Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு வாத்தியார் ஐயா.. :D இடியப்பம் மாதிரி சிக்குப்பட்டு இருக்கிற தமிழ் இலக்கண அறிவை சிக்கலெடுக்க ஆவலாக உள்ளேன் ஐயா..!  :(  :D 

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிக்க நிறைய மாணவர்கள் வந்திருப்பதில் மகிழ்ச்சி.

 

இப்போது நாங்கள் உயிரெழுத்துக்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றோம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டாகும் எனப்பார்த்தோம்

இந்தப்பன்னிரண்டு எழுத்த்துக்களிலும் உள்ள எழுத்துக்கள் சிலவற்றிற்கு சிறப்புப் பெயர்கள் உண்டு.

அ இ உ என்ற மூன்றெழுத்துக்களையும் சுட்டெழுத்துக்கள் என அழைப்பர்.

காரணம் அவை எதோ ஒன்றினைச் சுட்டி நிற்கும் சொற்கள் என்பதுதான்.

 

அவை ஒரு சொல்லிற்கு முன்னின்று அதாவது சொல்லின் முதல் எழுத்தாக இருந்து ஒரு பொருளைச்சுட்டி நிற்கும். உதாரணம் அவன் இவன் உவன் என்ற சொற்களாகும். அவன் என்ற சொல் தூரத்தே நிற்கும் ஒருவரையும் இவன் என்பது அருகே இருக்கும் ஒருவரையும் உவன் என்பது அண்மையில் இருப்பவருக்கும் தூரத்தில் இருப்பவருக்கும் இடையில் இருப்பவரையும் சுட்டி நிற்கின்றது.

 

இதிலே உவன் என்ற உகரமாகிய சுட்டு அருகி வந்து பேச்சளவிலே மட்டுமே அனேகமான இடங்களில் காணப்படுகின்றது.

 

அ இ உ என்பன சுட்டெழுத்துக்கள். அவன் இவன் உவன் என்பன சுட்டுப்பெயர்கள்.

 

இந்தச் சுட்டும் இரண்டு வகைப்படும் ஒன்று அகச்சுட்டு மற்றது புறச்சுட்டு

 

அகச்சுட்டு என்பது சுட்டெழுத்துக்கள் ஒரு சொல்லுடன் இயல்பாகவே இருப்பது உதாரணம் அவன் இவன் உவன் இந்த மூன்று சுட்டுப்பெயர்களிலும் அந்தச்சொல்லின் முதல் எழுத்தாக ஒரு சுட்டெழுத்து இயல்பாகவே அமைந்திருத்தல்.

 

புறச்சுட்டு என்பது ஒரு சொல்லுடன் சுட்டெழுத்து ஒன்று சேர்க்கப்பட்டிருப்பது. உதாரணம் அந்தப்பையன் இந்தப்பையன் உந்தப்பையன் என்பனவாகும் அல்லது அப்பையன் இப்பையன் உப்பையன்.

 

பையன் என்ற சொல்லையும் அ இ உ என்ற சுட்டெழுத்துக்களையும் எளிதில் பிரிக்கக் கூடியதாக இருக்கின்றது இவற்றையே புறச்சுட்டு என்பார்கள்

Edited by வாத்தியார்

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

 

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். சேய்த் தமிழீழத்தில் உது உண்டு உவனே! இசைக்கலைஞனே!.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

அகரம் என்ற சுட்டும் உகரம் என்ற சுட்டும் கிட்டத்தட்ட ஒரே குறிப்பை உணர்த்துவதால்அகரம் உகரத்தை மிஞ்சி உகரத்தை மறையச் செய்து விட்டது

 

ஆனால் பேச்சு வழக்கில் சில இடங்களில் இருப்பதாகக்  கூறப்படுகின்றது

 

அங்கே இருக்கின்றது எனச் சத்தமில்லாமல் பக்கத்தில் இருப்பவரிடம் கூறலாம்.

