்நிலைகள் மற்றும் உடல்நிலைகளால் வரமுடியாது போய் விட்டது.

அது பெரும் குறையாக  என்னுள் வாழ்நாள்    பூராகவும் இருக்கப்போகின்றது. 

 

நன்றிகள் நேரத்திற்கு.....

இருக்கும் போது

ஈழம் கேட்டான்

 

இறந்த பின்னே

புலிக்கொடி கேட்டான்

 

ஈழம் பிறக்குமடா

புலிக்கொடி பறக்குமடா...

(நன்றி: கவிஞர் இரவிச்சந்திரன்)

 

நன்றி  வேந்தன்

ஐயா மணிவண்ணனின் இழப்பு பேரிழப்பு

ஒரு பெரும் அதிர்ச்சியில் பலரும் உறைந்து இருந்தது தெரிந்தது.

அவரின் இழப்பின் துயரிலிருந்து வெளி வருவது கடினமானது.

 

பகிர்விற்கு நன்றி விசுகு  அண்ணா

 

நன்றிகள் வாத்தியார்

தமிழனது விதி எம்மை நேசிப்பவரை துரத்துகிறது

கவிதைக்கு நன்றி விசுகு அண்ணா. முகநூல் முழுதும் மணிவண்ணன் ஐயாவுக்கு பேராதரவு தெரிவிக்கும் செய்திகள் தான்.

 

நன்றி  துளசி நேரத்திற்கு.

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உன் கனவு பலிக்கும்

அதை கண்ணால் காண

எம்முள் வந்து பிறப்பாயாக.......

 

கொண்டகொள்கையில் வழுவாது நின்று மரணிப்பவர்கள் மரணிப்பதில்லை..மரணத்தின் பின்பும் வாழ்ந்துகொண்டிருப்பார்கள்...நன்றி அண்ணா

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.