Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் யுவதிக்கும் முஸ்லீம் ஆசிரியருக்குமிடையிலாக காதல் திருமணம் இனிதே நிறைவேறியது!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
muslim-hindu-wedding-seithy-1-20130908-1

மட்டக்களப்பு மரப்பாலம் கிராமத்தைச்சேர்ந்த தமிழ் யுவதி ஒருவருடன் காதல் கொண்டிருந்த முஸ்லீம் ஆசிரியர் ஒருவருக்கு இன்று இந்துமத முறைப்படி ஊரவர்களால் திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியருக்கும் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுக்கும் இன்று ஏறாவூர் 4ம் குறிச்சி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தில் இந்துமத முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. குறித்த முஸ்லீம் ஆசிரியர் இந்துமதத்தை தழுவிக்கொண்டதோடு அவர் தனது பெயரை சிவக்காந்தன் எனவும் மாற்றிக்கொண்டுள்ளார். இவருக்கு செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் அவர்களின் தலமையில் பதிவாளர் திருமதி.கமலேஸ்வரி தம்பிராஜா அவர்களினால் பதிவுத் திருமணம் செய்துவைக்கப்பட்டது.

  

இது குறித்த மேலும் தெரியவருவதாவது

 

ஏறாவூர் 1ம் குறிச்சியில் வசிக்கும் புகாரி முகமது நஜீம் லாபீர் கான்(28வயது) என்ற முஸ்லீம் ஆசிரியர் மரப்பாலத்தைச் சேர்ந்த நல்லதம்பி சாந்தி(23வயது) என்ற பெண்னுடன் காதல்வயப்பட்டிருந்தார். கிராம மக்களின் கவனத்தை ஈர்த்த காதலர்களது விடயம் தீருமண பதிவுக்கு முடிவானது. குறித்த காதலன் தமிழ் பெண்ணை திருமணம் செய்வதற்கு இணக்கம் தெரிவித்து கரம்பிடித்துக்கொண்டுள்ளார்.

 

இதன் படி இவர்களுக்கான திருமணத்தை இந்துமத முறைப்படி செங்கலடி வர்த்தக சங்கத் தலைவர் மோகன் அவர்கள் நடாத்திவைத்துள்ளார்.

 

muslim-hindu-wedding-seithy-1-20130908-4

 

 

muslim-hindu-wedding-seithy-2-20130908-4

 

 

muslim-hindu-wedding-seithy-3-20130908-4

 

http://www.seithy.com/breifNews.php?newsID=92392&category=TamilNews&language=tamil

சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க.
வாழ்க வளமுடன்.
  • கருத்துக்கள உறவுகள்

அந்தக் காலம் தொட்டு உதுகள் ஆங்காங்கே நடந்துகிட்டு தான் உள்ளது. அதேன் அண்மைக் காலமாக இவை பெரிய அளவில் ஊடகங்களில் ஊதிப் பெருப்பிக்கப்படுகின்றன.

 

பிரச்சனைகளின் தோற்றுவாய்களை.. இப்படியான ஒரு சில புறநடைகள் தீர்க்க முடியும் என்றால்... பிரச்சனைகளே வந்திராது. காட்டிக்கொடுப்புகள் நிகழ்ந்திராது. துரோகங்கள் வளர்ந்திராது. விடுதலை என்பதை எல்லோரும் சுவைத்திருப்பார்கள். இன்று காட்டிற இந்த அக்கறையை அன்று ஏன் நேற்று... உண்மையில் காட்டி இருந்தால்...???! :(:rolleyes:

வாழ்த்துக்கள். காதல் இயற்கையானதாக இருந்தால் மட்டுமே வாழ்வுக்கு வழிகாடியாக இருக்கும். இன்றைய மேற்கு நாட்டு டேடிங்குகள், பேசி செய்யும் திருமணங்களைவிட மலிவான நடத்தைகள் கொண்டவை. இயற்கையான காதலிற்குள் ஊடகங்கள் தலையிடுவது வேண்டாதது.

  • கருத்துக்கள உறவுகள்

மணமக்கள் வாழ்க! :wub:  வாழ்த்துவோரைக் காணவில்லை? அவர்கள் வாள் தீட்டச் சென்றுவிட்டார்களோ?..... ஜயம் உள்ளது!. :rolleyes:

இந்துப் பெண் இந்துவாகவும், முஸ்லீம் ஆசிரியர் முஸ்லீமாகவும் தொடர்ந்து இருந்தபடி திருமணம் செய்திருந்தால், அது காதலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
சகல சௌபாக்கியங்களும் பெற்று நீடூழி வாழ்க.
வாழ்க வளமுடன்.
 