 

ஆனால்  உங்கே  இருக்கின்றது எனச் சற்றுத் தூரத்தில் இருப்பவரிடம் அதிக சத்தத்துடன் கத்திக் கூறவேண்டும்  என்பதால் நாளடைவில் மக்கள் அகரத்துடன் அமைதியாகி இருந்திருப்பார்கள் :D  :wub:  

வந்தேன் ஐயா!

வணக்கம் ஐயா கு சா  

வீட்டுப்பாடம் எல்லாம் செய்து வந்தீர்களா :D

எனக்கும் உப்பிடித்தான் சொன்னவர். எதுக்கும் வாத்தி வரட்டும் நேரே கிளியர் பண்ணுவம் ஆர் மொனிற்ரர் எண்டு. :lol:

 

புத்தன் ஆண்கள் பக்கமும்

சுமேரியர் பெண்கள் பக்கமும் கங்காணிகளாக

இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியாரிடம் ஒரு கேள்வி: உயிர் எழுத்துக்கள்ள கடைசியா ஔ வுக்குப் பிறகு மூண்டு குத்துப்போட்டு ஒண்டு இருக்கும் அது எங்க ஒண்டுக்குப் போட்டுதே காணல்ல. அதுக்கு விளக்கம் தருவீங்களோ அல்லது மடக்கேள்வி எண்டு நுள்ள வருவீங்களோ? <_<   

அகேனம் என்பது முதலெழுத்து அல்ல

உயிரெழுத்தும் அல்ல அது சார்பெழுத்துக்களில் ஒன்று.

ஆய்தம் எனவும் ஆயுத எழுத்து எனவும் கூறுவார்கள்

பின்னர் அதைப்பற்றிப் பார்ப்போம் :D

  • கருத்துக்கள உறவுகள்

 

புறச்சுட்டு என்பது ஒரு சொல்லுடன் சுட்டெழுத்து ஒன்று சேர்க்கப்பட்டிருப்பது. உதாரணம் அந்தப்பையன் இந்தப்பையன் உந்தப்பையன் என்பனவாகும் அல்லது அப்பையன் இப்பையன் உப்பையன்.

 

பையன் என்ற சொல்லையும் அ இ உ என்ற சுட்டெழுத்துக்களையும் எளிதில் பிரிக்கக் கூடியதாக இருக்கின்றது இவற்றையே புறச்சுட்டு என்பார்கள்

 

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

 

அவர் அ, இ, உ வைத்தானே சுட்டெழுத்து என்றார்??!! :huh: சார்.. இவங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேணும்போலை இருக்கு.. :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அவர் அ, இ, உ வைத்தானே சுட்டெழுத்து என்றார்??!! :huh: சார்.. இவங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேணும்போலை இருக்கு.. :D

 

 

யாழ்ப்பாணத்திலை இருக்கிற ஏதாவது ஒரு தியேட்டருக்கு பக்கத்திலை பெரிய ரியூட்டரி கட்டி இவையளை படிக்கவைக்கோணும். :D

  • கருத்துக்கள உறவுகள்

அருவரியிலிருந்து நான் இந்தத் தமிழ் படிக்கத் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். அதுவும் அடிக்காத, நுள்ளாத, கிள்ளாத உந்த அருமையான வாத்தியாரிடம் பத்தாவதுவரையிலாவது தொடர்ந்து படிக்க ஆசை. அதுவரையில் இந்தத் திரி இருக்குமா? யாழ்கள மாணவ மாணவியர் இருப்பார்களா? இது தடைபடாது தொடர்வதற்கு இந்த வாத்தியார்தான் உபாயம் கண்டு! அந்த யாழ்கள மட்டுறுத்தினர்களுடன் ஆலோசித்து! உசிதமான பதிலை வழங்குமாறு இங்கு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

அந்த இந்த உந்த என்பவை சுட்டுத்திரிபுகள் எனப்படும்

 

அ + மனிதன் = அம்மனிதன்

 

அ இ உ  என்பது பல இடங்களில் திரிபடைந்து  அந்த இந்த உந்த என வருகின்றன.

