Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சிக்கு போகும் யாழ்தேவி...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

11(859).jpg
யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர்  கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
01(865).jpg
03(499).jpg
04(341).jpg
06(173).jpg
07(122).jpg
08(94).jpg
09(76).jpg
10(1424).jpg

 

 

http://tamil.dailymirror.lk/--main/82483-2013-09-14-11-03-31.html

  • கருத்துக்கள உறவுகள்

11(859).jpg

யாழ்தேவி ரயில் 23 வருடங்களின் பின்னர்  கிளிநொச்சியை சென்றடைந்துள்ளது.இந்த ரயில் பயணத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக இன்று சனிக்கிழமை ஆரம்பித்துவைத்தார்.

யாழ்தேவி ரயில் தனது பயணத்தை ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்தே இன்று சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆரம்பித்தது. கிளிநொச்சி ரயில் நிலையத்தை காலை 10.15 மணியளவில் சென்றடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதல் பயணியாக ஏறி பயணத்தை ஆரம்பித்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

 

எங்கும்  சிங்கக்கொடி

எப்படி வந்தாலும்

எதைத்தந்தாலும்

ஒருக்காலும் ஒட்டாது

ஒட்டவும் விடேன்

உனக்கும் ஊருக்கும்

சொல்லியே

வருகிறது சிங்களம்

நாம் மறந்தாலும்

அவன் ...........

நன்றி

மகிந்த

தொடர்க  தம்பணி.....

 

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிவீரன் கெமுனு எப்படி நெஞ்சை நிமிர்த்நி போயிருப்பானோ, அப்படி நடை போடுறார் மகிந்தர்.. :D

Edited by இசைக்கலைஞன்

மகிந்தவுக்கு பின்னாலை உந்த சர்தாஜி என்ன செய்கிறார்...??  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தர் என்னதான் இறுக்கமா போனாலும் பவர்ஸ்டார் மாதிரிதான் தெரிகிறார்.. பின்னால வாற சிங் திருட்டுத்தனம் பண்ணின கோழிக்கள்ளன் மாதிரி பம்முது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தவுக்கு பின்னாலை உந்த சர்தாஜி என்ன செய்கிறார்...??  :rolleyes:

அதுபற்றி அறியவேண்டுமாயின் நம்ம சுண்டலை நாடவும் ......  :D

அதுபற்றி அறியவேண்டுமாயின் நம்ம சுண்டலை நாடவும் ......  :D

 

 

மஹிந்தவை பின் தொடர்ந்த "றோ" என்ற கட்டுறையை சுண்டல்ஜீ வரையவுள்ளார் என்டு சொல்றீங்களோ ?  :D

இந்தியத் தண்டவாளத்தில் சீன ரயில்...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தவை பின் தொடர்ந்த "றோ" என்ற கட்டுறையை சுண்டல்ஜீ வரையவுள்ளார் என்டு சொல்றீங்களோ ?  :D

இந்தியத் தண்டவாளத்தில் சீன ரயில்...

.... தண்டவாளம் இந்தியாவாகவும் (பெண்) அதன்மேல் ஓடும் ரயில் சீனவாகவும் (ஆண்)  சொல்லலாம் கணவன் மனைவி உறவு என்றும்  :D  :icon_idea:

இந்தமாதிரி ரயில் விடுவது ரோட்டு போடுவது எல்லாம் வர்ண நச்சு திரவியம் பூசிய பலகாரம் போன்றது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10(1424).jpg


வழமையாக சிவப்பு கழுத்தில சுத்தின ராஜபக்சக்களைத்தான் பார்த்திருக்கின்றேன் இதென்ன புதிசா நீலநிற துண்டுடுடன் ஒருவர்  :blink:  யாருக்காவது யார் என்பது தெரியுமோ ?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ திடீரென "கிளிநொச்சிக்கு போகும் மூதேவி" என்று தோன்றிவிட்டது. :rolleyes:

 

மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னமோ திடீரென "கிளிநொச்சிக்கு போகும் மூதேவி" என்று தோன்றிவிட்டது. :rolleyes:

 

மன்னிக்கவும்.

