Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 எங்கட வாத்தியார்  நால்லாத்தான் சொல்லித்தாறார். நன்றி ஐயா.

  • Replies 224
  • Views 20.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மாத்திரைக்கு நாங்கள் இனி வைத்தியரிட்டை போகத்தேவையில்லை. தமிழைப் படித்தாலே வேண்டியளவு மாத்திரைகள் இலவசமாகக் கிடைக்கும். வாத்தியார் நீங்கள் வாத்தியேதான்! வாழ்த்துக்கள்!!.

  • கருத்துக்கள உறவுகள்

பாஞசு மாத்திரை மாத்திரை என்று கால் மாத்திரை அரை மாத்திரை ஒரு மாத்திரை ரெண்டு மாத்திரை என்றெல்லாம் சொல்றார் இதில எது காச்சல் மாத்திரை எது பேதி மாத்திரை என்றெல்லாம் ஒழுங்காக சொல்ல மாட்டாராம்  உங்களுக்கு தெரியுமோ? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தானே படிக்க ஆரம்பித்திருக்கின்றோம்
எல்லோரும் பள்ளிக்கூடத்தில் ஒருவரை ஒருவர் கலாய்ப்பதற்காகவே ஆர்வத்துடன் வருவார்கள்
 

சொல்லதிகாரம் ஆரம்பித்ததும் சிலருக்குக் காய்ச்சல் வரும். :lol:

 

பொருளதிகாரத்தில் சிலருக்குப் பேதி வரும்
:D

யாப்பதிகாரம் தொடங்கக் குலைப்பன் காய்ச்சலும் வரும்.
:rolleyes:  

தமிழ் படிக்க வந்து சக மாணவர்களையும் வாத்தியாரையும் கலாய்க்கும் அனைவருக்கும் நன்றிகள் 

 

அப்படியே பாடத்திலும் கவனமாக இருங்கள்
பரீட்சை என்றும் ஒன்று இருக்கின்றது தெரியும் தானே :lol:   :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பரீட்சையில்.... பாஸ் மார்க் போடாவிட்டால்,
வேப்பமரத்தின் கீழ், பார்க்  பண்ணிய...... வாத்தியாரின், சைக்கிள் ரயர் பஞ்சராய்ப் போயிடும். :D  :lol: bike.gif

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையும் வைப்பீங்களா  :(

எனக்கு பரீட்சையில்.... பாஸ் மார்க் போட்டால்,சைக்கிளே வேண்டி தருவேன் :D  :lol: bike.gif

  • கருத்துக்கள உறவுகள்

பரீட்சையும் வைப்பீங்களா  :(

 

பள்ளிக்கூடம் என்றால்.... பரீட்சையும் இருக்கும் தானே.... நந்து.

கல்வி அதிகாரிகள்... சொல்வதைத் தானே... எங்கடை, வாத்தியாரும்... செய்வார்.

அதுக்காக... பரீட்சை அன்று, காய்ச்சல் வந்து விட்டது என்று... சொல்ல முடியாது தானே.... :D  :lol:

எனக்கு குதிரை வேணும் பரீட்சைக்கு :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு பரீட்சையில்.... பாஸ் மார்க் போட்டால்,சைக்கிளே வேண்டி தருவேன் :D  :lol: bike.gif

 

மிக‌ப் பிந்திய‌... செய்திக‌ள். சுட‌ச்... சுட...

 

காளான் என்னும் மாணவன்,

ரஷ்சிய, அமெரிக்க, சீன மாணவர்களுடன் நடாத்தப் பட்ட, அகில உலக தமிழ்ப் பரீட்சையில்...

முதல் பரிசை வென்றுள்ளார். :icon_idea:  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பரீட்சையும் வைப்பீங்களா  :(

சி...அதொண்டுமில்லை....நீ வாமச்சான்  நாங்கள் மெட்னி ஷோவுக்கு போவம் :D

மிக‌ப் பிந்திய‌... செய்திக‌ள். சுட‌ச்... சுட...

 

காளான் என்னும் மாணவன்,

ரஷ்சிய, அமெரிக்க, சீன மாணவர்களுடன் நடாத்தப் பட்ட, அகில உலக தமிழ்ப் பரீட்சையில்...

முதல் பரிசை வென்றுள்ளார். :icon_idea:  :D

 

ஜேர்மன் மாணவன் ஒருவன் செந்தமிழிலில் விடை அளித்தாகவும் செய்தி வந்தது. :Dஇதனால் வெள்ளிக்கிழமைகளில்  பரீட்சை வைப்பதில்லை திணைக்களம் முடிவு செய்துள்ளது <_<

Edited by கா ளா ன்

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் மாணவன் ஒருவன் செந்தமிழிலில் விடை அளித்தாகவும் செய்தி வந்தது. :D

 

அவ‌ன், கூறிய‌... விடை என்ன‌?

