Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இசைப்பிரியா படுகொலை தொடர்பில் சுயாதீன விசாரணை வேண்டும்: ஈபிடிபி

Featured Replies

3 நவம்பர், 2013

 

இசைப்பிரியா படுகொலைச் சம்பவம் தொடர்பில் சுயாதீனமான விசாரணை தேவை என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ஈபிடிபி தலைவர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

'பொதுநலவாய மகாநாட்டில் பங்கு கொள்வதற்காக உலக நாடுகளின் தலைவர்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ள வேளையில் சேனல் 4 தொலைக்காட்சி போர்க்குற்றம் தொடர்பாக வெளியிட்டிருக்கும் இசைப்பிரியா படுகொலை தொடர்பான ஒளிப்படக்காட்சிகள் உலக நாடுகளை மட்டுமல்லாமல் உலக நாடுகளெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது' என்று இலங்கை அரசின் பங்காளிக் கட்சியான ஈபிடிபியின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

'சேனல் 4 தொலைக்காட்சி இசைப்பிரியாவை உயிருடன் இராணுவத்தினர் கைது செய்த காட்சியை ஒளிபரப்புச் செய்துள்ளமை தமிழ் மக்களை எரிச்சலடையச் செய்துள்ளது. நம்பிக்கைகளை தகர்ந்து போகச் செய்துள்ளது. மனித நேயமுள்ளவர்களை உலுப்பியுள்ளது' என்றும் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார்.

 

'குற்றவாளிகள் நீதியின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும்'

'தற்போது வெளியாகியிருக்கும் இசைப்பிரியா கைது செய்யப்பட்டு, பின்னர் படுகொலை செய்யப்பட்டிருப்பதான செய்திகள் தொடர்பில் சுயாதீனமான விசாரணைகள் நடத்தப்பட்டு உண்மையை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரும் கடிதத்தை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

'சுயாதீனமான விசாரணை நடத்தப்பட்டு, குற்றவாளிகள் அடையாளம் காணப்படின், நீதியின் முன்னால் நிறுத்தப்படவேண்டும். அதுவே இறுதி யுத்தம் தொடர்பாக தமிழ் மக்களிடம் எழுந்திருக்கும் படுகொலைகள் தொடர்பான அச்சங்களுக்கும், சந்தேகங்களுக்கும் விடை காண்பதாக அமையும்' என்கிறார் டக்ளஸ்.

'தமிழ் மக்களிடையே இருக்கும் சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் நியாயமும், பரிகாரங்களும் காணப்பட வேண்டும். ஆகவே எமது கோரிக்கைக்கு ஜனாதிபதி உரிய நடவடிக்கையை எடுத்து விரைவில் உண்மையை உலகிற்கு தெளிவுபடுத்துவார் என்று எதிர்பார்க்கின்றோம்' என ஈபிடிபி ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளார்.
 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/11/131103_isaipriyaepdp.shtml

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த இவரை ஒதுக்குவதால் இப்ப இடக்குப் பண்ணுறார். :rolleyes: வணிகசூரிய ஏற்கனவே காணொளியை ஒரு சித்தரிப்பு என்று சொல்லிவிட்டார்.. அவர் பொய் சொன்னதாக செயலாளர்நாயகம் நினைக்கிறாரா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப தேர்தல் ஏதும் வருகுதா

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் விக்.. சித்தரின் பாதையை நாடுகிறார்போலை.

இப்ப தேர்தல் ஏதும் வருகுதா?

 

 

இல்லை 

 

வரப்போகும் தேர்தலுக்கு..

 

மாகான சபையோட தீவும் போயிற்று, இனியும் சும்மா இருந்தால் சொத்துக்கு திரும்ப பாசல் கேட்கவேண்டி வரும். 

உண்மைதான் விக்.. சித்தரின் பாதையை நாடுகிறார்போலை.

கூட்டமைப்பில் Vacancy இருக்கா தெரியவில்லை. வேணுமானால் சென்னை சிறையில் ஒருவரின் இடத்தில் இருவரை நெரித்து போட்டுக்கொள்ள முடியும். :D

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

வடகிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம், உள்ளக சுயநிர்ணயம் இவற்றை ஏற்றால் ஈபிடிபி யையும் பிள்ளையானையும் கூட கூட்டமைப்பில் சேர்க்கலாம்.