சரியாகத்தான் உங்களுக்கு தோன்றி இருக்கின்றது ....  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரு பிராந்திய எதிரி நாடுகளை ஒன்றாக்கும் சிங்களத்தின் நரி மூளை தமிழனின் நிலத்தின் ஊடாக ஊடறுத்து இந்திய ஓடுபாதையில் சீனர்களின் புகையிரதம் எப்படி சிங்களவனின் நரி மூளை  :icon_mrgreen:

 

எதிரும்புதிருமாக இருக்கும் நாடுகள் ஒன்றாக சேந்து அழிக்க  இவர்களுக்கெல்லாம் தமிழர்கள் எதிரியா ?  :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இரு பிராந்திய எதிரி நாடுகளை ஒன்றாக்கும் சிங்களத்தின் நரி மூளை தமிழனின் நிலத்தின் ஊடாக ஊடறுத்து இந்திய ஓடுபாதையில் சீனர்களின் புகையிரதம் எப்படி சிங்களவனின் நரி மூளை  :icon_mrgreen:

 

எதிரும்புதிருமாக இருக்கும் நாடுகள் ஒன்றாக சேந்து அழிக்க  இவர்களுக்கெல்லாம் தமிழர்கள் எதிரியா ?  :rolleyes:

 

இந்தியர்களின் ஓடுபாதை.. சீனர்களின் புகையிரதம்.. புலம்பெயர் தமிழர்களிடம் பணப்பறிப்பு... சிங்களத்துக்கு மேலாதிக்க வெறியுடன் கூடிய... உயிர் வாழ்வு..!

 

இதில தமிழர்களுக்கு அபிவிருத்தி என்ற கூப்பாடு...!

 

இதே புகையிரதம் 1990 இல் கேட்பார் கேள்வி இன்றி தேடுவார் இன்றி வந்து போனது. இன்ரசிற்றியும் வந்தது. அப்ப புலிகளும் இருந்தார்கள் வன்னியில். ஏதோ இப்பதான்.. புதிசா இரயில் விடுற கணக்கா.. சிலர்... தேர்தல் விளம்பரம் பண்ணுறாங்க..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே யாழ்தேவி யாழ் செல்வதனைப் பற்றியும் அங்கே வீதிகள் போடப்படுவதனையும் கிண்டலடித்து எழுதுபவர்கள் பின்னர் யாருக்குமே தெரியாது யாழ். சென்றுவிட்டு அந்த மாதிரி யாழ். இப்பதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிக்கொண்டு திரிவார்கள்.

 

யாழ்ப்பாண மக்களுக்கு எது தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்கட்டும். வெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு அந்த மக்களின் தலைவிதியினை தீர்மானிப்பவர்களாக நீங்கள் இருக்காதீர்கள்.

 

முதலில் உங்கள் தாய்-தந்தையருக்கு மற்றும் சகோதர-சகோதரிகளுக்கும் நீங்கள் அனுப்பும் பணத்தினை நிறுத்திவிட்டு அவர்களையே உழைத்துச் சாப்பிடச் சொல்லாமே?

 

உங்களின் பணத்தில்தானே அங்கே உள்ளவர்கள் மிக மிக சொகுசாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். அதனை உங்களால் மறுதலிக்க முடியுமா?

 

சாதாரண பேரூந்துகளில் யாழ். சென்று வரமாட்டார்களே உங்கள் பணத்தில் வாழும் அங்குள்ள மக்கள். அவர்கள் சொகுசு பேரூந்துகளிலேயே பயணம் செய்வார்கள். இவர்களால் இந்தளவு பணம் கொடுத்துச் செல்ல முடியும். ஆனால் அங்கே ஒரு அரச பணியாளரால் சொகுசு பேரூந்துகளில் கொழும்பு சென்று வர முடியுமா?

 

இதே போன்றுதான் யாழ். செல்லும் தொடருந்திலும் சொகுசு வசதிகளோடு விடத் தொடங்கியிருக்கின்றனர். அதிலேயே புலத்து பணத்தில் ஏப்பம் விட்டுக் கொண்டு இருப்பவர்கள் பயணம் செய்வார்கள்.

