Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழ உணர்வு மூலம் இணைந்தோம்… திருமணம் பற்றி சீமான்

Featured Replies

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார். முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார். செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது. உலகத்தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார். இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார். மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது
05-1375683071-seeman-174600.jpg

ஈழ உணர்வாளர் காளிமுத்து

கயல்விழியின் தந்தை மறைந்த முன்னாள் அமைச்சர் காளிமுத்து சிறந்த தமிழ்பேச்சாளர். தீவிர தமிழ் ஈழ உணர்வாளர். அவரது அரசியல் பயணத்தில் பல்வேறு கூட்டங்களில் தமிழ் ஈழம் குறித்தும், தேசிய தலைவர் பிரபாகரன் குறித்தும் பேசி வந்துள்ளார்
இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது.ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.
பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.ஈழப்போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது
.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் அய்யா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.
ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது. இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம். அவரையே திருமணம் செய்ய முடிவு செய்தேன்
இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம். ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

 http://tamil.oneindia.in/news/2013/08/05/tamilnadu-tamil-eelam-feelings-united-me-kayalvizhi-says-seeman-180546.html#slide271627

 

  • Replies 135
  • Views 11.5k
  • Created
  • Last Reply

இருவரிடையேயும் இருக்கும் ஈழ உணர்வுதான் என்னையும் கயல்விழியையும் இணைத்துள்ளது என்று நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் காளிமுத்துவின் மகள் கயல்விழியை நாம் தமிழர் கட்சி தலைவரும் இயக்குநருமான சீமான் திருமணம் செய்ய இருக்கிறார்.

செப்டம்பர் 8-ந்தேதி காலை 9 மணிக்கு சென்னை வை.எம்.சி.ஏ. அரங்கத்தில் திருமணம் நடக்கிறது.

உலகத் தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை தாங்கி திருமணத்தை நடத்தி வைக்கிறார்.

இந்திய கம்யூனிஸ்டு மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு முன்னிலை வகிக்கிறார்.

மணப்பெண் கயல்விழி பற்றியும் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்த விதம் பற்றியும் சீமான் கூறியுள்ளதாவது:

சிறு வயது முதலே கயலுக்கும் ஈழக் காதல். இதனால் அவரது மகள் கயல்விழிக்கு சிறு வயதில் இருந்தே தமிழ் ஈழ உணர்வு ஏற்பட்டுள்ளது. ஈழப் போராட்டம் தொடர்பான செய்திகளையும் தொடர்ந்து அவர் ஆர்வத்துடன் கவனித்து வந்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியை நான் தொடங்கிய பின்னர் பல்வேறு ஈழ போராட்டங்களை நடத்தி இருக்கிறேன். இந்த போராட்டங்கள் அவரை கவர்ந்துள்ளது.

பிரபாகரனின் மகன் தம்பி பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட தகவல் அம்பலமான சமயத்தில் தமிழகத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. அப்போது கயல்விழி என்னிடம் தொடர்பு கொண்டு பேசினார்.

தமிழ் ஈழம் தொடர்பாக பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்ட அவர் ஈழ மக்கள் படும் துயரங்களை வருத்தத்துடன் பேசி என்னிடம் பகிர்ந்து கொண்டார். ஈழப் போராட்டம் தொடர்பாக அவர் வைத்திருந்த உறுதி எனக்கு பிடித்து இருந்தது.

அதே நேரத்தில் நீண்ட நாட்களாக மறைந்த டைரக்டர் மணிவண்ணன் ஐயா பழநெடுமாறன் மற்றும் எனது நண்பர்கள் பலர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று என்னை வற்புறுத்தி வந்தனர்.

ஈழப்போராட்டத்தில் தீவிரமாக இருந்ததால் திருமணத்தைப் பற்றி சிந்திக்காமseeman-150x150.jpgல் இருந்த என்னை தலைவர்கள் வற்புறுத்தல் திருமணத்தைப் பற்றி யோசிக்க வைத்தது.

இந்த நேரத்தில் ஒரு மித்த கருத்து கொண்ட கயல்விழியும் நானும் சந்தித்து கொண்டோம்.

இதையடுத்து எனது பெற்றோர் மூலம் முறைப்படி கயல்விழியின் தாயை சந்தித்து பெண் கேட்டு திருமணம் செய்ய முடிவு செய்தோம்.

ஈழ உணர்வுதான் எங்கள் இருவரையும் இணைத்துள்ளது என்றார் சீமான்.

