Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கண்ணீரால் முடியும் என் கவிதைகள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கண்ணீரால் முடியும் என் கவிதைகள்...
---------------------
 
காதல் வெளியில்
தூக்கம் தொலைத்த
இலையுதிர்கால
இரவொன்று
ஒளிர்கின்றது...
 
இதயத்தில் இருக்கும் 
பிரிவுத்துயர் தணல்கின்ற
எரிமலைகள் 
எரித்துவிடுகின்றன 
ஒளிர்கின்ற இரவை..
 
அறையெங்கும்
நிரம்பிக்கிடக்கும்
விளக்கொளியின் நடுவே
கண்களுக்கு தெரியாமல் 
குறுக்கும் மறுக்குமாய்
அலைகின்றன நினைவுகள்...
 
பாறையெனக் கிடந்த
உன் பொழுதுகளின் மீது
பக்குவமாய் நான் வரைந்த
காதல் ஓவியத்தை 
நீ கிழித்தெறிந்த போது 
சிதறியவைகளாக இருக்கலாம்..
 
புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடிமுடிக்கும் முன்
நினைவுச்சிதறல்கள்
சுழன்றெழும் வீச்சில்
சிறைப்பிடிக்க வேண்டும்
கவிதைகளில்...
 
பாதைகள் எங்கும்
காதலுடன் பரவிக்கிடந்த
பூக்களை 
வாரி அணைக்க சேர்த்துவைத்த
அன்பை எல்லாம் மொத்தமாய்
உன் பிரிவு தின்றுவிட்டது..
 
வலியைத்தவிர
இனி எதைக்கொண்டு நிரப்புவேன்
என் கவிதைகளை..?
 
வெறும் ஆற்றாமைகளும்
பிரிவும் 
வலியுமாய் என் கவிதைகள்
வீங்கிப்பருத்திருப்பதாக 
நீங்கள் சொல்லலாம்...
 
சொல்லுங்கள்..
 
பறித்தெடுத்த பூக்களால்
நிறைந்திருக்கும்
வரவேற்பறைகள்
அழகும் வண்ணமுமாய்
ஒளிர்ந்திருக்கலாம்
 
ஆனால்..
 
பூக்களைத்தொலைத்த
மரங்களின் உணர்வுகள்
ஒருபொழுதும்
பூத்துக்கிடப்பதில்லை..
 
தன் நிலவைத்தொலைத்த
என் கவிதைகளும்தான்..
 
உன்மேலான காதலால்
உருகும் இதயத்தின் பாடலின்
துயரத்தில் கரைந்து
துயிலாதிருக்கிறது
இந்த இரவு..
 
எழுதுகோல் தவிக்கிறது
எல்லாவற்றையும்
சிறைப்பிடிக்க...
 
முடிவதில்லை..
 
எப்பொழுதும்
புன்னகை எழுதிய முகத்தை
கண்ணீர் மூடி
முடித்துவைக்கிறது
என் கவிதைகளை...
 
நிறைவேறாத அன்பு 
நீர்ச்சுழியாய் 
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்..
 
இவ்வழியா அவ்வழியா
எவ்வழியால்
எழுகின்றன நினவுகள்..? 
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீரும் கலங்கி எங்களையும் கலங்க வைக்கிறீர். மீளிற வழியைப் பாரும்  

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

உங்களின் காதல் வெற்றிதானே எதுக்கு சோக கவிதை அம் :Dபி .

முன்பொருநாளில் .... என் எழுத்துமனுருகிக் கரைந்தபோது எனக்கு ஆறுதல் சொன்ன தோழன் நீ...!

நீயே கலங்கலாமா தோழா???

வாழ்க்கை என்பது ஒவ்வொரு பக்கமுமாய் விரிந்துகொண்டேயிருக்கும் சுவாரஸ்யமான புத்தகம்.