ஜேர்மன் மாணவன், கூறிய‌ விடையை... அறிய,

அடுத்த வகுப்பு மாணவி, மாணவர்கள் ஆவலாக உள்ளார்கள்...... :icon_idea:

அவ‌ன், கூறிய‌... விடை என்ன‌?

ஜேர்மன் மாணவன், கூறிய‌ விடையை... அறிய,

அடுத்த வகுப்பு மாணவி, மாணவர்கள் ஆவலாக உள்ளார்கள்...... :icon_idea:

 

அதை குடும்ப குத்துவிளக்குகள் இருக்கிற இடத்தில் சொல்ல முடியாது :D . தேவையானால் வாத்தியாரை தனியகா சந்திக்கவும் :blink:

 

  • கருத்துக்கள உறவுகள்

பாஞசு மாத்திரை மாத்திரை என்று கால் மாத்திரை அரை மாத்திரை ஒரு மாத்திரை ரெண்டு மாத்திரை என்றெல்லாம் சொல்றார் இதில எது காச்சல் மாத்திரை எது பேதி மாத்திரை என்றெல்லாம் ஒழுங்காக சொல்ல மாட்டாராம்  உங்களுக்கு தெரியுமோ? :lol:

 

இப்படியெல்லாம் காச்சல் கீச்சலுக்கு எத்தனை மாத்திரை என்று கேட்கக்கூடாது!. வல்வை சகாறாவுக்கு எத்தனை?, ஊக்கம் அளிக்கும் வன்னியன், நுணா, சுவி அண்ணா, தமிழரசு, யாழ் அன்பு, கோமகன், களான், பான்ச், மற்றும் புத்தன், புதுக்காதல்கடிதம் தேடும் மெசபொத்தேமியா சுமேரியர் போன்ற ஒவ்வொருவருக்கும் தேவைப்படுவது எத்தனை? என்று கேட்டால் நான் சொல்லுவன். :icon_mrgreen: 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது தானே படிக்க ஆரம்பித்திருக்கின்றோம்

எல்லோரும் பள்ளிக்கூடத்தில் ஒருவரை ஒருவர் கலாய்ப்பதற்காகவே ஆர்வத்துடன் வருவார்கள்

 

சொல்லதிகாரம் ஆரம்பித்ததும் சிலருக்குக் காய்ச்சல் வரும். :lol:

 

பொருளதிகாரத்தில் சிலருக்குப் பேதி வரும்

:D

யாப்பதிகாரம் தொடங்கக் குலைப்பன் காய்ச்சலும் வரும்.

:rolleyes:  

தமிழ் படிக்க வந்து சக மாணவர்களையும் வாத்தியாரையும் கலாய்க்கும் அனைவருக்கும் நன்றிகள் 

 

அப்படியே பாடத்திலும் கவனமாக இருங்கள்

பரீட்சை என்றும் ஒன்று இருக்கின்றது தெரியும் தானே :lol:   :D  :lol:

 

வாத்தியார், எனக்கு இப்போதே காய்ச்சல் வந்திட்டு.. !

 

ரெண்டு நாள் விடுப்பும் தாங்கோ, வீட்டிலே ஓய்வா இருக்கும்போது படித்துத் தேறுகிறேன்.. நல்லா வலுசான மாத்திரையும் இருந்தால் கொடுங்கோ.

 

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது வினாவெழுத்துக்கள பற்றியது.

சுட்டெழுத்துக்கள் போலவே தமிழ் மொழியில் வினாவெழுத்துக்களும் சிறப்பானவை.

 

..... ஓ  எனும் எழுத்துக்கள் சொல்லின் முடிவில்  வரும்

உதாரணம் அவனா அல்லது அவனோ  

 

 

ரது... குசினிக்குள்ளே...?

ரது... விதானையாரே...?

என ஈழத்தமிழர்கள் அழைக்கிறார்களே? தவறுதானே வாத்தியார்? அப்படி அழைப்பவர்களை இனி பிரம்பால் ரெண்டு போடு போடுங்கள்! :)

  • கருத்துக்கள உறவுகள்

 

உதாரணம் மெய்யெழுத்தாகிய க்  உயிரெழுத்தாகிய வுடன் சேரும்பொழுது  என்ற உயிர்மெய்யெழுத்துப் பிறக்கின்றது.அப்படியே பதினெட்டு மெய்யெழுத்துக்களும் பன்னிரண்டு உயிரெழுத்துக்களும் தனித்தனியாக ஒன்றுடன் ஒன்று சேர்வதால் 216 உயிர்மெய்யெழுத்துக்கள் பிறக்கின்றன.