 

http://goldtamil.com/?p=4594

உண்மையா பொய்யா என்று காலம் பதில் சொல்லும்!

  • கருத்துக்கள உறவுகள்
இந்தப் பெண்ணையாவது ஏமாத்தாமல் ஒழுங்காக கல்யாணம் கட்டி குடும்பம் நடத்தவும். தமிழகத்தில் சிறந்த அரசியல்வாதியாக வரக் கூடிய தகுதி உங்களுக்கு உண்டு. பாவம் எம் மக்கள்
 
அட்வான்ஸ் திருமண நல்வாழ்த்துக்கள்
  • கருத்துக்கள உறவுகள்

அவர் ஒரு பொண்ணையும் ஏமாத்த வில்லை...அவரின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆக்களால் தான் சும்மா பொண்களை வைச்சு அவரின் பெயர கெடுக்கினம்...

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப அந்தப் பெண் போராளியை மணப்பதாகக் கூறியது பொய் என்கிறார்களோ ??? சீமான் எம் பெண்ணை ஏமாற்றியதையும் மறந்து கூசா தூக்குவோம் வாருங்கள் தமிழர்களே !

  • கருத்துக்கள உறவுகள்

திருமணம் என்பது தனிப்பட்ட விடயம். அதுவும் சீமான் போன்ற உணர்ச்சி மிகு தலைவர்களை அடக்கி ஆள.. பெண்களை தவறாகப் பயன்படுத்தும் நிலை வளர்ந்து வரும் நிலையில்.. அண்ணன் சீமானின் இந்த முடிவு உண்மையில் வரவேற்கத்தக்கது.

 

பட்சாதாபத்தில் அமைவதல்ல திருமணம். அந்த வகையில்.. அவர் முன்னர் உணர்ச்சி வேகத்தில் சில விடயங்களைக் கூறி இருக்கலாம். அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஈடுபாடு இல்லாமல் இருக்கலாம். அவை அவரவர் தனிப்பட்ட விடயங்கள். அதற்காக எல்லாம் ஒரு தலைவர் எங்கள் பெண்ணை ஏமாற்றிட்டார்.. அவர் எங்களை ஏமாற்றிட்டார் என்று கூவுவது கொஞ்சம் ஓவர். அவர் இப்படி எத்தனையோ பெண்களை ஏமாற்றிட்டார் என்று தான் ஊடகங்களும் சொல்லின. ஒரு நடிகை.. பொலிஸில் கூட புகார் செய்தார். அப்போ எல்லாம் அந்த நடிகையை எம் பெண் கட்ட உள்ளவனை எதுக்கு வம்பில மாட்டி விடுறா என்று எவரும் கேள்வி கேட்கவில்லையே..???! அந்தச் சிக்கல்களையும் சீமானே தனித்து சந்தித்தார்.

 

இந்த தனிப்பட்ட விடயத்தில் நாங்கள் அநாகரிகமாக மூக்கை நுழைப்பதை விடுத்து அவர்கள் சொல்வதை நம்பி வாழ்த்திச் செல்வதே அழகு..! :icon_idea::)

 

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

 

அதை வெளிப்படையாய் சொல்லுங்கோவேன் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்...கருணாநிதியின் *************** ************** பிழைக்கிறவனை நீங்கள் சந்திச்சால் அவன் சீமான் அண்ணாவை பற்றி எவளவும் சொல்லுவான்.....

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா.. துடைப்பங்கட்டையாகவே இருந்தாலும் அது கூட்டுதா என்று பார்க்கவேண்டுமே தவிர அது அழகில்லை.. அழுக்காக இருக்கு என்று பார்க்கக் கூடாது.. நீங்கள் சந்தித்த விரிவுரையாளர் சரியான தகவல்களை கூறியிருக்கலாம்.. அல்லது அவர் ஒரு தேய்ந்த தும்புக்கட்டையோ தெரியாது.. :lol:

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

அதாவது அந்தப் பெண் திருமணமாகி இருந்தபோது பெண் கேட்டார்.. பிறகு கைம்பெண் ஆனவுடன் கைவிட்டார்.. என்னப்பா லாஜிக் ஒண்டும் சரியா இல்லையே.. :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர் வன்னியில் இரண்டு வருடங்கள் அண்ணையுடன் இருந்தவர். எம்மிடம் நம்பி அவர் கூறியவற்றை இணையத்தில் கூற முடியாது. ஏனெனில் அவருக்கு அதனால் அச்சுறுத்தல் ஏற்படலாம். எம்மிலும் பார்க்க ஈழ விடுதலையில் ஆசை கொண்ட அபிமானி.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை பிரான்சில் ஒரு இந்திய விரிவுரையாளரைச் சந்திக்கவேண்டி வந்தது நெடுக்ஸ். அவர் சீமான் பற்றிக் கூறியவற்றைக் கேட்க எம் தமிழர்கள் பற்றி பரிதாபம்தான் வந்தது. உங்களைப் போன்றவர்கள் நேரே பார்த்தாலும் நம்ப முனையாதவர்கள். சீமானைக் குறை கூறி என்ன பயன்.