டெலோ, புளொட் ஈபிஆர் எல் எப் ற்கும் ஈபிடிபிக்கும் பெரும் வித்தியாசமில்லை. 1987-89 இல் இவர்கள் ஆடாத கூத்தா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

டக்கு இப்படியாவது அறிக்கை விடுகின்றார். ஆனால் விக்னேஷ்வரன் , சம்பந்தர் , சுமன் வாயே திறக்க மாட்டினம். இன்னும் வாயை திறக்க காலம் கனியவில்லை போல  உள்ளது.. இந்த மாகாநாடு முடிந்த பின் வாய்நிறைய அறிக்கை விடுவினம்


மகிந்த இவரை ஒதுக்குவதால் இப்ப இடக்குப் பண்ணுறார். :rolleyes: வணிகசூரிய ஏற்கனவே காணொளியை ஒரு சித்தரிப்பு என்று சொல்லிவிட்டார்.. அவர் பொய் சொன்னதாக செயலாளர்நாயகம் நினைக்கிறாரா? :D

மகிந்தவுக்கு அவர் உறவினர் இணக்க அரசியல் பேசும் விக்கினேஷ்வரன் இருக்கும் போது டக்கு இனி வரும் காலங்களில் தேவை இல்லைத்தானே

  • கருத்துக்கள உறவுகள்

புலன் சும்மா போங்க சார்- நீங்கள் எப்படி தலைகீழா நின்று தண்ணி குடித்தாலும் கூட்டமைப்பும் ஈபிடிபி கும் ஒன்றுதான் என்னும் உங்கள் பரப்புரையை, உளவியல் யுத்தத்தை ஏற்க யாரும் இங்கே முட்டள்களில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலன் சும்மா போங்க சார்- நீங்கள் எப்படி தலைகீழா நின்று தண்ணி குடித்தாலும் கூட்டமைப்பும் ஈபிடிபி கும் ஒன்றுதான் என்னும் உங்கள் பரப்புரையை, உளவியல் யுத்தத்தை ஏற்க யாரும் இங்கே முட்டள்களில்லை.

அண்ணோய் .... யாழ் களத்தில் மட்டுமல்ல முகநூலிலும் இதைத் தான் எழுதுகிறேன்.....தமிழ் மற்றும் ஆங்கிலத்தில். நீங்கள் எவ்வளவு அழுது புரண்டாலும் பார்பவர்கள் இளைய தமிழ் சமுதாயம் ஈழத்தில் இருந்தும் தமிழ் நாட்டில் இருந்தும் முகநூலில் ஆதரவு மிக மிக அதிகம்......நான் இங்கு பதியும் ஒவ்வோரு பதிவும் முகநூலிலும் உள்ளது அதே கருத்துப் பட..

நான் முகநூல் என்று கூறிப்பிடுவது FACE BOOK   and  Twitter :) 

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் எங்கே போய் எழுதினாலும் நீங்கள் சார்ந்த கட்ச்சியும் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்றுதான் எழிதி இருப்பீர்கள்.

முகநூலில் வேணுமானால் உங்கள் கட்ச்சியை எலக்க்சென் கேட்டு வெல்ல வையுங்கள். தாயகத்தில் வாக்குரிமை உள்லாவர்க்கும் தெரியும் உங்கள் கட்சிக்கும் கூட்டமைப்புக்கு உள்ள வித்யாசம்.

வடகிழக்கு இணைப்பு, மாகாணங்களுக்கு காணி, பொலிஸ் அதிகாரம், உள்ளக சுயநிர்ணயம் இவற்றை ஏற்றால் ஈபிடிபி யையும் பிள்ளையானையும் கூட கூட்டமைப்பில் சேர்க்கலாம்.