அடுத்த பக்கத்தில் இன்னும் சுவாரஸ்யங்களும் வசந்த காலத்தின் வாசனையும் வனப்பும் விபரிக்கப்படும் அழகான காவியங்களும் காத்திருக்கும். அடுத்த பக்கத்தைப் புரட்டு நண்பா...! :)

நிறைவேறாத அன்பு 
நீர்ச்சுழியாய் 
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்.. /////  நீர்ச்சுழியில் கைசோர்ந்து மூழ்கி அதற்குள் மூழ்குவது  சிறந்ததா ?? இல்லை கையைக் காலை அடித்து மேலே எழுந்து , மேலே விரியும் எல்லையற்ற வானத்தையும் அதில் நிறைந்த காற்றை சுவாசிப்பது சிறந்ததா ??  படைப்புக்குப் பாராட்டுக்கள் சுபேஸ் .
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதை ஒரே சோகமாக  இருகின்றது.

 

பிரிவும் இணைவும் மாறிமாறி வரும்
மனம் தளராமல் வருவதை எதிர்கொள்ளவேண்டும்
 

வாழ்க்கையின் வெற்றியே இதில்தான் அடங்கியுள்ளது

 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் ,
உங்களது அண்ணைய கவிதைகள் அதிகம் காதலின் துயர் சொல்லும் கவிதைகளாகவே இருக்கிறது. அந்தத் துயரிலிருந்து நீங்கள் மீள வேண்டுமென்ற உறவுகளின் வேண்டுதல் போல நீங்கள் மீள வேணும்.

 

காதல் இலக்கியத்தின் உலக இலக்கியமாக போற்றப்படும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் உலகில் எல்லாராலும் நேசிக்கப்படும் இலக்கியம்.  அதேபோன்றதொரு இலக்கியத்தை உங்கள் கவிதைகளில் படைக்க முடியும். கலீல் ஜிப்ரான் காதலி சல்மாவை பிரியாது போயிருந்தால் ஒரு முறிந்த சிறகை உலகம் பெற்றிராது. இழப்பில் தான் எல்லாமே உயிர்க்கிறது. நீங்களும் கலீல் ஜிப்ரான் போன்றதொரு இலக்கியத்தை படைக்க முடியும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி நீரும் கலங்கி எங்களையும் கலங்க வைக்கிறீர். மீளிற வழியைப் பாரும்  

 

கெதியிலை கலியாணத்தை கட்டு ராசா எண்டு சொல்லாமல் சொல்லுறியள்...... தம்பியன் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறான்? :(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தம்பி நீரும் கலங்கி எங்களையும் கலங்க வைக்கிறீர். மீளிற வழியைப் பாரும்  

 

விடுங்க அக்கா..கஸ்ரம் இந்த வாழ்க்கையில யாருக்கிங்கு இல்லை...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்பொருநாளில் .... என் எழுத்துமனுருகிக் கரைந்தபோது எனக்கு ஆறுதல் சொன்ன தோழன் நீ...!

நீயே கலங்கலாமா தோழா???

வாழ்க்கை என்பது ஒவ்வொரு பக்கமுமாய் விரிந்துகொண்டேயிருக்கும் சுவாரஸ்யமான புத்தகம்.

அடுத்த பக்கத்தில் இன்னும் சுவாரஸ்யங்களும் வசந்த காலத்தின் வாசனையும் வனப்பும் விபரிக்கப்படும் அழகான காவியங்களும் காத்திருக்கும். அடுத்த பக்கத்தைப் புரட்டு நண்பா...! :)

ஞாபகம்களை எங்குகொண்டுபோய் தொலைப்பேன் என்று தெரியவில்லை நண்பா..ஞாபகம்கள்தான் என் எழுத்துக்களின் வலிமை ..அதுவே எனக்கு கொடுமை...நாள்தோறும் நான் நோவால் துடித்துப்போகிறேன்...அந்த வலியை தந்தது ஞாபகம்கள்... 

உனது கண்ணீர்த் துளிகளை துருத்தியில் சேமித்து நியாயம் வழங்க அவர்கள் நீதிமான்கள் இல்லை. வெறும் கவலையாகவே முடியும்.

அதிகமாக உங்கள் ஆக்கங்களில் காதல் தோல்வியின் கவலை தெரிகிறது. காலம் அத்துயரை ஆற்றும்.