 

அம்மனிதன் அந்தமனிதன் இரண்டும் ஒரே கருத்துடையவை :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது வினாவெழுத்துக்கள பற்றியது.

சுட்டெழுத்துக்கள் போலவே தமிழ் மொழியில் வினாவெழுத்துக்களும் சிறப்பானவை.
 

எல்லா எழுத்துக்களும் வினாவெழுத்துக்களாக முடியாது.
வினாவொன்றைக் கேட்பதற்குப் பயன்படுத்தும் எழுத்துக்கள் வினாவெழுத்துக்களாகும்.
எ  ஆ ஓ ஏ என்பன தமிழ் மொழியில் இருக்கும் வினாவெழுத்துக்களாகும்
 

எ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்தில்  வரும்
உதாரணம் எது
 

ஆ ஓ  எனும் எழுத்துக்கள் சொல்லின் முடிவில்  வரும்
உதாரணம் அவனா அல்லது அவனோ  
 

ஏ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும்
உதாரணம் ஏன் ஏது ஆரம்பத்திலும்
 

வந்தானே  என முடிவிலும் ஏ எனும் எழுத்து வினாவெழுத்தாக வருகின்றது

 

ஏன் எங்கே என்ற சொற்களில் வினாவெழுத்துக்கள்
பிரிக்கமுடியாமல் அந்தச்சொல்லினுள்ளேயே இருப்பதால் அவற்றை அகவினா எனவும்
 

எவ்வூர் அவனா உண்டானோ என்ற சொற்களில்  பிரிக்கக்கூடியவாறு வினாவெழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் அவை புறவினா எனவும்
அழைக்கப்படும்
 

எ + ஊர் = எவ்வூர்
உண்டான் + ஓ = உண்டானோ

 

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டுகிறேன் வாத்தியார்.

 

உங்கள் வகுப்பிற்கு வரும்போது கறுப்புப்பூனை குறுக்கால் ஓடியதால் எனது பாட்டிக்கிழவி சற்று நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்திச் செல்லுமாறு பணித்தார், ஆதலால் இவ்வகுப்பிற்கு வர காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனை மன்னித்து என்னையும் உங்கள் வகுப்பின் மாணவியாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன் :rolleyes::wub:

நான் வரலைப்பா இந்தாள் பிரம்போட நிற்கிறார்.... என்னையும் எல்லையும் சாத்துறதுக்கு சமயம் பார்த்துக் கொண்டிருக்கார் என்று வேற கேள்வி...ஆசைப்பட்டு வந்தா வாத்தீ...யார் :lol:   பிரம்பை வளுவளுப்பா தேய்த்துக் கொண்டு நிற்கிறார். ச்சூ ஆதி பேசாம எகிறிக்குதிச்சு ஓடிடு அதுதான் உத்தமம். :icon_idea:

Edited by ஆதிவாசி

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருந்தபோது படிக்க கள்ளப்பட்டு இயக்கத்துக்கு ஓடி ....... பின்னர் அங்கும் படிப்பிக்கினம் என்று வெளிநாடு வந்தால் இங்கும் வாத்தியார் விடுகிறார் இல்லை  :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டுகிறேன் வாத்தியார்.

 

உங்கள் வகுப்பிற்கு வரும்போது கறுப்புப்பூனை குறுக்கால் ஓடியதால் எனது பாட்டிக்கிழவி சற்று நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்திச் செல்லுமாறு பணித்தார், ஆதலால் இவ்வகுப்பிற்கு வர காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனை மன்னித்து என்னையும் உங்கள் வகுப்பின் மாணவியாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன் :rolleyes::wub:

 

வாத்தியார், இனிமேல் நீங்கள் சொல்லித்தரும் பாடங்களையெல்லாம் ஒழுங்காய்ப் படிப்பன், குழப்படியெல்லாம் செய்யமாட்டன். நல்லபேர் எடுப்பன். வகுப்பிற்கு இரண்டு மாணவிகள் வந்துவிட்டார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடத்தில் கவனமாக இருந்த அனைத்து மாணவர்களுக்கும்

