Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழினி விடுதலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறை மகளிர் பிரிவுத் தலைவியாக இருந்த தமிழினி என்று அழைக்கப்படும் சிவசுப்ரமணியம் சிவகாமி, இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

கிளிநொச்சி, பரந்தன் பிரதேசத்சைத் சேர்ந்த தமிழினி, பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு நடவடிக்கைகள் நிறைவுபெற்ற நிலையிலேயே இன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

புனர்வாழ்வை நிறைவு செய்துகொண்ட நிலையில் விடுதலை செய்யப்பட்ட தமிழினி, அவரது தாயாரான சிவசுப்ரமணியம் சின்னம்மாவிடம் ஒப்படைக்கப்பட்டார் என்று புனர்வாழ்வு ஆணையாளர் பிரிகேடியர் தர்ஷன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.

இவ்வாறு விடுதலையாகும் தமிழினி, எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிடவுள்ளார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தன. இருப்பினும், இத்தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை என்று புனர்வாழ்வு ஆணையாளர் தெரிவித்தார்.

தமிழினி தனது விடுதலையின் பின்னர் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதையே விரும்புகின்றார் என்று தெரிவித்த புனர்வாழ்வு ஆணையாளர், அவர் அனைவர் மத்தியிலும் பிரசித்தமடைவதை விரும்புவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், முன்னாள் போராளிகள் பலர், எதிர்வரும் வடமாகாணசபைத் தேர்தலில் போட்டியிட முன்வந்துள்ள நிலையில், தமிழினிக்கும் அதற்கான வாய்ப்பினை வழங்க அரசியல் முக்கியஸ்தர்கள் முன்வந்துள்ளனர் என்றும் தேர்தலை இலக்கு வைத்தே அவரது விடுதலையும் அமையப்பெற்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், அந்த வாய்ப்பினை தமிழினி எவ்வாறு பயன்படுத்திக்கொள்ளப் போகிறார் என்பது குறித்து உறுதியாக கூற முடியாது என்றும் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டார்.

 

http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/72439-2013-06-26-07-45-28.html

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி..! அமைதியான வாழ்க்கை சற்றேனும் அமையட்டும்..!!

சந்தோஷமான செய்தி!

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல செய்தி. இராணுவத்தின் தொல்லை இன்றி இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மகிழ்ச்சியான, செய்தி.
தேர்தலில் போட்டியிடாமல், அமைதியான வாழ்க்கை வாழவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி..! அமைதியான வாழ்க்கை சற்றேனும் அமையட்டும்..!!

பச்சை முடிஞ்சு போச்சு இசை. இதுவரைகாலம் அனுபவித்த துயர்களுக்கெல்லாம் ஒரு சின்ன ஆறுதலேனும் கிடைக்க வேண்டும்.

இந்த நல்ல செய்தியும் வேண்டாம், பச்சையும் வேண்டாம் நமக்கு. பிச்சை வேண்டாம். நாயைப்பிடி. அது போதும் நமக்கு.

 

அரசின் கேவலத்தனங்களுக்கு தனங்களுக்கு ரோபேட் பிளெக்கும், யூலியா கில்லாடும் பச்சை குத்தட்டும்.


அவர்களின் முடிவுதான் அரசுக்கும் வரும்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி..! அமைதியான வாழ்க்கை சற்றேனும் அமையட்டும்..!!

 

மிக நல்ல செய்தி..! அமைதியான வாழ்க்கை சற்றேனும் அமையட்டும்..!!

 

இதைத்தான் ஒவ்வொரு தமிழனும் விரும்புவான் வேண்டுவான்

ஆனால் பயங்கரவாத அரசு அதற்கு இடமளிக்குமா??? :(

 

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக நல்ல செய்தி..! அமைதியான வாழ்க்கை சற்றேனும் அமையட்டும்..!!

 

 

இதைத்தான் ஒவ்வொரு தமிழனும் விரும்புவான் வேண்டுவான்

ஆனால் பயங்கரவாத அரசு அதற்கு இடமளிக்குமா??? :(

http://www.yarl.com/forum3/index.php?showtopic=124662

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நல்ல செய்தியும் வேண்டாம், பச்சையும் வேண்டாம் நமக்கு. பிச்சை வேண்டாம். நாயைப்பிடி. அது போதும் நமக்கு.

 

அரசின் கேவலத்தனங்களுக்கு தனங்களுக்கு ரோபேட் பிளெக்கும், யூலியா கில்லாடும் பச்சை குத்தட்டும்.

அவர்களின் முடிவுதான் அரசுக்கும் வரும்.

 

யூலியா கிலாட்டின் பதவி போய்விட்டது. கெவின் ரட் வந்துவிட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி விடுதலையானது மகிழ்ச்சியே. இனியாவது சித்திரவதைகள் இல்லாமல் வாழட்டும், அரசியல் என்பது அவரது சொந்த விடயம். தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்பிற்கு எது சரியோ அதைச் செய்யட்டும். நாங்கள் இதில் முடிவெடுக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினி விடுதலையானது மகிழ்ச்சியே. இனியாவது சித்திரவதைகள் இல்லாமல் வாழட்டும், அரசியல் என்பது அவரது சொந்த விடயம். தனதும் தனது குடும்பத்தினதும் பாதுகாப்பிற்கு எது சரியோ அதைச் செய்யட்டும். நாங்கள் இதில் முடிவெடுக்க முடியாது.

 

சிங்களத்தின் சித்திரவதைகளினால் தமிழினி தேர்தலில் போட்டியிட்டால் எங்கட ஆக்களில் சிலர் அவரைத்துரோகியாக்கி விடுவார்கள் என்று கவலையாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அதேவேளை அவர் கொல்லப்பட்டு விட்டாலோ அல்லது அவரது குடும்பம் பழிவாங்கப்பட்டாலோ துரோகி என்று கூறுபவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?? ஒரு இரங்கலோடு தமது கையைக் கழுவி விட்டுச் சென்றுவிடுவார்கள், அவ்வளவுதான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.