 

 

இந்துப் பெண் இந்துவாகவும், முஸ்லீம் ஆசிரியர் முஸ்லீமாகவும் தொடர்ந்து இருந்தபடி திருமணம் செய்திருந்தால், அது காதலுக்கு மேலும் சிறப்பு சேர்ப்பதாக இருந்திருக்கும்.

 

 

உண்மை

இப்படி தன்னையே  இழப்பதற்கு தயாரானது வெளிவேசமாகத்தானிருக்கும்.

இதில் எனக்கு நம்பிக்கையில்லை

 

(அப்பாடா

சபேசனுடன்  ஒத்துப்போகின்றேன் :lol:  :D )

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இலகுவில் வேறு மதத்திற்கு மாறமாட்டார்கள். இதில் உள்குத்து இருக்கலாம். அல்லது இவர்கள் ஊரை விட்டு ஓடவேண்டி இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லீம்கள் இலகுவில் வேறு மதத்திற்கு மாறமாட்டார்கள். இதில் உள்குத்து இருக்கலாம். அல்லது இவர்கள் ஊரை விட்டு ஓடவேண்டி இருக்கலாம்.

அதனால்தான் கொஞ்சம் தள்ி இருந்து வேடிக்கை பார்க்கவேண்டி உள்ளது.. :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
இதில எனக்கொரு கருத்து எழுதவேணும்போல கிடக்குது எழுதினால் கருத்தை தூக்கிவிடுவினம் என்பதினால் எழுதவில்லை .....  :blink:  :D
 
முஸ்லிம்கள் இந்தமாதிரி மதமாற்றத்துக்கு ஒத்துபோகமாட்டார்கள் வழமையாக இந்துக்கள்தான் ஏனைய மதத்திற்கு செல்வார்கள் இங்கு இவரின் நடவடிக்கை இவருக்கு பாதகமான சூழலை உருவாக்கி உள்ளது  :D
 
வாழ்த்துக்கள் 

தாயகத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் திருமணங்களுக்காகவும் தொழில் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறுகிறார்கள்.

 

ஆனால் இவர் இந்துவாக மதம் மாறியதை ஒரு வெற்றித் திருவிழா போல ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிப்பதைப் பார்த்த போது கோழியும் ஆமையும் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

 

 

தாயகத்தில் வாழ்பவர்களுக்குத் தெரியும் எத்தனையோ ஆண்களும் பெண்களும் திருமணங்களுக்காகவும் தொழில் உள்ளிட்ட வேறு பல காரணங்களுக்காகவும் இஸ்லாமியர்களாக மதம் மாறுகிறார்கள்.

 

ஆனால் இவர் இந்துவாக மதம் மாறியதை ஒரு வெற்றித் திருவிழா போல ஊடகங்கள் முன்னுரிமை கொடுத்துப் பிரசுரிப்பதைப் பார்த்த போது கோழியும் ஆமையும் கதை தான் ஞாபகத்திற்கு வருகிறது.

 

உங்களுடன் நான் 100% உடன்படுகிறேன், சைவ மதம் எவ்வளவு தாழ்ந்து போய் விட்டது என்பத்ற்கு இது ஒரு சிறந்த உதாரணம், அண்மையில் கூட ஒரு செய்தி வந்தது என்னவென்றால் அண்மையில் இஸ்லாம் மததிற்கு மதம் மாறிய 75 குடும்பங்களுக்கு தனியாக ஒரு கிராமமே உருவாக்கப்பட்டதாம், அந்தளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது, இனிமேல் இப்படியான பல இஸ்லாமிய கிராமங்களை தமிழர் பகுதியில் காணலாம். இந்த நிலை தொடர்ந்தால் தமிழர் என்ற ஒரு இனம் இஸ்லாமிய மதம் மாற்றம் மூலமே அழிக்கப்பட்டு விடும். யாழ்ப்பாணம் போய் பாருங்கோ இப்பவே மீளக் குடியேறியவர்கள் எல்லம் தமது இஸ்லாமிய மயமாக்கலை தொடங்கி விட்டார்கள், யாழ்ப்பாணத்தில் கோயில் திருவிழா நடத்த தடை வரும் காலம் வெகு தொலைவில் இல்லை

எந்தத் தொப்பியைப் போட்டாலும் அளவாகத்தானிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்தத் தமிழ்ப் பெண்ணுக்கு, நிறைய‌ பூர்விகச் சொத்துக்கள் உள்ளது போல் உள்ளது.
அதான்... சிங்கன், மதம் மாறி கலியாணம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளார்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.