 

இங்கே பலரும் காலையில் எழும்பி யாழில் என்ன இருக்கின்றது என்று பார்த்துவிட்டு ஒரு கருத்தினைப் போடுவார்கள். பின்னர் இரவு தூங்கச் செல்லும் போது ஒரு கருத்தினைப் போடுவார்கள்.

 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் அரசியல் பணியினை அந்த மண்ணில் செய்யும் போது யாழ் களத்தில் களமாடுகின்ற வீரமறவர்களே அந்த மண்ணில் போய் உங்கள் கருத்துக்களைக் கூறலாமே. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அங்கே துணிச்சலாகத்தானே கருத்துக்களை கூறி வருகின்றனர்.

 

சீமானுக்கும் சரி அல்லது அவர் போன்று தமிழ்நாட்டில் கூக்குரலிடுகின்ற அரசியல்வாதிகளும் சரி இங்கே அடிக்கடி நடுநிலமை வாதி போன்று தன்னைக் காட்டிக் கொள்கின்ற நெடுக்காலை குறுக்கால போவார்கள் போன்றவர்களும் சரி வடக்கு - கிழக்கு தமிழர்களின் தலைவிதியினை தீர்மானிக்கின்ற தகுதி உங்களுக்கோ எனக்கோ இல்லை என்பதனை மனதில் வைத்துக்கொண்டு கருத்துக்களை பதிவில் இடுங்கள்.

 

விரும்பியோ விரும்பாமலோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத்தான் தமிழர்களின் இன்றைய அரசியல் தலைமை என்றாகிவிட்டது. புலத் தமிழர்களால் உருவாக்கப்பட்ட கஜேந்திரகுமார் தலைமையிலான அணி என்ன செய்கின்றது என்பது கூட இன்றுவரை தெரியவில்லை. அறிக்கைகளில்தான் அவர்களைக் காண முடிகின்றது.

 

முடிந்தால் வடக்கில் உள்ள உறவுகளை அதிலும் குறிப்பாக இளையோர்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தூண்டுங்கள். இல்லை இதனை செய்ய விரும்பவில்லையா தயவுசெய்து கம்மென்று இருங்கள்.

 

சீமான் போன்றவர்களின் அறிக்கைகளை வெளியிட்டு மக்களை குழப்புகின்ற வேலைகளில் ஊடகங்களும் செய்யாமல் இருந்தால் சரி.

 

சீமானுக்கு முடிந்தால் கனடாவில் இருந்து செல்கின்ற பணத்தினை நிறுத்த முடியுமா என ஆராயுங்கள். அதே போன்று நெடுமாறனுக்கும் விடுதலை இராசேந்திரனுக்கும் லண்டனில் இருந்து செல்கின்ற பணத்தினை நிறுத்த முடியுமா எனப் பாருங்கள். அப்படியே கம்மென்று இருப்பார்கள்.

 

புலியா? பிரபாகரனா? யார் அவர் என்று கேள்வி எழுப்புவார்கள்.

 

புலம்பெயர் சமூகம் கடந்த நான்கு வருடங்களாக மாயை உலகில் இருந்து வெளிவரவில்லையே என்பதுதான் வேதனையான ஒரு விடயமாக இருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாண மக்களுக்கு எது தேவை என்பதனை அவர்களே தீர்மானிக்கட்டும். வெளிநாடுகளில் சொகுசாக இருந்து கொண்டு அந்த மக்களின் தலைவிதியினை தீர்மானிப்பவர்களாக நீங்கள் இருக்காதீர்கள்.

 

 

யாழ்ப்பாண மக்களுக்கு மட்டுமல்ல.. வடக்குக் கிழக்கு மக்களுக்கு தேவையானதை வவுனியாவிலும் கொழும்பிலும் சிங்களப் படைகளோடு நின்று தடுத்து.. பொருண்மியத் தடைகளை அமுல்படுத்தி தமிழ் மக்களை பட்டினிபோட்டு இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்து அதுதான் சுதந்திரம் என்று காட்ட நின்றவை இப்ப சிங்கப்பூர் காட்டிறம் என்று களத்தில இறங்கி இருக்கினம்.