 

முதலில் அந்த விரிவுரையாளர் யார் என்று சொல்லுங்கள். அவர் கதை உதை விட மோசமா இருந்திடப் போகுது..!

 

பிரச்சனை நாங்கள் அடுத்தவர் வாயால் கேட்பதை நம்புவதில் அல்ல. நாமே தீர ஆராய்வதிலும் மெய்ப்பொருள் காண்பதிலும் தான் உள்ளது..!

 

அடுத்தவர்கள் பல்வேறு உள்நோக்கங்களோடு தங்கள் கருத்துக்களை வெளியிடுவர். அதில் நம்மவர்களும் இந்தியர்களும் பலே கில்லாடிகள்..!

 

எங்களைப் பொறுத்தவரை அண்ணன் சீமான் அரசியல் ரீதியாக.. ஈழத்தமிழர்கள் மீது கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கிறார். அதனை அவர் காப்பாற்றிக் கொள்ளும் வரை அவரை மதிப்போம். ஊக்குவிப்போம்..! அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி நாங்கள் அல்லது றோட்டில போறவர்கள் தீர்மானிக்கவோ.. கருத்துச் சொல்லவோ முடியாது. அது அசிங்கம்..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

ஒம் ஒம் தமிழ் நாட்டில் அழகு இல்லை என்று அவர் வண்ணி போன இடத்தில் அழகை பார்த்து மயங்கி போனார்.....இதை நிருபிக்க உங்களிடம் ஆதாரம் இருக்கா...நானும் நல்லா கரற்பனையில் கதை சொல்லுவேன்..ஆனால் யாராவது வந்து ஆதாரம் என்று கேட்டால் ஆந்தை மாரி முழிசி கொண்டு நிப்பேன்

அனைத்து சிறப்பும் பெற்று வாழ்க வாழ்க என வாழ்த்துகிறேன் ....................

  • கருத்துக்கள உறவுகள்

இவர் சமாதான காலத்தில வன்னிக்கு போய் நிற்கேக்குள அந்தப் பெண்ணின் அழகில் மயங்கி கட்டித் தரச் சொல்லிக் கேட்க தலைவர் மறுத்து விட்டாராம்.தலைவர் ஒரு ஜீனியஸ் அவருக்கு அப்பவே தெரியும் இவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் என்று   :lol:

 

அவர் வன்னிக்கு போனது போர் உக்கிரமாய் நடந்து கொண்டு இருக்கும் போது தான்..இதிலை நீங்கள் சொன்ன முதலாவது பொய்யை கண்டு பிடிச்சாச்சு...

இங்கே சீமானுக்கு கல்யாணம் என்று தானே செய்தி இருக்கு  . யார் இங்கே முதலிரவுக்கு ஆயத்தபடுத்துகிறது ? :D 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

 

அப்படி சீமான் அண்ணாவை கலைத்த தலைவர் தான் தனக்கு பக்கத்தில அவர வைச்சு படம் எடுத்தவர்.....உங்களை விட சின்னப் பிள்ளைகளுக்கு சிந்திச்சு கருத்து எழுதுற பக்குவ‌ம் உன்டு

  • கருத்துக்கள உறவுகள்

இவர் கேட்டபோது அப்பெண் ஏற்கனவே திருமணமாகியும் இருந்தாராம். அதனால்த்தால் கலைத்தார் அண்ணா.

