Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே இனி இந்திய உதவிகள் – மத்திய அமைச்சர் தகவல்

Featured Replies

றிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித் திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும் என்று இந்திய மத்திய இணை அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில், செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

சிறிலங்காவில் வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வெற்றி மகிழ்ச்சியளிக்கிறது. 27 ஆண்டுகால கனவு நனவாகியுள்ளது.

சிறிலங்கா அரசாங்கம்  மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

இந்திய அரசாங்கம் எப்போதுமே இலங்கையில் உள்ள தமிழர்களுக்கும், தமிழர் அமைப்புகளுக்கும் ஆதரவாகத் தான் செயற்பட்டு வருகிறது. அதுபோலத் தொடர்ந்து செயற்படும்.

சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித்திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய அரசில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி அமைச்சர்களான, ப.சிதம்பரம், ஜி.கே.வாசன் ஆகியோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை வரவேற்று கருத்து வெளியிட்டுள்ளனர்.

வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளதன் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும் என்று இந்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த வெற்றியின் மூலம் 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது என்று கருதுகிறேன்.

மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், சிறிலங்கா அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன்.

இலங்கைப் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியும், மத்திய அரசும் கொண்டுள்ள கொள்கை சரியானது என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

இரா.சம்பந்தன், சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும்” என்று ப.சிதம்பரம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

http://www.puthinappalakai.com/view.php?20130924109125

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா அரசாங்கம்  மாகாணங்களுக்கு உரிய அதிகாரங்களை முழுமையாக வழங்க வேண்டும்.

சிறிலங்காவில் நிவாரண பணிகளுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் உதவித்திட்டங்கள் இனிமேல், வடக்கு மாகாண முதல்வரின் ஆலோசனையின் பேரில் செயற்படுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.

 

இதையாவது  தாங்கள்  நிதானத்தில் பேசியிருக்கவேண்டும்  என்று இறைவனை  மன்றாடுகின்றேன்.. :icon_idea: 

சுத்தி சுத்தி சுப்பற்ற கொல்லைக்குள்ளதான் இருக்கினம்.

 

 13வது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு இல்லை எண்டு சிங்களவனும் சொல்லிப்போட்டான்.

புலிகளும் சொன்னார்கள் 

கூட்டமைப்பும் சொன்னார்கள் 

ராசபச்சவும் பிளஸ் பிளஸ் எண்டு சொன்னவராம் 

சித்தார்த்தனும் சொல்லிட்டாரு

டக்கிலஸ் அன்னைக்கு சொன்னெதெல்லாம் மறந்து போச்சு 

 

அப்படி இருக்கு உந்த  13வது திருத்தச் சட்டத்தை எதுக்கு நீங்க இப்ப தூக்கிப்பிடிப்பான்?

 

 

 

சென்னைக்கு வந்தால் ஒரு பேச்சு டில்லிக்குப் போனால் இன்னொரு பேச்சு..

இந்த குறுகிய வட்டங்களுக்குள் சுற்றாமல், வடக்கு முதல் அமைச்சர் தான் வ்டக்கு, கிழக்கு, மலையக தமிழ் பேசும் மக்களின் உரிமைகள், முன்னெற்றங்களுக்கு பொறுப்பு என்பதை உணர்ந்து சரியான முறையில் தமிழ்நாட்டில், மத்தில் அவகளின் பிச்சனைகளுக்கான தீர்வை தேட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதைத்தான் சிங்களவனும் சொல்லி வருகிறான், இந்தியத் தலையீடு என்று.. சிங்களவனின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்.. தமிழ்நாடு முரண்டு பிடிக்கும்போது மத்திய அரசுக்கும், எமக்கும்தான் உறவு என்றது சிங்களம்.. ஆனால் இந்தியா அதைப் பின்பற்றவில்லை.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

மாகாணங்களில் முழு சுயாட்சி, மாகாணங்களுக்கு அதிகாரப் பகிர்வு, தமிழர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் சமஉரிமை, தமிழர்களின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்டுதல், சிறிலங்கா அரசியலிலும், நிர்வாகத்திலும் உரிய பங்கு ஆகிய இலட்சியங்களை அடைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாடுபடும் என்று நம்புகிறேன்.

 

ச்சீ.. அட வெளக்கெண்னைகளா.. புலிகள் அழிந்தால் 13+ , 14+ ,15+ , (இன்பினிட்டி) இந்த மாதிரி கூவிட்டு... இப்படி அத்துவிட்டு போவது நியாயமா..?