 

 

வாத்தியார், பன்றிகளுக்குத்தான் இப்படிக் கனக்க குட்டிகள் பிறக்கும். தமிழுக்குமா?... :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம்

 

தனி நெடில் எழுத்துக்களை அடுத்தும்  இரண்டுக்கு மேற்பட்ட பல எழுத்துக்கள் கொண்ட

சொல்லின் இறுதியிலும்   வல்லின மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்தும் வரும் உ கரத்திற்கு

குற்றியலுகரம் என்று பெயர்.

 

து டு பு  என்ற உயிர்மெய்யெழுத்துக்களை உயிரெழுத்தாகவும் மெய்யெழுத்தாகவும் பிரிக்கும் போது த்+உ, ட்+உ, ப்+உ  என வருகின்றன
 

இப்படி மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து வரும் உ  கரத்தைத் தான் குற்றியலுகரம் என்பர்
 

இந்த உகரம்   தன் இயல்பான ஒலியைவிடக் குறைந்து ஒலிக்கும் 
 

தோப்பு என்ற சொல்லின் இறுதியெழுத்திற்கு (பு)முதல்வரும் எழுத்து   ப் என்பதாகும்.

ப் என்ற எழுத்து வல்லின மெய்யெழுத்தாகும். ஆகவே தோப்பு என்ற சொல்லில் வரும் உகரம்

வன்தொடர்க்குற்றியலுகரமாகும்
 

அப்படியே வெண்ணீறு என்ற சொல்லில் வருவது
உயிர்த்தொடர்க் குற்றியலுகரம் ஆகும்
காரணம் வெண் (ணீ) ண்+ஈ  று உகரம் சேர்ந்திருக்கும் இறுதிச் சொல்லிற்கு முதல் வந்த

சொல்லைப் பிரிக்கும் போது ஈ என்ற உயிரெழுத்து வருவதாகும்
 

இப்படியே ஆறு வகைக் குற்றியலுகர வகைகள் உள்ளன
 

வன்தொடர்க்
மென்தொடர்க்
இடைத்தொடர்க்
நெடிற்தொடர்க்
ஆய்தத்தொடர்க்
உயிர்த்தொடர்க்குற்றியலுகரம் 

 

என எவ்வகையான எழுத்துக்களைத் தொடர்ந்து குற்றியலுகரம் வருகின்றாதோ

அவ்வகையான பெயர்களைப் பெறுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

உயிரளபெடை எல்லாம் இதுவரையில் சும்மா கேள்விப்பட்ட மாதிரிதான் இருந்தது.. :unsure: விளக்கத்திற்கு நன்றி வாத்தியார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலுகரம்

 

இப்படியே ஆறு வகைக் குற்றியலுகர வகைகள் உள்ளன

 

குறும்புபண்ணாமல், மேலும் இந்த ஆறு வகைக் குற்றியலுகர வகைகளையும் கருத்தோடு படித்துப் பயனடைவதற்கு ஆண்டவன் ஆறுமுகனையும் தரிசித்து ஆசிபெற அவன் ஆலயத்திற்குச் சென்றேன். அங்கே அத்தியடிக் குத்தியன் நந்திபோல பசிலுடன் நிற்கிறானே! :o  யான் யாரிடம் இனி ஆசிபெற முடியும்! புத்தனிடமா வாத்தியாரே?. :huh:  :huh:  :huh: 

வாத்தியார் உங்களது வகுப்பு மிக அருமையாக போய்க் கொண்டிருக்கிறது.
 
இலக்கணம் அறியாது இலக்கியம் படித்துக் கொண்டிருந்தேன். உங்களது வகுப்பு முடியும்போது இன்னும் அதிக சுவையுடன் இலக்கியம் பருகுவேன் என்று நம்புகிறேன்.  தாங்கள் தொடர் வகுப்பை தொய்வில்லாமல் தொடர வேண்டுகிறேன்.
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்லின எழுத்தைத் தொடர்ந்து வருவதால்
ஆண்டு,சான்று,கரும்பு,கொஞ்சு,உறங்கு என்ற சொற்களில் வரும் உகரத்தை

மென்தொடர்க் குற்றியலுகரம் என்பர்

 

நாடு ,காது ,காசு ,ஊறு  என்ற சொற்களில் வருவது
நெடிற்தொடர்க் குற்றியலுகரமாகும். காரணம் நா கா ஊ என்பன நெடில் எழுத்துக்களாகும்
 

ஆயுத எழுத்தினைத் தொடர்ந்து வரும் (எஃகு)உகரம்
ஆயுதத்தொடர்க் குற்றியலுகரமாகும்
 

இடையெழுத்துக்களாகிய ய்,ர்,ல்,ன்,ழ் போன்ற எழுத்துக்களைத் தொடர்ந்து வரும்

கொய்து,மூழ்கு,மார்பு ஆகிய சொற்களில் உள்ள உகரத்தை

இடைத்தொடர்க் குற்றியலுகரம் என்பர்.    