 

'இதுவும் கடந்து போகும்' என்றெண்ணி, எதிரில் வரும் பிகரை 'சைட்' அடிக்கும் மனப்பக்குவம் வர வேண்டும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

நிறைவேறாத அன்பு 
நீர்ச்சுழியாய் 
இப்புறமும் அப்புறமும்
இதயத்தை அலைக்க
நடுவில் இயல்பிழக்கிறேன்.. /////  நீர்ச்சுழியில் கைசோர்ந்து மூழ்கி அதற்குள் மூழ்குவது  சிறந்ததா ?? இல்லை கையைக் காலை அடித்து மேலே எழுந்து , மேலே விரியும் எல்லையற்ற வானத்தையும் அதில் நிறைந்த காற்றை சுவாசிப்பது சிறந்ததா ??  படைப்புக்குப் பாராட்டுக்கள் சுபேஸ் .

 

தெரியவில்லை அண்ணா...எதையும் மறக்கமுடியா இதயம் இருக்கும்வரை இப்படியும் வாழலாம் என்பது இயல்புக்கு மீறிய போலியோ என்று தோன்றுகிறது ...காலம்தான் பதில் சொல்லணும்...

 

நன்றிகள்  அண்ணா...

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கவிதை ஒரே சோகமாக  இருகின்றது.

 

பிரிவும் இணைவும் மாறிமாறி வரும்

மனம் தளராமல் வருவதை எதிர்கொள்ளவேண்டும்

 

வாழ்க்கையின் வெற்றியே இதில்தான் அடங்கியுள்ளது

 

 

உனது கண்ணீர்த் துளிகளை துருத்தியில் சேமித்து நியாயம் வழங்க அவர்கள் நீதிமான்கள் இல்லை. வெறும் கவலையாகவே முடியும்.

அதிகமாக உங்கள் ஆக்கங்களில் காதல் தோல்வியின் கவலை தெரிகிறது. காலம் அத்துயரை ஆற்றும்.

 

'

 

நன்றி அண்ணக்கள்  அன்புக்கு..முயற்சி செய்கிறேன்...

சுபேஸ் ,

உங்களது அண்ணைய கவிதைகள் அதிகம் காதலின் துயர் சொல்லும் கவிதைகளாகவே இருக்கிறது. அந்தத் துயரிலிருந்து நீங்கள் மீள வேண்டுமென்ற உறவுகளின் வேண்டுதல் போல நீங்கள் மீள வேணும்.

 

காதல் இலக்கியத்தின் உலக இலக்கியமாக போற்றப்படும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் உலகில் எல்லாராலும் நேசிக்கப்படும் இலக்கியம்.  அதேபோன்றதொரு இலக்கியத்தை உங்கள் கவிதைகளில் படைக்க முடியும். கலீல் ஜிப்ரான் காதலி சல்மாவை பிரியாது போயிருந்தால் ஒரு முறிந்த சிறகை உலகம் பெற்றிராது. இழப்பில் தான் எல்லாமே உயிர்க்கிறது. நீங்களும் கலீல் ஜிப்ரான் போன்றதொரு இலக்கியத்தை படைக்க முடியும்.

அக்கா முதலில் அன்புக்கு நன்றி...கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் பலமுறை படித்திருக்கேன்..அற்புதமான இலக்கியம் ஒன்று ..அந்தளவுக்கு எல்லாம் நாமா??நினைத்து பார்க்கவேமுடியல...ஆளவிடுங்க..

அன்புக்கு நன்றி அக்கா...

கெதியிலை கலியாணத்தை கட்டு ராசா எண்டு சொல்லாமல் சொல்லுறியள்...... தம்பியன் என்ன வைச்சுக்கொண்டே வஞ்சகம் பண்ணுறான்? :(

First the engagement ring, then the wedding ring, then the suffering...! :D நன்றி அண்ணா அன்புக்கு...

தம்பி இந்த காதல் எல்லாம் ஓமோனின் தாக்கங்கள், ஓமோனின் செயற்பாடுகளெல்லாம் குறைய இதுக்குத் தானோ இவ்வளவு கவலைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டோமென கவவலைப்படுவீங்கள். எல்லாத்தையும் மறந்து விட்டு உருப்படுகிற வழியைப்பாருங்கள். உங்களுக்கானவாவைத் தேடுங்கோ...