ஆணி எங்களால் புடுங்க முடியாது என்பதை முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு முன்பு சொல்லி இருக்கலமே.. இப்போதும் ஒன்று கெட்டு போய்விடவில்லை.. ஒன்று தான் படுக்கணும் இல்லை தள்ளி படுக்கணும் என்று கூட்டமைப்பு தலமை இப்போதாவது தெளிவாக சொல்லிவிடவேணும்.. நடுவில படுத்துட்டு குடைச்சல் குடுக்கபடாது...

 

டிஸ்கி:

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்(கிந்தியா) இப்பதான் தெரியுது... ^_^

  • கருத்துக்கள உறவுகள்

ச்சீ.. அட வெளக்கெண்னைகளா.. புலிகள் அழிந்தால் 13+ , 14+ ,15+ , (இன்பினிட்டி) இந்த மாதிரி கூவிட்டு... இப்படி அத்துவிட்டு போவது நியாயமா..?

ஆணி எங்களால் புடுங்க முடியாது என்பதை முள்ளி வாய்க்கால் அவலத்திற்கு முன்பு சொல்லி இருக்கலமே.. இப்போதும் ஒன்று கெட்டு போய்விடவில்லை.. ஒன்று தான் படுக்கணும் இல்லை தள்ளி படுக்கணும் என்று கூட்டமைப்பு தலமை இப்போதாவது தெளிவாக சொல்லிவிடவேணும்.. நடுவில படுத்துட்டு குடைச்சல் குடுக்கபடாது...

 

டிஸ்கி:

ஊர் ரெண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டமாம்(கிந்தியா) இப்பதான் தெரியுது... ^_^

 

பச்சை  முடிஞ்சுதப்பா

என் ரத்தமே....... :icon_idea:

திவிநெகும்பா சட்டம் கொண்டிருப்பது சிங்கள பெயர். தனித் தமிழ் மாநிலத்தில் செல்லுபடியற்றது. முதல்வரின் ஆலோசனை இல்லாமல் சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கியது சட்டப்படி ஆளுனர் சந்திர சிறிமீதில் வழக்கு தொடரப்பட வேண்டிய விடையம். சந்திர சிறி அரசியல் அமைப்பை மீறி நடந்த படியால் சிறை செல்ல வேண்டும்.

இதைத்தான் சிங்களவனும் சொல்லி வருகிறான், இந்தியத் தலையீடு என்று.. சிங்களவனின் இறையாண்மையைப் பாதிக்கும் செயல்.. தமிழ்நாடு முரண்டு பிடிக்கும்போது மத்திய அரசுக்கும், எமக்கும்தான் உறவு என்றது சிங்களம்.. ஆனால் இந்தியா அதைப் பின்பற்றவில்லை.. :icon_idea:

நிச்சயமாக வெளிநாடுகளின் உதவிகள் வந்து கிடைக்க கூட்டமைப்பு ஏதாவது செய்ய வேண்டும். இந்தியா முதல் வர சந்தர்ப்பம் இருக்கு. அதன் 50,000 வீடுகள் வாக்குறுதி திறந்த நிலையில் இருக்கிறது.  50% கமிசனில் மகிந்த சீனாவிடம் கடன் பட்டு சிங்கள, சீன தொழிலாளர்கள் ரோட்டு போடுவது ஏற்கனவே தமிழ் ம்ககளால் நிராகரிப்பட்ட அபிவிருத்தி. சிங்கள் அரசு தமிழ் மக்களுக்கு ரோட்டுபோடுவதை அவர்கள் ஏற்காதபடியால் திவிநெகும்ப அபிவிருத்தியை அவர்கள் நிராகரித்துவிட்டார்கள்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கு முதல்வரின் ஆலோசனைப்படியே இனி இந்திய உதவிகள் – மத்திய அமைச்சர் தகவல்

 

கிந்தியாவின் சுயநல அரசியலுக்கு மீண்டும் தமிழர்களை பகடைக்காய்களாக பயன்படுத்துவதற்க ....

  • கருத்துக்கள உறவுகள்

மாகாணசபையினால் தமிழர்களின் பிரச்சனைகளை ஒன்றும் செய்யமுடியாது. அடுத்ததேர்தலுக்குள் எப்படி தமிழர்களின் பலத்தினை அழிப்பதற்கு சிங்களம் முயலும். திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்து நடக்கும். இத்தேர்தலில் சிங்களம் தோற்றாலும் மாகாணசபையினை வைத்து அரசியல் செய்து வெல்லப்போகிறது. நாங்கள் தான் தொடர்ந்து ஏமாறப்போகிறோம். "இந்தியா(காங்கிரஸ்) உட்பட வெளினாடுகளுக்கு தமிழர்களின் பிரச்சனை முடிந்துவிட்டது. தமிழர்களுக்கு (மாகாணசபை)அதிகாரம் வழங்கிவிட்டோம்" என்று சிங்களம் பிரச்சாரம் செய்யப்போகின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.