கேள்விகளைக்கேட்டு வாத்தியாரின் தமிழறிவைச் சோதித்த மாணவர்களுக்கும் நன்றிகள்
 

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை :D

திங்கட்கிழமை வாத்தியாருக்கு விடுமுறை :lol:
 

செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழ் படிப்போம் :D   

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! வந்து எனக்குப் பக்கத்தில முன்னுக்கு இருங்கோ. பின்னுக்குப் போய் இருந்தியள் எண்டா எல்லாரும் உங்களைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கொண்டு இருப்பினம் வாத்தியார் பாவம் வீணா டென்சனாவார். :rolleyes:

சகாரா! வந்து எனக்குப் பக்கத்தில முன்னுக்கு இருங்கோ. பின்னுக்குப் போய் இருந்தியள் எண்டா எல்லாரும் உங்களைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கொண்டு இருப்பினம் வாத்தியார் பாவம் வீணா டென்சனாவார். :rolleyes:

 

முன்னுக்கு போய் இருந்தால் வாத்தியாரின் நாக்கு குழறும். பரவாயில்லையோ? :D

Edited by கா ளா ன்

நானும் வகுப்பில் சேரலாமா?  சோதனை வைக்கக் கூடாது, கேள்வியும் கேக்கக் கூடாது, வீட்டு வேலையளும் தரக் கூடாது சரியா.

நானும் வகுப்பில் சேரலாமா?  சோதனை வைக்கக் கூடாது, கேள்வியும் கேக்கக் கூடாது, வீட்டு வேலையளும் தரக் கூடாது சரியா.

 

மொத்தத்தில் படிக்கிற நோக்கத்தில் வகுப்பில சேரவில்லை என்று சொல்கிறீர்கள் :D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழ் கொஞசம் 'வீக்'!

 

அரிச்சுவடியிலிருந்து கற்க, ஆசை... ஆசை... பேராசை... இப்போது!

 

"அ..ஆ  அ...ஆ" என கை பிடித்து யாரேனும் சொல்லித் தருவார்களா? :rolleyes:

 

 

http://youtu.be/Vej4VQvryKA


முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை ராஜவன்னியரே, எனக்கும் உந்த வயதுதான். என்னையும் அங்கே சேரத்துவிடுங்கோ. அ, ஆ,,,, என்று என் வாய்சொல்லாது, உடம்பேசொல்லும். ஆனாலும் இப்படி நான் கேட்டதாக வாத்தியாரிட்டைப் போட்டுக்குடுத்துடாதையுங்கோ. அப்புறம் நான் உ, ஊ,,,,, என்று கத்தவேண்டி வந்திடும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா.... இஸ்கூல்லையும். சமர் ஹொலிடே... நடந்து கொண்டிருக்கிற நேரம்,
வாத்தியார் எங்களுக்கு வகுப்பு நடத்துவது நல்லாயிருக்கா....
நான்... லீவு முடியத்தான்... பள்ளிக்கூடப் பக்கம் வருவன். :D

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை ராஜவன்னியரே, எனக்கும் உந்த வயதுதான். என்னையும் அங்கே சேரத்துவிடுங்கோ. அ, ஆ,,,, என்று என் வாய்சொல்லாது, உடம்பேசொல்லும். ஆனாலும் இப்படி நான் கேட்டதாக வாத்தியாரிட்டைப் போட்டுக்குடுத்துடாதையுங்கோ. அப்புறம் நான் உ, ஊ,,,,, என்று கத்தவேண்டி வந்திடும்.

 

ச்சே..சே அப்படியெல்லாம் செய்யமாட்டேன். :)

 

டீச்சரம்மா யாரு? எதோ 'பாலு' 'மோரு'ன்னெல்லாம் இப்போ சொல்றாங்களே, அவங்களாயிருந்தால் நல்லது. (நிழலி போட்டிக்கு வராத பட்சத்தில்! ) :lol:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.