 

உருப்படியா சிங்கள தேசத்தையே முன்னேற்ற முடியல்ல.. வந்திட்டாங்க... புலி பிரபாகரன் என்று கொண்டு. புலிகள் இவ்வளவு பொருண்மிய தடைகள் மத்தியிலும்... சரியான சிவில் நிர்வாகத்தைக் கொண்டு நடத்தியதே பெருமைக்குரிய விடயம். அதனை எந்தக் கொம்பனாலும் செய்ய முடியாது. முடிந்தால் செய்து காட்டட்டும்..!

 

தமிழர்களை அழித்த அழிக்கும்.. சிங்களவனுக்கு வசதியும் வருவாயும் தேட தமிழனை பலிக்கடாவாக்கும் துரோகிகளின் வியாபாரமே இதில் அதிகம் உள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

இங்கே யாழ்தேவி யாழ் செல்வதனைப் பற்றியும் அங்கே வீதிகள் போடப்படுவதனையும் கிண்டலடித்து எழுதுபவர்கள் பின்னர் யாருக்குமே தெரியாது யாழ். சென்றுவிட்டு அந்த மாதிரி யாழ். இப்பதாக தமக்கு நெருக்கமானவர்களிடம் கூறிக்கொண்டு திரிவார்கள்.

 

இங்கை வீதி போட்டதையும் இரயில் விட்டதையும் கிண்டல் அடிக்கும் ஆக்கள் யாருங்கோ....   நானும் எனக்கும் இல்லாத மூளையை கூட கசக்கி பிழிஞ்சு பாத்திட்டன் தெரியேல்லை... 

 

இல்லை மகிந்தவை கிண்டல் அடிக்கிறது உங்களுக்கு அப்படி தெரிகிறதா...??  ஓ....    ஒருவேளை எங்கை அடிபட்டாலும் காலை தூக்கிற மாதிரி தொடங்கி பாத்தனீங்களோ....?? 

 

சாமானின் விலை வடக்கிலை குறைய வேண்டும் எண்டால் இந்த இரயில் தேவையானது தானே...  

  • கருத்துக்கள உறவுகள்

சீமானுக்கும் சரி அல்லது அவர் போன்று தமிழ்நாட்டில் கூக்குரலிடுகின்ற அரசியல்வாதிகளும் சரி இங்கே அடிக்கடி நடுநிலமை வாதி போன்று தன்னைக் காட்டிக் கொள்கின்ற நெடுக்காலை குறுக்கால போவார்கள் போன்றவர்களும் சரி வடக்கு - கிழக்கு தமிழர்களின் தலைவிதியினை தீர்மானிக்கின்ற தகுதி உங்களுக்கோ எனக்கோ இல்லை என்பதனை மனதில் வைத்துக்கொண்டு கருத்துக்களை பதிவில் இடுங்கள்.
அண்மையில் நடந்த மாணவர் போராட்டத்தை செவ்வாயில் இருந்து சிலர் இயக்கியதாக சொல்கிறார்கள்? உங்களுக்கு இந்த தகவல் தெரியும்.ஒளிக்காதீர்கள்.

:D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ட்ரெயினா விடுகிறீர்கள்? அடுத்த குண்டு அடித்தோம் என்றால், துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று சிதறி ஓடும் சிங்கள ஓநாய் கூட்டம். தமிழ் மக்களை கலாச்சார சீரழிவுக்குள் தள்ள வருகிறது யாழ் தேவி. அனைவரும் புறக்கணிக்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

10(1424).jpg

வழமையாக சிவப்பு கழுத்தில சுத்தின ராஜபக்சக்களைத்தான் பார்த்திருக்கின்றேன் இதென்ன புதிசா நீலநிற துண்டுடுடன் ஒருவர்  :blink:  யாருக்காவது யார் என்பது தெரியுமோ ?  :rolleyes:

 

கிளிநொச்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளராக இருக்கலாம் தமிழரசு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.