டெலோ, புளொட் ஈபிஆர் எல் எப் ற்கும் ஈபிடிபிக்கும் பெரும் வித்தியாசமில்லை. 1987-89 இல் இவர்கள் ஆடாத கூத்தா

புலிகளை விலத்தி வைப்பதுதான் நல்லது .அவர்கள் திருந்த இடமில்லை .

  • கருத்துக்கள உறவுகள்

சரி நண்பர்களே,

வேலைப்பளு காரணமாக தொடர்ந்து யாழுக்கு வரமுடியாது போகிறது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், சமஸ்டிஅடிப்படையில் ஒரு தீர்வு ஏற்படட்டும் என்ற பிரார்தனையோடு விடைபெறுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தாடி மாமா ஆதி தாளத்தில் இருந்து ரூபக தாளத்துக்கு மாறி இருக்கிறார் ?? :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் எங்கே போய் எழுதினாலும் நீங்கள் சார்ந்த கட்ச்சியும் கூட்டமைப்பும் ஒன்றுதான் என்றுதான் எழிதி இருப்பீர்கள்.

முகநூலில் வேணுமானால் உங்கள் கட்ச்சியை எலக்க்சென் கேட்டு வெல்ல வையுங்கள். தாயகத்தில் வாக்குரிமை உள்லாவர்க்கும் தெரியும் உங்கள் கட்சிக்கும் கூட்டமைப்புக்கு உள்ள வித்யாசம்.

இயலாமையின் வெளிப்பாடா :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் வருகின்றதோ இல்லையோ தேய்ந்து செல்லும் EPDP யின் நிலைமையைச் சரிசெய்ய வேண்டும்
அண்மையில் கூட தேர்தலில் வெற்றிக்கான உக்திகளை மகிந்தவின் கட்சி சரியாகச் செய்யவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார்.

என்ன தாடி மாமா ஆதி தாளத்தில் இருந்து ரூபக தாளத்துக்கு மாறி இருக்கிறார் ?? :icon_mrgreen::icon_mrgreen:

இல்லை இது தப்புத்தாளம். தாடி மாமா மகிந்த மாத்தயாவுக்கு ஏதோ சொல்ல வாரார்.

  • கருத்துக்கள உறவுகள்

EPDP யின் வரவேற்கப்பட வேண்டிய மாற்றம்

போர்க்குற்றத்தை ஒரு சிலரது தான்தோன்றித்தனமான செயற்பாடாகக் காட்டும் கோரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

என்ன நோக்கங்களாக இருந்தாலும் இப்பிடியான அறிக்கைகளை எமக்கு ஆதரவா பயன்படுத்திக்க வேண்டியது தான்

போர்க்குற்றத்தை ஒரு சிலரது தான்தோன்றித்தனமான செயற்பாடாகக் காட்டும் கோரிக்கையாகவும் எடுத்துக் கொள்ளலாம்.

அது விசாரணயின் பின்னால் வர வேண்டிய முடிவு.

 

EPDP தான் போர்குற்றத்துக்குள் மாட்டப் போவதில்லை துணிச்சலால் இப்படி கேட்கிறதாகும்.

 

படைத்தளபதி ஜகத் ஜெயசூரிய ஏற்கனவே இரண்டு முறைகூறிவிட்டார் தங்கள் மக்கள் இருந்த இடங்களை தாக்க தயங்கிய போது அரச அதிபர் முன்னால் தாக்கும்படி கூறினார் என்று.  இவர் பொன்சேக்கா கூறியது போல தான் இலங்கையில் யாரையும் காட்டிகொடுக்க போவத்தில்லை என்று கூறவில்லை. போன்சேக்காவால் தண்டிக்கபட்ட ஒரு அதிகாரி.

  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரம், ஜெயந்தி நடராஜன் , டக்லஸ் தேவானந்தா....

சுப்பிரமணியசுவாமி மாதிரி எத்தனை அரசியல் கோமாளிகள் மறுக்கப் போகிறார்கள். மகிந்தாவின் வலது கையாக ஐ.நா.வில் இருந்த தாயான் ஜெயதிலகா மறுக்க முடியாமல் "இரண்டு பக்கமும் செய்தார்கள்" என்று பூசி மழுப்பின்னார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.