காதலால் வெற்றி பெற்ற ஒருவனால் இப்படியும் தோல்விகளை எழுத முடியும் .! :lol:

சுபேஸ் ,

உங்களது அண்ணைய கவிதைகள் அதிகம் காதலின் துயர் சொல்லும் கவிதைகளாகவே இருக்கிறது. அந்தத் துயரிலிருந்து நீங்கள் மீள வேண்டுமென்ற உறவுகளின் வேண்டுதல் போல நீங்கள் மீள வேணும்.

 

காதல் இலக்கியத்தின் உலக இலக்கியமாக போற்றப்படும் கலீல் ஜிப்ரானின் முறிந்த சிறகுகள் உலகில் எல்லாராலும் நேசிக்கப்படும் இலக்கியம்.  அதேபோன்றதொரு இலக்கியத்தை உங்கள் கவிதைகளில் படைக்க முடியும். கலீல் ஜிப்ரான் காதலி சல்மாவை பிரியாது போயிருந்தால் ஒரு முறிந்த சிறகை உலகம் பெற்றிராது. இழப்பில் தான் எல்லாமே உயிர்க்கிறது. நீங்களும் கலீல் ஜிப்ரான் போன்றதொரு இலக்கியத்தை படைக்க முடியும்.

 

அப்ப சுபேஷ் நிரந்தரக் காதல் தோல்வியில்தான் வாழ வேண்டும். :D

  • கருத்துக்கள உறவுகள்

நிலவைத் தொலைத்த கவிதைகள்தான் அழகாக இருக்கின்றன. நட்சத்திரங்களின் அழகை நிலவு மறைத்து கிடந்திருக்கிறது. பாவம் நிலவு தனது முட்டாள்த்தனத்தை நினைத்து எங்காவது கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கும்.  கவிஞனின் நெஞ்சக்கூட்டிற்குள் சங்கமிக்கத் தெரியாமல் பாதை மாறிபோன நிலவை எண்ணி கவிஞன் புலம்பினாலும் அழகாகத்தான் இருக்கிறது. ஓ.. கவிஞனே உன்னை உனக்கு அடையாளம் காட்டிய நிலவுக்கு நன்றி சொல்லி ஒரு கவிதையாவது எழுது. :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி இந்த காதல் எல்லாம் ஓமோனின் தாக்கங்கள், ஓமோனின் செயற்பாடுகளெல்லாம் குறைய இதுக்குத் தானோ இவ்வளவு கவலைப்பட்டு வாழ்க்கையை தொலைத்துவிட்டோமென கவவலைப்படுவீங்கள். எல்லாத்தையும் மறந்து விட்டு உருப்படுகிற வழியைப்பாருங்கள். உங்களுக்கானவாவைத் தேடுங்கோ...

 

டேய் தம்பியா! கேட்டியே நாலெழுத்து படிச்ச டாக்குத்தரம்மா சொல்லுறா....கவனமாய் கேள் ராசா ! ஓமோன் ஓமோன் எண்டு வேறை இரண்டுதரம் சொல்லீட்டா......நல்லமுடிவாய் எடு ராசா!!!
 
மாங்கொட்டை , வேப்பங்கொட்டை எல்லாம் காலாகாலத்துக்கும் வைச்சு முளைக்கவிடலாம்.....ஆனால் மனிச.........இதுக்குமேலை வேண்டாம்........ஓமைகார்ட்  நியானியின்ரை கண்ணை நினைக்கவே கை நடுங்குது..

டேய் தம்பியா! கேட்டியே நாலெழுத்து படிச்ச டாக்குத்தரம்மா சொல்லுறா....கவனமாய் கேள் ராசா ! ஓமோன் ஓமோன் எண்டு வேறை இரண்டுதரம் சொல்லீட்டா......நல்லமுடிவாய் எடு ராசா!!!
 
மாங்கொட்டை , வேப்பங்கொட்டை எல்லாம் காலாகாலத்துக்கும் வைச்சு முளைக்கவிடலாம்.....ஆனால் மனிச.........இதுக்குமேலை வேண்டாம்........ஓமைகார்ட்  நியானியின்ரை கண்ணை நினைக்கவே கை நடுங்குது..

 

அண்ணை என்னை வைச்சு கொமடி ஒண்டும் பண்ணவில்லைத்தானே..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.