 

 

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரம் திருமணமாகி இருக்கவில்லை சுமோ அத்தோடு தலைவர் மறுக்க சொன்ன காரணமும் வேறு  

அப்படி சீமான் அண்ணாவை கலைத்த தலைவர் தான் தனக்கு பக்கத்தில அவர வைச்சு படம் எடுத்தவர்.....உங்களை விட சின்னப் பிள்ளைகளுக்கு சிந்திச்சு கருத்து எழுதுற பக்குவ‌ம் உன்டு

 

தலைவரோடு நின்று படமெடுக்க வேண்டும் என்டால் இங்கே இருந்து கொண்டு நிறைய காசு உதவி செய்திருக்கலாம்,நிதி சேகரித்து கொடுத்திருக்கலாம்,சினிமா டைரக்டர்,நடிகராக கூட இருக்கலாம் இது கூடத் தெரியாதா பையா :)

  • கருத்துக்கள உறவுகள்
thrr.jpg ஒரு இனத்தையே அழித்துப் போட்டு தமிழ் ஈழத்தின் தலைவர் என்று போஸ் அடிச்சு கேவலம் கெட்ட அரசியல் நடத்தும் கருணாநிதியை பாராட்டுங்கள்....அந்த இனத்துக்காக பல தடவை ஜெயில் போன ஒரு தர அவர் அப்படி..அந்த பொண்ணு கூட அப்படி இந்த பொண்ணு கூட இப்படி என்று.....நேரில் கண்டது போல் எழுதி தள்ளுதுங்கள்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை யார் இப்ப புகழ்ந்தார்கள்??????????? சீமானைப் பற்றிய உண்மையைச் சொன்னால் கருணாநிதியை போற்றுகிறோம்,புகழுகிறோம் என அர்த்தமா :unsure:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்தப் பெண்ணுக்கு அந்த நேரம் திருமணமாகி இருக்கவில்லை சுமோ அத்தோடு தலைவர் மறுக்க சொன்ன காரணமும் வேறு  

 

ஏன் ஒளிச்சுமறைப்பான்...தலைவர் சொன்னது தெரிஞ்சால் சொல்லுங்கோவன்......இதென்ன தொடர்கதையே போகுது??? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

thrr.jpg

ஒரு இனத்தையே அழித்துப் போட்டு

தமிழ் ஈழத்தின் தலைவர் என்று போஸ் அடிச்சு கேவலம் கெட்ட அரசியல் நடத்தும் கருணாநிதியை பாராட்டுங்கள்....அந்த இனத்துக்காக பல தடவை ஜெயில் போன ஒரு தர அவர் அப்படி..அந்த பொண்ணு கூட அப்படி இந்த பொண்ணு கூட இப்படி என்று.....நேரில் கண்டது போல் எழுதி தள்ளுதுங்கள்

 

பையன் பொழுதுபோக்கிற்கும்.. விசமத்திற்கும் கருத்தெழுதுபவர்களோடு.. சீரியஸா கதைக்க முடியாது. அவர்கள் தலைவரின் பி ஏ என்று சொன்னாலும் நம்ப ஆதரிக்க ஆக்கள் இருப்பினம். அது அவை அவையின்ர பிரச்சனை.. விருப்பம்.

 

பிரச்சனை அது அல்ல. சீமானின் தனிப்பட்ட வாழ்க்கை அல்ல எமது பிரச்சனை. அவர் ஈழத்தமிழர்.. மற்றும் தமிழீழம் தொடர்பில் மாறாத கொள்கையோடு நாம் தமிழர் என்ற இலக்கின் கீழ் தமிழக மக்களை ஒன்றிணைக்க பாடுபடும் ஒரு தலைவராக உள்ளார். அது ஒன்றே போதும்.. அவரை நம்பவும் ஆதரிக்கவும்.

 

மற்றும்படி.. சும்மா றோட்டில போற சனம் தங்களுக்கு ஏற்ற மாதிரி.. ஆயிரம் கதை சொல்லும். அதை எல்லாம் தலைவரும் கேட்டதில்லை.. எந்த தலைவர்களும் கேட்கப்போறதில்லை..!

 

முக்கியமற்ற இவற்றிற்குப் பதில் எழுதி உங்கள் நேரத்தை வீணடிக்காதீங்க..! :):icon_idea:

 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் சீமான் அண்ணாவை பற்றி அப்படி இப்படி என்று எழுத ஆரம்பிச்சிங்கள்.....அது தான் அந்தப் படத்தை இங்கு இணைத்தேன்....அவன் யாரோ ஒரு தன் மூன்று பெண்டாட்டியை வைத்து கொண்டு தமிழ் இனத்தின் தலைவன் அது இது என்று எல்லாம் சொல்லி நேரத்துக்கு நேரம் ஒரு நாடகம் நடத்தி தன்ட குடும்பத்தோடை ஜாலியா வாழுறான்....எதையும் வெளிப்படையாய் பேசி உள்ளதை சொல்லும் மனிதர்களை இந்த மக்கள் அவர் அப்படி இவர் இப்படி என்று கதைக்கிறதை பார்க்க அருவருப்பாக்க இருக்கு.....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.