 

 

முற்றியலுகரம்

 

 

தனிக்குறில் எழுத்துக்களைத் தொடர்ந்து ஒரு சொல்லின்   இறுதியில் (பெரும்பாலும் இரண்டு குறில் எழுத்துக்களைக் கொண்ட சொல்) வல்லின மெய்யெழுத்துக்களுடன் சேர்ந்து வரும் உகரமும்
 

மெல்லினம் அல்லது இடையின எழுத்துக்கள் ஒரு சொல்லின் இறுதியில் வந்து அந்த எழுத்தில் உகரம் 
சேர்ந்திருந்தாலும்   அச்சொற்களுக்கு முற்றியலுகரம் எனப்பெயர் உண்டு .

 

முற்றியலுகரத்தில் உகரத்தின் இயல்பு குறையாது முழுமையாக இருக்கும்
 

உதாரணம் பசு,புகு,இது,மறு,மடு என்பன குறிலை அடுத்து வரும் உகரம்.
 

விம்மு,எண்ணு,உறவு,சொல்லு,அறிவு   என்பன மெல்லினம் அல்லது இடையினம்

இறுதியில் வரும்போது அதனுடன் சேர்ந்துவரும் உகரம் ஆகும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரது... குசினிக்குள்ளே...?

ரது... விதானையாரே...?

என ஈழத்தமிழர்கள் அழைக்கிறார்களே? தவறுதானே வாத்தியார்? அப்படி அழைப்பவர்களை இனி பிரம்பால் ரெண்டு போடு போடுங்கள்! :)

பாடசாலையில் ஒழுங்குமுறையாகப் படித்தாலும்

இந்த இழவு விழுந்த வேலிக்கு இடையில் ஓட்டை போட்டுக்கதைக்கும் பழக்கம் தமிழர்களிடம் உள்ளது. :lol: 

:D  :lol: அப்படி வேலிக்குள்ளாலே கதைக்கும் பேச்சு வழக்குத் தமிழ்தான் இந்த ஆரது?? ஆரவர் ?? என்பன.

யார் + அது  யார் + அவர் என்பது அதன் விளக்கம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

குற்றியலிகரம்

 

இகரத்தின் இயல்பான ஒலி அளவு ஒரு மாத்திரை ஆகும். ஆனால் இந்த இகரமும் சில இடங்களில் அதன்  இயல்பான ஒலி அளவைவிடக் குறைத்து ஒலிக்கப்படும். இதையே குற்றியலிகரம் என அழைப்பர்.
 

அதாவது ஒரு சொல்லின் இறுதியில் குற்றியலுகரம் இருக்கும்போது அந்தச் சொல்லுடன் சேர்த்து வாசிக்கப்படவேண்டி வரும் அடுத்த சொல்லின் ஆரம்பத்தில் யகரம் இருந்தால் இரண்டு சொற்களும் சேரும்போது குற்றியலிகரம் தோன்றுகின்றது
 

உதாரணம்
நாடு + யாது  என்பது நாடியாது எனவும்
முத்து + யாது என்பது முத்தியாது எனவும் வரும்

 

அத்துடன் மியா என்ற அசைச்சொல்லில் மி என்ற எழுத்தில் இருக்கும் இகரமும் தன் இயல்பான ஒலியைவிடக் குறைந்து ஒலிக்கும்

 

உதாரணம்
கேள் + மியா = கேண்மியா
உண் + மியா = உண்மியா

 

ஐகாரக்குறுக்கம்
 

ஐ என்ற எழுத்துத் தனியாக உச்சரிக்கப்படும்போது
குறுகாமல் தனது இரண்டு மாத்திரை ஒலி அளவிற்கு ஒலிக்கும்
ஆனால் ஒரு சொல்லின் ஆரம்பத்திலோ நடுவிலோ அல்லது இறுதியிலோ வரும் போது குறுகி ஒரு மாத்திரை அளவில் ஒலிக்கப்படுகின்றது
இதுவே ஐகாரக்குறுக்கம் எனப்படும் 
 

உதாரணம்

ஐவர், கலைஞர்,மனை  போன்ற சொற்கள்
தை (த் + ஐ) என்ற சொல்லில் இருக்கும் ஐயும் கூறுகியே ஒலிக்கும்

 

 

ஒளகாரக்குறுக்கம்
 

 

ஔ என்ற எழுத்தும் தனியே உச்சரிக்கும்போது குறுகாமல் சொல்லின்

முதலில் வரும்போது குறுகி ஒலிக்கும்.

ஔவை அல்லது வௌவால், கௌதாரி என்பன உதாரணங்கள்.
 ஔ என்பது சொல்லின் ஆரம்பத்தில் மட்டுமே வரும்   

Edited by வாத்தியார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.